நீ
மின்னிச்சிரிக்கிறாய்
சிரித்து அழைக்கிறாய்
பூத்து மணக்கிறாய்
மணந்து ஈர்க்கிறாய்
கொடுத்துச் சிறக்கிறாய்
சிறந்து கொடுக்கிறாய்
பெய்து நனைக்கிறாய்
நனைத்துச் செழிக்கிறாய்
காய்த்து கனிகிறாய்
கனிந்து சொரிகிறாய்
இருப்பிலும் இழக்கிறாய்
இழப்பிலும் இருக்கிறாய்
உடுத்தலில் தெரிகிறாய்
உதிர்தலில் விழிக்கிறாய்
வீழ்தலில் எழுகிறாய்
உன்னைப்
பார்த்து ரசிக்கிறேன்
ரசித்துப்பார்க்கிறேன்
பார்த்துச் செய்கிறேன்
செய்து பார்க்கிறேன்
விழுங்கி மகிழ்கிறேன்
மகிழ்ந்து விழுங்குகிறேன்
நீ
அனைத்திலும்
விரவிக்கிடக்கிறாய்
விரிந்துகிடக்கிறாய்
மனமும் விழியும்
ஒன்றிப்பருகினால்
சாயல் புலப்படும்
எளிமையாயும்
எல்லோர்க்கும் கிடைக்கிறாய்
இயலாதோருக்கு
உன்
சாயலைத்த தருகிறாய்
சாயலே
சாயல்தான்
{28.08.2014 மாலை எம் ஆர்டியில் கிளிமெண்டி அருகே எழுதியது}
- ரெமோ – விமர்சனம்
- திரும்பிப்பார்க்கின்றேன் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த சுஜாதா
- 21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவா
- ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்
- கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)
- எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்
- நீள்கவிதை – பராக் பராக் பராக்..!
- ஒரு நாளின் முடிவில்…..
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 2
- தொடுவானம் 139.உலகத் தொழுநோய் தின விழா
- தொடு நல் வாடை
- கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்
- கவர்ச்சி
- குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்
- காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி
- எலி வளைகள்
- கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3
- வண்டுகள் மட்டும்
- புரிந்து கொள்வோம்
- அழகு
- ஆழி …..
- கவிதைகள்
- கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)
- தொடரி – விமர்சனம்
- மிதவையும் எறும்பும் – கவிதை
- திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு
- கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10