குரான்சட்டமும் ஷரீஆவும்

This entry is part 14 of 30 in the series 17 பிப்ரவரி 2013

sharia

குரான் அடிப்படையிலான இறைச் சட்டம் மாறாத் தன்மை கொண்டது. குரான்,ஹதீஸ் இவற்றோடு இஜ்மா,இஜ்திஹாத் இணந்த ஷரீஅ மாறும்தன்மை கொண்டது.ஷரீஅ என்ற சொல்லுக்கு பாதை என்று பொருள். ஏனெனில் இதன் உருவாகத்திலும் வடிவமைப்பதிலும் அந்தந்த நாடுகளின் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு உள்ளது. அதுபோல் குரானையும் ஷரீஆவையும் வாசித்து பொருள்கொள்வதில் வெவ்வேறு அர்த்த நிலைபாடுகள் உள்ளன என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.
இது தொடர்பான குறிப்பாக ஒன்றிரண்டை மட்டும் மாதிரிக்காக சொல்லலாம்.
1) குரானிய சட்டத்தில்  பாலியல்குற்றத்திற்கு கல்லெறிந்து கொள்ளும் தண்டனை இல்லை. ஆனால் ஷரிஆவின்படிசவுதிஅரேபியா,நைஜீரியா உள்ளிட்ட அரபுநாடுகளில் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.பல அரபுவளைகுடா நாடுகளில் கல்லெறிந்து கொல்லும் தண்டனைமுறை இல்லை.
2)சவுதிஅரேபியாஉள்ளிட்டஅரபுநாடுகள்மன்னராட்சிமுறையையும்,வாரிசுரிமை ஆட்சியையும் தாங்கள் பின்பற்றும் ஷரீஆவின் ஒரு பகுதியாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் பூர்வீக இஸ்லாத்திலும் குரானியசட்டத்திலும் இது இல்லை.
இந்தோனேஷியா மலேஷியா,துருக்கிபோன்ற முஸ்லிம்நாடுகளில் ஜனநாயகத்தை ஷரீஆவின் வழிமுறையாகக் கருதுகின்றனர்.
3)இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் சிவில் உரிமைகளில் மட்டுமே ஷரிஆ பின்பற்றப்படுகிறது. குற்றவியல் சட்டங்களில் ஷரீஆ நடைமுறையில் இல்லைஎன்பதையும் இவ்வேளையில் நினைவில் கொள்ளலாம்.
4) ஆடைவிதிகள்,பலதாரமணம்,விவாகரத்து,சொத்துப் பிரிவினை,நில உரிமை,குற்றவியல்தண்டனைகளில் ஹூதூத்(பெருங்குற்றங்கள்),தஸீர்(சிறுகுற்றங்கள்),கிஸாஸ்(பழிக்குப்பழி) என்பதான பகுப்புமுறைகள் பலவும் உள்ளன. இவற்றை முஸ்லிம்நாடுகள் தங்கள் நாட்டு ஷரீஆ வாசிப்புக்கும் பொருள் கொள்ளலுக்கும் ஏற்பவே நடைமுறைப் படுத்துகின்றன.
குரானிய கருதுகோள்கள் இறைச் சட்டம்,ஷரீஆ என்பது குரான்,ஹதீஸ்,இஜ்மா, கியாஸ் என்பதான கருதுகோள்களையும் இணைத்துள்ளது.இதில் சுன்னி,ஷியா,மற்றும் ஷாபி,ஹனபி,ஹம்பலி,மாலிகி என்பதானமத்ஹபுகளின்சட்டப்பிரிவுகளையும்சலபிகள்,வகாபிகள்,குதுபிகள்,உள்ளிட்ட சிந்தனைப்பள்ளிகளின் வாசிப்புஅரசியலையும் கொண்டே அர்த்தம் பெறுகிறது.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவனை குரான் கூறும் அறநெறிகளான நீதி செலுத்துதல், வன்முறையைத் தவித்தல்,கருணையையும் அன்பையும் விரும்புதல்,நன்மைகளைச் செய்வதற்கு ஒருவருக்கொருவர் முந்துதல்,பிறர் தெய்வங்களை பழிக்காதிருத்தல், ஏழைகளை மேம்படுத்துதல்,அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுதல் என்பது போன்ற எண்ணற்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துபவனாகச் சொல்கிறது.ஆனால்
நடைமுறையில் இஸ்லாத்தின் பெயரால் செயல்படும் பலர்இதற்கு தகுதியானவர்களாக இல்லை.ஒரு முஸ்லிமின் அகத்திலும்.,செயலிலும் மேற்சொன்ன நற்பண்புகள் இல்லையோ அவன் வேடம் புனைந்து கொள்கிறான்முனாபிக் ஆகிவிடுகிறான்.

முஸ்லிம் உம்மத்தை இரண்டாய் பிளந்த,ஒற்றுமைகுடும்பங்களைப் பிளந்த,வழிபாட்டைப் பிளந்த,அநீதிக்கு துணை போகிற,அமெரிக்க,ஐரோப்பிய சவுதிஎஜமானர்களின் அதிகாரத்திற்கு பணிந்து, வன்முறையையும்,தீவிரவாதத்தையும் ஏவிவிடுகிற வகாபிகள் உள்ளிட்ட சில முஸ்லிம்குழுமங்களின் அடிப்படைவாத அரசியல் மிகவும் ஆபத்தானது.

——–

Series Navigationசெல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

7 Comments

  1. Avatar
    paandiyan says:

    //அநீதிக்கு துணை போகிற,அமெரிக்க,ஐரோப்பிய //
    அங்கு எல்லாம் முஸ்லிம்கள் என்ன பண்ணுகின்றார்கள் . அநீதி என்று தெரிந்த பின்பும் அங்கு இருபது எதற்கு அவர்களை முதலில் ஊரை காலி பண்ண சொல்லுங்கள் . குரான் கோவித்து கொள்ள போகின்றது ..

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    “வன்முறையையும்,தீவிரவாதத்தையும் ஏவிவிடுகிற வகாபிகள் உள்ளிட்ட சில முஸ்லிம்குழுமங்களின் அடிப்படைவாத அரசியல் மிகவும் ஆபத்தானது.”

    நூறு சதம் அப்பட்டமான உண்மை. இதை உங்களைப்போன்றவர்கள் பொதுவெளியில் உரக்கச்சொல்லவெண்டும். இப்படியாப்பட்ட குரல்கள்தான் தமிழகத்தில் வஹாபியம் தலை தூக்காது தடுக்கும்.

  3. Avatar
    Raj says:

    Good analysis by Mr. H.G. Rasool. The silent majority should wake up and raise their voice. No religion should allow few misguided people to hijack their religion and create hatred between religions.

  4. Avatar
    punaipeyaril says:

    சரி நம்ம ஹைதரபாத் குண்டு வெச்சவன என்ன பண்ணலாம்.. இந்திய முறைய்ப்படி வாய்தா வாங்க்லாம் தானே…

  5. Avatar
    smitha says:

    2ஆம் தேதி ஜனவரி 2013 ஆந்திரபிரதேசத்திலுள்ள அடிலாபாட் என்ற இடத்தில் (MIM) கட்சியை சேர்நத (MLA) அக்பர்ருதீன் ஒவாசி பேசிய 2 மணிநேர இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் மதகலவரத்தை தூண்டும் விதத்தில் நிகழ்திய உரையின் சாரம்.

    1. இஸ்லாமியர்களான நாங்கள் இந்தியாவை 1000 ஆண்டுகள் ஆட்சிசெலுத்தி உள்ளோம். எனது முன்னோர்கள் விட்டு சென்ற சின்னங்கள் தான் தாஜ்மஹால், ரெட் போர்ட், ஆக்ரா போர்ட், குதுப்பினார், சார்மினார், கோல்கொண்டா போன்ற நூற்றுகணக்கான இடங்கள் ஆகும். இதை காணத்தான் வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருகின்றார்களே தவிற ராமர், கிருஷ்னர் கோவில்களை காண்பதற்கு அல்ல.
    2. தொடர்ந்து படைஎடுத்துவந்து பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆண்டு வந்தள்ளோம். நாங்கள் ஆண்டபோது எங்களது ஜனதொகை 1 கோடி இன்று நாங்கள் 25 கோடி. நாம் ஏன் மௌனமாக இருக்கவேண்டும். எல்லா பண்டிட்டுகளும், பூஜாரிகளும் நம்மை நமஸ்காரம் செய்கிறார்கள். இந்த சார்மினாரின் நான்கு தூண்கள் நான்கு திசையிலும் நம் அதிகாரம் இருந்ததை சொல்லுகிறது.
    3. தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுவதும் குண்டு வெடிப்புகள் நடைபெறுவதும் ஏன் நடக்கிறது என்றால் நீங்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளியதற்கு துணை போனீர்கள். அதனால்தான் பமபாய் குண்டு வெடிப்பும் நடந்தது. ஒவ்வொரு செய்கைக்கும் எதிர்மறையான விளைவுகள் உண்டு. நான் முஸ்லீம்கள் சார்பாக பேசுகிறேன். பாபர் மசூதியை திரும்ப கட்டினால்தான் நாங்கள் செக்யூலரிசம் பற்றி யோசிப்போம்.
    4. ஆஜ்மல் கேசாப்பை தூக்கில் போட்டார்கள். ஏன்? அவர் பாக்கிஸ்தானத்திலிருந்து இங்கே வந்து 200 சிவிலியன்களை கொன்றான். இங்கேயே குஜராத்தில் 2000 இஸ்லாமியர்களை கொன்றவர் மேல் ஒரு குற்றபதிவும் கிடையாது. இந்த நாட்டில் ஏதாவது சட்டம் இருக்கிறதா ? அப்படி என்றால் கேசாப்பை தூக்கில் போட்டது போல் மோதியையும் தூக்கில் போடவேண்டும். ஆந்திர மாநிலத்தின் முஸ்லீம்கள் சார்பாக சொல்லுகிறேன் இந்தியாவின் அனைத்து முஸ்லீம்களும் ஒன்றுபட்டால் மோதியை தூக்கில் போடமுடியும்.
    5. அஸ்லாமில் ஏ.கே.47 கொண்டு .இஸ்லாமியர்களை தாக்கியதால் கலவரம் வெடித்தது. கேட்டால் அவர்கள் பங்களா தேசத்தவர் என்றார்கள். அவர்கள் பங்களா தேசத்தவர் என்றால் அத்வானியே நீங்கள் யார்? இங்கே இருந்து ஓடிப்போய் திரும்பவும் இங்கு வந்தவர். இங்கே உள்ள முஸ்லீம்கள் உங்களைப் போல் ஒடீபோனவர்கள் அல்ல..
    6. இந்த நாடு எங்கள் நாடு அது எங்கள் நாடாகத்தான் என்றும் இருக்கும். இந்தநாட்டை ஆண்டவர்கள் பாபர் ஷார்ஜகான் ஔரங்கசீப். இந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டால் நாங்கள் எங்களுடன் தாஜ்மாஹால் குதுப்பினார் செங்கோட்டை எல்லா தூக்கி சென்றுவிடுவோம். எஞ்சி இருப்பது பாழ் அடைந்த அயோத்தியாவின் ராமர் கோவில் நிர்வாண சித்திரங்களை கொண்ட அஜந்தா எல்லாரா மட்டுமே. நாங்கள் இறந்தால் எங்களை புதைகிறார்கள் ஏன் என்றால் நாங்கள் இந்த மண்ணை விரும்புகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இறந்தபின் எரிக்கின்றார்கள். அதனால் அவர்கள் அனாதைபோல் காற்றோடு காற்றாக கலந்துவிடுகிறார்கள்.
    7. நாங்கள் நிறைய மோடிகளை பார்த்துவிட்டோம். ஒருமுறை மோதி ஹைதிராபாத் வரட்டும் அப்பொழுது தெரியும் நாங்கள் யார் என்று. இங்கே தஜ்லீமா நஸ்ரின் வந்தார் இப்பொழுது அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அதேநிலையை மோதிக்கும் ஏற்ப்படும்.
    8. 100 கோடி மக்களில் நாங்கள் 25 கோடி. ஒரு 15 நிமிடங்கள் போலீசை கட்டுபடுத்துங்கள் பின்பு தெரியும் எங்களது திறமை வலிமை என்னவென்று? இன்று என்கையில் இந்த மைக் உள்ளது அதற்குபதில் வேறுஒன்றை நான் கையில் பிடித்தால் இந்த நாட்டில் 1000 ஆண்டுகளாக கண்டிராத ரத்தவெள்ளம் ஓடும்.
    9. அயோத்தியாவில மூன்று கோவில்கள் இருக்கும் இடத்தில் இங்குதான் ராமர் பிறந்தார் என்கிறார்கள். அரியாணாவில் உள்ள கௌசல்யாபுரம் என்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்கிறார்கள். ஓ வாஜ்பாயே ஓ அத்வானியே ராமரின் அம்மா எங்கொல்லாம் சென்றுள்ளார். 15 லஷ்சம் வருடத்திற்கு முன் ராமர் பிறந்தார் என்கிறார்கள். நம்மால் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன் நடத்தவற்றையே சரியாக அறியமுடியாதபோது அவர் பிறப்பிடம் இதுதான் என்று எவ்வாறு கூறமுடியும். ஹிந்துக்கள் நிறைய பூஜைகள் செய்கிறார்கள் ராமர் லஷ்மணர் துர்கா என்று. எனக்கு லஷ்மியை தெரியும் அது யார் இந்த பாக்கிய லஷ்மி. என்ன பெயர்களோ இவை. இந்த துஷ்ட கடவுள்களை பற்றியெல்லாம் எல்லாம் சொல்லி நமது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டுடாம்.
    10. மாட்டுகறியை ஹிந்துகளும் உண்கிறார்கள் அதன் ரூசியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாமும் அதை உண்கிறோம். இதில் விட்டுகொடுப்பதற்கு எதுவுமே இல்லை.

    எதிர்பு குரல் பலமாக எழுந்ததால் ஒவாசியை கைது செய்து இப்பொழுது ஜாமீனில் உள்ளார். இந்த லஷ்சணத்தில் ஐ.பி. (இன்டலிஜன்ட் பியிரோ) தலைவராக ஒரு .இஸ்லாமியரை இந்திய அரசு சமீபத்தில் அமர்தியுள்ளது.

    This is “secularism”.

    1. Avatar
      Naanjil Maathavan says:

      ஸ்மிதா மேடம் ஒவைசி ஒரு மடையன். கற்பனை செய்து பேசுகிறான். பதிலுக்கு திருமிகு தொகாடிய பேசியது பாருங்கள் இந்தியாவின் உண்மை நிலை புரியும். ஏனென்றால் அவை அனைத்தும் உண்மையாக நடந்த சம்பவ சரித்திரங்கள் ….

      “Remember Nellie in Assam, where the police was removed. Over 3000 people died, not one of them was a Hindu. Remember Bhagalpur, where the police was removed, so many people died that it was difficult to count, not one of them was a Hindu. Dead bodies flew into the sea. Remember Meerut, Moradabad, Gujarat. – Thogadiya

      1. Avatar
        paandiyan says:

        முஸ்லிம் பேசினால் பொய் , ஹிந்து பேசினால் உண்மை . எப்படி யோசிக்கறாங்க பாருங்க? அதை அப்படிய பேரை மற்றும் மாற்றி படிக்கவும் எல்லாம் சரியாய் வரும் எங்களுக்கு

Leave a Reply to punaipeyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *