கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)

This entry is part 21 of 43 in the series 29 மே 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !”

 

கலில் கிப்ரான். (Mister Gabber)

 

 

+++++++++++

இசை தனித்துவ மொழி

+++++++++++

 

 

 

இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது

அது உயிரூட்டும் உணர்வு !

இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது

அதுவே அதன் நெஞ்சு !

படைக்கும் போது

கடவுள்

இசை யெனும்

தனித்துவ மொழியை

மனிதனுக்கு அளித்துளான் !

அனைத் துக்கும் வேறு பட்ட

இனிய மொழி அது !

ஆதி மனிதன்

அதன் உன்னதம் பாடினான்

அடர்ந்த கான கத்தில் !

இசை மகள் அரசனின்

இதயம் கவர்ந்து

ஆசனத்தி லிருந்து

இறங்கி வரச் செய்தாள் !

 

+++++++++++

 

ஊழ் விதிப் புயலின்

அசுரத் தாக்கலில்

பாழ் பட்டுப் போன

மெல்லிய பூக்களே

நமது ஆத்மா வெல்லாம் !

அதிகாலைத் தென்றலில் கூட

ஆடி நடுங்கிடும்

ஆத்மாக்கள் !

வானி லிருந்து வீழும்

பனித் துளிகளால்

கூனிப் போகும் நமது ஆத்மா !

 

+++++++++++

 

பறவையின் இசை ஒலிகள்

மனிதரின்

உறக்கம் கலைத்திடும் மங்கிய

உதயப் பொழுதில் !

முடிவிலாக் கடவுளின்

உன்னத

மகத்துவம் பாடும் போது

மனிதரை

ஒன்று படுத்த

அழைப்பிதழ் அனுப்பிடும்

புள்ளினத் தின்

இசை ஓசை !

 

 

(தொடரும்)

 

****************

 

தகவல் :

 

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

 

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

 

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

 

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

 

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

 

For further information:

The Prophet By Kahlil Gibran :

 

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

 

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

 

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

 

 

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2011)

 

 

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *