இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..

This entry is part 30 of 31 in the series 16 செப்டம்பர் 2012
‘இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..’ செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம்.

ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களுக்குக் கவிதைகளையும் இரண்டுக்கு குறையாத சிறுகதைகளையும் தந்து வந்திருப்பினும் இலக்கியம் தாண்டி தன் தலையங்கங்கள், கட்டுரைகள் மூலமாகச் சமுதாய மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. சிறுகதைகள் அத்தனையையுமே முத்திரைக் கதைகள் எனலாம். ஆண்டு தோறும் சிறந்த பனிரெண்டு கதைகளின் தொகுப்பாக வெளிவரும் ‘இலக்கிய சிந்தனை’யில் வடக்குவாசல் கதைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. எழுத்துக்கான மரியாதையாகத் தம் பங்கை ஆற்றிடும் படைப்புகளுக்காகப் பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்படும் அற்புதமான ஓவியங்கள். அட்டைப்படங்களின் தேர்வு ரசனை மிகுந்தவையாக, கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைந்து வந்திருக்கின்றன. அனைத்துக்காகவும் ‘குங்குமம்’ வார இதழ் வடக்குவாசலை சென்றவருடம் வியந்து பாராட்டியிருந்தது.
தொடர்களாக நான் வாசித்தவற்றில் குழந்தைகள் மனநலம் மற்றும் ஆரோக்கியம், பள்ளிக் கல்வி சீரமைப்பு குறித்து சி.டி.சனத்குமார் அவர்கள் எழுதிய கட்டுரைகள்; ராகவன் தம்பி என்ற பெயரில் ஆசிரியர் அவர்கள் சுயசரிதத்தையொத்த வகையில் தனது மேடை அனுபவங்கள், நாடக மேதைகளுடனான பழக்கங்கள், நிகழ்வுகள் என வாழ்க்கை அனுபவங்களை சுய எள்ளலோடும் நகைச்சுவையோடும் விவரித்துச் சென்ற ‘சனிமூலை’ கட்டுரைகள்; சுற்றுச் சூழல், வேளாண்மை, சமூகம் போன்ற பலவற்றைப் பற்றி ய.சு. ராஜன் அவர்களின் சிந்தனைப் பகிர்வுகள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. வாசகரிடத்தில் வரவேற்பைப் பெற்ற இவை அனைத்துமே தற்போது வடக்குவாசல் பதிப்பக் வெளியீடாக, நூல்களாக வெளிவந்துள்ளன.  சென்ற ஆண்டு ஜூலை மாதம் இசை விமர்சகர் அமரர் சுப்புடு அவர்களின் நினைவில் வடக்குவாசல் நடத்திய மாபெரும் இசைவிழாவுக்குத் தலைமை தாங்கிப் பதிப்பக நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். 2008-ல் வடக்கு வாசல் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே:  http://www.vadakkuvaasal.com/.  இங்கே அனைத்து இதழ்களும் வருடவாரியாக PDF கோப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்களின் விவரங்களும் உள்ளன: http://www.vadakkuvaasal.com/books-sale.html
பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் புதியவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் தந்தபடி, எண்பத்து நான்கு மாதங்களாக அவ்வப்போது எழுந்த பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்தபடி, எந்த சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் தன் தரத்திலும் செயலிலும் உறுதியாகப் பயணித்து வந்த வடக்குவாசலின் சமீபத்திய இதழ்கள் வழக்கத்தை விடவும் அதிக வீச்சுடன் அமைந்திருந்தன. “அணையப் போகும் ஜோதியல்லவா?” என்பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர். இத்தகு சீரிய பயணங்கள் என்றைக்கும் சுடர்விட்டுச் சுற்றிலும் ஒளியைப் பரப்பியபடி தம் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும். சிற்றிதழ் எனும் வடிவிலிருந்து இணைய இதழ் எனும் வடிவுக்குக் கைமாற இருக்கிற இந்தத் தீபம் என்றேனும் ஓர்நாள் மீண்டும் அச்சு வடிவுக்குத் திரும்பும் எனும் வாசகர்களின் நம்பிக்கை நிறைவேறும் வரையில், வடக்குவாசலை அதன் இணைய தளத்தில் தொடருவோம். புதுப்பொலிவுடன் விரைவில் மலர இருக்கும் இணைய இதழுக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்போம்.
***
ராமலக்ஷ்மி
Series Navigationமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியேவழி தவறிய கவிதையொன்று
author

ராமலக்ஷ்மி

Similar Posts

20 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    இணைய இதழ் வரட்டும். ரசிப்போம். ருசிப்போம். ஆனால், நிச்சயம் வடக்கு வாசல் மறுபடியும் அச்சிதழாக வரும் என்று என் உள் மனது சொல்கிறது. இழப்புகள் மட்டுமா, நம்பிக்கையும் சேர்ந்ததுதானே வாழ்க்கை!

  2. Avatar
    K A V Y A says:

    கட்டுரையிலிருந்து வடக்கு வாசல் என்னும் பத்திரிக்கை மூடப்பட்டு விட்டதா என்று புரியவில்லை. மூடப்படவிருப்பதாக சொல்லுவதைப்போல தெரிகிறது.
    ஏன் தெளிவாக எழுதக்கூடாது?

    எக்காலத்திலும் இலக்கியம் விற்காது. அதை விற்பதற்கு ஏகப்பட்ட உட்குத்துவேலைகள் செய்தாகனும். எனவே நம் பிரபல எழுத்தாளர்கள் குண்டக்க மண்டக்கவா ஏதாச்சும் பேசி எழுதி தங்களைப்பிரபலபடுத்திக்கொண்டு தங்கள் நூல்களை விற்றுப் பொழப்பு நடாத்திக்கொண்டு வருகிறார்கள்.

    பென்னேசுவரன் அந்த டிரிக்க்ஸையெல்லாம் கற்ற பின்னர் பத்திரிக்கை ஆரம்பிக்கலாம்.

    ஒருத்தன் செக்ஸைப்பத்தி அசிங்கமாக பொதுமேடையிலும் தன் இணையதளத்திலும் எழுதி பப்ளிசிட்டியத்தேடுகிறான். இன்னொருவன் மதங்களைத் தாக்கி தேடுகிறான். மற்றுமொருவன் தமிழைத் தாக்கி சமசுகிர்தம் படிக்கவில்லையென்றால் விமோசனமில்லை என்கிறான். இன்னும் சிலர், தமிழை எப்படி எழுதினால், அல்லது எதை எழுதினால் விடலைப்பசங்க விழுவார்கள் என நினைத்துச்செயல்படுகிறார்கள். பொம்பளை எழுத்தாளர்கள் அடுப்பங்கரையை விட்டு நகலாக்கதைகளை எழுதி பெண் வாசகர் கூட்டத்தை தேடுகிறார்கள். ஆக, தமிழ் இன்றைய இலக்கியம் வெகு ஜோராகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வண்டியில் ஒரு டிக்கட் ரிசர்வ் பண்ணினால் பென்னேசுவரன் இலக்கிய உலகில் சிறக்கலாம்.

    சனிமூலை இணைய தளத்தை எப்போதாவது பிரவுசிங் பண்ணுவதுண்டு. வாசகர் கூட்டத்தைச்சேர்த்து ஒரு கல்ட் பெர்ச்னாலிட்டியாய வருவதற்கு இன்னும் வேலை பண்ணனும். வாச்கர்கள் ரிஜிஸ்டர்டு பண்ணனும். அவாளோடு ஐ பி அட்ரஸை செகுர் பண்ணிக்கோணும். கேள்வி பதில் ஆரம்பிச்சு பென்னேசுவரன் வாசகர்களின் சிந்தனை வளத்தைப்பெருக்கொணும். அப்புறம்பாருங்கள் பென்னேசுவர்ன ஒரு கல்ட் பெர்சனாலிட்டிதான்.

    வெயிட் பண்ணுவோம் பென்னேசுவரன் மாபெரும் பத்திரிக்கையாளராக, அல்லது எழுத்தாளராக மலர்ந்து இலக்கிய உலகில் பிரகாசிக்க.

    தப்பா எடுத்துக்க வேணாம். இவையெல்லாம் இன்றும் வெற்றிபெற எழுத்தாளர்கள் செய்யும் உபாயங்கள்.

    At its origin, a thing begins with a bang with all good intentions. As time goes by it begins to acquire notorious accretions and finally ends up in the pit of survival tricks and money spinning by hook or crook; Literature? Non sense! Like political parties with ideologies. A party begins with an ideology; gets known for it and is spoken about for that ideology; Once got into power riding piggy back on that ideology, and sensing that it no longer attracts ppl, it begins to dilute its original ideology or alter it to suit changing times. Successful survival is in opportunistic changes. Plan or perish !

    Penneshwaran may first get this practical wisdom.

    Good luck, Sir.

  3. Avatar
    RUTHRAA (E.PARAMASIVAN) says:

    மதிப்பிற்குரிய ராமலக்ஷ்மி அவர்களுக்கு

    பெரிய எழுத்தாளர்கள் என்று இரண்டு கொம்புகளோடு எதிர்பார்க்கிறார்கள்.எங்களுக்கு கொம்பு முளைப்பது எப்போ?எங்கள் குரல்கள் கேட்பதெப்போ? நானும் “ருத்ரா” என்ற பெயரில் “கல்கி” போன்ற இதழ்களில் எல்லாம் (1980 களிலிருந்து)கவிதைகள் எழுதியுள்ளேன்.மற்றும் திண்ணையில் 2000 மே மாதத்திலிருந்து எழுதி வருகிறென்.ஒரு இதழில் (june 2000) “அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்..”என்ற என் கவிதையை “திண்ணை”இதழ் அட்டைப்படம் போட்டு வெளியிட்டது.அதிலிருந்து இந்த திண்ணையில் தான் இருக்கிறேன்.இது தவிர “அம்பலம்”இதழிலும் கவிதைகள் வெளியிட்டுள்ளேன்.நீங்கள் குறிப்பிட்ட வடக்கு வாசல் இதழுக்கும் கவிதைகள் அனுப்பியுள்ளேன்.அவர்களுக்கு(அவாளுக்கு)தேவைப்பட்ட கொம்புகள் இன்னும் எனக்கு முளைக்கவில்லை.இருப்பினும் மற்ற இணைய இதழ்களில் அவர் தலை காட்டும் “வல்லமை”உட்பட கவிதைகள் எழுதிவருகிறேன்.பென்னேஸ்வரன் என்று பேனாக்களுக்கு ஈஸ்வரனாக அவர்
    இருப்பதால் அவரது இமயமலை ஏறும்போது மட்டும் பனி வழுக்கி கொண்டே போகிறது.போகட்டும்.பொதுவாக இப்படி புலம்பவது புலவர்களின் தொழில் அல்ல.பாரதியைப்போல் ஒரு முறுக்கலோடு நானும் “நமக்குத் தொழில்”கவிதை என்று சொல்லிக்கொள்வதுண்டு.ஏனேனில் நம் மூச்சுக்காற்றோடு மூண்டெரியும் எழுத்துக்களை தந்து கொண்டிருப்பவன் அவன்.

    எழுத்துகளை வைத்துக்கொண்டிருப்பவர்கள் இங்கே ஏராளம் ஆகி விட்ட படியால் “வாய்ப்பு” எனும் கொம்புகள் முளைத்தவர்களோடு முட்டி மோதி வருவதால் தமிழ் இலக்கிய பரிணாம வளர்ச்சியிலும் அந்த “ஜங்கில் லா”வை
    கடந்து தான் வரவேண்டும்.அதனால் இதைப்பற்றி தாங்கள் பொருட்படுத்திக்கொண்டிருக்க வேண்டாம்.இந்த பின்னணியில் “சிற்றிதழ்” என்று சொல்வதே கூட ஒரு கொச்சையான சொல்.

    உங்களது நீண்ட கட்டுரையில் கொஞ்சம் புரண்டு கொண்டதில்
    எனக்கும் ஒரு தமிழ்ப்பெருமிதம் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்படிக்கு
    அன்புடன்
    ருத்ரா

  4. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    “அவர்களுக்கு(அவாளுக்கு)தேவைப்பட்ட கொம்புகள் இன்னும் எனக்கு முளைக்கவில்லை”

    அடடே .. அப்படியா ?

  5. Avatar
    ruthraa says:

    அடடே!அப்படியே தான்.உங்களைப்போல் “கொம்பு” இன்னும் முளைக்க வில்லை என்று தான் சொன்னேன்.
    கொம்புடன் வந்தவருக்கும்….

    அன்புடன்
    ருத்ரா

    1. Avatar
      paandian says:

      கொம்புடன் வந்தவருக்கும்…. yes mee also. so what ever you writing we should accept that those are கவிதைகள் ?
      ha ha ha !!!!!!what a joke… first read and understand oothers கவிதைகள் .. Ok…

  6. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    நிச்சயமாக நீங்கள் என்னை ஏமாற்றவில்லை. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    கொம்பு ? என் தலையில் ?? ஹி..ஹி..

  7. Avatar
    சுந்தரி says:

    நல்லா கொம்பு சீவரீங்க ருத்ரா ? உங்க கவிதையில் தரமிருந்தால், வீரியமிருந்தால் கண்டிப்பாக பத்திரிகைகள் ஏற்கும். அதே நேரம் ஆசிரியரின் கொள்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏப்பைசாப்பை என்று அவர் நினைப்பதை எல்லாம் எடுத்து புத்தகத்தில் போடவேண்டும் என்பீர்களா? நீங்கள் அவ்வாறு கருதும் படைப்புகளை, நீங்கள் இதழ் நடத்தினால் வெளியிடுவீர்களா ?

    1. Avatar
      K A V Y A says:

      ஆசிரியர் பென்னேசுவரனின் கொள்கையையும் கருத்தில் கொள்ளவேண்டுமென்கிறீர்கள். சரிதான். அப்படியென்ன கொள்கை அவரது? கொஞ்சம் சொல்லுங்கள். அல்லது அவரைச் சொல்லச்சொல்லுங்கள்.

      ருத்ராவின் கவிதைகளை வீரியமில்லை; தரவில்லை என்கிறீர்கள். என்ன தாயி? ஒரு பெரிய முத்திரையை ஓங்கி குத்திவிட்டீர்கள். ஒருவர் எழுதும் அனைத்துக்கவிதைகளையும் வீரியமில்லை; தரமில்லை என்று சொல்லுகிறீர்கள்? எப்படிச்சொல்கிறீர்கள்? அவரின் கவிதைகள் அனைத்தையும் வாசித்து விட்டுச் சொல்கிறீர்களா? அல்லது தீர்ககதரிசனத்தில் அவரெழுதப்போகும் எல்லாக்கவிதைகளையும் சொல்கிறீர்களா? அவ்வளோ பவர் உங்களுக்குச் சாமி கொடுத்திருக்கிறீரா? அந்தச் சாமி பேரைச்சொல்லுங்கோ! கும்பாபிசேகம் நடாத்திக்கோயில் கட்டலாம் !

      Growth and development of a poet என்பார்கள். அதாவது முதலில் ஒருவன் கவிதை எழுதத்தொடங்கி ஆண்டுகளாக ஆக, அவர் புலமை மெருகேறும். கவிதைகள் வெறும் சொற்கள் மட்டுமல்ல; அவற்றுள் புதைந்து கிடக்கும் கருத்துக்கள், சொல்லாக்கருத்துக்களும் சேர்ந்தே. அவை ஒருவன் அனுபவத்தில் சிறக்கும். இன்று காதலியை ‘நிலவே’ என்ற இளைய கவிஞ்ன, ஆண்டுகள் பல செனற பின், ‘நிலவிலும் கலங்கமுண்டு’ என்ற பேருண்மை எனக்கு அன்று தெரியவில்லையே என்றும் எழுதும்போது அனுபவத்தில் புடம்போட்ட அக்கவிதை மிளிர்கிறது.
      ருத்ரா, இன்றும், என்றும், ‘வீரியமில்லா, தரமில்லாக்’ கவிதைகளே எழுதுவார் என்கிறீர்கள். பென்னேசுவரன், இன்றும், என்றும், தரமில்லாக்கருத்துகளை, வீரியமில்லா எழுத்துக்களிலே வைப்பார் என்று நான் சொல்ல அந்தச்சாமி பவர் கொடுக்கோனும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

      உணர்ச்சிகளின் வேகத்தில் எழுதப்பட்ட பின்னூட்டம் உங்களது.

  8. Avatar
    K A V Y A says:

    // நீங்கள் அவ்வாறு கருதும் படைப்புகளை, நீங்கள் இதழ் நடத்தினால் வெளியிடுவீர்களா ?//

    அது பத்திரிக்கையைப் பொருத்தது. சிறுவர் மலர், வாரமலர், மகளிர் மலர் என்றெல்லாம் பெரும்பத்திரிக்கை இணைப்பிதழ் வழங்குகின்றன. அவற்றுள் தோன்றும் கவிதைகள் கத்துக்குட்டி கவிஞர்களது. அப்பத்திரிக்கைகளின் நோக்கம் அவர்களை ஊக்குவிப்பது. கவிதைகளுக்கென்றே வரும் பத்திரிக்கைகளுமுண்டு. அவை அப்பத்திரிக்கைகளில் சில பக்கங்களை இப்படிப்பட்ட வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார்கள்.
    மஹாகவி, மானுடகவி ஆக ஒருவன் உருவாகும் வரை பத்திரிக்கைகள் காத்திருக்கமுடியாது.
    சேற்றிலும் செந்தாமரை முளைக்கும். வளரும் எழுத்தாளரிடம் ஒரு வைர வரிக்கவிதை வரலாம். எனவே பென்னேசுவரன் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவித்திருந்தால் நன்று. இல்லை தன் பத்திரிக்கை நன்றாக விற்க வேண்டுமென்றால், ஹன்சிகாவையோ, நமீதாவையோ பேட்டிக்கண்டு வெளியிடலாம். கண்டிப்பாக அவர்களில் படங்களோடு. சுந்தரபாண்டியனின் வரும் லட்சுமி மேனோன் நல்லாயிருக்கா மாமி. நான் நேத்து மறுபடியும் பார்த்தேன். டான்செல்லாம் நன்னா ஆடுறா. சிரிக்கிறா. தமிழ்ச்சங்கத்திலே அடுத்தவாரம் போடுவாங்க. பென்னேசுவரன் சார்ட்ட சொல்லி பாக்கச்சொல்லுங்க, லட்சுமி மேனோனைப்பாத்து அசந்துடுவார்.பென்னேசுவரன் ஒரு பேட்டியெடுக்கலாம் அவாளை.
    வடக்கு வாசல் பிச்சுக்கினு போகும். ஏன் அனாவசியமாக ‘வீரியமில்லா, தரமில்லாக்கவிதைகளை நிராகரித்து அவங்க விமர்சனத்தை ஏற்கனும்?

    Barring a few improbabilities, and some defects, Sundara Pandian is an interesting and well taken film. Performance of all, including subordinate actors, are admirable. Lakshmi Menon performed as if she is a veteran.

  9. Avatar
    சுந்தரி says:

    திரு அல்லது திருமதி காவ்யா அவர்களுக்கு,

    வரிகளை உடைத்து எழுதுவது தான் கவிதை என்றால் அதைத்தான் திரு ருத்ரா அவர்கள் செய்கிறார்கள் என்பது என்னுடைய அவதானிப்பு. தயவு செய்து அவரின் கவிதைகளைப் படித்துவிட்டு பதில் சொல்லலாமே ? இவ்வளவு பேசும் நீங்களாவது திரு ருத்திரா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா, இல்லை என்றால் இணையக் குழுமத்தில் அவரது கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன படித்து இன்புறவும். வடக்குவாசல் வாசகி என்ற முறையில் என் அனுமானத்தில், என் நோக்கில் வரி மடக்கு கவிதைகள் வடக்கு வாசலில் வந்தது இல்லை.

    1. Avatar
      Kavya says:

      இப்பதிலில் ருத்ராவுக்கு எதிராக ஒரு காழ்ப்புணர்ச்சிதான் தெரிகிறது.

      ஒருவர் எழுதிய அனைத்துக்கவிதைகளுமே குப்பையென்றால் வேறென்ன சொல்ல?

      காழ்ப்புணர்ச்சி எதையும் மெய்ப்பிக்கத் துடிக்கும். பல எடுத்துக்காட்டுகள் திண்ணைக்கட்டுரைகள்; பின்னூட்டங்களில் காணக்கிடைக்கும்.

      மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி.

      It lends credence to his allegation that caste played a crucial role in encouraging authors in Penneshwaran’s mag. If it is untrue, the reply from Sundari would not have been summary rejection of his poems as ‘rubbish’!

      I am not being jovial. In the recent Madurai Book Fair, I was dismayed see one publisher who publishes only Tamil brahmin authors. Allaiance Publishers. Knowing their mindset, which non brahmin author will go to them with his MS?

  10. Avatar
    சுந்தரி says:

    //ஒருவர் எழுதிய அனைத்துக்கவிதைகளுமே குப்பையென்றால் வேறென்ன சொல்ல?//

    Did I ever say that? நிங்களாகவே தொப்பியை செய்து என் தலையில் மாட்டுகிறீர்களே காவ்யா ? ஏன் இந்த அவருக்கான காழ்ப்புணர்வை என்மீது திணிக்கிறீர்கள் ? அவரது கவிதைகள் குப்பை என்று நான் சொன்னேனா? அப்படி எழுதி இருந்தால் காண்பிக்கவும். அவர் எழுதும் கவிதை வரிகளை உடைத்து எழுதும் வரிமடக்குக் கவிதை, அது போன்றவை வடக்குவாசலில் வந்து நான் பார்த்ததில்லை என்றேன். நீங்கள் எனக்காக தயாரித்த தொப்பி பொருந்தவில்லை. இந்த கோர்த்து விடும் வேலையில் என்னை சேர்க்க வேண்டாம், திண்ணைக்கு நெடுநாள் வாசகியாய் இருந்தாலும் பின்னூட்டம் இடுவது தவறு என்பதை புரிந்து கொண்டேன். உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு தொப்பி தயாரித்து கொடுங்கள் எனக்கு அது தேவை இல்லை.

  11. Avatar
    Kavya says:

    //வரிகளை உடைத்து எழுதுவது தான் கவிதை என்றால் அதைத்தான் திரு ருத்ரா அவர்கள் செய்கிறார்கள் என்பது என்னுடைய அவதானிப்பு. தயவு செய்து அவரின் கவிதைகளைப் படித்துவிட்டு பதில் சொல்லலாமே ? இவ்வளவு பேசும் நீங்களாவது திரு ருத்திரா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா, இல்லை என்றால் இணையக் குழுமத்தில் அவரது கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன படித்து இன்புறவும்//

    வரிகளை உடைத்தாரா இணைத்தாரா என்பதன்று கேள்வி. அவரின் கவிதைகள் தகுதியில்லையென்று வடக்கு வாசலால் நிராகரிக்கப்பட்டன. அதைப்பற்றித்தான் அவர் சொல்கிறார். அப்படியே வரியுடைப்புக் கவிதைகள் மட்டும்தான் என்றால் அவரின் மற்ற கவிதைகள் வ.வா போட்டிருக்குமென்றால் அவர் குறைசொல்லயிடமிருந்திருக்காது. ’சம்மரி ரிஜக்ஷன்’ !

    நீங்கள் இங்கு எழுதியவை அவரின் ஒரு குறிப்பிட்ட கவிதையை மட்டும் எடுத்துச்சொல்லி எழுதியதன்று; ஒட்டு மொத்தமாகப் பேசுகிறீர்கள். திண்ணையில் அவரின் கவிதைகள் அனைத்தையும் எடுத்துப்பேசுகிறீர்கள்.

    ‘கொட்டிக்கிடக்கின்றன’ என்பது ஒரு தனிக்கவிதையைக் குறிக்காது மொத்தமாக.

    ‘படித்து இன்புறவும்’ என்பது காழ்ப்புணர்ச்சி.

    வடக்கு வாசல் ஒரு விசித்திரமான பத்திரிக்கையாகத்தான் இருக்கவேண்டும் அதன் இலக்கிய சேவையைப் பொருத்த மட்டில். தனக்கென்று ஒரு ஃபிலாசபியே இல்லாத பத்திரிக்கை, கவிதைக்கு மட்டும் ஒரு கொள்கை வைத்திருந்ததாம். அதன்படி, வரியுடைப்புக்கவிதை ஒவ்வாதாம். என்ன வேடிக்கை!

    எல்லாவகைக் கவிதைகளையும் ஏற்று எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம். ஒரு கவிஞனின் கவிதைகள் ஒட்டுமொத்தமாக விமர்சிக்கப்படக்கூடாது. ஒவ்வொரு கவிதையும் தனியாக வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படவேண்டும்.

    ஒட்டுமொத்தமாக கண்ணதாசனைக் குப்பைக்கவிஞர் என்றெழுத முடியாது. ஒட்டுமொத்தமாக மஹாகவியென்றும் சொல்லவியலாது. சொன்னால், ‘எது எதிலே பொருந்துமோ, அது அதிலே பொருந்தலாம்’ என்ற பாடலும், ‘இலந்தபழம்…” என்ற பாடலும் மாபெரும் கவிதைகள். ஆனல் உண்மையென்ன? அவை அசிங்கங்கள்; குப்பைக்கூடையில் போட்டாலும் அக்கூடையின் தரம் தாழ்ந்து விடும். இலந்தப்பழம் பாடலை இந்திய வானொலி தடை செய்தது.

  12. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    “வரிகளை உடைத்தாரா இணைத்தாரா என்பதன்று கேள்வி. அவரின் கவிதைகள் தகுதியில்லையென்று வடக்கு வாசலால் நிராகரிக்கப்பட்டன. அதைப்பற்றித்தான் அவர் சொல்கிறார். அப்படியே வரியுடைப்புக் கவிதைகள் மட்டும்தான் என்றால் அவரின் மற்ற கவிதைகள் வ.வா போட்டிருக்குமென்றால் அவர் குறைசொல்லயிடமிருந்திருக்காது. ’சம்மரி ரிஜக்ஷன்’ !”

    ஏன், அவர்கள் எதிர்பார்க்கும் தரம் இவரது கவிதைகள் எதிலுமே இல்லை என்ற ஒரு சாத்தியமே இருக்க இயலாதா ?

    “அவர்களுக்கு(அவாளுக்கு)தேவைப்பட்ட கொம்புகள் இன்னும் எனக்கு முளைக்கவில்லை. …. பென்னேஸ்வரன் என்று பேனாக்களுக்கு ஈஸ்வரனாக அவர்
    இருப்பதால் அவரது இமயமலை ஏறும்போது மட்டும் பனி வழுக்கி கொண்டே போகிறது.”

    ‘தான் கவிஞன், தான் எழுதுபவை கவிதை’ என்ற உள்ளார்ந்த நம்பிக்கை உள்ள ஒருவனிடமிருந்து வர இயலாத வார்த்தைகள் இவை.

    “இருப்பினும் மற்ற இணைய இதழ்களில் அவர் தலை காட்டும் “வல்லமை” உட்பட கவிதைகள் எழுதிவருகிறேன்.”

    அப்படியானால் இவர் எழுதுபவற்றை பென்னேஸ்வரன் கவிதைகள் என்று ஒப்புக்கொள்ளவில்லை என்பதுதானே பொருள்.

    “வடக்கு வாசல் ஒரு விசித்திரமான பத்திரிக்கையாகத்தான் இருக்கவேண்டும்”

    ருத்ராவுடைய எழுத்துக்களை வெளியிடாததனாலா ? யப்பாஆஆஆஆஆ !!!!!

  13. Avatar
    இளங்கோ says:

    /* ‘தான் கவிஞன், தான் எழுதுபவை கவிதை’ என்ற உள்ளார்ந்த நம்பிக்கை உள்ள ஒருவனிடமிருந்து வர இயலாத வார்த்தைகள் இவை.*/ முழுமையாய் ஆதரிக்கிறேன் இந்த எண்ணத்தை, இந்த வார்த்தைகளை…

  14. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    ருத்ரா அவர்களின் கவிதைகள் பற்றி பின்னூட்டங்கள் எழுதி இருப்பதால்
    நானும் பதில் எழுதுகிறேன்.
    ருத்ரா அவர்களின் பல கவிதைகள் வல்லமையில், திண்ணையில், இன்னும்
    குழுமங்களில் படித்திருக்கிறேன்.பல பத்திரிகைகளில் கூட வந்திருக்கிறது அவரது கவிதை.
    மடித்து எழுதினால் என்ன தவறு? எத்தனை விஷயங்களை அவர்
    மிகவும் எளிமையாக தந்து சிந்தனைச் சிதறாத வண்ணம்…செறிந்த
    கருத்தோடு கவிதையாக சொல்லி இருக்கிறார்..யாரும் அவரது
    கவிதையைப் படித்து விட்டு புறம் தள்ளாது. மாறாக மனசாரப்
    பாராட்டும்..இன்னும் சிலர் என்னைப் போன்றவர்கள்..”என்னமா எழுதி
    இருக்கிறார்…” என்று பெருமைப் படுவார்கள்….என்னைப் போன்றே..
    அவர் சிறந்த கற்பனை வளம் கொண்ட எழுத்து சிற்பி….! அவர் படைக்கும்
    எந்த ஒரு கவிதையும் ஒரு நயத்தோடு பேசும் வல்லமை உள்ளது.
    இதை யாரும் மறுக்க முடியாது.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  15. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    / மடித்து எழுதினால் என்ன தவறு? /

    எந்த தவறும் இல்லை. ஆனால் உரைநடை வாக்கியங்களை ஒரு சில வார்த்தைகளுக்கு ஒருமுறை Enter தட்டி அதை கவிதை என்று க்ளைம் செய்துகொள்ளும்போதுகூட பரவாயில்லை, அதை மற்றவர்களும் கவிதை எனவே ஏற்கவேண்டும் என்று பொதுவெளியில் எதிர்பார்க்கும்போதும் ஏற்காதபோது அதற்கு மட்டையடியாய் பழிசுமத்தும்போதும்தான் மாற்று கருத்து எழுகிறது; எழும்.

    / அவர் சிறந்த கற்பனை வளம் கொண்ட எழுத்து சிற்பி /

    சர்ர்ரியான வஞ்சப்புகழ்ச்சி. வாழ்க. :)

    1. Avatar
      ஜெயஸ்ரீ ஷங்கர் says:

      எனக்குள் உண்மையாய் வெளிப்படும் உணர்வு…உங்களுக்கு வஞ்சப் புகழ்ச்சியாய்…!
      உண்மைக்கு இப்போதெல்லாம் கடைசி பெஞ்சு கூட கிடைக்காதுன்னு சொல்றாங்க….
      அது சரி தானோ? யப்பப்பா….! வாழ்த்துக்கு நன்றி..:)
      ஜெயஸ்ரீ ஷங்கர்

  16. Avatar
    ruthraa says:

    “திண்ணை நண்பர்களே”

    என் கவிதைகளை படித்து ரசித்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    எல்லோருக்கும் என் நன்றி.நன்றி.நன்றி.

    அன்புடன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *