“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”

This entry is part 6 of 39 in the series 18 டிசம்பர் 2011

கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே ஸ்னானா”. இச்சடங்கில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின்மேல் உருண்டு அவ்வெச்சில்கள் தம்மேல் படும்போது சுப்பிரமணிய சுவாமியின் அனுக்கிரகம் கிடைத்து தோல்வியாதிகளும் மற்ற பரிகாரபலன்களும் கிடைக்குமென்பதே அந்த நம்பிக்கை. இது காலம்காலமாக தொடரும் உற்சவம். இது போக, இன்னும் உடுப்பி மாவட்டத்தில் ஒரு ஊரில் பிராமணப் பெண்களின் ‘கழிவுத்துணிகளை’ தலித்துகள் மட்டுமே சேகரித்து துவைத்து கொடுக்கும் பழக்கமும் தொன்று தொட்டு வருகிறது. நல்லவேளை இதை எவரும் யூ ட்யுபிலோ இந்துவிலோ போடவில்லை. மடே ஸ்னானா என்று சடங்கு மட்டுமே 01.12.2011 வெளியில் தெரிய வந்துவிட்டது.
மடே ஸ்னானா நம்மை வியப்புக்குள்ளாக்கவில்லை. பலரும் பல சடங்குகளை, நல்லதோ கெட்டதோ நடாத்திக் கொண்டுதானிருப்பார்கள். கெட்ட்தென்றால், அதாவது சமூகத்துக்குத் தீங்கிழைப்பதென்றால், அதை மக்களுக்கு எவராவது எடுத்துச் சொல்ல வருகிறார்களா எனபதே நாம் பார்க்க வேண்டியது. இந்து நாளிதழ் 01.12.2011 தேதி இச்செய்தியை வெளியிட்டது. காணொளி யூ.ட்யுபிலும் வெளியாகி இருக்கிறது. ஹெட்லைன்ஸ் டுடே என்ற இந்திய தொலைக்காட்சியிலும் தொடர்ந்து ஓர்நாள் முழுவதும் காட்டிக்கொண்டேயிருந்தார்கள்.
தி ஹிந்துவில் இதற்கு வந்த பின்னூட்டங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இந்து இணைய நாளிதழில் அவைகள் போடப்பட்டும் வருகின்றன. இதில் நிறையப் பின்னூட்டக் கருத்துக்கள் பிராமணர் ஜாதியில் பிறந்தவர்களிடமே வருகிறது. அவை இருவகை.
1. தான் இச்சாதியில் பிறந்ததற்காக வெட்கப்படுவதாகவும் இப்படிப்பட்ட சாதீய சடங்குகள் ஒழிக்கப்படவேண்டுமென்பதாகவும்;
2. இச்சடங்கு ஒழிக்கப்படக்கூடாது. இவை நம் பாரம்பரியத்தைப் போற்றுகின்றன. பிராமணர்களும் இச்சடங்கில் பங்கு பெறுகிறார்கள் எனபதைக் கவனிக்கவும். இதில் கலந்து கொள்ள எவரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. வருணங்கள் நம் மதத்தில் அனாதி. இசுலாமியரும் கிருத்துவரும் நம்மிடையே சிண்டு முனைய இச்சடங்கை விமர்சனம் பண்ணுகிறார்கள்.
பின்னூட்டக் கருத்திட்டோரில் இருவரே இசுலாமியர்கள் நான் படித்த வரை. கிருத்துவர்களில்லை. அப்படி யாதேனுமொருவர் எழுதியிருந்தால், வெளிநாட்டுப் பணத்தைப் பெற்று எம்மதத்திற்கு எதிராகப் விஷமப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள் என்ற எதிர்கருத்தைப் வைத்து இச்சடங்கிற்கு நியாயம் கற்பிப்பார்கள்.
இச்சடங்கை எதிர்த்த கருநாடக பி.சி.ஜாதி அமைப்பின் தலைவர் தாக்கப்பட்டிருக்கிறார். அப்படத்தையும் இந்து வெளியிட்டிருக்கிறது.. (நீங்கள் மேலே காண்பது) அவரைத் தாக்கியவர்கள் அச்சடங்கில் பங்கு பெற்ற பி.சிக்களும் தலித்துகளுமே எனறவுண்மை பேரதிர்ச்சி. இதிலிருந்து என்ன தெரிகிறது? இப்படிப்பட்ட வருணக்கொள்கை வழியாக வந்த ‘பிராமணர் என்போர்’ பிறப்பாலே புனிதமானவர்கள் என்று நம்ப்பட்டும் அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் தம்மைப் புனிதப்படுத்துகின்றன என பிற ஜாதி மக்களை நம்ப வைத்தும் பின்னர், அதை என்று தோன்றியதென்றே தெரியாத தொன்மையான மதச்சடங்கு என்றும் புனிதமென்றும் விஷமப் பிரச்சாரம் பண்ணப்படுகிறது. மதச்சடங்குகளை கேட்பதற்கு மற்றவர்கள் யார்? “எம் பாரம்பரியத்தை கேள்வி எவரும் கேட்கமுடியாது! என்றும் பின்னூட்டக்கருத்துகளை வைக்கிறார்கள். கருநாடக உட்துறை அமைச்சர் ஆச்சாரியா (பிராமணர்) ‘இச்சடங்கை நிறுத்துக்கூடாது. இது நம் பாரம்பரியம்’ இதைச் சட்டம் போட்டு நிறுத்தினால் இந்துக்கள் மனங்கள் புண்படும் என்கிறார்கள்.
ஏன் தமிழ்நாட்டில் இச்சடங்கு நடைபெறவில்லை? காரணம் பெரியார். அவர் பார்ப்பனத் துவேசத்துக்குக் காரணமில்லை. பார்ப்பனர்களே காரணம் என்பது இதுபோன்ற சடங்குகள் நடப்பதினாலும் இதற்கு வரும் ஆதரவுகளினாலும் தெளிவாகிறது.. இவை போன்ற பலச்சடங்குகள் மதத்தின் பெயரால் நடந்தேறின. இப்போதே இப்படியென்றால், அப்போது? மக்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார்கள். இதுவே பார்ப்பனத் துவேசத்தின் கரணிகளாகும். உள்ளுக்குள்ளே குமைந்து கொண்டிருந்த இத்துவேசத்துக்குக் குரலாக வெளியில் ஒலித்தவரே பெரியார் ஈவேரா. பிராமணரல்லாதோரும், பிராமணர் ஜாதியில் பிறந்தாலும் மக்களைனைவரும் சமம் என்ற நினைப்புள்ளோரும் பெரியாருக்கு நன்றி சொல்வார்கள். ஐயமில்லை.
வருணக்கொள்கையில் தவறில்லை; அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென வைதீகப் பிராமணர்களும் அவர்களுக்கு அணுக்கலிருக்கும் மேற்சாதியினரும் பலவழிகளில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் எவருமே இக்கொள்கையால் பாதிக்கப்பட்டோரின் கருத்துகளை கேட்பதில்லை. எக்கொள்கையும் இரு பரிமாணங்களைக் கொண்டது. அவை:
1. கொள்கையென்னும் தியரி
2. கடைபிடிக்கப்படும்போது ஏற்படும்/ஏற்பட்ட விளைவுகள்.
இன்று FDI எதிர்க்கப்படுகிறது ஏன்? எதிரான விளைவுகள் ஏற்படுமென்ற அச்சத்தாலே. மனிதர்களே இப்படியென்றால் கிருஸ்ணபரமாத்மா அப்படி எதிர்னோக்கவில்லையென்று சொல்லமுடியுமா வருணக்கொள்கையை கீதையில் பிராமணன் என் தலையிலிருந்து பிறந்தான்; சூத்திரன் காலிலிருந்து, தலித்து என்னிடம் பிறக்கவேயில்லை என்றெல்லாம் சொல்லும்போது? அல்லது, இன்னின்ன ஆளுக்கு இன்னின்ன குணம் அடைப்படையில் அமையும் என்று சொல்லுமிடத்து?
முக்காலமும் தெரிந்ததுதானே தெய்வம்? அத்தெய்வத்துக்குத் தெரியாததா எவையும் நிரந்தரமல்ல; இக்கொள்கையும் ஒரு நாள் ஒவ்வாமல் போகுமென்று? இருந்தும் ஏன் தெய்வத்தின் மேல் போட்டார்கள்? தெய்வத்தின் பெயரால் ஏற்ற தாழ்வுகளை எழுப்பினால் தாழ்வுற்ற மக்கள் மருண்டுவிடுவார்கள் என்பதனாலேயே.!!
இக்கொள்கை சாதிகளுக்கும் சாதிச்சடங்குகளுக்கும் (மட ஸ்னானா போன்று) ஒருவர் எந்த தொழிலுக்கு இலாயக்கு என்று அவர் பிறப்பிலே இருக்கிறது என்று புனைந்து, தலித்துகளின்மேல் தீண்டாமையைத் திணிப்பதற்கும்தானே வழிகோலின? அதன் துர்ப்பலனை இன்றும் அனுபவிக்கிறார்களே தலித்துகள்? எதிர்க்குரல்களை எழுப்பக்கூட தமக்குத் தகுதியில்லையெனவும், எழுப்பினால் “சாமிக்குத்தம்” எனவும் தலித்துகள் நம்பினார்கள். மட சேனாவை தாமே விரும்பி பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் புரண்டு சுப்பிரமணிய சுவாமியின் அருளைப் பெறுகிறார்கள் என்கிறார்கள். ‘தாமே விரும்பி’ பெண்கள் உடன்கட்டையேறினார்கள் என்றும் சொன்னார்கள்!

*******

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 23கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘
author

காவ்யா

Similar Posts

104 Comments

  1. Avatar
    காவ்யா says:

    டெக்கன் ஹிரெல்டு என்பது பெங்களூரிலிருந்து வெளியாகும் நாளிதழ். அது இந்தச் சடங்கைப்பற்றியும் அதை எப்படி ஆச்சாரியா என்ற கருநாடக உட்துறை அமைச்சர் விஞ்ஞானப்பூர்வமாக சரியென்று நியாயப்படுத்தினார் என்று செய்தி வெளியிட்ட்து. அதற்கு வாசகர் ஒருவர் அந்நாழிதழின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இது:

    Sir,

    VS Acharya’s dubious ‘scientific’ interpretation of Made snana is appalling. Made Snana, besides being obnoxious esthetically, is unhygienic. Acharya knows that saliva could carry many deadly germs like TB and Flu viruses. Hence we consider avoiding ‘enjalu’ as a hygienic practice. Therefore chances of contracting diseases are more by Made Snana than getting cured by it. Moreover why should the saliva of only Brahmins have curative properties? If Acharya faces genuine problem of banning Made Snana, he should discourage the practice rather than justifying it by offering dubious explanations.

    A GAJANANA
    Bangalore

    (Deccan Herald Letters to the Editor Dec 14 2012)

  2. Avatar
    punai peyaril says:

    ஏன் தமிழ்நாட்டில் இச்சடங்கு நடைபெறவில்லை? காரணம் பெரியார்.— அந்தப் பெரியாரின் மாற்றத்தினால் தான், கற்றுணர்ந்தவர்கள் பள்ளி , கல்லூரி கூடங்களிலிருந்து விரட்டப்பட்டு.. இன்று சாராய சாம்ராஜ்ய சக்ரவர்த்திகளும், அரசியல் கொள்ளையர்களும் கல்வியாளர்களாக…. எம் ஜி ஆர் படத்தில் அள்ளக்கையாக வந்தவர் கூட பல்கலைக் கழக அதிபர்… அது தான் கழகம் கண்டது. ஆனால், விரட்டப்பட்ட அய்யர்கள், கூகுளுக்கு கூட வென்ச்சர் கேப்பிடல் தர முடிகிற நிலைக்கும் போனார்கள்… அய்யர்களைக் காட்டி அயோக்கியர்கள் வர பெரியார் பாதை போட்டது போல் ஆனது…

  3. Avatar
    காவ்யா says:

    உங்கள் கருத்தை பெரியாரைப்பற்றி அதன் பின் நடந்தேறிய நிகழ்வுகளைப்பற்றியும் வரவேற்கிறேன்.

    இக்கட்டுரையின் மையக்கருத்தான இந்தச் சாதிச்சடங்கை சரியென்று சொல்லும் ஆச்சாரியாவைப்போன்ற பிராமணர்களைப் பற்றியும் சொல்லுங்கள்.

  4. Avatar
    punai peyaril says:

    நீங்கள் வாட்டர் படம் பார்த்திருக்கிறீர்களா…? அது போல் தான் இதுவும். நிச்சயம் இது தவறு தான். உங்களுக்கு தெரியுமால் இருக்க முடியாது, தமிழகத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஒரு தலைவர், கிராமம் ஒன்றில் இரண்டுக்கு போக ஒதுங்க… அது தெரிந்து அதை – 2- தேடி பலரும் ஓடியது போல் தான் இதுவும். இதில் ஜாதி மத பேதமே கிடையாது… மனநிலை.. மனநிலை…

  5. Avatar
    காவ்யா says:

    இதில் கூறப்பட்டது மதச்சடங்கு. மற்றவர்கள் செய்தவை வேறுவகை. மதச்சடங்கைச் செய்தவர்கள் அதைச்சரியென்று சொல்லி, அதைத்தவறெனப் போராட்டம் பண்ணவந்தவர்களை அடித்துத்துரத்தினர். இல்லையா ? ஒரு தவறை ஏன் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்! கடவுளோடு இணைத்தபடியால் !
    இப்படிப்பட்ட சடங்குகளை அரசே தடுக்கவேண்டும். செய்ய மறுக்கிறார் பிராமண அமைச்சர் ஆச்சாரியா. பி ஜே பி அரசு. இந்து தலைவர்கள் சரியென்கிறார்கள். பின்னூட்டம் போட்ட பல பிராமணர்கள் பாரம்பரியம், சாமிக்குத்தம், மிசுனோரிகள் சூழ்ச்சி என்றெல்லாம் சொல்லி நியாயப்படுத்துகிறார்கள்.
    இப்படிப்பட்ட பலசடங்குகள் இன்று காலாவதியாகி விட்டன. ஆயினும் ஒரு சில இன்றும் நடக்கின்றன. இவையும் ஒருநாள் போய் விடுமென நம்பலாம். இல்லாவிட்டால் பெரியாரைத்தான் பகவான் அனுப்பனும். அதற்கப்புறம் பிராமணத்துவேஷம் பண்றாங்கன்னு நீங்க சொன்னாக்கா எப்படி நம்பறது சாமியோவ் !

  6. Avatar
    punai peyaril says:

    காவ்யா , மாயாவதியை கொண்டாடுவதை விட இது கேவலமா..? என்று கூட தோன்றுகிறது…

    1. Avatar
      காவ்யா says:

      This s a religious issue; that s not.

      The Vaideega Religion wants ppl to roll over the unwashed left over food of Brahmins by investing such food holy powers; and the eaters with equal status or favored status with God.

      U r evasive in ur responses.

      I dragged periyar only to emphasis my point that he s not to b held responsible for the anti-brahminism in total, but only in parts. Brahmins themselves contributed and still r contributing the ism. Even today, there is a practice in Srirangam where a Brahmin should be carried in a palanquin by others. Such practices just to make Brahmins holier than others anger ppl. But they don’t express their anger out of fear.

      What angers me is not the practice. Because different ppl will follow different practices, good, bad and ugly. But the lack of scruples on the part of the Hindu leaders and the Brahmin community in general as they support this practice pointing out shastras – which ironically they themselves created.

      Why don’t all the ordinary Brahmins, leave aside the Hindu leaders or saamiyaars, come together condemn this practice which humiliate all ppl? The anger gets aggravated when we see many of them write in praise of such practices, and condemn the critics as having ulterior motives.

  7. Avatar
    punai peyaril says:

    பெரியார் வந்தா முதலில் இளமையில் ஜில்பான்ஸ் பண்ணி பின் அவர் சமூக சேவை வர்றதுக்கல்ல…. சாமியோவ்…

  8. Avatar
    Karthikeyan G says:

    தமிழ்நாட்டில் இது நடக்கிறது. ஆனால், நீங்கள் சொல்வது போல் இல்லாமல், எல்லா சாதியைச் சேர்ந்தவரும் (ஒன்றாக) சாப்பிட்ட பின் எந்த சாதியச் சேர்ந்தவரும் இதனைச் செய்யலாம் (விபரங்கள் அறிய என்னுடைய முகவரியை பெற்று எழுதுவும். பதிலளிக்கக் காத்திருக்கிறேன்.. ). இது சரியா, தவறா என்ற கேள்வி ஹிந்து மதத்தை பின்பற்றுவோருக்கானது. நீங்கள் பின்பற்றினால் மட்டும் கேளுங்கள். அடுத்தவர் நம்பிக்கையை விமர்சித்தல் அசிங்கமானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

    1. Avatar
      காவ்யா says:

      அடுத்தவர் நம்பிக்கையை கிண்டல் பண்ணாதீர்கள் என்பது சரி.
      அந்த நம்பிக்கைக்கும் ஒரு எல்லை உண்டு.

      குழந்தையை உயிரோடு சாமிக்குப் பலி கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதைத் தப்பு செய்யாதீர்கள் என்றால் அவர்கள் நம்பிக்கையைக் கிண்டல் பண்ணுவதாக என்றாகுமா ? 

      The same is here. People are noseled to believe that one community of ppl is holier than others; and others should lick the left over food like beggars.

      U mean to say it is Belief in the name of God;

      U will object to any protest over this saying it is belief.

      Belief need not be rational. It can be anything. Completely irrational too.

      But it should not humiliate people and make only one commnity holier than others.

  9. Avatar
    Karthikeyan G says:

    தயவுசெய்து தப்புதப்பாக கீதையை மேற்கோள் காட்டாதீர்கள். சரியான மொழியாக்கத்தினைப் படித்துவிட்டு பின்னர் எழுதவும்.

    1. Avatar
      காவ்யா says:

      அடிப்படைக்கருத்தை மட்டும் பாருங்கள்.

      கீதை என்ன சொன்னது என்பது நம் சர்ச்சையில்லை. அன்று சொன்னது என்றுமே சாசுவதம் என்று எப்படி தெய்வத்துக்குத் தெரியாமலிருக்கும் ? சரி, அது போகட்டும்.
      நான் எழுதியதைப்பார்த்தீர்களா?

      எந்தவொரு கொள்கையும் இருவகையாகப்பார்க்கபடும்:
      1. தியரி
      2. அதன் விளைவுகள்.

      தியரியை விட்டுவிட்டு விளைவுகளப்பாருங்கள்.
      மிசுனோரிகள் வந்த பின்னர்தான் கீதையின் வருணக்கொள்கைத் திர்க்கப்பட்டு சாதிகளாயின என்கிறார்கள். அப்படியென்றால் பக்தி இயக்கத்தின் போதும் அதற்கு முன்பேயும் ஏன் தலித்துக்கள் தனித்து வைக்கப்பட்டார்கள். வருணக்கொள்கையினாலா அல்லது அதைத்தவறாகத் திரித்தனாலேயே?

      இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் கதை வேறெங்கோவோ போய்விடும்.

      இப்போது ஒன்றை மட்டும் சொல்லுங்கள்; மாயாவதி செய்தார் கருனானிதி செய்தார் தமிழ்நாட்டில் செய்கிறார்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு, மடே சேனா சரியா தவறா ? என்று மட்டும் சொன்னால் போதும்.

      உங்களைப்போன்றோர் என்ன சொல்கிறீர்கள் எனத்தெரிந்து கொள்ளத்தான் இக்கட்டுரை.

  10. Avatar
    காவ்யா says:

    //தமிழ்நாட்டில் இது நடக்கிறது. ஆனால், நீங்கள் சொல்வது போல் இல்லாமல், எல்லா சாதியைச் சேர்ந்தவரும் (ஒன்றாக) சாப்பிட்ட பின் எந்த சாதியச் சேர்ந்தவரும் இதனைச் செய்யலாம் (விபரங்கள் அறிய என்னுடைய முகவரியை பெற்று எழுதுவும். பதிலளிக்கக் காத்திருக்கிறேன்.. ).//

    Don’t evade. Let Thinnai readers know where in TN other ppl should roll over the left over food of Brahmins to get healed their skin diseases through the grace of God?

  11. Avatar
    காவ்யா says:

    //து சரியா, தவறா என்ற கேள்வி ஹிந்து மதத்தை பின்பற்றுவோருக்கானது. //

    Who are those followers of Hindu religion u r referring to? You and your sanatana brahmins?
    Have u ascertained how many Hindus accept this evil practice?
    For you, it s holy, no doubt.
    For others, is it holy or humiliating?
    Have u ascertained ?
    Dont ask me whether I have ascertained. U can go to the Hindu paper blog to see how brahmins themselves felt ashamed of it? How many Hindus felt ashamed of it? How many Muslims or Christians wrote there? Hardly a few. All Hindus only.

    So, according to you, only those who accept Brahmins holier than others, are Hindus? Only those who accept untouchablity of Dalits Hindus?

    1. Avatar
      Karthikeyan G says:

      I had some sort of high regards for you. I am sorry. You stop thinking for others. If you don’t understand what I mean ask me.
      1. It is evil or holy is to be decided by people who do that.
      2. In Pudukkottai (do you know where it is in TN) as part of Radha Kalyanam this happens. Here, people belonging to different communities eat together and so is the case with the people who follow the ritual.
      3. Regarding Gita, you post an article on what it talks about caste then we will discuss.
      Please don’t presume. A writer can write better when he/she listens to/reads other better.

      1. Avatar
        காவ்யா says:

        No regards or disregards needed. One is not writing here seeking personal favors. My purpose is to force u to examine the legacy u hav inherited – the religious inheritance.

        1. Whether it is holy or a casteist humiliation heaped on other ppl is decided by ppl. Ok. I agree with u. Tell us which ppl? Pl show them. Classify them. Hindus? R u Hindu or I am? Who s a Hindu? How hav u become a better Hindu than I am? If One who justifies made snana a genuine and greater hindu or one who questions it and clamor for its abolition, a false hindu or a wrecker of the religion?
        2. Second sentence is confusing. What do u mean by ppl of diff communities eating together? It s already there for a long time, not only as a religious ritual, for e.g annadanam, but as a govt practice called jama bandhi.
        In the ritual u hav pointed out, cd u tell us this: in Pudukottai, do all others roll over the left-over leaves of Brahmins believing or made to believe! – that the enjalu or echil will heal their skin diseases because the echil of Brahmins are divine?
        U need to b reminded that if ever there s such a ritual in TN where other ppl shd eat, roll over, or daub the echil of Brahmins, the Govt – no matter it is Jeyalalitha or Karunanithi – will immediately ban it. It is due to BJP in Karnatka that the humiliation of other ppl continues. Therefore, u shd tell us here with evidences where it happens ih TN so that it can b banned and ppl involved put to punishment.
        3. The onus on u to post the details of varnashradharma as u claim that it is good and I am guilty of travestying it.

        Whether the dharma is good or not is not my basic point here, but its aftermath. Don’t u honestly believe that the dharma i mean its ramifications were good to ur brahmins, and bad to millions of dalits in India for millennia?

        Don’t u honestly believe that an Almighty All knowing God cdn’t visualize the iniquity that the dharma imposed on dalits – any time in the future, seeing from the time point of Bhagavat Gita?

        Don’t u honestly believe that different ppl caste wise or birth wise were born from the diff parts of his Body? Do u honestly believe that the God had not visualized the future that such a division wd make certain ppl who are made to serve all others unhappy and bind them in perennial enslavment?

        Pl remember the effect of their religious isolation has spilt over their lives in society. Today reservations, in the past no reservations but ostracization and status of outcast !

        Don’t run for cover to missionaries and Muslims. No one has paid me to raise these qns. The qnestions are between u and me: Spk as an individual and post replies.

        When Hindu religious leaders boast that the religion is open to criticism and reformation, how comes u r adamant that such rituals which make Brahmins holy are justified? Such dharama which brought suffering to millions of dalits as outcast from society is not cast away even today and u get passionate to defend it ?

        1. Avatar
          Karthikeyan G says:

          /Don’t u honestly believe that different ppl caste wise or birth wise were born from the diff parts of his Body? Do u honestly believe that the God had not visualized the future that such a division wd make certain ppl who are made to serve all others unhappy and bind them in perennial enslavment?/ If you dare to put a post on this topic I am ready to discuss it. //in Pudukottai, do all others roll over the left-over leaves of Brahmins believing or made to believe! – that the enjalu or echil will heal their skin diseases because the echil of Brahmins are divine?// There people belonging to different castes (as it is today) sit together and eat and they perform the ritual. No caste difference is seen. //Don’t run for cover to missionaries and Muslims. No one has paid me to raise these qns. The qnestions are between u and me: Spk as an individual and post replies.// This is what I mean by don’t think for others. Have I ever said that? Let me think and write and you revert. (If this is your reply to someone else, may I request to post them separately)//When Hindu religious leaders boast that the religion is open to criticism and reformation, how comes u r adamant that such rituals which make Brahmins holy are justified?// It is your assumption. If some stupid Karnataka minister says something, you question him .

          1. Avatar
            Kavya says:

            From ur initial mge here, I was given to understand that similar humiliating temple practice is followed in Pudukottai. Now u say different castes eating together. This is far different from made snana.

            No need to discuss Gita. Lets leave it as it will divert the scope of the article.

            If u believe such practice should be abandoned by the ppl involved and, if they don’t, the public outcry ought to be raised, then v take it u accept whole tenor of the article.

  12. Avatar
    தங்கமணி says:

    இந்த பழக்கம் தவறு. இதில் மாற்றுகருத்து எனக்கில்லை. காவ்யா அவர்கள் இதனை கண்டிப்பது சரியானதே.
    இது சாதியத்தை நிலைநிறுத்தும் வளர்க்கும் ஒரு முறை.
    இது நிறுத்தப்படவேண்டும்.

  13. Avatar
    Dr.G.Johnson says:

    Shocked to know such ignorance still prevails in India and a Minister defending such a primitive practice!
    This practice not only humiliates the non Brahmins but it also upholds casteism at its heights.
    ” Jathi irendozhiya verillai “- Awai … ” Jathigal illaiyadi pappa “- Bahrathi. Are these poets non-Hindus?
    The division of people into different castes was done by the Aryans in their divide and rule policy to enslave the rest in the name of religion and Gods created by them. Their religious philosophy has created fear among people about God and has clouded their thinking and intelligence. Periyar was an eye opener in Tamil Nadu. Thank God such stupid religious beliefs do not exist in Tamil Nadu.

  14. Avatar
    punai peyaril says:

    பெரியாரை போற்றும் சாக்கில், ஜான்சன் சந்தில் சிந்து பாட வேண்டாம். கிறிஸ்துவ மதத்திலும் வேற்றுமைகளும், வாடிகன் அராஜகம் இந்த எச்சில் இலை விட அதிகம். வாடிகன் நூலகம் பொதுவாக திறந்த போது கிறிஸ்துவ மதம் பரப்ப நடத்தப்பட்ட அராஜகம் கண்டவர்கள் தான். டிவைட் அண்ட் ரூல் என்பது கிறிஸ்துவர்களின் கண்டுபிடிப்பு… உலகம் அறியும். கண்மூடி விழித்த போது, எங்கள் கைகளில் பைபிளும் , அவர்கள் கைகளில் எங்கள் நிலமும் சென்றது… – என்ற உரைக்கும் உண்மை ஜான்சனுக்கு தெரிந்த ஒன்றே… இங்கு மதம் மாறியவர்கள் இந்து, புத்த மத தத்துவங்களை கரைத்து குடித்து பைபிளுடன் ஒப்பி மாறியவர்கள் அல்ல… வசதிகள் கிடைக்க மாறியவர்கள். பணக்கார சம்பந்தம் கிடைத்தவுடன் ஓடிப் போகும் சிலர் போல்….. பெரியாருக்கு முன்பே, பாரதியார் , பாரதிதாசன் இதுமாதிரி மூடப்பழக்கங்களை சாடியவர்கள் தான். அது சரி, தாழ்த்தப்பட்டவர் எப்போது வாடிகன் அதிபதி ஆவார் …அப்புறம் இங்கு திட்டலாம்… கிறிஸ்துவர்கள் கறுப்பர்களுக்கு செய்த கொடுமையை விட இது ரொம்ப ரொம்ப கம்மி…..

  15. Avatar
    punai peyaril says:

    இங்கு பலருக்கும், அய்யர்கள் மேல் இருப்பது ஸ்டமக் பர்னிங் வ்கையறாவாத் தான் இருக்கு… ஏன், ஜாதி இந்துக்கள் செய்யும் அராஜகங்களை எதிர்க்க வேண்டியது தானே… இல்லை தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்ற லேபிளுடன் நடக்கும் கட்டப்பஞ்சாயத்தை எதிர்க்க வேண்டியது தானே… மாட்டார்கள்.. ஏன்… ஆப்பு அடிக்கப்படும் என்று……

  16. Avatar
    dharumi says:

    //அடுத்தவர் நம்பிக்கையை விமர்சித்தல் அசிங்கமானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?//

    இல்லை. நிச்சயமாக இல்லை.

  17. Avatar
    Kalai says:

    ஹிந்து மதம் பற்றிய விமர்சனங்களில் இஸ்லாமில் இந்தப் பழக்கம் இல்லையா, கிருத்துவ மதத்தில் இந்த அநீதி இல்லையா என்ற கேள்விகள் தேவையற்றவை என்று எண்ணுகிறேன். இந்தப் பழக்கத்தை பிராமணர்களே முன்வந்து நிறுத்தியிருக்க வேண்டும். மனசாட்சியுள்ளவர்கள் அதைத்தான் செய்திருப்பார்கள். மத ஒப்பு நோக்கு தேவை தான் என்றாலும், ஒரு மதம் பற்றிய விமர்சனத்தில் மற்ற மதங்கள் பற்றிய விமர்சனம் தேவையில்லை. மற்ற மதங்களில் உள்ள மோசமான போக்குகளைக் காட்டி இப்படிப் பட்ட மூடப் பழக்கங்களை நியாய படுத்தக் கூடாது.

  18. Avatar
    kulachal mu. yoosuf says:

    ஒரு கோட்பாட்டை அதன் விளைவுகளை முன்னிறுத்தி மட்டும்தான் போற்றவோ தூற்றவோ வேண்டும். இதைச் சொன்னவர் தங்கள் ஆதிக்கத்தைக் கை விட விரும்பாதவர்களின் எதிரிகளில் யாருமோ அல்லது காவ்யாவோ அல்ல! ஆகவே, விவாதங்களின் ஒரு கோஷமாக நாம் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    காவ்யா எழுதினால், உடனே வீட்டில் வேலையெதுவுமில்லையா என்றொரு பின்னூட்டம். ஏன் காவ்யா என்ற பெயரில் ஒரு ‘புனைப் பெய’ரான் எழுத மாட்டாராமா? சரி, பெண் என்றால் வீட்டு வேலை மட்டும்தான் பார்க்க வேண்டுமா? ‘புனைப் பெய’ரான் வீட்டில் வேலை பார்க்க மாட்டாரா? புஷ்பா தங்கதுரை என்ற பெயரிலோ சுஜாதா என்ற பெயரிலோ எழுதினால் பெண்ணென்று முடிவு செய்து விடுவார்களாமா? காவ்யா எழுதினால் பெண்களையும் சுப்ரமண்யன், ஜான்சன் என்ற புனைப் பெயரில் எழுதினால் வாடிகனையும், யூசுப் எழுதினால் உடனே கஜினி, கோரி முகம்மதுக்களையும் குறிப்பிட்டுக் கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருப்பவர்கள்தான் கபில்சிபலின் இணய தள வாய்ப்பூட்டுக்கான தேவையை உருவாக்கி வைத்து விட்டார்கள். ‘இந்தியாவில் இப்படி நடந்ததே’ என்றால் ‘ஏன் பாகிஸ்தானில் நடக்கவில்லையா’ என்று நகைப்புக்குரிய ஒரு பதில் கேள்வி. தேசபக்த வேஷம் போடுவதற்கான குதர்க்க மார்க்கம். இந்தப் பதில், சட்டப் பஞ்சாயத்திற்கு மட்டுமல்ல, கட்டப் பஞ்சாயத்திற்குக் கூட ஏற்புடையதல்ல! இதற்கானப் பதிலிலிருந்து, வாடிகனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்; பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதான மறைமுகச் சித்திரிப்பு, அறிவைப் பொருள் தேடுவதற்காக வேறு துறைகளில் உபயோகிப்பவர்களிடம் சாத்தியப்படுகிறது. இடையிடையே, தலித்துக்களை அரவணைப்பதுபோல் சில வார்த்தைகள். மதத்தின் பெயரால் மறுக்கப்பட்ட அறிவை, அரசியல் சட்டம் அனுமதித்திருக்கும் நிலையில் இந்த மாய்மாலங்களுக்கெல்லாம் ஏமாந்து விடுகிற நிலையில் தலித்துகள் இல்லை. ஆதிக்க சக்தியினர் சொல்வதுபோல் கூழுக்காக மதம் மாறினாலும், வாளுக்காக மாறினாலும் இந்தியாவின் மீதான அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமை பெற்றவர்கள் கிறித்துவர்களாகவும் இஸ்லாமியர்களாகவும் மாறியிருக்கும் தங்களில் ஒரு பிரிவினர் என்பதனை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட கோட்பாடுகளைச் சார்ந்தவர்களென்பதற்காக யாரையும் அவதூறாகப் பேசும் உரிமை யாருக்கும் கிடையாது. ஒரு சமூகத்திற்குள் நிகழ்ந்த உள்முரண் விவாதங்களுக்கு பின்னூட்டமெழுதிய ஒருவர், உலகம் முழுவதிலும், அச்சமூகத்தினர் வழிகாட்டியாகக் கருதுபவரை வழிப்பறிக் கொள்ளைக்கார ரென்று கருத்துரை எழுதியிருக்கிறார். இந்தியாவின் ஒரு முதலமைச்சர் சொல்வதுபோல், அமெரிக்காவில் சொகுசாக ஒருவன் உட்கார்ந்துகொண்டு எதையோ எழுதிப் போட நம்முடைய தெருக்களில் வன்முறையாக அது வெளிப்பட்டு விடக்கூடாது. பிணங்களின்மீது அரசை நிறுவுகிற சூத்திரம் பெரியார் தேசத்தில் நிறைவேறாது. புனைப்பெயரில் எதை வேண்டு மானாலும் எழுதலாமென்று நினைப்பவர்களுக்கு கபில் சிபல் போடும் கடிவாளம் மற்றவர் களையும் பாதிக்கிறது.

    பிரச்சினையின் அடைப்படையில் விஷயங்களை அணுக எந்தவித நியாயங்களும் அருகிப் போய்விட்ட நிலையில் இவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியே கிடைக்காமல் போகிறது. ‘நியாயம் பேச வந்துட்டான் …ப்பயல்’ என்று சொல்பவர்களால் இப்படித்தான் அணுக முடியும். வேதம் படிப்பதைக் காதுகளால் கேட்டாலே கொடிய தண்டனை என்றிருந்த தேசத்தில் வேதத்தைக் கையில் தந்துப் படிக்கச் சொன்னதால்தான் கண்மூடி நாம் அதனைப் பெற்றுக் கொண்டோம். (அய்யர்கள் மேலிருப்பது ஸ்டமக் பர்னிங் வகையறாவாகத்தான் இருக்கு) உண்மையாகவே, வயிற்றெரிச்சல்தான். இப்படிப் பன்னெடுங்காலமாக, ஒரு தேசத்தையே முடக்கிப்போட்டிருந்ததாலும் இன்னமும் அதனை உருப்படியாகச் செம்மைப்படுத்த இயலாத தாலும் பழைய அருவருப்புகளே நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதாலும் உருவான வயிற் றெரிச்சல். கொடுமைகளின் வகைமாதிரிகளைச் சொன்னால் வசைமாதிரிகளால் எதிர்கொள்ளும் சிலரால் இணைய தளக் கருத்துரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ என்பது தற்போதைய எரிச்சல். ஊடகங்கள் ஆதிக்கச் சக்தியினர் கையிலிருக்கும் நிலையில் ஒடுக்கப்பட்டோரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும் வலைத் தளத்தை முடக்கிப் போடுகிற நரித்தனத்திற்கு விலை கொடுப்பவர்களும் ஒடுக்கப்பட்டோராக இருந்து விடக்கூடா தென்பதால் எரிச்சல் இன்னும் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது.

  19. Avatar
    punai peyaril says:

    அது என்ன பெரியார் தேசம்… வீரமணி தலைமையில் இருக்கும் பெரியார் டிரஸ்ட் கட்டிடங்களா… சௌதி அரேபியாவில் இந்த ஒடுக்கப் பட்டவர்களுக்கு பெரிய வேலைகள் வாங்கித் தர வேண்டியது தானே… அங்கு தீண்டாமை இதை விட உச்சம்… ஏன் பெண்களை மனிதர்களாக சௌதியில் நடத்த வேண்டியது தானே… சாரயத்தை சாமிக்கு கொடுக்கச் சொன்னது அய்யரா என்ன…? நல்ல வேளை, அய்யர்கள் முனுசாமி கோவிலுக்கு வந்த சாராய படையல் நடத்தனும் என்று போராடவில்லை…

  20. Avatar
    காவ்யா says:

    //அய்யர்கள் மேல் இருப்பது ஸ்டமக் பர்னிங்//
    மடே ஸனானாவில் சாப்பிட்டவர்கள் தமிழ்நாட்டு அய்யர்களில்லை. அதைச் சரியென்று சொன்ன ஆச்சாரியா கருநாடகத்து பிராமணர்.
    இந்து நாளிதழில் பின்னூட்டமிட்டு ஆதரித்தவர்களும், இங்கு பின்னூட்டமிட்டா கார்த்திக்கேயனும்தான் தமிழ்நாட்டவர்கள்.
    இவர்களின் மேலிருப்பது வயிற்றெரிச்சலா ? இல்லை! மனவேதனை.
    இக்கட்டுரையின் மையக்கருத்து மட ஸ்னானா கிடையாது.
    “இதை இன்றும் ஆதரிப்போரிருக்கிறாரோ ?”
    “நெஞ்சு பொறுக்கிதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்!”
    என்ற வேதனையும் ‘பார்ப்பன துவேசம்’ இப்படிப்பட்ட மதச்சடங்குகளால் வராதா என்ற கேள்வியுமே.

  21. Avatar
    punai peyaril says:

    அது சரி, தினந்தந்தி ஆரம்பிக்கப் போகும் டிவியில் ( ஹிந்து எண்டிடிவி – தினந்தந்தி வாங்கியாச்சு ) மிக மிக பிறபடுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரை தலைகளாக போட கோரிக்கை வையுங்கள்….

    1. Avatar
      காவ்யா says:

      பிசினஸ் வேறு மதம் வேறு.
      தினத்தந்தி ஆரம்பிப்பது ஒரு பிசினஸ். சமூக சேவையோ, மத சேவையோ அல்லது சடங்கோ அல்ல. எவரைப் போட்டால் பிசினஸ் மென்மேலும் இலாபத்தைத் தருமென்று பார்த்துத்தான் அவர்கள் ஆட்களைப் போடுவார்கள்.
      ஷேர்களை மார்வாடிக்கு விற்றதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தி அம்மார்வாடிகளை விரட்டியடித்து தங்கள் பாங்கை மீட்ட நாடார்கள் ஒரு ஐயங்காரைத்தான் இப்போது எம்.டியாகப்போட்டு பாங்கை நடத்தி வருகிறார்கள். அதே வேளையில் அப்பாங்கின் ஷேர்களை நாடாரல்லாத எவருக்கும் விற்க மாட்டார்கள் அது ஐயங்காராகவே இருந்தாலும்.
      அதே நேரத்தில், அப்பாங்குக்கு ஒரு மார்வாடிதான் சிறந்த எம்டி என்றால், மார்வாடியையேப் போடுவார்கள்..
      நான் குறிப்பிட்டுக்கொண்டிருப்பது, தூத்துக்குடி நாடார்களால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டுவரும் “நாடார் பாங்கு” என்று செல்லமாக அழைக்கப்படும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்கு, எம்.டியின் பெயர் ஏ கே ஜெகன்னாதன், திருச்சி ஐயங்கார்.
      சன் குழுமம் திராவிட இயக்கத்துக்குக் குடும்பத்திலிருந்து வருவது. இவ்வியக்கம் பார்ப்பன எதிர்ப்பில் வளர்ந்தவொன்று என்பது தெரிந்த்தே. இவர்கள் நடத்தும் சன் டிவி மற்ற வணிகமைப்புக்களில் வேலைபார்ப்பவர்களுள் ஏராளமான தமிழ் மற்றும் பிறவிந்திய பார்ப்பனர்கள். ஸ்பைஸ் ஜெட் விமானப்பணிப் பெண்களைப் பாருங்கள். தெரியும். குங்குமம் ஆபிசுக்குப்போய்ப் பாருங்கள்; சன் டிவி ஊழியர்களப்பாருங்கள் தெரியும். இந்திய இலாயக்கில்லையென்றால் வெள்ளைக்காரனையும் அழைத்து பிசினஸை நட்த்த்ச்சொல்வார்கள். ஸ்பைஸ் ஜெட்டுக்குத் தலைவன் ஒரு வெள்ளைக்காரன்.

      Business is business என்பது ஆங்கிலப்பழமொழி.
      முற்றிலும் உண்மையானப் பழமொழி.

  22. Avatar
    punai peyaril says:

    காவ்யா, இதைப் பண்ணச் சொல்லி அய்யர்கள் மிரட்டவில்லை.. இவர்கள் ஏன் பண்ணுகிறார்கள்… இது மனநிலை சம்பந்தப்பட்டது…. இதுவும் ஒன்று தான், நாகரீகமே தெரியாத, பணம் மட்டுமே கொண்ட ஒரு கும்பலுக்கு கொடி பிடித்து அதுவே சிறந்த மதம் என்று சொல்வதும் ஒன்று தான். கிராமங்களில் பூசாரிகள் ( அய்யர்கள் அல்ல, நம்ம ஜாதியினர்… வகையறா… ) குழந்தை பாக்கியத்திற்கு செய்யும் அட்டூழியம் தெரியுமென்று நினைக்கிறேன்….

  23. Avatar
    காவ்யா says:

    மிரட்டிச் செய்தார்களா? மிரட்டாமல் செய்தார்களா? என்பதே இங்கு கேள்வி? எப்படிச்செய்தாலும் இஃதொரு அருவருக்கத்தக்க மதச்சடங்கு பிறமக்களை இழிவுபடுத்தும் சடங்கு என்பதுதானே கட்டுரையில் சொல்ல்ப்பட்டிருக்கிறது.
    • மிரட்டிச்செய்ய்வைல்லை.
    • அனைவரும் விரும்பியே எச்சில் இலைகளின் மேல் உருண்டு எச்சிலை தெய்வீமாக்கொள்கிறார்கள்;
    • பாரம்பரியம்;
    • மற்றவர்கள் யார் கேள்வி கேட்பதற்கு?
    என்பதெல்லாமே இச்சடங்கை நியாயப்படுத்தவே என்பதே இக்கட்டுரை வைக்கும் முறையீடுகள்.

  24. Avatar
    kulachal mu. yoosuf says:

    விடிய விடிய எதையோ கேட்டும் எவளுக்கோ சித்தப்பனா எவனோ என்றானாம். புனைப்பெயரானுக்கும் நான் எழுதியதற்கும் தொடர்பே இல்லை. சௌதியில் தீண்டாமை இருக்கிறதா? அட அறிவே! கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே புரோகிதம் செய்பவர்கள்தான் புரோக்கராகவும் இருக்க முடியும். அங்கே வேலை வாங்கித் தந்து விட்டால் மிச்சமிருக்கும் இடங்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றா? தேவையில்லை. எங்கள் நாட்டில் நாங்கள் வேலை தேடிக்கொள்வோம். எல்லாருமே சௌதிக்குப் போய் விட்டால் நாடு நாறிப்போய் விடும். கடவுள் சேவையை நிறுத்தி விட்டு நகர சுத்தி செய்ய முன்வருவதாக இருந்தால் சொல்லுங்கள். சௌதியில் வேலை கிடைக்குமா என்று முயற்சிக்கிறோம். (அய்யர்கள் அல்ல, நம்ம ஜாதியினர்… வகையறா… ) எழுதுவது புனைப்பெயரான் என்று. இதில் அய்யர்கள் அல்ல, நம்ம ஜாதியினர் என்று வேறு. ஜகஜாலப் பிரதாபிகளப்பா! ஆனால், மாறி வரும் உலகத்தைக் கவனத்தில் கொள்ளாத பழைய நினைப்புடா பேராண்டி.

  25. Avatar
    punai peyaril says:

    மிச்சமிருக்கும் இடங்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றா—> ஹா…ஹா….. நோ.. இட ஒதுக்கீடு.. எக்ஸ்சப்ட் ஃபார் அவர்களின் மக்கள்…ஆல் ஆர் டர்டி அவுட்சைடர்….

  26. Avatar
    punai peyaril says:

    சௌதியை பற்றிச் சொன்னேன்… அது சரி நகர் சுத்தி தாண்டி , மைரோ சாஃட் கூகுள் வேலை என்று தோணாதா..?

    1. Avatar
      kulachal mu. yoosuf says:

      மைரோ சாஃட்? கூகுள் வேலை! சரி, பரவாயில்லை. வரிசைப்படுத்தல் தவறு. மைக்ரோ சாஃப்ட் கூகுளைத் தாண்டி நகர சுத்தி என்றிருக்க வேண்டும். நகரம் நாறிப்போனால், கூகுள் நரகமாகி விடும். புனிதமான வேலை அது. தின்பதோடு மட்டும் மனிதன் நின்று விட இயலாது அல்லவா? கூலியின் அடிப்படையில்தான் வேலை மதிப்பிடப்படுகிறது. தாங்கள் உயர்ந்த பதவியென்று மதிப்பிடுபவர்களுக்கு நிகராகக் கூலியை அதிகரித்தால் இதைத் தாண்டவே தோணாது. கூலியை அடிப்படையாகக் கொண்டு எதையும் மதிப்பிடுவது தவறு.

  27. Avatar
    Dr.G.Johnson says:

    Punai Peyaril has commented on the Vatican and the Christian converts instead of commenting on the sanctity of the Krnataka Brahmins on which the other non Brahmin devotees are rolling over with the belief that their skin diseases would be cured. I am not sure heter those who roll over in this manner are Leprosy patients.
    Let us not bring in comarative religion in this matter. All religions have their strength and weakness. No religion is perfect as it is man made. God never started any religious insitution.
    India had no religion before 5000 years. Our ancesters were simple folks praying to Gods of their own imagination. When Hinduism was spread throughout the country which veda did the ancestors of Punai Peyaril understood before becoming a Hindu. Which Veda is he reading and following now?
    Divide and rule was not brought by the Christians. India was already in shreds during the Mughals with civil wars. even our Tamil kingdoms were not united.This is history. If not for the British, India would be one country including Afganistan, Pakistan and Bangladesh under the Mughals. We should thank the British for uniting the different petty kingdoms and forming a strong India, for putting an end to sati, for giving Tamil prose in particular.If not we will be still writing on palm leaves in poetry. The first printing press was installed at Tranquebar by Ziegenbalg, a German missionary of the Lutheran Church and the first Indian Language to go in print was Tamil! He learnt Tamil, translated the New Testament in Tamil and printed it to be issued to the public.

  28. Avatar
    Dr.G.Johnson says:

    IF THE KARNATAKA BRAHMANS’ SALIVA HAS HEALING PROPERTIES TO CURE SKIN DISEASES, IT WOULD BE A BETTER IDEA IF THEY LICK THE DISEASED PARTS OF THE DEVOTEES,INSTEAD OF THEM ROLLING ON BANANA LEAVES!

  29. Avatar
    Alexander Sylvester says:

    Divide and Rule or Divide and Conquer as it’s more well known (Divide et Impera) was originally utilized by the Roman ruler Caesar (primary) and French Emperor Bonaparte. Both of them are not Christians. It was not founded by the Christians. Later centuries, it was practiced from West to the East. Infact, the great ancient Chinese Master Commander Sun Tzu utilized this strategy, and you can find it in his book called The Art Of War.

    The subject here raised by Kavya is indeed a dilemma or mind-boggling or very disturbing, especially during this present digital age that we are living today. I am a christian but, I don’t believe in Christianity however, I do believe in the Bible. Yet, strictly my origin is Indian and my dialect is Tamil. I am proud of that.

    But, I do not tolerate to see certain individuals abusing the name of Religion or God or Beliefs, to gain their own self interest personally and politically which is very obvious as mentioned by Kavya, in order to have supremacy above another fellow human. This is indirectly saying that God is like the Romans, as mentioned by Punai Peyaril, Divide and Rule. He created all the same, he created the Sun to shed his light upon all the same. Not Xtra strong for the Brahmins and Xtra low for the Dalits.

    When God’s creations are equal to saints and sinners, how in the world Humans create their own clans and saying that, their clan is more Holy … Who gave them the authority to judge another fellow human that the person is a Dalit/Untouchable/outcaste/or whatever being classified yet in the near future?

    Punai Peyaril is right to say that, christians today in India were converted from Hinduism. Little do you realize why they converted? Because of material gain?? I dont’ think so.. The main reason is because, of your theory called Divide and Rule is still practiced from THEN till NOW, by Bramins and several Religious Leaders for the benefit of them, including politically. These classified people THEN and NOW are still isolated, thus, they find Salvation through Christianity or Buddishm or even Paganism why not I don’t blame them…Not to neglect the fact that, they also, do have a soul like you and I or the Brahmins and Religious Leaders…

    Instead of whacking the bush around, come to the point, give a proper explanation to Kavya’s question?

    Today, India is still considered to be the next world super power besides China, politically and economically and (scientifically????!!!????)

    Can we achieve such a status by having such kind of idiotic primitive adamant individuals who still believes in getting cured by the saliva or etchil or eating the left over of the superior humans in the caste system????? This is indeed a disgrace to GOD who created Science or to simplify HIS creation of the world.

    “Humility; pridelessness; nonviolence; tolerance; simplicity; approaching a bona fide spiritual master; cleanliness; steadiness; self-control; renunciation of the objects of sense gratification; absence of false ego; the perception of the evil birth, death, old age and disease; detachment; freedom from entanglement with children, wife, home and the rest; even-mindedness amid pleasant and unpleasant events; constant and unalloyed devotion to Me; aspiring to live in a solitary place; detachment from the general mass of people; accepting the importance of self-realization; and philosophical search for the Absolute Truth – all these I declare to be knowledge, and besides this whatever there may be is ignorance.’

    Bhagavad Gita Chapter 13.

  30. Avatar
    paandiyan says:

    என்ன சொல்லற வருகின்றார் இந்த காவ்யா. கட்டுரை என்று ஒன்று எழுதிவிட்டு அதற்க்கு பின்னூட்டம் இடும் எல்லாரையும் வறு வறு வறுத்து எடுக்கின்றார். இது இந்த திராவிட சகவாச தோசம்!!!. ஆமாம் நான் ஒரு பிராமின் இதை எதிர்க்க எனக்கு மனமில்லை என்று சொன்னால் உங்களால் என்ன பண்ண முடியும். திராவிட தலிவரகள் என்று ஒரு கூட்டம் ஆமாம் , அப்படிதான் என்று சொல்லிய மிரட்டும் அதை இந்த பிராமின் பண்ணாத வரை இவர்களை இப்படிதான் ஒரு கூட்டம் வறு வறு என்று வறுத்து எடுக்கும்

    1. Avatar
      Kavya says:

      என்ன தமிழ் எழுதுகிறீர்கள்? சரியாக எனக்குப் புரியவில்லை.

      உங்கள் கருத்து இப்படி என நினைக்கிறேன். பார்ப்பனர்கள் (பிராமணர் என்று எவரும் கிடையாது) இச்சடங்கு சரியேயென்றால் திராவிட சகவாசிகள் என்ன செய்ய முடியும் என்பதுதானே? இங்கு ஒரு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறீர்கள் !

      இம்மாதிரிச்சடங்குகள் தமிழ்நாட்டில் உள்ள ‘பார்ப்பன் துவேச’ திராவிட சகவாசிகளை மட்டும் கேள்வி கேட்க வைக்கவில்லை. வைக்கா. இந்தியா முழுவதும் எதிர்வினைகள ஏற்படுத்தும். கருநாடகத்திலும் எதிர்ப்பு. அங்கெல்லாம் திராவிடக்குஞ்சுகள் என்ற பார்ப்பன எதிர்ப்பாளர்கள் கிடையா.

      நல்லவேளை இப்படிப்பட்டச் சடங்குகள் வட மானிலங்களில் இல்லை. கேரளாவில் நம்பூதிரிகள் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்களை கேரள மக்கள் புறந்தப்ள்ளிவிட்டு நம்பூதிர்களுக்கு எதிராக எழுந்த நாராயண குருவை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். பாரதியார் எழுதுகிறார் ஒரு கட்டுரையில்: ‘நம்பூதிரி பார்ப்ப்னன் ஒரு நீண்ட கம்பைப் பிடித்துக்கொண்டிருக்கும்போது அதன் எதிர்முனையை ஒரு தலித்து தொட்டுவிட்டால், தீட்டெண்பானாம். பரிகாரம் பண்ணுவானாம்!’ அவ்வளவு பயங்கரமாக நடந்துவந்தவர்கள் நம்பூதிர்கள். இன்று எப்படி மாறினார்கள்? ஆர் மாற்றினார்கள்? கருநாடக பார்ப்பபனரும் மாறவேண்டும்.

      பெரியார் நாத்திகராகி உங்களை எதிர்த்தார் என்பதை நீங்கள் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவிட்டீர்கள. அபார்ப்பன ஆத்திக தமிழர்களை ஈர்த்துவிட்டீர்கள்.

      கேரளாவில் முடியவில்லை. நாராயண குருவும் அய்யா வைகுண்டரும் ஆத்திகத்திலேயே இருந்து பார்ப்ப்னர்களை எதிர்கேள்விகேட்டபோது மக்கள் நம்பூதிர்கள் பக்கள் சேராமல் இவர்கள் பக்கம் வந்தார்கள்.

      பார்ப்பனர்கள் இச்சடங்கைச் சரி; எங்கள் எச்சிலை நீங்கள் ஏற்றாலே வைகுண்டம், கையாலயம் கிடைக்குமென்றால், பார்ப்பன துவேசம் வரும். அதை நீங்கள் அத்துவேசத்துக்கு மற்றவர்கள்தான் காரணம்; நாங்கள் இல்லை என்றால் கேட்பவர்கள் பைத்தியக்கார்களே. அல்லது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். உங்களுக்குத் தைரியமிருந்தால் தமிழ்நாட்டில் நடத்துங்கள். அதன் பிறகு என்ன எதிர்வினையென்று பாருங்கள். கருநாடகத்தில் பெரியார் இல்லை. எனவே பார்ப்ப்னர்கள் குதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆச்சாரியா மந்திரியாகி பார்ப்ப்னர்களின் எச்சிலை நக்கவேண்டுமென்கிறார்.

  31. Avatar
    Alexander Sylvester says:

    My Personal opinion about this topic….

    Such practices should be abolished. A Holy Place/temple/mosque/church is a place for everyone equally.

    All Holy Books teaches us the way to attain self-realization to reach God.

    ‘One who seeks God,
    Attains inner-self,
    Reaching the path to purity and love.

    One who seeks religion,
    Attains inner-ego,
    Reaching the path to impurity and hatred.’

  32. Avatar
    suvanappiriyan says:

    அருமையான பதிவுக்கு நன்றி காவ்யா!

    இது போனற மூடப் பழக்கங்களை எதிர்த்த ஒரு தலித்தை அதே கோவிலில் ரவுண்டு கட்டி அடிப்பதும் தலித்துகளே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

  33. Avatar
    ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி says:

    அற்புதமான பதிவு. இது போன்ற சடங்குகள் முறியடிக்கப்படவேண்டும்.
    //வருணக்கொள்கையை கீதையில் பிராமணன் என் தலையிலிருந்து பிறந்தான்; சூத்திரன் காலிலிருந்து, தலித்து என்னிடம் பிறக்கவேயில்லை என்றெல்லாம் சொல்லும்போது? அல்லது, இன்னின்ன ஆளுக்கு இன்னின்ன குணம் அடைப்படையில் அமையும் என்று சொல்லுமிடத்து?
    முக்காலமும் தெரிந்ததுதானே தெய்வம்? அத்தெய்வத்துக்குத் தெரியாததா எவையும் நிரந்தரமல்ல; இக்கொள்கையும் ஒரு நாள் ஒவ்வாமல் போகுமென்று? இருந்தும் ஏன் தெய்வத்தின் மேல் போட்டார்கள்? தெய்வத்தின் பெயரால் ஏற்ற தாழ்வுகளை எழுப்பினால் தாழ்வுற்ற மக்கள் மருண்டுவிடுவார்கள் என்பதனாலேயே.!!// எனது 13 வயதில், பாட்டி படிக்கும் இந்த கீதையை நான் படிக்க நேர்ந்த போது,அப்போதே எனக்கு, இது ஏதோ ஒரு கோளாறு சிந்தனையைத் துண்டுவதைப்போல் தான் இருந்தது. இன்னமும் அதன் பக்கம் செல்லாமல்.

    எங்க ஊரில் (மலேசியா) சர்ச்சைகுரிய மலாய் இலக்கிய நாவல் இண்டர்லாக் (Interlok) பாட நூலிலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது என்கிற செய்தி இன்று ஊடகங்களின் வழி. எல்லாத்தமிழர்களும் கொண்டாடும் வெற்றி இது.

    தேவையில்லை, வருங்கால சந்ததியினருக்கு தவறான வழிகாட்டுதல் என்கிற போது தகர்த்தெரிந்தே ஆக வேண்டும் சில குப்பை சமாச்சாரங்களை.

  34. Avatar
    காவ்யா says:

    “கஞ்சி குடுப்பதிற்கிலார் அதன் காரணங்களெதனவும் அறியார்” என்ற வருந்தினார் பாரதியார். அதுவே இங்கும் சரியான பதிலாக இருக்கும். பிறப்பிலிருந்தே நெடுங்காலமாக இருட்டில் வைக்கப்பட்ட ஒரு மக்கள் ஒரு காலகட்டத்தில் அந்தவிருட்டையே நேசிக்கத்தொடங்குவார்கள். அருந்த்தியர்கள் மனித மலத்தையே சுவாசம் பண்ணப்பண்ண அவர்களின் சுவாச உணர்வு மரத்துவிடுகிறது. அல்லது அதைச்சட்டை பண்ணுவதில்லை. நான் ஒருதடவை கேட்டபோது சொன்னார்கள்: ‘சரிதான் சட்டை பண்ணவேண்டுமென்றால் எப்படி இத்தொழிலைச்செய்ய முடியும்? என் தாயும் தந்தையுன் செயதார்கள்; நானும் செய்கிறேன்”
    டார்ஜான் கதையில் அவன் பிறந்த்திலிருந்தே காட்டில் விலங்குகள் தோழமையுடனே வாழ்கிறான். பெரியவனானதும் நகரத்து இழுத்து வரப்பட்டு வாழ வைக்கப்படுகிறான். நகரவாழ்க்கையில் ஒட்டமுடியாமல் தன் காட்டுக்கேச் சென்று விலங்கு நண்பர்களோடு வசிப்பதே தன்னால் முடியும் என முடிவெடுத்து ஓடுகிறான் அதைப்போல.

    நம்நாட்டில் அவ்விருட்டிலிருந்து வெளியே வந்து தம்மை இருட்டில் வைத்தவர்கள் ஆரென்றும், அப்படி தாம் அங்கு வாழ்வதில்லையின்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் முடிவெடுக்கும்போது அஃது ஆதிக்கச்சக்திகளைக் துர்கோபமடையச்செய்து கேள்வி கேட்டோர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகும் விந்தை நிகழ்வுகளை நம்வாணாளிலேயே கண்டு களித்து பேருவகை கொள்கிறோம். கருநாடக தலித்துகளாவது சேமமாக வாழட்டும். துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியாவதை விட பிராமணனின் எச்சில் இலைமேல் புரளலாம்.

    Life is precious. Hold on to it, at all events, at all costs and at all places, including Koke Subramania Swami Dewasthaanam !

  35. Avatar
    paandiyan says:

    ஈ வீ ரா என்ற கன்னட நாயிக்கர் பண்ணியது ஜாதிய வெறுப்பு. அவர் ஒன்றும் தலித் இன அபிமானி இல்லை. ஒரு பொயயை திருமா திரும்ப சொன்னால் உண்மை ஆக்கி விடாது . யாரோ ஒருவர் எதோ நம்பிக்கையில் பண்ணினால் அதை வைது எதோ உலகம இருண்டு விட்டது போன்று என்ன ஒரு குதி குதிகின்றீர்கள். நான் திரும்ப திரும்ப என் வாதம் தெளிவாகவ வைக்கின்றான் இங்க — நான் ஒரு பிராமின் நான் இதை எதிர்க்க போவது இல்லை — என்ன பண்ண முடியும் உங்களால். தலித் வாயில் மலம் திணித பொது இப்படிதான் குதிதீர்களோ? அதை விட இது 10000 மடங்கு பரவாயில்லை. ஜாதி ஹிந்துக்களிடம் அடி ஒதை மிதி வாங்கி வாங்கி இங்கு தலித்துகளுக்கு மரத்து போயி விட்டது. ஈ வீ ரா போன்றவரல் அதை சமர்தியமாக பிராமின் மேல பலியை போட்டு அவரால் அவர் கூட்டமும் இன்றுவரை கோடி கோடியாக சுருடுகின்றரர். வேறு ஜாதிகார்கள் ஏதவது பண்ணினால் ஜாதி இருக்கும் வரை இப்படிதான் இறுக்கும் என்று உயர் ஜாதி புத்தியை காட்டி சப்பை கட்டு கட்டி துடைத்துவிட்டு போவீர்களா அப்படி போங்கள் நீங்கள் இப்போ . — தமிழ்நாட்டில் நாங்கள் என்ன நடத்துவது . மலம் வாயில் திணித்து நீங்கள் தான் அழகு பார்கின்றீகள அது போதாதா என்ன ??

  36. Avatar
    காவ்யா says:

    //நான் ஒரு பிராமின் நான் இதை எதிர்க்க போவது இல்லை — என்ன பண்ண முடியும் உங்களால்//

    You are not a Brahmin. There s no such being. U r lying.
    A Brahmin needs certain qualifications of character according to Hindu religion. What r urs?

    Saliva and feces are both human excreta. Saliva is more dangerous as it contains life killing germs like TB bacili.

    If some dalits were forced to eat the feces of some caste Hindus in a TN village, did all the caste Hindus or the members of the particular community support the evil act?

    If anyone did, pl cite here.

    On the contrary, u r supporting the ritual questioned in the article here. U r saying thereby that the saliva of ur caste ppl has holy powers.

    U shd not support the ritual. If u support, as I have already said, u r making urself as a hate figure among ur own ppl as I am sure that none of them will b behind u except a crazy few like Karthikeyan and the commenters in the The Hindu.

    E.V.R is not in picture now. With or w/o him, such rituals will make the community of Brahmins, in Karnataka, worthy of social condemnation; and if the TN brahmins support it, they will also join the co to b condemned.

    U may just know these points and address them fair and square instead of trying to evade them by dragging the name of the man EVR.

    If u hav difficulty with understanding English, I shall put all in Tamil. But it appears u hav difficulty in Tamil also :-p

  37. Avatar
    paandiyan says:

    You are not authorized here to conclude whether I am a Brahmin or not. First understand your limits then publish comments. Who has given power to you to conclude whether I am a Brahmin or not???
    உனக்கு ஆங்கிலம் சரியாக தெரியுமா, உன் தமிழ் சரியில்லை எனபது எல்லாம் முதலில் நிறுத்துங்கள். இங்க யாரும் புலவர் போட்டி நடத்தவில்லை. என் கருத்துக்கு உங்களால் பதில் எழுத முடிகின்றது , உங்கள் கருத்துக்கு என்னால் பதில் எழுத முடிகின்றது. அது போதும் இங்கு . முதலில் ஒரு கட்டுரை எழுதுவதற்கு என்ன பயிற்சி என்பதை கற்று கொண்டு வாருங்கள் . எல்லா பின்னோடதிற்க்கும் ஒரு பதில் போட்டுவிட்டால் நீங்கள் எல்லாம் தெரிந்த மேதாவிய என்ன ? என் முன்னோர்கள் பண்ணியது எல்லாம் சரிதான் . அந்த கருத்தை, அந்த நம்பிகையை உங்களை போல அரைகுறை எழுத்தாளர்களிடம் விவாதம் பண்ணுவத இணங்கு வீண் என்பது என் எண்ணம்

    1. Avatar
      காவ்யா says:

      This s ur statement: /நான் ஒரு பிராமின் நான் இதை எதிர்க்க போவது இல்லை — என்ன பண்ண முடியும் உங்களால்//

      This will make anyone conclude as I have done.

  38. Avatar
    காவ்யா says:

    //உனக்கு ஆங்கிலம் சரியாக தெரியுமா, உன் தமிழ் சரியில்லை எனபது எல்லாம் முதலில் நிறுத்துங்கள். இங்க யாரும் புலவர் போட்டி நடத்தவில்லை//

    Ur mistakes in Tamil appear to b deliberate. When u can write neatly now, u have so far written in Tamil in mocking spell errors. There s an obvious intention to nettle. Who do u desire to nettle I wonder.

    I am not a Tamil fanatic. So, I can’t b nettled. But can surmise the clever intention to nettle.

  39. Avatar
    காவ்யா says:

    //என் முன்னோர்கள் பண்ணியது எல்லாம் சரிதான் . அந்த கருத்தை, அந்த நம்பிகையை உங்களை போல அரைகுறை எழுத்தாளர்களிடம் விவாதம் பண்ணுவத இணங்கு வீண் என்பது என் எண்ணம் //

    முன்னோர்கள்? அப்படியென்றால் என் முடிபு சரிதானே?
    போகட்டும்.
    முன்னோர்கள் செய்ததெல்லாம் சரியென்று இத்தலைமுறையில் சொல்லும் நபர்கள் எத்தனை பேர் என்று எண்ணிவிடலாம். தமிழ். இந்து காமின் எழுதும் உங்கள் ஜாதிக்காரகள் கூட முன்னோர்கள் செய்ததெல்லாம் சரியென்று சொல்லவில்லை. இராமானுஜர் சொல்லவில்லை. பாரதியார் சொல்லவில்லை. வ வே சு சொல்லவில்லை. இராஜாஜி சொல்லவில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
    அவர்கள் சொன்னதெல்லாம், வாழ்க்கை நிறைகளும் குறைகளும் கொண்டதுவே. நாமெல்லாரும் வெறும் மனிதர்களே. நாம் செய்தவையென்றும் சாசுவதமல்ல. தெரிந்தே நமக்குள்ளேயே சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களின் தீச்செயல்களைக கண்டு களையெடுப்பது நன்று. முன்னோர்கள் ஒரு காலத்தில் செய்தவை அக்காலகட்டத்தில் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் கடவுளர் இல்லை அவர்களுக்கு இக்கால கட்டத்தில் எப்படி அவர்களின் செயலகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் செய்தவை பொனஃபடேயே (bona fide) என்றாலும், இன்றைய பார்வையில் மல ஃபடையே (mala fide) ஆக மாறலாம். அப்படி அவர்கள் செய்தவை நமக்குச் சரியில்லையென்றால், அவற்றை மறுத்து நீக்குவதே பண்புடையோர் செயல். Lest one good custom should corrupt the world, ring out the old and ring in the new!
    இராமானுஜர் முன்னோர்கள் செய்தவையை மாற்றக்கூடாதென்றால், மத்த்தில் சீர்திருத்தங்கள் பண்ணியிருக்க முடியுமா? ஆனால் அப்போது அவரிடம் உங்களைப்போலவே சொன்னார்கள்: // முன்னோர்கள் பண்ணியது எல்லாம் சரிதான்// அவர் கேட்கவில்லை. எ.கா: திருமந்திர ரகசியத்தை மக்களுக்குச் சொல்லக்கூடாதென்பதே. அந்த உறுதியை அவரிடமிருந்து வாங்கிய பின்னரே அவருக்கு திருவிலச்சனை கொடுக்கப்பட்ட்து. ஆனால் வாங்கிய உடனே ஊர் நடுவில் வந்து ஒரு கோபுரத்தின் மேலேறி மக்களைத்திரட்டி அதைச்சொல்லவில்லையா? உங்களைப்போன்றோர் கடுங்கோபத்துடன் ‘இப்படிச்செய்தாய். இறைப்பழி உம்மீது” என்றார்கள். அதற்கு, ‘எனக்கு அப்பழி வந்தால் வரட்டும். எனக்கு வேண்டியது மக்களைன்வரும் எவ்வித பேதமில்லாமல்’ என்றாரில்லையா?
    முன்னோர்கள் பெண்களைக்கட்டிப் போட்டு வளர்த்தார்கள். இரு தலைமுறைகளுக்கு முன்பு கூட பெண்களை அன்னாட்களில் அவர்கள் வீட்டுத் திண்ணையில்தான் வாழவேண்டுமென்றார்கள். அங்கேயே உணவு கொடுக்கப்படும். வீட்டிலுள்ள பொருட்களைத்தொட்டாலோ, தீட்டாகி விடும். இதற்காகவே திண்ணைகள் கட்டப்பட்டன. திருவல்லிக்கேணியில் இன்றும் அத்திண்ணைகள் இருக்கின்றன. இதிலிருந்தே ‘வீட்டு விலக்கு’ என்ற அவச்சொல் பிறந்த்து. இப்போதும் அப்படியா? எப்படி மாற்றம் வந்தது? Most hygienic sanitary napkins are available in market. முன்னோர்கள் பிடித்த முயலுக்கு மூணே கால் என்றிருந்தால் இம்மாற்றம் வந்திருக்குமா ? அந்த நாட்களில் பெண்கள் வீட்டுக்குள்ளேதான் இப்போது வாழ்கிறார்கள்?
    கல்லூரிக்கு அனுப்பீர்களா ? வேலைக்கு அனுப்பினீர்களா ? இல்லை. என்ன சொன்னீர்கள்? பதிஸம் யோக ஸீலபம் என்கிறபடியே பர்த்தாவாகிற கொழுகொம்பையொழிய ஜீவியாமையும் பெண்ணுக்கு என்று நம்பினார்கள்.
    இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுக்களே. மற்ற ஜாதிக்கார்ர்களும் செய்தார்கள். ஆனால், நீங்கள் முன்னோர்கள் என்று பீற்றியதாலேயே பின்னூட்டங்கள் அவசியமானதாயின.

    I dont agree with the view that the essayist should keep himself aloof watching the show. The essay that has been put up here, is just a documentary which can be reacted by anyone, including the writer.

  40. Avatar
    kulachal mu. yoosuf says:

    புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்குச் சர்ச்சை தேவைதான். ஆனால், அது சண்டையாக மாறிவிடக் கூடாது. (திருவிளையாடல் என்ற திரைப்படத்திற்கு உதடசைத்தவர், முத்துராமன்.) சௌதியில் திரைப்படம் கிடையாதா? அங்குள்ள முத்துராமன் இதற்கு உதடசைக்கவில்லையா? என்று தயவுசெய்து பின்னூட்டம் போட்டு விடாதீர்கள். ஏற்கனவே நான் நொந்துபோயிருக்கிறேன்.

    காவ்யா,

    மனித மலத்தை சுவாசிக்க சுவாசிக்க அவர்களது சுவாச உணர்வுகள் மரத்துப்போகின்றன என்பதைத் தாங்கள் சுட்டிக்காட்டிய பிறகு, எதைச் சொல்லி மறுக்க இயலும்? ஆகவே, விவாதத்தை திசை திருப்பும் முயற்சி நடந்தேறு கிறது. தனிப்பட்ட விமர்சனங்களைக் கண்டுகொள்ளவே வேண்டாம். எங்கெங்கு காணினும் சக்தியடா என்பதைப் புரிய வையுங்கள்.

  41. Avatar
    paandiyan says:

    நீங்கள் சொன்ன எல்லாம இடையில் வந்தவைதான் . வர்ணம் என்பவைய மாற கூடியவை தான் . என் முன்னோர்கள் என்று சொன்னவுடன் நீங்கள் ஏன் இடையில் வந்தவையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதற்க்கு முன்னால் என்று ஏன் அறாய உங்கள் மனம் தோன்றவில்லை . எட்சகளை என்ற உடன் எட்சகளை நாயா ? ஏன் எட்சகளை சிங்கம், புலி என்று நினைக்க கூடாது என்ற ஜோக் தான் ஜாபகம் வருகின்றது. எல்லாம் தெரிந்தவனிடம் வாதம் பண்ணலாம், ஒன்றும் தெரியடவனிடம் கூட வாதம் பண்ணலாம் ஆனால் அறைகுறையிடம் மாட்டினால் இப்படிதான் என்பதற்கு நீங்கள் ஒரு சான்று . எங்கெங்கு காணினும் சக்தியடா என்று எல்லாம் வரும்போது சும்மாவா இறுக்க போகின்றீர்கள் ? ம்ம் கேளபுங்கள் பட்டையை !!!

  42. Avatar
    kulachal mu. yoosuf says:

    பாண்டியா,
    மலத்தை சுவாசித்து நுண்ணுணர்வுகள் மரத்துப்போவதுபோல்,
    மற்றவர்களுக்கு அறிவு கிடையாது அவர்களெல்லாம் அரை குறைகளென்ற எண்ணம் வலுப்பெறவும் பழக்க தோஷம்தான் காரணம். புத்திசாலியாக மாற இதை விட சிறந்த மார்க்கம் வேறில்லை. இதை நான் தங்களுடைய குற்றமாகக் கருத மாட்டேன். பலே!

  43. Avatar
    paandiyan says:

    நீங்கள் என்னை குற்றமாக கருதினாலும் நான் என்னை மாற்றி கொள்ள போவது இல்லை ஏன் என்றால் நான் எனது சிதானநத்தை வரலாறை மிக தெளிவாக புரிந்து கொண்டவன். இங்க கட்டுரை எழுதியவற பின்னூட்டத்தில் வசதியாக வைத்தியநாத அய்யர் போன்றவர்களை இருட்டடிப்பு பண்ணிவிட்டார் தனக்கு வசதியாக . நீங்கள் என்னை குறை சொல்லும் முன்னால் சூடானில் என்ன என்ன அசிங்கமாக ஆபசமாக மனித குலமா வெட்கி தலை குணித்த வரலாறு கொஞ்சம் படியங்கள். அவர்கள் யார் என்பதை நான் இங்க “உங்களுக்காக” பதிவு பண்ண தேவை இல்லை என்று நேனைக்கரன் . ஊருக்கு உபதேசம் பண்ணுவர்கள் தங்கள் முதுகை பார்த்து கொள்ளட்டும் முதலில்

  44. Avatar
    paandiyan says:

    மலத்தை சுவாசித்து நுண்ணுணர்வுகள் மரத்துப்போவதுபோல் என்பது எல்லாம் வார்த்தை ஜாலம் இல்லமால் என்னவாம் . சிலியில் ஏற்பட்ட பூகம்பம் அதில் மாட்டி கொண்டவர்களின் மன நிலை என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட்ட கட்டுரைகள் நம் முன்ன கொட்டிகிடக்கும் போது இந்த மாத்ரி வார்த்தை ஜாலம் வைத்து ஊரை எமாரூபவரை என்னவென்று சொல்வது

  45. Avatar
    suvanappiriyan says:

    பாண்டியன்!

    //சிலியில் ஏற்பட்ட பூகம்பம் அதில் மாட்டி கொண்டவர்களின் மன நிலை என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட்ட கட்டுரைகள் நம் முன்ன கொட்டிகிடக்கும் போது இந்த மாத்ரி வார்த்தை ஜாலம் வைத்து ஊரை எமாரூபவரை என்னவென்று சொல்வது//

    ஒன்றும் சொல்ல வேண்டாம்! சிலி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய அந்நாட்டு அரசாங்கம் உண்டு. அல்லது ஐக்கிய நாடுகள் சபை உண்டு. ஆனால் பிராமணரின் எச்சில் இலையில் புரளும் அந்த தலித்களுக்கும் மற்றும் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் கொடுமைகளுக்கும் நமது நாட்டில் அந்த மக்களுக்கு இன்று வரை ஒரு தீர்வை நமது அரசால் கொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் என்ன? இப்படி ஒரு பழக்கம் இந்த மக்கள் மனத்திலே வேரூன்ற மூல காரணம் எது? என்று சிந்தித்து அந்த மக்களின் விடிவுக்கு ஒரு வழியை கண்டுபிடிக்க பாருங்கள். அதன்பிறகு சிலிக்கோ, பிலிப்பைனுக்கோ செல்லலாம்.

    1. Avatar
      paandiyan says:

      அதையும் நீங்கள பண்ணுங்கள் . வார்த்தை ஜாலம் போட்டு அப்பாவிகளை ஏமாற்ற நீங்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் உதாரணம் காட்டாலம், வரலாறை திரிக்கலம், மறைக்கலாம், பழியை யாரிடமாவது போடலாம் , அனால் உங்கள் வார்த்தை ஜாலம் தவறு என்று scientific research க்கு நில சரிவு ஆராட்சியை யை வைத்து உதாரணம் சுட்டி காட்டினால் எரிச்சல் வருகின்றது . இதை எல்லாம் நன்றாகவ பார்த்தவர்கள் நாங்கள் …

  46. Avatar
    punai peyaril says:

    பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் –> இதற்கும் அய்யர்களுக்கும் என்ன சம்பந்தம்..? மிருகங்களின் மலக்குடலை, குடல் ரோஸ்ட் என்றும், மூளையை வறுத்தும் சாப்பிடுபவர்கள் இது பற்றி பேசுவது வேடிக்கையானது. எச்சில் இலை புரள்வது மனநிலை நிலைப்பாடே.. அங்கு எந்த அய்யரும் அரிவாளையும், ஏ.கே 47 ம் வைத்து மிரட்டவில்லை… பின் ஏன் இந்த நிலை …? உடம்பில் எச்சில் தடவினாலும், சாட்டை கொண்டு ரத்தம் வருமளவு விளாறினாலும், குருடர்கள் பார்க்கிறார்கள்.. முடவர்கள் நடக்கிறார்கள் என்பதற்கு மெரினா பீச்சில் காற்றாட கூடுவதும் மனநிலை சம்பந்தப்பட்டது. ஆனால், மதம் மாறினால் மனிதனாக நடத்தப்படுவாய் என்பவர்கள், கருப்பாயி என்ற நூர்ஜகான் நாவலைப் படியுங்கள். அது சரி, திண்ணியத்திற்கு காரணமான ஜாதியுடனேயே, தலித் தலைவர்கள் கூட்டு வைத்து அய்யர் ஒழிக என்ப்து என்ன மனநிலை…?

    1. Avatar
      paandiyan says:

      அதுதான வியாபாரம் . வியாபாரம் நஷ்டமாக அவர்கள் என்ன முட்டாள்கள என்ன ? ஐயோ மொழி அழிய போகின்றது என்று சொல்லித்தன “சுருட்டு” வியாபரம் ஆரம்பித்தார்கள் . தமிழ் க்கும் பிராமின் க்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு மாயை உண்டு பண்ணினார்கள் . அவர்களின் சீர்திருத்தம் பற்றி , அவர்கள் கல்வி பற்றி புரட்டு புனைதார்கள். சாதியை ஒதுக்கிவைத்துவிட்டு வரலாற்றை ஆராய முடியாது என்ற திமிர் எதற்கு உயர் ஜாதி வியாபாரிகளிடம் வேரூன்றி இருகின்றது ?

  47. Avatar
    kulachal mu. yoosuf says:

    மாற்றங்களென்பது அறிவு தொடர்பானவை. நீங்கள் மாறாமலேயே இருப்பேன் என்பது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை. நீங்களே சொல்வதுபோல் சித்தாந்தத்தை நன்கு புரிந்திருப்பதால்தான் அப்படியிருக்கிறீர்கள் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    தமிழுக்கும் பிராமணர்களுக்கும் சம்பந்தமில்லை என்ற பொய்களை எல்லாம் நீங்கள் புனராக்கம் செய்ய விரும்புகிறீர்கள். அவர்கள் தமிழுக்காற் றிய தொண்டுகளை உலகம் அறியும். புனைப்பெயரானுக்கும் பாண்டியனுக்கும் குறிப்பிட்ட சாதியினர்மீது ஏதாவது கோபமிருந்தால் தனியாகக் கட்டுரையொன்றை எழுதலாம்.

    பிராமணீயத்திற்கு நீரூற்றி வளர்ப்பவர்கள் இப்போது பிராமணர்கள் அல்ல! ஆகவே, திண்ணியத்திலும் கீரிப்பட்டியிலும் பாப்பாரப்பட்டியிலும் அவர்கள் நேரடியாகவோ ஏகே 47 உடனோ இல்லை. இதெல்லாம் ஏற்கனவே நாம் பேசிக்கொண்ட வாசனை தொடர்பான விஷயங்கள். மற்றபடி சிலி, பூகம்பம், சுனாமி இயற்கைப் பேரிடர் எல்லாம் இங்கே எதற்காகவோ? ஒன்றும் அவசரமில்லை. சற்று நிதானமாக யோசித்துப் பின்னூட்டம் எழுதலாம். எங்கே போய் விடப் போகிறோம்.

  48. Avatar
    kulachal mu. yoosuf says:

    மிகக் குறைவான சதவிகிதத்தைத் தவிர தமிழகத்தில் பெரும் பாலானோரும் தாங்கள் சொல்வதுபோல் மிருகங்களின் மலக்குடலை ரோஸ்ட் செய்து சாப்பிடுபவர்கள்தான். இதில் தாங்கள் குறைகாண விரும்பும் மக்கள் இதனை அபூர்வமாகவே சாப்பிடுகிறார்கள். அதிருக்கட்டும். சாப்பிட்டுப் பார்த்திருக் கிறீர்களா? சுவையோ சுவை. ஹார்லிக்ஸ்போல் நான் ‘அப்பிடியே சாப்டுவேன்’ என்றெல்லாம் சொல்ல முடியாது. கைப்பக்குவம் கிடைக்கவேண்டும்.

  49. Avatar
    paandiyan says:

    சுவையோ சுவை என்று நீங்கள் சொல்வது போல இந்த கட்டுரையில் உள்ள செய்தி அதன் தொடர்புடயோரும் நம்பிக்கை என்று சொல்லி இருகின்றார்கள் ஆனால் அதை மட்டும் உங்கள் மனம் ஏற்க மறுக்கின்றது . மனித மனங்களை ரம்பம் போட்டு அறுத்து வேடிக்கை பார்ப்பதில் ஒரு சில மிருகங்குளுக்கு அப்படி ஒரு சந்தோசம் …

    1. Avatar
      காவ்யா says:

      வெறும் நம்பிக்கை; மனநிலை என்று சொல்லிவிட்டால் சமூகத்தில் மக்களைச் சுரண்டுபவர்கள் பெருகி விடுவார்கள். எந்த அயோக்கித்தனத்தும் அது வழிகோலும். எல்லாரும் இலகுவாக பாமர மக்களை ஏமாற்றி ஆதாயம் பெறலாம். நம்பிக்கை என்று சொல்லித்தானே போலிச்சாமியார்கள் பெருகி விட்டார்கள்?
      எனவேதான் இப்படிப்பட்ட நம்பிக்கையென்ற போர்வையில் நடப்பவை பொதுமன்றத்தில் வைக்கப்பட்டு விமர்சிக்கப்படுகின்றன.
      பிராமணனின் எச்சில் இலையில் மேல் மற்றவர்கள் புரளவேண்டும் அதுதான் சுப்பிரமணிய சுவாமிக்குப் பிடிக்குமென்பது வெறும் நம்பிக்கையன்று. ஒரு பித்தலாட்டம். அதே விடயத்தை கோயில்ல்லா வேறிடத்தில் பண்ணினால் என்ன நடக்கும்? உதை கிடைக்கும்.
      எந்த்தெயவம் சொன்னது ஒரு தனிக்கூட்டமே தெய்வீகத்தன்மை உடையது? அக்கூட்ட்த்தினரின் எச்சிலே புனிதமானது; அவ்வெச்சிலில் புரண்டெழுந்தால் புண்ணியம் என்று? கிடையவே கிடையாது. அப்படிச் சொல்லி மக்களை நம்ப வைப்பது பித்தலாட்டம்.
      கோயில், சாமி குத்தம் என்ற போர்வையை விரித்து தங்கள் சாதி மனிதர்கள் இறைவனுக்கு ஒப்பாக நடத்தப்பட வேண்டும் மற்றவர்களால் என்ற போலியான நம்பிக்கையை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே இத்தகைய சாதீயச்சடங்குகள்.
      அருள் வாக்கு, காவடி, முடி காணிக்கை என்பதெல்லாம் நம்பிக்கைகள். இவை விமர்சிக்கவில்லை. அவை ஒரு குறிப்பிட்ட சாதியின் மேன்மைக்காக ஏற்படுத்தப்படவில்லை.
      மட ஸ்னானா பார்ப்பனர்களைச் சமூகத்தில் இறைவனுக்கு நிகராக வைக்கவே நடத்தப்பட்ட, நடத்தப்படும் சதியாகும். அதை நம்பிக்கை என்பதும், பிற மக்கள் விரும்பிச்செய்கிறார்கள் என்பதும், பாரம்பரியம் என்பதும் மகா அயோக்கித்தனங்களாகும். You have done it for hundreds of years. But you can’t cheat all the people all the time.
      Instead of facing the issue directly, he is justifying it by directing attention to secular incidents like panchayat polls and atrocities on dalits by caste Hindus. You do it by showing God; they do it by showing their muscle and money power.
      If I have muscle and money power, I can give a strong attack on caste hindus; and they will mind the consequences next time.
      But how can I stop you when you point out Subramania Swamy. I fear to hurt you because you are equal to Subramania Swamy ! And, I should add, I have to lick your salivia because it is holy water that is blessed by Subramania Swamy !!

  50. Avatar
    paandiyan says:

    வெறும் நம்பிக்கை; மனநிலை என்று சொல்லிவிட்டாலும் நான் விடமாட்டன் அப்பறோம் நான் எழுதிய தத்து பித்து கட்டுரை என்னாவது என்ற வெறி பாவம் உங்களை துரதுகின்றது . என்னுடைய நம்பிகையை கேள்வி கேக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை அதற்கு உங்களை இங்கு யாரும் nominate பண்ணவும் இல்லை. யாரோ ஒரு சைவம் சாப்பிடுபவர்கள் பாய் கடையில் போயி அடித்து உடைக்க அதிகாரம் இல்லயோ அதைபோன்றது தான் உங்களுக்கும் இங்க . வீணாக உளறிக்கொண்டு இருக்காதீர்கள்

    1. Avatar
      காவ்யா says:

      நம்பிக்கை உங்களுக்குள்ளேயே இருக்கவேண்டும்; உங்கள் உறவினர்களுக்குச் சொல்லி அவர்களை நீங்கள் விரும்பியபடி நம்பச்செய்யலாம். பல குடும்பங்கள் தற்கொலை ஒரே நேரத்தில் பண்ணி விடுவதாக நாம் படிக்கிறோம். எவரும் கேட்க மாட்டார்கள்.

      ஆனால், ஒரு சமூக மக்கள் – அவர்களெல்லாம் உங்கள் உறவினர்கள் இல்லை – மீது திணிக்கப்பட்டு, அல்லது திறமையாக “நம்பாவிட்டால் சாமிக்குத்தம்” எனப்பயமுறுத்திச் செய்வது குற்றம்! அதை எவரும் விமர்சிக்கலாம். விமர்சிக்க வேண்டும். இண்டியானா ஜோன்ஸ் வரலாற்றில் ஆயிரக்கணக்காணோர் ஒரே நேரத்தில் தற்கொலை பண்ணிக் கொண்டார்கள். ஜப்பானிலும் ஒரு சாமியார் மக்களை இப்படிப்பண்ணி விட்டான்.

      இதெல்லாம் ‘கல்ட்’. பயங்கரமான கல்டுகள்.
      மட் ஸ்னானாவில நடப்பதை இந்து சமூகம் ஏற்கிறதா ? இந்து மதம் சொன்னதா ? தெளிவுபடுத்தவும்.

      காலம் காலமாக ஒரு செயல் நடந்தால் ‘என்று வந்தது என்று சொல்லமுடியாத தொன்மை’ என்று பீலா விட முடியாது. அச்செயல் எப்படிப்பட்டது? என்பதுதான் பார்க்கவேண்டும்.
      உடன் கட்டையேறுதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் நடந்தேறியது. தொன்மை பாரம்பரியம் என்று உங்கள் மனைவிமார்களை மிரட்டி உடன்கட்டையேறச்செய்ய முடியுமா ? தொன்மையைக்காட்டி மிரட்ட முடியாது.

      1. Avatar
        paandiyan says:

        நம்பிக்கை உங்களுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்று யாரு சொன்னது. இதற்கு உங்களுக்கு யாரும் பட்டா போட்டு கொடுத்து இருகின்றார்களா என்ன ? சீர்திருத்த விசயங்களையும், நம்பிக்கையும் போட்டு குழப்பி நான் எழுதிய கட்டுரைக்கு யாரும் விமர்சனம் பண்ண விடமாட்டன் என்று வரிந்து கட்டி கொண்டு வரவது ஆகா என்ன ஒரு அழகு

  51. Avatar
    punai peyaril says:

    சுப்ரமணிய சாமி, திடத்தோள், தினவெடுத்த தோள், பாரம்பரிய பீத்தல், புறநானூறு, அது இது என்று பினாத்துபவர்களை விட இந்த தேசத்தில் மிகப் பெரிய ஊழலை வெளிகொண்டு வந்தவர்.. மத நம்பிக்கை என்ற பெயரில், கடத்தல், கொள்ளை, ஹவாலா என்று மக்கள் இருக்கையில் தனிமனிதனாக நல் புரட்சி செய்தவர். அவர் பெயரை தினம் 3 முறையாவது சொன்னால் உங்களுக்கு அவர் போல அர்த்தமுள்ள வீரம் வரும். சுப்ரமணிய சாமி போல என்பது நிச்சயம் விருது தான்…

  52. Avatar
    kulachal mu. yoosuf says:

    சைவம் x பாய்! அல்ல, சகோதரா, சைவம் x பெரும்பான்மை யினர் என்றிருக்க வேண்டும்.ஏற்கனவே சொன்னதுபோல் அவர் களை வம்பிழுத்துப் பேசியே பழக்கப்பட்டு விட்டீர்கள். மாறவே மாட்டேன் என்று வேறு சொல்லி விட்டீர்கள்.

    அப்புறம், சிறுதெய்வங்களுக்குக் கடா பலி கொடுப்பது நம்பிக்கையாக இருந்தாலும் அதன் விளைவு மக்களுக்கு மாமிச உணவு கிடைக்கிறதென்ற நல்ல விஷயம். விளைவு களை முன்னிறுத்திதான் நம்பிக்கைகள் மதிப்பிடப்பட வேண்டும். வீட்டின் முன் கோலமிடுவது நம்பிக்கையாக இருந்தாலும் எந்த நன்மையுமில்லை; தீமையுமில்லை. எறும்பு களுக்கு உணவு கிடைக்குமா? சரி, எறும்புகளுக்கு உணவு கிடைக்கும். ஆகவே, அதில் மற்றவர்களது தலையீடென்பது அத்துமீறல். கலைமகளுக்குப் பூஜை செய்து சுண்டல் வழங்குவ தென்பது நம்பிக்கை. இதில் மற்றவர்கள் தலையீடு அத்து மீறல். நான் சொல்ல வேண்டாம்; இதுபோல் எத்தனையோ சடங்குகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.

    ஆனால், யாகம் வளர்த்தி அதில் பட்டுப்புடவைகளைப் போட்டு எரிப்பது; கடவுள் விக்ரகங்களுக்குப் பாலாபிஷேகம் செய்வது; குழிமாற்றுத் திருவிழா; மட ஸ்நானா போன்றவை நம்பிக்கைகளாக இருந்தாலும் ….. ம்… என்ன சொல்வது? நீங்கள் வேறு மாறவே மாட்டேன் என்று சொல்லி விட்டீர்கள்.

    1. Avatar
      paandiyan says:

      நான் சூடான் என்று சொன்னவுடன் அங்கு எல்லாம் போகாமல் திரும்ப திரும்ப ஒரு தூண்டில் எண்ணத்துடன் வம்பு இழுப்பது எனக்கு புரிகின்றது . என்ன செய்வது ஒரு பெரும் கூட்டத்தை அல்லவா அப்படி மயக்கி வைத்து இருகின்றரீர்கள் . அதவும் ஜனநாயக நாடு ஒட்டு பவர் என்று எல்லாம் வேறு இருகின்றது . இந்த நம்பிக்கை விஷத்தில் நீங்கள் எல்லாம் குதி குதித்து வருவது ஆகா என்ன ஒரு பாசம் . புல்லரிகின்றது . மனநிலை பிரன்றவர்களை கூட வன்முறை மூலம் கட்டி வைத்து அழகு பார்க்கும் கூட்டம் அல்லவா. யாகம் வேள்வி எல்லாம் உங்களை போன்ற அரை குறை அறிவு உடையோரிடம் விவாதிக்க கூடிய விஷயம் இல்லை . கல்லு எறிதல் பற்றி வேணுமானால் பேசலாம் .

      1. Avatar
        காவ்யா says:

        யாகங்களைப்பற்றி விளக்க வேண்டாம். தீக்குள் ஏன் பட்டுச்சேலையைப் போடுகிறீர்கள்? யமுனை நதியில் ஏன் குடம்குட்மாக பாலைக் கொட்டுகிறீர்கள்? ஏழைப்பெண்களுக்கு அந்தச்சேலைகளையும் பால்கிடைக்கா குழந்தைகளுக்கு அப்பாலையும் கொடுக்கலாமே ?

  53. Avatar
    paandiyan says:

    தீக்குள் பட்டுசேலை போடுவது பற்றி என்னால் இங்கு விளக்க முடியும் . 1960 களின் கழக தீக்குளிப்பு அதற்க்கு உதவி என்று ஊகிவிப்பு என்பதயும் பகுத்தறிவுடன் விளக்க முடியும். சமூக நீதி என்று ஒரு செர்டிபிக்டேயை ஹரிக்ரிஷ்ணன் சுர்ஜித் என்ற ஒரு நபர் ரொம்ப நாள் வைத்து இருந்தார் அவரிடம் போயி ஒரு ஜான்ஸ்தனம் வாங்கினால் அவர் அந்த செர்டிபிக்டேயை தருவார். அதுபோல யாரு தமிழன் என்ற ஒரு செர்டிபிக்டேயை கழகம் படேன்ட் போல வைது இருகின்றது. தமிழ்நாட்டில் பிறந்த காங்கிரஸ் இல் இருக்கும் நபர் கூட அந்த செர்டிபிகடே யை வாங்க முடியாது. அதை போன்று உங்களுக்கு ஏதும் இருகின்றத என்ன ?? இந்த வெட்டி வேலை பார்க்கும் நேரத்தில் நீங்கள் கூட ஒரு எழை மாணவனுக்கு கல்வி புகட்டலாம் ?? பண்ணுகின்றீர்கள என்ன ? ஒரு கட்டுரை அதற்க்கு பல பல வியாக்கியானம் எதில் ஆரம்பிதூம் என்று கூட ஒரு தெளிவு இல்லை ஆனால் பல பல யுகம் கடந்தும் கூட புரியாத இன்னும் கற்றுகொண்டு இருகின்ற ஒரு சில விசயங்களை ஒரு பின்னூடத்தில் போட்டுவிட்டால் எல்லாம் தெரிந்த ஒரு இலகாரம் . நமக்கு தெரியாத ஒரு விஷயமா என்ன என்று ஒரு நக்கல்….

  54. Avatar
    vedamgopal says:

    இது நிச்சயமாக கண்டிக்கதக்க அநாகரிகமான தடைசெய்யபடவேண்டிய மத சடங்கே. இதற்கான சான்றுகள் ஹிந்துமத சாஸ்திரங்களிலும், ஆகமங்களிலும் நிச்சயம் கிடையாது. இதுபோன்று அநாகரீகமான மூடநம்பிக்கையான பல சடங்குகள் எல்லா மதங்களிலும் ஒரு சில குழுவினரால் நடைமுறைசெய்ப்பட்டு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. உதாரணத்திற்கு (ஊர் எல்லையை கன்னி பெண் அம்மணமாக வலம் வந்தால் மழைவரும் – ஏழ்மையை போக்க மொழி விருந்து வைத்து எச்சில் இலையின் அடியில் பணம் வைத்தல் , மண்சோறு சாப்பிடுதல் – இஸ்லாமியரை எடுத்து கொண்டால் எதையோ கல்லால் அடித்தல், எதற்கோ ரத்தவிளாரியாக மார்பில் அடித்து கொள்வது, புலாலுக்காக பிராணிகளை பாதிகழுத்தை அறுத்து அது துடிதுடிக்க சாகும் வரை காத்திருந்து ஜிவ இம்சைசெய்தல். பெண்களை சுகாதாரம் அற்ற ஒரு கருப்பு துணியால் மூடுதல் ¬ – இந்து மதத்தில் பிறந்ததால் இந்துகள் நம்பிக்கை படி கை கால் நேராக மணித பிறவி எடுப்பதே நீங்கள் புண்ணிய ஆத்மா என்பதால்தான். இப்படிப்பட்ட ஆத்மா மேன் மேலும் பல சோதனைகளை கடந்து புண்ணியங்கள் செய்து மறு பிறவிகளை தவிர்த்து வீடு பெறுவதே ஆகும். கிருஸ்துவர்களை எடுத்துக்கொண்டால் இப்படிபட்ட புண்ணிய ஆத்மா மதம் மாறியவுடன் முதலில் நீ ஒரு பாவ பிண்டம் என்கிறான் பாவ பிறவி என்கிறான். ஆதி மணிதன் சாத்தானால் தூண்டப்பட்டு முதல் பாவம் தொடஙகி முடிவில்லா பாவங்களை மனித இனம் செய்து கொண்டே இருக்கிறது. இதனால் தேவ தூதனான ஏசு பிறந்து மக்கள் செய்த பாவத்திற்காகவும் செய்து கொண்டிருக்கும் பாவத்திற்காகவும் செய்யபோகும் பாவத்திற்காகவும் தன் சதை பிண்டத்தையும் ரத்தத்தையும் ஈத்து சிலுவை என்ற பாடையில் ஆணியால் அரையப்பட்டு முண்டமாக தொங்கவிடப்பட்டார்.
    மதம் மாறியவுடன் ஞானஸ்சானம் செய்ப்பட்டு (மூளை சலவை செய்யப்பட்டு) ஏசு வின் ரத்தமும் சதையும் என்று எண்ணி வைனையும் ஆப்பதுண்டயும் ஊட்டுவார்கள். சிலுவை என்ற பாடையில் அரையப்பட்ட செத்த முண்டத்தை தினம் தோத்திரம் செய்ய சொல்வார்கள். நாம் எல்லோரும் பாவிகள் என்று புலம்புவார்கள். நாம் எந்த பாவம் செய்தாலும் அதன் தண்டனையை ஏசு முன்பே பெற்றுவிட்டதால் நாம் தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருந்தாலும் தினமும் பாடையை நினைவூட்டும் சிலுவையை கழுத்தில் அணிந்து ஏசு முண்ட படத்தை வணங்கினால் தீர்பு நாளில் சுகவனம் பெறுவது நிச்சயம் என்பார்கள். கல்யாணம் என்றாலும் கருமாதி என்றாலும் அதே மேடையில் வைத்த தண்ணீர் தெளிப்பது என்ன புனிதமோ ? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
    இவை எல்லாம் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைக்கும் இஸ்லாமிய கிருஸ்துவ பின்னூட்ட எழுதுபவருக்குதான். இப்படி மூளையை சலவை செய்யும் கிருஸ்துவர் இஸ்லாமியருக்கு ஒரு நியாயம். ஹிந்துக்கள் பிராமிணர்கள் என்றால் ஒரு நியாமா ? எல்லாலோருமே கண்டணத்திற்கு உரியவர்களே.
    ஹிந்து மத பிராமிண துவேஷியான பல பெயர் கொண்ட காவ்யா இக்கட்டுரையை எழுதியிருப்பது சரியே !! ஆதீசங்கரர் முதல் பாரதிவரை பார்பன அறிஞர்கள் ஒருவரையும் விட்டு விடாது சோடனை செய்ப்பட்டு பொய்யான குறையை இடைவிடாது கூறி வந்தவற்றை மெய்என நம்பி அவற்றை காழ்புணர்வினால் திரும்ப திரும்ப சுட்டிகாட்டி வந்துள்ளார் இந்த காவ்யா என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் இக்கட்டுரையும் ஒன்று. வெறும் வாயையே மெல்லும் இவர் ஒரு ஆதார செய்தி அவல் கிடைத்தால் விடுவாரா. இந்த சடங்கை பற்றி அறிந்துகொள்ள வலைதளத்தை சற்று அலசினேன். இதில் ஜாதி ஹிந்துக்களுக்கும் பங்கு இருக்கிறது என்றுதான் எண்ணுகிறேன்.

    Online edition of India’s National Newspaper (The Hindu)
    Friday, Jun 03, 2011
    Karnataka Komu Souharda Vedike on Friday urged the Government to issue an Ordinance banning “made snana” in some temples in the State.
    Vedike convener K. L. Ashok told presspersons here that the ritual was in vogue in temples at Kukke Subrahmanya, Udupi, Perdoor, and Belman in the coastal belt. He said it was a superstitious belief that ‘made snana’ cured skin ailments. Among those who practised the ritual, Brahmins were in less number and a majority of them were Dalit and “Shudra” . The ritual was a conspiracy by “Purohitashahi” sections of society to ensure that lower sections of society remained slaves to them. Mr. Ashok said its practise, was against the principles of the Constitution. Mr. Ashok said the vedike would stage a protest in front of the Deputy Commissioner’s office here on Saturday at 4 p.m. .

    1. Avatar
      paandiyan says:

      yoosuf போன்றவர்களின் வயிறு எரிச்சலை கொட்டிக்கொள்ள போகீன்ரர்கள் . அவர்கள் வந்து நம் மதம் சம்பந்தமாக என்ன வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் . நாம் எல்லாம் கேணயர்கள் . அவர்களை பற்றி பேசவ கூடாது நாம் என்ன அவர்கள அவர்களை சுய பரிசோதனை பண்ணி கொள்ள கூட சுதந்திரம் இல்லாத கூட்டம் அது .

  55. Avatar
    kulachal mu. yoosuf says:

    விளைவுகளை முன்னிறுத்திதான் கோட்பாடுகள் அணுகப்பட வேண்டுமென்ற, முதலில் குறிப்பிட்ட நம்முடைய கோஷத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திவிட்டு, என்னில் எந்த மாற்றமும் நிகழாது; நான் சித்தாந்தத்தில் உறுதியாக இருப்பவன்; மற்றவர்கள் மிருகங் கள்; அரைகுறைகள், இன்னின்ன விஷயங்கள் உங்களுடன் பேசுவதற்கானவை அல்ல என்றெல்லாம், உங்களுடைய பழைய, மிகவும் அர்த்தமுள்ள, அழகிய, புல்லரிக்கச் செய்யும் விவாத முறையியலின் முன் நான் இதோ புறமுதுகு காட்டி எஸ்கேப். உங்கள் தமிழுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

    1. Avatar
      paandiyan says:

      மிக்க நன்றி . மாற்றம் பற்றி எல்லாம் பேசுபவர் முதலில் தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும். பொது விவாதம் பண்ண நான் ரெடி ஆனால் என்னை பற்றி பேசகூடாது , உங்களை பற்றி நன்றாக தூற்றிகொளுங்கள் நானும் நெருப்பை ஊதி பெரிதாக்க வருகின்றன் என்றால் இப்படிதான் வாங்கி கட்ட பழகி கொள்ள வேண்டும் . புத்திசாலி என்றால் இதை அரம்பிதிலய பண்ணி இருப்பான்

  56. Avatar
    vedamgopal says:

    மேலும் சில செய்தி – இதை நியாயபடுத்துவதற்காக அல்ல உண்மை நிலவரம் தெரிந்து கொள்வதற்காக
    Religious Hindus have different spiritual experiences at the ancient Shri Kukke Subramanyam Temple

    Shri Kukke Subramanyam Temple is an ancient famous temple in Sulya taluka. ‘Mujarai Department’ of Karnataka Government (Anti-national and anti-Hindu department that takes over management of Hindu temples, in a way looting them and is spending the money on Christians and Muslims) looks after the management of this rich temple. This is also famous as ‘Naag-sthaan’. Bhagavan Subramanyam is worshipped here along with ‘Vasuki’, the King of serpents. Thousands of devotees have had experiences of getting rid of ‘Naag-dosham’ by performing ‘puja’ in this temple. People come here from far off places to perform this ritualistic worship and other rituals like ‘Sarp-sanskar’, ‘Naag-pratishtha’, Ashlesha sacrifice etc. There is pious River Kumardhara about 1-1/2 kilometers from here.

    Many experiences of getting wishes fulfilled on groveling on leaves

    From the Hindu calendar month of Margasheersha to the day of ‘Shashthi’, a festival called ‘Champa-shashthee’ is celebrated here with great enthusiasm every year. There is a custom of offering ‘sevas’ by the devotees on the days of ‘Chaturthi, ‘Panchami’ and ‘Shashthi’ when they have bath in the pious River Kumardhara and grovel on the banana leaves in which Brahmins have food; followed with circumambulating the temple. Then they have bath once again on ‘Darpan Teertha’ and have ‘darshan’ at the temple. In Kannada Language, it is called ‘Maday Maday Snanam’. Devotees irrespective of their caste, creed and Sect etc. offer this ‘service (seva)’ at God’s feet with great devotion.

    Strong opposition by devout Hindus and those offering ‘service’, force the officers to lift ban

    Those offering ‘service’ and devout Hindus strongly opposed the ban. Activists of Hindu Janajagruti Samiti (HJS) and Dy. tehsildar of Sulya taluka, Mr. B. Ram Bhat wrote letter to the Government demanding lifting of the ban as it hurt religious sentiments of Hindus. Mr. Bhat asked whether the Government would ban celebration of ‘Urus’ by Muslims if demand for the same was made. The officers then studied the matter and lifted ban on the above festival. Mr. Bhat while talking to the representative of ‘Sanatan Prabhat’ said, “We all devout Hindus have experienced that if people collectively surrender to God, they succeed in their efforts. We all are very grateful to God for this success.” (Hindus should note that all campaigns undertaken by HJS are carried out by surrendering to Saints and God; therefore, they are successful. They should also take part in the activities related to protection of Nation and Dharma with surrender ‘bhav’ and fulfill the purpose of their birth as human. – Editor SP)

    ‘Maday Maday Snanam’ by Brahmins at Turuvekere

    At Shri Beterai Temple in Turuvekere (Tumkur), tradition of ‘Maday Maday Snanam’ has been followed for the past hundreds of years. At Tumkur, the backward community people have food on banana leaves and on the same leaves with leftovers; Brahmins have ‘Maday Maday Snanam’. It is the place known as ‘Shri Vishnu’s pilgrimage place and this tradition is being followed at this temple managed by ‘Mujarai Department’ of the Government, for the past 400 years. (Most of the religious customs and traditions have been started by Sages and Saints. They have made resolves while starting such traditions, accordingly, such tradition is carried on for thousands of years. At one place people from other than Brahmin community, grovel on such leaves and at other place, people from other communities have food on the leaves on which, later, Brahmins grovel; therefore, the accusation made about such tradition being started to insult ‘Dalit’ communities is baseless.( Besides, such ‘snanam’ is not undertaken due to any compulsion; devotees have ‘snanam’ with lot of ‘bhav’ owing to the experiences they have; but of course, those who are suffering from Hindu-hatred would not like to accept these facts. – Editor SP)

    1. Avatar
      paandiyan says:

      திரு மலர்மன்னன், அரவிந்தன் நீலகண்டன் , ஞானி போன்றவர்களை எல்லாம் கொண்டு இருந்த இணயதளம் இது . ஒரு சில அறைவேகடுகள் , காழ்புணர்ச்சி கூட்டம், ஒரு ஜாதி யை பற்றி எழுதினால் நமக்கு பெரிய சப்போர்ட் கடைக்கும் என்ற அரைகுறை அறிவோடு வந்த வெறி எல்லாம் சேர்ந்த ஒரு கட்டுரையால் இன்று மங்கி போயி இருக்கிறது.

  57. Avatar
    தங்கமணி says:

    எச்சில் இலை மீது உருண்டால், எந்த வியாதியும் குணமாகாது. வியாதி அதிகரித்தான் சாத்தியம் அதிகம். அதனை எல்லோரும் கண்டிப்பது பாராட்டத்தக்கது.
    அதே போல தமிழ் முஸ்லீம் பெண்கள் பர்தா போட்டு உடலை மூடுவதால், விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு ரிக்கட்ஸ் என்ற வியாதி உருவாகிறது. இஸ்லாமிய மூட நம்பிக்கை காரணமாக தமிழ் பெண்களில் ஒருசாராருக்கு இவ்வாறு ரிக்கட்ஸ் வியாதி வந்து அவர்களதுஎலும்புகள் வலுவிழந்து கால்கள் வாத்து கால்கள் போல வளைந்து விடுகின்றன. பளீரேன்று வெயிலடிக்கும் தமிழ்நாட்டிலும் சவுதி அரேபியாவிலும் இந்த ரிக்கட்ஸ் காரணமாக மூளை வளர்ச்சி குன்றி, கால்கள் வளைந்த பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.
    இஸ்லாமிய மூட நம்பிக்கையான பர்தாவையும் இதே சுகாதார காரணத்துக்காக எதிர்க்க வேண்டும். ஆனால், இப்போதோ முகத்தை மறைக்க வேண்டும் கண்களை கூட காட்டக்கூடாது என்றெல்லாம் பத்வா போட்டுகொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய ஆண் இமாம்கள்.

  58. Avatar
    punai peyaril says:

    Princess – Jean Sasson புத்தகத்தை இங்குள்ள எல்லாம் தெரிந்தவர்கள் படித்திருக்கக் கூடும். இங்கிருந்தோ அல்லது அங்கிருந்து கிடைக்கும் காசிற்கோ விசுவாசமாக இருப்பவர்கள், இந்த புத்தகத்தின் உண்மை பற்றி என்ன சொல்கிறார்கள். அப்புறம் பார்க்கலாம் எச்சில் மேட்டரை… ( இது தேவையில்லா ஒன்று என்று அனைவருக்கும் தெரியும்… ) ஆனால் மனநிலை என்று ஒன்று உள்ளது. அய்யராய் பிறந்து மலையாள சினிமாவில் அதகளம் பண்ணியவருக்கு மகனாய் பிறந்ததால் இசையறிவு வாய்க்கப் பெற, மதமாறியதால் உயர்வு என்பதும் மூட நம்பிக்கையே… ரஹமானின் -திலீப்புங்க – வியாதி ஒரு மாந்திரிகத்தால் குணமடைந்தால் அப்புறம் எதற்கு அராபுகள் அப்போலா ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார்கள்…? அது மாதிரி இதுவும் நம்பிக்கை….

  59. Avatar
    suvanappiriyan says:

    வேதம் கோபால்!

    //எதற்கோ ரத்தவிளாரியாக மார்பில் அடித்து கொள்வது, புலாலுக்காக பிராணிகளை பாதிகழுத்தை அறுத்து அது துடிதுடிக்க சாகும் வரை காத்திருந்து ஜிவ இம்சைசெய்தல். பெண்களை சுகாதாரம் அற்ற ஒரு கருப்பு துணியால் மூடுதல் ¬//

    மார்பில் ரத்தம் வரும்வரை அடித்துக் கொள்வது இஸ்லாம் தடை செய்த ஒரு பழக்கம். இப்படி மார்பில் அடித்துக் கொள்ளச் சொல்லி குர்ஆனிலோ ஹதீதிலோ எங்கும் நீங்கள பார்க்க முடியாது. இந்த தவறை விளக்கி பிரசாரம் செய்து வருகிறோம். கூடிய விரைவில் தமிழகத்தில் இது நிறுத்தப்படும்.

    அடுத்து புலாலுக்காக மிருகங்களின் கழுத்தை பாதி அறுத்து ரத்தத்தை வெளியேற்றுவது மருத்துவர்களின் கூற்றுப்படி சிறந்ததே! இந்துக்களில் சிலர் மிருகங்களை அடித்து கொல்கிறார்கள். ரத்தம் வெளியேற்றாமல் இப்படி சமைப்பது உடலுக்கு தீங்கை வரவழைக்கும் என்பது மருத்துவ அறிக்கை. மேலும் புரதச் சத்து மாமிசங்களிலேயே கிடைக்கிறது. அடுத்து ஆடு மாடு கோழி முதலான வற்றையே மனிதரகள் அதிகம் சாப்பிடுகின்றனர். இவை நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அதிகரித்தே வருகின்றன. மனிதர்கள் சாப்பிடாத புலி, சிங்கம் போன்ற உயிரினங்கள் உலகில் எண்ணிக்கையில் குறைந்து வருவதையும் பார்க்கிறோம். கோழி மாடு ஆடுகள் குறிப்பிட்ட சதவீதம் அறுக்கப்பட வில்லை என்றால் அவை எண்ணிக்கையில் அதிகமாகி சுற்றுப்புற சூழலுக்கு கேட்டையும் விளைவிக்கும். மேலும் குறிப்பிட்ட சாரார் புலால் உண்ணுவதாலேயே காய்கறிகளின் விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. எல்லோரும் காய்கறியின் பக்கம் வந்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடாதா?

  60. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //அதே போல தமிழ் முஸ்லீம் பெண்கள் பர்தா போட்டு உடலை மூடுவதால், விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு ரிக்கட்ஸ் என்ற வியாதி உருவாகிறது. இஸ்லாமிய மூட நம்பிக்கை காரணமாக தமிழ் பெண்களில் ஒருசாராருக்கு இவ்வாறு ரிக்கட்ஸ் வியாதி வந்து அவர்களதுஎலும்புகள் வலுவிழந்து கால்கள் வாத்து கால்கள் போல வளைந்து விடுகின்றன.//

    தமிழகத்தில் மட்டும் அல்ல. உலகம் முழவதும் முகம், கை தவிர மற்ற உறுப்பகளை கருப்பு அங்கியால் மூடும் வழக்கம் பரவலாக உள்ளது. எந்த நாட்டு பெண்களின் கால்கள் வளைந்து விட்டதாக சொல்கிறீர்கள்? மருத்துவர்களின் ரிப்போர்ட் ஏதாவது இருக்கிறதா? வெயில் நேரிடையாக மேனியில் தொடர்ந்து படுவதால உடலுக்கு கேடு என்றும் வெளியில் சென்றால் உடலை முடுவது சுகாதாரமே என்றும் நான் படித்துள்ளேன். உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை தரவும்.

    மேலும் புர்கா போடுவதால் அது அந்த பெண்ணின் தனிப்பட்ட உரிமையாகிறது. ஆனால் மற்றொருவருடைய எச்சில் இலையில் புரள்வது என்பது புரளும் மனிதனின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது. இரண்டையும் எப்படி ஒன்றாகப் பார்க்கிறீர்கள்? முஸ்லிம் பெண்கள் போடும் முக்காட்டைப் போன்றே வட நாட்டு இந்துப் பெண்கள் இன்றும் தலையை மறைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வடநாட்டு மார்வாடிப் பெண்களுக்கு கால் சூம்பிப் போனதாக நான் எங்கும் கேள்விப்படவில்லை.

  61. Avatar
    தங்கமணி says:

    ஏராளமான அறிவியல் ஆய்வுகள் இருக்கின்றன.
    கூகுள் ஸ்காலரில் தேடினால் இத்தனை வந்து கொட்டுகிறது.

    http://scholar.google.com/scholar?hl=en&safe=off&q=rickets+muslim+women&gs_sm=e&gs_upl=4138l8590l0l8838l20l19l0l1l1l0l210l2638l4.12.3l20l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&biw=1920&bih=965&um=1&ie=UTF-8&sa=N&tab=ws

    சரியான பதிலை தந்துவிட்டாலோ, அல்லது உங்களுக்கு சிக்கலான விஷயத்தை பேச ஆரம்பித்தாலோ ஓடிவிடுவீர்கள் என்பது என் அனுபவம்.
    இப்போதும் அப்படித்தானா?

    ஒவ்வொரு கட்டுரையையும் படித்து பதில் எழுதுங்கள். ஆராய்ச்சி செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் கடிதம் எழுதி மேல் விவரங்களை கேட்கலாம்.

  62. Avatar
    indian says:

    புர்கா போடுவதால் அது அந்த பெண்ணின் தனிப்பட்ட உரிமையாகிறது என்பது எவலோவு பொய். இதை எல்லாரும் நம்பி விடுங்கள் அடுத்தது மார்பில் ரத்தம் வரும்வரை அடித்துக் கொள்வது இஸ்லாம் தடை செய்த ஒரு பழக்கம். . இந்த தவறை விளக்கி பிரசாரம் செய்து வருகிறோம் — எதனை வருடம் இதை நீங்கள் பண்ணி வருகின்றீர்கள் ? நாலைந்து பெண்களை வைத்து கொள்வது கூட சுயமரியாதை சம்பந்தப்பட்டது இல்லையா ? நீங்கள் எல்லாம் உபதேசம் பண்ணும் அளவு நாங்கள் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்

  63. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    //புர்கா போடுவதால் அது அந்த பெண்ணின் தனிப்பட்ட உரிமையாகிறது.//
    புர்கா போடாத பெண்களையாவது முஸ்லீம் ஆண்கள் ஆஸிட் ஊற்றுவேன் என்று மிரட்டுகிறார்கள்

    அதேமாதிரி இதுவும் புரளுபவரின் தனிப்பட்ட உரிமை என்று கூறிவிடலாம். (அப்படி இருந்தாலும் நான் ஆதரிக்கப்போவதில்ல). அவரை யாரும் ஏகே 47 வைத்தோ அல்லது ஆஸிட் ஊற்றுவதாகவோ மிரட்டவில்லை என்பதை அறியவும்.

    தெளிவாகவே சவுதி அரேபிய இளம் பெண்களுக்கே ரிக்கட்ஸ் இருக்கிறது என்பதை ஆராய்ந்த கட்டுரை
    http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1756-185X.2011.01624.x/full

  64. Avatar
    Kavya says:

    வேதம் கோபால்

    இக்கட்டுரை மடே ஸ்னானாவைப்பற்றி ரொம்ப‌ அலட்டிக்கொள்ளவில்லை. பின்னூட்டங்களில் இருக்கலாம். மடே ஸ்னானவைத் தடை செய்ய மறுக்கும் பி.ஜே.பி பிராமண மந்திரியின் பேச்சைப்பற்றியும், இந்துவில் வந்த ஆதரவுப் பின்னூட்டங்களைப்பற்றியும்தான் வெகுவாகக் குறிப்பிடுகிறது. மேலும், இச்சாதீயச்சடங்கை எதிர்க்க வந்தவரை அடித்து விரட்டும் அளவுக்கு சடங்கர்கள் கீழ்ச்சாதி மக்களை சிந்தனை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்றும் வேதனைப்படுகிறது. பின்னூட்டங்கள் எப்படியுமிருக்கலாம். கட்டுரையை மட்டும் படித்து எழுதுங்கள்.

    இதை எதிர்க்க இருவேறு கருத்துக்கள் இருக்க முடியா. இச்சடங்கு இந்துமதத்தில் இல்லை என்று மட்டும் சொன்னால் போதாது. இக்காலத்தில் இச்சடங்குகள் இருக்கின்றனவே! ஆதரவும் பெறுகின்றனவே என்ற வேதனை மேலோங்க வேண்டும் உங்கள் உள்ளத்தில். இக்கட்டுரையின் நோக்கம் அதுவே.

    உங்களது பின்னூட்டத்தில் அப்படிப்பட்ட வேதனை எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எந்தச் சந்தர்ப்பத்தையும் எப்படியாகினும் பயன்படுத்தி, இசுலாமியர்கள் ஆட்டை வெட்டிக் குருதி குடிக்கிறார்கள்; கிருத்துவர்கள் பாடையைச் சுமக்கிறார்கள் என்று சொல்லிச்சொல்லியே திருப்தி பட்டுக்கொள்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை இப்படியே கழிகிறது.

    இக்கட்டுரை வேறு மதங்களைப்பற்றிப்பேசவில்லை. அதற்கு நீங்கள் ஒரு தனிக்கட்டுரை போடுங்கள். இங்கே மடே ஸ்னானவைப்பற்றிப்பேசுங்கள். மற்ற பேச்சுக்கள் நீங்கள் தந்திரமாக மையக்கருத்தைத் திசை திருப்புகிறீர்கள் என்று வெட்ட வெளிச்சத்தில் காட்டும்.

    பார்ப்பன துவேசத்தைப்பற்றிப்பேசுகிறீர்கள். இக்கட்டுரையும் அதைப்பற்றி பேசுகிறது. இது சொல்வதென்னவென்றால், இம்மாதிரிச்சடங்குகளுக்கெதிராக பார்ப்ப்னர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும். ஏனெனில் இச்சடங்குகள் பார்ப்பனத் துவேசத்தைப் பரவலாக்கும்; வலுவாக்கும் என்பதே. கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள்: ஒரு நியு யார்க் டைம்ஸிலோ, லண்டன் டைம்ஸ் போன்ற ஊடங்கங்களில் இது வந்தால் எப்படியிருக்கும்? உலகம் முழுவதும் உங்கள் ஜாதியின் பேர் கெடும். I can write. I am already doing on secular matters. My intention is not to malign.

    பார்ப்ப்னர்கள் ரேஸிஸ்டுகள் என்றுதான் அறிய‌ப்படுவார்கள் if such incidents are reported worldwide. Please remember that it was proposed to raise the issue of caste divisions in Hindu society in the International Human Rights Conference in Durban. But due to the intervention of some VIPs in India, it was stopped.

    உடனே நிறுத்தப்படவேண்டும். Look at the issue from a impersonal point of view; u will understand. To murder and to abet in the murder – both carries equal culpability. In my opinion, the second carried more !

    இக்கட்டுரையின் நோக்கம் is to remind you of all that.

    1. Avatar
      paandiyan says:

      நீங்கள் என்ன மனநிலை சரி இல்லாதவர ? திரும்ப திரும்ப ஒருவரின் மேல புழுதி வாரி தூறிக்கொண்டு இருகின்றீர்கள் ? வெளிநாட்டு ஊடகம் எல்லாம் உங்களை மாத்ரி முட்டாள்களை கொண்டு இர்ருக்கவில்லை என்ன சொல்ல வருகின்றார்கள் என்று கூட புரிந்துகொள்ள முடியாத தர்கூரிகள் அங்கு இல்லை . உங்கள் ஜாதி என்ன அதை முதலில் சொல்லுங்கள் . என்னை ஒருதன் பார்பான் என்று சொன்னால் அவனின் பின்புலம் அவனின் யோக்கியதை பற்றி என்னகும் தெரியவேண்டும் அவனையும் நான் ஜாதி சொல்லி பேச வசதியாக இருக்கும் (இந்த கட்டுரையின் நோக்கம நீங்கள் உங்களை முட்டாள் என்று வெளிச்சம் போட்டு காட்டியதுதான்)

      1. Avatar
        Kavya says:

        நான் முட்டாளோ அறிவாளியோ என்ற ஆராய்ச்சியால் நன்மையில்லை.

        வேதம் கோபால் இக்கட்டுரை பார்ப்பன துவேசத்தில் எழுந்தது என்கிறார்.

        நான் மடே ஸ்னானா போன்ற மதச்சடங்குகள் அத்துவேசத்தை பெருக்கும் என்கிறேன் கட்டுரையில்

        உங்கள் கருத்தென்ன?

        வெளிநாட்டில் இப்படிப்பட்ட மதச்சடங்குகளைப்பற்றி தெரியவந்தால், அதை ஆதரிப்போரை ரேஸிஸ்டுகள் என்றுதான் சொல்வர். அதற்கு எதிர்வினையை நீங்கள் சந்தித்தாக வேண்டும்.

        U cant dare to support such rituals abroad.

        1. Avatar
          paandiyan says:

          வெளிநாடு என்றால் அங்கு எல்லாம் முன்னேறிய மக்கள் அங்கு இதுபோல் எல்லாம் இல்லை என்பத உங்களுடிய அறிவு கம்மி என்று காட்டுகின்றது . சர்ச் விஷயம் எல்லாம் அங்கு அரசியல் மற்றும் பத்திரிகைகள் வெளிப்படியாக தலைமுடியாத நிலைதான் — இன்னும் அங்கு மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருகின்றது . எதிர்வினை செய்வினை எல்லா வினை யும் காலம் பதில் சொல்லும் , உங்களை மாதரி காவ்யா என்ற அரைகுறை க்கு பதில் சொல்ல வேண்டியதில்லை

  65. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //சரியான பதிலை தந்துவிட்டாலோ, அல்லது உங்களுக்கு சிக்கலான விஷயத்தை பேச ஆரம்பித்தாலோ ஓடிவிடுவீர்கள் என்பது என் அனுபவம்.
    இப்போதும் அப்படித்தானா?//

    நைஜீரியாவில் இந்த நோய் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு காரணம் புர்கா போட்டதனால் அல்ல. வல்லரசுகளின ஆதிக்க போட்டியினால் அந்த நாடு இன்று பொருளாதாரத்தில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த மக்களுக்கு இந்த நோய் வந்தது ஊட்டச்சத்து குறைவினால்.

    மேலும் இது போன்ற நோய்கள் வருவதற்கு மூல காரணம் ரத்த பந்தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதே. இதைத் தடுத்தாலே அந்த நோயை மிக இலகுவாக கட்டுப்படுத்தி விடலாம். புரதச் சத்து குறைவும் ஒரு காரணம். அசைவப்பிரியர்களாக மாறினாலும் இந்த நோயிலிருந்து தப்பலாம்.

    அடுத்து சவுதி அரேபிய பெண்களைப் பற்றி ஒரு சுட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள விபரத்தை எந்த இடத்தில் இந்த சர்வேயை எடுத்தனர் என்பதை பார்க்க போனால் அதற்கு புத்தகத்தை வாங்க வேண்டுமாம. இப்படி ஒரு தலைப்பை வைத்தால் கல்லா கட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம். எனவெ அதன் உள் உங்கள் வாதத்துக்கு ஆதரவான என்ன கருத்து உள்ளது என்பதை அறிய தாருங்கள். நான் இருபது வருடமாக சவுதியில் இருந்தும் இப்படி ஒரு செய்தியை எங்கும் கேள்விப்படவில்லை.

    மேலும் ஒரு ஆராய்ச்சி இந்தியாவிலும கணிசமாக இந்த நோய் இருக்கிறது என்று இந்த சுட்டி சொல்கிறது. இந்தியாவில் புர்கா போடாத பெண்கள்தானே பெரும்பான்மை. இந்தியாவிற்குள் இந்த நோய் எப்படி வந்தது. எனவே இந்த நோய்க்கு புர்கா காரணம் அல்ல. மேலும் சல்வார் கமீஸ் அணிந்து மேலதிகமாக தலையில் ஒரு துப்பட்டாவை போடுவதுதான் முஸ்லிம்களின் புர்கா. மேலதிகமாக கருத்த மெல்லிய ஆடையை அணிகிறார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி பெண்கள் ஆடையில்லாமல்தான் வெளியில் வர வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது.

    http://www.ajcn.org/content/81/5/1060.short

  66. Avatar
    suvanappiriyan says:

    புனை பெயரில்!

    //மதமாறியதால் உயர்வு என்பதும் மூட நம்பிக்கையே… ரஹமானின் -திலீப்புங்க – வியாதி ஒரு மாந்திரிகத்தால் குணமடைந்தால் அப்புறம் எதற்கு அராபுகள் அப்போலா ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார்கள்…? அது மாதிரி இதுவும் நம்பிக்கை….//

    ரஹ்மானின் உயர்வுக்கு ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று அவரே மேடைதோறும் முழங்கி வருகிறார். அடுத்து ரஹ்மானும் இன்னும் இஸ்லாத்தை சரியாக விளங்காமல் நாகூர் தர்ஹா, மந்திரம் மாயம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார். இவற்றுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை. சமீபத்தில் கூட மந்திரம் செய்கிறேன என்று பலரை ஏமாற்றிய ஒரு பெண்ணை சவுதி அரசு மரண தண்டனை கொடுத்து தீர்ப்பளித்து. எனவே ரஹ்மான் இஸ்லாத்தை நோக்கி இன்னும் சரிவர நெருங்கவில்லை.

    புரோகிதத்தை ஒழித்தது இஸ்லாம். உடல் நிலை சரியில்லா விடடால் மருத்துவரை அணுகவே சொல்கிறது இஸ்லாம். முகமது நபியும் இதுபோல் மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அரபுகள் பணம் இருப்பதால் அப்போலோவில் வந்து உயர்தர சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள். இதில் என்ன தவறு?

    ரஹ்மான் மூடப்பழக்கத்தை நம்புவதால் எச்சில் இலையில் புரளும் இதுவும் ஒரு நம்பிக்கை என்று சொல்ல வருகிறீர்களா? ஆக எச்சில் இலையில் புரளும் இந்த மட ஸ்னானாவை தடுக்க வர மாட்டீர்கள்! அப்படித்தானே!

    1. Avatar
      paandiyan says:

      அப்படிதான் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கை குறையும் பொது இதுவும் கடந்து போகும் . இதை நீங்கள் கேள்வியாக கேக்கா வேண்டிய அவசியம இல்லை. வெளிபடயாகவா கருது சொல்லப்பட்டு இருகின்றது

  67. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    நான் கொடுத்த கூகுள் தளத்தில் ஆரம்பம் மட்டுமே நைஜீரிய பெண்களை பற்றி பேசுகிறது. நைஜீரியா என்று தேடவில்லை. முஸ்லீம் பெண்கள் ரிக்கட்ஸ் என்று மட்டுமே தேடினேன். கீழே வரிசை வரிசையாக போகிறது. எல்லாவற்றையும் படிக்கவும்.

    சவுதி அரேபியா என்று சேர்த்துகொண்டு தேடுங்கள். சவுதி அரேபியாவில் பரவலாக இருக்கும் ரிக்கட்ஸ் வரும்
    http://scholar.google.com/scholar?q=muslim+woman+rickets+saudi+arabia&hl=en&btnG=Search&as_sdt=1%2C31&as_sdtp=on

    வட இந்தியாவில் ரிக்கட்ஸ் பரவுவதற்கு, நீங்கள் சொன்னது போல அவர்களும் முக்காடு போட்டு மறைக்க ஆரம்பித்ததால் இருக்கலாம்.

    இந்த இணைப்புகள் எல்லாம் புத்தகங்கள் அல்ல. மருத்துவ இதழ்களில் வந்த கட்டுரையின் கருப்பொருள்கள்.

    இவை எல்லாம் அவர்கள் கல்லா கட்டுவதற்கு அல்ல. பத்திரிக்கைகளை மருத்துவர்களும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் படிக்க.

    வீட்டுக்குள்ளேயே சூரிய வெளிச்சம் படாமல் இருக்கும் இந்து பெண்களுக்கும் ரிக்கட்ஸ் வரும்.

    வைட்டமின் டி சூரிய வெளிச்சம் பட்டதும் மனித உடல் தயாரித்துகொள்கிறது. அது இல்லையென்றால், எலும்புகள் வலுவிழக்கும். பல் கொட்டும். எலும்புகள் வளையும். கால்கள் வளைந்து வில் போல ஆகும். விட்டமின் டி இல்லையென்றால் ஏராளமான வியாதிகள் வரும். சூரிய வெளிச்சமே பெண் உடல் மீது படக்கூடாது என்று சொல்வது மூடத்தனம். மூட நம்பிக்கை. ஆபத்தான மூட நம்பிக்கை.

  68. Avatar
    punai peyaril says:

    Princess – Jean Sasson — இதற்கு பதிலைக் காணோம்…. ரஹ்மானை பற்றி மட்டும் பதில்…. பிர்ன்ஸஸ் பற்றி பதில் என்ன..?

  69. Avatar
    தங்கமணி says:

    //நான் மடே ஸ்னானா போன்ற மதச்சடங்குகள் அத்துவேசத்தை பெருக்கும் என்கிறேன் கட்டுரையில்//

    excellent point!

  70. Avatar
    punai peyaril says:

    இதோ இதற்கு இந்த மெத்தப் படித்துணர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்..?

    …London: A Muslim man in France has been jailed after he punched a nurse who tried to remove his wife’s veil during childbirth….

    …A judge in the southern French port jailed Mimoune for six months while saying: “Your religious values are not superior to the laws of the republic.” …..

  71. Avatar
    punai peyaril says:

    மலக்குடல் குழம்பு வாசனையில் மயங்கிப் போய் இந்த மனித்தன்மையற்ற சம்பவங்களுக்கு கருத்துக் கூற மனமில்லையோ…?

  72. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இவனெல்லாம் ஒரு அமைச்சன் !!! இப்படிப்பட்ட “பாரம்பர்யம்” காக்கப்படவேண்டுமென்றால் முதலில் இச்சடங்கை இந்த அமைச்சனல்லவா ஊடகம் முன்பாக நிகழ்த்திக்காட்டி துவங்கி வைத்திருக்க வேண்டும் ?

    இப்படித்தான் தேவதாசி முறை ஒழிப்புத்திட்ட மசோதா வந்தபோது, சத்தியமூர்த்தி ஐயர் அதை “பாரம்பரியம்” என்ற போர்வையில் எதிர்த்ததாகவும் கொண்டுவந்த முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், பின்வருமாறு சொன்னாராம் :

    “எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கடவுள்களுக்குத் தேவதாசிகளாகத் தொண்டு செய்வதை நீண்டகாலமாக செய்து விட்டோம். அப்படிப்பட்ட புனிதமானதும் கடவுளுக்கு உரியதுமான தொண்டினை இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் வகுப்பைச் சார்ந்த பெண்கள் செய்யட்டும்.
    அதன் பின் இனிமேல் அந்த தொழிலைப் பார்ப்பனர்கள் தொடர்ந்தால் நாங்கள் ஆட்சேபிக்க வில்லை”

    கும்பகோண மகாமக ஜலக்ரீடையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எல்லோரும் நேரே வைகுண்டத்திற்கு போயிருப்பார்கள் என்று அருள்வாக்கு சொன்ன கருமாந்திர எழவெல்லாம் நமது மக்கள் பிரதிநிதியாக இருந்து தொலைத்திருக்கிறதுதானே. (அதற்கு “‘அப்படியே நீ போய் அவர்கள் பத்திரமாய் போய் சேர்ந்துவிட்டார்களா என்று பார்’ என்று அவனையும் அனுப்பி வைத்திருக்கவேண்டும்” என்று பதிலடி வந்தது தி.மு.க.விடமிருந்து)

    1. Avatar
      paandiyan says:

      வார்த்தையில் கண்ணியம் தேவை இல்லையெனில் அதை முறையில் பதிலடி கிடைக்கும் . தேவதாசி முறை யில் அப்படிப்பட்ட கருத்து பதிவாகபடவில்லை என்று ஒரு ஆதாரம் இருக்கின்றது. பொய்யை பரப்ப வேண்டாம். அந்த தொழிலை சார்ந்த பென்கள எங்களை இந்த தொழில் பண்ண விடுங்கள் என்று ஊர்வலம் போனதுஎல்லாம் வரலாறில் இருந்து மறைக்க பார்க்கலாம் ஆனால் அளிக்க முடியாது .
      தி மு க என்ன யோக்கியமான கட்சியா என்ன . தா கீ கொலை, முன்று பேரு எரிப்பு க்கு எல்லாம் என்ன பதில் சொன்னார்கள் . சென்ற முதல் அமசியர கேள்வியை எதிர்கொள்ள தெரியாமல் கீழ்த்தரமாக அநாகரிமாக டிவி நிருபரை நீதானட கொலை காரன் என்று காட்டுமிராண்டி போல கத்தினார் . சொல்ல போனால் கொலை, ஏற்ரிப்பு விட இது ஒன்றும் தவறான செயல் இல்லை .அங்கு யாரயும் கட்டாயபடுத்தி கொலை பண்ணவில்லை, உயிரோடு எரிக்கவில்லை. தர்கூரிகள் தான் கொலை, ஏரிப்பு எல்லாம் பகுத்தறிவு என்று பிணதிகொண்டு திரிகின்றது .

  73. Avatar
    Dr.G.Johnson says:

    From what is going on here, one thing is clear. No scientific idea could change the mentality of our people. We become emotional on religious matters. This is because all religions are based on faith and blind belief. As long as religions exist nothing could be done to teach the truth. Fortunately Sathi was banned through Law by the British. Just imagine what would be the plight of women today if Sathi practice still goes on ! Similarly the superstitious practice in Karnadaka could only be banned by law.

  74. Avatar
    punai peyaril says:

    இதில் விசேஷம், இசை வேளாளார் குடும்பத்தின் முத்துலட்சுமி ரெட்டியின் மிக மிக நெருங்கிய உறவினர் – சூப்பர் அய்யர்… அது தான் நடிகர் ஜெமினி கணேஷ். அதனால், சத்தியமூர்த்தியை அய்யர் பிரதிநிதி போல் சித்தரிக்க வேண்டாம். அதே இசை வேளாளர் இன பாடும் குயில் திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை இசைக் கடவுள் போல அய்யர்கள் கொண்டாடி வருகின்றனர். சத்தியமூர்த்தி ஒரு அரசியல்வாதி… அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். சூப்பர் சமூகதீர்திருத்தவாதி பெரியார், இக்கட்டான காலகட்டத்தில் ராஜகோபாலாச்சாரியாரை தான் ஆலோசனை கேட்டார். அவர் அய்யங்கார். கருணாநிதி தனது யோகா குருவாய் அய்யங்காரைத் தான் கொண்டார். மரியாதை என்பது மிரட்டி வாங்குவது அல்ல… ஒரு அடிதடி கட்டப்பஞ்சாயத்து தலைவனை உருவாக்குவதை விட.. நாம் ஒரு இராமானுஜம், சந்திரசேகர் போன்றவர்களை நமது இனத்தில் உருவாக்கினால் மரியாதை தானாக வரும். இளையராஜாவை என்ன டி.வி.ஜி, சுப்புடு ஒதுக்கியா தள்ளினார்கள் – இன துவேஷத்தில்ல.. முதலில் தடுமாறினாலும், தனது ஆன்மாவை சக்தி உணர்ந்த போது அவர் இந்துவாகத்தானே இருக்கிறார்….

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *