காலாதி காலங்களாய்

0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 46 in the series 19 ஜூன் 2011
பிரக்ஞையற்று திரிந்தலைந்த 

கிரெளஞ்சப் பட்சியொன்று
மனவெளியில் தரையிறங்கியது
மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு
தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்
ஆதாரத்தை அலைகிழிக்கின்றது
கூர்ந்த நகங்களால்….
காலாதி காலங்களாய்
தொடர்ந்த மெளனம்
களைந்தெறிந்து
ஊழியின் உருவமாய்
மெய் சிவந்து நின்றேன்
எதிர்கொள்ளவியலாது
சிறகின் தூவிகள் பொசுங்க
ரத்தமும் மாம்சமும் கருக
வெந்தொழிந்தது…..

சக்தி

Series Navigationஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்துஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்
author

சக்தி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *