சீதாயணம் [முழு நாடகம்] [5] படக்கதையுடன்

This entry is part 23 of 29 in the series 3 நவம்பர் 2013

 

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா                       

வடிவமைப்பு :  வையவன்                        

ஓவியம் :  ஓவித்தமிழ்

 

படம் : 8 & படம் : 9

++++++++++++++++++++++++++++++++++++++++
Inline image 2

காட்சி மூன்று

ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு

 

 

இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.நேரம்: மாலைஅரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.

பெண்சீடர்கள்: மகரிஷி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.

வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டு மகாராணி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தர்ம பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டார்கள் ? …. கோசல நாட்டு மகாராணி கானகத்து வரக் காரணம் என்ன ?

சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய மகாராணி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … (சிஷ்யைகளில் ஒருத்தி) மகரிஷி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய மகாராணிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சிஷ்யைகளில் ஒருத்தி) அவர் தனியாக வர வில்லை. உடனிருந்தவர் இரண்டு நபர்கள். மகாராணியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், மகாராணியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிஷி! மகாராணியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

வால்மீகி: சீதாவை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காக சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?

சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?

வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் ஆசிரமத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் ஆசிரமத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனர் தசரதச் சக்கரவர்த்தி எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதுலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வர நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!

சீதா: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிஷி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். ஆசிரமத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.

வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை ? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சீதா: அது ஒரு பெரும் கதை, மகரிஷி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)

சீதா: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிஷி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).

வால்மீகி: (பேராச்சரியம் அடைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம் தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!

சீதா: மகரிஷி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளை பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமான மாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவிதச் சந்தேகமும் இல்லையாம்!

வால்மீகி: அட ஈஸ்வரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தர்ம பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா ? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!

 

[தொடரும்]

+++++++++++++++

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

http://jayabarathan.wordpress.com/

Scene -8

 

Scene -9

 

Series Navigationமது அடிமைத்தனம்ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

52 Comments

  1. Avatar
    duraikannan says:

    this story is message for. ravanan kettavan but wife me santhethpttau ketayathu.ram nallvan but wife methu santhekputtu vettan. eruvarl yar nallavar kal???????????????

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் துறைக்கண்ணன்,

    இராமன், இராவணன் ஆகியோர் இருவரும், சாதாரண மானிடராய்ச் சில வினைகளில் தவறு செய்த தீயவர்.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      நாட்டாண்மை தீர்ப்பு சொல்லீட்டாருப்பா….. அப்ப, இயேசு நாதர் என்று சொல்லப்படும் சாமான்ய ஜீஸஸ் என்பவர் இமாசலத்தில் நாடோடியாய் திரிந்து அங்கு கற்றுக்கொண்ட சிறு சிறு வித்தைகளை அப்பம் மீன் பங்கிடுதல் என்றும், நோய் தீர்ந்தது எனும் மனநிலை கொடுத்தவர் என்றும் அவர் ஒரு சாதாரண மானிடப் பிறவி என்றும் நாட்டான்மை ஒரு சித்திரக் கதைத் தொடர் போடலாமே? நாட்டாண்மை மதத் துவேஷம் செய்தாலும் புதிய் ஏற்பாடு எங்கிருந்து சுடப்பட்டது என்பதையும் எழுதுவார் என்று நம்பலாமா? ராமரும் இராவணனும் தீயவர் எனில், கிறிஸ்து என்பவர் மதுவும் மாதுவும் எனத் திளைத்த ஃபீரீக் அவுட் , ஃபிளர்ட் என்று சொல்லலாம்.

      1. Avatar
        paandiyan says:

        அட கட்டுரையாளர் விடுங்கள் , நம்ப திக் விஜய்சிங் – மன்னிக்க – திண்ணை ஆசிரியருக்கு கோவம் வர போகின்றது நீங்கள் கேட்ட கேள்விக்கு . இந்த தளத்தில் ஹிந்துவை கேவலப்படுத்த மட்டும்தான் அனுமதி..

  3. Avatar
    ஷாலி says:

    வால்மீகி ராமாயணத்தின் படி சீதையின் கல்யாணத்தின்போது இராமனுக்கு வயது 12, சீதைக்கு வயது 6

    தோஷாத் தாரக்தியாம்பதி
    சிந்தையா மான தர்மாத்மா
    சோபாத்யாய சபாந்த்த வஹா

    வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
    “அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
    நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.

    இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.
    ‘நப்ரமாணி கிரதப்மாணி
    பால்யே பாலேன பீடிதஹ்”
    ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?

    குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை… என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் நடந்துவிட்டது என்று அறிய முடிகிறது.

    ஜெயபாரதன் ஸார்! தற்போது வால்மீகி பர்ணசாலையில் இருக்கும் சீதாயணம் சீதா தேவியின் வயது எவ்வளவு ஸார்?
    Don’t Ask Men’s Wage and Women’s Age. என்று சொல்ல மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சகலகலா வல்லி ஷாலி அவர்களே,

    இதற்குக் கணித மேதை ராமானுஜன் தேவையில்லை. உங்கள் கணக்குப்படி 18 வயதில் துவங்கி 14 வருடம் வனவாசம். பட்டாபிசேகம் [18+14]=32 வயதில். அதாவது வால்மீகி பர்ண சாலையில் சீதையின் வயது குறைந்தது 33.

    சி. ஜெயபாரதன்

  5. Avatar
    ஷாலி says:

    பேராசிரியர்.கவிஞர்.ஜெயபாரதன் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி!
    நமது கம்பன் காட்டும் ராமனும் சீதையும் இளம்பருவத்து இணையாக அல்லவா இருக்கிறார்கள்.ஆறு வயது சிறுமியைப்பார்த்து கம்பர் இப்படி பாடமுடியாதே? பாட்டை பார்ப்போம்.
    என்ன அருநலத்தினால் இனையள் நின்றுழி
    கண்ணோடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
    உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.

    இத்துடன் விழி வீச்சு எங்கு போய் தாக்குகிறது என்பதையும் கம்பன் கூற மறக்கவில்லை.

    நோக்கிய நோக்கு எனும் நுதிகொள்வேல் இணை
    ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன
    வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
    தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.

    ஆக கம்பர் மற்றும் வேறு பல இராமாயணங்களில் சீதையின் வயது 17 இராமனின் வயது 16 ஆக பார்க்க முடிகிறது.கம்பர் வழியில் வயது கணக்கிட்டால் 17+12+13=42, சீதா தேவி அசோகவனத்து சிறையிலிருந்து மீண்டு வரும்போது வயது 43.
    ஒரு முதிர் வயது கர்ப்பிணிப் பெண்ணை காப்பற்றுபவன் தான் மனுஷன்.கானகத்திற்கு விரட்டி அடித்தவன் மனுஷனே அல்ல!
    ஆகவேதான் கூறுகிறோம் அவன் ஸ்ரீ இராமா அவதாரம் என்று.

    கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
    சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
    மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
    தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

    தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
    அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
    பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
    தன் பாவம் இல்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

    ஊமை கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
    இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்
    (‘ கொடி மலர்-1966.கவிஞர்.கண்ணதாசன்)

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மதிப்புக்குரிய ஷாலி அவர்களே,

    ////என்ன அருநலத்தினால் இனையள் நின்றுழி
    கண்ணோடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
    உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.////

    நீங்கள் எழுதிய கம்பர் கவிதையில் ஒரு சிறு திருத்தம்:

    “எண்ணரும் நலத்தினள், இணையள் நின்றுழி” என்றுதான் நான் கற்றது.

    இராமனுக்கும், சீதாவுக்கும் இளவயதென்றே கருதிக் கம்பனும் பாடி இருக்கலாம் அல்லவா.

    “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” நேராக இன்றி வெவ்வேறு திசைகளில், அல்லது அண்ணல் சீதாவை நோக்கினான். சீதா வெட்கமுடன் தரையை நோக்கினாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

    கவிஞர் கண்ணதாசன் காவிய வரிகளை அழகாக எடுத்துக் காட்டி உள்ளீர்கள். பாராட்டுகள் ஷாலி அவர்களே.

    நீங்கள் மறுபடியும்,இராமனைத் தெய்வ பீடத்தில் ஏற்றாதீர்கள். மானிடன் போல் இராமனின் விழி அம்பு, பெண் மார்பைத் தைத்தது என்று நீங்களே அவனை மனிதனாய்க் கீழிறக்கி விட்டீர்கள்.

    என் சீதாயணம் நாடகத்தில் இராமன் ஒரு வில்லன் !

    சி. ஜெயபாரதன்.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    நண்பர் திரு சி. ஜெயபாரதன் அவர்களே, தங்களின் இந்த ” சீதாயணத்தை ” முன்பொரு முறை நான் முழுமையாகப் படித்துள்ளேன். அதை இப்பொழுது மீண்டும் படிக்கும்போது இன்னும் சுவைமிக்கதாய் உள்ளது. இப்போது ஒரு அருமையான சர்ச்சை. ஊரார் கேலியாகப் பேசுகிறார்கள் என்பதற்காக சீதையை காட்டுக்கு அனுப்பியது நியாயமா என்பதே அந்த கேள்வி. சீதையை இராவணனிடம் இழந்து அத்தனை வருடங்கள் ஆனபோது எழாத சந்தேகம் புரளி பேசும் ஊர் மக்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அப்படி சந்தேகப்பட்டது சரியா? அதன் விளைவாக அவளை கல்மனம் கொண்டு காட்டுக்கு அனுப்பியது முறையா? இதை நன்கு சிந்தித்துப் பார்த்தால் சீதையை மீட்க இலங்கை மீது போர் தொடுத்ததே வீண்தான் என்று தோன்றுகிறது. மயிரைப் பிடித்து இழுத்து மடியில் போட்டுக்கொண்டு போய்விட்ட இராவணன் சீதையை அவ்வளவு சுலபமாக விடமாட்டான் , அவள் கற்புடன் திரும்ப வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அவளை அங்கேயே விட்டிருக்கலாம். இப்படி மீட்டு வந்து மீண்டும் காட்டில் விடுவதைவிட இராவணனுடன் இலங்கை நாட்டிலேயே விடுவது எவ்வளவோ மேல்!..டாக்டர் ஜி.ஜான்சன்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      சீதாயணம் நாடகத்துக்கு இனியதோர் கருத்துரை எழுதியதற்கு மிக்க நன்றி டாக்டர் ஜி. ஜான்சன்.

      சி. ஜெயபாரதன்.

  8. Avatar
    ஷாலி says:

    சீதையின் கற்பு குறித்து இங்கு பேசப்படுகிறது.இராவணன் சீதையை கவர்ந்து சென்றதன் காரணம் காமமுமல்ல,காதலுமல்ல. தன் தங்கை மீனாட்சி (அழகிய மீன் போன்ற கண்களை உடையவள்) சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான். சீதையின் அழகு ஒரு காரணமல்ல.ஏனெனில் இராவணனின் மனைவி மண்டோதரி பேரழகு மிக்கவள்.மண்டோதரி என்றாலே சிற்றிடையாள் என்றே பொருள்.அனுமன் முதலில் மண்டோதரியின் அழகைக் கண்டு இவள்தான் சீதையாக இருப்பாளோ என்று நினைத்தான்.மேலும் பஞ்சகன்னியர்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் ஐந்து பெண்களில் மண்டோதரியும் ஒருத்தி. (அகலிகை,சீதை,தாரை,திரௌபதி,மண்டோதரி)

    மேலும் இராவணன் ஒரு சிறந்த திரு நீறு அணியும் சிவ பக்தன்.பத்து தலை உடைய தசக்ரீவன்,இலங்கேஸ்வரன் என்ற சிறப்பு பெற்றவன்.இராவணேஸ்வரன்,திரிலோக அதிபதி என்னும் புகழுக்குரியவன்.தன் கடுமையான யாகத்தினால் எவராலும் வெல்லப்பட முடியாத சந்திரஹாச வாளை சிவனிடமிருந்து பரிசாகப் பெற்றவன்,அற்ப காதலுக்கோ, காமத்திற்கோ சீதையை தூக்கி வரவில்லை.ஆகவே சீதையின் கற்பு பற்றிய சிந்தனையே அவதூறானது.அற்பத்தனமானது.ஆனாலும் இராமன், உலைவாயை மூடலாம்,ஊர் வாயை மூடமுடியாது என்பதை உணரத்தவறியதால் ஊரைவிட்டு விரட்டிவிட்டான்.
    சூர்ப்பனகையின் ஆசையை, காதலை ஏற்றுக்கொள்ள மறுத்து அவளை திருப்பி அனுப்பியிருந்தால் இராமாயணமும் இல்லை கானகமும் இல்லை.காது மூக்கை அறுத்து மூளி ஆக்கி அனுப்பிய கொடுமையின் எதிர் வினையே சீதையின் பிரிவு.

    தன் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இன்றைய வினோதினியின் முகத்தில் ஒரு தலை காதலனால் ஆசிட் வீசப்படுகிறது.அன்று ஒரு தலை காதலை ஏற்க மறுத்து காது மூக்கு அறுத்து அனுப்பப்படுகிறது.அட ராமா! இதுதான் ஒருதலை காதலுக்கு பரிசா? மோடி வகையறாக்கள் கூறும் இராமராஜ்யத்தில் இப்படித்தான் நடக்குமோ? இராம ஜெயம்! ஸ்ரீ இராம ஜெயம்! நம்பிய பேருக்கு ஏது பயம்?

  9. Avatar
    புனைப்பெயரில் says:

    குதர்க்கமாக அணுகப் போவது என்று முடிவு செய்தவுடன் பிற மத நம்பிக்கை மீது எப்படி ஒரு மரியாதை மதவெறியர்களுக்கு வரும். ஆனால், இந்துக்கள் எந்தக் கேள்வியையும் மேரி அன்னையின் குழந்தை பிறப்பை பற்றி கேட்டாகம், கன்னி மாதா என்று தேரோட்டி சப்பரத்தில் அழகு பார்க்கிறார்கள். அது தான் இந்து மதம். ராமனும் சீதையும் நாங்கள் தெய்வமாக நினைக்கும் போது அதில் உங்களுக்கென்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கு… … பிற மத உணர்வுகளை மதியுங்கள்…

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        ஒரு திருத்தம் :

        யாரிடமாவது கைக்குட்டை இருந்தால், தயவு செய்து புனை பெயரார் கண்ணீரைத் துடைத்து விடுங்கள். பாவம் இராமனுக்குக் கொடுத்த மானிடத் தண்டனை அவரைத் தாக்கி இருக்கிறது.

        சி. ஜெயபாரதன்

        1. Avatar
          புனைப்பெயரில் says:

          எகத்தாளம் செய்தாலும், மேற்கத்திய காலனி ஆதிக்க சக்திகளிடம் மண்டியிட்ட கும்பலை விட கைக்குட்டைகள் மேல் தான். ராமனுக்காவது மானிடத் தண்டனை… ஆனால், இமயமலை வித்தகத்தை அரைகுறையாக கற்றவனுக்கோ, திருடனுக்குரிய தண்டனை. சுவனப்பிரியனிடம் கேளுங்கள், அரேபியர்களைப் பொறுத்தவரை சிலுவையில் அறையப்படவர் யார் என்று…. திருடன் என்பர். இல்லாத இயேசு என்ற நபரை பற்றி கற்பனையில் வாழும் காட்டிக் கொடுக்கும் கும்பலுக்கு ராமனை எள்ளி நகையாடத் தான் தெரியும். அது சரி, நீங்க எப்படி? உங்கள் வீட்டு சீதைக்கு மரியாதை கொடுத்து சமையகட்டு தாண்டி நடத்தியவரா? இல்லை மொழி மாற்றம் செய்வது கண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்று நினைக்க வைத்து ஏமாற்றம் நடக்கிறதா..? ( செயகன்னடிகன் என்று எழுதுதலை போடாத திண்ணை, ஏன் இராமரை இகழ்வதை மட்டும் போடுகிறதோ? )

  10. Avatar
    ஷாலி says:

    ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தாலும்,அல்லது ஒரு பெண் ஒரு ஆடவனை ஒருதலையாக காதலித்தாலும் பெண்ணுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு அன்றைய புராண காலத்தில் மூக்கறுபட்டு மூளியாதல். இன்றைய கலிகாலத்தில் அமில வீச்சில் முகம் அகோரப்படுதல்.இராம காவியத்தின் கதாநாயகி சீதா தேவியோ அல்லது கதையின் வில்லி சூர்பனகையோ எப்பெண்ணாக இருந்தாலும் இறுதியில் துன்பம் மட்டுமே அவர்களோடு துணைக்கு வரும். ஆணுக்கல்ல.
    இதை கவிஞன் என்ன அழகாய் சொல்கிறான், பாருங்கள்.

    “துன்பம் என்றும் ஆணுக்கல்ல,-அது
    அன்றும் இன்றும் பெண்களுக்கே!
    துள்ளித்துள்ளி நீ பாடம்மா சீதை(சூர்ப்பனகை)யம்மா-நீ
    கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா!”

  11. Avatar
    ஷாலி says:

    //ராமனும் சீதையும் நாங்கள் தெய்வமாக நினைக்கும் போது அதில் உங்களுக்கென்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கு… … பிற மத உணர்வுகளை மதியுங்கள்…//

    நண்பர் புனல்பெயரார் கூறுவது மெத்தசரி. முதலில் இந்து மத தெய்வங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில் என்ற அளவில்தான் உங்கள் செயல்பாடு இருக்கிறது.எடுக்கிற தமிழ் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் இந்துக்களே.கடவுளை வைத்து காமெடி பண்ணுவதும் அவர்களே.இராம காவியத்தில் உள்ளதை எழுதும்போது ஏன் கோபம் கொள்கிறீர்கள்? மனிதன் சிந்திக்கவே கூடாதா?அறிவை மழுங்கடித்து குருட்டு பக்தியில் நீங்கள் என்ன சாதிக்கப்போகிறீர்கள்.பக்தி வந்தால் புத்தி போய்விட வேண்டுமா? இராம காவியத்தில் உள்ளதைத்தான் நான் எழுதுகிறேன். உங்களைப்போல் பைபிளில் இல்லாத இயேசு இமயமலைக்கு போனது காஷ்மீருக்கு வந்தது என்ற புனை கதையை எழுதவில்லை அறியவும்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // முதலில் இந்து மத தெய்வங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில் என்ற அளவில்தான் உங்கள் செயல்பாடு இருக்கிறது.எடுக்கிற தமிழ் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் இந்துக்களே.கடவுளை வைத்து காமெடி பண்ணுவதும் அவர்களே //

      என்ன செய்வது, இந்துக்கள்தானே சகிப்புத்தன்மையோடும் இருக்கிறார்கள்.

      கிறித்தவ பெரும்பான்மையினர் – அதுவும் குறிப்பாக மிக இறுக்கமான மத நம்பிக்கை கொண்ட ஆச்சாரமான கிறித்தவர்கள் – வசிக்கும் மேலை நாடுகளிலேயேகூட தடை கோராத டாவின்ஸி கோட் திரைப்படத்துக்கு தடை விதித்த கிறித்தவர்களும், உள்ளதை உள்ளபடியே சித்தரித்துக்காட்டிய விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட விடாமல், சினிமாவை வெறித்தனமாக நேசிக்கும் கமல்ஹாசனை மண்டியிட வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர் மகளை “நீ உன் அப்பனோடு படுக்க விரும்புகிறாயா” என்றும், இந்திய நர்சை கொன்ற சவூதி அரசை விமர்சனம் செய்த ஒரே காரணத்துக்காக மனுஷ்ய புத்திரன் என்ற நாடறிந்த கவிஞனை “மிருக புத்திரா”, “இடுப்புக்குகீழே இயங்காதவனே” என்றெல்லாம் மிக மிக கண்ணியத்தோடு விமர்சனம் செய்தும் மத சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக விளங்கும் இஸ்லாமியரும், எல்லை மீறி அவர்களது கால்நக்கிகளாக இருக்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வியாதியஸ்தர்களும் வாழும் மாநிலமல்லவா தானைத்தமிழகம். இங்கே இந்து கடவுளர் மட்டுமே விமர்சனத்துக்குள்ளாவதில் என்ன வியப்பு இருக்க இயலும் ?

      தமிழ் படமெடுக்கும் இந்துக்கள் மற்ற மதங்களை விமர்சிக்கவே முடியாத நிலைதான் நிலவுகிறது என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்ததற்கு நன்றி.

  12. Avatar
    paandiyan says:

    //இராம காவியத்தில் உள்ளதைத்தான் நான் எழுதுகிறேன். //

    இதனால் சகலமானவரும் அறிந்துகொண்டது என்னவென்றால் –பூனைக்குட்டி கடைசியில் வெளியில் வந்துவிட்டது

  13. Avatar
    paandiyan says:

    //உங்களைப்போல் பைபிளில் இல்லாத //
    1: பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது.
    2. பௌத்த மத சாஸ்திரத்தை இவர்கள் அட்டைக் காப்பி அடித்து “புது ஏற்பாடு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர் என்று (ironically) Christian Lindtner என்ற பெயருள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இங்கே பார்க்கவும்: http://www.jesusisbuddha.com/CLT.html//

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இராம காவியத்தில் உள்ளதை எழுதும்போது ஏன் கோபம் கொள்கிறீர்கள்? \

    \ இராவணன் சீதையை கவர்ந்து சென்றதன் காரணம் காமமுமல்ல,காதலுமல்ல. தன் தங்கை மீனாட்சி (அழகிய மீன் போன்ற கண்களை உடையவள்) சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான். \

    இந்த கருத்து கம்ப ராமாயணத்தில் கம்ப நாட்டாழ்வாரால் சொல்லப்பட்டுள்ளதா? வால்மீகி ராமாயணத்தில் வால்மீகியால் சொல்லப்பட்டதா?

    கம்பராமாயணம் எனில் பாடல் எண்ணுடன் பகிரவும்.

    வால்மீகி ராமாயணம் எனில் காண்டம் – ஸர்க்கம் – ச்லோக எண் – இவற்றுடன் பகிரவும்.

    எந்த ஒரு குறிப்பிட்ட ராமாயணத்தையும் ஆதாரமாகக் கொள்ளாது ஹிந்து மதக்காழ்ப்பை மட்டிலும் ஆதாரமாகக் கொண்டு படைக்கப்பட்ட இது போன்ற ஒரு படைப்பை திண்ணை தளத்தில் பதிவேற்றியதை அருவருப்பு மிக நிந்திக்கிறேன்.

    ஏசுபிரானை கண்யமற்ற முறையில் படைத்த ஆங்க்ல படைப்புகளின் தமிழாக்கத்தை திண்ணை தளம் பதிவேற்றுமா?

    அப்பட்ட ஹிந்துமதக்காழ்ப்பின் அடிப்படையில் சீதையின் சரித்ரம் புனையப்பட்ட அவலத்தை இங்கு படித்தவர்கள் ராமாயணத்தை ஆராய்ந்த அஞ்சு பார்கவா என்ற ஒரு பெண்மணி சீதையின் வாழ்வை அணுகிய பாங்கை கீழ்க்கண்ட சுட்டி மூலம் வாசித்தறியலாம்.

    https://sites.google.com/a/sitayanam.com/www/

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ///அப்பட்ட ஹிந்துமதக்காழ்ப்பின் அடிப்படையில் சீதையின் சரித்ரம் புனையப்பட்ட அவலத்தை இங்கு படித்தவர்கள் ராமாயணத்தை ஆராய்ந்த அஞ்சு பார்கவா என்ற ஒரு பெண்மணி சீதையின் வாழ்வை அணுகிய பாங்கை கீழ்க்கண்ட சுட்டி மூலம் வாசித்தறியலாம். ///

      https://sites.google.com/a/sitayanam.com/www/

      இந்த வலைத் தொடுப்பில் உள்ள “சீதாயணம்” தங்க முலாம் பூசப் பட்ட ஒரு பித்தளைத் தட்டு.

      இராஜ குமாரி சீதா ஒரு பொம்மையாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.

      நானும் ஓர் இந்துதான். ஆனால் மதவாதம் பிடிக்காதவன்.

      சி. ஜெயபாரதன்.

  15. Avatar
    ஷாலி says:

    ஜெய பாரதன் ஸார்! முதலைக் கண்ணீர், ஓநாய் கண்ணீர்க்கெல்லாம் கைக்குட்டை கொடுக்க முயற்சித்தால் பிறகு கையே காணாமல் போய்விடும்.கண்ணை விற்று சித்திரம் வாங்குவாரோ? என்றபடி கைக்குட்டை கொடுத்து கையை குட்டை ஆக்குவாரோ? கை கொட்டி சிரிப்பாரே! என்று பாட வேண்டி வரும்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      அதானே, நாங்களெல்லாம் கண்ணீரும் ரத்தமும் வரவழைப்பவர்கள் மட்டுமே, நாங்கள் எப்படி அதை துடைக்க கைக்குட்டை எல்லாம் கொடுக்க முடியும் ? என்ன ஜெயபாரதன் சார், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டவா முடியும் ?

  16. Avatar
    suvanappiriyan says:

    இராமாயணத்தைப் பற்றி பல புதிய தகவல்களை ஷாலி அவர்களின் பின்னூட்டத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். மோடி தலைமையில் அமையப் போகும் ராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும் என்பதும் ஓரளவு தெரிய வருகிறது.

    1. Avatar
      paandiyan says:

      அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து ” உன் மனைவியை விவாகரத்து” செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை “நாம் செய்தோம் ” என்றுச் சொல்கிறார்.

      இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?

      ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, “நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

      “உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

      முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை.

      எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி “உன் மனைவியை நீயே வைத்துக்கொள் ” என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

      தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?

      முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

      இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

      இந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது

    2. Avatar
      paandiyan says:

      முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று “தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொல்கிறார்.

      அதற்கு முகமது, “வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.

      குர்-ஆன் 33:37
      (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)

      அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து ” உன் மனைவியை விவாகரத்து” செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை “நாம் செய்தோம் ” என்றுச் சொல்கிறார்.

      இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?

    3. Avatar
      paandiyan says:

      ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, “நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

      “உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

      முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை.

      எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி “உன் மனைவியை நீயே வைத்துக்கொள் ” என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

      தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?

      முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

      இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

      இந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது:

      ஒரு நபர் தன் மருமகள் வேசியாக வேடமிட்டு உட்கார்ந்து இருப்பதை அறியாமல் அவளிடம் வேசித்தனம் செய்ததால், அந்த நிகழ்ச்சி பைபிளில் இருப்பதால், அது வேதம் என்று அழைக்கப்படக்கூடாது என்றால்…..

      தன் மருமகள் என்று தெரிந்தே அவள் மீது ஆசைப் பட்டு ( எப்படி ஆசை உருவானது என்று சரித்திர ஆசிரியர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம்), அதை அறிந்த மகன் அவளை விவாகரத்து செய்வதும், அதற்காகவே ஒரு வசனத்தை அல்லா இறக்குவதும் உண்மையானால். அப்படிப் பட்ட நபரை எப்படி ஒரு “நபி” இறைத்தூதர் என்றும், அவர் மூலமாக இறக்கிய வசனங்கள் இறைவேதம் என்றும் எப்படி நம்புவது?

      எந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா?

      தன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்….. என்ன சொல்வது?

      இதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது?

    4. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இராமனின் இராம ராஜியத்தில் பொது மக்கள் குரல் எடுத்துக் கொள்ளப்படும்; ஆனால் நியாயம் ஒருதலைப் பட்சமாக இருக்கும். இருபுறக் குரல்கள் கேட்கப்பட மாட்டா.

      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        ஷாலி says:

         சி. ஜெயபாரதன் says:
        November 9, 2013 at 2:45 am
        இராமனின் இராம ராஜியத்தில் பொது மக்கள் குரல் எடுத்துக் கொள்ளப்படும்; ஆனால் நியாயம் ஒருதலைப் பட்சமாக இருக்கும். இருபுறக் குரல்கள் கேட்கப்பட மாட்டா.
        பேராசிரியப்பெருந்தகை அய்யா ஜெயபாரதன் அவர்கள் சொல்வது அச்சரலட்சம்.உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று,
        ஒரு பிராமணன் ஸ்ரீ இராமனிடம் ஓடி வருகிறான்,” இராமா! இராமா! நாட்டில் அநியாயம் நடக்குது.ஒரு சூத்திரன் வேதத்தை ஓதுகிறான்.அதனால் என் இளவயது மகன் இறந்துவிட்டான்.இந்த அநியாயத்தை கேட்கமாட்டியா?”அந்த சூத்திரனைக்கொன்று என் மகனை உயிர் பிழைக்க வை.” என்று கூக்குரல் எழுப்புகிறான். ஸ்ரீ இராமன் என்ன செய்திருக்க வேண்டும்.அந்த பிராமணனுக்கு அழகிய உபதேசம் செய்து,”பிராமணா! உயிர் பிறப்பும் இறப்பும் கர்மவினையின் பொருட்டு நடப்பது.சூத்திரன் படிப்பதால் எவர் உயிரும் போகாது.மாமுனிவர் வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்தவர் வேதம் படித்து முனிவரானார்.இவர் வேதம் படித்ததால் எவர் இறந்தார்கள்? விசுவாமித்திரர் பிராமணர் இல்லை.இவர் வேதம் பயின்று பிரம்மரிஷி பட்டம் பெற்றார்.இவர் படித்ததினால் எவர் உயிர் இழந்தார்?ஒருவரும் இல்லை.இறப்பு எல்லா உயிர்களுக்கும் எழுதப்பட்ட ஒன்று.” என்று சொல்லவில்லை.தனது நாட்டு பிரஜை பிராமணன் சொன்னதும் தேடிப்போய் வேதம் படித்த சம்பூகனை கொன்று விடுகிறான். ஆக,அய்யா சொன்னதுபோல் இருதரப்பு நியாயம் கேட்கப்படவில்லை.பிராமணனுக்கு சார்பாகவே தீர்ப்பு.நீதிக்கு ஆப்பு! இது போன்ற இராமா ராஜ்ஜியம் இந்தியாவுக்கு வர வேண்டும்.ஏனெனில் நம் நாட்டில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.வாதி,பிரதிவாதி,வாய்தா வாங்கியே வருடம் ஓடுகிறது.ஒருதரப்பை மட்டும் கேட்டு அப்பவே தீர்ப்பு கொடுத்துவிட்டால் கோர்ட்டில் கூட்டம் குறையும். நீதியரசர்கள் நிம்மதி கூடும்.

    5. Avatar
      புனைப்பெயரில் says:

      நிச்சயம் மோடியின் ராமராஜ்யத்தில் சில வாலி வதைகள் இருக்கும். 1000 வருட சகிப்புத்தன்மையை புறந்தள்ளியதற்கு சரியான பதில் மோடி தருவார்.

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        அப்பாவித்தனமான நம்பிக்கை.

        மோடி ஒருவேளை பிரதமராகிவிட்டால், அவர் மதசம்பந்தமாக தடாலடி எடுத்தால், உலக அரங்கில் அவரின் இமேஜ் சீரியசாக டேமேஜ் ஆகிவிடும். அதை அவர் உணர்ந்து இருக்கிறார் என்பதை அவர் உ.பி சாமியார் தங்கம் கண்டேன் என உட்டான்ஸ் விட்டதைக் கிண்டலடித்ததிலிருந்து தெரியவரும். கழிப்பறைகளைக்கட்டுங்கள்; கோயில்கள் வேண்டா என்று சொன்னது, தன்னை இந்தியப்பிரதமராக்கத் தகுதியுடயோனாக்குதலே. ஆயினும் சிலவற்றைச் செய்ய முயன்று அதன் பேக்லாசைக்கண்டு ஒதுங்கிவிடுவார். எம் ஜி ஆர் இட ஒதுக்கீட்டுக்கொள்கையில் செய்ததைப்போல. ஜெயலலிதா கிடாவெட்டுவதைத் தடை செய்யமுயன்று விமர்சந்த்துக்குள்ளாகி வருத்தப்பட்டதைப்போல.

        உலக இசுலாமியர் ஜனததொகையில் மூன்றாவது இடத்தில் இந்தியா. ஒரு இந்தியப்பிரதம் அவர்களையெல்லாம் விரட்டிவிட முடியுமா புனைப்பெயரில்? அதுதானே நீங்கள் சுட்டும் ‘வாலி வதம்”?

        இந்துமதத்தை வளரவைப்பதும், களையெடுப்பதும், மக்களிடையே பரப்பி பிறம்தங்களை வெற்றி (அதாவது மக்கள் எண்ணிக்கையில்) காண்பது, ஒரு நாட்டின் பிரதமரின் கைகளில்தான் எனப்தை விட முட்டாள்தனமில்லை. அவை இந்துக்களிடமே இருக்கின்றன. எப்படி இசுலாமியர், கிருத்துவர்கள் தங்கள் மத்ததைச் செழிக்கவைக்கிறார்களோ, இந்தியாவில் – அப்படி.

        எந்த இசுலாமியரும் அப்துல்கலாம் தங்கள் மதத்தை வாழ வைப்பார் குடியரசுத்தலைவராகி எனச்சொன்னதேயில்லை. புனைப்பெயரில்தான் அரசியல்வாதி, அல்லது அரசு தங்கள் மதத்தை வாழவைக்கும் என நம்புகிறார்.

        வாலி வதம் தேவையில்லை. கீழ்ச்சொல்லும் வதங்காளே தேவை

        சாதிகளை ஒழியுங்கள். வட மொழிஆதிக்கத்தையும் பிராமணர்களின் மதத்தில் செய்யும் ஆதிக்கத்தையும் ஒழியுங்கள். (தாங்கள்தான் அர்ச்சர்கள்!)

        மருத்துவர்களயும் விஞ்ஞானிகளியும் அவர்களின் கூட்டாலிகளையும் (consciously misspelt) கூட இந்துவாக்கிவிடலாம்.

        — திருவாழ்மார்பன்

      2. Avatar
        ஷாலி says:

        //நிச்சயம் மோடியின் ராமராஜ்யத்தில் சில வாலி வதைகள் இருக்கும். 1000 வருட சகிப்புத்தன்மையை புறந்தள்ளியதற்கு சரியான பதில் மோடி தருவார்.//

        புனல்பெயரார் என்ன புரியாமல் பேசுகிறார்.”சரியான பதில் மோடி தருவார்” என்று எதிர் காலத்தை சொல்கிறார்.மனுவதை ஆரம்பித்து வருடங்களானது தெரியாதா?அதுதான் கோத்ராவை காரணம் காட்டி இரண்டாயிரம் உயிர்களை கொன்று இரத்தாபிஷேகம் நடத்தி பிரதான வதைக்காக இன்று பிரதமர் பதவியை குறி வைத்து உள்ளது தெரிந்ததுதானே!.இந்த உலகில் தோன்றிய கொலை வெறியர்கள், மனிதவேட்டை ஆடிய கொடுங்கோல் சர்வாதிகாரி,போல் பாட்,ஹிட்லர் இன்று எங்கே?அவர்கள் சரித்திரத்தில் சாதித்ததென்ன? துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்ததுதான் ஹிட்லர் சாதனை. ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடி மண்ணைத்தான் இறுதியில் இவர்கள் பெற்றார்கள்.
        அதிலும் அப்பாவி சம்பூகனை கொன்றும், வாலியை மறைந்திருந்து கொன்றும் தர்மத்தை நிலை நாட்டிய ஸ்ரீ இராமனுக்கு அந்த மண்ணு கூட கிடைக்கவில்லை.ஸ்ரீ இராமன் தன் மகன்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு ஓடும் நதியில் இறங்கி உயிர்விட்டான்.புனல்பெயராரின், உயிர் குடித்த மோடிக்கு என்ன கிடைக்கும்? நீரா?அல்லது நிலமா? இறைவனே அறிவான்.

  17. Avatar
    paandiyan says:

    எந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா?

    தன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்….. என்ன சொல்வது?

    இதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது?

    யூதா தெரியாமல் பாவம் செய்தான், தெரிந்துவிட்ட பிறகு வேதனைப்பட்டான் பிறகு அதைச் செய்யவில்லை. ஆனால் முகமது ? முகமதுவை விட யூதாவே மிகவும் நல்லவன் என்றுச் சொல்லத் தோன்றுகிறது.

    விவரம் 2: சிலர் இந்நிகழ்ச்சியை இப்படியும் சொல்கிறார்கள், முகமது முதலிலேயே ஜைனப்பை திருமணம் செய்ய ஜைனப் பெற்றோரிடம், கேட்டதாகவும், அதற்கு அவர்கள்(முஸ்லீம்களாக மாறியவர்கள்) வயது வித்தியாசம் முகமதுவிற்கும், ஜைபப்பிற்கும் அதிகமாக இருப்பதால், கொடுக்கமாட்டேன் என்றுச் சொன்னதாகவும், இதனால் ஏமாற்றமடைந்த முகமது, தன் வளர்ப்பு மகனை ஜைனப்பிற்கு மனமுடித்து கொடுத்ததாகவும், அவர்கள் இருவரும் அதிகமாக சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால், வளர்ப்பு மகன் விவாகரத்து செய்ததாகவும், ஜனப்பிற்கு வேறு வழியில்லாததால், கடைசியாக முகமதின் கோரிக்கையை அல்லாவின் வசனம் இறக்கியவுடன், ஜைனப் முகமதை திருமணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். Source : Read this Article

    விவரம் 3: இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், ஜயத்(வளர்ப்பு மகன்), மற்றும் ஜைனப்(மருமகள்) இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது முகமது தான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருப்பதால், ஜையத் விவாகரத்து செய்யும் போது, அல்லாவின் கட்டளையின் படி, முகமது திருமணம் செய்தார் என்று.

    மேலே சொன்ன மூன்று விவரங்களில் எது சரி என்று ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்., இந்த கட்டுரைக்கு இது போதும்.

    சரித்திர ஆசிரியர் சொல்வதும், குர்-ஆன் வசனம் சொல்வதும் கவனித்தால், ஒரு உண்மை புரியும். அது என்ன? முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை விவாகரத்திற்கு பின்பு திருமணம் செய்துக்கொண்டார் என்பது. சொன்ன விவரங்களில் எது உண்மையாக இருக்கும், என்பதை கீழுள்ள் தொடுப்புகளை பார்க்கவும். மற்றும் இஸ்லாமிய தளங்களில் இதைப் பற்றிச் சொல்லும் விவரங்களையும் படியுங்கள்.

    islam Watch | Muslim Hope | Islam Review | Daniel Piles | Faith Freedom | News FaithFreedom | News FaithFreedom | hadith Muslim from usc.edu |

    வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும்? வேதம் என்பதின் அளவுகோல் என்ன? இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

    இனி இஸ்லாமியர்கள் தான் ஒரு பட்டியல் இடவேண்டும். வேதம் என்றால், என்ன என்ன இருக்கலாம்? ஒரு “நபி” அல்லது “தீர்க்கதரிசி” என்றால் எப்படி வாழவேண்டும் என்று?

    யூதாவை பின்பற்றுங்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லவில்லை, எந்த சர்சிலும் இதைப் பற்றி பேசினால், யூதா செய்தது தவறு தான் என்றுச் சொல்லி, எல்லா பாஸ்டர்களும் மக்களை எச்சரிப்பார்கள். ஆனால், குர்-ஆன் முகமது செய்தது ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறது அதை மற்றவர்கள் பின்பற்றும்படி வாய்ப்பும் கொடுக்கிறது.

    யூதாவை கிறிஸ்தவர்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இன்னும் வளர்ப்பு மகன்களை தத்து எடுக்க பயப்படுகிறார்கள்? ஏன் தெரியுமா? மாமனாருக்கு தன் மருமகள் மீது ஆசை வந்துவிடுமோ, அதனால், அவன் விவாகரத்து செய்யவேண்டி வருமோ என்று தான்.

    முகமது எத்தனை மனைவிகளை திருமணம் செய்தாலும், யாரை திருமணம் செய்தாலும், கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், இப்படிப் பட்டவர் மூலமாக வந்த புத்தகம், பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்வதனால் மற்றும் இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி தவறாக விமர்சிப்பதனால் தான், நாங்கள் உண்மையை வெளியே சொல்லவேண்டி வருகிறது.

    இஸ்லாமியர்களே இதற்கு பதில் சொல்லுங்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் நண்பர் இதற்கு பதில் சொல்லவேண்டும்)

    வேதம் என்றால் அளவு கோல் என்ன?

    அதில் என்ன என்ன விவரங்கள் இருக்கலாம்?

    நபி என்றால் என்ன?

    அவரிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன?

    இறைவன் ஒரு மனிதனை நபியாக தெரிந்தெடுக்க அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன ?

    என்று சொல்வார்களானால், எல்லாருக்கும் பிரயொஜனமாக இருக்கும்.

    இதற்கு பதில் சொல்வீர்களானால், பைபிளில் வரும் நபிகள் (தீர்க்கதரிசிகள்), நீங்கள் சொல்லும் தகுதிகளை பெற்று இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்கிறோம். மற்றும் நாங்களும், “நபி” என்ற ஒருவருக்கு பைபிள் படி , யேகோவா தேவன் என்ன தகுதிகளை எதிர்பார்த்தார் என்றுச் சொல்கிறோம்.

    இயேசுவின் வம்ச வரலாறு

    யூதாவின் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட கி.மு. 1850ல் நடந்ததாகக் கொள்ளலாம். யூதாவிற்கும் இயேசுவிற்கும் தோராயமாக 1850 வருடங்கள் இடைவேளி உள்ளது. ஒரு வம்சத்திர்கு 25 அல்லது 30 வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், சுமார் 61 வம்சங்கள் உள்ளது (1850/30= 61.67).

    இஸ்லாமியர்கள் எனக்கு ஒரு விவரத்தைச் சொல்லுங்கள். யூதா தாமார் நிகழ்ச்சி போன்று ஒரு தவறில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் அல்லாவை நம்பி, அல்லாவின் வழியில் தவறாது வாழ்கிறான். அவனை அல்லா ஏற்றுக்கொள்ளமாட்டாரா?

    இன்னும் ஒரு விவரத்தை இஸ்லாமியர்கள் மறந்து போகிறார்கள். உலம மக்கள் எல்லாரும் முகமதுவோடு கூட பிறந்தது சாதாரண கணவன் மனைவி உறவுமுறையில், ஆனால், இயேசு மட்டும் தான் தந்தையில்லாமல் பிறந்தவர். இதை மறுக்கமுடியுமா உங்களால்?

    ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவன் மன்னிப்பு கோரினால், மற்றும் அதன் பிறகு அவன் அப்படிப் பட்ட தவறுகள் செய்யாமல் இருந்தால், அல்லா மன்னிக்க மாட்டாரா? இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள்? பிறகு திருந்தினார்கள்.

    இன்று உங்களுடைய மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் யார்? விக்கிரகங்களை வணங்கியர்கள் தானே? அதனால் உங்களை அல்லா வெறுத்து தள்ளுவாரா?

    இயேசு ஒரு இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர் என்பதை காட்டவே, பைபிளில் வம்சவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இயேசு இந்த வம்சத்தில் பிறந்தார், அது சரியல்ல என்றுச் சொல்லும் நீங்கள். இயேசுவின் உண்மையான வம்சத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? உங்களால் அந்த விவரத்தைச் சொல்லமுடியுமா?

    முடிவுரை

    தாவீது இப்படி விபச்சாரம் செய்த போது, அதன் மூலம் பிறந்த குழந்தையை மரிக்கச் செய்த யேகோவா தேவன், ஏன் யூதா மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளை மரிக்கச் செய்யவில்லை?

  18. Avatar
    Dr.G.Johnson says:

    பஞ்ச கன்னிகளில் ஒருத்தியான சூர்ப்பனகையின் மூக்கு அறுபட்டு தன் அண்ணனிடம் முறையிட்டாள் சூர்ப்பனகை. சீதையைக் கொண்டுவந்த இராவணன் உடன் அவளின் அழகிய மூக்கையும் அல்லவா அறுத்திருக்கவேண்டும்? அது செய்யாமல் அசோக வானத்தில் அவளுடைய காதலுக்குக் கெஞ்சியதாகவல்லவா கதை? இப்போ கதை மாறுகிறதே? டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      paandiyan says:

      கதை மாறும் வரை இதை படியுங்கள்

      1: பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது.
      2. பௌத்த மத சாஸ்திரத்தை இவர்கள் அட்டைக் காப்பி அடித்து “புது ஏற்பாடு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர் என்று (ironically) Christian Lindtner என்ற பெயருள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இங்கே பார்க்கவும்: http://www.jesusisbuddha.com/CLT.html//

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      அடுத்தவன் மனைவியைக் கடத்திவந்து தன் வீட்டில் சிறைவைத்து அவளைத் தன் கணவனைவிட்டுவிட்டு இவனை ஏற்றுக்கொள்ள நிர்பந்தம் செய்வது கொடியபாதகமன்றோ?

      –திருவாழ்மார்பன்

  19. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மயிரைப் பிடித்து இழுத்து மடியில் போட்டுக்கொண்டு போய்விட்ட இராவணன் சீதையை அவ்வளவு சுலபமாக விடமாட்டான் , அவள் கற்புடன் திரும்ப வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அவளை அங்கேயே விட்டிருக்கலாம். \

    இது போன்றதொரு வ்யாக்யானாதிகள் பைபளைப் பற்றியும் ஏசுபிரானைப் பற்றியும் ஹிந்துக்கள் முன்வைக்க இயலாது என்று கருதி வைத்யர் ஸ்ரீ ஜான்சன் இது போன்ற வ்யாக்யானத்தை முன்வைத்தால் அது தவறு.

    மாற்று மதங்கள்ல் காணப்படும் நற்கருத்துக்களையும் மதிப்பவன் நான்.

    ஆனால் மட்டற்ற படிக்கு ஹிந்து மதத்தை இழிவு செய்யும் போக்குத் தொடருமானால் மாற்று மதங்களை இழிவு செய்யும் படிக்கான சரித்ர ஆராய்ச்சிகளை ஹிந்துக்களாலும் முன்வைக்க முடியும் என்பதனை அறிக.

    ஹிந்துக்கள் வணங்கும் சீதையையும் ராமனையும் இழிவு செய்யும் படிக்கான இது போன்ற கருத்துக்களைப் பதிவு செய்யும் திண்ணை தளம்——

    கன்னி மரியாளுக்கு பிறந்தவர் ஏசுபிரான் என்ற நம்பிக்கையை மறுத்து

    மரியாள் மற்றும் ஜோஸஃப் தம்பதியினரின் வைவாஹிக சம்பந்தத்தாலன்றி டைபீரியஸ் ஜூலியஸ் ஆப்டஸ் பேந்தரா என்ற ரோமானிய போர்வீரனுக்கும் மரியாளுக்குமான வ்யாபிசாரிக சம்பந்தத்தில் பிறந்தவர் ஏசுபிரான் என்ற சரித்ர ஆராய்ச்சி விஷயங்களையும் பதிப்பிக்குமா?

    ஸ்வர்காரோஹணம் செய்ததாய் நம்பப்படும் ரப்பி ஷைமோன் அஸ்ஸாய் என்ற ரப்பி பெருமகனார் யஹூதிய டால்முட் க்ரந்தங்களில் ப்ரவராதிகளை விளக்கும் ஒரு க்ரந்தத்தில் ஏசுபிரான் என்பவர் வ்யாபிசாரிக ஸ்த்ரீக்கு ஜனித்த ஹராமி சிசு என்று பகிர்வதைப் பதிப்பிக்குமா?

    அல்லது ப்ராசீனமாக க்றைஸ்தவரிடம் புழக்கத்தில் இருந்த மார்க்கு சுவிசேஷத்திலும் ஜான் சுவிசேஷத்திலும் மரியாளுடைய பெயர் கூட இருந்ததில்லை என்ற படிக்கு ஏசுபிரான் மரியாளுக்குப் பிறந்தவர் என்ற கருத்தே விவாதாஸ்பதமானது என்ற படிக்கான சாரித்ர ஆராய்ச்சிக்கருத்துக்களைப் பதிப்பிக்குமா?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      நீங்கள் எழுதினால் கண்டிப்பாக போடுவார்கள் என்பது என் அபிப்ராயம். தகுந்த ஆதாரங்களுடன் கட்டுரையாகப்போட்டு விடலாம்.

      பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை. கண்டிப்பாக பரம ஞானிகள் அப்படிப்பட்ட தளைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனபது இந்துமததின் நிறைய பேசப்பட்டிருக்கிறது. மாறனேரி நம்பிகளை சீடனாக ஏற்றுக்கொள்ளாதேயும். அவரொரு பறையர்” எனப்தற்கு ஆளவந்தார் சொன்னது: பரமஞானிகளுக்கு சாதிகள் இல!’ எனப்தே. மாறநேரி நம்பிகள் வைணவ ஆச்சாரிய பரம்பரையில் ஒரு சிறப்பான புள்ளி என்பதை திண்ணை வாசகர் அறிவாராக.

      அதன்படி, ஒரு விலைமாதருக்கு பிறந்துவிட்டாலோ, அப்படிப்பட்ட குலத்தில் பிறந்துவிட்டாலோ மஹானின் புனிதத்துவம் மாசுபடும் என்பது பொருந்தா எண்ணம்.

      அருணகிரிநாதரைப்பற்றி கிருஸ்ணகுமாருக்குச் சொல்லித்தெரியவேண்டியதில்லை. மற்றவருக்காக:

      மாபெரும் முருக பக்தர். இவரின் பாடல்கள் முருக பக்தியைத் தமிழருக்குக் கொண்டுபோனதைப்போல வேறெவரின் பாடல்களும் கொண்டுபோனதில்லை.

      அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் வாழ்ந்த, இன்றும் வாழும், விலைமாதர் குலத்திலே பிறந்தவர். தன் தாயை ‘வைத்த’ செட்டியாருக்குப் பிறந்ததாகவும் அல்லது தகப்பன் யாரெனெறு தெரியாமலே பிறந்து விடப்பட்டதாகவும் வர்லாறு. கணிகையர் குலமாதர் பெரும்தனவந்தர்களின் வைப்பாட்டிகளாகத்தான் வாழமுடியும். மாதவி, கோவலன் என்ற பூம்புகார் வைர வியாபாரியின் வைப்பாட்டி இல்லையா?

      தான்தோன்றித்தனமாக வாழ்ந்தபடியால், விடி வந்து உடலெல்லாம் புண்ணாகி தற்கொலை செய்யப்போகும் போது முருகப்பெருமாளால் தடுத்தாட்கொள்ளப்பட்டார் என்பதுவே வரலாறு.

      எனவே கிருஸ்ணகுமார் ! பரமஞானிகளை அவர்கள் பிறப்ப்பொன்றும் செய்யாது. அப்படிச்செய்யும் என்றால், அது உங்கள் ஜாதீயத்திமிரில்தான் பிறக்கும்.. வேறு வழியில்லை.

      இராமாயணத்தைப்பற்றி இங்கு பேசுவதால், அதில் உருகுவதாக சிலர் நடிக்கின்றபடியால், அவர்களுக்கு:

      மனிதனாகக் கருதப்பட்ட இராமரை, தெய்வநிலைக்கேத்திய தொண்டு செயத ராம சரித்ர மனாஸை யாத்த துல்சிதாஸ், அனாதையாக கங்கைக்கரையில் விடப்பட்ட ஒரு குழந்தை. அங்கேயே சுற்றிக்கொணடு இரந்து வாழ்ந்த குழந்தை.

      கேள்வி ஞானத்தில் தனக்குத் தெரிந்த கீழை ஹிந்தியில் (eastern Hindi) இராம சரிதத்தை அவரெழுதாவிட்டால் வடக்கில் இராமருக்கு இவ்வளவு புகழவந்திருக்காது.

      துல்சிதாசுக்குத் தன்தகப்பன் மட்டுமன்று; தாயும் தெரியாது என்று இராம காதையைத்தூக்கியெறிந்துவிடலாமே?

      -திருவாழ் மார்பன்

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        இக்கட்டுரைக்குக் கொஞ்சம் பொருதாது இது. ஆயினும் சொல்வேன்.

        இருநாட்களுக்கு முன் மதுரை விலமாதர்களிடம் உங்கள் வழக்குகளையும் எங்கள் MDLSA கவனிக்கும் கொண்டுவாருங்கள் என்று கேட்கப்பட்டது. அவர்களில் பலர் அஞ்சினார்கள். சிலர் தங்கள் குழந்தைகளுக்குத் தகப்பன் சொந்த்தில் கொஞ்சமாவது பெற்றுத்தாருங்க்ள் என்றனர். ‘குழந்தை என்ன பாவம் செய்தது?’ எனவே கொண்டுவாருங்கள் எனச் சொல்லப்பட்டது.

        எனவே கிருஸ்ணகுமார்! குழந்தை என்ன பாவம் செய்தது?

        MDLSA = Madurai District Legal Services Authority

  20. Avatar
    ஷாலி says:

    வாங்க! க்ருஷ்ணாஜி வாங்க எங்கே வராமல் போயிருவியளோ என்று நினைத்தேன்.பிதாமகர் பீஷ்மரே வந்தாச்சு இனி கச்சேரி களை கட்டும்.தேவரீர்! என்ன ஆதாரம் சேதாரம் செய்கூலி கேட்கிறீர்கள்? உலகறிந்த கதைக்கு உப்புமா ஆதாரம் தேவையா?கதை சுருக்கத்தை பாருங்கள்.

    சூர்ப்பனகை என்பவள் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை. இவளது ஏனைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீடணன், சுபாகு, கரன் ஆவார். இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் காட்டில் வாழ்ந்து வந்தபோது சூர்ப்பனகை இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மார்பகங்களையும், மூக்கையும் வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான்.
    சூர்ப்பனகையின் அழகு
    சூர்ப்பனகை ஒரு அழகான மங்கை என்பது பல இடங்களில் மறைக்கப்படுகிற ஒரு நிகழ்வு.பொதுவாக அவள் அழகில்லாத பெண்ணாகவே கம்பராமாயணத்தில் சித்தரிக்கப்படுகிறாள். அவள் எத்தகைய அழகு மங்கை என்பதை கம்பன் இராமன் வாயிலாகவே வெளிப்படுத்துகிறார்.
    பிறக்கும்போதே அவள் தன் தாய் கைகேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களையும் அழகில் விஞ்சியிருந்தாள்.அவள் கண்களின் அழகை முன்னிட்டு மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள்.
    செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்
    நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன, – (கம்பராமாயணம் ஆரணிய காண்டம் பாடல்:117)
    பொருள்: சிவந்த கயல் மீன் போன்று பிறழும் கரிய நீண்ட கண்கள் கொண்டவள்.தேன் ஊறும் தாமரை வசம் செய்யும் திருமகள் இலட்சுமி இவளே என்று இராமன் இயம்புகிறான்.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88

    க்ருஷ்ணாஜி! இத்தோட இராமாயாணம் முடியலை.இது போல் 300 க்கு மேல் தினுஷ் தினுசாக இராமாயாணம் உள்ளது. இப்ப நீங்கள் பேசுகிற வால்மீகி,கம்பர் இராமாயணம் இரண்டும் ஸ்ரீ இராமனும் சீதா பிராட்டியும் கணவன் மனைவி என்றே உரைக்கின்றன.
    விடிய விடிய இராமாயணம் கேட்டு விடிந்தபின் சீதைக்கு இராமன் சித்தப்பனோ.என்று கேட்பவர்களைப்போல் சில இராமாயணங்களில் சீதைக்கு இராமன் உடன் பிறந்த அண்ணன் என்கின்றன. தன் தங்கையையே இராமன் மணம் முடித்தான் என்று கூறும் இராமாயணம் இருப்பது தங்களுக்குத் தெரியுமா?வேறு சில இராமயாணத்தில் சீதையின் தந்தை சாட்சாத் இராவணன் என்று கூறுவது தெரியுமா? இந்த இராமாயணங்களை எழுதியது ஆபிரகாமிய முகமூடிகள் அல்ல.எல்லாம் உங்க அவாள்தான்.இந்தப் புராணத்தை எல்லாம் படித்து முடித்தபின் அருவருப்பு பற்றி பேசலாம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //இந்த இராமாயணங்களை எழுதியது ஆபிரகாமிய முகமூடிகள் அல்ல.எல்லாம் உங்க அவாள்தான்//

      மிகவும் கவனிக்கவேண்டிய வரி பாண்டியன், புனையார், கிருஸ்ணகுமாரால்.

      அதாவது, இத்தகைய விதவிதமான இராமாயணங்களைப் புனைந்தோர் இந்துமதத்தைத்தூடணை செய்யப்புகுந்த இந்துமத விரோதிகள் கிடையவே கிடையா. புனைந்தோர் இந்துமதத்தின் பேர‌றிஞர்களும் பக்தர்களும்தான். (அவாள் என்று குறிப்பிடுகிறார் நக்கலாக‌)

      இலங்கேசுவரன் என்ற நாடகத்தில் இராவணனை பாசிட்டவாகக் காட்டி தானே அந்த இலங்கேசுவரனாக நடித்து தமிழகத்தில் பெரும்புகழைச்சேர்த்த சுப்பிரமணீய ஐயரை நீங்கள் இந்து இல்லையென்று காட்டமுடியுமா? (But there was harsh criticism against Manohar for that when the play began to hit the stages. He said he received threats also)

      மாறாக, இப்படிச்செய்தல் இந்துமதத்தூடணை என்றும் அவர்கள் இந்துக்களல்ல என்றும் நாங்கள் மட்டுமே இந்துக்கள் என்றும் பாண்டியன், புனையார், கிருஸ்ணகுமாரும் சொன்னால் எப்படியிருக்கும்?

      பதில் இதுவே: இராமாயணமும் மஹாபாரதமும் படிப்பவர் அனுபவங்களைப்பொறுத்தே அமையும். அது பாசிட்டிவோ நெகட்டிவோ (மு மு இசுமாயிலுக்கு பாசிட்டிவ், இராமானுஜனுக்கு நெகட்டிவ்) அமையும். அதைத் தடுப்பது இந்து மத தர்மத்துக்கு எதிரான தீவிரவாதமாகும். Extermism and Hinduism cannot live together.

      சீதாயாணம் ஜயபாரதன் என்ற தனிநபரின் அனுபவமே. அதை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென்று எவரும் சொல்லிவிட்டார்களா இங்கே?

  21. Avatar
    ஷாலி says:

    paandiyan says:
    November 8, 2013 at 1:30 pm
    //இராம காவியத்தில் உள்ளதைத்தான் நான் எழுதுகிறேன். //
    இதனால் சகலமானவரும் அறிந்துகொண்டது என்னவென்றால் –பூனைக்குட்டி கடைசியில் வெளியில் வந்துவிட்டது.//

    ஆமாம்! அண்ணன் சொல்றது சரிதேன்.பூனைக்குட்டி வெளியே வந்திருச்சு. ஒன்னும் பிரச்சினை இல்லை. பேசாமே அதுகூட சமத்தா ஜாலியா வெளையாடிட்டு இருங்கோ! திண்ணையின் ஒரு ஓரமா உங்க ஆட்டமும் நடக்கட்டும்.யாரும் தொந்தரவு பண்ண மாட்டாக.ஏன்னா..இப்ப கோடம்பாக்கத்திலே கூட காமெடி டிரண்டிரற்க்குத்தான் கலெக்சன் ஜாஸ்தி!
    !

  22. Avatar
    suvanappiriyan says:

    திரு பாண்டியன்!

    நீங்கள் சொல்லும் இந்த கதைகள் எந்த அளவு இட்டுக் கட்டப்பட்டது என்பதை இனி பார்ப்போம்.

    நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி ‘உமைமா’ என்பாரின் மகள் ‘ஜைனப்’ அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.

    ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.

    ‘அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் – எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் ‘உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!’ என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)

    ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தலாக் கூற வேண்டாம்!’ என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.

    இதே வசனத்தின் இறுதியில் ‘அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

    ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் ‘தலாக் கூற வேண்டாம்’ என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் ‘அவர் தலாக் கூற வேண்டும்’ அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண இந்த சுட்டியைப் பார்வையிடவும்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_02.html

    1. Avatar
      paandiyan says:

      நான் என்னுடிய ஆதாரம் முழுவதும் கொட்டி விட்டன் இங்கு. பாவம் உங்கள் நிலை. முஸ்லிம்கள ஒப்பு கொண்டுவிட்ட பின்பு நீங்கள் என்ன பண்ண முடியும் இனி ?

      1. Avatar
        Meeran says:

        Pandiayan- ஒரு அழகான விளக்கம் அளித்த பிறகும் உங்கள் மனம் அதை குறைந்த பட்சம் சிந்தனை செய்ய கூட மறுகிறது என்றால் உங்கள் மனநிலை என்னவென்று புரிகிறது. மேற்கொண்டு கருத்துக்கள் உங்களுக்கு தேவை அற்றது என நினைக்கிறன். எந்த முஸ்லிம் உங்களிடம் வந்து எழுதி குடுத்தார் ? பாண்டியின் கற்பனை அனத்தும் உண்மை என்று ?

  23. Avatar
    paandiyan says:

    //paandiyan says:
    November 8, 2013 at 1:30 pm
    //இராம காவியத்தில் உள்ளதைத்தான் நான் எழுதுகிறேன். //
    இதனால் சகலமானவரும் அறிந்துகொண்டது என்னவென்றால் –பூனைக்குட்டி கடைசியில் வெளியில் வந்துவிட்டது.//

    ஆமாம்! அண்ணன் சொல்றது சரிதேன்.பூனைக்குட்டி வெளியே வந்திருச்சு. ஒன்னும் பிரச்சினை இல்லை. பேசாமே அதுகூட சமத்தா ஜாலியா வெளையாடிட்டு இருங்கோ! திண்ணையின் ஒரு ஓரமா உங்க ஆட்டமும் நடக்கட்டும்.யாரும் தொந்தரவு பண்ண மாட்டாக.ஏன்னா..இப்ப கோடம்பாக்கத்திலே கூட காமெடி டிரண்டிரற்க்குத்தான் கலெக்சன் ஜாஸ்தி!
    !
    //

    தான ஒரு கட்டுரை எழுதி அது போனி ஆகவில்லை என்று வேறு பெயரில் பின்னூட்டோட்டம் போட்டு மத வெறி கிளப்பி (பார்க்க இந்த அபத்தத்தின் முதல் கட்டுரை பினூட்டம் ) == இதையெல்லாம் பார்த்து கோவ பட வேண்டியது திண்ணை ஆசிரியர் குழு . பார்கலாம் அவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள் என்று

  24. Avatar
    paandiyan says:

    //திரு பாண்டியன்!

    நீங்கள் சொல்லும் இந்த கதைகள் எந்த அளவு இட்டுக் கட்டப்பட்டது என்பதை இனி பார்ப்போம்.
    //

    இனி உங்களுக்கு ஒரு ஆலோசனை இங்கு . நீதி அரசர் இஸ்மாயில், கம்பராமாயணம் குறித்து, ஆற்றிய சொற்பொழிவுகள் படியுங்கள் நீங்கள் முதலில்.. வால்மீகி ராமாயணத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமஸ்கிருதத்தைக் கற்றவர் இஸ்மாயீல். தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது’

  25. Avatar
    IIM Ganapathi Raman says:

    இராமாயணமும் மஹாபாரதமும் பொதுவெளியில் வைக்கப்பட்ட காவியங்கள். அவை இந்துக்களின் ஒரே புனிதநூலாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. பகவத் கீதையும் அப்படித்தான். கீதையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியா இந்துக்கள் கோடானுகோடி.

    மத்தியகிழக்கு மதங்களோடு தங்களை ஒப்பிட்டு பெருமை கொள்ளும் இந்துக்களில் சிலர் – எங்கள் மதத்தில் ஒரே தலைவனும் ஒரே புனித நூலும் இல்லை – என்று சொல்லிப்பெருமைகொள்வர்.

    எனினும், வைணவத்தில் மஹாபாரதம் ஐந்தாவது வேதமாகவும் இராமஅவதாரத்தை திருமாலின் முக்கிய அவதாரமாக வழிபடுவதும் உண்டு.

    பொதுவெளியில் வைக்கபட்டதால், அனைவரும் இருநூல்களையும் படிக்கின்றனர். அவர்கள் தங்கள்தங்கள் அனுபவித்தவண்ணம் பேசுவதற்குத் தடையில்லை. ஆதிகாலம் தொட்டு அப்படித்தான். இசுலாமியரும் கிருத்துவரும் படிக்கலாம். சிலாகிக்கலாம். புளகாகிதமடையலாம். நீதிபதி மு.மு. இசுமாயிலின் ‘இராமாயணம்’ ஆ.வீயில் தொடராக வந்து தமிழர்களை மலைக்கவைத்ததே!

    இப்போது தடை போட்டு கோபம் கொள்வது புதிய இந்துமதச்சிந்தனை. அதாவது இந்துத்வா வாதிகளின் சித்தாந்தம். அதன்படி – இந்துக்களின் நம்பிக்கைகள், கடவுளர்கள் மட்டுமில்லாமல், இவ்விருஇதிகாசங்களைப்பற்றியும் எவரும் குறைத்து விமர்சிக்கக்கூடாது.

    எனவே ஆங்கிலக்கவிஞர் இராமானுஜனின் ‘இராமாயணம்’ என்ற கவிதைக்கு எதிராகப் போராட்டம் நடாத்தப்பட்டபின், அல்லது மிரட்டல் விடப்பட்ட பின் அது தில்லிப்பலகழைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.

    (இராமனுஜன் மைசூர் ஐயங்கார்; மு மு இசுமாயில் தமிழ் முசுலீம்; இருவரின் அனுபவிப்புகள் ஒன்றுக்கொன்று எதிரானவை :-))

    மதவரலாற்று ஆராய்ச்சியாளர், இப்போக்கை இந்துமதத்தை வேரோடு அறுக்கும் செயலாகவும், அல்லது புதிய இந்துமதத்தை உருவாக்கும் செய்லாகவும் விமர்சிக்கின்றனர்.

    இந்துமதம் எப்படி வாழ்ந்து நின்று நிலைத்துவருகிறதோ அப்படி நிலைக்கும். அதை மாற்றுவோர் முயற்சி விரயந்தான்.

    –திருவாழ்மார்பன்

  26. Avatar
    IIM Ganapathi Raman says:

    இங்கு ஷாலியாலோ, ஜயபாரதனாலோ இட்டுவைக்கப்படும் கருத்துகள் என்றோ எப்போதோ பல இந்து அறிஞர்களால் எழுதவும் சொல்லவும் செய்யப்பட்டவைதான்.

    இராமாயணச் சம்பவங்களுள் பலபல‌ விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டவைதான். அவ்விமர்சனங்கள் பல எதிர்கொள்ளமுடியாதவைகளே. அவைகளை இந்துமதத்தூடனைகள் என்று எடுத்துக்கொள்வர் வெகு சிலரே.

    இராஜாஜி தன் சிறுவர்களுக்கான இராமாயணத்தில் (வானதி பதிப்பகம்) இப்படிப்பட்ட சம்பவங்களைப்பற்றியும் கூறி சிலவற்றைச் சொல்லி இராமர் செய்தத்து சரியன்று என்றும் சொல்லிமுடிக்கிறார்.

    எ.கா: அக்னிப்பிரவேசம்.

    கலாட்சேபக்காரர்கள் சொல்லும் விளக்கமென்னவென்றால்.

    இராமர் மனித அவதாரம் எடுத்ததால், மனிதனுக்குக் கூறப்பட்ட கடப்பாடுகளை அவர் கண்டிப்பாக கையொழுகவேண்டும். அதிலொன்றுதான், அக்னிப்பிரவேசம்.

    உலைவாயை மூடிவிடலாம். ஊர்வாயை மூடிவிட முடியுமா எனப்பயந்து பரிகாரம் தேடல் அக்கடப்பாடுகளில் ஒன்று ஆகும்.

    —திருவாழ்மார்பன்

  27. Avatar
    ஷாலி says:

    இருதரப்பு வாதங்களையும் பொறுமையாக படித்து நல்லதொரு கருத்துரைத்த நண்பர் IIM அவர்களுக்கு நன்றி!நண்பர்களே! நான் மத வெறியனும் அல்ல.பிற மதங்களை தூசனை செய்யும் மூடனும் அல்ல.ஒவ்வொருவரும் இறைவன் கொடுத்த அறிவின் பால் செல்லுகிறார்கள்.மனிதர்கள் சுதந்திர சிந்தனையோடு பிறக்கிறார்கள்.எவரையும் எந்த கருத்திற்கும் அடிமை ஆக்க முடியாது.திரு.கணபதி இராமராஜ்ய தீர்ப்பு இந்து மதத்தின் ஆழ்ந்த ஞானதரிசனத்தின் வெளிப்பாடு.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *