காலத்தின் கண்ணியில்
இன்னொரு இரவு
கூடியிருக்கும்.
மழையின் இடைவிடா மோகத்தில்
மையிருள் இன்னும்
குழைந்திருக்கும்.
மின்னல் வெட்டி
மழை கொளுவி
நிலம் எரிவதாய்த் தோன்றும்.
சரமென
இடி இடித்து
கடித்துக் குதறும்
குகையை
யார் புரட்டிப் போடுவது?
வெளவால்கள்
கதறும்.
தெரிந்த முடிவிலிருந்து
தெரியாத கேள்விக்கு
தயாராகாது
பழகிய இருளில் பரபரக்கும்.
இருள் கூடி
இனி
இடி மின்னல் கேள்வி
இல்லையென்று
தளர்த்திக் கொண்டு
தளர் மேனி துவளும் சட்டை போல
அலாதியான இறுமாப்பில்
இருளோடு இருளாய் சேர்ந்திருக்கும்.
குகைக்கு வெளியே
கெட்டுக் கிடக்கும்
உலகமென்று
கூச்சலிடும்.
இதுவரை விடாது பெய்த
இரவு மழை ஓயத் தொடங்கி
மிச்ச மழையின் கடைசிச் சொட்டு
முடிச்சவிழக் காத்திருக்கும்
புது விடியலில்
சூரியனை முத்தமிட்டுச்
சூல் கொள்ள.
குகைக்குள்
வெளவால்கள்
இன்னும் இருளைத் தின்று
மலம் கழித்துக் கொண்டிருக்கும்.
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2