ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்

0 minutes, 1 second Read
This entry is part 23 of 48 in the series 15 மே 2011
 

வார்த்தைக்கூடை நிரம்ப 

பலவண்ண பொய்களுடன்

வெளியேறுகிறேன்

காலைவெயில் நுகரும்

வியர்வையுடன்…

.

ஒவ்வொரு பொய்

துழாவியெடுத்து

சூடிக் கொள்ளும் வேளையிலும்

கண்ணீர்த்துளிகளுடன்

என் கற்பனை தோட்டத்தில்

ஒரு மலர் உதிர்கிறது…

.

நிலவு நீண்டிடும்

இருளினை அள்ளிப் பருகி

நாளின் இறுதியில் நுழைகிறேன்,

நிர்வாணமாய் நிற்கிறது

அருமை தோட்டம்..

.

மறுநாள் வியர்வை நுகர

நான் வெளியேறுகையில்

தோட்டம் நிரம்ப

வண்ண மலர்கள் பூத்துச்

சிரித்திருக்கின்றன..

.

– தேனு [thenuthen@gmail.com]

Series Navigationநீ தானாதட்டுப்பாடு
author

தேனு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *