ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?

author
12
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 13 in the series 20 ஜூன் 2016

ss07-orlando-florida-shooting-vigilவிஜய் விக்கி

சமபால் ஈர்ப்பு திருமணங்களை அமெரிக்கா அங்கீகரித்து ஏறக்குறைய
ஓராண்டிற்குள், அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் ஓர்லாண்டோ கேளிக்கை
விடுதியில் நடந்தேறியுள்ளது… சமபால் ஈர்ப்பு நபர்கள் வழக்கமாக
சந்தித்துக்கொள்ளும் பிரபலமான ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில், ஓமர் மதீன்
என்ற நபர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதில் 49 சமபால் ஈர்ப்பினர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர், 53 நபர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்… கடந்த ஞாயிற்றுக்குழமையன்று நடந்தேறிய இந்த
கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உட்பட
பலரும் தங்கள் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்துள்ளனர்… இந்த
தாக்குதல்தான், ஒரு தனிநபரால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்
எனவும், பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்
எனவும் அமெரிக்க வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது…
கொலைக்குற்றவாளியான ஓமர் மதீன் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், அந்த
கொடூர சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன… அமெரிக்காவின் குடியரசுக்கட்சி அதிபர் வேட்பாளர்
ட்ரம்ப், “இத்தகைய தாக்குதல்களை தடுக்கவேண்டுமானால் இசுலாமியர்களை இனி
அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது” என்று இந்த கொலைக்களத்தை தனக்கான
அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார்… இதற்கு நடுவே, “இசுலாமிய மதம்
சமபால் ஈர்ப்பை குற்றமாக பார்க்கவில்லை!” என்று அமெரிக்காவின் இமாம்
ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது… ஓர்லாண்டோ ரத்த வாடை
மறைவதற்கு முன்பே, “ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க
வேண்டும்!” என அரசை வலியுறுத்தி, இசுலாமிய அமைப்பு ஒன்று மதுரை வீதிகளில்
ஒட்டிய போஸ்டர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது..
இங்கே யாரும் நடந்த அந்த படுகொலைக்கு காரணத்தை தேட விரும்பவில்லை, இனி
அப்படியோர் அசம்பாவிதம் நடக்காமல் எப்படி தற்காத்துக்கொள்வது
என்பதுபற்றியும் ஆராய விரும்பவில்லை.. மாறாக, ஒருவரையொருவர்
குற்றம்சாட்டிக்கொண்டு, கிடைத்தவரையில் லாபம் பார்க்கவே
எத்தனிக்கிறார்கள்..
இங்கே ஒரு சமபால் ஈர்ப்பு நபராக, நடந்த சம்பவங்களுக்கு நான் எந்த
மதத்தையோ, அமைப்பையோ, குற்றம்சாட்ட விரும்பவில்லை… ஆணிவேரின்
பாதிப்பால் ஆட்டம்காணும் மரத்திற்கு, கிளைகளை குற்றம் சொல்லி யாதொரு
பயனும் இல்லை..
இந்த சம்பவத்தின் ஆணிவேர் ஓமர் மதீன் என்னும் தனி நபர்.. முப்பது வயதேயான
ஓமர் ஆப்கானிஸ்தானை பூர்விகமாகக்கொண்டவர், ஏழு வருடங்களுக்கு முன்பு
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த சித்தோரா யூசிபி என்ற பெண்ணை
மணந்துகொண்டார்.. ஓமர் உடன் வாழ்ந்த ஆரம்ப கால நாட்கள் மகிழ்ச்சியாகவும்,
பிறகு அவருடைய மனநலன் சார்ந்த பிரச்சினைகளால் நிறைய வருத்தங்களோடும்
கழிந்ததாக நாளேடு ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார் யூசிபி.. ஓமர்
மனநோயாளி எனவும், அவர் ஸ்டீராய்ட் மருந்துகள் எடுத்துக்கொண்டவர் என்றும்
கூடுதல் தகவல்களை தெரிவித்துள்ளார்… அதன்பிறகு ஏற்பட்ட மனஸ்தாபங்களால்
இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் யூசிபி
தெரிவித்துள்ளார்..
இவற்றைவிட ஓமர் மதீனைப்பற்றி வெளியான இன்னொரு தகவல்கள்தான் மிகவும்
அதிர்ச்சிகர ரகத்தினை சேர்ந்தது.. “ஒருபால் ஈர்ப்பாளர்கள் மீது அவ்வளவு
கொடூரமான தாக்குதல்களை நடத்திய ஓமரும் ஒரு கே’தான்” என்பதுதான் அந்த
செய்தி… ஓமர் மதீனுடைய நண்பர்கள் முதல் சுற்றத்தார் வரையிலும் பலரும்
அந்த செய்தியை உறுதிசெய்துள்ளனர்.. கே டேட்டிங் ஆப்ஸ்’களில் கணக்கை
ஏற்படுத்தி பல்வேறு நண்பர்களை சந்தித்ததாகவும், பலதரப்பட்ட கே
பார்களுக்கு சென்றிருப்பதாகவும் கூறுகிறார்கள்..
“மதீன் கே’வாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்… ஆனால், அதனை ஒரு அவமானமாக
கருதியதால் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதில்லை” என்கிறார் முதல் மனைவி
யூசிசிபி..
சம்பவம் நடைபெற்ற ஓர்லாண்டோ கேளிக்கையகத்திலேயே ஓமர் மதீனை பலமுறை
சந்தித்துள்ளதாக, பலரும் தெரிவித்துள்ளனர்..
சம்பவத்தை நேரில் பார்த்த ஜிம் வான் ஹார்ன் என்பவர், அந்த கேளிக்கை
விடுதியில் ஓமர் மதீனை பலமுறை பார்த்துள்ளவர்.. “ஓமர் ஒரு சமபால்
ஈர்ப்புள்ள நபர்தான்.. பலமுறை அங்குவரும் நபர்களுடன் ஓமர் நெருங்கி
பழகுவதை பார்த்திருக்கிறேன்… அவரது நடவடிக்கைகளில் எவ்வித
மாற்றத்தையும் நான் கண்டதில்லை…” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்…
அதேபோல ஓமர் உடன் கே டேட்டிங் ஆப்ஸ் மூலம் அறிமுகமான இரண்டு நபர்களும்,
காவல் நிலையத்தில் தங்களது ஓமர் உடனான பழக்கவழக்கங்கள் பற்றி
கூறியுள்ளனர்..
சமபால் ஈர்ப்பு நபராக இருந்தும் ஏன் ஓமர், தன்னைப்போலவே பாலீர்ப்பு
நாட்டம் கொண்டவர்களை அவ்வளவு கொடூரமாக கொல்லவேண்டும்?… அதுதான் அந்த
ஆணிவேரில் ஏற்பட்ட பழுது!…
உடலியல் ரீதியாக தன்னை சமபால் மீது நாட்டம் கொண்டவனாக ஓமர்
ஏற்றுக்கொண்டாலும், தான் ஏற்றுக்கொண்ட மதத்தின் மீது கொண்ட அதீத பற்றால்
தன்னை முழுமையாக அவரால் ஏற்கமுடியவில்லை… ஒருபக்கம் தனது உடலியல்
மாற்றங்கள் பாலீர்ப்பை ஏற்க வற்புறுத்த, மறுபுறம் மதம் சார்ந்த
நம்பிக்கைகள் அவற்றை புறந்தள்ள போராடியது… இந்த இரண்டு
போராட்டங்களுக்கும் நடுவே சிக்கித்தவித்த ஓமர், ஒருகட்டத்தில் தன்னையே
வெறுக்கத்தொடங்கியுள்ளார்…
Internalized Homophobia என்ற அபாயகரமான மனநிலையின், ஆபத்தான விளைவுதான்
இன்றைக்கு நம் கண் முன்னே நடந்துள்ளது… யாரோ நம்மை வெறுப்பதற்கும்,
தானே தம்மை வெறுப்பதற்கும் உள்ள வேறுபாட்டின் விளைவுதான் இந்த கொடூர
தாக்குதல்…
ஓமர் மதீன் பற்றி இதுவரை வெளியான தகவல்களை வைத்து பார்க்கும்போது, அவர்
Borderline Personality Disorder (BPD) என்னும் மனநல குறைபாடு
கொண்டவராகவே கருதமுடிகிறது.. பொதுவாகவே மனநோய்கள், குறிப்பிட்ட நபருக்கு
மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இயல்பு… ஆனால், இந்த BPD என்னும்
ஆளுமை குறைபாடு பெரும்பாலும் அந்த நபரை சார்ந்தவர்களையே அதிகம்
பாதிக்கின்றது.. இத்தகைய குறைபாட்டிற்கு ஆளானவர்கள், தங்கள் உணர்வுகளை
கட்டுப்படுத்தும் செயல்திறனை இழந்திருப்பார்கள்.. திடீர் கோபம், சட்டென
எடுக்கும் விபரீத முடிவு என விளைவுகளைப்பற்றி யோசிக்கமாட்டார்கள்.. அதீத
பதற்றம், மனச்சோர்வு என இன்னும் சில மனம் சார்ந்த பாதிப்புகளை
கொண்டிருப்பார்கள்.. தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்..
இன்னும் சிலரோ, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தனது வெறுப்பை தணிக்க
முயல்வார்கள்..
இத்தகைய பாதிப்பின் விளிம்பில் ஆட்பட்டிருந்த மதீன்தான் அந்த படுகொலை
சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும்…
மனம் ஒரு காற்றடைத்த பந்து போன்றுதான்.. ஒரு பக்கமாக அழுத்தினால், அது
செலுத்தும் திசையை நோக்கி பயணிக்கும்… இரண்டு புறத்திலிருந்தும்
நேரெதிரே அழுத்தம் கொடுத்தால் என்னவாகும்?.. அழுத்தம் அதிகமாகி, பந்து
வெடிக்கும்… அப்படியொரு திரிசங்கு நிலையில் சிக்கித்தவித்த மதீனின்
மனமும், வெடித்ததன் விளைவுதான் இன்றைக்கு நம் கண் முன்னே கொலைக்களமாய்
விரிந்துள்ளது…
சிறுவயது முதலாகவே தனக்குள் ஏற்பட்டிருக்கும் சமபாலீர்ப்பினை
உணரத்தொடங்க, ஒருகட்டத்தில் அதனை ஏற்று வாழவும் முனைந்ததன் விளைவுதான்,
அவருக்கு ஏற்பட்ட சமபால் உறவு நண்பர்களும், அதனை சார்ந்த
பழக்கவழக்கங்களும்… ஆனால், மதம் சார்ந்து தொடர்ந்து அவர் மனதிற்குள்,
தனது பாலீர்ப்பு பற்றிய குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மையாகி, அது
மனச்சோர்வு நோக்கி அவரை தள்ளியுள்ளது… அதன் நீட்சிதான் ஆளுமை குறைபாடாக
விஸ்தரித்து, ஆபத்திற்கு அடித்தளம் இட்டுள்ளது…
இன்றைக்கு சமபால் ஈர்ப்பை குற்றமாக கருதுகின்ற மதத்திலாக இருக்கட்டும்,
நாட்டிலாக இருக்கட்டும் இத்தகைய ஆளுமை குறைபாட்டு சிக்கல்கள் நிறைய
வளர்ந்துகொண்டே இருக்கின்றது…
BPD எனப்படும் ஆளுமை குறைபாடு இந்தியாவில் எத்தகைய பாதிப்புகளை
ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது தெரியுமா?… அதிலும் குறிப்பாக இந்த
குறைபாடு, பாலீர்ப்பு சிறுபான்மையின சமூகத்தில் கடுமையான விளைவுகளை
ஏற்படுத்தி வருகிறது..
சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் பதினாறு சமபால் ஈர்ப்பு இளைஞர்கள்
தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.. ஒருபக்கம் தனது பாலீர்ப்பை ஏற்றாகவேண்டிய
நிர்பந்தம், மறுபக்கம் இந்திய கலாச்சாரம் என்னும் காரணத்தின் வழியே தனது
பாலீர்ப்பை ஏற்க முடியாத அழுத்தம்… விளைவு, மனச்சோர்வு அவர்களை
தற்கொலையை நோக்கி தள்ளிவிடுகிறது…
மதீனின் படுகொலையை கண்டிக்கும் இந்திய அரசு, ஒவ்வொரு நாளும் இங்கே
தற்கொலை செய்துகொண்டிருக்கும் இளைஞர்களை ஏறிட்டுப்பார்க்க தயங்குகிறது…
ஒரு மனநல பாதிப்பு நிறைந்த இளைஞர் சமூகத்தை
உருவாக்கிக்கொண்டிருக்கிறது… ஆனால், இது எதனையும் அவர்கள் ஏற்க
முற்படுவதில்லை..
இங்கே மாற்றுப்பாலீர்ப்புகளை குற்றமென கருதும் பொதுத்தள சமூகம், ஒவ்வொரு
சமபால் ஈர்ப்பு நபர்களிடமும் சுய வெறுப்பை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது…
அது மனநோயாக நீட்சியடையும் தருணத்தில் ஏற்படப்போகும் பாதிப்பு எத்தகையது
என்பதற்கான ஆபத்தான உதாரணம்தான் ஓர்லாண்டோ படுகொலை சம்பவம்…
ஓர்லாண்டோவில் உயிர்நீத்த அந்த ஐம்பது உயிர்களே, பாலீர்ப்பு காரணத்தால்
பலியாகும் கடைசி உயிரிழப்பாக இருக்கவேண்டுமென, இறந்த தோழர்களின்
ஆன்மாக்களை பிராத்திக்கிறேன்!

Series Navigationகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 2திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //இங்கே மாற்றுப்பாலீர்ப்புகளை குற்றமென கருதும் பொதுத்தள சமூகம், ஒவ்வொரு
    சமபால் ஈர்ப்பு நபர்களிடமும் சுய வெறுப்பை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது…
    அது மனநோயாக நீட்சியடையும் தருணத்தில் ஏற்படப்போகும் பாதிப்பு எத்தகையது…//

    மாற்றுப்பாலீப்பு மக்களை குற்றமாக பொதுசமுகம் கருதக்கூடாது என்பது கட்டுரையாளரின் கருத்து.இப்படி நடத்தினால் இம்மக்கள் வெறுப்பின் காரணமாக ஒர்லாண்டோ மதீனாக மாறலாம்.என்று கவலைபடுகிறார்.

    ஒரு மனிதனிடம் பால் ஈர்ப்பு மட்டும் இருக்கவில்லை.பல ஈர்ப்புகள் உண்டு,பொன்னில் ஈர்ப்பு,பொருளில் ஈர்ப்பு,மண்ணில் ஈர்ப்பு உண்டு,மதத்தில் ஈர்ப்பு உண்டு.

    இந்த ஈர்ப்புகள் முறையான அனுமதிக்கப்பட்ட நேர்மையான வழியில் நிறைவு செய்யப்பட்டால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படுத்தாது.ஈர்ப்புகளை நிறைவேற்ற தவறான பாதையை தேர்தெடுக்கும் போதே பிரச்சினை வருகிறது.

    இன்று இந்திய சமுதாயத்தில் ஓரினப் புணர்ச்சி அங்கீகரிக்கப்படா விடினும்,அவர்கள் அவர்களுக்குள் தங்கள் தேவையை தனிப்பட்ட முறையில் வெளிப்படையாக இல்லாமல் நிறைவேற்றியே வருகின்றனர்.

    இந்த மாற்று பாலீர்ப்புக்கு சட்ட சம்மதம் கொடுத்து யாரும் எப்படியும் மேயலாம் என்று வரும்போது.இதுவரை மறைமுகமாக பால்களை பரிமாரியவர்கள், சட்ட சம்மதத்துடன் பகிரங்கமாக ஆட்களை தேடுவார்கள்.இந்த இயற்கைக்கு மாற்றமான புணர்ச்சியை விரும்பாதவர்களையும் ஆசைகாட்டி இழுத்து ஆள் சேர்க்கும் வேலை தொடரும்.இயற்கையின் சமநிலை குலையும்,குடும்ப உறவுகள் சீர் குலையும்.

    அமைதியான ஆண் பெண் குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டு,அதன் எதிரொலி எதிகால குழந்தைகளையும் பாதித்து,முடிவில் நாகரீக சமுதாயம் நாசமடையும்.இந்த இழப்பு ஒர்லாண்டோ இழப்பை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்.இதைத்தான் கட்டுரையாளர் விரும்புகிறார்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // இந்த மாற்று பாலீர்ப்புக்கு சட்ட சம்மதம் கொடுத்து யாரும் எப்படியும் மேயலாம் என்று வரும்போது.இதுவரை மறைமுகமாக பால்களை பரிமாரியவர்கள், சட்ட சம்மதத்துடன் பகிரங்கமாக ஆட்களை தேடுவார்கள்.இந்த இயற்கைக்கு மாற்றமான புணர்ச்சியை விரும்பாதவர்களையும் ஆசைகாட்டி இழுத்து ஆள் சேர்க்கும் வேலை தொடரும்.இயற்கையின் சமநிலை குலையும்,குடும்ப உறவுகள் சீர் குலையும். ……. அமைதியான ஆண் பெண் குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டு,அதன் எதிரொலி எதிகால குழந்தைகளையும் பாதித்து,முடிவில் நாகரீக சமுதாயம் நாசமடையும். //

      ஆதாரமற்ற பதற்றத்தில் விளைந்த குற்றச்சாட்டு. ஒருவேளை ஆசைகாட்டப்பட்டு ஒருவர் விரும்பி இதில் ஈடுபட்டால் அதை நாம் தடுக்க இயலாது. காரணம் பாலுணர்வு ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் மற்றும் தேர்வு. அடுத்தவரை விருப்பத்தைமீறி பலவந்தப்படுத்தாதவரை அது அனுமதிக்கப்படக்கூடியதே. பலவந்தப்படுத்தப்பட்டால் சட்டரீதியாக கையாளலாம்.

      அதுபோல இந்த இயற்கையின் – பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு மிகச்சிறு கிரகத்தின் ஒரு உயிர்க்குலத்தின் சிறு எண்ணிக்கையிலானவர்களின் ஒரு உயிரியல் தேர்வால் இந்த இயற்கை சமநிலை குலையும் என்பதெல்லாம் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது.

      1. Avatar
        ஷாலி says:

        //அதுபோல இந்த இயற்கையின் – பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு மிகச்சிறு கிரகத்தின் ஒரு உயிர்க்குலத்தின் சிறு எண்ணிக்கையிலானவர்களின் ஒரு உயிரியல் தேர்வால் இந்த இயற்கை சமநிலை குலையும் என்பதெல்லாம் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது…//

        பொன்.முத்துக்குமார் அவர்களே! என்ன எழுதுகிறீர்கள்? இயற்கை சமநிலை குலையும் என்றால் உடனே சூரிய மண்டலத்தையும் தாண்டி பால் வீதி பிரபஞ்சத்தையும் கடந்து அதற்கு அடுத்த ஆண்றோமேடா பிரபஞ்சத்துக்குப் போய்…அப்படியே சூப்பர்நோவா நட்சத்திரம்,குவாசர் என்று போய்கொண்டே இருப்பீர்களா? நகைச்சுவையாக யார் பேசுவது?நீங்களா அல்லது நானா?

        நாம் பேசுவது பூமியில் வசிக்கும் ஆண் பெண் சமநிலையை.உங்கள் விருப்பப்படி ஆணும்..ஆணும், பெண்ணும் பெண்ணும்,கூடி குடும்பம் நடத்தினால் இனி வரும் காலங்களில் குழந்தை பிறப்பு,குடும்ப உறவு,சமூக அமைதி, அனைத்தும் குலையத்தான் செய்யும்.மேல் நாடுகளில் இந்த சீர் குலைவு ஆரம்பித்துவிட்டது.

        உங்கள் கருத்துப்படி சிறு எண்ணிக்கையில் ஆரம்பித்த ஓரினப்புணர்ச்சியின் எழுச்சிதான் எய்ட்ஸ் என்னும் கொடிய நோயை உலகெங்கும் பரப்பி உயிர்ப்பலி வாங்கியது.காண்டம் உபயோகிக்கச் சொல்லி பட்டி தொட்டி எங்கும் அரசு பரப்புரை செய்தது எதற்க்காக?எயிட்ஸ்சின் ஊற்றுக் கண்ணே ஓரினப் புணர்ச்சிதானே!நான் சொல்லவில்லை ஆய்வுகள் சொல்கின்றன.

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          அறுநூறு மக்களில் சிறு சதவீதம்பேர் ஒரு பாலினத்தவராக இருந்தால் உடனே காலப்போக்கில் ஒட்டுமொத்த மானுட சமூகமே அப்படி மாறிப்போய்விடும் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் பேசுவதுதான் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

          அப்படி எந்தெந்த மேல் நாடுகளில் என்னென்ன சீர்குலைவு ஆரம்பித்துவிட்டது என்று சொல்ல முடியுமா ?

  2. Avatar
    அழகர்சாமி சக்திவேல் says:

    அன்புள்ள ஷாலி ,

    சமபால் புணர்வு என்பது இயற்கைக்கு முரணானது என்று சொல்ல உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? உலகம் முழுதும், அறிவியல் படித்த மன நல மருத்துவர்கள் ஒன்றாய்க் கூடி “சமபால் புணர்வு இயற்கைக்க்கு மாறானது அல்ல …அது ஒரு நோயும் அல்ல” என்று சமீபத்தில் விட்ட மருத்துவ அறிக்கையை நீங்கள் படிக்கவில்லை போலும். இந்திய மன நலச் சங்கமும் இதை ஆமோதித்து அறிக்கை விட்டு உள்ளது\. அதீத மத உணர்வோடு வாழும் சமூகம் கொண்டுள்ள மூட நம்பிக்கைதான் சமபால் புணர்வினை இயற்க்கைக்கு முரணானதாய் நினைக்கிறது. ஆனால் அறிவியல் உணர்வு உள்ள எவனும், சமபால் புணர்வு என்பது ஆண் பெண் பாலீர்ப்பு போன்ற இன்னொரு வகை பாலீர்ப்பு என எளிதில் புரிந்து கொள்வான் .

    சமபால் புணர்வு குறித்து இன்னும் தெரிந்து கொள்ள தயவு செய்து நான் இதற்கு முன்னர் எழுதிய என் கவிதைகளை படியுங்கள் .

    சமபால் புணர்வு உணர்வு கொண்டோர் ஒழுக்கமின்றி பல பேரோடு உடல் உறவு கொள்வதாய் நீங்கள் குறை பட்டு இருந்தீர்கள் . நீங்கள் “கங்கையில் இருந்து வால்கா வரை” படித்தது உண்டா? பழங்காலத்தில் தாய் தான் மகனோடு உறவு கேள்வது வழக்கமாய் இருந்தது . ஒரு பெண் பலரோடு உடல் உறவு கொள்வது வழக்கமாய் இருந்தது . என் இப்போதும் ஆண் பலரோடு உடல் உறவு கொள்கிறான் . அப்படிப்பட்டவனை நாம் ஒழுக்கக்கேடானவன் என்று சொல்லலாம் . ஆனால் அவனைத் துப்பாக்கியால் சுடலாமா ?

    சமூகம் சமபால் புணர்வு உணர்வினை அங்கீகரித்தால் நிச்சயம் சமபால் புணர்வு உணர்வு கொண்டோரிடமும் ஒழுக்கம் வளரும் .

    அழகர்சாமி சக்திவேல்

  3. Avatar
    Alagersamy Sakthivel says:

    நிறைய பேரின் எண்ணம் “1)சமபால் ஈர்ப்பு இயற்கைக்கு முரணானது. 2) சமபால் ஈர்ப்பு உடையோர் எப்படியும் மேயும் ஒழுக்கமற்றவர்கள். 3) சமபால் ஈர்ப்பு உடையோரை அனுமதித்தால் மற்ற ஆண்-பெண் உறவில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் சமபால் ஈர்ப்பு உடையோரின் காம வலையில் விழுந்து நாசமாய்ப் போவர் ” என்பதே. அப்படி நினைப்பதன் ஆழ்ந்த விளைவுதான் இந்த ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூடு.
    1) பல் வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சமபால் ஈர்ப்பு ஏன் வருகிறது என்பது குறித்து மன நல மருத்துவர் சங்கங்கள் சொல்லும் விளக்கம் “The Reason for Gay is Nature and Nurture” என்பதே. அதாவது சமபால் ஈர்ப்பு இயற்கையாகவோ அல்லது வளரும் சூழ்நிலையாலோ வரக்கூடியது என்பதே அதன் பொருள். உலக மன நல மருத்துவ சங்கங்களின் சமீபத்திய அறிக்கை “சமபால் ஈர்ப்பு என்பது ஒரு மன நோய் அல்ல. அது குற்றமோ அல்ல. மாறாய் அது இன்னொரு வகை காம ஈர்ப்பு” என்று விளக்கியிருக்கிறது. தவத்திரு வேதாத்திரி மகரிஷி, தனது புத்தகத்தில் “பரிணாம வளர்ச்சியின் அறிவியல் கண்ணோட்டத்தின் படி, முதலில் தோன்றிய ஜீவ ராசிகளுக்கு, ஆண் உறுப்போ பெண் உறுப்போ இருந்திருக்காது. காலப்போக்கில், உடல் வெப்பத்தின் வெளிப்பாடு அதிகமாகி, அது வெளிப்படுவதற்காய், ஜீவ ராசிகளில் பிறப்பு உறுப்பு தோன்றியது. அந்த வெப்பத்தின் இன்னொரு வெளிப்பாடே உடல் உறவு. அப்படி உடல் உறவு கொள்கையில், வலிய ஜீவராசியின் உறுப்பு நீண்டும், மெலிய ஜீவ ராசியின் உறுப்பு குழிந்தும் போனது” என்றும் விளக்கம் சொல்லிக்கொண்டு போகிறார். வேதாத்திரி மகரிஷி சொன்னதை கூர்ந்து பார்த்தால், மனிதன் இயற்கையில் சம ஈர்ப்பு உடையவன் என்றும், காலப்போக்கில் ஆண்-பெண் உறவிற்கு மாறியவன் என்பதும் புரியும்.
    2) சமபால் ஈர்ப்பு உடையோர் எப்படியும் மேயும் ஒழுக்கமற்றவர்கள் என்று சொல்வது சரியான வாதம் அல்ல. ஆதியில் பிறந்தது ஆதாமும் ஏவாளும் மட்டுமே என்றால், ஆதாமின் பேரப்பிள்ளை, ஒன்று ஆதாமின் மகன் – ஆதாமின் மகள் உறவில்(சகோதரன்-சகோதரி உடல் உறவு) பிறந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆதாம் – ஆதாமின் மகள் உடல் உறவில் (தந்தை-மகள் உறவு) பிறந்து இருக்க வேண்டும். இது போன்ற உறவினை பிரபல நூல் “கங்கையில் இருந்து வால்கா வரை” யும் விளக்கமாய்ச் சொல்கிறது. தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும் என்றால் ஆண்-பெண் உறவு போல ஆண்-ஆண் உறவும் , பெண்-பெண் உறவும் அங்கீகரிக்கப்பட வேண்டும். சமபால் ஈர்ப்புடையோரும் குடும்பமாய் வாழ அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நாம் அவர்களிடமும் “ஒருவனுக்கு ஒருவன்” என்ற ஒழுக்கத்தை எதிர் பார்க்க முடியும்.
    3) ஆண்களும் பெண்களும் சமபால் ஈர்ப்பு உடையோரின் காம வலையில் விழுந்து நாசமாய்ப் போவர் என்பது ஆதாரமற்ற ஒரு நம்பிக்கை. ஒரு பெண் நினைத்தால் பத்து ஆண்களுடன் கள்ள உறவு வைத்து, ஆண்களை நாசப் படுத்த முடியும். ஆனால் அப்படி நடக்காமல் இருக்க சமூகம் “ஒருவனுக்கு ஒருத்தி என வாழுங்கள்” என எச்சரிக்கிறது. அதைப் போல்தான் சமூகம் சமபால் ஈர்ப்புடையோரையும் கையாள வேண்டும். “ஒருவனுக்கு ஒருவன் அல்லது ஒருத்திக்கு ஒருத்தி” என சமூகம் நிர்பந்தித்தால் சமபால் ஈர்ப்புடையொரும் ஒழுக்கமாய் வாழ்வர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மாறாய் சமூகம் இப்படி துப்பாக்கி கொண்டு அழிப்பது எந்த வகை நியாயம்? சமூகத்திற்கு ஒரு கேள்வி…பல பேரோடு உறவு கொள்ளும் ஆண் அல்லது பெண்ணை நீங்கள் என்றாவது சுட்டுக் கொல்ல அனுமதிப்பீர்களா? இல்லையென்பது உங்கள் விடை என்றால் அந்த சட்டத்தில் சமபால் ஈர்ப்புடையோரையும் சேருங்கள்.

    அழகர்சாமி சக்திவேல்

  4. Avatar
    Rama says:

    Mr Shali, gay relationship in many countries is legal including Australia where I live. The sky had not fallen, society is intact and all fear mingering by the likes you is not happening

  5. Avatar
    ஷாலி says:

    “சமபால் புணர்வு’ என்று அழகாக எழுதிவிட்டால் “ஓரினப்புணர்ச்சிக்கு” சமுக அங்கிகாரம் கிடைத்துவிடும் என்று திரு.அழகர்சாமி சக்திவேல் கருதுகிறார். இது இயற்கையான உறவுதான் என்று மேலும் தம் கட்டுகிறார்.எது இயற்கை? இரு ஆண் பெண் உயிரினங்கள் ஒன்று கூடி தனது சந்ததியை பெருக்குவது இயற்கை.

    இதற்க்கு மாறாக,ஆணும்,ஆணும்,பெண்ணும் கட்டிப்புரண்டு,ஒட்டி உறவாடுவது எப்படி இயற்கையாகும்? இயற்கையின் அடிப்படைத்தேவையான சந்ததி வளர்ச்சிக்கு இந்த கூடா இணையால் பயனுண்டா? இயற்கையின் அடிப்படையான,உயிர்களை உருவாக்கி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஆண் பெண் உறவும், ஆண்..ஆண்,பெண்..பெண் சேரும் மலட்டு ஜோடிகள் எப்படி இயற்கையாக முடியும்.?

    //பழங்காலத்தில் தாய் தான் மகனோடு உறவு கேள்வது வழக்கமாய் இருந்தது . ஒரு பெண் பலரோடு உடல் உறவு கொள்வது வழக்கமாய் இருந்தது.//

    ஒரு ஜோடி தாய் தந்தையிலிருந்துதான் இவ்வுலகமே பல்கிப் பெருகியது.அறிவியலும்,ஆன்மீகமும் இதனை ஒப்புக்கொள்கின்றன. உலகில் ஒரு குடும்பம் மட்டும் இருக்கும் சூழலில் தாய் மகன் உறவு அறிவியல் பூர்வமானதுதான்.ஆன்மீகமும் அதை ஏற்றுக்கொண்டதுதான்.

    இன்று இந்த கூடா உறவை நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஐந்து வயதில் நீங்கள் அணிந்த ஆடையை இப்போது அணிந்து கொள்ள உங்களால் முடியுமா? முடியாது! கூடாது!

    //சமூகம் சமபால் புணர்வு உணர்வினை அங்கீகரித்தால் நிச்சயம் சமபால் புணர்வு உணர்வு கொண்டோரிடமும் ஒழுக்கம் வளரும்.// .

    ஓரினப் புணர்ச்சியாளர்களிடம் ஒழுக்கம் வளர்வதற்கு, சமுகம் அவர்களின் செயல்களை அங்கீகரிக்க வேண்டுமாம்? இப்படி அங்கீகரிக்க மறுத்தால் ஒழுக்க சீர்கேட்டில்தான் அவர்கள் இருப்பார்களாம்.சமுகம் அப்படி அங்கிகரித்து,ஒட்டுமொத்த சமூகமும் நாசமாகப் போகவேண்டும் என்று திரு.அழகிரிசாமி சக்திவேல் விரும்புகிறார்!

  6. Avatar
    ஷாலி says:

    //“ஒருவனுக்கு ஒருவன் அல்லது ஒருத்திக்கு ஒருத்தி” என சமூகம் நிர்பந்தித்தால் சமபால் ஈர்ப்புடையொரும் ஒழுக்கமாய் வாழ்வர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.//

    திரு.அழகர்சாமி சக்திவேல் ஒரு உண்மையை தெளிவாக ஒப்புக்கொள்கிறார்.ஓரினப்புணர்ச்சியாளர்கள் இதுவரை ஒழுக்கமாக வாழவில்லை.சமுகம் அங்கிகாரம் கொடுத்தால்தான் இனி ஒழுக்கத்தோடு வாழ்வார்கள் என்கிறார்.

    ஓரினப் புணர்ச்சி வேட்கை ஒரு மனிதன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அவன் கருவாகி வளரும் ஜீன்களிலே ஏற்பட்டு விடுவதும்,மற்றும் சிலர் வளரும் போது சுற்றுச்சூழல் காரணமாக மாறி விடுவதும் நடைமுறையில் உள்ளது.இந்த இயற்கையின் மாறுபாட்டுக் குறையை புரிந்து கொண்டு அந்தக்குறை வராமல் தடுப்பதற்கு சமுகம் முற்படவேண்டுமே தவிர.
    ஆரோக்கியமானவர்களையும் நோயாளிகள் லிஸ்டில் சேர்த்து விடுவது அறிவுடைமை அல்ல.

    திரு.அழகர்சாமி சக்திவேல் அழைப்பது.நாமெல்லாம் ஒண்ணுகுள்ளே ஒன்னு!

    ‘ ஆணென்ன பெண்ணென்ன
    நீயென்ன நானென்ன
    எல்லாம் ஒர்குலம்தான்.”

    என்ன! புரிகிறதா? பழைய பாடலின் புதுப்பொருள்?

  7. Avatar
    ஷாலி says:

    ஓரினப்புணர்ச்சிக்கு எல்லா நாடுகளும் அங்கீகாரம் கொடுத்து விட்டார்களாம்.திரு.ராமா…அவர்கள் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் கூட அனுமதி கொடுத்துவிட்டார்கலாம்.இதனால் வானம் இடிந்து விழவில்லை.என்று மகிழ்ச்சியுடன் எழுதுகிறார்.

    திரு.ராமா சொல்வது உண்மையென்று ஏற்றுக்கொண்டு பார்த்தாலும்.இவர் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் ஓரினப்புணர்ச்சியாளர்கள் இரத்ததானம் செய்ய ஏன் தடை விதித்துள்ளார்கள்?

    திரு.ராமாவுக்கு கொடுக்கப்பட்ட உரிமை ஏன் ஓரினப்புணர்ச்சியார்களுக்கு இன்றும் மறுக்கப்படுகிறது.காரணம் ஒன்றுதான்.இவர்களால்தான் எய்ட்ஸ் நோய் பயங்கரமாகப் பரவுகிறது.

    உலகில் உள்ள 77 நாடுகளில் ஓரினப் புணர்ச்சிக்கு கடும் தண்டனை சட்டம் அமுலில் உள்ளது.

    நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பு என்று சொல்லப்படும் ஆனாப்பட்ட அமெரிக்காவின் பதினான்கு மாநிலங்களில் இன்னும் ஓரினபுணர்ச்சிக்கு சட்ட பூர்வ தடை உள்ளது.அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும்,இம்மாநிலங்கள் அதை அனுமதிக்கவில்லை.

    ஓரினப் புணர்ச்சியாளர்கள் வானிலிருந்து வந்த நெருப்புக் கற்கள் மழையால் (Meteor shower) அழிக்கப்பட்டார்கள் என்று பைபிளும்,குர் ஆனும் கூறுகின்றது.

    ஆதியாகமம்-19:24, “அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம்,கொமோரா,நகர்களின் மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.”

    குர் ஆன்.”15:74. “ அவர்களுடைய ஊரை மேல் கீழாக புரட்டி விட்டோம்;இன்னும் அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாளான கற்களைப் பொழியச் செய்தோம்.”

    இதுவரை ரஷ்யாவின் இன்புருன்ஸ்க் நகரில்தான் விண்கல் வீழ்ந்து சிதறியது.இனி திரு.ராமா அவர்கள் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மீதும் சுட்ட கற்கள் விழ வாய்ப்பு உள்ளது.எதுக்கும் சுதாரிப்பா இருந்து கொள்ளுங்கள்.!

  8. Avatar
    Rama says:

    Mr Shalli, Lesbian women can donate blood in Australia. There goes your pet theory of homosexuals cannot donate blood.The reason why men cannot do so is higher prevalence of STDs in Homosexual men rather than any moral or ethical reasons.It looks like this restriction will also change following elections on Saturday. If God want to punish homosexuals, it is a funny weird reason .How come He wants to punish the males only with HIV? Lesbian have the lowest risk sexually transmitted diseases than in any other group including heterosexuals, both men and women.
    ÿour other statement is laughable”ஒரு ஜோடி தாய் தந்தையிலிருந்துதான் இவ்வுலகமே பல்கிப் பெருகியது.அறிவியலும்,ஆன்மீகமும் இதனை ஒப்புக்கொள்கின்றன.” I presume it is from Bible and koran such scientific truth came out.

  9. Avatar
    ஷாலி says:

    //ÿour other statement is laughable”ஒரு ஜோடி தாய் தந்தையிலிருந்துதான் இவ்வுலகமே பல்கிப் பெருகியது.அறிவியலும்,ஆன்மீகமும் இதனை ஒப்புக்கொள்கின்றன.” I presume it is from Bible and koran such scientific truth came out.//

    நீங்கள் சிரிக்கும் அளவுக்கு ஆன்மீகமும் அறிவிலும், தொடர்பே இல்லாத தொலை தூரத்தில் இல்லை.தயவு செய்து கருத்துக்களை தமிழில் அடிக்க முயற்சி செய்யுங்கள்.

    Genetic Adam and Eve may have lived around same time, study shows.

    https://www.geneticliteracyproject.org/2015/03/26/genetic-adam-and-eve-may-have-lived-around-same-time-study-shows/

    Mitochondrial Eve & Y-Chromosome Adam. Tracing History Through Single DNA Molecules.

    https://wiki.uiowa.edu/pages/viewpage.action?pageId=127692770

Leave a Reply to பொன்.முத்துக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *