சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”

author
90
0 minutes, 0 seconds Read
This entry is part 24 of 25 in the series 17 மே 2015

ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட்
(ஐபி டைம்ஸ்)

சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது.
saudis-free-shia-cleric-more-unrest-looms
பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி அரேபியாவில் உருவான எதிர்ப்பு போராட்டங்களும், வெள்ளிக்கிழமையில் “ஆத்திரநாள்” என்று போராட்டம் துவக்கப்பட்டதும், சவுதி அரேபிய அரசாங்கம், அவரை மார்ச் 2011 இல் விடுதலை செய்தது. ஷேக் டாஃபிக் அல் அமெர் என்ற இந்த மதகுரு பெயரளவுக்கான மன்னராட்சியாக இன்றைய எதேச்சதிகார மன்னராட்சி மாறவேண்டும் என்றும், மக்களிடம் அதிகாரத்தை ஒப்புவிக்க வேண்டும் என்றும் கோரியதற்காக சென்ற மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் ஷியாக்களும் சுன்னிகளும் சமமாக இந்த சவுதி அரேபிய அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியதாக கூறப்படுகிறது.

பஹ்ரேன், எகிப்து, துனிசியா, லிபியா போன்ற நாடுகளில் சர்வாதிகாரங்களுக்கு எதிராக உருவான மக்கள் போராட்டங்கள் “அரபு வசந்தம்” என்று அழைக்கப்பட்டன. இது உலக மக்களுக்கு இந்த போராட்டங்களை அறிமுகம் செய்தது. ஆனால், உலகத்தின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளரான சவுதி அரேபியாவில் 2011இல் நடந்த போராட்டங்கள் உலகமக்களால் அதிக கவனத்துக்குள்ளாகவில்லை.

மார்ச் 2011 ல், ஷியா ஆயிரக்கணக்கான ஒரு வன்முறைத் சந்தித்தார் ஒரு எழுச்சியில், நிராயுதபாணியாக மீது கைதுகள் மற்றும் பொலிஸ் துப்பாக்கி சூடு நிகழ்வுகளில் அலை தொடங்கி, பாரபட்சம் மற்றும் மத மற்றும் அரசியல் பல தசாப்தங்களின் அடக்குமுறை ஆர்ப்பாட்டம் செய்ய Qatif, சவுதி அரேபியா, வீதிகளில் இறங்கினர் எதிர்ப்பாளர்கள்.

சவுதி அரேபியாவில் ஷியா பிரிவினருக்கு எதிராக பல்லாண்டுகளாக நிறுவனப்படுத்தப்பட்ட பாரபட்சத்துக்கு எதிராகவும், மத மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், 2011இல், சவுதி அரேபியாவில் காடிஃப் நகரத்தின் தெருக்களில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லீம் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டம், அரசு வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டது. நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்தது. ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

சவுதி அரேபியா யேமனில் உள்ள ஷியா பிரிவு ஹூதி போராளிகள் மீது நடத்தும் போரினால், ஷியா பிரிவினர் தூண்டப்படுவார்கள் என்று அஞ்சிய சவுதி அரேபியாவால், 27 பேர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 250க்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று ஷியா பிரிவு தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

சவுதி அரேபியாவில் 2.7 சதவீதத்தினர் ஷியா பிரிவினர். இவர்கள் நாட்டில் 12 சதவீதத்தினராக உள்ளார்கள். சவுதி அரேபியாவின் அல் அஹ்ஸா, அல் கத்திஃப் மாவட்டங்களில் வசிக்கிறார்கள். இந்த இடங்களே சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத்தின் பெரும்பான்மை உள்ள இடங்கள். சவுதி அரேபியாவின் சுன்னி மன்னராட்சியின் முக்கிய கொள்கையான வஹாபிஸத்தின் படி, ஷியா பிரிவினர் காபிர்களாகவும், ஈரானின் ஏஜெண்டுகளாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

மனித உரிமை கண்காணிப்பகம், 2009இல் வெளியிட்ட அறிக்கையில். சவுதி ஷியா பிரிவினர் மீது பரவலான பாரபட்சமும், அரசாங்க கல்வி அமைப்பில் பெரும் கட்டுப்பாடுகளும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியது. ஷியா பிரிவினர் அவர்களது மதத்தை பற்றி அறிவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்றும், இவர்கள் சுன்னி தலைவர்களால் காபிர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியது.

மேலும், நீதிபதிகள், வழக்குகளில், ஷியா பிரிவு சாட்சியங்களை அவர்களது மதப்பிரிவு காரணமாக தடை செய்கிறார்கள் என்றும் ஷியாக்கள் அரசாங்கத்திலோ அல்லது ராணுவத்திலோ சேர்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்றும் கூறியது.

போராட்டதின்போது ஷியா பிரிவு போராட்டக்காரர்கள் குழுமுகிறார்கள்.
shiite-demonstrators-gather-during-protest
கட்டிஃப் நகரத்தில் மார்ச் 9, 2011இல் போராட்டக்காரர்கள் குழுமுகிறார்கள். சவுதி ஷியாக்கள் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் சிறிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஷியா பிரிவு கைதிகளை எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்து வைத்திருப்பதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரியும் நூற்றுக்கணக்கான ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

வஹாபி கொள்கை மூலமாகவே ஷியா குடிமக்களை சவுதி அரசாங்கம் வெகுகாலமாக பார்த்துவருகிறது. இவர்களை காபிர்கள் என்றும், இவர்களது தேசபக்தியை சந்தேகமாகவும் பார்த்துவருகிறது என்று சாரா லீ விட்சன் என்ற மனித உரிமை கண்காணிப்பகத்தின் டைரக்டர் கூறினார்.

இந்த மாதிரியான சூழ்நிலைகளே 2011இல் ஷியா போராட்டங்களுக்கு இட்டுச் சென்றன. இது 2012இல் தொடர்ந்ததால் மேலும் 20 போராட்டக்காரர்கள் இறப்பதற்கும் காரணமாயிற்று.

ஷேக் நிம்ர் அல் நிம்ர் என்னும் முக்கியமான ஷியா ஆர்வலர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். பயங்கரவாதி என்றும், “கடவுளின் மீது போர் தொடுத்தார்” என்றும் இவரை குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

சவுதிகள் அடக்குமுறைக்கு முன்பாக அந்த இடத்துக்கு செல்லும் வழிகளை அடைத்துவிடுவதாலும், அந்த விஷயங்கள் எங்கேயும் கசியக்கூடாது என்று முயற்சி எடுப்பதாலும், யுடியூப் போன்ற சில விஷயங்கள் மூலம் வெளியே செய்திகள் கசிகின்றன. இந்த வீடியோக்களில் நூற்றுக்கணக்கான ஷியாக்கள் பலகைகள் எடுத்துகொண்டு ஊர்வலம் போவதையும், சவுதி அரேபிய மன்னராட்சிக்கு எதிராக கோஷங்கள் இடப்படுவதையும், அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் கோஷங்கள் எழுதப்படுவதையும் காணமுடிகிறது.

“இது வெறுப்பின் மொழி. இது போரினால் இன்னும் மோசமடைகிறது” என்று ஜாபர் அல் ஷாயெப் என்னும் ஷியா அரசியல்வாதி கூறுகிறார்.

சுவர்களில் எழுதப்பட்ட கோஷங்கள் 2014இலும் இருக்கின்றன என்று மனித உரிமை ஆர்வலர் ஆதம் கூகுள் கூறுகிறார். அரபு வசந்தத்தின் தொடர்பாக எழுந்த போராட்டங்கள் கைதுகளாலும், சிறை தண்டனைகளாலும் அடக்கப்பட்டதாக இருந்தாலும், சவுதி அரேபியாவின் ஷியா பிரிவினரின் நிலை முன்னைப்போலவே மோசமாகவே இருக்கிறது என்று கூறினார்.

“2011இலிருந்து மோசமான நிலையே இருக்கிறது. பாரபட்சத்தை நீக்கும்படி கோரிய ஷியா பிரிவினரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. சொல்லப்போனால் இன்னும் மோசமடைந்திருக்கிறது” என்கிறார்.

சவுதி அரேபியா சமீபத்தில் “பயங்கரவாத குற்றங்களை” விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கியிருக்கிறது. இதுவரை ஏராளமான போராட்டக்காரர்களையும் பத்திரிக்கையாளர்களையும் நீண்ட சிறைத்தண்டனைக்கு அனுப்பியிருக்கிறது. சென்ற வருடம், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அரசின் சட்டங்களுக்கு எதிராக பேசுவது இப்போது பயங்கரவாத குற்றம்.

இப்போது சவுதி அரேபியா ஏமனுக்கு எதிராக போரில் இறங்கியிருப்பதாலேயே, இப்போது ஷியா பிரிவினர் போராட்டத்தில் இறங்காமல் இருக்கிறார்கள். ஏனெனில், ஈரான் யேமனின் ஹூதி போராளிகளுக்கு உதவுவதாக சவுதி அரேபியா கூறுவதால், அதனை முகாந்திரமாக வைத்துகொண்டு ஷியா பிரிவினர் மீது இன்னும் பாரபட்சத்தையும் அடக்குமுறையையும் ஏவும் என்று இவர்கள் அஞ்சுகிறார்கள்.

கடிஃப் மாகாணத்தில்,அல் அவாமியா நகரில் ஞாயிறன்று நடந்த சிறு சண்டையில் ஒரு சவுதி அரேபிய போலீஸ்காரர் மரணமடைந்தார். இது கிழக்கு பகுதியில் புதிய போராட்டம் உருவாகிறது என்று சந்தேகிக்க வைத்தது. ஆனால், ஜாபர் அல் ஷாயப் என்னும் காடிஃப் முனிசிபர் கவுன்ஸில் உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர், இந்த நிகழ்ச்சிக்கும் யேமனில் நடக்கும் போருக்கும் சம்பந்தமில்லை என்றும், மனித உரிமைகள் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.

ஹூதி போராளிகளுக்கு எதிராக நடக்கும் சவுதி போரினால், சவுதி ஷியா பிரிவினர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதை அவர் தெளிவாகவே எடுத்துரைத்தார். நவம்பர் 2014இல் அல் அஹ்சா நகரில் உள்ள ஷியா பிரிவினர் மசூதியில் நடந்த தாக்குதலில் தொழச்சென்ற எட்டு ஷியா பிரிவினர் கொல்லப்பட்டார்கள். மேலும் இந்த சமயத்தில் வஹாபி பேச்சாளர்களின் ஷியாக்களுக்கு எதிரான வன்முறை பேச்சு அதிகரித்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டார்.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற (சுன்னி வஹாபி) அமைப்புக்கு எதிராக ஷியா போராளிகள் நடத்தும் போர் சவுதி அரேபியாவிலும் எதிரொலிக்கிறது என்று இவர் கூறுகிறார்.

“அல் அஹ்ஸாவில் நடந்த மசூதி தாக்குதல் இந்த மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் வகுப்புவாத போரின் விளைவுதான். போரின் காரணமாக வெறுப்பு உரைகள் அதிகரித்துவருகின்றன” என்று இவர் கூறுகிறார்.

சானாவில் ஷியா முஸ்லீம் போராளிகள்
shiite-muslim-rebels-sanaa-saudi-arabia
மார்ச் 26, 2015 அன்று, சவுதி அரேபியாவின் தாக்குதல்களுக்கு எதிராக சானா பகுதியில் நடந்த ஊர்வலத்தில் ஷியா முஸ்லீம் போராளிகள் தங்கள் ஆயுதங்களை தூக்கி காட்டுகிறார்கள். சவுதி அரேபியாவிலிருந்து வரும் போர் விமானங்கள் யேமனின் ஜனாதிபதியை துரத்த விழைந்த ஷியா முஸ்லீம் போராளிகளை தாக்கின. இது அமெரிக்காவின் ஆதரவோடு, ஈரான் ஆதரவை அரேபிய தீபகற்பத்தில் குறைக்க உலகத்தின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளரான சவுதி அரேபியா இறங்கிய போர்.

இந்த ஷியா பிரிவினர் இந்த யேமன் போரை விரும்பாமல் இருந்தாலும், கடந்த 4 வருடங்களாக ஷியா பிரிவினர் மீது சவுதி அரசாங்கம் தொடுத்துள்ள நடவடிக்கைகளால், இந்த ஷியா பிரிவினர் அரசாங்கத்துக்கு எதிராக தெருக்களில் இறங்க தைரியமில்லாமல் இருக்கிறார்கள் என்று அல் ஷையப் கூறுகிறார்

“மூன்று வருடங்களுக்கு முன்பு உணர்ந்ததை போல இன்று மக்கள் உணரவில்லை. போராடியதால் ஒரு பயனும் இல்லை என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதை பெற இங்கே இருக்கும் லோக்கல் ஆட்களோடு உறவு வைத்திருப்பதே, போலீஸுடன் மோதுவதை விட உகந்தது என்று உணர தலைப்பட்டிருக்கிறார்கள்” என்று அல் ஷையப் கூறினார்.

போராட்டங்கள் இறந்துவிட்டாலும், சவுதி ஷியா பிரிவினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கொண்டேதான் இருப்பார்கள் என்று கூறினார். “மக்களுக்கு குறைகள் இருக்கின்றன. சகிப்புத்தன்மையையும், சமத்துவத்தையும் அரசாங்கத்திடமிருந்து பெறும் வரைஅவர்கள் எந்த வழியிலாவது குரலெழுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள்” என்று கூறுகிறார்.
சவுதி அரேபியாவின் ராணுவ பலம் ஷியாக்களை தெருக்களில் இறங்கி போராடுவதை தடுக்கும் என்று சவுதி ஷியா பிரிவினரை பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கும் டோபி மத்தீசன் என்னும் காம்ப்ரிட்ஜ் பல்கலையின் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

“சவுதி அரேபியாவின் உள்ளே வகுப்புவாத உறவுகளுக்கு இந்த போர் நல்லதல்ல. ஆனால் இது புதிய போராட்டங்களை உருவாக்குமா? நான் அப்படி நினைக்கவில்லை” என்று கூறினார்.

“அடிப்படையில் இந்த மக்களுக்கு தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்று தெரியும். நாட்டின் மற்ற பகுதிகளின் மக்களிடமிருந்து ஆதரவில்லை. இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. ராணுவம் வலிமையாக ஒருங்கிணைந்துள்ளது. அவாமியா அவ்வளவு ஒன்றும் பெரிய இடமில்லை. பெரிய போராட்டங்கள் உருவானாலும், சவுதிகள் இதனை நசுக்கிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை”

மூலம்

Series Navigationகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசுசும்மா ஊதுங்க பாஸ் – 2
author

Similar Posts

90 Comments

  1. Avatar
    சவரப்பிரியன் says:

    அறிவுரை வழங்குவதில் பட்டம் வாங்கியவர்களிடமிருந்து, சவுதி அரேபிய ஷியாக்களுக்கு ஏதும் அறிவுரை இல்லையா?

  2. Avatar
    paandiyan says:

    சவரப்பிரியன்
    all converted in india are sunny caste (by default they goes to sunny caste only). they would not like shiya

  3. Avatar
    சவரப்பிரியன் says:

    http:// http://www.bbc.com/news/world-middle-east-32843510
    சவுதி அரேபியாவில் இந்த கட்டுரை அச்சப்பட்டது போலவே, ஷியா பிரிவு மசூதியில் சுன்னிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியதில் 21 ஷியாக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். வஹாபி பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றிருக்கிறது.
    ஏன் ஷியாக்களும் சுன்னிகளும் ஒருவர் மீது ஒருவர் இப்படி வன்முறை வெறியோடு அலைகிறார்கள்?

    1. Avatar
      BS says:

      இக்கேள்விக்கு இசுலாமிய மதத்தைச்சேர்ந்தவரான நீங்களே பதில் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோm

  4. Avatar
    டமிலன் says:

    //ஏன் ஷியாக்களும் சுன்னிகளும் ஒருவர் மீது ஒருவர் இப்படி வன்முறை வெறியோடு அலைகிறார்கள்?//
    ஒருவருக்கு மற்றவர் கெட்ட முஸ்லீம். அதனால்தான் கொல்ல அலைகிறார்கள்.
    கெட்ட முஸ்லீமை கொல்ல வேண்டும் என்று முகம்மது இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார்.
    https://pagaduu.wordpress.com/2011/08/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4/

    3. கெட்ட முஸ்லீம்களை கொல்லுவது

    மூன்று அருட்கொடைகளிலேயே மிகவும் முக்கியமானதும், நெஞ்சம் நெகிழ வைப்பதுமான அருட்கொடை கெட்ட முஸ்லீம்களை கொல்லுவது என்றால் மிகையாகாது.

    மற்ற சுன்னாக்கள் சுவனத்துக்கு செல்ல மதிப்பெண்களை தரும். ஆனால் இந்த சுன்னாவோ சுவனம் நிச்சயம் என்று காரண்டி தரும். (9:111)

    நமது அன்புக்குரிய கருணை மிக்க நபி(ஸல்) அவர்கள் கெட்ட முஸ்லீம்களை வெறுத்தார்கள். இந்த கெட்ட முஸ்லீம்கள் வரிசையில் சரியாக இஸ்லாமை பின்பற்றாத வகையறா, இஸ்லாமிலிருந்து வெளியேறிய வகையறா, நபி யை(ஸல்) திட்டும் வகையறா எல்லாம் அடக்கம்.

    நபி(ஸல்) அவர்கள் யூதர்களை வெறுத்ததை விடவும் ஒரு கும்பலை வெறுத்தார்கள் என்றால், அது இந்த கெட்ட முஸ்லீம்கள் என்றால் மிகையில்லை. குஃபாரை தலையைத்தான் சீவியிருக்கிறார். ஆனால் கெட்ட முஸ்லீம்களை உயிரோடு கொளுத்தி அவர்களது வீடுகளையும் மசூதிகளையும் எரித்திருக்கிறார். மஸ்ஜித் – ஈ-சரார் என்ற மசூதியை ஒரு சிலர் சேர்ந்து கட்டினார்கள். நபியையும் அழைத்து வணங்கச்சொன்னார்கள். அவரும் வருவதாக வாக்களித்தார். பிறகு யோசித்து பார்த்து இவர்கள் நம்முடைய அவசியம் இல்லாமலேயே முஸ்லீம்களாக அல்லாஹ்வை வணங்க ஆரம்பித்தால் நம் கதி என்னாவது என்று பயந்து அவர்களை கூண்டோடு அழிக்க முடிவு செய்தார். உடனே வஹிதான்.

    Bukhari V1:B11:N626: “The Prophet said, “burn all those who had not left their houses for the prayer, burning them alive inside their homes”

    9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் – ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

    9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

    9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.

    9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.

    முஃமீன்களான நாம் கவனிக்க வேண்டியது 9:111 இல் கெட்ட முஸ்லீம்களை கொன்று அவர்களது பள்ளிவாசலை இடித்து அவர்களை உயிரோடு கொளுத்தினால் சுவனம் நிச்சயம் என்ற அல்லாஹ்வின் உறுதிமொழி.

    1400 வருடங்களாக ஆனாலும் அல்லாஹ்வின் இந்த உறுதிமொழி மூமீன்களுக்கு பேராவலை ஊட்டி கெட்ட முஸ்லீம்களை அழிக்க உறுதியாக துணையிருக்கிறது.

    ஒவ்வொரு முஸ்லீம் பிரிவை பொறுத்தமட்டில், அந்த முஸ்லீம் பிரிவே நல்ல முஸ்லீம். அந்த முஸ்லீம் பிரிவில் இல்லாதவர்களெல்லாம் கெட்ட முஸ்லீம்.

    ஆகவே குரானில் இந்த வசனங்கள் இருக்கும் வரைக்கும் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமை கெட்ட முஸ்லீம் என்று பெயர் சொல்லி கொல்லுவது நடந்துகொண்டே இருக்கும்.

  5. Avatar
    BS says:

    இசுலாமியரான சவரப்பிரியனின் கருத்தைத்தான் கேட்டேன். வேறொருவர் எழுதித்தள்ளிவிட்டார்.

    ஷன்னிக்களும் ஷியாக்களும் அங்குதானே ஒருவரையொருவர் கொன்று தீர்த்துக்கொள்கிறார்கள். இங்கில்லையே? ஏன் கவலைப்படவேண்டும்?

  6. Avatar
    paandiyan says:

    /ஷன்னிக்களும் ஷியாக்களும் அங்குதானே ஒருவரையொருவர் கொன்று தீர்த்துக்கொள்கிறார்கள். இங்கில்லையே? ஏன் கவலைப்படவேண்டும்?/

    சுவனபிரியன் , சவரப்ரியன் வித்தியாசம் தெரியவில்லையா இல்லை எங்களை கலைக்கரீங்கள. எவன் எப்படி செத்தா என்ன . இவங்க ஒழிந்தால் சரி என்ற உங்கள் உள்குத்து கருது சரிதான்

  7. Avatar
    suvanappiriyan says:

    திரு பிஎஸ்

    //ஷன்னிக்களும் ஷியாக்களும் அங்குதானே ஒருவரையொருவர் கொன்று தீர்த்துக்கொள்கிறார்கள். இங்கில்லையே? ஏன் கவலைப்படவேண்டும்?//

    எங்கெல்லாம் பெட்ரோல் வளம் கொழிக்கிறதோ அந்த நாடுகளிலெல்லாம் குண்டு வெடிக்கும். அந்த குண்டுகளும் இஸ்ரலிய உளவு அமைப்பால் வைக்கப்படும்.

    அரபுலகிலிருந்து இஸ்ரேலை முற்றாக விரட்யடிப்போம் என்று சவுதி அமைச்சர் கூறிய மறுநாள் ஷியா மசூதியில் குண்டு வெடிக்கிறது.

    இந்தியாவிலும் பெட்ரோல் வளம் கண்டு பிடிக்கப்படடால் அதனை கொள்ளையடிக்க பார்பனர் தலித் மோதல் அல்லது ஷியா சன்னி மோதலை அமெரிக்க ஆயுத வியாபாரிகள் தூண்டி விடுவர். எவன் தாலி அறுந்தாலும் அமெரிக்க இஸ்ரேலிய ஆயுத வியாபாரம் படுத்து விடக் கூடாது.

  8. Avatar
    paandiyan says:

    /எங்கெல்லாம் பெட்ரோல் வளம் கொழிக்கிறதோ அந்த நாடுகளிலெல்லாம் குண்டு வெடிக்கும். அந்த குண்டுகளும் இஸ்ரலிய உளவு அமைப்பால் வைக்கப்படும்.//

    the same site, one more article. what is the relation on this articles for Americans? ugly converted people … you will have to pay heavy price soon.
    reg
    http://puthu.thinnai.com/?p=29285

  9. Avatar
    paandiyan says:

    ///எங்கெல்லாம் பெட்ரோல் வளம் கொழிக்கிறதோ அந்த நாடுகளிலெல்லாம் குண்டு வெடிக்கும். அந்த குண்டுகளும் இஸ்ரலிய உளவு அமைப்பால் வைக்கப்படும்.//

    places like shriya, emen , suddan are not much petrol resources available. why ugly converted are fighting there?

  10. Avatar
    paandiyan says:

    any American agent involved this???

    துபாயில் மருத்துவ உதவியாளராக பணியாற்றச் சென்ற தனது மனைவியை, வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாக குடியாத்தத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    கள்ளியாம்மன்பட்டியைச் சேர்ந்த அலிபாபா என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில், தனது மனைவி சஜீனா பானு, வேலைக்காக துபாய் சென்றார்.

    ஆனால், அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட், அவரை வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும், அந்த நபர், தனது மனைவியை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

    விரைவில் தனது மனைவியை மீட்டுத் தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார்

  11. Avatar
    தங்கமணி says:

    சுப்பி

    //எங்கெல்லாம் பெட்ரோல் வளம் கொழிக்கிறதோ அந்த நாடுகளிலெல்லாம் குண்டு வெடிக்கும். அந்த குண்டுகளும் இஸ்ரலிய உளவு அமைப்பால் வைக்கப்படும்.//

    உங்களுக்கு தெரியுது. நாங்கதான் குண்டு வைத்தோம் என்று சொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான் ஆசாமிகளுக்கு தெரியவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான், அல்குவேதா ஆட்களுக்கு அள்ளித்தரும் சவுதி ஷேக்குகளுக்கும், சவுதி அரசாங்கத்துக்கும் தெரியவில்லை.

    //அரபுலகிலிருந்து இஸ்ரேலை முற்றாக விரட்யடிப்போம் என்று சவுதி அமைச்சர் கூறிய மறுநாள் ஷியா மசூதியில் குண்டு வெடிக்கிறது.//
    சவுதி அமைச்சர் அப்படி அன்றுமட்டும்தான் கூறினாரா? எல்லா முஸ்லீம் நாடுகளிலும், அதுவும் இஸ்லாமை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் சாமியாடி துவக்கி வைத்த முகம்மது தோன்றிய காலத்திலிருந்தேதானே சொல்லி வருகிறார்கள் முகம்மதுவும் முகம்மதுவின் அடிப்பொடிகளும்? அன்றெல்லாம் இல்லாமல் இப்போதுதான் வைத்தார்களா?

    //இந்தியாவிலும் பெட்ரோல் வளம் கண்டு பிடிக்கப்படடால் அதனை கொள்ளையடிக்க பார்பனர் தலித் மோதல் அல்லது ஷியா சன்னி மோதலை அமெரிக்க ஆயுத வியாபாரிகள் தூண்டி விடுவர். எவன் தாலி அறுந்தாலும் அமெரிக்க இஸ்ரேலிய ஆயுத வியாபாரம் படுத்து விடக் கூடாது.//
    பார்ப்பனர் தலித் மோதலுக்கும் யூதர்களும் அமெரிக்காவும்தான் காரணமா? ஷியா சுன்னி மோதலுக்கும் அமெரிக்காதான் காரணமா?
    ஆயீஷாவும் அலியும் அடித்துகொண்டதால் 1400 வருடங்களுக்கு முன்னால் உருவான சியா சுன்னி சண்டை நடக்கும்போது அமெரிக்காவே கண்டுபிடிக்கலையேங்க? ஒருவேளை யூதர்கள்தான் அயீஷா வேஷம் போட்டு சண்டையை ஆரம்பிச்சி வச்சாங்களா? அல்லது அலிவேசத்தில யூதர்கள் வந்தாங்களா? அலி வேசத்துல வந்தாங்கண்ணுதான் நீங்க சொல்லுவீங்க. ஏன்னா நீங்க ஒரு சுன்னி பாருங்க. ஆமா அலியை கும்பிடற ஈரானும் ஏங்க இஸ்ரேலை ஒழிப்போம்னு சொல்றாங்க?

  12. Avatar
    ரங்கன் says:

    // பார்பனர் தலித் மோதல்//

    யாருங்க சுவனப்ரியன் ? இந்த மயிலாப்பூரில் ஒரு கிழவரின் பூணுலை அறுத்தாங்களெ அந்த பார்பன கிழவரையும் தலித்களையும் அமெரிக்கா மோத விடுமா ? அப்போ மருத்துவர் வருஷா வருஷம் மகாபலிபுரத்திலே பேசறதெல்லாம் தலித் அன்பர்களை அணைத்துக் கொண்டு போகிறதோ ?

    ஷியா-சுன்னி, காதொலிக்-ப்ராடஸ்டன்ட் , PMK-VCK, DMK-ADMK என்று ஊருக்கு ஊர் ஒருத்தருக்கு ஒருத்தர்
    அடிச்சிப் பொரண்டுப்பீங்க . போர் அடிக்குபோது ; மச்சான் அந்த பார்பானை ஒரு வழி பண்ணிட்டு வந்து மறுபடி நம்ம சண்டைய தொடரலாம் வா – நல்ல ஐடியா மாமா – வா வா அங்கே ஒரு கிழவன் வர்றான் பாரு – புடி ! புடி !! பூணல அறு !!!

  13. Avatar
    ஷாலி says:

    //ஒருவேளை யூதர்கள்தான் அயீஷா வேஷம் போட்டு சண்டையை ஆரம்பிச்சி வச்சாங்களா? அல்லது அலிவேசத்தில யூதர்கள் வந்தாங்களா? அலி வேசத்துல வந்தாங்கண்ணுதான் நீங்க சொல்லுவீங்க. ஏன்னா நீங்க ஒரு சுன்னி பாருங்க//

    தங்கமணி எனும் “சங்க”மணியார் சபைக்கு வந்து விட்டார்.இஸ்லாத்தை கரைச்சு குடிச்சு கொப்புளிக்கிறவர்.அண்ணனுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை.இஸ்லாத்தின் வரலாற்றின் ஆணிவேரை பிட்சுபுடுங்கி விளயாடுகிறவர்.மறந்துவிட்டார் போல் தெரிகிறது.

    அலி வேசத்தில் யூதர்கள் வந்தார்களா? என்று கேட்கிறீர்கள். அலியின் உருவில் அல்லாஹ் கடவுள் வந்து விட்டார். அலி தான் அல்லாஹ் ,அல்லாஹ் தான் அலி என்று கூறி ஒரு கூட்டத்தை சேர்த்தவர் வேறு யாருமல்ல ஏமன் நாட்டு யூத இனத்தை சேர்ந்த அப்துல்லா இபின் ஸபா எனும் யூதன்.இவனை பின்பற்றி அலியை அல்லாஹ் என்று கூறியவர்கள் ஷியாக்கள்.

    The History of the Shia. The religion of the Shiah was founded by a Jew from Yemen called Abdullah bin Saba’.
    http://www.islamicweb.com/beliefs/cults/shia_history.htm

    ஈரானைச் சேர்ந்த ஷியாக்களுக்கும் யூதர்களுக்கும் அதாவது அமெரிக்கா,இஸ்ரேலுக்கும் எப்போதும் மறைமுக இணைப்பு இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் வெளியே கீரிக்கும் பாம்புக்கும் சண்டை போடுவதுபோல் பாவுலா காட்டிக்கொண்டே இருப்பார்கள்.உள்ளுக்குள் அண்டர் கிரவுண்ட் வேலை நடக்கும்.

    ஒரு சின்ன உதாரணம், அதிபர் நிக்சன் ஆட்சியின் போது லத்தின் அமெரிக்கா நிகாரகுவா நாட்டு சாந்தினிஸ்ட் கம்யுனிஸ்ட்களை அழிக்க காண்ட்ரா கலகக்காரர்களுக்கு சிஐஏ அனுப்பிய பல மில்லியன் டாலர் பெறுமான ஆயுதங்கள் எங்கே போய் இறங்கியது தெரியுமா தெஹ்ரானில்.ஏன்?ஈராக் சதாம் ஹுசைன் சுன்னி முஸ்லிம்களை அழிக்க.இதுதான் அமெரிக்காவை ஆளும் யூதர்களின் பாய் பாய் ஈரான் நாடகம்.இதுவரை ஈரான் ராணுவத்தால் ஒரு இஸ்ரேல் நபர் கூட கொள்ளப்படவில்லை.
    அப்துல்லா இபின் ஸபா யூத வழிவந்த இரானிய ஷியாக்களும் யூதார்களும் ஒருதாய் பிள்ளைகள். தங்கமணியாருக்கு தெரியாதது ஒண்ணுமில்லே…டமிலனுக்கு கண்டிப்பாக தெரியும்!

  14. Avatar
    தங்கமணி says:

    உங்களுக்கு பதில் சொல்ல எதையும் கரைத்து குடிக்கவேண்டியதில்லை. எல்லா விஷயங்களுமே இணையத்தில் இருக்கின்றன. தேடினால் கிடைக்கின்றன.
    அப்துல்லா இபின் ஸபா என்பவர் ஒரு யூதர், அவர்தான் ஷியா பிரிவை உருவாக்கியவர் என்பது உம்மயாத் அரசர்கள் வைத்த (சுன்னிகள்) குற்றச்சாட்டு. தபரி விடும் கதைகளில் இதுவும் ஒன்று.

    ஷியா பிரிவை உருவாக்கியவர் இவர் என்று ஷியா பிரிவு மக்கள் ஒப்புகொள்வதில்லை. இவர் இருந்தார் என்று ஒப்புகொள்ளும் ஷியாக்களே கம்மி. அப்படி ஒப்புகொள்பவர்களும் இவர் அலியை இறக்கவே இல்லை என்று சொன்னதற்காக கண்டிக்கிறார்கள்.

    ஈரானும் அமெரிக்காவும் அப்படி டீல் போட்டது எதற்காக என்று உலகமே அறியும். அங்கு இஸ்லாமிய புரட்சி நடந்ததும் அதன் விளைவாக அங்கிருந்த அமெரிக்க மன்னர் ஷா பதவி இறக்கப்பட்டதும், அங்கிருந்த அமெரிக்க தூதரக ஆட்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறைப்பட்டதும், அவர்களை விடுவிக்க அமெரிக்க அரசாங்கம் டீல் போட்டதும் உலகறிந்த விஷயம்.
    புளுகுவதற்கு முன்னால், சிந்தித்து புளுகுங்கள்.

  15. Avatar
    suvanappiriyan says:

    தங்க மணி!

    ////ஒருவேளை யூதர்கள்தான் அயீஷா வேஷம் போட்டு சண்டையை ஆரம்பிச்சி வச்சாங்களா? அல்லது அலிவேசத்தில யூதர்கள் வந்தாங்களா? அலி வேசத்துல வந்தாங்கண்ணுதான் நீங்க சொல்லுவீங்க. ஏன்னா நீங்க ஒரு சுன்னி பாருங்க////
    ஷியாயிஸத்தின் பிறப்பிடமாக மட்டுமில்லாமல் வளர்ப்பிடமாகவும் ஈரான் இருப்பதற்குக் காரணம் என்ன?

    ஈரான் என்ற பாரசீகப் பேரரசின் சாம்ராஜ்யம் தாக்கப்பட்டதும், தகர்க்கப்பட்டதும்அன்றைய இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது ஆட்சித் தலைவராக இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வீரமிக்க கைகளால் தான். இதனால் பாரசீக சக்திகள்,பாசி படிந்த உயர் சாதியினர் உமர் (ரலி) அவர்களைப் பழி வாங்கத் துடித்தனர்.

    பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த பாரசீகர்கள் பதவிப் பித்தை விட்டுவெளியேறுவது சாதாரண விஷயமல்ல! அதனால் அவர்கள் பழி வாங்கத் துடிப்பது இயல்பு தான். எனவே இவர்களுக்கு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒத்தசித்தாந்தத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் கை கோர்த்தனர். அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்கு எதிராக இவ்விரு தீய சக்திகளும் ஒன்று சேர்ந்து களம் அமைத்தனர்.

    கைதியான அரசிக்குக் கணவரான ஹுசைன் (ரலி)

    இப்படி இவர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில் பாரசீகத்திலிருந்துகைதியாக வந்த ஷஹ்ர் பானு என்ற பெண்ணை ஹுசைன் (ரலி) அவர்கள்மணமுடிக்கின்றார்கள். இந்தப் பெண் பாரசீக மன்னர் யஸ்தஜ்ரித் என்பவரின்மகளாவார். இந்நிகழ்வு யதார்த்தமாக நடந்த நிகழ்வாகும்.

    இதைப் பயன்படுத்திக் கொண்டு, யூதர்களின் முழு ஒத்துழைப்புடன் பாரசீகர்கள் இஸ்லாமிய அரசுக்குள் குழப்பம் விளைவிப்பதற்கு விரிவான முயற்சிகளை எடுத்துக்கொண்டனர்.

    உமர் (ரலி) அவர்கள் மரணித்த பின் இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் புனிதமேற்றும் பூர்வாங்கப் பணியில் இறங்கினர். அலீ (ரலி) அவர்களுக்கு விலாயத் இருப்பதாக வாதிட்டனர். அலீ (ரலி) அவர்களின் கவனத்திற்கு வராமலேயே இந்தச் சதி வலையைப் பின்னினர்.

    பாரசீகர்கள் ஏற்கனவே தங்களை தெய்வீக வழித் தோன்றல்கள் என்றும் தங்களின் நரம்பு நாளங்களில் தெய்வீக ரத்தம் ஓடுவதாகவும் நம்பியவர்கள்.

    சாசானியர்களான அவர்களிலிருந்து ஷஹ்ர் பானு என்ற பெண் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு சம்சாரமாகி விட்ட பின்னர், அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதற்குரிய வழி மிகவும் எளிதானது; இலகுவானது. ‘ஹூசைனி பிராமணர்கள்’ என்று அவர்கள் இன்றும் நமது இந்தியாவில் அறியப்படுகின்றனர்.

    பாரசீகர்களைச் சேர்ந்த இந்த மனைவியின் மூலமாக ஹுசைன் (ரலி) அவர்களுக்குப் பிறந்தவர் தான் ஜைனுல் ஆபிதீன் என்ற சின்ன அலீ ஆவார். இவருடைய பூத உடலில் ஓடுவது சாதாரண மனித இரத்தமல்ல! புனித இரத்தம் என்று ஒரு புனித வரலாற்றை உருவாக்கினர்.

    இதனால் தான் ஈரானில் பெரும்பான்மையானவர்கள் ஷியாயிஸத்தில் நுழைந்தனர்.

    இது தான் ஈரான் ஷியாக்களின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருப்பதற்குக் காரணமாகும்.

    1. Avatar
      தங்கமணி says:

      பரவாயில்லை. சொந்த கருத்து, சொந்த ஆராய்ச்சி எதுவும் இல்லாமல் கட்-அண்ட் பேஸ்டிலேயே காலம் ஓட்டும் சுப்பிக்கு திண்ணையிலும் கட்-அண்ட் பேஸ்ட் போடும் அனுமதி!தவ்ஹீத் ஜமாத் மற்றும் இதர வஹாபிகள் கற்பனையில் உருவாக்கும் பக்கங்களை தாண்டி சொந்தமாக அறிந்து எழுதினால், நானும் பதில் தருகிறேன்.

  16. Avatar
    ஷாலி says:

    //ஷியா பிரிவை உருவாக்கியவர் இவர் என்று ஷியா பிரிவு மக்கள் ஒப்புகொள்வதில்லை. இவர் இருந்தார் என்று ஒப்புகொள்ளும் ஷியாக்களே கம்மி. //

    இன்றைய ஷியா ஆட்சியாளர்கள் இதை மறுக்க பல அரசியல் காரணங்கள் உள்ளன என்பதை நாமும் மறக்கவில்லை

    அப்துல்லாஹ் இப்னு ஸபாவை ஒப்புக்கொள்ளும் ஷியாக்கள் கம்மி என்று தங்கமணி ஒப்புக்கொண்டுள்ளார்

    ஷியாவை தோற்றுவித்தவன் அப்துல்லா இப்ன் ஸபா என்னும் ஆதாரத்தை சொல்வது இன்றுள்ளவர்கள் அல்ல.இரண்டாம்,மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த Al-Naubakhti Al-Qummee (3rd Century) , Sad bin Abdullah bin Alee Khalaf Al Asshari al Qummee (Died-301H) போன்ற ஷியா மதத்தலைவர்களின் நூல்களிலிருந்து எடுத்துக் கூறுகின்றோம்.

  17. Avatar
    ஷாலி says:

    //தூதரக ஆட்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறைப்பட்டதும், அவர்களை விடுவிக்க அமெரிக்க அரசாங்கம் டீல் போட்டதும் உலகறிந்த விஷயம்.//

    பிணைக்கைதிகளை விடுவிக்க டீல் போட்டது சரிதான்.Nov.1986 ல் அமெரிக்கா அதிபர் ரீகன் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது ஈரானுக்கு ஆயுதம் விற்கவில்லை என்று மறுத்தார்.ஆனால் அடுத்த வாரத்தில் ஆயுத விற்பனையை ஒப்புக்கொண்டார்.ஆனால் அந்த ஆயுதம் பிணையக்கைதிகளை விடுவிப்பதற்காக அல்ல என்றார்.

    Excert from the Iran-Contra Report. “A secret Foreign Policy”- New York Times May-5,2010.

    அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஆயுதம் யாரை அழிக்க பயன்படுத்தப்பட்டது.ஈராக் சுன்னி முஸ்லிம்களை கொல்லத்தானே! இதைத்தான் நான் கூறினேன், //ஆயுதங்கள் எங்கே போய் இறங்கியது தெரியுமா தெஹ்ரானில்.ஏன்?ஈராக் சதாம் ஹுசைன் சுன்னி முஸ்லிம்களை அழிக்க// என்று. //புளுகுவதற்கு முன்னால், சிந்தித்து புளுகுங்கள்.// என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.”புளுகுனி தங்கமணி” என்ற பெயர் வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    1. Avatar
      தங்கமணி says:

      ஷாலி,
      அமெரிக்காவிடம் ஆயுதத்தை கேட்டது ஈரான். அமெரிக்காவிடம் ஆயுதங்களை கேட்டது ஈராக். இரண்டுக்குமே சப்ளை செய்தது அமெரிக்கா. ஆஹா, முஸ்லீம்களை அழிக்க இரண்டுக்கே சப்ளை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று ஏறலாம். ஆனால், அமெரிக்கர்கள் யார் கேட்டாலும் ஆயுதங்களை சப்ளை செய்வார்கள். பாகிஸ்தானுக்கு இவ்வளவு காலமாக சப்ளை செய்தவர்களும் அவர்கள்தான். ஒருவகையில் பாகிஸ்தானை ஏற்றிவிட்டு இந்துக்கள் சாவதற்கும் காரணமாக இருந்தவர்களும் அவர்கள் என்று ஏறிமிதிக்கலாம்தான். ஆனால், உங்களை மாதிரி இஸ்லாமியர்கள் என்றால் ரத்தம், மத்தவர்கள் என்றால் தக்காளி சட்னி என்று சொல்பவன் அல்ல நான். சவுதி அரேபியா ஏன் இஸ்ரேலிய விமானங்களுக்கு இடம் கொடுத்து ஈரானின் அணு தளங்களை அழிக்க அழைப்புவிடுத்தது என்று தெரியுமா? உங்கள் மதவெறியை தாண்டி யோசித்தால் விவரம் புரியும்.

  18. Avatar
    ஷாலி says:

    அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கள்ளக்கூட்டு உண்டு என்பது ஊரறிந்த ரகசியம்.

    (1981 In the operation seashell ) 75 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் Materiel included 150 M-40 antitank guns with 24,000 shells for each gun, spare parts for tank and aircraft engines, 106 mm, 130 mm, 203 mm and 175 mm shells and TOW missiles. This material was transported first by air by Argentine airline Transporte Aéreo Rioplatense and then (after the 1981 Armenia mid-air collision) by ship.

    Arms sales to Iran that totaled an estimated $500 million from 1981 to 1983 according to the Jafe Institute for Strategic Studies at Tel Aviv University. Most of it was paid for by Iranian oil delivered to Israel.[2]:107 “According to Ahmad Haidari, “an Iranian arms dealer working for the Khomeini regime, roughly 80% of the weaponry bought by Tehran” immediately after the onset of the war originated in Israel.[

    According to Mark Phythian, the fact “that the Iranian air force could function at all” after Iraq’s initial attack and “was able to undertake a number of sorties overBaghdad and strike at strategic installations” was “at least partly due to the decision of the Reagan administration to allow Israel to channel arms of US origin to Iran to prevent an easy and early Iraqi victory.

    Israeli arms dealer Yaacov Nimrodi apparently signed a deal with Iran’s Ministry of National Defense to sell $135,842,000 worth of arms, including Lance missiles,Copperhead shells and Hawk missiles.[5][6] In March 1982, The New York Times cited documents indicating that Israel had supplied half or more of all arms reaching Tehran in the previous 18 months, amounting to at least $100 million in sales. The Milan weekly Panorama reported that Israel had sold the Khomeini regime 45,000 Uzi submachine guns, anti-tank missile launchers, missiles, howitzers and aircraft replacement parts. “A large part of the booty from the PLO during the 1982 Lebanon campaign wound up in Tehran,” the magazine claimed

    http://en.wikipedia.org/wiki/Israeli_support_for_Iran_during_the_Iran%E2%80%93Iraq_war
    ஈரானின் தாக்கியா கொள்கையின் காரணமாக இந்த உண்மைகளை ஈரான் கொமைனியும் மறுத்து இஸ்ரேல் ஒரு புற்றுநோய் அதை அழிக்க வேண்டும் என்றார்.அஹமத் நிஜார் ஒருபடி முன்னேறி உலகப்படத்தில் இஸ்ரேல் என்ற வரைப்படமே இல்லாமல் ஆக்கவேண்டும் என்று பாம்பு-கீரிப்புள்ளை சண்டை படம் காட்டிக்கொண்டே வருகிறார்கள்.

  19. Avatar
    ஷாலி says:

    //ஷியா-சுன்னி, காதொலிக்-ப்ராடஸ்டன்ட் , PMK-VCK, DMK-ADMK என்று ஊருக்கு ஊர் ஒருத்தருக்கு ஒருத்தர்
    அடிச்சிப் பொரண்டுப்பீங்க . போர் அடிக்குபோது ; மச்சான் அந்த பார்பானை ஒரு வழி பண்ணிட்டு வந்து….//

    ஊருக்கு ஊர் இரண்டுபேர் அடித்துக்கொள்வது திருவாளர் ரங்கனுக்கு பெரிதாகத்தெரியவில்லை.ஆனால் பார்ப்பான்-தலித் பூணுல் சண்டையில் அடித்துக்கொள்ளும்போது பதைபதைகிறார்,துடிதுடிக்கிறார்.இதைத்தான் பெரியவர்கள் சொல்லுவார்கள்.”தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்” என்று. ரங்கன் ஸார்! இந்த சண்டையை நிறுத்த ஒரே வழி சூத்திரனுக்கும்,பஞ்சமனுக்கும் பூணூல் போடுவதே!வெளி நாட்டு வெள்ளைக்காரன் ஹரே கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு பூணூல்,பஞ்சகச்சம்,குடுமியுடன் இருப்பதை அனுமதிக்கிறீர்கள்.உள்நாட்டு கருப்புசாமிக்கு மட்டும் பூணுல் மறுப்பு நியாயமா? ஒரே நாடு! ஒரே இந்து!! ஒரே தர்மம்!!!
    ஒன்றே வர்ணம்-நினைத்துப்பாருங்கள்.எவ்வளவு நன்றாக இருக்கிறது.

  20. Avatar
    BS says:

    எனது இன்னொரு கேள்விக்கு இசுலாமியரல்லாதவர் பதில் சொன்னால் நன்று. எங்கோ நடக்கும் இன்னொரு மதத்தின் உட்சண்டை இவர்களை எப்படி பாதிக்கிறது? ஏன் இவ்வளவு ஆர்வம்? இந்தியாவில் ஷன்னிகளும், ஷியாக்களும் அடித்துக்கொண்டார்களா?

    1. Avatar
      தங்கமணி says:

      இந்தியாவில் சுன்னிகளும் ஷியாக்களும் வெகுகாலமாக அடித்துகொண்டிருக்கிறார்கள். வருடாவருடம் உத்தரபிரதேசத்தில் அவர்களுக்கு இடையே கலவரம் நடக்கும். கல்யாண் சிங் ஆட்சி செய்தபோது இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து ஒரு சில வருடங்கள் கலவரம் இல்லாமல் பார்த்துகொண்டார்.

  21. Avatar
    தங்கமணி says:

    டமிலனின் கருத்து சிந்திக்க வைக்கிறது. இஸ்லாமிய பிரிவுகளுக்குள் இருக்கும் சண்டைகளை, மசூதியை தாக்கி அங்கு கும்பிட்டுகொண்டிருப்பவர்களை கொன்று அழிப்பது என்று ஆரம்பித்து வைத்ததே முகம்மதுதான் என்பதால்தான் இன்றும் மசூதிகளில் “நல்ல முஸ்லீம்கள்” குண்டு வைக்கிறார்கள் என்று தெரிகிறது.

  22. Avatar
    paandiyan says:

    தம்மாம்: சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் இருக்கும் ஷியா பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர்.சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள ஷியா மசூதியான அல் அனௌத் மசூதியில் இன்று மதியம் ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தா அணிந்து வந்தார். அவர் பெண்கள் மசூதிக்குள் நுழையும் வாயிலுக்கு சென்றார். அந்த வாயில் பூட்டியிருந்ததால் ஆண்கள் செல்லும் வழியாக மசூதிக்குள் நுழைய முயன்றார்.ADVERTISEMENTஅப்போது புர்காவில் இருந்த அந்த நபரை பாதுகாவலர்கள் இருவர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அவர், பாதுகாவலர்கள் இருவர் மற்றும் ஒருவர் பலியாகினர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

    முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அல் காதீஹ் கிராமத்தில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்நிலையில் இந்த வாரமும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  23. Avatar
    தங்கமணி says:

    சவுதி குடும்பமும் யூதர்கள்தானாம். வஹாபிசத்தை தோற்றுவித்த வஹாபும் யூதர்தானாம். இஸ்லாத்தில் யாரும் யாரையும் திட்டவேண்டுமென்றால் உடனே யூதன் என்று சொல்லி திட்டுவார்கள் போலிருக்கிறது. முகம்மது என்ன சொல்லிக்கொடுத்தாரோ அதனை விடாமல் பின்பற்றுகிறார்கள்!
    http://aangirfan.blogspot.com/2011/11/jewish-control-of-saudi-arabia.html

  24. Avatar
    தங்கமணி says:

    இன்னும் பாருங்கள், சுவனப்பிரியனும், ஷாலியும் ஷியா பிரிவினர் மீது சவுதி அரசு பாரபட்சம் காட்டுவது தவறு என்று சொல்லமாட்டேன் என்கிறார்கள்!

  25. Avatar
    தங்கமணி says:

    இணையத்தில் பல இடங்களில் ஷியாக்களும் மற்றவர்களும் வஹாபிசம் ஒரு யூதசதி, வஹாபிசத்துக்கு காசு கொடுத்து உலகெங்கும் பரப்பி இஸ்லாமை ஒரு பயங்கரவாத மார்க்கம் என்று பரப்பும் சவுதி குடும்பமே ஒரு டொன்மே யூதர்கள் (மறைமுக யூதர்கள்) என்று சொல்கிறார்கள்.
    https://socioecohistory.wordpress.com/2011/10/17/2002-iraqi-intel-reported-wahhabis-are-of-jewish-origin/
    அதிலிருந்து…
    King Faisal Al-Saud at that time could not deny his family’s kindred with the Jews when he declared to the Washington Post on Sept. 17, 1969 stating: “We, The Saudi family, are cousins of the Jews: we entirely disagree with any Arab or Muslem Authority which shows any antagonism to the Jews; but we must live together with them in peace. Our country (Arabia) is the Fountain head from where the first Jew sprang, and his descendants spread out all over the world.” That was the declaration of King Faisal AL-Saud Bin Abdul Aziz! ‘

  26. Avatar
    ரங்கன் says:

    //பார்ப்பான்-தலித் பூணுல் சண்டையில் அடித்துக்கொள்ளும்போது பதைபதைகிறார்,துடிதுடிக்கிறார்.இதைத்தான் பெரியவர்கள் சொல்லுவார்கள்.”தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்” என்று. ரங்கன் ஸார்! இந்த சண்டையை நிறுத்த ஒரே வழி சூத்திரனுக்கும்,பஞ்சமனுக்கும் பூணூல் போடுவதே!வெளி நாட்டு வெள்ளைக்காரன் ஹரே கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு பூணூல்,பஞ்சகச்சம்,குடுமியுடன் இருப்பதை அனுமதிக்கிறீர்கள்.உள்நாட்டு கருப்புசாமிக்கு மட்டும் பூணுல் மறுப்பு நியாயமா? ஒரே நாடு! ஒரே இந்து!! ஒரே தர்மம்!!!
    ஒன்றே வர்ணம்-நினைத்துப்பாருங்கள்.எவ்வளவு நன்றாக இருக்கிறது.//

    பார்பான் அடி வாங்குகிறார். திருப்பிக் கொடுக்கவில்லை.

    பூணூல் யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஏன் நீங்கள் கூட போடலாம் ஷாலி . ஆனால் அதைப் போட்டால் அடி வாங்கிக்கொள்ள தயாராக வேண்டும். ரெடியா ?

  27. Avatar
    ரங்கன் says:

    குழியைத் தோண்ட செய்து அதிலேயே குழி தோண்டிய மனிதனை கொன்று புதைத்து அதை வீடியோ போடுகிற ஒரு ஈவு இரக்கமில்லாத கொடியவனை கண்டித்து எழுத மனமில்லை – பார்பான் அடி வாங்கினாலும் அவனைத் திட்டுவதற்கு ஓடி வந்து விடுவார்கள். தைர்யமில்லாத கோழைகள் – சீ !!

  28. Avatar
    BS says:

    நம் தமிழகத்தில் ஏகப்பட்ட கொடுமைகள், ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன. அதைப்பற்றி மூச்சுவிட மறுக்கிறார்கள். அதே வேளையில் எங்கோ சவுதி அரேபியாவில் ஷியாக்களும் சன்னிகளும் அடித்துக்கொண்டால் உணர்ச்சிவசப்படுகிறார்கள். வேடிக்கை! விநோதம் !!

    1. Avatar
      தங்கமணி says:

      அதானே, முஸ்லீம்களை குற்றம் சொல்லிவது போல எதாவது வந்தால் உடனே பார்ப்பன – தலித், பூணூல் என்று திசை மாற்றி கும்மி அடிக்க வேண்டியது.
      ஆனால் முஸ்லீம்கள் எதாவது ஒரு ஊரில் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், சென்னையில் ஊர்வலம் போய் எல்லோரையும் கடுப்பேற்ற வேண்டியது.
      இதுதானே உங்களுக்கு வேண்டும் BS and ஷாலி?

      போய் இதனை பர்மாவிலிருந்து பங்களாதேஷ் முஸ்லீம்கள் துரத்தப்படுவதற்காக சென்னையில் கலவரம் நடத்துபவர்களிடம் போய் சொல்லுங்களேன்?

    2. Avatar
      paandiyan says:

      அதுக்கு தான நீங்க இருக்கீங்க . நாங்க எதுக்கு ? உங்கள்ளுக்கு போர் அடிச்சா sollunga, சௌதி இல இருந்து இங்க வரோம்

  29. Avatar
    ஷாலி says:

    //ஆனால் முஸ்லீம்கள் எதாவது ஒரு ஊரில் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், சென்னையில் ஊர்வலம் போய் எல்லோரையும் கடுப்பேற்ற வேண்டியது.//

    உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்ற கொள்கையின்படி பிற நாட்டு சகோதரர்கள் பாதிக்கப்பட்டால் அதை கண்டித்து இவர்கள் ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.இதில் நீங்கள் கடுப்படிக்க அவசியம் என்ன? அடுத்த வீட்டுக்காரன் ஆண்பிள்ளை பெற்றால் நீங்கள் குழவிக்கல்லை வயிற்றில் குற்றிக் கொண்டால் நாம் என்ன செய்ய முடியும்.?
    வாசு தேவ குடும்பம் என்று பெருசா பேசவீற்கள். ஆனால் தன் சொந்த இந்து சகோதரனை கொல்வதற்கு சிங்களவனுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பீர்கள்.உங்கள் எண்ணப்படி காஷ்மீர் பிராம்மணர்களைத் தவிர வேறு எவரும் இந்துக்கள் இல்லை.

  30. Avatar
    ஷாலி says:

    //நம் தமிழகத்தில் ஏகப்பட்ட கொடுமைகள், ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன. அதைப்பற்றி மூச்சுவிட மறுக்கிறார்கள். //

    திரு.BS அவர்களே! நம்ம தங்கமணி வகையாறாக்களுக்கு எப்பவுமே தூரத்து பார்வை மட்டுமே தெரியும்.கிட்டப்பார்வை அம்பேல்.இவுக கூரை ஏறி கோழி புடிக்க மாட்டாக…எப்பவுமே வானம் ஏறி வாங்கோழிதான் புடிப்பாங்க….இதுக்குப் பெயர்தான் ‘வாசுதேவ குடும்பம்.”

    1. Avatar
      paandiyan says:

      அடுத்த நாடு கொலைகாரன் , குண்டு வைப்பவன் எப்படி இவனுக்கு சகோதரன் ? நீங்க எதுக்கு ஓவர் ஜால்ரா அவர்களுக்கு? ஒன்றும் புரியவில்லை

  31. Avatar
    ஷாலி says:

    //அடுத்த நாடு கொலைகாரன் , குண்டு வைப்பவன் எப்படி இவனுக்கு சகோதரன்…//

    பாண்டி தம்பி! எப்பவுமே துரியோதனன் பார்வையில் பார்த்தால் எல்லோருமே கொலைகாரனாகவும்,குண்டு வைப்பவனாக்கவுமே தெரியும். பார்வையை மாத்தி தருமனுடைய பார்வையில் பார்த்தால்…திருமூலர் சொன்ன வாக்கு வெல்லும்.அதான் “ யாதும் ஊரே யாவரும் கேளிர்”-அன்பே எங்கள் உலக தத்துவம்.-வாசுதேவ குடும்பம்.

  32. Avatar
    paandiyan says:

    Muslims science;
    இஸ்லாமாபாத்: பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதாக பாகிஸ்தான் அரசியல் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாமியா உலமா இ இஸ்லாமி பஸ்ல் கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட பெண்கள் ஜீன்ஸ் அணிவது தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்

  33. Avatar
    paandiyan says:

    //திருமூலர் சொன்ன வாக்கு வெல்லும்.அதான் “ யாதும் ஊரே யாவரும் கேளிர்”-//

    ரொம்ப சரி . தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க ..

  34. Avatar
    ஷாலி says:

    //தமிழ் வாழ்க ..தமிழ் வாழ்க .. //
    தமிழை வாழவைக்கும் பாண்டியனுக்கு நன்றி!

    “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
    சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
    நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே’

    கடவுள் ஒருவர் என்றும்; ஒரே ஜாதி என நன்றாக நினைத்தால், உங்களுக்கு எமன் (மரணம்) இல்லை. உமது சித்தம் ஒன்றிலே மட்டும் நிலைத்து நிற்பதைத் தவிர, சென்றடையக்கூடிய கதி (சொர்க்கம்) வேறு இல்லை. நீர்தாமே அடியாரை நினைத்துப் பார்த்து எங்களை மீட்டுக்கொள்வீராக என்று கூறுகிறார்.– திருமூலர்.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ யானாது
    கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 129)
    பொருள்
    எல்லா ஊரும் எம் ஊர்
    எல்லா மக்களும் எம் உறவினரே
    நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
    துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
    சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
    இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
    வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
    பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
    இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
    தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
    ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
    சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
    பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
    -கணியன் பூங்குன்றனார்

    1. Avatar
      paandiyan says:

      ஊரெல்லாம் கூடி,ஒலிக்க அழுதிட்டு
      பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
      சூரையங்காட்டிடைக் கொண்டு போய்ச்
      சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்
      பொழிந்தார்களே”
      -திருமூலர்

      –கட்டுரைய ஒருதரம் படிங்க இப்போ

  35. Avatar
    ஷாலி says:

    //உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட பெண்கள் ஜீன்ஸ் அணிவது தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்//

    பாண்டியன்! நீங்க இப்படி சொல்கிறீர்கள்; ஆனா உங்க கட்சிக்காரர்கள் வேறு காரணம் சொல்கிறார்கள்.செய்தியைப் பாருங்கள்.

    ஹரித்துவாரில் நேற்று செய்தியாளர்களிடம் பா.ஜ.க.வின் சர்ச்சை எம்.பி. சாக்ஷி மகாராஜ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டே கேதார்நாத் சென்றார்.. அவர் தன்னை தூய்மையாக வைத்திருக்கவில்லை.. இதனால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார்.

    Read more at: http://tamil.oneindia.com/news/india/rahul-s-impure-visit-kedarnath-caused-nepal-earthquake-sa-225630.html

    1. Avatar
      paandiyan says:

      one Christian also said something similar , could you track that one also to get satisfaction of Muslim as you do fantastic job in this area!!!!

    2. Avatar
      paandiyan says:

      சரி சொன்னார் . உங்களுக்கு என்ன . படிக்க புடிக்கவில்லையா

  36. Avatar
    Pathman says:

    ரொங்கியா முஸ்லிம் பற்றி கவலைப்படும் நண்பர் பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் தினம் கொடுமை அனுபவிக்கும் ஹிந்துகளை பற்றி கவலை படுவதில்லை, அங்கே பெண்கள் கற்பழிக்கபட்டு மதம் மாற்றுவதை பற்றி கவலை இல்லை என்ன என்றால் அது மதகடமை

    ISIS செய்யும் அட்டுழியங்களை பற்றி மூச். சவுதியில், பாகிஸ்தானில் சிறுபான்மை ஷியாக்கள் உரிமைகள் இன்றி அடக்கபடுவது பற்றி நோ கமெண்ட்ஸ்.

    இந்த ஆபிரகாமிய மதங்களால் முழு உலகுமே அமைதி இன்றி தவிக்கின்றது.

    1. Avatar
      BS says:

      ஆபிரஹாமிய மதங்களை அழித்துவிட்டு உலகமுழுவதையும் இந்துமதமாக ஆக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமென்று நினைக்கிறீர்களா?

  37. Avatar
    paandiyan says:

    //ஆபிரஹாமிய மதங்களை அழித்துவிட்டு உலகமுழுவதையும் இந்துமதமாக ஆக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமென்று நினைக்கிறீர்களா?//
    to whom you are asking? what is your view on this? since you have concluded this is waste job and internally you have lot problems , why you are regularly follow up the waste comments???

    1. Avatar
      BS says:

      இந்த ஆபிர்ஹாமிய மதங்களால் உலகம் அமைதி இழந்து தவிக்கிறது என்று சொன்னவரைத்தான் கேட்டேன். உலகமுழுவதும் இந்துமதமாகி விட்டால் உலகம் அமைதி ஆகி விடுமா ? என்ற கேள்விக்கு அவரே பதில் சொல்லட்டும். அவர் ஒரு திட்டம் வைத்திருப்பார். அதை நாம் தெரியலாமே? அவர் ஒரு பெரிய அறிவாளிபோல எனக்குத் தோனுகிறது. நாம் கேட்போம் தெரிஞுச்க்குவோம். அறிவாளிகளிடமிருந்து. Be calm. Let him speak.

      1. Avatar
        paandiyan says:

        முதலில் அம்மதங்கள் ஒழியட்டும் அப்புறம் பார்க்கலாம்

        1. Avatar
          BS says:

          இவ்விரு மதங்களையும் அழித்துவிட்டால், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு, மற்றும் பல நாடுகளில் வெற்றிடம் உருவாகும். இந்தியாவில் உருவாகாது. இந்தியா இந்து ராஷ்ட்ரம் ஆகும். ஆனால் உலகத்தில் பிற நாடுகள்?

          ஓர் அறிவாளி வருமுன் காப்பான். வந்த பின் யோசித்து எல்லாம் கைமீறிவிட்டதே என்று ஓப்பாரி வைப்பான் முட்டாள்.. எனவே முதலில் அழியட்டும் பின்னர் பார்க்கலாமென்பது அறிவாளி செய்யும் காரியமில்லை. இவ்விரு மதங்களும் அழிந்தால், உலகம் அமைதிப்பூங்காவாக ஆகிவிடும் என்றெழுதியவர் கண்டிப்பாக அவ்வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவார் என்று கேட்டேன். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிற்து. அவர் அறிவாளி. அழியட்டும் பிறகு பார்க்கலாம் என்பது ஒரு முட்டாளின் செயல் எனறு அவருக்குத் நன்னாத் தெரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதால் எவர் அழியட்டும் என்றாரோ அவருக்கே என் கேள்வி. எனவே பாண்டியனை Be calm. Let him speak என்றேன்.

          ஆனால், பாண்டியன் நுழைந்து உணர்ச்சிவசப்படுவதைப்பார்த்தால், அவர்தான் இவரோ என்ற கேள்வி எழாமலிருக்குமா? அவரில்லை நீங்கள் என்றால், பாண்டியன் அமைதி காக்கவும். கல்லெறிந்தவன் மாங்காய் பொறுக்கட்டும். அவன் செய்ததன் பலத்தை நீங்கள் ஏன் அனுபவிக்கத் துடிக்கிறீர்கள்?

          பதில் சொல்லுங்கள் பதமன் என்ற விநோத புனைப்பெயரில் எழுதுபவரே! எப்படி அவ்வெற்றிடத்தை உலகம் முழுவதும் அடைப்பீர்கள்?

          1. Avatar
            paandiyan says:

            நீங்கள் எதுக்கு சார் ஓவர் தம் கட்டுகின்றீர்கள் . அது அது நடக்கும் நன்றாகவே . இதுவும் கடந்து போகும் . இஸ்லாம் எப்படி வந்தது , வளர்ந்தது எல்லாம் உமக்கு புரியுமா . “அமைதி மார்க்கம்” படிக்கும் போது இன்த அளவு கோவமா உங்களுக்கு . என்ன கொடுமை சார் இது

      2. Avatar
        paandiyan says:

        கருத்துக்களை யாரு வேண்டும் என்றாலும் போடலாம் , இது பொது தளம் என்று பேசியவர ?? ஐயோ ஐயோ . காலக் கொடுமை . பேரை மாற்றினால் பழையது மறந்து போகுமோ . தலை எழுத்துக்கு , தலையை மழித்தால் சரி ஆகிவிடுமோ ??

        1. Avatar
          BS says:

          சீரியசாகத்தான் கேட்கிறேன். புரிந்த மாதிரி தெரியலையே !

          இசுலாம், கிருத்துவம் வன்முறை மதமங்கள்.. உலக அமைதியைக் கெடுக்கின்றன எனறு தொடர்ந்து இங்கு பிரச்சாரம் பண்ணப்படுகிறது.

          இப்படி அழிக்க ஆசைப்படும் நீங்கள், அநத அழவுக்குப்பின் உருவாகும் ன் பின்விளைவுகளுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்ல்லவா?

          மதங்கள் மக்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. இவ்விரு மதங்களும் போய் விட்டால், இந்தியாவில் பிரச்சினையில்லை. இந்து ராஷ்ட்ரமாகிவிடும். ஆக, முன்னால் இந்திய கிருத்துவர் இசுலாமியருக்கு ஏதோவொரு மதம் கிடைத்துவிடும்.

          பிறநாடுகளில் என்ன செய்வார்கள்? அவர் வெற்றிடத்தை நிரப்ப இந்து மதத்தை ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்க முடியும்?

          இவ்விரு மதங்களை அழிக்க ஆசைப்படும் நீங்கள்தானே அவர்களுக்கு ஒரு மாற்று கொடுக்கவேண்டும் ? பதில் சொல்லுங்கள் பாஸ்! என்ன மாற்று அவர்களுக்கு?

          1. Avatar
            சவரப்பிரியன் says:

            //மதங்கள் மக்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. //
            எந்த அறிவியலிலாவது புவியியலிலாவது இதனை நிரூபித்துள்ளார்களா?
            மதம், கடவுள் என்ற கருத்தாக்கமே இல்லாத பல பழங்குடி இனக்குழுக்கள் இருக்கின்றன. உண்மை. அவர்களிடமெல்லாம் போய் இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுகொள் என்று படுத்தி எடுத்த கிறிஸ்துவ மிஷனரிகள் தங்களது பிரச்னைகளை எழுதியிருக்கிறார்கள். முதலில் கடவுள் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பிறகு இயேசுவை கடவுளாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று குழப்பியடித்ததில் பல மிஷனரிகள் கடவுளே வேண்டாம் என்று நாத்திகனாக ஆனதெல்லாம் நடந்திருக்கிறது. ஒரு யூட்யூப் வீடியோ கூட இருக்கிறது. தேடுங்கள். கிடைக்கும்.

            //பிறநாடுகளில் என்ன செய்வார்கள்? அவர் வெற்றிடத்தை நிரப்ப இந்து மதத்தை ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்கள்.//

            அவர்கள் இந்துமதத்தை ஏற்றுகொள்ளமாட்டார்கள் என்று உங்களிடம் வந்து சொன்னார்களா? அதெப்படி உங்களுக்கு தெரியும்?
            ஏன் இந்துமதத்தினர் இஸ்லாம் கிறிஸ்துவ மிஷனரிகளை போல பல கோடி முதலீடு போட்டு மதம்மாற்றும் பிஸினஸில் இல்லை என்பதை வைத்து சொல்கிறீர்களா?

          2. Avatar
            paandiyan says:

            தெய்வத்தின் குரல் படியுங்கள் . உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்

          3. Avatar
            BS says:

            சு.பா!

            உங்கள் கருத்துக்கு வருவோம். என்னிடம் வந்து எவருமே ஐரோப்பியர்களோ, அரபிகளோ இந்துமதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் என் கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டதே கவனித்தீர்களா? வெற்றிடத்தை உலக முழுவதும் நிரப்பிவிடலாம். உலகமுழுவதும் இந்து ராஷ்ட்ரமே. மேற்பேச்சுக்கிடமில்லை. விடை கிடைத்து விட்டது.

            ஆனால், பின்னர் சேம் சைட் கோல் போட்டு காரியத்தைக்கெடுத்து விட்டீர்கள். அதாவது கிருத்துவர்களும் இசுலாமியர்களும் கோடிகோடியாகக்கொட்டி மதப்பிரச்சாரம் செய்வார்கள். மதமாற்றம் உருவாகும். நாங்க செய்ய மாட்டோம்.

            பின் என்ன? இந்துமத்ததால் அவ்வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று ஒப்புக்கொண்டுவிட்டபின் அவ்வெற்றிடத்தை நிர்ப்புபவர் யார்?

            மதம் தேவையில்லை என்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் சிந்திக்கணும் அண்ணாச்சி.

            ஆதிமனிதன் அம்மணமாக அலைந்தான். நிலையில்லாமல் சுற்றினான். பின்னர் ஓரிடத்தில் நிலைகொண்டு வாழ்ந்தான். ஆயினும், அவன் குடும்பம் என்ற ஒன்றை உருவாக்கவில்லை. விலங்குகளைப்போல புணர்ந்து பிள்ளைகளை வெளியில் விட்டாள். யார் யாரிடம் புணர்ந்தார் என்பது அவனுக்கே தெரியாது. ஓரிடத்தில் நிலைகொண்டு, வேட்டையாடிய தொழில் விவசாயத்தொழிலாக மாறிய போது அவனது ஆறாவது அறிவினால், நிலையான வாழ்க்கையோடு சொத்து நிலைக்க அச்சொத்து சிதறி மாற்றானுக்குப்போய்விடக்கூடாதென‌ குடும்பம் வேண்டுமென உணர்ந்தான் இயற்கை சீற்றத்துக்கு நடுங்கி அதைத் திருப்தி படுத்த இயற்கைப்பொருட்களை வணங்கினான். பின்னர் அவ்வியற்கையைப்படைத்தவ்ன் ஒருவன் என அவர்களில் ஆறாவது அறிவைப்பயன்படுத்தியோர் சொன்னார்கள். இறைவன் வந்தான். இறைவன் வந்தபின், அந்த ஆறாம் அறிவைப்பயன்படுத்தி அவன் எப்படிப்பட்டவன் அவனை எப்படி தொழுவது இன்னபிற என்ற் கோட்பாடுகளை வரைந்து தன்னின் தாறுமாறான ஆன்மிக உணர்வுகளியும் நிலைப்படுத்தினான். அப்படி நிலைப்படுத்தலே மதங்கள் எனவாயிற்று. இன்னும் பழங்குடியினர் இருக்கின்றனர். அவர்களாக மற்றவர்களும் இருக்க ஆசைப்பட்டால் மதங்கள் வாரா. தேவையில்லை. மேற்சொன்ன கட்ட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழலாம். உங்கள் பழங்குடியினரும் மாறிக்கொண்டுதானிருக்கிறார்கள். எனவே, மதங்கள் மனித வளர் நாகரிகத்தின் தானா உருவான‌ தவிர்க்கப்படாத நீட்சி. அந்நீட்சி அவன் கேட்டு வரவில்லை. அவன் வாழ்க்கை முறை மாறமாற ஆன்மிக உணர்வுகள் மதங்களை உருவாக்கின. குழந்தையாக இருந்த போதும் இப்போதும் ஒரேமாதிரியாகவா சிந்தித்தீர்கள்?

            மாறவேயில்லையென்றால். சு.ப சொன்னதுதான் நடக்கும். அம்மணமாக நாம் வாழ்ந்து எப்படியோ எவரையோ புணர்ந்து பிள்ளைகளை பொலபொலவென பெற்று வெட்ட வெளியில் விட்டு இயற்கைச்சீற்றங்களைக்கண்டு பயந்து அவற்றைத்திருப்திபடுத்த வணங்கிக்கொண்டிருக்கலாம்.

  38. Avatar
    paandiyan says:

    ////ஆபிரஹாமிய மதங்களை அழித்துவிட்டு உலகமுழுவதையும் இந்துமதமாக ஆக்கிவிட்டால் //

    SONNARGAL:-
    நம் தமிழகத்தில் ஏகப்பட்ட கொடுமைகள், ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன. அதைப்பற்றி மூச்சுவிட மறுக்கிறார்கள். அதே வேளையில் எங்கோ சவுதி அரேபியாவில் ஷியாக்களும் சன்னிகளும் அடித்துக்கொண்டால் உணர்ச்சிவசப்படுகிறார்கள். வேடிக்கை! விநோதம் !!

  39. Avatar
    Pathman says:

    நான் இங்கு ஆபிரகாமிய மதங்களை அழிக்க சொல்லவில்லை இன்றிய உலகின் தீவிரவாதம் போர் இவற்றின் தோற்றுவாயாக இவைகள் இருந்து வருகின்றன என்று சொன்னேன்,

    இவை தமக்குளே உப பிரிவில் முரண்பட்டு அடித்துகொள்வது மட்டுமன்றி மற்ற மதங்களையும் அழிக்க முற்படுகின்றன. கத்தோலிக்கன் VS protestant, சுன்னி vs ஷியா.

    நான் எழுப்பிய பாகிஸ்தான் பங்களாதேஷ் இல் நடக்கும் கட்டாய மதமாற்றத்தின் கேள்விக்கு இன்னும் பதிலை காணோம் ?

    அமைதியான :-) இஸ்லாமிய மார்கத்தின் பெயரை இந்த ISIS கெடுகின்றதே அதை எதிர்த்து எங்காவது ஒரு பதிவு ?

    என்று இந்த மதங்கள் மற்ற மதங்களின் இருப்பை ஏற்று தாங்களும் அமைதி அடைகின்றனவோ அன்றே உலக அமைதி கிட்டும்.

    1. Avatar
      BS says:

      என் பிறயிடங்களில் போட்ட பின்னூட்டக்கருத்துக்களில் பதில் இருக்கிறது.

      பாகிஸ்தான் பங்களா தேஷ் நாடுகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவையல்ல. பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு.. மற்ற மதங்களுக்கு அவர்கள் ஆதரவில்லை. ஆனால் பிறர் இருக்ககூடாதென்று சொல்லவில்லை. இருக்கலாம்; தாக்கப்பட்டாலோ, மதம் மாற்றப்பட்டாலொ நாங்கள் உயிருக்கும் மதத்துக்கும் உத்தரவாதம் தரமுடியாதென்பதுதான் அவர்கள் நிலை. சட்டம் வழியாக சிலரை உள்ளே பிடித்துப்போடுவார்கள். மட்டுமே. பங்களாதேசில் நடக்கும் தீவிரவாதக்கொலைகளைச் சட்டம் போட்டுப் பிடிப்பார்கள். குற்றவாளிகளுக்குத் தண்டனை என்றாவது ஒரு நாள் ஒப்புக்காகக் கொடுக்கப்படும். அரேபிய நாடுகள் முழுக்கமுழுக்க இசுலாமிய நாடுகள். அவர்கள் நாடு. அவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம். ஒரு முட்டாப்பய இந்துதான் ஆஃப்கானிஸ்தானில் போய் வாழ்ந்து அய்யோ என்னைத்தாலிபான் கொல்றானே என்று கூச்சலிடுவான்.

      ஆனால், இந்தியா அப்படிச்செய்ய முடியாது. முழு ஜனநாயக மதச்சார்பற்ற நாடு. இந்து ராஷ்ட்ராமாக மாறும்போது பிறமதத்தவரை விரட்டலாம். இரண்டாம்தரக்குடிகளாக நடாத்தலாம். தற்போது முடியாது. எனவேதான், யோகாவை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென்ற இந்துத்வாவினரின் கொள்கையை மோடி சப்போர்ட் பண்ணமாட்டார்.

      கத்தோலிக்கர்களும் பொரொட்டஸ்டேன்டுகளும் அடித்துக்கொண்டது மார்டின் லூதரின் காலத்திலே. அதாவது கிருத்துவ மதம் இரண்டாகப் பிரிந்த காலத்தில்தான். இன்றில்லை. ஷியா சுன்னி மோதல்கள் அரபு நாடுகளில் மட்டுமே. இந்தியாவில் உ பியில் கொஞ்சம் இருக்கலாம். அது கூட்டமாக மக்களை அழிக்கும் ஜெனோசைட் ஆக இல்லை. இப்படி பல நாடுகளில் இல்லை. ஐ எஸ் எஸ் ஐயின் தீவிரவாதத்தையும் தாலிபான் தீவிரவாதத்தையும் இசுலாமியர் அனைவரும் ஏற்றுக்கொண்டாலொழிய அவர்களால் உலகம் இசுலாமியமயமாக்கப்படுகிறதென்று சொல்லமுடியாது. அவர்கள் சிரியாவுக்குள்ளேதான். வெளியேறி பிறநாடுகளுக்கு நீளும்போது அந்நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து எதிர்க்கும்.

      அமைதியான மார்க்கம் இசுலாம் எனபதற்கும் அய் எஸ் எஸ் சுக்கும் தொடர்பு என்றால், எல்லாரும் ஒரே குடும்பம் என்று சொல்லும் இந்துமதத்தில ஒரிசாவில் கிருத்துவ பாதிரியையும் அவ்ர் மூன்று பிள்ளைகளையும் உயிரோடு ஜீப்பில் எரித்த, கன்னியாஸ்திரியைக் கற்பழித்த‌ பஜ்ரங்பலிகாரர்களும் மசூதியை உடைத்த இந்துத்வர்களும் நீங்களும் ஒன்று எனலாமே? அதாவது வன்முறையே இந்துமதம் எனச் சொல்லலாமே? நீங்கள் ஏன் வன்முறையை விரும்பவில்லை?. அவர்களேன் விரும்புகிறார்கள் ? ஆனால் இருவரும் இந்துக்கள் என்றுதானே சொல்லிக்கொள்கிறீர்கள்?

      வன்முறைதான் இசுலாம் என்றால், இந்தியாவில், குறிப்பாக தென்மாநிலங்களில் இசுலாமியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகாது. அவர்களுக்கு ஐ எஸ் எஸ் ஐய்ம் தாலிபான்களும் தெரியும். அவர்களுக்குப் பிரிக்கப்பார்க்கத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியவில்லை. இசுலாமியர் எண்ணிக்கை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பெருகிக்கொண்டேதானிருக்கிறது. மசூதியிலேறிய ஓங்கி உடைதவர்களுள் ஒருவரே தற்போது இசுலாமியராக இருக்கிறார்; அவரின் பேட்டி இந்தியன் எக்ஸ்பிரசில் மசூதி உடைத்த அன்னிவர்சரி அன்று வெளியானது தெரியுமோ?

      உலகத்தில் அமைதியென்பது என்றுமே ஏற்படாது. அதற்கு கரணியங்கள் சிக்கலானவை.ஒன்றுக்குஒன்று பின்னிப்பிணைந்தவை. தாலிபான் தொடர்ந்து பாகிஸ்தான் இசுலாமியரைக் கொன்று குமிக்கிறது. கராய்ச்சியில் ஒரே பிரிவு (சுன்னி)முசுலீம்கள் குழுக்களே (மதப்பிரிவினாலல்ல) ஒருவரையொருவர் கொல்கிறார்கள் (செக்டேரியன் வயலன்ஸ்).

      1. Avatar
        paandiyan says:

        ayyo ayyo .. you are not good sir. you should put all blame to USA….
        Muslims does not like you from now onwards..

  40. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //இவ்விரு மதங்களை அழிக்க ஆசைப்படும் நீங்கள்தானே அவர்களுக்கு ஒரு மாற்று கொடுக்கவேண்டும்?//

    யாரையா இஸ்லாத்தையும், கிறித்தவத்தையும் அழிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்?

    தங்களுக்குள்ளேயே சண்டைபிடித்துக்கொண்டு வெட்டி அழிந்துகொண்டிருக்கிரார்கள் இவர்கள். இதைப்பற்றித்தான் இங்கு பேச்சு. வேறொன்றுமில்லை.

    நீர்தான் தேவையின்றி இந்து சமயத்தைப்பற்றி இழுக்கிறீர்.

    ஒரு சமயம் அழிந்தால் வேறொரு சமயம் பின்பற்றப்படுகிறது. அரேபியாவில் இஸ்லாமுக்குமுன் வேறொரு சமயம் இருந்தது. கிரித்தவத்திற்கும் முன் — ஏசுபிரான் திருஅவதாரம் பூணுமுன் யூதசமயம் பின்பற்றப்பட்டது.

    எனவே, ஏதாவது ஒரு சமயம் பின்பற்றப்படும். நீர் கேட்கும் கேள்விகளுக்கு — அவை குதர்க்கமாக இருக்கும்வரை — யாரும் உமக்குப் பதிலளிக்கத் தேவையில்லை.

    நீர் இங்கு தேவையில்லாம எந்தஒரு அதிகாரத்தையோ, பொறுப்பையோ இருக்கிறது என்று எண்ணி, அதைக் கையில் எடுத்துக்கொண்டு உம்மை உச்சாணிக் கொம்பில் வைத்துக்கொண்டு கேட்டால் — அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவை எமக்கு இல்லை — என்னென்ன திருப்பெயர்களில் நீர் உலவிலானும் சரி.

    1. Avatar
      BS says:

      கற்றோன் பேச்சில் கண்ணியத்தைத் தவறவிட மாட்டான். கல்லா மூடன் எப்படியும் பேசுவான். நீர், உம் என்ற சொல்லாடல் இங்கு தேவையில்லை. கருத்துக்களை கண்ணியமான சொற்களை வையுங்கள் உயர்திரு அரிசோனன் அவர்களே!

      இனி என் பதில். ஷன்னிகளும் சியாக்களும் அடித்துக்கொள்கிறார்கள் எங்கே? அரேபியாவில். பின்னர் தங்கமணி உ பியில் அடித்துக்கொள்கிறார் என்றார். இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன படித்தவர்கள் இன்டாக்ரினேசன் செய்யப்பட்டு கண்டிப்பாக இசுலாம் வன்முறை மதம் என்று வெளியேறவேண்டுமென்பது நோக்கம் இல்லையென்றால், பின் எந்த நோக்கம் இக்கட்டுரைகளுக்கு? சும்மா படித்துவிட்டு இவர்களுக்கு வேறுவேலை என்று போகட்டும் என்று வாசகர்கள் தள்ளவேண்டுமென்றா இவ்வளவு மெனக்கெட்டு மொழிபெயர்ப்பு செய்தார்?

      மொழிபெயர்ப்பு கட்டுரையாளரிடமும் அக்கட்டுரைகளை விதந்தோதும் பின்னூட்டக்காரர்களிடம் என் கேள்வி: இவ்விருமதங்களும் வன்முறை மதங்கள் மக்கள் விட்டுவிட்டால், அவர்களுக்குப் பின் என்ன மதம்?

      உயர்திரு அரிசோனன் அவர்கள் ஒரு பதிலைச் சொல்லிவிட்டார்கள். இயேசுவுக்கு முன் யூத மதம் இருந்தது; முஹமதுவுக்கு முன் வேறொரு மதமிருந்தது (அதைச்சொல்லத்தெரியவில்லை; அல்லதுமறைக்கிறாரோ? அது பேகனிசம்; விலங்குகளையும் இயற்கைப்பொருட்களையும் ஸ்ப்ரிட்டுக்களையும் வணங்குதல்) அரேபியாவில் இருந்தது.

      ஆக, உயர்திரு அரிசோனன் அவர்கள் சொல்வது அரேபியா மக்கள் (அவர்கள் அடித்துக்கொள்வதைப்பற்றித்தான் இம்மொழிப்யெயர்ப்புக்கட்டுரை) பேகனிசத்திற்கும் கிருத்துவர்கள் இயேசுவேண்டாமென்று மீண்டும் அவர்கள் வெறுத்தொதிக்கிய யூதமதத்துக்கும் போவார்கள். அல்லது போகவேண்டும்! அப்படித்தானே உயர்திரு அரிசோனன் அவர்களே?

      அது நடக்காது. ஒன்று சரியில்லை. அதனால் கேடு என்று இன்னொன்றுக்குப் போனவன், புதியதும் மோசமென்றால், மூன்றாவது ஒன்றைத்தான் தேடுவானே தவிர, மீண்டும் அந்தப் பழைய கேட்டிற்கே போயடைவான் என்று அறிய ஜீனியசாக இருக்கத்தேவையில்லை. உயர்திரு அரிசோனன் அவர்கள் சொல்வது பழைய கேட்டிற்கே போவார்கள் என்று தலைக்கட்டுகிறீர்கள். Known devil is better than an unknown angel என்பது மற்றவிடயங்களில் சாத்தியமாகலாம். ஆனால் மதம் மனம் தொடர்புடையது. இங்கே மூன்றாவதைத்தான் தேடிப்போவார்கள். அஃது எது?

      1. Avatar
        BS says:

        //அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவை எமக்கு இல்லை — என்னென்ன திருப்பெயர்களில் நீர் உலவிலானும் சரி.//

        உங்கள் சார்பாகத்தான் பின்னூட்டம் இருக்கவேண்டும். எல்லாருக்கும் தலைவன் நீங்கள் இல்லை. உங்கள் எண்ணத்தைப மட்டும் பதிவு செய்யுங்கள்.

        என் பெயர் ஒன்றே. பி எஸ் எனபதன் எதன் சுருக்கம் எனபது ஏறகனவே விளக்கப்பட்டது.

        நான் தீவிர இந்தன்று. ஒரு ஜாதிக்காக மதத்துக்கு எழுதுபவனில்லை.

        ஏதோவொன்றைப்பிடிததுக்கொண்டு தப்பிப்பது இல்லை யான்.

        கருத்தை கருத்தைவைத்து எதிர்நோக்கவும்.

        நன்றி.

        – பால சுந்தர விநாயகம்.

      2. Avatar
        சவரப்பிரியன் says:

        //இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன படித்தவர்கள் இன்டாக்ரினேசன் செய்யப்பட்டு கண்டிப்பாக இசுலாம் வன்முறை மதம் என்று வெளியேறவேண்டுமென்பது நோக்கம் இல்லையென்றால், பின் எந்த நோக்கம் இக்கட்டுரைகளுக்கு?//
        முஸ்லீம்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? ஒரே விஷயத்தை படிக்கும் எல்லோருக்கும் ஒரே கருத்து வருவதில்லை. பாருங்கள் நீங்கள் உங்கள் கருத்து என்ன என்று கவலைப்படாமல், முஸ்லீம்கள் இஸ்லாமை விட்டு போய்விட்டால் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள். இல்லையா?

    2. Avatar
      ஷாலி says:

      ///நீர் இங்கு தேவையில்லாம எந்தஒரு அதிகாரத்தையோ, பொறுப்பையோ இருக்கிறது என்று எண்ணி, அதைக் கையில் எடுத்துக்கொண்டு உம்மை உச்சாணிக் கொம்பில் வைத்துக்கொண்டு கேட்டால் — அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவை எமக்கு இல்லை — என்னென்ன திருப்பெயர்களில் நீர் உலவிலானும் சரி.//

      அமெரிக்கா அரிசோனரே! ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்?ஹிந்து மதத்திற்கு உங்களை யாரும் அத்தாரிட்டி ஆக்கிவிட்டார்களா?திரு.B.S அவர்களை இந்து மத எதிரியாக சித்தரிப்பதில் பாவம் நீங்கள் தோற்று விடுவீர்கள்.அவரின் நியாயமான கேள்விக்கு பதில் தர முடியாததால் நீர்…நீர்…என்று தீர்த்தாபிஷேகம் செய்வது முறையல்ல!கடவுள் மறுப்பு நாத்திகமும் இந்து மதம் சம்மதமே!வாதத்தில் தோல்வியுற்றவர்கள் அபவாதத்தை கையில் எடுப்பது அனைவரும் அறிந்ததுதான்.

  41. Avatar
    BS says:

    //ஏன் இந்துமதத்தினர் இஸ்லாம் கிறிஸ்துவ மிஷனரிகளை போல பல கோடி முதலீடு போட்டு மதம்மாற்றும் பிஸினஸில் இல்லை என்பதை வைத்து சொல்கிறீர்களா?//

    கண்டிப்பாக. அதை வைத்துத்தான் சொல்கிறேன். இந்துக்கள் அரேபிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பழங்குடியினரிடம் போய் தங்கள் மதத்தைப்பரப்ப வேண்டும். ஒரிசாவில் கிருத்துவர் செய்தவுடன் அப்பழங்குடியினர் கிருத்துவராகிக்கொண்டே போகிறாரே என்று இந்துச்சாமியார்கள் அங்கே போய் காட்டுவாசிகளிடம் இந்துமதப்பிரச்சாரம் – கிருத்துவர் வழியிலேயே – செய்யவில்லையா? மலர்மன்னனும் ஒரிசா வனவாசிகளிடம் இந்துமதத்தொண்டாற்றினேன் என்று திண்ணையிலும் மற்ற தளங்களிலும் செய்யவில்லை? அதைப்போல செய்ய வேண்டும். அப்படி முடியாவிட்டால், அவ்வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று சொலல்வேண்டும். பழங்குடியினரைப்போல அம்மணமாக வாழ்ந்து இயற்கையை வழிபடு என்று அவர்களிடம் சொல்லமுடியுமா என்று கேள்விக்கேட்டுக்கொள்ளவேண்டும்.

    போகாத ஊருக்கு எப்படி வழி தேடமுடியும்? முதலில் எங்கே போகிறேம் என்று முடிவு செய்துவிடுங்கள். பின்னர் வழியைக்கண்டுபிடிக்கலாம்.

    எங்கே போகிறோம் என்று சொல்கிறேன்>

    கிருத்துவ இசுலாமிய மதங்களை அழிப்போம் என்றவர் அழித்தே விட்டார்.

    உலகத்தில் 80 விழுக்காடுகளுக்கு மேல் கிருத்துவரும் அரபிய வளைகுடா நாடுகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் இசுலாமியரும் மற்ற நாடுகளிலும் வாழும் இவர்கள் தங்கள் மதம் வன்முறை என்று சொல்கிறார்களே என்று விலகிவிட்டார்கள். மதம் இருந்த இடத்தில் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிடம் உருவாகி விட்டது. நான் ஏற்கன்வே சொன்னது போல அவர்கள் ஆதிமனிதர்களாக மீண்டும் ஆக முடியாது.

    இப்போது நீங்கள் அங்கு போய் அவர்களை இந்துவாக மாறுங்கள் என்று பிரச்சாரம் செய்ய மாட்டீர்கள்.

    கிருத்துவம், இசுலாம், இந்துமதம் – போயோ போச்.All ruled out!

    இங்கே அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டும். அந்த வெற்றிடத்தை நிரப்பலே நாம் போகும் ஊர்.

    வழி கண்டு பிடியுங்கள். நாவிதர்களின் பிரியரே!

      1. Avatar
        BS says:

        தமிழ்ப் பிராமணர்களுக்காக எழுதப்பட்ட அறிவுரை நூலது. எப்படி அவர்கள் தங்கள் வருணாஷ்ரக்கடமை நிறைந்த வாழ்க்கைவிட்டு விலகிக்கொண்டு வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்தைதப்பிடித்துக்கொண்டு பிராமணரில்லாதோரைப்போல வாழ்கிறார்கள்; எப்படி மீண்டும் வருணாஷிரமத்தர்மத்தைக் கைக்கொண்டு பிராமண வாழ்க்கைக்கு வருவது; அதற்குத்தடைக்கற்களாக நிற்கும் இன்றைய இக உலகத் தூண்டல்களை எப்படி முறியடிப்பது; வருங்கால சந்ததிகளை எப்படி இந்து தர்ம சாஸ்திரங்கள் சொல்லியபடி உருவாக்குவது போன்றவைகளைப்பற்றி சொல்லும் அறிவுரையும் எச்சரிக்கையும் கலந்த நூலது. மேலும் பிராமணர்கள் அப்படி தங்கள் பழைய நிலையை எய்தும் போது உலகம் சிறக்கும். அவர்கள் சமூகத்து வழிகாட்டிகளகலாம். அவர்கள் உயர்வை மற்றவர்கள் போற்றி ஏற்பர் எனபதும் அந்நூலின் நோக்கம். இன்னூலின் ஒரே ஃபோகஸ் தமிழ்ப்பிராமணர்கள்.

        இந்நூல பலரால் வெறுக்கப்படக்காரணமே அதை தமிழ்ப்பிராமணர்களுக்காக மட்டுமே எழுதினார் என்பதால். இந்து மதத்தலைவர் ஒருவர் பொதுவாக எல்லாரையுமே நல்ல இந்துவாக்கத்தான் எழுதவேண்டும். ஆனால் அவர் இப்படிச் செய்து போய்விட்டபடியால், பிறமக்கள் அவரைச்சட்டை செய்யமுடியவில்லை எனபது அந்நூலின்மேல் வைக்கப்படும் விமர்சனம். Maha Periyavaal is not beyond criticism.

        I have read the book not once but many times, once throughout, often at random, all the volumes, which are in my personal home library. It is a collection of his speeches, so can be read at random.

        Whenever I read it, I feel pity for the non-brahmin Tamil Hindus. அய்யோ பாவம். அவாளுக்கெல்லாம் இப்படி ஒரு பெரியவா வரவில்லையே என்ற பரிதாப உணர்ச்சிதான் வரும்.

          1. Avatar
            BS says:

            படிப்பதை நிறுத்திவிட்டேன்.

            மற்றவருக்கில்லை ஒரு ஜாதிக்கு மட்டும்தானென்றால், அது தேவையில்லை.

            இராமானுஜர் அப்படித்தான் சொன்னார்: //பிராமணரல்லாதாருக்கு நான் சொன்னால் நரகமேயென்றால் எனக்கு சுவர்க்கம் வேண்டாம். // கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜர் சீரியலில் இக்காட்சி காண்பிப்பார்கள். பார்த்து தெரிந்துகொள்ளவும்.

            இராமானுஜர் இராமானுஜர்தான். There can be only one Sun.

  42. Avatar
    Pathman says:

    (பாகிஸ்தான் பங்களா தேஷ் நாடுகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவையல்ல. பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு.. மற்ற மதங்களுக்கு அவர்கள் ஆதரவில்லை. ஆனால் பிறர் இருக்ககூடாதென்று சொல்லவில்லை. இருக்கலாம்; தாக்கப்பட்டாலோ, மதம் மாற்றப்பட்டாலொ நாங்கள் உயிருக்கும் மதத்துக்கும் உத்தரவாதம் தரமுடியாதென்பதுதான் அவர்கள் நிலை. சட்டம் வழியாக சிலரை உள்ளே பிடித்துப்போடுவார்கள். மட்டுமே. பங்களாதேசில் நடக்கும் தீவிரவாதக்கொலைகளைச் சட்டம் போட்டுப் பிடிப்பார்கள். குற்றவாளிகளுக்குத் தண்டனை என்றாவது ஒரு நாள் ஒப்புக்காகக் கொடுக்கப்படும். அரேபிய நாடுகள் முழுக்கமுழுக்க இசுலாமிய நாடுகள். அவர்கள் நாடு. அவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம். ஒரு முட்டாப்பய இந்துதான் ஆஃப்கானிஸ்தானில் போய் வாழ்ந்து அய்யோ என்னைத்தாலிபான் கொல்றானே என்று கூச்சலிடுவான். )

    அதாவது இஸ்லாமிய நாடுகளில் அல்லது இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மற்ற மதத்தவர்க்கு பாதுகாப்பு இல்லை இதை நீங்களே பதிவு செய்து விடீர்கள்.

    ஆனால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டில் ஏதானும் நடந்தால் அது உலகம் எங்கும் மார்க்கெட் செய்யப்படும், அப்பறம் தீவிரவாதிகள் கெளம்பிடுவாங்க அவர்களை ஜே என்று கூட்டம் ஆதரிக்கும், அவர்களும் முட்டபய இந்துவை பல அழகூடாது முஸ்லிம் நாட்டுக்கு போய்விடலாமே ?

    மதசகிப்பு தன்மை இல்லாத மதங்கள், இந்த ஆபிரகாமிய மதங்கள்……

    1. Avatar
      BS says:

      மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்கிறீர்கள். Wholesale condemnation. கிருத்துவர்கள், இசுலாமியர்கள் அனைவரையும் சகிப்புத்தன்மையில்லாதோர், வன்முறையை விரும்புவோர் என ஒட்டுமொத்தமாகக் கட்டித் தூக்கியெறியப்பார்க்கிறீர்கள். அப்படி எறிந்தபின், என்னவாகுமென்றால், பம்முகிறீர்கள்.

      போகட்டும். நேற்றைய‌ நாளிதமிழகளில்படி, சீக்கியர்கள் ஆஃகானிஸ்தானிலிருந்து வெளியேறுகிறார்கள். 90களில் ஒரு லட்சமாக இருந்தோர் இன்றூ 2500 பேராகக்குறுகிவிட்டனர். அவர்களும் அங்கு வாழமுடியாத நிலை. தாலிபான்கள் அவர்களை முழுவதும் அழித்துவிடுவார்கள்; நாங்கள் தனிமைப்படுத்தப்படுகிறோமென்று வெளியேறுகிறார்கள்.

      எங்கேயும் நடக்கும். மெஜாரிட்டி 99 விழுக்காடு இருக்கும்போது, 1 விழுக்காடு மக்கள் எப்படி பாதுகாப்பாக வாழமுடியும்? அப்படியே 99 விழுக்காட்டிற்கு சகிப்புத்தன்மை வந்து 1 விழுக்காடு வாழ்ந்தால், அச்சகிப்புத்தன்மை ஒரு என்னேரமும் உடையும் தன்மையோடுதான் இருக்கும்; அதைக்கட்டிக்காக்க வேண்டியது அந்த ஒரு விழுக்காட்டிற்கும் இருக்கிறது. அதாவது ஒரு விழுக்காடு மக்கள் தங்கள் தனிக்குழு வாழ்க்கையை ஆரவாரமாகச்செய்ய முடியாது. முதலில் பார்ப்பார்கள்; பின்னர் எரிச்சல் படுவார்கள்; பின்னர் …அதை இன்று கர்நாடகாவில் போய்ப்பார்க்கலாம். நான் தமிழன்; கன்னட மொழியைப்படிக்கமாட்டேன் என்று பிதற்றினால், திணித்துவிடுவார்கள். செய்தே விட்டார்கள். போய்ப்பாருங்கள்.

      இஃது இயற்கை. எங்கும் நடக்கும். தாலிபான்களுக்குச் சகிப்புத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்த்து அங்கு வாழப்போகும் ஒரு இந்துவை நான் மூடன் என்றேன். அதைவிட கடும் சொல் இருக்குமானால் சொல்லுங்கள். ஆனால் உங்கள் நிலை என்ன? அவன் மூடனன்று; அவனிடம் தாலிபான்கள் சகிப்புத்தன்மை காட்டவேண்டும். இல்லாவிட்டால், தாலிபான்களை மட்டும் சொல்லமாட்டேன். ஒட்டு மொத்த உலக முஸ்லீகளை சகிப்புத்தன்மையில்லாதோர் தாலிபானகளை ஆதரிப்போர் என்பேன். என்ன வாதமிது அண்ணாச்சி? எப்படி தாலிபான்கள் செயலை வைத்தும் ஐ எஸ் எஸ் ஐய் வைத்தும் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் வன்முறை விரும்பிகள் என்கிறீர்கள்:?

      தொகாடியா நேற்று கொல்கத்தாவில் இன்னுமிரண்டாண்டுகளில் இந்து ராஷ்ட்ரமாக இந்தியாவை மாற்றுவோம் 50 லட்சம் பேரை இந்துக்களாக்குவோம் என்றார். 80 விழுக்காட்டில் மஜூதியை உடைக்கிறீர்கள். வடமொழியைத்திணிக்கிறீர்கள்; கேட்ட மாணவர்களை கல்லூரியிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். கட்டாய மதமாற்றம் பண்ணுகிறீர்கள்! யோகாவை ஏற்காதவன், சூரிய நமஸ்காரம் செய்யாதவன் இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள் என்கிறீர்கள். இல்லையா? 90 விழுக்காடு ஆனபின் இந்து ராஷ்ட்ராமி விட்டால் என்ன நடக்கும்? தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரன். காட்டுத்தர்பார். உயிருக்குப்பயந்து அங்குமிங்கும் ஓடவேண்டியதுதான். சகிப்புத்தன்மையிருக்குமா? இருக்காது. அரசியல் சட்டத்தை மாற்றி அனைத்து உரிமைகளையும் பிடுங்கிக்கொள்வீர்கள். நடக்குமா நடக்குமா? பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

      இருப்பினும் இப்படிச்செய்வோம் என்போரை வைத்தும் வன்முறையை விரும்பி மஜூதிகளைத்தாக்குங்கள் என்பவர்களையும் அனைத்து இந்துமதமே சகிப்புத்தன்மை இல்லாததது என்று சொல்ல மாட்டேன். அப்படியெவருமே மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் போடவில்லை.

      1. Avatar
        paandiyan says:

        ரொம்ப கவலை படாதீர்கள். உங்கள் கேள்விக்கு பதில் இல்லை என்று கூட வைத்துகொண்டால் அது கொலை குற்றமா?

  43. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //புதியதும் மோசமென்றால், மூன்றாவது ஒன்றைத்தான் தேடுவானே தவிர, மீண்டும் அந்தப் பழைய கேட்டிற்கே போயடைவான் என்று அறிய ஜீனியசாக இருக்கத்தேவையில்லை. உயர்திரு அரிசோனன் அவர்கள் சொல்வது பழைய கேட்டிற்கே போவார்கள் என்று தலைக்கட்டுகிறீர்கள். Known devil is better than an unknown angel என்பது மற்றவிடயங்களில் சாத்தியமாகலாம். ஆனால் மதம் மனம் தொடர்புடையது. இங்கே மூன்றாவதைத்தான் தேடிப்போவார்கள். அஃது எது?/

    இது இங்கு கேள்வியே இல்லை. விவாதிக்கப்படும் பொருளும் இல்லை. நீங்கள் கேட்கும் திசைதிருப்பும் கேள்விகளுக்கு நானோ, மற்றவர்களோ பதிலளிக்கவேண்டிய கட்டாயமோ இல்லை. அதுபற்றிய கவலையும் கவலையும் இல்லை. இல்லதொன்றை, நடக்கப்போகாத ஒன்றைப் பற்றி வாதிக்கவேண்டிய அவசியமும் இல்லை.

    இந்தக் கட்டுரை, முகமதியர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதைப் பற்றித்தான். வன்முறை — அது அப்படி இருந்தாலும், யார் யார்மேல் காண்பித்தாலும் அதைக் கண்டனம் செய்வதே மனிதத்தன்மை உள்ளவர்கள் செய்யும் செயல்.

    அதை விடுத்து, வீடு பற்றி எரியும்போது, பீடிக்கு நெருப்புக் கொடு என்பதுபோலத்தான் இருக்கிறது, இஸ்லாமும், கிறித்தவமும் அழிந்தால் அங்கு வேறெந்த சமயம் வந்து அந்த இடத்தை நிரப்பும் என்ற கேள்வி.

    1. Avatar
      BS says:

      //கேள்விகளுக்கு நானோ, மற்றவர்களோ பதிலளிக்கவேண்டிய கட்டாயமோ இல்லை. அதுபற்றிய கவலையும் கவலையும் இல்லை. இல்லதொன்றை, நடக்கப்போகாத ஒன்றைப் பற்றி வாதிக்கவேண்டிய அவசியமும் இல்லை.//

      மற்றவர்களுக்கு வக்காலத்து வாங்க நீங்கள் யார்? உங்களால் பதில் சொல்லமுடியவில்லை அல்லது விருப்பமில்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள். அதைவிட்டு விட்டு மற்றவர்களுக்கு அவசியமில்லையென்று சொல்ல நீங்கள் யார்?

      அரேபிய நாடுகளில் இசுலாமியமதப்பிரிவுகளோ ஐரோப்பாவில் கிருத்துவக்குழுக்களோ அடித்துக்கொண்டால் நாமேன் கண்டனம் செய்யவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அப்படி அடித்துக்கொண்டு பலர் மாண்டால், நமது உணர்வுகள் அய்யோ பரிதாபம் என்றுதான் முடியுமே தவிர அவர்களைக்கண்டனம் செய்து என்னவாகப்போகிறது?
      அதே நேரத்தில் 20 கூலித்தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒட்டுமொத்த தமிழகமும் கண்டித்தது. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள். பச்சையாக மனித உரிமை மீறல். நம் எல்லைக்கருகிலேயே நடந்த செயல்.. இந்தியாவில் அப்படி பலர் பல காரியங்களுக்காக கொல்லப்பட்டால் கண்டனம் தெரிவிக்கலாம். தமிழ் மீனவர்கள் இலங்கைபபடையால் கொல்லப்பட்டால் கண்டனத்தோடு நிற்காமல் முதல்வர் மத்திய அரசை உலுக்கவேண்டும் தடுக்க எனலாம். மெக்சிகோ வளைகுடாவில் அங்குள்ள ஒரு நாடு இன்னொரு நாட்டு மீனவர்களைச்சுட்டுக்கொன்றால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அச்செய்தி இங்கு வருமானால், நாம் அய்யோ பாவம் என்றுதான் சொல்லமுடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. வீண் விரயம்.

      நீங்கள் நழுவும் கேள்விகள்: இக்கட்டுரைகள் தொடர்ந்து போடப்படுகின்றன. அதை நீங்கள் தெரிந்தும் தெரியாததது போல பாவ்லா பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். இக்கட்டுரை மொழிபெயர்ப்பாளர் நேர்மையானவராக இருந்தால் ஏன் இருமதங்கள் – ஷாலி காட்டியது போல – இசுலாமே அதிகப்படியாக – பற்றிமட்டும் இங்கு போடுகிறார்? ஏன் இந்துமதத்தைவிட்டுவிட்டார்? இந்துத்வாவினர் இசுலாமியரை நாட்டைவிட்டே ஓடுங்கள் என்று மிரட்டி பாராளுமனறத்திலேயே பேசுகின்றார்கள். அதைப்பற்றியேன் கட்டுரைகள் வரவில்லை. பதில் உங்களுக்குத் தெரியும்:

      வன்முறையே வரலாறாக என மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் கொடூரமான பட்ங்களைப் போடுவது ஒரு radicalisation strategy. எல்லாத் தீவிரவாத அமைப்புக்களும் இப்படி சொற்களாலும் சித்திரங்களாலும் காட்டித்தான் radicalisation என்பது ஊரறிந்த இரகசியம்.

      radicalaisation என்பதும் அதன் மூலம் வெற்றியைத்தேடுவதும் ஒட்டுமொத்த இசுலாம் வன்முறை என்று நிறுவுவதும் அதைவிட்டு விலகுங்கள் என்ற செய்தியைப்பரப்புரை செய்யவும்தான் வெறும் கண்டனம் பண்ணிவிட்டால் திருப்தி அடைந்துவிடுவோம் என்பது காதில் பூச்சுத்தும் வேலை. உங்களுக்கு இசுலாம், கிருத்துவம் வெறுப்பு. அப்படியென்றால், அம்மக்களுக்கு எந்த மதம் இருக்கமுடியும் என்பதையும் சொல்லிவிடுங்கள் என்றால் யூத மதம், பேகனிசம் என்று கூசாமல் சொல்கிறீர்கள். எப்படி அவர்கள் மீண்டும் விட்ட மதங்களுக்குப் போக முடியுமென்றால் பதில் சொல்லத் தெரியவில்லை. உப்பைத்தின்னவன் தண்ணீர் குடிக்கவேண்டும். கட்டுரைகள் எழுதியதும் ஆதரித்தவரும்தான் அதன் விளைவுகளுக்குப் பதில் சொல்லவேண்டும்.

      இக்கட்டுரைகள் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்று நான் பயப்படுகிறேனாம். அறிவுக்கொழுந்து சொல்கிறார். இசுலாமியர் எண்ணிக்கை பெருகித்தான் வருகிறது. அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் தெரியாது.

  44. Avatar
    ஷாலி says:

    //மதசகிப்பு தன்மை இல்லாத மதங்கள், இந்த ஆபிரகாமிய மதங்கள்……Pathman says/://
    //இந்தக் கட்டுரை, முகமதியர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதைப் பற்றித்தான்-ஒரு அரிசோனன் says//

    திரு.தங்கமணி,பாண்டியன்,பத்மன்.அரிசோனன் போன்றவர்களால் கடுமையாக தாக்கப்படும் ஆபிரகாமிய மதங்கள்,குறிப்பாக இஸ்லாம் மிக வேகமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு வருவதாக அறிவியல் பூர்வமான ஆய்வுகள் கூறுகின்றன.( Islam, the world fastest- Growing Faith ,will leap from 1.6 billion to 2.76 billion by 2050 ,according to the PEW study.)இதற்க்கு என்ன காரணம்? ஒரு கையில் வாளும் மறு கையில் குல்லாவும் வைத்து மிரட்டும் ஒளரங்கசீப் இன்று யாரேனும் உள்ளார்களா?அல்லது சுவர்க்கம்,நரகம் பூச்சாண்டி உண்மையை அறிந்து வருகிறார்களா?
    http://edition.cnn.com/2015/04/02/living/pew-study-religion/

    1. Avatar
      paandiyan says:

      மிக வேகமா எந்த மதத்தில் அழிகின்றார்கள் . எதும் தகவல் உண்டா ?

  45. Avatar
    Pathman says:

    சக முஸ்லீம் தவறு செய்யும் போது அதை தட்டி கேட்பதே இல்லையே, வேடிக்கை மட்டுமே பார்க்கின்றோம்,
    இதே Gaza , பர்மா என்றால் பொங்கி எழுகின்றோம்…

    இதனால்தானே முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று உலகம் முத்திரை குத்துகின்றது, மதம் என்ற போர்வையில் சிலர் செய்யும் தவறுகளை அதே மதத்தை சேர்ந்த பலர் மௌனமாக பார்த்துகொண்டு இருப்பது எதை குறிகின்றது, மறைமுக அங்கீகாரம் என்பதை அல்லவா ?

    (எப்படி தாலிபான்கள் செயலை வைத்தும் ஐ எஸ் எஸ் ஐய் வைத்தும் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் வன்முறை விரும்பிகள் என்கிறீர்கள்)

    ஐ எஸ் எஸ் ஐய் தொடங்கிய புதிதில் மத்திய கிழக்கு தொடங்கி இந்தோனேசியா வரை கருப்பு வரைபடம் போட்டு, ஐ எஸ் எஸ் ஐய் ரீ-ஷர்ட் போட்டு வெளியிட்ட, ஐ எஸ் எஸ் ஐய் தனது profile படமாக போட்ட எத்தனையோ அமைதி விரும்பிகளை கண்டதுண்டு (ISIS பெயர் damage ஆனவுடன் அது காணாமல் போனது வேறு விடயம் )

    (90களில் ஒரு லட்சமாக இருந்தோர் இன்றூ 2500 பேராகக்குறுகிவிட்டனர். அவர்களும் அங்கு வாழமுடியாத நிலை. தாலிபான்கள் அவர்களை முழுவதும் அழித்துவிடுவார்கள்; நாங்கள் தனிமைப்படுத்தப்படுகிறோமென்று வெளியேறுகிறார்கள்) ஏன் அவர்களுக்கு அங்கே வாழ உரிமை இல்லையா ?

    ஆனால் நீங்கள் மட்டும் மற்ற நாட்டில் போய் கும்மி (குண்டும் ) வைக்கலாம் அடிக்கலாம்…. உ .தா :- பிரிட்டன் , பிரான்ஸ் உங்களை நம்பி அகதியாய் ஏற்ற நாடுகளை இரத்தத்தால் குளிப்பாட்டலாம்.

  46. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //மற்றவர்களுக்கு வக்காலத்து வாங்க நீங்கள் யார்? உங்களால் பதில் சொல்லமுடியவில்லை அல்லது விருப்பமில்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள். அதைவிட்டு விட்டு மற்றவர்களுக்கு அவசியமில்லையென்று சொல்ல நீங்கள் யார்?//

    நீங்கள் முன்பு இப்படித்தானே செய்வீர்கள்/செய்கிறீர்கள் BS!
    நீங்கள் செய்வதை மற்றவர் செய்தால் ஏன் பதறுகிறீர்கள்?
    உங்களைப்போல நானும் ஒரு பின்னூட்டம் பதிபவன்தான். நீங்கள் கேட்கும் கேள்வி சரியில்லாதது என்று எழுத எனக்கு எல்லா உரிமையும் உண்டு. அது மற்றவருக்கு வக்காலத்து வாங்குவது என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் நினைப்பே! விலகுவதும், விலகாமல் இருப்பதும் எனது விருப்பம். அதை நீங்கள் சொல்வதே உங்களது சர்வாதிகார மனப்பாங்கையும், நீங்கள் சொல்வதை எதிர்த்து யாரும் பதிவிடக்கூடாது என்ற கொள்கையையும் தானே பறைசாற்றுகிறது!

    பூமராங்கை எரியும்போது அது திரும்பிவரும் என்று அறியாமல் அதை வீசக்கூடாது. நீங்கள் எறிந்த பூமராங் உங்களைத் தாக்க வரும்போது நீங்கள்தான் விலக வேண்டும், பூமராங் விலகாது.

    //அரேபிய நாடுகளில் இசுலாமியமதப்பிரிவுகளோ ஐரோப்பாவில் கிருத்துவக்குழுக்களோ அடித்துக்கொண்டால் நாமேன் கண்டனம் செய்யவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அப்படி அடித்துக்கொண்டு பலர் மாண்டால், நமது உணர்வுகள் அய்யோ பரிதாபம் என்றுதான் முடியுமே தவிர அவர்களைக்கண்டனம் செய்து என்னவாகப்போகிறது?//

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி உணர்வு தோன்றும். இப்பொழுதும் நீங்கள் உங்கள் மாதிரிதான் மற்றவர்கள் சிந்திக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தானே மேற்கண்ட பதிவைச் செய்திருக்கிறீர்கள்? அப்படியிருக்க, மற்றவர்களை ஏன்குறைகூறுகிறீர்கள்?

    1. Avatar
      BS says:

      //நீங்கள் கேட்கும் கேள்வி சரியில்லாதது என்று எழுத எனக்கு எல்லா உரிமையும் உண்டு. அது மற்றவருக்கு வக்காலத்து வாங்குவது என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் நினைப்பே! விலகுவதும், விலகாமல் இருப்பதும் எனது விருப்பம். //

      உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எவராவது இல்லையென்றார்களா? ஆனால், //நானோ, மற்றவர்களோ பதிலளிக்க வேண்டியதில்லை// என்று சொல்லும்போது வது மற்றவர்கள் வேலையை நீங்கள் இழுத்துப்போட்டு பார்க்கிறீர்கள். அவர்கள் உங்களை அப்படி எங்களுக்காகப் பேசுங்கள் என்றார்களா? இல்லையென்றால், இஃது அதிகப்பிரசிங்கித்தனம்.

      உங்களுக்காக மட்டும் பேசுங்கள். எல்லா இந்துக்கள் சார்பாகக்கூட பேசவே முடியாது. இந்துமதம் எவருடைய, அல்லது ஒரு தனிப்பட்ட கூட்டத்திற்கு தன்னைப் பேட்டண்ட் செய்து கொடுக்கவில்லை. எவரும் சர்வாதிகாரியாக இம்மதத்தில் ஆக முடியாது.

      Boomerang logic is out of context.

  47. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //அரிசோனன் போன்றவர்களால் கடுமையாக தாக்கப்படும் ஆபிரகாமிய மதங்கள்,குறிப்பாக இஸ்லாம் மிக வேகமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு வருவதாக அறிவியல் பூர்வமான ஆய்வுகள் கூறுகின்றன//

    ஷாலி அவர்களே! நான் எப்பொழுது ஆபிரகாமிய மதங்களை, குறிப்பாக இஸ்லாமைத் தாக்கிப் பதிந்திருக்கிறேன்? எச்சமயத்தையும் நான் தாக்கி எழுதுவது கிடையாது. அப்படியிருக்க “கடுமையாகத் தாக்கப்படும் சமயங்கள்” என்ட்று பதிந்திருப்பது மிகமிகத் தவறு. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ஒரு சமயத்தைப் பின்பற்றுபவர்கள், மற்ற சமயத்தாரைத் தாக்குவதைத்தான் தாக்கி எழுதியுள்ளேன். எனவே, எனது பெயரை வீணாக — நான் செய்யாத ஒன்றைச் செய்ததாகச் சம்பந்தப்படுத்தி எழுதவேண்டாம்.

    நான் எழுதும் பின்னூட்டங்களுக்கு மட்டுமே மறுமொழி/எதிர்மொழி இடுவதே சாலச் சிறந்ததாகும். செய்யாத ஒன்றைச் செய்ததாக எழுதுவது யாருக்கும் அழகில்லை.

  48. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //இக்கட்டுரைகள் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்று நான் பயப்படுகிறேனாம். //

    இக்கட்டுரையை எழுதியவர் ஒரு கிறித்தவர் — ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட் — அவர் ஒரு இந்து அல்ல. அவர் எழுதியதற்கு எந்த ஒரு இந்துவையும் பொறுப்பேற்கச் சொல்லமுடியாது.

    //வன்முறையே வரலாறாக என மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் கொடூரமான பட்ங்களைப் போடுவது ஒரு radicalisation strategy. எல்லாத் தீவிரவாத அமைப்புக்களும் இப்படி சொற்களாலும் சித்திரங்களாலும் காட்டித்தான் radicalisation என்பது ஊரறிந்த இரகசியம்.//

    அதுபோல “வன்முறையே வரலாறாக” என்ற தொடர்கட்டுரையின் ஆங்கில மூலத்தை எழுதியவர் எம்.ஏ.கான் என்ற ஒரு முகமதியர். அவர் தன்னைப்பற்றித் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
    அக்கட்டுரை வரலாறாகத்தான் வெளியிடப்பட்டது. அதைத் தமிழில் மொழிபெயர்த்தவரின் சமயம் எனக்குத் தெரியாது தெரியவேண்டிய அவசியமும் இல்லை. அக்கட்டுரை இந்து என்று சொல்லிக்கொள்ளும் உங்களை ஏன் இப்படிப் பாதிக்கவேண்டும்? அதைப் படித்தபின்னும் நீங்கள் ஏன் இந்துசமயத்திற்கு எதிராகவே கருத்துப் பதியவேண்டும்? இதுதான் புரியாத புதிராக நிற்கிறது.

    இந்து சமயத்தைத் தாக்கி ஒன்றா, இரண்டா — ஆயிரக்கணக்கில் — இந்துக்களே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்து சமயத்தை யாரும் தாக்கவில்லையே என்ற உங்களது போலிக்கவலையே தேவையில்லை.

    இந்து என்று உங்களை அறிமுகம் செய்துகொண்ட நீங்கள் ஏன் இப்படி இந்து சமயத்தைத் தாக்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
    ஷாலி தன்னை ஒரு முகமதியர் என்று சொல்லிகொள்கிறார். சுவனப்பிரியன் யார் என்பது ஐயமற அனைவருக்கும் தெரியும். அவருக்குத் தெரியும், நான் இஸ்லாமைத் தாக்கவில்லை என்று. அவரது இணையதளமும் அவர் யார் என்பதை மறைப்பதில்லை.

    ஆனால், உங்களைப் பற்றிதான்…

    … அது இறைவனுக்கே வெளிச்சம்.

    1. Avatar
      BS says:

      அடக்கடவுளே, விடியவிடிய இராமாயணம் கேட்டுவிட்டு காலையில் சீதைக்கு இராமன் யாரடா என்றால் சித்தப்பா என்றானாம்! அதுமாதிரியில்ல இருக்கு. தூங்காதீங்க உயர்திரு அரிசோனன். விழித்துக்கொள்ளுங்கள். என் பின்னூட்டங்களும் மொழிபெயரப்பாளரைப் பற்றியோ. அவரின் உள்ளோக்கத்தைப்பற்றியே.

      கட்டுரையைப் பற்றி நான் பேசவேயில்லை. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மட்டும் இங்கு போடலாம். ஆனால் அவை அவை ஏன் இசுலாமை மட்டும் குறிவைத்து போடப்படுகின்றன என்பதுதான் கேள்வி. தன் பெயரைக்கூட வெளியிடாமல் மறைக்கும் மர்மத்தின் காரணமென்ன‌?

      ஒரு வகுப்பில் 10 மாணாக்கர் சரியாகப் படிக்கவில்லை என்றிருக்கும்போது ஒரே ஒரு மாணவனை மட்டும் தினந்தோறும் வசைபாடி பெஞ்சில் மேலேறி நில்; வகுப்புக்கு வெளியில் நில்’ உன் அப்பாவைக்கூட்டி வா; அம்மாவைக் கூட்டி வா என்றால் அவனுக்கோ மற்றவருக்கோ என்ன தோன்றும்? கண்டிப்பாக இந்த ஆசிரியர் இவன் மேல் மட்டும் ஏதோ தனிப்பட்ட குரோதம் கொண்டிருக்கிறார். ஏன் என்று ஆராயத்தான் செய்வார்கள் இல்லையா/ அதுதான், மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் உள்ளோக்கத்துடன் இசுலாம் கிருத்துவ மதங்களைக் குறிவைத்துப் போடப்படுகின்றன. அதன் உள்ளோக்கம் நான் சொன்னவை; வெறும் கண்டனத்துக்காக என்பது நான் ஏற்கவில்லை. சாடை தெரியாதவன் சர்வ முட்டாள் எனபது முதுமொழி.

      இந்து என்று சொன்ன நான் உங்களோடோ, கிருஸ்ணகுமாரோடோ, பாண்டியனோடோ என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவில்லை. காரணம். அவர்கள் மனங்கள் இந்துத்வ எண்ணையில் ஊறி வெளிவருபவை. மேலும், ஒவ்வொரு இந்துவும் தனக்கு வேண்டிய வகையில் மதத்தை உருவகப்படுத்திக்கொள்ளலாம். அதன்படி, என் மதம் எனக்கு. உங்கள் மதம் உங்களுக்கு. உங்கள் மதத்தில் நான் குறை கூறினால், தாராளமாக என் மதத்தில் குறை கூறலாம்.
      \
      நாராயண குருவுக்கு, நம்பூதிரிகளுக்குமுள்ள இடைவெளி போல.எனக்கும் உங்களுக்குமுள்ள இடைவெளி: குரு பிராமணன் வந்து பூஜை எங்களுக்குப் பண்ணவேண்டியதில்லையென்று அருவிபுரத்தில் சிவன் கோயில் கட்டினார். அப்படி இங்கு எவராவது சொன்னால், நீங்கள் என்ன சொல்வீர்கள்: பார்ப்பனத்துவேசம் என்பீர்கள். கேரள மக்கள் சொல்லவில்லை. எங்கெங்கும் குருவுக்கு மரியாதையும் வணக்கமும்தான். அவர் ஒரு சமூகப்புரட்சி செய்தார் என்று நூல்கள் சொல்கின்றன மலையாளத்தில். எனவே நீங்கள் ஒரு ஜாதிக்கான மதம், நான் அனைத்து இந்துக்களுக்குமானது. Exclusive vs Inclusion. எனவே நாம் என்றுமே ஒன்று சேரமுடியாது.

      இனியும் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

  49. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //மெஜாரிட்டி 99 விழுக்காடு இருக்கும்போது, 1 விழுக்காடு மக்கள் எப்படி பாதுகாப்பாக வாழமுடியும்? அப்படியே 99 விழுக்காட்டிற்கு சகிப்புத்தன்மை வந்து 1 விழுக்காடு வாழ்ந்தால், அச்சகிப்புத்தன்மை ஒரு என்னேரமும் உடையும் தன்மையோடுதான் இருக்கும்;/

    அமெரிக்காவில் இந்துக்கள் ஒரு விழுக்காடுதான் உள்ளனர். இங்கு இந்துக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு இந்தியாவில்கூட இல்லை.
    அதுபோலத்தான் கனடாவும். அங்கும் 1.6 விழுக்காடும், ஆஸ்திரேலியாவில் 1.௨௮ விழுக்காடு இந்துக்களும் உள்ளனர். எந்த இந்துவும் தங்க்க்குப் பாதுகாப்பு இல்லை என்று உணர்வதே இல்லை.

    எந்தநாடு சமயச் சகிப்புத் தன்மையுடன் விளங்குகிறதோ, எந்தநாட்டில் சட்டதிட்டங்கள் அனைத்துச் சமயங்களுக்கும் ஒரேமாதிரி உள்ளதோ, எந்த நாட்டில் மக்களாட்சி நிலவுகிறதோ, அங்கு ஒரு விழுக்காடு என்ன, ஒன்றில் நூறு பங்கு விழுக்காடு இருக்கும் எந்த சமயமும் தாக்கப்படாது.

    இந்தியாவில் ஆயிரம் ஆங்குகளுக்கும் மேலாக யூதர்கள் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஆயிரத்தில் ஒரு விழுக்காடு கூட இல்லை. அவர்கள் ஒருபொழுதும் இந்தியாவில் தங்கள் உயிருக்கு அஞ்சியது இல்லை. அமெரிக்காவில் 2 விழுக்காடுதான் உள்ளார்கள். அவர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சுகிறார்களா, அவர்கள் வெளியேற்றப்படுகிரார்களா?

    தங்கள் பார்வையை விரிவாக்கினால் இவ்வுண்மைகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

  50. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //சாசானியர்களான அவர்களிலிருந்து ஷஹ்ர் பானு என்ற பெண் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு சம்சாரமாகி விட்ட பின்னர், அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதற்குரிய வழி மிகவும் எளிதானது; இலகுவானது. ‘ஹூசைனி பிராமணர்கள்’ என்று அவர்கள் இன்றும் நமது இந்தியாவில் அறியப்படுகின்றனர்.//

    சுவனப்பிரியன் அவர்களே,

    தாங்கள் சொல்வதிலிருந்து வரலாறு வேறுபடுகிறது. ஹுசைனி பிராமணர்கள் ‘தத்[Dutt]’ என்று அறியப்படுகிறார்கள். நடிகர் சுனில் தத் இந்த ஹுசைனி பிராமணர்களில் ஒருவர்.

    http://www.firstpost.com/living/meet-the-hussaini-brahmins-hindus-who-observe-muharram-alongside-muslims-1788623.html
    “The history of Husaini Brahmans (also known as MOHYAL BRAHMINS) begins with ten Brahmans going to Karbala with the determination to die fighting for Imam Husain. Among them were Rahib Dutt and his seven sons who fought bravely and resolutely. With the blessings of Imam Husain they met their death in a heroic way.”
    The post also notes that Sunil Dutt is believed to be a descendant of Rahib Dutt.
    The community is usually greeted with a mix of awe and shock when they introduce themselves and explain their religious traditions. The early predecessors of Hussain Brahmins were believed to be from Haryana and Punjab.

    http://en.wikipedia.org/wiki/Datt#Rahib_Datt.2C_Imam_Hussain_.26_Son_of_Hussain_Ibne_Ali_as_.28Imam_Mahdi.29

    Rahib Datt, Imam Hussain & Son of Hussain Ibne Ali as (Imam Mahdi)
    At the time of the war at Karbala, fought in 681 AD, which led to a schism amongst the Muslim community into Sunnis and Shias, Rahib Sidh Datt was a highly esteemed figure of Arabia due to his close relations with the family of Prophet Mohammed. When Ali ibn Abu Talib, the first Caliph and son-in-law of Muhammad was murdered, his younger son, Hussain, came out to oppose the new Caliph,Yazid ibn Muawiyah. The vastly superior forces of Yazid, at Karbala surrounded his force consisting of two hundred men. In the war, when no Muslim king came to his help, Rahib fought on the side of Hussain and sacrificed his seven sons in the bloody war. Hussain was fatally wounded by Shamer, the commander of Yazid, and died of thirst in the desert on the tenth day of Muharram (Today observed as the Day of Ashura). Rahib chased the murderers as they ran with the severed head of Hussain, up to Kufa. Later, the head was carried to Damascus and finally buried with the rest of the body at Karbala. [3]

    Shiv Datt and Pir Wahun[edit]
    On their arrival in India, the descendants of Rihab were received with great hospitality by the native Mohyals. They eventually settled near Nankana Sahib in the district of Sheikhupura in present-day Pakistan. It was here that in the closing decades of the tenth century an interesting incident took place involving a Pir called Wahun – a trickster chess player, and Shiv Datt – the chief of the Datts. Wahun was known for his knack of invariably winning the games. According to a bet fixed by him, the loser would either pay the price with his head or embrace Islam. In this way, he converted a large number of Hindus to the Muslim faith until he met his match in Shiv Datt. He challenged the Pir to a game of chess and defeated him three times in a row, thereby claiming the heads of his wife and two sons as per the stakes. However out of sheer magnanimity, Shiv Datt pardoned their life. When Wahun came to know that one of the ancestors of Shiv Datt had sacrificed his seven sons for the sake of Muhammad in the battle of Karbala, he took a solemn vow that in the future he would never convert any Hindu by coercion to Islam. It was on this occasion that the Pir echoed the famous words: Wah Datt Sultan, Hindu ka Dharam Musalman ka Iman(Hail, O King Datt for Thou are endowed with the Dharma of the Hindu and the Iman of the Muslim). Many direct descendants of Rahib Dutt use last names such as Dutt, Datt, Sharma, Bharadwaj.

  51. Avatar
    ஷாலி says:

    // மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் உள்ளோக்கத்துடன் இசுலாம் கிருத்துவ மதங்களைக் குறிவைத்துப் போடப்படுகின்றன. அதன் உள்ளோக்கம் நான் சொன்னவை; வெறும் கண்டனத்துக்காக என்பது நான் ஏற்கவில்லை..//

    திரு.BS அவர்களே! நீங்கள் சொல்லுவதுபோல் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் ஆபிரகாமிய மதங்களை குறிவைத்து குதர்க்க நோக்கத்துடன் திண்ணை தளத்தில் போடப்பட்டாலும்,அதற்காக அஞ்சவேண்டியதில்லை.நடுநிலை மக்களுக்கு உண்மைகளை புரியவைக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.இந்துத்துவா சார்பு நண்பர்களுக்கு அவர்கள் தரப்பு ஓட்டைகளை அடையாளம் காட்ட ஒரு நல்ல வாய்ப்பு.இந்த வகையில் நண்பர் பாண்டியன் போன்ற குண்டக்கா மண்டைக்கா எழுத்துக்கள் நமக்கு நல்ல பாயின்ட் எடுத்துக்கொடுக்க உதவுகிறது.தொடர்ந்து ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொன்னால் அது உண்மையாகும் என்ற கோயாபல்ஸ் யுக்தியை கையாள்கிறார்கள்.எனினும் சத்தியம்தான் இறுதியில் வெல்லும்.

Leave a Reply to BS Cancel reply

Your email address will not be published. Required fields are marked *