ஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2

This entry is part 14 of 34 in the series 17 ஜூலை 2011

ஜென் பதிவுகளைக் கால வரிசைப் படுத்தும் போது பதிவுகளில் காணப் படும் சொற் சிக்கனமும் வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் காணும் நுட்பமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வாசகனின் விழிப்பைத் தொடுவதும் தொடர் சிந்தனையைத் தூண்டுவதும் ஆன கருத்துக்களை வாசிக்கும் போது தனது வெளிக்காட்டும் அகந்தை தென்படுவதில்லை. மாறாக ஆழமும் செறிவும் ஆன ஒரு தத்துவ தா¢சனத்தின் வெளிப்பாடாக அது அமைய வேண்டும் என்னும் அக்கறை தொ¢கிறது. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ” ஹ¥யி கோ” (HUI KO) வின் கவித்துவமிக்க சொற்கள் இவை:

நான் என்று ஏதுமில்லை
எல்லா தர்மங்களும் உள்ளீடற்றவை
மரணத்துக்கும் வாழ்விற்கும் உள்ள வேறுபாடு அற்பமானது
அறிந்து கொள் பின் காண்பாய்
மர்மத்தின் பா¢ணாமத்தின் மையம் இதுவே
அம்பு இலக்கைத் தைக்கும்
இடத்தில் ஓலமிடும் உண்மை

நான் என்று ஏதுமில்லை என்பது மெய்ஞானத்தின் உச்ச நிலையாய் இல்லாமல் சர்வ சாதாரணமான ஒரு உண்மை என்பது போல் தொடங்குகிறார் ஹ¥யி கோ. என்னிலும் குள்ளமானவரை அல்லது உயரமானவரைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது நான் இவ்வளவு உயரமானவன் அல்லது உயரம் குறைந்தவன். செல்வம் ஜாதி அந்தஸ்து என பிறர் பார்வையில் நான் இவ்வளவு மதிப்பானவன் என “நான்” சம்பந்தப் பட்ட எல்லாவற்றிலும் மற்றவா¢ன் பங்களிப்பு இருக்கும். நான் என்பது பல பா¢மாணங்களில் பிறரால் கட்டமைக்கப் பட்ட ஒன்று என்பதில் ஐய்யமில்லை.

நான் என்கிற தனி மனிதனையும் சமுதாயத்தின் அதிகாரம் அல்லது நெறிமுறைகளையும் இணைக்கும் புள்ளியாகவே நாம் தர்மத்தைக் காண்கிறோம். க்ஷத்திரிய தர்மம், ஸ்திரி தர்மம் எனத் தொடங்கி திட்டவட்டமான வழிகாட்டுதல்கள் உள்ளதாகவும் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதாகவும் தர்மம் இரு தடத்தில் இயங்கும். உதாரணத்திற்கு விபத்தில் அடிபட்டவரைக் கண்டதும் முதலுதவி செய்து அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்னும் கடமை.

இந்த அடிப்படையில் காந்தியடிகளிடம் ஒரு சூழ்நிலையைக் குறிப்பிட்டு ஒரு கேள்வி கேட்கப் பட்டது. ஒரு வேடன் ஒரு மானைத் துரத்தி வருகிறான். அவ்வழியில் ஒரு துறவி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவரைத் தாண்டி மான் சென்ற சலசலப்பில் அவரது தியானம் கலைந்து மானைக் கவனிக்கிறார். மான் ஓடி விடுகிறது. பின்னாடியே வந்த வேடன் அவரை மான் சென்ற வழி குறித்து வினவுகிறான். அவர் உண்மையைக் கூறினால் மான் கொல்லப் படக் காரணமாகி விடுவார். பொய் சொல்வது துறவிக்குப் பொருந்தாத செயல். இதற்கு காந்தியடிகள் என்னிடம் கேட்கப் படுகிற எல்லாக் கேள்விகளுக்கும் நான் விடை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.

ஹ¥யி கோ “நான்” என்பதும் தர்மங்கள் என்பவையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்றால் நான் என்னும் கட்டமைப்பு எவ்வளவு போலியானதோ அந்த அளவு தர்மங்கள் உள்ளீடற்றவையாக ஆகி விடுகின்றன. உண்மையை உணரும் தேடலில் முதற்கட்டமாக நான் என்பதையும் தர்மங்கள் என்பவற்றையும் தாண்டியாக வேண்டும் எனத் தொடங்குகிறார்.

மரணத்திற்கும் வாழ்விற்கும் உள்ள வேறுபாடு அற்பமானது என்பது தனி மனிதனுக்குக் கட்டாயம் பொருந்தாதது. எனவே இதை மனித வாழ்க்கை என்னும் அகண்ட கண்ணோட்டத்தில் தான் பு¡¢ந்து கொள்ள இயலும். ஆசைகள், விருப்பு வெறுப்புகள், வெற்றி தோல்விகள், இன்ப துன்பங்கள் இவை கோடிக்கணக்கில் காலங்காலமாக நிகழ்ந்த மரணங்களுக்குப் பிறகும் தொடர்கின்றன. வாழ்வும் சாவும் இவற்றில் எந்த வித மாற்றத்தையும் உண்டாக்க வில்லை.

அறிந்து கொள் பின் காண்பாய் என்பது அனுபவ அறிவை அல்லது உணருதலைக் குறிப்பிடுகிறது. நாம் அலைந்து திரிந்து ஒரு வீட்டிற்குள்ளோ அல்லது ஒரு அறைக்குள்ளோ சென்றவுடன் கணப் பொழுதில் வியர்த்துக் காற்று தேவை என்பதை உணரும் போது நம் கண்கள் நம்மை அறியாமலேயே சாளரங்களைக் கண்டு பிடித்து அவை மூடப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன். அதாவது முதலில் உஷ்ணத்தை உணர்கிறோம் அல்லது அறிகிறோம். பின் காரணத்தை அல்லது அந்த உஷ்ண சூழலின் வடிவத்தைக் காண்கிறோம்.

மர்மத்தின் பா¢ணாமம் என்று அவர் குறிப்பிடுவது என்ன? ஒரு மர்மம் பா¢ணமிக்க பல வேறு வடிவங்கள் உண்டு. ஒரு மர்மம் இன்னொரு மர்மாகப் பா¢ணமிக்கலாம். ஒரு விடையாகவோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளுக்கான சாத்தியத்தைக் காட்டுவதாகவோ பா¢ணமிக்கலாம். நமது பு¡¢தலை ஒட்டி அது வெவ்வேறாகப் பா¢ணமிக்கிறது. கணிதத்தில் ஒரு புதிரை விடுவிக்க முயலும் போது இது தெள்ளத் தெளிவாகிறது. எனவே ஒரு மர்மம் நம் பு¡¢தலின் அடிப்படையில் தான் பா¢ணமிக்கிறது.

அம்பு இலக்கைத் தைக்கும்
இடத்தில் ஓலமிடும் உண்மை

அம்பு இலக்கைத் தைக்கும் போது அம்பு எய்தவா¢ன் நோக்கம் நிறைவேறுகிறது. எவ்வளவு முழுமையாக் நிறைவேறியது என்பது வேண்டுமானால் உடனடியாகத் தெரியாமலிருக்கலாம். ஆனால் உண்மையோ வேட்டையும் துரத்தலும் மனித வாழ்க்கையின் நீங்காத இயக்கம் என்பதே. எனவே தாக்கப்பட்டதும் பிறக்கும் வலியின் ஓலம் கால காலமாக மனிதன் முடிவற்றுத் தொடரும் வேட்டையின் விளிம்பு பற்றியதே. பல பந்தயங்களாக, போட்டிகளாக, விருதுகளாக, அங்கீகா¢ப்புகளாக இன்னும் பலவாக வேட்டைக்கார வேகத்துடன் துரத்தும் இயக்கம் உருமாறி இருக்கலாம். ஆனால் மௌனமாகவும் கூக்குரலாகவும் ஓலங்கள் தொடர்கின்றன்.

ஜென் பற்றிய புரிதலுக்கு நாமும் தொடர்ந்து வாசிப்போம்.

Series Navigationமுற்றுபெறாத கவிதைகாத்திருக்கிறேன்
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    chithra says:

    சத்யானந்தனுக்கு,மிக மிக நன்றி, ஜென் பற்றிய கட்டுரை தொடருக்கு.

Leave a Reply to chithra Cancel reply

Your email address will not be published. Required fields are marked *