இயலாமை !

This entry is part 4 of 11 in the series 10 மே 2020

காலை நடைப்பயிற்சியில்

அமைதியான சூழலை

கிழித்துப் போடுகிறது

அந்தக் கிளியின் அலறல்

வானத்தின் பொது அமைதி

பாழ்பட

அந்தக் கிளியைத்

துரத்துகிறது ஒரு காகம்

காகத்தைத் தடுக்கவோ

சுய இன நேயம் உணர்த்தவோ

கரைந்து கொண்டே

பின் செல்கின்றன

சில கிளிகள்

அபயக்குரல் நின்றபாடில்லை

கிளியின் தவிப்பு

என் மனத்தில் சிறகடிக்கிறது

தொலைக்காட்சியில் பார்த்த

புலி வாயில் சிக்கிய மான்

சிங்கம் பிய்த்தெடுக்கும் எருமையோடு

அந்தக் கிளியையும்

சேர்ந்து கொண்டுவிடுமோ ?

             ———-

Series Navigationநண்பனின் அம்மாவின் முகம்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *