வெளியே வானம்

This entry is part 24 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

மற்றுமொரு இரவு
உறக்கத்தை வரவழைக்க
முஸ்தீபுகளில்
ஈடுபட வேண்டியுள்ளது
மது புட்டிகளின்
சியர்ஸ் சத்தங்களைத் தவிர
இரவு அமைதியாக இருந்தது
அன்று பகலில்
சந்தித்தவர்களில்
சில நபர்களின் முகங்களே
ஞாபகத்தில் இருந்தது
படுக்கையை பகிர்ந்து கொள்ள
பணத்தை நீட்ட வேண்டியுள்ளது
எதையாவது செய்து
தன்னிலை மறக்க வேண்டும்
தன்னைப் பற்றிய சிந்தனை
தற்கொலைக்கு தூண்டுகிறது
அவமானங்களும்,
உதாசீனப்படுத்தல்களும்
குறுவாளால் வயிற்றைக்
கிழிக்கிறது
மரண சர்ப்பம்
வேகமாக என்னை நோக்கி
வந்து கொண்டிருக்கிறது
மது அருவியில்
என்னை நனைய விடுங்கள்
என்னை நான் தொலைக்கிறேன்
மீதமுள்ள நாட்களை
எப்படியோ கழிக்கிறேன்.

Series Navigationதவளையைப் பார்த்து…நிலாச் சிரிப்பு
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *