கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்

This entry is part 12 of 13 in the series 20 ஜூன் 2016

கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம் 16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை வகித்தார்.

” தி தமிழ் ஸ்டோரி “ ( The Tamil story ) என்ற ஆங்கில நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நூலில் வவேசு அய்யர், புதுமைப்பித்தன், பாரதி முதற்கொண்டு 88 தமிழ்ச்சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன் இதில் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்..” என்ற கதையும் இடம்பெற்றுள்ளது. மற்றும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சி.ஆர் ரவீந்திரன், சு. வேணுகோபால் ஆகியோரின் கதைகளும் இடம் பெற்றுள்ளன Tranquebar Press, NewDelhi வெளியிட்டுள்ளது. விலை ரூ 850 .

புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பழைய தலைமுறையினரின் வாழ்க்கையையும் எழுத்துப்பாணியையும் அறிந்து கொள்ள இத்தொகுப்பு பயன்படுவதாக கருத்துரைகள் வழங்கப்பட்டன.

சொக்கலிங்கனார் “ அறிவுத்தொழிலும், இலக்கியமும் ‘ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி : கே. ஜோதி

Kanavu 8/2635, Pandian nagar, Tiruppir 641 602 ( ph. 9486101003 )

Series Navigationதொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்My two e-books for young adults
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *