சொல்வது

This entry is part 12 of 16 in the series 6 மார்ச் 2016

 

 

கோடிகளில்

மொழிந்தேன்

லட்சக்கணக்கில்

எழுதினேன்

சொற்கள்

 

சொற்கள் வழி

சிந்திப்பதில்

எத்தனை கர்வம்

எனக்கு

 

பதில்களாய்

கேள்வியின் எதிரொலியாய்

எல்லாச் சொல்லும்

 

பதிலாகச் சொல்லப் படாத

அசலான சொல்லை நான்

எப்படி அறிவேன்?

 

எதிர்வினையாகாததாய்

சுய சிந்தனை இதுவென்று

எப்படி இனம் காண்பேன்?

 

அசலாயொரு தேடல்

மௌனமாய்த் தொடர்வதையே

காண்கிறேன்

 

தேடலில் வழிப்பட்ட

சொற்கள் விடுதலையை

சொற்களின் வழிப்பட்ட

தேடல் தளைகளைப்

பொருளாய்க் கொண்டிருக்க

 

மெளனமும்

ஒலித்தலும் தன்

பொருட்டல்ல

என்றிருக்கும்

வழிபாட்டுத் தலத்து மணியின்

நாவு

Series Navigationதமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *