உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3

This entry is part 15 of 17 in the series 11 டிசம்பர் 2016

கி.பி. [1044  – 1123]

 

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள்.  அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார்.  உமர் கயாம் பாரசீக  அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம்.  நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது.  முதன்முறை செய்தவை  என்றும் சில பதிப்புகள் கூறும்.

2.  காலைக் கதிரின் இடதுகை வான்தொடக் கனவெழும்

காதில் விழுந்தது  மதுக்கடைக் கூக்குரல் !

“எழுவீர் என் இளைஞர்காள் ! நிரப்புவீர் கிண்ணம்

உம்முயிரின் மது உடலில் வற்றும் முன்னம்”

2.     Dreaming when Dawn’s Left Hand was in the Sky
I heard a voice within the Tavern cry,
“Awake, my Little ones, and fill the Cup
Before Life’s Liquor in its Cup be dry.”

+++++++++++++

3.  சேவல் கூவிட மதுக்கடை முன் நிற்போர்

சேர்ந்து கத்தினர் – “திறடா கதவை !

உம்  அறிவு அற்பம், தங்கப் போவது நாங்கள்,

ஒருமுறை போனவர் மறுமுறை மீளார்.”
3.     And, as the Cock crew, those who stood before

The Tavern shouted — “Open then the Door !

You know how little while we have to stay,

And, once departed, may return no more.”

+++++++++++

Series Navigationதொடுவானம் 148. கலகலப்பான கிராமம்திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *