ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்

This entry is part 18 of 41 in the series 13 நவம்பர் 2011


 

வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில்

கந்தலாய் அவனது வழித்தடங்கள்

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய்

பாவக்கனியின் அழுகல் பிசிறுகள்

தொற்றாய் கிருமிகளென

 

வார்தெடுத்த சர்பமொன்று

சாத்தானின் நிழலென ஊடுருவி

மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும்

எரிமலையின் பொருமலாய்

 

அந்தி சாய்கிற நேரத்தில்

எரியும் சிவந்த தழலோடு

வாய் பிளந்து அபகரிக்கும்

பொசுங்கும் நினைவு -சாம்பலை

 

பொழுது புலராத முன்பனிக்காலத்து

மழுங்கின படலங்களினூடே

பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள்

விழியற்றோனின் உதவிக்கம்பாய் நீண்டும் மடங்கியும்

 

விட்டுச் சென்றவன் திரும்புகையில்

எடுத்துச் செல்வான் கந்தலையும்

நான் சேர்த்த அழுகல் பிசிறுகளையும்

கிருமிகளை மட்டும் சுதந்திரமாய் விட்டுவிட்டு…

 

-சு.மு.அகமது

Series Navigationதொலைவில் மழைகிருமி நுழைந்து விட்டது
author

சு.மு.அகமது

Similar Posts

Comments

  1. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    //பொழுது புலராத முன்பனிக்காலத்து

    மழுங்கின படலங்களினூடே

    பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள்

    விழியற்றோனின் உதவிக்கம்பாய் நீண்டும் மடங்கியும்// அழகிய வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *