புதர்களும் செடிகளும்
மரங்களும் போய்
அழகிய பெரிய பூங்கா
அளவாக வெட்டிய
வரிசையாய்
பூச்செடிகள்
விரிந்து பரவாத
வகை மரங்கள்
ஒழுங்கு செய்யப்பட்ட
பசும்புல் விரிப்பு
கொடிகள் தோரணமாய்
வளைவுகள்
மெல்லிய செங்கற்
சதுரங்கள் மேவிய
நடைபாதை
ஓரங்களில்
இருக்கைகள்
சிறிய தூண்களில்
ஒளிரும் மின்விளக்குகள்
பெரியவர் குழந்தைகள்
இளைஞர் ஜோடியாய்
தனியாய்
வண்ண வண்ண
ஆடைகளில் எத்தனை
எத்தனை பேர்
விரிந்த பெரும்
பூங்காவில்
அவள் மட்டும்
இல்லை
அலைந்து திரிந்து
அலசிப் பார்த்து விட்டேன்
இல்லவே இல்லை
அங்கே
வன தேவதை
- என்னவைத்தோம்
- மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்
- காணாமல் போகும் கிணறுகள்
- வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்
- ஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !
- சிறு ஆசுவாசம்
- சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு
- வேற என்ன செய்யட்டும்
- பொன்பாக்கள்
- வர்ணத்தின் நிறம்
- சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்
- காணவில்லை
- தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.
- அவள் பெயர் பாத்திமா
- மழையின் சித்தம்
- இலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்
- கயல் – திரைப்பட விமர்சனம்