சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

56
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

vegetarian-food1உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தபட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கபட்டதா, தடுக்கபட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும் உண்டு. சீக்கிய மதத்தில் மாமிசம் தடுக்கபடவில்லை எனினும் குருத்வாராக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவது வழக்கம்.

ஆக இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்திலும் மாமிசம் ஒன்று தடுக்கபட்டதாக அல்லது கட்டுபடுத்தபட்டதாக மட்டுமே இருப்பதை காணலாம். இது ஏன் என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் இத்தகைய சைவ உணவு வழக்கம் மற்ற நாடுகளில் இல்லாத அளவு ஒரு பண்பாட்டு சிக்கலை இந்திய சமூகத்தில் உருவாக்கி உள்ளது. அதை ஆராய்வதே கட்டுரையின் நோக்கம்.

மாமிசம் உண்ணும் இந்துக்களும் விசேஷ நாட்கள், பண்டிகைகள், திருவிழா சமயத்தில் மாமிசம் தவிர்ப்பார்கள். எல்லாம் நாளும் மாமிசம் உண்ணும் இந்துக்களும் கூட கடவுளுக்கு மாமிசம் படைப்பது இல்லை. வால்மிகி இராமாயணத்தில் சீதையும், இராமனும், இலக்குவனும் மாமிசம் உண்பதாக எழுதப்பட்டு இருப்பினும் இராமர் கோயில்களில் சைவ உணவே பிரசாதமாக படைக்கபடுகிறது. இராமபக்தர்கள் என்றால் உணவுரீதியாக சைவர்கள் எனவும் ஆகிவிட்டிருக்கிறது. இதன் விளைவு என்னவெனில் புரட்டாசி, மார்கழி மாத ஐயப்பன் விரதம் மாதிரி சில காலகட்டங்களில் மாமிச விற்பனை படுத்துவிடும் சூழல் உருவாகி உள்ளது.

மதரீதியாக சைவம் ஆகாது என ஆகிவிட்டதால் உணவகங்கள், பணியிடங்கள், விருந்துகளில் வெஜ், நான்வெஜ் என பிரிந்து முட்டை பரிமாறும் இடங்களையும் கூட தவிர்ப்பது/ ஒதுக்கி வைப்பது என ஆகியுள்ளது. ஆக இந்திய சைவர்களை பின்வரும் வகைகளில் பிரிக்கலாம்

நனி சைவம் எனும் வீகன் உணவுமுறை: மேலைநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகியுள்ள இம்முறைப்படி பால், முட்டை, தேன், மாமிசம், மீன் அனைத்தும் தவிர்த்து தாவர உணவு மட்டுமே உண்ணும் முறை

வெஜிட்டேரியன்: தாவர உணவுடன் பாலை மட்டும் சேர்த்து கொள்ளுதல்.

எஜ்ஜிடேரியன்: பால், முட்டை, தாவ்ர உணவுகளை சேர்த்துகொள்ளுதல்

பெஸ்கட்டேரியன்: மீன், பால், தாவ்ர உணவு சேர்த்து கொள்ளுதல். வங்காளம் முழுக்க இவ்வகை வெஜிட்டேரியன்களை காணலாம்

பிளெக்சிடேரியன்: வாரம் ஆறு நாள் சைவமாக இருப்பார்கள். ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் மட்டும் மாமிசம் உண்பார்கள்.

இது தவிர்த்து சில வகை மாமிசங்களை ஒட்டுமொத்த நாடும் தவிர்க்கும். உதாரணம் பன்றிக்கறி, மாட்டுக்கறி முதலானவை. மாமிசம் உண்ணும் இந்துக்களும் பெரும்பாலும் ஆட்டுடன் நிறுத்திவிடுவார்கள். அதை தாண்டி பெரிய உயிரினங்களான மாடு, பன்றி முதலானவை ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோரால் புசிக்கபடுவது இல்லை.

இத்தகைய குழப்பமான உணவுமுறையால் உணவை அடிப்படையாக வைத்து ஒரு படிம நிலை சமூகத்தில் உருவானது. சைவர்களில் ஒவ்வொரு பிரிவும் தன்னை விட தீவிர சைவர்களை சற்று அச்சத்துடனும், தன்னை விட சற்று லிபரலாக இருப்பவர்களை கொள்கையற்றவர்கள் என எண்ணுவதும் வழக்கம். உதாரணமாக முட்டை உண்ணும் வெஜிட்டேரியன்களை பால் மட்டும் அருந்தும் வெஜிட்டேரியன்கள் சைவர்களாக ஒத்துகொள்வது இல்லை. மீனும் உணவில் சேர்ந்தால் அவர்கள் தொலைந்தார்கள். மாடு, பன்றி என போனால் சமூக பிரஷ்டமும் நிகழலாம். பால் கூட அருந்தாத நம்மாழ்வார், ரஜனீஷ் முதலானவர்கள் மிக மதிப்புடன் பார்க்கபட்டார்கள். மறுபக்கம் மாட்டுக்கறி உண்பதே செக்யூலரிசத்தை நிருபிக்கும் வழிமுறையாக கருதப்பட்டு சில இயக்கங்கள் மாட்டுக்கறி உண்ணும் திருவிழாவை நடத்தின.

பசுவதை/பன்றி மாமிசம் என்பது இத்தகைய பண்பாட்டு அடையாள சிக்கல்களில் ஒன்று.  மத கலவரத்தை உண்டாக்க பன்றிக்கறி/ மாட்டுக்கறியை மசூதி/கோயில்கள் இருக்குமிடத்துக்கு அருகே போட்டால் போதும், உடனே பெரும் கலவரம் வெடிக்கும் என்பது இங்கே நிலவும் துரதிர்ஷ்டவசமான நிலை. இந்திய மாநிலம் ஒன்றின் முதல்வரை மாட்டுக்கறி உண்பவராக ஒரு சஞ்சிகை சித்தரிக்க அதன்பின் ரணகளமே வெடித்தது. அந்த சஞ்சிகையின் மின் இணைப்பு துண்டிக்கபட்டு, அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது. 

இவை அனைத்தும் உணவுமுறையால் நம் சமூகத்தில் உருவான படிமநிலையின் துரதிர்ஷ்டவசமான உதாரணங்கள். இந்தியா என இல்லை, மற்ற சமூகங்களிலும் இதுபோன்ற சைவ/ அசைவ சிக்கல்கள் நிலவி வருவதை நாம் காணலாம். ஆனால் அந்த சமூகங்களில் இந்த சிக்கல் அசைவர்களிடையே காணப்படுகிறது. உதாரணமாக யூத, இஸ்லாமிய சமூகங்களில் சைவர் எதிர் அசைவர் என்ற ரீதியில் பிரச்சனைகள் இல்லை. கோஷர் அல்லாத மாமிசத்தை உண்ணும் யூதரை பிற கன்சர்வேடிவ் யூதர்கள் குறைகூறூவது என்ற அளவில் அது நின்றுவிடும். ஆனால் பல மதங்கள், கலாச்சாரங்களின் சங்கமமான இந்தியாவில் அவை அனைத்தின் உணவு பழக்க வழக்கமும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தின. ஜைனத்தின் தாக்கத்தாலேயே வைணவபிரிவுகளில் சைவ உணவு கோட்பாடு பரவியது என்ற ஒர் கருத்தாக்கம் உண்டு. இந்துக்களும் பன்றிக்கறியை தவிர்க்க காரணம் இஸ்லாமின் தாக்கமே எனவும் கருத இடமுண்டு. வால்மிகி இராமாயனத்தில் இராமன் பன்றிக்கறியை உண்டதும், கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி மாமிசம் படைத்ததும் வரலாறு என்பது நோக்கத்தக்கது. வீகனிசம் இங்கே பெருக பெடா மாதிரி அமைப்புகளும், உலகமயமாக்கலும் ஒரு காரணம். யாகங்களில் உயிர்ப்பலி நிகழ்வதை தடுத்ததில் பவுத்தத்தின் பங்கு அதிகம்.

இப்படி பிறமதங்கள், கலாசாரங்களால் பரவிய உணவு டாபுக்களை இந்துக்கள் கைவிட்டால் உணவினால் உருவான படிமமுறை இந்து சமுதாயத்தில் பெருமளவில் குறைந்துவிடும். உதாரணமாக யாகங்களில் மிருகங்கள் பலியிடப்பட்டால் கடவுளுக்கு மாமிசம் உகந்தது அல்ல எனும் நம்பிக்கை தகரும். மாமிசம் உண்பவர்கள் பூசாரி ஆகலாம் எனும் சூழலும் வரும். வீகனிசம் நம் மண்ணில் உருவான கோட்பாடு அல்ல என்பதை உணர்ந்தால் அது இங்கே பரவுவது தடுக்கபடும். வீகனிசம் திருப்பதிக்கு லட்டு விற்ற கதையாய் நம் மண்ணின் சைவ உணவு வழக்கத்தை சற்று தீவிரப்படுத்தி நமக்கே திரும்ப விற்கும் முறை. வெண்ணெய் திருடி தின்ற கண்ணனின் தேசத்தில் வீகனிசத்துக்கு ஏது இடம்? பன்றிக்கறியை முஸ்லிம்கள் தவிர்க்கலாம். இந்துக்கள் ஏன் தவிர்க்கவேண்டும்? அதேபோல் மாட்டுக்கறியை இந்துக்கள் தவிர்க்கலாம். முஸ்லிம்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?

விவேகானந்தர் கூறியது போல்

“புலால் உணவு உண்ணும் தேசங்கள் அனைத்தும் உயர்குணம் நிரம்பியவையாக, சிந்தனையாளர்களாலும், ஹீரோக்களாலும், வீரர்களாலும் நிரம்பி உள்ளன. யாகப்புகை இந்தியாவின் விண்ணை நிரப்பி இந்திய மக்கள் மாமிச உணவுகளை உன்ட நாட்களில் மிகபெரும் ஞானிகளும், வீரர்களும் இந்தியாவில் தோன்றினார்கள்…”

அத்தகைய சூழல் இந்தியாவில் மீண்டும் வளர சைவ உணவு முறை அசைவ உணவுமுறையை விட எவ்விதத்திலும் உயர்ந்தது அல்ல, அசைவம் எவ்விதத்திலும் மக்களை தாழ்த்துவதில்லை எனும் சூழல் சமூகத்தில் நிலவவேண்டும்.

Series Navigation
author

செல்வன்

Similar Posts

56 Comments

  1. Avatar
    ஷாலி says:

    வேதகால உணவுப் பழக்கங்களை பின்னர் வந்த பவுத்த,ஜைன மதங்கள் ஒழித்து ஜீவகாருன்னியம் பேசின.அன்பே சிவம்! பேசிய சைவர்கள் சமணர்கள் கழுத்தில் கை வைத்து சைவத்தை உயர்த்தினார்கள். ஆக வேத கால உணவு புலால் உண்பது தலித்துகளுக்கு மட்டும் சொந்தமாக்கப்பட்டது. அன்று புலால் உண்ட இராமன் வழியில் இன்று தலித்துகள் செல்கின்றனர்.

    அன்று புலால் மறுத்த புத்தர் வழியில் இன்று சைவரும், வைணவரும் செல்கிறார்கள்.ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதுபோல்.இங்கு அனைவரும் இந்துக்களே! இந்த இந்துப் பெரியோர்கள், கங்கை நதியில் எறியப்படும் பாதி எறிந்த பிணத்தை உண்ணும் அகோர, அகோரிகளிடம் ஆசிர்வாதம் வாங்க ஓடுவார்கள். ஆனால் அடி மாட்டிற்கு செல்லும் மாடுகளை மறிப்பார்கள்.

    கோமாதாவை காப்பாற்ற கோசாலை அமைத்தவர்கள்,கோசலை மைந்தன் உண்ட புலாலை பக்தர்களுக்கு மறுக்கும் மர்மமென்ன? பிணத்தை உண்ணும் அகோரி சாமிகளுக்கு உள்ள உரிமையை மாடு தின்னும் மாடசாமிக்கு மறுக்கலாமா?

    ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கும் கனவு நனவாக வேண்டும் என்றால் சுவாமி விவேகானந்தர் வாக்கு நிறைவேறவேண்டும்.

    “புலால் உணவு உண்ணும் தேசங்கள் அனைத்தும் உயர்குணம் நிரம்பியவையாக, சிந்தனையாளர்களாலும், ஹீரோக்களாலும், வீரர்களாலும் நிரம்பி உள்ளன. யாகப்புகை இந்தியாவின் விண்ணை நிரப்பி இந்திய மக்கள் மாமிச உணவுகளை உன்ட நாட்களில் மிகபெரும் ஞானிகளும், வீரர்களும் இந்தியாவில் தோன்றினார்கள்…”

    மாத்தி யோசிக்கும் அருமையான கட்டுரை.திரு.செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  2. Avatar
    smitha says:

    The author has made a mountain out of a molehill. Vegetarianism among hiindus was not a fallout of Buddhism. Even the Rishies in the ancent ages ate meat. Later, the practice stopped.

    Swami Vivekananda was a profound meat eater. He even made recipes & cooked none veg food himself. So, his words cannot be counted as law here.

    Also, the benefits of vegetarianism is far more than non vegetarianism. This is being repeatedly proved from the various studies coducted. That is why Europe is slowly turning to vegetarianism.

    But in India, if we talk about it, immediately “secularists” like you cry foul.

    Muslims conmsume beef, particularly in a state like Kerala. Do you know to what cruelty the cows are subjected to before being slaughtered?

  3. Avatar
    Selvan says:

    கருத்துக்கு நன்றி ஷாலி

    ஸ்மிதா…பவுத்தம், ஜைனத்துக்கு முன்பு பெரிய அளவில் வெஜிட்டேரியனிசம் எனும் கோட்பாடு இந்தியாவில் காணகிடைக்கவில்லை. நீங்களே கூறுவது போல வேத ரிஷிகள் வெஜிட்டேரியன்கள் அல்லர். பவுத்தத்தால் தான் வேள்வியில் பலி கொடுக்கும் வழக்கம் நின்றது. அதிகரித்து வந்த விவசாய உற்பத்தியும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைக்கும் இதே போன்ற பொருளாதார காரணத்துக்காக உலகில் முழுக்க, முழுக்க பசுவதை தடை செய்யபட்ட ஒரே நாடாக கம்யூனிச கியூபா இருப்பதை காணலாம். அங்கே அடிமாட்டை கூட கொல்ல முடியாது. கியூபாவில் விவசாயிகள் வேறு வழியின்றி அடிமாட்டை சாலையோரம் நிறுத்தி பஸ்கள் முன்னே தள்ளி விட்டு கொல்கிறார்கள். பஸ்களை நிறுத்தி யாராவது டிபனில் பீஃப் கொண்டுபோகிறார்களா என பார்த்து பிடித்து ஜெயிலில் போடுவார்கள்.

    சைவ உணவு வழக்கம் இந்தியாவில் மிக பிற்காலத்தில் தோன்றியது. வள்ளலார் மாதிரி பிற்கால ஞானியர் அதை பரவலாக்கினார்கள். ஆனால் சைவ உணவு கொள்கை தொன்மையான இந்துமதத்தின் கொள்கை அல்ல. திருமுருகாற்றுபடையில் முருகனுக்கு ஆட்டுகுருதி கலந்த அரிசிசோறு படைக்கபடுவதை காணலாம். சீதை, இராமன், இலக்குவன் அனைவரும் மாமிசம் உண்டதை வால்மிகி எழுதுகிறார். அதுவும் காட்டில் அல்ல, நாட்டில் இருக்கையிலேயே சீதை கங்கை ஆற்றுக்கு மாமிசம் படைப்பதாக வேண்டிகொள்கிறார்

    இதை செக்யூலரிசம் என நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. இராமனும், சீதையும், முருகனும் செக்யூலரிஸ்டுகளா?

    ஆரோக்கியம் எனும் ரீதியில் பார்த்தாலும் அசைவ உணவே சைவ உணவை விட பல மடங்கு மேலானது. ஐரோப்பா, அமெரிக்காவில் சைவர்கள் எண்ணிக்கை கால் சதவிகிதம் இருந்தால் அதிகம். அங்கே பலரும் ஒரு ஆண்டு, இரு ஆண்டுகாலம் சைவமாக இருந்து தாக்குபிடிக்க முடியாமல் அசைவத்துக்கு ஓடிவிடுவார்கள். அதை எல்லாம் கூட்டி சைவர்கள் எண்ணிக்கை அதிகம் என சொல்லிகொள்ளலாம். ஆனால் அது உண்மை அல்ல.

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வங்காளத்தில் வசிக்கும் பிராமணரும் மீன் உண்ணுகிறார். ஆர்க்டிக் எஸ்கிமோக்களுக்குப் புலால் தவிர வேறு உணவில்லை. கடல்சூழ் வாழும் மக்களில் பெரும்பாலோர் மீன் உணவு எடுத்துக் கொள்கிறார்.

    சைவ உணவு மட்டும் உண்ணும் பெண்டிர் பலர் ஒரு பிள்ளை பெற்ற பிறகு அவரது உடம்பு மெலிந்து கூடாகி விடுகிறது. நலிந்து போன நமது சைவ உணவுத் தாய்க் குலத்தைப் பாருங்கள்.

    சிறிது புலால் சேர்த்து, மீன், முட்டையோடு உள்ள சைவ உணவே நமக்கு நீண்ட கால வலிமை தர வல்லது.

    சி. ஜெயபாரதன்

  5. Avatar
    punaipeyaril says:

    “:நலிந்து போன நமது சைவ உணவுத் தாய்க் குலத்தைப் பாருங்கள்.” bla bla bla bla

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      There may be some meaning in his bla, bla, bla, bla.

      The spelling is blah, not bla. Blah means gibberish. Bla means what?

  6. Avatar
    smitha says:

    Selvan,

    I differ here. Various medical studies have shown that vegetarian food has fibre content, which is totally absent in non veg food. Also, people live longer by consuming veg food. Also, the occureence of diseases is less.

    Living long alone is not the criterian. How U live is what counts.

    Talking ofsecularism, I was only pointing out that beef eating has been expolited for religious gain.

  7. Avatar
    smitha says:

    சைவ உணவு மட்டும் உண்ணும் பெண்டிர் பலர் ஒரு பிள்ளை பெற்ற பிறகு அவரது உடம்பு மெலிந்து கூடாகி விடுகிறது. நலிந்து போன நமது சைவ உணவுத் தாய்க் குலத்தைப் பாருங்கள்.

    Jayabharathan,

    This post shows your total ignorance on the topic.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      சைவ உணவில் போதுமான உடற் சத்துக்கள் எல்லாம் இருப்பினும் புலாலில் உள்ள உயர்ந்த ரகப் புரதம் ஒன்று இல்லாதது, உடல் உறுதிக்கு ஒரு பெருங்குறையே.

      ஒரு பிள்ளை பெற்ற பிறகு நலிந்துபோகும் நமது மதிப்புக்கு உரிய பிராமண குலத் தாய்மார்கள் பலரைப் பாருங்கள்.

      இங்கு நான் ஜாதியைக் குறிப்பிட வேண்டி வந்ததற்கு வருந்துகிறேன்.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        I I M Ganapati Raman says:

        I have seen that caste women but they did not look like as he said to me. All women go down generally after child birth. Not only brahmin women.

        The flesh sag, the nerves lose their tautness and life thereafter becomes a battle with health. Women are like roses, they blossom in the morning and wither away in the evening (Shakespeare) Not exact quote. There is no second youth for them. Delivering a child is a self sacrifice health wise. Some intelligent pre natal care will have done damage control. But only special and sophisticated class women care. It is one of the reasons for men to get enticed with extra marital affairs. When sex fails to keep family balanced, the marriage sucks. Dr J’s intervention here will be timely.

      2. Avatar
        punaipeyaril says:

        உங்கள் அறிவு வியக்க வைக்கிறது. எத்தனையோ பிராமண குல தாய்மார்கள் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்று , ஆரோக்கியமாக 90வயதிலும் நடந்து கோவில் பிரகாரம் சுற்றி சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆடு கோழி பன்னி தின்னும் இனம் சார்ந்தவர்கள் இன்று மெகா மெகா சைஸில் ஒபிஸை நல்ல திடகாத்திரம் என்று நினைத்து பெருமையாக சுகர் பிபி மாத்திரை தின்பது சாதாரண சம்பவம்.

        1. Avatar
          I I M Ganapati Raman says:

          An interesting expo on the new word ‘bla’ coined by our friendly commenter! Have heard certain diseases prevalent among certain ethnic groups: for e.g. thalasemmia with Bengalis, Punjabis and Gujaratis. Never with South Indians. Diabetes with Asian populations and Pacific Ocean Islanders. As Asians, we get it. But haven’t heard BP and Diabetes select caste of its victims first before attack. A brahmin elderly woman is luckier than a non-brahmin elderly woman. This discovery, Mr Punappeyaril, should astound the whole community of medical researchers. Perhaps, someone may recommend you for some honor :-)

          I am trying to be light hearted. To be serious, such things cannot be said for sure unless and until we have data based evidences. It would be salutary if the data of Tamil brahmin women are taken to see how many of them have acquired the two chronic diseases; as compared to Non brahmin Non vegan women of TN. It is not politically incorrect to study people by caste for medical purposes as a certain caste may have continuous life style: not only food intake. The discovery may help doctors to devices to treat them separately. And finally, the caste will stand to benefit.

          I am a vegan by choice. For me, to be a non vegan is to be a hedonist who I don’t want to be. Hedonism and spiritualism make strange bedfellows.

      3. Avatar
        jyothirllata girija says:

        சைவப் பிள்ளைமார்களும், வீரசைவத்தினரும் பிராமணர்களை விடவும் மரக்கறி உணவு மட்டுமே உண்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். அவர்களைப் பற்றியும் ஜெயபாரதன் ஆராயட்டும். பிராமணர்களைப் பற்றி நண்பர் குறிப்பிட்டதில் தவறே கிடையாது என்பதே எனது நிலைப்பாடு.ஆனால் மாமிசம் உண்பது நமக்கு உடன்பாடானதன்று. அது பற்றிய மிகச் சிறந்த நூல் ஒன்று என்னிடம் உள்ளது. தேடிப் பிடித்த பின் அது பற்றித் தனியாக எழுத எண்ணம்.
        ஜோதிர்லதா கிரிஜா

      4. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        உலகத்தின் சிறந்த கிரிக்கெட் மட்டையாளர்களை கலங்கடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் சைவ உணவுக்காரர்தான்.

        1. Avatar
          I I M Ganapati Raman says:

          I posted the message apropos another comment. Somehow, it appears under yours. Meantime, have posted one for that person; and it has already appeared. Cross talk sometimes occur as I am not that much computer savvy.

  8. Avatar
    செல்வன் says:

    ஸ்மிதா,

    சைவ உணவு உடலுக்கு மிக கெடுதல் விளைவிக்கும். அசைவத்தில் நார்சத்து இல்லை. ஆனால் அசைவம் உண்பவர்கள் கீரை, காய்கறி உண்ண எத்தடையும் கிடையாதே? அதனால் அசைவர்களுக்கு நார்சத்து தட்டுபாடு வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதே சமயம் அசைவ உணவில் மட்டுமே இருக்கும் சத்துக்கள் சைவர்களுக்கு கிடைப்பது இல்லை. உதாரணம் எந்த தாவர உணவிலும் வைட்டமின் ஏ கிடையாது. அதனால் பெருமளவில் இந்தியாவில் மாலைக்கண் நோய் வருகிறது. (காரட், கீரையில் இருப்பது வைட்டமின் ஏ அல்ல. பீடா காரடின். அதை தவறாக வைட்டமின் ஏ என லேபிள் செய்கிறார்கள்)

    சைவர்களுக்கு வரும் இன்னொரு வியாதி இரும்புசத்து குறைபாடால் வரும் அனீமியா. ஐதராபாத்தில் எடுக்கபட்ட ஆய்வு ஒன்றில் முஸ்லிம் பெண்களை ஒப்பிடுகையில் இந்து பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு அதிகம் என கூறுகிறது. இதற்கு அவர்களது சைவ உணவு வழக்கத்தை அன்றி வேறு எந்த காரணத்தை கூறவியலும்?

    உலகில் நீண்டநாள் வாழ்ந்து கின்னஸ் சாதனை செய்த அனைவரும் அசைவர்களே.அதிலும் குறிப்பாக நார்வே, ஜப்பான் போன்ற மாமிச உணவுகளை அதிகம் உண்ணும் நாடுகளை சேர்ந்தவர்கள். மருந்துக்கு கூட ஒரே ஒரு சைவரும் அப்படியலில் இடம்பெற்றது இல்லை

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்,

    \ சைவ உணவில் போதுமான உடற் சத்துக்கள் எல்லாம் இருப்பினும் புலாலில் உள்ள உயர்ந்த ரகப் புரதம் ஒன்று இல்லாதது, உடல் உறுதிக்கு ஒரு பெருங்குறையே. \

    தனக்குச் சரியாகத் தெரியாத விஷயத்தைப் பற்றி அளந்து விடுவதை எப்போது நிப்பாட்டப்போகிறீர்கள்? Typical Jayabharathan Syndrome.

    ஹரியாணா மாகாணத்தில் இருந்து குஸ்தியில் …….. ஒலிம்பிக்கில்……. மெடல் வாங்கிய இளைஞர்கள் யாரும் கோழிமுட்டை கூட சாப்பிட்டதில்லை.

    லிட்டர் லிட்டராக எருமைப்பால் தான்.

    இது போன்ற சமாசாரங்களை வைத்யர் ஸ்ரீ ஜான்சன் போன்று விஷயம் தெரிந்தவர்களின் கருத்துக்கு விடாது நீங்கள் ஏன் ஹடம் பிடிக்கிறீர்கள்.

    ஜான்சன் சார், இப்படி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்கே காணமல் போனீர்கள்?

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      “தனக்குச் சரியாகத் தெரியாத விஷயத்தைப் பற்றி அளந்து விடுவதை எப்போது நிப்பாட்டப்போகிறீர்கள்? Typical Jayabharathan Syndrome.” –

      அவரவர் அனுபவங்களில் அடிப்படையில் பலர் வெவ்வேறு கருத்துக்களைக்கொண்டிருப்பர் . அவற்றை எழுதுகிறார்கள். பொய் சொல்கிறார். அடம் பிடிக்கிறார். அளந்து விடுகிறார் என எழுதுவது எதைக்காட்டுகிறது? ஒரு ஜனநாயக அவையில் உள்நுழையத் தகுதியில்லாதவன் என்பதைத்தான் காட்டுகிறது.

      திண்ணை மூன்றாம்தர அரசியல்வாதிகளின் தெரு மூலை மேடையன்று. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள். தன் தகா உணர்வுகளைக் கட்டி அடக்கி ஆள்பவன் பண்பாளன். ஜயபாரதன் எதை எழுதினாலும் தனிநபர் தாக்குதலில் இறங்கும் கீழ்த்தரமான உணர்வுகளை அடக்குங்கள் என்கிறேன்.

      உங்கள் கருத்தென்ன? சைவ உணவு உட்கொண்டும் குத்துச்சண்டை வீரர் ஆகலாம். அவ்வளவுதானே? சொன்னால் போச்சு. ஆதாரத்தோடு சொன்னால் என்ன ஏற்க மாட்டேன் என்று எவரேனும் ‘ஹடம்’ பிடித்தாரா? It is news to me: I would like to know eagerly the source of your information in order to believe you.

      காழ்ப்புணர்ச்சிகளுக்கு காரணம், ஜயபாரதன் ஜாதி ஆட்களைக்குறிப்பிட்டதுதானோ? மரியாதையாகத்தானே குறிப்பிட்டார்.? ஜாதியே உயிர் மூச்சாகிறது சிலருக்கு.

      ஒன்று சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

      இஃது ஒரு பொது அரங்குதான். It is not exclusive to any group. You can’t pretend to own it and attempt to gag others.

      எவரும் எக்கருத்தையும் இடலாம் அவை நாகரிகமான சொற்களில் அடங்கும்வரை. நீதிமன்றமன்று. பகவத் கீதையின் மேல் கைவைத்து சத்தியம் பண்ணி அல்லது ஓத் கமிஷனரின் முன்னால் நின்று அஃபி டாவிட்டோ வாக்குமூலமோ பதிவு செய்ய. எல்லாருமே ஆராய்ச்சியாளர்கள் அல்ல. மெத்த படித்தவர்கள் சிலர். சிறிதளவே படித்த என்னைப்போன்றோர். பரந்த அறிவுள்ளவர் பலர். ஒரு துறையில் விற்பன்னர்கள் சிலர் என்று மாட்லி க்ரவுட் இங்கே. அனைவருக்கும் பேச உரிமை இருக்கிறது. எவரேனும் சொல்வது அத்துறையில் ஆழங்கால் பட்ட இன்னொருவருக்குத் தவறு எனத்தெரிந்தால் அதைக் கண்ணியாமான சொற்களில் எடுத்தியம்புவதே கற்றோர் பண்பு. இனியாவது அப்பண்பைக் கற்றுக்கொள்ளுங்கள்.

      சிறியோர் சிந்திய கடலையாயினும் பொருக்குவது கடனே என்பது நம் பழந்தமிழர் நமக்குச் சொல்லிச் சென்றது. அதன்படி நான் சொன்னதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      வாழ்க.

    2. Avatar
      I I M Ganapati Raman says:

      ஹரியாணா மாகாணத்தில் இருந்து குஸ்தியில் …….. ஒலிம்பிக்கில்……. மெடல் வாங்கிய இளைஞர்கள் யாரும் கோழிமுட்டை கூட சாப்பிட்டதில்லை.
      லிட்டர் லிட்டராக எருமைப்பால் தான்.//

      ஹரியானாவில் எல்லா மல்யுத்த வீரர்களும் சைவர்களா? இப்போட்டியில் வெல்லும் ருஷயர்களும் கிழக்கு ஐரோப்பியர்களும் கறுப்பர்களும் ஈரானியர்களும் சைவர்களா? அசைவத்தோடு பால் இவர்கள் உட்கொள்ளவில்லையா?

  10. Avatar
    I I M Ganapati Raman says:

    Mr Selvan has a point which S/Shri/Smt/Sushree Jyothirlatha Girija, Smitha, Pandian and Punaippeyari may do well to take note of: (Sushree = Miss – Hindi word)

    //சைவர்கள் என்னும் போது அவர் மரக்கறி உணவை மட்டும் உட்கொள்பவர். அசைவர்கள் என்னும் போது அவர் மரக்கறி மற்றும் மாமிசம் என இருவகை உணவையும் உட்கொள்பவர். எனவே அசைவருக்கு சைவருக்கு கிடைக்கும் சத்துப்பொருட்கள் போக மாமிச உணவில் கிடைக்கும் சத்துப்பொருட்களும் சேர்த்து கிடைக்கும். சைவருக்கு அசைவ உணவில் கிடைக்கும் சத்துப்பொருட்கள் கிடைக்கா.//

    நானறிந்தவரையில் உணவுப்பழக்கமென்பது பிறந்த வீட்டில் தொத்திக்கொள்வது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது சாலப்பொருத்தமிங்கே. சிலர் மாறலாம். பலர் மாய்ந்து கிடப்பர் பிறப்பு வளர்ப்புடன் வந்த பழக்கத்தோடு.

    சைவப்பிள்ளைகளும் பிராமணர்களும் சைவர்களாக இருப்பது வீட்டுப்பழக்கத்தாலே. பிராமணர்களுக்கு அஃது அவர்கள் வைதீக மதத்தோடு இணைந்த ஒரு அடையாளம்.

    வெள்ளைக்கார நடிகை ஒருவர் சைவர்; ஒரு அரசியலவாதி சைவர்; ஒரு எழுத்தாளர் சைவர் எனறு சுட்டிக்காட்டி சைவ உணவு சக்தி தரும் என வாதிடமுடியாது. சக்தி என்பது எதற்கு என்பது கேள்வி. வெறுமனவே உயிர்வாழ (என்னைப்போல) வேண்டுமானால், சைவ உணவு மேல். அநாவசியமான வியாதிகள் வாரா. சக்தி எனபது கால்பந்து விளையாட, பளுதூக்கும்போட்டியில் தங்கப்பதக்கம் வாங்க, வாலிபால் விளையாட என்றால் அசைவ உணவு (தப்பு. அசைவ உண-வும்) உட்கொள்ள வேண்டும்.

    தமிழ்ப‌பிராமணர்கள் இப்படிப்பட்ட விளையாட்டுக்களைத் தவிர்ப்பதற்கு உணவுப்பழக்கமே காரணம். வெறுமனவே உயிர்வாழ, ஆன்மிகத்தில் மூழ்கி இறைவன நினைத்துக்கொண்டிருக்க, மூளையைப் பயன்படுத்தி வேலை செய்ய, சைவ உணவு போதும்.

    On turning vegan, G.B.Shah famously quipped: My stomach is not a burial ground for dead bodies! He was a writer always. He sat, wrote and thought. Desk-bound avocation. Suppose he wanted to participate in Commonwealth Games to win a medal for his country in Football or Wrestling or Weightlifting ? His wit and sarcasm would be conveniently buried in his stomach till the reporter left the room :-)

    I said it: CONVENIENCE decides our choices, not only in our food habits, but in every thing. No room for argument now, isn’t?

  11. Avatar
    paandiyan says:

    //தமிழ்ப‌பிராமணர்கள் இப்படிப்பட்ட விளையாட்டுக்களைத் தவிர்ப்பதற்கு உணவுப்பழக்கமே காரணம். வெறுமனவே உயிர்வாழ, ஆன்மிகத்தில் மூழ்கி இறைவன நினைத்துக்கொண்டிருக்க, மூளையைப் பயன்படுத்தி வேலை செய்ய, சைவ உணவு போதும்//

    sema comedy …. so when you eat non-veg you don’t have much brain work? what about cricket? do you want to specify any name or non-veg people are braineless and wanted me to type name here?
    those idiotic comments are good to laugh!!!!!

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      ஜாதி சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்? வந்தே விட்டது. கிடக்கட்டும். கருத்துக்கு வருவோம். உணவுப்பழக்கத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருப்பதால், அது குணங்களையும் உருவாக்கும். அக்குணங்களிலிருந்து பண்பாடு – அதாவது வாழம் வகையும் அதற்கேற்ப அமையும். Sound mind in a sound body என்று விளையாட்டாக வெள்ளைக்காரன் சொல்லவில்லை. மனத்துக்கும் உணவுக்கும் தொடர்புண்டு.

      ஹெடனிசம் என்றேன். பாண்டியன் டிக்ஸனரியைப்பார்த்துக்கொள்ளவும். உணவுப்பழக்கம், பிற இன்பங்க்ள் இவை சிற்றின்பங்களே. பேரின்பம் என்பது இறைவனைநினைத்து ஆராதித்தல். பேரின்பத்துக்கு உணவுப்பழக்கம் சரியாக இருக்கவேண்டும் என இந்துமதம் சொல்லும். சில உணவுப்பழக்கங்கள் சிலகுணங்களை உருவாக்கும். அக்குணங்கள் சில ஆன்மிக வாழ்க்கைக்கு இடையூரு என்பதே என் கருத்து. ஏன் ரமலான் மாத்தில் விரதம்? ஏகாதசி விரதம்? சபரி மலைக்கு மாலை போட்டால் நான் வெஜிட்டேரியன் சாப்பிடக்கூடாது? ஏன் கோயிலுக்குள் நான் வெஜிட்டேரியன் சாப்பிட்டுவிட்டுப்போகக்கூடாது? பாண்டியன் சிரித்துமுடித்தபின் இக்கேள்விகளை சிந்திக்கலாம்.

      சித்தர்கள் எனவேதான் உணவுப்பழக்கத்திற்கு கவனம் கொடுத்தார்கள். உணவே மருந்து. மருந்தே உணவு என்று சொல்லும் நிலைக்கு வந்தார்கள்.

      மூளையைப்பயன்படுத்தி சாதனை செய்வோர் சைவராக இருக்கவேண்டுமெனப்தில்லை. ஆனால் அம்மூளை மெய்ஞானததைத் தேட வேண்டுமானால், புலனடக்கம் வேண்டும். அவற்றில் ஒன்றே நா. என் கணிப்பின்படி, சைவ உணவையும் வகையாகச் செய்து உண்டு, ஹெடனிஸ்டாக மாறலாம். அசைவத்திலும் அப்படியே. பிராமணர்கள் அன்று மெய்ஞானத்தைத்தேடுபவர்களாக இருந்தார்கள்.

      ஒரு ஜாதிமக்களின் உணவுப்பழக்கமும் அவர்தம் வாழமிடம் அவரின் பொது சமூக நிலையையும் காட்டும். Attitude and expectations differ from caste to caste. One reason for this is dietary style also.

      தமிழ்ப்பிராமணர்கள் அக்ரஹாரங்களைக்கட்டிக்கொண்டு பிறமக்களிடமிருந்து விலகி வாழ்ந்தார்கள். இசுலாமியர் இன்று அதைச்செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், these people want to preserve, rightly or wrongly, for better or worse, their attitude and expectations, which are shaped by their religious roots.

      கட்டுரையாளர் உணவுப்பழக்கத்தை பண்பாட்டுடன் இணைத்து அதிலெழும் சிக்கல்களைப்பற்றித்தானே பேசுகிறார். கவனித்தேளா?

  12. Avatar
    paandiyan says:

    /சக்தி எனபது கால்பந்து விளையாட, பளுதூக்கும்போட்டியில் தங்கப்பதக்கம் வாங்க, வாலிபால் விளையாட என்றால் அசைவ உணவு (தப்பு. அசைவ உண-வும்) உட்கொள்ள வேண்டும்.
    //

    APPROAM. NEENGA phd YA? DOCTOR AA? ILLAI COMEDIAN AA?

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      திண்ணையில் கருத்துக்களைச் சொல்ல முனைவர் பட்டமோ, காமெடி வித்தையோ தெரிந்திருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை என க்ருஸ்ணகுமாருக்கு விளக்கிச்சொல்லியிருப்பதைப் படித்து இனியாவது இப்படிப்பட்ட கேள்விகளைப்போட்டு நேரத்தையும் இடத்தையும் வீணடிக்காதீர்கள்.

      சதுரங்கம் விளையாட (செஸ்) உடலுக்கு மிகையான சக்தி தேவையில்லை. மல்யுத்தத்திற்கு, காலபந்துக்கும், கூடைப்பந்துக்கும் தேவை. இதைச் சொல்வதற்கு எந்த நூலும் ஆராய்ச்சியும் தேவையில்லை. காமன் சென்ஸ் மட்டுமே போதும்.

      இதே போல செய்யும் தொழிலுக்கும். மூடை தூக்கும் தொழிலாளிக்குத் தேவை அதிக கலோர்கள். வங்கியில் வேலை பார்ப்பவருக்கும் 1600 போதும். இதைச்சொல்வதற்கு கொஞ்சம் விஞ்ஞான அறிவு தேவைதான். ஆனால் இதைப்பற்றி விஞ்ஞானிகள் நிறைய சொல்லி பொதுஅறிவாக்கி விட்டதால், எனக்கும் தெரிஞ்சு போச்சு.

      ஆண்-பெண் இவருக்கும் வெவ்வேறுதான். அவனுக்கு வேண்டிய கலோரியைவிட அவளுக்கு கொஞ்சம் கம்மியாத்தான் வேணுமென்பது செக்ஸிஸ்ட் ரெமார்க்க் இல்லை; விஞ்ஞானம் சொல்வது.

      சாகரடீஸு சொன்னார்: நான் ஏற்கவில்லை: We should eat to live, not live to eat.

      PS: The root cause of this remark is his wife did not treat him well. Often he went hungry. So, he saved his face with this remark.

      1. Avatar
        paandiyan says:

        did I answer you ? let them respond whoever owner of the comments/post? are you the mediator for them? everyone has their own style. please stop responding others post if that is not applicable you…

        1. Avatar
          I I M Ganapati Raman says:

          You don’t know the basics of a forum of debate and discussions, I’m sorry to see. It is not one-to-one conversation.although two can exchange their respective views and rebuttals. Anyone can intervene anywhere to clarify point here and explicate a point there. So, if you make a point in responding to some one, and I find it preposterous and is misleading the readers, I should come out and put up my views forcefully to alert one and all. Always keep in mind that it is a free for all here democratic forum, but of course within the bounds of public etiquette, couldn’t you?

          1. Avatar
            paandiyan says:

            I agree but after original post/response from them, you can add your comments. I am expecting comments from them based on my view/question. you can wait and after that add your comments. you should NOT take all ownership

  13. Avatar
    suvanappiriyan says:

    ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

    குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன.

    அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள்.

    உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும்.

    மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.

    மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  14. Avatar
    Rama says:

    “சைவ உணவில் போதுமான உடற் சத்துக்கள் எல்லாம் இருப்பினும் புலாலில் உள்ள உயர்ந்த ரகப் புரதம் ஒன்று இல்லாதது, உடல் உறுதிக்கு ஒரு பெருங்குறையே.
    ஒரு பிள்ளை பெற்ற பிறகு நலிந்துபோகும் நமது மதிப்புக்கு உரிய பிராமண குலத் தாய்மார்கள் பலரைப் பாருங்கள்”
    Most absurd statement from Mr JB without any evidence.My mother, grand mother ( Brahmins) all lived well into their nineties after rearing many children. Being a Doctor of medicine,I can elaborate the benefits of vegetarian diet against the ill effects of meat diet.It has been found that cancer of bowel is more prevalent among non vegetarian people. Diverticulosis is rare in vegetarians but very common in meat eating Whites here in Australia.Coronary artery disease? Same thing applies, less in vegetarians. Meat is a carcinogen.Plus the cruelty inflicted on the voiceless makes meat eating simply a barbaric act. Humans have to evolve to better beings
    as time passes. That is what culture is all about. And please, don’t come out with this garbage of ” Humane killing of animals”. There is nothing called Humane killing.

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      No it doesn’t appear to be an absurd statement, rather misunderstood statement. My mother lived up to 87 and would have lived longer if she wanted to. She said it was time she went. Hence, reduced her food intake. At the same time, I cannot say, she led a life as healthy as another woman whose diet was carefully monitored and balanced. Similarly, the brahmin women – not of yore as pointed out by the Tamil writer here – but of our age. It was possible for them to live longer with some nutrients missing from regular diet. The brahmin women you saw had a long life, lived so, without such nutrients as lacking in vegan food. With the missing nutrients, we can’t say they had had balanced diet. The bottom line is: longevity is not absolutely certain with balanced diet. A brahmin boy or girl is fed on dairy products right from infancy whereas a slum kid is deprived of the same. But the slum kid grows into an adult strong and lives longer. Because along the way it makes good its loss in other ways. So also, the elderly brahmin women. They must have made good the loss Jeyabarathan points out.

      Have you seen fisherfolk of TN going to sea? If not, try. They carry a huge thookku containing their food. One will assume it contains more than one variety. Not at all, only cooked rice with a bit salmon dry fish. As a doctor, you may know dry fish has no nutrients. So, only rice is left: pure carbos. On carbos only, our fishers live on – to ripe old age.

      As a doctor, it is surprising to note that you haven’t taken fish eating into your calculations. As pointed out by SP, fish eating makes people healthier and safer. The vegans are poorer by not eating it. The brahmns of South Canara and Bengal ought to be marvelled at for eating fish regularly. It is also surprising that you don’t associate geographical factors with food habits. In cold climates, the food that makes your body warmth should be adopted by you. If you insist on your brahminical veganism, you will die soon of pneumonia as Ramanujan died in London in quite a young age !

      Whether vegan or non vegan, whether small or big your meal, eat happily and you will live long. W/o guilt too. The food that you eat should be earned out of your own sweat (children and dependence excluded)

  15. Avatar
    Rama says:

    Read the full article from ” Physicians committee for responsible medicine”
    Meat Consumption and Cancer Risk
    The World Health Organization has determined that dietary factors account for at least 30 percent of all cancers in Western countries and up to 20 percent in developing countries. When cancer researchers started to search for links between diet and cancer, one of the most noticeable findings was that people who avoided meat were much less likely to develop the disease. Large studies in England and Germany showed that vegetarians were about 40 percent less likely to develop cancer compared to meat eaters.1-3 In the United States, researchers studied Seventh-day Adventists, a religious group that is remarkable because, although nearly all members avoid tobacco and alcohol and follow generally healthful lifestyles, about half of the Adventist population is vegetarian, while the other half consumes modest amounts of meat. This fact allowed scientists to separate the effects of eating meat from other factors. Overall, these studies showed significant reductions in cancer risk among those who avoided meat.4 In contrast, Harvard studies showed that daily meat eaters have approximately three times the colon cancer risk, compared to those who rarely eat meat.

  16. Avatar
    paandiyan says:

    டெல்லி: கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      கோழியை வீட்டில் வளர்த்து பின்னர் இறைச்சியாக்கி உண்டால் ஒரு பிரச்சினையுமில்லை. கறிக்கொழிகளை கடையில் வாங்கும்போதுதான் பிரச்சினையென்று இவர் காட்டும் ரெபோர்ட் சொல்கிறது. ஆன்டி பயாட்டிக்ஸ் கொடுத்து கோழிகளைச் சீக்கிரம் பெரிதாக்குகிறார்கள். ஆன்டி பயட்டிக்ஸ் க்ரோத் புரோமட்டர்ஸ் களாக பயனபடுத்தப்படுகின்றன. நாம் அன்றாட உண்ணும் பலவற்றிலும் இப்படி விசமான பொருடகள் காணப்படுகின்றன. பழங்கள், காயகறிகளும் இவ்வாறு விஷப்படுத்தப்படுகின்றன அதை விளைவிப்போராலேயே. ஐரோப்பிய நாடுகளில் ஆன்டி பயட்டிக்ஸ் பயன்படுத்த தடையிருக்கிறது. நம்நாட்டிலும் வேண்டுமென ஹிந்துஸ்தான் டைம்ஸ் சொல்கிறது இன்று.

      கோழி இறைச்சியைப்பற்றிய ஆராய்ச்சி ரிபோர்ட் ஒன்றே ஒன்றுதான் அப்படியிருக்கலாமெனச்சொல்கிறதாம். பழங்கள், காய்கறிக்ள் கெடவைக்கப்பட்டன என பல ஆராய்ச்சி ரெப்போர்ட்டுகள் வந்துவிட்டனவாம்.

      முழு எடிட்டோரியலையும் இங்கு போடுகிறேன்: உன்னிப்பாக படியுங்கள்.

      That India’s food chain is heavily contaminated is well known. Even then the latest study by the Centre for Science and Environment, a public interest research and advocacy organisation based in New Delhi, on the growing antibiotic resistance in humans, thanks to indiscriminate use of antibiotics in poultry industry is frightening. The report, which was released on Wednesday, claims that Indians are developing resistance to antibiotics and so falling prey to a host of otherwise curable ailments. And some of this resistance, the study adds, might be due to large-scale unregulated use of antibiotics in the poultry industry. The study done by the organisation’s pollution-monitoring lab tested 70 chicken samples from the Delhi-National Capital Region for six commonly used antibiotics: 40% samples were found positive and residues of more than one antibiotic found in 17% samples. Such large-scale contamination can only mean that the poultry industry uses these antibiotics as growth promoters. India has not set any limits for antibiotic residues in chicken.

      This indiscriminate use of antibiotics, leading to resistance, has happened because the country has no regulation on controlling antibiotic use in the poultry industry, or to control sales of antibiotics to the industry. That the situation is extremely serious can be gauged by the fact that even people who stay in rural areas, who don’t use antibiotics regularly, are found to be antibiotic -resistant. This is happening because our everyday food is also becoming contaminated by antibiotics. Add to these, there have been several reports that traces of toxic metals have been found in fruit and vegetables. In fact, the Delhi government is planning a ban on farming with contaminated water from the Yamuna. Additives and compounds are also routinely added. Food additives, scientists say, are capable of altering hormones.

      Even though public health experts have long suspected that such rampant use of antibiotics in animals could be a reason for increasing antibiotic resistance among humans in India, the government has no data on the use of antibiotics in the country, let alone on antibiotic resistance. Worldwide, governments are adopting regulations to control the use of antibiotics: The European Union, for instance, has banned the use of antibiotics as growth promoters. Since much of the food trade in India is in the unorganised sector, the first step to reverse the present bull run of antibiotics will be to set up a mechanism to gather data on the depth of the problem and also a system to check the rampant use of antibiotics. But the most comprehensive step forward would be to do what the EU has done: Ban the use of antibiotics as growth promoters.- Hindustan Times editorial dt 01.8.2014

  17. Avatar
    ஷாலி says:

    இந்து,இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் அசைவத்திற்கு தடை விதிக்கவில்லை.இது அனைவருக்கும் தெரியும்.இந்த மூன்று முப்பெரும் மதங்களும் கடவுள் உண்டு,இக்கடவுளே மனிதனைப் படைத்தான் என்று சொல்கின்றன.பவுத்த,ஜைன மதங்கள் கடவுள் கொள்கையை மறுக்கின்றன.புத்தரும்,மகாவீரரும் நம்மைப் போன்ற மனிதர்களே! அவர்கள் சிந்தனையில் உதித்த ஜீவகாருண்ணியத்தை மக்களிடம் போதிக்கிறார்கள்.

    நம்மைப் படைத்த இறைவனின் வேத வழி காட்டுதல்களை கடைபிடிப்பது அறிவுள்ள செயலா? அல்லது நம்மைப் போன்ற மனிதனின் அறிவுரையை எடுத்து செயல்படுவது அறிவுள்ள செயலா?படைத்த இறைவனுக்குத்தான் மனிதனுக்கு தேவையான உணவை பரிந்துரைக்க தகுதி உண்டு.ஏனெனில் மனித உடலமைப்பை அசைவ உணவிற்கும் தகுந்தார்ப்போல்தான் படைத்துள்ளான்.

    இதை பற்றி ஆராய்வதற்கு முன் மனித மற்றும் மிருக உடல் அமைப்புகளை பற்றி பார்ப்போம் .
    ஆடு மாடு போன்ற தாவர் உண்னிகள் தாவர உணவுகளை உண்பதற்கு ஏற்ற தட்டையான பல் வரிசை அமைப்பை உடையது.
    அதே போல் சிங்கம் புலி போன்ற விலங்குகள் அசைவ உணவுகளை உண்பதற்கு ஏற்றவாறு கூரிய கோரைப் பற்களை உடையது .
    மனிதன் சைவ உணவு உண்ணத் தக்க தட்டைப் பற்களையும் அசைவ உணவு உண்ணத்தக்க கோரை பற்களையும் பெற்றுள்ளான் .

    ஆடு மாடுகளுக்கு அசைவ உணவை ஜீரணிக்க கூடிய குடல் அமைப்பு இல்லை .ஒரு ஆட்டிற்கு வலுக்கட்டாயமாக அசைவஉணவை வாயில் திணித்து சாப்பிட வைத்தால் அது இறந்துவிட்டால் கூட ஆச்சரியமில்லை.மாடுகளை கொழுக்க வைக்க மாட்டின் மாமிச கழிவுகளை காயவைத்து அறைத்து பவுடராக நீருடன் கலந்து கொடுத்ததன் காரணமாக இங்கிலாந்தில் “Mad Cow” வியாதி ஏற்பட்டு அநேகர் பாதிக்கப்பட்ட செய்தி நாம் அறிந்ததுதான்.

    அதே போல் புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்பார்கள் ஆமாம் தின்றால் அதற்க்கு ஜீரணம் ஆகாது . ஆனால் மனிதன் இயற்கையாகவே தாவரம் ,மாமிசம்
    ஆகிய இரண்டையும் மென்று தின்னக்கூடிய பல் அமைப்பையும் ஜீரணிக்கக் கூடிய குடல் அமைப்பையும் பெற்றுள்ளான்.

    மனிதன் மாமிசத்தை பச்சையாக உண்பது இல்லை ஆகவே மனிதன் தாவர உண்ணி தான் என்று சிலர் கூறுகிறார்கள். நாம்கேட்கிறோம் உங்களால் அரிசி,கோதுமை,பருப்பு,உருளை கிழங்கு ,கருணை போன்ற
    உணவுகளை பச்சையாக உண்ண முடியுமா??
    ஆக அது போல்தான் எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் மனிதன் மாமிசத்தை சமைத்து சாப்பிடுகிறான் இதற்கு தான் ஆறாம் அறிவு.

    உணவுக்காக அறுக்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் அறுக்கப்பட்டாலும் அருகி அழியாத தன்மையுடையதாக இறைவனால் படைக்கப்பட்டுள்ளன. உண்ணப்படாத உயிர்களான சிங்கம், புலி, யானை, கரடி, காண்டா மிருகம் போன்ற உயிர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டால் அப்படியே அருகி அழிந்துவிடும். இவ்வாறு வேட்டையாடப்படும் உயிர்கள் அழிந்து வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வேட்டைகளைத் தடுக்கக்கூடிய சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ளன.

    இதிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் மனிதனுக்கு உணவாக அமையத்தக்க விதத்தில் தான் இந்த உயிரினங்களைப் படைத்துள்ளான் என்ற உண்மையைப் புரியலாம்.
    இதற்கு மாற்றமாக இந்த உயிரினங்கள் அறுக்கப்படாவிட்டால் அவை அபரிமிதமாகப் பெருகி மனிதனுக்கு இழப்புக்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி உணவின்றியும், நோயின் காரணமாகவும் தானாகவே அழிய ஆரம்பித்துவிடும்.

    உணவுப்பழக்கம் எவருக்கும் கட்டாயமல்ல.மாமிச உணவில் நன்மை இருப்பதால்தான் இறைவன் மனிதனுக்கு உண்ண ஆகுமாக்கி வைத்துள்ளான். இறை வேதக் கட்டளைகளை ஏற்றுக்கொள்வதா அல்லது புத்தர்,மகாவீர்,மனித நாஸ்திக சிந்தனைகளை ஏற்றுக்கொள்வதா என்பதை அறிவுள்ளவர்கள் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.

  18. Avatar
    smitha says:

    உதாரணம் எந்த தாவர உணவிலும் வைட்டமின் ஏ கிடையாது. அதனால் பெருமளவில் இந்தியாவில் மாலைக்கண் நோய் வருகிறது. (காரட், கீரையில் இருப்பது வைட்டமின் ஏ அல்ல. பீடா காரடின். அதை தவறாக வைட்டமின் ஏ என லேபிள் செய்கிறார்கள்)

    Selvan,

    I differ here. Sweet potato, apricot, red peppers etc. contain vitamin A (I am leaving out leafy vegetables & carrot here even though I disagree with U that they are not Vit A).

    சைவர்களுக்கு வரும் இன்னொரு வியாதி இரும்புசத்து குறைபாடால் வரும் அனீமியா

    U must be joking. Sprouts, soya beans, pumpkin seeds, black beans, brown rice, potatoes etc, etc.,

    On the other hand, none of you can say that non veg has fibre content.

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      Doctor,

      Please leave out sweet potato and cassava from your list. These bloody roots cause diabetes. They may contain anything; but don’t go near them.

  19. Avatar
    smitha says:

    Talking of the debate of strength & stamina, it is amusing.

    Michael Jackson used to sing & dance non stop for 4 hours, he was a vegetarian.

    Suvanapriyan,

    U hvae highlighted only 1 aspect of fish eating & generalised.

    I can show results of many studies which prove that vegetarian diet makes a man live slonger & healthier.

    I simple sample – Do U know that many youngsters in Great Britain have piles complaints ? Reason – They eat red meat.

    Martina navratilova, edwin moses, carl lewis – al vegetarians.

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      When we say vegetarian or non vegetarian, we don’t include all food items under the respective category; and, also all kinds of cooking style. If cooked with heavy doses of salt and oil, and deep fried, or, in the case of veg., over cleaned, over peeled etc., or preferring red meat, we are sinking into our graves. No boast then that vegan food is good. Avoid certain foods under both categories and cook intelligently. Both can help you

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ திண்ணை மூன்றாம்தர அரசியல்வாதிகளின் தெரு மூலை மேடையன்று. \

    ஆமாம். உங்களைப் போன்று அறிவு பூர்வமான வாதம் செய்யத்தெரியாது காபி பேஸ்ட் வாதங்களை முன்வைக்க பற்பல பெயர்களில் ஒளிந்து கொண்டு வீர தீர சூர ப்ரதாபம் பொங்க கருத்துப்பகிரும் செயல்பாடுடையவர்களின் அரங்கமோ அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ? ஒரு பெயரில் எழுத பயந்து பல பெயரில் ஒளிந்து கொண்டு தளம் தளமாக தினம் ஒரு பெயரில் கருத்துப்பதிந்து திரியும் வீரர்கள்…………. தரத்தைப் பற்றியெல்லாம்………….. கருத்துதிர்க்கும் அவலத்தை என் சொல்வது? நல்ல காமெடி.

    பல பெயர்களில் ஒளிந்து கொண்டு கருத்து எழுதுபவர்களுக்கு intellectual honesty பற்றி என்னதான் விலாவாரியாகக் கருத்து சொன்னாலும் பிரியாது. டயம் வேஸ்ட்.

    ம்……….. லேடஸ்ட்டா புது ரிலீஸ் போலிருக்கிறதே. புதிய அவதாரத்திற்கு வாழ்த்துக்கள்

    \ சிறியோர் சிந்திய கடலையாயினும் பொருக்குவது கடனே என்பது நம் பழந்தமிழர் நமக்குச் சொல்லிச் சென்றது. \ அதன்படி நான் சொன்னதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். \

    ம்……………….தமிழ் மீது உங்களுக்கு க்ரோதம் என்று தெரிகிறது. இது வரை எத்தனை தபா இந்த டயலாக்கை எழுதியிருக்கிறீர்கள். எத்தனையெத்தனை அவதாரத்தில். ஒரு தபாவாவது சரியாக எழுதியிருக்கிறீர்கள்? வெ.சா மஹாசயரையே பொறுக்கச் சொல்லிய உங்களுக்கு நானெல்லாம் எம்மாத்திரம்.

    விக்ஞானி ஜெயபாரதன் எமது ஆப்தர். கருத்தொற்றுமை கொள்ளுவோம். வேற்றுமை கொள்வோம்.

    நீங்களும் குறச்சல் இல்லை. ஆனால் அவதாரம் அவதாரமாக முகமூடி கிழித்து மண்டகப்படி கொடுப்பது அலுப்பாக இருக்கிறது.

    டயம் வேஸ்ட் செய்ய மிடில. bye my dear friend joe amalan rayon fernando.

  21. Avatar
    jyothirllata girija says:

    அந்தக் காலத்துப் பிராமணப் பெண்கள்தான் ஏழெட்டுக் குழந்தைகள் பெற்ற பின்னும் பலசாலிகளாய்த் திகழ்ந்தார்கள். இந்தக் காலத்தில் முதல் குழந்தையே பெரும்பாலும் அறுவையில் (சிசேரியன்)தான் பிறக்கிறது. அதற்குக் காரணம் அவர்களின் உடலுழைப்புக் குறைந்து போய்விட்டதுதானே யன்றி, அவர்கள் அசைவக் சாப்பிடாதது அன்று என்று நாம் நினைக்கிறோம். குனிந்து நிமர்ந்து வேலை செய்வது, தரையில் உட்காருவது போன்றவை கிட்டத்தட்ட இல்லாது போய்விட்டன.
    கீழ்த்திசை நாடுகளில் உள்ளவர்க்கு இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மிகவும் அரிதாகவே வருவதற்குக்காரணம் அவர்கள் நாற்காலிகளைத் தவிர்த்துத் தரையில் உட்காருவது என்று ஓர் ஆங்கில இதழில் பல நாள் முன் ஒரு கட்டுரை வந்திருந்தது.
    இதனை தகவலுக்காக மட்டுமே எழுதுகிறோம்.
    ஜோதிர்லதா கிரிஜா

  22. Avatar
    செல்வன் says:

    ஸ்மிதா அவர்களே…மிருக உணவு தவிர்த்த எந்த சைவ உணவிலும் ரெடினால் கிடையாது.

    ரெடினால் கிடைப்பது ஈரல், கண், முட்டை மாதிரி அசைவ உணவுகள் மூலம் மட்டுமே.

    காரட்டில் வைட்டமின் ஏ இருப்பதாக சொன்னது?

    காரட்டில் இருப்பது வைட்டமின் ஏ அல்ல..அதில் இருப்பது பீடா காரடின். பீடா காரடினை உடலால் வைட்டமின் ஏவாக மாற்றமுடியும். ஆனால் இது நிழக

    1) பீடா காரடினுடன் உறைகொழுப்பை உண்ணவேண்டும். காரணம் பீடா காரடின் கொழுப்பில் கரையும் வைட்டமின்.

    சரி காரட்டையும், தேங்காயையும் ஒன்றாக சாப்பிடுகிறேன். வைட்டமின் ஏ கிடைக்குமா என கேட்கிறீர்களா?

    அது அத்தனை எளிது அல்ல…

    டயபடிஸ் இருப்பவர்கள்

    தய்ராய்டு குறைபாடு உள்ளவர்கள்

    குழந்தைகள் குறீப்பாக மிகவும் சிறிய குழந்தைகள்

    ஸிங்க் (zinc) குறைபாடு உள்ளவர்கள்

    ஏராளமாக வெஜிட்டபிள் ஆயில் உண்பவர்கள்

    கடும் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள்

    இவர்கள் உடலால் காரடினை வைட்டமின் ஏவாக மாற்ற முடியாது….

    இவர்கள் தினம் கிலோகணக்கில் காரட் சாப்பிட்டாலும் வைட்டமின் ஏ குறைபாடால் கண்பார்வை குன்றும். கண்னாடி அணியும் சூழல் வரும். மருத்துவரால் ஏன், என்ன என்பதை கூட கண்டுபிடிக்க முடியாது.

    இது ஏதோ நடக்காத விஷயம் அல்ல..இந்தோனேசியாவில் பல குழந்தைகள் 1953ல் ஸெரொப்தால்மியா, கெரொடமால்சியா எனும் இருவகை கண்பார்வை குறைபாடால் பாதிப்படைந்தனர். பீடா காரடின் உண்டும் இது குணமாகவில்லை. செயற்கையாக ரெடினால் கொடுக்கபட்டு தான் இவர்கள் குணமடைந்தனர்.

    வயதுக்கு வருவது தாமதமான சிறுவர்களுக்கு வைடமின் ஏ அருமருந்து. ஆய்வு ஒன்றில் வயதுக்கு வராத சிறுவர்களுக்கு டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் கொடுக்கபட்டது. அவர்கள் உடனடியாக வயதுக்கு வந்தார்கள். அதே மாதிரி சிறுவர்களுக்கு வைட்டமின் ஏ கொடுக்கபட்டதில் அவர்களும் உடனடியாக வயதுக்கு வந்தார்கள். ஆக ஆண்மைகுறைவுக்கு காரணமும் வைட்டமின் ஏ தட்டுபாடே.

    வைட்டமின் ஏ குறைபாடால் குழந்தைகள் மரணம், உடல் உறுப்புகள் அகோரமடைதல், கண்பார்வை கோளாறு, உயரம் குன்றுதல் என பல வியாதிகள் வரும். ஆப்பிரிக்காவில் இத்தகைய வியாதிகளால் பாதிக்காப்ட்ட குழந்தைகளுக்கு மருந்தாக செயற்கையான சிந்தடிக் வைட்டமின் ஏவை சீரியலில் கலந்து கொடுத்து பணம் சம்பாதிக்க பல சீரியல் கம்பனிகள் முன்வந்தன. மேலை நாட்டு அரசுகள் அளித்த நிதி உதவி இப்படி சீரியல் கம்பனிகளை சென்றடைந்தது. சீரியலில் வைட்டமின் ஏவை கலந்து கொடுத்தால் பசியை தீர்த்த மாதிரியும் ஆச்சு, வைட்டமின் ஏவை கொடுத்த கணக்கும் ஆச்சு, சீரியலை விற்ற மாதிரியும் ஆச்சு..ஆனால் இத்தகைய சிந்தடிக் வைட்டமின் ஏ ஒருகாலத்திலும் ரெடினாலுக்கு ஈடு இனை ஆகாது. இவற்றை உடல் இயற்கையான வைட்டமின் ஏவை பயன்படுத்தும் அளவுகளில் பயன்படுத்துவதும் கிடையாது. இவை பெரும்பாலும் வீண்தான் ஆகின்றன.

    ஆக முட்டை, ஈரல், மீன்,பால், வெண்ணெய் மாதிரி கெடுதலானவை என ஒதுக்கி வைக்கபட்ட உணவுகள் நம் உடலுக்கு எத்தனை அவசியமானவை என்பதை தெரிந்து கொள்ளலாம். இத்தனை குழந்தைகள் இளவயதில் கண்னாடி அணிவதும், கண்பார்வை கோளாறில் அவதியுறுவதும் ஏன்? காரட் சாப்பிடாததாலா? சீரியலில் வைட்டமின் ஏவை கலந்தும் ஏன் அவர்களுக்கு அது பலன் அளிப்பதில்லை?

    மருத்துவர் வெஸ்டன் ஏ ப்ரைஸ் ஒரு சம்பவத்தை ஆவணபடுத்துகிறார்..ஒரு ஆராய்ச்சியாளர் ராக்கிமலை பகுதியில் சில காலம் தங்கி ஆராய்ச்சிமேற்கொன்டார். அப்போது அவருக்கு கண்பார்வை மங்கலாகிகொண்டே வந்து கடைசியில் பார்வையே இல்லாமல் போய்விட்டது. அப்போது மலையில் இருந்த பூர்வகுடி இந்தியர் ஒருவர் அவருக்கு தினமும் டிரவுட் மீனை பிடித்து வந்து அதன் கண்ணை மட்டும் உண்ண கொடுத்தார். சில நாட்களில் இழந்த கண்பார்வை அவருக்கு மீன்டும் கிடைத்துவிட்டது.

    அதன்பின்னரே அவருக்கு வந்த வியாதியின் பெயர் ஸெரொப்தால்மியா என்பதையும் அது வைட்டமின் ஏ குறைவால் வரும் கண்பார்வை கோளாறு என்பதையும் மருத்துவர்கள் அறிந்தார்கள். ஆனால் இது எதுவும் அறியாத ஆதிகுடி மனிதர் இதற்கான தீர்வை அறிந்து இருந்தார்.

  23. Avatar
    செல்வன் says:

    வைட்டமின் ஏ என நாம் அழைக்கும் வைடமினின் உண்மையான வடிவம் ரெடினால். ரெடினா என்பது கண்னாமுழி. அது முழுக்க ரெடினாலால் அதாவது வைட்டமின் ஏவால் ஆனது

    கீரை, காரட் உள்ளிட்ட எந்த தவர உணவிலும் ரெடினால் கிடையாது. பீடா காரடின் உண்டு. பீடா காரடினை சில நிபந்தனைகளுக்குட்பட்டு உடலால் ரெடினால் ஆக மாற்ற முடியும். ஆனால் அது நிகழ நீங்கள் குழந்தையாக இருக்க கூடாது, கடும் உடல் உழைப்பில் ஈடுபட கூடாது, உங்களுக்கு டயபடிஸ், தய்ராய்டு சுரப்பிகளில் பிரச்சனை இருக்க கூடாது!!!

    ஆக சைவ உணவு உண்ணும் குழந்தைகள் பலரும் காரட் சாப்பிட்டாலும் கண்னாடி அணிந்திருப்பதும், கண்பார்வை குறைபாடு உள்ளவர்களாக இருப்பதையும் அறீயலாம். அசைவம் உண்ணும் குழந்தைகளும் ஈரல், கண் மாதிரி உள்ளுறுப்புகளை உண்ணாமல் வெறும் தசைபகுதி மாமிசத்தை உண்டால் அவர்களுக்கும் வைட்டமின் ஏ தட்டுபாடு வரும்.

    சைவ உணவின் ஆபத்தில் வைட்டமின் ஏ குறைபாடும் ஒன்று

  24. Avatar
    செல்வன் says:

    ஸ்மிதா அவர்களே..மைக்கேல் ஜாக்சன் கடும் உடல்நல கோளாறால் அவதிபட்டு வந்தார்., போதைமருந்து, ஸ்டிராய்ட்ஸ் ஊசி போட்டுகொண்டுதான் மேடையில் அவரால் ஆடவே முடியும். அப்பழக்கமே அவரை இறுதியில் பலிவாங்கியும் விட்டது.

    மேலைநாடுகளில் நடக்கும் ஆய்வுகளில் வீகன் எனப்படும் நனி சைவர்கள் அசைவர்களை விட அதிக உடல்நலனுடன் இருப்பதை ஆய்வுகள் காட்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் அங்கே அசைவம் என்பது 99% பொதுமக்களை குறிக்கும். சைவம் என்பது அங்கே 1% மட்டுமே. சைவர்கள் முட்டை கலந்திருக்கும் என்ற அச்சத்தில் கேக், பன், பிஸ்கட், பர்கர் முதலிய பல குப்பை உணவுகளை உண்பது கிடையாது. நம் ஊரில் பஜ்ஜி,போண்டா, சோன் பப்பிடியை சைவர்கள், அசைவர்கள் எல்லாரும் வெளுத்து கட்டுவார்கள். நனிசைவர்கள் பாலையும் புறக்கணிப்பதால் அவர்கள் பெரும்பாலும் அனைத்து குப்பை உணவுகலையும் புறக்கணிப்பார்கள். அதனால் அவர்கள் பல வியாதிகளில் இருந்து விடுபடுகிறார்கள்.

    ஏரியில் பிடித்த மீன், ப்ரீ ரேஞ் ஆடு, ப்ரி ரேன்ட்ஜ் முட்டை, காய்கறி, பழங்கள் என உண்ணும் ஆதிகுடிகள் எந்த வியாதிகளும் இன்றி மிக நலமுடன் இருக்கிறார்கள். பண்ணைகோழி, பண்ணைமீன், பண்ணைகோழி முட்டை இவற்றை உண்ணூம் அசைவர்கள், பூச்சிகொல்லி மருந்து அடித்த காய்கறி, பழம் உண்ணும் சைவர்கள் எல்லாம் வியாதிகளில் விழுவார்கள். பிரச்சனை மாமிசத்தில் இல்லை. அது எப்படி பெறபடுகிறது என்பதில் மட்டுமே உள்ளது.

  25. Avatar
    paandiyan says:

    பிட்னெஸ் ரகசியம் — மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த பொருட்கள்கூட இல்லாத ப்யூர் சைவம்’ நான். யோகா, தியானம் சேர்த்துக்கிட்டா, கண்டிப்பா உடம்பு உங்க சொல் பேச்சு கேட்கும் என்கிறார் அமலா.

    Read more at: tamil.oneindia.in/movies/television/amala-s-tv-debut-on-august-18-207457.html#slide792842

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      Same size does not fit all. என்ற பழமொழியைத் தெரிந்திருக்கும். இது மருத்துவர்களாலும் ஏற்கப்படுகிறது. ஆயுர்வேதம் மனிதர்களின் உடற்கூற்றுக்குணங்களைப்பிரித்தே மருந்துகளைக்காட்டுகிறது. அது போல, உங்களுக்கும் இன்னொருவருக்கும் டயாபீடிஸ். மருத்துவர் உங்களுக்குத் தரும் அதே மருந்தை அவருக்கும் சிபாரிசு செய்ய மாட்டார். ப்யூர் வெஜிட்டாரியனக்ளைக்கூட சில மருத்துவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கள் என சிபாரிசு செய்வதுண்டு. சாதாரண வெஜிட்டேரியனை வாரந்தோரும் இருதடவையாவது மீன் சேர்த்துக்க்கொள்ளுங்கள் என்பர். ஸ்டிரிக் வெஜிட்டேரியன் என்றாலும் அவருக்கு வேறு ஏதாவது சிபாரிசு பண்ண் முடியுமா என்றுதான் பார்ப்பார். நான் வெஜிட்டேரியன் என்றால் கேட்கவே வேண்டாம்: கண்டிப்பாகச் சொல்லிவிடுவார். இன்றிலிருந்து நான் வெஜிட்டேரியனை நிறுத்திவிடுங்கள். அவர்களும் நிறுத்தி விடுவர். உ.ம் கருநாநிதி. 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாகச் சொன்ன ஞாபகம்.

      இதிலிருந்து என்ன தெரிகிறது. ஆளாளுக்கு உணவும் மாறத்தான் செய்கிறது. எல்லாரும் சைவராகத்தான் அல்லது அசைவராகத்தான் இருக்கவேண்டுமெனபது அறிவார் செயலன்று. அந்த நடிகை சைவம்; இந்த கிரிக்கெட்டர் சைவம் என்பது அறியாமையின் அடிப்படையில் அமைந்த கொள்கையை நிர்ப்பந்தப்படுத்தச் சொல்வது.

      அமலா நடிகை. அவருக்கு ஏற்ற உணவை அவர் விரும்புகிறார். ஏன் மற்றவர்களும்?

  26. Avatar
    I I M Ganapati Raman says:

    //you should NOT take all ownership// Pandian says.

    That you may leave to admn. It is none of your business. They will use their discretion to allow how much and from whom. If they think a person unnecessarily intervenes with irrelevant posts, they won”t allow his posts. You are also wrong to say that one should wait till others respond. Any intervention should be swift; if not, the purpose will not be served and damage would have been done.

    For e.g. your statement about Chicken. The report says merchants add toxic chemicals to accelerate the growth of hens and cocks and chicken, which harms the eaters by diminsihing their immunity. It means chicken (the meat of hen and cocks) itself is not to be held inedible. It is good as it gives protein and comes with less fat as compared to other non veg. You have also conveniently omitted to say that the study on chicken is only one; whereas the study on fruits and vegetables which are also contaminated by the merchants, are many.

    All food items if they are not mixed with toxic chemicals to make more market-sense, are not to be shunned. But you intends to mislead Thinnai leaders my misrepresenting the report. Can I wait for others to respond ? If I had waited, you would have prejudiced the minds of readers against chicken. That is, enough damage has been done. What use if my intervention comes thereafter? Rajapakshe linked JJ and Modi in theri website and did we wait? No. Swift was our reaction cutting across party lines. It made him aplogise, didnt it?’We moved fast in opposing Sanskrit week. Modi will think twice in pushing Hindi or Sanskrit. If our reaction is late, that will make him think we are not serious in the matter. These are examples to you.

    Therefore, you should post your message and keep calm till readers respond; who that reader should be, should not be your concern at all. You can rebut, or agree. It is also a good manner in forum writing. Hope you will cultivate it soon.

    1. Avatar
      paandiyan says:

      its too difficult to explain you. anything, everything if you argue like this, cannot do anything. better you do your ugly job as usual.

  27. Avatar
    PADMINI GOPALAN says:

    everybody who eats non-vegetarian food may not be capable of killing an animal or even seeing an animal being killed.

    1. Avatar
      I I M Ganapati Raman says:

      And the fishes don’t get killed by men. They die when they are pulled or taken out of water by fisher men.

      The vegan lobby writing here, which includes a doctor, must be aware that many medicines, including life saving drugs, are produced from carcass (dead body of animal) and cadaver (dead body of human). For e.g. insulin tabs and injections. From the pancreas of horses and whales. Whale is hunted more for its medicinal value than for its edible value. In fact, the flesh is inedible for most. Human insulin is popular now as it has proven to be more efficacious. It is extracted from the pancreas of healthy dead humans. The votaries of veganism here too, must have relations, or they themselves getting administered such drugs or injections on daily basis to survive the attach of said diseases. So, the logic of killing animals and eat their flesh is bad; and the consumption of tabs and injections made from the body parts of animals or fishes, is not bad – is indeed one sided. As for health, non vegans and vegans both can live longer if they eat their respective food intelligently, not foolishly.

  28. Avatar
    Prakash Devaraju says:

    மிகவும் ரசிக்க வைத்த பதிவுகள். எத்தனைக் கருத்துக்கள், எத்தனை அலசல்கள் ! முக்கியமாக நான் தெரிந்துகொண்டது beta carotene – vitamin A பற்றி. இது நாள் வரையில் beta carotene உண்டால் vitamin A விற்கு சமானம் என்றே எண்ணியிருந்தேன் – அப்படியே அனைத்து Animal Nutrition வகுப்புகளிலும் பயின்றிருக்கின்றேன். அப்படியல்ல – பல நிபந்தனைகள் உள்ளன என தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
    ஷாலி அவர்கள் விலங்குகளை – carnivore, herbivore and omnivore – என பிரித்துக் கூறியது சிறப்பு மிகுந்தது. உலகில் மாமிசம் உண்ணும் விலங்குகளும் மனிதர்களும் பெரும்பாலும் தாவரங்களை உண்ணும் விலங்குகளை/பறவைகளை உண்ணுவதைக் காணலாம் (மீன்கள் சற்றே வித்தியாசமானவை). இவ்வகை herbivore விலங்குகளின் body temperature மற்றும், உடலமைப்புகள் – பற்கள், குடலமைப்பு அனைத்தும் தாவர வகைகளை ஜீரணிக்க ஏற்புடையதாகயிருக்கின்றது. அதேபால் carnivore விலங்குளின் உடலமைப்புகள் மாமிசத்தை ஜீரணிக்க ஏற்புடையதாகயிருக்கின்றது. மனிதர்களின் உடலமைப்பு இடைப்பட்டதாகவுள்ளது. நமக்கு கோரைப்பற்கள் (canine teeth) உள்ளன. ஆனால் அவை மிக்கூறியனவாகயில்லை. குதிரைகளுக்கும் கோரைப்பற்கள் இருக்கின்றன. ஆனால் அவை மாமிசம் உண்பதில்லை. ஆனால் குதிரைகளுக்கு caecum எனப்படும் பெருங்குடலின் ஒரு பகுதி தாவர வகைகளை அதிகம் ஜீரணிக்க வல்லதாக பெரியதாகவுள்ளது. நமக்கு அத்தகைய caecum இல்லை. ஆடு, மாடு போன்ற இரட்டை குளம்புள்ள அசைபோடும் விலங்கினங்களுக்கு (ruminants) கோரைப்பற்கள் இல்லை. அவற்றின் வயிறானது நான்கு பாகமாக, தாவரங்களை நன்கு செரிக்க வல்லதாகவுள்ளது. புல்லைத்தின்று அவைகளால் உயிர் வாழ முடியும். நமக்கோ இயலாது. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயஙகள் சில உள்ளன: தாவர வகைகளை உண்ணும் விலங்குகளிடமிருந்து நமக்கு வியாதிகள் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு – ஏனெனில் அவற்றின் உடலமைப்பை ஒட்டி பரிணமித்த கிருமிகள் மிகவும் மாறுபட்ட உடற்கூறுகொண்ட மனிதர்களை அண்டுவது கடினம். கிருமிகளில் பல விதிவிலக்குகளும் உள்ளன. அவற்றைப்பற்றி அலசினால் இன்று முடியாது. Food chain இல் தாவரங்களை உண்ணும் விலங்குகளுக்கு அடுத்த நிலையில் நாம் இருப்பதற்து நமது உடலமைப்பு ஏதுவாகவுள்ளது. எனவே வெறும் உடலமைப்பை மட்டும் வைத்து பார்த்தோமாயின் மனிதர்கள் omnivore களாகயிருப்பது சரியென்றே படுகிறது.
    உணவுப்பழக்கங்களினால் இந்த நோய் வருகின்றது, அந்த நோய் வருகின்றது – என்றெல்லாம் பல ஆராய்ச்சி முடிவுகள் இன்று வரும். அவை தவறு என்று நாளை வேறு வரும். நேற்று saturated fat நல்லதல்ல என்றார்கள், இன்று நல்லதென்கின்றார்கள். Wine குடிப்பது நல்லதென்கின்றார்கள் – Reservetrol – antioxidants – என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் அதில் உள்ள ethanol உடலில் acetaldehyde ஆக மாறும், அது உடலுக்கு நல்லதல்ல என்று எழுத எந்த wineryயும் பணம் தராது. மாமிசம் மட்டுமல்ல எந்த ஒரு உணவுப்பழக்கத்திற்கும் அளவு என்று ஒன்று உள்ளது. எங்கேயோ ஒரு Pharmacology class இல் கேட்ட ஞாபகம் – The difference among food, drug/medicine and toxin/poison is the ‘dose’. இந்த அளவுதான் மிக முக்கியம். இந்தியர்கள் உண்ணும் மாமிச அளவிற்கும், மேற்கத்தியர்கள் உண்ணும் மாமிச அளவிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. Vegan என்ற பெயரில் சுத்தமாக பால், முட்டை எல்லாவற்றையும் தவிர்ப்பது எனக்கென்னவோ சரியாகப்படவில்லை. Vegans எல்லாம் நன்றாக வாழ்வதாக முடிவுகள் காட்டலாம். ஆனால் அதில் இன்னொரு சங்கதி ஒளிந்திருக்கிறது. எப்பொழுது ஒருவர் உணவைப்பற்றி அதிகம் சிந்தித்து Vegan ஆக மாறுகிறாரோ அப்போதே அவருக்கு nutrition அறிவும் கொஞ்சம் அதிகமாகவே தொற்றிக்கொள்கிறது. Diet இல் இல்லாத ஊட்டச்சத்துக்களை கூடிய அளவில் எப்படியேனும் பூர்த்தி செய்ய நினைப்பார். ஆனால் என்றோ ஒரு நாள் இரண்டு சிக்கன் பீஸ் சாப்பிட்டுவிட்டு அனைத்து retinol, omega 3 fatty acids, vitamin A, essential amino acids, zinc, iron எல்லாம் கிடைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டால் மாமிசம் உண்டால் மட்டும் என்ன பயன் ?
    உயிர்பலி கடினமான செயல்தான். இங்கு மாமிசம் உண்ணும் பலரும் ஒரு கிடாயை வெட்டி உண்ணும் மனப்பாங்கு அற்றவர்களாயினும், அடுத்தவர் வெட்டி, பதப்படுத்தித் தரும் மாமிசத்தை, எவ்வாறு அது வந்ததென்று அறிந்தும் அறியாத மனநிலையுடன் உண்பவர்களே. ஆனால் அதற்காக மாமிசம் உண்ணும் நாங்கள், பாவ மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஏனெனில் எங்களைப் பொருத்த வரை அது பாவம் இல்லை. இதற்கு மேல் spiritual, ethical, humane என்றெல்லாம் விவாதிக்க எனக்குத் தெரியாது. என்னைப்பொருத்த மட்டில் – ஆம் ஒரு உயிரைக் கொல்வது மனதிற்கு ஒவ்வாத விஷயம்தான். ஆனால் ஒவ்வாததினாலேயே நான் அதை செய்யாமல் இருக்கப்போவதில்லை.
    ஊன் உண்ணாமை என்று அதிகாரம் படைத்த வள்ளுவன், கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தையும் படைத்துள்ளான். மேலை நாடுகளில் வசிக்கும் சைவ ஜாதியினர் பலரும், ஊன் உண்ணாமையில் மட்டும் வள்ளுவனை வணங்கி, கள்ளுண்ணாமையில் மறந்துவிடுவதை நான் பார்க்கின்றேன். ஊனும் உண்ணலாம், கள்ளும் குடிக்கலாம் – அளவுடன்! மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

  29. Avatar
    smitha says:

    Selvan,

    I have not commented about vitamin A in carror & leafy vegetables. I have specified other foods also.

    Your talk on pesticide & junk food is generic & applies to both non veg & veg foods.

    U have not commented on the non existence of fibre content in non veg foods. U cannot bcos it is not present in non veg food.

  30. Avatar
    Prakash Devaraju says:

    @ Ganapathi Raman …Insulin from my understanding is not extracted from human carcasses. Even in the old days when recombinant DNA technology did not come into existence, it was mainly porcine or bovine carcasses (pig or cattle) and not human. And that was 30 years ago.

    Since the FDA approved recombinant insulin 30 years ago, almost all insulin is produced in the laboratory from bacterial synthesis.

    You can check the FDA (Food and Drug Administration) website for the facts.

    In favor of your argument, there are many vaccines and some anti-toxins and toxoids which are produced from animals – live/after killing – but there are attempts to get them without using live animals. So, I don’t buy your statement fully.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *