ஒட்டுண்ணிகள்

This entry is part 21 of 28 in the series 22 மார்ச் 2015

 

 

உன் உண்மை

எது உண்மை

என்னும் கேள்வி

இரண்டும் பலிபீடம்

ஏற

என் உண்மை

நிறுவப் படும்

 

அலைதல் திரிதலே

தேடல்

பிடிபட்டதே புரிதல்

என்னும்

விளக்கங்கள்

இடம்பிடிக்கும்

அகராதிகளில்

 

என் உண்மையின்

அரசியலில்

தனிமையின்

உயிர்ப்பு

தனித்துவத்தின்

ஆற்றல்

நீர்த்துப் போகும்

 

கரவொலிகள்

ஒட்டுண்ணிகளாய்

Series Navigationசீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரிதினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *