அப்பாவும் பிள்ளையும்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 6 of 11 in the series 12 ஜூலை 2020

சந்தோஷ் குமார் மோகன்

காலை பற்றும் மழலை யை

அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான்,

தோள்களில் வைத்துக் கொண்டாடுவான்,

பல்லக்கு தூக்கி அழகு பார்ப்பான்,

தன் பிள்ளைகளை உயரத்தில் வைத்தே பழக்கப்பட்ட இதயம் அப்பா…!!!

***********************

அவனை தூக்கி விளையாடிய உப்பு மூட்டை

இனிப்பு மூட்டை ஆனது.

************************

நித்தம் ஏதாவத ஒன்றை கேட்கிறான், 

நானும் நாளைக்கு வாங்கி தருகிறேன் என்றே நித்தமும் கடக்கிறேன்,

நேற்றும் இதை தான் சொன்ன என்று அவன் கேட்டதே இல்லை, 

குழந்தைகள் ஒரு வரம்.

***********************
கா கா கதை, 

பாட்டி கதை, 

நிலா கதை, 

கேட்டு தூங்காமல் 

தூங்காம கதைய சொல்லுப்பா என்கிறான்.

***********************
கண்டிக்கும் நேரங்களில்

அவன் வெம்பி வெம்பி

ஆணிகள் இல்லாமல் என்னை சிலுவையில் அறைகிறான்.

***********************

அவன்
கையசைத்து கையசைத்து பல சின்னஞ்சிறு கதைகள் பேச 

மனசுக்குள் றெக்க முளைக்கும்

பட்டாம்பூச்சிய வம்புக்கு இழுக்கும்.

***********************
அவளுக்கும்,எனக்கும் சண்டை, 

அவன் சமாதானமாக சில நாட்கள் ஆகிறது.

***********************

அப்பா இது நம்ப வீடு இல்லையா ப்பா. 

நம்ம வீடு தாம்ப்பா, 

அந்த தாத்தா (House Owner) அவங்க வீடு னு சொல்றாங்க.

???

***********************

நேற்று

இன்று

நாளை

காலங்களை பற்றிய எந்த கவலையும் இன்றி, 

காலத்தை 

கால்பந்து போல எட்டி உதைத்து விளையாடும் குழந்தைகளின் உலகம் மகத்தானது.

***********************
சந்தோஷ் குமார் மோகன்,

தஞ்சை.

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்யாம் பெறவே
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *