காலம்….!

This entry is part 16 of 37 in the series 2 செப்டம்பர் 2012
வாழ்க்கையை
உழும்…
காலம்..!
தன்னை
யாரெனக்
உணர்த்திடும்
காலம்..!
பூமியை
சிக்க வைத்த
சக்கரம்..!
காலம்..!
இல்லாத
ஒன்றை
இருப்பதாய்க்
சிரிக்கும்
காலம்..
இன்று…!
என்பதை
நேற்றாக
மாற்றும்
காலம்..!
பூமி கடந்து
சென்ற பாதை
காலம்..!
கலி முத்தியதால்…
அலங்கோலமாய்
சிரித்தது…
காலம்..!
விதைத்ததை
அள்ளிக்
கொடுத்தது
காலம்..!
காலன்
பார்ப்பதில்லை
காலம்..!
மன ரணத்தை
ஆற்றிடும்
அருமருந்து
காலம்..!
கருவை
வளர்த்து
கிழமாக்கும்
காலம்..!
கேள்வியும்
கேட்கும்
பதிலும்
சொல்லும்
காலம்..!
ஒளியை
இருளாக்கும்..
இருளை…
நிலவாக்கும்…
காலம்..!
உயிரைப்
போலவே
ஆட்டிப் படைக்கும்
காலம்..!
மாயையாய்
மேடையில்
அரங்கேறும்
மாயாவி
காலம்..!
வந்ததும்
வருவதும்
மனதை ஆள..
உறங்குகிறது
நிகழ் காலம்…!
கடந்த நினைவுகளை
பெட்டகத்தில்
சேமித்தது…
காலம்..!
தொலைந்து
போனதாக
மனது அழுதது..
காலம்..!
கடந்த
காலங்களை
மட்டுமே
பேச- இந்தக்
காலம்..!
சம்சார சாகரத்
தூண்டிலில்
மாட்டிக் கொண்டது
காலச் சக்கரம்..!
Series Navigationஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்! கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012)கதையே கவிதையாய்! (3)
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Comments

  1. Avatar
    punaipeyaril says:

    சம்சார சாகரத்

    தூண்டிலில்

    மாட்டிக் கொண்டது

    காலச் சக்கரம்..!— உண்மை. பெரும்பான்மையான சாதனையாளர்களின் இல்வாழ்வு நன்கு இருந்ததில்லை.. மீறிவர்கள் சக்கரத்தில் மாட்டிக் கொண்டனர்.. அது என்ன வெறும் சக்கரமா..? அபியின் சக்ரவியூக நிலையள்ளவா…

Leave a Reply to punaipeyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *