உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2

author
91
0 minutes, 17 seconds Read
This entry is part 13 of 31 in the series 16 டிசம்பர் 2012

கண்ணன் ராமசாமி
சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம்.

விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது:
காமன் மேனாக வரும் கமல் தாடி வைத்திருக்கிறார். இதில் இருந்தே, அவர் முசுலிம்-ஐ தான் சுட்டிக் காட்டுகிறார் என்று புரிகிறது. ‘ஒரு தீவிரவாதி முசுலிம்-ஆகத் தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள ஒரு தாடி போதாதா?’ என்று அவர் கேட்பது போல் இருக்கிறது.
இந்தக் குற்றச் சாட்டை பற்றி கமலிடமும் கேட்கப் பட்டது. இதற்கு அவர் கொடுத்த பதில் இதோ:
‘எல்லாருமே என்னத்துக்கு இந்த ஒப்பனை என்று கேட்டார்கள். இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சி வரும். முதல்ல என்ன சந்திச்ச அந்த
                                                                               இன்ஸ்பெக்டர் கிட்ட, ‘எப்படி இருந்தார்(கமல்) பார்க்க?’ என்று மோகன்லால் கேட்கும் போது, ‘அந்த மாதிரி தாடி சார்’ என்று சொல்லி, ஒரு சமிக்ஞையின் மூலம் ஒரு சமுதாயத்தை சுட்டிக் காட்டுகிறார் அவர். அந்த மாதிரி generalization கூடாது என்பது தான் என்னுடைய கோவம். எமாத்தனும்-னு முடிவு செஞ்சிட்டா நெத்தியில பொட்டு வெச்சுக்கிட்டு கூட எமாத்திடலாம் இல்ல? இந்த விளையாட்டை நாம எவ்வளவு நாள் விளையாடிட்டு இருக்க போறோம்? அதைத் தான் இந்த படத்துல எத்தனை நாளைக்கு இந்த இந்து முசுலிம் விளையாட்டை விளையாடிட்டு இருக்க போறீங்க-ன்னு கேட்டேன். இந்த சமுதாயத்தை சேர்த்தவர்கள் எல்லாம் வீரர்கள், மடையர்கள், கெட்டிக் காரர்கள் என்று generalize செய்யவே முடியாது’
காணொளி இணைப்பு: www.youtube.com/watch?v=umAANRVs3N0 (6.18 min)
ஆக, விமர்சகர்கள் ஒரு காட்சியை புரிந்து கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட பிழை இது. இதை சொன்ன பிறகும், சிலர், ‘இந்த விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். விமர்சனம் எழுந்த பிறகு, அதை சமாளிக்க கமல் இப்படி திரித்துப் பேசுகிறார்’ என்று சொல்லக் கூடும். சிம்பாலிக்-ஆக சொல்வது மட்டும் போதாது; வெளிப்படையான தாக்குதல் வேண்டும் என்று அவர்கள் கருதக் கூடும்.
இதற்கு பதிலாக மற்றொரு விவரத்தையும் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். முசுலிம்களை தோற்றத்தை வைத்தே தீவிர வாதிகள் என்று நினைப்பது தவறு என்ற கருத்தை உன்னை போல் ஒருவன் படத்திற்கு முன்பே கமல் ‘நேரடியாக’, சிம்பலிசம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்!

தசாவதாரத்தில் கலிஃபுல்லா கான், பல்ராம் நாயுடுவுடன் பேசும் போது ஒரு வாக்குவாதம் வரும். அப்போது, ஏழு அடி உயரம், அஃப்கானி உடை, இதை எல்லாம் சுட்டிக் காட்டி, ‘நீ என்ன பின் லேடனா?’ என்று பல்ராம் நாயுடு நக்கலாக ஒரு கேள்வி கேட்பார். ‘அத்தனை பெரும் தீவிரவாதி தான். எல்லாரையும் கேள்வி கேளு’ என்பார. அதற்கு நாகேஷ், ‘ஜகாப்! ஜகாப்! மெக்கா பார்த்து நமாஸ் புடிக்கிற அத்தனை பேரையும் தீவிரவாதி-ன்னு நினைக்காதீங்க’ என்பார்.
காணொளி இணைப்பு: http://withfriendship.com/videos/rajesh+wari/kamal-haasan-comedy-scene-from-dasavatharam.php (1.00 min)
ஆக, இந்துத்வ வெறியாளர்களின் பிரதிநிதியாகவும், தாடியை வைத்து முசுலிம்களை குற்றவாளிகள் என்று அழைக்கும் நபராகவும் தன்னை என்றுமே காட்டிக் கொண்டதில்லை கமல். இனியாவது அவரை முஸ்லிம் எதிர்ப்பாளர் என்று தவறாக சித்தரிக்கும் வேலையை விமர்சகர்களே நிறுத்திக் கொள்ளுங்கள்! கதையை சற்றும் புரிந்து கொள்ள விரும்பாத நீங்கள், தவறான பார்வையை கொண்டே எல்லா காட்சிகளையும் அணுகுகிறீர்கள்.
ஒரு முசுலிம் பெண்ணை கருவறுத்த சம்பவத்தை நேரடியாக சொல்லி இந்து மத வெறியர்களுக்கு எதிராக பேச முடியாமல், நேர்மையின்றி,  “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி தப்பிக்கப் பார்க்கிறார் கமல் என்று சிலர் சொல்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க தவறான பார்வையால் உண்டான தவறான புரிதல். கமல் சொல்லியிருக்கும் வசனத்தையே தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் இவர்கள்! அந்த சம்பவத்தை பற்றி சொல்லிவிட்ட பிறகு,
அந்த பொண்ணுக்காக கண்ணீர் விட, கோபப்பட, அது எம்பொண்ணாத்

தான் இருக்கணுமா? என்னுடைய சகோதரனுடைய பொண்ணா, நெருங்கின நண்பனுடைய பொண்ணா, ஒரு முசுலிம்-உடைய(குரல் கனக்கிறது) பொண்ணாவோ இருந்தா இவ்ளோ கண்ணீர் வரக் கூடாதா? அது என்ன ஞாயம்?”
என்று தான் கமல் சொல்கிறாரே தவிர, இந்து என்ற வார்த்தையை அவர் உபயோகிக்கவே இல்லை! அந்தப் பெண்ணை கொன்ற இந்துவுக்கு நல்லிலக்கணம் பேசி மன்னிப்பு வழங்க அவர் நினைக்கவில்லை! தாடியை பார்த்து இவருடைய பெயர், ஸ்ரீனிவாச ராமானுசம் தான் என்று முதலிலேயே தவறாக புரிந்து கொண்டு விட்ட விமர்சகர்கள், சகோதரர், நண்பர் என்று சொன்னவுடனே அவர் இந்துவாகத் தான் இருப்பார் என்று புரிந்து கொண்டு விட்டனர். இதை வைத்து ஒரு புதிய வசனத்தையும் உருவாக்கிவிட்டனர்.
‘உங்க ஃபேமிலி ஃபிரென்ட்ஸ்-ல யாராவது பாம் அட்டாக்-ல இறந்து போயிட்டாங்களா?’ என்று மோகன் லால் கேட்கும் கேள்விக்கு பதிலாகத்

தான் இந்த காட்சி வைக்கப் பட்டிருக்கிறது. மேலே கூறப்பட்ட காமன் மேன் சொல்லிய வசனத்தின் நோக்கமே, ‘அந்த பெண் என்னுடைய குடும்பத்தில் ஒருத்தி இல்லை என்றாலும், அவளுடைய தந்தையை, ஒரு முசுலிம்-ஐ, நான் சகோதரனாகத் தான் பார்க்கிறேன்’ என்று உணர்த்துவது தான். இதைத் தான் இவர்கள் வேறு மாதிரியாக, தவறாக புரிந்து கொண்டிருகிறார்கள்.
காணொளி இணைப்பு: http://www.youtube.com/watch?v=9hmNF3cZFzM (1.31 min)
http://www.youtube.com/watch?v=qTMdOoUd2oc (0.02 min)
இது போக, அப்துல்லா என்ற தீவிரவாதி, ‘குஜராத்-ல போய்                       மோதி(நரேந்திர மோதி) பார் தெரியும்! மோதி பார்த்தாலே சாவு தான்’ என்று சொல்வதும்,    காமன் மேன், ‘அந்த கூட்டத்துல எத்தனை ராம் கிருஷ்ணா, லால் கிருஷ்ணா, ராதா கிருஷ்ணன் இருந்தானோ தெரியாது. ஒரு கிருஷ்ணன் கூட உதவிக்கு வரலை’ என்று சொல்வதும் நேரடியான இந்துத்துவ மத வெறிக்கு எதிரான நேர்மையான குற்றச் சாட்டாக தெரியவில்லையா உங்களுக்கு?
தசாவதாரத்தில் ஐயர்-அய்யங்கார் ஜாதிச் சண்டையை, ‘சிவனும்-விஷ்ணுவும் மோதி விளையாட வேறு கடவுளர் இல்லாத காரணத்தினால் தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு’ என்று நேரடியாக சாடியது,
ஹே ராம் படத்தில் முசுலிம்களுக்கு எதிரான மத வெறியாட்டத்தை உள்ள படியே காண்பித்தது, அவ்வை ஷன்முகியில், ஒரு முசுலிம்-ஐ எதற்காக சமையல் அறைக்குள் விட்டாய்? என்று கேட்கும் மாட்டுத் தோலை தைத்து ஷூ விக்கும் ஒரு ‘வெஜிடேரியன்’ பிராமணருக்கு எதிரான நேரடியான சண்முக மாமியின் குற்றச் சாட்டு, மகாநதியில் ஜெயிலுக்குள் உட்கார்ந்து கொண்டு ‘கூரையை பிச்சுக்கிட்டு பகவான் கொட்டுவான்’ என்று கூறும் மதவாதியை பார்த்து நக்கல் அடிப்பது, மன்மதன் அம்புவில் இந்து மூடநம்பிக்கையை பற்றிய ஒரு பாட்டை எழுதியது, இப்படி எல்லா படங்களிலும் கமல் இந்துத்துவ வெறியாட்டத்தை, முட்டாள் தனத்தை நேரடியாகவே எதிர்த்துப் பேசியிருக்கிறார். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு எப்படி படுகிறது?
இது ஒரு புறம் இருக்கட்டும். கமலிடம் நேர்மை இல்லை என்று சொல்வதற்கு இவர்கள் உபயோகித்திருக்கும் அடுத்த காட்சி என்ன?
முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார்.

இப்படி சொல்லி, கமலின் பார்வையை தங்களுக்கு ஏற்றவாறு மறுபடியும் திரிக்கிறார்கள். இந்த வசனத்தோடு கமல் கூறும் மற்ற சில வசனங்களை தங்களுடைய ஆதரவாளர்கள் பார்வையில் இருந்து வசதியாக மறைக்கிறார்கள். அதை இந்த வசனத்தோடு சேர்த்தால் தான் இந்த பேச்சின் அர்த்தம் புரியும்.
“முசுலிம்-ஐ கொல்ற நீ ஒரு இந்து தானே?” என்று மோகன் லால் கேட்கும் போது,
‘“கரம்சந்த் லாலா ஒரு இந்து; ஆர்ம்ஸ் டீலர். கொன்னிருக்கேன். அப்போ

நான் என்ன முஸ்லிமா? இப்படியே இந்து முசுலிம் விளையாட்டு விளையாடிகிட்டே இருங்க. நேஷனல் டிவி-ல நம்ம மேற்கு வாசல் கதறி அழுதுச்சு. இனஃப் ஈஸ் இனஃப்-னு சொல்லிச்சு. ஓட்டுப் போட வாங்கடா-ன்னு கூப்பிட்ட போது, நாப்பத்தி மூணு பர்சென்ட். ஜனநாயகத்துக்காக ஆள் காட்டி விரலை கூட தூக்க முன்வராத அந்த(இந்து மதவாத கும்பல்) கூட்டத்தொட என்னை சேர்காதீங்க”, என்று காமன் மேன் கூறுகிறாரா இல்லையா?
அவர், மற்றவர்களுக்கெல்லாம் கோபமே வராதா என்ற கேட்பதே, போலீசும், மற்றவர்களும் இந்து முசுலிம் விளையாட்டை எப்போது

நிறுத்தப் போகிறார்கள்? என்று கேட்கும் நோக்கில் தான்! பொது மக்களுக்கு எதிரான தீவிரவாதத்தின் மேல் யாருக்கு வேண்டுமானாலும் கோபம் வரலாம் என்று தான் காமன் மேன் சொல்கிறார். முசுலிம்-களின் மேல் பொதுமக்கள் கோபம் கொள்ள வேண்டும் என்று அவர் எங்குமே உணர்த்தவில்லை. முஸ்லிம் எதிர்ப்பாளர் என்று அவரை முடிவு கட்டியதால் தான் இதை இப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படத்திலேயே தான் யார் என்று சொல்லும் காட்சியில், ‘எங்கேயாவது ரயில் எறிஞ்சா(கோத்ரா), கட்டி வெச்சதை இடிச்சா(பாபர் மசூதி) முதல்-ல போறது என்னுடைய உயிரைத் தான் இருக்கும்’ என்று காமன் மேன் சொல்வதும் இதே அர்த்தத்தில் தான்.

ஆக காமன் மேன், பொதுமக்களுக்கு எதிரான, மத வெறியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உன்னை போல் ஒருவனின் தெளிவாக உணரலாம். இங்கே பொது மக்கள் என்று நான் குறிப்பிடுவது முசுலிம்களையும் சேர்த்துத் தான்.
(தொடரும்)

Series Navigationபுரிதல்புதிய வருகை
author

Similar Posts

91 Comments

  1. Avatar
    smitha says:

    Kannan Ramaswamy,

    First of all your premise is wrong. Very few people will agree if you say kamal is anti muslim. Unnaipol oruvan is a classic example.

    Have you seen the original “A Wednesday”? All the terrorists are muslims. But in the remake, kamal plays safe. One of the terrorists (played by santhana bharathi) is a hindu.

    In all the films mentioned, he has been anti hindu & pro muslim.

    In Mahanadhi, the character played by Poornam Vishwanathan is not a religious bigot as you have put it. He is a religious hindu. There is a difference.

    In Avvai shanmughi, he has shown gemini ganesan in very poor light – as a brahmin & a leather exporter (it is a different matter that 99% of businessmen in leather industry are muslims).

    மன்மதன் அம்புவில் இந்து மூடநம்பிக்கையை பற்றிய ஒரு பாட்டை எழுதியது – Have you seen the lyrics of that song? This statement of yours clearly says that you have not.

    Read it & you will know kamal’s true colors.

    The truth is plain & simple – Kamal is openly anti hindu & pro muslim. It is as clear as daylight if you have seen his interviews & various public utterances.

    He has written an article in a tamil magazine eulogising muslims & their beliefs – pls read it.

    In Unnaipol oruvan, he indirectly speaks of a godhra incident wherein it was reported that a pregant muslim woman was done to death. No doubt this act deserves the severest condemation.

    But this has & still happening to many hindu women in kashmir, but none of us will even dare talk about it. Why? bcos the subjects in question are hindus.

    We are a nation where Ghulam nabi azad (then CM of kshmir)openly says ” If you hang afzal guru (the terrorist who bombed parliament & so many policemen died), the muslims in this country will get angry”.

    No one dared to protest against this atrocious statement. Where did the the so called ‘secularists” & atheists (like kamal) go?

    Underground?

    The terrorist incidents kamal refers to in “unnaipol oruvan” is of Godhra only.

    Throughout the film, he makes it clear albeit subtley, that muslims are innocent & hindus are to blame.

    Let Vishwaroopam get released. You will see how much more he goes in appeasing muslims.

  2. Avatar
    punaipeyaril says:

    கமல், வெட்னெஸ்டேயை தழுவி எடுத்துவிட்டு, உ.போ.ஓருவனில் மாற்றம் காண்பித்தது அவர் ஒரு உண்மையைச் சொல்ல வக்கற்ற தொடை நடுங்கி என்பதால். கமல் உச்சகட்டமாக தேவர்மகன் போன்ற படங்களோ , இல்லை, சகலகலாவல்லவனோ எடுக்கலாம்… இந்த மாதிரி சப்ஜக்ட் எடுக்க அனுராக் மாதிரி தில் வேண்டும்… அது கமலிடம் கிடையாது…

  3. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    அன்புள்ள ஸ்மிதா அவர்களுக்கு..
    உங்கள் பதிவிற்கு நன்றி.என்னுடைய பதில்கள்..
    ௧. இந்துக்களுடைய துயரத்தை காண்பிக்க யாரும் முன்வராதது ஏன் என்று கேட்டுள்ளீர்கள். சென்ற வாரம் வெளியான ஹே ராம் பற்றிய பதிவை படியுங்கள். கமலின் பார்வையில், இந்து முஸ்லிம் சண்டையே இதோ போன்ற comparison-களால் வருவது தான். அதாவது ஒரு முசுலிம்
    செய்தால் கேள்வி கேட்க மாட்டேன் என்கிறீர்கள். இந்து செய்தால் ஏன் கேட்கிறீர்கள் என்ற கேள்வியில் தான் இந்து முசுலிம் விளையாட்டும் வெறியும் தொடங்குகிறது.
    ௨. மகாநதி- அந்த நபர் ஒரு மூடர் என்று நான் கூறவில்லை. கடவுள் நம்பிக்கை இருந்துவிட்டாலே சில முட்டாள்தனமான நம்பிக்கைகளும் கூட வந்த ஒட்டிக் கொள்கிறது. இதை சாடியுள்ளார் கமல் என்றே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
    ௩. அவ்வை ஷண்முகி- முசுலிம்கள் புலால் உண்ணுகிறார்கள். அவர்கள் புலால் உன்னுபவர்களை தீட்டு என்று கூறி தள்ளி வைப்பதில்லை. ஆனால், இந்து நம்பிக்கையிலேயே அன்பாக கொடுத்தால் கடவுள் புல்லால் உண்ணுவார் என்று கூறிய பின்பும், இன்று வரை பிராமணச் சமூகத்தில் புலால் உன்னுபவர்களை கீழ் தரமாகப் பார்ப்பது வாடிக்கையாக உள்ளது. இதைத் தான் கமலும் சாடியிருக்கிறார். இதை என்னை விட வேறு யாரும் சரியாக அறிந்திருக்க முடியாது. காரணம், நானும் ஒரு பிராமணன் தான். புலால் உண்ணாதவன். உண்ணுபவர்களை கேள்வி கேட்காதவன். அது அவர்கள் இஷ்டம்.
    ௪. மன்மதன் அம்புவில் உள்ள பாடலை ஏன் எதிர்க்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அந்தப் பாடல் வரிகளை படிக்காமல் ஒரு கட்டுரை எழுதுவேனா?
    அந்தப் பாடலில் உள்ள காமத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா? நானும் ஒரு இந்து தான். சங்க இலக்கியங்களை படித்திருக்கிறேன். வரிக்கு வரி காமம் உண்டு சில பாடல்களில். காம சூத்திரத்தை யார் எழுதியது? உலகமே உருவானதற்கு காமம் என்ற புனிதம் தான் காரணம். அதை கடை வீதிப் பொருளாக ஏன் சித்தரிக்கிரீர்கள்? ஒரு ஆணை மணக்கும் முன்பு, பெண்ணுக்கு காமக் கற்பனைகள் வரக் கூடாதா? இல்லை, கலவி செய்கையில் காதில் பேசும் ஆண்மையுள்ள ஒரு ஆண் வேண்டும் என்று கடவுளிடம் யாருமே கேட்டிருக்க மாட்டார்களா?
    அடுத்து, அவர் நித்யானந்தாவை பற்றி எழுதி இருக்கிறார். அவரை மத குருவாக ஏற்றுக் கொள்பவர் ஒரு இந்துவே இல்லை. இந்து அல்லாத ஒருவரை திட்டினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
    வரவர புருஷ லக்ஷணம் உள்ளவர்
    திருமணச் சந்தையில் மிக மிகக் குறைவு// இது உங்கள் கண்களை உறுத்துகிறதா?
    திருமணம் ஒரு சந்தை பொருளாக மாறிவிட்டதை matrimonial தளங்கள் உணர்த்தவில்லையா உங்களுக்கு?
    வரம்தர கெட்ட வரலக்ஷ்மி உனக்கு
    வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
    உறங்கிக் கொண்டே இருக்கும்
    உந்தன் அரங்க நாதன் ஆள் எப்படி?
    பிரபஞ்சம் சொல்லும் சேட்டைகள் அனைத்தும்
    வாஸ்தவமாக நடந்ததும் உண்டோ?//
    இந்த வரிகளில் கமல் கேட்பது ஒன்று தான்,
    உங்கள் கடவுள் சேட்டைகள் செய்கிறார்; ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணம் செய்து கொள்கிறார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால், புருஷ லக்ஷணம் அவரிடமும் இல்லை என்று தானே பொருள்?
    இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு நியாயமாகத் தான் படுகிறது. நீங்கள் மூட நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு மதத்திற்கு எதிரான சாடல் மாதிரி தெரியலாம்.
    கமல் மதத்திற்கு எதிரானவர் அல்ல.
    ராமானுஜர், பாரதி, காந்தி போன்ற அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்கக் கூடிய இந்துக்களை அவர் என்றுமே போற்றி வந்திருக்கிறார். மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்வார். ஆனால் மூட நம்பிக்கை கொண்ட மனிதர்களை அவர் என்றுமே எதிர்த்ததில்லை. ரஜினி காந்த உட்பட..

  4. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    ஸ்மிதா..
    முசுலீம்களை மகிழ்விக்க படம் எடுப்பதில் என்ன தவறு? நீங்கள் இந்துத்வ தீவிரவாதிகளையும் இசுலாமியத் தீவிரவாதிகளையும் மத நம்பிக்கை உள்ள ஒரு தனி நபராகப் பார்க்கிறீர்கள். அதனால் தான் உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழுகிறது. மதத்தை மையமாக வைத்து ஒருவர் இன்னொருவரை கொல்வதே முதலில் தவறு. அப்படிச் செய்பவர் மத நம்பிக்கை இல்லாதவர் என்று பொருள். காரணம், எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பைத் தான் பழகச் சொல்கிறது. அப்படி இருக்கும் போது, கமல் முசுலீம்களுக்குப் பரிந்து பேசுவதில் என்ன தவறு? அவர் தீவிரவாதிகளையா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்? தவிர, முசுலீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்ற நினைப்பை மக்கள் மனதில் விதைத்ததில் பெரும் பங்கு சினிமாவினரைச் சாரும். ஒரு இந்து, ‘கமல் முசுலிம்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டார். எடுத்தால் சுட்டுவிடுவார்கள்’ என்று சொல்வாராயின், அவரும் இது போன்ற சினிமாக்களால் பாதிக்கப் பட்டுள்ளார் என்று பொருள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொல்வதைத் தவிர வேறு வேலையே இல்லாமல் திரிந்தார்கள் சில நடிகர்கள். அதே வேலைய கமலும் செய்ய வேண்டுமா? நம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஒரு சமூகத்தை ஆதரித்துப் பேசும் வேலையை இந்துவாகிய நீங்களும் நானும் செய்ய வேண்டும். அது தான் பெரும்பான்மைக்கு அழகு..!

  5. Avatar
    smitha says:

    Kannan,

    If kamal calls himself a rationalist, he should question the so called “mmoda nambikkais” of all religions. Has he done it? Never.

    On avvai shanmughi, you have spoken of a totally different point. Eating non veg food is a totally different point which needs elaborate discussion. I am a brahmin myself so i know very well how they react when they see people of their caste eating non veg.

    It is not just a simple matter as you suggested.

    In Avvai shanmughi, he defends nasser while speaking to gemnini. The dialogues are as though muslims are superior to hindus (brahmins) in their attitude & act.

    One need not bring one community down just to praise another community.

    As for manmadhan ambu, if you do not find the lyrics vulgar, I have nothing to comment.

    உங்கள் கடவுள் சேட்டைகள் செய்கிறார்; ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணம் செய்து கொள்கிறார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால், புருஷ லக்ஷணம் அவரிடமும் இல்லை என்று தானே பொருள்?
    இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு நியாயமாகத் தான் படுகிறது. நீங்கள் மூட நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு மதத்திற்கு எதிரான சாடல் மாதிரி தெரியலாம்.

    An atricous comment. You have to first understand the difference between lust & love. The relationship of the gopikas with Krishna is mistakenly taken as lust. It is not.

    There is love in Andaal paasurams, but not lust.

    By the same question, U say “Virgin Mary”, right? How did she beget a child?

    Try asking this Q to a christian.

    As a hindu, I will not comment on the religious beliefs of another person. But that does not mean I will take any nonsense that is said of my religion.

    நீங்கள் மூட நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு மதத்திற்கு எதிரான சாடல் மாதிரி தெரியலாம்.

    A typical statement of a “secularist”. First of can u define “mooda nambikkai”.?

    Can you ascribe reason for all your actions? You do some things by instinct, why?

    I can call that mooda nambikkai.

    There is nothing like “mooda nambikkai”. It is nambikkai. If that nambikkai has worked for me, it is no longer mooda to me.

  6. Avatar
    smitha says:

    There is nothing wrong in kamal eulogising muslims. he has done it, is doing it & will always do so in future. The point is you do not have to bring down hindus to glorify muslims.

    அதனால் தான் உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழுகிறது. மதத்தை மையமாக வைத்து ஒருவர் இன்னொருவரை கொல்வதே முதலில் தவறு. அப்படிச் செய்பவர் மத நம்பிக்கை இல்லாதவர் என்று பொருள். காரணம், எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பைத் தான் பழகச் சொல்கிறது

    What you have said is perfectly right – on paper. But the muslim terrorists who kill swear by the Koran. Worse, they say that is Jehad – holy war. What can be holy in a war? I dunno. Maybe you do.

    கமல் முசுலிம்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டார். எடுத்தால் சுட்டுவிடுவார்கள்’

    This is true. Look at what happened to Mani ratnam when he took bombay. Bombs were hurled at his home.

    I can give many more such examples.

    நம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஒரு சமூகத்தை ஆதரித்துப் பேசும் வேலையை இந்துவாகிய நீங்களும் நானும் செய்ய வேண்டும். அது தான் பெரும்பான்மைக்கு அழகு..!

    That is what hindus in India have been & are doing. We have also paid the price for doing so – a very heavy price – with our lives.

    So many lives have been lost sue to terrorist attcks & 99% of them are hindus & the terrorists have been muslims.

    Just speak to the families of the people who have lost their lives due to these attacks – If you do, you will not post like this.

    Just because I stand up for hinduism need not necessarily mean I am an RSS?VHP supporter. if you think so, that is “mooda nambikkai”.

    கமல் மதத்திற்கு எதிரானவர் அல்ல.

    Correct. He is only anti hindu, not other religions.

  7. Avatar
    smitha says:

    Kamal is already having problems with his “Vishwaroopam”. Some muslim groups have demanded that he show the film to them before he releases it.

    Kamal has given statements that it is not so. But he has got jittery, he is busy reediting the film.

    When some hindu groups objected to that song (which you like) in “manmadhan anbu” & the producer udayanithi stalin relented, kamal boasted that if he was the producer he would not have removed the song from the movie.

    Where has that guts gone now?

    We all saw what happened in the case of the vijay starrer “Thuppakki’.

    Vairamuthu apologised to christians & changed the lyrics of a song in “neerparavai”.

    But when he was asked to do for “periyar”, he stood his ground, citing freedom of expression.

    Did not know that freedom of expression has a different meaning in different places.

    By all this, I do not blame muslims or christians. They have stood up & protested when they felt that their religious beleifs have been hurt.

    Hindus have not done so. We have tolerated whatever shit thrown at us & in the name of “secularism” even come to accept it.

    That is why we are suffering.

  8. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    In Avvai shanmughi, he defends nasser while speaking to gemnini. The dialogues are as though muslims are superior to hindus (brahmins) in their attitude & act.
    One need not bring one community down just to praise another community.//

    அந்த காட்சியை, ஏன் படத்தையே நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. முதலில் அந்தக் கதையில் கமலுடைய கதாபாத்திரம் என்ன? ஒரு திரைக் கலைஞர். நீங்கள் பிராமண குலத்துப் பெண் என்கிறீர்கள். நம் குலத்தில், திரைக் கலைஞர்களை கூத்தாடிகள் என்றும், முடி வெட்டும் தொழிலை செய்பவர்களை அம்பட்டன் என்றும், பிராமணர் அல்லாதோரை சூத்திரன் என்றும் அழைப்பது உண்டா இல்லையா? நம்மை இப்போது எல்லோரும் பார்ப்பன நாய் என்று அழைப்பதற்கு நாம் தான் காரணம். ஒரு முசுலிம் இது போல வேறு மதத்தினரை இழிவாக அழைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நான் கேட்பது பொதுவாக முசுலீம்களை. மதத்தை அடிப்படையாகக் கொண்டு தீவிர வாதத்தில் ஈடு படும் இசுலாமியர்கள் மொத்த சமூகத்தில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஆதாரப் பூர்வமான உண்மை. பிராமணனை வேண்டும் என்றே யாரும் பழிக்க மாட்டார்கள். அந்தப் படத்தில் ‘என் வீட்டிற்குள் கறிக் கட பாயை ஏன் சேர்த்தே?’ என்று ஜெமினி அந்த முசுலிமை அவமானப் படுத்துவார். இத்தனைக்கும் நாசர் அந்த வீட்டிற்குள் வந்த பிறகு ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பார். இதற்கு பதிலாகத் தான் ஜெமினியை கேள்வி கேள்வி கேட்பார் கமல்.

  9. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    As for manmadhan ambu, if you do not find the lyrics vulgar, I have nothing to comment.
    உங்கள் கடவுள் சேட்டைகள் செய்கிறார்; ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணம் செய்து கொள்கிறார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால், புருஷ லக்ஷணம் அவரிடமும் இல்லை என்று தானே பொருள்?
    இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு நியாயமாகத் தான் படுகிறது. நீங்கள் மூட நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு மதத்திற்கு எதிரான சாடல் மாதிரி தெரியலாம்.
    An atricous comment. You have to first understand the difference between lust & love. The relationship of the gopikas with Krishna is mistakenly taken as lust. It is not///

    இங்கும் நீங்கள் காமத்தை தவறாக சித்தரிக்கிரீர்கள். கண்ணன் காமம் கொண்டிருந்தால் தவறல்ல ஸ்மிதா. ஒரு ஆண் தன்னுடைய ஆண்மைக்கு உட்பட்டும், ஒரு பெண் தன்னுடைய பெண்மைக்கு உட்பட்டும் நடப்பது தவறே அல்ல. அதை நீங்கள் வல்கராக பார்ப்பது உங்கள் கண்ணோட்டத்தில் உள்ள குறைபாடு. நம் மதத்தில் அரவாணிகளையும் புனிதப் படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால் மத வாதிகள் அவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள். காமத்தையும் புனிதப் படுத்தித் தான் வைத்திருக்கிறோம். ஆனால் நடுவில் வந்தவர்கள் அதை கடை வீதிப் போருளாக்கிவிட்டார்கள். நீங்கள் தொன்மையான மத நூல்களை படிக்கத் தொடங்க வேண்டும். உங்கள் கண்ணோட்டம் நிச்சயம் மாறும்.
    தொன்மையான உபநிஷட்கள் தான் நம்முடைய மதத்தின் ஆணி வேர். அதில் கடவுள் என்பது பிரம்மம் என்றும், ஒன்றும் இல்லாததில் இருந்து தான் இந்த உலகமே உருவாகியது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
    சங்கரர், ‘பிரம்ம பாஷ்யத்தில்’ , ‘சர்வம் பிரம்ம மயம் ஜகத்’ என்று கூறியுள்ளதற்கும் இது தான் பொருள்.
    ஞானத்திற்கு மேல் ஞானம் என்று ஒன்று இருக்கிறது. அதை அடைந்துவிட்டால் சிவனும் இல்லை; விஷ்ணுவும் இல்லை என்பது விளங்கும். இதையும் நம் மதம் தான் சொல்கிறது.
    ஆனால் ‘எல்லாமே கடவுள்’ என்றால் பாமரனுக்குப் புரியாது என்று முடிவு செய்து பல்வேறு கதைகளை எழுதத் தொடங்கிய பிறகு தான் நம் மதம் கண் கட்டு வித்தையாகி விட்டது. இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

  10. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    நீங்கள் மூட நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு மதத்திற்கு எதிரான சாடல் மாதிரி தெரியலாம்.
    A typical statement of a “secularist”. First of can u define “mooda nambikkai”.?//////

    மூட நம்பிக்கை என்றால் என்ன? மதத்தின் வேர் வரை சென்று சரியான ஆய்வை மேற்கொள்ளாமல் சுய லாபத்திற்காக சிலர் சிண்டு முடிந்த கதைகளை நம்பி இது தான் மதம்; இது தான் நம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருப்பது தான் மூட நம்பிக்கை.
    நான் முன்பு கூறியது போலவே மதம் ஒரு மனிதனை மிருகத்திடம் இருந்து பிரித்து சக மனிதர்களுடனும், மற்ற ஜீவ ராசிகளுடனும் அன்பு கொள்ளச் செய்ய உருவாக்கப் பட்ட ஒன்று. ஆனால்,
    இன்று நம்பிக்கை வேறு வகையில் அறியப் படுகிறது. பல்வேறு சாமிகள் ‘உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்’. மாரியாத்தா யாரிடம் போய் ‘பலி கொடு’ என்று சொன்னாளோ தெரியாது! முருகரும், விஷ்ணுவும் யாரிடம் போய் எனக்கு மூன்று பெண்டாட்டிகள், நான்கு பெண்டாட்டிகள் என்று சொன்னாரோ தெரியாது!
    மனுச்ம்ரிதி என்பது பிற்கால மத நூலாகும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வைத்துக் கொள்வது; ஜாதிய அடிப்படையில் மக்களை பிரிப்பது போன்ற சுய லாபம் கருதிய ஆணாதிக்க சிந்தனைகளும், அடிமைத் தனமும் வேண்டும் என்றே திணிக்கப் பட்டிருக்கின்றன. இதை எல்லாம் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கடவுளின் மூலமாகத் தான் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்று பல்வேறு கதைகளை சிண்டு முடிந்துவிட்டிருக்கிரார்கள். அதில் அகப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.
    இதன் அடிப்படையில் உங்கள் சுயநல நன்மைகள் பூர்த்தியாகலாம். ஆனால் உண்மையில் மதத்தின் நோக்கத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் இந்த சிவன் விஷ்ணு புராணங்களை ஒரு ஆரம்பமாக வைத்து ஞான மார்கத்தை பற்றி அறியத் தொடங்க வேண்டும். அந்த நிலையில் நீங்கள் எல்லோரையும் சமமாகப் பார்க்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய நம்பிக்கை பிறருக்கும் நன்மை பயக்கும்.
    அதை விடுத்து, ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தால் நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாகும். நீங்கள் சொல்வது போல உங்கள் நம்பிக்கை உங்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.
    உண்மையில் இதை எல்லாம் சொல்லியது நம் மதத்தில் இருந்த செக்யூலர் வாதிகள் தான். அவர்களை எல்லாம் நாம் மறந்துவிட்டு நித்யானந்தாவையும், லிங்கம் எடுப்பவரையும் மத வாதியாக கொண்டிருப்பதால் ஏற்படும் பிரச்சனையை தான் இது.

  11. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    That is what hindus in India have been & are doing. We have also paid the price for doing so – a very heavy price – with our lives.///

    தோழி நீங்கள் வரலாறை சரியாக புரிந்து கொள்ளவில்லை. காந்தி கணக்கு என்று கூறுவார்கள் நினைவிருக்கிறதா? அது என்ன என்று ஆராய்ந்திருக்கிரீர்களா?
    இந்துவும் முசுலிமும் அண்ணன் தம்பி போல் வாழ வேண்டும் என்று காந்தி விரும்பினார். அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த போது முப்பது கோடி ரூபாயை கொடுத்து அனுப்பினார்கள். இதை செய்ய வேண்டும் என்று கூறியது காந்தி. அந்த பணம் தான் காந்திக் கணக்கு என்று கூறப் படுகிறது. உண்மையில் காந்தி அந்த செயலை செய்ய வலியுருத்தியதற்கு காரணம், இங்கிருந்து செல்லும் அந்த முசுலிம்கள் நம் சகோதரர்கள். அவர்களை வழி அனுப்பும் போது தாய் வீட்டு சீதனமாகத் தான் இதை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் இங்கிருப்பவர்களில் யாருமே அவர்களை சகோதரர்களாகப் பார்க்கவில்லை. காந்திக் கணக்கு என்ற வாக்கியம், ஏதோ பிச்சை போட்டது போல சித்தரிக்கப் பட்டுவிட்டது. இது வெறும் ஆரம்பம் தான். இதற்குப் பிறகு என்றுமே முசுலீம்களை நாம் சகோதரர்களாகப் பார்க்கவில்லை.

    So many lives have been lost sue to terrorist attcks & 99% of them are hindus & the terrorists have been muslims.
    Just speak to the families of the people who have lost their lives due to these attacks – If you do, you will not post like this.//////

    நீங்கள் ஜிகாத் போராளிகள் மட்டும் தான் முசுலிம்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலே கூறியது போல முசுலிம் தீவிரவாதிகள், மொத்த சமூகத்தில் ஓரு சதவீதம் கூட இல்லை. நீங்களும் நானும் மசூதிகளிலும், கறிக் கடையிலும், வேறு பல இடங்களிலும் காணும் அப்பாவி முசுலிம்கள், இந்துக்கள் சகஜமாகப் பேசும் போது அவர்களை சகோதரர்களாகத் தான் பார்க்கிறார்கள். இந்துக்களுக்கு நடந்த கோரத்தை அவர்களும் ஏற்கவில்லை. ஒரு முசுலிம் தீவிரவாதி இந்துவை கொன்றால், அந்த தீவிரவாதியை சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அதை விட்டுவிட்டு, உங்களைப் போன்ற அப்பாவி முசுலீம்களை ஏன் கொள்கிறீர்கள் என்ற கேள்வி தான் அவர்கள் மனதில் எழுகிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் இது போன்ற ஒன்று தான். முதலில் கொன்றவன் முசுலிம் என்பதால் மற்றொரு முசுலிமை கொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்?
    இந்தக் கேள்வியை வலியுறுத்தும் படம் தான் இந்த உன்னை போல் ஒருவன். முசுலிம் பெண்ணுக்கு நடந்த கோரத்தை கண்டிக்கிறேன் என்று கூறும் நீங்கள் மத வேரியாளர் இல்லை. ஆனால், முசுலிம் தீவிரவாதிகளை தண்டிக்கக் கோராமல் முசுலீம்களை குஷிப் படுத்துவது தவறு என்று நீங்கள் கூறுவது தான் தவறாக இருக்கிறது.

    கமல் மதத்திற்கு எதிரானவர் அல்ல.
    Correct. He is only anti hindu, not other religions.//

    இந்த வாதம் விதண்டாவாதம்.
    ‘பெரியாரை கும்பிடுபவர்கள் ராமானுஜரையும் கும்பிடலாம்’, இது கமல் சொன்னது.
    காந்திக் கணக்கு பற்றிய செய்தியையும் கமல் சொல்லியிருக்கிறார்.
    பாரதியின் பாடல்களை இரண்டு படங்களில் உபயோகித்திருக்கிறார் கமல்.
    அன்பே சிவம் என்ற படம் இந்து மத நம்பிக்கையின் ஆணி வேரை தொடுகிறது.
    அவர் இந்து மதத்திற்கும் எதிரியல்ல என்பது உண்மை!

  12. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    Kamal is already having problems with his “Vishwaroopam”. Some muslim groups have demanded that he show the film to them before he releases it.
    Kamal has given statements that it is not so. But he has got jittery, he is busy reediting the film.//

    இது ரூமர் மேடம்! இந்த செய்திக்கு ஆதாரமே கிடையாது. இந்த செய்தியை நம்புவது கூட, ஒரு வகையில் மூட நம்பிக்கை தான்.

  13. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    நீங்கள் செக்யூலர்வாதிகள் என்று கூறும் நபர்கள் உண்மையான செக்யூலர்வாதிகள் அல்ல. கமல் எல்லாரிடமும் தவறு கண்டிருக்கிறார். எல்லாரிடமும் நன்மை கண்டிருக்கிறார். அவருடைய பேச்சுக்களில் இருந்து சில உதாரணங்கள்:

    ௧. நான் பெரியாரின் ரசிகன். ஆனால் என்னுடைய பகுத்தறிவு பெரியாரிடமிருந்து பெறப் பட்டது அல்ல. அவரை ரசிக்கும் முன்பாகவே நான் பகுத்தறிந்து பேசி இருக்கிறேன். பெரியாரிடமும் கூட எனக்கு விமர்சனம் உண்டு. அவருடைய இன வெறுப்பில் எனக்கு ஈடுபாடு கிடையாது

    ௨. ஆப்பிளை கடிச்சு திடீர்னு ஒரு நாள் ரெண்டு பேரை படைச்சதெல்லாம் மாறிக்கிட்டு வருது. வேடிகனே டார்வினுக்கு நன்றியும், சாரியும் சொல்லிஇருக்கு- கிறிஸ்தவ மூட நம்பிக்கை பற்றி கமல் சென்ற ஆண்டு நற்பணி விழாவில் கூறியது.

    ௩. உன்னை போல் ஒருவனில் முசுலிம்களுக்கு எதிராக அல்லாமல், முசுலிம் தீவிரவாதத்திற்கு எதிராக கமல் படம் எடுத்ததும், அவருடைய வீடு இன்னமும் குண்டுகளால் துளைக்கப் படாமல் இருப்பதும், உங்கள் இரண்டு கருத்துக்களுக்கும் எதிரானது.

  14. Avatar
    Indian says:

    “நம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஒரு சமூகத்தை ஆதரித்துப் பேசும் வேலையை இந்துவாகிய நீங்களும் நானும் செய்ய வேண்டும். அது தான் பெரும்பான்மைக்கு அழகு..!”
    Another rubbish statement. This has been dealt by Mr Rajiv Malhotra on numerous occasion. Muslims and Christians ARE NOT A MINORITY CLASS. They are are part and parcel of two of the most powerful, wealthy religions in the world. This is similar to franchise of a MNC, say MacDonald or KFC. These restaurants may be small in number in India in comparison to local ones but they are part of a bigger chain. So,nobody, especially Hindus needs to butt in here on behalf the so called ” minorities”
    Let the Muslim and Christian organizations stop (voluntarily) receiving huge funds from abroad first and preferably RETURN back all funds received so far.
    May be then,then only, you Mr Kannan can act as their representative. Your compassion for this ” down trodden” mass( my heart bleeds on this) can wait until such time.

  15. Avatar
    Indian says:

    “உங்கள் கடவுள் சேட்டைகள் செய்கிறார்; ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணம் செய்து கொள்கிறார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால், புருஷ லக்ஷணம் அவரிடமும் இல்லை என்று தானே பொருள்?”
    Will you Mr Kannan or your hero Mr Kamala Hasan, dare to utter this statement in public regarding a certain prophet (PBUH) from a certain religion? I believe the Prophet( PBUH) had many wives.
    The fact is, people like Kamala Hasan or you,can walk away scot free, after making denigrating statements about Hindu Gods only. Unfortunately,we Hindus are placid, peace loving! ( AKA cowardly) people. We have better things to do in life. Bring on the T20.

  16. Avatar
    smitha says:

    Kannan,

    In Avvai shanmugi, Kamal does not play a brahmin. I did not say that in the first place. Also, do you know how many sects are there in muslims? Do you know the animosity of some sects with others?. I am not talking about just shias & sunnis here.

    Also, there is a difference between lust & sex. YOu have not understood that. Aandal’s paasuram is erotic but she does not lust after her fiancee. There is a difference.

    ‘பெரியாரை கும்பிடுபவர்கள் ராமானுஜரையும் கும்பிடலாம்’, இது கமல் சொன்னது

    In the same vein, kamal has also said that ramanujar is an athesit.

    Regarding vishwaroopam, it came in the magazines that some muslim groups are against the film. You will be hearing further in the says to come.

  17. Avatar
    smitha says:

    ஆனால், முசுலிம் தீவிரவாதிகளை தண்டிக்கக் கோராமல் முசுலீம்களை குஷிப் படுத்துவது தவறு என்று நீங்கள் கூறுவது தான் தவறாக இருக்கிறது.

    Definitely not. When hindu organisations like the RSS/VHP indulge in riots or violence, Hindus openly condemn it. We have seen that in many cases. But tell me, how many muslims come forward to do that when their brothers indulge in Jehad?

    I will give you an instance which happened some years back when Mulayam singh was UP CM. A muslim woman was raped by her father-in-law. The case went to the local muslim court. The clergy gave the verdict that the woman has been defiled & that she should stay away from the village for 6 months. Then she should return & serve her father-in-law treating him as her husband.

    When women’s organisations protested vociferously & appealed to the CM to intervene, he simply said – If the ulemas have given a decision, it would have a meaning.

    My question is this – Why did muslim religious leaders (I am not talking of politicians here) not protest against this barbaric verdict?

    Recently, we saw muslim men divorcing theri wives over internet & phone. Worse, this was approved by the Deoband clergy.

    Not one word in protest.

    U have unnecessarily dragged in manu smrithi & other texts. Gnana maargam is very difficult to achieve. That is why many saints have advocated idol worship & bhakthi maargam to attain God.

    The various puranas & other stories have a moral. They are not just “kuppai” as you secularists see it.

    Do you know how many management concepts have been derived from the Ramayana? You will not see that. Instead you will say that Rama killed Vali by hiding behind a tree, that is wrong etc.,

    Gandhi gave 30 crores towards creation of Pakistan. U say hindus see that as charity & do not treat muslims as brothers. That is untrue.

    Even for arguments’s sake, assuming it is true, what about the other side of the coin?

    How many muslim view hindus as brothers? Do you know how many muslims returned to India after being thrown out by Paksitan during partition? They were welcomed back.

    Do you know how drastically hindu populatoin in Pakistan has declined since 1947? Also, for your information, India is the country having the 2nd highest muslim population in the world, the 1st being Indonesia.

    I thot you have not understood hindusim only, now I see that you do not know history also.

  18. Avatar
    smitha says:

    Kannan,

    Kamal has simplye remade an hindi film ‘A wednesday” into tamil. Even here, he played safe by potraying one of the terrorists as hindu. It is not so in the hindi version.

    The varius references he makes of victims are muslims. That is clear in the film.

    “Puraanangal kuppai enbadhaal antha maadri padangalil naan nadipadillai” – this is a kamal statement.

    Puranas are kuppai. Fine, according to you secularists. What about the Bible & Koran?

    Do you know how many vulgar details they contain?

    It has has been admitted by christian & muslim scholars.

    My intention is not to hurt people of other religions by saying this. They must understand that every person has a tolerance limit. It must not be stretched.

    I have never claimed that most of the muslim community indulge in violence. It is just that they are not vocal in condemning it. Being silent to injustice is equavalent to accepting it.

    கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் இது போன்ற ஒன்று தான். முதலில் கொன்றவன் முசுலிம் என்பதால் மற்றொரு முசுலிமை கொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்?

    You are talking to 1 Godhra here where the hindus retaliated. That is wrong, no 2 ways about it.

    But how many Godhras have hindus silently suffered? Do you know how many persons (predominantly hindus) lost their lives during 13 bomb blasts in a single day in Coimbatore?

    I can point out many more such instances.

    But we will never change.

    That is because in India – You are secular if you are anti hindu & communal if you are pro hindu.

  19. Avatar
    smitha says:

    Take Anbe Sivam.

    Nasser, the villain is portrayed as a devout hindu. Kamal is saved by christian missionaries when he is injured.

    In the climax, note the dialogue between Nasser & kamal.

    Take dasavatharam. When the mutt head asks ‘ Do you know Azhagiya Singhar”, kamal says ‘ is it madonna?

    In another scenes, he says ” Madam naa thappu nadakkaatha”?

    In the climax, Nagesh thanks Allah for having saved muslims from the Tsunami.

    In kaadhala kaadhala, he makes fun of hindu saamiyars & their miracles.

    But why in no movie, he has opened his mouth on the “suvisesha kootangal” conducted by christian missionaries where they claim that “deaf can hear, blind can see & lame can walk”?

    They even bring a blind man to the dias, call out Jesus & the next moment the man says he he can see.

    All this is stage managed.

    Maybe kamal does not know it. :-)

    If you do not know, pls attend one of Paul dinakaran’s weekend prayer meeting & watch the fun.

    When kamal donated his body, do you know what he said ‘ Ithu chitra guptahn kannakil varaathu”. What an absurd statement?

  20. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    Regarding vishwaroopam, it came in the magazines that some muslim groups are against the film. You will be hearing further in the says to come.///

    முசுலிம் அமைப்பினர் விஸ்வரூபத்திற்கு எதிராக குரல் கொடுத்திருப்பது உண்மை. அதை sound cloud ல் கமலே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் படத்தை reedit செய்தார் என்ற கூற்று கட்டுக் கதை.

    In the same vein, kamal has also said that ramanujar is an athesit.//

    அவர் ராமானுஜரை பற்றி என்ன சொன்னார் என்று இங்கு குறிப்பிடுகிறேன்.

    கருப்பான ‘Atheist’ என்று சொல்ல வேண்டும் என்றால் இயேசு கிறிஸ்து. அந்தக் காலக் கட்டத்தில் நாத்திகர் அவர். ‘worst atheist’ என்றால் நாமத்தைப் போட்டுக் கொண்டு குடும்பத்தை அழிக்க அழிக்க வந்த கோடாலிக் கொம்பு என்று ராமானுஜரைச் சொல்லி இருப்பார்கள். அவர் பேசியதும் நாத்திகம் தான். ‘துவைதம் பழகுகிற ஊரில் அத்வைதம் சொன்னால் அது நாத்திகம் தான்’. சங்கரரைக் கூட துவக்கத்தில் நாத்திகராகத் தான் பார்த்திருப்பார்கள்.

    இந்தக் கூற்றுக்குப் பொருள் என்ன தெரியுமா? ஆத்திகர்கள் ஒரு காலத்தில் மாற்றத்தை புகுத்த விரும்பிய ராமானுஜரைப் போன்ற ஆத்திகர்களையும் நாத்திகராகத் தான் பார்த்திருப்பார்கள் என்பது தான். அவர் ராமானுஜரை நாத்திகர் என்று கூறவில்லை. ராமானுஜருக்கே நாத்திகப் பட்டம் சூட்டிய பெருமை ஆத்திகர்களுக்கு இருக்கிறது என்பது தான் இதற்குப் பொருள்.

    பாரதியையே ‘பயித்தியக் காரன்’ என்று கூறிய சமூகம் அல்லவா நம்முடையது?

    இங்கும் நான் அத்வைதம் பேசும் போது என்னை நீங்கள் ‘secularist’ என்று கூறுகிறீர்கள். இதுவே போதும் இந்த கூற்று உண்மை தான் என்று நிரூபிக்க!

  21. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    My question is this – Why did muslim religious leaders (I am not talking of politicians here) not protest against this barbaric verdict?//

    உங்களுடைய பதிவுகள் திரும்பத் திரும்ப ஒரு அமைப்பை சமூகத்தோடு ஒப்பிடுகிறது. நான் ஒரு இந்து. ஆனால் எந்த மத அமைப்பிலும் உறுப்பினர் அல்ல நான். அதே போலத் தான் முசுலிம் மக்களும். முசுலிம் அமைப்புகளெல்லாம், இந்து அமைப்புகளைப் போல அரசியல் தான் செய்கின்றன. ஆனால் முசுலிம் மக்கள் அப்படி இல்லை. நடை பாதையில் செல்லும் ஒரு முசுலிமுடன் நீங்கள் தனிமையில் பேசிப் பாருங்கள். முசுலிம் தீவிரவாதத்தை நான் ஆதரிக்கிறேன் என்று அவர் கூறினால் என் கருத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்.
    (பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்துக்களும் இந்துத்வ தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை தான். பால் தாக்கரே மறைவுக்குக் கூட அந்த மாநிலத்தவரை தவிர பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்துக்கள் கண்ணீர் விடவில்லை.)
    மத அமைப்புகளின் பேச்சுக்கள் வெளியே தெரியும். ஆனால் சாமானியனின் குரல் அருகில் உட்கார்ந்து கேட்டால் தான் தெரியும். அப்படிப் பட்ட சாமானிய மக்களின் குரலை ஒரு பொருட்டாகவே நீங்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. தொடக்கத்தில் இருந்தே நீங்கள் அரசியல் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். யதார்த்தத்தை அல்ல!

  22. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    U have unnecessarily dragged in manu smrithi & other texts. Gnana maargam is very difficult to achieve. That is why many saints have advocated idol worship & bhakthi maargam to attain God.//

    இல்லை! ஞான மார்க்கத்தை எல்லோராலும் பின்பற்ற இயலாது என்ற காரணத்தினால் உருவ வழிபாடும், பக்தி மார்க்கமும் முன்மொழியப் படவில்லை. பக்தி மார்க்கம் ஞான மார்க்கத்தை அடையும் வழி என்பது தான் உண்மை. பக்தி மார்கத்தொடு நில்லாமல் ஞான மார்கத்தை அடைய முயல வேண்டும் என்பது தான் மதத்தின் குறிக்கோள்! அது கடினம் என்பதால் தான் இதை இப்படி திரித்துவிட்டார்கள்.

    நான் இங்கு புத்தகங்களை அனாவசியமாக இழுக்கவில்லை. அன்பை பழகச் சொன்ன தொன்மையான இந்துப் புத்தகங்களை நீங்கள் மருந்துவிட்டு, ஜாதி அடிப்படையிலும், உருவ வழி பாட்டின் அடிப்படையிலும் வேற்றுமையை கற்றுத் தரும் புத்தகங்களை இக்கால இந்துக்கள் பின்பற்றுவது ஏன் என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னது போல் இங்கு தெரியவில்லை.

  23. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    The various puranas & other stories have a moral. They are not just “kuppai” as you secularists see it.
    Do you know how many management concepts have been derived from the Ramayana? You will not see that. Instead you will say that Rama killed Vali by hiding behind a tree, that is wrong etc.,////

    நான் இங்கு புராணங்கள் எல்லாம் குப்பை என்று எப்போது கூறினேன்? புராணங்களில் உள்ள தவறான விஷயங்களையும் சேர்த்து நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று தான் கூறினேன். ராமாயணத்தை ஒரு நல்ல கதையாக கமல் பல முறை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த உன்னைப் போல் ஒருவன் வீடியோவில் கூட அவர் உலகத் தரம் பற்றி மனுஷ்ய புத்திரன் கேட்கும் போது ராமாயணத்தை பற்றிக் கூறுகிறார்.

  24. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    Gandhi gave 30 crores towards creation of Pakistan. U say hindus see that as charity & do not treat muslims as brothers. That is untrue.
    Even for arguments’s sake, assuming it is true, what about the other side of the coin?
    How many muslim view hindus as brothers? Do you know how many muslims returned to India after being thrown out by Paksitan during partition? They were welcomed back.
    Do you know how drastically hindu populatoin in Pakistan has declined since 1947? Also, for your information, India is the country having the 2nd highest muslim population in the world, the 1st being Indonesia.
    I thot you have not understood hindusim only, now I see that you do not know history also.////

    மேடம்! கடைசியாக ஒரு முறை கூறுகிறேன். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். காந்திக் கணக்கை பற்றிய இடுவையில் நான் கூறியது, இந்துக்களின் மன நிலை பற்றி. முசுலீம்களை நீங்கள் இந்தியாவுக்குள் அனுமதித்த போதும் சரி, இப்போதும் சரி அவர்களை உங்களுக்குப் பிடிப்பதே இல்லை. முசுலிம் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியத்தை வைத்துக் கொண்டு எல்லா முசுலிம்களையும் நீங்கள் வெறுக்கிறீர்கள். இது உண்மை இல்லை என்றால், இத்தனை பேச்சுக்களுக்கான தேவையே இல்லை. நீங்கள், ‘முசுலீம்களை சகோதரர்களாகப் பார்த்தோம்; அதனால் தான் இந்துக்களுக்கு இந்த நிலைமை’ என்று கூறுவதில் இருந்தே இது நன்றாகத் தெரிகிறது. முசுலீம்களை இந்தியாவுக்குள் அனுமதிக்காவிட்டாலும் தீவிரவாதம் தலை தூக்கியிருக்கும். காரணம், பாகிஸ்தானிய பள்ளிகளிலேயே இந்தியர்கள் எல்லாம் நமக்கு எதிரிகள் என்ற கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள். முசுலிம் தீவிரவாதிகள் எல்லாம் இந்தியாவின் மீது வெறுப்பு கொண்டு வன்முறையில் ஈடுபடுபவர்கள். ஆனால் நம் நாட்டில் வந்து தங்கியிருக்கும் முசுலிம் மக்கள் அப்படி இல்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

  25. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    “Puraanangal kuppai enbadhaal antha maadri padangalil naan nadipadillai” – this is a kamal statement.///

    இந்த கூற்றிற்கான ஆதாரத்தை நீங்கள் தயவு செய்து காட்டுங்கள்.

    Puranas are kuppai. Fine, according to you secularists. What about the Bible & Koran?
    Do you know how many vulgar details they contain?
    It has has been admitted by christian & muslim scholars.//

    சென்ற பதிவில் வாடிகனே டார்வினுக்கு நன்றியும் சாரியும் சொல்லி இருக்கிறது என்று கமல் கூறியதாக நான் கூறினேன். இதை செக்யூலர் வாதிகள் மறுப்பதாக நீங்கள் கூறுவதில் இருந்து அந்த கமென்ட்-ஐ நீங்கள் படிக்கவில்லை என்று புரிகிறது.

  26. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    Do you know how many persons (predominantly hindus) lost their lives during 13 bomb blasts in a single day in Coimbatore?//

    உங்கள் பார்வைக்கு உன்னை போல் ஒருவனில் கொல்லப் படும் தீவிரவாதிகள் கோவை குண்டு வெடிப்பிற்காக கைதானவர்கள் தான். இதை காமன் மேன் மோகன் லாலிடம் கூறுவார். முசுலிம் பெண்ணின் கருவறுத்த சம்பவத்தை மட்டும் கூறியுள்ளார் கமல் என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படியானால் இது?
    உங்கள் பிரச்சனையை என்ன தெரியுமா? கமல் இந்துக்களுக்கு எதிராக பேசிய கருத்துக்களை மட்டுமே படித்திருக்கிறீர்கள் நீங்கள். அதே போல கமல் முசுலிம்களுக்கு சாதகமாக பேசுவதை மட்டுமே கவனிக்கிரீர்கள்.
    ஒரு மனிதரை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் பார்வையை தாண்டிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.

  27. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    Take Anbe Sivam.
    Nasser, the villain is portrayed as a devout hindu. Kamal is saved by christian missionaries when he is injured.
    In the climax, note the dialogue between Nasser & kamal.//

    கமல் நிஜ வாழ்க்கையில் சிறு வயதில் கிறிஸ்தவ ஆலயத்தில் குறைந்த சம்பளத்திற்கு பணி புரிந்திருக்கிறார். அவருக்கு வாய்ப்புக்கள் இல்லாத போது அந்த பணம் தான் உதவியது. இதைத் தான் அவர் படத்தில் வேறொரு சூழ்நிலைக்குள் உட்படுத்தி காட்சியாக எடுத்தார்.
    கமலுக்கு ஒரு மொட்டை பாட்டி இருந்தார்கள். அந்தப் பாட்டியின் கேரக்டர் தான் தசாவதாரத்தில் வரும் பாட்டியின் கேரக்டர். கடைசியில் அந்த பாட்டி கிறிஸ்தவரை மடியில் போட்டுக் கொண்டு இவன் தான் என் பிள்ளை என்று அழுவார். இதுவே அவர் பாரபட்சமின்றி செயல்படுகிறார் என்ற கூற்றினை வலியுறுத்தும்.
    தசாவதாரத்தில் பல்ராம் நாயுடுவின் கேரக்டர் ஒரு வில்லன் கேரக்டர் தான். இதை உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்குப் புரியும். அவர் காமடியை ரசித்ததாலேயே இதை பலர் உணரவில்லை.

  28. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    In kaadhala kaadhala, he makes fun of hindu saamiyars & their miracles.
    But why in no movie, he has opened his mouth on the “suvisesha kootangal” conducted by christian missionaries where they claim that “deaf can hear, blind can see & lame can walk”?
    They even bring a blind man to the dias, call out Jesus & the next moment the man says he he can see.
    All this is stage managed.
    Maybe kamal does not know it. :-)
    If you do not know, pls attend one of Paul dinakaran’s weekend prayer meeting & watch the fun.///

    மேடம் கமல் கிறிஸ்தவ மூட நம்பிக்கைக்கு எதிராக பேசியுள்ளத்தை இங்கு இரண்டு முறை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.மேலும் ஒரு தகவல். கமல் தான் நாத்திகன் ஆனதற்கு முக்கிய காரணம் ‘Spartacus’ என்ற படத்தை குறிப்பிட்டிருக்கிறார். Spartacus, இயேசுவுக்கு முன்னாலேயே சிலுவையில் அறையப் பட்டவர். அவர் தோன்றுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே பார்பேரியர்களை அடிமையாக நடத்துவதை எதிர்த்தவர் அவர். அவர் அடிமைத் தனத்திற்கு எதிரியாகி ஜெயிலில் இருந்து தப்பித்த சம்பவம் நடந்த அதே விதத்தில் தான் விருமாண்டியில் கமலும் ஜெயிலில் இருந்து தப்பிபார். இதுவே மேற்கத்திய அடிமைத் தனத்திற்கும் கமல் எதிரி தான் என்பதற்குச் சான்று. எப்போதும் போல இதையும் நீங்கள் உதாசீனம் செய்துவிட்டு உங்கள் கருத்தில் மாற்றமில்லாமல் பேசிக் கொண்டிருப்பீர்கள்.

  29. Avatar
    ஷாலி says:

    திரு.கண்ணன் ராமசாமி அவர்கள் ஸ்மிதா அவர்களுக்கு மட்டும் பாடம் எடுக்கவில்லை.ஏராளமான மனம் மருண்ட உள்ளங்களுக்கும்தான்.அன்பே சிவம். அன்பு வழியே கடவுள் வழி. வள்ளுவர் கூறியபடி, “ அன்பிலார் எல்லாம் தமக்குரியர்,அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு. திரு.கண்ணன் ராமசாமியும் பிறருக்கு உரியவரே!

  30. Avatar
    suvanappiriyan says:

    திரு கண்ணன் ராமசாமியின் கருத்துக்கள் நடுநிலையாக உள்ளது. பாராட்டுக்கள்.

  31. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //But how many Godhras have hindus silently suffered? Do you know how many persons (predominantly hindus) lost their lives during 13 bomb blasts in a single day in Coimbatore?//

    கோயமுத்தூர் கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் 18 பேரை போலீஸே சுட்டு கொன்றதால்தான் அதற்கு பதிலடியாக கோவை குண்டு வெடிப்பு நடந்தது. ஆனால் அதனை முஸ்லிம்களே கண்டித்தனர். யாரோ செய்த தவறுக்கு அப்பாவி மக்களை கொன்றதை பல இஸ்லாமிய இயக்கங்களும் கண்டித்தன. குற்றவாளிகள் தண்டனையும் பெற்று வருகிறார்கள் இன்று வரை.

    அதே நேரம் மாலேகானிலிருந்து சம்ஜோதா எகஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை முஸ்லிம்களை கைது செய்தீர்க்ள. இறந்தது முஸ்லிம்கள். கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள். முடிவில் குற்றவாளிகள் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அசீமானந்தா வாக்கு மூலத்தின் படி இன்று அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணமான இந்துத்வாவினர் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இரண்டு நாள் முன்பு வரை இந்த கைது படலம் தொடர்கிறது. இதற்கு முன்னால் சந்தேகத்தில் பிடித்து செல்லப்பட்ட முஸ்லிம்களின் சிறை வாழ்வுக்கு யார் பரிகாரம் காண முடியும்? அவர்களின் வலியை யார் போக்குவது? ஸ்மிதா விளக்குவாரா?

  32. Avatar
    smitha says:

    முசுலீம்களை நீங்கள் இந்தியாவுக்குள் அனுமதித்த போதும் சரி, இப்போதும் சரி அவர்களை உங்களுக்குப் பிடிப்பதே இல்லை.

    This is far from the truth.

    முசுலிம் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியத்தை வைத்துக் கொண்டு எல்லா முசுலிம்களையும் நீங்கள் வெறுக்கிறீர்கள். இது உண்மை இல்லை என்றால், இத்தனை பேச்சுக்களுக்கான தேவையே இல்லை. நீங்கள், ‘முசுலீம்களை சகோதரர்களாகப் பார்த்தோம்; அதனால் தான் இந்துக்களுக்கு இந்த நிலைமை’ என்று கூறுவதில் இருந்தே இது நன்றாகத் தெரிகிறது. முசுலீம்களை இந்தியாவுக்குள் அனுமதிக்காவிட்டாலும் தீவிரவாதம் தலை தூக்கியிருக்கும். காரணம், பாகிஸ்தானிய பள்ளிகளிலேயே இந்தியர்கள் எல்லாம் நமக்கு எதிரிகள் என்ற கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள். முசுலிம் தீவிரவாதிகள் எல்லாம் இந்தியாவின் மீது வெறுப்பு கொண்டு வன்முறையில் ஈடுபடுபவர்கள். ஆனால் நம் நாட்டில் வந்து தங்கியிருக்கும் முசுலிம் மக்கள் அப்படி இல்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

    I am not talking to Paksitan muslime here. In the recent kasab indcident, it was clearly proved that he was indirectly helped by his muslim “friends” who were indian.

    Please undertand 1 thing – this bhai bhai is very nice to hear but there should be a reciprocation from the other side. It shud not be a one way traffic.

    Minorities must be ecnouraged, not appeased. There is a difference.

  33. Avatar
    smitha says:

    கமல் நிஜ வாழ்க்கையில் சிறு வயதில் கிறிஸ்தவ ஆலயத்தில் குறைந்த சம்பளத்திற்கு பணி புரிந்திருக்கிறார்.

    Kamal did not take up any job. He was paid to write pamphlets about jesus & distribute them, they will pay you for that. It is a christian institution in eldams road which spreads canards abaout hinduism.

    On one occasion, they were even handed over to the police when they distributed pamphlets denigarting hinduism in front of kapali temple.

    Kamal was associated with such an institutiuon.

    Pls do not blindly support kamal & try to find meanings in what he says.

    Being a die hard fan, you can reserve your praise for his acting, not actions.

  34. Avatar
    smitha says:

    How come you are able to read so much into kamal’s interpretation ofd Ramanujar?

    Even he will be surprised.

    A true atheist or rationalist is one who points out the deficiencies (according to him) in all religions, not just Hinduism.

    Just pointing out a sentence here & there from kamal does not serve any purpose. We have seen enough of hindu bashing in all his films. We will be seeing further in films like Voshwaroopam. If you are unable to see it, it is your problem.

    Bhakthi maargam is one of the means of attainming gnana maargam, but for how many is this possible? A lifetime is not enough.

    Also, let me point out that in Ramaytana & mahabharatha, there are no deficiences per se. You have mustt a thorough read & only then U know.

    As I said, U can simplye say that Rama was unjust in killing vaali but that act too has a meaning.

    I have interacted with many muslims unlike what you think.I can cite many examples.

    If I disagree with you, you immediately say I am playing politics.

  35. Avatar
    smitha says:

    Suvanapiriyan,

    The starting spark for the Kovai incident was 3 muslim youths came on a motorcycle & when they were questioned by a police, stabbed him & not what you mentioned.

    அசீமானந்தா வாக்கு மூலத்தின் படி இன்று அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணமான இந்துத்வாவினர் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    All bomb blasts since 1947? or even before that?

    You know what rajanikant’s first reaction was on the kovai bomb blasts? He said that hindus themselves trigerred the blasts & blamed muslims (he later retracted his statement).

    Your comment is like that.

    A Hindu life is also a life, piriyan.

    Maybe for you & kannan, it is not so.

    இதற்கு முன்னால் சந்தேகத்தில் பிடித்து செல்லப்பட்ட முஸ்லிம்களின் சிறை வாழ்வுக்கு யார் பரிகாரம் காண முடியும்? அவர்களின் வலியை யார் போக்குவது? ஸ்மிதா விளக்குவாரா?

    Losing a life is much worse, my friend.

    Will you or kannan give it back?

  36. Avatar
    Anandan Krishnan says:

    //நம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஒரு சமூகத்தை ஆதரித்துப் பேசும் வேலையை இந்துவாகிய நீங்களும் நானும் செய்ய வேண்டும். அது தான் பெரும்பான்மைக்கு அழகு..!//

    அழகுதான் , நீங்கள் அழகு பார்த்து கொண்டிருக்கும்போதே உங்கள் கோவணம் கூட உருவப்பட்டு உங்களுக்கு சுன்னத் செய்யப்பட்டு இருக்கும். பிறகு நீங்கள் கண்ணன் ராமசாமி என்று பெயர் வைத்திருக்க வேண்டுமென்றாலோ அல்லது கண்ணனை வணங்க வேண்டுமென்றாலோ ஜிஸ்யா கட்ட வேண்டும். ஒரு காலத்தில் இந்தியாவில் இந்து சமயம் என்ற ஓன்று இருந்தது என்று வரும்கால சந்ததியினர் வரலாற்று பாடத்தில் படிப்பார்கள். எனவே அழகு பார்ப்பது மிகவும் தேவை, எனவே எல்லாரும் உங்கள் கோவணம் உருவப்படும் வரை அழகு பாருங்கள்./

  37. Avatar
    Anandan Krishnan says:

    எந்த ஒரு நாட்டிற்கும் கலாச்சாரம், பண்பாடு என்பது இயல்பிலேயே உள்ளது. பாரதத்தின் பண்பாட்டிலோ அல்லது கலாச்சாரத்திலோ எதாவது சிறு குறை பாடுகள் இருக்கலாம், நீங்கள் அழகு பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த குறைகளை பெரிது படுத்தி இந்த நாட்டின் அடையாளத்தையே மாற்றும் வேலை தான் இங்கே நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி செய்வது முறையா என்று கேட்டால் எம் முன்னோர்களின் மதத்தை தானே பரப்புகிறோம் என்பது தான் சில சொர்க்க பிரியர்களின் பதில், எனவே நாம் அழகு பார்ப்போம், இந்தியாவை மாற்றும் வேலையை அதாவது அல்லாவின் தேசமாக மாற்றும் வேலையை அவர்கள் பார்த்து கொள்வார்கள்

  38. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    How come you are able to read so much into kamal’s interpretation ofd Ramanujar?
    Even he will be surprised.
    ///

    interpretation எங்கே இருக்கிறது? அவர் கூறியதற்கு என்ன அர்த்தம் என்று நேரடியாகவே தெரிகிறது. உங்களுக்குப் புரியவில்லை என்பதால் விளக்கிக் கூறினேன்.

    A true atheist or rationalist is one who points out the deficiencies (according to him) in all religions, not just Hinduism.//
    ஆப்பிளை கடிச்சு திடீர்னு ஒரு நாள் ரெண்டு பேரை படைச்சதெல்லாம் மாறிக்கிட்டு வருது. வேடிகனே டார்வினுக்கு நன்றியும், சாரியும் சொல்லிஇருக்கு- கிறிஸ்தவ மூட நம்பிக்கை பற்றி கமல் சென்ற ஆண்டு நற்பணி விழாவில் கூறியது.
    இந்த கமெண்டை இது வரை நீங்கள் படிக்காதது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. உண்மை அப்பட்டமாக உங்கள் கண் முன்னே இருக்கிறது. அதை நீங்கள் தான் பார்க்க வேண்டும்..

    Just pointing out a sentence here & there from kamal does not serve any purpose. We have seen enough of hindu bashing in all his films. We will be seeing further in films like Voshwaroopam. If you are unable to see it, it is your problem.///

    ஒரு sentence போதாதா? இந்துத்வ வெறியை திட்டுவது போல எல்லா படங்களிலும் சமமாக மற்ற மதங்களையும் திட்ட வேண்டுமா?
    இப்போது வரை இந்து மதத்தில் உள்ள தவறுகளை நாங்கள் திருத்திக் கொள்கிறோம் என்று நீங்கள் கூறவே மாட்டேன் என்கிறீர்களே! உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது கமல் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல??

    Bhakthi maargam is one of the means of attainming gnana maargam, but for how many is this possible? A lifetime is not enough.//

    கடினம் தான். நானும் ஒன்றும் ஞான மார்க்கத்தை அடைந்து விட வில்லை. குறைந்த பட்சம் ஞான மார்க்கமும், அன்பு பழகுதலும் தான் உண்மையான மத நம்பிக்கை என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆயிரம் சாமிகளைக் கொண்டு மனிதனுக்கு எதிராக மனிதனையே திருப்பி விடும் புதிய யுக்திகளைத் தான் நீங்கள் இது வரையிலும் ஆதரித்துப் பேசி வந்திருக்கிறீர்கள்!..

    Also, let me point out that in Ramaytana & mahabharatha, there are no deficiences per se. You have mustt a thorough read & only then U know.//

    மறுபடியும் கூறுகிறேன். புராணங்கள் எல்லாம் குப்பைகள் என்று நான் எப்போதும் கூறவில்லை. என்னுடைய கருத்தை நீங்கள் முதலில் படிக்க வேண்டும். பிறகு தான் பதிவை இட வேண்டும். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    I have interacted with many muslims unlike what you think.I can cite many examples.//

    நேற்று மோதி வென்றதற்கு பல முசுலிம் சகோதரர்கள் பாராட்டு தெரிவித்ததை டிவியில் போட்டார்களே. பார்த்தீர்களா?

    A Hindu life is also a life, piriyan.
    Maybe for you & kannan, it is not so.
    Will you or kannan give it back?///

    முசுலிம் உயிர் தான் வெல்லக் கட்டி. மற்றதெல்லாம் மலம் என்று நான் எங்குமே கூறவில்லை. தயவு செய்து இந்த விவாதத்தை திரித்து பேசாதீர்கள். ஒரு இந்து உயிருக்கு பதில் மற்றொரு முசுலிம் உயிர் அல்ல என்பதே என்னுடைய வாதம். அது தான் கமலுடைய வாதமும் கூட. கோவை குண்டு வெடிப்பிற்காக கைதான முசுலிம் தீவிரவாதிகளைத் தான் காமன் மேன் கொல்கிறார். இது தான் அந்தப் படத்தின் ஹை லைட் காட்சியாகப் பார்க்கப் பட்டது. ஒரு முசுலிமை காமன் மேன் கொன்று விட்டார். போதுமா? பார்த்து மன நிம்மதி அடைந்து கொள்ளுங்கள்!

  39. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    இங்கு இது முடியாது; அது முடியாது என்ற வாதம் தலை தூக்கி இருக்கிறது. இந்துவும் முசுலிமும் பாய் பாய் என்று கட்டித் தழுவ முடியும் என்பது தான் தேசப் பிதாவாக மதிக்கப் படும் காந்தியின் வாதம். அதை ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் ஒரு இந்துவே அவரைக் கொன்றான். நாம் கலாச்சார அடிப்படையிலும், மத, ஜாதி அடிப்படையிலும் பிரிந்து கிடப்பது பத்தாயிரம் ஆண்டுகளாகத் தான். அதற்க்கு முன்பும் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. ஒற்றுமையாக! இப்போதும் அது சாத்தியம் தான். முடியாத போதும் அதை நாம் முடித்துக் காட்ட வேண்டும். இது தான் ஆரோக்யம். தேவை எண்ணம்!விருப்பம்! பெரிய மனம்!
    இதை நீங்கள் ஏற்காதது குறித்து எனக்கு ஆச்சர்யமில்லை. உங்களைப் போன்ற பல இந்துக்கள் இதை ஏற்பதில்லை. ஆனால் பிறப்பால் இந்துவாகப் பிறந்த கமல் முசுலிம் தீவிரவாதிகளின் தவறுகளையும் தண்டி முசுலிம் பொது மக்களிடம் அன்பு கொண்டிருப்பது இந்து மதத்திற்கு தான் பெருமை. அவரை வெறும் ஒரு சினிமா நடிகராக நீங்கள் பார்ப்பதும், அவரை ஆதரித்துப் பேசும் என்னை ‘பால் அபிஷேகம்’ செய்யும் கீழ்த்தரமான ரசிகன் போல் சித்தரிப்பது எனக்குப் புதிதல்ல. இந்த கருத்தும் உங்கள் மனதில் உள்ள வக்கிரத்தின் பிம்பம் தான்.
    கமல் தவறு செய்வார். அவரும் ஒரு மனிதர் தான். பிற ரசிகர்களைப் போல் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று அவரை அழைப்பவன் இல்ல நான். ஆனால் நீங்கள் சுட்டிக் காட்ட விரும்புவது எதுவும் தவறே அல்ல. அவர் உங்களை திருப்தி படுத்தவில்லை என்பது தான் இங்கே பிரச்சனை. நீங்கள் அவரிடம் பிற மதங்களை பற்றிய விமர்சனத்தை எதிர்பார்க்கிறீர்கள். அதை அவர் செய்திருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் கொடுத்தும் உங்கள் மனம் திருப்தி அடையவில்லை. காரணம், உங்களிடம் சுய விமர்சனம் இல்லை. பிறருடைய தவறுகளைத் தான் அதிகம் பார்க்கிறீர்கள். ஒரு இந்துவாகிய நான், என் குலத்தில் உள்ள தவறுகளை களைய முற்படுவதால் தான் கமலுடைய ரசிகனாக இருக்கிறேன்.
    முசுலிம்களுடன் பாய் பாய் பழக உங்களுக்கு விருப்பம் இல்லாத போது எதுவுமே உரைக்காது. உங்கள் நேரமும் என் நேரமும் வீணாவது தான் மிச்சம்.
    இந்த விவாதம் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும். ஹே ராம் படத்தில் வரும் வசனத்தோடு முடித்து வைக்க விரும்புகிறேன்:

    “உன்னுடைய அபர்னாவை(இந்து) கொன்றதற்காக நான்(முசுலிம்) மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய வாபாவை கொன்றதற்காக உன்னை(இந்து) நான் மன்னிக்கிறேன்”

  40. Avatar
    Indian says:

    Mr Kannan
    Awaiting your response on this.
    ““உங்கள் கடவுள் சேட்டைகள் செய்கிறார்; ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணம் செய்து கொள்கிறார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால், புருஷ லக்ஷணம் அவரிடமும் இல்லை என்று தானே பொருள்?”
    Will you Mr Kannan or your hero Mr Kamala Hasan, dare to utter this statement in public regarding a certain prophet (PBUH) from a certain religion? I believe the Prophet( PBUH) had many wives.

  41. Avatar
    smitha says:

    Kannan,

    இப்போது வரை இந்து மதத்தில் உள்ள தவறுகளை நாங்கள் திருத்திக் கொள்கிறோம் என்று நீங்கள் கூறவே மாட்டேன் என்கிறீர்களே! உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது கமல் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல??

    U are not a torch bearer for hinduism, you are also part of one. Why don’u ask this same question to your dear muslim brethen?

    I have no locu standi to talk of kamal? Fine. What locus standi kamal has to talk ill of hindusim? He has ditched 2 woman, has a live in relationship with another.

    Intha maana ketta pozhappukku neenga vakkaalaaththu vera?

  42. Avatar
    smitha says:

    Kanan,

    ஒரு இந்து உயிருக்கு பதில் மற்றொரு முசுலிம் உயிர் அல்ல என்பதே என்னுடைய வாதம். அது தான் கமலுடைய வாதமும் கூட.

    This is what we have been saying, my friend. How long can you expect hindus tolerating getting killed by muslim terrorists? Try teaching this patience to your muslim brethen.

    You have not seen “A Wednesay”, the hindi version of unnaippol oruvan. If you see that, you will know that kamal has compromised.

    You are a die hard kamal fan, that is why you are justifying whatever nonsense he does.

    You & your talkaivar kanmla are “paghutharivaadis”, is it not/ Shud you m[t use it alteastr sometinmes, otherwius eit will rust.

    ஒரு இந்து உயிருக்கு பதில் மற்றொரு முசுலிம் உயிர் அல்ல என்பதே என்னுடைய வாதம். அது தான் கமலுடைய வாதமும் கூட.

  43. Avatar
    smitha says:

    Kannan,

    Being a die hard kamal fan, you are unable to accept a different view point.

    I am simply not bothered about kamal praising other religions. He has, is & will be doing so in future also.

    The issue is that he is very vulgar & obscene when it comes to attacking hinduism. You have picked up a sentence uttered here & there to show he ois critical of other religions.

    If it is 1 kamal, it can be ignored. Unfortunatley he is a role model for even educated minds like you, that is the bigger danger.

    You secularists have all along kept appeasing the minorities & we have paid a very very heavy price.

    The sooner you realise this – the better.

  44. Avatar
    smitha says:

    Kannan,

    Your final post shows your one dimensional outlook. It is not enough if I want to be friendly with my neighbour, he must also be willing. It must be a two way traffic.

    Similarly hindus, the majority of them want to live in harmony with the minorities, but is it reciprocated?

    Why even a simple legislation on registration of marraiges was not accepted by muslims? They will not agree to a common civil code, issue fatwas left, right & centre, threaten the Indian govt openly & when they are put in jail, you secularists will howl on “innocents being jailed” etc.,

    Try advising them to remain calm. We all saw what happened to the US consulate bcos some guy in far off States directed a film – Innoncence of muslims which no one has seen.

    This was done not by political leaders, mind you but by muslim youth. After damaging the US consulate, they did namaz in the middle of the road. Great, is it not?

    But did anyone of you dare utter a word?

    You will not, you dare not.

    You are secularists.

    If a VHP or a hindu munnani guy does something similar, you will howl.

    A wrong is a wrong, a life is a life.

    Hindu naa avalavu kevalama pochcha ungalukku?

  45. Avatar
    smitha says:

    Excerpts from an interview with M.N Nambiar,actor
    tamilhindu.com

    தமிழ் திரையுலகில் வில்லனாக எம்.ஜி.ஆர் காலத்திலும் பின்னர் குணசித்திர நடிகராகவும் நடித்து தமிழ் திரையுலகில் 62 ஆண்டுகள் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த திரையுலகின் குருசாமி எம்.என். நம்பியார் காலமானார். அவருக்கு வயது 91.

    திரைப்படத்தில் வில்லனாகவே எல்லோரும் அடையாளம் காணும் நம்பியார் தனிவாழ்வில் நல்லவராகவே வாழ்ந்து வந்தார். அவர் சபரிமலைக்கு அழைத்துச் செல்லாத திரையுலக நபர்களே கிடையாது என் சொல்லலாம்.

    சபரிமலைவாசன் அவரது ஆன்மாவை அமைதியில் ஆழ்த்தட்டும்.

    புகழுடம்பெய்திய பழம்பெரும் நடிகர் நம்பியார் அவர்கள் டிசம்பர் 1984 இல் விஜயபாரதம் இதழுக்கு கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே: [வெளியிட அனுமதி வழங்கிய விஜயபாரதம் ஆசிரியர் திரு. சடகோபன் அவர்களுக்கு நன்றி.]

    விஜயபாரதம் நிருபர்: நீங்க எத்தனை வருடமா மலைக்குப் போறீங்க?

    நம்பியார்: எத்தனை தடவையா போறீங்கன்னு கேட்டுடாதீங்க. வருடத்திற்கு மூன்று அல்லது நாலு தடவை. கணக்கு கிடையாது. 1942 இலிருந்து மலைக்குப் போய் வருகிறேன்.

    நிருபர்: எல்லா தடவையும் முறையா விரதம் இருந்துதான் போவீங்களா இல்ல…

    நம்பியார்: நிச்சயம். எல்லா முறையும் முறைப்படி விரதம் இருந்து வேலைக்கும் இடைஞ்சல் இல்லாத படிதான் மலைக்குப் போவேன். விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். கடவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

    நிருபர்: வருடாவருடம் எத்தனை பேரை அழைத்துக் கொண்டு போவீங்க?

    நம்பியார்: நான் அழைச்சுகிட்டு போறது கிடையாது அவர்களோடு நான் போவேன் அவ்வளவுதான். எல்லோரையும் அழைச்சுகிட்டுப் போறாப்ல அவ்வளவு பெரிய தகுதி நமக்கு கிடையாது.

    நிருபர்: விரதகாலத்தில் ஐயப்பன்மார்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளை வருடம் முழுவதும் கடைப்பிடிக்கும்படி கட்டாயப்படுத்தினால் என்ன?

    நம்பியார்: அது எப்படிங்க முடியும்? அந்த 41 நாள் விரத காலத்தில் நான் சொல்லலாம். விரதம் இல்லாத காலங்களில் சொல்லலாம் எப்படி? சிகரெட் குடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு குடிங்கன்னு சொல்லுவேன். தண்ணி அடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு அடியுங்கன்னு சொல்லலாம். நீங்க குடிக்கவே கூடாது அப்படீன்னு சொல்ற உரிமை எனக்கு கிடையாதுல்ல.

    நிருபர்: குருசாமி ஆவதற்கான தகுதி என்ன?

    நம்பியார்: இத்தனை வருடங்கள் போனவங்கதான் குருசாமி ஆகலாம் அப்படீன்னு தகுதி இருக்கு. எதுக்கு? நம்ம காமன்சென்ஸை யூஸ் பண்ணித்தான் யோசன பண்ணலாமே. மலைக்குப் போகும் போது எப்படி போனா சௌகரியம் எந்த பாதை நல்லா இருக்கும் எங்க தங்கலாம்? இதெல்லாம் பலவருடம் போனவங்களுக்குத்தான் அனுபவபூர்வமாக தெரிந்திருக்கும். அதுக்குத்தான் பலதடவை போன அனுபவம் உள்ளவங்க குருசாமியா ஆறாங்க.

    நிருபர்: சென்ற வருடம் நிலக்கல் விஷயமாக நடந்தவைகள் அங்கு அத்து மீறி சர்ச் எழுப்பப்பட்டு அகற்றப்பட்ட விதம் இதெல்லாம் கேள்விப்பட்டீங்களா?

    நம்பியார்: ஓ கேள்விப்பட்டேனே. காரில் போனால் அந்த வழியாகத்தான் மலைக்குப் போயாகணும். ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஆபரண பெட்டி நிலக்கல்லில் இருந்து முன்பு நட்ந்தே கொண்டு வருவாங்க. இப்ப பம்பா நதி வரை காரில் வந்துவிடுகிறது. நிலக்கல் பிரச்சனை வர்றதுக்கு காரணம் என்னங்கறீங்க.ஆளும்கட்சி அரசாங்க அதிகாரம் வேணுமா நியாயம் வேணுமா என்று பார்க்குது. அரசாங்கமும் அதிகாரமும் வேணும் என்று அரசியல் கட்சிகள் நினைப்பதால் நியாயத்திற்கு அங்கு இடமில்லாமல் போயிடுது. இதெல்லாம் நம்ம மனநிலையை பொறுத்து இருக்கு. நாம எல்லாரும் இந்தியன் என்று நினைத்தால் இந்த பிரச்சனைகளே எழாது. இந்தியனுக்கு ஒரு பொது சட்டம்தான் இருக்கணும். அதை எல்லா இந்தியனும் ஒத்துக்கணும். மதத்திற்குத் தனிச் சட்டம் இருக்கக் கூடாது. அதாவது நான் என்ன சொல்றேன்னா மைனாரிடிகளுக்கு உள்ள உரிமைகளை மெஜாரிட்டிக்கு கொடுக்கணும். அதை மறுக்கக் கூடாது. நம் நாட்டில் மைனாரிட்டி சமுதாயத்தினருக்கு ஏகப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் தராங்க. அதைப் போல மெஜாரிட்டி சமுதாயத்தினரையும் கவனிக்க வேண்டாமா?

    நேற்று எங்க தொகுதி வேட்பாளர் ஒருவர் எங்க வீட்டுக்கு வந்தாரு; நல்லா ஜெயிக்கக் கூடிய வாய்ப்புள்ளவரு. நான் அவரிடம் ‘ஒரே ஒரு கோரிக்கை’ என்றேன். என்னான்னாறு. நீங்க ஜெயிச்சு வந்தா மெஜாரிட்டி சமுதாயத்துக்கு துரோகம் செய்யாம இருப்பீங்களான்னு கேட்டேன். அவரு என்னை கேட்டாரு, ”மெஜாரிட்டின்னா ஆரை சொல்றீங்க”ன்னு. நிலைமை எப்படி இருக்கு பாருங்க.

    நிருபர்: குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளைக் கூட மைனாரிட்டியைக் காட்டியும் தங்கள் மதநூலைக் காட்டியும் தட்டிக் கழிக்கிறார்களே?

    நம்பியார்: எல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசைதான் காரணம். அதற்காக எதையும் செய்யுறாங்க. எதுக்கும் இடம் தர்றாங்க,. குடும்பக்கட்டுப்பாடுன்னு சொன்னதும் ஞாபகம் வருது. இது விஷயமா யுனெஸ்கோ அமைப்பே பாராட்டி உதவி செய்யுற அளவுக்கு ஐயப்பன்மார் செயல்படுறாங்க. சிலபேர் விரத காலத்தில் அப்படி இப்படி இருக்கலாம். ஆனா இந்த பிரம்மச்சரிய
    விரதத்துல மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. 41 நாட்கள் இது போல இருக்கும் போது எவ்வளவு குழந்தைகள் பிறப்பு கட்டுப்படுத்தப்படுது. இது உலகத்துக்கே மாபெரும் உதவியில்லையா? அவுங்களே தெரியாம இது போல ஒரு உதவியும் செய்யுறாங்க அய்யப்பன்மார்.

    …இப்ப ஆர்.எஸ்.எஸ் வந்தப்புறம் தான் இந்துக்களுக்கு ஒரு ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் வந்திருக்கு. இந்துக்கள் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலைமை வந்திருக்கு இது மறுக்க முடியாத உண்மை. இறுதியா நான் சொல்ல விரும்புறது டிஸிபிளின் பத்திதான். கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லைன்னா நாம எதையும் சாதிக்க முடியாது. நம்மை நாமே ஏமாற்றிக்கிட்டா நமது மனசு நம்மளை சும்மா விடாது. கொஞ்சபேரு ஆயுதங்களோடு அணி வகுத்து நிக்கிறாங்கன்னு வச்சுக்குங்க ஆயிரம் பேரு கூட்டமா வந்தாங்கன்னா அந்த கொஞ்சப்பேரைக் கண்டு அந்த கூட்டமே நடுங்கும். ஏன்னா அந்த கொஞ்சம் பேருக்கு எபடி செயல்பட வேண்டும் எந்த விஷயத்தில் செயல்பட வேண்டும் என்கிற பயிற்சியும் கட்டுப்பாடும் இருக்கும். அந்த டிஸிபிளின் நம்ம சமுதாயத்துக்கு முழுக்க வேண்டும்

    Specially for you, kannan

  46. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    கண்ணன் ராமசாமி உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக அலசும் உங்கள் எழுத்து பாராட்டுக்குரியது.

    அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலிய இந்து ஞான தரிசனங்களை எளிமையாக வாசிக்க/விளங்க நூல் ஒன்று கூறுங்களேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு:
    onoorulameen@gmail.com

    நன்றி,

  47. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி’ – எனும் திரு.எஸ்.கிருஷ்ணகுமார் அவர்களின் கட்டுரையை என் வலைப்பக்கதில் பதிந்திருதேன். அதில் கமல் அவர்களைப் பற்றிய திரு.கிருஷ்ணகுமாரின் கருத்துக்கு அடியில் ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்கள் முஸ்லீம்களுக்குஎதிரானதல்ல என்று கூறுகின்றார் திரு.கண்ணன் ராமசாமி. அதற்காக முன்வைக்கும் அவரது வாதங்கள் கவனத்திற்குரியவை என உங்கள் இந்த இடுகையின் சுட்டியை இணைத்துள்ளேன்.

  48. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    Will you Mr Kannan or your hero Mr Kamala Hasan, dare to utter this statement in public regarding a certain prophet (PBUH) from a certain religion? I believe the Prophet( PBUH) had many wives.//

    கமல் தான் ஒரு பகுத்தறிவு வாதி என்றே சொல்லி இருக்கிறார். செக்யூலர்வாதி என்ற பட்டமும், நாத்திகன் என்ற பட்டமும் அரசியலில் ஈடுபடுபவர்களும், ஆஸ்திகர்களும் எதிராளியை கூப்பிட உபயோகித்துக் கொள்வது. நீங்கள் அரசியல் தலைவர்களையும், சில நிழல் அரசியல் இயக்கத் தலைவர்களையும் கமலுடன் ஒப்பிட்டு பகுதறிவிற்கும், செக்யூலரிசத்திற்கும், நாத்திகத்திற்கும் இடையிலான வித்யாசத்தை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
    செக்யூலரிசத்தின் வேலை அரசியல் முடிவுகளில் சமய சார்பை ஏற்காதது. அக்கொள்கையில் முசுலிம் சார்போ, கிருஸ்தவ சார்போ இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படாது.
    நாத்திகத்தின் வேலை எந்த மத நம்பிக்கையையும் ஏற்றுக் கொள்ளாதது.
    ஆனால் பகுத்தறியும் கொள்கை, இன்று, நம் நாட்டிற்கு எது நல்லது? எது அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதி, பகுத்தறிந்து அதன் படி நடப்பது. அந்த வகையில் பார்த்தால் எந்த ஒரு மதத்தையும் முழுமையாக கமல் எதிர்த்துப் பேசியதும் இல்லை; ஆதரித்ததும் இல்லை. உங்கள் கேள்வியை கமல் முன்பும், என் முன்பும் நீங்கள் வைப்பதே தவறு.
    உங்கள் கூற்றுப் போல உலகில் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்தியாவில் அவர்கள் சிறுபான்மையினர் தான். மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக முசுலிம்கள் வாழவதாலேயே அவர்கள் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளப் பட மாட்டார்கள்.
    இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துச் சமூகத்திடம் உள்ள குறைகள் தான் முதலில் முக்கியத்துவம் பெறுகின்றன. நம் அடையாளமும் அது தான். அதை முதலில் விமர்சனம் செய்வதும், மாற்றத்தை எதிர்பார்ப்பதும் தான் தற்காலத் தேவை.
    அதே நேரம், இந்துக்களை விமர்சித்தால் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்; முசுலீம்களை விமர்சித்தால் கொண்டு விடுவார்கள் என்ற உங்களது நினைப்பு கமல் விஷயத்தில் முற்றிலும் தவறு.
    கமல் முசுலிம் தீவிரவாதத்திற்கு எதிராக இரண்டு படங்களை எடுத்துள்ளார். ஒன்று உன்னை போல் ஒருவன். மற்றொன்று விஸ்வரூபம்.
    அதுவே, இந்து தீவிரவாதம் பற்றி அவர் எடுத்த படம் என்று பார்த்தால் ஹே ராம் மட்டுமே(மூட நம்பிக்கை பற்றி பல படங்கள் உண்டு). ஆனால், இந்தப் படம் காந்திக்கு எதிரானது என்று கூறி ஒரு இந்து அரசியல்வாதி படத்தை திரையிட விடாமல் செய்தார். திரையிட்ட இடங்களில் எல்லாம் பானர்கள் கிழிக்கப் பட்டன. கல் வீச்சு நடந்தன.
    இது போல விஸ்வரூபம் முசுலிம்களுக்கு எதிரான படம் என்ற ஒரு கருத்து நிலவினாலும், எந்த முசுலிம் அமைப்பும் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கு முதலில் படத்தை காட்டுங்கள் என்று தான் கூறுகிறது. உன்னை போல் ஒருவன் வெளியான சமயத்திலும் கூட விமர்சனங்கள் தான் எழுந்தனவே தவிர, படத்தை திரையிட விடாமல் செய்யவும், வன்முறையில் ஈடுபடவும் யாரும் முயற்சி செய்யவே இல்லை.
    விஸ்வரூபத்தின் ட்ரைலரை பாருங்கள். பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப் படுபவர்களும் முசுலிம் தான். வில்லனும் ஒரு முசுலிம் தான். கமல் ஏற்று நடித்துள்ள இந்துக் கதாபாத்திரத்தை முசுலிம் சித்தரவதை செய்வது போல ஒரு காட்சி இருக்கிறது. பாடல்களை லிருந்து இந்தப் படம் அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானது தான் என்று தெளிவாக விளங்குகிறது. ஆக இந்தப் படம் மூன்று மதங்களையும் கவர் செய்கின்றது.
    உங்களைப் போல பலருக்கு பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கும். கமல் இவரை திட்டவேண்டும்; அவரை திட்ட வேண்டும்; பிறகு தான் அவரை செக்யூலர் வாதி என்று ஏற்றுக் கொள்வோம் என்று பலர் சொல்வார்கள்.
    கிறிஸ்தவர்களின் மூட நம்பிக்கை பற்றி கமல் பேசியிருக்கிறார் என்றும், படத்திலும் ச்பார்டகஸ் பற்றி வந்திருக்கிறது என்றும் நான் கூறிவிட்ட உடனேயே அவர் பகுத்தறிவாளர் தான் என்ற உண்மை வெளியாகிவிட்டது.
    உங்கள் மனம் இது பற்றி பேசவில்லை என்று கேள்வி எழுப்புவது திருப்தி இன்மையைத் தான் காட்டுகிறதே தவிர கமலிடம் தவறுள்ளது என்பதைக் காட்டவில்லை.
    நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல எல்லோரையும் சமமாகத் திட்டுவது பகுத்தறிவாளனின் வேலை அல்ல. அதிக மக்களை பாதிக்கும், அதிக தீமையை ஏற்படுத்தும் ஒன்றை சாடுவது தான் பகுத்தறிவு.

  49. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    U are not a torch bearer for hinduism, you are also part of one//

    இந்து மதத்தில் விளக்கை ஏந்திச் செல்ல புதிதாக ஞான சூனியங்கள் கிடைக்க மாட்டார்கள். கமல் சொல்வது போல, புதிய காந்தியை நீங்கள் பார்லிமென்ட்-ல் தேடிக் கொண்டிருந்தால் கிடைக்க மாட்டன். உங்கள் தெருவில், உங்கள் வீட்டில் தேடுங்கள். இந்து மதத்தின் அங்கமாக இருந்தவர்கள் தான் இந்து மதத்தை விமர்சனம் செய்து திருத்தியும் எழுதினார்கள்.

    I have no locu standi to talk of kamal? Fine. What locus standi kamal has to talk ill of hindusim? He has ditched 2 woman, has a live in relationship with another.
    Intha maana ketta pozhappukku neenga vakkaalaaththu vera?//

    இன்னும் இதை பத்தி பெசலையே-ன்னு பார்த்தேன். நான் இந்துக் கடவுளுக்கு மூன்று பெண்டாட்டிகள் இருப்பதையும் ஏற்கவில்லை. கமலுக்கு இரண்டு பெண்டாட்டி இருந்ததையும் ஏற்கவில்லை. நீங்கள் கண்ணனிடன் அன்பை மட்டும் பார்ப்பீர்கள். ஆனால் கமலை காம வெறியர் என்ற சொல்வீர்கள். அது உங்களுக்கே உரித்தான ஞாயம்! நான் கமலுடைய சொந்த வாழ்க்கையை விமர்சிக்க ஆண்-பெண் எண்ணிக்கையை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஒரு ஆண் இரு பெண்களை மணக்கும் போது மற்றொரு ஆணின் உரிமையை மறைமுகமாக பறிக்கிறான். இது தவறு.
    ஆனால், இது சரி; அது தவறு என்று சொல்ல ஒருவருடைய சொந்த வாழ்க்கை சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சமூகத்திற்கு அவர் நல்லதை செய்திருந்தால் போதுமானது.

    Unfortunatley he is a role model for even educated minds like you, that is the bigger danger.//

    கமலை ஏன் முன்னோடியாக எடுத்துக் கொள்ளக் கூடாது?
    அவர் உடல் தானம் செய்கிறார். நானும் செய்வேன்.
    அவர் பகுத்தறிந்து பேசுகிறார். நானும் பேசுவேன்.
    அவர் தொடங்கி வைத்த பின்பு தான் அரசியல் கட்சிகளே கூட ரத்த தான முகாம்களைக் கொண்டு வந்தன. நானும் ரத்தம் கொடுப்பேன்.
    அவர் நேர்மையாக டாக்ஸ் கட்டுகிறார்; அதையும் நான் செய்வேன்.
    இந்து மதத்தில் உள்ள சாக்கடைகளை அவர் விமர்சிக்கிறார். அதையும் நான் செய்வேன்.
    ராமானுஜரையும், காந்தியையும், பாரதியையும் அவர் போற்றுகிறார். அதையும் நான் செய்வேன்..

    இப்பொது வரை நீங்கள் என்னையும் கமலையும் தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளில் தாக்கி இருந்தாலும், உங்களை நான் மரியாதையோடு தான் நடத்தியிருக்கிறேன். நான் கமலை பின்பற்றியதால் உங்களைப் போன்ற இந்துவுக்கு நல்லது தானே நடந்தது!

  50. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    This is what we have been saying, my friend. How long can you expect hindus tolerating getting killed by muslim terrorists? Try teaching this patience to your muslim brethen.//

    நீங்கள் தவறாக செயல்பட்ட சில முசுலீம்களை சுட்டிக் காட்டி உங்கள் முசுலிம்களுக்கு அமைதியை கற்றுத் தாருங்கள் என்று கூறுகிறீர்கள்.
    ஆனால் ஒரு இந்து தவறு செய்தால் மட்டும்; எல்லோரும் அப்படியில்லை. ஏதாவது ஒன்றிரண்டு பேர் இப்படி வெறிப் பிடித்து அலைகிறார்கள் என்று கூறுகிறீர்கள்.
    இது எந்த வகையில் நியாயம்? நீங்கள் சுட்டிக் காட்டியது போல ஒரு நல்ல முசுலிமை நானும் சுட்டிக் காட்டுவேன்.
    ஏன், ஹே ராம் படத்தில் நான் குறிப்பிட்ட அந்த வசனத்தை சொல்வதே ஒரு முசுலிம் தானே? ஷாருக் கானிடம் உள்ளதே அந்த மன்னிக்கும் குணம்? இதைச் சொன்னால் அவர் காசு வாங்கிக் கொண்டு நடித்தார் என்பீர்கள். காரணம், உங்களிடம் அந்த நல்லெண்ணம் இல்லை. அவருடைய பெயரில் கான்-என்ற வார்த்தை இருந்ததாலேயே அவரை தீவிரவாதி போல நடத்தினார்கள் விமான நிலையத்தில். ஏன் கமலுக்கே இது நடந்திருக்கிறது. உன்னை போல் ஒருவன் சமயத்தில் கமலுடைய தாடியையும், ஹாசன் என்ற புனைப் பெயரையும் பார்த்து அவர் தீவிரவாதியா என்று சோதித்தார்கள். இந்துவை சகோதரனாக பார்த்த ஒரு முசுலிமிற்கும், இந்து முசுலிம் இணக்கத்தை வலியுறுத்தும் ஒரு இந்துவுக்கும் நம் இந்து நாடு கொடுத்த மரியாதை இது தான்!

    உதாரணம் இரண்டு, கோத்ரா ரயில் எரிப்பில் சம்மந்தப் பட்டவர் என்று குற்றம் சாட்டப் படும் மொதியை பிரதமர் பதவிக்கு வர வழிக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு ஒரு முசுலிமிற்கு பெரிய மனது உள்ளதே! டிவியில் பார்க்கவில்லையா? இங்கே குறிப்பிட்டிருக்கும் விவரத்தை படிக்கவில்லையா?

    Roughly 25 percent who cast their ballots for the BJP this election were Muslim, says Mr. Deshmukh, who polled more than 78,000 voters, including 7,000 Muslims as they exited voting booths across the state. That’s up from just 3 percent in 2007. While the majority of Muslims still vote for the Congress party, a growing number of young educated Muslims are opting for the BJP, says Deshmukh. They believe Modi is the most viable option for sustained growth and career opportunities in the state.//

    இதை எல்லாம் ஏன் நீங்கள் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்?
    நான் கொடுத்த உதாரணங்களை மறுக்க்கப் போகும் நீங்கள்,
    என்னை புதிய கண்ணோட்டத்தை ஏற்கும் அளவிற்கு மனப்பக்குவம் இல்லாத ஒருவராக எப்படி குற்றம் சுமத்தலாம்?

    உதாரணம் மூன்று, நேற்று நான் என்னோடு பயின்ற ஒரு முசுலிம் நண்பரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். படிக்கும் போது அவனுடன் பெரிதாக பேச்சு வார்த்தை இருந்ததில்லை. ஆனாலும் என் நெற்றியில் இருந்த திருநீறை கவனித்த பிறகும் என்னை ஆறத் தழுவி வரவேற்ற அவர்கள், தனியாக அழைத்து உட்கார வைத்து, மமிசமில்லா உணவைப் பரிமாறினார்கள்.

    நான் இது போன்ற முசுலீம்களுக்குத் தான் முதலில் இருந்தே வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். கெட்டவர்களை இனம் கண்டு கொள்வது ரொம்பவே சுலபம். நல்லவர்களையும் கொஞ்சம் தேடுங்கள் அன்புத் தோழி, ஸ்மிதா அவர்களே! நம் இந்து மதத்தில் உள்ள நல்லவர்களையும் கமல் இனம் கண்டு கொண்டுள்ளார். கமலுடன் இணைந்து நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜா என்ற இந்துவை கமல் அண்ணன் என்று வாய் நிறையக் கூப்பிடுகிறார். அதையும் கொஞ்சம் கவனியுங்கள். அவர் விமர்சனம் செய்யும் தவறுகளை உண்மையிலே நாம் மாற்றிக் கொண்டு விட்டால், இந்த குற்றச் சாட்டுகளுக்கு இலக்காக வேண்டிய அவசியம் இருக்காதே என்ற கண்ணோட்டத்தை கொஞ்சம் கருத்தில் ஏற்றிக் கொள்ளுங்கள்.

  51. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    கமல் இரண்டு பெண்டாட்டிகளை கட்டிக் கொண்டார். ஆனால் அவர் பாபர் மசூதியை இடிக்கவில்லை. எந்த கோயிலையும் எட்டி உதைக்கவில்லை. அவருடைய வீட்டிலேயே ஒரு ஆத்திகர் இருக்கிறாள். சுருதி ஆத்திகம் தான் பழகுகிறாள். அவள் பொட்டு வைத்தால் அழிப்பதில்லை கமல். நெருங்கின நண்பர்களுடைய சதாபிஷேக விழாவுக்குப் போகிறார். அவர்கள் வைக்கும் பொட்டியும் அழிப்பதில்லை. காரணம், அது அன்பால் வைக்கப் படும் பொட்டு.
    ஆனால், உங்களை போன்ற ஆத்திகர்கள் மற்றவர்களுடைய மத கோயில்களை இடிப்பார்கள். பிறகு அதை காரணம் சொல்லி நியாயப் படுத்துவார்கள். மற்ற மதங்களில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் தங்களுடைய ஓட்டைகளை சரி செய்ய ஒரு ஞானி வரும் வரை காத்திருப்பார்கள்.
    நான் இந்த நூற்றாண்டின் பாரதி என்று கூறி ஒருவர் வந்தால் நீங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு அவரை சிம்மாசனத்தில் வைத்து கொண்டாடி விட்டுத் தான் வேறு வேலையை பார்ப்பீர்கள்!
    சென்ற நூற்றாண்டின் பாரதி செத்த பிறகு அவர் எழுதிய நூல்களை விற்றுத் தான் அவருடைய பெண்டாட்டி கஞ்சி குடித்தார்கள். அது தெரியுமா உங்களுக்கு?

  52. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    நம்பியார் சொன்னதை படித்தேன். ஒழுக்கத்தை கடை பிடித்த ஒரு நல்ல மனிதராக அவரை எனக்கு முன்னமே தெரியும். அவர் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
    அவர் சொல்வதைப் போல பார்த்தால் நானும் மைனாரிட்டி ரிசர்வேஷனால் பாதிக்கப்படப் போகும் ஒருவன் தான். ரயில்வே துறையில் இணையவுள்ள நான் எஸ்.சி எஸ்.டி மக்களுக்கு கிடைக்கும் பதவி உயர்வை பார்த்துக் கொண்டே பதினைந்து வருடங்கள் கடக்க வேண்டியிருக்கும். ரிசர்வேஷனை கொண்டு முன்னேறிவிட்ட அவர்கள் இனி எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லாததைக் கண்டும் நான் சும்மா இருக்க வேண்டியிருக்கும்.
    ஆனால், இதைப் பற்றி நான் படித்த போது, பிராமணச் சமூகம் பாதிக்கப் பட்டுள்ளதற்கு ரிசர்வேஷன் தான் காரணம் என்ற வாதம் உண்மை அல்ல என்பதை உணர்ந்தேன்.
    நம் சமூகத்திற்கு 99.9% வாங்கியும் மேல் படிப்பில் தரமான கல்வி பெற சீட்டு கிடைக்காமல் போவதற்கு ரிசர்வேஷனை அமல் செய்த பிறகு மாற்றப் படாத கல்வி முறையும், தரமான கல்விக்கான அதிக ஸ்பேஸ் இல்லாமையும் தான் காரணம் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை!
    இது அரசியல்வாதிகள் மைனாரிட்டி ஒட்டு வேட்டையில் இறங்கிய பிறகு மேல் தட்டுச் சமூகத்தை கண்டு கொள்ளாமல் விட்டதால் ஏற்பட்ட ஒரு விளைவு தான் என்பதை நான் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம், இதற்கும் ஒரு தீர்வு தேவை தான். ஆனால், அது ரசர்வேஷனை ரத்து செய்வது அல்ல என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்!
    ஆர்.எஸ்.எஸ் இந்துக்களை இணைத்து நம்பிக்கை கொடுத்திருக்கலாம். ஆனால் அது மற்ற மதத்தினருடன் ஏற்பட்டுள்ள வன்மத்தை வளர்க்கத் தான் செய்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் பிரதிநிதிகளாக இன்று இருப்பவர்கள் பால் தாக்கரே போன்ற தீவிரவாதிகள் தான்!

  53. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    நம் நாடு மைனாரிட்டி மக்கள் என்று தனியாக சிலர் இல்லாத நிலையை நோக்கித் தான் பயணிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. யாருக்கும் சலுகளைகளை தராமல், எல்லோரும் சமமாக வாழும் ஒரு நாள் வரத் தான் வேண்டும். மைனாரிட்டிக்களே இல்லாத ஒரு நாடு தான் உண்மையில் மத சார்பற்ற நாடு என்ற கருத்தை வலியுருத்துபவன் தான் நான்.
    ஆனால், இன்றைய தேதியில், two tumbler system இன்னும் முழுமையாக அழிந்து போகாத நிலையில், பிராமணச் சமூகமும், இந்துவும், ஒடுக்கப் பட்டவர்களுக்கு சலுகை அளிப்பதை எதிர்க்காமல், அந்த சலுகைகளுக்கு இரையாகாமல் வாழ எங்களுக்கும் வழி காட்டுங்கள் என்று அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை வலியுறுத்தும் ஒரு கதையையும் நான் எழுதியுள்ளேன். அது வெளிவரும் போது என்னுடைய நிலைப்பாட்டை இந்த பொதுச் சமுதாயம் அறிந்து கொள்ளும்.

  54. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    ஒ.நூருல் அமீன்

    நீங்கள் சென்னையில் இருந்தால், ராமகிருஷ்ண மடத்திற்குச் செல்லுங்கள். அங்கே உங்களுக்கு எல்லா நூல்களும் கிடைக்கின்றன. உங்களுக்கு எது சுலபம் என்று நான் அறியேன். நீங்களே தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என்பதாலேயே அங்கே செல்லச் சொல்கிறேன்.

  55. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    ஸ்மிதா..
    இந்த பதிவிலேயே ஒரு முசுலிம் நம் ஞான நூல்களை படித்துத் தெரிந்த கொள்ளவேண்டும் என்று ஆசைப் படுகிறார். நல்லவர்கள் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறார்கள்..

  56. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    அன்புள்ள கண்ணன்,

    நான் சூஃபி பாதையில் பயணிப்பவன். இருப்பது துபாயில். குறிப்பாக புத்தகத்தின் பெயரும் கிடைக்குமிடமும் சொன்னால் வாங்க வசதியாயிருக்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடிந்தால் இன்னும் வசதி. சாத்தியமானால் உதவுங்கள். உங்கள் பதிலுக்கு நன்றி!

    ஒ.நூருல் அமீன்

  57. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    அவருடைய பெயரில் கான்-என்ற வார்த்தை இருந்ததாலேயே அவரை தீவிரவாதி போல நடத்தினார்கள் விமான நிலையத்தில்(வெளிநாடு). ஏன் கமலுக்கே இது நடந்திருக்கிறது. உன்னை போல் ஒருவன் சமயத்தில் கமலுடைய தாடியையும், ஹாசன் என்ற புனைப் பெயரையும் பார்த்து அவர் தீவிரவாதியா என்று சோதித்தார்கள்(வெளிநாடு). ஆனால் இதை கண்டிக்க இந்தியாவில் பகுத்தறிவாளர்களைத் தவிர வேறு யாரும் வாய் திறக்கவில்லை. இந்துவை சகோதரனாக பார்த்த ஒரு முசுலிமிற்கும், இந்து முசுலிம் இணக்கத்தை வலியுறுத்தும் ஒரு இந்துவுக்கும் நம் இந்து நாடு கொடுத்த மரியாதை இது தான்!

    என்னுடைய இந்த கமென்ட்-ல் தெளிவின்மை இருப்பதால் மறுபடியும் சொல்கிறேன்.

  58. Avatar
    smitha says:

    kanna,

    ஆர்.எஸ்.எஸ்-ன் பிரதிநிதிகளாக இன்று இருப்பவர்கள் பால் தாக்கரே போன்ற தீவிரவாதிகள் தான்!

    You cannot be farther from the truth. You do not know the good work that RSS is doing. That is what I am saying. U are having an one dimensional outlook.

  59. Avatar
    smitha says:

    Kannan,

    கமல் முசுலிம் தீவிரவாதத்திற்கு எதிராக இரண்டு படங்களை எடுத்துள்ளார். ஒன்று உன்னை போல் ஒருவன். மற்றொன்று விஸ்வரூபம்.

    U seem to know the content of Vishwaroopam even before its release. :-)

    நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல எல்லோரையும் சமமாகத் திட்டுவது பகுத்தறிவாளனின் வேலை அல்ல.

    U are correct. that is what even I am saying. One who criticises only Hinduism more is “paghutharivadhi”.

    கமலை ஏன் முன்னோடியாக எடுத்துக் கொள்ளக் கூடாது?
    அவர் உடல் தானம் செய்கிறார். நானும் செய்வேன்.
    அவர் பகுத்தறிந்து பேசுகிறார். நானும் பேசுவேன்.
    அவர் தொடங்கி வைத்த பின்பு தான் அரசியல் கட்சிகளே கூட ரத்த தான முகாம்களைக் கொண்டு வந்தன. நானும் ரத்தம் கொடுப்பேன்.
    அவர் நேர்மையாக டாக்ஸ் கட்டுகிறார்; அதையும் நான் செய்வேன்.
    இந்து மதத்தில் உள்ள சாக்கடைகளை அவர் விமர்சிக்கிறார். அதையும் நான் செய்வேன்.
    ராமானுஜரையும், காந்தியையும், பாரதியையும் அவர் போற்றுகிறார். அதையும் நான் செய்வேன்..

    இப்பொது வரை நீங்கள் என்னையும் கமலையும் தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளில் தாக்கி இருந்தாலும், உங்களை நான் மரியாதையோடு தான் நடத்தியிருக்கிறேன். நான் கமலை பின்பற்றியதால் உங்களைப் போன்ற இந்துவுக்கு நல்லது தானே நடந்தது!

    U indulged in personbal bashing & U are accusing me?

    Anyway, for your info, kamal’s name has figured prominently in parliament for tax default.

    Actors Mahadevan & sarath kumar donated theoir body much before he did it.

    Blood banks have been in vogue long before kamal asked his folowers to donate.

    இந்து மதத்தில் உள்ள சாக்கடைகளை அவர் விமர்சிக்கிறார். அதையும் நான் செய்வேன்.

    As i already said, which is “saakkadai” is subjective? Anwyay, since a paghutarivaadhis (as u call yourselves) criticise only hinduism, this will fall on deaf ears.

    U need not be a kamal follower or otherwise to like/dislike Gandhi, Bharathi or Ramanujar. The point is illogical.

    நீங்கள் தவறாக செயல்பட்ட சில முசுலீம்களை சுட்டிக் காட்டி உங்கள் முசுலிம்களுக்கு அமைதியை கற்றுத் தாருங்கள் என்று கூறுகிறீர்கள்.
    ஆனால் ஒரு இந்து தவறு செய்தால் மட்டும்; எல்லோரும் அப்படியில்லை. ஏதாவது ஒன்றிரண்டு பேர் இப்படி வெறிப் பிடித்து அலைகிறார்கள் என்று கூறுகிறீர்கள்.
    இது எந்த வகையில் நியாயம்? நீங்கள் சுட்டிக் காட்டியது போல ஒரு நல்ல முசுலிமை நானும் சுட்டிக் காட்டுவேன்.

    You are wrong. U are talking on the assumption that anyone who speaks up for hindus has to be a RSS/VHP supporter. That is not case. This is what is lacking in your muslim brethen. When the RSS/VHP indulge in such acitiviies. they are criticised by fellow hindus, but when muslims indulge in riots or worse, even killing, not a word is said.

    The Supreme Court has also clarified on what Hindutva means. Maybe it is a bad word according to you.

    I have repeatedly said that Hey Ram is not anti hindu. It cannot be. In fact, kamal gets reformed only on account of a muslim in the movie.

    நான் என்னோடு பயின்ற ஒரு முசுலிம் நண்பரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். படிக்கும் போது அவனுடன் பெரிதாக பேச்சு வார்த்தை இருந்ததில்லை. ஆனாலும் என் நெற்றியில் இருந்த திருநீறை கவனித்த பிறகும் என்னை ஆறத் தழுவி வரவேற்ற அவர்கள், தனியாக அழைத்து உட்கார வைத்து, மமிசமில்லா உணவைப் பரிமாறினார்கள்

    I do no get your point. U expected the muslim friend to either drive you out because U are a hindu or did U expect him to rub your forehead & remove the ash?

    This is commoion courtesy. Muslims are invited to hindu weddings. No one drives them out because they are muslims.

    This is a personal experience, my friend. Do not get tensed & confused. Relax.

    Since you hero worship kanmal, why don’t you request him to mend his ways rather than advising others?.

    The reason I am saying this is kamal is a popular star. When educated (??) guys like you follow him blinldy, imagine the plight of the uneducated fan.

    அவள் பொட்டு வைத்தால் அழிப்பதில்லை கமல். நெருங்கின நண்பர்களுடைய சதாபிஷேக விழாவுக்குப் போகிறார். அவர்கள் வைக்கும் பொட்டியும் அழிப்பதில்லை. காரணம், அது அன்பால் வைக்கப் படும் பொட்டு.

    This is a joke. U think he can do it & get away with it?. Also, tell me why should an atheist get irked if a follower wears a thilak/naanam on his forehead?. U are talking as if kamal is doing a favour by not rubbing it.

    ஆனால், உங்களை போன்ற ஆத்திகர்கள் மற்றவர்களுடைய மத கோயில்களை இடிப்பார்கள்.

    Who is genreralising now?

    Your post on bharathiyar shows ypour ignotrance. He was much ahead of his times.

    Half baked knowledge is dangerous, kanna. if you want to chide, do so directly. Donlt drag in baharthi here.

  60. Avatar
    smitha says:

    Kamal himself happens to be the thalaivar of “All India kamal fans narapani iyakam”, which is odd.

    I suggest the name of Kanna Ramasamy for this post.

    Kamal on donating his body said ‘ This will not come in Chitra guptan’s kanakku”.

    Chitraguptan counts bodies? Did not know that.

    Also, does kamal being a paghutharivaadi/ naastigan/ whatever u say, believe in this?

    Or is he needling hindus (as usual)?

    Konjam clarify pannunga, kamal bhaktare.

  61. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    ஸ்மிதா..

    உங்களுடனான விவாதம் இதோடு முடிகிறது. தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்..இந்து என்றுமே வெல்வான். மனிதம் தோற்கும்! நன்றி..

  62. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    டாக்ஸ் கட்டுவதில் கமலுடைய நேர்மை பற்றி இங்கிருக்கும் குறுகிய கண்ணோட்டம் இல்லாத மற்ற மனிதர்களின் பார்வைக்கு:

    http://behindwoods.com/tamil-movie-news-1/jul-11-04/kamal-hassan-governor-25-07-11.html

    Kamal Hassan was a special guest at the recently held concluding ceremony of celebrating 150 years of Income tax. He was honored by senior officers of the income tax department for being a shining example of good citizenship. The Governor of Tamil Nadu, Shri Surjit Singh Barnala was the chief guest at this occasion which was attended by luminaries representing illustrious fields.

    A short film on the history of Income tax was shown and awards were given to top tax payers. A cultural programme was also staged at this event. Congratulations to Padmashri Kamal Hassan and the other award winners.

    1. Avatar
      punaipeyaril says:

      அவரின் டாக்ஸ் கட்டும் நேர்மை பற்றி கொடைக்கானல் பத்திர பதிவு அலுவலகத்தில் விசாரிக்கலாம்… தெரியும் சேதி…

  63. Avatar
    Indian says:

    My earlier question
    ‘Will you Mr Kannan or your hero Mr Kamala Hasan, dare to utter this statement in public regarding a certain prophet (PBUH) from a certain religion? I believe the Prophet( PBUH) had many wives.’
    Mr Kannan,a simple “NO” is sufficient.”No, I haven’t got the guts to say anything negative about the Prophet” is easy for all of us to understand.
    No need to have verbal diarrhoea and speak volumes in the name of secularism. I can understand the cowardice streak, lest the peace loving mob decide to separate the precious head from the body.

  64. Avatar
    admin says:

    அன்புள்ள வாசகர்களுக்கு
    தயவு செய்து தமிழில் உங்கள் பின்னூட்டங்களை இடவும்.
    படைப்புக்கு தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கவும்.
    நன்றி
    ஆசிரியர் குழு

  65. Avatar
    ஷாலி says:

    திண்ணை தள நிவாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி!
    தமிழ் பேசும் தமிழ் மக்களுக்காக நடத்தப்படும் தமிழ் திண்ணையில் ஆங்கிலத்தில் எழுதுவது அழகா? நாகரீகமா? அழகிய தமிழ்த்தாய் இணையத்தில் இருக்கும்போது ஆங்கில ஆண்ட்டியை இழுத்து மேடையேற்றுவது முறையா?
    கட்டுரைக்கு தொடர்பில்லாத ஊர்வம்பை இழுத்துப்போட்டு
    உற்ச்சவம் நடத்துவதை தடுப்பதும் மிக நன்று.

  66. Avatar
    ஸ்டீபன் ராஜ் says:

    அன்புள்ள கண்ணன் ராமசாமி,

    ஆரம்பத்திலிருந்து இந்த விவாதத்தை படித்தேன். நீங்கள் சரியாகவே பேசுகிறீர்கள். பாராட்டுகிறேன்.
    ஆனால்,

    //கோத்ரா ரயில் எரிப்பில் சம்மந்தப் பட்டவர் என்று குற்றம் சாட்டப் படும் மொதி// என்று நீங்கள் தவறாக குறிப்பிடுகிறீர்கள். மோதி கோத்ரா ரயில் எரிப்புக்கும் மோதிக்கும் எந்த உறவும் இல்லை. அதன் பின் நடந்த கலவரங்களை சரியாக தடுக்கவில்லை என்பதே அவர் மீதுள்ள குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. கோத்ரா ரயில் எரிப்பு நூறுக்கும் மேற்பட்ட இந்து யாத்ரீகர்கள் கோத்ரா என்ற ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களால் எரித்து கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முஸ்லீம்கள் தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள்.

    இரண்டாவது,
    //நீங்களும் நானும் மசூதிகளிலும், கறிக் கடையிலும், வேறு பல இடங்களிலும் காணும் அப்பாவி முசுலிம்கள், இந்துக்கள் சகஜமாகப் பேசும் போது அவர்களை சகோதரர்களாகத் தான் பார்க்கிறார்கள்.//

    இந்த வீடியோவை பாருங்கள்.
    முஸ்லீம் அரசியல்வாதியின் கொலைவெறி பேச்சு
    இதில் ஒவாய்ஸி என்ற ஹைதராபாத் அரசியல்வாதி பேசுகிறார். 13ஆவது நிமிடத்தில், நாங்கள் 25 கோடி மு்ஸ்லீம்கள், இந்துக்கள் நீங்கள் 100 கோடி பேர் இருக்கிறீர்கள். இருந்தால் என்ன? ஒரு பதினைந்து நிமிடம் போலீஸை விலக்கிக்கொள். அப்புறம் பார். நாங்கள் உங்களை கொன்றுதள்ளிவிடுவோம் என்கிறார். அது ஆச்சரியமில்லை. ஏனெனில் அவர் ஒரு தீவிரவாத முஸ்லீம், அப்படித்தான் பேசுவார் என்பீர்கள்.
    ஆனால், அதற்கு கூடியிருக்கும் முஸ்லீம் மக்களிடமிருந்து கரகோஷத்தை பாருங்கள்.
    வெளுத்ததெல்லாம் பால் அல்ல.

  67. Avatar
    suvanappiriyan says:

    ஸ்டீபன் ராஜ்!

    //இதில் ஒவாய்ஸி என்ற ஹைதராபாத் அரசியல்வாதி பேசுகிறார். 13ஆவது நிமிடத்தில், நாங்கள் 25 கோடி மு்ஸ்லீம்கள், இந்துக்கள் நீங்கள் 100 கோடி பேர் இருக்கிறீர்கள். இருந்தால் என்ன? ஒரு பதினைந்து நிமிடம் போலீஸை விலக்கிக்கொள். அப்புறம் பார். நாங்கள் உங்களை கொன்றுதள்ளிவிடுவோம் என்கிறார்.//

    நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் வேலை செய்யவில்லை. உவைசி பல ஆண்டுகளாக அரசியலில் உள்ளவர். அனைத்து மதத்தவரோடும் அன்போடு .இன்று வரை பழகி வருபவர். நீங்கள் குறிப்பிடுவது போல் அவர் பேசியிருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். லிங்க் ஓபனாகாததால் நீங்கள் கற்பனையாக எழுதியதோ என்ற சந்தேகம் வருகிறது. எனவே சரியான லிங்கை கொடுக்கவும். அல்லது தவறாக சொன்னதை ஒத்துக் கொள்ளவும்.

  68. Avatar
    suvanappiriyan says:

    ஸ்டீபன் ராஜ்!

    இது போன்ற பல வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.//
    யாரோ சேமித்து வைத்துள்ள ஒரு வீடியோ இங்கே இருக்கிறது.
    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TXOpUvd7DO0#!//

    நீங்கள் கொடுத்த இந்த லிங்கில் என்ன பேசுகிறார். உங்களுக்கு முதலில் உருது தெரியுமா என்று தெரியவில்லை.

    ‘அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்கள் வெளிநாட்டுகாரர்கள் என்றால் அத்வானியே நீ எந்த நாட்டிலிருந்து வந்தாய்? இந்துஸ்தான் எங்கள் நாடு. இங்கேயே பிறந்தோம். இங்கேயே வளர்ந்தோம். இங்கேயே இறப்போம. குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அஸ்ஸாமில் கொல்லப்படுகிறார்கள். முழு இந்துஸ்தானத்திலும் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். நமது அரசோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது….’ என்ற ரீதியில்தானே அந்த பேச்சு செல்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வன்முறைப் பேச்சு எதையும் அந்த காணொளியில் காண முடியவில்லையே! இந்திய நாட்டை விரும்பி பொதுக் கூட்டத்தில் பேசும் ஒருவரின் மேல் எத்தகைய அபாண்டத்தை நெஞ்சறிந்து சுமத்துகிறீர்கள்.!

    ஏன் இப்படி கிறித்தவ பெயரில் ஒளிந்து கொண்டு விஷத்தை கக்க வேண்டும். இதனால் உங்களுக்கு என்ன லாபம். நாட்டை இது நாள் வரை ரண களமாக்கி ருசித்தது பத்தாதா? இன்னுமா மனித ரத்தம் வேண்டும். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். அது தான் தற்போது என்னால் சொல்ல முடிந்தது.

    1. Avatar
      paandiyan says:

      you are a indian first not a Bangaldesh muslim. if you are a muslim and not a indian then get out from this country and go to pakisthaan. when nation divided you people should go to pakisthaan. dont live here and make more trouble..

  69. Avatar
    punaipeyaril says:

    இந்திய நாட்டை விரும்பி பொதுக் கூட்டத்தில் பேசும் ஒருவரின் மேல்—> he wants india, not likes india. he is a traitor. let him go to pakistan…. or afghanistan

  70. Avatar
    paandiyan says:

    அத்வானியே நீ எந்த நாட்டிலிருந்து வந்தாய்? i think those side muslims are idiot. madarasha training produce more idiots in the east region. as per supreme court verdict, all muslims in assam sent out to bangaladesh other wise country should declare them refugees and put them into one corner area with tight security.

  71. Avatar
    suvanappiriyan says:

    ஸ்டீபன்!

    //http://www.youtube.com/watch?v=JDAtxnoWa7U
    நீக்கப்படுவதற்கு முன்னால் பாருங்கள்.//

    நீக்கப்படுவதற்கு அந்த காணொளியில் என்ன இருக்கிறது? முதலில் உங்களுக்கு உருது தெரியுமா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. அந்த காணொளியில் உள்ள பேச்சை தருகிறேன்:

    ‘பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதன் பிறகு நடந்த மும்பை கலவரம், சிறுவர்களி சிறையிலடைப்பு, முஸ்லிம் பெண்கள் கலவரத்மில் கற்பழிப்பு இதெல்லாம் நடந்திருக்காவிட்டால் மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காது. இதை ஆரம்பித்து வைத்தது இந்துத்வ வெறியர்கள் இல்லையா?

    அந்த குண்டுவெடிப்பை யார் செய்திரந்தாலும் அதனை நான் ஆதரிக்க வில்லை. ஏனெனின் இறந்தது அனைவரும் அப்பாவிகள். அப்பாவிகளை கொல்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

    என்னை அமைதியாக பேசச் சொல்லி அறிவுறுத்துகிறீர்கள். நல்லது நான் அமைதியாகவே மாறி விடுகிறேன். அதற்கு முன்னால் இடித்த பாபரி மசூதியை கட்டித் தாருங்கள். எனது சகோதரிகளை கொலை செய்த கற்பழித்த கயவர்களை கூண்டில் ஏற்றி சிறையில் அடையுங்கள். செய்த தவறுகளுக்கு இஸ்லாமிய சமூகத்திடம் மன்னிப்பு கேளுங்கள். அதன் பிறகு இந்த உவைசி அமைதியாக வில்லை என்றால் ஏன் என்று கேளுங்கள்.

    சார்மினார் முன்பு பள்ளிவாசலாக இருந்தது. ஐந்து நேரமும் அங்கு தொழுகை நடந்து வந்தது. அரசு சார்மினாரை கையகப்படுத்தியவுடன் அங்கு பாங்கு சொல்வது நிறுத்தப்பட்டது. சிறிது காலம் சென்று தொழுகையும் நிறுத்தப்பட்டு பூட்டு போடப்பட்டது. தற்போது அந்த சார்மினாருக்கு அருகில் புதிதாக சிலையை கொண்டு வந்து வைத்து கோவில் கட்டுகிறீர்களே! இதுதான் இந்து தர்மமா! காங்கிரஸூக்கு ஆதரவு கேட்கும் முஸ்லிம்களை பார்த்து கேட்கிறேன். இதுதான் மதசார்பற்ற நாடா இந்த கட்சிக்கு நாம் ஆதரவு தர வேண்டுமா?

    அலஹாபாத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடில்லாத ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. அதில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 2000 மடடுமே. அடிலாபாத்தில் ஒதுக்கப்பட்டது வெறும் ஆறு வீடுகள் மாத்திரமே! இதுதான் மதசார்பற்ற நாடா?

    அக்பர் உவைசியை கொன்று விட்டால் பிரச்னை முடிந்து விடாது. என்னை போன்ற ஆயிரம் உவைசிகளை இறைவன் உருவாக்குவான். முஸ்லிம்களே! உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். ஐந்து நேரமும் தொழுது கொள்ளுங்கள். நமது நாட்டில் நடக்கும் அநியாயயத்துக்கு ஒரு முடிவு கட்டச் சொல்லி இறைவனிடம் பிரார்த்தியுங்கள். திருமணம் ஆகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நமது சகோதரிகளுக்கு சீக்கிரம் திருமணம் முடிய பிரார்த்தியுங்கள். சினிமாவிலும், சாராயத்திலும், விபசாரத்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் நமது இளைஞர்களை நேர்வழிப்படுத்த இரு கரம் ஏந்தி பிரார்த்தனை செய்யுங்கள். நம் அனைவரின் பிரார்த்தனையையும் இறைவன் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்…’

    எவ்வளவு அழகிய ஒரு பிரசாரத்தை நெஞ்சறிந்து எப்படி பொய் சொல்ல மனது வருகிறது ஸ்டீபன்? இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போதே இந்த கதை கட்டும் உங்களைப் போன்றவர்கள் ஆதாரமில்லாத இன்னும் பல விஷயங்களில் என்னவெல்லாம் புனைந்துரைப்பீர்கள் என்பதற்கு இது ஒன்றே ஆதாரமாக உள்ளது.

    //13ஆவது நிமிடத்தில், நாங்கள் 25 கோடி மு்ஸ்லீம்கள், இந்துக்கள் நீங்கள் 100 கோடி பேர் இருக்கிறீர்கள். இருந்தால் என்ன? ஒரு பதினைந்து நிமிடம் போலீஸை விலக்கிக்கொள். அப்புறம் பார். நாங்கள் உங்களை கொன்றுதள்ளிவிடுவோம் என்கிறார். அது ஆச்சரியமில்லை.//

    நீங்கள் குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் அனுப்பிய எந்த காணொளியிலுமே இல்லையே! மேலும் மேலும் பாவங்களை செய்ய வேண்டாம் ஸ்டீபன். நிறுத்திக் கொள்ளுங்கள். கண்ணன் ராமசாமி போன்ற நல்லுள்ளம் கொண்டவர்கள் வாழும் சமூகத்தில்தான் ஸ்டீஃபன் போன்ற நச்சு விததுக்களும் உலா வருகின்றன. இறைவன் தான் என் நாட்டை இந்த நாசகாரர்களிடமிருந்து காக்க வேண்டும்.

    1. Avatar
      paandiyan says:

      suvanappiriyan is a biggest lier. he has been paying for spread romuours, divide hindus and defend all muslims issues. dont waste time by responding him. as per him babar is true indian. we are vanderigal.

  72. Avatar
    ஸ்டீபன் ராஜ் says:

    சுவனப்பிரியன்,
    உங்களுக்கு நான் பதில் சொல்வது வேஸ்ட்.
    ஆனால், நீங்கள் இந்த காணொளியில் 12:52 எண்ணிலிருந்து தள்ளி பாருங்கள்.
    எனக்கு உருது தெரியவில்லையா, உங்களுக்கு உருது தெரியவில்லையா என்று பார்க்கலாம்.
    அல்லது இங்கே மற்ற உருது பேசுபவர்கள் இருந்தால் அவர்களிடம் கேளுங்கள்.
    இந்த பேச்சு சம்பந்தமாக அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
    டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி
    http://newindianexpress.com/cities/hyderabad/article1399279.ece
    http://articles.timesofindia.indiatimes.com/2012-12-29/hyderabad/36050247_1_akbaruddin-owaisi-bhagyalakshmi-temple-hindus
    “Inflammatory speech by MLA Akbaruddin – Remove police for 15 mins, We will finish off 100 crore Hindus,” tweeted television commentator and interviewer Karan Thapar, which was re-tweeted by journalist and columnist Swapan Dasgupta.

    1. Avatar
      UtAyAm says:

      இது மாதிரி வன்முறையை தூண்டும் பேச்சை யார் பேசினாலும் தவறு தான். இதை விடவும் முஸ்லிம்களுக்கு எதிராக சங்பரிவார்கள் பேசி வன்முறையை தூண்டியதை வைத்தும், முஸ்லிம்களின் மேல் கலவரத்தை கட்டவிழ்த்து விட “கூலி” பேசி, போலி மதக்கலவர ஏற்பாட்டாளர்களைக் காட்டியும் இவரது பேச்சை நான் நியாயப்படுத்தவில்லை. இவர் இப்படி பேசினால் இவரை, அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, வருன் காந்தி லிஸ்ட்டில் சேர்த்து விட வேண்டியது தான்.

  73. Avatar
    suvanappiriyan says:

    //you are a indian first not a Bangaldesh muslim. if you are a muslim and not a indian then get out from this country and go to pakisthaan. when nation divided you people should go to pakisthaan. dont live here and make more trouble..//

    ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்’

  74. Avatar
    தங்கமணி says:

    சரியாக சொன்னீர்கள் சுவனப்பிரியன்.
    நிஜாம் காலத்தில் ஓமனிலிருந்து இங்கே வந்து தங்கிய குடும்பம் இந்த ஒவேஸி குடும்பம்.
    இவர்கள் நம்மை துரத்துகிறார்களாம்.

  75. Avatar
    punaipeyaril says:

    அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, வருன் காந்தி– they are indians, our protectors.. not traitors

  76. Avatar
    suvanappiriyan says:

    //அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, வருன் காந்தி– they are indians, our protectors.. not traitors//

    இது போன்ற ஆடகளால் நமது தேசம் விளங்கிடும்.

    நீங்களெல்லாம் இவ்வாறு மத வெறி பிடித்து அலைவதால்தான் மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக மாறியது. அதன் இன்றைய நிலையை இந்த சுட்டியில் சென்று பார்க்கவும்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html

    1. Avatar
      paandiyan says:

      who cares மீனாட்சிபுரம். you only worry much. who ever wants leave hindu relegion we are not stopping and cry. they put nice APPU for themself and suffering. they are not only leaving hindu relegion also a very HIGH FEEDOM and independtely thinking power.

  77. Avatar
    smitha says:

    Why pick on Owaisi? if you turn on the TV channels like WIN TV late night, you will see more such hate speeeches.
    It is happening right under our nose.

  78. Avatar
    smitha says:

    பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அஇஅதிமுக, மிகப் பெரிய தவறுக்குத் துணைசென்றுள்ளது. இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதியும் அதற்கு முன்பும் பலமுறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான சிமிக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும், சிறுபான்மையினரின் வாக்குக்காகவும் அஇஅதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. தடைசெய்யப்பட்ட சிமி இயக்கம் பல்வேறு காலகட்டங்களில் தனது பெயரை மாற்றிக் கொண்டு அரசியல் களத்தில் வலம் வருகிறது. தமிழகத்தில் அதன் பெயர், “மனித நேய மக்கள் கட்சி”யாகும்.

    இந்திய அரசியலில் தங்களது பயங்கரவாதத் தன்மை மறைய வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகின்ற சில இஸ்லாமிய அமைப்புகள், காலத்திற்குத் தகுந்தாற்போல் தங்களது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு நல்லவர்கள் போல் காட்சி அளிக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தித்தனத்திற்கு தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுகவும், அஇஅதிமுகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். 2006-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த மனித நேய மக்கள் கட்சி, மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தவுடன் 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மூன்று இடங்களைப் பெற்று, இரண்டு இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆகவே இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயரை மாற்றி அரசியல் அரங்கில் அங்கீகாரம் பெற்றுள்ளது, மிகப் பெரிய ஆபத்தாக முடியும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.

    2011-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும், சென்னையில் சேப்பாக்கம் தொகுதியிலும் இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு இடங்களில் பெற்ற வெற்றி, ‘இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும்’ என்கிற கோரிக்கைக்கு இந்துக்களும் ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள நடத்திய நாடகமாகும். இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்

    1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திற்குக் குண்டு வைத்து 11 பேர்களைக் கொன்ற செயலில் ஈடுபட்டவார்கள் அல்-உம்மா இயக்கத்தினார். நாடு முழுவதும் சிமி இயக்கத்திற்கு முதன்முதலில் தடை விதித்தபோது தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினார் அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டி எனும் புதிய பெயரில் இயக்கத்தை நடத்தினார்கள். பழனிபாபா கொலைக்குப்பின் அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டபின் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் எனும் பெயரில் 1995-இல் ஒரு புதிய அரசியல் இயக்கம் துவக்கியவர்கள் அல்-உம்மா இயக்கத்தினர். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு அரசியல் சாயம் பூச வேண்டும் என்கிற நோக்கில் துவக்கப்பட்ட இயக்கம் தமுமுக (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்) என்பதாகும். இதன் தலைவார் ஹைதர் அலி முன்னாள் சிமியில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். 1998-இல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்குப் பின் ஹைதர் அலி கைது செய்யப்பட்டதால் தமுமுக-வின் தலைவராக பொறுப்புக்கு வந்தவார் ஜவாஹிருல்லா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    1993-ஆம் ஆண்டிலிருந்து 1998-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கம் அல்-உம்மாவும் பின்னர் பெயர்மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் ஆகும். 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகூரில், இந்து முன்னணியின் பொறுப்பாளருக்குக் குறிவைத்து, அவரது மனைவியைக் கொன்ற சம்பவத்திலும், 1996-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் தமுமுக-விற்குப் பங்கு உண்டு. இந்தச் சம்பவங்களுக்காக நைனா முகமது, சேட் சாகீப், ராஜா ஹூசைன், பக்குரூதீன் போன்ற தமுமுக-வின் பொறுப்பாளார்கள் கைது செய்யப்பட்டார்கள். தஞ்சாவூரில் உள்ள தூர்தார்ஷன் மீது 6.6.1997-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள், 6.12.1997-ஆம் தேதி பிரச்சினைக்குரிய கட்டடம் அயோத்தியில் இடிக்கப்பட்ட நினைவுதினத்தை ஒட்டி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியிலும் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் வண்டியிலும் குண்டுவைத்து சிலரைக் கொன்ற குற்றவாளிகள்- தமுமுகவினர். இது போல பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட இயக்கம் தமுமுக-வாகும். 10.1.1998-ஆம் தேதி சென்னை அண்ணா மேல்பாலத்தில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல், 18.9.1997-இல் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து இந்து இயக்கங்களின் ஆதரவாளார்கள், 9.12.1997-ஆம் தேதி கோவையின் வெளிப்பகுதியில் நடத்திய தாக்குதல்களில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதும், இதற்காக சுல்தான் நாஸார், அப்துல் காயும் என்பவர்கள் கைது செய்யப்பட்டதும், இவ்வாறு நடந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள், தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என அனைவருமே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள்.

    1980-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னால் செயல்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் அனைத்திலும் ஜவாஹிருல்லாவின் பங்கு உண்டு என்பது காவல் துறையினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஜவாஹிருல்லா, 1995-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவார். 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கோவையில் திரு.அத்வானி அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கங்களில் ஒன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமாகும். இவ்வாறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட தமுமுகவினர் ‘மனித நீதிப் பாசறை’ என்கிற பெயரில் சில காலம் தங்களது ‘பணிகளை’ச் செய்துகொண்டு இருந்தார்கள். தீவிரவாதம் தவிர்த்து இவர்களின் முக்கியப் பணி பல்வேறு இடங்களில் உள்ள தலித்களை இஸ்லாமியார்களாக மதமாற்றம் செய்வதாகும். 2005-ஆம் ஆண்டு மீண்டும் தங்களது இயக்கத்தின் பெயரை மனித நேய மக்கள் கட்சி என பெயர்மாற்றம் செய்து, தமிழக அரசியலில் புதிய அவதாரம் எடுக்க முனைந்தார்கள்.

    இவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந்தப் பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டு கழகங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது முழு ஆதரவை அளித்தார்கள், கிடைத்த ஆதரவில், பயங்கரவாதிகள் என்கிற பெயரை மாற்றுவதற்கு தேர்தல் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். தமிழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. 1996-ஆம் வருடம் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளார் கோவை மு.ராமநாதன் பொதுமேடைகளில் பகிரங்கமாக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். கோவையில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோட்டைமேடு பகுதியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது, இதற்கு இஸ்லாமியார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால், உடனடியாக கோட்டைமேடு பகுதியில் உள்ள செக்போஸ்ட் அப்புறப்படுத்தப்படும் என பகிரங்கமாகத் தெரிவித்தார். திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற செய்தி வந்தபோது அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அந்த செக்போஸ்ட் இஸ்லாமியார்களின் துணையோடு அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு தனி பாகிஸ்தானாகக் காட்சி அளிக்கிறது

    இதே ஆண்டில் சிறையில் இருந்த அல்-உம்மா கைதிகள் எவ்விதக் காரணமுமின்றி விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹருல்லாவும் ஒருவர். 1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பிற்குக் காரணமான அல்-உம்மா மற்றும் ஜிகாத் இயக்கங்கள் தடை செய்யப்பட்டவுடன் திமுகவின் ஆதரவுடன், “மனித நீதிப் பாசறை” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

    19.2.2009-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அது, 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை கேரளத்தில் உள்ள கள்ளிக்கோட்டையில் நடந்த தேசிய அரசியல் மாநாடு (National Political Conference) பற்றியது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் டெல்லி உட்பட 16 மாநிலங்களில் உள்ள முன்னாள் சிமி ஆதரவாளார்களால் துவக்கப்பட்ட பாப்புலார் பிரண்ஃட் ஆப் இந்தியாவின் மாநாடாகும். இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து ஜவஹிருல்லா கலந்து கொண்டார், இவருடன் மனித நேய மக்கள் கட்சியின் சில முக்கியப் பொறுப்பாளார்களும் கலந்து கொண்டார்கள்.

    ஆகவே 2011-இல் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்திலிருந்து வேறு பெயரில் அரசியல் கட்சியாக மாறிய மனித நேய மக்கள் கட்சிக்கு அஇஅதிமுக கூட்டணி எனும் பெயரில் அரசியல் அங்கீகாரம் அளித்துள்ளது ஆபத்தில் முடியுமோ என்கிற அச்ச உணர்வுடன் தமிழகம் இருக்க வேண்டிய நிலையில உள்ளது.

    Thanks – tamilhindu.com

    But as priyan says, muslims are sons of the soil – so carry on, brother.

  79. Avatar
    paandiyan says:

    அபுஜா: நைஜீரியாவில் 15 கிறிஸ்தவர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நைஜீரியாவில் மதச்சார்பற்ற அரசு பொறுப்பில் இருந்தாலும் முஸ்லிம்கள் வடக்கில், வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றன. ஆனால் நைஜீரியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக அவ்வப்போது கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்.

    இதேபோல் மைடுகுரி நகர் அருகே கிராமம் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் 15 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தப் படுகொலைக்கு போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  80. Avatar
    Ram says:

    //எவ்வளவு அழகிய ஒரு பிரசாரத்தை நெஞ்சறிந்து எப்படி பொய் சொல்ல மனது வருகிறது ஸ்டீபன்? இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போதே இந்த கதை கட்டும் உங்களைப் போன்றவர்கள் ஆதாரமில்லாத இன்னும் பல விஷயங்களில் என்னவெல்லாம் புனைந்துரைப்பீர்கள் என்பதற்கு இது ஒன்றே ஆதாரமாக உள்ளது.//

    ஸ்டீபன் என்பதற்கு பதிலாக சுவனப்பிரியன் என்று திருத்தி படிக்கவும்.

    More from Wikipedia on Akbaruddin Owaisi’s speech :

    “Owaisi called the Hindus as “impotent” and the Indian police as the “impotent army”. He said that not even one crore impotent men can together father one child. He said that these people (Hindus) cannot face the Muslims, and whenever the Muslims start dominating the Hindus, the impotent army (police) intervenes”


    Owaisi made several derogatory comments against Hindu deity Rama and his mother Kaushalya

    Kannan said,
    //நம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஒரு சமூகத்தை ஆதரித்துப் பேசும் வேலையை இந்துவாகிய நீங்களும் நானும் செய்ய வேண்டும். அது தான் பெரும்பான்மைக்கு அழகு..! //
    சிறுபான்மையினரின் அழகை பார்த்தீர்களா ?
    இவ்வாறு பேசியது ஏதோ சாதாரண படிப்பறிவில்லாத ஒன்றும் அறியாத தனிப்பட்ட முஸ்லிம் அல்ல.
    பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் பிரதிநிதி. இவர் பேச்சு அவர்கள் அத்துணைபேரின் பேச்சே எனக்கொள்ளவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *