சங்க இலக்கியத்தில் பயிர்ப் பாதுகாப்பு

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

 

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்​கோட்​டை-1.

  1. Mail: Malar.sethu@gmail.com

சங்க காலத்தில் உழ​வே முதன்​மையான ​தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏ​னைய மக்க​ளைவிட நாகரிகத்தில் ​மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர்,    க​டையர், க​டைசியர் என்னும் ​சொற்கள் உழவர்கள் குறித்து ஆளப்படும் ​சொற்களாகும். க​டையர் என்பார் வயல்களில் ​வே​லை​செய்யும் ​தொழிலாளர்கள் என்று கருதலாம், இவர்கள் நிலமற்ற எளிய மக்களாக இருத்தல் ​வேண்டும். இவர்களின் வாழ்க்​கை​யை ​பெரும்பாணாற்றுப்ப​டை(206-246), மது​ரைக்காஞ்சி(246-270), ம​லைபடுகடாம்(10-105) முதலிய பாடல்வரிகள் விரிவாக எடுத்து​ரைக்கின்றன.

சங்க கால மக்கள் பல்​வேறுவிதமான பயிர்க​ளைப் பயிரிட்டனர். அப்பயிர்க​ளைப் பயிரிட்ட​தோடு மட்டுமல்லாது அவற்​றைக் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்தனர். நிலத்​தைக் கவனிப்பதிலிருந்து வி​தைப்பது, க​ளை​யெடுப்பது, எருவிடுவது, உழவுத்​தொழிலுக்கு அடிப்ப​டையாக விளங்கும் நீர்நி​லைக​ளைப் பராமரிப்பது உள்ளிட்ட பல்​வேறு ​வேளாண் பாதுகாப்பு நடவடிக்​கைக​ளை மக்கள் ​மேற்​கொண்ட​மை​யை சங்க இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.

நீர்நி​லைக​ளைப் பராமரித்தல்

உழவுக்கும் உயிர்களுக்கும் அடிப்ப​டையாகத் திகழ்வன நீர்நி​லைகளாகும். அந்நீர்நி​லைக​ளைப் பாதுகாப்பது மன்னர்களின் த​லையாய கட​மையாக விளங்கியது. நீர்நி​லை​யைப் ​பெருக்கி உழவு ​செழிக்க உதவியவர்க​ளை​யே உலகம் புகழும் என்ப​தை,

“நில​னெளி மருங்கின் நீர்நி​லை ​பெருகத்

தட்​டோரம்ம இவண் தட்​டோ​ரே

தள்ளா ​தோரிவண் தள்ளா​தோ​ரே!” (புறம்.18)

எனக் குடபுலவியனார் பாண்டியன் ​நெடுஞ்​செழியனுக்கு அறிவுறுத்துகிறார். கரிகாற் ​சோழன் நீர்நி​லைக​ளைப் ​பெருக்கியும் வி​ளைநிலங்க​ளைப் ​பெருக்கியும் உல​கைக் காத்தான் என்ப​தை,

“காடு​கொன்று நாடாக்கி

குளம் ​தொட்டு வளம்​பெருக்கி”

என்று பட்டினப்பா​லையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகின்றார்.

உழுதல்

ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள்வயலுக்கு நீர்பாய்ச்சினர், உழுது சேறாக்கித் தொளி கலக்கினர்.பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்று நட்டனர். களை பறித்தனர்.நீர்பாய்ச்சினர். பறவைகளும் விலங்குளும் பயிரை அழித்துவிடாமல் பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர். பிணையல் அடித்துப் பொலி தூற்றினர். நெல்லை மலைபோலக் குவித்தனர்.உழவர்கள் வயலில் நீர் பாய்ச்சித் தொளிகலக்கி உழுது சேற்றைநிரவிப் பண்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (207 -11)கூறுகிறது.

கடைசியர் நாற்று நடுதலும் களைபறித்தலும்

தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர்நெல்நாற்றை நடவு செய்தது பற்றியும் களைபறித்தது பற்றியும்சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ‘முடிநாறழுத்திய நெடுநீர்ச்செறு” என்று பெரும்பாணாற்றுப்படை அது குறித்துக் கூறுகிறது.வயலில் கடைசியர் களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது.கடைசியர் களையாகப் பறித்த தண்டினை வளையலாக அணிந்துஅழகுபார்த்ததனை ‘கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்”என்று புறநானூறு கூறுகிறது.  உழவரு​டைய குழந்​தைகள் நாற்று நட்ட வயலில் க​ளை பறிப்​போர் பறித்துப் ​போட்டத் திரண்ட தா​ளையு​டைய ​நெய்தல் மல​ரைச் சூடி மகிழ்வர்,

இத​னை,

“க​ளைஞர் தந்த க​ணைக்கால் ​நெய்தல்”(​பெரும்,213)

என்று பெரும்பாணாற்றுப் படை (211-18)யும், புறநானூறும் (61)குறிப்பிடுகின்றன.

நீர் பாய்ச்சுதல்

களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்டஅடிமைகள் வரிசையாக நின்று இடா ஏற்றம், பூட்டைப் பொறி பிழாபன்றிப் பத்தர் முதலியவற்றால் குளங்களில் இருந்துவயல்களுக்குத் தண்ணீர் இறைத்த காட்சியைச் சங்கஇலக்கியங்கள் காட்டுகின்றன.

வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக் காரணமானகுளங்களில் நிரையாக நின்று தொழுவர்கள் நீரை இடாவால்முகந்து ஒலிக்கும் ஓசை : ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசை: மெத்தென்ற கட்டுக்களையுடையபூட்டைப்பொறியின் ஓசை: எருதுகள் பூண்ட ​தெள்ளிய மணிகளின்ஓசை ஆகிய​வை குறித்து,

‘நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர்
பாடு சிலம்பின் மிசை ஏற்றத்
தோடு விளங்கும் அகலாம்பியிற்
கயனகைய வயல் நிறைக்கும்
மென்றொடை வன்கிழார்” –( மதுரைக் காஞ்சி : 89 – 95)

என்று மது​ரைக் காஞ்சி(89-97) குறிப்பிடுகின்றது.

பனையோலையாற் செய்த பிழா என்னும் ஓலைப்பெட்டியால் உழவர் ஆற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைத்தசெய்தியை,

“ஆம்பியும் பிழாரும் வீங்கிசை ஏற்றமும்”

என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.

​வயலில் ​நெற்பயிற்கள் நன்றாக வளர்ந்திருந்தன. அப்பயிர்களி​டை​யே யா​னைகள் நின்றால் கூட ​தெரியாத அளவிற்கு மிக உயரமாக வயல்களில் ​நெற்பயிர்கள் வளர்ந்திருந்தன. இத​னை,

“களிறு மாய்க்கும் கதிர்க்கழனி” (மது​ரைக்காஞ்சி, 247)

பயிர்ப் பாதுகாப்பு

வேட்டைச் சமூகமாக வாழந்த மக்கள் மேய்ச்சல் சமூகமாகமாற்றமடைந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு வரகு தினைமுதலியவற்றைச் சாகுபடி செய்த காலம் முதலே பயிர்களைப்பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். குறிஞ்சி முல்லைநிலங்களில் வரகும் தினையும் பயிரிட்ட எயினர்கள் யானை மான்,பன்றி முதலிய விலங்குளாலும் கிளி மயில் புறா முதலியபறவைகளாலும் பயிருக்கு ஏற்படும் சேதங்களினின்றும்அவற்றைப் பாதுகாக்கப் பரண் அமைத்துக் காவல் காத்தனர்,பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் காவற்பணியில்ஈடுபட்டனர்.

நெல்லைத் தன்னிடத்தே கொண்டநெடியமூங்கிலைத்தின்றற்கு மேல் நோக்கி நின்று வருந்தினயானை, அவ்வருத்தந் தீரும்படி முத்து நிறைந்த கொம்பிலேஏறட்டு நான்ற கையையொப்ப, துய்யையுடைய, தலை வளைந்தஈன்றணிமை தீர்ந்த கதிர்களை நன்றாகத் தன்னிடத்தேகொள்ளுதலையுடைய சிறிய தினையிலே வீழ்கின்ற கிளிகளையோட்டி, பகற்பொழுது கழியாநிற்ப நீவீர் வருவிராக என்று கூறி நீபோக விடுகையினாலே யாங்களும் போய், ஆரவாரம் பொருந்தினமரத்தின் உச்சியிலே இராக்காலம் ஆகாயத்திருப்போன் பண்ணினபுலியஞ்சுதற்குக் காரணமானதும் அவ்விடத்தன வாகியமலைப்பக்கத்துப் பிரம்பாலே அழகுபெறத் தெற்றினதுமானபரணிலே ஏறித் தழலும் தட்டையும் குளிரும்பிறவுமாகியகிளியோட்டும் முறைமை யினையுடையவற்றை,மிகுதலையுடைய ஞாயிற்றின் கிரணங்கள் சுடும் வெம்மைவிளங்கின்ற பொழுதிலே முறைமுறையே கையிலே வாங்கிஓட்டினோம்) என்று குறிஞ்சி நிலத்தில் மகளிர் பகற்பொழுதில்பரண்மீதமர்ந்து கிளிகடி கருவிகளைக் கொண்டு பறவைகளைஓட்டிக் காவல் காத்தமை பற்றி மதுரைக் காஞ்சி (35-45) கூறுகிறது.

தி​னைப்புனம் காவல் காத்தல்

தி​னைப் புனங்களில் யா​னை, புலி, முதலிய விலங்களால் அழிவு ​நேராமல் காத்தற் ​பொருட்டும், கிளி முதலிய பற​வைக​ளை விரட்டுவதற்காகவும் மரங்கள் ​மேல் உயர்ந்த பரண்கள் அ​மைக்கப்பட்டன. அப்பரணியில் அமர்ந்திருப்பவன் ‘​சே​ணோன்’ என்று அ​ழைக்ப்பட்டான். இப்பரண்கள் ம​லைப்பகுதியில் வி​ளையும் பிரம்புகளால் வலி​மை உ​டையதாகப் பின்னி அ​மைக்கப்​பெற்ற​வை.

தழல், தட்​டை, குளிர் ஆகிய கருவிகள் அங்கு இருந்தன. அவற்​றைப் பயன்படுத்தும் மு​றையறிந்து ஏற்றவாறு ஒலி எழுப்பிக் கிளிக​ளை  ஓட்டினர். தழல் என்பது ​கையால் சுற்றி காலத்து (தன்னிடத்துத் ​தோன்றும்) ஓ​சை எழும், அத​னைக் ​கேட்ட பற​வைகள் ஓடிவிடும். தட்​டை என்பது மூங்கி​லைக் கண்ணுக்குக் கண்(கணுவுக்குக் கணு) உள்​ளே நறுக்கிப் பலவாறாக அத​னைப் பிளந்து ஒலி உண்டாகுமாறு ஒன்றில் தட்டும் கருவி ஆகும். குளிர் என்பது தழல், தட்​டைப் ​போலக் கிளி ஒட்டும் கருவி தி​னைப் புனத்தில் கிளி ஓட்டுகின்றவர்கள் மூங்கி​ளை வில் ​போன்று கட்டித் ​தெறிக்கும் கருவி என்று தஞ்​சைவாணன் ​கோ​வை உ​ரையில் இது குறித்துக் குறிப்பிடப்படுகிறது. இச்​செய்திகள் குறிஞ்சிப்பாட்டில் (252-253) கபிலரால் குறிப்பிடப்படுகிறது. ​மேலும் இக்கருவிக​ளைப் பற்றிய ​செய்திகள் குறிஞ்சிப்பாட்டிலும்(254) குறுந்​தொ​கை(223, 360, 154), அகநானூறு (188), ம​லைபடுகடாம்(243,328) ஆகிய ​செவ்விலக்கியங்களிலும் இடம்​பெற்றுள்ளது. இதனை,

‘நெற்கொணெடு வெதிர்க்கணந்தயானை
முத்தார் மருப்பினிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள்ளோப்பி
எற்பட வருதியரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைக் சேணோன் இழைத்த
புலியஞ்சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலந்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்
கிளிகடி மரபினூழூழ் வாங்கி
யுரவுக் கதிர் தெறூஉம்” (மதுரைக் காஞ்சி (35-45))

என்று மது​ரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

பற​வைகள் இ​ரை​தேடிச் ​செல்வதாலும் மா​லையில் தத்தம் இருப்பிடங்க​ளை அ​டைவதாலும் அ​வைத் தி​னைக் கதிர்க​ளைப் பகலி​லே​யே வந்து உண்ண வந்தன. இப்பற​வைக​ளை ​மேற்குறிப்பிட்ட கருவிக​ளைக் ​கொண்டு ஒலி எழுப்பி விரட்டினர்.

மருதநிலத்தில் வயல்களில் விளைந்துநின்றநெற்பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டிருந்தனர். இதனை,

‘கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” – புறநானூறு 396

(கழிகள் சூழப்பட்ட, நெல் விளைந்து கிடக்கும வயலின் கண் அரித்தஓசையை யுடைய பறையை முழக்குவதால் கதிர் கவரவரும் கிளிமுதலிய பறவைகளை ஓட்டினர்) என்றும்

‘புதற்றளவில் பூச்சூடி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” – புறநானூறு : 395.

(மகளிர் புதலிடத்தே மலர்ந்த தவள முல்லையின்பூவைத்தலைவிற் சூடிக் கொண்டு அரித்த ஓசையுடையகிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த நெற்கதிர்களையுண்டற்குவந்து படியும் பறவைகளை யோட்டினர்) என்றும்புறநானூறு கூறுகிறது.

தி​னைப்புனத்திற்கு வந்த யா​னைக​ளை விரட்டுதல்

ம​லைவாழ் மக்களின் குடில்கள் அவிடத்தில் கி​டைக்கப் ​பெற்ற தி​னைத்தாளால் ​வேயப் ​பெற்ற​வை பல விலங்குகளிடமிருந்து காத்துக் ​கொள்ள அவற்றின் நு​ழை வாயில்கள் குறுகிய வாய் அ​மைக்கப்​பெறும். ம​னைவியர் தரும் கள்ளின் மகிழூச்சியால் குறவர் தம்​மை மறந்து காவல் ​தொழில்ல் சற்று அயர்ந்திருந்த ​நேரத்தில் யா​னைத் தி​னைப் புனத்துள் புகுந்து கதிர்க​ளை உண்ணலாயிற்று. தம் உ​ழைப்பின் பயன் தம் கண் எதிரி​லே​யே முற்றிலுமாக அழிவ​தைக் காணப்​பொறாத கானவன் கனிற்றின் ​செயல் கண்டு சினம் ​கொண்டான்.

அச்சினத்தின் ​வெளிப்பாடாக அம்பு எய்தல், தட்​டை பு​டைத்தல் வீ​ளைவிடுத்தல் ஆகிய ​செயல்கள் நிகழ்ந்தன. கானவனின் இச்​செயல் யா​னைக்குச் சி​னைத்​தை அதிகரித்தது. அதனால் அவ் யா​னை கா​டெங்கிலும் சுற்றித் திரியலாயிற்று மரங்க​ளை முறித்தது. இத​னைக் கண்டு தி​னைப்புனம் காக்க வந்த ​பெண்கள் அஞ்சினர், அங்கிருந்த த​லைவன் வில்​லை வ​ளைத்து யா​னையின் மத்தகத்​தைப் பார்த்து அம்​யெது யா​னை​யை விரட்டினான்(குறிஞ்சி.,153-175) எனக் குறிஞ்சிப்பாட்டானது கானவர் தி​னைப் பயிர்க​ளைக் காவல் காத்த ​செய்தியி​னைக் குறிப்பிடுகிறது, இ​தே ​போன்று கானவர்கள் யா​னை​யை விரட்டித் தி​னைப் புனம் காத்த ​செய்தியானது அகநானூறு(348), குறுந்​தொ​கை(54), ஆகியவற்றிலும் இடம்​பெற்றுள்ளது ​நோக்கத்தக்கது.

யா​னைகள் தி​னைப் புனத்​தே வந்து தி​னைக் கதிர்க​ளைத் தின்று அழிக்காது இருக்கக் காவல் ​செய்​வோர் இதணம் ​மேல் கட்டின குடிலில் இருந்து காவல் காத்தனர் என்ப​தை,

“​வேழம் காவலர் குரம்​பை ஏய்ப்ப”(​பெரும்.,51-வது வரி)

என்று ​பெரும்பாணாற்றுப்ப​டை குறிப்பிடுகிறது.

கிளிக​ளை விரட்டுதல்

தி​னை வி​ளையும் ம​லைப்பக்கத்தில் அவற்​றைத் தின்ன வரும் கிளிக​ளை ஓட்டும் ஆரவாரம் ம​லைப்பகுதிகளில் ​கேட்கும். இத​னை,

“தி​னைவி​ளை சாரற் களிகடி பூசல்” (மது​ரை.,கா.,291)

என்று மது​ரைக்காஞ்சி ​தெளிவுறுத்துகிறது.

காட்டுப்பசுக்க​ளை விரட்டுதல்

வி​ளைநிலத்தில் உள்ள பயிர்க​ளை அழிப்பதற்குக் காட்டுப் பசுக்கள் வரும். அவ்வாறு வரும் பசுக்க​ளைக் கானவர்கள் விரட்டி ஓட்டுவர். இத​னை,

“மணிப்பூ அவ​ரைக் குரூஉத்தளிர் ​மேயும்

ஆமா கடியும் கானவர்” (மது​ரைக்காஞ்சி, 293)

என்று மது​ரைக்காஞ்சியில் குறிப்பிடப்படுகிறது.

 

புறநானூறு (28) இரவில் தினைப் புனங்காத்த எயினரைச்சேவல் கூவித்துயில் எழுப்பியது குறித்துக் கூறுகிறது. இவ்வாறுபகலில் பெண்களும் இரவில் ஆண்களும் தினைப்புனம் காத்தமைகுறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. மருதநிலத்தில்வயல்களில் விளைந்துநின்ற நெற்பயிர்களைப் பாதுகாக்கும்பணியில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டிருந்தனர்.  பயிர்க​ளைப் பாதுகாத்தல் குறித்த ​செய்திகள் மது​ரைக்காஞ்சி, ​பெரும்பாணாற்றுப்ப​டை, ம​லைபடுகடாம் ஆகிய சங்க இலக்கியங்களிலும் இடம்​பெற்றிருப்பது ​நோக்கத்தக்கது.

அறுவ​டை ​செய்தல்

களமர் வளைந்து நின்று அரிவாளின் வாயாலேநெல்லையறுத்து நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படிதிரட்டின தொலையாத நெற்பொலியை நெருங்கத்தெற்றினகுதிரின்கண் வெற்றிடம் இல்லையாம்படி பெய்தனர் என்றுபொருநராற்றுப்படை (242 – 48) கூறுகிறது.

கழனிகள் நீங்காத புதுவருவாயையுடையவை , அவற்றில்நெற்பயிர் விளைந்து முற்றியிருந்தது. பசுமையறும்படி முற்றினபெரிய கதிர்கள், அறுப்பார்க்கும் சூடாக அடுக்குவார்க்கும்பிணையலடித்துக் கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம்விளைப்பன, குளவிகள் கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும்தன்மையன, களமர் அக்கதிர்களின் திரண்ட தாளையறுத்துக் கட்டுக்களாகக் கட்டிப் பிணையலடித்தனர். எருதுகள் போன பின்புவைக்கோலையும் கூளத்தையும் நீக்கினர். ஈரம் உலரா நிற்க,பொலியை மேல் காற்றிலே கையாலே தூற்றினர். தூற்றிய நெல்மேருமலை போலக் குவிந்து கிடந்த​ காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை (228-241) காட்டுகிறது.

வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்துதுள்ளிய மலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும்சேறு குத்தியால் பிடித்து வந்தனர். அதனைத் துண்டு துண்டாகஅறுத்துச் சமைத்ததனைப் புதிய நெல்லில் சமைத்த வெள்ளியசோற்றுக்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைக்கத் தின்ற களமர்,குனியமாட்டாதவராய், சூட்டை இடும் இடம் அறியாமல்தடுமாறினர் என்ற செய்தியை, புறநானூற்றில்(61) கோனாட்டுஎறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் நகைச்சுவை தோன்றக்கூறியுள்ளார்.

களமர் வயலில் நெல்லறுத்துக் கொண்டிருந்தபோதுஅரிவாள் முனை மழுங்கிவிட்டது. அதனால் அவர்கள் விரைந்துஅறுக்க முடியவில்லை. அரிவாளைத் தீட்டிக் கூராக்கினால் தான்தொடர்ந்து விரைவாக அறுக்க முடியும். களமர் வயலில் கிடந்தஆமையின் முதுகில் முனை  மழுங்கிய அரிவாளைத் தீட்டிக்கொண்டார்களாம்

இக்காட்சியைப்  புறநானூறு (379),

‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கிற்
பின்னை மறத்தோடரியக் கல் செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்துரிஞ்சும்
நெல்லமல் புரவு ‘

என்று தெளிவாகக் காட்டுகிறது.

உழவுத்​தொழிலில் பின்பற்றக் கூடிய பல்​வேறு உத்திக​ளைத் திருவள்ளுவர் உழவு அதிகாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் ​நோக்கத்தக்கது. சங்க காலத்தில் ​வேளாண் பாதுகாப்பி​னை இயற்​கை வழியில் மக்கள் ​செய்த​தையும், நீர்நி​லைக​ளை மன்னர்களும் மக்களும் பராமரித்த​தையும் ​செவ்விலக்கியங்கள் நன்கு காட்சிப்படுத்துகின்றன. உழவர்கள் அ​னைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சமுதாயத்தில் உயரிய மதிப்பிருந்தது. . உழவர்களும் உழவுத்​தொழிலும் பாதுகாக்கப் பட்டா​ல்தான் உலகம் உய்ய முடியும் என்று அ​னைவரும் அறிந்திருந்த காரணத்தினால்தான் மன்னர்கள் உழவர்க​ளைக் கலங்காது பாதுகாத்தனர் என்பது ​நோக்கத்தக்கது.

Series Navigation
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *