எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்தபவன் உணவகத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும் ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வெள்ளி 2000ம் மற்றும் சான்றிதழுடன் வெற்றியாளரை கெளவரவப்படுத்தும் இந்நிகழ்வில், சிங்கப்பூர் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம்நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர் நெப்போலியனுக்கு மலர்மாலை பொன்னாடை போர்த்தி சான்றிதழையும் பரிசினையும் வழங்கி சிற்றுரையாற்றினார். 2011, 2012, 2013ம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் வெளிவந்த கவிதை நூல்களில், போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒன்பது நூல்களில் இருந்து சிங்கப்பூர், இந்தியா, மலேசியா என மூன்று நடுவர்களின் ஒட்டுமொத்தத் தீர்ப்பாக புத்தகப் பரிசிற்கான வெற்றியை கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” பெற்றது. ஆகஸ்டு 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தலைமையுரையாற்ற, செயலாளர் திரு. சுப. அருணாசலமும், துணைச் செயலாளர் இராம. வயிரவனும் நிகழ்ச்சி நெறியாள்கை செய்ய, நடுவர்களின் பிரதிநிதியாக சிங்கப்பூர் வி. ஆர். பி. மாணிக்கம் கருத்துரையாற்ற, முனைவர் மண்னார்குடி ஜி. ராஜகோபாலன் – கவி இன்பம் எனும் சிறப்புச் சிற்றுரையாற்றினார். ஏற்புரையில் கவிஞர் நெப்போலியன் ” விருதுகளும் அங்கீகாரமும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் பாதயாத்திரைகளின் இடையே தாகம் தீர்க்கும் தண்ணீர்ப்பந்தல்களாகவே அமைந்து உற்சாகப்படுத்தி இன்னும் செல்ல வேண்டிய நீண்ட இலக்குகளுக்கு பின்புலமாய் அமைகின்றன… விருதுகள் தலையில் ஏற்றிக்கொள்ளும் கிரீடங்களாய் இல்லாமல் இன்னமும் நல்ல படைப்புகளை வெற்றியாளனிடமிருந்து எதிர்பார்க்கும் அதட்டல்களாய் தான் பார்ப்பதாகவும்… கனடாவிலிருந்து கொண்டும், இன்ன பிற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து கொண்டும் இன்றைக்கு தமிழ் இலக்கிய உலகினில் தவிர்க்கமுடியாத இடத்தினைப் பெற்றிருக்கும் அ. முத்துலிங்கம், சேரன் , ரஸ்மி, போன்று சிங்கப்பூர்த் தமிழ் படைப்பிலக்கியப் பாதையில் உலகளாவிய சுவடுகளைப் பதிப்பிப்பதின் பாதையிலேயே தன் இலக்கியப் படைப்பாக்க முயற்சி தொடரும் ” என்றார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும், புரவலர்களும், பேராசிரியர்களும், படைப்பாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும், பொதுமக்களும் அரங்கினை நிறைத்த வெற்றிவிழாவாய் நிகழ்வு அமைந்தது.
- நுடக்குரங்கு
- பசலை பூத்தே…
- அவருக்கென்று ஒரு மனம்
- பாவண்ணன் கவிதைகள்
- வாழ்க்கை ஒரு வானவில் – 18
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு
- தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு
- மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு
- அலைகள்
- தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 90
- காத்திருத்தலின் வலி
- பாஞ்சாலியின் புலம்பல்
- கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’
- நுனிப்புல் மேய்ச்சல்
- வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது.
- வல்லானை கொன்றான்
- ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
- 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி
- இரா. நடராசனுக்கு ‘சாகித்ய அகடமி’ விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 19
- ஜெயமோகனின் புறப்பாடு
- ஆனந்த் பவன் [நாடகம்] வையவன், சென்னை காட்சி : 3