இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

author
38
0 minutes, 13 seconds Read
This entry is part 2 of 24 in the series 1 நவம்பர் 2015

dadri-protest-story_647_100615103950

துஃபாயில் அகமத்
 

 
சென்ற செப்டம்பரில் தலை நகர் டெல்லிக்கு அருகே உள்ள தாத்ரி ஊரில்,  முகம்மது அக்லக் என்பவர் பசுமாட்டைக்  கொன்று அதன் மாமிசத்தை தின்றார் என்ற வதந்தியில் ஒரு வெறிக்கும்பல் அவரை அடித்து கொன்றது.
 
1970களிலும் 1980களிலும் பாரதிய ஜனதா கட்சி என்ற ஒன்று  இல்லாத சூழ்நிலையிலும் பசுமாட்டைக்  கொல்வது தடைசெய்யப்பட்டுத்தான் இருந்தது. அந்த குற்றச்சாட்டுகளின் பெயரில் போலீஸ்காரர்கள் வீடுகளை சோதனையிட்டதும் நடந்திருக்கிறது.
 
பசு இறைச்சிக்  கலவரங்கள் நவீன இந்தியாவுக்கு புதியவை அல்ல. பசுக்கள் இஸ்லாமிய உலகில் கொல்லப்படுவதில்லை. இந்திய துணைக்கண்டத்தில் பசுக்கள் கொல்லப்படுவதற்கு முக்கிய காரணம் இஸ்லாமியவாதிகள் பசுவைக்  கொல்வதை இந்து மத கருத்தான பசுவை வணங்குவதற்கு சவாலாகவே அறிமுகப்படுத்தினார்கள்.
 
 
ஃப்க்ர் ஈ நவ் (புது சிந்தனை) என்ற பாகிஸ்தானிய மார்க்ஸிய பத்திரிக்கை பசுவதையை பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
 
 
நீங்கள் வரலாற்றை திரும்பி பார்க்கலாம்.
 
akbar
அக்பர்
பிஜேபியும் ஆர்.எஸ்.எஸும் இருந்திராத 16ஆம் நூற்றாண்டில், பேரரசர் அக்பர் பசுவதையை தடை செய்தார். ஆனால், அந்த சமயத்தில் இருந்த பெரிய இஸ்லாமிய அறிஞரான ஷேக் அஹ்மது ஷிர்ஹண்டி முகலாய பேரரசரை கடுமையாக விமர்சித்து, முஸ்லீம் அரசாங்கத்தின் கீழ் முஸ்லீம்கள்  பசுவை ஏன் கொல்லக்கூடாது என்று கேட்டார்.
 
பெரும்பான்மையாக இருந்த இந்துக்களின் மத உணர்வை மதித்த அக்பருக்கு மாற்றாக, இன்றைய அறிவுஜீவிகள் போன்றே அன்றை ஷேக் ஷிர்ஹண்டி போன்ற இஸ்லாமிஸ்டுகளும் இந்துக்களின் மத உணர்வுகளை மதிக்க விரும்பவில்லை. ஃப்க்ர் ஈ நவ் கட்டுரையும், 1947இல் இந்திய பிரிவினைக்கு பின்னால் பாகிஸ்தான் பகுதிகளுக்கு வந்த இஸ்லாமிஸ்டு அமைப்புகளே பசுவதையையும் கொண்டுவந்தன என்பதை கூறுகிறது.
 
ஆனால், தாத்ரி படுகொலை சம்பந்தமாக விவாதிக்கப்படும் விஷயம் மத சம்பந்தமானதல்ல.
 
இன்று இந்தியா உலகத்தில் முக்கியமான சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், வலதுசாரி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட ஒருசிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துகொண்டால், அவர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்றும் அவர்கள் தாமதமின்றி சிறைப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.
 
முக்கியமான பாஜக உறுப்பினரும்,கோட்பாட்டு- பாராளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய், அக்டோபர் 2 ஆம் தேதி எழுதிய கட்டுரையில், இந்த விஷயத்தை அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள வழிமுறைகளின்படி சட்டப்படி அணுகவேண்டும் என்றும், அகிலேஷ் யாதவின் அரசாங்கம் இந்த விஷயத்தை அதன் தீவிரத்தோடு அணுக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
 
article-2419171-1BC8C7F8000005DC-857_306x423
அகிலேஷ் யாதவ்
 
முழுமையான மதச்  சார்பற்ற அணுகுமுறை இதனையே கோருகிறது. அகிலேஷ் யாதவின் சோசலிஸ அரசாங்கம் இந்த விஷயத்தை எந்த தயவு தாட்சணியமுமின்றி அணுகி எவர் சட்டத்தைக்  கையிலெடுத்துகொண்டாலும் கடுமையாகவும் விரைவாகவும் செயலாற்ற வேண்டும். ஆனாலும், மதவாத  அரசியலில்ஈடுபட  விரும்பும் இந்தியாவின் தாராளவாத-மதச் சார்பற்ற அறிவுஜீவிகள் அகிலேஷிடம் இந்த கோரிக்கையை வைக்கவில்லை.
 
ஷோபா டே என்ற கிசுகிசு எழுத்தாளர் அக்டோபர் 1ஆம் தேதி  டிவிட்டரில் இவ்வாறு எழுதினார். “நான் மாட்டுக்கறி சாப்பிட்டேன். வா வந்து என்னை கொல்”
 
 
நமது தாராளவாத மதச் சார்பற்ற அறிவுஜீவிகளையும் , இஸ்லாமிஸ்டுகளையும் பொறுத்தவரை இந்த விஷயம் சட்டப்பூர்வமாக அணுகப்படவேண்டியதில்லை. இது அரசியல். அதுவும் முழுமையாக மதவாதம் தோய்ந்த அரசியல்.
 
உதாரணமாக, பிரதாப் பானு மேத்தா என்ற குறிப்பிடத்தகுந்த இடதுசாரி தாராளவாத அறிவுஜீவி,  யாதவின் சோசலிஸ அரசாங்கம் தாத்ரி கும்பலைக்  கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கோருவதை விட்டுவிட்டு  (பா ஜ கவின்) தருண்விஜயின் மீது பாய்கிறார். இந்த வினோதமான “மதச்சார்பற்ற” அணுகலை அவர் கண்டித்தது தான் காரணம்.
 
தாராளவாதிகளையும்,  பழைமைவாதிகளையும் நான் ஒரு தத்துவார்த்த கட்டமைப்புக்குள் பார்க்கிறேன். பழைமைவாதிகள் சமூக யதார்த்தங்களை எவ்வாறு இருக்கின்றனவோ அப்படி பார்க்கிறார்கள். ஆனால், தாராளவாதிகள் அந்த சமூக யதார்த்தங்கள் தங்களது இடதுசாரி பார்வையில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி விவரிக்கிறார்கள்.
 
பழைமைவாதிகள் நிலத்தில் காலூன்றி உண்மைநிலையை உணர்ந்திருக்கிறார்கள். ஓரளவுக்கு அவநம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தாராளவாதிகள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பிரிவினைவாதிகளாகவும்,  நடப்பை  விவரிக்கும்போது உண்மையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். லண்டனின் இடதுசாரி பத்திரிக்கையான நியூ ஸ்டேட்ஸ்மனின் முன்னாள் பத்திரிக்கையாசிரியரான ஜான் லாயிட் சொன்னார் :” தாராளவாதிகள், தங்களுடைய சொந்த அனுபவங்களை உதாசீனம் செய்துவிட்டு எப்படி அவர்கள் தத்துவம் அனுமதிக்கிறதோ  அதே போக்கில் சிந்திக்க  மக்களைக்  கட்டாயப்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.
 mehta
பி பி மேத்தாவின் கோட்பாட்டு – அரசியல் அடிப்படை இந்தப் புள்ளியில் தான் அமைந்துள்ளது.  1980களில் இவர்கள் போன்ற கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் எந்த விதமான மதசார்பற்ற அரசியலை ஆதரித்தார்கள் என்பது ராஜீவ்காந்தியின் மதசார்பற்ற அரசாங்கம் இந்தியாவின் இஸ்லாமிஸ்டுகளின் முன்னால் சரணடைந்தபோது அறிந்தோம்.
 
திரு மேத்தா அவர்களே, உங்களது வர்க்கம் இந்தியா குடியரசை பாதித்த மூன்று முக்கியமான முடிவுகளுக்கு காரணம். ஷா பானோ வழக்கு. அயோத்தியாவின் பூட்டுக்களைத்  திறந்தது. சாத்தானின் வசனங்கள் என்ற சல்மான் ருஷ்டி புத்தகத்தை தடை செய்தது.
 
இவ்வாறு இந்தியாவின் மதசார்பின்மையை இஸ்லாமிஸ்டு கண்காணிப்புகளின் முன்னால் பலி கொடுத்ததை, இந்தியாவின் பெரும்பான்மை சும்மா பார்த்துகொண்டிருப்பார்கள்  என்று மேத்தாவின் கருத்து போலீஸ் அறிவுஜீவிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த மூன்று முடிவுகளும், இந்தியாவின் பழைமைவாதிகள் விருத்தியடைய வழிவகுத்தன. இந்த நாட்டின் வேர்களிடமிருந்து உண்மையைத்  தேட உதவி புரிந்தன.
 
உங்களது மதசார்பற்ற கும்பல் பாகிஸ்தானியர்கள் போல வேடம் போட்டு ஆடும் இந்தியாவின் அறிவுஜீவி மையநீரோட்டத்தை ஒப்பிட்டால், இந்தியாவின்  பழைமைவாதிகள் உண்மையான இந்தியர்கள்தாம். உங்களது அரசியல்தான் திரும்பத்  திரும்ப நடந்துகொண்டிருக்கிறது. முக்கியமாக ராஸா இஸ்லாமிய அகாடமியின் பரேல்வி வழி வந்த இஸ்லாமிஸ்டுகள் சல்மான் ருஷ்டியைத்  தாக்கப்போகிறோம் என்று அறிவித்ததை அடுத்து  அவர்களிடம் சரணடைந்தது  ராஜஸ்தானின் ” மதச் சார்பற்ற” காங்கிரஸ் அரசாங்கம்.  2012 ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் கலந்துகொள்ள சல்மான் ருஷ்டிக்கு காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்தது.
 
தவிர இன்னொரு விஷயத்திலும் மேத்தாவின் கருத்தியல் வரலாற்று அடிப்படையை காணமுடியும். இவரது கருத்தியல் உறவினர்கள், முன்னோர்கள் கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்கள். இந்த இஸ்லாமிய அரசியல் இயக்கம் மகாத்மா காந்தி போன்ற இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல்வாதிகளாலும், அந்த காலகட்டத்தின்,  உலக இஸ்லாமிஸ்டுகளாலும் (அலி சகோதரர்கள்) ஆதரிக்கப்பட்டது.  அலிகார் இயக்கத்துடன், கிலாபத் இயக்கமும் இணைந்துதான் 1947இல் இந்தியப்பிரிவினைக்கு காரணமாக இருந்தது.
 
கிலாபத் இயக்கத்தின் மேம்பட்ட வன்முறை பதிப்பே அபு பக்ர் அல் பாக்தாதியால் நடத்தப்படும் இன்றைய இஸ்லாமிய அரசு எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த அமைப்பை பற்றி மதச் சார்பற்ற எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளார்களும் வாய்மூடி மௌனிகளாக இருக்கும் அதே வேளையில் ஏராளமான இந்திய முஸ்லீம்கள் இதனால் கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதும் பலர் ஐ.எஸ்.ஐ.எஸில் இணைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
 
திரு மேத்தா அவர்களே, 17ஆம் நூற்றாண்டின் அபு பக்ர் அல் பாக்தாதியான அவுரங்கசீப்பை  உங்களது சித்தாந்த உறவினர்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கை தலையங்கங்களிலும் ஆதரித்தார்கள். இன்று  இஸ்லாமுக்கு மதம் மாற மறுக்கும் முஸ்லீமல்லாதவர்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸால்  ஈராக். சிரியாவின் மைய சதுக்கங்களில் தலை துண்டிக்கப்படுகிறார்களோ அதே போல அவுரங்கசீப்பின் ஆணையால், இந்தியாவின் கவசமான குரு தேக் பகதூர் இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்ததால், 1675இல் அவரது தலையை டெல்லியின் மைய சதுக்கத்தில் துண்டித்தார்கள்.
 
இந்தியாவின் கலாச்சார அமைச்சரான மஹேஷ் சர்மா சொன்ன வார்த்தைகளை பிடித்துகொண்டிருக்கிறார் பிபி மேத்தா.
 
”கலாச்சார அமைச்சர் ஏ பி ஜே அப்துல் கலாம் ”முஸ்லீமாக இருந்தாலும்” என்ற அடைமொழியுடனேயே அழைக்கப்படுகிறார். அக்லகின் மரணம் வெறுமே விபத்து என்கிறார். இது தருண் விஜய் பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக பாராமுகத்தை காட்டுகிறது. “ என்கிறார்.
 
வளர்ந்து வரும் ஜனநாயகமான இந்தியாவில் இன்னமும் பல்கலைக்கழகங்களுக்கு சென்றிராதவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மக்கள் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் அப்பாவிகள் ஆனால் உண்மையானவர்கள். அடர்ந்த உரைநடை எழுதும் மெத்தப்  படித்த தாராளவாதிகளுக்கு இணையாக தங்கள் கருத்துக்களை மெருகேற்றிச்  சொல்லக்  கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
 
சிலவேளைகளில் இந்த மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பெற்ற பல்கலைக்கழக பட்டங்களை அறிவிக்க கோரப்படுகிறார்கள் (தேர்தல் கமிஷன் ஏன் இந்தியர்கள் தங்கள் பட்டப்படிப்புகளை தெரிவிக்கவேண்டும் என்று கோருகிறது என்று அதுதான் விளக்கவேண்டும்) இவர்கள் செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளைப் போன்று அறிவுஜீவியாக இல்லாமல் இருக்கலாம். சில வேளைகளில் அவர்களிடம் ஒரு சர்டிபிகேட்டுக்கும் டிகிரிக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம்.
 
 
மேத்தாவுக்கு ஒன்று சொல்கிறேன். “தார்மீக  பாராமுகம்” என்று நீங்கள் சொல்வதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. அது ”political correctness” அதாவது உங்களின் அரசியலுக்கு உகந்தது.
 
அலிகார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ரஷிதா ரானா சித்திக்கி அவர்களிம் சமூகவியல் படித்தேன். பி.ஏ முதலாம் வருடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு வகுப்பில் “பண்பாடில்லாத” uncultured என்ற வார்த்தையை அவர் உபயோகித்தார். இந்த வார்த்தைக்கு சமூகவியல் அர்த்தம் என்ன என்று கேட்டபோது அவர் என்னை திரும்பி பார்த்து, வெகுநேரம் சிந்தித்து பிறகு பதில் சொன்னார். “இது உங்களை பாதித்தால், இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்”
டுங்கு வரதராஜன் செப்டம்பர் 20ஆம் தேதி எழுதிய கட்டுரையில் அமைச்சரை பண்பாடில்லாதவர் என்று வர்ணிக்கிறார். அந்த அமைச்சர் வாய் தவறிச் சொல்லியிருந்தலும், அவர் மனதின் அடியாழத்தில் இருந்த விஷயம் வெளியே வந்துவிட்டது என்கிறார்.

 
வரதராஜனுக்கும் பிபி மேத்தாவுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  முஸ்லீம் நாத்திகர்களும் தாராளவாதிகளும் இஸ்லாமிய மதகுருக்களால், முஸ்லீமல்லாதவர்களாகவும், போதுமான அளவுக்கு முஸ்லீமாக இல்லாதவர்களாகவும், பாதி முஸ்லீமாகவும், பாதி கூட முஸ்லீமாக அல்லாதவராகவும், ஏன் முர்த்தத்(இஸ்லாமை துறந்தவராகவும்) என்றும் கூட அறிவிக்கப்படுகிறார்கள்.
 
இதே வரையறையை இந்தியாவின் உரையாடலின் மையத்தில் வைத்தால் இதுதான் கிடைக்கும். நீங்கள் இந்தியர் அல்ல. போதுமான அளவுக்கு இந்தியர் அல்ல. நீ முதலாவது இந்தியராக இல்லை.  நீங்கள் முதலாவதாக முஸ்லீமாக இருக்கிறீர்கள். இந்த “நீங்கள்” என்பது இந்திய முஸ்லீம்.
 
மேத்தா மாதிரியான மதசார்பற்றவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் உரையாடலின் மையமே இதுதான். முஸ்லீமுக்கு எதிராக இந்தியன்.   அமைச்சரின் வாக்கியம் வாய் தவறி வந்ததல்ல. சமூக நிதர்சனத்தின் கடுமையான உண்மையே அவரது வாய் வழியாக வந்திருக்கிறது. “ஒரு மனிதனின் மனது எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த வழியாகத்தான் வாய் தவறும்” என்பதையே வைத்துகொண்டாலும், அந்த மனது வரதராஜன், பி பி மேத்தா, அமர்த்யா சென் போன்றோரின் ஒற்றை மனதுதான்.
 
ஆகவே, திரு மேத்தா அவர்களே,  நமது பள்ளி சிறுவர்களுக்குக் கூட மிகவும் பிடித்த ஏ பி ஜே அப்துல் கலாமை உங்களது வர்க்கத்துக்கு, சார்பற்றவர்களாக நடிக்கும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், டிவி பேச்சாளர்கள் போன்றவர்களுக்கு ஏன்  பிடிக்கவில்லை என்பது யதேச்சையானது அல்ல.
 
கலாச்சார அமைச்சர் ஷர்மா எழுப்பிய கேள்விகள் நிச்சயம் முக்கியமானவை. மீண்டும்  பார்ப்போம்.
 
Sir Syed Ahmed Khan
சர் சையத் அகமத் கான்
 
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷாரை 1857ஆம் போரில் எதிர்த்தார்கள். அந்த போரின் முடிவின் பின்னர் , வெகு விரைவில் முஸ்லீம்கள் இந்த ஒருங்கிணைப்பிலிருந்து விலகினார்கள். உதாரணமாக சர் சையது அஹ்மத் கான் அலிகார் பல்கலையை தோற்றுவித்தார். இது பாகிஸ்தான் இயக்கத்தை உருவாக்கியது.  இந்த நடைமுறை 1980களிலும் தொடர்ந்தது. ஆப்கானிஸ்தானில் சிஐ.ஏ காபிர்களுடன் சேர்ந்து போரிட்டார்கள். அந்த போர் முடிவுக்கு வந்ததும், முஸ்லீம்கள் பிரிந்து ஜிஹாத் போரை எல்லா இடங்களிலும் தோற்றுவித்தார்கள். முக்கியமாக காஷ்மீர் தாமாகவே போரைத் தொடங்கினார்கள்.
 
இன்னும் பின்னோக்கி பார்த்தால், 7ஆம் நூற்றாண்டில், மெக்காவின் முஸ்லீமல்லாதவர்கள் முகம்மது நபியை தங்களுடன் இணைந்து அரசியலதிகாரத்தில் பங்கெடுத்துகொள்ள அழைத்தார்கள். ஆனால் அவர் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்” என்று பதிலிறுத்தார். இந்த வசனம் குரான் 109:6. இது பல தாராளவாதிகளால், இஸ்லாமின் சகவாழ்வுச்  சிந்தனைக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. உண்மையில் இது மெக்காவாசிகளின் பன்மைத்தன்மைக்கு எதிராக, உங்களுடன் எங்களால் இணைய முடியாது என்று வலியுறுத்துவதற்காகச் சொல்லப்பட்டது.
 
மஹேஷ் ஷர்மா தனது மதசார்பற்றவராகத் தன்னை உணராத ஒரு கணத்தில் நடைமுறையை பளிச்சென சொன்ன காரணம். ஆழ் மன வெளிப்பாடாக, சர்மா நமது காலத்தின் இஸ்லாமிஸத்தையும் இந்தியாவின் வரலாற்றையும் அதன் அரசியலமைப்பையும் எதிரெதிர் முனைகளில் வைக்கிறார்.
 
இந்தியாவின் அறிவுஜீவி அதிகாரத்  தரகர்களாக  அமார்த்த்யா சென், பிபி மெத்தா போன்றவர்கள் இருப்பதினால், உண்மையை அந்த அதிகாரத்தின் முன்னால் சர்மா கூறுகிறார். இதனால், இந்த அறிவுஜீவி அதிகார பீடம் தன் முன்னே உண்மை கூறப்பட்டதால், காயமுற்றுவிட்டது.
அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல்கலாமின் பெயருக்கு மாற்றவேண்டும் என்று கலாச்சார அமைச்சர் சொல்வது இங்கே கவனிக்கத்தகுந்தது. ஏபிஜே அப்துல்கலாமை பி பி மேத்தா போன்றவர்களுக்கு பிடிக்காது என்பதும், இவர்கள் இந்துக்களை கொன்றொழித்த அவுரங்கசீப் மீது அன்பு செலுத்துபவர்களாகவும்  அவுரங்கசீபுக்காக வாதாடுபவர்களாகவும்  இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஏபிஜே அப்துல்கலாம் ஒரு சரியான உதாரணம்தானா என்பது விவாதத்துக்குரியது. ஆனால், சர்மாவின் பேச்சு முன்னரே எழுதி தயாரிக்கப்படாதது.  தாராளவாத- மதசார்பற்ற கும்பல் உருவாக்கிய இந்திய உரையாடலிலிருந்து நேரடியாக விளைவதுதான்  அவரது ஒப்பீடு.
 
 ஆகவே, வரதராஜன்களும், அமார்த்யா சென்களும், பிபி மேத்தாக்களும் நான்கு விஷயங்களை செய்யவேண்டும்.
 
 முதலாவது செயிண்ட் ஸ்டீபன்ஸ், கல்கத்தா பிரசிடென்ஸி போன்ற கல்லூரிகளிலிருந்து வராத மக்கள் பிரதிநிதிகளை போட்டு சாத்துவதை நிறுத்த வேண்டும
 
 இரண்டாவது, உங்களது தாராளவாத இடதுசாரி ஒழுக்க மதிப்பீடுகளிலிருந்தே உதாரணங்களை தரவேண்டும். (உதாரணமாக, சோவியத்தில் ஸ்டாலினால் கொல்லப்பட்ட 20 மில்லியன் மனிதர்களிடமிருந்தோ, அல்லது மாவோவின் சைனாவில் 65 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதிலிருந்தோ ஆரம்பிக்கலாம்)
மூன்றாவது, இந்த “பண்பாடில்லாத” ”படிப்பறிவற்ற” மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை சற்று புரிந்துகொள்ள முயலவேண்டும்.

 
நான்காவது, நமது வரலாறு பற்றியும் சமூகம் பற்றியும் அறிந்துகொள்ள விரும்பும் இந்திய இளைஞர்களுக்கு சரியான ஆராய்ச்சியை கொடுக்கவேண்டும்.
 
முடிந்தால், ஐந்தாவதையும் சேர்த்துகொள்ளலாம். உங்களது மனச்சாய்வுகளை உங்களுடனேயே வைத்துக்கொள்ளலாம்.
 
நமது மக்கள் பிரதிநிதிகள் மாபெரும் இந்திய ஜனநாயகத்தின் உற்பத்திகள். ஆனால் உங்கள் ஆராய்ச்சிகளோ ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் காலேஜின் உற்பத்திகள். இந்தியாவின் ஜனநாயகத்தின் உற்பத்திகள் அல்ல.
 
சில இந்திய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பாகிஸ்தானியர்கள் போல இந்திய ஊடகங்களில் பேசுகிறார்கள். பாகிஸ்தானின் குழப்பநிலையில் படைப்பாற்றலை மேத்தா காண்கிறார். ஆனால், பாகிஸ்தானின் எழுத்தாளர்களே அதன் சமூக நடைமுறையை பற்றி மிகத்தெளிவாக விவரிக்கிறார்கள்.
 
மேத்தா அவர்களே, துருக்கியின் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரித்த காந்தி போன்று,  நீங்கள் இந்திய வேடம் போட்ட பாகிஸ்தானி மாதிரிதான் எனக்கு தோன்றுகிறீர்கள்.
 
பாகிஸ்தானின் கலாச்சார உதிர்வில் அதன் படைப்பாற்றலை இழப்பதை தருண் விஜய் கூறுவதை நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். ஆனால், உண்மையான பாகிஸ்தானியும், மதிப்புக்குரிய வரலாற்றாசிரியருமான அயீஷா ஜலால் , பாகிஸ்தான் ஒரு “தன்னையே உணராத ஒரு இயலாமைக்கு” சென்றுவிட்டதை கூறுகிறார்.
 
உங்களை மாதிரி எழுதுபவர்களும் நேர்மையற்றவர்களாகவே தோன்றுகிறார்கள். நடுநிலை ஆராய்ச்சியாளர் போல வேடம் போட்ட்டாலும் உங்களது முதல் வரியே பொல்லாத வார்த்தைகளை உபயோகித்து உங்களது நோக்கத்தை படம் போட்டு காட்டிவிடுகிறது.
 
“பொது உரையாடல் எவ்வளவு பொல்லாத, வெறுப்பை உமிழ்வதுமான, இழிந்ததாக ஆகியிருக்கிறது என்பதற்கு உதாரணம் வேண்டுமென்றால்…” என்ற  தொடக்கம்.
 
வருந்துகிறேன். ஒரு உங்கள் தரத்துக்கு உகந்த வார்த்தைகள் அல்ல இவை. இது ஆராய்ச்சி என்ற பெயரில் வந்த அவதூறு. இந்திய பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி மீது நீங்கள் தொடுக்கும் வசை.
 
பிபி மேத்தாவின் கட்டுரையின் தலைப்பு “தாத்ரி கொலை. கட்சியும் அதன் விஷமும்” கொஞ்சம் சுவாரஸ்யமானது.
 
உண்மை என்னவென்றால், நீங்களும், கல்வி துறையிலும் ஊடகத்துறையிலும் இருக்கும் உங்கள் கும்பலுமே இந்த விஷத்தின் விதையும் விளைவுமாக இருக்கிறீர்கள்.
 
அமெரிக்க இணைய ஏடான ஹஃபிங்டன் போஸ்டில் “தாத்ரி கொலை. பழி மொத்தமும் மோதி  மீதே விழ வேண்டும். – பிரதாப் பானு மேத்தா” என்ற தலைப்பில் உங்கள் கட்டுரை வெளியாகியிருக்கிறது.
 
 
இந்தியன் எக்ஸ்பிரஸில், “எவ்வாறு பிரதம மந்திரி நரேந்திர மோதியே விஷம் பரவுதலுக்கு  பொறுப்பு என்று தாத்ரி நமக்கு நினைவூட்டுகிறது” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
 
வெளிப்படையாகத்தான் கேட்கிறேன். திரு மேத்தா அவர்களே, பசுக்கறி கலவரங்கள் நடந்த காலத்தை சேர்ந்த  பேரரசர் அக்பரின் காலத்திலா மோதி  பிறந்தார்?
 
போலிட்பரோ உறுப்பினர்களின் மனைவிகள் பத்திரிக்கையாசிரியர்களாக பொறுப்பேற்கும் காலத்தில், கல்வியறிவு என்பது பலியாடு, உண்மை என்பது பேனாவின் மறுமனையாட்டி. தற்போது இளைஞர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸின் வாசகம் “தைரியத்தின் பத்திரிக்கை”யா? அல்லது “கோழைத்தனத்தின் பயிற்சியா” என்று சந்தேகப்படுகிறார்கள்.
 
தாராளவாத அறிவுஜீவிகளை பற்றி ஜார்ஜ் ஆர்வெல் எழுதினார்.
 
“பொதுமக்களை விட இவர்கள் சர்வாதிகாரிகள்…. பெரும்பாலாக இவர்கள் எல்லோரும் சர்வாதிகார வழிமுறைகளுக்கு தயாராகவே இருக்கிறார்கள். ரகசிய போலீஸ், வரலாற்றை  பொய்யாக எழுதுவது, ஆகியவை அவர்களுக்கு ஒப்புதல் தான் . அதாவது இவர்கள் தரப்பிலிருந்து செய்யப்பட்டால்”
 
பசியை தங்கள் வாழ்க்கையில் கண்டிராத  எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பத்திஎழுத்தாளர்கள் எல்லோருமே சமூக நடைமுறையை அறியாதவர்கள். இவர்களில் பெரும்பாலும் மதச் சார்பற்றவர்கள், தாராளவாதிகள், கம்யூனிஸ்டுகள். மூன்றும் ஒரு சேர அமைந்தவர்கள். இவர்களே கடந்த அறுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கொள்கைகள் மூலம், நமது மகள்களை டிராபிக் லைட்களில் பிச்சை எடுக்கவைத்தார்கள்.
 
இடதுசாரி, ச் செயல்வீரர்களில் பெரும்பாலானோர் நகர அபார்ட்மெண்ட்களில் உட்கார்ந்துகொண்டு தங்கள் பேனா முனைகளிலிருந்து ரத்தம் பொங்குவதை பார்க்க சந்தோஷப்படுபவர்கள்.   சிலர் மாறி பேராசிரியர்களாக ஆவார்கள், அல்லது வெள்ளைக்கார பேராசிரியரை திருமணம் செய்து வெளிநாட்டுக்கு இடம் பெயர்வார்கள்.
 
அவர்களது மதச் சார்பற்ற கட்சி ஆட்சியில் இருந்த வரைக்கும், மேத்தா, அமார்த்யா சென் போன்ற அறிவுஜீவிகள் தேசத்தின் பிரச்னையாக வறுமையை முன்னுக்கு வைத்ததில்லை. இப்போது முதன்முறையாக ஒரு தேனீர் விற்பவர் உயர்ந்த பதவிக்கு சென்றிருக்கிறார். ஆனால், மோடியின் முதன்மை முக்கியமாக கழிப்பிடங்களை கட்டுவதையும், நமது சாலைகளை சுத்தம் செய்வதையும், திறன் மேம்பாட்டையும் வைக்கும்போது, அதாவது நீண்டகால நல்ல விளைவை உருவாக்கக்கூடிய அடிப்படையான சீர்திருத்தங்களை முன்வைக்கும்போது, மேத்தாவின் கும்பல் நமது ஊடகங்களில் சங்கடப்படுகிறது.
 
நான் ஆர்.எஸ்.எஸையும் பிஜேபியையும் ஆதரிக்க விரும்பவில்லை. ஆனால், இந்த வரலாற்று திருப்புமுனையில், ஜனநாயகம் காங்கிரஸின் வம்சாவளி அரசியலை அழித்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்,  பிஜேபியை ஒரு அனைவரையும் உள்ளடக்கிய கட்சியாக ஆக்க மோடி கடுமையாக உழைக்கிறார் என்பது மிக மிகத்  தெளிவானது.
 
திரு மேத்தா அவர்களே, இதுவரை நீங்கள் கக்கிய விஷத்தினாலேயே இன்றைய இளைஞர்கள் அதுவும் பிடெக் எம் டெக் டிகிரி படித்த இளைஞர்கள் தங்களை டிவிட்டர் வரையறைகளில் “ஆமாம் நான் பக்தன் தான்”, “வலதுசாரி”, “வலதுசாரி இந்து”, “இந்துவென கர்வம் கொண்ட தேசியவாதி” “இந்தியா முதல்”,”நான் தேசியவாதி”, “இடதுசாரியால் துரோகம் இழைக்கப்பட்டவன்”, “இந்திய தேசியவாத குடிமகன்” “இறந்தகாலத்தில் இடதுசாரி, நிகழ்காலத்தில் வலதுசாரி” “என்னை சங்கி என்று சொல்” என்றெல்லாம் வைத்துகொள்கிறார்கள்.
மேத்தாவின் மூன்று தலைப்புகளில் வெளிவந்த கட்டுரை நமக்கு அவரது கட்டுரையின் முக்கிய நோக்கம், இந்தியாவின் மீதான அக்கறையோ, அல்லது இந்திய முஸ்லீம்கள் மீதான அக்கறையோ, அல்லது இந்து முஸ்லீம் உறவின் மீதான அக்கறையோ அல்ல என்றும், அவரது முக்கிய நோக்கமே மோதி  மீது இன்னொரு தாக்குதல்தான் என்று தெளிவாக்குகிறது.

திரு மேத்தா, மதசார்பற்றவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் தலித்துகளுக்காக கவலைப்படுவதில்லை என்று தருண் விஜய் கூறுவதை விமர்சிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், தருண் விஜய் சொல்வதுதான் சரி. நீங்கள் சொல்வதல்ல.

 
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், அதன் ஜனநாயகமும் தலித்துகளுக்காக அக்கறைப்பட்டது. பல கோடிக்கணக்கான தலித்துகளுக்கு சக்தி கொடுத்தது. ஆனால் மதசார்பற்ற இடதுசாரி இயக்கம் அவர்களைக்  கைவிட்டுவிட்டது. அவர்களிடம் மார்க்ஸிய விஷத்தை ஊட்டியது.
 
இதன் சிறந்த உதாரணம் இந்திய இடதுசாரியின் வரலாறுதான். பல வருடங்களாக இந்திய இடது தலைமைப்பதவிகளில் தலித்துகளுக்கு எந்த வித பிரதிநிதித்துவமும் கொடுக்கவில்லை. பொதுவாக பிராம்மணர்களே கம்யூனிஸ கட்சியின் தலைமைப்பதவிகளுக்கு உயர்ந்தார்கள்.
 
 இந்திய இடதுசாரியின் பாசாங்குத்தனம் பெண்ணியவாதத்தில் வெளிப்பட்டது. உங்களைப்போன்ற இடதுசாரிகள் (இன்று தாராளவாதிகளாக உருமாறியிருப்பவர்கள்)  மார்க்ஸிய கோட்பாட்டை தலைகீழாக்கியிருக்கிறீர்கள். பொருளாதாரமே கட்டுமானம். கருத்துக்கள் எல்லாம் மேல் கட்டுமானம். இந்த வாதத்தை வைத்து ஜாதி அடையாளத்தை மறுத்து இதன் மூலம் தலித்துகளுக்கு இடதுசாரி கட்சிகளின் தலைமைப்பதவிகளில் இடம் தர மறுத்தீர்கள். ஆனால் மேல்ஜாதி பெண்களுக்கு  தலைமைப்பதவிகளில் இடம் கொடுத்தீர்கள்.
 
திரு மேத்தா, நீங்கள் தருண் விஜய் பொய் சொல்வதாக கூறுகிறீர்கள். ஆனால், உங்களுடைய அறுபது வருட அறிவுஜீவி பாரம்பரியத்தை சற்றே திரும்பி பார்த்தால் என்ன?
 
தருண் விஜயை நிறைய நாவல்களை படிக்கச்சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? மைய நீரோட்ட பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் உங்கள் கட்டுரை தூய அவதூறு என்பதை மதசார்பற்றவர்கள் பார்க்கத்தவறுகிறார்கள்.
 
உங்கள் ஆன்மாவுக்குள் தேடிப்பார்த்தால், ஏன் பகுத்தறிவுவாதிகள் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் பன்மைத்தன்மையில் சார்வாகர்கள் எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டாலும்,  இந்த பயங்கரவாதிகளை கைது செய்வதை, உங்கள் கும்பலின் பத்திரிக்கையாளர்கள் “அராஜக” சட்டங்கள் என்று இந்தியாவின் சட்டங்களை வர்ணிக்கின்றனர். இந்திய முஸ்லீம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸில் சேர்ந்தால், இந்த மதசார்பற்றவர்களை சந்தோஷப்படுத்த, இந்துக்களை மென்மையாகப் பொறுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறீர்கள்.
 
அதிர்ச்சி தரும்படியாக மேத்தா எழுதுகிறார்: “சைவ உணவு என்பது வன்முறைக்கான ஒரு சாக்கு”. வரலாறு சொல்வதை பார்த்தால், மதசார்பின்மையும் கலவரங்களை உற்பத்தி செய்துதான் வந்திருக்கிறது. நீங்கள் எழுதுகிறீர்கள்: “பாரம்பரியம், சுதந்திரத்தின் மீதான வன்முறைக்கு ஒரு சாக்கு”. இந்தியாவில் ஊடகங்களும், அடிப்படை பத்திரிககை தர்மத்துக்கு எதிரான வன்முறையாகத்தான் இருக்கிறது.
 
நீங்கள் மேலும் எழுதுகிறீர்கள்: “கருத்துக்கள் விவாதத்தை முடக்க ஒரு சாக்கு”. நான் ஒப்புகொள்கிறேன். இந்தியாவின் உரையாடல் உங்களைப்போன்றோர்களால், விஷமாக்கப்பட்டுள்ளது.
 
அடுத்து நீங்கள் எழுதுகிறீர்கள்: “கருத்து வேறுபாடு என்பது வன்முறைக்கான தூண்டுதலுக்கு ஒரு சாக்கு” . ஆமாம். சாதாரண கருத்து வேறுபாடுகள் கூட உங்களுக்கு மோதியைத்  தாக்கக்  கிடைத்த ஒரு சாக்குகள்.
 
மேலும் நீங்கள் எழுதுகிறீர்கள்- “உண்மைகள் பொய் பேசுதற்கான சாக்குகள்”: இடதுசாரி, தாராளவாதி, மதசார்பற்றவராக இருக்கும் உங்களைப்போன்றவர்கள் உருவாக்கிய உரையாடலில் ஆழமாக பதிந்திருப்பது பொய் பேசுவது ஒன்றே.
 
இந்தியாவின் மதச் சார்பற்ற-தாராளவாத எழுத்தாளர்களுக்கு இது போன்ற வாக்கியங்களை எழுதும்போது, தங்களது இதயங்களை பார்க்க நேரமோ அல்லது வெட்கமோ இருப்பதில்லை. ”எந்தவிதமான சிந்தனையோ அல்லது இரக்கமோ இல்லாமல், இந்திய தேசமே தனது வன்முறை மனமாச்சரியங்களால் நிறைந்து ஒரு பைத்தியக்காரனைப்போல நடந்துகொள்வது போல இருக்கிறது”
 
வெளிப்படையாக கேட்கிறேன். எந்த மாதிரியான விதைகளை நீங்கள் விதைத்து இன்று அறுவடை செய்துகொண்டிருக்கிறீர்கள்? இதோ கண்ணாடி, திரு மேத்தா அவர்களே, உங்களது மதச்சார்பின்மை என்பது இந்த யுகத்தின் அறிவுஜீவி காட்டுமிராண்டித்தனம். இது இந்திய இளைஞர்களை உங்களது அரசியலுக்காக பிரித்து அவர்களின் இதயத்தில் விஷத்தை விதைத்து அவர்களை மூலைக்குத் தள்ளி, அவர்களை திரும்பத் தாக்கும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது.
 
இந்தியாவின் இளைஞர்கள் உங்களைப் போன்றோரை நம்புவதில்லை.
 
நீங்கள் எழுதுகிறீர்கள்: ”இதற்கான முழுப்  பழியும் மோதியின் மீதே. இந்த விஷத்தை பரப்புபவர்களுக்கு அவரது ஆதரவு இருக்கிறது.”
இப்போதைக்கு நீங்கள் விதைத்த விதைகளின் பலன்களை அனுபவியுங்கள்.

சமூக வலைத்தளங்கள் இன்று இந்தியாவின் சாதாரண மக்களுக்கு உதவ வந்திருப்பது சுவாரஸ்யமானது. அந்த சமூக வலைத்தளங்கள் உங்களைப்போன்ற அறிவுஜீவி அதிகார தரகர்களால் வெறுக்கப்படுவதும் இன்னும் சுவாரஸ்யமானது. இன்னும் முக்கியமாக, உங்களை போன்றோர்களை வெகு வேகமாக அம்பலப்படுத்தவும் இந்த சமூக வலைத்தளங்களால் முடிகிறது.
 
mark-zuckerberg-narendra-modiநரேந்திர மோதி  பேஸ்புக்குடன் இணைந்து ஒவ்வொரு இந்தியரும் ஒரு வலைப்பத்திரிக்கையை நடத்த முடிகிற மாதிரி வசதி செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும். அது மேத்தாக்களுக்கும் அமார்த்யா சென்களுக்கும் அரசியல் கல்லறையாக இருக்கும். இந்தியாவின் மக்களை செல்லாக்காசாக ஆக்கும் பாதி இத்தாலியன் பாதி இந்தியன் வம்சாவளியினர்  உருவாக்கிய பெர்லின் சுவரை உடைத்தெறியும்.
 
உங்களது கட்டுரையின் கடைசி வரிகளை சிறிதே மாற்றி தருகிறேன்.
 
இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரான அச்சுறுத்தல் இந்த மைய உரையாடலிருந்தே தொடங்குகிறது  என்பதை பிரதாப் பானு மேத்தா நமக்கு நினைவூட்டுவதற்காக நன்றி. இந்த மையமும், மேத்தாவும், சென்னுமே நம்மை அது உண்மையல்ல என்பதை உறுதி செய்யவேண்டும்.
 
Tufail Ahmad is a former journalist with the BBC Urdu Service and Director of South Asia Studies Project at the Middle East Media Research Institute, Washington DC. He can be reached at: tufailelif@yahoo.co.uk

Series Navigationஅவன், அவள். அது…! -8கரடி
author

Similar Posts

38 Comments

  1. Avatar
    paandiyan says:

    ஒருதலைபட்சமாக கையாளப்பட்ட இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? மீடியாக்களில் மறைக்கப்பட்ட அல்லது வெளிவராத தகவல்கள் என்னென்ன? முதலில் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாத்ரி விவகாரம் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல்களை பார்ப்போம்.

    கொலை செய்யப்பட்ட அக்லக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி திருடு போனது. கன்றுக்குட்டியை தேடும் பணியில் ராகுல் இறங்கினார். அப்போது அக்லக்கின் வீட்டின் பின்புறம் கன்றுக்குட்டியின் எலும்புத்துண்டுகள் கிடப்பதை கண்டு, அக்லக்குடன் சண்டை போட்டார். அக்லக் மற்றும் ராகுல் இடையே மோதல் நடைபெற்றபோது, அங்கு வந்த அக்லக்கின் மகன், ராகுலை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் படுகாயமடைந்த ராகுல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை நடந்த சம்பவங்கள் பற்றி எந்த மீடியா சேனலும் பேசவில்லை.

    அக்லக்-ராகுல் இடையே சண்டை நடந்த விஷயமும், அதனால் ராகுல் தாக்கப்பட்ட விஷயமும் அந்த கிராமம் முழுவதும் பரவுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அக்லக் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அக்லக் உயிரிழந்துள்ளார். கிராம மக்கள் தாக்கியதால் அக்லக் உயிரிழந்த சம்பவம், அடுத்தநாள் மத சாயம் பூசப்பட்டு மீடியாக்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒரு திருட்டு சம்பவம் மத சாயம் பூசப்பட்டுள்ளதை உணராமல், அரசியல்வாதிகளும் இதில் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம் என குற்றம்சாட்டுக்களை அடுக்கினர். ஆனால், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ராகுல் பற்றிய எந்த அரசியல்வாதியும், மீடியாவும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    : அடித்துக் கொல்லப்பட்ட அக்லக் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவர் எதற்காக பாக்., சென்றார்? அவருக்கு விசா உள்ளிட்ட அனுமதிகள் எவ்வாறு கிடைத்தது? பாக்.,ல் இருந்த திரும்பி வந்த உடனேயே அக்லக் கார் வாங்கியது எப்படி? அவருக்கு அந்த அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது? அக்லக்கிற்கு பாக்., உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இல்லை என்பதற்கு ஆதாரம் என்ன? அவர் பாக்.,ல் பயிற்சி பெறவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? அக்லக்கிற்கு பாக்., உடன் இருந்த தொடர்பு பற்றி இதுவரை யாரும் விசாரிக்காதது ஏன்?

    இந்த ஒட்டுமொத்த பிரச்னையும் மத சாயம் பூசப்பட்டு, இந்துக்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், இந்து-இஸ்லாமியர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    1. Avatar
      ஷாலி says:

      paandiyan says // உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், இந்து-இஸ்லாமியர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.//

      மேலே உள்ள கதையாடலும் நண்பர் பாண்டியனின் சொந்தக்கருத்தல்ல. நடுநிலை?? தவறாத “சங்”க நாளிதழான தினமலரின் கருத்தையே இங்கு காப்பி ஆத்தியிருக்கிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1378184

      இந்தியாவின் கலாச்சார காவலர்கள் மீது மோடி அவர்கள் பாசம் கொண்டிருப்பதால்,நாலுகால் பிராணிகளை காப்பற்ற இரண்டு கால் அப்புராணிகளை அடித்துக்கொல்வது தொடரத்தான் செய்யும்.இதை எதிர்க்கும் எவரும் தேசத்துரோகிகள்,பாகிஸ்தான் கைக்கூலிகள்.அறிஞர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் எவராயிருப்பினும் சரியே! ஆறு மாதத்திற்கு முன்பே அமெரிக்கர்கள் இதை அழகாக கூறிவிட்டனர்.

      அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள சர்வதேச மத சுதந்திரம் பற்றிய ஆணையத்தின் 2015–ம் ஆண்டுக்கான அறிக்கையில், ‘‘இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சிறுபான்மையினரை பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளால் பல வன்முறை தாக்குதல்களும், கட்டாய மதமாற்றமும் நடந்துள்ளது’’ என்று கூறப்பட்டு உள்ளது.
      இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப், ” அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியாவை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

      இப்ப இந்தியாவைப்பற்றி உலகமே நன்கு புரிந்து கொண்டது.வளர்ச்சி…வளர்ச்சி என்று வாய் மூடாமல் கூறியவர்,இன்று மவுனித்து இருக்கிறார்.மவுனம்…சம்மதம்…மற்றென்ன சொல்வது,சொல்லாமல் தெரிய வேண்டுமே…தமிழ் சினிமா பாட்டுதேன்…..

  2. Avatar
    ஆதிவாஸி says:

    ஹிந்து, முகமதியர்களிடையே மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் மிக முக்கியமான கட்டுரை. ஹிந்துக்களும், முகமதியர்களும் படித்துப் பரப்புவது கடமை. இத்தகைய கட்டுரைகள் மூலம் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் திண்ணை இணையதளத்துக்குப் பாராட்டுகள். வரலாற்றில் இடம்பெறவேண்டிய பணியை திண்ணை இதழ் செய்துவருகிறது.

  3. Avatar
    paandiyan says:

    Editor,
    Some bugs in the portal. when I register comments using Chorme, error says contents has spam. re-register but the same very much Ok on IE Browser.

  4. Avatar
    B RAJA says:

    பாராட்டுக்கள், கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்களின் தோலை உரித்து தொங்க விட்டதற்கு:

    “கருத்து வேறுபாடு என்பது வன்முறைக்கான தூண்டுதலுக்கு ஒரு சாக்கு” . ஆமாம். சாதாரண கருத்து வேறுபாடுகள் கூட உங்களுக்கு மோதியைத் தாக்கக் கிடைத்த ஒரு சாக்குகள்.

    “உண்மைகள் பொய் பேசுதற்கான சாக்குகள்”: இடதுசாரி, தாராளவாதி, மதசார்பற்றவராக இருக்கும் உங்களைப்போன்றவர்கள் உருவாக்கிய உரையாடலில் ஆழமாக பதிந்திருப்பது பொய் பேசுவது ஒன்றே.

    இந்தியாவின் “மதச் சார்பற்ற???”-“தாராளவாத???” எழுத்தாளர்களுக்கு, இது போன்ற வாக்கியங்களை எழுதும்போது, தங்களது இதயங்களை பார்க்க நேரமோ அல்லது வெட்கமோ இருப்பதில்லை.

    வாழ்த்துக்கள், தங்கள் நற்பணி தொடர்வதற்கு.

    தாத்ரிக்கான முழுப் பழியையும் மோதியே தாங்க வேண்டும். விஷத்தை முறிக்காமல், மௌனம் காப்பதன் மூலம், துர் பலன்களை அனுபவிக்கிறார். மோடி தயவால், பதவி சுகம் அனுபவிக்கும், ராஜ்நாத் சிங் என்ன செய்கிறார்? கீழ்க்கண்ட கேள்விகள், எழுப்பப்பட்டும், தெளிவான விடை இல்லாதது ஏன்?
    1. ஒரு திருட்டு சம்பவத்திற்கு, மத சாயம் பூசப்பட்டுள்ளதை பரவலாக மக்கள் மத்தியில் எடுத்து செல்லாதது.
    2. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ராகுல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது.
    3. அடித்துக் கொல்லப்பட்ட அக்லக் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவர் எதற்காக பாக்., சென்றார்? அவருக்கு விசா உள்ளிட்ட அனுமதிகள் எவ்வாறு கிடைத்தது?

  5. Avatar
    BS says:

    திண்ணையின் குறைகளுளொன்று இம்மொழி பெயர்ப்புக்கட்டுரைகள். தொடந்து வெளியாகும் இவை இத்தளத்தை ஒரு சார்பு நிலையாளர்களாகக் காட்டுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் தம்மை மறைத்துக்கொள்ள இத்தளம் உதவி செய்கிறது. அவர்கள் சார்புநிலை கொண்டோர் எனபது வெள்ளிடை மலையாக இருக்கும் பட்சத்தில் இம்மறைப்பு என் செய்யும் என்பதை உணரவில்லை.

    இதை முசுலிம் மதத்தை அகோரமாகக் காட்டும் மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் வெளிவந்த போதே உணர்ந்தேன். இப்போது மோடி அரசு காலத்தில் மோடியின் விமர்சகர்களை முட்டாள்கள்; அயோக்கியர்கள் எனக்காட்டும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வரத்தொடங்கியிருக்கின்றன.

    இருவிடயங்களிலும் எதிர்தரப்பின் வாதங்களென்ன என்று தெரியாதபடி வைத்துக்கொள்ளப்படும் வண்ணம் எதிர்தரப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாக இடப்படவில்லை. ஒரு நல்ல பத்திரிக்கையின் தர்மமே அதுதான். இரு தரப்பு வாதங்களையும் முன் வைக்க உதவி விட்டு முடிவை வாசகருக்கு விடுவது. வாதம் என்றால் பின்னூட்டங்களல்ல. கட்டுரைகள்.

    மறுதரப்புக் கட்டுரைகள் ஏராளமிடப்படுகின்றன. அத்தரப்பை //தோலை உரித்துத்தொங்கவிட உதவும் கட்டுரை இருப்பதைப்போல, இத்தரப்பையும் தோலை உரித்துத்தொங்கவிடும் கட்டுரைகள் இருபபது தெரியாதா? அக்கட்டுரைகள் பலவற்றை யான் படித்துக்கொண்டு வருகிறேன். அவற்றின் வாதங்கள் இதைவிட ஏற்கும் படி இருக்க, அதை மொழிபெயர்த்துபோட்டால், தோலை உரித்து தொங்கவிட்டொமென்று எழுதும் இராஜாவின் நிலை? ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சக்கரை.

    நம் நாட்டிலும் அயல் நாடுகளிலும் அவற்றிலும் ஒன்று கூட மொழிபெயர்ப்பாக வரமுடியாதா என்பதுதான் கேள்வி. ஜோதிர்லதாவின் கட்டுரை மறு தரப்புக் கட்டுரையே. ஆனால் அவர் திண்ணை எழுத்தாளர். ஆனால் அவர இருமுறை முட்டாள் என்று திரு கிருட்டிணக்குமாரால் திட்டப்பட்டார். மதிஹீனம் என்றால் முட்டாள் எனபதுதான். He used the motormouth word twice there.

    மறுதரப்புக்கட்டுரை மட்டுமன்று. வந்தால் பின்னூட்டத்திலேயே தரக்குறைவாக தனிநபர் தாக்குதலில் இறங்க திண்ணை உதவுகிறது.

    மொழிபெயர்ப்புக்கட்டுரைக்கும் இன்னொரு மொழிபெயர்ப்புக்கட்டுரையே மறுப்பாக இருக்க முடியும். அல்லது தார்மீகமாக இருக்கவியலும்.

    மோடி சார்பு, இசுலாத்தை எதிர்க்கும் மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் வரக்கூடாதென்பதன்று என் வாதம். ஆனால் அவை மட்டுமே வருவது நீதியாகாது.

    வியப்பாக இருக்கிறது. சண்டை என்று வந்துவிட்டால் இரு போட்டியாளர்கள் வேண்டும். ஒரு நடுவர் வேண்டும். நடுவரே ஒரு போட்டியாளருக்கு மறைமுகமாக உதவினால், பார்வையாளர்கள் பார்க்க என்ன இருக்கிறது? வீட்டிற்கு போகலாம்.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ ஆனால் அவர் திண்ணை எழுத்தாளர். ஆனால் அவர இருமுறை முட்டாள் என்று திரு கிருட்டிணக்குமாரால் திட்டப்பட்டார். மதிஹீனம் என்றால் முட்டாள் எனபதுதான். He used the motormouth word twice there. \\

    குரங்கு அப்பம் பங்கிடும் கதையை ஒத்து உள்ளது உங்களது ந்யாயம். அந்த அம்மணியின் வ்யாசம் மிகவும் கீழ்த்தரமான வசவு மிக்க ஏசலுடன் கூடிய கூச்சல் வார்த்தைகளால் ஆனது. மிகவும் தரம் தாழ்ந்த வாசகங்களால் ஆன ஒரு தரப்பைப் பேசும் பொய்களாலும் மதக்காழ்ப்பினாலும் ஆன அந்த வ்யாசத்தை மிக நயமாக சாடிய வார்த்தை மதிஹீனம் என்பது. அதை நீங்கள் மறைக்க விழையலாம். ஆனால் அது எடுபடாது.

    \\ இதை முசுலிம் மதத்தை அகோரமாகக் காட்டும் மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் வெளிவந்த போதே உணர்ந்தேன். \\

    ஜெனாப் வைகை அனீஷ் போன்றோர் இஸ்லாத்தை நயமிகுந்ததாகவும் ஹிந்துஸ்தானத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டுடன் இயைந்ததாகவும் ஆன படிக்கு காட்ட விழைகையில் அதை நிர்தாக்ஷண்யமாக சிதைத்து ……………… இல்லவே இல்லை…………. பயங்கரவாத வஹாபியத்தின் பாற்பட்டது தான் இஸ்லாம் என்று உங்கள் வாதங்கள் இருந்தனவே. இங்கு பகிரப்படும் வ்யாசங்கள் காட்டும் அகோர முகத்தைக் காட்டிலும்……………… பன்முக இஸ்லாத்தை ஒரே பயங்கரவாத முகமாக உண்மைக்கு மாறாகக் காட்ட விழைவது உங்களுடைய உத்தரங்களே.

    \\ இவை இத்தளத்தை ஒரு சார்பு நிலையாளர்களாகக் காட்டுகிறது. \\

    இல்லையே, அம்மணி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தரப்பிலிருந்து பொய்களால் ஆன…………….. ஹிந்துமதக்காழ்ப்பை வெளிப்படையாகப் பகிரும்………….. ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் கோரமாகக் காட்ட விழையும்…………….. வ்யாசம் கூட பகிரப்பட்டுள்ளதே. நீங்களே கூட சொல்லுகிறீர்களே \\ ஜோதிர்லதாவின் கட்டுரை மறு தரப்புக் கட்டுரையே. \\

    \\ மோடி சார்பு, இசுலாத்தை எதிர்க்கும் மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் வரக்கூடாதென்பதன்று என் வாதம். \\

    பொய்யை உண்மை போல நீங்கள் காட்டினால் அது உண்மையாகி விடாது.

    1. Avatar
      BS says:

      ஜோதிர்லதா, மற்றும் வைகை அனீஸ் அவர்கள் எழுதியவை மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் அல்ல. அவை ஒரிஜனல் திண்ணைக்கட்டுரைகள். இங்கு நான் பேசுவது திண்ணையில் வெளியாகும் மொழிபெயர்ப்புக்கட்டுரைகளே. அவை ஒரு சார்பாகவே இருக்கின்றன. முன்பு தொடர்ந்து இசுலாமிய எதிர்ப்புக்கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன‌. அப்போதே நான் சுட்டிக்காட்டினேன். தற்போது மோடி ஆதரவு கட்டுரைகள். இவை ஒரு சார்பு கருத்துக்களை பரப்புரை செய்ய திண்ணை மெனக்கெடுகிறது என்றே தெரிவிக்கும் என்பதே என் கருத்து. திரு கிருட்டிணக்குமார் சொன்னதைப்போல மொழிபெயர்ப்பாளர்கள் தங்களைக் காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொள்கிறார்கள். மறுபக்கத்தை விதந்தோதும் நன்கெழுதப்பட்ட கட்டுரைகள் பல ஆங்கில ஊடகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாதங்கள் இங்கு வைக்கப்படவேண்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தோன்றவில்லை.

      ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கருத்துக்கள் இங்கு என்னால் விவாதிக்கப்படவேயில்லை. அவர் சொல்வதைத்தான் மாற்றுக்கருத்துக்களை வைத்து எதிர்க்கலாமே தவிர அவரை எக்காரணம் கொண்டு முட்டாள் போன்ற இழிவுபடுத்துவது வெறிச்செயலே என்றுதான் என்னால் எடுத்தியம்பப்படுகிறது.

      நாம் பேசுவது சமூகப்பிரச்சினைகள். இன்றைய இந்திய சமூகத்தில் நடப்பவை. நாடோறும் நாம் படிப்பது. பார்ப்பது – விவாதங்கள், கட்டுரைகள், மேடைப்பேச்சுகள் மூலமாக – இப்பிரச்சினைகளில் இருவேறுகருத்துக்கள் நிலவுகின்றன. இக்கரையிலிருந்து பார்க்கும் போது அக்கரை அசிங்கமாகப்படும். அக்கரைக்கு இக்கரை தவறாகப்படும். இவரை அவர் முட்டாளென்றும் அவரை இவர் முட்டாளென்றும் கற்றவர் சபை விவாதங்களில் பேசார். கல்லா மூடர்களின் சண்டையில் இப்படிப்பட்ட மோட்டார் சொற்கள் பறக்கும். இப்பிரச்சினைகளின் விவாதங்களை நோக்கும்போது, உலகம் என்ற ஆனையை குருட்டு சகோதரர்கள் ஐவர் தொட்டுப்பார்த்து தங்கள்தங்கள் நேரடி உணர்ச்சிகளின் வழியாக முடிவுசெய்த கதை நினைவுக்கு வரவேண்டும். அக்கதை சிறுவயதில் நமக்கு ஊட்டப்பட்டக் காரணமே பெரிய வயதில் கொள்கை வெறி கொண்டு சமூகத்தில் திரிந்து அலையக்கூடாது என்பதற்காகத்தான்.

      எனவே திரு கிருட்டிணக்குமார், உங்கள் வாதங்களை, அசிங்கமாக இழிவுபடுத்தும் சொற்களில் வைக்காமல், நாகரிகமாக வைத்து நீங்கள் பெற்ற கல்வியின் தரத்தையும் காட்டுங்கள். அது போதும். மேலும், அப்படி வைக்கும்போதுமட்டுமே, உங்கள் கருத்துக்கள் நிதானமாக படித்து ஒருவேளை, அக்கரையாளர் கூட ஏற்கலாம். கண்ணியமும் கட்டுப்பாடும் பொதுமேடையில் தவறவே கூடாது.

  7. Avatar
    ஷாலி says:

    //எனவே திரு கிருட்டிணக்குமார், உங்கள் வாதங்களை, அசிங்கமாக இழிவுபடுத்தும் சொற்களில் வைக்காமல், நாகரிகமாக வைத்து நீங்கள் பெற்ற கல்வியின் தரத்தையும் காட்டுங்கள்.//

    திரு.BS. அவர்களே! இவ்விசயத்தில் அண்ணன் க்ருஷ்ண குமாரைச் சொல்லிக் குற்றமில்லை.ஏனெனில் அவுங்க படிச்ச “சங்”கப் பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்ற பெருமக்கள் அனைவருமே இப்படித்தான் பேசுகிறார்கள்.சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும்.நம்ம பிரதமரே இப்படித்தான் பேசுகிறார்.

    குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து 2013 ல், “நீங்கள் ஓட்டுநராகவும் இருக்கலாம் அல்லது பயணம் செய்பவராகவும் இருக்கலாம், உங்கள் காரில் ஒரு நாய்க் குட்டி அடிபட்டு செத்துப்போனால் அதற்காக வருத்தப்படுவீர்கள் தானே” என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு திருவாய் மலர்ந்து அருளியவர் தான். குஜராத் கொடுமைகள் நடந்து முடிந்த 2002 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 9-ந் தேதி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறினார்.
    “அவர்கள் (முஸ்லிம்கள்) நாம் ஐவர், நமக்கு இருபத்தைவர் என்பதை கடைப்பிடிக்கிறார்கள்” என்றும் நிவாரண முகாம்கள் பற்றி “நாங்கள் என்ன குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையா நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றும் கூறினார்.
    தாத்ரி சம்பவங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, “இது மாநில பிரச்சனை இதற்காக மத்திய அரசை குறை கூறலாமா?” என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். சட்டம் – ஒழுங்கு மாநில பிரச்சனை தான். ஆனால் சட்டம்-ஒழுங்கை கெடுப்பவர்கள் பாஜக தலைவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி பேசியிருக்கிறார்கள் என்பதை பாருங்கள். சங்கீத் சிங் சோம்:- இவர் பாஜக எம். எல்.ஏ. இக்லாக்கை கொன்றவர்கள் அப்பாவிகள் என்றும், 2017 ல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவோம், யாராவது பசுவை வதைத்தால் அது கொலைக் குற்றமாக 302 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    மகேஷ் சர்மா:- இவர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர். அந்த தொகுதியின் எம்.பி. இது ஒரு விபத்து, வந்தவர்கள் இக்லாக்கை கொன்றிருக்கிறார்களே தவிர அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. இக்லாக் குடும்பத்துக்கும் நீதி கிடைக்கும், ‘அப்பாவி’ குற்றவாளிகளுக்கும் நீதி கிடைக்கும் என்று பேசியிருக்கிறார்.

    சமீபத்தில் மகேஷ் சர்மா கூறிய 8 சர்ச்சைக்குரிய கருத்துக்களை இங்கே படியுங்கள்.
    1. எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி அளிப்பது குறித்து:
    “அவர்களால் எழுத முடியவில்லை என்றால் அதை முதலில் சொல்லட்டும். அதுக்கப்புறம் நாம அவங்கள பாத்துக்கலாம்.”

    2. தாத்ரி படுகொலை குறித்து:
    “இது முன்பே திட்டமிடப்பட்ட படுகொலை என்று சொன்னால் நான் ஏற்கமாட்டேன். இது ஒரு விபத்து. அந்த வீட்டில் 17 வயது பெண் கூட இருந்தது. அந்த பெண் மீது யாருடைய விரல் கூட படவில்லை.”
    3. சாலைகளுக்கு பெயர் மாற்றம் செய்வது குறித்து:

    “ஔரங்கசீப் ஒரு பெரிய மாமனிதர் இல்லை. அதனால், அவருடைய பெயரில் உள்ள சாலையின் பெயரை முஸ்லிமாக இருந்து தேசியவாதியாக மாறிய மாமனிதர் அப்துல் கலாமுடைய பெயரில் மாற்றலாம்.”

    . கலாச்சார அழிப்பு பற்றி:
    “மேற்கத்திய கலாச்சாரம் பரவி வரும் பகுதிகளை மொத்தமாக அழிக்க வேண்டும். அங்கே நம்முடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் நிறுவ வேண்டும். நம்முடைய கலாச்சாரம் மாசுபட்டுள்ளது.”

    5. மதச்சார்பின்மை பற்றி:
    “நான் குர்-ஆன் மற்றும் பைபிள் நூல்களை மதிக்கிறேன். ஆனால், அது இந்தியாவின் ஆன்மாவுடன் ஒத்துப்போவதில்லை. ராமாயணமும், மகாபாரதமும்தான் ஒத்துப்போகின்றன.”

    6. மேற்கத்திய கலாச்சாரம் பற்றி:
    “மேற்கத்திய கலாச்சாரம் தவறானது அல்ல. ஆனால், அது நம்முடைய கலாச்சாரத்துக்கு ஏற்றது அல்ல. நம் நாட்டில் 15 வயது குழந்தை பெற்றோர்களை விட்டுப் போகமாட்டார்கள். 14 வயது சிறுமி இரவில் தனியாக செல்ல வேண்டும் என்றால் செல்லட்டும். ஆனால், அது நம்முடைய கலாச்சாரம் அல்ல.”

  8. Avatar
    ஷாலி says:

    சஞ்சீவ் பால்யான்:- இவர் மோடி அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சர். பசுவதையை நிறுத்தவில்லை என்றால் இன்னும் இது மாதிரி நடக்கும் என்று பேசியிருக்கிறார்.

    ஆதித்யநாத்:- இவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர். எம்.பி.யும் கூட. மாட்டிறைச்சி வைத்திருப் பவர்களுக்கு எதிராக இந்துக்கள் போராடும் போது அவர்கள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு துப்பாக்கி தருவேன் என்று கூறியிருக்கிறார்.

    சாக்ஷி மகராஜ்:- இவரும் நாடாளுமன்ற உறுப்பினர் தான். “பசுவை காப்பாற்ற கொல்லவும் தயார், கொல்லப்படவும் தயார்” என்று பேசியிருக்கிறார். இதேபோன்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பீகார் முன்னாள் துணை முதல மைச்சர் சுஷில் குமார் மோடி ஆகியோரும் பேசியிருக்கிறார்கள்.
    இவர்களில் சங்கீத் சிங் சோம் மற்றும் சஞ்சய் பால்யான் இருவரும் முசாபர்நகர் கலவரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள். இருவருக்கும் மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

    சங்கீத் சிங் சோமுக்கு உள்ள இன்னொரு சிறப்பு இவர், இறைச்சி ஏற்றுமதி தொழில் நடத்தியவர். இவர் கம்பெனிக்கு அல்-துவா மற்றும் அல்-அய்னாஎன்று அரபு மொழியில் பெயர் வைத்திருந்தார். ஒளரங்கசீப் பெயரை சாலைக்கு மாற்றினார்கள். ஆனால் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் தன் நிறுவனத்திற்கு அரபு மொழியில் பெயர் வைக்கிறார் மாடுகளின் பாதுகாவலர். மாட்டிறைச்சி விற்ற காசு கவிச்சி நாற்றம் அடிக்காது போலும்.

    மோடியின் கட்சியினரும், நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் அடித்துக் கொல், துப்பாக்கியை எடு, பாலியல் வன்கொடுமையா நடந்து விட்டது என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். இதை தட்டிக் கேட்கவோ, அதட்டிச் சொல்லவோ மோடி முன்வரவில்லை.

    நம்ம க்ருஷ்ண குமார், தமிழர் ஸ்ரீ.அருணகிரியாரின் திருப்புகழ் திருத்தொண்டர்.திருப்புகழ் பாடி வாய் மணக்கும் இடத்தில் கவுச்சி வாடை அடிக்கலாமா? மாட்டிறைச்சி,மற்றும் நரவேட்டை ரத்தக் கவுச்சியிலிருந்து மீண்டு, திருப்புகழுக்கு மீண்டும் வரவேண்டுமேன்பதே அனைவரின் அவா! நல்லூர் முருகன் நற்சிந்தனை கொடுப்பானாக!

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ எனவே திரு கிருட்டிணக்குமார், உங்கள் வாதங்களை, அசிங்கமாக இழிவுபடுத்தும் சொற்களில் வைக்காமல், நாகரிகமாக வைத்து நீங்கள் பெற்ற கல்வியின் தரத்தையும் காட்டுங்கள். அது போதும். மேலும், அப்படி வைக்கும்போதுமட்டுமே, உங்கள் கருத்துக்கள் நிதானமாக படித்து ஒருவேளை, அக்கரையாளர் கூட ஏற்கலாம். கண்ணியமும் கட்டுப்பாடும் பொதுமேடையில் தவறவே கூடாது.\\

    அம்மணி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் ஹிந்துமதத்தை இழிவுபடுத்தும் படிக்கு பகிர்ந்த வ்யாசம் உங்களுக்கு இழிவானது ஏன் இல்லை என்பது எனக்குத் தெரியும். உங்களது கருத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கும் தெரியும்.

    ஹிந்துமதத்தை பொய்களாலும் அரை உண்மைகளாலும் இழிவு செய்வது உங்களுக்கு உகப்பானது. அதில் நீங்கள் இழிவைப் பார்க்க மாட்டீர்கள் இல்லையா. உலகத்தில் பயங்கரவாத வஹாபியத்தால் நடாத்தப்படும் கொடூரங்களை திண்ணை தளம் பகிர்ந்தால்…………. திண்ணை தளம் ஒரு சார்பானது.

    நீங்கள் அமரர் மலர் மன்னன் மஹாசயர் மற்றும் அமரர் வெ சா அவர்களை இதே தளத்தில் மட்டில்லாமல் நிந்தனை செய்ததை சுட்டி சுட்டியாக என்னால் பகிர முடியும். பெயரை மாற்றிக்கொண்டால் நீங்கள் பகிர்ந்த இழிவான கருத்துக்கள் உங்களுடையது ஆகாமல் போய் விடும் என்று நினைக்கும் சிறுமையையும் உடைத்து சுக்கு நூறாக்க முடியும், ஐயன்மீர்.

    மதிஹீனம் என்பது அசிங்கமாக இழிவுபடுத்தும் சொல்லாடல் என்றால்……….. நீங்கள் அமரர் மலர் மன்னன் மஹாசயர் மற்றும் அமரர் வெ.சா அவர்களை இழிவு செய்த சொல்லாடல்களை சுட்டியுடன் நான் பகிர்ந்தால்……… என்ன செய்வதாக உத்தேசம்?

    கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பொதுமேடைகளில் தொடர்ந்து இழிவு செய்த ……… செய்துவரும்…….தீரா விடத்தினரை தலைமேல் வைத்துக்கொண்டாடும் நீங்கள் பொது மேடையில் கண்ணியமுடன் பேசுவதைப் பற்றிப் பகிர்வது நகைமுரண்.

    பொய்களை உண்மை என்று ஒரு அம்மணி எழுதினால் அது மதக்காழ்ப்பின் பாற்பட்டதாக இருக்கலாம் அல்லது வடிகட்டிய முட்டாள்தனத்தின்பாற்பட்டு இருக்கலாம். முட்டாள் தனத்தை அறிவுஜீவித்தனம் என்று நீங்கள் கும்மியடிப்பதன் மூலம் மட்டிலும் அது அறிவுஜீவித்தனம் ஆகாது.

    அருணகிரிநாதர் எழுதியது கந்த சஷ்டி கவசம் என்றும் நாயன்மார்கள் 64 பேர் என்றும் எழுதிய நீங்கள் கல்வியின் தரத்தைப் பற்றி கதைக்க விழைகிறீர்கள். இவற்றை சுட்டியுடன் பகிர்ந்து உங்கள் கல்வித்தரத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

    இழிவானது ………. அசிங்கமானது………. என் கருத்துக்கள் இல்லை ஐயா. உங்களது சிந்தனைகள். ஹிந்துமதக் காழ்ப்பினை உகக்கும் உங்களது சிந்தனையும் பயங்கரவாத வஹாபியம் கருவறுக்கப்படுவதைக் கண்டு விசனமுறும் உங்களது சிந்தனையும் இழிவானது. உங்களது கண்ணை மறைக்கும் மட்டில்லாத சார்புடைமை இழிவானது. அந்த சிந்தனைப் போக்கு உங்களிடமிருந்து அகன்றால் அடுத்தவர் கருத்திலிருக்கும் ந்யாயம் ஒருக்கால் உங்களது கண்ணில் படலாம்.

  10. Avatar
    BS says:

    இந்தியர்களின் உணவுப்பழக்கத்தில் அரசு தலையிடலாமா கூடாதா? இது ஒரு சமூக விவாதப் பொருள். அதன் மேல் ஜோதிர்லதா தன் கருத்துக்களை வைத்தார். அதற்கு மாற்றுக்கருத்துக்களைத்தான் வைக்கலாம். கருத்தை வைக்கவே கூடாதென்பதைப்போல ஹிந்துமதத்தை இழிவுபடுத்திவிட்டார் எனக் கொதிப்பது நீங்கள் பொதுவிவாதங்களில் ஈடுபடத் தகுதியில்லாதவர் என்பதையே காட்டும். அவர் வைத்த கருத்துக்களை நான் விவாதிக்கவே இல்லை. எத்தனை தடவை சொல்வது

    அவர் வைக்கலாமாகூடாதா? அது பொதுப்பிரச்சினையா இல்லையா? பொதுப்பிரச்சினையென்றால் விவாதிப்ப்போர் எப்படி சொற்களை கையாள வேண்டும்? இவையே என் கேள்விகள். இவற்றைப்புரியும் வலிமை உங்களுக்கு இல்லை என்பதையே உங்கள் மறுபதில்கள் காட்டுகின்றன.

    அவை பொதுப்பிரச்சினை இல்லை; அவற்றை விவாதம் செய்வோர் திரு கிருட்டிணக்குமார் கருத்துக்கு மாற்றாக இருந்தால், அவர்கள் ஹிந்துமதத்துரோஹிகள் என்றால், எனக்கும் உங்களுக்கும் எந்தவித தொடர்பே கிடையாது. மோட்டார் மைவுத் என்ற அழைக்கப்படுவோரிடம் போய் இப்பிரச்சினையை வைத்தால் என்ன சொற்கள் விழுமோ அவையோ உங்களிடமிருந்து வருகின்றன.

    இப்படி பேசுபவரிடம் எவருமே எதையுமே பேச முடியாது. ஒரு பள்ளியில் சிறுகுழந்தையொன்று வகுப்பில் பிறபிள்ளைகளைக் கிள்ளிவிட்டுக்கொண்டே இருந்தது. எப்படிச் சொன்னாலும் நிறுத்தவில்லை. ஆசிரியைக்கு ஒரு மனோவியல் உபாயம் சொல்லப்பட்டது. அதன்படி, ஒரு நாள், அக்குழந்தை சற்றும் எதிர்பார்க்காத வேளையில் ஆசிரியை அதை நறுக்கென கிள்ளிவிட்டார். குழந்தை அழுதது. ஆனால் அதன்பின்னர் அது யாரையும் கிள்ளியே விடவில்லை உளவியலாளர் கருத்தின்படி, அக்குழந்தை பிறரைக் கிள்ளிவிட்டால் அவர்களுக்கு எப்படி வலிக்கும் என்பதை அறியவில்லை. ஆசிரியை செய்தவுடன் உணர்ந்து திருந்தியது. பொது மேடையில் பொது சமூகப்பிரச்சினையில் தன் கருத்துக்களை வைத்தவரை முட்டாள், துரோஹி, என்று சொல்லும் திரு கிருட்டிணக்குமார் போன்றோர் அக்குழந்தையை நினைவுபடுத்துகிறார்கள்.

    பொது சமூகப்பிரச்சினையை ஒரு நல்ல விவாதப் பொருளாகத்தான் பார்க்கவேண்டும்! அதைத்தாண்டிப் போனால் பொது அரசியல் மேடையிலேறி பேசவேண்டியதுதான். அங்கே பேச்சாளருக்குத்தக்க கூட்டம் கூடும் வெற்றி கொண்டானுக்கும் தீப்போறி ஆறுமுகத்துக்கும் வரும் கூட்டம் ஃபர்ண்ட் பெஞ்சுகள். இருவர் பேச்சுக்களையும் பெண்கள் கேட்கவே முடியாது. அவ்வளவு ஆபாசமாக இருக்கும். ஃபரண்ட் பெஞ்சு ஆண்களுக்குத் தீனி போடத்தான் அவர்களும் மேடையேறுகிறார்கள். நீங்கள் யாருக்குத் தீனி போட இங்கு வந்து எழுதுகிறீர்கள்?

    நீங்கள் எழுதிய அதே கருத்துக்களை – அதாவது மாற்றுக்கருத்துக்களை – அவரின் கட்டுரையிலேயே நீங்கள் எழுதியது போல எழுதுகிறேன். எப்படி முட்டாள், தேசத்துரோஹி, இந்துமதத்துரோஹி போன்று ஆபாசச்சொற்களில்லாமலும் வலிமையாகவும் எழுத முடியுமென காட்டுகிறேன். வெளிவந்தால் படித்து தமிழக்கு உள்ள அழகைத் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது காரசாரமான விவாதங்களிலும்கூட .

    திண்ணையின் வரும் மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் ஒரு சார்புநிலையையே வாசகருக்குக் காட்டுகின்றன. என்ற விமர்சனம் திண்ணை குழுவினருக்குத்தான் வைக்கப்பட்டதேயொழிய உஙகளுக்கில்லை.

    1. Avatar
      க்ருஷ்ணகுமார் says:

      \\ இந்தியர்களின் உணவுப்பழக்கத்தில் அரசு தலையிடலாமா கூடாதா? இது ஒரு சமூக விவாதப் பொருள். அதன் மேல் ஜோதிர்லதா தன் கருத்துக்களை வைத்தார். அதற்கு மாற்றுக்கருத்துக்களைத்தான் வைக்கலாம். கருத்தை வைக்கவே கூடாதென்பதைப்போல ஹிந்துமதத்தை இழிவுபடுத்திவிட்டார் எனக் கொதிப்பது நீங்கள் பொதுவிவாதங்களில் ஈடுபடத் தகுதியில்லாதவர் என்பதையே காட்டும். \\

      எப்போதாவது விதிவிலக்காகவாவது கருத்துக்களை திரிக்காமல் வாதம் செய்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.

      மட்டில்லாத ஹிந்து மதக்காழ்ப்பினை மற்றும் மட்டில்லாத ஜாதிக்காழ்ப்பினை தொடர்ந்து பரப்புரை செய்யும் நீங்கள் கண்ணியத்தைப் பற்றி ப்ரசங்கம் செய்ய விழைவதை என்னென்று சொல்வது?

      ஜோதி அம்மணி முன்வைத்தது உங்களைப்போலவே அரைகுறைப்புரிதல்களுடன் கூடிய இந்தக் கருத்து மட்டிலுமல்ல. பற்பல புளுகுமூட்டைகளையும் மதக்காழ்ப்பு மிக அவர் முன்வைத்தார்.

      இப்படி ஹிந்துமதத்தை இழிவு படுத்துமபடியான கருத்துக்களை வைக்கவே கூடாது என்று நான் எங்கும் சொல்லவில்லை.

      அடுத்தவர் கருத்தை திரித்தே பழக்கப்பட்ட உங்களது கயிறு திரித்தல் மாற்றுக்கருத்தை முன் வைக்கவே கூடாது என்று நான் சொல்லியதாகத் துண்டு தாண்டிச் சத்தியம் செய்வது. போலி மதசார்பின்மை வாதிகளுக்கு புரட்டுகளை முன்வைத்தல் வழக்கமான செயற்பாடு தானே.

      புரட்டுகளை முன்வைப்பது போலி மதசார்பின்மை வாதிகளது செயல். அதை மறுப்பது எங்களைப் போன்ற பழமைவாதிகளது செயல். அவர்கள் வழி அவர்களுக்கு. எமது வழி எமக்கு.

      \\ வெளிவந்தால் படித்து தமிழக்கு உள்ள அழகைத் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது காரசாரமான விவாதங்களிலும்கூட . \\

      கூசாமல் பொய்களையே சொல்லுவதும்……….. ஹிந்துமதக்காழ்ப்பினையும் ஜாதிக்காழ்ப்பினையும் நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வதும்……. அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை அடுத்தவர் சொல்வதாகத் திரிப்பதிலும்…….. தமிழுக்கும் அழகில்லை. வாதத்துக்கும் அழகில்லை. அடிப்படை மானுடத்திற்கும் கூட அழகில்லை.

      சரீர தர்மம் எனக்கு இடம் கொடுக்கவில்லை தான். பின்னிட்டும் எனது வ்யாசத்தையும் பகிர விழைகிறேன்.

      ஒரு வ்யாசம் என்று வந்தால் ……… என்னுடைய எந்த ஒரு வ்யாசத்திலும் வசவு மற்றும் சுடுசொல் என்பது இருக்கவே இருக்காது.ஆனால் தேவரீரது வேறுபெயரில் வந்த வ்யாசங்களில் விதிவிலக்கில்லாமல் காழ்ப்பானது பரவலாகக் காணக்கிட்டும்……..

      கருத்துப் பரிவர்த்தனம் என்றாலும் கூட சுடுசொல் இருக்கக்கூடாது தான்……… ஆனால் அடிப்படை மானுட விழுமியங்களுடன் கூடி ஒருவர் விவாதித்தால் அது எளிதில் சாத்யம்……….. அடிப்படை மானுட விழுமியங்கள் அறவே இல்லாமல் தொடர்ந்து ஜாதிக்காழ்ப்பினை மட்டிலும் முன்வைக்கும் உங்களுடைய கருத்தாக்கங்களுடன் பொருதினால்………..நாருடன் சேர்ந்த பூவும் கூட நாறுவதில் வியப்பில்லை.

      ஆனாலும் கூட உங்களைப் போன்று காழ்ப்புக்கருத்துக்களையே சலிப்பில்லாது தொடர்ந்து ப்ரசாரம் செய்யும் ஒருவர் சொன்னாலும் கூட சத்யம் சத்யம் தான். காழ்ப்பு கருத்துக்களுக்கும் வசவுக்கருத்துக்களுக்கும் ஏகபோக உரிமை உங்களுக்கேயானபடியால் அதை எங்களைப் போன்றோர் கைவிடுதல் நன்றே. நன்றே. நன்றே.

      இயலுமானால் இங்கு துஃபைல் சாஹேப் அவர்கள் முன்வைக்கும் கருப்பொருளில் மட்டிலும் மேற்கொண்டு விவாதம் செய்ய விழைவீர்.

      உங்களது பொது வழக்கமான வ்யாசத்தின் கருப்பொருளில் விவாதம் செய்யக்கூடாது என்ற வ்ரதத்தை விதிவிலக்காக இந்த வ்யாசத்திற்காவது உத்யாபனம் செய்து விடுங்கள்.

      1. Avatar
        BS says:

        //என்னுடைய எந்த ஒரு வ்யாசத்திலும் வசவு மற்றும் சுடுசொல் என்பது இருக்கவே இருக்காது.ஆனால் தேவரீரது வேறுபெயரில் வந்த வ்யாசங்களில் விதிவிலக்கில்லாமல் காழ்ப்பானது பரவலாகக் காணக்கிட்டும்……..
        கருத்துப் பரிவர்த்தனம் என்றாலும் கூட சுடுசொல் இருக்கக்கூடாது தான்……… //

        சுடு சொற்கள் இருக்கலாம். முட்டாள், புழுகு மூட்டைகள், தேசத்துரோஹி என்ற சொற்கள் சுடு சொற்கள் அல்ல. ஆபாசமான ஆவேசமான சொற்கள். மாற்றுக்கருத்துக்களை இச்சொற்களைத்தவிர்த்தும் அழகாக வைக்கலாம். அப்படி வைக்கும்போது மட்டுமே கருத்துக்களின் மேல் கவனம் வைப்பார்கள். இல்லாவிட்டால் கவனம் அச்சொற்களின் மேலேறி நின்றுவிடும். நகராது. உங்கள் கருத்துக்கள் காற்றோடு பறந்து போய் விடும்.

        ஏதோ உங்களை அவர் தனிப்பட்ட முறையில் தாக்கி விட்டதைப்போல கொதிக்கிறீர்கள்! சொற்களை அள்ளி வீசுகிறீர்கள்!! அவர் எழுதியவை ஒரு பொதுப்பிரச்சினையில் அவரின் சொந்தக் கருத்துக்கள். அதே பிரச்சினையில் உங்கள் கருத்துக்கள் எவை? அவை எப்படி மாறுகின்றன? அவர் சொன்ன கருத்துக்களை நீங்கள் ஏன் ஏற்கவில்லை என்பதை அழகாகச் சொல்லலாமே? ஆத்திரமும் ஆவேசமும் தேவையேயில்லை.

  11. Avatar
    paandiyan says:

    தவறான தேதியில் திப்பு ஜெயந்தி கொண்டாடி , அதில் தேவை இல்லமால் ஹெம்ப கோவடவை வம்பு இழுத்து , இலவு உண்டாக்கி , மத சார்பின்மையை, சகிபுதன்மையை காப்பாரி விட்டார்கள் . டெக்கன் ஹராடில் நான் மிரடபடவில்லை என்று சொன்னவரின் வாக்குமூலம் தமிழ் மதசார்பார்ர ஊடகங்களில் மறைக்கப்பட்டு , கவுடக்களின் எதிர்ப்பு திரிக்கப்பட்டு , சகிப்புதன்மை காப்பற்ற பட்டுவிட்டது

  12. Avatar
    paandiyan says:

    இந்த தளத்தில் கிறிஸ்துவர்களின் பிரிவை வைத்து மார்க்க ரீதியாக வெளிப்படையாக கமெண்ட் போட்ட ஷாலிதான் , ஹிந்துகளுக்கு வேதம் ஓத வந்து இருகின்ரார் . என்ன காலத்தின் கோலம் …

  13. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    பேரன்பிற்குரிய ஷாலி

    \\ நம்ம க்ருஷ்ண குமார், தமிழர் ஸ்ரீ.அருணகிரியாரின் திருப்புகழ் திருத்தொண்டர்.திருப்புகழ் பாடி வாய் மணக்கும் இடத்தில் கவுச்சி வாடை அடிக்கலாமா? மாட்டிறைச்சி,மற்றும் நரவேட்டை ரத்தக் கவுச்சியிலிருந்து மீண்டு, திருப்புகழுக்கு மீண்டும் வரவேண்டுமேன்பதே அனைவரின் அவா! நல்லூர் முருகன் நற்சிந்தனை கொடுப்பானாக! \\

    என்னுடைய கருத்துக்களில் இன்ன சொல்லில் குற்றம் என்றால் மட்டிலும்………………. ஏன் குற்றம் என்றால் மட்டிலும்………………

    அதை பொருட்படுத்தவும் கூட செய்வேன்.

    அம்மணி ஜோதிர்லதா கிரிஜா அவர்களுடைய வ்யக்திவிசேஷத்தின் மீது எனக்கு யாதொரு ப்ரதேயகமான ஆரோபமும் இல்லை.

    கவைக்குதவா வெட்டி முற்போக்குத் தனம் என்ற போர்வையில் அந்த அம்மணியார் மதக்காழ்ப்புக் கருத்துக்கள் / பொய்கள் / அரை உண்மைகள் கொண்ட முட்டாள்தனமான கருத்துக்கள் பகிர்ந்ததில் எனக்கு உடன்பாடில்லை. அவருடைய கருத்துக்களை ஆக்ரஹமுடன் எதிர்த்திருந்தேன். ஏன் எதிர்த்தேன் என்பதற்குக் காரணங்களும் பகிர்ந்திருந்தேன். பகிர வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. இயன்றால் தனி வ்யாசமாக.

    மாட்டிறைச்சி பற்றி ஷாலியின் சுட்ட பழத்திலும் தோஷம் உண்டு. அது தனியாக. இந்த வ்யாசத்தின் கருப்பொருளுடன் சம்பந்தப்படாத படிக்கு அது இங்கு பகிரப்பட வேண்டா விஷயம்.

    ஜோ விற்கு எப்போதுமே வ்யாசத்தின் கருப்பொருளை விட்டு விலகிக் கதைக்கும் வழக்கம் உண்டு. அந்த வழக்கத்தில் மற்றவர்களை அமிழ்த்தி வ்யாசத்தைப் பற்றி விவாதம் நடக்கவொண்ணாது தடம்புரளச் செய்யும் பாங்கு…………ம்ஹும்.

    இந்த வ்யாசத்தில் துஃபைல் சாஹேப் அவர்களது கருத்தைப் பற்றி விவாதம் செய்யாமல் தடம் புரண்டதில் என் பங்கிற்கு க்ஷமாயாசனம். இந்த வ்யாசத்தின் கீழ் ………..மேற்கொண்டு எனது கருத்துக்கள் இந்த வ்யாசத்தின் கருப்பொருளை மட்டிலும் சார்ந்து அமையும்.

    1. Avatar
      BS says:

      வி கே சிங் சொல்லவந்த கருத்து: //ஒரு இந்தியாவில் எங்கோ ஒரு சிற்றூரில் நடக்கும் துர்சம்பவங்களுக்குக் கூட மோடிதான் காரணம் என்று பேசுகிறார்கள் உள்ளோக்கத்துடன்// என்பதுதான். அஃதை அப்படியே சொல்லியிருந்தால் அவரின் கருத்து எல்லாரிடமும் போய்ச்சேர்ந்திருக்கும். மாறாக நாய்கள் கொல்லப்பட்டாலும் மோடிதான் காரணமா? என்று கேட்டு எரித்துக்கொல்லப்பட்ட இரு சிறு தலித்துக்கொலைகளின் துர்மரணங்களை நாயகள் சாவதோடு ஒப்பிட்டதால், அவர் கருத்து திசை மாறிவிட்டது. திசை மாற்றப்பட அவரே காரணம். மாற்றார் இல்லை.

      திரு கிருட்டிணக்குமார், இங்கு பொது சமூகப்பிர்ச்சினைகளின் மேல் தம் கருத்தை வைப்பாரை முட்டாள், மதிஹீனம், தேசத்துரோஹிகள் என்று சொல்லி தான் பேசவந்த கருத்துக்களையே மடைமாற்றம் செய்துவிட்டு, தற்போது பிறர் காரணம் என்பது You cannot fool all the people all the time என்ற லிங்கனின் வரியையே நினைவுபடுத்தும்.

      திரும்பதிரும்ப ஜோதிர்லதா கிரிஜா தப்பாக எழுதினாரென்றெ சொல்லிக்கொண்டு தான் பயன்படுத்திய ஆபாசவார்த்தைகளை (வி கே சிங்கின் நாய்கள் போல) சரியென்கிறார். ஜோதிர்லதா கிரிஜா எழுதியவைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தவில்லை. தாராளமாக பக்கம்பக்கமாக அவருக்கு மாற்றுக்கருத்துக்களை வைக்கலாம். ஆனால் சொல்வதை நாகரிகமான சொற்களின் சொல்க எனபதுதான் கேட்கப்படுகிறது. தவறைச் சுட்டிக்காட்டினால், மடைமாற்றம் என்பது தவறை நியாயப்படுத்துவதே.

      வி கே சிங் மன்னிப்புக் கேட்டுவிடடதால் அவரை எதிர்த்து வழக்குப் போடவில்லை. எனவே அப்பிரச்சினை முடிந்தது.
      திரு கிருட்டிணக்குமார் இனி யாரை முட்டாள் என திட்டப்போகிறாரோ? ஏனெனில் அவர் தன் தவறுக்காக வருந்தவேயில்லை.

      1. Avatar
        paandiyan says:

        court dismissed and said that nothing wrong on VK Sing comment. Media as usual mention low profile. shame shame on secular medias!!!!!

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    நீங்களும் உங்களுடைய மித்ர வர்யரும் உகந்தேத்திப் பேச வரும் விஷயங்கள் அனைத்தும் துஃபைல் சாஹேப் அவர்களால் மிகக் கடுமையாக நிர்தாக்ஷண்யமாகச் சாடப்படும் விஷயங்களே. உங்களது மித்ரவர்யர் எப்போதுமே யார் சொல்லுவதையுமே வாசிக்காது கருத்துப் பகிர்வார். நீங்களும் கூடவா?

    ஒரு தபா மறுபடி துஃபைல் சாஹேபின் இந்த வ்யாசத்தின் மொழியாக்கத்தை வாசித்து அவர் சொல்லியுள்ள கருத்துக்களை விவாதிக்க விழையுங்கள்.

    என்னைப்போன்ற பழமைவாதிகளின் பேச்சுக்கள் கவிச்ச வாடை அடிப்பதாக நீங்கள் சொல்லுகிறீர்கள். போலி மதசார்பின்மை வாதத்தில் மூழ்கியுள்ள ப்ரதாப் பானு மெஹ்தா, அமார்த்ய சென்……………….. போன்றவர்களுடைய எழுத்து அதே மாதிரிக்கா கந்தறகோளமாகவும் பொய்களிலும் அதீத சார்புடைமையில் உழல்வதாகவும் துஃபைல் சாஹேப் சாடுகிறார்.

    நீங்களும் உங்கள் மித்ரவர்யரும் கண்ணை மூடிக்கொண்டு …………. ஸ்தோத்ரம் செய்யும் உங்களது ஆதர்ச எழுத்தாளரான ஜோதிர்லதா கிரிஜா அம்மணியின் மதக்காழ்ப்பு வ்யாசமும் ……………இதே போலி மதசார்பின்மை கருத்தாக்க ஜோதியில் ஐக்யமாகியமான படிக்கு………….. அதே கவிச்ச வாடை, இழிவு / அசிங்கக் கருத்தாக்கங்கள் அவரது வ்யாசத்தில் இருப்பதாக நான் சொல்லுகிறேன். வெறுமன சொல்லவில்லை. நான் சாடிய அவரது ஒவ்வொரு கருத்துக்களையும் அது ஏன் தவறானவை என்று காரண காரியங்களைப் பகிர்ந்து அவரது கருத்துக்கள் சாடப்பட்டுள்ளன. இயன்றால் தனி வ்யாசம்.

    ஸ்ரீ பாண்டியன் அவர்கள் தினமலர் பத்திரிக்கையில் இருந்து காபி பேஸ்ட் செய்துள்ளதை காபி ஆத்துவதாகக் கிண்டல் செய்திருக்கிறீர்கள். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இதில் தார்மீகம் என்பது லவலேசமாவது இருக்கிறதா என்று.

    அதாவது ஏதோ நீங்கள் தாத்ரிக்கே நேரில் போய் விசாரணை செய்தது போலவும்…………. அல்லது சாக்ஷி சம்மன் களை விசாரணை செய்தது போலவும் …………….. ந்யாயாலய விசாரணை முடிந்து நீங்கள் ரீம் ரிமா விசாரணை ஆவணங்களை வாசித்தது போலவும்……….பாண்டியன் நோகாம நொங்கு சாப்டா மாதிரிக்கும்…………..ஸ் ஸப்பா என்ன பில்டப்பு……………….. தாங்க மிடியல சாமி…………..

    கூகுள் சர்ச் இஞ்சினை மட்டிலுமே குடைந்து குடைந்து காபி பேஸ்ட் செய்வதை (அதுவும் செர்ரி பிக்கிங்காக) கலையாக்கி வைத்திருக்கும் நீங்கள் ஸ்ரீ பாண்டியன் அவர்களைக் கிண்டல் அடிக்கிறீர்கள். பொலிக. பொலிக. நாவலோ நாவல். நாவலோ நாவல்.

    உங்களுடைய ஸ்தோத்ரத்துக்குப் பாத்ரமான ஜோதி அம்மணியாரின் வ்யாசத்தில் நீங்கள் உத்தரமாகப் பகிர்ந்த சுட்ட பழத்தில் உள்ள வில்லங்கத்துக்கான மண்டகப்படிக்கு ப்ரதீக்ஷை செய்யவும். அது பின்னாடிக்க.

    தாத்ரியில் ஜெனாப் அக்லாக் என்ற அன்பர் க்ராமத்து மக்கள் பலரால் வதம் செய்யப்பட்டார் என்பது மட்டிலும் உண்மை.

    எதனால் அவர் கொல்லப்பட்டார் என்பது இன்னமும் ருஜுவாகாத விஷயம். புலீஸ் விசாரணை மற்றும் ந்யாயாலய விசாரணைக்குப் பின்னர் சாஷி சம்மன்கள்…………… அவற்றை விசாரித்த ந்யாயாலய ஆவணங்கள் இவற்றின் மூலமே காரணங்கள் இன்னது என்பது ருஜுவாகும்.

    அது வரை ஒரு காபி பேஸ்ட் ஹேஷ்யம் இன்னொரு காபி பேஸ்ட் ஹேஷ்யத்தை கிண்டலடிப்பது என்பது ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பது போலத்தான்.

    இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இதில் மேற்கொண்டு சொல்ல ஏதும் இல்லை. ஆனால் புரியாதது மாதிரி நடிக்க விழைந்தால் பூசி மொழுகுவது என்ன உங்களுக்குப் புதிதா சொல்லுங்கள்?………………..இது பண்டா ஃபோட் …………… நெம்பர் 1

    1. Avatar
      BS says:

      //எதனால் அவர் கொல்லப்பட்டார் என்பது இன்னமும் ருஜுவாகாத விஷயம். புலீஸ் விசாரணை மற்றும் ந்யாயாலய விசாரணைக்குப் பின்னர் சாஷி சம்மன்கள்…………… அவற்றை விசாரித்த ந்யாயாலய ஆவணங்கள் இவற்றின் மூலமே காரணங்கள் இன்னது என்பது ருஜுவாகும்.// //புலீஸ் விசாரணை//

      இப்படிப்பட்ட அரசியல் சென்சிட்டிவ் விசாரணைகளை உள்ளூர் போலீஸ் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகத்தான் முடிக்கும் எனபது தெரிந்த விசயம். ஹரியானா முதல்வர் பீஃப் உண்ணும் இசுலாமியர்களை இந்தியாவை விட்டு வெளியே போகச்சொன்னவர் எனபதும் 40 ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ்ஸில் இருந்தவர் என்பதையும் தெரிந்த அவரால் சம்பளம் கொடுக்கப்படும் ஹரியானா போலீசு ஹிந்துக்கள் சென்று ஒரு இசுலாமியரைக் கொன்றார்கள் என்று விசாரணையை முடிக்குமா? அப்போலீஸ் சமர்ப்பிக்கும் அறிக்கையில் சொல்லப்பட்டதை வைத்துத்தானே நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கும்? An officer like Sahayam should be given that work. They won’t allow that.

      1. Avatar
        க்ருஷ்ணகுமார் says:

        \\\ ஹரியானா முதல்வர் பீஃப் உண்ணும் இசுலாமியர்களை இந்தியாவை விட்டு வெளியே போகச்சொன்னவர் எனபதும் 40 ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ்ஸில் இருந்தவர் என்பதையும் தெரிந்த அவரால் சம்பளம் கொடுக்கப்படும் ஹரியானா போலீசு ஹிந்துக்கள் சென்று ஒரு இசுலாமியரைக் கொன்றார்கள் என்று விசாரணையை முடிக்குமா? \\

        உங்களுக்குப் பொழுது போகவில்லையானால் வெட்டிக்கதை பேசுவதற்குத் திண்ணை தளம் தானா கிடைத்தது?

        அபிப்ராய பேதங்களுக்குக் காரணமான **தாத்ரி** உத்தர ப்ரதேசத்தைச் சார்ந்தது. அதை ஆளுவது ஸமாஜ்வாதி கட்சி. அதன் முக்யமந்த்ரி ஸ்ரீ அகிலேஷ் சிங்க் யாதவ்.

        உத்தர ப்ரதேச நிகழ்வை ஹரியாணா முக்யமந்த்ரி எப்படி விசாரணைக்கு உட்படுத்த முடியும்?

        புலீஸ் விசாரணை என்பது பொதுதளத்தில் முன்வைக்கப்படும் ஆவணம். அதில் முன்வைக்கப்படும் சாக்ஷிகள், சம்மன்கள், விசாரணைகள் மற்றும் அதன் அடிப்படையில் அவை முன் வைக்கும் கூற்றுகளை முன்வைத்தே அதை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம். முன் தீர்மானத்தின் பாற்பட்ட உங்களது வெட்டிக்கதைகள் கதைகளாகக் கூட சரியானவை இல்லை.

        \\ அப்போலீஸ் சமர்ப்பிக்கும் அறிக்கையில் சொல்லப்பட்டதை வைத்துத்தானே நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கும்? An officer like Sahayam should be given that work. They won’t allow that. \\

        ஹிந்துஸ்தானமளாவி அன்பர் சஹாயம் அவர்களது திறமையை ஒத்த மற்றும் திறமையில் அவரை பலமடங்கு மிஞ்சும் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். உத்தர ப்ரதேச நிகழ்வை ஹரியாணாவுடன் முடிச்சுப் போடும் உங்களது மேதாவிலாஸத்துடன் பொருதும் பொறுமை எனக்குப் போதாது என்று நினைக்கிறேன்.

        பாவம் திண்ணை வாசகர்கள். கொஞ்சம் தயவு செய்யுங்கள்.

  15. Avatar
    paandiyan says:

    அய்யா க்ருஷ்ணகுமார் அவர்கள நான் ஷாலி எல்லாம் கண்டு கொல்வத இல்லை . என் தமிழ் type க்கும் அப்பட்டமான ஸ்பஷ்டமான text க்கும் வித்தியாசம் கூட இல்லையா அந்த உண்மை எங்கு இருந்து இங்கு சொல்லப்பட்டது என்று . இதற்க்கு கூட கூகுளே பண்ணுபவர்களை என்ன வென்று சொல்வது . அந்த கட்டுரை காபி என்றால் அவர்கள் பதில் சொல்லி விட்டதாக ஒரு அற்த்தம் , அபத்தம் அது சரி அதை வைத்து வாதம் பண்ண எண்ந துணிவு உள்ளது .
    நேருவும் , இந்திராவும் , கருணாநிதி (ராஜராஜன் விருது ) தனக்கு தான விருது கொடுத்து விருதை கேவலபடுதியவர்கள் . இதை மறைக்கு பல பேருக்கு கொடுக்கபட்டது . இந்த வாங்க , விற்க விருதை இவர்கள் கொடுக்காவிட்டால் தான் அசிங்கம்

  16. Avatar
    paandiyan says:

    பிரான்ஸ் இல் கொல்லப்பட்ட கிறிஸ்துவர்கலை கேவலபடுத்தி (மணி சங்கர்) போன்ற அறிவு ஜீவிகள் பேட்டி கொடுகின்றார்கள ?இது ஷாலி போன்ற கிறிஸ்துக்களுக்கு ஆத்திரம் வரவில்லையா என்ன ஒரு சகிப்புதன்மை !!

  17. Avatar
    ஷாலி says:

    /// ஏதோ நீங்கள் தாத்ரிக்கே நேரில் போய் விசாரணை செய்தது போலவும்…………. அல்லது சாக்ஷி சம்மன் களை விசாரணை செய்தது போலவும் …………….. ந்யாயாலய விசாரணை முடிந்து நீங்கள் ரீம் ரிமா விசாரணை ஆவணங்களை வாசித்தது போலவும்……….பாண்டியன் நோகாம நொங்கு சாப்டா மாதிரிக்கும்…………..ஸ் ஸப்பா என்ன பில்டப்பு……………….. தாங்க மிடியல சாமி…………..//

    அக்லக் வதம் செய்யப்பட்டதை நண்பர் ஒப்புக்கொள்கிறார்.ஆனால் ஏன் கொல்லப்பட்டார் என்ற காரணம் பற்றி விசாரணை முடியவில்லையாம்.ஆகவே ஜோதிர் அம்மையார் கூறுவது பொய்யாம்.கொல்லப்பட்ட காரணத்தை அண்ணன் க்ருஷ்ண குமாரின் அதிகாரப்பூர்வமான ஆர்எஸ் எஸ் பத்திரிகை பாஞ்ச்ஜன்யா கூறினால்தான் ஏற்றுக்கொள்வாரோ?

    “பசுக்களை வதம் செய்வோர் பாவிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே தாத்ரியில் நடந்ததும் நியாயமான செயல்தான்” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பான்ச்ஜன்யா கூறியுள்ளது

    Read more at: http://tamil.oneindia.com/news/india/rss-mouthpiece-defends-dadri-lynching-says-vedas-order-kill-237987.html

    உத்தரப் பிரதேச மாநில அரசு சமர்ப்பித்த அறிக்கையில், பலியிடத் தடை செய்யப்பட்ட ஒரு விலங்கின் மாமிசத்தை சாப்பிட்டதாகக் கூறி அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆவணங்களை வாசித்துதான் அரசு கூறுகிறது.

    நமது இந்திய நாட்டு விமானப்படைத் தளபதியும் இதைத்தான் கூறுகிறார்.”உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில், பசுவை கொன்று சமைத்து சாப்பிட்டதாக வெளியான புரளியால், விமானப்படை வீரர் ஒருவரின் தந்தையை, பொதுமக்கள் அடித்து கொலை செய்த சம்பவம், துரதிருஷ்டவசமானது” என்று விமானப்படை தளபதி அரூப் ராஹா குற்றஞ்சாட்டியுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=170800

    இந்த உண்மைகளை ஜோதிர் அம்மையார் எழுதினால் அது மதக் காழ்ப்பு.அப்ப விமானப்படை தளபதி கூறினால்…குமாரண்ணே! ஊர் அறிந்து நாறிய உண்மைகளை கபள சோற்றில் மறைக்க முடியாது.நீங்கள் எப்படி முயற்சி செய்தாலும் கோயாபல்ஸ் லெவலுக்கு உங்களால் போகமுடியாது.அடக்கி வாசியுங்கள்.

  18. Avatar
    ஷாலி says:

    //அது வரை ஒரு காபி பேஸ்ட் ஹேஷ்யம் இன்னொரு காபி பேஸ்ட் ஹேஷ்யத்தை கிண்டலடிப்பது என்பது ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பது போலத்தான்….//

    அன்பிற்குரிய நண்பர் க்ருஷ்ண குமார் அவர்களே! நான் என்றுமே மூலப்பிரதியை வைத்து முழம் போடுபவன் அல்ல என்று பலமுறை தளத்தில் பகிர்ந்து விட்டேன்.

    மூலத்தை வைத்து மட்டும் பின்னூட்டம் போடும் மூலவர் ஸ்வாமி நீங்கள் மட்டுமே.

    நான் கூகுள் சாமியாடியிடம் அருள் வாக்கு வாங்கியே பின்னூட்டம் ஒட்டுகிறேன்.அப்படி வாங்கப்பட்ட அருள் வாக்கு உள்ள தளத்தின் பெயரையும் இணைப்பில் கொடுத்து விடுவேன்.ஆனால் உங்கள் வேலிக்கு சாட்சி…..மித்திர வாயர் அவர்கள், ஆத்தின காப்பியை அவரே போட்டதுபோல் ஆட்டம் காட்டுகிறார். இதைத்தான் தவறு என்கிறேன்.

  19. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஷாலி

    எது ஒரிஜினல் எது காப்பி என்பது என் வாதமில்லை.

    தாத்ரி கொலைக்கான காரணங்கள் இன்னது தான் என்ற எந்த ஒரு வாதத்திலும் ………………… கதைகள் தான் அவரவர் தரப்பிற்கு ஏற்ப சொல்லப்படுகிறதேயல்லாமல்…………… தத்யங்கள் காணப்படுவதில்லை என்பது விஷயம்…………. முழுமையான தத்யங்கள் முழுமையான விசாரணைக்குப் பின்னர் தான் பொதுமக்களுக்குக் கிட்டும். இது ரொம்ப சிம்பிளான விஷயம்.

    மதக்காழ்ப்பை மட்டிலும் பரப்புரை செய்ய விழைபவர்கள் இந்த நிகழ்வுக்கு விசாரணைகள் நிகழுமுன்னரேயே மதச்சாயம் பூசி மதக்காழ்ப்புப் பரப்புரைகளை கதைகளாகப் பரப்பி…………அதில் குளிர் காய்ந்திருக்கிறார்கள். இது நிச்சயமாக ஏற்புடையதல்ல.

    நீதி விசாரணையின் ஆவணங்களின் பாற்பட்டில்லாமல் பரப்புரை செய்யப்படும் எந்த ஒரு விஷயமும் ………… கதை மட்டிலும் ஆகும்………… நிச்சயமாக தத்யமே ஆகாது……. இதில் கருத்து வேற்றுமைக்கு எங்கே வாய்ப்பு?

    நீதி விசாரணையின் மூல ஆவணங்கள் இல்லாது …………… நாளொரு பொய்யிலும் பொழுதொரு புளுகிலும் உலா வரும் ஊடகத்தினரது ………… திகில் கதைகளை யார் எங்கிருந்து காப்பி செய்தாலும் ………… அவை முழுமையான உண்மைகள் எப்படி ஆகும்.

    ம்………… உங்களது சுட்ட பழம் வேறே பாக்கி இருக்கு…………

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஷாலி

    \\ காரணத்தை அண்ணன் க்ருஷ்ண குமாரின் அதிகாரப்பூர்வமான ஆர்எஸ் எஸ் பத்திரிகை பாஞ்ச்ஜன்யா கூறினால்தான் ஏற்றுக்கொள்வாரோ? \\

    ஒங்களச் சொல்லி குத்தமில்ல. எல்லாம் சகவாச தோஷம்.

    ஆர் எஸ் எஸ் என்ற ஸ்தாபனம் தீரா விட தில்லாலங்கடி சொத்து மடமில்லை. பாஞ்சஜன்யா பத்திரிக்கை டாணே டளீவர் அவர்கள் நாளொரு கட்டுமரமும் பொழுதொரு கண்ணீருமாய் கடிதமெழுதும் முரசொலியும் அல்ல.

    பாஞ்சஜன்யா நிச்சயமா ஆர் எஸ் எஸ் சார்பு பத்திர்க்கை அவ்வளவே. ஆனால் ஒரு வித்யாசம் பாருங்கள்.

    டாணே டளீவர் அவர்கள் டெய்லிக்கா லெட்டர் எழுதி……….. அதில்………..கரை படியாத கரங்கள் சொக்கத் தங்கம் இத்தாலி ராஜமாதா அவர்களை அமுதசுரபியேந்திய மணிமேகலையே…………….. என்று நெகிழ்ந்தால் …………….கழகக் கண்மணிகள் …………. மெர்ஸலாகி ………….. விசிலடிச்சு மகிழலாம்…

    ஆர் எஸ் எஸ் என்பது டளீவருக்காக விசிலடிக்கும் கழகக் கண்மணிகளின் கும்பல் இல்லை.

    மௌத் பீஸ் லெக் பீஸ் இத்யாதியெல்லாம் சங்கத்தின் தரப்பு ஆகாது. அவையெல்லாம் அந்த பீஸின் தரப்பு மட்டிலுமே ஆகும். ஆர் எஸ் எஸ்ஸின் அதிகார பூர்வமான தகவல் மட்டிலும் தான் சங்கத்தின் தரப்பு ஆகும்…………….

    சங்கத்தின் அகில பாரத கார்யகாரணி மண்டல்……………. அகில பாரத செயற்குழுவினர் ……………விஷயம் முழுதையும் விவாதித்து பொதுவில் பகிர்ந்த அறிக்கை…………….

    டாக்டர் ஜிஷ்ணு பாஸு மற்றும் மானனீய ஸ்ரீ மோஹன் வைத்யா அவர்கள் சங்கத்தின் தரப்பிலிருந்து பகிர்ந்தவை கீழே :-

    http://indianexpress.com/article/cities/kolkata/dadri-lynching-has-no-link-with-beef-consumption-no-worker-involved-rss/

    http://www.hindustantimes.com/india/ikhlaq-s-lynching-natural-reaction-to-sin-of-cow-slaughter-rss/story-cRVqEHafPbYSVgNBl0zaJK.html

    பாஞ்சஜன்யாவும் ஆர்கனைசரும் சங்க சார்பு பத்திரிக்கைகளே அன்றி சங்கத்தின் மௌத்பீஸ் இத்யாதி இத்யாதி இல்லை. ஹிந்துத்வத் தரப்பிலிருந்து பல பேர் இஷ்டத்துக்கு கருத்துப் பகிர்ந்துள்ளனர். இந்த வரைக்கும் இது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டியது தான்.

    ஆனால் சங்கத்தின் தரப்பு தெளிவு. தாத்ரி சம்பவம் மோசமானது. சம்பவத்திற்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வு தீவ்ர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    பத்திரிக்கை பப்பரப்பாவெல்லாம் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் காபி பேஸ்ட் செய்து தகவல் பகிரலாம்.

    நீங்க காபி பேஸ்ட் செய்த தகவல் தான் சரி பாண்டியன் காபி பேஸ்ட் செய்தது தப்பு என்று சொல்லுவதற்கு என்ன ஆதாரம். உங்கள் நம்பிக்கை உங்களது முன் தீர்மானம் ………. இவற்றை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை.

    கண்ணால் காண்பதும் பொய். காதால் கேழ்ப்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்பது ஸ்வாஹிலி பாஷையின் சொல்லாடல் இல்லை என்பது சகலகலாவல்லவரான ஷாலிக்குத் தெரியாதா என்ன?

    இன்னது தான் காரணம் என்று விசாரணையும் அதன்பாற்பட்டு ந்யாயாலயம் சாஷி சம்மன்களை முன்னிட்டு முன் வைக்கும் ஆவணங்கள் தான் வெளிப்படுத்தும். அதற்கு முன்னர் இது தான் காரணம் என்று ஜோடித்து …………….. கூச்சல் போடுவது ……………. அது ஹிந்துத்வத் தரப்பிலிருந்து ஆகட்டும் ……………. அல்லது போலி மதசார்பின்மை வாதிகளின் தரப்பிலிருந்து ஆகட்டும் …………….. ஏற்புடையவே இல்லை.

    ஜாபுவா க்றைஸ்தவ கன்யாஸ்த்ரீகள் கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்த உடனேயே………… இன்ஸ்டண்ட் காபி மாதிரி …………… ஹிந்துஸ்தான பத்திரிக்கைகள்………….. ஹிந்துத்வர்கள் செய்த அன்யாயம் என்று கூச்சல் போட்டனர். ஆனால் மேற்கு வங்காள மாகாணத்து புலீஸ் ஆய்விற்குப் பிறகு சர்க்காரி தரப்பு (ஹிந்துத்வத் தரப்பு அல்ல) தெரிவித்த படிக்கு இது பாங்க்ளா தேஷி முஸல்மாணியர் நிகழ்த்திய வன்செயல் என்பது தெரிவிக்கப்பட்டது. புளுகு மூட்டைகள் எல்லோரும் கப்சிப்.

    மாகாணத்து விசாரணை ஆவணம் வரும் வரை …………..பத்திர்க்கை பப்பரப்பா புரிதலின் பாற்பட்டு குற்றவாளிகள் ஹிந்துத்வத் தரப்பினர் என்று வதந்தி பரப்பியது எந்த அளவு அன்யாயமோ …………….. அதிக ப்ரசங்கமோ ……………. அப்படியே எந்த விசாரணையும் இன்றி ……………. வெறும் பத்திரிக்கை பப்பரப்பாவை மட்டிலும் வைத்து தாத்ரி சம்பவத்துக்கு காரணங்களை முன்வைப்பதும்…………….

    பத்திரிக்கைகளும் அவற்றின் செய்திகளை காபி பேஸ்ட் செய்யும் தரப்பினர் யாரொருவரும் தாத்ரி சம்பவத்துக்கு முன்வைக்கப்படும் காரணங்கள் …………… தற்போதைக்கு கல்பிதங்கள் மட்டிலுமே………….

    பத்திரிக்கைகள் இந்த தேசத்தின் ந்யாயாலயங்கள் இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

    தாத்ரி சம்பவத்தின் காரணம் சம்பந்தமாக இதை விடத் தெளிவா விளக்க முடியாது. மேல இம்சை செய்யாதீர்கள். முடியல.

    மற்ற விஷயங்களை பீஸ் பீஸா இல்லாம வ்யாசமாக ஓரிரண்டு பாகங்களில் முன் வைக்க விழைகிறேன்.

    1. Avatar
      BS says:

      //கண்ணால் காண்பதும் பொய். காதால் கேழ்ப்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்பது ஸ்வாஹிலி பாஷையின் சொல்லாடல் இல்லை என்பது சகலகலாவல்லவரான ஷாலிக்குத் தெரியாதா என்ன?//

      இதைப்படித்துவிட்டு இதைப்படித்தால் என்ன தெரிகிறது?

      //மௌத் பீஸ் லெக் பீஸ் இத்யாதியெல்லாம் சங்கத்தின் தரப்பு ஆகாது. அவையெல்லாம் அந்த பீஸின் தரப்பு மட்டிலுமே ஆகும். ஆர் எஸ் எஸ்ஸின் அதிகார பூர்வமான தகவல் மட்டிலும் தான் சங்கத்தின் தரப்பு ஆகும்…………….//

      கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். சபாஷ்! அழகான தமிழ். ழ் என்ற தவறான எழத்துப்பிழையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்!

      அப்படியென்றால், ஆர் எஸ் எஸ் சொல்வது மட்டும் எப்படி சரியாகும்?

      நீங்கள் நேரில் கண்டீர்களா? நேரில் விசாரித்தீர்களா? எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்றிருக்கும்போது, ஆர் எஸ் எஸ் சொல்வதை மட்டுமே கேட்டுவிட்டு அதுவே மெய்ப்பொருள் என்பது எப்படி?

      யாரோ ஒருவர் சொன்னதை நீங்கள் ஏற்றால், யாரோ இன்னொருவர் சொன்னதை இன்னொருவர ஏற்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை?

      விளக்குங்கள்.

      1. Avatar
        க்ருஷ்ணகுமார் says:

        பி எசு

        \\ ஆர் எஸ் எஸ் சொல்வதை மட்டுமே கேட்டுவிட்டு அதுவே மெய்ப்பொருள் என்பது எப்படி? யாரோ ஒருவர் சொன்னதை நீங்கள் ஏற்றால், யாரோ இன்னொருவர் சொன்னதை இன்னொருவர ஏற்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை? விளக்குங்கள். \\

        எப்ப சுத்தி சுத்தி திருப்பி சொல்வதையும் அடுத்தவர் வாயில் வார்த்தைகளைத் திணிப்பதையும் நிறுத்தப்போகிறீர்கள்?

        யார் சொல்வதையும் நம்பாதீர்கள். புலீஸ் விசாரணை, ந்யாயாலயவிசாரணை………. இதன் பாற்பட்ட ஆவணங்கள் சொல்வதை மட்டிலும் நம்புங்கள் என்பது மெய்ப்பொருள். ரொம்ப கீழே என்னால் விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆர் எஸ் எஸ்ஸும் இதைத் தான் சொல்கிறது.

        இதை ஆர் எஸ் எஸ் சொல்கிறது என்பதற்காக அல்ல. மெய்ப்பொருள் காண்பதற்கு இதுதான் வழி என்பதால் இதை நம்புங்கள் என்று சொல்கிறேன். ஒங்களுக்கெல்லாம் கத்திக் கத்திப் பாடமெடுத்தே தாவு தீந்துடும் ஸ்வாமின். ஜோதி அம்மணியார் இப்படியில்லாமல் ஜபர்தஸ்தியாக ஒரு காரணத்தைக் கற்பிக்க விழைவது இப்படி ஆவணங்களின் பாற்பட்டதில்லையாதலால் அது ஏற்கப்படவொண்ணாதது.

        1. Avatar
          BS says:

          //இதை ஆர் எஸ் எஸ் சொல்கிறது என்பதற்காக அல்ல. மெய்ப்பொருள் காண்பதற்கு இதுதான் வழி என்பதால் இதை நம்புங்கள் என்று சொல்கிறேன்//

          நான் எழுதியதையே உறுதி செய்கிறீர்கள் திரு கிருட்டிணக்குமார். மெய்ப்பொருள் காண்பதற்கு இதுதான் வழி என்று ஆர் எஸ் எஸ் சொன்னால் நம்ப வேண்டும். மற்றவர்கள் – அதாவது எழுத்தாளர் சொன்னால் அவ்வழி பொய்ப்பொருள் காண்பதற்கு வழியாகும். என்ன லாஜிக் இது?

          வள்ளுவர் என்ன சொன்னார்? எப்பொருள் எவர் வாய்க் கேட்பினும் என்றுதான் சொன்னார். அதாவது அது ஆர் எஸ் எஸ்ஸாகட்டும் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவாகட்டும் நீங்கள் தானாகவே அவர்கள் சொல்லியவை உண்மையா என்று ஆராயவேண்டும். அப்படி ஆராயும் போது உங்களுக்கு எது சரியெனப்படுகிறதோ அதையே நம்ப வேண்டும்.

          உண்மையில் இஃது ஒரு கடினமான செயல். காரணம். உண்மையெனத்தெரிய செய்யவேண்டிய ஆராய்ச்சிக்கும் தக்க அனுபவமும் பக்குவமும் ஆதாரங்களைத்தேடி அலையும் உற்சாகமும் ஆவலும் வேண்டும். பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விடயத்தில் மட்டுமே நாம் ஆர்வம் காட்டுகிறோம். காரணம் காட்டியே தீரவேண்டும். நம் பெண் வாழ்க்கையல்லவா?. மற்ற பொது விடயங்களில்? பிறர் சொல்வதை ஏற்கிறோம். அதிலும்கூட அவரவருக்கு எவர் பிடிக்குமோ அவர்கள் வாய்வழி வந்தவையையே மனம் நாடுகிறது. அதுதான் நீங்களும் செய்கிறீர்கள். மெய்ப்பொருள் என்று நீங்கள் அடையாளம் காட்ட விரும்புவது நீங்கள் உறுப்பினராக இருக்கும் ஆர் எஸ் எஸ்ஸத்தானே? இங்கு மட்டுமன்று; எல்லாவிடங்களிலும் ஆர் எஸ் எஸ் சொல்லுக்கு மறுசொல் இல்லை. One track mind !

          என்னைப்பொறுத்தவரை, பொது பிரச்சினைகளில் அவரவருக்கு வேண்டிய மாதிரி, அல்லது பட்ட மாதிரிதான் சொல்வார்கள்; ஒன்று உள்ளோக்கத்துடன் சொல்கிறார்கள்; அல்லது, அவர்கள் எண்ண வரையறைகளுக்குள் நின்று சொல்லும் அவர்தம் தனிப்பார்வை- இப்படி புரிதல்கள் இருந்தால் நம்மை எவரும் முட்டாளாக்க முடியாது. இது ஐடியாலஜிகள், டாக்மாக்களுக்கு இரையான மனிதர்களால் முடியாது. They are frozen minds.

          1. Avatar
            க்ருஷ்ணகுமார் says:

            க்ஷமிக்கவும். வெட்டிக்கதை பேச உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. எனக்கில்லை.

            \\ உண்மையில் இஃது ஒரு கடினமான செயல். காரணம். உண்மையெனத்தெரிய செய்யவேண்டிய ஆராய்ச்சிக்கும் தக்க அனுபவமும் பக்குவமும் ஆதாரங்களைத்தேடி அலையும் உற்சாகமும் ஆவலும் வேண்டும். \\

            இது போன்ற சம்பவங்கள் தேசத்தின் புலீஸ் மற்றும் ந்யாயாலயங்களால் விசாரிக்கப்படுகின்றன. உங்களைப் போன்ற தனிநபர்களும் ஜோதி அம்மணியார் போன்ற தேர்ந்த எழுத்தாளர்களும் இப்படிப்பட்ட சம்பவங்களுக்குப்பிறகு முன் தீர்மானத்தின் பாற்பட்டு மற்றும் மதக்காழ்ப்பு / ஜாதிக்காழ்ப்பின் பாற்பட்டு நிறைய திகில் கதைகளை விதைக்க முனையலாம்.

            ஆதாரங்கள் விசாரணை ………… போன்றவை இந்த தேசத்தில் இன்னமும் புலீஸ் மற்றும் ந்யாயாலயங்களால் திறம்படவே நிகழ்த்தப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பத்து இருபது வருஷங்களுகு முன் இவை எப்படி விசாரிக்கப்பட்டனவோ அதை விட இன்று திறம்பட விசாரிக்கப்படுகின்றன.

            தனிநபர்கள் யாரும் எதையும் தேடி அலையவும் தேவையில்லை மேலும் சமூஹத்தில் வெறுப்பையும் காழ்ப்பையும் வளர்த்தெடுப்பதற்கு வெட்டியாக பொய்க்கதைகளைப் பகிர்வதற்கும் தேவையில்லை.

            விசாரணைகளின் பாற்பட்ட ஆவணங்கள் தெரிவிப்பதை மட்டிலுமே காரணமாக நான் ஏற்பேன். இன்னமும் விசாரணை முடியவில்லை என்றே அறிகிறேன். தவறானால் தரவுகள் பகிருங்கள். தரவுகளல்லாமல் வேறெந்த வெட்டிக்கதைகளையும் ஏறெடுத்துப்பார்க்கவும் கூட நான் தயார் இல்லை. முதலில் அதிகார பூர்வ ஆவணங்களைப் பற்றிப் பகிர்ந்து பின்னர் தரவுகளைப் பகிருங்கள்.

            விசாரணையின் பாற்பட்ட தரவுகளையே காரணமாக ஏற்கவேண்டும் என்று ஆர் எஸ் எஸ் கூறுகிறது. இதில் நீங்கள் என்ன பிழை கண்டீர்கள்?

            எந்த ஆதாரங்களும் இல்லாத இணையப்பப்பரப்பாகளை நீங்கள் நம்ப விழைவது உங்கள் முன் தீர்மானத்தின் பாற்பட்டு மட்டிலும் தான். எந்த முறையான விசாரணையினையும் அடிப்படையாகக் கொண்ட ஆவணங்களின் பாற்பட்டு இல்லை.

            என்னைப் பொறுத்த வரை இந்த சம்பவத்துக்கு………… அறிவுபூர்வமாக……….. எந்த ஒரு காரணத்தையும் மனம் போன போக்கில் ஏற்க………… நான் நிச்சயமாக விழையவில்லை.

            எத்தையாவது நீங்கள் காரணமாகக் காட்ட விழைந்தால் முதலில் ………… இந்த சம்பவத்திற்கான விசாரணை முடிந்து விட்டதா? அதன் பாற்பட்ட ஆவணங்கள் சொல்லும் தரவுகள் என்ன என்று தங்கள் தரப்பிலிருந்து ஏதும் தகவல் இருந்தால் மட்டிலும் பகிரவும்.

            மற்றவை எல்லாமே…………. ஏதாவது ஒரு சார்பில்…………. அவர்களது தரப்பை மட்டிலும் முன்வைக்க விழைபவை.

            அப்படிப்பட்ட வெட்டிக் கதைகளை அடுக்குவது உங்களுக்குப் புதிது இல்லை. மதக்காழ்ப்பு மற்றும் ஜாதிக்காழ்ப்பினை முன்னிட்டு நீங்கள் பல சம்பவங்கள் சம்பந்தமாக பல கதைகளை முன்னர் கதைத்திருக்கிறீர்கள். மேற்கொண்டு என்னால் இந்த ஒரு காரணிக்கு வெட்டியாக கால விரயம் செய்ய முடியாது. மீண்டும் க்ஷமிக்கவும்.

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ பாண்டியன்

    அன்பர் ஷாலியை நீங்க ரொம்பவே கொறச்சு மதிப்பிடுகிறீர்கள். இந்த தளத்து ஜாம்பவான்கள் அவரை சகலகலாவல்லவர் என்று ஸ்தோத்ரம் செய்வதை நீங்கள் கவனிக்கவில்லையானால் உங்களது கவனத்தை தற்போது ஈர்க்க விழைகிறேன். சகலகலாவல்லவர் மட்டிலுமா. அவர் ஸர்வவ்யாபி கூட. கும்மிடிப்பூண்டியில் உக்காந்து கொண்டே தாத்ரியில் நிகழ்ந்தது என்ன என்று ஞான த்ருஷ்டியில் பார்த்து அருள்வாக்கு சொல்லத் தகுந்த ரிஷி துல்யர். புலீஸும் அவரே. புலீஸ்காரனின் டண்டாவும் அவரே. ந்யாயாலயமும் அவரே. ந்யாய விசாரணையும் அவரே. தீர்ப்பும் அவரே.

    ஹிந்துஸ்தானத்தில் கோர்ட்டாவது கச்சேரியாவது. புலீஸாவது. விசாரணையாவது. சாக்ஷியாவது. சம்மனாவது. அதெல்லாம் போக்கத்தவர்களின் பொழுதுபோக்குகள். அன்பர் ஷாலியைக் கேளுங்கள். அவர் சொல்லுவார். கண்டதே காட்சி. கொண்டதே கோலம். பத்திரிக்க பப்பரப்பாவே உண்மை. கூகுளே ஞானம்.

    இப்ப புரிஞ்சுதா?

    1. Avatar
      ஷாலி says:

      // paandiyan says:
      November 16, 2015 at 1:16 pm
      அய்யா க்ருஷ்ணகுமார் அவர்கள நான் ஷாலி எல்லாம் கண்டு கொல்வத இல்லை //

      அன்பின் ஸ்ரீ பாண்டியன்
      அன்பர் க்ருஷ்ண குமாரை நீங்க ரொம்பவே கொறச்சு மதிப்பிடுகிறீர்கள். தமிழ்இந்து தளத்து ஜாம்பவான்கள் அவரை ஸ்ரீ மஹாசயர் என்று ஸ்தோத்ரம் செய்வதை நீங்கள் கவனிக்கவில்லையானால் உங்களது கவனத்தை தற்போது ஈர்க்க விழைகிறேன். டெல்லி மந்திரி சபையில் அமர்ந்துகொண்டே தாத்ரியில் நிகழ்ந்தது என்ன என்று ஞான த்ருஷ்டியில் பார்த்து அருள்வாக்கு சொல்லத் தகுந்த,சஞ்சீவ் பால்யான்,மகேஷ் சர்மா,சாட்சி மகராஜ்,கிரி ராஜ்சிங் ,விமானப்படை தளபதி அரூப் ராஹா,தினமலர் கதையை எழுதிய பாண்டியனாகிய நீங்கள் முதற்கொண்டு, அனைத்து ரிஷிதுல்யர்கள் உள்பட, புலீஸும் நீங்களே, புலீஸ்காரனின் டண்டாவும் நீங்களே. ந்யாயாலயமும் நீங்களே,. ந்யாய விசாரணையும் நீங்களே,. தீர்ப்பும் நீங்களே
      .
      ஹிந்துஸ்தானத்தில் கோர்ட்டாவது கச்சேரியாவது. புலீஸாவது. விசாரணையாவது. சாக்ஷியாவது. சம்மனாவது. அதெல்லாம் போக்கத்தவர்களின் பொழுதுபோக்குகள். அன்பர் ஸ்ரீ மஹாசயரைக் கேளுங்கள். அவர் சொல்லுவார். ஆர்எஸ்எஸ் செகரட்டரி DR.ஜிஸ்னு பாசு சொல்வது மட்டுமே உண்மை,மற்றவை அனைத்தும் கண்டதே காட்சி. கொண்டதே கோலம். பத்திரிக்க பப்பரப்பாவே உண்மை. கூகுளே ஞானம். ஆனால் ஆர்எஸ்எஸ் மட்டுமே குரு மஹா சந்நிதானம்.

      1. Avatar
        paandiyan says:

        Dinamalar report based on DIG statement and TOI/DH are also published except “SECULAR” Nandu type media’s. do you want to argue? or cannot change your judgment as explained by Krishna Ji

  22. Avatar
    paandiyan says:

    so what about this???
    இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தடையாக உள்ளார். அவரை அப்பதவியிலிருந்து நீக்கினால், அமைதிபேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறியுள்ளார்.
    காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பாகிஸ்தான் செய்தி சேனலான துன்யா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை நீக்குவது தற்போதைய முதல் தேவை. இதுநடைபெறாவிடில், இந்திய – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாது. இதற்காக, நாம் 4 ஆண்டுகள் எல்லாம் காத்திருக்க முடியாது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான அமைதிப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில், மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

  23. Avatar
    paandiyan says:

    he he he
    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காபி ஷாப் ஒன்றில் முத்தமிட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து கேரளா முழுவதும் கல்லூரிகளில் ஒருவரை ஒருவர் முத்தமிடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ‘முத்தமிடுவது ஆபாசமில்லை’ என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. முத்தமிடும் போராட்டத்துக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு காட்டி வந்தனர்.

    இந்நிலையில், கேரளாவில் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கேரள ‘கிஸ் ஆப் லவ் ‘ இயக்கத்தின் அமைப்பாளர்கள் ராகுல் பசுபாலன், அவரது மனைவி ரேஷ்மி நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கொச்சு சுந்தரிகள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி, அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்பி வைத்ததாகவும், கேரளா முழுவதுமே இவர்கள் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் போலீஸார் தரப்பு தகவல்கள் கூறுகின்றனர்.

  24. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    \\ அன்பர் ஸ்ரீ மஹாசயரைக் கேளுங்கள். அவர் சொல்லுவார். ஆர்எஸ்எஸ் செகரட்டரி DR.ஜிஸ்னு பாசு சொல்வது மட்டுமே உண்மை,மற்றவை அனைத்தும் கண்டதே காட்சி. கொண்டதே கோலம். பத்திரிக்க பப்பரப்பாவே உண்மை. கூகுளே ஞானம். ஆனால் ஆர்எஸ்எஸ் மட்டுமே குரு மஹா சந்நிதானம். \\

    ஒங்களச் சொல்லி குத்தமே இல்ல. மீண்டும் சகவாச தோஷமே தான். எல்லாம் உங்க மித்ரவர்யரோட தாக்கம். அடுத்தவர் சொல்லாதத அடுத்தவர் சொல்லியதாக வாயில் திணிக்கும் கந்தறகோளம்.

    தாத்ரி சம்பவத்துக்குக் காரணம் இன்னது தான் என்பதை பத்திரிக்கை பப்பரப்பாவை வைத்து எடைபோடாதீர்கள்.

    அது ஆர் எஸ் எஸ் தரப்பினர் சொல்லும் காரணங்களாக இருந்தாலும் சரி ஹிந்துத்வ எதிர்த்தரப்பினர் சொல்லும் காரணங்களாக இருந்தாலும் சரி. இரண்டையும் நம்பாதீர்கள்.

    புலீஸ் விசாரணை, அதன் பாற்பட்டு ந்யாயாலயத்தில் சாக்ஷி சம்மன்கள் விசாரிக்கப்பட்டு……….. அதன்மூலம் வெளிப்படும் ஆவணங்கள் ……… பொதுவில் எல்லோருக்கும் கிட்டும். அதை மட்டுமே நம்புங்கள்.

    இது மட்டிலும் தான் என் தரப்பு.

    இதில் நீங்கள் என்ன பிழை கண்டீர்கள்?

    நீங்கள் எத்தையாவது காரணம் என்று முன்வைக்க விழைந்தால்…………..அதிகார பூர்வ புலீஸ் விசாரணை மற்றும் ந்யாயாலய விசாரணை முடிந்து விட்டதா? அதன் ஆவணங்கள் சொல்வது என்ன? என்ற கேழ்விகள் எழும். இவை வாஸ்தவத்தில் முடிந்து விட்டன என்ற தகவல் உங்களிடம் இருந்தால் நிச்சயம் பகிருங்கள். ஆவணங்களை முன்வைத்து உங்கள் வாதங்களைப் பகிருங்கள். அதை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்பேன்.

    மாட்டிறைச்சி சாப்பிட்டதால் தான் ஜெனாப் அக்லக் கொல்லப்பட்டார் என்ற காரணத்தை ந்யாயாலயம் விசாரித்து தீர்ப்பளித்தால் மட்டிலுமே அது காரணம் ஆகும். அது வரை அது முன் தீர்மானம் உள்ள வ்யக்திகளின் கதை மட்டிலுமே. அந்தக்கதை எந்தத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் அது இன்றைய திகதியில் கதை மட்டிலுமே.

    நீங்களாகவே கல்பிதமாக இன்னது தான் காரணம் என்று அட்ச்சு விடாதீர்கள். நீங்களோ அல்லது ஜோதி அம்மணியாரோ புலீஸ் மற்றும் ந்யாயாலயம் ஆகவே முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள முயற்சியாவது செய்யுங்கள்.

    பத்திரிக்கை பப்பரப்பாவையும் கூகுள் சர்ச்சையும் ஆதாரமாக வைத்து நீங்கள் பாஞ்சஜன்யா என்ற பத்திரிக்கை ஆர் எஸ் எஸ்ஸின் அதிகார பூர்வ பத்திரிக்கை என்று அட்ச்சு வுட்டு இருந்தீர்கள். ஆர் எஸ் எஸ் தரப்பிலிருந்து இந்த ஸ்தாபனத்துக்கு ஏதும் அதிகார பூர்வ பத்திரிக்கை இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அதை ஆர் எஸ் எஸ்ஸின் அதிகார பூர்வ வ்யக்திகள் சொல்வதை ஏற்பதில் எனக்கு எந்த தயக்ககும் இல்லை. மேலும் ஆர் எஸ் எஸ்ஸில் நான் இருக்கும் படிக்கும் எனக்கு இது தெரிந்த தகவலே தான்.

    என் தரப்பிலிருந்து இது தான் காரணம் என்று ………… வெறும் பத்திரிக்கை பப்பரப்பாவை வைத்து………எந்த காரணத்தையும் நான் ஏற்க தயாராக இல்லை. ஆகையால் நான் இன்னதைத் தான் காரணமாக ஏற்கிறேன் என்று ஜபர்தஸ்தியாக உங்கள் மித்ரவர்யர் போல் ஆகாத்யம் செய்து என் வாயில் திணிக்க விழையாதீர்கள்.

    சீதாபிராட்டியை ராமபிரான் வனத்துக்கு அனுப்பியது வண்ணான் சொன்னபடிக்கு என்பது வால்மீகிராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று ஷாலி புருடா விட்டதை ………….. வால்மீகி ராமாயணத்தின் பற்பல ப்ரதிகளை சரிபார்த்து இல்லாததால் நான் நம்பவில்லை. அது ஷாலி அட்ச்சு வுட்ட புருடா என்று இங்கு கருத்துப் பகிர்ந்திருந்தேன். அதே வ்ருத்தாந்தம் அன்பர் ஷாலி அவர்கள் பாத்ம புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று சொல்லியதை ……………. மூல ப்ரதியை சரிபார்த்த பின்னர் நான் ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல …………. அந்த செய்தியைப் பகிர்ந்ததற்கு அன்பர் ஷாலிக்கு தன்யவாதங்களை இதே தளத்தில் பகிர்ந்தது பொதுப்பார்வைக்கு உள்ளது. உங்களுக்கும் தெரியும்.

    நீங்கள் பொய் சொன்னால் அது பொய் மட்டிலும் தான். உண்மை சொன்னால் யார் சொன்னாலும் ஆதாரங்களுடன் சொன்னால் ஆதாரங்களை சரிபார்த்து மட்டிலும் தான் ஏற்பேன்.

    ஒரு சோடா கூட குடுக்காது இப்படி தொண்ட தண்ணிய வத்த விடுறீங்களே? இது ந்யாயமா ஷாலி?

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *