எதிர் வினை!

15
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 23 in the series 14 அக்டோபர் 2012

காத்தமுத்துப் பேத்திக்குக்

காதுவரை வாய்

காட்டுக் கூச்சல் போடும்

காது கிழியப் பேசும்

கட்டிக்கப் போகிறவனுக்குக்

கஷ்டம்தான் என்பர்

சொந்தங்களுக்கு இடையேயான

உரையாடல்களிலும் கூட

சந்தம் வைத்துக் கத்தும்

சந்தைக்கடை தோற்கும்

ஒன்றுமில்லா விடயத்திலும்

கத்திப் பேச

அதற்குக்

காரணங்கள் இருக்கும்!

பழநியப்பன் பேரனோ

பரம சாது

சொற்ப டெஸிபலுக்கே

சுருங்கிப் போகும் முகம்

கண்களைப் பொத்திக்கொண்டு

காது மடல்களைக்

கைகளால் மடிப்பான்

ஒலி கலந்த வார்த்தைகளைப்

பல சமயங்களில்

புன்னகையோ தலையசைப்போ

கொண்டு எதிர்கொள்வான்

நான்கு பேர்கள் இருக்கும்போது

மூன்று குரல்களோடும்

பெரும்பாலும் இவன்

மவுனம்கொண்டே பேசுவான்!

நியாய விலைக் கடையில்

அநியாயக் கூட்டம்

சர்க்கரை வாங்கி முடிக்கும்போது

இலவசமாக

இரவையும் சேர்த்துத் தந்தனர்

நிலவு

நலிந்து வளைந்து

பிறையெனப் பெயர் கொண்டு

மேகம் போர்த்தி

வடிகட்டிய வெளிச்சத்தை மட்டும்

வீதியில் ஊற்றி இருந்தது

நசுவுனி ஆற்றுப்

பாலத்தின் மேல் செல்லுகையில்

காய்ந்த ஆற்று மணலிலிருந்து

காற்றில் வந்த சலசலப்பு

நிச்சயம்

நீர்வரத்தினா லல்ல

மதகுப் பக்கம்

பழநியப்பன் பேரன் மடியில்

காத்தமுத்துப் பேச்சி

சாய்ந்திருந்தது ஒன்றும் காரியமல்ல

அவன் பேசிக்கொண்டிருக்க

அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்!

 

-Sabeer.abuShahruk

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32அக்னிப்பிரவேசம்- 5
author

சபீர்

Similar Posts

15 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    சிறுகதையை எழுதி இருக்கவேண்டிய அருமையான விஷயம். சிறப்பாக வந்திருக்கும்.

  2. Avatar
    இளங்கோ says:

    சூழலும் சொல்லப்பட்ட செய்தியும் கவிதை மயக்கத்தைத் தருகின்றன..வாழ்த்துக்கள்..

  3. Avatar
    ZAKIR HUSSAIN says:

    நசுவினி ஆறு …எனக்கு பழக்கப்பட்டது, ஒரு நாள் லாரி குடை சாய்ந்து [ தலைகுப்புற ] கவிழ்ந்து கிடக்க இடுக்களில் ஒரு மனிதன் பிணமாய். ஆற்றின் நீர் ஓட்ட சத்தம் சரியாக காதில் விழாத அளவுக்கு மக்கள் சத்தம்.

    இந்த இடத்திலும் ஒரு காதலை மென்மையாக சொன்னது …கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம். உன் தமிழுக்கு கிடைத்த ஒரு சின்ன மோதிரம்.

  4. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    /நிலவு
    நலிந்து வளைந்து
    பிறையெனப் பெயர் கொண்டு
    மேகம் போர்த்தி
    வடிகட்டிய வெளிச்சத்தை மட்டும்
    வீதியில் ஊற்றி இருந்தது/
    என்னை மிகவும் கவர்ந்த அழகிய வரிகள்.

    காத்தமுத்துப் பேத்தி பேச்சிழந்த நேரத்தில் ‘பேச்சி’ ஆகி இருக்கிறாள். எழுத்துப் பிழையை சரி செய்க!

    ஒரு சீரியல் கதையை சின்ன கவிதையில் அழகு வார்த்தைகளில் தந்திருக்கும் Craftsmanship நல்லாயிருக்கு!.
    இந்த மாதிரி கவிதை எழுதக் கூடிய ஓராயிரத்தும் மேற்பட்ட வைரமுத்தின் வாரிசுகள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். உன் திறமையை நான் அறிவேன் என்பதால் சொல்கின்றேன் ஆயிரத்தில் ஒருவனாக நீ இருந்தால் போதாது சபீர். கவிஞர்கள் பாராட்டும் கவிதை நீ எழுத வேண்டும் – எழுதுவாய் என நம்புகின்றேன்.

    ஒ.நூருல் அமீன்

  5. Avatar
    Ramdaus says:

    அருமையப்பு அருமை…மெலிதான ஆச்சரியம் முடிவில், சுவையாகவும் கூட..! நன்றி, அது சரி, ஏதும் ப்ளாக் எழுதுகிறீரா, புக்மார்க் செய்து கொள்வேனே?!

  6. Avatar
    sabeer says:

    வாசிப்பில் கலந்துகொண்ட சகோதரர்கள் பொன்.முத்துக்குமார், இளங்கோ, கவியன்பன், திருமலைசோமு மற்றும் ஓ.நூருல் அமீன் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

    ஜாகிர்: “ச்சின்ன மோதிரம்” செல்லத் தமிழ்.

  7. Avatar
    sabeer says:

    சகோதரர் Ramdaus அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

    தனியாக ப்ளாக் வைக்குமளவுக்கு அவகாசம் இன்னும் வாய்க்கவில்லை. தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. நேரம் வாய்க்கும்போதெல்லாம் கீழ்கண்டத் தளங்களில் எழுதுவதுண்டு. வரிந்துகட்டிக்கொண்டு எழுதுபவன் அல்லன். உள்ளம் தொடுபவைப் பற்றி தோன்றுபவற்றை ஆங்காங்கே சொல்லிச் செல்வதுண்டு. எழுதுபவை எல்லாம் திண்ணையின் தரத்திற்கு அமைந்துவிடுவதில்லை. எனவே, தொடர்ந்து திண்ணையில் ஒவ்வொரு வாரமும் என நிலைக்க இயல்வதில்லை என்பதே உண்மை.

    http://adirainirubar.blogspot.com
    http://www.satyamargam.com
    http://www.puthu.thinnai.com

  8. Avatar
    ramani says:

    காத்தமுத்து பேத்தியும், பழனியப்பன் பேரனும் எப்படி என்பதைச் சொல்லி மதகுப் பக்கம் அவர்களின் இயல்பு மாறி இருந்ததைப் பார்க்கும் முன்பு மேகம் வடிகட்டின வெளிச்ச இரவு பார்டர்கட்டி நிற்பது நன்றாக இருக்கிறது சபீர்! அடிக்கடி திண்ணைப் பக்கம் ஒதுங்குங்களேன். — ரமணி

  9. Avatar
    K A V Y A says:

    கவிதை விரசலாகப் போகிறது. மென்மையில்லை. கவிஞர் “என்னையறிக!” என்ற தாஹத்தில் எழுதியதைப் போலிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் கவிதை வரி ஒவ்வொன்றும் ஹைக்கூ கவிதைகளைப்போல் ஒரு சில சொற்களாதலாலும் போய்க்கொண்டேயிருப்பதாலும், இவர் என்னதான் சொல்லவருகிறார்? எப்போது முடிப்பார் என்ற நினைப்பு வந்துவிடுகிறது. க‌விஞ‌ர் பிற்கால‌த்தில் அனுப‌வ‌ முதிர்ச்சியில் ந‌ன்றாக‌ எழுதுவார்.

    க‌விதை மெதுவாக‌த்தான் செல்ல‌ வேண்டும். அத‌ன் அருமை அத‌ன் சுருங்கிய‌ வேக‌த்தில்தான்.

    க‌விதையின் க‌ருத்து-

    இய‌ற்கையில் கொஞ்ச‌மே பேசுப‌வன் ஒரு ஆடவன். இயற‌கையில் தேவைக்க‌திக‌மாக‌வே பேசும் ஒரு பெண்.

    பொதுவாக ஒரு பெண்ணின் பேச்சு என்ப‌து அவ‌ளின் உயிர்மூச்சு போல‌. அவ‌ள் ம‌ட்டும‌ன்று; அவ‌ளைச்சார்ந்த‌வ‌ர்க‌ளும் அவ‌ளிட‌ம் நிறைய‌ப் பேச‌ வேண்டும். அவ‌ள் பேசுவதையும் கேட்க‌ வேண்டுமென்ற ஏக்கம் பெண்ணுக்கு உண்டு. த‌னிமை பெண்ணுக்கு எதிரி. Loneliness and female make strange bedfellow. She may go hysterical or gets trapped in mental problems. என‌வேதான் பெண்களில் த‌த்துவ‌ஞானிக‌ள் தோன்றார். தத்துவ ஞானிகளுக்குத் தனிமை அல்வா சாப்பிடுவது போல. இந்து ம‌த‌ம் பெண்ணைப் பூமிக்கும் ஆணை ஆஹாய‌த்துக்கும் இணையாக‌ப்பேசும். He is spatial. She is temporal.

    என‌வே சுருங்க‌ப்பேச‌ல் ஆண்மையின் இல‌க்க‌ண‌ங்க‌ளில் ஒன்று; பேசுத‌ல், பேச‌ கேட்க‌ப்ப‌டுத‌ல் பெண்மையின் இல‌க்க‌ண‌ங்க‌ளில் ஒன்று.

    அண்மையில் நீயா நானா தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியில் காத‌லைப்ப‌ற்றிய‌ த‌லைப்பு. ஆணிட‌ம் பெண்க‌ள் என்ன‌ எதிர்பார்க்கிறார்க‌ள்? என்ற‌ கேள்விக்கு சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வ‌ந்த‌ ஒரு ந‌டிகை (செல்வி இல‌க்குமி நாய‌ர்) தான் ஆணிட‌ம் ந‌கைச்சுவை உண‌ர்வையே பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்றார். இன்னொரு சிற‌ப்பு விருந்தின‌ர் (ஒரு பெண் ப‌த்திரிக்கையின் ஆசிரிய‌ர் அவ‌ரும் பெண்ணே) அவ‌ரின் ப‌த்திரிக்கை ந‌டாத்திய‌ ச‌ர்வேயில் இக்கேள்வி கொடுக்க‌ப்ப‌ட்ட‌தாம். நிறைய‌ பெண்க‌ள் சொன்னார்கள்.
    “நான் பேசுவ‌தை செவிகொடுத்து ந‌ன்கு கேட்ப‌வ‌ரே என‌க்கு ம‌ணாளாக‌ வேண்டும்”
    இதை முத‌லில் வைத்து ம‌ற்ற‌ எதிர்ப்பார்ப்புக்க‌ளை பின்ன‌ர் வைத்த‌ன‌ர். உண்மை இதுவே என்ப‌தை பெண்க‌ளை ந‌ன்க‌றிந்தோர் சொல்வ‌ர். But Ms Lakhsmi Nair’s wanted list of Sense of Homour in her man means her man needs to share his thoughts and receive hers; sense of humour comes up only in such inter changes.

    இக்க‌விதை ஒரு பெண்ணின் இய‌ற்கை குண‌த்தையும் ஆணின் இயற‌கை குண‌த்தையும் முத‌லில் சொல்லிவிட்டு இறுதியில் அதை மாற்றி விட்ட‌து. இக்கவிதை மாந்தர்கள் இருவரும் சிறப்புக்குணத்தைக்கொண்டிருக்கவில்லை. They may differ in degrees, but not in kind. They are representative Man and representative Woman.

    இய‌ற்கை குண‌ங்க‌ளை மாற்றும் காத‌ல் போலியான‌து. ப‌ழ‌நிய‌ப்ப‌ன் பெய‌ர‌னுக்கும் காத்த‌முத்துவின் பெய‌ர்த்திக்கும் ந‌ட‌ப்ப‌தாக‌ச்சொல்ல‌ப்ப‌டும் இக்காத‌ல் காத‌ல‌ன்று; ஒரு ந‌டிப்பு.

    அவ‌ன் அவ‌ளின் இய‌ற்கை குண‌மான‌ பேசுத‌லைக் இர‌சித்துக்காத‌லிப்ப‌தாக‌வும், அவ‌ள் அவ‌னின் இய‌ற்கை குண‌மான‌ சுருங்க‌ப்பேசுத‌லை இர‌சித்துக்காத‌லிப்ப‌தாக‌வும் இருந்தால் அஃது உண்மைக்காத‌ல்; திரும‌ண‌ம் நிலைக்கும்.

    காதலிப்போர் பெண்ணை அவ‌ளுக்காக‌வும், ஆணை அவ‌னுக்காக‌வும் காத‌லிப்ப‌ர். One loves the ‘person’ which means, with warts and all.

    You cant love in parts. Loving in parts – i.e. select certain traits in the person and get enamoured of only such traits – is possible with others, not with your wife or husband. You have to love him or her, as a whole personality. If you can’t, there is no love there.

    அதே நிகழ்ச்சியில் அப்பெண் பத்திரிக்கையாளர் சொன்னது இது: ஒரு பெண் ஒரு பையனின் தலைமுடிக்காகவே காதலித்தாள். அவன் இரஜினி மாதிரி அலட்சியமாக தலைமுடி வாரி, அதைக்கலைப்பதாக இயற்கையாக செயததை அவள் இரசித்து அதைக்காதலாக்கினாள். அவள் தோழிகளிடமும் சொல்லியிருப்பாள். ஒருதலைக்காதல். பின்னொரு நாள், அவன் மொட்டையடித்துக்கொண்டு வந்தான். அவள் கனவுக்காதலன் உடைந்து நொறுங்கினான் அவள் மனதில்.த‌லைமுடி வாருதல் இய‌ற்கைய‌ன்று. அதை மாற்ற‌ முடியும். மாறும் எதையும் காத‌லிக்கும்போது அக்காத‌ல் போலி. நிற்காது.

    போலிக்காத‌லைப் போற்றுகிற‌து போலிருக்கிற‌து இக்க‌விதை.

  10. Avatar
    இளங்கோ says:

    கொல்லுங்க எஜமான். கொல்லுங்க..இந்தக் கவிஞர்களே இப்படித்தான் போலியா எழுதுவாய்ங்க. கொல்லுங்க எஜமான்.கொல்லுங்க..

    1. Avatar
      K A V Y A says:

      கவிதை போலி என்று சொல்லவில்லை. போலிக்காதலை போற்றுகிறது; அல்லது அஃதை உண்மைக்காதலென படிப்பவரை நம்ப வைக்கிறது என்றுதான்.

      போலிக்காதலை போற்றக்கூடாதென்று சொல்லவில்லை. போற்றுகிறது என்று மட்டுமே சொல்லப்படுகிறது. எஃதை எழுத வேண்டுமென்பது கவிஞரின் ஏகபோக உரிமை.

      இன்னும் சொன்னால், அப்பெண் தன் தான்மையையே (self) இழந்து விடுகிறாள். இஃது ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் நடப்பதுதான். பெண்தான் எல்லாவற்றையும் இழக்கவேண்டும். சிலவிடங்களில் நகைச்சுவையாகவும் இது நடக்கும். பெண் எம்.டெக்; மணாளன் பி.டெக். மணவிழா அழைப்பிதழில் பெண் பி.டெக் என்றுதான். பெண்ணின் சம்மதமும் உண்டு. இஃதாவது பரவாயில்லை, அடிப்படை குணத்தையே மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அது கொடுமை.

      காத்தமுத்துவின் பெயர்த்தி ஒரு சாதாரண தமிழ்ப்பெண். தன்னையே அழித்துக்கொள்வது அவளின் தமிழ்க்கலாச்சாரம். கண்ணகி தன் கணவனை ஒரு சொல்கூட சொல்லிக்கடியவில்லை ஆனால் காலம் கடந்தபின் கணவனை இழந்த பின், ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’என்று வீராவேப்பாகப் பேசினாள்.

      வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
      குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப்
      பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்
      நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ!

      என்று தன்முன் வந்து நின்ற‌ கணவனை ஒன்றும் சொல்லவில்லை. அப்பரத்தையரைத்தான் தேடிப்போகிறான் என்ற தெரிந்த போதும் ஒன்றும் சொல்லவில்லை.

      எல்லாம் தியாகம் எஜமான் தியாகம் ! சொல்லுங்க.நம்ம சபீர் சிலம்பைக்கரைத்துக்குடித்த போதையில் இக்கவிதையை யாத்து நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு தமிழ்ப்பெண்களின் சார்பில் நம் நன்றிகள் உரித்தாகுக.

  11. Avatar
    sabeer says:

    சகோ. காவ்யா,

    இவ்வாரத் திண்ணை வாசிக்க வந்தபோது தங்களின் கருத்தை வாசிக்க நேர்ந்தது. நன்றி சொல்லிச் சென்றபின் மீண்டும் இதை வாசிக்க வராததால் தங்களுக்கு பதிலுரைப்பதில் தாமதம்.

    முதலில், விமரிசனத்திற்கு நன்றி.

    இக்கவிதைப் போலிக்காதலைப் போற்றுவதாகச் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. சரியாகச் சொன்னால் காதலின் பரிமாணங்களில் உன்னதமான ஒன்றையே சொல்ல முயன்றிருக்கிறேன்.

    “காதல் அசாத்திய சக்திபெற்றது. தத்தம் தனித்தன்மைகளையே தன் காதலுக்காக முற்றிலும் எதிர்வினையாற்றுபவருக்கேக்கூட விட்டுக்கொடுத்துவிடும்”

    என்னும் எளிமையான விடயம் மட்டுமே என் கரு.

    நன்றி: சகோ. ரமணி மற்றும் புனைபெயரில் 

Leave a Reply to ”கவியன்பன்” கலாம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *