ஒரு பூ ஒரு வரம்

This entry is part 23 of 42 in the series 22 மே 2011

ஒரு பூ

சோலையை கொண்டாடியது.
அது மலர்ந்தும் மலராத தருணங்களில்
மண் வயசுக்கு வந்தது .
அந்தப் பூ
ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச் சிகளை
அருகழைத்து
முகவரி சொல்லிக் கொண்டிருந்தது .
யாரும் விலாசம் மறந்து விட லாகாது …..
மறக்காமல் வாசனையையும் பரிசளித்தது ,
கொஞ்சம் தேனையும்.
இதழ்களின் நுனியில்
பனித்துளி பரவசமானபோது
சூரியன் தாகம் தனித்து கொண்டான்
அடர்ந்த வெறுமைகளில்
அலைக் கழிந்த பேருக்கு
அன்னமாக ….இனிக்கும் கனியாக
அவதானிக்க இருந்தது .
பேச்சற்ற பேச்சு
கிளர்ந்து விடாத மௌனம்
பொங்கி வழிந்திடாத ஆசை
அத்தனையும்
சூழ்ச்சியின் சுண்டலில்
ஒரு சுவாரசியமாய்.
எனக்கும் அந்தப் பூ
வரம் தந்தது
ஒரு நதி தொலைந்த வனத்தில்
நெடுநாளாய்
அழுது புலம்பும் தேவதைக்கு
தன்னை,ஒப்படைக்க வேண்டி.

 

 

Series Navigationஅரசியல்பிரதிபிம்ப பயணங்கள்..
author

இனியவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *