ஆன்ம தொப்புள்கொடி 

This entry is part 12 of 14 in the series 20 நவம்பர் 2022

 

சி. ஜெயபாரதன், கனடா 

 

தொப்புள் கொடி  

ஒன்றா ?  இரண்டா ? 

அம்மா  

தொப்புள் கொடி ஒன்று.   

நீர்க் குமிழி யான  

வயிற்றில் 

தானாய் 

ஈரைந்து மாதமாய்  

என்னுடல் வடிவானது. 

கண், காது, வாய், மூக்கு, தலை 

கை, கால், உடம்பு 

தோல், முதுகு  எலும்பு  

உருவாயின 

ஒரு ஊமைப் பொம்மை !  

விழிக்காத விழிகள், 

பேசாத வாய், 

கேளாத செவிகள், ஆனால் 

காலால்  உதைக்கும். 

முழு வளர்ச்சி பெற்று 

 பூ உலகுக்கு  வந்ததும் 

சிசுவை 

ஆவென அலற  

வைத்தது, 

வானிலிருந்து 

மின்னலாய்  பாயும் 

ஆன்ம தொப்புள் கொடி

 

Series Navigationஅய்யனார் ஈடாடி கவிதைகள்முகவரி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *