கருவூலம்

This entry is part 13 of 28 in the series 22 மார்ச் 2015

 

 

இறகை உதிர்க்காத

சிறகை மடக்காத

பறவையோடுதான்

பயணம் செய்கிறேன்

மலைகளைத்தாண்டி

கடல்களைக்கடந்து

எல்லைகளின்றி

இயங்கிவருகிறேன்

நுணுக்கமாய்ப்பார்த்தும்

நுகர்ந்தும்

உணர்வைக்குழைத்துப்

படைத்து வருகிறேன்

 

அசைவுகளாலும்

பாவங்களாலும்

மின்னும் ஓவியத்தை

வரைந்து வருகிறேன்

 

மெழுகுவர்த்தியாயும்

மெழுகாயும் என்னைப்

பகிர்ந்துகொள்கிறேன்

 

மேகமாகவும் அருவியாகவும்

அணைக்கத் தவிக்கிறேன்

அணைத்துக்கொள்கிறேன்

 

ஈரமாய் இருந்து

இதயம் கரைந்தோரை

தென்றலாய்ப் பழகி

கரம்கொடுத்தோரை

கல்வெட்டாய்ப்

பதிவுசெய்கிறேன்

 

இப்படியாக நான்

நாளும்

பூட்டித்திறக்கிறேன்

கருவூலத்தை

 

26.02.2014 மாலை 5.45க்கு 67எண் பேருந்தில் எஸ். இராமகிருஷ்ணனின் ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ சிறுகதைத்தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தபோது)

Series Navigationநிழல் தந்த மரம்வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *