அழைப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 13 in the series 30 அக்டோபர் 2022

ஆதியோகி


மலருக்கு மலர் தாவி
ஓடி அமர்ந்து
மகிழ்ச்சியுடன் விளையாடும் பட்டாம்பூச்சிகளை,
கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்த சிறுமி,
உள்ளங்கையில் ஒரு
வண்ண மலர் வரைந்து
தோட்டத்துச்  செடிகளுக்கிடையில்
நீட்டிக் காத்திருக்கிறாள்…!
                          – ஆதியோகி

++++++++++++++++++++++

Series Navigationபனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழாநம்பிக்கை நட்சத்திரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *