குறுங்கவிதைகள்

This entry is part 10 of 38 in the series 20 நவம்பர் 2011

பேருந்தின் இரைச்சல் ஓசையில்

பேச்சு வராத தமையனைப் பற்றி

ஓயாமல் பேசிக்கொண்டு

வந்தாள் ஒருத்தி.

எனக்கென்னவோ அவளே

அவனுக்கும் சேர்த்து

பேசிக்கொண்டிருப்பது போல்

இருந்தது.

0

ஒன்றே போல்தான்

உன் குழந்தை

கைகளின் ஸ்பரிசமும்.

O

கண்கள் சொருகும்

அதிகாலைப் பொழுதில்

உதட்டுச் சாயத்தை

ஒத்தி ஒத்தி எடுத்து

உதடுகளால்

சப்பிக் கொண்டிருந்த

ஒருத்தியைக் காண

ஒரு மாதிரி

சந்தோசமாய்தான்

இருந்தது.

O

பின்னிருக்கையில் அமர்ந்தபடி

பயணம் போக நேர்ந்த

வண்டியோட்டியின் ஆச்சர்யம்

வழியெங்கும் காணும்

இத்தனையும்

இத்தனை நாளாய்

இங்கேதான்

இருந்ததா?

O

ஒன்று போலே இருந்த

எட்டாவது முகத்தை

பார்த்தேன் இன்றைக்கு.

O

Series Navigationநானும் அசோகமித்திரனும்ஜென் ஒரு புரிதல் – பகுதி 19
author

செல்வராஜ் ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *