உலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்

author
41
0 minutes, 2 seconds Read
This entry is part 5 of 16 in the series 22 நவம்பர் 2015

தாரிக் ஃபடா

(September 25, 2015)

நான் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது: ஜும்மா என்று அழைக்கப்படும் வெள்ளிக்கிழமை கூட்டுத்  தொழுகையின் முன்பு, மசூதி இமாம்கள் ஒரு குறிப்பிட்ட  பிரார்த்தனையை செய்கிறார்கள். இந்த பிரார்த்தனையில்  இமாம்கள் அல்லாவிடம் “காபிர்கள் மீது முஸ்லீம்கள் வெற்றிபெற” வேண்டுகிறார்கள். ”கௌம்  அல் ஃகாபிரூன் ” (காஃ பிர்களின் தேசம்) என்ற அரபிய வார்த்தை யூதர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், நாத்திகர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்ற எல்லா முஸ்லீமல்லாதவர்களையும் அடக்கிய ஒரு வார்த்தை.

நான்கு யூதர்களை பாரீஸில் இஸ்லாமின் பெயரால் ஜிகாதி பயங்கரவாதிகள் கொன்ற அந்த நாளிலும், சார்லி ஹெப்டோ படுகொலை நடந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகும்,  டோரண்டோ மசூதியின் இமாம் அல்லாவிடம் கிறிஸ்துவர்களையும் இதர முஸ்லீமல்லாதவர்களையும் முஸ்லீம்கள் வெற்றிகொள்ள பிரார்த்தனை செய்வதை நிறுத்தவில்லை.

அந்த 34 நிமிட பேச்சின் இரண்டு பாகங்கள் இதோ.

இஸ்லாமிய சகோதரத்துவம் (Muslim Brotherhood) அமைப்புக்குரிய முஸ்லீம் அசோசியேஷன் ஆஃப் கனடா அமைப்பினால் நடத்தப்படும் டோரண்டோ மசூதியில் இந்த பிரார்த்தனையை அந்த சமயத்திலும் நிறுத்தாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இந்த பயங்கரவாத செயல்களை கண்டிக்காமல் இருந்தது கூட விட்டுவிடலாம். ஆனால், எந்த வித அடக்கமோ பணிவோ இல்லாமல், “மற்ற எல்லா மதங்களையும் அடக்கி இஸ்லாம் எல்லா நிலங்களின் மீதும் நிலைப்பட வேண்டும் என்று தான் விரும்புவதையும், அதனை காபிர்கள் வெறுப்பதையும்” இமாம் அப்துல் ஹமீத் பேசினார்.

“அல்லாவை தவிர வேறொருத்தரும் வணங்கத்தக்கவர்கள் அல்ல என்று நான் சாட்சி கூறுகிறேன். அவர் ஒருவரே. அவருக்கு எந்த இணையும் இல்லை. நான் முகம்மது அவரது வேலையாள் என்றும், அல்லாவின் தூதுவர் என்றும் சாட்சி கூறுகிறேன். அவரிடம் அல்லா “உண்மையின் மதத்தை” அனுப்பினார். இந்த உண்மையும், அதன் வழிமுறையும்(இஸ்லாம்) மற்ற மதங்களை அழித்து அதன் மீது நிலைப்படவேண்டும் என்று அல்லா விரும்பினார். இருப்பினும் காபிர்கள்(யூதர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள், நாத்திகர்கள்) இதனை வெறுக்கின்றனர்”

பிறகு சடங்கு முறையாக, காபிர்களை முஸ்லீம்கள் வெல்ல அல்லாவிடம் பிரார்த்தனை செய்தார்

இங்கே அவர் தன் பிரார்த்தனையில் உபயோகப்படுத்திய அரபி மொழியும், ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கிறது. இது ஜிகாதிகள் (முஜாஹிதீன்கள்) காபிர்களை வெற்றிகொள்ள செய்யும் பிரார்த்தனை.

Sermon-Arabic-English

http://tarekfatah.com/mosque-imams-around-the-world-continue-to-pray-to-allah-to-grant-victory-to-muslims-over-non-muslims/

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை – 13நித்ய சைதன்யா கவிதை
author

Similar Posts

41 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    இது ஒரு ஆபத்தான பிரச்சாரமாகும். மசூதிகளில் தொழுகையின்போது இதுபோன்று மற்ற மதத்தினரை அழிக்கவேண்டும் என்று ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்வது சமுதாய நல்லிணக்கத்துக்கு சாவு மணி அடிப்பதாகும். அன்பை போதிக்க வேண்டிய போதகர்கள் அதற்கு மாறாக நஞ்சை ஊட்டுகின்றனர். மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுகின்றனர். அடுத்தவனை உன்னைப்போல் நேசி என்பதற்குப் பதிலாக அடுத்தவன் இஸ்லாம் மதத்தவன் இல்லை எனில் அவன் உனக்கு விரோதி என்று போதிக்கப்படுகிறது.
    இதுபோன்ற குறுகிய புத்தி கொண்டவர்களுக்கு இந்த உலக அமைப்பு பற்றி ஏதும் தெரியவில்லை. உலகம் ஒரு அராபிய நாடு அல்ல. அதைத் தாண்டி பல நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் கொண்டது என்பதை இன்று சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். அவர்கள் அல்லாவை நம்புபவர்களாக இருந்தால் இந்த உலக மக்களையும் படைத்தவர் அல்லாதான் என்பதை இவர்கள் உணரவேண்டும். உலகம் முழுதும் இஸ்லாம் மதம்தான் உன்னத மதமாக இருக்கவேண்டுமென்றால் அல்லா ஏன் மற்ற தேசங்களில் வேறு மக்களைப் படைத்தது வருகிறார்? அவர் நினைத்தால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாமே? அவரால் முடியாத காரியமா இது? ஆனால் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவரின் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறதே? இவற்றை ஏன் அல்லா செய்துவருகிறார்? இதன் நோக்கம் என்ன? ஒரு பக்கத்தில் இஸ்லாம் அல்லாதாரின் மக்கள் தொகையை அல்லா பெருக வைக்கிறார். இன்னொரு பக்கம் அவர்கள் இஸ்லாமை நம்பாதவர்கள், அவர்களை அழித்துவிடுங்கள் என்று கூறுவதுபோன்றல்லவா உள்ளது? இது அல்லாவின் திருவிளையாடலா?
    இப்படி உலகை இஸ்லாம் மதத்தின்கீழ் கொண்டுவரவேண்டும் என்று தீவிரவாதத்திலும், வன்முறையிலும், பிரச்சாரத்திலும், குண்டு வெடிப்பிலும், தற்கொலைத் தாக்குதலிலும் ஈடுபட்டு வரும் ” உண்மையான முஸ்லீம்கள் ” இதில் வெற்றி பெற்றுவிடமுடியும் என்று உண்மையில் நம்புகிறார்களா? இது நடக்கக்கூடிய காரியமா? ஒரு காலத்தில் உலகின் முக்கால் பகுதி நிலப்பரப்பையும் நாடுகளையும் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால்கூட அத்தனை நாடுகளையும் கிறிஸ்துவ நாடுகளாக கிறிஸ்துவ மக்களாக மாற்ற முடியவில்லை. இது வரலாறு! இந்த உண்மையை அறியாத தீவிரவாத கும்பல்கள் இங்கொன்றும் அங்கொன்றும் குண்டு வீசி தாக்கிவிட்டால் மற்ற மதத்தினர் பயந்துகொண்டு இஸ்லாமை ஏற்றுகொள்வார்கள், அதன் மூலம் உலகமே இஸ்லாம் ஆகிவிடும் என்று உண்மையில் நம்புகிறார்களா? அறிவுடையார் செய்யும் செயலா இது?
    ” அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
    என்னுடைய ரெனும் இலர். ” …….இஸ்லாம் மதம் வருமுன்னே வள்ளுவர் என்னும் ஒரு தமிழ்ப் புலவர் கூறுச் சென்றுள்ளார்!…….
    அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    BS says:

    தாரேக் ஃபடாஹ் எங்கும் உலகமெங்கும் மசூதிகளில் காஃபிர்களை வென்றெடுக்க அல்லாவை வேண்டுகிறார்கள் என்று சொல்லவே இல்லை. அவர் குறிப்பிடுவதும் எடுத்துக்காட்டும் சான்றும் கனடாவிலுள்ள மசூதிகளைத்தான். “உலகமெங்கும்” என்ற தலைப்பில் உள்ள சொல், மொழிபெயர்ப்பாளரால் திணிக்கப்பட்டிருக்கிறது. இசுலாமோஃபோபியா மட்டுமன்று; இசுலாமியரோஃபோபியா ? வேறென்ன சொல்ல? அய்யோ பாவம் இசுலாமியர்கள். கனடா மசூதியில் நடந்தால், அதற்கு பொறுப்பை சென்னை மசூதியும் ஏற்கவேண்டுமென்கிறார்.

    பிரிட்டனில் மசூதிகளில் இப்படிப்பட்ட செய்திகள் பரப்புரை செய்யப்பட்டால், உடனே அரசு நடவடிக்கை எடுக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பத்தாண்டுகளுக்கு முன் ஒரு மசூதியில் ஓர் இமாம் வன்முறை நடவடிக்கை ஆதரவாக பரப்பரை செய்ததது தெரியவந்தது. அரசு அவரின் மேல் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பின் படி சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும்; தண்டனைக்காலம் முடிந்தபின் தான் பிறந்த மண்ணான எகிப்துக்கு செல்லவேண்டும் அதன்படி அந்த இமாம் எகிப்துக்கு அனுப்பப்பட்டார்.

    ஆனால், இங்கே கனடாவில் வன்முறை செய்தி சொல்லப்பட்டால், அதை ஃபடாஹ் ஆதாரத்துடன் நீருபிக்கிறாரென்றால்,
    கனடா அரசுவுக்கு ஏன் சொல்லவில்லை? கனடா, பிரிட்டனை விட தனிமனித உரிமை, மதச்சார்பின்மை – இவைகளுக்கு பேர் பெற்றது. ஆனால் ஃபடாஹ் ஏன் அமைதி காத்தார்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

  3. Avatar
    paandiyan says:

    //இல்லை. அவர் குறிப்பிடுவதும் எடுத்துக்காட்டும் சான்றும் கனடாவிலுள்ள மசூதிகளைத்தான். “உலகமெங்கும்” என்ற தலைப்பில் உள்ள சொல், மொழிபெயர்ப்பாளரால் திணிக்கப்பட்டிருக்கிறது. //

    இந்தியரின் பிணத்திற்கு காபீர் என்று எழுதி இந்தியாவில் ஒப்படைத்து எல்லாம் உங்களுக்கு ஜாபகம் இருக்கோ !!

  4. Avatar
    ஷாலி says:

    // இந்தியரின் பிணத்திற்கு காபீர் என்று எழுதி இந்தியாவில் ஒப்படைத்து எல்லாம்…//

    காபிர் என்றால் இழிவான ஏசும் சொல் என்று சிலர் நினைக்கிறார்கள்.இதில் உண்மையில்லை.கபீர் என்றால் கிறுக்கன்,பைத்தியக்காரன்,முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அது ஏசுகின்ற சொல்லாக கருத முடியும்.

    காபிர் என்ற அரபுப் பதத்தின் பொருள்,”மறுப்போர்’அல்லது “நிராகரிப்பவர்” அதாவது ஒரு கடவுள் கொள்கையை மறுப்பவர்,என்றே பொருள்.இஸ்லாம் கூறும் ஓர் இறைக்கொள்கையை மறுப்பதனால், அவர்களை “மறுப்பவர்-காபிர்’ என்று அழைப்பது இழிவு படுத்தவோ,அல்லது இரண்டாம் தரப்பினராக கருதுவதாகவோ நிச்சயமாக இல்லை.

    இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால், இஸ்லாத்தை மக்களிடம் போதித்த முகம்மது நபிகளின் தாயார் ஆமினா, தந்தை அப்துல்லாஹ்,மற்றும் சிறிய தகப்பனார் அபூ தாலிப் ஆகிய அனைவருமே காபிர் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.நபிகள் நாயகத்தின் பெற்றோரை காபிர் என்று கூறி இழிவு படுத்துவதாக சொல்லமுடியுமா?

    எவராக இருப்பினும் ஓர் இறைக் கொள்கைக்கு மாறுபடுபவர்களை இஸ்லாமிய மறுப்பாளர் அல்லது நிராகரிப்பவர் என்ற பொருளில் காபிர் என்று அரபிப் பதத்தில் சொல்லப்படுகிறது.

    இஸ்லாமிய அரபுப் பதத்தில் குறை காணும் நண்பர் திரு.பாண்டியன்.தனது மதம் தன்னை எவ்வாறு அழைக்கிறது என்பதை அறிவாராக! பிராமணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்திரர்கள்தான்.சூத்திரன் என்பவன் யார்? மனு கூறுகிறார்.

    யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்,யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்படுபவன்,பிராமணரிடம் பக்தியாக ஊழியம் செய்பவன்.,விபச்சாரி மகன்,விலைக்கு வாங்கப்பட்டவன்,ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன்.(-மனு.அத்.5. சுலோ.415.)

    இந்த நாலு வர்ணம் தவிர்த்து,பிரமனால் படைக்கப்படாத அவர்ணமாக அய்ந்தாவது வருணமாக பஞ்சமர்கள் என்ற பிரிவும் உண்டு நம்ம மகாத்மா காந்தி பெரிய மனசு பண்ணி இவர்களை கடவுளின் புதல்வர்கள் “ஹரிஜன்” என்று சிறப்பு பெயரிட்டு அழைத்ததும் அறிந்ததே.இவர்களுக்குள் சண்டாளர் என்னும் உட்பிரிவும் உண்டு.

    தன்னை கீழ்ச்சாதி,சூத்திரன்,பஞ்சமன்,சண்டாளன் என்று எப்படி அழைத்தாலும்,அடித்தாலும் வலி தாங்கும் திரு.பாண்டியன், “மனிதர்களே! நீங்கள் அனைவரும் ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் பிறந்தவர்கள்,பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம்,அனைவரும் சகோதரர்களே..”என்று கொள்கை பிரகடனப்படுத்தும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தலாமா?

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      ஷாலி, மனுதர்மமெல்லாம் எக்காலத்துக்கும் எல்லாருக்கும் எப்போதும் பொருந்துவதல்ல. அது ஒரு காலகட்டத்தின்பாற்பட்டது. அதை நிராகரிக்க எல்லா இந்துவுக்கும் உரிமை உண்டு. ஆனால் ஒரு குரானை நிராகரிக்க ஒரு இஸ்லாமியனுக்கு உரிமை உண்டா என்று மட்டும் சொல்லுங்கள். மனு எந்த இந்துவையும் எப்போதும் கட்டுப்படுத்தாது. இதெல்லாம் எப்போதோ மீள மீள சொல்லியாகிவிட்டது. ஆனாலும் மனுவையே பிடித்துக்கொண்டு தொங்குவதை விடுங்கள், கேட்டுக்கேட்டு புளித்துவிட்டது.

  5. Avatar
    பிஜே says:

    வெல்டன் ஷாலி, உங்களை மாதிரி ஆட்கள்தான் வேண்டும். இந்த கட்டுரைக்கு ஒரு பதிலும் எழுதாமல், உண்மையிலேயே மசூதிகளில் வெள்ளிக்கிழமையில் அப்படித்தான் பேசுகிறார்களா என்பதை பற்றி ஒன்றுமே சொல்லாமல், சரியாக பஞ்சமன் சூத்திரன் என்று கிளப்பிவிட்டு அருமையாக தக்கியா செய்யும் உங்களை பாராட்ட வார்த்தையில்லை. வெல்டன்

    1. Avatar
      paandiyan says:

      புதுடில்லி: நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என கடந்த வாரத்தில் உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து கடந்த ஒரு வாரத்தில் 6 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பா, அல்குவைதா பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும், மேலும் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ பலர் ஆயத்தமாகி வருகின்றனர் . எனவே நாட்டில் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து மும்பை, உ பி , ஜம்மு காஷ்மீர் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. இந்த ரோந்தில் கடந்த ஒரு வார காலத்தில் 5 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் கைது செய்து வன் செயல்கள் தடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றாலும் இந்த உளவாளிகள் நாட்டுக்குள் வந்தது எப்படி ? இவர்கள் ஆதார்கார்டு, வாக்காளர் அட்டை பெற்றது எப்படி என்பது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது .

      குறிப்பாக நேற்று கைது செய்யப்பட்ட ஒரு உளவாளி அஷ்பக் அன்சாரி ( 24 ) என்பவர் மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில் செயலாளர் பொறுப்பு வகித்து வந்துள்ளார் . டில்லியில் கைதான கைபத்துல்லாகான் பாகிஸ்தானின் ஐ. எஸ். ஐ ., உளவாளியாவார்.

      5 பேரும் டில்லி, மேற்குவங்கம், டில்லி பகுதிகளில் கைதாகியுள்ளனர்

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    எதற்காக இப்படி அல் தக்கியா

    \\ காபிர் என்ற அரபுப் பதத்தின் பொருள்,”மறுப்போர்’அல்லது “நிராகரிப்பவர்” அதாவது ஒரு கடவுள் கொள்கையை மறுப்பவர்,என்றே பொருள்.இஸ்லாம் கூறும் ஓர் இறைக்கொள்கையை மறுப்பதனால், அவர்களை “மறுப்பவர்-காபிர்’ என்று அழைப்பது இழிவு படுத்தவோ,அல்லது இரண்டாம் தரப்பினராக கருதுவதாகவோ நிச்சயமாக இல்லை. \\

    விக்கி சொல்வது என்ன?

    https://en.wikipedia.org/wiki/Kafir

    Kafir (Arabic: كافر‎ kāfir; plural كفّار kuffār; feminine كافرة kāfirah) is an Arabic term (from the root K-F-R “to cover”) used in an Islamic doctrinal sense, usually translated as “unbeliever,” “disbeliever,” or “infidel”. It is used as a derogatory term.[1][2][3] The term [4] alludes to a person who rejects or disbelieves in God and the religious truth revealed through the mission of the Islamic Prophet Muhammad, and thus demonstrates ingratitude towards God;[5] denies, refuses to accept the dominion and authority of God;[6] or otherwise does not heed the beliefs and prescriptions held by the religion of Islam.

    அப்படியே ஒரு கபள சோற்றில் முழுப்பூசணிக்காய மறைக்க விழையலாமா?

    காஃபிர் என்பது டிராகேடரி சொல் என்று விக்கிபீடியா சொல்கிறது.

    யார் காஃபிர் என்பது இஸ்லாத்தில் ரொம்ப பேஜாரான சமாசாரம்.

    தீரா விட வடுக டம்ளர்கள் யார் ஒரீஜ்னல் டம்ளர்கள் என்று சர்டிஃபிகேட் கொடுப்பது போன்ற சமாசாரம்.

    ஜெனாப் ஆமீர் கான் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்து மதக்கருத்தாங்களை இழிவு செய்து எடுத்த படம் மூலமாக ஹிந்துக்களிடமிருந்தே 300 கோடி ரூபாயை லபேஸ் செய்து………. அது போதாதுன்னு ஹிந்துஸ்தானத்துல சகிப்பின்மை என்று குசும்புத் தனமா பேசியதும் எல்லைக்கோட்டுக்கு அப்பால இருக்கும் பாக்கி ஸ்தானத்துல (அதாவது மீதி ஸ்தானம் ……… பாகிஸ்தான் பிளந்த பின் பாக்கியாக ஆன ஸ்தானம்) பாய் பாய் இதர் ஆவோ என்று முதலில் சொன்னார்கள்.

    பின்னால அவுரு ஷியா முஸ்லீம் என்று தெரிஞ்சதாம். ஒட்னே ட்விட்டர் ஃபேஸ் புக் என்று ஒன்று விடாம……………. இந்த ஆளு ஷியாவா………… அப்படியானால் இந்த காஃபிருக்கு இங்க இடம் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். சொன்னதில் ரொம்ப பெரிய ஜாம்பவான் பாக்கி ஸ்தானத்தின் பெரிய திருடர். அதாங்க ஊர் ஊரா பயங்கரவாதிகள அனுப்பி அணு உலை பற்றிய விபரங்களைத் திருடிய ஜகப்ரசித்தி வாய்ந்த கொள்ளைக்காரர் ஜெனாப் அப்துல் காதிர் கான் சாஹேப்.

    திருநெல்வேலிக்கே அல்வா என்று அப்துல் காதிர் கான் சாஹேப் அவர்கள் ஆமீர் கான் அவர்களையே காஃபிர் என்று சொல்லி நீங்க இங்கல்லாம் வர வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்க இங்க ஜோரா கதையளந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சமாவா கதையளக்கிறீர்கள்.

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    டாக்டர் ஜான்சன் அவர்களுக்கு பெத்த பெருசா குரான்-ஏ-கரீமை அந்த நூலை முறையாகக் கற்றவர்களிடமிருந்து அறிய வேண்டும் என்று ப்ரவசனமெல்லாம் செய்தீர்கள்.

    இங்க வழக்கம் போல காபி ஆத்தி கலக்குகிறீர்கள் போலிருக்கிறது. பொலிக. பொலிக.

    \\ யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்,யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்படுபவன்,பிராமணரிடம் பக்தியாக ஊழியம் செய்பவன்.,விபச்சாரி மகன்,விலைக்கு வாங்கப்பட்டவன்,ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன்.(-மனு.அத்.5. சுலோ.415.) \\

    கீழே மனுஸ்ம்ருதியின் பல எடிஷன்கள் பகிர்ந்திருக்கிறேன்.

    ………………… சம்ஸ்க்ருத மூலம்

    …………… ஆங்க்ல மொழியாக்கம்.

    George Bühler

    http://sanskritdocuments.org/all_pdf/manusmriti.pdf George Bühler

    மேற்கண்ட எல்லாவற்றிலுமே மனு தர்ம சாஸ்த்ரத்தில் ஐந்தாவது அத்யாயத்தில் கடைசீ ச்லோகமாகக் காணப்படுவது 169வது ச்லோகம் மட்டிலுமே. தாங்கள் இங்கு பகிர்ந்த ச்லோக சங்க்யை 415. சகல கலாவல்லவரான ஷாலி அவர்கள் இந்த ச்லோகம் எந்த எடிஷனில் உள்ளது; அதனுடைய மூல ச்லோகம் என்ன என்று ………….. அறிவுபூர்வமாக கருத்துப் பகிர விழையலாமே.

    வழக்கம் போல காபி பேஸ்ட் செய்ய விழையாதீர்கள். மூல ச்லோகம் கிட்டினால் மட்டிலும் ………….. உங்கள் சோர்ஸ் என்ன? எடிஷன் என்ன? அது பகரும் மூல ச்லோகம் என்ன என்று பகிருங்கள்.

    \\ இஸ்லாமிய அரபுப் பதத்தில் குறை காணும் நண்பர் திரு.பாண்டியன்.தனது மதம் தன்னை எவ்வாறு அழைக்கிறது என்பதை அறிவாராக! பிராமணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்திரர்கள்தான்.சூத்திரன் என்பவன் யார்? மனு கூறுகிறார். \\

    மனுதர்ம சாஸ்தரத்தின் எந்த அத்யாயத்தின் எந்த ச்லோகம் இப்படி சொல்கிறது என்று சகலகலா வல்ல ஷாலியார் இந்த தளத்து வாசகர்களை உய்விப்பாராக.

    ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    1. Avatar
      ஷாலி says:

      //..மனு.அத்.5. சுலோ.415.) \\

      நண்பர் கிருஷ்ணகுமார் சுலோகங்களைத் தேடிக் களைத்து போனதற்கு காரணம் டைப்பிங் செய்கையில் நேர்ந்த எனது தவறுதான்.நண்பர் பெரிய மனது பண்ணி பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.மனுதர்மம் அத்தியாயம் 8 என்பதுதான் சரியானது.

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    archive.org/details/mnavadharmasstra00joll

    hinduwebsite.com/sacredscripts/hinduism/dharma/manusmriti_1.asp

    sacred-texts.com/hin/manu/manu05.htm

    A last try. This time I have dropped http and www. In the very first one, the samskruta mulam is available.

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி,

    \\ இஸ்லாமிய அரபுப் பதத்தில் குறை காணும் நண்பர் திரு.பாண்டியன்.தனது மதம் தன்னை எவ்வாறு அழைக்கிறது என்பதை அறிவாராக! பிராமணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்திரர்கள்தான்.சூத்திரன் என்பவன் யார்? மனு கூறுகிறார். \\

    ப்ராம்மணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்ரர்கள் தான் என்று சொல்லும் மனுதர்ம சாஸ்த்ரத்தின் மூலச்லோகம் எது. அத்யாயம் நம்பர். ச்லோக நம்பர் பகிரவும்.

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    நீங்கள் விளக்க வேண்டியது இரண்டு விஷயங்கள். அதாவது நீங்களே சொல்லிய விஷயங்கள்.

    நெம்பர் 1………….

    \\ \\ இஸ்லாமிய அரபுப் பதத்தில் குறை காணும் நண்பர் திரு.பாண்டியன்.தனது மதம் தன்னை எவ்வாறு அழைக்கிறது என்பதை அறிவாராக! பிராமணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்திரர்கள்தான்.சூத்திரன் என்பவன் யார்? மனு கூறுகிறார். \\

    இது எந்த அத்யாயத்தில் எந்த ச்லோகத்தில் சொல்லப்பட்டது?

    இதுவும் நீங்கள் செய்த டைப்பிங்க் மிஷ்டேக்கா? அல்லது சந்தடி சாக்கில் சொல்லிய விஷயமா?

    நெம்பர் 2………..

    நீங்கள் சொல்லியபடி எட்டாம் அத்யாயத்தில் 415ம் ச்லோகம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் நீங்கள் தமிழில் பகர்ந்த கருத்துக்கள் அதில் காணப்படவில்லை.

    …………….

    ஆப்ரஹாமிய மதங்கள் போன்று வைதிக தர்மத்திலோ அல்லது ஹிந்து மதத்தின் வேறு எந்த ஒரு சமயத்திலுமோ வாழ்வியல் கூறுகளுக்கு கால காலத்துக்கும் ஒரே நூல் என்று இதுவரை இருந்ததே இல்லை.

    பொன் முத்துக்குமாரும் அதை சொல்லியிருக்கிறார். வைதிக காலக்கணக்கில் லக்ஷக் கணக்கான வருஷங்களுக்கு முன் இருந்ததாக அறியப்படும் த்ரேதா யுகம் அல்லது ஸத்யயுகத்தில் மட்டிலும் மனுதர்ம சாஸ்த்ரம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று பராசர ஸ்ம்ருதி சொல்லுகிறது.

    க்ருதே து மானவா தர்மா: த்ரேதாயாம் கௌதமா ஸ்ம்ருதா:
    த்வாபரே சாங்கலிகிதா: கலௌ பாராசரா ஸ்ம்ருதா: (1-24)

    வாழ்வியல் கூறுகளை எல்லா இடத்துக்கும் எல்லாக் காலத்துக்கும் வைதிக சமயத்திலும் கூட எந்த ஸ்ம்ருதியும் சொல்லுவதில்லை என்று அறிவீர்.

    லக்ஷக்கணக்கான வருஷங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்து காலாவதியாகிய ஒரு நூலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு கருத்து சொல்லி விட்டால் ……………… புழக்கத்தில் இருக்கும் குரான்-ஏ-கரீம் போதித்திருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை அல் தக்கியாவின் மூலம் மறைத்து விட முடியாது.

  11. Avatar
    பிஜே says:

    அதே போல, வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறுதான் ஜூமா மசூதிகளில் பிரார்த்தனை செய்கிறார்களா என்பதையும் சொல்லலாமே?

    1. Avatar
      paandiyan says:

      இந்த கட்டுரைக்கு நீங்கள் வாதம் புரியலாம , பிநூடதிர்க்கு பதில் சொல்லும் நீங்கள் கட்டுரை பற்றி ஒன்ன்றும் சொல்ல காணோம் ?

  12. Avatar
    Rama says:

    Shri Krishnakumar
    Don’t hold your breath expecting a CLEAR response from Mr Shalli. Taqqya Mr Shalli is doing what is natural to him and it is always the case of hit and run and/or chuck some mud and scoot sort of tactics.

  13. Avatar
    BS says:

    திரு கிருட்டிணக்குமார்!

    பிராமணத்துவம் என்பது இந்துமதத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கான்சபட். ஒரு கருத்தாக்கம் மட்டுமே. தனிநபர்கள் தங்கள்தங்கள் வாழ்க்கையில் அஃதை விடாமல் கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே பிராமணர். அதன்படி எவருமே பிராமணர் ஆக முடியும்; ஆகலாம்.

    வைதீகமதத்தை அறிந்தோர் அனைவரும் மறுக்க முடியா கருத்தே இது. என் சொந்த சரக்கன்று.

    நிலைமை இப்படி இருக்க, ஒரு குறிப்பிட்ட கூட்டம் தங்களை பிராமணர்கள் என்று காலங்காலமாக அழைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையே நம்பவைத்து, மன்னரகளையும் பொதுமக்களையும் தங்களை சமூகத்தில் உயர்நிலையில் வைத்து மரியாதையும் அளிப்புக்களையும் (கோதானம், பிரமதேயங்கள், தாமே அர்ச்சகர் போன்றவை) வாழ்ந்து வருகிறது. அதோடு விடாமல் மட சேனா போன்ற கோயில் விழாவை நடாத்தி பிற மக்களை நாய்கள் போல தாம் சாப்பிட்ட எச்சில் மேல் உருண்டால் சுப்பிரமணிய சுவாமி அருள்வார் என நம்பவைப்பது எந்த மனுவிலும் சொல்லப்படவில்லை. கண்கூடாக நடந்துகொண்டுவருகிறது. அஃதை எடுத்துக்காட்டும்போது நைசாக நகண்டு விடுகிறீர்கள். அப்படிப்பட்ட பிராமணர்களைப்பற்றிப்பேசும்போது அவர்களை – ஜாதிக்காழ்ப்புணர்ச்சி – என்று கைகாட்டி தடுக்க முயல்கிறீர்கள். இப்போது மனு எந்த சுலோகத்தில் சொல்கிறார் என கதையை நகட்டி ஏமாற்றப்பார்க்கிறீர்கள்.

    இன்றுவரை மாற்றமே இல்லை. வைதீக இந்துமதத்தில் பிராமணர் என்றழைத்த்க்கொள்வோரில் இராஜ்ஜியம்தான் நடக்கிறது. அர்ச்சகராக் நாங்களே இருக்கவேண்டும் என்று நீதிமன்ற வழக்கு. சிதம்பரம் கோயில் மன்னர்களாலும் மக்களின் உடல் உழைப்பாலும் கட்டப்பட்டது. இன்று நீதிமனற வழக்கை வெற்றிகரமாக நடாத்தி, தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டீர்கள்.

    என்ன சொன்னாலும், இந்துமதத்தின் சீரழிவுக்கு அல்லது இம்மதத்திலிருந்து அம்பேத்கர் போன்றோர் வெளியேறக்காரணம் இப்பிராமணர்கள் என்று தமக்கத்தாமே பட்டம் சூட்டிக்கொண்டவர்களும் அவர்களைக்காப்பாற்ற மூச்சுவிட்டுக்கொண்டே இந்துமதத்தின் எல்லாரும் சமம் என்று இரட்டை நாக்குடன் பேசும் உங்களைப்போன்றோருமே காரணம்.

    மனுவில் இல்லை. மனதில் இருக்கிறது நஞ்சு.

    1. Avatar
      paandiyan says:

      இந்த கட்டுரைக்கு நீங்கள் வாதம் புரியலாம , பிநூடதிர்க்கு பதில் சொல்லும் நீங்கள் கட்டுரை பற்றி ஒன்ன்றும் சொல்ல காணோம் ?

  14. Avatar
    Dr.G.Johnson says:

    B S அவர்களே, நண்பர் கிருஷ்ணகுமாருக்கு நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் படித்தபோது என் நினைவுக்கு வந்த திருக்குறளையும் இங்கே பதிவு செய்யலாம் என்று தோன்றியது. அது குரள் எண் 30:
    ” அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தன்மை பூண்டொழுக லான். ”
    ” அந்தணர் என்னுஞ்சொல் அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்னும் பொருளது.அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொண்டு அன்பு செய்தல். இது துரவியர்க்கே இயலும். அதனால், அருளுடைமை தமக்கு வாழ்வளித்துக் காக்கும் தலைநாகரிக மக்களையுந் தாழ்வாகக் கருதும் தந்நல ஆணவப் பிராமணர் அந்தணராகார் என்பது, இதனால் அறிவிக்கப்பட்டது. பூணுதல் நோன்பாக மேற்கோள்ளுதல், ” என்போர் ” செயப்பாட்டுவினை செய்வினையாக நின்றது. ” மற்று ” அசைநிலை. உம்மை முற்றும்மை.”
    ​ – மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ ஜான்சன்

    அறிவு பூர்வமான வாதங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால் தெளிவு என்பது நிச்சயம் கிட்டும்.

    தாரிக் ஃபதஹ் சாஹேப் காஃபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க அல்லாவை வேண்டுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட வேண்டுதலை அவர்கள் சடங்காகச் செய்கிறார் என்னுகிறார்.

    காஃபிர் என்பது இஸ்லாத்தில் இழிவினைக் கற்பிக்கும் சொல். விக்கி பீடியா அப்படியே சொல்லுகிறது. விக்கி சொல்வதை பொதுவாக நான் அப்படியே ஏற்பதில்லை. ஆனால் அதை அப்படியே பூசி மொழுக முனைகிறார் அன்பர் ஷாலி. நிதர்சனத்தில் இந்தச் சொல்ல் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை உதாஹரிக்கத் தான் நான் ஜெனாப் ஆமீர் கான் அவர்களை மேற்கு பஞ்சாப் மற்றும் சிந்த் ப்ராந்தியத்தவர் எப்படி அணுகுகிறார்கள் என்று பகிர்ந்திருந்தேன்.

    அல்லாவை நம்பாதவர்கள் மட்டிலும் காஃபிர் என்ற சொல்லால் இழிவு செய்யப்படுவதில்லை. மாறாக வஹாபி ஸுன்னி இஸ்லாத்திலிருந்து வேறான ஷியா இஸ்லாத்தை ஒழுகும் ஜெனாப் ஆமீர் கான் போன்றோர்களைக் கூட ………… அவர்கள் அல்லாவை நம்புகிறார்கள் எனும் போதிலும் கூட…………. உலகில் ஷியா முஸல்மாணியர் கோடானு கோடி இருக்கிறார்கள் எனும் போதிலும் கூட……………..பற்பல தேசங்களில் ஷியா இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸல்மாணியர் ஆட்சியுரிமையுடன் தேசங்களையே ஆளுகிறார்கள் எனும் போதிலும் கூட………… ஒவ்வொரு வருஷமும் நடக்கும் ஹஜ் யாத்ரையில் இவர்களும் பங்கு பெறுகிறார்கள் எனும் போதும் கூட……….. இவர்களைக் காஃபிர் என்று இழித்துப்பழிக்க வஹாபி ஸுன்னி இஸ்லாத்துக்கு தயக்கம் இல்லை.

    இந்த விஷயம் விவாதிக்கப்படக்கூடாது என்று தாங்கள் கருதுவதாக எனக்குப் படுகிறது ஐயன்மீர். உண்மை அப்படியானால் அதைத் தாங்கள் வெளிப்படையாகப் பகிருவது சரியாக இருக்குமல்லவா…………. விவாதத்தை திசைதிருப்பாத வண்ணம்.

    சரி………….. அப்படியே விவாதத்தை திசை திருப்பவே விழைந்தாலும் கூட………… அருள் கூர்ந்து ஒரு திசையிலாவது அது பயணிக்க விழைவது (அடிப்படையில் மிகவும் தவறு என்றாலும் கூட) லவலேசமாவது ந்யாயமாக இருக்கும்……………

    தீப்பந்தத்தால் கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது கருணாநிதி முன்வைக்கும் கதை தான். சிலப்பதிகாரம் முன்வைக்கும் கதையல்ல என்பது தங்களுக்குத் தெரியும். கருணாநிதி கதையை சிலப்பதிகாரமாக முன்வைப்பது நேர்மையற்ற செயல் என்பதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்காது என நினைக்கிறேன்.

    மனு தர்ம சாஸ்த்ரத்தின் மூல நூல்……….. ஆங்க்ல மொழியாக்கம் இரண்டும் பல சுட்டிகளால் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது…….. அன்பர் ஷாலி அவர்கள் வெட்டி ஒட்டிய தமிழாக்கம் பகிரப்பட்டுள்ளது. இவை எல்லாம் பொதுப்பார்வைக்கே. அறிவு பூர்வமான விஷயத் தெளிவில் நாட்டமுள்ளவர்கள் மூலத்தையும் ஆங்க்ல மொழியாக்கத்தையும் தமிழில் பகிரப்பட்ட கருத்துக்களையும் வாசித்து நிச்சயம் வேறுபாட்டை உணரலாம்.

    \\\ பிராமணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்திரர்கள்தான். \\\

    ஒன்று இப்படி எங்கு மனுதர்ம சாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும். அல்லது அப்படி அதில் சொல்லப்படவில்லையென்றால் அப்படிக் கருத்துப் பகிர்ந்தது பிழை என்று சொல்ல வேண்டும்.

    எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி என்ற படிக்கு ………………. வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து முனைந்து விலக விழைவதையும் ……………….. விலகிய விஷயங்களில் முழுத் தெளிவில்லாத போதும் கூட ……………… தெளிவுள்ளது போன்று ஒரு தோற்றத்தை அளிக்க விழைவதும்………….. அதை வினவுகையில் ………….. அதிலிருந்து நழுவி ………….. வேறு ஒரு விஷயத்திற்குத் தாவுவதும் நேர்மையா?

    வ்யாசத்தின் கருப்பொருளில் இருந்து விலகி விவாதத்தை திசை திருப்ப முனைந்த இழிவில் நான் பங்கு பெற்றதற்கு என் க்ஷமாயாசனங்கள்.

    பைபிளின் பழைய ஏற்பாட்டை ஆதாரமாக வைத்து க்றைஸ்தவத்தை அலகிடவோ அல்லது குறைசொல்லவோ முனைந்தால் உங்களுக்கு ஏற்புடையாதக இருக்குமா? அல்லது செர்ரி பிக்கிங்க் என்ற படிக்கு பைபிளிலிருந்து அங்கொன்று இங்கொன்றாக வாசகங்களை உருவி ………….. அதை பைபிளின் கருத்தாக்கம் என்று நிறுவ முனைதல் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா? இல்லை என்று தாங்கள் தெளிவாக ஒருமுறை கருத்துப் பதிந்திருந்ததாக என் நினைவு. அது உங்களுக்கு ஏற்புடையதாகாது என்றால் அதே அலகீட்டை மாற்று மத விஷயங்கள் சம்பந்தமாகவும் ப்ரயோகிப்பது சரியாக இருக்கும் அல்லவா?

    க்றைஸ்தவம் மற்றும் இஸ்லாம் வேண்டுமானால் …………….. அந்தந்த மதத்தை பேணாதவர்கள் மீளா நரகத்தில் வீழ்ந்து அல்லலுறுவார்கள் என்று போதிக்கலாம். வைதிகம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார்வழிபாடுகள் என பல சமயங்களைத் தன்வசம் கொண்டுள்ள ஹிந்துமதம் இப்படியான இழிவான கருத்தினை போதிப்பதில்லை. மாறாக யார் எப்படி எந்த வடிவத்திலும் அல்லது வடிவில்லாமலும் இறைவனைத் தொழுதாலும் ……………. அவன் இறைவன் தாளடியை அடைவர் என்பதே ……………… இந்த தேசத்தில் பிறந்து தழைத்த அனைத்து சமயங்களின் பொதுவான கருத்தாக்கமும்.

    ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என்பது தவறல்லவா? அது இஸ்லாமாக இருக்கட்டும் அல்லது ஹிந்து மதமாக இருக்கட்டும். முழுமையுடன் விஷயத்தை அணுக விழைதல் நன்று. நேர்மையுடன் விஷயத்தை அணுக விழைதல் நன்று.

    வைதிக சமயம் அல்லது சனாதன தர்மம் என்பது ஹிந்துமதத்தின் ஒரு கூறு மட்டிலும் தான்………… அதுவே ஹிந்து மதம் என்பது பிழையான கூறு என்பதனையும் இங்கு அழுத்தம் திருத்தமாகப் பதிய விழைகிறேன்.

    இந்த வ்யாசத்தின் கருப்பொருள் சார்ந்து விவாதம் தொடர வேண்டும் என்பதில் தங்களுக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்பதை அறிய ஆவல்.

  16. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ மனுவில் இல்லை. மனதில் இருக்கிறது நஞ்சு. \\

    மிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். மனு தர்ம சாஸ்த்ரத்தில் சொல்லப்படாத விஷயங்களை அதில் சொல்லியதாக பரப்புரை செய்வது தவறானது தான்.

    மட சேனா சம்பந்தமாக ஏற்கனவே திண்ணை தளத்தில் காவ்யா ( தமிழ்?) என்ற பெயரிலான அன்பரால் வ்யாசம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதமும் இங்கு நிகழ்ந்துள்ளதே. அது உங்களுக்கு(ம்) கூடத் தெரிந்திருக்குமே?

    காஃபிர்களை இஸ்லாமியர் வென்றெடுக்க முஸ்லீம்கள் அல்லாவை வேண்ட வேண்டும் என்ற கருத்தாக்கத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்று விவாதிப்பதற்கு இந்த வ்யாசம் என்று என் புரிதல். அப்படித்தானா? இல்லையா?

    1. Avatar
      BS says:

      இதற்கு நான் எழுதிய மறுமொழி தடை செய்யப்பட்டுவிட்டதால், அதையே சுருக்கி மீண்டும் இடுகிறேன்.

      மட சேனா பற்றி கட்டுரை எதுவும் திண்ணையில் வரவில்லை. வந்திருந்தால் இணைப்பு காட்டவும். பின்னூட்டங்களே எழுதப்பட்டன.

      கட்டுரையை ஒட்டி நான் வைத்த கருத்துக்கு மறுமொழிகளே இடப்படவில்லை. அதாவது, உலகமெங்கும் உள்ள மசூதிகளில் என்று தலைப்பின் பொருள்: வாணியம்பாடியிலும் ஆம்பூரிலும் சென்னையிலும இப்படி எல்லாவிடங்களிலும் என்றாகிறது. அப்படி திட்டவட்டமாகச் சொல்ல கட்டுரையாளர் எல்லாவிடங்களிலும் சென்று கேட்டிருக்கவேண்டும். அவருக்கு தமிழ்நாடு எங்கேயிருக்கிறது என்று கூட தெரிந்திருக்குமா? இல்லை இங்கு என்ன மொழி பேசுகிறார்கள் என்று தெரியுமா? விக்க்ப்பீடியா பார்த்துதான் தெரிந்துகொள்வார் இல்லையா? எனவே இது ஒரு இல்லாவிட்டால் sweeping statement. மூலக்கட்டுரையின் பின்னூட்டங்களிலும் இது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. It is unbecoming of a responsible public figure in Canadian society.

  17. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ இன்றுவரை மாற்றமே இல்லை. வைதீக இந்துமதத்தில் பிராமணர் என்றழைத்த்க்கொள்வோரில் இராஜ்ஜியம்தான் நடக்கிறது. அர்ச்சகராக் நாங்களே இருக்கவேண்டும் என்று நீதிமன்ற வழக்கு. சிதம்பரம் கோயில் மன்னர்களாலும் மக்களின் உடல் உழைப்பாலும் கட்டப்பட்டது. இன்று நீதிமனற வழக்கை வெற்றிகரமாக நடாத்தி, தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டீர்கள். \\

    எசப்பனார் நெம்ப டமாஸ் பண்ணுகிறீர்கள்.

    அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்று எழுதியிருக்க வேண்டிய ஒரு வாசகத்தில் ******தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டீர்கள்***** என்று எழுதியிருக்கிறீர்கள்.

    தங்களுக்கு என்றால் அதில் நானும் சேர்த்தி? எனக்கு சொந்த ஊர் சிதம்பரமும் கிடையாது நான் தீக்ஷிதரும் கிடையாது?

    ந்யாயாலய ஆணை என்ன சொல்லுகிறது என்றும் எனக்குத் தெரியாது.

    ந்யாயாலய ஆணையை வாசித்தறிந்த நீங்கள் அதில் ஏதும் ஒரு லிஸ்டைப் பார்த்து அதில் என்னுடைய பெயரையும் பார்த்து……….. அது நான் தான் என்று அறிந்தால் ………….. தயவு கூர்ந்து ந்யாயாலய ஆணையையும் அந்த லிஸ்டையும் இங்கு கூட பகிரலாம். தன்யனாவேன். எனக்கே தெரியாது எனக்கு சொந்தமான ஒரு சொத்தா? ஆலய வழிபாட்டை சொந்த சமயாசாரமாகக் கொள்ளாத எனக்கு …………. ஒரு ஆலயம்………..அதுவும் தில்லையம்பலவாணனின் ஆலயம் சொந்தமாகுமா? பொலிக. பொலிக :-)

    ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயம் என்பது டாக்டர் ஜான்சனுக்கும் மறைந்த ராஷ்ட்ரபதி மஹாத்மா ஸ்ரீ அப்துல் கலாம் அவர்களுக்கும் எனக்கும் ஷாலிக்கும் தேவரீருக்கும்……… இந்த தேசத்தின் ப்ரஜைகள் அனைவருக்கும் பொதுவானது. தங்களுக்கு ந்யாயம் வேண்டும் என்ற அபிலாஷை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அதில் முறையிட்டு ந்யாயம் பெறலாம்.

    தில்லை பொது தீக்ஷிதர்கள் ந்யாயம் பெற்றது ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயத்தில். தீர்ப்பில் தில்லையம்பலவாணனது ஆலயம் தில்லை பொதுதீக்ஷிதர்களுக்கு சொந்தமாக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது. சொந்தமாக்கப்பட்டது என்றால் அதில் மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்றாகும். ஆனால் ஹிந்துஸ்தானத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஆலய தர்சனம் செய்பவர்கள் அங்கு தர்சனம் செய்கிறார்களே? அப்படியானால் தீர்ப்பில் பிழையா? நீங்கள் பகிர்ந்த கருத்தில் பிழையா? அதை அமலாக்குவதில் பிழையா?

    தீர்ப்பானது ஆவணங்களின் அடிப்படையிலும் தேசத்தில் நிலுவையில் இருக்கும் சட்டங்களின் அடிப்படையிலும் …………. அங்கு பக்ஷத்தின் சார்பிலும் ப்ரதி பக்ஷத்தின் சார்பிலும் முன்வைக்கப்பட்ட தாக்கீதுகளை விசாரித்து அதன்பாற்பட்டு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு வ்யாஜ்யங்களில் உச்ச ந்யாயாலயம் அளிக்கும் தீர்ப்பு அறுதியானது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    வழக்கை வெற்றிகரமாக நடாத்தி ……………… என்று தேவரீர் நக்கலடித்து கருத்து தெரிவிப்பதன் மூலம் இழிவு செய்ய முனைவது யாரை?

    தில்லை பொது தீக்ஷிதர்களையா? பக்ஷத்தின் சார்பாக வக்காலத்து வாங்கிய வக்கீல்களையா? ப்ரதிபக்ஷத்தின் சார்பாக வக்காலத்து வாங்கிய வக்கீல்களையா? அல்லது ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயம் என்ற ஸ்தாபனத்தின் ந்யாயம் வழங்கும் முறையினையே நீங்கள் முறைகேடானது என்று இழித்துப் பழிக்க முனைகிறீர்களா?

    தீர்ப்பினை விமர்சிப்பதை ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயம் என்றும் தடை செய்ததில்லை. ஆனால் அவை விசாரணை மற்றும் ஆவணங்கள் சார்ந்து அறிவு பூர்வமான குறிப்பான விமர்சனங்களாக இருக்க வேண்டும். உச்ச ந்யாயாலயத் தீர்ப்பினை நக்கலடிக்க முனையும் நீங்கள் உங்கள் கருத்துக்களை வெறும் ஜாதிக்காழ்ப்பின் மூலமும் வெற்றுக் கோஷங்களின் மூலமும் கட்டமைக்க விழைவது மிகவும் இழிவான செயற்பாடு.

    உங்களுடைய ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்கள் மற்றும் ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்கள் மற்றும் ஆப்ரஹாமிய பயங்கரவாத ஆதரவுக் கருத்துக்கள் புதிதானவை இல்லை.

    ஆனால் ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயத்தையே எந்த முகாந்தரமும் இல்லாமல்…………… வெறுமன உங்கள் ஜாதிக்காழ்ப்பின் பாற்பட்டு மட்டிலும் …………….நக்கலடிக்கும்படியான ஒரு கருத்தினை நீங்கள் பதிந்திருப்பது………….. ஹிந்துஸ்தானத்தின் மீதும் ஹிந்துஸ்தானத்தின் ந்யாயாலயத்தின் மீதும் பற்றுள்ள எந்த ஒரு ப்ரஜையாலும் மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து என்பதற்காக இந்த உத்தரம் பகிரப்படுகிறது.

    மற்றபடி உச்ச ந்யாயாலயத்து தீர்ப்பினை வெற்றுக் கோஷங்களின் பாற்பட்டு அல்லாமல் ஆவணங்கள் சார்ந்து நீங்கள் கருத்துக்கள் பகிர முனைந்தால் தனியொரு வ்யாசத்தில் செய்ய விழையவும். அறிவு பூர்வமான அப்படியொரு சரக்கு உங்கள் வசம் இருக்குமானால் முழுமையாக நானும் அறிந்து கொள்ள விழைகிறேன்.

    மற்றபடி அந்தந்த வ்யாசத்தின் கீழ் அதன் கருப்பொருள் சார்ந்து கருத்துப் பகிர எப்போது கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?

  18. Avatar
    BS says:

    //எசப்பனார் நெம்ப டமாஸ் பண்ணுகிறீர்கள்.//

    எசப்பனார் என்றால் என்ன பொருள் தமிழில்? உங்கள் பெயரை நான் என்ன சிதைக்கின்றேனா? அடிப்படை பண்பே இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் திரு கிருட்டிணக்குமார்!

    நீங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப்பற்றி இங்கெழுதியவை நீங்கள் அத்தீர்ப்பினால் மகிழ்கிறீர்கள் என்றே சொல்கிறது. ஐயமே இல்லை.

    தீர்ப்பை விமர்சிப்பது வேறு; அதனால் வரும் விளைவுகளைச் சொல்வது வேறு.

    நேற்று உச்ச நீதிமன்றம் தேர்தலில் நிற்க அடிப்படை கல்வித்தகுதி இருக்கவேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இத்தீர்ப்பின் விளைவு என்ன? குமாரசாமி காமராஜர் அரசியலுக்கு வரமுடியாது. தமிழக முதல்வராக முடியாது. படித்தவனெல்லாம் அறிவாளிகள் எனபது நம் வாழ்க்கை காட்டவில்லை. தற்போது நடந்த இயற்கையின் சீற்றம்; உண்மையில் சீற்றமன்று. படித்தவர்களின் தவறுகள் என்பதைக் காட்டுகிறதல்லவா? படித்தவர்கள் மட்டுமே அரசியலில் பொதுச்சேவை செய்யலாம்; படிக்காதவர்கள் செய்ய முடியாது என்பதே இத்தீர்ப்பின் விளைவு.

    இதைப்போலவே சிதம்பரம் கோயில் தீர்ப்பின் விளைவு. அரசுக்கு உடைமையாக ஒரு கோயில் என்றால், அக்கோயிலின் வருமானம் அரசுக்குச் செல்லும் அவ்வருமானத்தில் கோயில் பணிகள் நடக்கும். பூஜாரிகளுக்கும் பிற கோயில் பணியாளர்களுக்கும் மாதச்சம்பளம் கொடுக்கும். பிற பணியாளர்களை மட்டுமே நியமிக்கும். ஆனால் பூஜாரிகளை நியமிப்பது கிடையாது. ஆனால் டிஸ்மிஸ் செய்யலாம். திருப்பரங்குன்றத்தில் ஒரு பூஜாரியை அப்படி செய்தது: காரணம் அவர் தகாத செயல்கள் சிலவற்றைச் செய்து கோயில் பெயரைக்கெடுத்தார். கோயில் சம்பிராதாயங்களை வகுப்பதெல்லாம் அரசு செய்யாது. இதுதான் அரசுடைமை.

    சிதம்பரம் கோயில் அப்படித்தான் வருமானம் மட்டுமே அரசு எடுத்தது. கொடுத்தது. பூஜாரிகளை மாற்றவில்லை. சம்பிரதாயங்களை மாற்றவில்லை. இப்போது, வருமானமும் பூஜாரிகளுக்குப் பரமபரையாக ஒரு நானூறு குடும்பங்களுக்கு மட்டுமே செல்லும். நீங்கள் தீக்சிதர் இல்லை. ஆனால் பார்ப்பனர் இல்லையென்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நம்பமாட்டேன். தீர்ப்பு உங்களை மகிழ்விக்கிறது அல்லவா?

  19. Avatar
    Rama says:

    BS
    I believe the lands belonging to Chidambaram and other temples have been sold by the secular government.( Someone can correct me on this if I am wrong) What right the Govt has to do this vile act on the Hindu populace? Why the Govt is not willing to take over the Churches and the mosques? I believe the Churches are the biggest land owners in India, thanks to the OBNOXIOUS ONE SIDED GENEROSITY colonial British. Why cannot the govt reclaim all the property of the Church? And of the Islamic board?
    Why should the Govt swallow the income from the temples when only a tiny percentage is used for their up keep?
    Hindus should reclaim their temples from the clutches of the Govt.

    1. Avatar
      BS says:

      இந்துக்கோயில்களை அரசு எடுத்தபின் அதற்கு மாபெரும் எதிர்ப்பொன்றும் வரவில்லை. இந்துத்வாவினர் தற்போது அதை ஆரம்பிக்க, உங்களைப்போன்றோர் பேசுகின்றனர்.

      ஏன் மாபெரும் எதிர்ப்பு வரவில்லையென்றால், பெருந்தெய்வ வழிபாட்டுக்கோயில்களே வருமானம் ஈட்டும் கோயில்கள்: முருகனின் அறுபடைவீடுகள்; திருவரங்கம், போன்று. இவர் பிராமணர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தமிழ்ப்பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு மறுபடியும் போய்விடக்கூடாதென்று மற்றவர்கள் விரும்புவதால், அரசுக்கு எதிர்ப்பு வரவில்லை. பார்ப்பனர்கள் ஊழியர்களாக மட்டும் இருக்கலாம். கோயிலை ஆள்பவர்களாக இருக்கக்கூடா. இருந்தால், தலித்துக்களை உள்ளேவிடாமல், மேல், இடை ஜாதியினரிடம் ஜால்ரா அடித்து கோயிலை வளர்ப்பார்கள். அவர்களூக்குப் பரிவட்டம் கட்டி அவர்களைப்புகழ இறைவனை இழிவுபடுத்துவார்கள். திருக்கண்ணபுரம் பெருமாளுக்குத் திருநீறு பூசி சோழனை மகிழ்வித்த கதை தெரியுமா? ஆக, இறைவனையே மாற்றுவார்கள் பணக்கரர்களுக்கு விருப்பம்தர. ஏழைகளும் தலித்துக்களும் கோயில்களை விட்டு விலகுவார்கள். பின்னர் என்ன கிருத்துவராகவும் இசுலாமியராகவும் மாறவேண்டியதுதான் !

      மேலே எழுதியவை பொய்யென்றால், ஏன் அரசுக்கு எதிர்ப்பு வரவில்லை மற்ற இந்துக்களிடமிருந்து? மற்றொன்றும் சுட்டிக்காட்டலாம்: பூஜாரிகளிடமிருந்தும் எதிர்ப்பு வரவில்லை. மாதச்சம்பளம் கிடைக்கிறதே! இல்லையா? அரசு ஊழியர்கள்.

      தேவாலயங்கள், மஜூதிகள், தர்க்காக்களை அரசு எடுத்தால், ஒட்டு மொத்த கிருத்துவ, இசுலாமிய சமூகங்களிடமிருந்து எதிர்ப்பு வரும். வராவிட்டால், அரசு எடுத்துக்கொள்ளலாம்.

      ஒரு எ.கா: அம்மா அவர்கள் இந்துக்கோயில்களின் அன்னதானம் அறிமுகப்படுத்தினார்கள். அதே போல சாந்தோம் போன்ற தேவாலயங்களிலும் அறிமுகப்படுத்த விரும்பினார்கள். சாந்தோம்காரகள் சொன்னார்கள்: எங்களுக்கு பசித்தவருக்கு உணவிட வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. அதை நாங்களே பார்த்துக்கொள்வோமென அரசு கைவிட்டது.

      இந்துக்கள் ஏன் சொல்லவில்லை?

      “Hindus should reclaim their temples from the clutches of the Govt.”

      – Not possible. Because Tamil Hindus don’t want that.

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    வெட்டியாகக் கோஷம் போட்டு பொழுதைப் போக்குவதற்குப் பதில் ஆக்கபூர்வமாக உங்களால் எத்தையாவது செய்யமுடியுமானால் செய்யுங்களேன்.

    உச்ச ந்யாயாலயத் தீர்ப்பு என்பது ஹிந்துஸ்தானத்தின் அனைத்து ப்ரஜைகளையும் கட்டுப்படுத்தும் தீர்ப்பு என்பதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதில் மகிழ்வதற்கு துக்கப்படுவதற்கு என்று ஏதும் இல்லை.

    சட்ட ரீதியாக அதை எதிர்க்க விழைந்தால் ரிவ்யூ பெடிஷன் போடலாம். அதன் மீது விமர்சனம் வைக்க வேண்டுமானால் அறிவுள்ளவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை அதைப் படிக்க வேண்டும். அதில் கூறப்பட்ட விஷயங்களை verbtatim பகிர்ந்து அதன் சாதக பாதகங்களை அலச வேண்டும். உங்களால் அது முடியாது. மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை அல்லது கேட்டதை திரும்பச் சொல்ல முயலுகிறீர்கள். ஆகையால் வெற்றுக் கோஷங்களை எழுப்புகிறீர்கள்.

    அதைப்போலவே உச்ச ந்யயாலயத்தின் மற்றொரு தீர்ப்பைப் பற்றியும் வெற்றுக்கோஷங்களால் வெட்டிக்கதை அளக்க முனைகிறீர்கள். உச்ச ந்யாயாலயம் வெட்டிப்பொழுது போக்குபவர்களின் சந்தைக்கடை என்ற ரீதியில் நீங்கள் இழித்துப்பழிக்க முனைவதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்திலும் சட்டங்களிலும் முழுமையான தேர்ச்சி பெற்ற சான்றோராகிய ந்யாயாதிபதிகளால் வழங்கப்படும் தீர்ப்பினை விமர்சிக்க விழைபவர் அரசியல் சாஸனம் சார்ந்தும் சட்ட ஷரத்துக்கள் சார்ந்தும் அதை விமர்சிக்க முனைவது மட்டிலும் அறிவு பூர்வமான செயற்பாடு. தங்களது அப்படியான அறிவுபூர்வமான செயற்பாடு இல்லை.

    க்ஷமிக்கவும். பொழுதுபோக்குக்காகத் தான் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் முன்னம் ஓரிரு வருஷங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறீர்கள். வெட்டிப்பொழுது போக்குவதற்கு எனக்கு கால அவகாசம் இல்லை.

    b s . நான் உச்சரிப்பில் கவனத்தை செலுத்தி எழுதும் வண்ணம் என்றால் பீ. எஸ். சரியான தமிழில் பீ எசு. தங்களது பெயரில் எஸ் என்ற எழுத்துடன் மரியாதை விகுதி சேர்த்து எசப்பனார் என்று தூய தமிழில் எழுதியிருக்கிறேன் ஐயன்மீர். தங்களை விளிக்கும் போது முழுக்க முழுக்க தேவரீர் என்றல்லவோ விளிக்கிறேன். எங்கு பண்பில் குறைவைக் கண்டீர்கள். நீங்கள் எந்த எழுத்தாளருடைய விசிறியோ அந்த அம்மையார் ஆனால் தன்னுடைய வ்யாசத்தில் ஏக வசனத்தை ப்ரயோகிக்கிறார். ஊருக்கெல்லாம் உபதேசித்து அப்போதெல்லாம் காஷ்ட மௌனம் சாதித்த தேவரீர் சரியான ப்ரயோகத்துக்கு விசனப்படுதல் தகுமா?

    சரி சரி…………. வெட்டிக்கதை பேசி வ்யாசத்தின் கருப்பொருளைச் சிதைக்காமல் ………… மேற்கொண்டாவது………….. வ்யாசத்தின் கருப்பொருள் சார்ந்து விவாதத்தை தொடர்வதற்கு தேவரீரை இருகரம் கூப்பி விக்ஞாபித்துக்கொள்கிறேன் ஐயன்மீர்.

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    வ்யாசம் இடித்துறைக்க முற்படும் மிகக் கடுமையான உண்மை மாற்று மதத்தவர்களை காஃபிர் என்று இழித்துப்பழிப்பது. அவரை தங்கள் மதத்திற்கு மாற்ற விழைவது. காஃபிர் என்று மாற்று மதத்தவர் மட்டிலுமன்றி சொந்த மதத்தைச் சார்ந்த ஆனால் வேறு உட்பிரிவினைச் சார்ந்தவர்களும் கூட காஃபிர் என்று இழித்துப்பழிக்கப்படுவதை ஜெனாப் ஆமீர் கான் விஷயத்தில் காண முடிந்தது.

    மாற்று மதத்தவரை இழித்துப் பழிப்பதன் மூலம் மத ஏகாதிபத்யத்திற்கு வழி வகுப்பது இஸ்லாம் மட்டிலும் தானா? க்றைஸ்தவ மதமும் கூடத்தானே அதே மத ஏகாதிபத்ய வாதத்தில் ஈராயிரம் வருஷமாக ஈடுபட்டு வந்துள்ளது இன்னமும் ஈடுபட்டு வருகிறது.

    இளம் ஹிந்துக்குழந்தைகளிடம் நம்முடைய காளியம்மன் மற்றும் மாரியம்மன் போன்ற தெய்வங்களை ***பிசாசு*** என்று பல க்றைஸ்தவப் பள்ளிக்கூடங்களில் இழித்துப் பழிக்கும் அவல நிலை தொடர்கிறது. ஹிந்துக்குழந்தைகள் நெற்றியில் பொட்டிட்டு பூச்சூடி வந்தால் அவற்றை இழித்துப்பழிக்கும் அவலங்களும் பற்பல க்றைஸ்தவப் பள்ளிக்கூடங்களில் தொடர்கிறது. என்னுடைய சொந்த ஜில்லாவான சேலத்தில் கோட்டைமாரியம்மன் பண்டிகை தினத்தன்று நகரத்தில் விடுமுறை தினம். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் கூட விழாவைப் பார்க்க ஜனத்திரள் குவியும். சொந்த பந்தங்களால் வீடுகள் நிரம்பி இருக்கும். அப்போது விடுமுறை எடுத்த குழந்தைகளை மறு தினம் வெய்யிலில் முட்டி போட வைத்து சித்ரவதை செய்து அவமானப்படுத்திய நிகழ்ச்சி ஒரு இருபது வருஷம் முன்னர் நிகழ்ந்தது. அனைத்து பெற்றோர்களும் பள்ளி முன் கூடி நிர்வாகத்தினரை கடுமையாக விமர்சித்த பின்னர் இந்த இழிவு முடிவுக்குக் கொணரப்பட்டது.. அவமானத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான பல குழந்தைகள் தற்கொலை வரை சென்றிருக்கின்றன.

    இதற்கெல்லாம் மூல காரணம். மாற்று மதங்களை இழிவாக சித்தரிக்க முனையும் ஆப்ரஹாமிய மேட்டிமைக்கோட்பாடு.

    அமேரிக்க ஆப்பரிக்க தேசங்களில் க்றைஸ்தவத்தை பின்பற்றும் கோடிக்கணக்கான மாந்தர்கள் ……………….. ஏசுவே ஒரே தேவன் ………….. க்றைஸ்தவமே ஒரே வழி ……………… போன்ற க்றைஸ்தவக் கோட்பாடுகள்……………. பிழையானவை…………… இறைவனை அடைய உலகில் பற்பல கோட்பாடுகள் உண்டு என்பதனை உணரத் துவங்கி விட்டனர். ஏன் வைதிகம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார் வழிபாடுகள் போன்றவற்றை தன்வசம் கொண்ட ஹிந்துமதத்தின் பொதுவான கோட்பாடான மறுபிறப்பு என்ற கோட்பாட்டினைக் கூட இங்கெல்லாம் நம்பத் துவங்கி விட்டனர்.

    ஆனால் ஹிந்துஸ்தானத்தில்………… சுவிசேஷ ப்ரசங்கங்களில் ………………. க்றைஸ்தவ பாத்ரி கையை ஆட்டுவாராம்………… முடவன் எழுந்து நடப்பானாம். குருடனுக்கு பார்வை வந்து விடுமாம். ஊமை பேசுவானாம். வ்யாதிகள் க்றைஸ்தவ பாத்ரியால் சுவிசேஷ ப்ரசங்கத்தால் குணமாகி விடுமாம். இதை சொல்வதற்கு சாக்ஷிகளாம்.

    வைத்யராகிய ஸ்ரீ ஜான்சன் ஐயா அவர்கள் அறிவியல் ரீதியாக வைத்ய சாஸ்த்ர ரீதியாக இது போன்ற நிகழ்வுகள் சாத்யமாகுமா என்பதை விவரித்தால் புரிந்து கொள்ள விழைகிறேன்.

    ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி…………. ஒரே உண்மையை சான்றோர் பல விதமாக விளக்குகிறார்கள்……….. என்ற தொன்மையான ஹிந்துஸ்தானத்தின் கூற்றினை நோக்கியே உலகம் மெதுவாக நகர்கிறது என்பது திண்ணம்.

    மனிதனுடைய இயற்கைப் பண்பினைச் சார்ந்ததே பன்மைத்துவம் பேணல். பன்மைத்துவம் போற்றல்.

    அது இஸ்லாமாக இருந்தாலும் சரி. க்றைஸ்தவமாக இருந்தாலும் சரி. யஹுதியமாக இருந்தாலும் சரி. இவை எதுவுமே இயற்கையான மனிதப்பண்பினை ஒட்டி கால காலத்திற்கு ஒருமையில் இருந்ததே இல்லை. பின்ன பின்னமாக பிரிவுகளாகவும் பின்னர் பற்பல உட்பிரிவுகளாகவும் பிரிந்தன என்பதனை சரித்ரம் நிரூபணம் செய்கிறது. பிரியமட்டிலும் இல்லை பிரிந்த ஒரு பிரிவு மற்றைய பல பிரிவுகளுடன் பிணக்கம் கொண்டு உக்ரமாக தொடர்ந்து வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளது.

    இதன் முக்யகாரணம் தங்களது தத்வமே சரி என்ற பிடிவாதம் மட்டிலும் இல்லை. மாற்று தத்வங்களை தத்வார்த்த ரீதியாக எதிர்கொள்ளாமல் வன்முறைகள் மூலமும் பித்தலாட்டங்கள் மூலமும் எதிர்கொள்ளும் தரம் தாழ்ந்த ஆப்ரஹாமிய செயற்பாடுகள் உலக அமைதிக்கு குந்தகம் விளைவித்தன. விளைவித்து வருகின்றன.

    ஹிந்துஸ்தானத்தில் இறக்குமதியாகிய இப்படிப்பட்ட சாரமற்ற விதேசிய ஆப்ரஹாமியக் கோட்பாட்டை விடுத்து ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைத்த கோட்பாடாகிய யார் எந்த முறையில் இறைவனை வழிபட்டாலும் இறைவனை அடைய முடியும் என்ற உயர்ந்த கோட்பாட்டை உலகம் பின்பற்ற விழைகிறது என்பதன் உதாரணமே ஜெனாப் தாரிக் ஃபதஹ் மற்றும் ஜெனாப் துஃபைல் அஹ்மத் போன்ற சான்றோர் மத ஏகாதிபத்யத்தையும் மத மேட்டிமைவாதத்தையும் சாட விழைந்திருப்பது.

    ஸ்ரீ திருவள்ளுவ நாயனார் பகிர்ந்த கருத்தினை வைத்யர் ஸ்ரீ ஜான்சன் ஐயா பகிர்ந்த படிக்கு …………………….

    அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
    என்னுடைய ரெனும் இலர். ” …….

    (ஒரு சிறு மாறுதலுடன்)

    இஸ்லாம் (க்றைஸ்தவமும்) மதம் வருமுன்னே வள்ளுவர் என்னும் ஒரு தமிழ்ப் புலவர் கூறுச் சென்றுள்ளார்!…….

    அவரவர் மதத்தை எகாக்ரதையுடன் பின்பற்றுங்கள். என் கடன் மாற்று மதத்தினரை மதமாற்ற விழைவதே என்ற செயல்பாட்டை விட்டொழியுங்கள். உலகம் அமைதிப்பூங்காவாக மாறிவிடும்.

  22. Avatar
    Rama says:

    @BS
    Hope this comment published. My previous comment did not.
    BS,Diverting the topic yet again? Your GRAND ASSUMPTION that Hindus did not object is the reason for Govt’s take over temple defies common sense and is infantile.( have you taken a survey on this to proclaim such grand statement? No, thought so) Plus it shows your pathological hatred for Brahmins. The question you should answer is plain simple. What right the Govt has to take over Hindu temples but not mosques and Churches? Calling itself secular, Govt has no business in meddling with Hindu religious affairs. Period. BTW, a temple priest’s job is such a low paying onerous one. No wonder there was no great rush to take up this job when DMK tried to introduce non Brahmins as priests into temples. Plus the underlying fact that the BS of the world do not acknowledge that common HINDUS want the age old tradition to continue in temples ( prayers in Sanskrit, Thai as the beginning of new year for example) rather than change at whim of politicians.

    1. Avatar
      BS says:

      நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். எந்தவொரு மதத்தின் உள்விவகாரங்களில் அரசு தலையிடமுடியாது. அதே சமயம் அம்மதத்தைப்பயனபடுத்தி சமூகத்தை ஏமாற்றுவோர் இருந்து அவர்களை அம்மதத்து அப்பாவி மக்கள் ஒன்று செய்யமுடியாதென்றால் அரசு உள்ளுழையும். பின்ட்ரல்வாலே சீக்கியர் பொற்கோயிலுக்குள் பாசறை அமைத்து தீவிரவாதச்செயல்களில் ஈடுபட்டதால் பொற்கோயிலே தகர்க்கப்பட இராணுவம் உள்ளுழைந்தது. இல்லையா?

      எனவே இந்துமதத்தில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. படிக்கவில்லையா? அப்படி அவர்கள் கிருத்துவத்திலோ, இசுலாமிலோ உள்ளுழைந்தால், அவர்கள் விட மாட்டார்கள். இந்துக்கள் ஏன் விட்டார்கள் என்பதுதான் என் கேள்வி.

      யார் அர்ச்சகர்கள் என்ற வழக்குகூட ஒரு பார்ப்பனர் குழவாலும், சிதம்பரம் கோயில் வழக்கு அக்கோயில் அர்ச்சகர்களாலும் மட்டுமே போடப்பட்டது. எனவே மொத்தமாக ஒரு எதிர்ப்புக் குரல் எழவே இல்லை. பார்ப்ப்னர்களில்டமிருந்து மட்டுமே வரும். காரணம்: அவர்களே direct stakeholders.

      மொத்த எதிர்ப்புக்குரலை உருவாக்க தமிழ்நாட்டில் இந்துத்வா இயக்கம் அவர்கள் துணை இயக்கங்கள் முயன்று வருகின்றன. திருவள்ளுவரைப் போற்றுவதும் தலித்துக்கள் எமது சஹோதரர்கள் என சொல்லிக்கொள்வதும் இம்முயற்சியின் சில படிக்கட்டுக்கள். அப்படி அவர்கள் எல்லாரையும் இணைத்துவிட்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி இந்துமதத்தை 1000 ஆண்டுகளுக்கு முன் இழுத்துச் செல்லலாம். அட்வான்ஸ் கங்கிராஜுலேஷன்ஸ் !

  23. Avatar
    Rama says:

    For BS, FACTUAL information (Confession: it is a copy paste job )
    அர்ச்சகர்கள் குறித்த அறிக்கை:
    1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் முதல்வரான பின்பு தமிழ்நாட்டுக் கோவில்களின் நிலை குறித்து ஆராய ஜஸ்டிஸ் ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார்!! அந்தக் கமிட்டித் தலைவர் ஜஸ்டிஸ் ராஜமன்னார் கொடுத்த அறிக்கையின் ஒரு பகுதி :
    தமிழ்நாட்டின் ஆகம அடிப்படையிலான திருக்கோவில்களில் மிக அதிக வருமானம் வரக் கூடிய கோவில்களில் கூட அர்ச்சகர்களுக்கு தரப்படும் ஊதியம் மிகக் குறைவாகவே உள்ளது! இது இப்படி என்றால் வருமானமே இல்லாத கோவில்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை!
    இன்னும் கோவில்களில் உள்ள நிர்வாக அதிகாரிகள், கணக்கர்கள், ஊழியர்களுக்கு அரசு கொடுக்கும் சம்பளத்தை விடவும் அர்ச்சகர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்குகிறது! அர்ச்சகர்களுக்கு தரப்படும் சம்பளம் பஞ்சப்படி, இன்க்ரிமென்ட் போன்ற எதுவும் இல்லாதது! ஒரு குறிப்பிட்ட தொகையே (CONSOLIDATED) ஊதியமாக வழங்கப்படுகிறது! இந்நிலையில் அவர்களுக்கு தட்டில் விழும் சில்லறைக் காசுகளே பெரியளவில் வருமானமாக உள்ளது! இந்தத் தட்டுக் காசு வசூலை நிறுத்துவது முறையற்றது!
    இதில் பல கோவில்களில் நாங்கள் கண்ட விஷயம் குறைந்த ஊதியமே பெற்றாலும் கூட அர்ச்சகர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்கிறார்கள். இதன் காரணம் பல தலைமுறைகளாக அவர்கள் அப்பணியை செய்வதால் இயற்கையிலயே அவர்களுக்கு அப்பணியின் மீது ஒரு பற்றுதல் உண்டாகி விட்டதே காரணம்!!
    இதைத் தாண்டி முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விஷயம் ஒன்றும் உண்டு! பல பெரிய ஆலயங்களில் கோவில் சொத்தாக பல கோடி ரூபாய்கள் மதிப்புடைய நகைகள், ரத்தினங்கள், வெள்ளிப் பொருட்கள் உள்ளன! குறைந்த ஊதியம் பெறும் இந்த அர்ச்சகர்களே இவற்றைக் கையாள்கிறார்கள்! ஆனாலும் கூட இதில் ஒரு சிறு நகைகூட இன்றளவும் தொலைந்து போகாமல் உள்ளதென்றால் அதற்கு இந்த அர்ச்சகர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் நேர்மையும், தெய்வ பக்தியும்தான் காரணமாக இருக்க முடியும் !!

  24. Avatar
    ஷாலி says:

    பொன்.முத்துக்குமார் says:
    November 30, 2015 at 5:41 pm
    //ஷாலி, மனுதர்மமெல்லாம் எக்காலத்துக்கும் எல்லாருக்கும் எப்போதும் பொருந்துவதல்ல. அது ஒரு காலகட்டத்தின்பாற்பட்டது. அதை நிராகரிக்க எல்லா இந்துவுக்கும் உரிமை உண்டு.//

    இதை நிராகரிக்க எல்லா இந்துக்களுக்கும் உரிமை கிடையாது என்று உச்ச நியாஸ்தலம் கூறிவிட்டது.

    இந்து கோவில்களில் பிராமண ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் விதமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற தீர்ப்பை இன்று உச்ச நீதி மன்றம் வழங்கியிருக்கிறது.

    //அதாவது பொன் முத்துக்குமாரும் அதை சொல்லியிருக்கிறார். வைதிக காலக்கணக்கில் லக்ஷக் கணக்கான வருஷங்களுக்கு முன் இருந்ததாக அறியப்படும் த்ரேதா யுகம் அல்லது ஸத்யயுகத்தில் மட்டிலும் மனுதர்ம சாஸ்த்ரம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று பராசர ஸ்ம்ருதி சொல்லுகிறது..//-க்ருஷ்ணகுமார்.

    நண்பர் க்ருஷ்ணகுமார் கூறிய த்ரேதா யுகம் காலத்து ஆகம விதிகளைக் காட்டித்தான் அனைத்து சூத்ர,ஸர்ஸூத்ர இந்துக்களுக்கு அர்ச்சகராக முடியாது என்று உச்ச மன்றம், உச்சி மண்டையில் ஆணி அடித்து விட்டது.

    இந்து சமூகத்தில் உண்டான பல ஜாதியினருக்கு எதிரான தீர்ப்பாகவே இந்த தீர்ப்பு பார்க்க படுகிறது.

    கோவில்களில் அர்ச்சகராக மாற இந்து என்ற தகுதி போதுமானது அல்ல உயர் ஜாதி என்ற ஆகம விதிப்படியான தகுதியும் அதிகமாக தேவை படுகிறது என்பதை நீதி மன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

    இந்த இழிவுக்குத்தான் இந்தியாவில் இந்துக்களாக இருந்த மக்கள் இஸ்லாமையும்,கிருஸ்தவத்தையும் தேடி ஓடினார்கள்.எந்த முஸ்லிமும் இமாமாகலாம்.எந்த கிருஸ்துவனும் பிஷப் ஆகலாம்.ஆனால் பொன்.முத்துக் குமாரும்,க்ருஷ்ணகுமாரும், மூலவர் கருவறையில் தீபாராதனை காட்டி வேதம் ஓத முடியாது.

    //..லக்ஷக்கணக்கான வருஷங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்து காலாவதியாகிய ஒரு நூலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு கருத்து சொல்லி…// விட்டது க்ருஷ்ண குமாரின் ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயம்….

    1. Avatar
      paandiyan says:

      எல்லா மீறலும் ஒரு ஒருவருக்கு வசதிதான் .
      RTI உள்ள வராமல் இருப்பது நீதிமன்றத்துக்கு
      இடஒதுக்கீடு குறுப்பிட்ட காலம் என்பது இல்லாமல் போவது அணைத்து பிரிவினருக்கு
      கட்சிகளின் நன்கொடை வெளிப்படை , வருமான வரி போன்றவை அரசியல் கட்சிகளுக்கு
      முல்லை பெரியாறு , காவேரி போன்றவை அண்டை மாநிலம்களுக்கு
      ஒர சிவில் சட்டம் இல்லாமல் இருப்பது முஸ்லிம்களுக்கு
      எல்லாம் சட்டப்படிதான் , எல்லாம சட்டப்படிதான . இல்லையா

    2. Avatar
      paandiyan says:

      ஷா பானு வழக்கில் கூட விதி முறை மீறல்தான் . இது எங்கு எதுக்கு என்றால் , ஆகா ஓகோ திசை சரியான திருப்பல் என்று வரகூடாது பாருங்கள்

  25. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    பேரன்பிற்குரிய ஷாலி

    வெள்ளத்துக்கு அப்புறமா நீண்ட நாட்கள் தங்களிடமிருந்து பதிவுகள் ஏதும் வராமல் இருந்தது கவலையளித்தது.

    உத்தரம் பார்த்ததும் நலம் உத்தரவாதமாகத் தோன்றியது. நல்வாழ்த்துக்கள்.

    \\ //ஷாலி, மனுதர்மமெல்லாம் எக்காலத்துக்கும் எல்லாருக்கும் எப்போதும் பொருந்துவதல்ல. அது ஒரு காலகட்டத்தின்பாற்பட்டது. அதை நிராகரிக்க எல்லா இந்துவுக்கும் உரிமை உண்டு.//……………………………….\\\ இதை நிராகரிக்க எல்லா இந்துக்களுக்கும் உரிமை கிடையாது என்று உச்ச நியாஸ்தலம் கூறிவிட்டது. \\\

    சகட்டு மேனிக்கு உச்ச ந்யாயாலயம் சொல்லாததையெல்லாம் சொன்னதாக அட்ச்சு வுடக்கூடாது.

    ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ஸ்வராஜ்யா தளத்தில் ந்யாயாலய தீர்ப்பிலிருந்து verbatim quote செய்திருக்கிறார். அதில் நீங்கள் அட்ச்சு வுட்டமாதிரிக்கு ஏதும் இல்லை.

    swarajyamag.com/politics/tamil-temple-priests-supreme-court-should-be-applauded-for-its-verdict/

    அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

    The reading of the actual judgment, however, provides a completely different picture. What the text of the judgment relevantly says is that the exclusion of some and inclusion of a particular segment or denomination for appointment as ‘Archakas’ would not violate Article 14 (right to equality) so long such inclusion/ exclusion is not based on the criteria of caste, birth or any other Constitutionally unacceptable parameter.

    \\ நண்பர் க்ருஷ்ணகுமார் கூறிய த்ரேதா யுகம் காலத்து ஆகம விதிகளைக் காட்டித்தான் அனைத்து சூத்ர,ஸர்ஸூத்ர இந்துக்களுக்கு அர்ச்சகராக முடியாது என்று உச்ச மன்றம், உச்சி மண்டையில் ஆணி அடித்து விட்டது. \\

    சம்பந்தமில்லாமல் காபி பேஸ்ட் மட்டிலும் நீங்கள் பண்ணுங்கள்.

    இல்லாத்தையும் பொல்லாத்தையும் சம்பந்தமே இல்லாமல் ஜாதிக்காழ்ப்பை முன்னிட்டு அட்ச்சுவுடும் உரிமை அன்பர் பீ எசு அவர்களுடைய ஏக போக உரிமை. அதை நீங்கள் அதிக்ரமணம் செய்வதை நான் கடுமையாக ஆக்ஷேபம் செய்கிறேன்.

    \\ இந்து சமூகத்தில் உண்டான பல ஜாதியினருக்கு எதிரான தீர்ப்பாகவே இந்த தீர்ப்பு பார்க்க படுகிறது. \\

    அன்பு தம்பி. உங்களால் அறிவு பூர்வமாக உரையாட முடியும் என்று எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. கோர்ட் சொன்னது இது தான் என்றால் தீர்ப்பிலிருந்து நேரடியாக விஷயத்தை சுட்ட வேண்டும். கோர்ட் தீர்ப்பில் *****பிறப்பின் பாற்பட்ட ஜாதி அடிப்படையில் ***** ஒருவரை ஏற்றுக்கொள்வது அல்லது ஒதுக்குவது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

    இப்படிக்கு சகட்டு மேனிக்கு அட்ச்சு வுடுவது சரியில்லை :-) :-) :-)

  26. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அர்ச்சகர் ப்ரச்சினையை நீங்கள் வழக்கமான உங்கள் ஜாதிக்காழ்ப்பு வாதங்கள் படி செய்ய விழைவதாகத் தெரிகிறது. நிச்சயம் செய்யுங்கள். ஆனால் இந்த வ்யாசத்தின் கீழ் இல்லை. அதற்கான ஒரு வ்யாசத்தின் கீழ்.

    இந்த் வ்யாசத்தின் கருப்பொருள் ………… பொறாமைக்கார ஆப்ரஹாமிய கடவுளை நம்பாதவர்களை ஜபர்தஸ்தியாக ஆப்ரஹாமியத்துக்கு ஆட்படுத்த விழையும் ஆப்ரஹாமியத்தின் பயங்கரவாத அடாவடித் தனத்தைப் பற்றியும்…………. அதனால் உலக அமைதி நாசமாகி…….. உலகத்தில் பெருங்கேடு விளைவதைப் பற்றியும் மட்டிலும் வாதம் செய்யுங்கள்.

    ஆப்ரஹாமிய பயங்கரவாதத்தை நீங்கள் எதற்காக மறைக்க விழைகிறீர்கள்?

  27. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // இதை நிராகரிக்க எல்லா இந்துக்களுக்கும் உரிமை கிடையாது என்று உச்ச நியாஸ்தலம் கூறிவிட்டது.

    இந்து கோவில்களில் பிராமண ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் விதமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற தீர்ப்பை இன்று உச்ச நீதி மன்றம் வழங்கியிருக்கிறது. //

    இல்லை. இது ஒரு பிரச்சினை தொடர்பான தற்காலிக தீர்ப்புதானே – மேல்முறையீடு செய்யலாம் – ஒழிய ஒட்டுமொத்த இந்துமதத்தையும் கட்டுப்படுத்தும் இறுதித்தீர்ப்பல்ல.

    அதே உச்ச நீதிமன்றம் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்ற சட்டத்தை ஒன்றும் செய்யவில்லை.

    இது முழுக்க முழுக்க அரசியல்பாற்பட்டது.

    பேரனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கவேண்டுமென்பதற்காக, அரசமைக்க ஆதரவு கடிதம் வழங்காமல் இழுத்தடித்த மஹானுபாவரும், தனது தனிப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால் பதின்மூன்று மாதங்களே ஆன மத்திய அரசை கவிழ்த்தவரும், கற்றுக்கொடுப்பதை விடுத்து ஊற்றிக்கொடுப்பதை (தான் ஏற்படுத்திய வெள்ளச்சீரழிவுக்கிடையிலும் கூட) மும்முரமாக செய்துகொண்டிருக்கும் கருணை வள்ளலான அகிலாண்டேஸ்வரியும் தாங்கள் மத்திய அரசில் செல்வாக்கு செலுத்திய காலகட்டங்களில் ஒழுங்காக மத்திய அரசை இது தொடர்பாக முறைப்படி அழுத்தம் தந்து வற்புறுத்தியிருந்திருப்பார்களேயானால் மத்திய அரசே முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கும்.

    மட்டுமல்லாமல் ஒரு இந்து எந்த நூலை ஏற்கவேண்டும் எந்த நூலை மறுக்கவேண்டுமென்றெல்லாம் உச்சநீதிமன்றம் சட்டமியற்ற முடியாது.

    எனவே முறைப்படி சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் முத்துக்குமாரோ கிருஷ்ணகுமாரோ கருவறையில் தீபாராதனை காட்டி வேதம் ஓத முடியும்.

Leave a Reply to Rama Cancel reply

Your email address will not be published. Required fields are marked *