சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி

This entry is part 3 of 42 in the series 25 மார்ச் 2012

சென்னை மண்ணுக்கென்று ஏதோ விசேஷம் இருக்கிறது போலும். சென்னை மாநகரமாக அது உருவெடுக்கும் முன்பே இந்த விசேஷம் ஏற்பட்டு அதன் பிறகும் நீடித்து வந்திருக்கிறது.
எங்கெங்கோ பிறந்து எவ்வாறெல்லாமோ அலைந்து திரிந்தானபின் சென்னையில் வந்து அடங்கிய சித்தர்கள் பலர். சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம் பட்டினத்துக்காரர்தான். அவர் கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் தலைமாட்டுக்கு அவர் வந்த பிறகுதான் இனித்தது. அவ்விடத்தையே தமது உடல் ரீதியான நடமாட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் புரிந்து கொண்டு அதையே தனது அடக்கத் தலமாகத் தேர்ந்து கொண்டுவிட்டார், பட்டினத்தார்.
ராமேசுவரம் தீவில் உள்ள பாம்பனில் பிறந்தாலும் சமாதிகொள்ளச் சென்னையைத் தேர்ந்துகொண்ட இன்னொரு சித்தர் பாம்பன் குமரகுருபர தாச சுவாமி. முதலில் வட சென்னையில் வைத்தியநாத முதலி தெருவின் அப்போதைய 40 ஆம் இலக்கமிட்ட வீட்டில் தங்கிய பாம்பன் சுவாமி, பின்னர் சீடர் சின்னசாமியால் திருவல்லிக்கேணிக்கு அழைத்து வரப்பட்டு 1929 ஆம் ஆண்டு திருவான்மியூரில் இன்றைய கலாட்சேத்திராவுக்கு அருகிலேயே லட்சுமிபுரம் முத்து லட்சுமி சாலையில் சமாதி கொண்டுவிட்டார்.
பாம்பன் சுவாமி போலவே வெளியூரில் பிறந்து வளர்ந்தாலும் சென்னைக்கு வந்து சேர்ந்து பாம்பன் சுவாமியின் சமாதிக்கு அருகிலேயே தானும் சமாதி கொண்டவர் சக்கரையம்மா. திருவண்ணாமலை போளூர் அருகில் உள்ள தேவிகாபுரத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்த அனந்தாம்பா, அக்கால வழக்கப்படி விவரந் தெரியாத வயதிலேயே திருமண பந்தத்தால் பிணைக்கப்பட்டு, பருவம் வந்தபின் சென்னை கோமளீஸ்வரன் பேட்டைக்கு (இன்றைய காயலான் கடை புதுப்பேட்டைதான்!) கொண்டுவரப்பட்டவர். சிறுபெண்ணாயிருக்கையிலேயே ஆன்மிக நாட்டம் மிகுந்து தான் பிறந்த தேவிகாபுரத்திற்குப் பெயர்க் காரணமாய் அமைந்த பெரிய நாயகி அம்மன் கோயிலில் கருவறையைப் பார்த்தவாறு மணிக் கணக்கில் கண் மூடிக் கிடந்தவள் அனந்தாம்பா. அவளது ஆன்மிகத் தேடலுக்கு இடையூறு விளையக் கூடாது என்பதற்காகவேதானோ என்னவோ அவளுக்கு வாய்த்த கணவன் மனைவியை முற்றிலுமாகப் புறக்கணித்து அற்ப சுகங்களில் மூழ்கிக் கிடக்கிறவனாக அமைந்தான். அப்படியும் அனந்தாம்பாவுக்கு இல்லற நிர்பந்தம் ஒரு சிறிதும் இருக்கலாகாது என்பதுபோல் சீக்கிரமே இறந்தும் போனான். அன்னந்தாம்பாளால் இப்போது எவ்விதத் தளையும் இன்றி இரவு பகல் வேறுபாடின்றி ஆன்மிக உணர்வுடன் உள்முகமாகத் தன்னை நோக்கிக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழிக்க முடிந்தது. தேவிகாபுரத்தில் இருந்த நாட்களிலேயே தன் சகோதரன் போளூரில் இருந்தபடியால் அங்கு சென்று சில தினங்கள் கழித்த அனந்தாம்பா, போளூர் அருகிலேயே வில்வாரணி என்னும் இடத்தில் உள்ள நட்சத்திரக் குன்றின் மேல் ஒரு பாழ் மண்டபத்தில் தன்னந் தனியே வாழ்ந்த குணாம்பா என்ற சந்நியாசினியால் ஆட்கொள்ளப்பட்டு ஸ்ரீ சக்கர உபாசனை மார்க்கத்தை மேற்கொள்வதற்கான உபதேசமும் பெற்றார். சிறு பெண்ணான தன்னால் நினைத்தபோது வந்து தரிசிக்க இயலாதே என்று ஏங்கிய அனந்தாம்பாவைக் கண்டு மனம் இரங்கிய குணாம்பா, உடலை லேசாக்கிப் பறவையைப் போல் பறக்க முடிகிற லஹிமா என்கிற சித்தை அருளி, நினைத்தபோது எங்கு வேண்டுமா னாலும் சுதந்திரப் பட்சியாய்ப் போய் வா என்று அனுப்பி வைத்தார்!
மனிதர் பறவைபோல் பறப்பதென்பது சாத்தியமே இல்லை என இதனை விஞ்ஞான அறிவின் தாக்கம் மிகுந்த இன்றைய மனித மனம் தர்க்கிப்பதில் வியப்பில்லை. ஆனால் தூய உள்ளத்துடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து, வாய்மை தவறாதவர் எனப் பெயர் பெற்றவரான திரு. வி. கலியாண சுந்தர முதலியாரே இந்தப் பெண் சித்தர் பறவையைப் போலப் பறந்து வந்து மாடியிலே அமர்ந்து இளைப்பாறியதைக் கண்டதாகச் சாட்சியம் அளிக்கிறார், உள்ளொளி என்ற தமது சிறு நூலில்.
நீண்ட காலம் ஸ்ரீ சக்கர உபாசனை செய்து கனிந்த அனந்தாம்பா, அதன் காரணமாகவே சக்கரத்தம்மா என அழைக்கப்படத் தொடங்கி, சாமானிய மக்கள் நாவில் சக்கரை அம்மாவாகி விட்டார்!
எழுத்தறிவில்லாத விதவைப் பெண்மணியாக அனந்தாம்பா கோமளீஸ்வரன் கோயில் வாசலில் அமர்ந்து அவ்வப்போது அட்டகாசமாகச் சிரிப்பதைக் கண்டு சித்த சுவாதினமற்றவர் என்று தற்செயலாக அவரைக் கண்டு எடைபோட்ட சென்னை மயிலாப்பூர் டாக்டர் எம். சி. நஞ்சுண்ட ராவ், எந்நேரமும் ஆனந்தமாக இருப்பதுதான் நமது இயற்கை என்பதால் எதிரே தென்படுவதையெல்லாம் வேடிக்கை பார்த்துச் சிரித்து மகிழ்வதாக அந்த அம்மா சொல்லக்கேட்டு அந்தக் கணமே அவர் சாதாரணமானவர் அல்ல எனப் புரிந்து கொண்டார். அம்மையார் அத்வைத உணர்வின் உச்ச நிலையில் இருப்பதை வெகு விரைவில் அறிந்து அவரையே தமது குருவாகவும் வரித்துக்கொண்டார். சுவாமி விவேகானந்தர் பிரபலமடையாத நிலையில் சென்னை வந்தபோதே அவரை இனங்கண்டு உபசரித்து அடிபணிந்த நஞ்சுண்ட ராவுக்கு அனந்தாம்பாவைச் சரியாக அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை.
1901 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் தமது சடலத்தைத் துறந்த குருமணி சக்கரையம்மாவுக்குத் திருவான்மியூரிலேயே சமாதிக் கோயில் ஒன்றைச் சிறிய அளவில் எழுப்பினார் நஞ்சுண்ட ராவ். இன்று அந்தக் கோயில் கலாட்சேத்திரா சாலையும் காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு அருகிலேயே ஆன்மிக அலைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அங்கு அமைதியான சூழலில் நறுமணச் செடி கொடி மரங்களுக்கிடையே விளங்கும் தியான மண்டபம் ஆன்மிக நாட்ட முள்ளவர்களுக்கெல்லாம் ஒரு வரப் பிரசாதம்போல் அமைந்து விட்டது.
சென்னை மாநகரம் முழுவதுமே இப்படிப் பல சித்தர்கள் நடமாடி, அடக்கமும் ஆகியிருக்கிறார்கள். ஆனால் சென்னை ஒருங்கிணைந்த ஒரு மாநகரமாக உருவாகிக்கொண்டிருக்கையிலேயே அதன் ஒரு பகுதி சித்தர் ஒருவரின் பெயரால் அழைக்கப்பட ஆரம்பித்துவிட்டது எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்று வட சென்னையில் தண்டையார்பேட்டை என மருவியுள்ள தொண்டியார்ப்பேட்டை உண்மையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த குணங்குடி மஸ்தான் என்கிற ஸூஃபி சித்தரின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர்தான். குணங்குடி என்று தொண்டிக்கு அருகில் ஓர் ஊர் இருப்பது உண்மைதான் என்றாலும் மஸ்தான் சாகிப் பெயருக்கு முன் உள்ள முன்னொட்டு அந்த ஊரைச் சுட்டுவதல்ல. குணம் என இறைச்சக்தியையும் குடி எனத் தனது ஆன்மாவையும் குறிப்பாலுணர்த்திப் போவோம் குணங்குடிக்கு என்று அத்வைத நிலையில் பாடிக்கொண்டிருந்த மஸ்தான் சாகிபின் உண்மைப் பெயர் அப்துல் காதர். மஸ்த் என்றால் வெறி என்று பொருள். ஆன்மிக வெறியில் எந்நேரமும் திளைத்துக் கொண்டிருந்ததால் அப்துல் காதர் மஸ்தான் ஆகிவிட்டார்.
”ஐயன் குணங்குடியானை யன்றி வேறுண்டென்று உள் ஆய்ந்து பார்த்தேன் ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும் என்னுள்ளாய்க் காணேன் ஐயன் குணங்குடியோனே யானே என்று அறிந்த பின்பு என் அறிவாய் நின்ற ஐயன் குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே”
என்றெல்லாம் அத்வைத உணர்ச்சிப் பெருக்கில் பாடிக் கொண்டு இருந்ததால் ஏக இறைவன் என்பதாக ஒருவர் இருக்கிறார், அவர்முன் அனைவரும் அடிபணிய வேண்டும் என்கிற இஸ்லாமின் இறைக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணாக அவர் பேசுவதாக இஸ்லாமிய மதத் தலைவர்கள் குற்றம் சாட்டி அவரைப் புறக்கணித்துவிட்டனர். போதாக்குறைக்கு சக்தி, சிவம் எனக் குறியீடுகளாக அவர் பாடலில் தத்துவப் பிரயோகங்கள் நிரம்பியிருந்தது அவரை அந்நியப்படுத்தி விட்டது. எனினும் முஸ்லிம் சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் அவரைக் கொண்டாடத் தவறவில்லை.
மஸ்தான் சாகிப் சென்னை வந்து சேர்ந்தபோது அவருக்கு ராயபுரத்தில் ஒரு ஆசிரமம் (தைக்கா) அமைத்துக் கொடுத்தார் பாவா லப்பை என்கிற வணிகப் பிரமுகர். மஸ்தான் சாகிப் தொண்டியிலிருந்து வந்தவராகை யால் அவர் வசித்த தைக்கா தொண்டியார் தைக்கா என அடையாளம் சொல்லப்பட்டு, காலப்போக்கில் அந்தப் பகுதியே தொண்டியார்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.
குணங்குடி மஸ்தான் 1835 ஆம் ஆண்டு சமாதியடைந்ததையொட்டி அவர் வாழ்ந்த இடமே ஒரு தர்காவாய், நம்பினோருக்கு அடைக்கலமாக இருந்து வருகிறது. சித்த புருஷர் மஸ்தானை இஸ்லாம் மத ரீதியாகப் பிடிவாதமாய்ப் புறந்தள்ளிவிட்ட போதிலும் முஸ்லிம் சமுதாய ஏழை எளிய மக்களும், ஸூஃபிகளை ஏற்கும் மனப்பான்மையுள்ள முஸ்லிம் அறிவாளிகளும் ஹிந்துக்களும் இன்றளவும் தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள குணங்குடியார் அடக்கத் தலம் வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

Series Navigationவைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு
author

மலர்மன்னன்

Similar Posts

186 Comments

  1. Avatar
    Kavya says:

    வழக்கம்போல் மலர்மன்னனின் கட்டுரைகள் சிந்தனை ஆழமில்லாதவை. இஃது அவ்வாறே.

    தொடக்கத்திலும், தலைப்பிலும் சென்னை என்றவர் ஏன் சென்னைக்கு? என்று விளக்கவில்லை. அவர் சிந்தனையில் அக்கேள்வி தெறிக்கவில்லை.

    பட்டினத்தார் காலத்து சென்னையும் இன்றைய சென்னையும் ஒன்றா? அவரென்ன சென்னை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்ததென்றா வந்தார்? அவர் வந்தது திருவெற்றியூர் சிவனுக்க்காகவேயொழிய வேறெதற்காகவும் இல்லை? வள்ளலாரும் வந்தார். மலர்மன்னனுக்கு நினைவு பிசகிவிட்டது. ‘தருமமிகு சென்னையில்’ என்று சொல்லி கந்தகோட்டத்து (மின்ட்) முருகனைப்பற்றி பாமாலை சூட்டி ஆங்கே வதிந்தவர் சில்லாண்டுகளாக. அவருக்கு ஏதாவது நினைவுச்சின்னம் உண்டா அங்கே? இல்லை. குணங்குடி மஸ்தான் சாகிபுவைப்பற்றித் தோண்டி எழுதியவர் வள்ளலாரை மறந்தது ஏனோ?

    கிடக்கட்டும். ஏன் பாம்பன் சுவாமிகள் சென்னைக்கு வந்தார்? சக்கர சித்தர் வந்தார் என்றில்லை. மலர்மன்னன் சொன்னது போல ‘கொண்டுவரப்பட்டார்’ என்பதே. அவர் பெண் எனவே அவரின் பயணம் அவர் கையில் இல்லை.

    பாம்பன் சுவாமிகளுக்கு என்ன வாழ்ந்தது? ஏன் வந்தார்? சென்னையில் அப்படியென்ன இருக்கிறது? இராமநாதபுரத்துக்கு என்ன குறை? அம்மக்கள் வேண்டப்படாதவர்களா?

    இக்கேள்விகளுக்குப் பதிலைத்தேட வேண்டியது சென்னைக்கு என்ற தலைப்பை எழுதிய மலர்மன்னனின் பொறுப்பு.

    விட்டால், பேயாழ்வார் பிறந்தார், சிவவாக்கியர் சுற்றினார் என்று சென்னை புராணம் பாடிவிடுவார் போலிருக்கிறதே?

    “இருக்கும் இடத்தை விட்டு எங்கங்கோ அலைகின்றார், ஞான த் தங்கமே”

    சென்னையில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. பாம்பன் சுவாமிகள் வந்தது தப்பு. இராம்நாதபுரத்திலேயே இருந்திருக்கலாம்.

    மண்ணுக்கென்று புனிதமெனப்தெல்லாம் பொய். அம்மண்ணிலே வாழ்ந்தோராலும் ஆங்கு அவரெழுப்பிய புனிதஸ்தலங்களாளுமே அம்மண்ணுக்குப்பெருமை. தம் இறுதிநாட்களை சிரிரங்கத்திலே கழிக்கவேண்டுமெனபது வைணவரின் மதக்கொள்கை. எனவேதான் ஆச்சாரியர்க்ள் அங்கே சென்றார்கள் இறுதியில். அப்படியேதேனும் கட்ப்பாடு சைவத்திலிருந்து தம் சேவையையும் இறுதிநாட்களை இச்சென்னையில் கழிக்கவேண்டுமென்று சைவர்களுக்குண்டா மலர்மன்னன? இல்லெயென்றால் ஏன் இந்தச்சென்னை வாசம்?

  2. Avatar
    Gnanaboomi says:

    Please increase the font size to cater readability. This is a nice article. Though Chennai may not have been called as Chennai in those days, the spiritual masters choose the place where their physical body remains, in most cases. In that way, Chennai indeed is a Punya Boomi.

    Regards,
    Admin
    GnanaBoomi.com

  3. Avatar
    களிமிகு கணபதி says:

    காவ்யா,

    ஏதேனும் எதிர்த்துக் குறை சொல்லிப் பேச வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறீர்களா ?

    நல்ல மறுமொழிகளை எழுத இத்தகைய உளறல்கள் தடை.
    .

  4. Avatar
    Kavya says:

    சென்னையால் சித்தர்களுக்கு சிறப்பன்று. சித்தர்களால் சென்னைக்கு சிறப்பு. மலர்மன்னனின் கட்டுரை சென்னையை முதலாவது வைப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

    போகட்டும். ஏன் சித்தர்கள் தம்மூரிலேயே இருக்கவில்லை ? இருக்குமிடத்திலிருந்தே இறைவனைக்காணலாம் என உங்கள் மதம் சொல்லவில்லையா? ஏன் பாம்பன் சுவாமிகள் சென்னைக்கு வரவேண்டும்?

    பல சித்தர்கள் எவ்விடமும் தம்மிடமில்லை என்ற கொள்கையுடைவர்களாதலாலும், அவர்கள் பற்பல புண்ணியஷேத்திரங்களுக்குப் போகவேண்டியதாலும் இறுதிக்காலத்தில் உடல் தாளாமையால் ஓரிடத்திலேயே வதிந்து தம் இவ்வுலக வாழ்வை முடிக்க் வேண்டியதாலும், அவர்களில் சிலர் சென்னைக்கு இறுதிகாலத்தில் வந்திருக்கலாமே தவிர, சென்னைக்கு ஒரு மண்ணாங்கட்டியும் சிறப்பு கிடையாது.

    சித்தர்களா? இடமா? என்ற கேள்விக்கு, இடமே என்ற பதிலை மலர்மன்னர் கட்டுரை கொடுத்தால் சித்தர்ககளைச் சிறுமைப்படுத்துவதாகும்

    மீண்டும் களிமிகு கணப்திக்குச் சொல்லவேண்டுமா? இடத்திற்குச் சிறப்பில்லை. அது மண்ணாலும் கல்லாலும் ஆனதுவே. சும்மா குடையறே எரிச்சலில் என்று சொல்வதை விட்டுவிட்டு கருத்தை கருத்தால் எதிர்னோக்கி விளக்குங்கள்.

  5. Avatar
    punai peyaril says:

    காவ்யா மிக மூன்றாந்தரமான கீழ்த்தரமான சிந்தனை. உங்களுக்கு உண்மையில் தைரியமிருந்தால், இந்த தேசத்திற்கும் உலகிற்கும் கெடுதல் செய்யும் கெட்ட அரசியல்வாதிகள், தீவிரவாதிகள் ஆகியோரை எதிர்த்து பேசவோ கருத்துச் சொல்லவோ முடியுமா…? மலர்மன்னனின் அனுபவத்தில் ஒரு முடி அளவு கூட உங்களுக்குக் கிடையாது. அவர் தனது அனுபவத்தை பகிர்கிறார். பிடிப்பவர்கள் படிக்கிறார்கள், அவ்வளவே… அவர் வீடு எதிரில் இருப்பதால் பாம்பன் சுவாமிகள் பற்றியும் அருகிருக்கும் இன்னொரு சித்தர் பற்றியும் எழுதுகிறார். இதில் உங்களுக்கு எங்கு எரிகிறது….? இது வரை உமிழ்நீர் தான் உங்கள் எழுத்துக்களில் உருப்படியாய் ஒன்றும் வந்ததில்லை.. துவேஷம்… துவேஷம்… பொதுவாக, சாதிக்க நினைத்து முடியாதவர்கள், அல்லது குறை குடங்கள் அறிவார்ந்தவர்களால் புறந்தள்ளப்படும் போது கொள்ளும் மனநிலை உங்களுக்கு இருக்கிறதோ என தோன்றுகிறது. பாதகம் செய்பவரை கண்டால் பாட்டின் கடைசி வரி தான் எனக்கு தோன்றுகிறது , உங்களது செய்கை கண்டு… தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதி செய்த /செய்யும் கேடுகளை பற்றி பேச உங்களுக்கு திராணியில்லை… ம.ம தான் கிடைத்தார் உங்களுக்கும்… நினைத்திருந்தால் என்றோ அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரராயிருந்திருப்பார்…. நேர்மை அவர் கொண்டதால் இந்நிலை.. கற்பூரத்தைப் பற்றி கழுதைக்கு என்ன தெரியும்…? ( தரம் குறைந்த உங்கள் நிலைக்கு பதில் இந்நிலை… )

    1. Avatar
      Kavya says:

      சரி நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

      பட்டணத்தார் ஷேத்திராடன்ம் போனார். அவர் துறவறம் உண்மையானது. அவருக்கென்று ஊரில்லை. உடமையில்லை. ஒவ்வொரு சிவஸ்தலத்துக்கும் போவது அவரின் இறைவணக்கம். அப்படியே திருவொற்றியூர் சிவஸ்தலத்திற்கு வந்தார். அஃது அவரின் இறுதிக்காலமானதால் அவர் பூதவுடல் அங்கேயே கழற்றப்பட்டது.

      சக்கர சித்தர் பெண். ‘கொண்டுவ்ரப்பட்டார்’ என மலர் மன்னன் எழுதுகிறார்.

      பாம்பன் சுவாமிகள் ஏன் சென்னைக்கு வந்தார்? ஏன் இராமநாதபுரத்தில் வாழவில்லை? அம்மக்களை அவருக்குப்பிடிக்கவில்லையா?

  6. Avatar
    A.K.Chandramouli says:

    ஏன் எல்லோரும் காவ்யாவிடம் பாய்கிறீர்கள் அவர்களுக்கு என்ன தெரியுமோ அதை மட்டுமே எழுத முடியும் நம் நாடு சித்தர்கள் ஞானிகள் சிந்தனையார்கள் ஆன்மீக் பெரியார்கள் எல்லோரையும் இழிவு படுத்துவது மட்டுமே அவருக்கு தெரியும். அவரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

  7. Avatar
    Kargil_jay says:

    //Kavya says:
    March 26, 2012 at 12:23 pm
    சரி நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

    பட்டணத்தார் ஷேத்திராடன்ம் போனார். அவர் துறவறம் உண்மையானது. அவருக்கென்று ஊரில்லை. உடமையில்லை. ஒவ்வொரு சிவஸ்தலத்துக்கும் போவது அவரின் இறைவணக்கம். அப்படியே திருவொற்றியூர் சிவஸ்தலத்திற்கு வந்தார். அஃது அவரின் இறுதிக்காலமானதால் அவர் பூதவுடல் அங்கேயே கழற்றப்பட்டது.

    //

    காவ்யா,
    பட்டினத்தார் சென்னையில் திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து செத்த சாமானியரில்லை. அவரே தேர்ந்தெடுத்தார் சமாதியாகும் இடத்தை. அதைப் பற்றியும் அவரே எழுதியுள்ளார்:

    வாவிஎல்லாம் தீர்த்தம்
    மணலெல்லாம் வெண்ணீறு
    காணும் இடமெல்லாம் கணநாதர்

    என்று (வட சென்னையை)திருவோற்றியூரைப் பற்றி எழுதினார்.

    உங்கள் பிரச்சினைகள் அறிவுக்குறைவினால் ஏற்படுகின்றன.இதையெல்லாம் படித்தால், அறிவு வளர்ந்தால் இக்கேள்விகள் உங்களுக்குத் தோன்ற வாய்ப்பில்லை.

    உங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் பிரயோஜனமாக எதுவும் செய்ய இயலாது.

  8. Avatar
    paandiyan says:

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    “காவ்யா போன்ற அரைகுறை திருந்தபோவது இல்லை இல்லை . பேசாமல் இவருக்கு பதில் கூறி டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள் “

  9. Avatar
    Ram says:

    Well said Paandiyan.. I also first thought like that. But I got following further thoughts:
    1. As I donot know much about Pamban Swamigal, why can’t I try to find some possible answer for this question which may add some knowledge about Swamigal.
    2. Also the following story came my mind: There was Sanyasi near river banks and he found a scorpion struck under a rock (or in water?). He helped the scorpion by taking out of the rock and leaving it in a safer place for it. But it stung him. When asked why did you help that scorpion when it can sting you, he said “scorpion’s nature to sting, so it is my nature to save. Just as he is not leaving his nature, why should I leave my nature? ”

    So with some simple web search I found a website which has a story about Pamban Swamigal’s Chennai visit and here it is : http:// pambanswamigal . com / chennai.asp

    I know the above answer wont be suffice for the person who is ready to throw more refutals, but at least I’m happy that I know little more about Pamban Swamigal now.

  10. Avatar
    Kavya says:

    திண்ணையின் போடப்பட்ட கட்டுரையே நாம் எடுத்துப்பேசுகிறோம். அதன்படி மலர்மன்னன் சென்னைக்கு ஏதோ சிறப்பு இருப்பதாகவும் சித்தர்கள் எனவே இங்கே கூடியதாகவும் எழுதுகிறார். இது தவறெனபதே என் கருத்தாகும்.

    பட்டிண்த்தார் திருவொற்றியூரில் தன் சமாதியைக்கொள்ளக்காரணம் அவர் அச்சிவஸ்தலத்தைப் புண்ணிய பூமியாகக் கொண்ட காரணததால் மட்டுமே ஒழிய அங்கு கற்று நன்றாக வீசுகிறது என்றெல்லாம் இல்லை.

    சித்தர்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்களை இப்படி சிறுமைப்படுத்தக்கூடாது. சித்தர்களைப்பற்றி எழுதுகிறேன் என்று குணங்குடி மஸ்தான் சாகிபுவைப்பற்றியும் அவரை எப்படி இசுலாமியர் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் எழுதவேண்டுமா ?

    பாமபன் சுவாமிகளைப்பற்றி நான் கேட்கும் கேள்விகள் இவையே:

    ஏன் ஒரு சாமியார் சென்னைக்கு வரவேண்டும்? அவர் பிறந்தது பாம்பன் என்ற குக்கிராமம் இராமநாதபுரத்தில். அங்கு அனைவரும் முருகனடிமைகளாகிவிட்டார்களா? அவர்களுக்கு இவர் என்ன சொன்னார்? இராமநாதபுரத்தில் இவர் என்ன சேவை செய்தார் அதாவது முருகபக்தியை வளர்க்க? ஏன் சென்னைக்கு வந்தும் தனவந்தர்கள் வாழும் இடத்தை இவர் தேர்ந்தெடுத்தார்? ஏன் ஏழைம்க்கள் வாழுமிடங்களில் இந்தச்சாமியார்கள் தங்கள் ம்டங்களை வைக்கவில்லை?

    இந்தச்சாமியார் மட்டுமன்று; எந்தச்சாமியாரும் இப்படிச்செய்தால் என் கேள்விகள் இவையே.

    நீங்களெல்லாரும் என்னைத்திட்டலாம். ஆயினும் கேள்விகள் நான் கேட்காவிட்டாலும் எல்லார் மனசாட்சியும் கேட்கத்தான் செய்யும். இந்துமதம் பணக்காரர்களின் மதமாக்க இந்த பார்ப்பனர்கள் மட்டுமன்றி, பற்பல சாமியார்களும் காரணம்.

    ஜீயர்கள் வந்தார்ல் திருவல்லிக்கேணியிலோ மயிலாப்பூரிலோ தங்கி ‘மக்கட்சேவை’ செய்கிறார்கள். இல்லையா?

    Sithars were close to all sections of ppl. They mingled with the poor. But y Pamban Swamigal came to Chennai and avoided the poor and settled in a posh area? I may be wrong; but the onus is on u to explain how and where I was wrong. I am open to corrections.

    இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு வலிக்கிறது.

  11. Avatar
    kattiyakkaaran says:

    காவ்யா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ! ஏன் எல்லாவற்றையும் குறை சொல்லி பழக வேண்டும்? தவறான தகவல்களை ஒருவர் கொடுத்திருக்குறார் என்றால் அந்த தகவல்களுக்கு நீங்கள் மறுப்பு போடுவது குற்றமில்லை, அனால் நீங்கள் தவறை களைந்து சரியான தகவல்களை கொடுப்பீர்களேயானால் அதுவே சிறந்த மறுமொழி என்று கருதுகிறேன். அதைவிடுத்து வரட்டுத்தனமான விவாதங்களை வளர்க்கவேண்டாம்.

    1. Avatar
      Kavya says:

      குறை, நிறை என்பவையெல்லாம் பார்ப்பவர் எண்ணத்தில்தான். மலர்மன்னன் கட்டுரையில் உள்ள குறையை நான் நன்றாகவே எடுத்துச்சொல்லிவிட்டேன். அது: சென்னைக்கு ஏன் சித்தர்கள் வந்தார்கள் என்பதை அவர் சொல்லவில்லை. அவர் சென்னைக்குக் கட்டுரையில் அழுத்தம் கொடுத்தப்டியால், சித்தர்களை சென்னையைத் தேடி வந்தார்கள் என்ற் பொருளைக்கொடுத்துச் சித்தர்களைச் சிறுமைப்படுத்துகிறர் என்பதே என் குற்றச்சாட்டு. இக்குறைகளை நிறைவு செய்யும்படி கேட்டுக்கொணடிருக்கிறீர்கள். பண்ணலாம்.

      சித்தர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் பார்க்கப்படவேண்டும். அவர்களுக்கிடையே ஒரு சில ஒற்றுமையிருந்தாலும், அவர்களின் தனித்தன்மைக்காகவே போற்றப்படவேண்டும். எ.கா. சிவவாக்கியரின் பார்ப்பன் எதிர்ப்பும் திருமூலரின் கொள்கைகளும் ஒன்றல்ல. எனவே இருவரையும் இணைக்கமுடியாது.

      அக்கால சித்தர்கள் 18 பேர்கள் என்பதுதான் சான்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சித்தரகள் என்றால் ஒரு பரந்த பொருள் என்று எடுத்துக்கொள்போரும் உண்டு. அவர்களுக்கு அப்பரந்த பொருளை நினைவுபடுததும்படி வாழ்ந்தவர்கள் அனைவரும் சித்தர்கள் ஆவர்.

      மலர்ம்னன்ன் அப்படிப்பட்ட சித்தர்கள் என்பவர்களையெல்லாம் ஒரே கட்டாகக்கட்டி, பட்டினத்தார் போன்ற 18சித்தர்களுக்குள் அடக்கிவிடுகிறார். இது கண்டிக்கப்படவேண்டியது.

      சென்னைக்கு வந்தார்கள் என்னும்போது, ஏன் வந்தார்கள் என்று படித்தவர் கேட்கும்போது, பதில் சொல்லவேண்டும்,

  12. Avatar
    Kargil_jay says:

    Kavya,
    // சித்தர்களைப்பற்றி எழுதுகிறேன் என்று குணங்குடி மஸ்தான் சாகிபுவைப்பற்றியும் அவரை எப்படி இசுலாமியர் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் எழுதவேண்டுமா ?

    //
    Why you are not able to tolerate the truth? Malarmannan has brutal honesty write truth.

    You asked what is so special that Pattinaththar chose Chennai. I answered from Pattinaththar’s quote itself. But to you chose to ignore the truth and ran away, because you lack honesty and guts.

    1. Avatar
      Kavya says:

      This is what u hav written:

      பட்டினத்தார் சென்னையில் திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து செத்த சாமானியரில்லை. அவரே தேர்ந்தெடுத்தார் சமாதியாகும் இடத்தை. அதைப் பற்றியும் அவரே எழுதியுள்ளார்:
      வாவிஎல்லாம் தீர்த்தம்
      மணலெல்லாம் வெண்ணீறு
      காணும் இடமெல்லாம் கணநாதர்
      என்று (வட சென்னையை)திருவோற்றியூரைப் பற்றி எழுதினார்.

      This is also what I am stressing. Pattinathaar chose Tirvotriyuur, only because it is one of the sacred abodes of Lord Shiva: nothing else.

      Next, his time was about a millennium before when there was no Chennai as we know today. Tiruvotriyur, Poovirunthavalli, Thiruvallikkeni and Mylopore – were some of the ancient village clusters which became pilgrimage centres for then Hindus.

      So, Malarmanna is wrong to include Pattinanathaar in this essay along with the persons who lived very much later, i.e after the present Chennai was born.

  13. Avatar
    Ram says:

    மேற்கூறிய பாம்பன் சுவாமிகள் வலைதளத்தில் இருந்து :

    “தேட்டிலே மிகுந்த சென்னை சேர்” என்று கந்தவேள் கட்டளையிட சுவாமிகள் உள்ளம் கலங்கினார். சுவாமிகளின் உள்ளக் கலக்கம் குருத்துவத்தில் கூறப்பட்டவாறு –

    தேட்டில் மிகுந்த சென்னையிலே
    தெற்குச் சாமியை யார் மதிப்பார்?
    வீட்டில் வைத்தே உணவூட்ட
    விரும்பும் அடியார் உள்ளாரோ?
    நாட்டில் எனக்கு உனையன்றி
    நம்பத் தக்கார் யாருண்டு?
    ஓட்டும் சிவித்தேர் ஊர்வோனே
    உள்ளத் துயரை ஓட்டாயோ?

    எனச் சுவாமிகள் மதுரையில் தொடர் வண்டியில் ஏறியதும் அமுது கண்ணிர் சொரிந்தார்.

    1. Avatar
      Kavya says:

      தமிழைப்பிழையின்றி எழுதப்பழகவும். பாமப்ன சுவாமிகளைபடித்தபின்னும் தமிழெழுத வரவில்லையென்றால் படித்தென்ன பயன்?

  14. Avatar
    Ram says:

    சித்தர்களும், சாமியார்களும் பணத்திற்காகவே சென்னை வருகிறார்கள் என்று நீங்கள் வாதிடுவதுதான் அவர்களை சிறுமை படுத்துவதாகும்.
    மேலும், இந்த கட்டுரையில் சித்தர்கள் சென்னைக்கு மட்டுமே வருவதாக குறிப்பிடவில்லை. நீங்கள்தான் தவறான அர்த்தத்தை உள்ளே நுழைக்கிறீர்கள்.
    உங்களை பொறுத்தவரை மக்கள் சேவையே ஆன்மிக சேவை அல்லது, சுய தேடலை விட உயர்ந்தது என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது ஒவ்வொருவவரின் விருப்பம் மற்றும் பார்வையை பொறுத்தது. (அனால் “சித்தர்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்கள்.” என்று நீங்கள் கூறுவது அதற்கு நேர்மாறாக உள்ளது.)
    இந்த கட்டுரை சித்தர்களை பற்றி அறிய முயல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதே என் கருத்து. பட்டினத்தில் இருப்போரும் ஆன்மீகத்தில் இருந்தோ, சித்இயலில் இருந்தோ அதிக தொலைவில் இல்லை என்று அறிய உதவும்.
    ஏன் சென்னைக்கு வருவதற்கு பணத்தை தவிர வேறு காரணம் இருக்க கூடாது? ஏன் ஏழைக்கு உதவுவது மட்டுமே சமூக சேவையோ அல்லது உயர்ந்ததாக என்ன வேண்டும்?

    பணம் இருக்குமிடத்தில்தான் மற்ற சமூக ஒழுக்க கேடுகள் அதிகம் இருக்கும். வியாதி இருக்கும் இடத்தில்தான் மருத்துவர் தேவை. சித்தர்களும், ஒழுக்கமான சாமியார்களும் சமூக மருத்துவர்கள் என்பது என் கருத்து. இந்த மறு நோக்கம் தங்கள் கருத்தை மாற்றும் என்று நம்புகிறேன்.

    சத்தான உணவு வியாதியை அகற்றவும் உதவும் , பலத்தை கூட்டவும் உதவும். சென்னைக்கு வந்த இவர்கள் குணக்கேடு இருப்போருக்கு நிவாரணமாக அமைவது போல் , ஆன்மீக தேடுதல் உள்ளோர்க்கு வழிகாட்டியாக இருப்பார். அந்த விதத்தில் சென்னையும் ஒரு புண்ணிய பூமிதான்.

    1. Avatar
      Kavya says:

      சித்தர்களும் சாமியார்களும் ஒன்றன்று. எனவே இருவரையும் இணைக்கவேண்டாம். சித்தர்கள் 18 பேரே. மற்றவர்களெல்லாம் ஞானிகளெலாம். அவ்வளவே. பட்டிணத்தார் மலர்மன்னன் குறிப்பிடும் பிறரை இணைக்கமுடியாது.

    2. Avatar
      Kavya says:

      நான் சாமியார்கள் என்று குறிப்ப்ட்டவர்கள் இன்று வாழ்பவர்கள். இவர்களில் பலரின் யோக்கியதை எல்லாருக்கும், உங்களுக்கும் தெரியும். இவர்கள் ஏழைகள் வாழுமிடங்களுக்கு வரவே மாட்டார்கள். சாமியார்கள் சித்தர்களல்ல. இவர்கள் வேலை மதத்தை ப்ரப்புவதும், எஞ்சிய போது மக்கட் சேவை செய்வதுமாகும். சென்னையில் எந்தச் சேரியில் இவர்கள் மடங்கள் இருக்கின்றன என்று சொல்லுங்கள்.

      இக்கட்டுரை சென்னைக்கு மட்டுமே வருவதாக குறிப்பிடவில்லை என்கிறீர்கள். கட்டுரை நேராக அதைச்சொல்லவேண்டிய அவசியமில்லை. அதன் அழுத்தம் சென்னைக்கு என்றுதான் வருகிறது. இது சரியா தவறா என்ற சொல்லவேண்டியது கட்டுரையாளரின் பொறுப்பே. அவர் எங்கே?

      ‘சித்தர்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்கள்’ என்பது அந்த 18 பேரை மட்டுமே குறிக்கும். அனைத்துக்கும் அப்பாற்படல் எனப்து அவர்களில் ப்ரமஞான‌ நிலையைக்குறிப்பிடும். அவர்களில் பலர் மக்களுடன் வாழ்ந்தவர்கள்தான். அர‌சர்களிடம் மோதிய்வர்கள்தான். பட்டினத்தாரை தூக்கில் போட்டான் ஒரு மன்னன். இன்னொரு மன்னனோ தஞ்சாவூர்ப்பார்ப்பனர்கள் தூண்டலால் கருவூர்த்தேவரை பிடித்துவாருங்கள் என்றான். இத்தனைக்கும் கருவூராரும் ஒரு பார்ப்பனரே பூர்வாசிரமத்தில். அவர் பார்ப்பனீயக்கோட்பாடுகளுள் சில்வற்றை எதிர்த்தபடியால் அவர்களில் கோபத்துக்கு இலக்கானார்.

      ‘இக்கட்டுரை சித்தர்களைப்பற்றி அறிய முனைவோருக்கு ஒரு உதவி’ என்கிறீர்கள். நான் எழுப்பும் கேள்விகளுக்கு விடைகளும் இக்கட்டுரையின் குறைகளைக்களைந்து தெளிவை உண்டாக்கும் என்பது என் கருத்து.

  15. Avatar
    Rama says:

    Please, let us not stop this verbal crap and imbecile musings emitting from the frothing mouth of our eternal clown, the one and the only one, Mr Kaveya. Every form needs a joker and Kaveya is doing a admirable job in this regard. Carry on Kaveya, we need relief from mundane,boring life. Keep up with your infantile antics,Kaveya and hopefully, somebody in the circus will notice your acts soon.Bingo, you could be the new chief clown! Future Career in the circus business never looked better.All the very best.

  16. Avatar
    Kavya says:

    //Why you are not able to tolerate the truth? Malarmannan has brutal honesty write truth.//

    This s from Kargil Jay.

    Brutal honesty of Malarmannan?

    His “honesty” is on naked display in many essays in Thinnai. How honest he is amusingly known.

    His ulterior motive is to spread disinformation about other religions practised by Tamilians. He lacks courage to do that openly as we have seen recently seen in his essay on Chennai heritage sites.

    His ulterior motive in that essay was to draw attention to the machination of Dinakaran family in naming a big thoroughfare in Chennai after D.G.Dinakaran. He did not want to say it openly. He put it at the fag end of the essay.

    I questioned him as to what is wrong in openly attacking that act as it is malafide out and out and y he did not do so?

    It was I that attacked it.

    Read him closely all that he writes here and u will see his motives. But in his Tamilhindu.com, he is open and as u said, brutally honest in attacking the said religions tooth and nail. Here he puts up a show.

    In this current essay, reference to Kunangudi Mastan Saheb is mischievous. The Muslim fakir or sufi poet cannot and should not be linked with Hindi saints. His purpose is not to link, but to hold Muslims to ridicule for ostracising the sufi poet from their core religion, thereby Malarmannan wants to bring home to the gullible readers here that Muslims wont tolerate any good man.

    He does all this by using Chakra siththar, Pamban Swamigal and Pattinathaar. His behaviour reminds one of the Dikishithars in Jeyashri Shankar’r article appearing in Thinnai this week, namely, the Dikshitars will go to any length to use the godhead of Lord Shiva to gain economically. They have commercialised Hindu religion.

  17. Avatar
    Kavya says:

    This is for Ram who wrote: இந்த மறு நோக்கம் தங்கள் கருத்தை மாற்றும் என்று நம்புகிறேன்.
    Ram!

    No place is sacred or condemned in spiritual terms. But ppl attributes sacredness to a place, not for the place itself, but for its association with something sacred. Thus Mt Kailash or the Ganga become sacred to the Hindus because these are associated with their God and Goddess. 108 Divya Desams are sacred just because Azhwars sang about them. If not, they wd remain just a way side obscure temples.

    There is no question of Chennai being sacred or condemned. The question is rather, why Pamban Swamigal came here. That he heard an oracle from Lord Muruga is unconvincing to me because, then, the question should be directed to Lord Muruga Himself: Why did he ask Pamban Swamigal to go to Chennai?

    Let me reiterate that the village and the district he hailed from is densely populated by Muslims in TN: Ramanadapuram. He deserted them. The Muslms were there long before he was born.

    He wept; he heard an oracle. How to take these things? I am deeply disappointed by his behavior to travel long to Chennai deserting then people he was born among.

    Ur reasoning that Chennai is bad and as such requires cure through the services of a samiyaar like him – is amusing only. There are so places in TN like Chennai. Why not go there too to cure them?

  18. Avatar
    Kavya says:

    //சென்னை மண்ணுக்கென்று ஏதோ விசேஷம் இருக்கிறது போலும். சென்னை மாநகரமாக அது உருவெடுக்கும் முன்பே இந்த விசேஷம் ஏற்பட்டு அதன் பிறகும் நீடித்து வந்திருக்கிறது.//

    இப்படித்தான் கட்டுரை தொடங்குகிறது.

    என்ன விசேஷம் ?

  19. Avatar
    Kavya says:

    மாநகரமாக உருவாவதற்கென்றே இருக்கிறதாமே ! ம்லர்மன்னன் சொல்கிறார்.

    என்ன விசேசம்?

    1. Avatar
      paandiyan says:

      why you are asking to malarmannan. are you not able to seach in portals and findout about chennai. do not ask idiotic questions repeatly..

  20. Avatar
    களிமிகு கணபதி says:

    காவ்யா,

    சித்தர்களில் 18 பேர் முதன்மையானவர்கள். முக்கியமானவார்கள். அது அவர்களின் மொத்த எண்ணிக்கை இல்லை. அவர்கள் எண்ணிலர்.

    ஆனால், மொத்தமே 18 சித்தர்கள்தான் என்று உங்களிடம் யாரோ ஒரு மாங்கா மடையன் சொல்லி இருக்கிறார்.

    ஆபிரகாமிய மதங்களைப் போலன்றி இந்து மரபில் தெய்வத்தின் சக்தி பூமியிலும் உண்டு என்ற புரிதல் உண்டு. சில இடங்களில் இந்த சக்தி அதிகம். சித்தர்களின் பள்ளிகளைப் பொறுத்து சில இடங்களில் அவர்களது ஆன்ம அனுபவம் மிகத் துல்லியமாக சிறப்பாக அமைகிறது. ஒருவருக்கு ஏற்ற இடம் மற்றவருக்கு ஏற்புடையதாக இருக்காது.

    சித்தர்கள் மரபில் பல பள்ளிகள் உண்டு. அஜபா ஜபம் செய்பவர்கள், வெட்ட வெளித் தியானம் செய்பவர்கள், ராஜ யோகம் பயில்பவர்கள், தந்திரா பயில்பவர்கள், ரசவாதிகள், சித்தாந்த வாதிகள், ஹடயோகிகள், அத்துவைதிகள், காயகல்பம் பயில்பவர்கள்,……..

    சித்தர்கள் மரபில் ஜீவ சமாதி என்பதை முக்கியமாகக் கருதும் ஒரு பிரிவும் உண்டு. அவர்கள் தங்களது உடலுக்குள் ஒடுங்கச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.

    இந்திய முஸ்லீம்களில் (அதாவது இந்தியத் தன்மை உள்ள முஸ்லீம்களில்) சித்தர் மரபைப் பின்பற்றுபவர்களும் உண்டு. நமது “சிவோகம்” என்பதற்கு இணையாக “அனல் ஹக்” என்பதை மந்திரமாக அவர்கள் பயில்கிறார்கள்.

    அவர்களில் சென்னையில் வாழ்ந்தவர்களைப் பற்றி இக்கட்டுரை சொல்கிறது. அந்த வகையில் இது முக்கியமான பாதுகாக்கப்பட வேண்டிய கட்டுரை.

    நமது வரலாற்றைப்பற்றி நாம் அறியாத விஷயங்களைப் பெரியவர் மலர்மன்னன் நாம் அறியத் தருகிறார். சென்னையின் உயிரோட்டத்தை அவர் பார்க்கிறார். ஆனால், சென்னை என்பது வெறும் கல்லும் மண்ணும் என்பவர்களுக்கான கட்டுரை இது அல்ல என்பதும் சரிதான்.

    உடம்பை வெறும் காற்றுத் துருத்தியாகப் பார்த்த சித்தர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் ! :)

    .

  21. Avatar
    Kavya says:

    No need to search. I have already said which u can defy:

    No place is sacred or condemned in its pristine purity i.e. as created by God.

    Then, what is that special which Malarmannan says given to Chennai? Let him reply.

  22. Avatar
    paandiyan says:

    you are not a worthy person to get a reponse from him. first learn how to respect senior people. if you put some ugly comment again and again it doesn’t mean that you are a hero or heroien here. as i said earlier go doctor, check your health first.

  23. Avatar
    Ram says:

    >> தமிழைப்பிழையின்றி எழுதப்பழகவும். பாமப்ன (?) சுவாமிகளைபடித்தபின்னும் தமிழெழுத வரவில்லையென்றால் படித்தென்ன பயன்?

    நான் இங்கே எழுதியதே எனது முதல் தமிழ் பின்னூட்டம். நீங்கள் எல்லோரும் எப்படி பின்னூட்டம் தமிழில் எழுதுகிறீர்கள் என்று எனக்கு தெரியாது. இரு நாள் முன்பே திண்ணை ஆசிரியருக்கு இது பற்றி மின்-அஞ்சல் எழுதி பதிலுக்கு காத்துள்ளேன். ஒரு Transliteration software உதவியுடன் சற்று சிரமத்துடனேயே இங்கு தமிழில் எழுதுகிறேன்.

    >> நான் எழுப்பும் கேள்விகளுக்கு விடைகளும் இக்கட்டுரையின் குறைகளைக்களைந்து தெளிவை உண்டாக்கும் என்பது என் கருத்து
    உங்கள் கேள்வியில் தவறில்லை. ஆனால் நல்ல முறையில் பதில் கூற வருபவரை இவ்வாறு விமர்சிப்பது சரியா?

    நானாவது தமிழ் எழுத்து பலகை இன்றி சிரமபடுகிறேன்.நீங்களாவது உங்கள் உடைந்து போன ஆங்கில பலகையை மாற்றலாமே?

    மேலும் உங்கள் தமிழ் பதிலிலும் எழுத்து பிழைகள் அதிகம் உள்ளது. கவனித்தீர்களா?

  24. Avatar
    Ram says:

    மற்ற எல்லாவற்றையும் தற்பொழுது ஒதிக்கிவிட்டு
    பாம்பன் சுவாமிகள் பற்றிய உங்கள் கேள்விக்கு வருவோம் :

    முன் கூறியது போல், உங்களைப்பொறுத்தவரை மக்கள் சேவையே ஆன்மிக சேவை அல்லது, சுய தேடலை விட உயர்ந்தது என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் ஏன் அவர் அந்த ஊர் மக்களை விட்டுவிட்டு வந்தார் என்று கேட்கிறீர்கள். அவர் அவரது குடும்பத்தையும் அல்லவா விட்டு வந்துள்ளார்!

    பாம்பன் சுவாமிகள் தனது நாற்பத்து ஏழாவது வயது வரை இராமேஸ்வரத்தில் குடும்பஸ்தராக இருந்தார். சன்யாசம் பெற்ற பிறகு அவர் அவரது ஊரை விட்டு வெளியேறினார்.

    அவர் சென்னை செல்லாமல் வேறு எங்கேனும் சென்றாலும், இதேபோல் ஏன் அங்கு சென்றார் என்று கேட்பீர்களே?

    அவர் பாடல்களை பாம்பனில் உள்ளோர்கள் படிக்கக்கூடாது என்று யாராயினும் கூறுவார்களா?

    1. Avatar
      Kavya says:

      ஒருவர் ஓரிடத்துக்குப் போவதில் ஒரு அல்லது பல காரணங்கள் இல்லாமிலிருக்கா. ஒரு சாமியார் கொடைக்கானலிலோ அல்லது உதகையிலோ போய் மடம் அமைத்துக்கொண்டால் எப்படியிருக்குமே என்ன கேள்விகள் எழுமோ அதே கேள்விகள்தான் சென்னை சென்றதற்கும் இங்கு எழுப்பப்படுகின்றன.

      துறவறத்திற்குப்பின் தன் குடுமபம் மற்ற உறவுகளை விட்டுவிடுவார்கள். அதே மண்ணிலேயே வாழ்வதில் என்ன குற்றம்? மண்மீது ஆசை என்று சொல்லி விடுவார்களா? அல்லது அவர் வீட்டார் அடிக்கடி வந்து தொல்லைல் தருவார்களா? சென்னையிலிருந்தால் கண்டிபிடிக்கமாட்டார்களோ ? அப்படிச்சொன்னால் எங்கே வாழ்ந்தாலும் மண்மீது ஆசையெனலாமே?

      பாமபன் சுவாமிகள் தமிழகத்தில் உள்ள எல்லா ஊர்களையும் விட்டு சென்னைக்கு வந்ததற்கு ஒரே காரணத்தால் மட்டுமே அது குறையில்லாததாக இருக்கும் என்பது என் எண்ணம். அதுவும் தனவந்தர்கள் வாழும் பகுதியே அவர் தேர்ந்த்டுத்தது.

      பட்டிணத்தாரைப்போல சென்னையில் ஒரு கோயிலிலில் அமர்ந்து நாட்களைக்கழிக்க அல்லது ஆங்கே ஒரு ம்டத்தை எழுப்பி வாழ‌ என்றால் மட்டுமே சரி. அப்படி ஏதாகினும் எண்ணத்தில் வந்தாரா? பின்னே சென்னை எப்படி? முருஅக் பக்தர் என்று கேள்வி. முருகன் கோயில்கள் சென்னையில் இல்லையா ?

      சென்னைக்கென்றே தனி விசேடம் என்று மலர்மன்னன் ஒய்யாரமாக கட்டுரையை ஆரம்பிப்பது ஒரு அங்கதமோ? அப்படி என்ன சென்னையில் பாம்பன் சுவாமிகள் கண்டார்? மலர்மன்னன் கண்டார்? சாமியார்களைத் தன்னிடம் இழுப்பதற்கு?

      ஒரு சாமியார் பாடல்களால் தெரியப்படுவதில்லை. கண்ணதாசனா பாம்பன் சுவாமிகள் ? எனவே அவரின் பாடல்களுக்கு ஒரு கட்டாயத்தைக் கொடுப்பது வேண்டியதில்லை. பாம்பன் சுவாமிகள் தன் துறவறத்தாலே மேன்மையடைந்தவர் என்பதை நினைவிற்கொண்டால் நலம்.

      இராமநாதபுரம் இசுலாமியர்கள் நிறைந்ததது. அம்மாவட்ட்மே அப்படி. பாம்பன் சுவாமிகள் தன் சொந்தக்கிராமத்தை விடலாம். மாவட்டத்தை விட்டுவிட்டு 600 மைலக்ற்களுக்கப்பால் ஒரு மாபெரும் மாநகரத்தைத் தேர்ந்த்டுத்தது அவரின் துறவறத்தைக்கேள்வியாக்குகிறது.

      People who know him well should come forward to clarify this aspect.

      Questions should not remain. They require to be answered convincingly.

  25. Avatar
    Ram says:

    காவ்யா : திண்ணையின் போடப்பட்ட கட்டுரையே நாம் எடுத்துப்பேசுகிறோம்.

    ஆனால் கட்டுரையாளரின் மற்ற கட்டுரையையும் மனதில் கொண்டே இங்கு விமர்சிப்பதாக பிறகு எழுதியுள்ளீர். அந்தபிற கட்டுரைகளை அங்கேயே விமர்சிக்கலாமே?

    காவ்யா : அம்மண்ணிலே வாழ்ந்தோராலும் ஆங்கு அவரெழுப்பிய புனிதஸ்தலங்களாளுமே அம்மண்ணுக்குப்பெருமை.

    இந்த கட்டுரையில் உள்ளோர் சென்னையில் வாழ்ந்ததால் சென்னைக்குப் பெருமையில்லையா ?

    காவ்யா: அதன் அழுத்தம் சென்னைக்கு என்றுதான் வருகிறது.

    இல்லை சென்னைக்கு மட்டும் பெரியோர் வந்துள்ளோர் என்று கட்டுரையாளர் கூறவில்லை. சென்னையில் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது, ஆன்மீகவாதிகள் தொலைதூர மலைகளில் மட்டுமே இருப்பார் என்ற பலரது எண்ணத்துக்கு மாறாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    kavya: There are so places in TN like Chennai. Why not go there too to cure them?

    Why do you hate Chennai ? Why he should not have come to Chennai? Say, he went to Trichy, still you may ask, why he went to Trichi?

    kavya: பாம்பன் சுவாமிகள் வந்தது தப்பு. இராம்நாதபுரத்திலேயே இருந்திருக்கலாம்.

    நீங்கள் கட்டுரையாளரையோ, கருத்து சொல்பவரையோ வெட்டிப் பேசுங்கள் , தவறில்லை. ஒரு புகழ்பெற்ற சன்யாசியை அவர் சன்யாசம் பெற்ற உடன் ஊரை விட்டு (குடும்பத்தை விட்டு) வெளியேறியது தப்பு என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

    Kavya: Let me reiterate that the village and the district he hailed from is densely populated by Muslims in TN: Ramanadapuram. He deserted them. The Muslms were there long before he was born.

    I don’t understand why you emphasis on a non-muslim saint leaving a place where there were many muslims. Can you clarify? As I said, as per my knowledge, he was not involved in any social service activities. Now he is known only by his poems. Everybody including all those in Ramanathapuram can read his poems, even if he has ‘deserted’ them.

    and I like your following comment as it simplifies the conversation to wrap-up:
    காவ்யா: 108 Divya Desams are sacred just because Azhwars sang about them.

    So you agree that Thiruvanmiyoor is also sacred as Sambandhar sang about it!

    1. Avatar
      Kavya says:

      There r sacred places in Chennai which r sung by Azhwaars also, so they r called Divya Desams: Thiruvidanthai near Mamallapuram; Mamallapuram itself; Thiruninravoor; Thiruvallikkeni. Peyaazhwaar was born in Mylapore. And, the great convert to Vaishnavism Thirumazhiyisai Azhwaar, his disciple, roamed about Thiruvallikkeni; the first three Azhwaars, including Peyazhwaar, together spent their days in Thiruvallikkeni; the guru of Sri Ramanajur namely Thiruckkachi nambikal’s native place is Poovirunthavilli . All these show Chennai has places of pilgrimage to Vaishnavaas. Perhaps for Saivites too as u have cited.

      But all that happened when there was no Chennai i.e. more than a millennium ago. The aforesaid places were small villages surrounding which were forests or jungles with scattered inhabitations of working classes. In Tamil history, the land is called Thondai naadu. தொண்டை நாடு சான்றோடைத்து !Pamban Swamigal came to modern Chennai, not Thondai naadu, and that raises all my qns.

      We can criticise any icon in Thinnai forum subject to the condition we do it decently. If any sort of criticism of an icon irks their followers, it is unavoidable. We will criticize all icons within boundaries of decency. As I said regarding EVR, it is difficult to live in society as a free thinker w/o treading on the toes of somebody regardless of the pain it causes. He who pleases everybody pleases nobody!

      So far as my criticism of Pamban Swamigal is concerned, my criticism is valid till such time it is clarified convincingly why he came here. Lord Muruga appeared in his dream and bade him to go to Chennai ! Am afraid it is unacceptable to me because the buck is passed to Lord Muruga who can’t be questioned as He is God. God favouring certain places out of his own creations! Man applies his dirty mind of discrimination to his God too!! Every being, living or non living, deserves his care and love. All things great and small, the Lord God made us all. There is providence in the fall of a sparrow!

      Instead of Pampan Swamigal, if anyone else had done the same recently, i.e. choosing modern Chennai as his permanent abode, my questions r valid there too. Corporate Samiyaars flock to Chennai to enrich their empires. So, there is a strong reason to come there. I don’t imply PS came to enrich himself; but u see corporate saamiyaars behavior and the aversion that wells up in us! We expect a lot from our saamiyaars; and they should not let us down!

  26. Avatar
    Rama says:

    I request readers not to respond to internet trolls like Kaveya. Let him continue with his (delusional) smart ass blabbering.Ignore him/her. Do not engage in any meaningful conversation.Waste of time responding to brain dead weirdos. Just sit back and be entertained. Do not feed the troll.

  27. Avatar
    Ram says:

    ஒரு திருத்தம், இராமேஸ்வரத்தில் வாழ்ந்தார் என்று எழுதிவிட்டேன். பாம்பனில் என்பதே சரி.

  28. Avatar
    Ram says:

    Rama, So far I was not an active reader of Thinnai. This is my first reply to Kavya’s comments. I agree she/he wrote some harsh comments (for example பாம்பன் சுவாமிகளுக்கு என்ன வாழ்ந்தது?,பாம்பன் சுவாமிகள் வந்தது தப்பு) and also tried a personal attack on my comments (எனது தமிழில் உள்ள பிழைகளை பற்றி, while the discussion is not about me or my language skills. She could have used better language to point the mistakes in my comments).
    I’ve pointed few of those and replied politely and let’s see how Kavya responses for those.
    I don’t think Kavya is brain dead etc. And I don’t want to go through the history of Thinnai or Thinnai’s comments to start a bad attitude with Kavya.

    1. Avatar
      Kavya says:

      பாம்பன் சுவாமிகளுக்கு என்ன வாழ்ந்தது?,பாம்பன் சுவாமிகள் வந்தது தப்பு ” என்பது ஹார்ஸ் கமெண்ட்ஸ் என்றாகாது.

      பாம்பன் சுவாமிகளுக்கு என்ன வாழ்ந்த‌து என்றால் அவரை சென்னைக்குத்தான் செல்லவேண்டுமென்று எது உறுத்தியது என்று பொருள். முருகன் சொன்னானென்பதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களைப்பற்றி கவலையில்லை. நீங்கள் ஏற்றுக்கொண்டால் அது உங்கள் விட்யம். நான் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது தாலிபானித்தனம்.

      ஏற்கனவே சொன்னதுப்போல கார்பொரேட் சாமியார்களான ஷிரி ஸ்ரீ சங்கர், ஜக்கி ஜ்யதேவ் போன்றவர்கள் சென்னையில் முகாம் போடுவது நிரந்தர மடங்கள் அமைப்பது வியப்பன்று. எவரும் அவர்களைப்போய் கேட்கமாட்டார்கள். ஏனெனின் அவர்கள் மதத்தை முதலீடு செய்த வியாபாரிகள். அதே போல் பெர்க்மான்ஸ், சாம் செல்லத்துரை, பால் தினகரன் போன்ற கிருத்துவர்கள் ஏன் சென்னையிலிருந்து கொண்டு சுவிசேசம் பண்ணுகிறார்கள் என்று கேட்க மாட்டார்கள். ஏனெனின் அவர்கள் முற்றும் துறந்த முனிவர்களல்ல. அவர்கள் சூட்டுகோட்டுத்தான் போடுவார்கள்.

      முற்றும் துறந்த முனிவரான பாம்பன் சுவாமிகள் ஏன் சென்னையைத் தேர்ந்தெடுத்தார்? ஒரு முற்றும் துறந்த முனிவர் இப்படி ஒரு இடத்தில் மீது நாட்டம் கொள்ள அவருக்கு என்ன வாழ்ந்தது என்று கேட்பது அருவ்ருப்பான கருத்தன்று.

      பாம்பன் சுவாமிகள் செய்தது தப்பு என்பது என் கருத்து. அக்கருத்தையே சொல்லக்கூடாதென்றால் நீங்கள் ஏன் திண்ணை போன்ற பொது சபைக்கு வருகிறீர்கள்? தாலிபானிதனம் பண்ணவா?

  29. Avatar
    Agnost says:

    As you said Ram, he is not brain dead. but much worse..

    As I’ve talked, discussed, debated, argued with many moosalmans, I am sure kavya also belongs to them.
    This saint wrote thousands of poems (6666 as per some) on 132 different type of tamil poems , ate only once a day and that also not everyday..and this idiot is comparing with some movie poem writer, and doubting him on money..
    and you are replying to him..may be you are the brain dead.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      This s not expected from an agonost. An agonost questions. He does not swallow hook, line and sinker.
      Change ur nick. cant u?

      எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காணபதறிவு.

      An agonist will search.

  30. Avatar
    Kavya says:

    If someone writes and I say there r some grammatical errors, the writer cant take it as a personal attack. No one can write w/o errors. If u say I botch up with both languages – indeed u have – I don’t mind it as neither tongue is my mother tongue. It is not a shame to commit errors in them. But it is juvenile to take such criticism to heart !

  31. Avatar
    smitha says:

    Rama,

    Kavya is an EVR/Veermani/Karunanithi supporter & that too a die hard one.

    As veeramani once said ” Engalukku sondha moolai thevai illai. Periyar kodutha moolaiye pothum”.

    So, what he or she says is to be taken with a pinch of salt.

    I will just cite 1 incident. Once chinna kuttusi, the author of viduthalai went to EVR & told him that there was no news to publish in the next day’s issue.

    EVR told him ” Just read today’s Hindu paper. Whatever issue they have supported, oppose it. Whatever issue they have opposed, support it”.

    Kavya is like that.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      ஈவெரா, கருனாநிதி, வீரமணி இவர்களுக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் என்ன தொடர்பு?

      Y dont u clean ur mind of the thoughts of these brahmin haters.

  32. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    பாம்பன் சுவாமிகள் முற்றும் துறந்த முனிவர். ஒருவேளைச்சாப்பிட்டார். ஏராளமான கவிதைகளப்புனைந்தார். இதெல்லாம் சரிதான். ஏன் சென்னையில் அவருக்கு நாட்டம் என்பதைச் சொல்லிவிட்டால்தான் என்ன ? டபாய்க்கிறீர்களே !

    If u say that convincingly, that will enhance his stature. By refusing to say, u r blocking that.

  33. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    Finally let me conclude.

    It s wrong for a man who renounced all his earthly belongings, desires, aspirations, joys and sorrows, completely, to prefer to live in a particular place only. If he does, that shows he still has not given up an attachement here, attachment to a place.

    The qn is not whether Chennai is good or bad. Rather, why this attachment? If he wanted that attachement, what is that in Chennai responsible for that attachement.

    In Shrivaishanvaism, attachment to Srirangam for Sannyaasi is allowed. They treat the temple as their final resting place, just as Savities Sanyaasi treat Khasi to go and breath their last, because doing so will make them enter Kailaspathi.

    In the circumstances, can v treat Chennai as a final resting place for a Hindu sanyasi? I am afraid not.

    Therefore, there s something mysterious in the conduct of the sanyasi under discussion. The mystery remains unfolded because no one knows how to unfold it. The commenters here are not truly passioante with Pampban swamigal. They are amateurs, and they rush to Wikiepedia.

    I think Pampan Swamigal’s renounciation has unimpeachable integrity just like that of Pattinathaar. Therefore, there must have been strong reason for him to come to Chennai; or no reason at all as becoming of a true sanyasi who goes where his legs take him as his mind is obsessed with unearthly things.

    Commenters in Thinnai forum should make this forum as a lively intellectual place. If unable, let others do that.

    Calling the debater names like brain dead, expose you as immature kids.

  34. Avatar
    Ram says:

    Can you explain how do you say this? My further comments and views (on your question regarding Pamban Swamigal and Chennai) would follow after that:

    ஒரு சாமியார் பாடல்களால் தெரியப்படுவதில்லை. கண்ணதாசனா பாம்பன் சுவாமிகள் ? எனவே அவரின் பாடல்களுக்கு ஒரு கட்டாயத்தைக் கொடுப்பது வேண்டியதில்லை. பாம்பன் சுவாமிகள் தன் துறவறத்தாலே மேன்மையடைந்தவர் என்பதை நினைவிற்கொண்டால் நலம்.

    1. Avatar
      Kavya says:

      Whether u respond with comments or not is none of my business. I write to enlighten and if one feels I don’t do so, it s not my prob.

      A Hindu monk may be dump or deaf; illiterate or literate, a scholar in Tamil or just a commoner. If learned in languge, he expresses himself in words, or not at all if he is deaf mute. There r such deaf or dumb or in spite of having these faculties active, there r monks who chose to remain silent. The world understands him and takes him in the way he appears, not in the way they want him to be.

      Once I had a chance to meet the elder Seer (Chandrasekara Saraswati) of Kanchi Peet. He was more than 80 then and he didn’t speak, nor listen to words. Maybe, his faculties had almost gone. He remained just silent there on a hillock near Satara. People filed past him worshipping him. To some, he waved a flower. Thats all. If u take him as a great sanyaasi or a Hindu monk, or more than that, in what way his words became your criterian there?

      If a monk knows Tamil and expresses his longing for God in the language in the flow of poetry, it does not add more qualification to him. He will be a great monk, whether he is a poet or a non poet.

      On this realisation, if Pamban Swamigal is treated as a great Hindu monk, that should be in spite of his poetry. To give more than necessary importance to his songs is to belittle him as a monk. U mean to say if we deprive him of his hand to write, or tongue to sing, he is reduced to be a mere commoner. Lets not do that. He is a monk because he is a monk, not because he is a poet.

  35. Avatar
    மலர்மன்னன் says:

    செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருப்பதால் அவற்றில் ஈடுபட்டிருப்பதுதான் முறை என்றிருந்தேன். ஆனால் சில வாசகர்கள் விளக்கம் வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக எழுத்தாளன் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் வழக்கம் இல்லை. விமர்சனங் களுக்கு விளக்கம் அளிப்பதும் வாளாவிருப்பதும் அவன் விருப்பம். ஆனால் உண்மையிலேயே மேலும் விவரங்கள் வேண்டும் என விரும்புபவர்களுக்கு உரிய விளக்கங்கள் தருவது அவசியம்தான். வேலையற்று எழுத்துப் பயிற்சி செய்வதற்காகத் திண்ணையை உபயோகித்துக் கொள்ளும் விதண்டா விவாதங்களுக்கு பதில் சொல்லிக் கால விரையம் செய்வதைத்தான் தவிர்க்க வேண்டும்.

    உதாரணமாக ஸ்ரீ களிமிகு கணபதி அனல் ஹக் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இதைப்பற்றி விளக்குமாறு ஒரு வாசகர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். ஆகவே அது பற்றித் தனியாகவே ஒரு கட்டுரையைக் கூடிய சீக்கிரம் எழுதுகிறேன். நமது மஹா வாக்கியங்களுள் ஒன்றான அஹம் ப்ரம்மாஸ்மி என்பதற்கு இணையான அனல் ஹக் பற்றி எழுதுவது மிகவும் அவசியம்தான்.
    மற்றபடி அரைகுறை அறிவுடன் நுனிப்புல் மேய்ந்துவிட்டு மகா புத்திசாலிபோலத் தன்னை பாவித்துக் கொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் கொட்டித் தீர்க்கும் வெற்றுச் சொற்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு அவகாசம் இல்லை. தினமும் பதினெட்டு மணி நேரமாவது எனக்குத் தேவைப்படுகிறது, எழுதுவதற்கு!
    இந்தக் கட்டுரை நம்ம சென்னை என்கிற சென்னை பற்றிய தகவல்களுக்காகவே வெளிவருகிற மாதம் இருமுறை இதழுக்காக, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதப்பட்டது. திண்ணையின் உலகளாவிய வாசக வீச்சு கருதி நான் எழுதும் நம்ம சென்னைக்கான கட்டுரைகள் திண்ணை யிலும் இடம்பெறுகின்றன.
    இந்தக் கட்டுரை சென்னைக்கு வந்து சென்னையிலேயே அடக்கம் ஆன நான்கு சித்தர்களைப் பற்றியது. இவர்களைத் தவிர இன்னும் சில சித்தர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்து அடங்கியவர்களும் இருகிறார்கள். வெளியிலிருந்து வந்து சமாதி அடைந்தவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு சென்னைக்கு வந்து இங்கேயே சமாதி கொண்டவர்களில் நால்வரைத் தேர்வு செய்து எழுதப்பட்ட கட்டுரை இது. இதழில் எழுதப்படும் கட்டுரை அதிகப் பக்கங்களை எடுத்துக்கொள்வது சரியல்ல. மற்றவர் கட்டுரைகளுக்கும் இடம் அளிக்க வேண்டும். ஆகவே இக்கட்டுரை சென்னைக்கு வந்து சமாதி கொண்ட நால்வரைப்பற்றி மட்டும் பேசுகிறது. வந்து சென்றவர்களைப் பற்றி அல்ல. எனது கட்டுரையில் பேசப்படுகிற, சென்னைக்கு வந்து சில நாட்கள் வாழ்ந்திருந்து சென்னையிலேயே அடங்கி அருளியது சென்னைவாசிகளின் பாக்கியம். அதை விடுத்து அவர்கள் ஏன் சென்னைக்கு வந்தார்கள் என எல்லைக்காவல் சட்டாம்பிள்ளையாகத் தன்னை பாவித்துக் கொண்டு கேள்வி கேட்பது அறியாமையின் உச்சம்.
    முகமதியம் ஸூஃபிகளை அங்கீகரிப்பதில்லை என்பதோடு அவர்களைச் சித்ரவதை செய்து கொல்லவும் செய்யும். எனது அனல் ஹக் கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே எழுதுகிறேன். ஸூஃபிகளைப் போற்றி வணங்கியது ஹிந்து சமூகம். ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாதிப்பாலேயே முகமதியத்தைப் பரப்ப வந்த கரீப் நவாஸ் என்று பின்னர் அழைக்கப்பட்ட குவாஜா மொய்னுதீன் சிஸ்தி கூட ஒரு ஸூஃபி ஆகிவிட்டார். ஹிந்துக்கள் அவரைத் தம்மவராக வரித்துக் கொண்டனர். ராஜஸ்தான் அஜ்மீரில் உள்ள அவரது அடக்கத்தலம் சென்று வணங்கியுள்ளேன். ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துப் பாடிய ஜாவேத் அக்தர் எழுதிய க்வாஜா மேரே க்வாஜா என்ற பாடலை நான் கேட்டு உருகாத நாளே இல்லை.
    ஸூஃபிகளை வணங்குதல் நமது சம்பிரதாயம். அவர்களை இழித்துப் பேசுவதும் கொடுமைப்படுத்துவதும் அடிப்படை வாத வஹாபிய முகமதியர் வழக்கம். ஸூஃபிகளும் சித்தர்களே. ஆனால் முகமதிய சட்டதிட்டங்கள் உள்ள இடங்களில் ஸூஃபிகளுக்கு இடமோ மரியாதையோ இல்லை. சித்தர்களுக்கு ஏது எண்ணிக்கைக் கணக்கு வழக்கெல்லாம்? பதினெண்ணாயிரம் சித்தர்களுக்கும் கூடுதலாகவே இருப்பார்கள், இருக்கிறார்கள். சிலர் சக மனிதர்கள் மீதுள்ள பரிவினால் தங்களை வெளிப்படுத்திக்கொண்டார்கள். பலர் ஆன்மிக வெளியில் கரைந்து கண்ணுக்குத் தெரியாமலேயே இருந்துவிட்டார்கள். எனினும் உலக நன்மையைத் தங்களின் முழு தியானத்திலும் வேண்டி நமக்கு உதவுகிறார்கள்.

    சென்னைக்கென்று ஒரு விசேஷம் இருக்கிறது போலும் என்று நான் எழுதியதில் போலும் என்பதே போதுமான விளக்கம் தருவதுதானே!
    -மலர்மன்னன்

    1. Avatar
      sathyanandhan says:

      Dear Mr.Malarmannan, Thanks for 1. Giving more details on Chittars and 2.For giving only a brief crisp reply to mischievous remarks. Thinnai readers get their knowledge enriched by your contributions. regards Sathyanandhan

  36. Avatar
    Kavya says:

    சித்தர்கள் கோடானுகோடி பேரென்றால் காவியடையணிந்து திரிபவனெல்லாம் சித்தர்களாகிவிடுவர். சிததர் என்ற் சொல்லே கேவலப்படுத்தப்படுகிறது மலர்ம்னன்னனால் இங்கே. சித்தர் என்றால் என்ன பொருளில் நாமெடுத்துக்கொள்கிறோம். அல்லது தமிழ்ப்பெரியார்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுவே பார்க்கவேண்டியது. ஏனென்றால், பாரதியாரைத்தவிர மற்றவர்களெல்லாம் தங்களைச்சித்தர்கள் என்று சொல்லிக்கொள்ளவில்லை. ‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருநதாரப்பா! நானும் வந்தேன்’ என்று பாடினார் தன் சுயசரிதையில் பாரதியார். ஆனால் அவ்ரால் பற்றறுக்குவியலவில்லை. எனவே சித்தராகச் சாகவில்லை.

    பற்றறுத்தவரே சித்தர்கள். அவ்வறுத்தலில் எந்தொவொரு மாசுமிருக்கக்கூடாது. சாமியார் எனச்சொல்லிக்கொண்டு தன் ஜாதிக்காரருகளுக்கு வேலைகொடுக்க மடத்தைக்கட்டி வாழ்பவர் சித்தராக முடியாது. கோவைக்கருகிலேயே காட்டில் ஒரு வெள்ளைமாளிகையைக்கட்டிக்கொண்டு ஆன்மிக வியாபரம் பண்ணுபவன் சித்தராக முடியாது. பள்ளிகளும், தொழிற்சாலைகளும் கட்டிக்கொண்டும், ஓட்டல் அதிபருக்க்கு விளம்பரப்பொருளாக இருப்பவரும் சித்தர்களாக முடியா.

    சித்தர்கள் தமிழ்நாட்டைப்பொறுத்த்வரை (தமிழர்களைப்பற்றித்தான் இங்கு பேச்சு) இந்துக்கடவுளரையோ கட்வுளையே வ்ழிபட்டவர்கள் மடடுமே. வேறெவரையும் நாம் சித்தர்கள் எனவழைக்கமுடியாது. ஏன் ப்தினெட்டுபேரை மட்டுமே சித்தர்களாகக் கொண்டார்கள் தமிழ்ச்சான்றோர்? ஏன் தேவராமூவரையோ, ஆழ்வார்களையோ கொள்ளவில்லை. அவர்கள் பற்றறுக்கவில்லையா என்று கேட்டால் நமக்குத் தோன்றுபவது: ஆழ்வார்களும் நாயனமார்களும் தனிவழி போகவில்லை. அவர்கள் ஆன்மிகம் ஒரு கட்டமைப்புக்குள் அடங்கியது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் வைதீக மதக்கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதனால் அவர்களை நாம் சித்தர்கள் என அழைக்கமுடியாது. அவர்கள் திருமால் நெறியில், அல்லது சிவநெறியில் ஏற்கனவே சொல்லப்பட்டவைகள் மூலம் நின்றோர். இங்கு இன்னொன்றையும் பார்க்கவேண்டும்: சிவவாக்கியர் அப்பதினெட்டுச்சித்தர்களுள் ஒருவர். அவர் சிவனை வழிபட்டபோது மட்டும்தான். சைவத்தை விட்டு திருமாலின் தீவிர பகதரானபின் அவர் சித்தர் எனவழைக்கப்படவில்லை. ஆழ்வார் – திரும்ழிசையாழ்வார் – என்றேழைக்கப்படுகிறார்.

    சித்தர்களுள் பலர் வைதீக் கோட்பாடுகளை ஏற்றாலும் அவற்றில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் தனித்தன்மையைக்காட்டியவர்கள். பல்ர் அக்கோட்பாடுகளை முழுக்கத் தூக்கியெறிந்தார்கள். ‘நட்டகல்லும் பேசுமோ’ என்று நகையாடியவர்கள். எத்தளைக்கும் அப்பாற்பட்டவர்களாக வாழ்ந்தவர்கள்.. பூஜை, புனஸ்காரங்களைத் திட்டிய்வர்கள்; பார்ப்பனரகளை வெறுத்தோர் சிலர்; அபார்ப்பனர்களின் தெய்வங்களையும் நகையாடியோர் சிலர்; அடாவடித்தமிழில் அட்டகாசமாக எழுதிச்சென்றோர் சிலர்; அதே வேளையில் அப்பார்ப்பனீயத்திலும் வைதீக மதத்திலும் தமிழரின் தொல்பழக்கத்தையும் சிலவற்றை ஏற்ற்வர்கள் சிலர். சைவ்நெறியில் அடக்கமாக நின்றாலும் வைதீகப்பார்ப்ப்னருக்குத் தெரியா அல்லது புலப்படா அல்லது ஏற்றுக்கொள்ளமுடியா சித்தாந்தங்களை உருவாக்கியவர்க்ள்.

    சுஃபிகள் சித்தர்கள் என்பது பெரிய பொய்யாகும். ஏனெனின்ல் சித்தர்களில் ஆன்மிக வாழ்க்கைக்கூறுபாடுகளை ச்ஃபிகளிடமட்டுமல்லாமல். பிறரிடத்திலும் – கிருத்துவரிடத்திலும், இசுலாமியரிடத்திலும் – நாம் பார்த்தாலும், சித்தர்கள் இந்துக்கடவுளையே ஏற்றுப்பேசியதால் அல்லது வணங்கி வாழ்ந்ததனால் சுஃபிகளோ மற்றவர்களோ சித்தர்களாகப்படமாட்டார்கள். ச்ஃபிகக்ள் இந்து – இசுலாம் இணைத்துப் பேசினார்கள். ஆங்கும் இங்கும் சேர்த்தார்கள். நாம் பேசும் சித்தர்கள் தமிழர்கள். இசுலாமைப்பற்றி அவர்களுக்குத்தெரியாது. தெரிந்திருப்பினும் அம்மதத்தைச் சட்டைபண்ணிய்வர்களல்ல. இவர்களை எப்படி சுஃபிகளிடம் இணைத்துப்பார்க்கமுடியும் ?

    எனவே இரு குணங்கள் இருந்தால் மட்டுமே சித்தர்கள் என்றழைக்கப்படவேண்டும்.

    1. தமிழ் நாட்டில் வாழ்ந்தோர்; அல்லது தமிழர்கள்
    2. இந்து தெய்வத்தைத் தம் வழியில் வணங்கியோர்.

    இரண்டுமே இல்லாத அல்லது இரண்டிலொன்றில்லாதா சுஃபிக்களையோ கிருத்துவர்களையோ சித்தர்கள் எனவழைக்கமுடியாது. தமிழிந்துக்களையுமழைக்கப்படவியலாது அவர்கள் பாரதியாரைப்போல ‘
    செல்லம்மா…செல்லம்மா’வேன்று கூறிக்கொண்டே செத்தால் ! அதாவது பற்றைவிட முடியாதவராயின் !!

    சுஃபிக்களைபற்றி மலர்மன்னன் எழுதியது சிண்டுமுடியும் வேலையாகும். வ்ஹாபி என்றார்; முகமதியக்கட்டுப்பாடுகள் என்றார். அவரின் நோக்கம் இசுலாமியரை நல்ல மனிதர்கள் அல்ல என்று காட்டுவதேயாகும்.

    தமிழ் இந்து காம் கட்டுரையில் ‘கிருத்துவமுத்திலும் இசுலாமுத்திலும் ஆன்மிகம் என்பதே கிடையாது. அதாவது அம்மதங்கள் வெறும் வெத்துவேட்டுகள் என்றும் அம்மதங்களில் சேர்ந்தோர் நல்லவராகமாட்டார்கள் என்றும் பொருள்பட எழுதிய இவர் ஒரு முசுலிம் தர்காவுக்குப்போய் கண்ணீர்விட்டாராம்.

    வள்ளுவர் சொல்வார்: வில்லன்கள் பலவிதம் வாழ்க்கையில். ஒரு விதமான வில்லன்கள் நம்மிடமே நம்மைபபோல்வே வாழ்வார்கள்.
    மக்களைபோல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.

    மலர்மன்னன் இசுலாமியரைப்பற்றி எழுதும் போது எனக்கு வள்ளுவரின் இக்குறள்தான் நினவுக்கு வருகிறது.

    கிருத்துவர்களில் பலர் சித்தர்களில் ஒன்றோ பலவோ குணங்கள் கொண்டவர்கள். அங்கெல்லாம் போய்க்கண்ணீர்விடுவாரா? அவர்கள் கீர்த்தனைகள் கேட்டேன்; மெய்சிலிர்த்தேனென்பாரா? மாட்டார்.மலர்மன்னனைப்போல ‘ஒப்பாரி யாங்கணட தில்!

    இங்கு இசுலாமியரைப்பற்றி எழுதியது இசுலாமை இசுலாமியரிடமே மோசமான மதம் என்று ஒரு குறும்புப்பிரச்சாரம் பண்ணவே. இனி பாம்பன் சுவாமிகளுக்கு வருவோம்.

  37. Avatar
    punai peyaril says:

    yeah, Kavya, no probs :) but keep writing… I used to read ur side too…. its good to have both side views..

  38. Avatar
    Kavya says:

    பற்றறுத்தவரே சித்தர்கள். அவ்வறுத்தலில் எந்தொவொரு மாசுமிருக்கக்கூடாது. என்றேன். இது சாத்தியமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. சாத்தியாகும் எப்போது? மனித நடமாட்டமில்லாதவிடத்துக்கு ஒரேயடியாகப் போய்விட வேண்டும். ஆங்கும் விலங்குகள் மீது பற்று வந்து தொலைத்துவிடலாம். ஒரு விலங்கில் மீது பற்றுவந்து தன் துறவறத்தை மாசுபடுத்திய சித்தர் ஒருவரின் கதை நீங்கள் படிக்கவிருக்கிறீர்கள்)

    பட்டினத்தாரின் வாழ்க்கை துறவறத்தின் இறுதிச்சொல் என்றேன். அஃதாவது அதற்கு மேல் துறவறத்துக்கு இலக்கணமில்லையென்று பொருள். மற்றவர்களும் இருக்கலாம். இங்கே பட்டினத்தாரை மட்டும் பார்த்துவிட்டு பாம்பன் சுவாமிகளுக்குப் போகலாம்.

    தன் தாயின் வேண்டுகோளுக்கிணங்க திருமபி வந்தார் காவிரிபூம்பட்டினத்திற்கு. ஏன் அத்தாயின் வேண்டுலகோளை ஏற்கவேண்டும்? பெற்ற தாயும் தந்தையும் பற்றுகள்தானே? பெண்டாட்டி மட்டுமா? பெண்டாட்டி பிள்ளைய விட்டவர் தாயையும் விட்டார்; ஆனால் தாயின் வேண்டுகொளை ஏற்று ஈமக்கிரியைகள் பண்ணினார்; அப்படியானால் தாய்ப்பற்றை விடவில்லை. ஆக அவரின் துற்வறம் மாசுபட்டதென்று சொல்லாமல், அத்துறவறம் 100/100 என்று என்னால் சொல்லமுடியவில்லை. நீங்கள் அலசிக்கொள்ளுங்கள்.

    பாம்பன் சுவாமிகள் எதை விட்டார் எதை விடவில்லையென்றெனக்குத் தெரியாது. நான் அவரின் இரசிகனன்று. அவர் வணங்கிய தெய்வத்தை நான் வணங்குவதில்லை. மலர்மன்னன் சொன்னதிலிருந்தும், ‘ராம்’ என்பவரின் பின்னூட்டததிலிருந்தும் அவர் சென்னையைத் தேர்ந்தெடுத்தார். ராமின் கூற்றுப்படி, அவர் வணங்கும் முருகக்கடவுள் அவரைச் சென்னைக்குப்போ என்று பணித்ததாகவும் அவர் அதனால் சென்றதாகவும் வருகிறது. இதற்கு மலர்மன்னனனால் பதில் சொல்ல்முடியவில்லை. ‘சென்னைக்கென்று ஏதோ விசேடமிருக்கிறது போலும்’ என்றெழுதுவது பாமரத்தனம்.

    சென்னைக்கு வரலாம் ஒரு முருக பக்தர். சென்னையிலும் முருகனுக்குச் சிறப்பான கோயில்கள் உண்டு: வல்லக்கோட்டை, திருப்போரூர், கந்தகோட்டம் (பாரிஸ்). கந்த கோட்டத்துக்கு வந்து நம் ஃபேவரிட் பாட்லகளைப் பாடி வதிந்தவர் வள்ளலார் (சண்முககனி என்று போகும் பாடல் என் சஹோதரியின் ஃபேவரிட் பாடல்). இப்படி பாம்பன் சுவாமிகள் செய்தாரா என்று தெரியவைல்லை. திருவான்மியூர் அருகில் பணக்காரர்கள் வாழுமிடத்திலேயே அவரின் சமாதியிருக்கிறது. பாலு ஜிவல்லர்ஸ்தான் அவரின் நினைவுப்புரவ்லர்கள். வேறெந்தெந்த பணக்காரர்களோ நானறியேன். இதே சென்னையில் பிறந்த அங்கேயே மறைந்த பேயாழ்வாரின் சமாதியும் மயிலாப்பூரின் கேட்பாரற்றுக்கிடக்கிறது. ஏனென்றால் எந்த ஜீவல்லர்ஸும் அவரின் நினைவவுப்புரவ்லார்கள் இல்லையே !

    பாம்பன் சுவாமிகளின் சென்னை வருகைக்கு எந்தவித திருப்திகரமான (முருகன் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏன் கடவுளுக்கு இந்த டிஸ்கிரிமினேசன்?) விளக்கமும் இல்லாத்தால் கேஸ் தோல்வியடைகிறது.

  39. Avatar
    punai peyaril says:

    பாலு ஜிவல்லர்ஸ் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது அவர் வைரம் தின்று இறந்த கதை தான். பெரியவர்கள் ஏதாவது சாமி அல்லது சாமியார்களை முன்னிலை படுத்துவது தாங்கள் பின்னால் ஒளிந்து கொள்ளவே… பாலு ஜு மட்டுமல்ல,, நல்லி சில்க் பெரிய மனிதன் திருப்பதியை உபயோகப்படுத்திய காரணம் சீச்சீ ரகம். இங்கு யாரும் அது பற்றி கேட்ட கூடாது.. ஏனென்றால் இலக்கியம், கச்சேரி என்று அந்த நபர் காசு கொடுப்பார். பல்லிளித்துக் கொண்டு இவர்கள் அவன் மின் நிற்பார்கள். ஊரில் ஓடிக் கொண்டிருந்த சாக்கடைப் பண்ணி தெருவிற்கு வந்து ,அங்கீகாரத்திற்காக ஊரையே சாக்கடையாக்கும் கதை தான் இன்று தமிழகத்தில். பாம்பன் சாமி கோவிலில் விசேஷ நாட்களில் போய் பாருங்கள்.. ஒபிஸீகள் புளியோதரை, தயிர், எலுமிச்சம் சாதம் என்று ஏறக் கட்டிக் கொண்டிருக்கும். அந்த தெருவே அடைத்துக் கிடக்கும். அதிகமாக பெருத்த கருத்த ஆனால் பள பள மஞ்சள் நகை மொண்ட கூட்டம் அதிகமிருக்கும்.. ஆன்மீக தேடலாம்… நாசமாப் போக… இங்கு ஒரு டிராபிக் ராமசாமி ஏதோ போராடுறார்… அவருக்கு ஓட்டுப் போட்டாவவது இரண்டு திறந்த சாக்கடை மூட உதவியாயிருக்கும்…. முன்னாடி அய்யர்கள் தான் சாமி காண்பித்து பொழைப்பு நடத்துனாங்க… இப்போ சாதி வித்தியாசம் இல்லாம மருவத்தூர்… சிரி சிரி.. நித்தி என்று ஒரே ஜில்பான்ஸா ஆகிப் போச்சு… பற்றற்வனை பார்க்க முடியாது… நம் கண்ணில் பட்டால் கவர்ந்தால் அதுவும் பற்றே….

  40. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    காவ்யா,

    உங்களது கேள்விகளெல்லாம் தர்க்க ரீதியாக சரிதான். ஆனால் சித்தர்களின் நடவடிக்கைகளோ உண்மையான ஆன்மீக தேடல்களோ அதர்க்கமானவை என்பது எனது புரிதல்.

    எனவே உங்களது தர்க்கரீதியான மதிப்பீட்டின்படி பாம்பன் சுவாமிகள் சென்னை வந்தது தவறென்றோ, சித்தர்கள் தமிழர்கள் மட்டுமே என்றோ, சுஃபிக்களை சித்தர்கள் என்பது ஏமாற்று வேலை என்றோ (இன்னும் என்னவெல்லாமோ) தோன்றினால் அது சரியே – உம்வரையில்.

    புதுமைப்பித்தன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது :

    “உங்களது அளவுகோலைத்தான் சரிபார்த்துக்கொள்கிறீர்கள்”

    1. Avatar
      Kavya says:

      //உங்களது கேள்விகளெல்லாம் தர்க்க ரீதியாக சரிதான். //

      இரு தளங்கள்: ஒன்று தர்க்க ரீதி; இன்னொன்று அதர்க்க ரீதி. இதுதானே உம் பிரச்சினை (உம் என்றெழுதியதால் என் பதில் இப்படித்தான் வரும். மரியாதை கொடுத்து வாங்குவதே மனிதப்பண்பு). இது இவ்விரு தளங்களிலிருந்துமே நான் எழுதவில்லை. நான் நிற்பது மூன்றாவது தளம்: எளிய பார்வைத் தளம்.

      சற்று சிந்த்தித்துப் பாருங்கள் முத்துக்குமார். உங்களுக்கோ, மலர்மன்னனுக்கோ இன்னார்தான் சித்தர்கள் என்று எவர் சொல்லிக்கொடுத்தார்? எவரும் சொல்லிக்கொடுக்காமலா இவர்களே சித்தர்கள் என்று முடிவெடுத்தீர்கள்? அப்படியென்றால் நீங்கள் பெரிய மஹான்களா? .

      என் நிலையின் படி, இன்னார்தான் சித்தர்கள் என்று தமிழ்ச்சான்றோர் சொல்லி சிலரைச் சித்தர்கள் என்றழைக்கிறோம். சித்தர் என்ற சொல்லே அவர்களுடையதுதானே? அவர்கள் காட்டிய சித்தர்களைப்பற்றி அறிந்துகொண்டு, அவற்றுனுள் காணும் குணக்கூறுகளை எடுத்துக்கொண்டு, நாம் ‘கோடானுகோடிபேரைச்’ சித்தர்கள் என்று ஏற்கலாமென்று மலர்ம்ன்ன்ன சொல்ல நான் மறுக்க நீங்கள் வநது அவர் சார்ப்பாகப்பேசுகிறீர்கள். மறுப்பதற்கு எனக்குக் காரணங்கள் உள். உங்களால் அக்காரணங்களை நோக்கத் திராணியுமில்லை. மனமுமில்லை. மாறாக என்னை ‘உம்’ போட்டு எழுதி தர்க்கம் அதர்க்கம் என்றெல்லாம் எழுதி மறைக்கப்பார்க்கிறீர்கள் !.

      இது தர்க்கமில்லை. எளிய பார்வை.. அப்பார்வையின்படி, எப்படி கோடானுகோடிபேர் சித்தர்கள் ஆக முடியும்? சித்தர்கள் பற்றறுத்தவர்கள். எப்படி கோடானுகோடி பேர் பற்றறுத்து சிததர் நிலையை அடைய முடியும்?

      இசுலாமியர் (சுஃபிகள்) சித்தர்கள் என்பது அவர்களிடம் காணும் சில சித்தர் சில குணக்கூறுகளை வைத்தே சொல்லப்படுகிறது. அதிலும் வஞ்சகம் பண்ணுகிறார் மலர்மன்னன் என்பது உங்களுக்குத்தெரியவில்லை. அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள்! எனன வஞ்சகம்? இவர்கள்தான் சித்தர்கள் என்ற அளவுகோலை தமக்குப் பிடித்தோருக்குப்போட்டு இசுலாமியர்கள் அவர்களை ஏற்காத‌து இசுலாமியர்கள் அடிப்படை வாதத்தைக் காட்டுகிறது என்பதே அவர் உள்நோக்கபபிரச்சாரம். நான் சுட்டிக்காட்டியவுடன், வ்ஹாபி இசுலாம் என்கிறார். இவர் ஏன் நாகூருக்கும், பொட்டல் புதூருக்கும் போய் வணங்கவில்லை? அவை மசூதிகள் அல்ல; தர்காக்கள். எப்படி ஆஜ்மீரோ அப்படித்தானே? சிததர் குணங்களைக்கொண்ட் இசுலாமிய மஹான்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டு அவர்களை முசுலீகள் மட்டுமல்லாமல் பிறரும் (பாரதியார் பொட்டல் புதூர் கந்தூர் விழாவில் மஹமது நபியைப்பற்றிப்பேருரை ஆற்றியவர்) போகிறார்கள். கிருத்துவத்திலும் மஹான்கள் உண்டு. அவர்களை ஏன் சித்தர்கள் என் ஏற்கவில்லை? காரணம் கிருத்துவர்களே இருக்கக்கூடாதல்லவா?

      அது கிடக்க. நீங்களே சொல்லுங்கள்; எப்படி கோடானு கோடி பேர் சித்தர்கள் ஆக முடியும்? எப்படி தமிழ்ச்சான்றோர் 18 பேரை மட்டுமே பேசினார்கள்? இஃதெல்லாம் தர்க்கமா? எளிய சிந்தனை கேள்விகளா?

      சித்தர்கள் யார் என்ற் வரையறை நாமே பண்ணிக்கொள்ள முடியாது. நம்மைவிட ஆன்மிகத்தில் ஊறிய்வர்கள் சொல்லித்தான் நாம் தெரிகிறோம். மலர்மன்னனால் முடியாது; உங்களால் முடியாது; என்னால் முடியாது. என்வேதான் சித்தர்கள் வாழ்க்கை படித்து நினத்துக்கொள்கிறொம். அவர்களின் வாழ்க்கை யாரால் எழுதப்பட்டது தமிழ்ச்சான்றோர்களால். ஏன் 12 பேரே ஆழ்வார்கள்?

      ஆழ்வார்கள் சித்தர்கள் இல்லை. சித்தர்கள் தனிவழி போனவர்கள். ஆழ்வார்கள் போகவில்லை. இஃதெல்லாம் சொன்னால் தர்க்கமா? எடுத்தேன் கவிழ்த்தேன் என எழுதக்கூடாது. புதுமைப்பித்தன் வேறொரு விடய்த்தில் எழுதியதை உதவிக்கு உங்கள் வசதிக்கு எடுத்துக்கொண்டு பேசுவது நீங்கள் எதையும் செய்வீர்கள் என்பதே வரும். பி ஹானஸ்ட். பாம்பன் சுவாமிகளுக்கு இடத்தின்மீது பற்றில்லையென்பதை எப்படிச்சொல்வது?

      இவ்வெளிய கேள்விகளையெதிர்நோக்கயிலாமல் தர்க்கமாம் அதர்க்கமாம் புதுமைப்பித்தன் சொன்னாராம் !!

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        “உம்” என்பது அவமரியாதையான விளி என்பதை இப்போதுதான் அறிகிறேன். தெளிவித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்.

        நான் எந்த சார்பிலும் பேசவில்லை. என்னுடையது எனது பார்வையில். “எப்படி அந்த பார்வையை அடைந்தாய்” என்றால் அதற்கு சூத்திரம் வருவிப்பதுபோலவெல்லாம் விளக்கிவிட இயலாது.

        ஒருவர் பற்றறுத்தவரா அல்லாதவரா என்பதையெல்லாம் இப்படி வெளிப்புற நடவடிக்கைகளை வைத்து திட்டவட்டமாக பேச இயலுமா என்பது எனக்கு தெரியவில்லை. “உங்கள் நிலையின்படி” சித்தர்கள் என்று அழைக்கப்படும் சில தமிழ்ச்சான்றோர்கள் சித்தர்கள் நிலை அடைந்தபிறகும் உணவு உண்டிருப்பார்கள்; எனில் அவர்கள் உணவின்மீது பற்றறுக்கவில்லை; உயிரோடும் இருந்திருக்கிறார்கள் எனவே உயிர்மீது பற்றறுத்து தற்கொலை செய்யவில்லை” என்றெல்லாம்கூட தர்க்கரீதியாக – ஆமாம் மறுபடியும் தர்க்கரீதியாகத்தான், அபத்தமாக இருப்பினும் – கேட்கலாம்தான். கேட்டுக்கொண்டேஏஏஏ இருக்கலாம்.

        பாலகுமாரன் ஒருமுறை சொன்னார் :

        “கேள்வியும் பதிலும் நீயாக இருத்தல்”

        1. Avatar
          Kavya says:

          From Puthumaipithan to Balakumaran? Why r u relying upon them ? I have little respect for these literature guys !

          Sithars considered, as v r told, caring for their mortal existence on this earth as a vexatious burden on them they shd carry on. They ate to survive. Eating to merely survive is not an attachment of any sort.

          Attachment to place is also out of the class of attachments which disqualify one from being a siththar. But that should not be a conscious decision – going to a place and settle down there. They came to certain place as that place had an important shrine for their God and, at the time, they thought their mortal end was near, so they lingered on to deposit their mortal frame there. Leaving one’s mortal frame is not death according to Hindu theology. E.g Pattinathaar who came to Tiruvottiyur to worship at the important shrine to Shiva and decided to stay put till he dissolved himself, which he did.

          Was the decision to come to Thiruvanmyoor a conscious decision of Pamban Swamigal ? If yes, what sort of consciousness it could be when there is no shrine there for Muruga? If no, and if his legs just took him there, and at the time i.e. by the time he reached, he felt it was his last place, it is ok to understand.

          But, as v know from Ram here, that is not the reason he came. Rather, he received a call from his god to go there and end his life.

          How far u can take such things is left to u. If left to myself, I take it as a lame excuse to choose a place; and camoflage a desire i.e. an attachment. Pamban Swamigal can’t be a siththar for that very reason !

          1. Avatar
            பொன்.முத்துக்குமார் says:

            You having no respect for those literature “guys”, viz. Puthumaipithan or Balakumaran means NOTHING. They’re nor pleading for one from you. I quote them wherever I feel appropriate. If that irks you, I’m not at fault and neither are they.

            Again, you’re revolving around within your own frame of discussion. As far as I’m concerned there’s no hard and fast rule or definition for a Sidhar. If you feel there’s one, I consider yourself an enlightened soul, but I beg to differ.

            Just b/c Pamban Swamigal chose a particular place to be his abode doesn’t “qualify” him to be a Sidhar is merely your opinion.

            And Pamban Swamigal is/was not a laboratory rat to find out if his legs took him there or his decision to goto Chennai was taken consciously or not etc.

            Again, you’re only trying to measure your scale using their heights.

            I remain.

        2. Avatar
          Kavya says:

          There is a hard and fast rule for a person to become a Siththar. If u care to read abt Sithars, u can find that a person shd arrive at a state of completely w/o ego. Attachments are either externally manifest or internally with the person which can be analysed and found; and they are ego. Bathragiri was found out in possession of both kinds of ego, which was pointed out by Pattinathar. B4 being so cocksure, y not read abt Sithars and broaden ur knowledge instead of reading these literature guys who wrote for money, name and fame, and look for guidance of your life from these fellows?

          Attachments are forms of ego. If a person has them, either 1 or many, in whatsover form or forms, he cant be called Siththar. As said, there are many defintions; of which this – i.e the important of being w/o ego, is paramount. Ur statement that there are no hard and fast rules is a baloney. V dont call them rules though. They are just the conclusions of spiritual persons whom we venerate and look forward to. They r not like literature idiots.

          Pamban Swamigal’s preference to Chennai is an external manifestation of his ego. Perhaps, he may have annihilated that block spot, once settled in Chennai. A great saint in possession of ego is no way diminishes him in our eyes. Because he annihilates it in due course and reaches the utimate state possible. Nathi moolamum rishi moolamum paarkkakkuudathu !

          But to me, PS couldn’t b equated with the glorious 18 of which we are proud of.

  41. Avatar
    punai peyaril says:

    பொன், ஆன்மீகம் என்பது ஒரு மனநிலைப்பாடே.. காவ்யா வாழ்வில் இன்னும் அடி வாங்கியது இல்லை போலும்… அதனால் தான் நெய்யில் ( எண்ணெய்யில் அல்ல ) வடை போல் சும்மா குதிக்கிறார். பட்டறிவு மட்டும் இல்லா நிலையில் அவர் கருத்துக்கள் இப்படித்தான் இருக்கும். ஒரு வேளை அவர் அடி வாங்காமல் தப்பிக்கலாம். ஆனால், மனம் என்பதும் உடல் என்பதும் நான் அதை வார்த்தெடுக்கும் வகையில் தான் நம்மை வழி நடத்துகிறது. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்ற கதை தான் அதிகம் இங்கு. அனுப்வமே ஆசான் என்பதே உண்மை.

  42. Avatar
    Punai peyaril says:

    I dont know how far kavya knows about MM. MM days started with the great crowd puller Anna …. And now he shares his journey with out any interpretations but kavya’s writing is full of interpretations. In the future someday his mind will settle down then we can see a total 180degree shift in his views

    1. Avatar
      Kavya says:

      Time changes man. V can never say what a man will become in future. Malarmannan’s agenda today s far removed from that of his days with Annathurai. What that agenda is can be found out from Tamil muslims and Tamil Christians !

      His agenda is evil which needs to be resisted, esp. when it is camouflaged in cool Tamil and egalitarian and humanitarian pose !

      Evil shd be resisted shd be taken to mean his agenda shd be exposed and resisted.

  43. Avatar
    smitha says:

    It is not surprising.

    Kavya being a EVR/Veeramani/Mu.ka supporter supports christian conversions, islamic terrorism, vote bank politics, minority appeasement etc., – in short, anything anti brahmin & anti hinduism.

  44. Avatar
    smitha says:

    பெரியாரின் மறுபக்கம் – பாகம் 5 (பெரியாரும் இஸ்லாமின் சாதியும்)

    இஸ்லாமின் சாதியைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்:

    ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்வதில் எவ்வளவு வல்லவர்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், இஸ்லாமில் ஜாதியைப் பற்றிய இவர்களுடையப் பிரச்சாரங்கள்.

    இஸ்லாமில் சாதி இல்லையாம், ஈ.வே. ராவின் பிதற்றல்!

    இந்துமதத்தில் பல ஜாதிகள் இருக்கின்றன. இந்து மதத்தில் மட்டுமே உயர்வு-தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன-என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? இதோ!

    இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன.
    (குடியரசு 03.11.1929)

    * தீண்டாமையை ஒழித்து மகமதிய மதமே! இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு-தாழ்வு இல்லை.

    * இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
    (குடியரசு 02.08.1931)

    * மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.
    (குடியரசு 23.08.1931)

    * தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.
    (குடியரசு 17.11.1935)

    * இப்போது வரவர இந்திய மனித சமூக ஒற்றுமைக்கும், சுதந்திர சித்திக்கும் கூட இந்திய மக்கள் முஸ்லிம்களாக ஆகிவிட்டால் பயன்படும் என்றும் நினைக்கிறேன்.

    * முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.
    (குடியரசு. 19.01.1936)

    * அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.
    (குடியரசு 31.05.1936)

    * கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றன.

    * இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன்.
    (நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)

  45. Avatar
    smitha says:

    அதாவது இஸ்லாமில் ஜாதி இல்லை. இஸ்லாமில் உயர்வு-தாழ்வு இல்லை. அங்கு எல்லோரும் சமம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்து. இதுபோலவே வீரமணியும் ‘சங்கராச்சாரியார்’ என்ற நூலில் ‘சாதி என்று வரும்போது அது இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலே உண்டு?’ என்று கேட்கிறார். ஆக இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தில் ஜாதி இல்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் கூறுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்கள்.

    இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்களே – இதுவாவது உண்மையா என்று பார்க்கலாம்.

    இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!

    ‘Social Stratification Among Muslim – Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-

    முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.

    1. உயர்சாதி முகமதியர்கள்.
    2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
    3. பொது ஜனங்கள், மற்றவர்கள்

    உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-

    1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.

    2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.

    3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.

    இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-

    1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)

    கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.

    2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
    அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.

    3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)

    4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)

    5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)

    6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)

    7. பஹாவீ

    8. ஸனூஸி

    9. கைதியானி

    10. அஹ்மதியா

    11. ஸீபிகள்

    இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)

    ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.

    இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:

    1. ஆந்திரா – மஹாதர்

    2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.

    3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.

    4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்

    5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்

    6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்

    7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)

    8. பஞ்சாப் – பகிர், மேகாதி

    9. ராஜஸ்தான் – ஜூலாஹா

    10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா

    11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்

    மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?

    இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானே! இந்த சாதிகள் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் வீரமணிக்கும் தெரியாதா? தெரியாது என்று இவர்கள் சுலபமாகப் பொய் சொல்லிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு தெரிந்த மாதிரி மேலும் ஓர் ஆதாரத்தை நாம் காட்டலாம்.

  46. Avatar
    smitha says:

    இஸ்லாமின் சாதிப் பற்றி அம்பேத்கர்!

    ஈ.வே. ராமசாமி நாயக்கரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாயணத்தின் இருபக்கங்கள் என்று சொல்கின்றார்களே, அந்த ஒரு நாணயத்தின் ஒரு பக்கமான டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

    ”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர். 1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

    அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

    மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

    சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

    I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

    1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

    II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

    1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

    2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

    3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

    4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

    III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
    பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

    மேலும் இஸ்லாமியர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ள பஞ்சாயத்து முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுவதாவது:-

    ”பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துக்களைப் போன்றே முஸ்லிம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லிம்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான். அவன் அவமானப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றபடுகிறான்; இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது; அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாட முடியும். ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும்; இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.”

    இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடி மதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.

    ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத் தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கம் இடமில்லை. இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்தும் தீமைகளையும் வரிந்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லிம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.”

    குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் கூறியதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகின்ற இந்த இஸ்லாமிய சாதிகள் கூட ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும், வீரமணிக்கும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இஸ்லாமில் சாதி இல்லை என்று இவர்கள் மறுபடியும், மறுபடியும் பொய் சொல்வதற்குக் காரணமென்ன?

    ஒன்று இஸ்லாமில் உள்ள சாதிகளை மூடிமறைத்து அம்மதத்துக்கும் இந்துக்களை மதமாற்ற உதவி செய்வதன் மூலம் இஸ்லாமியர்களிடமிருந்து தங்கள் அமைப்புக்கு பணம் பெறுவது.

    இரண்டாவது, இஸ்லாமியர்களை விமர்சித்தால் தம் உயிருக்கு பாதகம் எற்படும் என்ற பயம்.

    மூன்றாவது தங்களுடைய கருத்துக்கு எப்பொழுதும் யாராளும் மறுப்பு சொல்ல முடியாது என்ற ஆணவம்.

    இவைகள்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறதல்லவா! உண்மைகள் அவர்களுக்கே வெளிச்சம்!

    ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய் ஒரு புறமிருக்கட்டும். வீரமணி என்ன சொல்கிறார்? இந்து மதத்தைத் தவிர வேறுமதத்தில் சாதி இல்லையாம். இஸ்லாமிலே சாதி இருக்கின்றது என்று பார்த்தோம். அடுத்து இவருடைய தந்தை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதை கவனியுங்கள்:-
    பிரத்தியட்சத்தில் பறைக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். (குடியரசு 02-08-1931)

    தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும், ஜெயின் மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை. கிருத்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை (குடியரசு 19-01-1936)

    இதிலிருந்து தெரிவதென்ன?

    கிறிஸ்துவ மதத்திலும், பவுத்த மதத்திலும், ஜைனமதத்திலும் தீண்டாமையிருக்கிறது என்பது தானே? வீரமணியுடைய தந்தைக்கு பல மதங்களில் உள்ள தீண்டாமை தெரிகின்றது. ஆனால் பிள்ளைக்கு தெரியவில்லை. இதில் யார் உண்மையை சொல்லியிருக்கின்றனர்?

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் தீண்டாமைதானே தவிர சாதி இல்லை என்று வாதிடலாம். ஆனால் சாதி இருப்பதால்தான் தீண்டாமையே இருக்கின்றது என்று இவர்கள்தான் சொல்லி வருகின்றனர். அதனால் தீண்டாமை இருக்கின்றது என்று சொன்னால் அங்கு சாதியிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் வீரமணி சொல்வது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி திரியும் இவர்கள் பண்பாடுமிக்கவர்களாம்! இவர்களுடைய இதழுக்கு பெயர் ”உண்மை”யாம்! அதைவிட ”பொய்மை” என்று வைத்திருக்கலாம் அல்லவா!

  47. Avatar
    களிமிகு கணபதி says:

    காவ்யா,

    18 சித்தர்கள், 18 சித்தர்கள் என்று சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் இல்லையா ?

    அந்தப் 18 சித்தர்களில் ஒருவர் இஸ்லாமியர். :)

    .

  48. Avatar
    A.K.Chandramouli says:

    மலர்மன்னன் அவர்களுக்கு காவ்யா போன்றவர்களின் சான்றதழ் தேவை இல்லை. அதற்காக யாரும் கவலைப் பட வேண்டாம்.

  49. Avatar
    suvanappiriyan says:

    சுமிதா!

    ரொம்பவும் கஷ்டப்பட்டு இல்லாத சாதிகளை எல்லாம் இஸ்லாத்தின் மேல் ஏற்றுகிறீர்கள். தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்துக்கு சென்று ஒரு முஸ்லிம் பையனிடமோ இளைஞனிடமோ சென்று ‘நீ என்ன சாதி’ என்று கேளுங்கள். அவர்களுக்கே தெரியாது. நடைமுறையில் அனைவரும் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும் உறவு முறை சொல்லி வாழ்கிறார்கள்.

    இந்த நிலை இந்து மதத்தில் பார்க்க முடியுமா? கோவிலில்தான் அனுமதிப்பீர்களா?

    1. Avatar
      தங்கமணி says:

      பத்ரி சேஷாத்ரி பதிவில் இருந்த ஒரு கமெண்டை இங்கே இடுகிறேன். இந்த கமெண்டுக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

      ==
      தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்கள் வடக்கிந்திய முஸ்லீம் குடும்பங்களை போலவே தீவிர ஜாதி பற்றாளர்கள். தங்கள் ஜாதிக்குள் மட்டுமே திருமணம் புரிவார்கள். சையதுகள் சைய்துகளை மட்டுமே மணம் புரிய வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இது காஃப்ஃபா என்ற விதிமுறையில் வரும். மரைக்காயர்கள் ராவுத்தர்கள் லெப்பைகள் மட்டுமே தங்களுக்குள் மணம் புரிந்துகொள்கிறார்கள். உருது பேசும் தமிழ் முஸ்லீம் உருது பேசும் தமிழ் முஸ்லீமைத்தான் மணந்துகொள்வார்(பட்டாணிகள் போன்றோர்). நாசுவ முஸ்லீம்கள் நாசுவ முஸ்லீமைத்தான் மணந்துகொள்ள முடியும். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று கருத வேண்டாம். வடக்கில் இந்துக்களை விட முஸ்லீம்களிடம் ஜாதி உணர்வு அதிகம். கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் அதுவே உண்மை. வடக்கில் தங்கள் ஜாதி பெயரோடுதான் எல்லா முஸ்லீம்களும் அறியப்படுகிறார்கள். இது வடக்கிந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் முழுமைக்கும்.
      அது மட்டுமல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்தை தழுவிய ஈரானிலும் தங்கள் குலப்பெருமை பேசுவது இன்றும் காணக்கிடைக்கிறது. அது மட்டுமல்ல, குரைய்ஷிகள் உயர்ந்தவர்கள் அன்சாரிகள் தாழ்ந்த ஜாதி என்பதால் அன்சாரிகளிடம் நபிகளுக்கு பிறகு அரசுப்பதவி செல்லவில்லை.
      அல் அக்தும் என்ற தாழ்த்தப்பட்ட அரபுகள் அரபிய தீபகற்பத்திலேயே உள்ளார்கள்.
      தமிழ்நாட்டில் பிரச்சாரத்தின் காரணமாக, பெரியாருக்கு கிடைத்த தவறான செய்திகளின் காரணமாக, இஸ்லாம் சாதிக்கு எதிரானது என்ற கருத்து பரவியிருக்கிறது. அரேபியாவிலேயே மேல்குலம் கீழ்குலம் என்ற கருத்துகள் இருக்கும்போது தமிழ்நாட்டில் எபப்டி அது இஸ்லாத்துக்கு எதிரானதாக ஆகும்? அரபியாவில் தாழ்குலத்தை சேர்ந்த ஆண் உயர்குலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், அதுதெரியவந்தால், அது கட்டாயவிவாகரத்துக்கு வழிகோலும். (மேல்ஜாதி ஆண் கீழ்ஜாதி பெண்னை திருமணம் செய்யலாம். அது செல்லும்)
      மரைக்காயர்கள் தங்களை மேல்குடி அரபுகள் என்றேகருதுகிறார்கள். வெளியே சொல்வதில்லை என்றாலும், மரைக்காயர்களிடம் சற்று பேசிப்பாருங்கள்.
      இவ்வாறு தலித்துகளை முஸ்லீமாக ஆக்குவதற்கு தீவிர எதிர்ப்பு பரம்பரை முஸ்லீம்களிடம் இருப்பது உங்களுக்கு தெரியும். பிஜே, ஜவஹிருல்லாஹ் போன்றவர்கள் மட்டுமே வஹாபிய கருத்து காரணமாக அதிகாரப்பரவல் நோக்கி மதம் மாற்றுவதை ஊக்குவிக்கிறார்கள். பாரம்பரிய முஸ்லீம்களிடம் இவர்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. அதனால்தான் இவர்கள் தனியாக தேர்தலில் நின்றால் முஸ்லீம் பெரும்பான்மை தொகுதிகளில் கூட ஒரு சீட்டு கூட கிடைப்பதில்லை.

  50. Avatar
    தங்கமணி says:

    தமிழ்நாட்டில்தான் ஜாதிப்பெயர் இல்லாதவர்களை பார்க்க முடியும். வடக்கிலும், பாகிஸ்தான் பங்களாதேஷிலும் ஜாதிபெயருடனேதான் எல்லா முஸ்லீம்களும் இருக்கிறார்கள்.

    வேண்டுமானால் அனைவரும் அறிந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் பெயர்களை பாருங்கள்

    அஹ்மது பட்டேல்(பட்டேல் ஜாதி) காங்கிரஸ் தலைவர்
    மொஹ்சினா கித்வாய், (கித்வாய் ஜாதி காங்கிரஸ் தலைவர்
    பெனசீர் புட்டோ(முஸ்லிம் ராஜ்புத்)
    முஹம்மது அலி ஜின்னா(முஸ்லிம் ராஜ்புத்)
    தற்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி(கயானி ஜாதி, முஸ்லீம் ராஜ்புத்)

    அதுசரி இதெல்லாம் இந்திய ஜாதியால்தான் வந்தது. அரபியாவில் நாங்களெல்லாம் புனிதர்களாக்கும் என்பார்.
    இதோ அரபிய செய்தி

    http://archive.arabnews.com/?page=1&section=0&article=93023&d=3&m=3&y=2007

    Tribe Forces Couple to Divorce
    Maha Akeel, Arab News

    JEDDAH, 3 March 2007 — Another case of tribal incompatibility as a basis for intervening in a marriage and forcing the couple to divorce against their will has come to light.

    This time, an Eastern Province couple, who go by the initials H.M. and A.O. to protect their identities, have been receiving harassing phone calls and threats from the family of A.O., led by an elder who firmly believes marriages must remain within the tribe.

    “It was a daily nightmare,” said A.O., the wife who works as a public health specialist for a leading company. “No one stood by us.”

    The couple have complained to police about intimidation, harassment and outright death threats by tribal members in Al-Hassa, led by a tribal elder.

    The case is complicated by the fact that H.M. followed standard cultural procedures that included obtaining permission from A.O.’s legal guardian — her brother — and the wife’s mother (her father has passed away). Women of any age in Saudi Arabia require a legal male guardian who must be a family member.

    Shortly after their marriage in December, the tribal elder in Al-Hassa appeared and objected to the marriage, claiming that all members of the tribe must marry inside the tribe. A.O. says she and her branch of the tribe had not heard from this man in years.

    Still, this elder took action, filing an objection to the marriage at the Eastern Province municipality. Alkhobar authorities tried to resolve the conflict amicably, but the elder was insistent on the annulment of the marriage, which H.M. refused.

    Then the threats began. Members of the tribe living in distant parts of the country began phoning threats. It appeared to be some kind of campaign organized by the tribal elder to threaten, harass and intimidate the couple. H.M., who works as the general manager of a large company in Alkhobar, said tribe members visited him at his workplace to make threats. Other members of A.O.’s family were also targeted with threats.

    “These people had every intention of harming my wife and her brother and they made that very clear,” said H.M., who pointed out that some of the people making the threats and vulgar, highly offensive comments to A.O.’s mother are prominent government workers and college professors.

    The couple have filed complaints regarding these harassments with police in Al-Hassa, but little has been done.

    “We want to know who have been calling and sending those text messages because this is chaos and complete disrespect of the law,” said A.O.

    They saved all the phone numbers and text messages, most of which were made through calling cards. But some were also made from home phones or mobiles. They submitted a list of suspected names behind these threats.

    Meanwhile, A.O.’s mother’s health has been deteriorating and the couple decided the only way to stop the harassment of the mother was to file for divorce. H.M. signed the divorce papers in January.

    “The main reason I decided to divorce is for the sake of my wife’s mother,” said H.M. to Arab News. “They were under so much pressure and it was taking a toll on her health and I was really starting to get concerned about them and if something happened to any of them I would never be able to forgive myself.”

    The couple are now examining their options for seeking justice through the courts. However, recent reports of other high profile forced-divorce cases have given the couple little hope.

    “I feared that the chances of winning a case are slim given that in similar cases the outcome was unfavorable. There is no clear and consistent ruling in these cases,” H.M. said.

    H.M. was referring to the controversial Jan. 21 Court of Cassation (appeals court) ruling that upheld the decision of a lower court that forcibly divorced Fatima and Mansour Al-Timani at the request of Fatima’s half brothers. In that case, the divorce was sought based on tribal incompatibility.

    Fatima’s family claims Al-Timani deceived them on his tribal background. They were divorced in absentia last year then later arrested for co-habiting outside of marriage.

    Fatima languishes in an Eastern Province prison, unwilling to return to the custody of the family members who forced the divorce.

    The couple have two children — one in prison with the mother and the other in custody with the father.

    இன்னொரு அரபிய செய்தி வேண்டுமா?

    http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?section=middleeast&xfile=data/middleeast/2006/october/middleeast_october501.xml

    Mansoor is the man who had his happy marriage cut short when he was forcefully divorced from his wife by a judge in Al Jouf on the grounds of it supposedly violating social customs and practices. Mansoor told the story of how his brothers-in-law — who incidentally are his wife’s half-brothers — decided to dissolve his marriage because of supposedly tribal incompatibilities.

    tribal incompatibility என்றால் என்ன அய்யா?

    இன்னொரு அரபிய திருமணங்களை பற்றிய ஆராய்ச்சி
    http://family.jrank.org/pages/155/Bedouin-Arab-Families-Marriage-Divorce.html
    Bedouin-Arab Families – Marriage And Divorce

    family marriages krenawi bride sum

    Marriage for Bedouins has both religious and social significance. From an Islamic perspective, marriage legalizes sexual relations and provides the framework for procreation. From a social perspective, it brings together not only the bride and groom but also their nuclear families and hamail.

    Parents or parent substitutes arrange most marriages, sometimes without prior consultation with the prospective spouses or over their objections.
    (அதாவது ஆணிடமும் பெண்ணிடமும் அனுமதியே கேட்கப்படுவதில்லை. மறுத்தாலும் விடுவதில்ல) Since Islam encourages early marriage and childbearing, marriages may be arranged when the future bride and groom are in their early teens and, sometimes, when they are still children. There is no dating or courtship. A girl or young woman suspected of contact with a boy will be physically punished and have her freedom of movement and communication severely curtailed (Mass and Al-Krenawi 1994).

    Romantic love is regarded as a feeble basis for marriage. Muslims believe that love should grow out of marriage (Denny 1985). The main factors considered in the selection of a mate are the character, reputation, and economic and social status of the prospective in-laws, followed by the character and reputation of the spouses-to-be. Preference is usually given to relatives. First-degree relatives receive first choice of a prospective bride, followed by other members of the hamula and tribe. Hence, many Bedouin marriages are endogamous.
    (எண்டோகமஸ் என்றால் சொந்த ஜாதிக்குள்ளேயே திருமணம்)
    In some cases, exchange marriages (badal) are made. These are marriages in which two men marry one another’s sisters. Among the purposes of such marriages is to obtain a mate for a boy or girl with poor marital prospects. Often at least one of the parties in such unions agrees to it out of family pressure or a sense of duty.

    The boy’s family initiates marriage. It may be arranged directly by the families themselves or through mediators (Hana 1984; Moors 1995). In Islam, marriage is effected through a legal contract, which stipulates, among other things, the amount of the mahr, the dower, that the groom’s family must pay. In Bedouin-Arab families, the mahr is given to the bride’s guardian, usually her father, to purchase clothing and jewelry for her to start her married life. The jewelry serves as economic security for the wife in case of mishap. The mahr consists of a sum paid before the marriage and a larger sum to be paid only if the husband initiates a divorce. The latter sum is meant to discourage him from casting off his wife lightly (Moors 1995). The sum of the mahr varies with the families’ blood relations and is lower for relatives than for outsiders.

    Polygamy, which is permitted by the Qur’an (4:3), is practiced by a certain percentage of Bedouin-Arabs. Reasons for polygamy include pressure to take part in an exchange marriage; the illness or infertility of the wife, or her failure to bear sons or to meet her husband’s sexual needs (Al-Krenawi 1998b). Among some Bedouin, polygamy confers prestige as a sign of wealth and prowess (Abu-Lughod 1986). Traditionally, polygamy served as a way to enlarge the family labor pool and also as a way of providing the protection of marriage for women when there was a shortage of men (Al-Krenawi 1998b). Its negative consequences include the unequal distribution of resources among rival households, and jealousy and acrimony among the co-wives and among the children of different wives (Al-Krenawi 1998b; Al-Krenawi and Lightman 2000).

    Divorce is stigmatized and rare in Bedouin society. Unhappily married women are deterred from seeking divorce because the father is entitled to custody, whatever the child’s age, and by the poor prospects of remarriage for divorcees, other than to an older man or as a second, third, or fourth wife in a polygamous household (Al-Krenawi 1998a, 1998b).


    ஏமாந்த தமிழர்களை இன்னும் ஏய்ப்பதை விட்டுவிட்டு உங்கள் முதுகு அழுக்கை சுத்தம் செய்ய பாருங்கள். பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்.

  51. Avatar
    punai peyaril says:

    தங்கமணி, ஜெத்தா மதத்திற்கோ, ஜெருசலேம் மதத்திற்கு இவர்கள் வாய்ப்பிற்காக மாறியவர்களே…. பிறப்பால் வரும் சாதி டிஎன்ஏ கொண்டது. மதம், நம்பிக்கையை கொண்டது. ஆனால், இவர்கள் மத நூல்கள் படித்து மாறியவர்கள் இல்லை… லாபகணக்கிற்காக போட்ட கணக்கு அவர்களது. அப்படி ஒருவன் வாழ்வு முறை தத்துவ ஈர்ப்பிற்க்காக ஒரு புத்தகம் வேண்டும் என்றால், திருக்குறளை மிஞ்சியது எது…? உலகில்…?

    1. Avatar
      Kavya says:

      திருக்குறளில் நல்வாழ்க்கைக்கு ஒவ்வா கருத்துக்கள் மிக உள.

      எனவே அந்நூலை வைத்து ஒருவன் மதவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது.

  52. Avatar
    Kavya says:

    In every internet forum, the Tamil brahmins gang up and form a group with the agenda to attack Islam and Xianity. No wonder, they r doing it here. No prob with that, but they shd not abuse the Hindu religion for that !

    1. Avatar
      Kavya says:

      இசுலாம் கிருத்துவம போன்ற மதங்களைத்தாக்குபவர்களைக் கவனித்துப்பார்த்தால் தெரியும்! இவர்கள் தங்கள் பெற்றோரிட்ட வடமொழித்திருநாமங்களை மறைக்கக்காரணம் இவர்களைத் தமிழ்ப்பார்ப்பனர்கள் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சமே. மற்றவர்கள் இப்படி பிறமத வெறுப்பாளர்கள் உண்டு. ஆனால் அவர்கள் ஓரினமாக ஒரு கூட்டமாக வருவதில்லை. எந்த தலைப்பென்றாலும் அதை தமக்குச்சாதகாம தங்கமணி, பு.பெ, சுமிதா, திருப்புவதேன்? ஏன் சுமிதா ஈவெராவைப்பற்றித் தனிகட்டுரை போட்டு அங்கே தன் வயிற்றெரிச்சலைக்கொட்டக்கூடாது? பாம்பன் சுவாமிகளுக்கும் இசுலாம் கிருத்துவமதங்களுக்குமென்ன தொடர்பு? ஈவெரா ஏதாகினும் அவரைப்பற்றிச்சொன்னாரா? இல்லை கட்டுரையாளர்தான் எழுதினாரா? தங்கமணி, பாண்டியன், சின்னக்கருப்பன் – இவையெல்லாம் அ-பார்ப்பனப்பெயர்கள். எந்த பார்ப்பன்ப்பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கருப்பன், தங்கமணி, பாண்டியன் என்று பெயரிடுவது கிடையாது. இப்பெயர்களை இவர்கள் வைத்தெழுத காரணம், அபார்ப்பனர்கள் திரண்டுவந்து இசுலாம், கிருத்துவம், ஈவெரா – இத்தலைபபுகளைத்தாக்குவதாக மற்றவர்கள் நினைக்கவேண்டுமென்று வைத்துக்கொள்கிறார்கள். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

      பாம்பன் சுவாமிகள், மற்ற சித்தர்களைப்பற்றியெழுதுக. அல்லது அதன் தொடர்பையொட்டி எழுதுக.

  53. Avatar
    paandiyan says:

    இஸ்லாம் க்கு எதிராக இஸ்லாமியர்களும் , கிருஸ்து க்கு எதிராக கிறிஸ்துவர்களும் பேசுவது எழுதுவது எல்லாம் ஒரு சில அரை குறைகளுக்கு எங்கு த்ரியபோகின்றது . நம்பக்கு தெரிந்தது எல்லாம் கன்னட நாயகர் கிளப்பி விட்டு போன ஜாதி துவேசம் அதை வைது பொழப்பை ஓட்டுவது ….வியாபாரம்தான் மிக நன்றாக 1967 ல் போகின்ரதே இங்கு. அது சரி பரிசுத்த ஆவியில் இட்லி வேகமா . அது என்ன ரூம் நம்பர என்று எல்லாம் யாரு அவர்களை கேலி பண்ணி போஸ்டர் ஒட்டியது ?? யாரப்ப அது ?

  54. Avatar
    களிமிகு கணபதி says:

    காவ்யா,

    //Avaraippatri ezhugungka ! paarpoom//

    நான் எழுதலாம். ஆனால், இதைப் போன்ற பல விஷயங்களை எல்லாம் கொஞ்சம் கூடப் படிக்காமல் விமர்சனம் செய்யும் நீங்கள் விமர்சனம் செய்வதற்கு முன்பு கொஞ்சமாவது சுய தேடல் கொண்டு படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால், நான் எழுதுவதாக இல்லை.

    நீங்களே படித்து உங்கள் புரிதலை எழுதுங்கள். அது ஒரு புதிய விஷயமாக உங்கள் வாழ்வில் அமையும்.

    .

    1. Avatar
      Kavya says:

      இஃதெல்லாம் சொல்லிச் செய்யப்படுவதில்லை. சொல்லாமலே செய்யப்படவேண்டும்.

      போகட்டும். தனிக்கட்டுரையாகப் போடலாம். அதற்கு எந்தவித காரணமும் தேவையில்லை.

      சித்தர்கள் என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?

      அவ‌ர்க‌ள் அப்ப‌டி உருவாக்க‌வில்லையென்றால், 18 பேர் எப்ப‌டி அழைக்க‌ப்ப‌ட்டிருப்பார்க‌ள்?

      சித்த‌ர்க‌ள் குண‌க்கூறுக‌ள் ப‌ல‌ரிட‌ம் காண‌ப்ப‌ட்டாலும், அவ‌ர்க‌ள் எல்லாரும் சித்த‌ர்க‌ள் என‌ அழைக்க‌ப்ப‌ட‌லாமா ?

      அப்ப‌டிப்ப‌ட்ட‌ குண‌க்கூறுக‌ள் எவ்வ‌ள‌வு தூர‌ம் தேவை? அதாவ‌து அவை நம‌க்குக்காட்ட‌ப்ப‌ட்ட‌ 18 பேர்க‌ளிட‌ம் எப்ப‌டியிருன்த‌து? ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் சொல்லும் ‘கோடானு கோடிபேர்க‌ளிட‌ம்’ எப்ப‌டியிருன்த‌து?

      சித்த‌ர்க‌ள் 18 பேரும் என்த‌க்க‌ட‌வுளை எப்ப‌டி வ‌ழிப‌ட்டார்க‌ள்?

      அவ‌ர்க‌ள் த‌மிழ்ப்பார்ப்பன‌ர்க‌ள் காட்டிய‌ வைதீக‌ ம‌த‌வ‌ழிக‌ளை எவ்வ‌ள‌வு தூர‌ம் ஏற்ற‌ன‌ர்? எவ்வ‌ள‌வு தூர‌ம் உத‌றின‌ர்?

      சித்த‌ர்க‌ள் புதுக்க‌ருத்துக்க‌ளைச்சொன்ன‌வ‌ர்க‌ளென்றால், அத‌ற்கு எதிர்ப்பு ப‌ழைமைவாதிக‌ளிட‌மிருன்து வ‌ன்திருக்க‌வேண்டுமே? அவை ப‌ற்றி.

      சித்த‌ர்க‌ளுக்கு இன்து முனிவ‌ர்க‌ளுக்குமுள்ள‌ வேறுபாடுக‌ள் எவை?

      சித்த‌ர்க‌ளால் த‌மிழ‌ருக்கு என்ன‌ன்ன‌ கிடைத்த‌ன‌?

      ச‌மூக‌ வாழ்க்கையின் என்ன‌ன்ன‌ மாற்ற‌ங்க‌ள் உண்டாயின‌?

      இப்ப‌டித் த‌னித்த‌னியாக‌ப் பேசும்போது 18 பேர்தானே வ‌ருவ‌ர்? கண்ட‌வரெல்லாம் சித்த‌ர்க‌ளாக்கி நாம் இப்ப‌டி பேச‌விய‌லுமா? சித்த‌ர்க‌ளுக்கும் த‌மிழ் வ‌ர‌லாற்றில் ஒரு கால‌க‌ட்ட‌ம் உண்டே? சித்த‌ர்க‌ள் இருன்த‌ கால‌த்தில் இசுலாமும் கிருத்துவ‌மும் இருன்த்ன‌வா? அவைப‌ற்றி சித்த‌ர்க‌ள் என்ன‌ நினைத்தார்க‌ள்?

      ஏக‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ள். இக்கேள்விக‌ளுக்குப் பதிலாக‌ ஒரு நீண்ட‌ க‌ட்டுரை திண்ணைவாச்க‌ர்க‌ளுக்குக் கொடுக்க‌லாம். இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் பால‌குமார‌னின் செக்ஸ் நாவ‌ல்க‌ளைப்ப‌டித்து த‌ங்க‌ள் வாழ்க்கைத் த‌த்துவ‌ங்க‌ளை எடுக்கும் ப‌ரிதாப‌த்துக்குள்ளாவார்க‌ள். அவ‌ர்க‌ளைக் காப்பாற்ற‌ க‌ளிமிகு க‌ண்ப‌தி ஒரு க‌ட்டுரை சித்த‌ர்க‌ளைப்ப‌ற்றிப் போட‌வேண்டும்.

      சேக்கிழாரிட‌ம் சோழ‌ன் கேட்டானாம். சீவ‌க‌சின்தாம‌ணியைப்ப‌டித்து த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ட‌வுளிட‌ம் நாட்ட‌ம் போய், செக்ஸில் நாட்ட‌ம் வ‌ன்து கெட்ட‌ழிகிறார்க‌ள். என‌வே தாங்க‌ள் சிவ‌னடியார்க‌தைக‌ளைச்சொல்லி அவ‌ர்க‌ளைத்திருத்த‌ வேண்டும். த‌மிழ‌ர்க‌ளுக்கு செக்ஸ் ஃபீலீங்கே வ‌ர‌ப்ப‌டாது.

      க‌ளிமிகு க‌ண‌ப‌தியிட‌ம் நாம் அப்ப‌டியே கேட்போம்.

      பெண்ணின் முன்ன‌ழ‌கு, பின்ன‌ழகுப‌ற்றியெல்லாம் எழுதி அஃதை இல‌க்கிய‌ம் என்ற‌ பூச்சு விட்டு எழுதி த‌மிழ‌க‌ இளைஞ‌ர‌களைக்கெடுத்த‌/கெடுக்கும், தாச‌ன்க‌ளும் குமார‌ன்க‌ளும் மேலும் கெடுக்காம‌லிருக்க‌ க‌ளிமிகு க‌ண‌ப‌தி சித்த‌ர்க‌ளைப்ப‌ற்றி எழுத‌னும். குறிப்பாக‌ அன்த‌ இசுலாமிய‌ர் சித்த‌ரைப்ப‌ற்றி. விடுவோமா !

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        “இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் பால‌குமார‌னின் செக்ஸ் நாவ‌ல்க‌ளைப்ப‌டித்து த‌ங்க‌ள் வாழ்க்கைத் த‌த்துவ‌ங்க‌ளை எடுக்கும் ப‌ரிதாப‌த்துக்குள்ளாவார்க‌ள்.”

        காமாலைக்கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.

        1. Avatar
          Kavya says:

          பால குமாரன் ஆனால் நாம் ஏன் அவரின் ப்தினங்களில் போய் நம் வாழ்க்கைத்தத்துவங்களைத்தேடிக்கொள்ளவேண்டும் என்பதுதான் கேள்வி.உங்கள் தாய்மொழியில் சான்றோர்களுக்கும் ஆன்றோர்களுக்கும் பஞ்சமா ? மணிமணியாக எழுதிக்குமித்திருக்கிறார்களே!

          கனியிருப்பக்காய்கவருதலேன்?

  55. Avatar
    தங்கமணி says:

    அன்பின் காவ்யா,

    //இசுலாம் கிருத்துவம போன்ற மதங்களைத்தாக்குபவர்களைக் கவனித்துப்பார்த்தால் தெரியும்! இவர்கள் தங்கள் பெற்றோரிட்ட வடமொழித்திருநாமங்களை மறைக்கக்காரணம் இவர்களைத் தமிழ்ப்பார்ப்பனர்கள் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சமே. //

    இதற்கு பெயர் தோல்வி.
    எதிராக சொன்ன உண்மைகளை நேர்கொள்ளமுடியவில்லை என்றால், சொன்னவரது உள்நோக்கம், அவர் ஜாதி இன்ன இதர ஆகியவற்றை வைத்து விவாதத்தை திசை திருப்பும் முறை.

    உங்களது உளறலுக்கு சுவனப்பிரியனின் தற்காலிக மவுனமே பரவாயில்லை. அவர் ஒன்றும் காணாமல் போகப்போவதில்லை. வேறொரு திரியில் இன்னொரு இந்து மத அவதூறை எழுதுவார். ஏனெனில் அவரும் இங்கே சொல்லப்படுபவற்றை கண்டுகொள்ளப்போவதில்லை. அந்த நேர்மையும அவரிடம் கிடையாது.

  56. Avatar
    punai peyaril says:

    மற்றவர்கள் தைரியமாக விஷயத்தை தொட்டு பதில் சொல்லுகிறார்கள். ஜாம்பஜார் ஜக்கு ஏரியா உதார் பார்ட்டி மாதிரி காவ்ய பிறர் எழுப்பிய எந்த கேள்விக்கும் நேரிடையாக பதில் சொன்னதில்லை. இப்போது பல திருக்குறள் நல்வாழ்விற்கு உதவாது என்கிறார்….. இது பற்றி அவர் எழுதினால் நலம். கண்மூடித்தனமாக பெரியார் துதி பாடுபவன், எச்சி இலையில் புரண்ட பக்தர்களை விட மன பிறழ் நிலை கொண்டவன். பெரியார் எல்லாவற்றையும் வணிக ரீதியாக கொண்டவர்… தனது தனிப்பட்ட வணிக தோல்விகளால், பிற அறிவு சார்ந்த பகுதிகளில் அசைக்க முடியாமல் உட்கார்ந்திருந்த அய்யங்கார் அய்யர்களை விரட்டவே துவேஷ சிந்தனை பாராட்டினார்… ஆனால் அவருக்கு பிரச்சனை என்ற போது ஓடிப் போய் அடைக்கலம் கண்டது ராஜாஜி என்ற அய்யங்காரிடமே… சமூக சேவையில் பல பார்ப்பன்களைப் பார்க்கலாம்… ஆனால் வீரமணிகள் சமூக சேவை என்ற பெயரில் சொகுசு சொர்க்கத்தில் நீந்துகிறார்களே தவிர நிஜமாய் அக்கறை எதுவும் அங்கில்லை. படித்த பண்பான, உலகில் நாலு பேரிடம் தரமாக பேசக் கூடிய கருப்புச் சட்டைகளை யாராவது பட்டியலிட்டால் நன்று.

  57. Avatar
    மலையூரான் says:

    “இப்பெயர்களை இவர்கள் வைத்தெழுத காரணம், அபார்ப்பனர்கள் திரண்டுவந்து இசுலாம், கிருத்துவம், ஈவெரா – இத்தலைபபுகளைத்தாக்குவதாக மற்றவர்கள் நினைக்கவேண்டுமென்று வைத்துக்கொள்கிறார்கள். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?”
    ஆமாமில்ல. கணக்கு வழக்கில்லா பூனைப் (பொய்ப்) பெயர்களில் எழுதும் உரிமையாகப்பட்டது ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (அ) ஜோ அமலன் (அ) ஜோ (அ) திருவாழ்மார்பன் (அ) காவ்யா அவர்களுக்கு மட்டும் உலகோருக்காக ரத்தம் சிந்தி மரித்தெழுந்த தேவகுமாரனால் அருளப்பட்டதல்லவா. ஈயத்தைப்பார்த்து இளித்ததாம் பித்தளை

    1. Avatar
      Kavya says:

      என் கருத்து நன்னோக்கிலே சொல்லப்பட்டது. தமிழ்பார்ப்ப்னர்கள் சொல்வதெல்லாம் தவறென்றும். பார்ப்ப்ன எதிர்ப்பாளர்கள் சொல்வதெல்லாம் சரியென்பது என் கட்சியன்று. எப்போதுமேயில்லை.

      ஒட்டுமொத்தமாக அவர்கள் மட்டுமே சேர்ந்து ஓரிடத்தில் குமிந்து ஒரே ஆளைக்குறிவைத்து எழுதும்போதும் பேசும்போதும் என்ன தோன்றும்? அல்லது அதன் விளைவுதான் என்ன?

      அவர்கள் வெறும் தன்னலநோக்கில் காழ்ப்புணர்ச்சியில்தான் எழுதுகிறார்கள் என்றுதானே தோன்றும்? மேலும் அவ்வெண்ணம் இப்படி பாண்டியன், தங்கமணியென்று பெயர்களை வைத்துக்கொண்டு எழுதும்போது வலுப்படும்தானே? திட்டத்தான் செய்கிறீர்கள் அஃதையேன் நேரடியாகச்செய்யக்கூடாதென்பதுதான் என் ஒரே கேள்வி.

  58. Avatar
    களிமிகு கணபதி says:

    //சேக்கிழாரிட‌ம் சோழ‌ன் கேட்டானாம். சீவ‌க‌சின்தாம‌ணியைப்ப‌டித்து த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ட‌வுளிட‌ம் நாட்ட‌ம் போய், செக்ஸில் நாட்ட‌ம் வ‌ன்து கெட்ட‌ழிகிறார்க‌ள். என‌வே தாங்க‌ள் சிவ‌னடியார்க‌தைக‌ளைச்சொல்லி அவ‌ர்க‌ளைத்திருத்த‌ வேண்டும். த‌மிழ‌ர்க‌ளுக்கு செக்ஸ் ஃபீலீங்கே வ‌ர‌ப்ப‌டாது.//

    ஹா ஹா ஹா :)

    மற்றவர்களுக்கு எப்படியோ, காவ்யா ஒரு நல்ல விடாக்கண்டர்.

    உங்களுக்கு நல்ல கற்பனை வளம் இருக்கிறது காவ்யா !

    கதையாவது எழுதுங்கள். படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

    .

    1. Avatar
      Kavya says:

      கற்பனையா உண்மையா என்பதை என் கட்டுரை ‘கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்’ என்பதும் அதற்குப்பின்னர் போடப்படும் அடுத்த கட்டுரையும் களிமிகு கணபதிக்கு விளக்கும். எழுதியது கதையா உண்மையா என்பதைத்தெரிந்து கொள்ள அக்கட்டுரையைப்படிக்கவும்.

      சேக்கிழார் புராணம் என்று ஒன்று இருக்கிறது என்று தெரியாமல் ஒரு தமிழ்ச்சைவர் இருக்கிறாரென்றால் அது களிமிகு கணபதியாகத்தான் இருக்கும் எனவஞ்சுகிறேன்.

  59. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி கொடுத்த இஸ்லாத்தில் உள்ள சாதி லிஸ்டை வைத்துக் கொண்டு குர்ஆனை முழுவதுமாக தேடிப் பார்த்தாலும் ஒரு சாதிப் பெயரையும் காண முடியாது. ஆதாரபூர்வமான ஹதீதகளிலும் உங்களால் சாதிப் பெயர்களை காட்ட முடியாது. இஸ்லாத்தை அழிக்க நினைத்த எதிரிகள் கதைகளை புனைந்து முகமது நபி பெயரால் இட்டுக்கட்டினர். அறிஞர்கள் அதனை இனம் கண்டு என்றோ பறந்தள்ளி விட்டனர். அதை எல்லாம் தேடிப் பிடித்து பின்னூட்டம் இடுவதால் தங்கமணி சிறிது மன திருப்தி பட்டுக் கொள்ளலாம். வேறு எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது.

    ஆனால் இதற்கு மாற்றமாக இந்து மதத்தில் புராணங்களில் ஸ்மிருதிகளில் எந்த அளவு சாதி வெறி ஊட்டப்பட்டுள்ளது என்பதை வசன எண் முதற்கொண்டு தருகிறேன். தங்கமணியும் குர்ஆனிலிருந்து சாதி வெறியை வலியுறுத்தும் வசன எண்களை தரட்டும். தருவாரா! அல்லது ஓடி விடுவாரா!

  60. Avatar
    suvanappiriyan says:

    காவ்யா! தங்கமணி கொடுத்த இஸ்லாத்தில் உள்ள சாதி லிஸ்டை வைத்துக் கொண்டு குர்ஆனை முழுவதுமாக தேடிப் பார்த்தாலும் ஒரு சாதிப் பெயரையும் காண முடியாது. ஆதாரபூர்வமான ஹதீதகளிலும் உங்களால் சாதிப் பெயர்களை காட்ட முடியாது. இஸ்லாத்தை அழிக்க நினைத்த எதிரிகள் கதைகளை புனைந்து முகமது நபி பெயரால் இட்டுக்கட்டினர். அறிஞர்கள் அதனை இனம் கண்டு என்றோ பறந்தள்ளி விட்டனர். அதை எல்லாம் தேடிப் பிடித்து பின்னூட்டம் இடுவதால் தங்கமணி சிறிது மன திருப்தி பட்டுக் கொள்ளலாம். வேறு எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது.

    ஆனால் இதற்கு மாற்றமாக இந்து மதத்தில் புராணங்களில் ஸ்மிருதிகளில் எந்த அளவு சாதி வெறி ஊட்டப்பட்டுள்ளது என்பதை வசன எண் முதற்கொண்டு தருகிறேன். தங்கமணியும் குர்ஆனிலிருந்து சாதி வெறியை வலியுறுத்தும் வசன எண்களை தரட்டும். தருவாரா!

    இப்பொழுது யாரிடம் நேர்மை இருக்கிறது என்பது தெரிந்து விடும். :-)

  61. Avatar
    Kavya says:

    களிமிகு கண்பதி . 18 பேர்களில் ஒருவர் இசுலாமியர் என்றார். அவரைப்பற்றி எழுதாவிட்டாலும் கொஞ்சம் சொல்லலாமேயென்றால், அதற்கும் பதிலில்லை. இப்போ சேக்கிழாரிடம் சோழன் சொன்னது தெரிய்வில்லையென்கிறார்.

    சரி, நான் எழுதுவேன் கட்டுரையாக. ஆனால் அதில் கூறபடும் பெருவாரியான கருத்துகள் ஒரு மாபெரும் தமிழறிஞருடையதாக இருக்கும். ஏனென்றால் என் தமிழ் இலக்கிய ஞானம் கொஞ்சமே. இந்த வாரம் சேக்கிழார் பற்றியக்கட்டுரையை திண்ணைக்ககு அனுப்புகிறேன்.

  62. Avatar
    R V Aravintraj says:

    சித்தர்கள் என்பவர்கள் பழங்காலத்தில் மட்டுமல்லாமல் தற்காலத்தில் நம்முடன் வாழ்பவர்களும் உள்ளனர். யார் சித்தர் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல் எமைப் பொறுத்தவரையில் மக்கள் நலம் நாடி நல்லது செய்து வாழ்ந்து பின் அவர்களின் ரத்த சம்பந்தம் இல்லாத மக்களால், கடவுளாக, சாமியாக, சித்தராக நினைக்கப் படுபவர்கள் அனைவரும் சித்தர்களே. இவர்கள் தங்களை நம்பி வந்து குறைகளை கூறும் மக்களின் குறை தீர்க்கின்றனர் எனவேதான் மக்கள் இவர்களிடம் வருகின்றனர்.
    கிறிஸ்த்தவ மதத்தில் ஒரு பழக்கம் உண்டு. வாழும் காலத்தில் மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்து மரித்த பிறகும் மக்களின் குறைகளை தீர்ப்பவர்களை புனிதர்கள் என போற்றி வணங்குவது. இதில் சில கிறிஸ்த்தவ அமைப்புகளுக்கு உடன்பாடு கிடையாது. உதாரணமாக அன்னை தெரேசா அவரது தன்னலமற்ற சேவையை நாம் அனைவரும் அறிவோம். அவர் இன்று நம்மிடையே இல்லை. அதாவது அவரது ஊனுடல் இல்லை. ஆனால் பரபிரம்மமாக உள்ள அவரது ஆன்மா இன்றும் தன்னை வேண்டும் அன்பர்களின் குறை தீர்க்கிறது என்பதும் உண்மை. இவர்களை சித்தர் என்பதில் என்ன தவறு?
    பக்தி மார்க்கத்தில் இருந்து சித்த மார்க்கத்தில் வந்தவர்கள் பலர். எனவே இங்கு அதாவது சித்த மார்க்கத்தில் எந்த மதமும் இல்லை எல்லா மதத்திலிருந்தும் சித்தர்கள் தோன்றுவார்கள்.
    மாற்று கருத்து கொண்டவர்கள் யாரையும் யாரும் மாற்ற இயலாது. எனவே இதற்கு வீணாக நேரத்தை செலவிடாது நம்புபவர்கள் கீழ் காணும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சித்தர்கள் (சுவாமிகள், சாமியார்கள் எவ்வாறு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்) இடத்திற்கு சென்று அருள் பெறுவதே நலம்.
    வாழ்க வளமுடன்
    சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில சித்தர் சமாதிகள் (எனக்கு தெரிந்த)
    கிண்டியில்
    சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்
    கோலாபுரி சுவாமி
    ஏழுமலை சுவாமி
    கோழிபீ சுவாமி (சத்யானந்தா)
    முனியப்ப பரதேசி

    வியாசர்பாடியில்
    சிவப்பிரகாச சுவாமி
    கரபாத்திர சிவப்பிரகாச சுவாமி

    மைலாப்பூரில்
    குழந்தைவேல் சுவாமி
    முத்தையாசுவாமி
    (தற்கால) அப்பர் சுவாமி
    திருவண்ணாமலை ஆதீனம் சபாபதி சுவாமி
    திருவள்ளுவர் & வாசுகி

    அம்பத்து£ரில்
    ஐயா சூரியநாத கருவூரார்
    மௌனசுவாமி
    வேர்க்கடலை சுவாமி
    கன்னியப்ப சுவாமி

    பூந்தமல்லியில்
    பைரவ சித்தர்
    கருடகோடி சித்தர்

    பெரம்பூரில்
    மதனகோபால சுவாமி
    அந்துகுரு சுவாமி

    ஆலந்து£ரில்
    தாடிக்கார சுவாமி
    குழந்தைவேல் பரதேசி
    சந்நியாசி சுபேதார்

    நுங்கம்பாக்கத்தில்
    பன்றிமலை சுவாமி
    வீரமாமுனிவர்
    ஆதிசேஷானந்தா

    திருவான்மீயூரில்
    சர்க்கரை அம்மாள்
    வால்மீகி

    திருவெற்றியூரில்
    சடை அம்மாள் (எ) கமலா அம்மாள்
    மௌனசாமி

    நங்கநல்லு£ரில்
    மோனாம்பிகை
    ஞானாம்பிகை
    சாதுராம்

    தாம்பரத்தில்
    துர்க்கை சித்தர்
    எதிராஜ ராஜயோகி
    சச்சிதானந்த சுவாமி
    வேணுகோபால சுவாமி
    கங்காதரசுவாமி
    நாமமுனிசுவாமி

    கோடம்பாக்கத்தில்
    ஓங்காரனந்தா
    முருகப்பசுவாமி (தங்கவேல்சுவாமி)

    பரசைவாக்கத்தில்
    வீரசுப்பையா சுவாமி
    ஈசூர் சச்சிதானந்தசுவாமி

    புதுவண்ணாரப்பேட்டையில்
    முத்துக் கிருஷ்ணபிரம்மம்
    ஞானசுந்தர பிரம்மம்

    ஸ்ரீபெரும்புதூரில்
    அருள்வெளிச்சித்தர் (பாபா)
    ராஜராஜ பாபா சித்தர்

    ரெட் ஹில்ஸ்ல்
    அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
    கோவணசாமி

    புழலில்
    காவாங்கரை கண்ணப்பசுவாமி

    திருத்தணியில்
    கங்காதரசுவாமி

    ஸ்ரீமத் சதானந்தசுவாமி
    நிரதிசய ஆனந்தர்
    தட்சிணாமூர்த்தி சுவாமி
    சர்வசர்ப்ப சித்தர்
    மதுரை சு£மி
    எத்திராஜீலு சுவாமி
    மயிலை நடராஜ சுவாமி
    சந்திரயோகி சுவாமி
    மலையாள சுவாமி
    ஆளவந்தார் சுவாமி
    அம்பலவாண சு£மி
    சரஸ்வதி அம்மையார்
    சபாபதி சுவாமி
    மாசிலாமணி சுவாமி
    முனுசாமி ஐயா
    நாகமணி அடிகளார்
    ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்
    மண்ணிவாக்கம் பாவா
    மோதிபாவா
    சாயிவிபூதிபாவா
    பட்டினத்தார்
    பாடகச்சேரி ராமலிங்கசுவாமி
    ஐகோர்ட் சுவாமி (அப்புடுசாமி)
    பரஞ்சோதி மகான்
    ஞானப்பிரகாச சுவாமி
    பாம்பன் சுவாமி
    குருலிங்கசுவாமி
    ஸ்ரீசித்தர் சுவாமி&மாதாஜி சித்தர்
    சிதம்பரசுவாமி (பெரியசாமி)
    குணங்குடி மஸ்தான் சாகிப்
    அண்ணாசாமி
    ரத்தினசாமி
    பாக்கியலிங்கம்
    மார்க்கண்டேய மகரிஷி
    மல்லையா சுவாமி
    கர்லாக்கட்டை சித்தர்
    அன்னை நீலாம்மையர்
    அனந்த ஆனந்த சுவாமி
    சபாபதி சுவாமி
    ஆறுமுக சுவாமி & ஓட்டேரி
    அந்து (குரு) சுவாமி
    வேர்கடலை சுவாமி
    (இதனை பற்றிய மேல் விபரங்களுக்கு எனது ஈ மெயில் தொடர்பு கொள்ளவும்.)

  63. Avatar
    smitha says:

    Pirriyan,

    U can claim a 1000 times that castes are not mentioned in the Koran. But what is happening in real life cannot be denied.

    Let me ask 1 simple question. Women are generally not allowed in mosques, but shias allow women to pray in mosques. How? They have their own mosques. How?

    I understand from a muslim friend that other than Prophet Mohammed & Ur God Allah, no can issue fatwas. But how come every muslim leader issues fatwas left, right & centre?

    A muslim is supposed to visit mecca at least once in his lifetime that too with his own money. Then why do muslims clamour for govt assisted trips in this regard?

    Koran itself is interpreted differently by different sects. How do u respond to this?

    It is just that the caste system in hinduism gets lots of media coverage whereas in case of islam, it is not, for various reasons.

    Islamists are still very backward in their thinking. First try to change before accusing other religions.

  64. Avatar
    smitha says:

    Whenever any muslim indulges in terrorism, muslims immediately come out with a std explaianation ” Islam does not preach violence”.

    Does any religion preach violence?

    I can quote innumerable instances to show how backward islam is. Recently, a muslim divorced his wife over the phone & it was deemed valid by the deoband seminary.

    In another case, a few days back, a muslim in a drunken state uttered “talaq” thrice. The seminary ruled that the divorce is valid.

    There were even letters to newspapers by fellow muslims justifying the action. They claimed that the man ought to be punished for drinking by being seperated from his wife. No one spared a thought for the poor woman.

    Thousands of muslim girls are sold off by their parents to arabs in hyderabad. This is a regular happening.

    The point I am trying to make is this – do whatever nonsense within your religion.

    But do not go around killing innocent people & justifying your action as jehad – holy war.

  65. Avatar
    suvanappiriyan says:

    சகோ ஸ்மிதா!

    //Pirriyan,
    U can claim a 1000 times that castes are not mentioned in the Koran. But what is happening in real life cannot be denied.
    Let me ask 1 simple question. Women are generally not allowed in mosques, but shias allow women to pray in mosques. How? They have their own mosques. How?//

    குலங்கள் கோத்திரங்கள் என்பது உலக அளவில் மக்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக அனைவராலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் அதையே சாதியாக மாற்றி ஒருவன் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை மார்க்கத்தின் பெயரால் நிறைவேற்றுவது இஸ்லாத்தில் இல்லை. அதற்கு எதிரான கருத்துகள்தான் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. முஸ்லிம்களிலும் சிலர் சாதி பார்த்தார்களேயானால் அவர்கள் இன்னும் இஸ்லாத்தில் முழுமையாக நுழையவில்லை என்றுதான் அர்த்தம்.

    குர்ஆனிலோ முகமது நபியின் கட்டளைகளிலோ பெண்கள் பள்ளியில் வந்து தொழுவதை தடுக்கவில்லை. சிலருக்கு குழந்தை குடும்பம் என்று இருந்தால் வீட்டிலேயே தொழுது கொள்ள அனுமதி உண்டு. அந்த பெண் பள்ளியில் வந்து தொழ விரும்பினால் அதை யாராலும் தடுக்க முடியாது.

    //I understand from a muslim friend that other than Prophet Mohammed & Ur God Allah, no can issue fatwas. But how come every muslim leader issues fatwas left, right & centre?//

    இஸ்லாமிய அரசு இருந்தால்தான் ஃபத்வா கொடுக்க முடியும். அதுவும் குர்ஆனின் அடிப்படையில்தான் கொடுக்க முடியும். தனிப்பட்ட நபர்கள் கட்டை பஞ்சாயத்து செய்வதை மார்க்கம் அனுமதிக்கவில்லை. தற்போது நிலைமை மாறி வருகிறது.

    //A muslim is supposed to visit mecca at least once in his lifetime that too with his own money. Then why do muslims clamour for govt assisted trips in this regard?//

    எந்த முஸ்லிமும் இதற்காக போராடுவதில்லை. சில அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக செய்யும் கூத்துகள். படிப்பிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தாலே போதுமானது.

    //Koran itself is interpreted differently by different sects. How do u respond to this?//

    மொத்த குர்ஆனிலும் இரண்டு சதவீதம்தான் மொழி பெயர்ப்பில் சில கருத்து வேறுபாடுகள் சிலரிடம் உள்ளது. மற்ற அனைத்து குர்ஆனிய கருத்துக்களும் முகமது நபி தனது காலத்திலேயே முழு விளக்கமும் அளித்து விட்டதால் ஒரு குழப்பமும் இல்லை.

    //It is just that the caste system in hinduism gets lots of media coverage whereas in case of islam, it is not, for various reasons.
    Islamists are still very backward in their thinking. First try to change before accusing other religions.//

    இந்து மதகருத்துக்கள் இந்த காலத்துக்கு ஏற்றதாக இல்லாததும் வேதங்களில் மனிதர்களின் கருத்துகளும் புகுந்ததும் காரணமாக இருக்கலாம். இஸ்லாத்தில் இத்தகைய நிலை இல்லை.

  66. Avatar
    punai peyaril says:

    இந்து மதத்தை மனிதன் தனது வளர்ச்சி நிலைகொண்டு விமர்ச்சிக்கவோ தர்க்கம் பண்ணவோ முடியும்…. அது மூளையின் எதிர்ப்பை அரவணைத்து இருக்கும் மதம். அதனால் தான் அதிலிருந்து கிளை நதிகள் வரமுடிகிறது. மேலும், இன்று யோகா, தியானம் என்று உடல் மனம் என்று இரு வேறும் இணைந்து பயணப்படும் ஜீவன்களுக்கான பயிற்சி நிலைகள் என்று தத்துவார்த்த யதார்த்த நிலை கொண்டுள்ளது. கொஞ்சம் மூளை வேலை செய்து ஒரு கேள்வி வந்தால் , அதன் கூடவே பயம் – அதான் தாக்கப்படும் பயம் – ஏற்படுத்தப்பட்ட நிலையே பிரியன் மதம். அதிகமாக கடத்தல், வழிப்பறி, எதேச்சிகாரம், ஹவாலா என்பதை யார் செய்கிறார்கள். பெருவாரியான பின்பற்றாளார்கள் அடுத்தவரை நிம்மதி வாழ வைக்க முடியாத தத்துவங்களால் என்ன பயன்…? எல்லோரும் ஒரே இடத்திற்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்பது வணிக புத்திசாலித்தனமே… கடவுள் உலகை படைத்தான் என்றால் அதன் எல்லா பாகத்திலும் அவன் இருக்கிறான்… அனைத்தையும் அடக்கும், பார்க்கும், நினைக்கும், மாற்றும் மனதே அதீத வலிமையானது என்பதை அகம் பிரம்மாஸ்மி.. என்று இலகுவாக சொல்லப்பட்டது. இந்து மதம் வடக்கத்தியர் தந்தது என்றால், இஸ்லாம் என்ன திருநெல்வேலிகாரர் தந்ததா…? எப்படி மகாபாரதம் கஸின் பிரதர்ஸ் ஃபைட்டோ அது போல் தான், இஸ்லாம், கிறிஸ்துவமும் அந்த ஏரியா விடயம்…. எல்லோரும் சமம் என்பது பிதற்றல்… வேறு வேறு ரூபத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கவே செய்யும்… எல்லோரும் சமம் என்றால் கடவுளும் இறை தூதர்களூ படைப்புகளுக்குச் சமமே…அதை தான் இந்து மதம் சொல்கிறது… அனைத்தும் இறைவனின் அங்கம் என்று…புரியும் வரை குழப்பமே… அது சரி இந்து மதம் வேற்றுமை சொல்கிறது என்கிறீர்களே, நாளைக்கு ஆபிஸ் போனவுடன் உங்கள் மேலதிகாரியை , “தோ பாரு கொஞ்சம் இந்த சேரில் குந்திக்கோ ..” என்று அவர் இருக்கையில் உட்காருங்கள்…. வட்ட மேஜை என்றாலும் அதிலும் ஒரு தொடக்க நிலை இருக்கவே செய்யும்…

  67. Avatar
    smitha says:

    Piriyan,

    U are still harping on only 1 point – Koran does not allow it. But reality is different.

    Regarding the mecca trips, it is not only the muslim political parties but also religious leaders who plead with the govt to offer more sops.

    U say if a woman wants, she can come & pray in the mosque. The question is are they really allowed?.

    The answer is that a variety of sects do not allow it.

    GIven a chance, i am sure a majority of them would like to come to the mosque & offer prayers. Your point is that since they have to devote their time to their family & so they pray at home is a childish one.

    Regarding fatwas, they are being issued at a regular basis. If U say, it is coming down, U are living in a fools paradise.

    If there are only small difference in interpreting Koran as U say, then why so much confusion in issues like talaq, rape etc.,. I have quoted real time incidents here.

    Whether the caste system is in-built in the koran or not is not the question here. The point is it is still very much prevalent.

    I repeat – U may say 1000 things – Koran does not say this, that blah blah, but reality is a lot different.

    Open your eyes to reality.

    And I repeat what I said earlier – do whatever nonsense within your religion.

    But do not go around killing innocent people & justifying your action as jehad – holy war.

  68. Avatar
    suvanappiriyan says:

    திரு புனை பெயரில்!

    //அது சரி இந்து மதம் வேற்றுமை சொல்கிறது என்கிறீர்களே, நாளைக்கு ஆபிஸ் போனவுடன் உங்கள் மேலதிகாரியை , “தோ பாரு கொஞ்சம் இந்த சேரில் குந்திக்கோ ..” என்று அவர் இருக்கையில் உட்காருங்கள்…. வட்ட மேஜை என்றாலும் அதிலும் ஒரு தொடக்க நிலை இருக்கவே செய்யும்…//

    இந்த காலத்திலும் இப்படி ஒரு வாதத்தை வைப்பது இந்து மதத்தில் மட்டுமே சாத்தியப்படும். எனது மேலதிகாரி என்னை விட அதிகம் படித்து தனது நிலையை உயர்த்திக் கொண்டார். எனவே அவருடைய இருக்கையை நான் கேட்பது அறிவீனம். ஆனால் எந்த படிப்பும் இல்லாமல் நான் உயர் குலத்தில் பிறந்து விட்டேன் எனவே கோவிலும் மற்ற இடங்களிலும் எனக்கு முதல் மரியாதை தர வேண்டும் என்று நினைப்பது சம்பந்தப்பட்டவரின் அறிவீனம் அல்லவா? அதை வேதங்களின் பெயரால் எழுதி இன்றும் போற்றி பாதுகாப்பது எந்த வகை நியாயம். இதனால் தாழ்த்தப்பட்ட இனம் என்ற ஒன்றை உருவாக்கி இன்று வரை அவர்களை கொடுமைப்படுத்துவது எந்த வகை நியாயம். இதை கடவுள் சொல்லியிருக்க முடியுமா? என்ற சிந்தனை ஏன் உங்களுக்கு வரவில்லை.?

  69. Avatar
    punai peyaril says:

    அய்யா சுமிதா தமிழில் எழுதும்மய்யா… மத்தபடி நீங்க சொல்றது அவங்களுக்கு புரிந்தாலும் நடிச்சுத்தானே ஆகனும்… இந்து மதமா என்ன…? வீட்ல தோப்புக்கரணம் போட்டு விட்டு வெளியில கூழ் குடிக்கிறதுக்கு.. நம்ம பயமில்லாம இருக்க சாமி கும்பிடுவோம்… அவர்கள் அதற்கு எதிர்பதம்..

  70. Avatar
    suvanappiriyan says:

    சகோ ஸ்மிதா!

    //U say if a woman wants, she can come & pray in the mosque. The question is are they really allowed?.
    The answer is that a variety of sects do not allow it.//

    வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். எனது மனைவியும் தாயாரும் இன்றைய நாள் வரை பள்ளியில் சென்றுதான் தொழுது வருகிறார்கள். தற்போது கட்டப்படும் புதிய பள்ளிகள் அனைத்தும் பெண்கள் தொழுவதற்கு வசதியாக பிரத்யேகமாகவே கட்டப்படுகிறது. இங்கு சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் பெண்கள் தொழுவதற்கு ஏற்ற வகையிலேயே கட்டப்பட்டிருக்கும். மெக்காவில் உள்ள கஃபாவில் ஆண்களும் பெண்களும் இன்றும் தொழுதுவருவதை தொலைக்காட்சியில் தினமும் நீங்கள் பார்க்கலாம்.

    //If there are only small difference in interpreting Koran as U say, then why so much confusion in issues like talaq, rape etc.,. I have quoted real time incidents here.//

    சட்டத்தை விளங்காதவர்கள் கொடுக்கும் ஃபத்வாவுக்கு குர்ஆனோ இஸ்லாமோ எப்படி பொறுப்பாக முடியும்? டெலிபோன் தலாக், தலாக் தலாக் தலாக் என்று மூன்றுமுறை ஒரே தடவையில் கூறுவது எல்லாம் இஸ்லாம் காட்டித் தராத வழிகள். அடுத்து இந்தியாவை பொறுத்த வரை மற்ற மதத்தவரை விட விவாகரத்து முஸ்லிம்களிடம் குறைவாக நடப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    //But do not go around killing innocent people & justifying your action as jehad – holy war.//

    இதை எனக்கு சொல்வதை விட நரேந்திர மோடியிடமும் சாது பிரக்யாசிங்கிடமும், சுவாமி அசிமானந்தாவிடமும் அத்வானியிடமும் சொல்லுங்கள். நாங்கள் வன்முறை கூடாது என்று போராட்டம் என்ற வழியை தேர்ந்தெடுத்ததால் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமியரிடத்தில் வன்முறை குறைந்துள்ளதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். உண்மையாகவே அவர்கள் குர்ஆனை விளங்கியதால்தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தது. குர்ஆன் அநியாயமாக ஒரு உயிரை கொன்றவர் முழு மனித உலகையும் கொன்றவராவார் என்று போதிப்பதால் உண்மை முஸ்லிம் ஆயுதத்தை அப்பாவிகளின் பக்கம் திருப்ப மாட்டான். அப்படி யாராவது திருப்பியிருந்தால் பணத்துக்கு ஆசைப்பட்டு மற்றவர்களின் தூண்டுதலால் நடந்தவையாக இருக்கும். இதுதான் உண்மை.

  71. Avatar
    suvanappiriyan says:

    சகோ புனை பெயரில்!

    //எல்லோரும் சமம் என்பது பிதற்றல்… வேறு வேறு ரூபத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கவே செய்யும்… எல்லோரும் சமம் என்றால் கடவுளும் இறை தூதர்களூ படைப்புகளுக்குச் சமமே…அதை தான் இந்து மதம் சொல்கிறது… அனைத்தும் இறைவனின் அங்கம் என்று…புரியும் வரை குழப்பமே…//

    வர்ணாசிரமத்தை நன்றாக உள் வாங்கியிருப்பதால் உங்களால் இப்படி எல்லாம் சாதியை தூக்கிப் பிடிக்க முடிகிறது.

    //அதிகமாக கடத்தல், வழிப்பறி, எதேச்சிகாரம், ஹவாலா என்பதை யார் செய்கிறார்கள். பெருவாரியான பின்பற்றாளார்கள் அடுத்தவரை நிம்மதி வாழ வைக்க முடியாத தத்துவங்களால் என்ன பயன்…?//

    குற்ற செயல்களில் எல்லா சமூகத்தவருமே ஈடுபடுகின்றனர். இதற்கு சாதி மத வித்தியாசம் இல்லை. பெரும்பாலான மீடியாக்கள் உங்கள் சார்பாக இருப்பதால் ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அதை பெரிது படுத்தி அதற்கு மதத்தையும் சம்பந்தப்படுத்தி தங்கள் வேகத்தை தணித்துக் கொள்கிறார்கள்.

    மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு அனைத்திற்கும் முஸ்லிமகளை முதலில் கைது செய்தீர்கள். ஹேமந்த் கர்கரே வந்து அனைத்து உண்மைகளையும் வெளிக் கொணர்ந்தார். அவரையும் தீர்த்து கட்டியாகி விட்டது. ராஜா, கனி மொழி, ஜெயலலிதா போன்றவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் அதற்கு மதசாயம் பூச மாட்டீர்கள். ஒரு தாவுது இப்றாகிம் கள்ள கடத்தல் செய்தால் அந்த கிரிமினலை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்துவீர்கள். ஆனால் மக்கள் தற்போது உண்மையை விளங்கி வருகின்றனர்.
    //எல்லோரும் ஒரே இடத்திற்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்பது வணிக புத்திசாலித்தனமே… கடவுள் உலகை படைத்தான் என்றால் அதன் எல்லா பாகத்திலும் அவன் இருக்கிறான்… அனைத்தையும் அடக்கும், பார்க்கும், நினைக்கும், மாற்றும் மனதே அதீத வலிமையானது என்பதை அகம் பிரம்மாஸ்மி.. என்று இலகுவாக சொல்லப்பட்டது.//

    தவறான புரிதல்! உலக மக்கள் அனைவரையும் ஒரே உடையில் ஒரே முழக்கத்தில் ஒன்று கூட்டுவது மக்களுக்கிடையே சகோதர பாசத்தை உண்டாக்குவதற்காக. மக்களுக்கிடையே உள்ள ‘நான் வெள்ளையன்: நீ கருப்பன்’ என்ற பாகுபாட்டை போக்குவதற்காக! அங்கு எந்த வொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எந்த புரோகிதரும் கிடையாது. யாருக்கும் தட்சணை கொடுக்க தேவையில்லை.

    உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதால் சவுதி அரசுக்கு வருடந் தோறும் பல மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டியதாக இருக்கிறது. பெட்ரோல் பணம் மிதமிஞ்சி இருப்பதால் இறை வழியில் அந்த பணத்தை செலவு செய்கிறார்கள். எனவே ஹஜ்ஜூக்கு வருபவர்களால் சவுதி அரசுக்கு வருமானம் என்று ஏதும் இல்லை.

    நீங்கள் திருப்பதியில் ஆளுக்கு தக்கவாறு தரிசனத்துக்கு பணம் வசூலிப்பதை பார்த்து சவுதியிலும் அப்படி இருக்குமோ என்று நினைத்து விட்டீர்கள்

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4

    இதன் மூலம் உலக மொழிகள் அனைத்துக்கும் வேதங்களும் தூதர்களும் வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது..

  72. Avatar
    punai peyaril says:

    கேட்க நல்லா தான் இருக்கு… ஆனா நீங்கள் பிறப்பால் தானே முகமதியர். ஆனால், உலகின் உன்னத தொழில் புரட்சிக்கு காரணமான சித்தர் ஸ்டீவ் ஜாப் வேரிகளில் கலந்த மதம் தராத விடையை, இந்து மத விழுதுகளில் ஒன்று தானே தந்தது. சரியான நேரத்தில் அவருக்கு பசியாருதலாக இருந்தது ஹரே ராமா உணவு தானே… அதை விட இந்து மதத்திற்கு இந்த நூற்றாண்டில் பேரன்னெ வேண்டும். சரி அடிமைகள் தேசத்தில் சரிசமமாக நடத்துகிறார்களா..? ஒழுக்கமாக இருக்கிறார்களா…? பஹ்ரேன் பாலத்தில் வியாழ்ன் வெள்ளி அதிக டிராபிக் ஏன் என்று சொல்லாமே..? பிலிப்பினோ பெண்களின் நிலை அடிமை தேசத்தில் எப்படி..? அவர்களின் சிறு சேமிப்பும் வெளியேறும் போது புகார் கொடுத்தால் , சேமிப்பு காவலர்களால் பிடுங்கப்படுகிறதா இல்லையா..? வியாட்நாமியர்கள் எப்படி நடத்தப்ப்டுகிறார்கள்..? அப்புறம் உடை பற்றி சொல்லியிருந்தீர்கள்… அப்பாடியோ உலகின் சிறந்த கண்டுபிடிப்பு… ஒரே கலர் உடை என்றால் ஈக்குவாலிட்டி வருமா..? சரி, அப்ப ஏன் சௌதி மால்களில் அரை குறை பெண் உடைகள் விற்பனை தூள் பறத்துகின்றன…? வெள்ளையும் கறுப்புமாய் ஏன் வேறுபாடு… ஆண்கள் முண்டாசு துணி ஏன் சிவப்பு புளூ என்று வேறுபாடு..? படித்த சௌதி பெண்களிடம் பேசிப் பார்த்திருக்கிறீர்களா..? இதெல்லாம் விடுங்கள், நீங்கள் உங்களை விட ஏழையான, உங்களை விட குறைந்த அழகுள்ள, உங்களை விட உடல் பலமற்ற, நோய் உள்ள, படிக்காத, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலைகொண்ட ஒருவரை நீங்களோ இல்லை உங்கள் வாரிசோ திருமணம் செய்வீர்களா..? வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே வாழ்வின் நாக்ரீகம்.. இஸ்லா, கிற்ஸ்துவம், இந்து, புத்தம், சீக்கியம், ஜைனம் எல்லாம் நம்பிக்கைகள். எல்லாமே விமர்சிக்கப்பட வேண்டியதில்லை… எது யாருக்கு பிடிக்கிறதோ பின்பற்றட்டும்… ஆனால், அடுத்த மதங்களை தாக்குதல் கீழ்மை….

  73. Avatar
    களிமிகு கணபதி says:

    திண்ணை வாசகர்களுக்கும், திண்ணைக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    மேலும் பல வெற்றிகளை அள்ளித் தரப்போகும் புத்தாண்டைக் கொண்டாடுங்கள் !

    வந்தே மாதரம் ! வாழ்க தமிழ் ! வெல்க தமிழர் !

  74. Avatar
    suvanappiriyan says:

    புனை பெயரில்!

    //கேட்க நல்லா தான் இருக்கு… ஆனா நீங்கள் பிறப்பால் தானே முகமதியர்.//

    இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்து விட்டதனால் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது. அரசு கெஜட்டில் வேண்டுமானால் ‘முஸ்லிம்’ என்று பதிந்து கொள்ளலாம். ஆனால் குர்ஆன் சொன்ன வழிபடி அந்த முஸ்லிம் நடந்தால்தான் இறைவனின் பொருத்தத்தை பெற முடியும்.

    //சரி அடிமைகள் தேசத்தில் சரிசமமாக நடத்துகிறார்களா..? ஒழுக்கமாக இருக்கிறார்களா…? பஹ்ரேன் பாலத்தில் வியாழ்ன் வெள்ளி அதிக டிராபிக் ஏன் என்று சொல்லாமே..?//

    ஒரு காலத்தில் அடிமைகள் கட்டக்கடங்காமல் இருந்து முகமது நபியின் கட்டளையால் அவரது காலத்திலேயே அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் நமது பாரதத்திலோ ஒரு தாழ்த்தப்பட்டவன் வாயில் மலத்தை திணிக்கும் நிகழ்ச்சி சமுpபத்தில் நடந்ததை மறந்து விட மாட்டோம். இன்றும் சிரட்டையில் தேனீர் கொடுப்பதும், இரட்டை குவளை முறையும் ராமநாதபுரம், மதுரைகளில் நடந்து வருவதை மறுக்க முடியுமா? கோவிலில் தேர் இழுக்கவே அவர்களை அனுமதிப்பதில்லை. தெருக்களில் செருப்பை கைகளில் தூக்கிக் கொண்டு செல்வதும், மேல் சாதியினரை பார்த்தால் கூழை கும்பிடு போடுவதும் நமது பாரதத்தில் இன்றும் நடக்கும் நிகழ்ச்சி. ‘அடிமை தேசம்’ என்று நமது பாரதத்தை வேண்டுமானால் சொல்லுங்கள்.

    சவுதிகளிடம் உள்ள பணமும் வசதியும் நம் நாட்டவரிடம் இருந்தால் அதை விட மோசமாக நடந்து கொள்வார்கள். பணம் அதிகம் புரள்வதால் சிலர் சந்தோஷத்துக்கு பஹ்ரைனை நாடுகின்றனர். இது தவறு என்று பள்ளியில் போதனையும் செய்யப்படுகிறது.

    //அப்பாடியோ உலகின் சிறந்த கண்டுபிடிப்பு… ஒரே கலர் உடை என்றால் ஈக்குவாலிட்டி வருமா..?//

    எங்களிடம் வந்திருக்கிறதே! ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கணியனின் சொல் ஹஜ் நேரத்தில் நிறைவேறுவதை கண் கூடாகப் பார்க்கலாம். இந்த வருட ஹஜ்ஜை நேரிடையாக ஒளிபரப்பும் போது பார்த்து மகிழுங்கள்.

    ஒரே ஹிந்து மதத்தில் கட்டி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்டவனை ஒரு முறையாவது வேதம் கற்பித்து அவனை புரோகிதராக மாற்ற உங்கள் மனம் இடம் கொடுக்குமா? ஆனால் அவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் அவனுக்கு குர்ஆனை கற்பித்து பள்ளியின் தலைவராக தொழுகை நடத்துபவராக மாற்றப்பட்டுள்ளதை தமிழகத்தின் பல கிராம நகர மசூதிகளில் பார்க்கலாம். இதுதான் உண்மையான புரட்சி.

    //ஆண்கள் முண்டாசு துணி ஏன் சிவப்பு புளூ என்று வேறுபாடு..? படித்த சௌதி பெண்களிடம் பேசிப் பார்த்திருக்கிறீர்களா..?//

    அது அரபு உடைக் கலாசாரம். நீங்கள் பஞ்சகச்சம் கட்டிக் கொள்வதும் மடிசார் புடவை கட்டிக் கொள்வதும் உங்கள் அடையாளம் என்பது போல். இந்த வேறுபாட்டை வைத்து ஒரவனை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வேறுபாடு காட்டுவதைத்தான் எதிர்க்கிறோம்.

    ஒருவகையில் உங்களைப் போன்றவர்கள் நன்மை செய்திருக்கிறீர்கள். உங்கள் மூதாதையர் எங்கள் மூதாதையர்களை கொடுமைபடுத்தாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்று முஸ்லிம்களாக மாறி இருக்க முடியாது. :-)

    //இதெல்லாம் விடுங்கள், நீங்கள் உங்களை விட ஏழையான, உங்களை விட குறைந்த அழகுள்ள, உங்களை விட உடல் பலமற்ற, நோய் உள்ள, படிக்காத, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலைகொண்ட ஒருவரை நீங்களோ இல்லை உங்கள் வாரிசோ திருமணம் செய்வீர்களா..?//

    ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்கும் சமூகத்தில் ஒருவனை சுயமரியாதையோடு நடத்துவதற்கும் வித்தியாசம் இல்லiயா? வர்ணாசிரமம் எந்த அளவு உங்கள் கண்களை மறைக்கிறது என்பது தெளிவாகிறது.

    //வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே வாழ்வின் நாக்ரீகம்..//

    ஆக தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க வேண்டும். பேசாமல் முன்பு ராஜாஜி கொண்டு வர முயற்ச்சித்த ‘குலக்கல்வித் திட்டத்தை’ ஜெயலலிதாவிடம் சொல்லி உடன் அமுல்படுத்தச் சொல்லுங்கள். இந்தியா வெகு சீக்கிரம் முன்னேறி விடும். :-)

  75. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியனை விட பிரம்மாண்டமாக பொய் சொல்ல இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்

    //ஒரு காலத்தில் அடிமைகள் கட்டக்கடங்காமல் இருந்து முகமது நபியின் கட்டளையால் அவரது காலத்திலேயே அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. //

    அடிமை முறை முகமது நபியின் கட்டளையால் ஒழிக்கப்பட்டதா?

    கிறிஸ்துவர்கள் அடிமைகளை வாங்கினார்கள். முஸ்லீம்கள், அரபுகள் விற்றார்கள். இதுதான் உண்மை. ஆப்பிரிக்கா முழுவதும் அடிமைகளை பிடித்து விற்றது அரபு முஸ்லீம்கள். வாங்கி ஐரோப்பா அமெரிக்கா என்று எடுத்து சென்று அடிமைகளை வைத்து வேலை வாங்கியது கிறிஸ்துவர்கள்.

    ஆப்கானிஸ்தான், இந்தியா, போன்ற பகுதிகளிலும் அடிமை முறையை புகுத்தியது முஸ்லீம்களே. வடக்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையான அடிமைகளை வைத்திருந்தது முஸ்லீம்களே. வரலாற்றாசிரியர்கள் இந்தியாவுக்கு அடிமைமுறையை கொண்டுவந்து அந்த அடிமைகளை மதம்மாற்றியது முஸ்லீம்களே என்று கூறியுள்ளார்கள்.
    the slave-taking added significantly to the growth of the Muslim population in India: “… every slave captured in war or purchased in the market or sent in lieu of revenue or tribute was invariably converted to Islam, so that slave-taking in medieval India was the most flourishing and successful missionary endeavour.”

    The nobility owned huge numbers of slaves and maintained large slave armies. For example, a 14th century sultan kept 180,000 slaves of whom 40,000 were palace guards. In this situation of abundance the price of female slaves was very low. The large numbers of slaves captured in campaigns were either sold in local markets or sent to markets in central Asia.

    சொல்லப்போனால் இன்னும் உலகத்தில் அடிமை முறை இருப்பது மௌரிட்டானியா, சூடான், நைஜர் மாலி என்ற முஸ்லீம் நாடுகளில் மட்டும் தான்.

    சவுதி அரேபியாவில் எப்போது அடிமை முறை ஒழிக்கப்பட்டது?
    1962இல்தான் சவுதி அரேபியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. காரணம்? அமெரிக்கா வற்புறுத்தியதால்!

    It was not until 1962 that all slavery practice or trafficking in Saudi Arabia was prohibited.

    http://www.arabianews.org/english/article.cfm?qid=132&sid=2

    “Slavery is a part of Islam,” he says in the tape, adding: “Slavery is part of jihad, and jihad will remain as long there is Islam.”

    சரி, ஏன் முகம்மது, அடிமைகளை விடுவிக்க முனைந்தவரை திட்டி, அந்த அடிமைகளை மீண்டும் அடிமைகளாக்கினார்?

    Narrated Kurib: the freed slave of Ibn ‘Abbas, that Maimuna bint Al-Harith told him that she manumitted a slave-girl without taking the permission of the Prophet. On the day when it was her turn to be with the Prophet, she said, “Do you know, O Allah’s Apostle, that I have manumitted my slave-girl?” He said, “Have you really?” She replied in the affirmative. He said, “You would have got more reward if you had given her (i.e. the slave-girl) to one of your maternal uncles.”
    Sahih Bukhari 3:47:765

    மேலும் தகவல்களுக்கு
    http://en.wikipedia.org/wiki/Islamic_views_on_slavery

    அது சரி சுவனப்பிரியன்
    முகம்மதின் இந்த அறிவுரைக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?
    Q.2:178 – O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female.

    உங்கள் அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால் நீங்கள் யாரை கொல்லவேண்டும் என்று முகம்மது சொல்கிறார்? கொன்றவரையா? கொன்றவரது அடிமையையா?

  76. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //ஆப்கானிஸ்தான், இந்தியா, போன்ற பகுதிகளிலும் அடிமை முறையை புகுத்தியது முஸ்லீம்களே. வடக்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையான அடிமைகளை வைத்திருந்தது முஸ்லீம்களே. வரலாற்றாசிரியர்கள் இந்தியாவுக்கு அடிமைமுறையை கொண்டுவந்து அந்த அடிமைகளை மதம்மாற்றியது முஸ்லீம்களே என்று கூறியுள்ளார்கள்.//

    ஹா..ஹா…நகைச்சுவையாக இதுபோன்று நிறைய எழுதுகிறீர்கள்.

    “ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!” (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

    ————————————

    .

  77. Avatar
    suvanappiriyan says:

    ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய “தமிழகத்தில் அடிமை முறை” என்ற நூலிலிருந்து:

    சங்க காலத்தில் அடிமை முறை என்ற பகுதியில் மருத நிலப்பகுதியில் அடிமைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் “சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரி பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது “கொண்டி மகளிர்” என்று இவர்களைப் ‘பட்டினப் பாலை’ ஆசிரியர் குறிப்பிடுகிறார். (22)

    பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் (பக். 29) அடிமைத் தொழில் இழிவாக இக்காலகட்டத்தில் கருதப்பட்டதைப் பல சமய இலக்கியச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார்.

    சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

    (1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.

    அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. (பக். 40).

    இதன் நீட்சியாக மராட்டியர்கள் கால அடிமை முறையைக் காட்டுகிறார். இந்த அதிகாரத்தில் அடிமைகள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றியும் கூறுகிறார். இதற்கு முழு உதாரணமாக ‘ஒடைப்பிலே போடு’ என்ற சொல்லாக்கத்திற்கு ஒரு உதாரணம் காட்டுகிறார்.

    “எப்பொழுதாவது ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்கு தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம் எனக் கருதி, அவற்றின் கோபத்தைத் தணிக்க ஓர் அடிமையை அந்த உடைப்பில் தள்ளி, அவர் மேல் மண்ணைப் போட்டு மூடி அவரைப் பலி கொடுத்து விடுவார்கள்….. இந்தப் பயங்கரமான பழக்கம் அவ்வளவு பரவலாக இருந்ததன் விளைவாக அது ஒரு பொதுவான பழமொழிக்கே வழிவகுத்தது! இவன் என்னத்துக்கு ஆவான்! ஒடைப்பிலே போட்டு மண்ணைச் சுமக்கவா?” என்று கூறுவர். அதாவது இவன் உடைப்பில் உயிருடன் போட்டுப் புதைப்பதற்கன்றி வேறெதற்கும் லாயக்கில்லை என்பதாகும்” (58/59).

  78. Avatar
    suvanappiriyan says:

    தமிழகத்தில் அடிமை முறை:

    அடிமை முறையின் ஒரு அருவருக்கத்தக்க அம்சம் தேவரடியார்கள் முறை. இது பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ந்ததென்று இவர்களுக்குச் சுயத்தன்மை உண்டு என்றாலும், இவர்களைக் கோயில்களுக்குத் தானமாக அளித்தனர். போரில் பிடித்த பெண்களைத் தேவரடியார்களாகத் தானமளிப்பது பெண்களை விலைக்கு வாங்கித் தானமாக அளித்தது இந்த இரு கூறுகளில் இதில் காணலாம். இவர்கள் தவறு செய்தால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் (61) ‘பொட்டுக்கட்டுதல்’ என்ற நிகழ்ச்சி வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் இருந்தது.

    “பாலியல், பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொது மகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரை முறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது” (67) (இன்றைக்கும் கூட பெருமாள் கோயில்களில் பெருமாள் “தேவடியாக் குடிக்குச்” சென்று வருவது ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது).

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குடும்பத்துடன் அடிமையாக்கப்பட்ட கொத்தடிமைகள், பண்ணையடிமைகள், படியாள் என்ற முறையும், தஞ்சைப் பண்ணையாள் முறை என்பதும் வழக்கத்தில் இருந்தது. இந்தப் பண்ணையாள் முறையை ஒழிப்பதற்கு மணலி சி. கந்தசாமி தலைமையிலான போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார் (82)

    “முழங்கால் வரை இருந்த சேலையை / கணுக்கால் வரை கழுத்து விட்டதாரு / மணலி கந்தசாமி என்று கூறு” (82) இவர்கள் தவிர ஆங்கில ஆட்சியில் மலைத்தோட்ட அடிமைகளும் உருவாயினர்.

    இந்த நூலில் அவர் மிகக் கவனமாக அடிமைமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் இங்கு நிலவியது அடிமைச் சமுதாயம் அல்ல. அடிமை முறை மட்டுமே இருந்தது. இது மேற்கத்திய முறையில் இருந்து மாறுபட்டு இருந்தது. சமூக அமைப்பு புராதன இனக்குழு மக்கள் அமைப்பு, அடிமைச் சமுதாயம், நிலஉடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமூகம் என்றபடி மூளை வளர்ச்சி நம்மிடையே நேர்கோட்டுப் பாதையில் இடம் பெறவில்லை. ஆசிய உற்பத்தி முறை என்று மார்க்ஸ் அழைத்ததற்கு ஏற்ப இங்கு அவற்றில் ஒருவகைத் திணை மயக்கம் ஏற்பட்டு இருந்தது. இவற்றை கா. சிவத்தம்பி சமச்சீரற்ற வளர்ச்சி என்று அழைக்கிறார். சங்ககாலத்தில் ஐவகை நிலங்களில் அடிமைகள் மருத நிலத்தில் மட்டுமே இருந்தனர். சமுதாயமாக அல்ல ஏனென்றால் அடிமைகள் சமுதாயமாக இயங்குவதற்குரிய உபரி உற்பத்தி தமிழகத்தில் இல்லை. ஆனால் சோழர் காலத்தில் அடிமைகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இது பற்றி ஆசிரியர் கூறுகிறார்:

    “நில உடைமைச் சமூக அமைப்பு சோழர் காலத்தில் நன்கு வேர்விட்டுத் தழைத்திருந்தது. அடிப்படை உற்பத்திச் சாதனமான நிலத்தின் மீது பிராமணர்களும் வேளாளர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுடன் கோயிலும் இணைந்து கொண்டது” (பக். 87) இங்குக் கோயில் என்பது தனி சக்தியாகக் காண்பதை விட பிராமணிய வேளாண் சமூகத்தின் ஒரு அடக்குமுறைச் சாதனமே என்றும், அது அந்த அமைப்பின் பிரதிபலிப்பு என்றும் காண்பது நல்லது. இதன் பின்னர் உருவாகும் கருத்தியலை ஆசிரியர் சரியாகவே விளக்குகிறார்.

    “தமிழகத்தில் தோன்றிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அடிமைகளை உருவாக்க, பிராமணியம் அடிமைகளைத் தீண்டத் தகாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றியது எனலாம்” (பக். 8) இதன் விளைவாக “ஐரோப்பிய அடிமைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலும் தீண்டத் தகாதவர்களாக அவர்கள் நடத்தப்படவில்லை. “இந்திய அடிமை முறையானது ஐரோப்பிய அடிமைமுறையை விட மோசமாக இருந்தது (பக். 87). ஐரோப்பிய அடிமைகள் அறிவுசார்ந்த துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியாவில் அறிவு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஐரோப்பிய அடிமைகளை விட அதிக சுதந்திரம் உள்ளவர்கள் போல இந்திய அடிமைகள் தென்பட்டாலும், உண்மையில் ஐரோப்பிய அடிமைகளைவிட அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர். அடிமைகளின் பணியை மேற்பார்வையிட “ஊரில் உள்ள ‘சபா’ என்ற பிராமணரின் ஊராட்சி மன்றமும் ‘ஊர்’ என்ற ஏனையோரின் ஊராட்சி மன்றமும் ஏற்றுக் கொண்டிருந்தன” (பக் 95).

  79. Avatar
    punai peyaril says:

    சுவர்ணபிரியன், உலகத்தில் அடிமை வியாபாரம் என்றால் 99 சதவிகிதம் பேருக்கு தெரிவது அரேபிய முஸ்லீம்கள். 1% பேருக்கு அது தெரியாது.. ஏனென்றால் அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்ட அரேபியர்களின் பிரிய அடிமைகள்….

  80. Avatar
    தங்கமணி says:

    வெல்டன் திரு திரு சுவனப்பிரியன்,
    இப்படி இல்லாத அடிமை முறையை தேடி கண்டுபிடிக்க கடந்த 60 வருடங்களாக கம்யூனிஸ்டுகள் உழைத்துவருகிறார்கள். இருந்தாலும் கண்ணுக்கு தெரியும் இஸ்லாமிய அடிமை முறை மட்டும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது.

    அதுபோகட்டும்

    திரு பரமசிவம்,
    சுவனப்பிரியனிடம் கேட்டால் பதில் சொல்லாமல் விழிக்கிறார். இஸ்லாமிய அடிமைமுறையை ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்யும் அவருக்கு நீங்கள் முடிந்த அளவுக்கு உதவுகிறீர்கள்.
    இதற்கும் விளக்கம் சொல்லி அவருக்கு உதவலாமே?

    முகம்மதின் இந்த அறிவுரைக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?
    Q.2:178 – O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female.

    உங்கள் அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால் நீங்கள் யாரை கொல்லவேண்டும் என்று முகம்மது சொல்கிறார்? கொன்றவரையா? கொன்றவரது அடிமையையா?

    பரமசிவம், காவ்யா போன்றவர்கள் இதற்கு விளக்கம் அளித்தால் உண்மையான சூடோசெக்குலர்கள் என்று போற்றப்படுவார்கள்.

  81. Avatar
    smitha says:

    Piriyan,

    UR wife & mother may be prating in mosques but the issue how many muslim women are allowed to? That number is negligible. U are talking of new mosques allowing women to pray? which sects are they? No answer.

    Do not quote saudi arabia here. Look at the plight of muslim women in india. Then U can talk about other countries.

  82. Avatar
    smitha says:

    சட்டத்தை விளங்காதவர்கள் கொடுக்கும் ஃபத்வாவுக்கு குர்ஆனோ இஸ்லாமோ எப்படி பொறுப்பாக முடியும்? டெலிபோன் தலாக், தலாக் தலாக் தலாக் என்று மூன்றுமுறை ஒரே தடவையில் கூறுவது எல்லாம் இஸ்லாம் காட்டித் தராத வழிகள். அடுத்து இந்தியாவை பொறுத்த வரை மற்ற மதத்தவரை விட விவாகரத்து முஸ்லிம்களிடம் குறைவாக நடப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    But the wise men who give the above judgements are debvoiut followers of islam. The worst part is not one muslim leader condemns it.

  83. Avatar
    smitha says:

    Divorce is less in islam. yes, bcos women keep mum when their husbands keep adding wives.

    Islam allows a man to marry 3 times, right. I asked a muslim friend whether this is not unfair to the woman. His reply was that a man can marry if his wife consents.

    Tell me, leaving aside religion here, will any woman like to share her husband with another woman?

    The problem is that islam is perceived as a medieval & dogmatic religion. Your reliious clergy have only acted in a manner which reaffirms such opinions.

  84. Avatar
    smitha says:

    U talk of narendra modi & godhra. What was the basis for godhra? 65 hindus were burnt alive by islamists. Hindu lives are not lives?

    Wha about thousands of hindu women raped & killed by islamists in kashmir? They are not lives? How is it that 3 lakh hindus are living as refugees in slums in delhi?

    India is the only country where the plight of the majority is pathetic.

    U talk of 12 godhra. What aboyut the several 100 godhras hindus have suffered since independence?

    U said that the vipoelnce by muslims in tamilnadu has come down. Even you have not able to say it is eleiminated. Tamilnadu has the least number of muslim population. Hence the bomb blasts here are less.

    Even then the record for the highest number of bomb blasts goes to U guys – 16 in coimbatore.

    Simply saying Koran does not say this, that etc., is annoying.

    The fact is that the Koran has not been interpreted in 1 way.

    The other fact is there are very few muslims who follow the koran religiously.

  85. Avatar
    smitha says:

    இஸ்லாமியர்கள் செய்த புறச்சமயிகள், கோயில்கள், கலாசார அழிப்பு – அம்பேத்கர்

    ‘‘யுவான் சுவாங் வந்த காலத்தில் பஞ்சாப் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானமும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததென்பதும், அக்காலத்தில் இப்பகுதிகளில் வேத மதமும் புத்த மதமும் மட்டுமே நிலவின என்பதும் உண்மைதான். ஆனால் யுவான் சுவாங் தம் நாட்டுக்குத் திரும்பியதற்குப் பிந்தைய காலத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்துள்ளன என்பதையும் நோக்க வேண்டாமா?

    இக்கால இடைவெளியில் நிகழ்ந்தனவற்றுள் முக்கியமானவை, வடமேற்கு எல்லை வழியாகக் கூட்டமாய் வந்த முஸ்லீம் படையெடுப்புகளே. இவற்றுள் முதல் படையெடுப்பு கி.பி.711-இல் முகமது பின் காசிம் தலைமையில் நடைபெற்றது, அப்போது அரேபியர்கள் சிந்து மாநிலத்தை வென்று தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். பாக்தாத்தில் ஆட்சிபுரிந்த கலீபாவின் ஆணைப்படி நிகழ்ந்த இப்படையெடுப்பு, நிலையான ஆட்சிக்கு வழிகோலவில்லை, தொலைதுரத்திலிருந்து நேரடியாக ஆளுவதில் உள்ள சிரமங்களால் இவ்வாட்சி கி.பி.ஒன்பதாம் நுற்றாண்டின் மத்தியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னர் கி.பி.1001-இல் இருந்து தொடர்ச்சியாக, பல கடும் படையெடுப்புகளை கஜினி முகமது நடத்தினார். இவர் 1030-ஆம் ஆண்டு இறந்தார். ஆனால் முப்பதாண்டு காலக் குறுகிய இடைவெளியில் 17 முறை படையெடுத்தார். இவரையடுத்து 1173-ஆம் ஆண்டு முதல் கோரி முகமதுவின் படையெடுப்புகள் தொடங்கின, இவர் கி.பி.1206-இல் கொல்லப்பட்டார், கஜினி முகமதுவின் 30 ஆண்டுகாலப் படையெடுப்புகளும் இந்தியாவைக் கடுமையாக பாதித்தன. இதனைத் தொடர்ந்து செங்கிஸ்கான் தலைமையில் மொகாலாயக் கூட்டங்களில் படையெடுப்பு தொடங்கியது, 1221-இல் நிகழ்ந்த முதல் படையெடுப்பில் இந்தியாவின் எல்லையைத் தாக்கிவிட்டு நாட்டில் நுழையாமல் அவர்கள் திரும்பி விட்டனர். இருபதாண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் படையெடுப்பின் போது லாகூர்வரை வந்து வீழ்த்தினர். இப்படையெடுப்புகளில் 1398-இல் நிகந்த தைமூரின் படையெடுப்பே மிகப் பயங்கரமானது. பின்னர் 1526-இல் பாபரின் படையெடுப்பு நிகழ்ந்தது. இத்தகைய படையெடுப்புகள் பாபருடன் நின்றுவிடவில்லை. இரு நுற்றாண்டுகளூக்குப் பின்னர் மேலும் இரண்டு கடுமையான படையெடுப்புகளை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தது. 1738-ஆம் ஆண்டில் நாதிர்ஷா அப்தாலியின் படையெடுப்பின்போது பானிப்பட்டில் மராட்டியர்கள் ஒடுக்கப்பட்டனர், இதையடுத்து முஸ்லீம் ஆதிக்கத்திற்கெதிரான இந்துகளின் எழூச்சி மீண்டும் தலைதூக்கவொண்ணா வகையில் முற்றுமாக வேரறுக்கப்பட்டது.

    இம்முஸ்லீம் படையெடுப்புகள் நாடு பிடிக்கவும் கொள்ளயடிக்கவும் மட்டுமே நடத்தப்படவில்லை. வேறு முக்கியமானதோர் நோக்கத்தின் அடிப்படையிலும் இவை நிகழ்ந்தன. சிந்து மாநிலத்தின் துறைமுகமான தேபூலுக்கருகில் கைப்பற்றபட்ட கப்பலொன்றைச் சிந்துவின் அரசர் தாகீர் திருப்பித் தர மறுத்ததற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே முகமது பின் காசிமின் படையெடுப்பு நிகழ்ந்தது. எனினும் பல தெய்வ, உருவ வழிபாடுகளை மேற்கொண்டிருந்த இந்திய நாட்டைத் தாக்கி, வென்று, முஸ்லீம் மதத்தை இங்கு நிறுவுதலும் அவர்களது குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. முகமுது பின் காசிம் உறஜ்ஜாஜுக்கு விடுத்த மடல் ஒன்றில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

    தாகீர் அரசரின் மருமகனும் படை வீரர்களும் முக்கிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். புறச்சமயிகள் பலர் மாறினர்; மாறாதோர் கொல்லப்பட்டனர். விக்கிரக வழிபாட்டுக் கோயில்களுக்குப் பதிலாக மசூதிகளும் வழிபாட்டிடங்களும் நிறுவப்பட்டு உரியகாலங்களில் குத்பா ஓதிவழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலையும் மாலையும் தக்பீரும் எல்லாம் வல்ல இறைவனின் புகழும் முழங்கின்றன.

    சிந்து அரசின் தலையோடு அனுப்பப்பட்ட இக்கடிதத்துக்குப் பதிலாக உறஜ்ஜாஜ் எழுதியதாவது:

    “பகைவர், நண்பர் என்ற வேறுபாடோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடோ காட்டாமல் மக்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும். புறச்சமயிகளுக்கு இடங்கொடாதீர், அவர்களது தலையை வெட்டுக என இறைவன் கூறுகிறார். இறைவனின் இவ்வாணையை உணர்க, அதன்படி எதிரிகளுக்குத் தாராளமாகப் பாதுகாப்பளித்துக் கொண்டே போனால் உமது பணிநீளுமென்பதையுணர்ந்து நம்மைச் சாராத எதிரிகளுக்குச் சற்றும் இடங்கொடாதிருப்பீராக.”

    முகமது கஜினியும் தமது பலபடையெடுப்புகளை, புனிதப் போர்களாகவே கருதினார். இவரது வரலாற்றாசிரியரான அல்உத்பி இவரது படையெடுப்புகளைக் குறித்து எழுதுவதாவது:

    “அவர் உருவ வழிபாட்டுக் கோயில்களை அழித்து இஸ்லாத்தை நிறுவினார். நகரங்களைக் கைப்பற்றி மூட நம்பிக்கையும் உருவ வழிபாடும் கொண்ட ஈனர்களைக் கொன்று முஸ்லீம்களுக்குத் திருப்தியளித்தார். தாய்நாடு திரும்பி இஸ்லாத்துக்காகத் தாம் பெற்ற வெற்றிகளை விவரித்ததுடன் ஆண்டுக்கொரு முறை இந்தியா மீது புனிதப் போரை மேற்கொள்வதாகவும் உறுதிபூண்டார்.”

    முகமதுகோரியும் தமது இந்தியப் படையெடுப்புகளைப் புனிதப் போர்களாகவே கருதினார். அவரது வரலாற்றாசிரியரான ஹசன் நிசாமி, படையெடுப்புகளைக் குறித்துக் கூறுவதாவது:

    “அவர் பலதெய்வ வழிபாடு, உருவவழிபாடு எனும் முட்புதர்களைத் தமது வாள்கொண்டு களைந்து இந்திய நாட்டைப் புறச்சமய அழுக்கு நீக்கித் துய்மைப்படுத்தினார். அவரது அரசாணை வீச்சின் உத்வேகம் ஒரு கோயிலைக் கூட விட்டு வைக்கவில்லை.”

    தமது இந்தியப் படையெடுப்பின் நோக்கம் குறித்துத் தைமூர் தமது நாட்டுக் குறிப்புகளில் எழுதியுள்ளதாவது:

    “(இறைவனின் ஆசியும் அருளும் தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிறைவாகப் பெற்ற) முகமது நபியவர்களின் ஆணைப்படி, புறச்சமயிகளைப் போரில் வென்று மெய்யான நம்பிக்கையின் பாதைக்கு அவர்களை மாற்றுவதே எனது இந்தியப் படையெடுப்பின் நோக்கம். நம்பிக்கையின்மை, பலதெய்வ வழிபாடு போன்ற அழுக்குகளையும் கோயில்களையும் வழிபாட்டுச் சிலைகளையும் அழிப்பதன் மூலம் களைந்து அந்நாட்டைத் துய்மைப்படுத்துவதில் இறைவனின் நம்பிக்கைக்குத் துணைவர்களாகவும் படைஞர்களாகவும் செயல்படுவோம்.”

    முஸ்லீம்களின் இத்தைகைய படையெடுப்புகளில் பல முஸ்லீம்களுக்கிடையிலான போர்களும் நிகழ்ந்துள்ளன என்னும் உண்மையை, முஸ்லீம் படையெடுப்புகள் என இவற்றைக் கருதுவதன் மூலம் மறந்துவிடுகிறோம். ஆனால் படையெடுத்து வந்தவர்கள் தார்த்தாரியர், ஆப்கானியர், மங்கோலியர் எனப் பல்வேறு இனத்தவர்கள் என்பதே மெய். கஜினி முகமது தார்த்தாரியர், கோரி முகமது ஆப்கானியர், தைமூர் மங்கோலியர், பாபர் தார்த்தாரியர், நாதிர்ஷாவும் அகமதுஷா அப்தலியும் ஆப்கானியர். இந்தியப் படையெடுப்புகளில், தார்த்தாரியரை அழிக்க ஆப்கானியர் நடத்திய படையெடுப்புகளும் தார்த்தாரியரையும் ஆப்கானியரையும் அழிக்க மங்கோலியர் நடத்திய படையெடுப்புகளும் அடங்கும். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் அனைவரையும் சமய சகோதரத்துவ அன்பால் பிணைக்கப்பட்ட, ஒரே குடும்பத்தவராய்க் கருதுதல் கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் கடும் பகைவர்களாக விளங்கி மாற்றாரைப் பூண்டோடு அழிக்கும் போர்களை நடத்தியுள்ளனர். இவ்வாறு தமக்கிடையே பலபோர்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் கூட, இந்து மத நம்பிக்கையை ஒழிக்கும் நோக்கத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருந்தனர் என்பதை நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எனவே இந்திய வரலாற்றுப் போக்கினை ஆராயும்போது, படையெடுப்பாளர்களின் அடிப்படை நோக்கமே, அவர்கள் கையாண்ட முறைகளைவிடப் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    படையெடுப்பில் வென்ற காசிம் முகம்மதுவின் முதல் சமயச் செயலே தேபூல் நகரில் சிறைப்பிடிக்கப்பட்ட பார்ப்பனர்கள் அனைவரையும் சுன்னத் செய்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தியதே ஆகும். இத்தகைய பலவந்த மதமாற்றத்திற்கு வலுவான எதிர்ப்பு காட்டப்பட்டதால் 17 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர், ஏனையோர், பெண்கள், குழந்தைகள் உட்பட, அடிமைகளாக்கப்பட்டனர். மேலும், இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கிடைத்த கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கை அரசாங்கத்துக்கு ஒதுக்கி, மீதியைப் படையினரே பங்குபோட்டுக் கொண்டனர்.

    கஜினி முகம்மது தொடக்கத்திலிருந்தே இந்துக்களின் உள்ளங்களில் பீதியைத் தோற்றுவிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டனர். கி.பி.1001-இல் ஜெய்பால் அரசர் தோற்கடிக்கப்பட்டபோது அவரை அடிமைத்தளையுடன் வீதிகளில் இழுத்துவந்து அவர் அவமானப்படுவதை அரசரது படைத்தலைவர்களும், மகன்களுமே காணச்செய்தார், இதன்வழி புறச்சமயிகளின் பூமியில் இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் கொடிகட்டிப் பறந்திடுவதையே அவர் விரும்பினார்.

    புறச்சமயிகளைக் கொன்றழிப்பது (கஜினி) முகம்மதுவுக்குத் தனியானதோர் இன்பமாகவே இருந்தது. கி.பி.1019-இல் சந்தராய் நகரின்மீது நடந்த படையெடுப்பில் ஏராளமான புறச்சமயிகள் கொல்லப்பட்டனர். முஸ்லீம்கள் கொள்ளைப் பொருள்களோடு எளிதில் திருப்தியடைந்து விடுவதில்லை. சூரியனையும் தீயையும் வணங்கும் புறச்சமயிகளைக் கொன்றுகுவிக்கும் வெறியே கொள்ளை நாட்டத்தைவிட அவர்களிடம் மிகுதியாக இருந்தது. முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள், இந்துப் படைகளைச் சேர்ந்த யானைகள் அப்படைகளிலிருந்து விலகி இஸ்லாத்தின் சேவைக்காக முஸ்லீம் படைகளுடன் சேர்ந்து வருவதாகக்கூட எழுதியுள்ளனர்.

    அடிக்கடி நிகழ்ந்த சமயப் படுகொலைகளால் இந்துக்களின் உள்நாட்டுப் பண்பாடும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக,

    முகமது பக்தியார் கில்ஜி, பீகாரை வென்றபோது நிகழ்ந்தவற்றைப் பற்றி தபாகுத்-இ-நசிரி இவ்வாறு எழுதுகிறார்:

    “வெற்றியாளர்கள் ஏராளமான செல்வங்களைக் கைப்பற்றினர். அங்கு வாழ்ந்தவர்கள் பலர் மொட்டையடித்திருந்த பார்ப்பனர்கள். அவர்கள் யாவரும் கொல்லப்பட்டனர். கல்வியில் சிறந்து விளங்கிய அந்நகரில் ஏராளமான நூல்கள் கிடைத்தன, ஆனால் கோட்டை கைப்பற்றப்பட்டபோது படிப்பறிவுடையோர் யாவரும் கொல்லப்பட்டு விட்டதால் அந்நூல்களின் பொருளை அறிந்து சொல்ல யாரும் கிடைக்கவில்லை.”

    இப்படையெடுப்பு பற்றிய சான்றுகளைத் தொகுத்துரைக்க முற்படும் டாக்டர் டைடஸ் பின்வருமாறு கூறுகிறார்:

    “முந்தைய பேரரசின் (அக்பரின்) ஆட்சிக்காலத்தின்போதே, புறச்சமயிகள் தமது சமயத் தலைமைப்பீடமான காசியில் பல கோயில்களைக் கட்டத்தொடங்கினர். அவை பணிமுற்றுப்பெறா நிலையில் உள்ளனவென வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். புறச்சமயிகள் அவற்றைக் கட்டிமுடிப்பதில் ஆர்வம் காட்டினர். (இஸ்லாம்) நம்பிக்கையின் காவலரான பேரரசர் காசியில் மட்டுமன்றி, தமதாட்சிக்குட்பட்ட ஏனைய இடங்கள் அனைத்திலும் கோயில்களை அழிக்க ஆணையிட்டார். காசி மாவட்டத்தில் 76 கோயில்கள் இடிக்கப்பட்டதாக அலகாபாத் மாநில நிர்வாகம் தெரிவிக்கிறது.”

    உருவ வழிபாட்டை முற்றுமாக அழிக்கும் இறுதி முயற்சியை அவுரங்கசீப் எடுத்துக்கொண்டார். இந்துக் கோயில்களையும் மா அதிர்இஆலம்கரி என்ற நூலின் ஆசிரியர் பின்வருமாறு விவரிக்கிறார்:

    “தத்தா, மூல்தான், காசி ஆகிய மாநிலங்களில்- குறிப்பாகக் காசியில்- முட்டாள் பார்ப்பனர்கள் மூடத்தனமான நூல்களைப் பள்ளிகளில் கற்பித்து வருகிறார்கள் என்ற செய்தி. கி.பி.1669 ஏப்ரலில் அவுரங்கசீப்புக்கு எட்டியது, முஸ்லீம்களும் கூட இப்பள்ளிகளுக்குச் செல்கின்றனர் எனவும் அவர் அறிந்தார். மார்க்க நெறியாளரான பேரரசர் புறச்சமயிகளின் கோயில்களைக் கடும் நடவடிக்கைகொண்டு ஒடுக்கவேண்டுமென மாநில ஆளுநர்களுக்கு ஆணை பிறப்பித்தார். உருவ வழிபாட்டுப் போதனையும், கடைப்பிடிப்பும் முற்றுமாக நிறுத்தப்பட வேண்டுமென அவரது ஆணை கூறியது…… காசி விசுவநாதர் ஆலயம் தகர்த்தழிக்கப்பட்டதென அரசு அதிகாரிகள் மாமன்னருக்குத் தகவல் அனுப்பினர்.”

    டாக்டர் டைடஸ் மேலும் வருணிப்பதாவது…

    “முகமது, தைமூர் போன்ற படையெடுப்பாளர்கள் புறச்சமயிகளை நயத்தாலும் பயத்தாலும் மதமாற்றம் செய்வதைவிடத் தமது சமயப் போர்வாள் கொண்டு உருவ உடைப்பு, கொலை, கொள்ளை, பிடிபட்டவர்களை அடிமைகளாக்குதல் போன்ற செயல்களிலேயே நாட்டம் கொணடிருந்தனர். ஆனால் நிலையான ஆட்சியாளர்களாக ஆள முற்பட்டோருக்கு, மதமாற்றம் அவசரத் தேவையாயிற்று. நாடு முழுமைக்குமான சமயமாக இஸ்லாத்தை நிறுவுதல் அரசின் அடிப்படைக் கொள்கையாய் உருவெடுத்தது.

    முகமதுவைப் போலவே, ஆயிரம் கோயில்களை அழித்தவர் என்று பெரும்பெயரெடுத்த குத்புதீன், பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அடிக்கடி பலவந்தமான மதமாற்றத்தைத் தூண்டியிருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியைச் கூறலாம். அவர் (அலிகாரில்) கி.பி.1194-இல் கோயிலை நெருங்கியபோது விவேகமும் புத்திக்கூர்மையும் கொண்ட படைவீரர்கள் இஸ்லாத்தைத் தழுவினர், ஏனையோர் வாள் வீச்சில் உயிர் இழந்தனர்.”

    கடுமையான நடவடிக்கைகள் மூலமாக மதமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கு மேலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. பிரோஸ்ஷா (கி.பி.1351-1388)-வின் ஆட்சிக்காலத்தில் நடந்த பரிதாபகரமான நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டுவோம், டெல்லியைச் சேர்ந்த முதிய பார்ப்பனர் ஒருவர் தமது வீட்டில் சிலைகளை வைத்து வழிபடுவதாகவும் முஸ்லீம் பெண்களை மதமாற்றத்திற்குத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அவர் வரவழைக்கப்பட்டு நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மூத்தோர்கள் கொண்ட அவைமுன் நிறுத்தப்பட்டார். இது குறித்துச் சட்டம் தெளிவாக இருப்பதாகக் கூறி, அவர் முஸ்லீமாக மாறவேண்டும், அல்லது எரிக்கப்படவேண்டும் என்று அவை தீர்ப்பளித்தது. மெய்யான சமயமும் சரியான நெறியும் தெளிவுறுத்தப்பட்டும்கூட, அவற்றை அவர் ஏற்க மறுத்ததால், சுல்தானின் ஆணைப்படி உயிருடன் எரிக்கப்பட்டதுடன், சுல்தானின் கடுமையான சட்டங்களையும், அவற்றைச் செயல்படுத்துவதில் அவர் காட்டும் உறுதியையும், அவரது ஆணைகள் சிறிதளவும் வழுவாது நிறைவேற்றப்படுமென்பதையும் நோக்குக என்ற எசசரிக்கையும் விடுக்கப்பட்டது.

    கோயில்களை அழிப்பதுடன், இந்துக்களை அடிமைகளாக்குவதும் கஜினி முகமதுவின் கொள்கையாக இருந்தது. இதுபற்றி டாக்டர் டைடஸ் கூறுவதாவது:

    “இந்தியாவில் இஸ்லாம் நுழைய முற்பட்ட காலத்தின் தொடக்கக் கட்டத்தில் புறச்சமயிகளைக் கொன்றுகுவித்து, கோயில்களை அழித்ததுடன் நிற்காமல் தோல்வியுற்ற மக்களில் பலர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதையும் காண்கிறோம். இப்படையெடுப்புகளில் படைத்தலைவர்களுக்கும் பிறபடை வீரர்கள் யாவருக்கும் கொள்ளையில பங்கு என்பது அவர்களைப் பெரிதும் கவரும் ஓர் அம்சமாக விளங்கியது. புறச்சமயிகளைக் கொன்றுகுவித்தல், கோயில்களை அழித்தல், அடிமைகளைக் கைப்பற்றுதல், மக்களின் வீடுகளில், குறிப்பாகக் கோயில் பூசாரிகளின் வீடுகளில் கொள்ளையடித்தல் ஆகியவையே முகமதுவின் படையெடுப்புகளுக்கு முக்கிய நோக்கங்களாய்த் தோன்றுகின்றன. அவரது படையெடுப்புகளின்போது ஒரு சமயம், அழகிய ஆடவர் மகளிர் சுமார் 5 லட்சம் பேர் அடிமைப்படுத்தப்பட்டு, கஜினிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.”

    பின்னர், கி.பி.1017-இல் கனோஜியை முகமது கைப்பற்றியபோது அளவிறந்த செல்வத்துடன், எண்ணமுயன்றோர் விரல் சோர்வுறும் அளவுக்கு ஏராளமான கைதிகளையும் கொண்டு சென்றார். அவரது கி.பி.1019-ஆம் ஆண்டுப் படையெடுப்புக்குப் பிறகு கஜினியிலும் மத்திய ஆசியாவிலும் இந்திய அடிமைகள் எவ்வாறு மலிந்திருந்தனர் என்பதை அக்கால வரலாற்றாசிரியர் கூற்றாகக் காண்போம்… “

  86. Avatar
    smitha says:

    இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்

    அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில் பெண்கள் எவ்வளவு சிறப்புற்றிருந்தனர், பின்னர் எப்படி அடிமைப் படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் விரிவாகவே விவரித்திருக்கிறார்.

    பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்கு மனுதான் காரணம் என்பதை வலியுறுத்தி அதை ஒழிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர். பெண்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அமபேத்கர் கொண்டுவந்து நிறைவேற்றாமல் போன இந்து சட்டத்தொகுப்பை படித்தோமானால் அம்பேத்கரின் உள்ளம் வெளிப்படும். இதே கண்ணோட்டத்தை அம்பேத்கர் இஸ்லாத்திலும் எதிர்பார்க்கிறார்.

    இந்துத்வ சுதந்திரம் இஸ்லாமில் இல்லை

    இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? அம்பேத்கர் எழுதுகிறார் :

    ‘‘…. அனுகூலமான சட்ட விதிகள் எல்லாம் இருந்தபோதிலும்கூட, முஸ்லீம் பெண்மணி உலகிலேயே நிராதரவற்றவளாக இருந்து வருகிறாள்.

    ஓர் எகிப்திய முஸ்லீம் தலைவர் பின்வருமாறு கூறுகிறார்:-

    ‘‘இஸ்லாம் தனது தாழ்வு முத்திரையை அவள்மீது பதித்துள்ளது; மதத்தின் ஆதரவு பெற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக அவள் தனது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளியிடுவதற்கும், தனது ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கு மான முழு வாய்ப்பு அவளுக்கு அளிக்கப்படவில்லை.’’

    இஸ்லாமிய ஆண் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும்

    தான் குழந்தையாக இருந்தபோது தன்னுடைய பெற்றோர்களல்லாத மற்றவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட ஒரு திருமணத்தை நிராகரிக்கும் துணிவு எந்த முஸ்லீம் யுவதிக்கும் இல்லை. விவாகரத்து செய்யும் உரிமையைத் தனக்கு அளிக்கக்கூடிய ஒரு ஷரத்தை தனது திருமண ஒப்பந்தத்தில் சேர்ப்பது நலமாக இருக்குமே என்று எந்த முஸ்லீம் மனைவியும் நினைப்பதில்லை.

    இத்தகைய சந்தர்ப்பத்தில் அவளது கதிப்போக்கு ‘ஒரு முறை திருமணம் செய்து கொண்டுவிட்டால் என்றென்றைக்கும் திருமணமானவாள்’ என்பதாக அமைந்து விடுகிறது. எத்தகைய கடுமையாக இன்னல் இடுக்கண்கள், தாள முடியாத கொடுமைக்கு உள்ளானாலும் திருமண பந்தத்திலிருந்து அவள் தப்பமுடியாது. அவள் திருமணத்தை நிராகரிக்க இயலாது. ஆனால் அதேசமயம் கணவனோ எத்தகைய காரணமுமின்றி, எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம்.

    தல்லாக் தல்லாக் கறிவேப்பிலை

    இதற்கு அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘தல்லாக்’ என்று கூறிவிட்டு, மூன்று வாரங்களுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைத் தூக்கியெறிந்து விடலாம். அவனது ஏறுமாறான நடத்தைக்கு குறுக்கே நிற்கும் ஒரே ஒரு விஷயம், சீதனத் தொகை தருவதற்கு அவன் கட்டுப்பட்டிருப்பதுதான்.

    இந்தத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், எத்தகைய தடையுமின்றி தன் விருப்பம்போல் விவகாரத்து செய்து விடலாம். கணவன் விவாகரத்து செய்யும் விஷயத்தில் காட்டப்படும் இந்தத் தாராளப்போக்கு ஒரு பெண்ணின் முழுநிறைவான, சுதந்திரமான, மனநிறைவு கொண்ட இன்பகரமான வாழ்க்கைக்குப் பெரிதும் ஆதார அடிப்படையாக அமைந்துள்ள பாதுகாப்பு உணர்வையே அழித்துச் சிதைத்துவிடுகிறது.

    இடதுகைப் பெண்களும், வலதுகைப் பெண்களும்

    அது மட்டுமல்ல, பலதார மணம்1 செய்து கொள்வதற்கும், இல்லக்கிழத்தி2 வைத்துக் கொள்வதற்கும் முஸ்லீம் சட்டம் கணவனுக்கு அளித்துள்ள உரிமையால் முஸ்லீம் பெண்ணின் நிலைமை மேலும் மோசமாகிறது; அவளது வாழ்க்கைக்குப் பாதுகாப்பின்மை முன்னிலும் பெரிதும் அதிகரிக்கிறது. ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்வதற்கு, வரித்துக்கொள்வதற்கு முகமதிய சட்டம் அனுமதிக்கிறது.

    [1. பலதாரங்களாகத் திருமணம் செய்யப்பட்ட பெண்கள். இவர்களை இடது கைப் பெண்கள் என்று அழைக்கிறது இஸ்லாம்.]

    [2. அடிமைப் பெண்கள் மற்றும் வேலைக்காரப் பெண்கள். திருமணம் செய்யாமல் இவர்களை “வைத்துக்கொள்ள” இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவர்களை வலதுகைப் பெண்கள் (Malak-ul-ameen) என்று அழைக்கிறது இஸ்லாம்.]

    ஒரு இந்து ஒரு சமயத்தில் எத்தனை மனைவிகளைக் கொண்டிருக்கலாம் என்று இந்துச் சட்டம் எவ்வகையிலும் வரையறுத்துக் கூறவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது முஸ்லீம் சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது.

    அதிலும் பெண் அடிமைகள் விஷயத்தில் அவர்களது எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். எத்தகைய கட்டுப்பாடுமின்றி, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமின்றி முஸ்லீமுடன் கூடிவாழ்வதற்கு அவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

    பலதார மணமுறையாலும், சட்டபூர்வமாக் காமக் கிழத்திகளை வைத்துக்கொள்ளும் முறையாலும் ஏற்படும் எத்தனை எத்தனையோ தீமைகளையும், மிகப்பெரும் பாதகங்களையும் விவரிப்பதற்குச் சொற்களே இல்லையெனலாம். அதுவும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இதனால் ஏற்படும் இரங்கத்தக்க அவலநிலை சொல்லத் தரமன்று.

    பலதார மணமுறையும் காமக்கிழத்திகளை வைத்துக் கொள்ளும் முறையும் அனுமதிக்கப் பட்டிருப்பதால் விதிவிலக்கின்றி எல்லா முஸ்லீம்களுமே இதில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று பொதுப்படையான முறையில் கூறிவிட முடியாது என்பது உண்மையே. எனினும் ஒரு முஸ்லீம் இந்த உரிமைகளை, சலுகைகளை சுலபமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது மனைவிக்கு துன்பத்தையும் துயரத்தையும் தொல்லைகளையும் அவலநிலையயும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

    காமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம்

    திரு. ஜான் பூல் என்பவர் இஸ்லாமின் விரோதியல்ல. அவர் கூறுகிறார்: ‘‘விவாகரத்து விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த வரம்பற்ற, கட்டுப்பாடற்ற போக்கை சில முகமதியர்கள் தங்கள் சுயநலத்துக்கு மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து ‘இஸ்லாமும் அதன் நிறுவனரும்’ எனும் தமது நூலில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோபர்ட் பின்வருமாறு கூறுகிறார்.

    ‘தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். இருபது, முப்பது மனைவிகளை ஏற்கெனவே வரித்துக் கொண்டிருப்பதுடன் திருப்தி கொள்ளாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு புதிய மனைவியை அடைகின்ற இளைஞர்களைப் பற்றி நாம் படிக்கிறோம்.

    பண்டம்போல் பரிமாறிக்கொள்ளப்படும் பர்தா பெண்கள்

    இவ்வாறு பெண்கள் வரைமுறையின்றி ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு மாறிக்கொண்டிருப்பதால் ஒரு கணவனும் வீடும் எங்கு கிடைத்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்; அல்லது, விவாகரத்து செய்யப்பட்டுவிட்ட நிலைமையில் ஜீவனத்துக்கு வேறுவழியின்றி கீழ்த்தரமான வழிகளில் ஈடுபடும்படியான நிலைக்கு உள்ளாகிறார்கள்.

    ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முகமதிய சட்டம் அனுமதிப்பதோடு, தான் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்யலாம் என்றும் இருப்பதால் நடைமுறையில் அவன் தன் ஆயுட்காலத்திற்குள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் அடைந்து இன்புற்றிருக்க முடியும்.

    ஒரு முகமதியன் முஸ்லீம் சட்டத்தை மீறாமல் நான்குக்கும் அதிகமான மனைவிகளை அடைவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அது தான் இல்லக்கிழத்திகளுடன் கூடி வாழ்வதாகும். குரான் இதனை அனுமதிக்கிறது.

    போகக் கழிப்பறையாகிப் போன இஸ்லாமியப் பெண்டிர்

    நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் சூராவில் ‘இத்துடன் நீ அடிமைப் பெண்களுடனும் கூடி வாழலாம்’ என்னும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடிமைகளுடன் சுகித்து வாழ்வது பாபமல்ல என்று 70 ஆவது சூராவில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. பண்டை நாட்களைப் போலவே இன்றும் எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.

    ‘முகமதின் வாழ்க்கை’ என்ற தமது நூலில் முய்ர் பின்வருமாறு கூறுகிறார்: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

    இவ்வாறு இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது. இதனால் வழக்கம்போல் பெண்கள்தான் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.’’ என்று அம்பேத்கர் கூறுகிறார்.

    அதுமட்டுமல்ல, அவர் பர்தா முறையால் இஸ்லாத்தில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்கிறார். அதையும் பார்ப்போம்.

    பர்தாவுக்குள் அடைக்கப்பட்ட பரிதாபப் பெண்கள்

    அம்பேத்கர் கூறுகிறார் : ‘‘இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக் கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.

    இன்னும் சொல்லப்போனால், முஸ்லீம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்துத் தீமைகளையும் வரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லீம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.

    இந்தப் பர்தா முறையின் காரணமாக முஸ்லீம் பெண்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பெண்மணிகள் முன்புற அறைகளுக்கோ, வெளி தாழ்வாரங்களுக்கோ, தோட்டங்களுக்கோ வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

    புழக்கடைகளே பெரும்பாலும் அவர்களுடைய இருப்பிடங்களாக அமைந்துள்ளன.

    இளம் வயதினரும் சரி, வயதானவர்களும் சரி ஒரே அறையில் அடைந்து கிடக்கின்றனர்.

    எந்த ஓர் ஆண் வேலையாளும் அவர்கள் முன்னிலையில் பணியாற்ற இயலாது

    தன்னுடைய புதல்வர்கள், சகோதரர்கள், தந்தை, மாமன்மார்கள், கணவன் மற்றும் நம்பிக்கைக்குரிய மிகவும் நெருங்கிய உறவினர்கள் போன்றோரைப் பார்ப்பதற்கு மட்டுமே ஒரு முஸ்லீம் பெண்மணி அனுமதிக்கப்படுகிறாள்.

    பிரார்த்தனைக்காக அவள் மசூதிக்குக் கூட செல்ல முடியாது.

    அவள் எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும் புர்கா (முத்திரை) அணிந்தே செல்ல வேண்டும்.

    இந்த புர்கா பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும் காட்சி இந்தியாவில் ஒருவர் காணக்கூடிய மிகவும் அருவருப்பான காட்சிகளில் ஒன்றாகும்.

    நோய்கள் பரப்பும் நொய்மை மார்க்கம்

    இத்தகைய ஒதுக்கல்முறை முஸ்லீம் பெண்களின் உடலாரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்கள் அவர்களைச் சர்வசாதாரணமாகப் பீடிக்கின்றன.

    அவர்களுடைய உடலமைப்பு உருக்குலைகிறது; முதுகு வளைந்துவிடுகிறது; எலும்புகள் துருத்திக் கொள்கின்றன; கைகால்கள் உருக்கோணலாகி விடுகின்றன. விலா எலும்புகளும், மூட்டெலும்புகளும் இன்னும் சொல்லப்போனால் அவர்களது எலும்புகள் அனைத்தும் வலியெடுக்கின்றன. அவர்களிடம் அடிக்கடி மிகுதியான நெஞ்சுத் துடிப்பு காணப்படுகிறது.

    இந்த இடுப்பெலும்பு உருத்திரிபு பிரசவத்தின்போது அகால மரணத்தில் கொண்டுபோய் விடுகிறது.

    பர்தா முறை முஸ்லீம் பெண்களின் மனவளர்ச்சிக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் ஒரு தடையாக உள்ளது.

    மனோவியாதிகளுக்குள் மாட்டிக்கொள்ளும் மார்க்கத்துப் பெண்டிர்

    ஆரோக்கியமான சமூகவாழ்க்கை பறிக்கப்படுவதால் அது தார்மீக சிதைவுக்கு, சீர்கேட்டுக்கு இட்டுச் செல்கிறது. வெளி உலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அவர்கள் தங்கள் மனத்தை சிறு சிறு குடும்பச் சண்டைகளில் செலுத்துகிறார்கள்.

    இதன் காரணமாக அவர்களது கண்ணோட்டம், மனப்பாங்கு மிகக் குறுகியதாக, கட்டுப்படுத்தப்பட்டதாகி விடுகிறது. முஸ்லீம் பெண்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த தம்முடைய சகோதரிகளுக்குப் பலதுறைகளிலும் பின்தங்கி இருக்கின்றனர். எத்தகைய வெளிநிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர்.

    அடிமைப் புத்தியும் தாழ்வுமனப்பான்மையும், பெரும் பாறாங்கல்லாக அவர்களை அழுத்தி அமிழ்த்துகின்றன.

    அறிவாற்றல் பெறுவதில், மேலும் மேலும் கல்வி கற்பதில் அவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஏனென்றால் வீட்டின் நான்கு சுவர்களுக்கு அப்பால் உள்ள எதிலும் அக்கறை காட்டாதிருக்கும்படி அவர்கள் போதிக்கப்படுகின்றனர்.

    பர்தா பெண்கள் குறிப்பாக நிராதரவற்றவர்களாக, அபலைகளாக, மருட்சியும் பீதியும் அடைபவர்களாக, வாழ்ககையில் எந்தப் போராட்டத்திலும் துணிந்து ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்களாக, தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்

    பர்தா ஒரு கடும் பிரச்சினை

    இந்தியாவிலுள்ள முஸ்லீம்களிடையே பர்தாப் பெண்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது பர்தா பிரச்சினையின் பரந்த பரிமாணததையும் கடுமையையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

    பர்தா முறை தார்மீக ரீதியில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுடன் ஒப்பிடும்போது உடல்ரீதியிலும், அறிவுத்துறை ரீதியிலும் அது தோற்றுவித்துள்ள விளைவுகள் அத்தனை கடுமையானவை அல்ல என்றே கூறவேண்டும்.

    பர்தா முறை இருபாலரின் பால் ஈடுபாடு குறித்து, நாட்டம் குறித்து, வேட்கை குறித்து ஏற்பட்ட ஆழமான ஐயப்பாடே இந்த பர்தா முறை தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.

    இரு இனங்களையும் பிரித்து இதனைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பர்தாமுறை முஸ்லீம் ஆண்களின் பழக்க நடை முறைகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பர்தா முறை காரணமாக ஒரு முஸ்லீமுக்கு தனது வீட்டுப் பெண்களைத் தவிர வெளியே உள்ள வேறு எந்த முஸ்லீம் பெண்களுடனும் தொடர்பில்லாமல் போய்விடுகிறது. தனது வீட்டுப் பெண்களுடன் அவனுக்குள்ள தொடர்பும்கூட எப்போதேனும் நடைபெறும் உரையாடலுடன் நின்றுவிடுகிறது.

    மனப்பிறழ்வுப் பாலுணர்ச்சிகளை உருவாக்கும் இஸ்லாம்

    ஒரு முஸ்லீம் ஆண் குழந்தைகளாகவும் வயதானவர்களாகவும் இருப்போரைத் தவிர வேறு எந்தப் பெண்பாலருடனும் தோழமை பூணவோ, ஒன்று கலந்து பழகவோ முடியாது.

    இவ்வாறு ஆண்களை பெண்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் போக்கு ஆண்களின் பழக்க வழக்கங்கள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

    ஆண், பெண் இருபாலரிடையேயும் உள்ள எல்லா தொடர்பையும் துண்டிக்கும் ஒரு சமூக அமைப்பு அதீத பாலுணர்ச்சி மீதும், இயற்கைக்கு மாறான இதர தீய பழக்கவழக்கஙகள் மீதும் நாட்டம்கொள்ளும் ஓர் ஆரோக்கியமற்ற போக்கையே தோற்றுவிக்கும் என்று கூறுவதற்கு ஒருவர் மனோதத்துவ நிபுணராக இருக்க வேண்டும் என்பதில்லை.

    இந்துக்களை ஏன் இஸ்லாமியர் மதிப்பதில்லை ?

    பர்தா முறையின் தீய விளைவுகள் முஸ்லீம் சமூகத்துடன் நின்றுவிடவில்லை. இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து சமூகரீதியில் ஒதுக்கிவைப்பதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.

    இந்த ஒதுக்கல் இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஒரு சாபக்கேடாக இருந்துவருவது அனைவருக்கும் தெரியும். இந்த வாதம் வலிந்து பெறப்பட்டதாகத் தோன்றக்கூடும், முஸ்லீம்களிடையே நிலவும் பர்தா முறையைக் காட்டிலும் இந்துக்களின் இணங்கிப் பழகாத போக்கே இந்தத் தனிமைப்படுத்தலுக்கு காரணம் என்று கூறக்கூடும். ஆனால் இந்துக்கள் இதை மறுக்கிறார்கள்.

    இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால் இத்தகைய தொடர்பு ஒருபுறம் பெண்களுக்கும் இன்னொரு புறம் ஆண்களுக்கும் இடையேயான தொடர்பையே குறிக்கும் என்பதால் இது சாத்தியமில்லை என்று அவர் கூறுவது நியாயமாகவே தோன்றுகிறது.

    பர்தா முறையும் அதன் விளைவாக ஏற்படும் தீமைகளும் முஸ்லீம்களிடையே மட்டுமின்றி, நாட்டின் சில பகுதிகளில் இந்துக்களில் குறிப்பிட்ட சில பகுதியினரிடையேயு்ம் காணப்படுகின்றன. ஆனால் இதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

    இந்துக்களின் இழிவு மதத்தால் ஏற்பட்டது அல்ல

    அதாவது முஸ்லீம்களிடையே காணப்படும் பர்தா முறை மதத்தின் ஆணையை ஆதாரமாக, அடிப்படையாகக் கொண்டது. இந்துக்களிடையே நிலவும் பர்தா முறை அப்படிப்பட்டதல்ல.

    இந்துக்களைவிட முஸ்லீம்களிடையே தான் பர்தா மிக ஆழமாக வேரோடிப் போயிருக்கிறது.

    மதத்தின் ஆணைகளுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையேயான தவிர்க்க முடியாத முரண்பாட்டை எதிர்கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் தான் இந்தத் தீமைக்கு முடிவுகட்டமுடியும்.

    பர்தா பிரச்சினை – அதன் மரபு மூலம் ஒருபுறமிருக்க – முஸ்லீம்களுக்கு அது உண்மையிலேயே ஒரு சிக்கலான பிரச்சினை.

    ஆனால் இந்துக்களுக்கு அப்படியல்ல. இந்தத் தீமையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு முஸ்லீம்கள் ஏதேனும் முயற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்பதற்குச் சான்று ஏதும் இல்லை.’’

    இவ்வாறு அம்பேத்கர் இஸ்லாத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் நிலையை விளக்குகிறார்.

  87. Avatar
    smitha says:

    Paramasivan,

    First U & your friend piriyan answer to the various posts on islam quotedw ith source. Then U can indulge in your “deep study”.

  88. Avatar
    smitha says:

    Piriyan,

    ஒரு காலத்தில் அடிமைகள் கட்டக்கடங்காமல் இருந்து முகமது நபியின் கட்டளையால் அவரது காலத்திலேயே அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    U have a terrific sense of humour. Have to admit that.

    :-)

  89. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //திரு பரமசிவம்,
    சுவனப்பிரியனிடம் கேட்டால் பதில் சொல்லாமல் விழிக்கிறார். இஸ்லாமிய அடிமைமுறையை ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்யும் அவருக்கு நீங்கள் முடிந்த அளவுக்கு உதவுகிறீர்கள்.
    இதற்கும் விளக்கம் சொல்லி அவருக்கு உதவலாமே?
    முகம்மதின் இந்த அறிவுரைக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?
    Q.2:178 – O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female.
    உங்கள் அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால் நீங்கள் யாரை கொல்லவேண்டும் என்று முகம்மது சொல்கிறார்? கொன்றவரையா? கொன்றவரது அடிமையையா?
    பரமசிவம், காவ்யா போன்றவர்கள் இதற்கு விளக்கம் அளித்தால் உண்மையான சூடோசெக்குலர்கள் என்று போற்றப்படுவார்கள்.//

    ‘நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவுனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன்: அடிமைக்காக கொலை செய்த அடிமை: பெண்ணுக்காக கொலை செய்த பெண்: என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்லவிதமாக நடந்து அழகிய முறையில் நஷ்ட ஈடு அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளமாகும். இதன்பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.’

    -குர்ஆன் 2:178

    தங்கமணி குறிப்பிடும் குர்ஆன் வசனம் இதுதான். வசனத்தின் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று சொல்வது நகைப்பிற்கிடமானது. இந்த கேள்விக்கு முன்பே பதில் சொன்னதாலும் அதை விட்டு வேறு கேள்விக்கு சென்றேன். இனி விளக்கத்தைப் பார்ப்போம்.

    ஆண், பெண், அடிமை,சுதந்திரமானவன் என்று யார் கொல்லப்பட்டாலும் அநியாயமாக கொல்லப்பட்டவனுக்காக கொன்றவனை அவனது இரத்த பந்தங்கள் கொல்வதற்கு குர்ஆன் அனுமதி அளிக்கிறது. ஒரு அரசாங்கம் இருந்தால் உண்மையை விசாரித்து கொலையுண்டவன் பக்கம் நியாயம் இருப்பின் தண்டனை வழங்க அதிகாரம் வழங்கப்படுகிறது. கொல்லப்பட்டவனின் வாரிசு பெருந்தன்மையாக நடந்து அவனை மன்னித்து விட்டாலோ அல்லது உயிருக்கு பகரமாக பணத்தை வாங்கிக் கொண்டாலோ அதற்கும் குர்ஆன் அனுமதிக்கிறது. அதை விடுத்து இதை எல்லாம் உதாசீனம் செய்து விட்டு வேறு வழிகளில் சென்று பழி தீர்ப்பதோ, அவரது வாரிசுகளை பழி தீர்ப்பதோ தடை செய்யப்படுகிறது. இதற்கு கடுமையான தண்டனை உண்டு என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது. இதன் மூலம் கால காலமா தலைமுறை தலைமுறையாக பழி தீர்க்கும் படலங்கள் ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

    ஆனால் நம் நாட்டு சட்டம் என்ன சொல்கிறது. ஒருவன் அநியாயாமாக கொல்லப்பட்டால் தண்டனை பெற்ற கைதியை மன்னிக்கும் அதிகாரத்தை நமது நாட்டு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவனின் மனநிலை டெல்லியில் ஏஸி அறையில் அமர்ந்திருக்கும் பிரதீபா பாட்டீலுக்கு எவ்வாறு தெரியும்? அவனது வலியை உணர முடியுமா? என்றெல்லாம் சிந்திக்காமல் சட்டத்தை இயற்றி வைத்துள்ளோம்.

    எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களே குர்ஆனின் சட்டங்கள் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த உதாரணம்.

  90. Avatar
    தங்கமணி says:

    திரு திரு சுவனப்பிரியன்,

    இது ஆங்கிலம்

    Q.2:178 – O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female

    ‘நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவுனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன்: அடிமைக்காக கொலை செய்த அடிமை: பெண்ணுக்காக கொலை செய்த பெண்: என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது

    இது தமிழ் மொழிபெயர்ப்பில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குரான் வசனத்தில் விளையாடியது. ஆங்கிலத்தில் free for the free என்றுதான் இருக்கிறது. சுதந்திரமான்வனுக்கு சுதந்திரமானவன் என்றுதான் இருக்க வேண்டும். தமிழில் மொழிபெயர்க்கும் போது, சுதந்திரமானவனுக்காக ( கொலை செய்த) சுதந்திரமானவன் என்று போட்டு விளையாடியிருக்கிறார்கள். குரான் வசனத்தை மாற்றுவதற்கு உங்களிடம் எதாவது தண்டனை உண்டா?

    ஆண், பெண், அடிமை,சுதந்திரமானவன் என்று யார் கொல்லப்பட்டாலும் அநியாயமாக கொல்லப்பட்டவனுக்காக கொன்றவனை அவனது இரத்த பந்தங்கள் கொல்வதற்கு குர்ஆன் அனுமதி அளிக்கிறது.
    இது உங்களது மொழிபெயர்ப்பு

    எதாவது சம்பந்தம் இருக்கிறதா? இந்த பொருளையா அந்த வசனம் சொல்கிறது?

    உங்களுக்கு ஆங்கிலம் தமிழ் படித்து புரிந்துகொள்ள முடியுமா?

    இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

    உங்கள் அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால் நீங்கள் யாரை கொல்லவேண்டும் என்று முகம்மது சொல்கிறார்? கொன்றவரையா? கொன்றவரது அடிமையையா?

    காவ்யா?
    ப்ரமசிவம்? எனி ஹெல்ப்?

  91. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //இது தமிழ் மொழிபெயர்ப்பில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குரான் வசனத்தில் விளையாடியது. ஆங்கிலத்தில் free for the free என்றுதான் இருக்கிறது. சுதந்திரமான்வனுக்கு சுதந்திரமானவன் என்றுதான் இருக்க வேண்டும். தமிழில் மொழிபெயர்க்கும் போது, சுதந்திரமானவனுக்காக ( கொலை செய்த) சுதந்திரமானவன் என்று போட்டு விளையாடியிருக்கிறார்கள். குரான் வசனத்தை மாற்றுவதற்கு உங்களிடம் எதாவது தண்டனை உண்டா?//

    ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல்,மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை தோராவில்(தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவரின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகி விடும்.’
    -குர்ஆன் 5:45

    உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண் என்றால் என்ன பொருள் கொள்வீர்கள்? கொலையுண்டவனின் வாரிசு கொலை செய்தவனை பழிக்கு பழி வாங்கலாம். அல்லது மன்னித்து விடலாம் என்ற பொருள் அதில் மறைந்துள்ளது. படிக்கும் யாவருமே இதை எளிதில் புரிந்து கொள்வர். குர்ஆனில் உள்ள சில விளங்காத வசனங்களுக்கு முகமது நபி தனது ஹதீதுகளில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அடைப்புக்குரிகளை மொழி பெயர்ப்பாளர் இடுகின்றனர்

    உதாரணத்துக்கு என்னிடம் ஒரு அடிமை இருந்து அவனை ராஜா என்ற ஒருவன் கொன்று விட்டதாக வைத்துக் கொள்வோம் நான் பழி தீர்ப்பதற்காக ராஜாவின் அடிமையை கொன்று போட்டால் என்னை அந்த இறைவன் மன்னிப்பானா? ராஜா குற்றம் செய்ததற்க்காக அவன் அடிமை எப்படி தண்டனையை அனுபவிக்க முடியும்? இது அநியாயம் இல்லையா? ஒரு இறைவன் இப்படி சொல்லியிருக்க முடியுமா? அப்படிப்பட்டவன் ஒரு இறைவனாக இருக்க முடியுமா?

    இந்த சிறிய விஷயத்தை விளங்கிக் கொள்ள இவ்வளவு விளக்கம் தேவையில்லை தங்கமணி!

    ‘வறுமை காரணமாக உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்’
    -குர்ஆன் 6:151

    வறுகைக்காக குழந்தைகளை கொல்வதை தடை செய்கிறது குர்ஆன். நாமோ கள்ளிப் பாலையும், அரிசிகளையும் சேலம் ராமநாதபுரங்களில் கொடுத்து சமாதியாக்குகிறோம்.

    ‘இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்: விபசாரம் செய்ய மாட்டார்கள்: இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.’
    -குர்ஆன் 25:68.

    தக்க காரணமின்றி ஒரு உயிரை கொல்வதை இந்த அளவு தடை செய்யும் குர்ஆன் எஜமானன் செய்த குற்றத்திற்காக அடிமையை கொலை செய்யச் சொல்லுமா? கவிதை நடையில் ஒரு வாக்கியத்தை சொல்லும் போது சில சொற்களை விடுவது அனைத்து மொழிகளிலும் உள்ள மரபு. இதை படிப்பவர் வெகு இலகுவாக புரிந்து கொள்வார். வீம்பு பண்ணுபவர் வேண்டுமென்றே மறுதலிப்பார். இதுதான் இங்கு நடக்கிறது.

  92. Avatar
    suvanappiriyan says:

    சகோ ஸ்மிதா!

    //இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்//

    அம்பேத்காருக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறது. அவர் இனத்தவரை ஒதுக்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளாரே! அதற்கு கொஞ்சமாவது வழிபாட்டுத் தலங்களில் அவர்களுக்கு இடம் கொடுங்களேன்.

    இஸ்லாத்தை பற்றி இன்னும் பாரிய விமரிசனங்கள் வந்தும் அவை அனைத்தும் மக்கள் புறம் தள்ளி வெகு நாட்களாகிறது. இஸ்லாமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  93. Avatar
    தமிழன் says:

    இ-குரான்/தமிழ்குரான்.com :
    [2:178]
    ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;,அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால்,வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும்,நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

    குரானை தவறாக மாற்றிய குற்றத்திற்காக இ-குரான் மற்றும் தமிழ்குரான் வலைத்தலங்களின் மீது, பிரியன் போர் தொடுப்பது அவரது கடமை அல்லவா ?

    மேலும், “எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களே குர்ஆனின் சட்டங்கள் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த உதாரணம்.” : அதுதான் முஹமது அடிமைகளை முற்றிலும் ஒழித்துவிட்டார் என்றீர்களே, அதன் பிறகு அடிமைகளை பற்றிய குறிப்பு குர்ஆனில் எதற்கு? இந்த காலத்தில் அடிமைகள் என்று யாரை குறிப்பிடுகிறார் ?

  94. Avatar
    தமிழன் says:

    “ஒரு இறைவன் இப்படி சொல்லியிருக்க முடியுமா? அப்படிப்பட்டவன் ஒரு இறைவனாக இருக்க முடியுமா?”

    – இதை ஒரு சில முறை சொல்லி பாருங்கள், நாங்கள் சொல்ல வருவது புரியும்.

  95. Avatar
    தங்கமணி says:

    //இந்த அளவு தடை செய்யும் குர்ஆன் எஜமானன் செய்த குற்றத்திற்காக அடிமையை கொலை செய்யச் சொல்லுமா? கவிதை நடையில் ஒரு வாக்கியத்தை சொல்லும் போது சில சொற்களை விடுவது அனைத்து மொழிகளிலும் உள்ள மரபு. இதை படிப்பவர் வெகு இலகுவாக புரிந்து கொள்வார். வீம்பு பண்ணுபவர் வேண்டுமென்றே மறுதலிப்பார். இதுதான் இங்கு நடக்கிறது.
    //
    திருதிரு சுவனப்பிரியரே
    நகைச்சுவை நாயகர் என்ற பட்டம் உங்களுக்குத்தான்.

    உங்களோட கவிதை நடை இப்னு கதிர் போன்றவர்களுக்கு கூட் புரியவில்லையா. இப்னு கதிர் போன்றவர்கள் வேண்டுமென்றே வீம்பு பண்ணுகிறார்களா?

    http://www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/002%20Baqarah%20I.htm#ُّهَا الَّذِينَ
    Allah says;

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى …

    O you who believe! Al-Qisas (the Law of equality) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female.

    Allah states: O believers! The Law of equality has been ordained on you (for cases of murder), the free for the free, the slave for the slave and the female for the female. Therefore, do not transgress the set limits, as others before you transgressed them, and thus changed what Allah has ordained for them.

    The reason behind this statement is that (the Jewish tribe of) Banu An-Nadir invaded Qurayzah (another Jewish tribe) during the time of Jahiliyyah (before Islam) and defeated them. Hence, (they made it a law that) when a person from Nadir kills a person from Quraizah, he is not killed in retaliation, but only pays a hundred Wasq of dates. However, when a person from Quraizah kills a Nadir man, he would be killed for him. If Nadir wanted (to forfeit the execution of the murderer and instead require him) to pay a ransom, the Quraizah man pays two hundred Wasq of dates (double the amount Nadir pays in Diyah (blood money)). So Allah commanded that justice be observed regarding the penal code, and that the path of the misguided and mischievous persons be avoided, who in disbelief and transgression, defy and alter what Allah has commanded them. Allah said:

    كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى

    Al-Qisas (the Law of equality in punishment) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female.

    Allah’s statement: الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى (the free for the free, the slave for the slave, and the female for the female) was abrogated by the statement life for life (5:45).

    However, the majority of scholars agree that the Muslim is not killed for a disbeliever whom he kills.

    உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது குறையல்ல. தெரிந்தவரிடம் கேட்டு புரிந்துகொள்வதில் தவறில்லை.
    இரண்டு ஜாதிகளுக்கு இடையே கொலை விழுந்தால் எப்படி தீர்ப்பது என்பது பற்றிய முகம்மதின் அறிவுரைதான். இது. இந்த ஜாதியில் ஒரு பெண்ணை கொன்றால் அந்த ஜாதியில் ஒரு பெண்ணை கொல். இந்த ஜாதியில் ஒரு அடிமையை அந்த ஜாதி கொன்றால், அந்த ஜாதியில் ஒரு அடிமையை கொல்.
    இதுதான் அறிவுரை

    சாதிகளை பாதுகாக்கும் முகம்மதின் இந்த அறிவுரையை தனி மனிதருக்கு பொருந்தும் என்று நீங்கள் நினைப்பதால்தான் உங்களுக்கு குழப்பம்

  96. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது குறையல்ல. தெரிந்தவரிடம் கேட்டு புரிந்துகொள்வதில் தவறில்லை.//

    ஹி..ஹி..எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்து விடுகிறீர்கள். உங்கள் வாதப்படி எனக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் இங்கு நடக்கும் விவாதத்துக்கு அது அவசியம் இல்லை. தமிழைப் பொல் ஆங்கிலமும் ஒரு மொழி. பிரிட்டிஷ் காரன் நாட்டை விட்டு போயும் இன்னும் அந்த அடிமை புத்தி உங்களை விட்டு போகவில்லை என்பதை உங்களின் பின்னூட்டம் எடுத்துக் காட்டுகிறது.

    இப்னு கதீரே சொன்னாலும் முகமது நபியின் கருத்துக்கு முன்னால் எவரது கருத்தும் எடுபடாது. கீழே வருபவற்றையும் சற்று படித்துப் பாருங்கள்.

    நபிகள் நாயகம் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்;டு வந்த அநீதியான ஒரு சட்டத்துக்கு எதிராக இந்த வசனம் அருளப்பட்டது.
    அடிமையாக இருக்கும் ஒருவன் அடிமையல்லாத ஒருவனைக் கொலை செய்தால் கொலை செய்த அடிமையைத் தண்டிக்க மாட்டார்கள். மாறாக கொலை செய்த அடிமையின் உரிமையாளனைத் தான் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருதிவந்தனர். அடிமையல்லாதவனின் உயிருக்கு அடிமையின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.
    அதே போல் அடிமையாக இல்லாதவன் அடிமையைக் கொன்றால் கொலையாளியை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். மாறாக அந்த அடிமையின் விலையை உரிமையாளரிடம் கொடுத்து விடுவது போதுமானது என்று செயல்பட்டு வந்தனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய அதே நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
    அதே போல் ஒரு பெண் ஒரு ஆணைக் கொன்றால் கொலை செய்த பெண்ணுக்குத் தண்டனை வழங்காமல் அப்பெண்ணின் உறவினரான ஒரு ஆண் மகனைக் கொல்ல வேண்டும் என்று கருதி வந்தனர். ஆணுடைய உயிருக்குப் பெண்ணின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணமாகும்.
    இதே போல் ஒரு பெண்ணை ஒரு ஆண் கொன்று விட்டால் கொலை செய்த ஆணுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது பெண்ணின் குடும்பத்துக்கு ஏதாவது தொகைளைக் கொடுத்தால் போதுமானது என்பது அன்றிருந்த நிலை. ஆண்கள் உயிரும் பெண்கள் உயிரும் சமமானவை அல்ல என்று அவர்கள் உறுதியாக நம்பியதே இதற்குக் காரணம்.
    அடிமைகளை அடிமையும், பெண்ணைப் பெண்ணும் கொலை செய்தால் அதற்கும் கொலை தண்டனை வழங்கமாட்டார்கள். பெண்களும் அடிமைகளும் ஆண்களின் உடமைகளாகக் கருதப்பட்டதால் தேவையான நஷ்டஈட்டை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அன்றைய நிலை.
    இந்த அநீதியான சட்டத்தை ரத்துச் செய்வதற்குத் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.
    ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே என்ற பிரகடனம் தான் இது.
    இவ்வசனத்தின் துவக்கமே ‘கொல்லப்பட்டவர்களுக்காக கொலைத் தண்டனை அளிப்பது உங்கள் கடமை’ என்று பொதுவாக அறிவிக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் ஆணா? பெண்ணா? அடிமையா? எஜமானனா? என்றெல்லாம் பேதம் கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான். இதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ளலாகாது எனக் கூறுகிறது.
    பொதுவாகக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து இவ்வசனம் கூறுகிறது.
    அடிமையாக இல்லாதவனை அடிமையாக இல்லாதவன் கொலை செய்தாலும், அடிமையை மற்றொரு அடிமை கொலை செய்தாலும் பெண்ணைப் பெண் கொலை செய்தாலும் கொலையாளிக்கு கண்டிப்பாக கொலைத் தண்டனை தரப்பட வேண்டும். கொலையாளிக்கத்தான் அந்தத் தண்டனை தரப்பட வேண்டும்.
    நபிகள் நாயகம் அவர்கள், இதை தமது ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர்.
    ஒரு யூதர் இரண்டு கற்களுக்கிடையே ஒரு பெண்ணின் தலையை நசுக்கினார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அப்பெண்ணிடம், ‘யார் உன்னைத் தாக்கியவர்? என்று கேட்கப்பட்டது. இவரா? அவரா? என்று கேட்டு வரும் போது அந்த யூதனின் பெயரைக் கூறியதும் ‘ஆம்’ என்பது போல் சைகை செய்தார். உடனே நபி (ஸல்) கட்டளைப்படி அந்த யூதர் பிடிக்கப்பட்டு இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி
    யாரேனும் தனது அடிமையைக் கொன்றால் அவரை நாம் கொல்வோம். யாரேனும் தனது அடிமையின் காதை வெட்டினால் அவரது காதை வெட்டுவோம். மூக்கை வெட்டினால் அவரது மூக்கை நாம் வெட்டுவோம் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: சமுரா (ரலி), நூல்: திர்மிதீ
    இந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிர்களும் பெண்களின் உயிர்களும் சமமாகக் கருதப்படுவதில்லை. கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் கண்டோம்.

    மேலே குறிப்பிட்ட இரண்டு ஹதீதுகளும் அந்த குர்ஆன் வசனம் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நமக்கு விளக்குகிறது. குர்ஆனுக்கு விளக்கத்தை முகமது நபிதான் தர வேண்டுமே யொழிய இப்னு கதீர் அல்ல.

    2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.

    நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.

    ஆதாரம்: புகாரி
    Volume :2 Book :49

    மேற்கண்ட இந்த நபி மொழி அடிமைகள் கூட அந்த காலத்தில் எந்த அளவு கண்ணியப்படுத்தப்பட்டார்கள் என்பதை விளக்கும்

  97. Avatar
    தங்கமணி says:

    திருதிரு சுவனப்பிரியன்
    //ஹி..ஹி..//
    ரொம்ப வழிகிறீர்கள் பாவம்
    //இப்னு கதீரே சொன்னாலும் முகமது நபியின் கருத்துக்கு முன்னால் எவரது கருத்தும் எடுபடாது. கீழே வருபவற்றையும் சற்று படித்துப் பாருங்கள்//
    படித்து பார்க்க என்ன இருக்கிறது? முன்னுக்குப் பின் முரணான முகம்மதின் வாசகங்கள். முன்னுக்குப் பின் முரணான உங்கள் பொருள் கூறும் திறமை. இதுதான் இருக்கிறது.

    அந்த வசனத்துக்கு பொருள் எழுதும்போதே இப்னு கதீர் அந்த வசனம் நீக்கப்பட்டது என்று கூறி நீக்கும் வசன எண்ணையும் கொடுக்கிறார்.
    Allah’s statement: الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى (the free for the free, the slave for the slave, and the female for the female) was abrogated by the statement life for life (5:45).

    அவர் அந்த காலத்திய அரபி மொழியை புரிந்து அதற்கு பொருள் விளக்கம் எழுதி நீங்கள் கூறிய கவிதை சால்ஜாப்பை அடித்து நொறுக்கிவிட்டார். இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

    ஒருவரது ஜாதிக்குள்ளேயே ஒருவர் கொல்லப்பட்டால் அதற்குத்தான் நீங்கள் கூறும் நீதி. ஒருவரது ஜாதிக்கு வெளியில் இருக்கும் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்குத்தான் 2.178 நீதி.

    The reason behind this statement is that (the Jewish tribe of) Banu An-Nadir invaded Qurayzah (another Jewish tribe) during the time of Jahiliyyah (before Islam) and defeated them. Hence, (they made it a law that) when a person from Nadir kills a person from Quraizah, he is not killed in retaliation, but only pays a hundred Wasq of dates. However, when a person from Quraizah kills a Nadir man, he would be killed for him. If Nadir wanted (to forfeit the execution of the murderer and instead require him) to pay a ransom, the Quraizah man pays two hundred Wasq of dates (double the amount Nadir pays in Diyah (blood money)). So Allah commanded that justice be observed regarding the penal code, and that the path of the misguided and mischievous persons be avoided,

    குரைஸா ஜாதியை சேர்ந்தவரது அடிமையை நாதிர் ஜாதியை சேர்ந்தவர் கொன்றுவிட்டால், நாதிர் ஜாதியை சேர்ந்தவரது அடிமையை குரைஸா சாதியை சேர்ந்தவர் கொல்லலாம். அதுதான் அடிமைக்கு அடிமை.

    அதுசரி எக்காலத்துக்கும் பொருந்தும் குரானில் 1962க்குப் பின்னால் பொருந்தாமல் இருக்கக்கூடிய ஒரு அசிங்கமான வசனம் வருகிறது?

  98. Avatar
    smitha says:

    இஸ்லாத்தை பற்றி இன்னும் பாரிய விமரிசனங்கள் வந்தும் அவை அனைத்தும் மக்கள் புறம் தள்ளி வெகு நாட்களாகிறது. இஸ்லாமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    Piriyan,

    Islam is growing day by day? U mean by the no. of killings U guys indulge in? If so, yes.

  99. Avatar
    smitha says:

    அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்

    அம்பேத்கர் மதம் மாற முடிவெடுத்தவுடன் கிறித்துவர்கள் அவருக்கு எப்படியெல்லாம் தூண்டில் போட்டார்களோ அதேபோல முஸ்லீம்களும் தூண்டில் போட்டார்கள்.

    பொய், லஞ்சம், மற்றும் அரசியல் அழுத்தங்கள்

    1.1933, மே மாத வாக்கில் அம்பேத்கர் லண்டனில் இருந்தபோது ஜி. ஏ. கவயீ என்ற தீண்டப்படாதோர் சமூகத்தலைவர் அம்பேத்கரை மூன்று – நான்கு முறை சந்தித்தார். அப்போது அவருடன் மதம் மாறும் விஷயம் பற்றி விவாதித்தார். இந்தியா திரும்பியபின் கவயீ, ‘அம்பேத்கர் இஸ்லாமிய மதத்தில் சேர்வதாக உள்ளார்’ என்ற செய்தியைப் பரப்பி விட்டார்.
    இதை மறுத்து அம்பேத்கர், ‘நான் இந்துமதத்தைப் பின்பற்றுபவனாக இருக்கப் போவதில்லைதான். அதுபோலவே நான் இஸ்லாமிய மதத்தையும் ஏற்கமாட்டேன். இந்நாட்களில் நான் புத்தமதத்தால் கவரப்பட்டுள்ளேன். ஆனால் நான் எனது சமூகத்திற்கு ஏற்றதோர் ஏற்பாட்டைச் செய்து முடிக்கும்வரை மத விஷயத்தில் எதுவும் செய்யப் போவதில்லை’ என்று விளக்கம் அளித்தார்1.

    1935ல் அம்பேத்கர் மதம் மாறுவேன் என்று முடிவெடுத்ததும் உலகின் பெருஞ்செல்வரான ஹைதராபாத் நிஜாம் தீண்டத்தகாதவர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்பார்களேயானால் அதற்கென ஐந்துகோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்தார்.

    மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்த கே. எல். கௌபா என்ற முஸ்லீம் தலைவர் அம்பேத்கருக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். இந்தியாவில் இருக்கின்ற முகம்மதியர்கள் அம்பேத்கரையும் தீண்டப்படாத வகுப்பு மக்களையும் மரியாதையுடன் வரவேற்கக் காத்திருப்பதாகவும், அரசியல் சமுதாயம் பொருளாதாரம் மதம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முழுமையான சமத்துவமும் சம உரிமையும் உறுதியாக அளிக்கப்படும் என்றும் அத்தந்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அம்பேத்கர் இது தொடர்பாக முஸ்லீம்களுடன் பேச விரும்பினால் 1935 அக்டோபர் 20ம்நாள் பதுவானில் நடைபெறும் முகம்மதியர் மாநாட்டிற்கு வருமாறு கௌபா தெரிவித்திருந்தார். ஆனால், அந்த மாநாட்டிற்கு அம்பேத்கர் போகவில்லை.

    இஸ்லாமிய மதத்திற்கு மாறாதே என்ற அம்பேத்கர்

    1935ம் ஆண்டு நாசிக் அருகே ஒரு கிராமத்தில் சில தீண்டத்தகாதவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறவுள்ளார்கள் என்று தெரியவந்ததும், அவசரப்பட்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அம்பேத்கர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    1936 ஜனவரியில் முஸ்லீம்களின் இரண்டு தூதுக்குழுவினர் அம்பேத்கரைச் சந்தித்து இஸ்லாமில் சேருமாறு வேண்டினர். அம்பேத்கர் அதை நிராகரித்தார்.

    1946ல் இலண்டனில் அம்பேத்கர் அவருடைய கோரிக்கை அறிக்கையை உடனடியாக அச்சிட்டுக் கொண்டு, இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை வகித்த அரசியல் தலைவர்களை அணுகினார். தீண்டப்படாத வகுப்பினரை இஸ்லாம் மதத்தில் சேருமாறு அறிவுரை கூறியிருக்கிறீர்களா என்று அம்பேத்கரிடம் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் அரசியல் நிருபர் கேட்டடார். அப்போது, அவ்வாறு ஏதும் கூறவில்லை என்று பதிலளித்தார் அம்பேத்கர். ஏற்கனவே அம்பேத்கர் இஸ்லாமில் இணையப்போகிறார் என்ற வதந்தியை முஸ்லீம்கள் கிளப்பியபோது உடனுக்குடன் அம்பேத்கர் அதை மறுத்தார் என்பதை நாம் பார்த்தோம்.

    தாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லீமாக மதம் மாறுவதை அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இஸ்லாம் ஒரு பேரழிவு மார்க்கம் என்ற அம்பேத்கர்

    தங்களது அரசியல் உரிமைகளைப் பெற பூனாவில் ஷெட்யூல்டு வகுப்பினரால் துவங்கப்பட்ட சத்தியாகிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. அப்போது 1946, ஜூலை 26ல் அம்பேத்கர் ‘பம்பாய் கிரானிக்கல்’ பத்திரிக்கைக்கு அளித்தப் பேட்டியில் ‘‘….. ஒரு விதத்தில் தாம் காங்கிரசுக்கு நன்மை செய்பவரே. காங்கிரஸ் ஸ்தாபனத்தை முற்றிலுமாக செயலற்றதாக ஆக்குவது எங்களது சக்தியில் உள்ளது. நானும் எனது சமூகமும் முஸ்லீம்களாக மாற முடிவு செய்ய முடியாதா? திரு. ஜின்னாவின் மதத்தை ஏற்றுக்கொண்டால், எவ்வகையிலும் நான் இழந்தவனாக மாட்டேன், மற்றும் நிர்வாகக் கவுன்சிலுக்கு ஒரு முஸ்லீம் உறுப்பினராக என்னை நியமிக்கக்கூடும். அந்தத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுக்கவில்லை. ஏனெனில் முழு பேரழிவிலிருந்து காங்கிரசைக் காப்பாற்ற விரும்புகிறேன்.

    இத்தகைய கடுமையான நடவடிக்கைகளில் ஏன் நான் இறங்கவில்லை? அது ஏனெனில் காங்கிரசுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை அளிக்க நான் விரும்புகிறேன். நாம் துவக்கியுள்ள போராட்டத்தில் எனது கட்சி குறைந்தபட்ச எதிர்ப்பு என்ற கொள்கையை எடுத்துள்ளது’’ என்று கூறினார்.

    ஒருசமயம் அம்பேத்கர் தாம் ஏன் இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்.

    “நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’என்று கூறினார்2.

    அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி பாலாசாகிப் தேசாய் கூறுகிறார்:

    ‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின்மீதும், அதன் பண்பாட்டின்மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்!’’3

    அதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை. இதுபோன்று வேறுபல காரணங்களும் உண்டு. அவற்றையும் காண்போம்

    இந்தியாவில் புத்தமதத்தை அழித்தது இஸ்லாமே

    அம்பேத்கர் புத்தமதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த புத்தமதம் அழிய இரண்டு காரணங்களை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஒன்று பிராமணீயம், இரண்டாவது இஸ்லாம்.

    1950, மே மாதம் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் புத்தமதத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்கினார் அம்பேத்கர்.

    அதில் ‘புத்தமதம் வீழ்ச்சியடைந்ததின் காரணங்களைக் குறித்துக் கூறுகையில், சங்கராச்சாரியாரின் வாதத் திறமையால் புத்தமதம் அழிந்துவிட்டது என்று பலர் முன்வைக்கும் கருத்தை அவர் மறுத்தார். அவர் மறைவுக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் புத்தமதம் வழக்கத்திலிருந்தது என்ற உண்மை இந்தக்கூற்றைப் பொய்யாக்கிவிடுகிறது.

    வைஷ்ணவ மற்றும் சைவ சம்பிரதாயங்கள் தோன்றியதே புத்தமதத்தின் மறைவிற்கான காரணம் என்று தாம் நம்புவதாக கூறினார். இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்று குவித்தான். எஞ்சியிருந்த புத்தத் துறவிகள் சீனா, திபேத், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுக்குப் போய்விட்டனர். புத்தமதத்தை மீண்டும் இந்தியாவில் நிலைநிறுத்த வேறொரு சமய குருமார் அமைப்பு ஒன்றை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இதற்குள் 90சதவித பௌத்தர்கள் இந்துமதத்திற்கு மாறிவிட்டதால் இது தோல்வியுற்றது’ என்று கூறுகிறார்.

    அதேபோல் பௌத்தர்களின் உலகத் தோழமை மாநாடு இலங்கையில் 1950 மே 25 முதல் ஜூன் 6வரை நடைபெற்றது. கொழும்பில் நடந்த சர்வதேசக்கூட்டத்தில் 1950 ஜூன் 6ல் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் ‘……. புத்தமதத்துக்கு எதிராக பிராமண – சத்திரியர் கூட்டணியை உருவாக்கினர். பிராமணியம் மேல்நிலைக்கு வந்ததால் புத்தமதம் வீழ்ச்சியுற அது ஒரு காரணமாயிற்று. புத்தமதம் இந்தியாவில் வீழ்ச்சியுற வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாக இருந்தது

    கிரேக்கர்கள் புத்தமதத்துக்கு இடையூறு செய்யவில்லை. புத்தமத நடவடிக்கைகளுக்கு கிரேக்கர்கள் தாராளமாக நிதியுதவி செய்தனர் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஹூணர்கள் இந்தியாவைத் தாக்கினர். அவர்கள் குப்தர்களால் தோற்கடிக்கப்பட்ட பின் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். இதற்கு முன்பு ஹூணர்கள் புத்தமதத்தை அழித்துவிட முயன்றனர்.

    ஆனால், முஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளை அகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.

    நாளந்தா பல்கலைக் கழகத்தை புத்தர்களின் கோட்டை என்று கருதிய முஸ்லீம்கள் ஏராளமான துறவிகளை அவர்கள் ராணுவ வீரர்கள் என்று கருதி கொன்றுவிட்டனர். இக்கொடிய தாக்குதலிலிருந்து தப்பிய சில பிக்குகள் அண்டை நாடுகளான நேபாளம், திபேத், சீனா ஆகிய நாடுகளுக்குத் தப்பியோடினர்.’’ என்று கூறினார்.

    1954 டிசம்பர் 4ஆம்தேதி சர்வதேச பௌத்த மாநாடு ரங்கூனில் (பர்மா) நடைபெற்றது. அம்மாநாட்டில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார்.

    ‘‘புத்தமதத்தின் சித்தாந்தங்கள் தவறானவை என்று தெரியவந்ததால் அல்லது மெய்ப்பிக்கப்பட்டதால் அந்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்துவிடவில்லை. இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்கள் வேறுபட்டவை.

    முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. அசோக சக்கரவர்த்தியின் வாரிசான கடைசி மௌரிய சக்கரவர்த்தியை, புஷ்யமித்ரா என்னும் பிராமணத் தளபதி படுகொலை செய்து, சிம்மாசனத்தைக் கைப்பற்றி, பிராமணியத்தை அரசாங்க மதமாகப் பிரச்சாரம் செய்தான். இந்தியாவில் புத்தமதம் ஒடுக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது. அது ஷீணிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

    பிராமணியத்தின் எழுச்சி இந்தியாவில் புத்தமதம் நசுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றால், இந்திய நாட்டின் மீது முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்தபிட்சுகளைக் கொன்று குவித்தனர்.’’ என்று கூறுகிறார்.

    14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்‌ஷை பெற்ற போது பேசியதாவது :

    ….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்து சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.

    ஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்ததுதான் காரணம்.

    அடுத்த காரணம் முக்கியமான காரணம் ஆகும்.

    அரபிய அடிமை முறையில் எழுந்த இஸ்லாமிய சாதி அமைப்பு

    அம்பேத்கரின் மதமாற்றமே சமத்துவம், சகோதரத்துவம் வேண்டித்தான். அந்த சமத்துவம், சகோதரத்துவம் இஸ்லாத்தில் உண்டா? இதற்கு ‘பாகிஸ்தான்’ நூலில் அம்பேத்கர் விளக்கத்தைப் பார்ப்போம்.

    ‘‘…. இனி அடுத்து சாதிமுறையை எடுத்துக்கொள்வோம். சகோதரத்துவத்தைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதைக் கொண்டு, அடிமைத்தன முறையிலிருந்தும், சாதிமுறையிலிருந்தும் விடுபட்ட சமயமாக பலரும் இஸ்லாமைக் கருதுகிறார்கள்.

    இவற்றில் அடிமைத்தனத்தைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. இப்போது அது சட்ட ரீதியாக ஒழித்துக் கட்டப் பட்டுவிட்டது. ஆனால் அது நடைமுறையிலிருந்து வந்தபோது இஸ்லாமிடமிருந்தும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் தான் அதற்குப் பெரும் ஆதரவு கிடைத்துவந்தது. அடிமைகளை நியாயமாகவும், நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை.

    சர் டபிள்யூ. முய்ர் பின்வருமாறு கூறுகிறார்.

    ‘‘…… இன்னும் சரியாகச் சொல்லப்போனால் பயங்கர மின்னல் வெட்டும் சமயத்தில் அவன் கால் விலங்கை மேலும் இறுக்கினான்… தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’

    ஆனால் பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. வங்க முஸ்லீம்களிடையே நிலவும் நிலைமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

    இஸ்லாமிய சாதிப் பிரிவுகள்

    வங்காள மாகாணத்துக்கு 1901 ஆம் வருடம் குடிமதிப்புக் கணக்கெடுத்த கண்காணிப்பாளர் வங்காள முஸ்லீம்களைப் பற்றி பின்கண்ட சுவையான விவரங்களைக் கூறுகிறார்.

    ‘‘பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மாகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது.

    முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்:

    1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப்

    2. அஜ்லாஃப்

    ஆகியவையே அவை. அஷ்ராஃப் என்பதற்கு உயர்குடிமகன் என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர்

    இஸ்லாம் வெறுக்கும் இஸ்லாமிய சாதிகள்

    தொழில் புரிவோர் உட்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும், ‘அஜ்லாஃபுகள்’, ‘ஈனர்கள்’, ‘இழிந்தவர்கள்’, ‘கடைகெட்டவர்கள்’ என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப் படுகின்றனர்.

    மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள், எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

    மசூதிக்குள் அனுமதிக்கப்படாத சாதிகள்

    சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள் என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் மசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    ஒவ்வொரு இஸ்லாமிய சாதிக்குள்ளும் ஒராயிரம் இஸ்லாமிய சாதிகள்

    இந்துக்களிடையே காணப்படுவது போன்றே முஸ்லீம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர்கள் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

    A. அஷ்ராஃப்கள் உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

    1. சையத்துகள்
    2. ஷேக்குகள்

    3. பட்டாணியர்கள்

    4. மொகலாயர்கள்

    5. மாலிக்குகள்

    6. மிர்ஜாக்கள்

    . அஜ்லாஃப் என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

    1) பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம்பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

    2) தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

    3) பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி.

    4) அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா.

    C. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.

    பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மௌக்தா, மெஹ்தார்.

    ஜாதி உயர்வுதாழ்வைக் கட்டிக்காக்கவே ஜமாத்துகள்

    முஸ்லீம் சமூக அமைப்பில் காணப்படும் மற்றோர் அம்சத்தையும் குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் குறிப்பிடுகிறார்; அவர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள ‘‘பஞ்சாயத்துமுறை’’தான் அது.

    கலப்புத் திருமணத்தை எதிர்க்கும் இஸ்லாம்

    அவர் கூறியதாவது:

    …… பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துகளைப்போன்றே முஸ்லீம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லீம்களில் மேட்டுதட்டுப்பிரிவினரும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும்.

    உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றான். அவன் அவமானப் படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.

    இஸ்லாம் இழிவு செய்யும் தொழிலாளர் சாதிகள்

    இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது. அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாடமுடியும்.

    ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.’’

    இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடிமதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.

    ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.’’ என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

    சகோதரத்துவம், சமத்துவம் வேண்டி மதமாற்றத்தை அறிவித்த அம்பேத்கர் அந்த சகோதரத்துவம், சமத்துவம் இல்லாத இஸ்லாத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்? அம்பேத்கர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்காததற்கு இஸ்லாத்தில் நிலவிய ஜாதி முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.

  100. Avatar
    smitha says:

    மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1

    “All muslims are not terrorists. But, unfortunately most of the terrorists are muslims.”

    என்ற வாக்கியம் பிரசித்தமானது.

    2001ல் அமேரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அன்றைய அதிபர் புஷ் அவர்கள் சில முஸ்லீம் தலைவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் அமேரிக்காவின் எதிரிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் எனவும் எல்லா முஸ்லீம்களும் இல்லை என்றும் தெளிவு படுத்தினார். “Islam is a religion of Peace” என்றும் கூறினார். அங்கிருந்த முஸ்லீம் தலைவர் ஒருவர் தீவிரவாதிகள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டதால்தான் அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அத்தாக்குதலை அல்லாஹ் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் கூறினார்.

    2008 நவம்பரில் இந்தியாவில் மும்பாய் நகரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகும் இந்திய முஸ்லீம் தலைவர்கள் கிட்டத்தட்ட இதே தொனியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    உலகில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கு பிறகும் முஸ்லீம் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான முஸ்லீம் மதகுருமார்கள் அதை எதிர்ப்பது வாடிக்கையாகி விட்டது.

    120 கோடி மக்கள் அனுசரிக்கும் ஒரு மதம் மிகவும் பழமையான கொள்கைகளுடனும், சீர்திருத்தங்களை அனுமதிக்காமலும் அனுசரிக்கப் படுவதால் உலகெங்கிலும் மத சச்சரவுகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றிருக்கிறது.

    இதை ஆராயும், முஸ்லீம்கள் அல்லாத பலரும் சீர்திருத்தங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.

    நான் இதிலிருந்து வேறுபட்டு முஸ்லீம்கள் மட்டுமே தங்களுக்குள்ளேயே இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். மேலும் மிதவாத முஸ்லீம்களால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும் என்றும் இச்சீர்திருத்தங்களை இப்பொழுதே அவர்கள் ஆரம்பிக்கா விட்டால் சமூகங்கள் உச்சகட்ட அழிவுக்கு செல்லும் என்றும் நம்புகிறேன்.

    அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பகுதிக்கு வெகு அருகாமையில் மசூதி ஒன்றை கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அமேரிக்கர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    முஸ்லீம்களின் பல பழமைவாத கொள்கைகளாலும், குறிப்பாக இந்த புதிய மசூதியின் கட்டமைப்பினாலும் ஏற்படும் பாதகங்கள் மற்றும் இக்கொள்கைகளை இன்றைய யதார்த்தத்தில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

    முக்கிய குறிப்பு:

    நான் முஸ்லீம்கள் அனைவரையும் எதிரிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ நினைக்கவில்லை. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மழையினால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பது நமக்கு தெரியும். பாதிக்கப்பட்ட ஒருவரையும் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஹிந்துவையும் பேட்டி எடுத்தால் இருவரும் ஒரே தொனியில் பேசுவார்கள். மொத்தத்தில் மக்களின் தேவை மிக எளிமையானது. நாகரீகமாக வாழ உரிமை, திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம், மனைவி மக்களுடன் வாழ சமூக அங்கீகாரம், தன்னை விட தன் குழந்தைகளை நல்ல நிலையில் வாழ வைக்க நினைக்கும் பெற்றோர், குற்ற செயல்களை செய்வோரின் மீது சட்டப்படி நடவடிக்கை, மனம் தொய்ந்து போகும்போது தேவைப்படும் இசை மற்றும் பிற கேளிக்கைகள், மன அமைதி பெற மதம் இவையெல்லாம் உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களின் தேவைகள். முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, ஹிந்துக்களாக இருந்தாலும் சரி, தேவைகள் ஒன்றுதான்.

    முஸ்லீம்களுக்கு உருவாகும் பிரச்சினைகள் இந்த தேவைகளை கருத்தில் கொள்ளாது வாழ்வதால் உருவாகுபவை. அவர்களின் சமூக பிரச்சினைகள் மற்ற மதத்தினரையும் பாதிப்பதால் என்னைப் போன்றவர்களும் பேச வேண்டிய நிலை.

    பகுதி-I

    இரட்டை கோபுர தாக்குதல் பகுதிக்கு அருகில் மசூதி-சர்ச்சை:
    அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் 13 மாடி இஸ்லாமிய கலாச்சார நிலையம் மற்றும் மசூதி கட்டப்படப்போவது குறித்த சர்ச்சைகள் அமேரிக்காவில் சூடு பிடித்துள்ளது. இவற்றை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் பற்றிய வேறுபாடுகளை கொஞ்சம் பார்க்கலாம்.

    புதிய மசூதியை எதிர்ப்பவர்கள்:

    (1) அலி சீனா, வாஃபா சுல்தான், அயான் ஹிர்ஸி அலி போன்றவர்கள்:

    இவர்கள் முஸ்லீம்களாக பிறந்து அவர்களின் நாடுகளில் (ஈரான், சோமாலியா போன்றவை) கொடுமை படுத்தப் பட்டவர்கள். மேற்கத்திய நாடுகளுக்கு வந்து குடியேறிய பின் தங்கள் நாட்டை மட்டுமல்லாது தங்களின் தாய் மதமாகிய இஸ்லாத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள். இணைய தளம் மூலமாகவும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் முஸ்லீம்களை இஸ்லாத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறுபவர்கள். இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் உள்ளார்கள். இஸ்லாத்தை முழுவதுமாக எதிர்ப்பதால் இவர்களுக்கு சாதாரண முஸ்லீம்களிடையே ஆதரவில்லை. இவர்கள் இந்த புதிய மசூதியை மட்டுமல்லாது அனைத்து இஸ்லாமிய விளக்கங்கள் மற்றும் குறியீடுகளை எதிர்ப்பவர்கள்.

    2) டாக்டர் ஜேஸ்ஸர் (Dr. Zuhdi Jasser) போன்றவர்கள்:

    முஸ்லீம்களாகவே இருந்து கொண்டு தங்கள் மதப்புத்தகங்களின் விளக்கங்களை காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டு முஸ்லீம்கள் வாழ வேண்டும், வாழ முடியும் என்று வாதாடுபவர்கள். இவர்களை போன்றவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் முஸ்லீம் சமூகத்தில் உண்டு. ஆனாலும் மதகுருமார்களின் கருத்திலிருந்து வேறுபடுவதால் இவர்களுக்கும் சாதாரண முஸ்லீம்களிடம் பெரிய ஆதரவு இல்லை. 9/11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் அனுதாபத்திற்காகவும், மனிதர்களின் அடிப்படை உணர்திறனை முன்வைத்தும் (Sensitivity) இந்த புதிய மசூதி கட்டப்படக்கூடாது என்று கூறுபவர்கள்.

    (3) கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்கள்:

    நாம் ஊகிக்கிறபடியே இந்த புதிய மசூதி முஸ்லீம்களின் ஜிஹாத்தின் ஒருவகை என்று கூறுபவர்கள். பிரச்சினை மசூதி கட்டப்படுவதை குறித்து அல்ல. எந்த இடத்தில் கட்டப்படுகிறது என்பதுதான்-என்பது இவர்கள் வாதம். இதற்கு இவர்கள் வரலாற்றிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். முஸ்லீம்கள் எந்த நாட்டை போரில் வென்றாலும் அந்த நாட்டின் முக்கிய கலாச்சார குறியீட்டை அழித்து அதன் மேல் மசூதி ஒன்றை கட்டியிருக்கிறார்கள். உதாரணமாக ஜெருசெலத்தில் அல்-அக்ஸா மசூதி, இந்தியாவில் முக்கிய கோயில்களை அழித்து அதன்மேல் மசூதிகள் கட்டியது போன்றவை. ஆகவே, இது வெறும் மசூதி அல்ல. இது ஒரு வெற்றி அறைகூவல் என்பது இவர்கள் வாதம்.

    இந்த மசூதிக்கான எதிர்ப்பு முதன்முதலில் ஒரு இணைய தள Blogல் உருவானது. பமீளா கெல்லர் (Pameela Geller) என்பவர்தான் மே மாதத்தில் இந்த மசூதி கட்டப்பட்டால் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என்று எழுதியவர். இந்த பெண்மணி ஆரம்பித்து வைத்த இந்த போராட்டம் அமேரிக்காவின் பல மட்டங்களில் வெடித்திருக்கிறது.

    (4)அரசியல்வாதிகள்:

    பெரும்பான்மையான குடியரசு கட்சி அரசியல்வாதிகளும், ஜனநாயக கட்சியிலேயே சிலரும் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை எதிர்க்கிறார்கள்.

    புதிய மசூதியை ஆதரிப்பவர்கள்:

    (1) பெரும்பாலான முஸ்லீம்கள்:

    நாம் ஊகிக்கிறபடியே பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். இந்த கட்டிடத்தில் மசூதி மட்டுமல்லாது “மதங்களுக்கிடையேயான ஒற்றுமை” வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகிறார்கள்.

    (2) அரசியல்வாதிகள்:

    ஜனநாயக கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக அமேரிக்க அதிபர் ஒபாமா இதை ஆதரிக்கிறார். அவரின் ஆதரவு பேச்சு மேலும் பல ஆட்சேபனைகளை எழுப்பியது. அடுத்த நாளே தான் அந்த மசூதி கட்டப்பட முடியுமா/முடியாதா என்பதை பற்றித்தான் பேசியதாகவும் அந்த இடத்தில் கட்டப்படுவது சரியா/தவறா என்பதை பற்றி இல்லை என்றும் மறு விளக்கம் அளித்தார்.

    (3) பொது ஜனத்திலேயே சிலர்:

    முஸ்லீம் தீவிரவாதிகள் சிலரால் தாக்கப்பட்டதற்காக எல்லா முஸ்லீம்களின் மேலும் பழி போடுவது சரியல்ல என்றும் அமேரிக்க அரசியல் சட்டத்தின் அடிப்படையில் “ஒவ்வொரு மனிதனின் மத உரிமை”யின் அடிப்படையிலும் எந்த இடத்திலும் எந்த மதத்தினரும் தங்கள் வழிபாட்டு கட்டிடத்தை கட்டிக்கொள்ள உரிமை உண்டு என்றும் கூறுகிறார்கள்.

    இந்த புதிய மசூதிக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களை பார்த்தோம். இங்கு இன்னுமொரு முக்கிய பிரச்சினையையும் கவனிக்க வேண்டும்.

    பெயர் சர்ச்சை: (Cordoba Mosque)

    இந்த புதிய மசூதிக்கு “கார்டோபா மசூதி” என்று நாமகரணம் செய்யப் பட்டுள்ளது. “கார்டோபா” என்பதன் பெயரின் வரலாற்றை பார்த்தாக வேண்டும். கார்டோபா என்னும் பழமையான நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. இங்கு கி.பி.600களில் ஒரு கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டது. ஆனால் கி.பி.700களில் முஸ்லீம் மன்னர்களால் ஸ்பெயினின் இந்த பகுதி பிடிக்கப் பட்டவுடன் இந்த சர்ச், மசூதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 1200களில் கிறிஸ்தவ அரசரால் இந்த பிராந்தியம் பிடிக்கப்பட்டவுடன் மீண்டும் சர்ச்சாக மாற்றப்பட்டது. இந்த பெயரின் முக்கியத்துவத்தை வாத பிரதிவாதங்களுடன் நோக்கலாம்.

    புதிய மசூதியை ஆதரிப்பவர்களின் வாதம்:

    ஸ்பெயினின் இந்த கார்டோபா பகுதி கி.பி. 700களில் முஸ்லீம் அரசர்களின் கைக்கு வந்தும் கூட, கிறிஸ்தவ மற்றும் யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுடன் வாழ அனுமதி அளிக்க பட்டது. இன்றைய மதச்சார்பற்ற கொள்கைகளை அன்றே முஸ்லீம் மன்னர்கள் அந்த பிராந்தியத்தில் நடத்தி காட்டினார்கள். இங்கு இன்னொரு விஷயத்தையும் கூறியாக வேண்டும். அமேரிக்க அதிபர் ஒபாமா எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதில் முஸ்லீம்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று புகழும்போது குறிப்பாக இந்த கார்டோபா பிராந்திய அரசாங்கத்தை சிலாகித்து பேசினார்.

    கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்களின் பிரதிவாதம்:

    – மதச்சார்பற்ற அரசாங்கம் என்றால் ஏன் அங்கிருந்த சர்ச் அகற்றப்பட்டது?

    ஒரு வெற்றி அறைகூவலுக்காகவும், மற்ற மதத்தினர் முஸ்லீம்களுக்கு அடங்கியவர்கள் என்று வெளிபடுத்துவதற்காகவும்தானே சர்ச்சின் இடத்தில் மசூதி கட்டப்பட்டது.

    – மேலும் கி.பி.1200களில் முஸ்லீம் மன்னர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் அந்த பிராந்தியத்திலிருந்த அத்தனை கிறிஸ்தவ மற்றும் யூதர்களை கொன்று குவித்து விட்டுத்தான் தோற்று ஓடினார்கள். தங்களுடைய அரசாங்கம் இருக்கும்வரை மதச்சார்பற்றவர்கள் போல் நடித்தவர்கள் தாங்கள் தோற்கும் நிலையில் மற்ற மதத்தினரை, அப்பாவிகளை கொன்று போட்டது எப்படி மதச்சார்பற்ற அரசாக வரலாற்றில் பார்க்கப்பட முடியும்?

    மேற்கூறிய அனைத்தும் சரித்திரபூர்வமாக ஆவணப்படுத்த பட்டவை. மேலும் அதிபர் ஒபாமா பேசிய பேச்சை பற்றி பி.பி.சி வானொலியில் ஒரு ஆவணத்தொகுப்பை (Documentary) ஒலிபரப்பினார்கள். அதில் பேசிய வரலாற்று அறிஞர்கள் ஒபாமா ஸ்பெயினின் கார்டோபா இஸ்லாமிய அரசாங்கத்தை “மதச்சார்பற்ற அரசாங்கம்” என்று கூறியது தவறுதான் என்றார்கள்.

    சரி, இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அமேரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 70%க்கும் அதிகமானோர் இந்த புதிய மசூதி கட்டப்பட அனுமதிக்கக் கூடாது என்று கருதுகிறார்கள்.

    இவ்வளவு பெரிய அளவில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் வெளிப்படுத்தும் இந்த புதிய மசூதிக்கான எதிர்ப்பை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்நிலை தீடிரென்று ஏற்பட்டதில்லை. பல வருடங்களாக அமேரிக்காவில் தொடரும் உள்நாட்டு தீவிரவாதம் போன்ற காரணங்களால்தான் அமேரிக்கர்களின் இந்த மனநிலை மாற்றம். அமேரிக்காவில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையை அந்நாட்டு மக்களில் பலர் அடைந்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. குறிப்பாக முஸ்லீம்களை எதிர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அந்நாடுகளில் மக்கள் ஆதரவு அதிகரித்து இருப்பதையும் இங்கு நோக்கலாம்.

    மேலும் மேற்குலகில் குறிப்பாக அமேரிக்காவில் இஸ்லாத்தின் மீதான விமர்சனம் வரம்பை மீறி சென்றிருக்கிறது. பேச்சு சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் பரிபூர்ணமாக அமேரிக்கர்களுக்கு இருப்பதால் அதை தடுக்க வழியில்லை. ஏதோ ஒரிருவர் இணைய தளங்களில் எழுதுகிறார்கள் என்றால் அதை உதாசீனம் செய்து விடலாம். முஸ்லீம் அல்லாத அமேரிக்கர்களில் 18% பேர் அதிபர் ஒபாமா ஒரு முஸ்லீம் என்று நம்புகிறார்கள். அவர் அமேரிக்காவில் பிறக்கவில்லை என்றும் நம்புகிறார்கள்.

    அதிபர் ஒபாமாவின் கொள்கைகளைப்பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது என்றாலும், பொய்களை பெரும்பான்மையான அமேரிக்கர்கள் நம்புவது விவரம் அறிந்தவர்களிடம் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    இங்கு இன்னொரு விஷயத்தை கூறியாக வேண்டும். கிறிஸ்தவ மற்றும் யூத கடும்போக்காளர்கள் எவ்வாறு வரம்பு மீறி இஸ்லாத்தை விமர்சனம் செய்கிறார்களோ அதைப்போன்றே முஸ்லீம் கடும்போக்காளர்களும் அமேரிக்கர்களுக்கு எதிராகவும், ஜிஹாத்திற்கு ஆதரவாகவும் வரம்பு மீறி எழுதுகிறார்கள்.

    உணர்ச்சி கொந்தளிப்புடன் இருக்கும் அமேரிக்க சமூகத்தின் இன்றைய நிலையில் அறிவுபூர்வமாக பிரச்சினையை கையாள்வது கடினம்தான்.

    எனினும், இந்த மசூதி சர்ச்சையை விடுத்து, இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களினால் மற்ற மதத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்களை விரிவாக பார்க்கலாம்.

  101. Avatar
    Kavya says:

    This is for Mr Arvindaraj

    //(சுவாமிகள், சாமியார்கள் எவ்வாறு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்) //

    //யார் சித்தர் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல் எமைப் பொறுத்தவரையில் மக்கள் நலம் நாடி நல்லது செய்து வாழ்ந்து பின் அவர்களின் ரத்த சம்பந்தம் இல்லாத மக்களால், கடவுளாக, சாமியாக, சித்தராக நினைக்கப் படுபவர்கள் அனைவரும் சித்தர்களே.//

    உங்கள் அளவுகோலே மலர்மன்னன், களிமிகு கணபதி போன்றோருடையதுமாகும்.

    உங்கள் அளவுகோலிலும் ஒரு சிறிய பிரச்சினை எழுகிறது.

    மககளிடையே வாழாமல் மலைப்பிரதேசங்களில் காயக்றிகளைப்புசித்துக்கொண்டு வாழ்ந்து முடிந்தோர் ப்லருண்டு. இமய மலையில் இப்படி பலர் திரிவதாகச்சொல்வார்கள். இவர்களெல்லாம் எப்படி மக்கள் நலம் நாடி நல்லது செய்து வாழமுடியும்? மக்களுக்கு இவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றே தெரியாதே!

    சந்திரகிரி மலையில் சித்தர்கள் வாழ்ந்தார்களாம். காடும்மேடும் தாண்டிச்சென்று மக்கள் வழிபட்டனராம். ஒருவேளை மக்கள் அங்கு சென்று வழிபடவில்லையென்றால் அவர்கள் சித்தர்களாக மாட்டார்கள்; அப்ப்டித்தானே?

    ரமணர் பல்லாண்டுகளாக எவரின் கண்களுக்கும்படாமல்தான் வாழ்ந்தார்.

    ஆக, மக்களிடையே வாழ்ந்து மக்களின் நலம் நாடினால்தான் சித்தர்கள் என்றில்லை. மக்களுக்குத்தெரியாமலே வாழ்ந்து முடிந்தவர்களிலும் சித்தர்கள் பலர் இருக்கலாம் உங்கள் ப்ரந்த அளவுகோலைப்போடும்போது.

    உங்கள் பட்டியலுக்கு நீங்கள் கொடுத்த முதல் வரி (இங்கே நான் போட்டதில் முதல்) சரியே.

    சித்தர்கள் எவர் ? சாமியார்கள் எவர்? சுவாமிகள் எவர்? என்பதில் பல பிர்ச்சினைகள். எனவேதான் சித்தர்கள் என்பதில் ஒரு குறிப்பிட்ட வரையைத்தேடியாக வேண்டும்.

    ஏன்?

    அந்தப்பதினெட்டுத்தமிழர்களின் புகழை மாசில்லாமல் காக்க.

    மறுபடியும் நான் ஆழ்வார்களுக்கே வருகிறேன்.

    அவர்கள் பன்னிரண்டுபேரே. அவர்களுக்குண்டான குணங்கள் பலரிடம் அக்காலத்திலும் காணப்பட்டன‌. அவர்களுக்குப்பின் பலரிடைமும் காணப்பட்டன‌. ஆனால், அந்த 12 பேரை மட்டுமே சிரிவைணவம் ஆழ்வார்கள் எனவழைத்து அவர்களின் பாட்ல்களைத் தொகுத்து அவைகளுக்குத் தெய்வ சகதியுண்டென்று சொல்லி, திருமால வழிபாட்டில் கட்டாயம் செய்தது. அது மட்டுமில்லாமல், அவர்களைத்திருமாலில் ஒரு அங்க அவதாரங்களாகவும் ஆண்டாளை இலக்குமியின் அவதாரமாகவும் செய்தது. இன்றுவரை அப்படித்தான். எத்தனையோ பல கயவர்கள் அநத் வரிசையைகெடுத்து உங்கள் பட்டியல் போல நீண்ட பட்டியல் போட்டு ஆழ்வார்கள் எனப்பண்ணத்துடித்தார்கள். விடவில்லை. அவர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது. அப்பன்னிரண்டுபேரே ஆழ்வார்கள். அவர்களைக்கொண்டே சிரிவைணவம். இதை மொழிந்தவர் இராமானுஜர். வழிமொழிந்தனர் ஆச்சாரியர்கள். ஆனால் மற்ற்வர்களையும் ஏன் மரம் செடி கொடிகளையும் கூட‌’ஆழ்வார்’ எனப்பெயரிட்டு அழைக்கலாம். நம்மாழ்வார் போய அமர்ந்த புளிய்மரம், புளி ஆழ்வார் எனவழைக்க்ப்படுகிறது. எனினும் 12 ஆழ்வாரிகளின் இடம் தனித்தனி.

    என்று 12 பேர்களின் இடங்களைச் சிதைக்கின்றதோ அன்றே சிரிவைணவம் போயோ போச்.

    பதினெட்டுப்பேரே சித்தர்கள். மற்றவர்கள் சித்தர்களின் குணங்களைக்கொண்டவர்களாக இருக்கலாம். அவ்வளவுதான்.

  102. Avatar
    ரஃபீக் says:

    வெல்டன் தங்கமணி
    சுவனப்பிரியன் அவருக்கு தோன்றியமாதிரி இஷ்டம் போல விளக்கம் கொடுக்கிறார். தங்கமணி ஆதாரப்பூர்வமாக தப்ஸீரில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று காண்பித்து விளக்கம் கொடுக்கிறார்.

    இந்த மாதிரி இஷ்டம் போல குரான் வசனத்தில் பிராக்கெட் போட்டு பொருளையே மாற்றிவிடுவதை தற்காலத்தில் எல்லா மொழிபெயர்ப்புகளிலும் செய்துவருகிறார்கள்.
    பைபிளில் இயேசு அடிமை என்று குறிப்பிடுவதை வேலைக்காரன் என்று பொருள் மாற்றிவிடுவதைப் போல, குரானில் இது போல அடிமை என்பதை வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் என்று சொல்லிவிடுவார்கள். அது என்ன என்று படிப்பவர்களுக்கு தெரியாது. இந்த லட்சணத்தில் எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்று பீலா வேறு.

  103. Avatar
    Amudhan says:

    I have seen most of my Bramin friends turn any topic into Hindu vs Muslims.
    They look for any small gap to propogate Antimuslim sentiments. They do it conciuosly or not, I don’t know. But I am sure they do it.

    Here the topic is about our Siddharhal, but see people here are trying to degrade Ismal/Mulsims . They have turned the topic cleverly.

    Hats off my Intelligent Brahmin Bros!

  104. Avatar
    Amudhan says:

    Hi friends,

    I write here in English because I don’t have Tamil facility in my place. (pls forgive me )

    (1) The caste of sytem Muslims is not like caste system of Hindus.

    The mulsim caste system cannot be called as a caste sytem in its true meaning because it was division of people happened naturally based on geography, language, races etc. and Islam doenot prescribe or allow any caste sytem within human beings.

    It says God created peole in different color, diff languages etc to identify each other and there is no descrimination among human being based on these.

    Where as in Hiduism, as per Manu the caste system is prescribed by the religion and it has a well said top down Hirearachy based on birth and still followed by the cultural , social and political setups.

    (2) Among Muslims, marriage between any two groups within Islam is not banned , rather it is recomended.

    But grops among Muslims exits at apoinmt of time always.
    Slowly the groups shall get merged in Time. for example Muslims from some part of Tamilnadu was not willing to marrry Mulsims from some other part of Tamilnadu . But this gets vanished in the present socio econmical scenario. Even Tamil Muslims choose thier bride from Malayali Muslims is happening for a long time. (of course Urdhu & Tamil maarriages are not common, because of the big language/culture differnece.)
    Alos this is not seen as a Purtchihar thirumanam or intercaste marriage . It is percieved as a normal one.

    Is this possible within Hindu fold?

    (3) Caste system in Hindus putforth Brahmins as top most /sacred people who are closer to God.
    and we know about the Varnaashrama (a)dharma.

    But you can’t find such things in any other religious texts.

    (4) The motive of Mohamed and Quran was to abloish Slavery. Mohamed tried to to do it step by step, because sudden ban on this then exitng sytem was not easy.
    The ultimate motto is abolishing it.

    Now the slavery system has been abolished (not only by Islam but also by the social and econmical changes in the History) and is not prevailing anywhere in the (islamic)world and hence the rules putforth by Mohamed/Quran for the welfare/betterment of the slaves have only text value, and no practical applicability now.

    (5) I can see the motto of the people involved in this discussion to degrade Islam and to justify the bad Hierachical caste sytem based on Manu. They use Ambedkar also for this. These peple really dont write ever about the uplitment of Dalits or abolishment of Caste sytem within Hindu fold. Are they ready for intercaste marriage? atleast they support or recommend it?
    Ambedkar’s view is for the freedom of Dalits. As per the then staus of Muslim comminty he saw the evidence of similar issues in the Muslim community too and he denied the convertion into Islam. That may be a good decision then.

    I have below the question:

    why intellectuals from Brahmin community like Malar Mannan always wants to grow hatred on Muslims?
    Is it the only way to deviate the hatred on Brahmins from the other backward or Dalit groups?
    There is no other way? please think , sir.
    Sir, you are working for triggering fights , communal clashes, bloodsheds,to safe guard the welfare of a small community.
    Is it the only way? Is it right way?

  105. Avatar
    suvanappiriyan says:

    சகோ அமுதன்!

    //Amudhan says:
    April 19, 2012 at 9:03 am
    I have seen most of my Bramin friends turn any topic into Hindu vs Muslims.
    They look for any small gap to propogate Antimuslim sentiments. They do it conciuosly or not, I don’t know. But I am sure they do it.
    Here the topic is about our Siddharhal, but see people here are trying to degrade Ismal/Mulsims . They have turned the topic cleverly.
    Hats off my Intelligent Brahmin Bros!//

    பல தளங்களில் நடக்கும் மோசடியை அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்.

  106. Avatar
    தங்கமணி says:

    ஜனாப் Amudhan,

    இந்த பிரச்சாரம் ரொம்ப நாளாகவே நடந்துவருகிறது. அதற்குத்தான் நான் முன்னரே ஒரு இணைப்பை கொடுத்தேன். திரும்பித்திரும்பி ஒரே விஷயத்தை சொல்ல அலுப்பாக இருக்கிறது.
    இந்தியாவில் இருப்பது போன்ற அகமண முறை அரபியாவில் இல்லை என்பது உண்மை. ஆனால் மேல்ஜாதி ஆண் கீழ்ஜாதி பெண்ணை மணக்கலாம். ஆனால் மேல்ஜாதி பெண் கீழ்ஜாதி ஆணை மணக்கமுடியாது என்பதுதான் இஸ்லாமிய ஜாதி முறை. இதனை பலர் பேசியிருக்கிறார்கள்.

    சவுதி அரேபியாவில் மேல்ஜாதி பெண், கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்ததை நீதிபதி ரத்து செய்து கட்டாய விவாகரத்து வழங்கினார். அதற்கான இணைப்பை நான் கொடுத்திருக்கிறேன். வேண்டுமானால் al timani என்று தேடிப்பாருங்கள். புகழ் பெற்ற வழக்கு. அது மாதிரி உங்களது புனித பூமியில் ஏராளமாக நடந்திருக்கிறது. அது குரானுக்கு மாறாக நடந்திருக்கிறது என்று நீங்கள் இங்கே சொல்லுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. 1400 வருடங்களாக அரபியாவில் தீர்க்க முடியாத ஜாதி ஏற்றத்தாழ்வை இந்தியாவில் இஸ்லாம் தீர்த்துவிடும் என்பது சும்மா வெற்றுப்பிரச்சாரம்.

    சையதுகள் என்பவர்கள் முகம்மதின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் உயர்ந்த குலம் என்றும் இன்னமும் இந்திய இஸ்லாமியர் உட்பட எல்லோரும் நம்புகிறார்கள். அரபுகளுக்கு மட்டுமே குலப்பெருமை உண்டு. மற்றவர்கள் அனைவரும் ஒரே கீழ்குலம் என்று சொல்லும் தெவ்பந்த் மதரஸாவும், அதுவே இன்று பர்சனல் லா ஆஃப் இந்தியன் முஸ்லீம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

    முகம்மதின் குடும்பத்தினரும் அவரது ஜாதியும் நன்றாக வாழவேண்டும் (ஸூரத்து குறைஷின்) என்றும், அவர்கள் மீது அல்லாஹ் அருள வேண்டும் என்றும் இன்னமும் முஸ்லீம்கள் தங்களது தக்பீரில் கூறுகிறார்கள். அது போல இந்துக்கள் பிராம்மணர்கள் நன்றாக வாழவேண்டும் என்று தினந்தோறும் பிரார்த்திப்பதாக தெரியவில்லை.
    குரானில் முகம்மது எங்கேயும் அடிமைமுறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றோ அதனை பின்பற்றக்கூடாது என்று முஸ்லிம்களை கேட்டுகொண்டதாகவோ ஒருவரி கூட கிடையாது. இருந்தால் எடுத்து காட்டுங்கள். முகம்மதுவே ஏராளமான அடிமைகளை வைத்திருந்தார். சுதந்திரமாக இருந்தவர்களை போர், கொள்ளை என்ற சாக்கில் அடிமைகளாக்கி விற்றிருக்கிறார். அடிமைகளை வாங்கியிருக்கிறார். விற்றிருக்கிறார். ஆகவே அடிமை முறையை ஒழித்ததாக கதை விடுவது தெரியாதவர்களிடம் போய் சொல்லுங்கள். இப்போது இணையத்தில் எல்லாம் கிடைக்கின்றன. ஆகவே பழைய பிரச்சாரம் ஓடாது.

  107. Avatar
    punai peyaril says:

    பிறாமணாளோ சத்திரியரோ, யாரும் இங்கு பயத்தை பிரதானமாகக் கொண்டு மதக் கருத்துக்களைச் சொல்வதில்லை. எங்கிருந்தோ வந்தவர்கள், பண வலிமை மட்டுமே பின் புலமாக கொண்டு, பயத்தை ஏற்படுத்தியும், தங்களது உலகின் அடிமைகளை பற்றிக் கவலைப்படாமல், பிற தேசத்தில் மனவலிமை இல்லாதவர்களை அடையாளம் கண்டு நடக்கும் அடிமை மதமாற்றத்தை கண்டு கொள்ளாமல் இருந்த நாட்டில், வீரியமாக பிறாமணாள்கள் எதிர்ப்பது மட்டுமே உணமையென்றால் நான் சத்ரியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்… அறிவால் மனதால் திடமாக இந்தியர் அனைவரும் இந்த எதேச்சிகாரத்தை நிறுத்திட வேண்டும். எங்கள் கருத்தே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றே விவாதத்திற்கு வருபவர்கள் மிக மிக ஆபத்தானவர்கள்… அவர்கள் கருத்து மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படும் போது , அப்படி செய்பவர்கள் பிறாமின் தான் என்பது வேதனைக்குறியது. ஆடி அடங்கத் துடிக்கும் பாகிஸ்தான் ஒரு உதா”ரணம்”. ஒருத்தனை ஒருத்தன் அழிப்பதே வாழ்வு என்று நினைக்கிறார்கள். எதேச்சிகாரம் என்ன ஆட்டம் போட்டாலும் ஜெயிக்காது என்பதற்கும் இட்லரிலிருந்து இடிஅமீன் வரை உதாரணம் உண்டு.

  108. Avatar
    smitha says:

    Amudhan,

    Before defending islam, you must get the facts right. Caste system is not prescribed in hindusim & nowhere does manu mentions this.

    U say that marraige amongst various caste groups will slowly happen in muslim comunity. The reality is different. Even going by your argument, the same applies to hindusim as well.

    U have asked whether inter caste marraige is possible within hinduism? Tell me – Are you living in a fool’s paradise?

    Thangamani has answered on the topic of slavery in islam.

    There is no need for anyone to turn against islam, least of all brahmins.

    But when faslehood is spread about hindusim, it is the duty of the hindus to set the facts right – brahmin or non brahmin.

    The so called rationalists in our country have unfortunately spread lies about hinduism, at the same time keeping quiet when atrocities by other religions notably islam is committed.

    Why? What are you afraid of?

    Do you know the plight of the hindus in pakistan?

    Forget pakistan, there are 3 lakh hindus who have been driven out from kashmir & are now living in slums in delhi.

    Why has no one raised a word on it?

    The Imam of Jama Masjid who is a respected muslim religious leader, openly says that he will complain to the OIC that muslims in india are not treated properly.

    Is this not an anti-national statement?

    India was the first country to ban “satanci verses” even before it was released here. U guys talk of freedom of expression. This time around, where was it hiding?

    U sympathised with MF hussain & said that his freedom of expression should be safeguarded. Have U ever seen his paintings? He has painted Hindu Gods & Goddesses in the nude. Ok U call it art.

    My question, why did he dare not do it on Allah & Prophet? Have U seen his paintings on them? Just see & U will know. It is very carefully done.

    Hussian produced & directed a film “Meenaxi – a tale of 2 cities”.

    The movie was withdrawn from the theatres in the same week as its launch after some Muslim Ulemas protested against it. The reason was that the song Noor-Un-Ala from the movie used Qur’an verses honoring the God as its lyrics which was used in honoring the lead actress.

    What is your answer to this?

    India has the 2nd largest Muslim population in the world.

    Muslims do not agree to a common civil code.

    Last year when the then T.N CM karunanithi brought a law making marraige registration compulsory, muslims refused to heed citing religious reasons.

    What were the so called civil activists doing?

    Hindus have been & and are at the receiving hand from other religions notably islam.

    It is time they stood up for their righs.

    See, it is a shaeful thing that the majority in this cunytry have to fight for their rights.

    First understand the meaning of secularism in this country before U talk further.

    1. Avatar
      Kavya says:

      The last line s significant. The muslims fighting for their rights and getting them somewhat, looms larger; hence, the word pesudo secularism used by the anti muslims like BJP and the Brahmins here.

      The practical life shows otherwise. A few weeks ago, a man has filed a case in Madurai Bench of Madras pleading the Court to intervene and protect the secularsim of the country in the act of TN EB. The EB at Nagarkoil built a huge Pillayaaar temple within the office complex. Notices have been served on the TN EB authority.

      In Madurai Railway Juncion, u can see at the entrance not one,but two temples: for Murugan and for Pillaiyaar. The porters have built them and appointed brahmin pujais to work there.

      U go to Railway Station yards anywhere in SR:u find Pillaiyaar temples right in the yard. My mother used to worship on such yard pillaiyar for the safe delivery when she was carrying me. I was born healthy and no doubt,according to her, the Railway Station Pillayar blessed her in the delivery.

      Is it a secular country? Definitely Not. More loaded in f/o Hindus less in f/o others.

      Of course,there is a niche for Mother Velankkanni right inside the PF No.1 near the veg restaurant at Egmore Station.

      No Hindu cried foul. Why? No marks for guessing right. The obvious fact is : Pot cant call the kettle black ! :-)

  109. Avatar
    smitha says:

    Amudhan,

    Do nlot cleverly try to create a divide here between brahmins & non brahmins.

    Ur thalaivar EVR has already spread this poison for over 50 years.

    Neenga thirumbaravaum try panna vendaam.

  110. Avatar
    Amudhan says:

    Smitha,

    Try to understand that there is no caste sytem in Islamic text. Rather people happens to live in groups based on geography, language etc. It is groups not caste. And there is no upper caste or lowers caste or upper groups or lower groups prescribed or identified in Islam anywhere. Try to undertsnad the diffrence. (I hope you understand it already and do not want to accept it).
    All pepole are equal according to Quran and Hadiths . There is no single saying that some poeple are upper and some other are lower.

    Smitha ,
    can you try to change the texts in your Hinduism those pertains to caste sytem? Ask your RSS or Sankarar.

  111. Avatar
    Amudhan says:

    Thangamai

    Aneha Namskaarangal.

    you tell the half boiled truths again and again and want to prove that Islam has (hiercarical) caste sytem, But it is not at all true. what is the case of saudi arabian court? Pls explain here in detail.
    Islam tried to abolish the social descrimantions based on birth. Practically it is a succesful movement in History. But may not be 100% succesful.

    Islam strongly opposes caste system or hierrachical division of people in its texts.( you would be knowing it).

    you know., the Tamil Muslim community is purely a Tamil group which emerged from our Tamil commuinty only. But no one knows which caste they belonged to when they were non muslims.

    Endha kudumbammum Uyarndhadhu Illai. Even Mohameed is also a normal Human being not God as per Quran.

    Any Muslim can Marry anyother Muslim (in India) as per Islamic concepts/texts.

    Any how Thangamani will never accept this!.

    okay Let Islam support the evil caste system as per our Thangamani.

    I ask you one moral question:
    Can you ask RSS/Sankarar to declare that any Hindu(including Dalits) can marry any other Hindu(including Dalits) ?
    ( I agree that it happens here and there by Love marriages but the question is diferent).

    Can you try to correct the texts in Hinduism by our respected Sankarar?

  112. Avatar
    தங்கமணி says:

    ஜனாப் Amudhan

    //All pepole are equal according to Quran and Hadiths .//

    திரும்பவும் பொய்

    Sura 2 (The Cow), Verse 178:

    “O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female,

    எங்கே சமத்துவம்?

  113. Avatar
    தங்கமணி says:

    http://www.sahihmuslim.com/sps/smm/sahihmuslim.cfm?scn=dspchaptersfull&ChapterID=674&BookID=15
    முடாப்பர் என்றால் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட அடிமை.
    அப்படி விடுவிக்கப்பட்ட ஒரு அடிமையை முகம்மது விற்று காசு பண்ணுகிறார். அந்த விடுவிக்கப்பட்ட அந்த அடிமையை அடிமையாகவே விற்று இன்னொருவருக்கு அடிமையாக்குகிறார்
    CHAPTER: THE PERMISSIBILITY OF BUYING A MUDABBAR SLAVE
    No. 4115

    Jabir b. ‘Abdullah said that a person among the Ansar declared his slave free after his death, as he had no other property. This news reached the Prophet of Allaah (sallAllaahu alayhi wa sallam) and he said: Who will buy him from me? And Nu’aim b. al-Nahham bought him for eight hundred dirhams and he handed them over to him, ‘Amr (one of the narrators) said: I heard Jabir b. ‘Abdullah as saying: He was a Coptic slave, and he died in the first year (of the Caliphate of ‘Abdullah b. Zubair).

    No. 4116

    Jabir is reported to have said: A person amongst the Ansar who had no other property declared a slave free after his death. Allaah’s Messenger (sallAllaahu alayhi wa sallam) sold him, and Ibn al-Nahham bought him and he was a Coptic slave (who) died in the first year of the Caliphate of Ibn Zubair.

  114. Avatar
    தங்கமணி says:

    ஜனாப் Amudhan

    இணையத்தில் தான் இவையும் இருக்கின்றன

    பல்வேறு வழிகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; இதை மறுக்கும் அளவு மடையர்கள் யார் இருக்க முடியும் ?

    உதாரணமாக, இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: … சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது… நமது சமூகத்தில், பல நூறு வருடங்களாக ஒரு சாதியின் உட்பிரிவுகளுக்குள் மட்டுமே திருமணம் செய்யப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால், பெற்றோரின் குடும்பத்தோடு அல்லது நெருங்கிய உறவினர்களோடு மட்டுமே திருமணம் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாகவே, இந்த இந்திய சமூகம் உடல் அளவில் சீர்கேடு அடைந்து வருவதோடு, அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ?

    … திருமண உறவு வட்டத்தை விரிவாக்குவதன் மூலம் மட்டுமே புத்துணர்வு ஊட்டும் புதிய வேறுபட்ட ரத்தத்தை நம்முடைய சந்ததியாருக்குத் தர முடியும். நம் சந்ததியினரை வரவிருக்கும் தீமைகளில் இருந்து காப்பாற்றவும் முடியும்.” – ஸ்வாமி விவேகானந்தர் (Complete Works of Vivekananda, Volume 5 – pages 334 ~ 341)

    ஹிந்துஸ்தானத்தின் மேல் விழுந்த அன்னிய ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்வதைப் போல, இந்தச் சாதி அமைப்பையும் தீண்டாமையையும் எதிர்த்தும் புரட்சி செய்தேயாக வேண்டும் என்று நான் மனவெழுச்சி கொண்டேன். – வீர சாவர்க்கர் (1920, Letters from the Andamans, Samagra Savarkar vangmaya, Vol. 5, p. 490)

  115. Avatar
    தங்கமணி says:

    அர்ஜுனன் சொல்கிறான்: என் உறவினரான துரியோதனர்களைக் கொன்றால் அந்தக் குலம் அழியும். குலம் அழிந்தால், அவர்கள் பின்பற்றும் குல தர்மம் அழியும். குல தர்மம் அழிந்தால் ஒரு குலத்துப் பெண்கள் மற்ற குலத்து ஆண்களோடு சம்பந்தம் கொள்வார். சாதிக் கலப்பால் தர்மம் அழிந்து போகும். குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.

    கிருஷ்ணன் சொல்கிறான்: அழியும் உடல்களால் உருவாகுபவை பற்றுதல்களே; அன்றி, கடமைகள் அல்ல. அவை ஆத்மாவை அறியச் செய்யாது. ஆத்மாவை அறிந்து செயல்படுவதே தர்மம். மற்ற எதுவும் தர்மம் இல்லை.

    தனிமனிதரின் குணம் மற்றும் செயல் – என்ற இந்த இரண்டின் மூலமாகவே வர்ண ஆசிரமம் உண்டாகிறது (பிறப்பால் இல்லை).

    ஒருவரின் குணம் மற்றும் செயல்களால் உருவாகும் அந்த சுயதர்மத்தைப் பின்பற்றுவதுதான் அவரவர் கடமை. அனைத்து வகை தர்மங்களிலும் சிறந்தது சுயதர்மம் மட்டுமே. சுயதர்மத்தின்படி மட்டுமே நீ செயல்படு. சுயதர்மப்படி செயல்படாமல் இருப்பதுதான் பாவம். – பகவத் கீதை

    நன்றி
    http://www.tamilhindu.com/2012/03/hindu-savants-on-caste-no-bar-marriages/

    1. Avatar
      Kavya says:

      மணி, தியரி வேறு; வாழ்க்கை வேறு. ‘அறம் செய விரும்பு’ என்றுதான் படித்து வந்தோம். எப்படி வாழ்கிறோம்? அவ்வை அப்படிச்சொன்னதால் போலீசு ஸ்டேஷனே வேண்டாமென்றா வாழ்க்கை போகிறது?

      அதைப்போல, இந்து மதம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. அதன் நெடும்பயணத்தில் என்னென்னவோ நடந்து விட்டன. அதிலொன்றுதான் தலித்துகள் மேல் தொடுக்கப்பட்ட தீண்டாமை. சுவர் இன்று கட்டியது பிள்ளைகள். கோயிலுள் நுழையக்கூடாதென்று சொன்னது பிராமணர்கள் என்போர்.

      இன்றும் உங்களைப்பிராமணர் என்றுதானே அழைத்துக்கொள்கிறீர்கள்? அதைகேட்டால் கோபம் அல்லவா பெருக்கெடுக்கிறது உங்களுக்கு!

  116. Avatar
    தங்கமணி says:

    On the question of parity between husband and wife, Section 117 (3) of the AIMPLB compendium differentiates between Muslims of Arab and non-Arab origin. It provides that “regard shall be had in respect of descent among the Arabs especially Quraysh and those non-Arab families who have preserved their descent. People in the rest of the non-Arab world are mutually equal”.

    ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டின் படி அரபுகள் மேன்மையானவர்கள். மற்ற்வர்கள் எல்லோரும் கீழானவர்கள். இச்லாமை பற்றி எங்களிடம் எடுத்து உடுவதற்கு முன்னால், இந்த ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டிடம் போய் சொல்லலாமே?

  117. Avatar
    suvanappiriyan says:

    //தங்கமணி says:
    April 20, 2012 at 2:50 pm
    ஜனாப் Amudhan
    இணையத்தில் தான் இவையும் இருக்கின்றன

    பல்வேறு வழிகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; இதை மறுக்கும் அளவு மடையர்கள் யார் இருக்க முடியும் ?
    உதாரணமாக, இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: … சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது… நமது சமூகத்தில், பல நூறு வருடங்களாக ஒரு சாதியின் உட்பிரிவுகளுக்குள் மட்டுமே திருமணம் செய்யப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால், பெற்றோரின் குடும்பத்தோடு அல்லது நெருங்கிய உறவினர்களோடு மட்டுமே திருமணம் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாகவே, இந்த இந்திய சமூகம் உடல் அளவில் சீர்கேடு அடைந்து வருவதோடு, அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ?
    … திருமண உறவு வட்டத்தை விரிவாக்குவதன் மூலம் மட்டுமே புத்துணர்வு ஊட்டும் புதிய வேறுபட்ட ரத்தத்தை நம்முடைய சந்ததியாருக்குத் தர முடியும். நம் சந்ததியினரை வரவிருக்கும் தீமைகளில் இருந்து காப்பாற்றவும் முடியும்.” – ஸ்வாமி விவேகானந்தர் (Complete Works of Vivekananda, Volume 5 – pages 334 ~ 341)
    ஹிந்துஸ்தானத்தின் மேல் விழுந்த அன்னிய ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்வதைப் போல, இந்தச் சாதி அமைப்பையும் தீண்டாமையையும் எதிர்த்தும் புரட்சி செய்தேயாக வேண்டும் என்று நான் மனவெழுச்சி கொண்டேன். – வீர சாவர்க்கர் (1920, Letters from the Andamans, Samagra Savarkar vangmaya, Vol. 5, p. 490)//

    ஹி…ஹி..ஹி…

    தங்கமணி! சீர்திருத்தவாதிகள் தற்போது சொல்வதை யார் கேட்கிறார்கள்? வேதத்திலிருந்தும், மனு ஸ்மிரிதியிலிருந்தும் ஆதாரம் கொடுத்தால் கொஞ்சம் மதிப்புடையதாக இருக்கும். அதை தருவீர்கள் என்று நினைக்கிறேன்.

    அமுதன் அருமையாக கேள்விகளை கேட்டு வருகிறார். எனவே நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன். :-)

  118. Avatar
    தங்கமணி says:

    ஜனாப் சுவனப்பிரியன்
    //ஹி…ஹி..ஹி…//
    துடைத்துகொள்ளவும். ரொம்ப வழிகிறது
    ஆர் எஸ் எஸ் சொல்லுமா, சங்க பரிவாரம் சொல்லுமா என்று ஜனாப் அமுதன் கேட்டார்.
    அதற்குத்தான், சங்கபரிவாரத்தின் கொள்கையை வகுத்த சாவர்க்கரின் மேற்கோளை போட்டேன்.

    //அதை தருவீர்கள் என்று நினைக்கிறேன்//
    தந்துவிட்டேன். மேலே கீதையில் கிருஷ்ணர் சொல்லுவதையும் போட்டிருக்கிறேன்.
    படித்துகொள்ளவும்
    //எனவே நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன். :-)//
    வேறவழி?

  119. Avatar
    suvanappiriyan says:

    Anonymous said…

    தங்கமணி ஐயா அவர்களே!,

    //குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.//

    இந்து மதத்தில் சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கை உண்டா? அல்லது ஏழு ஜென்மம் என்ற நம்பிக்கையா?, அப்படி சொர்க்கம் நரகம் என்ற ஒன்று இருந்தால் இவை யார் யாருக்குக் கிடைக்கும்? அதை அடைவதற்குண்டான வழிமுறைகள் என்ன?. துறவறம் இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது?. துறவறத்தின் மீது தற்கால மிகப் பெரும்பான்மையான இந்துக்கள் என்று கூறிக்கொள்வோர் விருப்பமின்றி இருக்கின்றனரே, இவர்கள் அனைவரும் செல்லுமிடம் எது?.

    கொஞ்சம் விளக்க முடியுமா?.

  120. Avatar
    தங்கமணி says:

    இந்து மதத்தின் சமூக நிலைபாடுகளை பற்றி பேசி இஸ்லாமுடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்து வந்தீர்கள். அதற்குத்தான் நான் பதிலளித்தேன்.
    இந்து மதத்தின் ஆன்மீக நிலைப்பாடுகளை பற்றி இப்போதுதான் கேட்கிறீர்கள். அதற்கு பதிலளிக்கக்கூடியவர்கள் தமிழ் இந்து.காமில் இருக்கிறார்கள்.

  121. Avatar
    punai peyaril says:

    இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம், நாம் அனைவருமே கடவுளின் அங்கம். நம்மில் எவ்வளவு கடவுளின் அங்கம் என்பது நாம் எவ்வளவு புனித்தன்மையை பிறப்பின் வாழ்வில் அடைகிறோம் என்பதை பொறுத்ததே… ஏழு ஜன்மம் உண்டு. have i been here before புத்த்கம் படியுங்கள்… அந்த ஆராய்ச்சிகள் இந்து மதம் சென்ஸிபில் மதம் என்பது உணர்த்தும். எண்ணெய் சட்டி, சொர்க்கம் , நரகம் என்பது டூபாக்கூர்களின் சிந்தனை… அகம் பிம்மாஸ்மி… என்பதே உண்மை. வீடியோ கேம்ஸ் விளையாடுபவன் தான் அடுத்தவன் வாழ்வில் வேற்றுமை கொண்டு விளையாடுவான். அது உங்கள் கடவுள் தான் எங்களையும் படைத்திருப்பார் என்றால், நாங்கள் சொல்வதைக் கேட்டு தெளிவு பெறுங்கள்…

  122. Avatar
    smitha says:

    Amudhan,

    U may call them groups instead of castes. The name is not important here. The fact is that they do not mingle.

    U are playing with words here.

  123. Avatar
    smitha says:

    Kavya,
    U have not answered questions on muslims non adhering to the judicial system, common civil code, marraige resgistration etc.,

    First answer these queries.

    Then U can call the BJP & RSS anti muslim.

  124. Avatar
    Amudhan says:

    Hindu Vs Muslim pattasu. Koluthi Podu! (Nudity and Hindu Philosphy )
    ———————————————————-

    (1)Slavery system is differernt. It is not caste system.

    Slavery system doesnot persist any where in (ismlamic) world. (It is ablolished. If it is there some where it needs to be eliminated).

    The caste system and Dalit system ( dalit system was closed to Slavery) needs to be elimanated by intercaste marriages and otherways like reservation, etc.

    It was decied by Mohamed and his comrades to make a vocal invitaion to the public from the mosque five times a day. (Thats is called Adhan / Bangu , I think.)
    the first person to say the first Adhan was selected from the black slave who was Bilal. ( even today non brahmins can’t enter Karuvarai or perfrom Poojas in uppercaste temples like Shiva or Vishnu temples)

    The intention of Mohamed to raise the status of slaves and to free them in the course of time.
    If you accept or not this was the motive. because of the then socio /economic reasons it was not banned immdtly.

    But to degrade Islam you can carry on argue with this matter. That is upto your comfort and political motivation . you do it as you wish.
    Syeds are not Uyardhna kulam . According to Quran there is no Uyardhna kulam.
    No Brahmins in Islam. Some Sufi Islamic Instituions might consider Mohamed’s Heirs as sacred people. That is also theoritical. thats is not followed practically.

    Sufi Islam has some similar charcters compared to Hinduism . Respecting ‘Mahans’ is the common thing.

    But Mahans in sufi Islam also are not worshipped but given respect. In this way there are some mahans considered with respect. They are not Uyarndha kulam.

    (Sufi Islam still constitute majority of Muslim Population in India , not wahabi Islam.)

    Speaking the lies agaian again shows your evil political motivation.

    if the agenda of RSS+ is to make Hindu commuinty with eqaulity and morality…It is a happy news.
    If RSS+ is not the terrorist movement that casued the deaths of thousands of poor Hindus and Muslims in riots for the past 50+ years…, what to say! I have no words. ( could not stop remembering the stabbing of a Pregnant women and taking the embrio out only because she was a muslim woman)

    I have been looking for an announcement from RSS+ or Shankarar for hundrerds of years (like Perirar or Ambedkar) to go for intercaste marriages, to abolish caste system and cretae eqaulity and social justice.

    (you can start it by givig bride to a Dalit, my polite suggestion.)

    Islam has done some evils like creating some undemocratic elements which is against right to speach for example. Salman Rushdie portryaed, wives of Mohamed as sex workers after his death and Muslim community around the globe has got wounded. But killing him is not Islamic way. you can forgive him or you can reply him in text.

    If you say that ” MF Husain was against Hindus” even then a physical attack on him is not acceptable. there is no diff between you and muslim extreme groups.

    But infact M .F. Husian was not against Hindus. He had knowledge and Intrests in Hindu philsophy. He had a Hindu guru.

    Nudity and Hindu Philosphy are oppsites?

    MF Husian has a deep understanding which you know but do not want to accept it. because you want to use his name to provoke Hindus. Incidentally he was born in Muslim family. very easy Hindu Vs Muslim pattasu. Koluthi Podu!

  125. Avatar
    smitha says:

    Amudham,

    If by your argument, painting Hindu Gods in the nude is not anti hindu, then why did hussain not do the same for allah & prophet?

    Do not write nonsense like hussain had a deep knowledge on hindiusim blah blah.

    If assuming he had, it never showed in his paintings.

    Request you to have a look at his paintings before passing some comments.

  126. Avatar
    smitha says:

    Amudhan,

    You can argue on the terms – castes, groups etc., Regarding slavery, enough has been said with examples, so I will not waste time on that.

    The posts on islam are not written offhand but with suitable references.

    Just bcos someone writes against islam does not mean he has to be a RSS/BJP sympathiser. That is a foolhardy point of view.

    You have mentioned the stabbing of a pregnant women in the godhra incident. Definitely it needs to be condemned.

    But what aboiut the hundereds of hindu women, pregnant or otherwise killed & being killed in kashmir today?

    U will not recognise them.

    Bcos for you only islamic lives are important, not hindu loives.

    This is pseudosecularism.

  127. Avatar
    smitha says:

    Issuing fatwas is unislamic?

    Try telling that to your islam brethen.

    A fatwa was issued by a muslim minister in UP against a danish cartoon.

    No one said it is unislamic.

    Not one islam religious leader (not politicians) has said that issuing fatwas is unislamic.

    If anyone anywhere in a corner of the world has done so, pls tell us. It is to be welcomed.

    What happened to tasleema nasreen?

    She was (& is) hounded out of India, beaten up in full view of the TV cameras by a muslim MLA from AP.

    Have U read her book “lajja”? Pls do so, if you have not.

    When talaq uttered over phone is considered valid by the clergy, yes, islam is not a backward religion. I agree.

    When a muslim girl is raped by her father-in-law & the verdict is that she has to be kept away from the household for 6 months & then come & serve her father-in-law (who is now her husband) is acceptable, yes, I agree. Islam is not a backward religion.

    We all know what happened in the shah bano case.

    When a strand of hair (supposedly the prophet’s) went missing at the hazrathbal mosque, the whole state was brought to a standstill as if some calamity happened.

    I should not undermine faith. Fine.

    But when I say faith that Lord Rama was born in Ayodhya, go hang that faith.

    Muslim faith is rationalistic, whereas hindu faith is not.

    That is (amudham) rationalism for you.

  128. Avatar
    paandiyan says:

    தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை எல்லாம் பறித்து அவர்களை அடிமை போல வைதிர்ருக்கவேண்டும் என்ற எண்ணம் பல பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களிடம் இருகின்றது . படித்தவர்களிடம் இது ஜாஸ்தியகவ இருகின்றது . இதை அவர்கள் புரியமால் பார்த்துக்கொள்ள இவர்கள் கண்டுபுடிததுதான் பிராமின் முஸ்லிம் வேறுபாடு மற்றும் பிராமின் தலித் என்ற கற்பனைகள் .அரசியல் செல்வாக்கு வேரூ இருப்பதால் இவர்கள் கை எப்பொழுதும் மேலோங்கிய இருகின்றது ..

  129. Avatar
    Amudhan says:

    Thinnai,
    you did not publish my prev post which was written ‘decently’. But you publish the posts like Smitha’s with directly hurting words.
    Is it just? Niyaayama?

  130. Avatar
    Kavya says:

    திண்ணை சுமிதா என்பவரின் இசுலாம் பற்றிய எதிர்மறைக்கருத்துக்களை இத்தலைப்பில் நிறுத்துவது நல்லது. தலைப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல் அவர் இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார். திண்ணையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

    திண்ணையில் ஆங்கிலப்பின்னூட்டங்கள் போடப்படாது என்று அணமையில் சொல்லிவிட்டு நீண்ட ஆங்கிலப்பின்னூட்டங்களை சுமிதாவைப் போடவைத்திருப்பது ஏனென்று புரியவில்லை.

  131. Avatar
    A.K.Chandramouli says:

    சுமிதா அவர்களே ஹிந்து மதத்தை பற்றி அதில் உள்ள ஜாதிகளை பற்றி ஆராய்ச்சி பூர்வமான விஷயம் என்று சொல்லி என்ன வேண்டுமானால் எழுதலாம். இஸ்லாம் பற்றி எப்படி எழுதலாம். காவ்யா அவர்களுக்கு கோபம் வரும். ஜாக்கிரதை.

  132. Avatar
    punai peyaril says:

    சித்தர்கள் விஷயத்தை முஸ்லீம்கள் விஷயமாக மாற்றியது காவ்யாவே… படியுங்கள் அவர் பின்னூட்டத்தை. பிராமணாள் மட்டுமல்ல, பிற இந்துக்களுக்கு இன்று பற்று வந்தாச்சு…. அந்த பற்றற்ற காலம் போயே போச்சு…

  133. Avatar
    admin says:

    ///திண்ணையில் ஆங்கிலப்பின்னூட்டங்கள் போடப்படாது என்று அணமையில் சொல்லிவிட்டு///

    டாக்டர் ஜான்ஸன் அவர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க அனுமதிக்கப்படுகிறது.1

  134. Avatar
    Dr.G.Johnson says:

    I thank the administration for complying to my request to continue using ENGLISH in this forum in THINNAI. Commentators should be free to use TAMIL and ENGLISH to express their views in a fluent manner.What we need here is our thoughts and views in a decent manner without using abusive and unparliamentary words and personal attacks….Dr.G.Johnson.

  135. Avatar
    punai peyaril says:

    பேசாம திண்ணை ஆங்கிலத்திலும் ஆர்டிகிள் போடலாம். அடையாளத்தை தொலைப்பர்களுக்கு வேண்டுமானால் இதில் வேறுபாடு தெரியாமல் இருக்கலாம்….

  136. Avatar
    Dr.G.Johnson says:

    Ethu adaiyaalam? Punai Peyaril endru olinthukondirukkum adaiyaalama? Vesti sattai podamal pants podum adaiyalama? Thavani podamal T-shirt, Jeans podum adaiyalama? Thooya Thamizhil pesamudiyamal Aangilam kalantha kalappada Thamizhil pesum adaiyalama? Sitha vaithiyam parkamal melnaatu vaithiyam paarkum adaiyaalama? Irendu Thamizhargal santhithukondal Aangilathil pesum adaiyalama?

Leave a Reply to suvanappiriyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *