சிப்பியின் ரேகைகள்

This entry is part 13 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

கால் எவ்விப்
பறக்கும் நாரை
நாங்கள் விளையாடி
ஓடிய திசையில்

கடலலைகள்
நுரைத்துத் துவைத்திருந்தன
எங்கள் காலடித்
தடங்களை

அதே கடலும்
கடலையும் சுவைத்த
சுவை மொட்டுக்கள்
நாவினுக்குள்

உப்புப்படிந்த
காற்றோடு கலந்து
அப்பிக் கிடக்கிறது
அலர்ந்த கூச்சல்கள்

ஒற்றையாளாய்
சிப்பி பொறுக்கியபோது
ஒவ்வொருவர் காலடித்தடமும்
கையில் மிருது ரேகையுடன்.

நீலவானம் சேமித்துக்
கொண்டிருக்கிறது
ஒவ்வொருவர் தேடல்களையும்
மூழ்கியவர்கள் வரும்போது கூற.

Series Navigation(75) – நினைவுகளின் சுவட்டில்உரையாடல்.”-
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    chithra says:

    நீலவானம் சேமித்துக்
    கொண்டிருக்கிறது
    ஒவ்வொருவர் தேடல்களையும்
    மூழ்கியவர்கள் வரும்போது கூற.

    — gr8 ,very nice :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *