கவிஞனாகிறேன்

This entry is part 4 of 10 in the series 27-மார்ச்-2016

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

© Copyright 2010 CorbisCorporation
இதை இதை
எழுதவேண்டுமென்று
எண்ணியதில்லை
எண்ணுவதுமில்லை

அது அது
வந்து நச்சரிப்பதால்தான்
எனது எழுதுகோல்
உச்சரிக்கிறது

அதுவரை தெரியாதது
அடுத்தடுத்து தெரிகிறது

இருட்டுக்குள் வெளிச்சம்
வழிகாட்டுகிறது

சூத்திரம் இல்லாமல்
சூட்சுமம் அவிழ்கிறது

திறவுகோல் இல்லாமல்
பூட்டுகள் திறக்கின்றன

பார்ப்பதால் உடன்
பாதிக்கப்படுகிறேன்

எண்ணுவதால் என்னை
இழந்துவிடுகிறேன்

கவனம் கூடி
கரைந்துவிடுகிறேன்

பறவையாகி
பறந்துவிடுகிறேன்

விதவிதமாக
பொருள்புரிகிறேன்
புரிந்ததைப் புதிதாய்ப்
புரியவைக்கிறேன்

அதிசயம்கண்டு
அசந்துவிடுகிறேன்

வியப்புற்று என்னையே
வியக்கிறேன்

ஆனந்தமாய் ஒரு
கவிதையடைகிறேன்

கவிதையைக்கண்டு
கர்வமடைகிறேன்

அக்கணத்திலேயே நான்
கவிஞனாகிறேன்

(15.04.2014 அன்று 5.50க்கும் 6.30க்கும் இடையில் பேருந்து எண் 67 ல் விளைந்தது)

Series Navigationதிருப்பூர் இலக்கிய விருது 2016’மவுஸ்’
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *