அகாலம் கேட்கிற கேள்வி

This entry is part 10 of 41 in the series 13 நவம்பர் 2011

ஆழ்வேர் நேச காதலினாலோ
பாசி படர், மாசு தொடர்பினாலோ
பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும்,
விநாடியில் மறைக்கிற அகால மரணமும்

அகங்காரமும், வன்மமும் தேவையா ?
அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என
கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி.

அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி
வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல்,
பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம்
வாழ்க்கை வட்டத்தை கீறி கிழித்தபடி..

-சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஒரு வித்தியாசமான குரல்காக்காப்பொண்ணு
author

சித்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *