ஆர்வம்

This entry is part 19 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

		தேர்வு எழுதி முடித்த 
		அடுத்த வினாடி 
என் மகன் என்னிடம் 
குதூகலித்தான் 
		விடுமுறை விட்டதென்று
		படிக்கையில் என்னை
	       பக்கம் வர அனுமதிக்காதவன்
		பென்சில் எடுக்கக் கூட
		அவன் அம்மாவை விரட்டியவன்
		தேர்வு முடிந்ததும் பாட நூல்களை
		அலமா¡¢யில் நேர்த்தியாக
		அடிக்கி வைக்கிறான்
		புத்தகங்களை அடுத்த ஆண்டு
		இலவசமாகக் கூட யாருக்கும்
		கொடுக்க வேண்டாம் என்கிறான்
		புத்தகங்கள் அவனை
		மிரட்டியிருக்கும்போலும்.

		 
உருவேற்றுவதில் இருந்து 
		மீண்டு வந்தவன் 
		படிப்பதற்கு எந்த உதவியையும்
		இதனை நாளும் எதிர்பார்க்காதவன்
		விளையாட்டுத் திடலை நோக்கி
		சிட்டாய் பறக்கிறான்
		இப்போது எல்லோரையும் விளையாட
		அழைக்கிறான்.
Series Navigationவாக்கிங்கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
author

ரத்தினமூர்த்தி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *