கவிதைகள்

This entry is part 21 of 29 in the series 18 நவம்பர் 2012

பலி

மாக்கல் நந்தி
வளருகிறதாம்
பிள்ளையார்
பால் குடிக்கிறதாம்
மண்ணடி இயேசு
மறுபடி வருவாராம்
புத்த பிக்குகள்
அஹிம்சையை
தொலைத்துவிட்டார்கள்
பாம்பு
சீண்டினால் தான்
சீறும்
கங்கையில்
தொலைப்பதற்காகத்தான்
பாபங்களை சுமக்கின்றீர்களா
பணமுதலைகளா
வாருங்கள் உங்களுக்கு
தங்கத்திலான சிலுவை
தயாராக இருக்கிறது
பரலோகத்திலும்
பாகுபாடு காட்டினால்
இகலோத்தில் வாழ்வு
இம்சையாக ஏன் இருக்காது
ஒருமனதாகச் சொல்லுவோம்
எல்லாவற்றுக்கும் காரணம்
மதம் தான் என்று
போருக்கு பலி கொடுக்க
அரவானைத் தேடும்
உலகமிது.

————————————–

கொலை தெய்வம்

சும்மா இருந்து
தொலைத்தேன்
பட்டையா நாமமா
என்பது இப்போது இவர்களுக்கு
பெரிதாக போய்விட்டது
பீடாதிபதிகளுக்கும்,மடாதிபதிகளுக்கும்

ராஜ போக வாழ்வு
திருடத் தெரிந்தாலும்
தெத்தத் தெரியணுமே
இவனது சகாக்களுக்கெல்லாம்
கபடம் நிறைந்த உலகில்
தப்பிப் பிழைக்கும்
சூத்திரம் தெரிந்து போனது
இவனுக்கு மட்டும்
பொசிப்பில்லாமல் போனது
இவனது கையாலாகாத தனத்தை
நினைத்து வருந்தும் போது
வில்ஸ் ஃபில்டர் அடிக்காமல்
இருக்க முடியாது
விருதா வாழ்வில்
இவன் போதையில்
மரணத்துக்கு
ராஜபாட்டை விரிப்பான்
வீட்டில் ஏது
பாத்திரம் பண்டம்
எல்லாம் அடகுக் கடையில்
குல தெய்வம்
பாபத்துக்கு அஞ்சுபவனின்
வம்சத்தைக் காக்க
கொலையும் செய்யும்.
Series Navigationவதம்மணலும், நுரையும்! (4)
author

ப மதியழகன்

Similar Posts

Comments

  1. Avatar
    தேமொழி says:

    “ஒருமனதாகச் சொல்லுவோம்
    எல்லாவற்றுக்கும் காரணம்
    மதம் தான் என்று
    போருக்கு பலி கொடுக்க
    அரவானைத் தேடும்
    உலகமிது.”
    இதற்கும் மேல் விளக்கம் தேவையே இல்லை. நல்ல வரிகள். நன்றி …

Leave a Reply to தேமொழி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *