அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்

This entry is part 14 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

ஜோதிர்லதா கிரிஜா

abdul_kalamஇந்தியாவின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலும் அப்துல் கலாம் அவர்களின் அளவுக்கு மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர் வேறு யாரும் இலர். அவரை அப்பெரும் பதவியில் அமர்த்திய வாஜ்பேயி அவர்களுக்கு நாம் கட்டாயம் நன்றி கூறியே ஆகவேண்டும். இப்பதவி இல்லாமலேயே ஒரு விஞ்ஞானி என்கிற அளவில் அவரது புகழ் ஈடு இணையற்றது தானென்றாலும், அவரது தகுதியை உணர்ந்து வாஜ்பேயி செயல்பட்டதைப் பாராட்டியே தீரவேண்டும். ஜவாஹர்லால் நேரு சிறு குழந்தைகளின் உறவில் மகிழ்ந்தது போல் அப்துல் கலாம் மாணவர்களின் உறவில் மகிழ்ந்து திளைத்தார். மாணவப் பருவத்தில் நல்ல எண்ணங்களை விதைத்துவிட்டால், அவர்கள் நன்மக்களாக உருவாவார்கள் என்பதை மிகவும் புரிந்துகொண்டிருந்த தேசபக்தர் அவர்.

அவர் எவ்வளவு எளிமையானவர் என்பதைச் சொல்ல ஒரு சாதாரணக் குடிமகளாகிய எனக்கு அவர் கடிதம் எழுதியதை நினைவு கூராதிருக்க முடியவில்லை. ஒரு பெரிய மனிதரோடு தொடர்புடைய நிகழ்வுகளை நினைவு கூர்கையில் ஒருவர் தன்னைப் பற்றி அவர் சொன்னதையும் சொல்லியாக வேண்டிய கட்டாயம் விளைந்து விடுகிறது. இது ஒரு வகையில் தற்பெருமையே யானாலும், தவிர்க்க முடிவதில்லை.

POET எனும் ஆங்கில மாத இதழில் நான் சில கவிதைத் தொடர்களை எழுத வாய்த்தது. அவற்றில் சில, இராமாயணம், இயேசு கிறிஸ்துவின் வரலாறு, நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளின் தொகுப்பு ஆகியவை. முகம்மது நபிகள் அவர்களின் முக்கியமான பொன்மொழிகளைத் தொகுத்து ஒரு நிறு நூலாக இந்து மதத்தின் ராமகிருஷ்ண மடத்தினர் வெளியிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் நான் எழுதிய ஆங்கிலப் பாடல்களளின் தொகுப்பு சில மாதங்கள் வரை தொடராக வெளிவந்தது. அதைப் படித்த அப்துல் கலாம் அவர்கள் கீழ்க்காணும் கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார்.

A.P.J. Abdul Kalam Rasahtrapathi Bhavan
New Delhi – 110 004

22nd April, 05
Dear Ms. Jyothirllata Girija,

I read with interest your poetic verses on Story of Jesus Christ and Holy Prophet in the POET. What a beautiful thought. My congratulations to you for this inspiring work. May God bless you.

With best wishes,

Yours sincerely,
Sd/-
(A.P.J. Abdul Kalam)

Ms. Jyothirllata Girija etc
Chennai 600 101

மேற்காணும் கடிதத்தை எழுதிய நாளில் அவர் குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இதை நினைத்துப்பார்க்க்கையில் பெரிதும் போற்றத்தக்க அவரது எளிமையை வியக்காதிருக்க முடியவில்லை.
ஒரு முறை அவர் கீழே பணி புரிந்த ஒருவரை ஒரு முக்கியமான பணிக்காக அலுவலக நேரம் கடந்து தங்க வைக்க வேண்டிய கட்டாயம் அப்துல் கலாம் அவர்களுக்கு விளைந்ததாம். ஆனால், அவரோ அன்று தம் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்காக வீட்டுக்கு விரைவில் திரும்புவதாகச் சொல்லியிருந்திருக்கிறார். இதை யறிந்த அப்துல் கலாம் அவர்கள் அவரைப் பணிக்காக இருத்திய பின் தாமே அவர் வீட்டுக்குப் போய் அவருடைய குழந்தைகளை அவர் வாக்களித்திருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றாராம்! எத்தகைய புரிந்துணர்வு! குழந்தைகள் மீது எப்பேர்ப்பட்ட கரிசனம்!

ஸ்ரீஹரிக்கோட்டாவில் ஏதோ ஓர் ஏவுகணையை வானோக்கி அனுப்பிய நாளில் அது பாதி வழியிலேயே வெடித்துச் சிதறிவிட்டதாம். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ‘இந்தப் பணியில் அப்துல் கலாம் இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். அவர் அந்தப் பணியோடு சம்பந்தப்படவில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாம். உடனே, இந்திரா காந்தி, “ஓ! அதுதான் அது பாதி வழியிலேயே சிதறிவிட்டது. இல்லாவிடில் வேற்றிகரமாய்ச் செலுத்தப் பட்டிருந்திருக்கும்!” என்றாராம். அவரது திறமையை நாட்டின் பிரதமர் அறிந்து வைத்திருந்த பெரும் பேறு எல்லாருக்கும் கிடைத்து விடுமா?

ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் தம் குடும்பத்தினரோடு தங்க அனுமதி உண்டு. எனினும் அப்துல் கலாம் தம் சகோதரரையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்துக்கொள்ளவில்லை. அது பற்றிய கேள்விக்கு, ”நான் திருமணம் செய்துகொள்ளாதவன். எனக்கென்று குடும்பம் இல்லாத போது, என் உறவினர்களை உடன் தங்கவைத்துக் கொள்ளுவது முறையாகாது!” என்றாராம். எத்தகைய நேர்மை!

பதவிக்காலத்தில் அடித்த கூத்துகள் போதாவென்று, முந்தைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் இப்போதும் செய்துள்ள கேலிக்கூத்து பற்றிச் சொல்லாதிருக்க முடியவில்லை. அரசு இவருடைய சொந்தக் காருக்கு ஆகும் பெற்றோல் செலவை ஏற்றுக்கொண்டுள்ளது. (அது;வே தவறு என்று சொல்லப்படுகிறது.) அப்படி இருந்தும் அப்துல் கலாம் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப் புனேவிலிருந்து ராமேசுவரம் சென்று வர அவருக்கு அரசு தனியாக ஒரு கார் அனுப்ப வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்! இந்த வெட்கக்கேட்டை என்ன சொல்ல!

பதவியில் இருந்த போது அப்துல் கலாம் அவர்களுக்கு இருந்த நேர்மை, எளிமை ஆகியவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடப் பதவியில் இல்லாத ஒருவருக்கு இல்லாததோடு இன்னமும் பழைய ஞாபகத்தில் செய்யும் அட்டகாச, அடாவடித்தனத்தை என்ன சொல்லித் திட்ட!

ஆண்டவனே! அப்துல் கலாம் அவர்களை எங்கள் நாட்டில் மீண்டும் பிறக்கச் செய்!
………

Series Navigationதிருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்எறும்பைப்போல் செல்ல வேண்டும்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

18 Comments

  1. Avatar
    BS says:

    உணர்ச்சிக்குவியலான அஞ்சலி.

    நம் நாட்டின் குடியரசுத்தலைவர் என்பது ஒரு அரசுப்பதவி. அதற்கு சம்பளமும் வேறுபல உரிமைக்கொடைகளும் உள. சம்பளம் வாங்காத பதவிகளும் அரசு தரும். ஹானரரி கெபாசிட்டி பதவிகள். ஆனால் இப்பதவி சம்பளம் வாங்கும் பதவி.

    இதை முதலில் ஒத்துகொண்டுவிட்டுத்தான் பிறவிடயங்களுக்குப்போகவேண்டும். குடியரசுத்தலைவர் மாளிகை நூற்றுக்கணக்கான அறைகளும் நூற்றுக்கும் மேலான ஊழியர்களும் நிறைந்தது. அனைவரும் அரசு ஊழியர்கள். குடியரசுத்தலைவர் தனக்கு ஒரேயொரு அறை மட்டும் போதுமென்றால், ஓகே. ஆனால் ஊழியர்களையும் வேண்டாமென்றால் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்களே?

    எளிமை நன்று. ஆனால், அதனால் அரசு அமைத்த இயந்திரத்தை தனி ஒருவர் விரும்பியதற்காக நிறுத்தக்கூடாது. அதே வேளையில் ஒரே நபரே தொடர்ந்து அங்கு இருந்தால் அவருக்காக ஒரேயடியாக மாற்றிவிடலாம்.

    பதவிக்குப்பின்னரும் முன்னால் குடியரசுத்தலைவர் தன் வாணாள் முழுவதும் பயன்படுத்துமாறு பல சலுகைகள் அவருக்கு உண்டு. இலவச – விமானப்பயணச்சீட்டு. இரயில் குளிர்சாதன முதல்வகுப்பு பயணச்சீட்டு, ஐந்தறை கொண்ட வீடு, தான் எங்கு பதவிக்குப் பின நிரந்ரமாக தங்க விரும்புகிறாரோ அங்கு – இதை அம்மாநில அரசு கொடுக்கவேண்டும் வேலையாட்களோடு – எழுத காகிதம், இலவச அஞ்சல், எங்கு பயணம் செய்தாலும் தங்க அம்மாநில அரசு கொடுக்கவேண்டிய இலவச ஊர்தியும் தங்குமிடமும் – இவை ஒரு சிலவே.

    இவற்றை ஏன் அரசு கொடுக்கிறது? இந்தியாவின் குடியரசுத்தலைவர் அனைத்துமக்களிலிலும் மூத்த அல்லது முதற்குடிமகன். அவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றபின்னும், அவருக்குக் கொடுக்கும் சலுகைகள் அப்பதவிக்கும் நாட்டுக்கும் செய்யும் மரியாதையாகும். இது தவறோ, இல்லையோ என்பது விவாதமில்லை இங்கே. இருக்கின்றனர் எனபதே. இருக்கும் வரை அதைக்குறை சொல்லக்கூடாது.

    கலாம் அனுபவிக்க விரும்பவில்லை என்றால், அஃது அவரோடு போகட்டும். பாராட்டலாம். ஆனால் இன்னொருவர் கொடுக்கப்பட்ட உரிமைகளைக்கேட்பதை எப்படி குறை சொல்லமுடியும்?

    கலாமுக்கு அரசு செலவழித்தால் அரசு ஒன்றும் ஓட்டாண்டியாகி விடாது. கலாம் விரும்பவில்லை என்பதால் அதை அனுபவிப்போரை குற்றம் சொன்னால், அரசையே குற்றம் சொன்னதாகி விடும். எங்கு போனாலும் ஓட்டுனரோடு ஊர்தி கொடுக்கப்படவேண்டும். அதைக்கேட்டால் தப்பா?

    என் நணபர் ஒருவருக்கு வங்கி அவர் சொந்த பயணங்களுக்கு இலவச ஊர்தியை ஓட்டுனரோடு கொடுத்தது. ஆனால் அதை அவர் எப்போது தேவைப்படுகிறதோ, அப்போது ஒரு குறிப்பிட்ட ட்ராவல்ஸ் ஏஜன்ஸிக்குத் தெரிவித்துவிட்டால், ஊர்தி வரும்.

    நண்பர் கலாமைப்போல. ரொம்பவும் அபூர்வமாகத்தான் அழைப்பார். அவர் பதவிக்கு வந்து சில மாதங்களுக்குப்பின் ஊர்தியின் ஓட்டுனர் நண்பரின் மனைவியிடம் தெரிவித்தார்:

    “அம்மா..நான் கான்ட்ராக்ட் டரைவர். சார் என்னை அழைக்காமல் போனால், எனக்கு வருமானம் தடை படும். டராவல்ஸ் ஏஜன்ஸிக்காரன் ஒரு ட்ரைவர் வேலையைக்குறைத்துவிடுவான். ஒரு குறிப்பிட்ட வங்கி மாதந்தோறும் செலுத்தி விட சார் கூப்பிடவில்லையென்றால், ஏஜன்சிக்காரனே அப்பணத்தை முழுங்கி விடுகிறான். எனவே சார் கூப்பிடாவிட்டாலும் நீங்களும் குழந்தைகளும் அடிக்கடி கூப்பிடுங்கள்; புண்ணியமாகப்போய் விடும்”

    (நம் எளிமை பிறர் வயிற்றில் அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிமை பற்றி பின்னர் இன்னும் எழுதுகிறேன்)

  2. Avatar
    paandiyan says:

    அந்த பெண் ஜனாதிபதி மரபு மீறி என்ன கேட்டார் என்று கூட படிக்கவில்லையா ? ஐயோ ஐயோ

    1. Avatar
      BS says:

      புனேவிலிருந்து இராமேசுவரம் செல்ல தனியாகக் ஊர்தி கேட்டாரென்று நான் நம்பமுடியவில்லை. அப்படி பயணிக்க நான்கு மாநிலங்கள் வழியாக 2000 மைல்கள் பயணிக்கவேண்டும்.எவருமே செய்ய மாட்டார்கள் ஒரு வயதான பெண்ணால் முடியுமா? அவர்களுக்கு விமானப்பயணச்சீட்டும் இலவசமென்றால். சென்னை வரை விமானத்தில் வந்து, அங்கிருந்து இராமேசுவரத்துக்குச் செல்ல ஊர்தி கேட்டிருப்பார். அஃது அவருக்கு கேட்காமலே கொடுக்கப்படவேண்டும் அவர் தன் பயண நிரலை மட்டும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்குத் முன்கூட்டியே தெரிவித்தால் போதும். பதவியில் இருக்கும் நீதிபதிகள், அரசு அதிகாரிகளுக்கும் உண்டு. ஆனால ஓய்வுபெற்றவுடன் கிடையாது. முன்னால் ஜனாதிபதிகளுக்கு உண்டு. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்தந்த மாநில அரசுகள் ஊர்தியும் ஓட்டுனரும் கொடுக்கவேண்டும். எங்கும் தங்கலாம். அரசுகள் தங்க இடம் செய்துகொடுக்கவேண்டும்.

      இராமேசுவரத்துக்குச் செல்ல ஊர்தி கேட்டது சரியே. அதே சமயம், அவர்கள் குடும்பத்தினருக்கு கிடையாது. இவர் இறந்துவிட்டால் அனைத்தும் நிறுத்தப்படும். வீடு திருப்பியெடுக்கப்படும். சஞ்சீவி ரெட்டியின் மனைவி கோர்ட்டுக்கே போனார்: ரெட்டி தன் ஓய்வுக்குப்பிறகு தில்லி அரசு கொடுத்த வீட்டில் இருந்தார். அவர் இறந்த பிறகு வீடு எடுக்கப்பட்டது. ஆனால், மனைவி காலி செய்ய மறுத்தார். வெங்கடராமன் சென்னையில் வசிக்க விரும்பினார். அரசும் கிரீன்வேஸ் பங்களாவைத் தயார் செய்தது. அப்போது கருநாநிதி முதல்வர். சட்டமன்ற உரையில், சென்னையிலேயே இரு பெரிய வீடுகள் வைத்திருபபவருக்கு அரசே தன் செலவில் ஒரு பங்களாவைக் கொடுக்க நிர்பந்தமான சட்டமிது என்று சொன்னது வெங்கடராமனைக் காயப்படுத்திவிட்டது. அவர் கோபம் கொண்டு, தில்லியிலேயே தில்லி அரசு பஙக்ளாவிற்கு குடிபெயர்ந்தார். இவற்றை யான் சொல்லக்காரணம்: உரிமைகள். அரசே எடுத்த முடிவுகள். அதாவது கொடுத்த உரிமைகள். ஒருவர் கேட்கவில்லை. இன்னொருவர் கேட்டார்; கேட்கிறார். கேட்காதவர் நல்லவர். கேட்டவர் கெட்டவர். அப்படியென்றால் அரசை நிறுத்தச்சொல்லுங்கள்.

      ஒருவரைப் புகழ‌ இன்னொருவரை இகழ்தல் எவரை ஏத்துகிறோமோ அவருக்கே அஃது இழுக்கு. கலாம் ஒப்பீடுகள் இல்லாமலே சிறந்தவர் என்ற நம்பிக்கை அஞ்சலி செய்வோருக்கு வேண்டும். அஞ்சலியின் புனிதம் கெடுகிறது.

      ஜோதிர்லதா கிரிஜா தன் அஞ்சலியின் தரத்தைக் இறுதிப்பத்தியில் குறைத்துவிட்டாரென்பது என் கருத்து.

        1. Avatar
          BS says:

          Contrarian has to plead with folded hands that at least obituaries of great persons not be politicized. If not, what will be difference between common politicians politiking with the dead bodies of their cadres, or of a Gandhian like Sasi Perumal? Shouldn’t we draw a line?

      1. Avatar
        jyothairllata Girija says:

        கருத்துகளுக்கு நன்றி. கலாம் அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களுடன் ஒப்பிடும் போதும் அவர்கள் அனைவரிலும் அவர் மிகச் சிறந்தவர் என்பதை அதன் மூலம் மெய்ப்பிக்கும் போதும், கலாம் அவர்களின் சிறப்பு மேலும் மிகுந்து புலப்படுகிறது என்றே நம்புகிறேன். எனினும் அவரவர் கருத்து அவரவர்க்கு! புனே யிலிருந்து ராமேசுவரம் வரை பயணிக்கத் தனிக் கார் முன்னாள் குடியரசுத் தலைவர் கேட்ட செய்தி இணையதளத்தை மூடும்போது வரும் பெட்டிச் செய்திகளில் ஒன்றாக இருந்தது.
        அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா

  3. Avatar
    ஷாலி says:

    // கலாம் அனுபவிக்க விரும்பவில்லை என்றால், அஃது அவரோடு போகட்டும். பாராட்டலாம். ஆனால் இன்னொருவர் கொடுக்கப்பட்ட உரிமைகளைக்கேட்பதை எப்படி குறை சொல்லமுடியும்?//

    திரு.BS அவர்கள் சொல்வதில் உள்ள சட்டரீதியான உரிமைகளை யாரும் மறுக்கவில்லை.ஆனால் தர்ம ரீதியான ஒழுக்க மாண்புகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்தானே!

    இதுவரை எந்த குடியரசுத்தலைவரும் செய்யாத அளவிற்கு,வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் சுமார்.205 கோடி ரூபாய்களை செலவு செய்தவர் பிரதிபா பாட்டீல் அவர்கள்.பனிரெண்டுமுறை 22 வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.மொத்தம் 79 நாட்களை வெளிநாட்டில் கழித்துள்ளார்.அவர் மட்டுமல்ல.அவரது உறவினர்களும் அரசுப்பணத்தில் ஆனந்தம் அடைந்தனர்.

    தன் பதவி முடியப்போகும் கடைசி மாதத்தில் கூட (2012 April.29-May.8) தென்னாபிரிக்கா,சீசெல்ஸ் நாடுகளுக்கு தனி விமானத்தில் தன் உறவினர்களுடன் ஊர் சுற்றினார்.இந்த கடைசிப் பயணத்திற்கு மட்டும் செலவு 18.08 கோடி ரூபாய்.

    சட்ட அனுமதியின் மூலம் தார்மீக அறநெறி சுய ஒழுக்க மாண்புகளை,முதல் குடிமகள் முனை மழுங்கச் செய்தார்.அரசு வழங்கும் சட்டபூர்வமான சலுகைகளை பயன்படுத்தும் இந்தப்புள்ளியில்தான் அப்துல் கலாமும்,பிரதிபா பாட்டிலும் வேறுபட்டு விமர்சிக்கப்படுகிறார்கள்.

    இன்று இந்தியாவில் பாதுகாப்பட்ட குடிநீர் 40% குடும்பங்களுக்கு கொடுக்க அரசால் முடியவில்லை. 70% குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்க அரசுக்கு வசதி இல்லை.எல்லாம் திறந்த வெளியில் Open to air…

    கலாம் நினைத்திருந்தால் குடியரசு தலைவர் மாளிகையின் அனைத்து அறைகளையும் தன் சொந்த பந்தங்களைக்கொண்டு சட்டபூர்வமாக நிறைத்திருக்கலாம்..சட்டத்திற்கு மதிப்பு கொடுப்பவர்களை விட தர்மத்திற்கு மதிப்பு கொடுப்பவர்கள் உயர்ந்தவர்கள்.

    இன்று டெல்லியிலிருந்து ராமேஸ்வரம் வரை ஆண்ட தலைவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.அன்று ஆண்ட ஒளரங்கசீப் ஆலம்கீர் தன் கையால் தொப்பி தைத்தும்,கையால் குர்ஆன் பிரதிகள் எழுதி அதை விற்று வரும் பணத்தில் உணவுண்டு வாழ்ந்ததாக சரித்திரம் பேசுகிறது.மக்கள் வரிப்பணத்தை சட்டபூர்வமாக தின்பவர்கள் சிந்திக்கவேண்டிய செய்தி.

    இதுபோல் முன்னால் குடியரசுத் தலைவர் திரு.வெங்கட்ராமன் அவர்களுக்கு இரு சொந்த வீடுகள் சென்னையில் இருந்தும் முதல்வர் ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட அரசு பங்களாவை வாங்கிக்கொள்ள எந்த வெட்கமும் இல்லை.பின்னர் வந்த கருணாநிதி அரசு இந்த சட்ட மீறலை சுட்டிக்காட்டி அதை திரும்பப் பெற்றார்.

    பிறகு முன்னால் முதல் குடிமகன் என்ன செய்தார்.?சென்னையில்தான் வீடு உள்ளது.டெல்லியில் இல்லை என்று அரசு பங்களாவை அங்கு பெற்றார்.ஆக இந்தியாவில் மக்கள் பணத்தை, ஊழல்,லஞ்சம் மூலம் சட்டவிரோதமாக அரசியல்வாதிகள் அள்ளித்தின்கிறார்கள்.சட்டப்பூர்வமாக ஆளுபவர்கள் அனுபவிக்கிறார்கள்.

    தர்மம்…நீதி…வெங்காயம்! ஆத்தோட தண்ணீ போன அய்யா குடி…அம்மா..குடி….

  4. Avatar
    ரங்கன் says:

    //அன்று ஆண்ட ஒளரங்கசீப் ஆலம்கீர் தன் கையால் தொப்பி தைத்தும்,கையால் குர்ஆன் பிரதிகள் எழுதி அதை விற்று வரும் பணத்தில் உணவுண்டு வாழ்ந்ததாக சரித்திரம் பேசுகிறது//

    ஓஹோ ! அவ்வளவு நல்லவரா ஒளரங்கசீப் !! அப்படியானால் இப்போது இருக்கும் ‘secular’ ஆட்சியை ஒளரங்கசீப் அன்றே செய்து இருக்கலாமே ! ஒளரங்கசீப் ஒளரங்கசீப் என்று பேசுவதனால்தான் இன்று ISIS என்னும் அரகர்களின் கொடுமைகளை உங்கள் போன்றவர்களால் தவறு என்று மனதார சொல்லமுடியவில்லை. அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் இல்லை என்று வாய் வார்த்தைக்காக சொன்னால் மட்டும் போதுமா !

  5. Avatar
    ஷாலி says:

    //அப்படியானால் இப்போது இருக்கும் ‘secular’ ஆட்சியை ஒளரங்கசீப் அன்றே செய்து இருக்கலாமே ! ஒளரங்கசீப் ஒளரங்கசீப் என்று பேசுவதனால்தான் இன்று ISIS என்னும் அரகர்களின் கொடுமைகளை…..//

    For the people,by the people,of the people,மக்களால்.மக்களுக்ககாக,மக்களே ஆளும் ஜனநாயக குடியரசான அமெரிக்க அதிபர்கள் பைபிள் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு உலக போலிசாக உருமாறுகிறார்கள்.இந்த செகுலர் ஆட்சியாளர்கள் தங்கள் பொருளாதார காரணங்களை முன் வைத்து யுத்தங்களை உருவாக்குகிறார்கள்.தங்கள் பகாசுர பெட்ரோல் பசிக்கு எதிரான நாடுகளை ஒழித்து விடுவார்கள்.இப்படி அழிக்கப்பட்ட இராக்கில் உருவான கூட்டமே Isis. இந்த நரபலி அரக்கர்களின் கொடுமைகளுக்கு செகுலர் அமெரிக்கர்களே பொறுப்பாளர்கள்.

    ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொலைக்கூட்டம் மதத்தின் போர்வையில் நடத்தும் நரபலிகள், செகுலர் ஆட்சியில் மட்டும் அல்ல 64 இந்து ராஜ்யங்களை ஆண்ட மன்னர் காலத்திலும் உண்டு. தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லப்படும் கிபி.250-375 வரை ஆண்ட களப்பிரர்கள் மற்றும்,காளமுகர்கள்,கபாலிகள்.

    தமிழகத்தில் மாய்ந்து போன வேத வேள்வியாகிய கொலை வேள்வியையும்,கபாலத்தை கையிலேந்தி கள்ளையும் ஊனையும் நிரப்பிக்கொண்டு மண்டை ஓடுகளையும்,எலும்புகளையும் மாலைகளாக அணிந்து கொண்டு தத்தம் மனைவிகளோடு நமசிவாய! நமசிவாய! என வீதிகள்தோரும் குடித்துத்திரியும் கபாலிகர்கள்.மதத்தின் பெயரால் நரபலி கொடுக்கும் காபாலிகர கால பைரவர்கள்.இவர்களின் கொலைவெறியில் ஆதி சங்கரும் பலியாக இருந்தார்.நல்லவேளை சீடர் பத்மபாதர் உதவியால் தப்பித்தார் என்பது வரலாறு.
    காளிக்கு நரபலி கொடுப்பதால் வேண்டும் வரம் பெறலாம் என்பது காளமுகர்களின் நம்பிக்கை. மனிதர்களை மடக்கிப் பிடித்து பலிபீடம் கொண்டு செல்ல தனி ஆயுதங்களை வைத்திருப்பார்களாம்.

    இந்த மன்னருக்கு அடுத்து வந்த வெள்ளையர்களின் ஆட்சியின்போது தக்கர்கள் என்ற ஒரு கூட்டம் கொலை,கொள்ளையில் பிரசித்துப் பெற்றவர்கள்.இவர்கள் இரண்டு மதத்துக்காரர்கள்.பெயர் முஸ்லிமாக இருக்கும்.ஆனால் காளிக்கு பலி கொடுத்து வணங்கும் இந்துக்கள்.வியாபாரிகள் போல் நடித்து சக பிரயாணிகளின் கழுத்தை நெருக்கி கொலை செய்து,அவர்களின் உடமைகளை கொள்ளை அடிப்பார்கள்.

    நரபலி அல்லது மனிதர்களைப் பலிகொடுத்தல் என்பது இந்தியாவில் மூன்றுவிதமாக நடந்தது. ஒன்று, நேரடியாக சமூக நன்மைக்காக, தேரோட்டத்திற்கு அல்லது கடவுளின் கோபத்தைத் தணிப்பதற்கு அல்லது புதிய கட்டுமானங்களுக்காக. இரண்டாவது நவகண்டம். வீரர்கள் இதே காரணங்களுக்காகத் தங்களைத் தாங்களே பலியிட்டுக் கொள்வது. தமிழில் தலைப்பலி என்பர். மூன்றாவது சதி. சதி அல்லது உடன்கட்டை ஏறுவதென்பதை நரபலி என்று குறிப்பிடுவது சரியா என்பது குறித்துக் கேள்விகள் எழலாம். ஆனால் அது நரபலி இல்லையென்றால் வேறென்ன? கொலை. ஆனால் எல்லா நரபலிகளும் கொலைகள்தானே.

    அன்றைய நரபலியின் எச்சசொச்சங்கள் இன்றும் ஆங்காங்கே நாட்டில் நடந்து கொண்டுவருவது நாம் அறிந்ததே! மதங்கள் போர்த்திய மனிதப்பலிகள்!

  6. Avatar
    சவரப்பிரியன் says:

    ஷாலி
    உங்களது அறியாமை வியக்க வைக்கிறது.
    //இப்படி அழிக்கப்பட்ட இராக்கில் உருவான கூட்டமே Isis. இந்த நரபலி அரக்கர்களின் கொடுமைகளுக்கு செகுலர் அமெரிக்கர்களே பொறுப்பாளர்கள்.//
    உதாரணமாக இந்தியாவை முஸ்லீம் சுல்தான்களும் முகலாயர்கள் நாசம் செய்தார்கள். யாரேனும் இன்று அட்டூழியமோ ஊழலோ அல்லது கொலையோ கொள்ளையோ செய்தால், முஸ்லீம் சுல்தான்களும் முகலாயர்களுமே காரணம் என்று சொல்லிவிடலாமா?
    உலகத்தில் முஸ்லீம்கள் எந்த குற்றமுமே செய்யவில்லை. அவர்கள் முஸ்லீம் பெயர்தாங்கிகள் அல்லது யூதர்களோ அமெரிக்கர்களோ ஏமாற்றி இவர்களை இப்படி செய்ய வைத்துவிட்டார்கள் என்று சொல்வது ரொம்பவும் புளித்து போய்விட்டது. சுவனப்பிரியன் என்னடாவென்றால், ஹதீஸிலேயே யூதர்களை கை வைத்துவிட்டார்கள் என்றெல்லாம் அள்ளி விடுவார்.
    //தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லப்படும் கிபி.250-375 வரை ஆண்ட களப்பிரர்கள் மற்றும்,காளமுகர்கள்,கபாலிகள்.//
    அறியாமை. இருண்டகாலம் என்று சொல்லப்படுவதற்கு காரணம் அந்த காலகட்டத்தின் கல்வெட்டுகள் மற்றும் ஆவணங்கள் கிடைக்காததே.

    காபாலிகம் என்று ஒன்று இருந்தது. ஆனால், இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் மாதிரி நாடு பிடித்து அங்குள்ளவர்களை எல்லாம் கொன்று மதமாற்றம் செய்யவில்லை. இவர்கள் fringe group. இஸ்லாம் போல உலகத்தையே பிடித்து ஆட்டவில்லை.
    // சக பிரயாணிகளின் கழுத்தை நெருக்கி கொலை செய்து,அவர்களின் உடமைகளை கொள்ளை அடிப்பார்கள். //
    தக்கர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக அவர்கள் மீது இவ்வாறு புனையப்பட்டது என்பது மிகவும் நன்றாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

    ஆக ஷாலி, சுவனப்பிரியன் போன்றோருக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான்.

    இஸ்லாமின் அட்டூழியங்களை பற்றி பேச்சு வரும்போதெல்லாம், மற்ற மதங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக சொல்லப்படுவதை எடுத்து நீ மட்டும் ஒழுங்கா என்று கேட்டு இன்றைய இஸ்லாமிய கொடூரங்களை நியாயப்படுத்துவது.

    இன்றைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் செய்வது இஸ்லாமிய வரலாற்றிலும், அதன் ஹதீஸிலும்ம் அதன் குரானிலும் இருக்கும் ஒவ்வொரு வரியையும் அப்படியே நிறைவேற்றுவதுதான். மாறு கால் மாறுகை வாங்கு என்றால் வாங்குகிறார்கள். பெண்களை போரில் பிடித்து விற்கலாம் என்று ஹதீஸிலும் குரானிலும் இருந்தால் அதனை செய்கிறார்கள்.
    இஸ்லாமை அப்படியே பின்பற்றினால் என்ன நிகழும் என்பதற்கு உதாரணமே ஐ.எஸ்.ஐ.எஸ்.

    அந்த செய்திகளால், இஸ்லாமின் பிரச்சாரம் தமிழ்நாட்டில் கெட்டுவிடக்கூடாது என்று அக்கறையே ஷாலியின் பூச்சுற்றல், தக்கியா,

  7. Avatar
    paandiyan says:

    //ஆக ஷாலி, சுவனப்பிரியன் போன்றோருக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான்.
    இஸ்லாமின் அட்டூழியங்களை பற்றி பேச்சு வரும்போதெல்லாம், மற்ற மதங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக சொல்லப்படுவதை எடுத்து நீ மட்டும் ஒழுங்கா என்று கேட்டு இன்றைய இஸ்லாமிய கொடூரங்களை நியாயப்படுத்துவது.//

    that too quoting all wrong info. wrongly documented blogs/books say eg; ford foundation money collection groups!!

  8. Avatar
    ஷாலி says:

    //Isis. இந்த நரபலி அரக்கர்களின் கொடுமைகளுக்கு //

    //ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொலைக்கூட்டம் மதத்தின் போர்வையில் நடத்தும் நரபலிகள்//

    அய்யா! சவரம்! இப்படி மொட்டை பிளேடை போட்டு இப்படி நோகடிக்கிறது சரியா? புது பிளேடைப் போட்டு வேலையைப் பாருங்கள்.ஐஎஸ்ஐஎஸ் பற்றி எனது விமர்சனம் மிகத் தெளிவாக உள்ளது.இவர்களை நரபலி அரக்கர்கள் என்று எழுதியுள்ளேன்.மேலும் மதத்தின் போர்வையில் செயல்படும் நரபலி கொலைக் கூட்டம் என்று கடுமையாக தாக்கி உள்ளேன்.இது சவரக் கண்ணுக்கு தக்கியாவாகத் தெரிகிறது.சவரத்தை நம்பவைக்க நான் குண்டத்தில் இறங்கவேண்டுமா? அல்லது கையில் கற்பூரம் ஏற்றி கரகாட்டம் ஆடனுமா?

    ஒருவன் முஸ்லிமாக இருப்பதால் அவனது அநியாயத்தை,அக்கிரமத்தை பூசி மூடி மறைக்க இஸ்லாத்தில் அணுவளவும் அனுமதி இல்லை.தவறு எவர் செய்தாலும் தவறுதான்.ஆனால் நீங்கள் நமசிவாயா சொல்லும் கொலைகார காபலிகர்களை காப்பற்ற துடிக்கிறீர்கள்.

    //காபாலிகம் என்று ஒன்று இருந்தது. ஆனால், இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் மாதிரி நாடு பிடித்து அங்குள்ளவர்களை எல்லாம் கொன்று மதமாற்றம் செய்யவில்லை.//

    ஆமாம்! கபாலிகர்கள் மதம் மாற்றம் செய்வதில்லை.ஆனால் மனிதர்களின் உயிர்களை எடுத்து காளி தேவியின் உண்டியலில் காணிக்கையாக போட்டுவிடுவார்கள்.அம்பாள் உபாசகர்களை பழிக்கலாமோ?அபச்சாரம்! அபச்சாரம்!! நம்ம சவரம் கழுத்துக்கு மேல் முகத்தில் வளர்வதை வெட்டுவார்.கபாலிகர்கள் கழுத்தையே வெட்டிவிடுவார்கள்.ஆக, வெட்டிக்கு வெட்டி சப்போர்ட்.

    நம்ம சவரம் எந்தளவு இந்துமத பக்தியில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பது தக்கர்களிடம் அவர் காட்டும் தாயன்பு மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஒரு கொலைகார கொள்ளைக் கூட்டம் காளிமாதாவை வழிபடுவதால் சவரத்திற்கு தக்கர்களும் பக்தகோடிகளாக தெரிகிறது.மனுஷனுக்கு மதம் பிடித்தால் இப்படித்தான்….

    //தக்கர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக அவர்கள் மீது இவ்வாறு புனையப்பட்டது என்பது மிகவும் நன்றாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.//

    அய்யா சவரம்! ஆவணத்தை தேடி அலைய வேண்டாம்.நம்ம திண்ணையிலேயே நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.படித்துப் பாருங்கள்.என்ன செய்வது பக்தி முத்தினால் புத்திக்கு கேடு….

    http://puthu.thinnai.com/?p=23510
    http://puthu.thinnai.com/?p=23368

  9. Avatar
    சவரப்பிரியன் says:

    http://www.press.uchicago.edu/ucp/books/book/chicago/S/bo3629285.html

    Did the Thugs really exist, or did the British invent them as an excuse to seize tighter control of India? Drawing on historical and anthropological accounts, Indian tales and sacred texts, and detailed analyses of the secret Thug language, Martine van Woerkens reveals for the first time the real story of the Thugs. Many different groups of Thugs actually did exist over the centuries, but the monsters the British made of them had much more to do with colonial imaginings of India than with the real Thugs. Tracing these imaginings down to the present, van Woerkens reveals the ongoing roles of the Thugs in fiction and film from Frankenstein to Indiana Jones and the Temple of Doom.Close

  10. Avatar
    சவரப்பிரியன் says:

    //ஒருவன் முஸ்லிமாக இருப்பதால் அவனது அநியாயத்தை,அக்கிரமத்தை பூசி மூடி மறைக்க இஸ்லாத்தில் அணுவளவும் அனுமதி இல்லை.தவறு எவர் செய்தாலும் தவறுதான்.//
    ஹெஹ்ஹே..
    ஐ.எஸ்.ஐ.எஸ் காரர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஹதீஸ், குரான் ஆதாரம் காட்டுகிறார்கள் என்பதை மறந்துவிட்டு பெசுகிறீர்களா அல்லது வேண்டுமென்றே முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறீர்களா?

    இன்றைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் செய்வது இஸ்லாமிய வரலாற்றிலும், அதன் ஹதீஸிலும்ம் அதன் குரானிலும் இருக்கும் ஒவ்வொரு வரியையும் அப்படியே நிறைவேற்றுவதுதான். மாறு கால் மாறுகை வாங்கு என்றால் வாங்குகிறார்கள். பெண்களை போரில் பிடித்து விற்கலாம் என்று ஹதீஸிலும் குரானிலும் இருந்தால் அதனை செய்கிறார்கள்.
    இஸ்லாமை அப்படியே பின்பற்றினால் என்ன நிகழும் என்பதற்கு உதாரணமே ஐ.எஸ்.ஐ.எஸ்.
    அது இங்கே தெரியக்கூடாது என்பதற்கு நீங்கள் அடிக்கும் தக்கியாவே அதை இன்று எதிர்ப்பது.
    இதனை எதாவது பி.எஸ் மாதிரி இந்துபெயர்தாங்கி ஆதரித்துவிட்டால், அவுரங்க்சீப்பை நீங்கள் தூக்கிபிடிப்பது போல ஐ.எஸ்.ஐ.எஸ்ஸையும் தூக்கி பிடிப்பீர்கள்.
    அதற்காகத்தானே அமார்க்ஸ், இடதுசாரிகள் போன்றோர்கள் இருக்கிறார்கள்.
    ஜமாயுங்கள்.

    1. Avatar
      paandiyan says:

      அவர்கள் போராளிகள் என்று இங்கு கவனமாக பேசியவர்களை என்ன சொல்ல்வது ?

  11. Avatar
    ரங்கன் says:

    இன்று இருக்கும் isis விபரீதத்தைப் பற்றி பேசினால் என்றோ இருந்த கபாலிகர்களைப் பற்றி ஷாலி அவர்கள் பேசுகிறார். இந்தியாவில் இருந்து இந்த கொடுங் கும்பலுக்கு ஆள் போய் கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி இங்கிருக்கும் முஸ்லிம்களுக்கு சிறிதும் கவலை இல்லை. நபிகளின் கார்ட்டூனுக்கு இங்கு போராடும் நீங்கள் ஒரு கிராதகன் கழுத்தை வெட்டி வீடியோவில் போடிகிறான் – அதற்கு குறைந்த பக்ஷம் கண்டிப்பையாவது நீங்கள் யாரேனும் சொல்வது உண்டா ? போகிறது – உத்தரப் பிரதேசத்தில் ஒரு MLA ( zameerullah khan ) பசுவதை வேண்டாம் என்று ஒரு முயற்சி எடுத்து முஸ்லிம்களின் ஆதரவை கோருகிறார். அவருக்கு தாங்கள் ஆதரவு உண்டா ?

    http://indianexpress.com/article/india/india-others/sps-muslim-mla-zameerullah-khan-begins-campaign-to-save-cows/

  12. Avatar
    ஷாலி says:

    //van Woerkens reveals the ongoing roles of the Thugs in fiction and film from Frankenstein to Indiana…//

    In her book The Strangled Traveler: Colonial Imaginings and the Thugs of India (2002), Martine van Woerkens suggests that evidence for the existence of a Thuggee cult in the 19th century was in part the product of “colonial imaginings” — British fear of the little-known interior of India and limited understanding of the religious and social practices of its inhabitants. For a comparison, see Juggernaut and the Black Hole of Calcutta.

    Krishna Dutta, while reviewing the book Thug: the true story of India’s murderous cult by the British historian Dr. Mike Dash in The Independent, argues:

    “In recent years, the revisionist view that thuggee was a British invention, a means to tighten their hold in the country, has been given credence in India, France and the US, but this well-researched book objectively questions that assertion.”

    In his book, Dash rejects scepticism about the existence of a secret network of groups with a modus operandi that was different from highwaymen, such as dacoits. To prove his point Dash refers to the excavated corpses in graves, of which the hidden locations were revealed to Sleeman’s team by Thug informants. In addition, Dash treats the extensive and thorough documentation that Sleeman made. Dash rejects the colonial emphasis on the religious motivation for robbing, but instead asserts that monetary gain was the main motivation for Thuggee and that men sometimes became Thugs due to extreme poverty. He further asserts that the Thugs were highly superstitious and that they worshipped the Hindu goddess Kali, but that their faith was not very different from their contemporary non-Thugs. He admits, though, that the Thugs had certain group-specific superstitions and rituals.

    http://theunexplainedmysteries.com/Thuggee-Secret-Society-of-Indian-Thugs.html

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *