டமில் வலர்க!!!

author
43
0 minutes, 22 seconds Read
This entry is part 10 of 17 in the series 18 செப்டம்பர் 2016

subramanya_bharathi

சோம.அழகு

 

அன்புள்ள பாரதி,

உன் நினைவு தினத்தில் உன் நினைவு வந்தது. அதற்காகத்தானே ‘நினைவு தினம்’ ! விண்ணுலகிலும் இணைய வசதி உண்டு என்று ஊர்க்குருவி சொன்னதால், உனக்கு இந்த  மின்னஞ்சல். வள்ளுவனை உதாசீனப்படுத்தியதைப் போல் உன்னையும் உதாசீனப்படுத்த மனம் ஒப்பவில்லை எங்களுக்கு.

 

“மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான்”

 

என்ற அப்பேதையின் கூற்றை ஆரூடமாகக் கருதி, அவனினும் பெரும்பேதைகளாய் அதையே பத்தாண்டுத் திட்டத்தின் இலக்காக நிர்ணயித்து அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் ‘புனிதமான’ பணியை சிரமேற்கொண்டு செயல்படும் உன்னதமான(!?) கர்மவீரர்களால் இலக்கு அதிவேகமாக நிறைவற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்ச்  சமூகத்தின் பிரதிநிதியாக, உனக்கு இதைத் தெரியப்படுத்துவது என் கடமை.

 

எங்கு தொடங்கலாம்……..? மழலையிலிருந்தே தொடங்குவோம். Daddy, Mummy, Moon, Crow, Cow என எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே சொல்லிக்கொடுக்கிறோம். திசைகளில் கூட முதலில் ‘West’ ஐ தான் அறிமுகப்படுத்துகிறோம். இவ்வளவு ஏன்….? வலிக்கும் போது “Aw! Ouch!” என்றும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது “Please, Save me!” என்றும் கத்தினால்தான் ஆன்மா சாந்தியடையும் என்று நம்பி உயிர் துறப்….dead ஆவோம். தாய்மொழி என்ற ஒன்றே பிள்ளைகளுக்கு இல்லாதபடி செய்து அதிலும் பெருமை கொள்ளக் கற்றுக்கொடுக்கிறோம். எல்லா உணர்வுகளையும் கூறு போட்டு விற்கத் தொடங்கிவிட்டபடியால் “தாய்மொழியை விட வேறு எந்த மொழியிலும் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது” என்னும் மூடநம்பிக்கை எங்களுக்குக் கிடையாது. பள்ளிகளிலும் தமிழ் வராதபடி பார்த்துக்கொள்கிறோம்.  பள்ளிகளில் ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் இருப்பின் ஒன்றாம் வகுப்பிலேயே தமிழுக்கு டாட்டா பைபைதான். “நிலா நிலா ஓடி வா…..” என நிலவை வரவேற்ற நாங்கள்,   “Rain rain go away” என மழையைத் துரத்தி அடிக்கிறோம். தாத்தா-ஆச்சி   Grandpa-Granny ஆனார்கள். மாமா-அத்தை, சித்தப்பா-சித்தி, பெரியப்பா-பெரியம்மா எல்லோரையும் ‘Uncle-Aunt’ல் அடக்கி விட்டோம். ‘பத்தாவது வரை கட்டாயத் தமிழ்க்கல்வி’ சட்டத்தில் துளையிடும் அரும்பணி சில தனியார் பள்ளிகளால் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்யன், மாண்டரின், சில்போ(விசில் மொழி), யுபிக், ரோடோகாஸ்,……..இவ்வளவு ஏன், கோய்சான் (நாக்கைச் சொடுக்குவதால் ஏற்படும் ஒலிகளால் ஆன ஆப்பிரிக்க மொழி) மொழியைக் கூட கற்போம். ஒருபடி மேலே சென்று ஜீவசமாதியான பழங்குடி மொழிகளைக் கூட கற்றாலும் கற்போமே தவிர தமிழை…….சிவ! சிவா!….மனதாலும் நினைக்கமாட்டோம். ‘ஜீவசமாதியடைந்த ஒரு மொழியைக் கற்றால்தான் வேலை’ என்ற சட்டம் இன்னும் 6 மாதங்களில் அமலுக்கு வர இருக்கிறது.

 

பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதை நிறுத்தச் சொல்லி இரகசிய அவசரச் சட்டத்தை ஐந்து ஆண்டுளுக்கு முன்பே பிரகடனம் செய்தாயிற்று. எனவே ஷ, ஸ, க்ர, த்ர, ஹ்ர போன்று அப்பத்தாக்களின் வாயில் நுழையாத, தமிழுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத ஒலிகள் பெயரில் இல்லையென்றால், “இன்னிலருந்து 150 வருசம் இவன தள்ளி வைக்கிறேன். இவனுக்கு ஆரும் தண்ணி கொடுக்கக்கூடாது…… பேசக்கூடாது….. மீறுறவங்களையும் தள்ளி வைப்போம்” என 11 பேர் கொண்ட குழு உடனடி நியாயம் வழங்கிவிடும். மக்களும்  நன்றாகவே ஒத்துழைப்பு தருகிறார்கள். பாட்டன், பூட்டன் பெயரைப் பிள்ளைக்கு இட விரும்பும் பழைமைவாதிகள் கூட, முனியம்மா ஆச்சி பெயரை ‘முனித்ரா’ என்றும், குப்புசாமி தாத்தா பெயரை ‘குப்ரீஷ்’ என்றும் இடும் அளவிற்கு மனப்பக்குவமும் முதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். பெயருக்குப் பொருள் இருக்க வேண்டும் என்பதெல்லாம் மிலேச்சர்களாகிய எங்களுக்கு முக்கியமில்லை. குப்ரீஷை, குப்புசாமி என்ற பெயரிடம் இருந்து மட்டுமல்ல….. ஆசையாக ‘குப்ரீஸு…’ எனக் கூப்பிடும் குப்புசாமி தத்தாவிடமிருந்தே பிரித்துதான் வைக்கிறோம். அவரிடம் இருந்து இவன் ஏதாவது தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு விட்டால்….? தமிழை மறக்கடிக்கப் பள்ளிக்குச் செலுத்தியிருக்கும் லட்சங்கள் பாழ்.

 

வீட்டிலும் இயன்ற வரை ஆங்கிலமே. (எங்களில் பெரும்பாலானோர்க்கு ஆங்கிலமும் சரிவர தெரியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும். நீ தயவுசெய்து எங்கள் ஆங்கிலத்தைத் தப்பித் தவறி கூட கேட்க முயலாதே. உனது முண்டாசையும் தாண்டி பாய்ந்து வழிந்து சட்டையை நனைக்கும் இரத்தம் ). எங்களுக்குத் தெரிந்த ஒன்றாம் வகுப்புப் பாட புத்தகத்தில் உள்ள அறிமுக ஆங்கிலச் சொற்கள், கைபேசியில் இருக்கும் அகராதி செயலி, ’30 நாட்களில் ஆங்கிலம்’ போன்ற கவித்துவமான புத்தகம் – இவற்றை வைத்துக்கொண்டு தப்பும் தவறுதலுமாக இழுத்திழுத்து முடியைக் கோதி ஒதுக்கி விட்டுக் கொண்டே பேசினால் அது சரியான நல்ல ஆங்கிலமாக மாறி அருமையாக உருவெடுத்துவிடும் என்பதை அரைகுறை ஆங்கிலம் தெரிந்த நடிகைகள், பலரின் ஆழ்மனதில் ஆணி போல் அடித்துப் பதித்திருக்கிறார்கள். இரண்டு ஆங்கில வாக்கியங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாத அந்தத் தருணம் தமிழுக்கு மாறுவோம். மறு நொடி மீண்டும் ‘செம்மொழி’ ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் உணர்வு தலைதூக்கும். இப்படியாக ‘நானும் ஷேக்ஸ்பியர்தான்’ என ஆங்கிலப் பருந்துகளாக ஏமாற்றுவதிலும் வெற்றி கண்டுவிட்டோம்.

 

பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியின் வளத்தையும் சிறப்பியல்புகளையும் அறிய வாய்ப்பளிக்காததால் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு……முதலிய சங்க இலக்கியங்கள் பக்கம் தலைகூட வைக்க மாட்டார்கள். “பட்துப்பாட்? ஏதாவது grilled சிக்கன் அயிட்டமா?” எனக் கேட்கும் அளவுக்குப் பிள்ளைகளின் உலக அறிவை வளர்த்தெடுத்திருக்கிறோம்.

“ உலகம் பிறந்தது எனக்காக ஓடும்

நதி களும் எனக்காக “ – இதைத் திருக்குறள் என்றும் ‘மூஞ்சி கழுவாத மூதேவி’ என்னும் வசவைப் பழமொழி என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள், இலக்கை நோக்கிய எங்கள் வேலைப் பளுவை வெகுவாகக் குறைக்கிறார்கள். இதையெல்லாம் மீறி (பொருளாதாரச் சூழ்நிலையால்) தமிழில்தான் படிப்பேன் என அடம்பிடிப்பவர்களை எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி அடையச் செய்து, பத்தாம் வகுப்பில் படிக்காதவர்களுக்கும் மதிப்பெண்களை வாரி வழங்குவதால் எழுத்துப் பிழையில்லாமல் ஒரு வார்த்தையைக் கூட எழுத இயலாத ஜென் நிலைக்கு உயர்த்திவிட்டோம் எங்கள் எதிர்காலத்(!?) தூண்களை. மன்னிப்புக் கடிதத்தில் “மந்ணிப்பு கோட்டு கெல்கிரேன்” என எழுதும் அளவிற்கு அவர்களுக்குக் கற்பூர புத்தி. வாழ்விற்குத் தேவையான உயர்ந்த மதிப்பீடுகள், வாழ்வின் அழகியலை ரசிக்கத் தேவையான ரசனைகள் – இவை தமிழ் இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் கொட்டிக் கிடப்பதை அள்ளி மண்ணில் போடும் வேலைதான் மிகக் கடினமாக இருக்கிறது. வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற் போல் பாடல் இயற்றி வைத்திருக்கின்றனர் படுபாவிகள். அதையெல்லாம் மறக்கடிப்பதற்காகத்தான் தன்னம்பிக்கை புத்தகம், தும்பிக்கை புத்தகம் எனப் பலவற்றை வணிகத்திற்கு உட்படுத்தி, SWOT analysis, KNOT analysis, POT analysis என கண்ட கழுதை மந்திரத்தையெல்லாம் பிரபலமாக்குகிறோம்.

 

குயில் பாட்டின் கவிஞனே! நீ பல மொழிகளில் சிறந்து விளங்கி இருக்கலாம். ஆனால் எங்களைப் போல் எந்த வார்த்தையைக் கொடுத்தாலும் உன்னால் உரையாற்ற இயலாது. உதாரணத்திற்கு PIZZA என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். P-Punctuality, I-Intelligence, Z-Zeal…….அடுத்த Zக்கு என்ன போடுவது என்று தெரியவில்லை என்றால் Z-Zimbabwe என்றும் A-Aandippatti என்றும் பீட்சாவை விரித்து, “வாழ்க்கை என்பது பீட்சாவைப் போல. முதல் மூன்றும் இருப்பின் ஆண்டிப்பட்டியிலிருந்து ஜிம்பாவேக்குக் கூடச் செல்லலாம்” என்று தத்து பித்தாக உளறிக் கொட்டிப் பிழைப்பு பார்க்க உதவுகிறது ஆங்கிலம்.

 

தமிழை டமிலாக தமிழர்கள் நாவில் புரளச் செய்தது எங்கள் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கது. ழகரத்தைச் சரியாக உச்சரித்தால் நாக்கு கழன்று விழுந்துவிடும் என்று எல்லோரையும் மனதார நம்ப வைத்துவிட்டோம். ஆனால் பிரெஞ்சு zhaவைச் சரியாக உச்சரிப்போம். தன் மொழி தனக்கு வராது (“என்கு டமில் வராது”……) என்று புளகாங்கிதம் அடையும் ஒரே இனம் இப்போது உலகில் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.  Entrepreneur, Comparable போன்றவற்றைத் தவறாக உச்சரிப்பவர்களை ஏற இறங்க ஏளனமாகப் பார்த்து அவமானப்படுத்தும் ஒலிப்பியல் வல்லுநர்களாகிய நாங்கள், பளம், பலக்கம், ஸோரு என்று முத்துக்களாக உதிர்ப்பவர்களை பல்லிளித்துக் கொண்டே உற்சாகப்படுத்துவோம். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வானொலி, தொலைக்காட்சி, பண்பலை ஆகியவற்றில் வேலை தந்து லகர, ளகர, ழகர வேறுபாடின்றி அலற விடுவோம். “வநக்கம் தோலா…….இந்த காலைப் பொலுதுல உங்கலோட பேசிட்டிருக்குரது நான் உங்க க்ரூப்பன் சாம்” (கருப்பண்ணசாமியா இருக்குமோ?) என்று பண்பலையில் விடியற்காலை கேட்கும் பொழுது…..அட! அட! அட!…….உனக்காவது காதில் மட்டும்தான் பாய்ந்தது. எங்களுக்கோ தினந்தினம் இந்த ஸென்டமில் தேன் கடலிலேயே நீந்தும் பேறு.

 

தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் பலரும் இந்தத் ‘தமிழ் அழிப்பு’ போராட்டத்திற்குப் பெரிதும் உதவுவதால் ஒவ்வொருவரின் பெயரையும் தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க 50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இந்த இடத்துல நீங்க ‘எப்படி உதவுறாங்க’னு கேக்கணும்ங்க…..பாமரர்களாகிய எங்களுக்கு ஆங்கிலத்திற்குத் தமிழை ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளும் அந்த வித்தையைக் கற்றுத் தந்ததே இந்த உயர்ந்த உள்ளங்கள்தாம். இவர்கள் எவ்வளவு அழகாகத் தொகுத்து வழங்குகிறார்கள் என்றால் பார்க்கும் எங்களுக்குச் சமயத்தில் (தரங்கெட்ட) ஆங்கிலச் சேனலைப் பார்ப்பது போலவே தோன்றும். உதாரணமாக, சமையல் வல்லுநர்களைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். தம் சமையலைத் தாமே நொடிக்கு நூறு முறை பாராட்டி, “Fry பண்ணி…..boil பண்ணி……..saute பண்ணி” என்று  ‘பண்ணி’ பாஷை பேசுவார்கள் இந்த (தேவர் அனையர்) ‘வராகர்’கள். மிளகு ரசத்தைத் தவிர எல்லாவற்றையும் சீஸ் மழையில் குளிப்பாட்டும் சிலர், இஞ்சிப்பூண்டு விழுதைக் கூட ‘Ginger-Garlic paste’ என்றால்தான் சமைக்கும் உணவு ருசிக்கும் என ‘Fantastic’ ஆக நிலை நாட்டிவிட்டனர். எல்லாவற்றையும் தாண்டி எங்கள் ஆச்சிகளின் அஞ்சறைப் பெட்டியை Cumin seeds, Fenugreek, Star anise, Pepper, Asafoetida, Cardamom, Cinnamon  முதலியவற்றால் நிரப்பிப் புரட்சி செய்துவிட்டார்கள். Basil leaves எனத் துளசியை அறிமுகப்படுத்திய ஒருவரின் நுண்ணறிவைக் கண்ட போதுதான் தமிழ் அழிப்பிற்கான எங்கள் வேகம் போதவில்லை என உணர்ந்தோம். உனது பாடலில் உள்ள ‘மெல்ல’ என்னும் வார்த்தையை ‘24G வேகத்தில்’ (இதை எழுதும் போது 4G தான். பிரசுரமாகுகையில் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குச் சென்று விட்டால்….?) என மாற்றிய எங்கள் விடி வெள்ளி(கள்) ‘இவை’.

 

இப்படியாக நாங்கள் இரத்தம் சிந்திப் பாடுபட, அவ்வப்போது தரமான இலக்கியக் கூட்டங்கள் நடத்தி எங்கள் இலக்கின் ஆணி வேரையே பிடுங்கப் பார்க்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். தமது வேர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழப்பதை மனவேதனையோடு மிஷேல் ஒபாமா முன் கவிதையாய் வடித்த அமெரிக்க வாழ் தமிழரான மாயா ஈஸ்வரன், சங்கரன்கோவிலில் ‘தமிழ்ப் பள்ளி’ நடத்தும் சங்கரராமன் போன்றோர் உன்னை அவ்வப்போது ஞாபகப்படுத்துவார்கள். இவர்களை நிரம்பத்தான் பாராட்டுகிறார்கள். இவர்களுக்கு மட்டும்தான் மொழியுணர்வு உண்டோ? உ.வே.சா அவர்களுக்கும் தான் தமிழ் மொழி உணர்வு அதிகம். இதை வாசிப்பவர்களுக்கு “பாரி யொருவனு மல்லன் ; மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே” என்னும் கபிலரின் சங்கப்பாடல் வரிகள் நினைவுக்கு வருமாயின் நான் பொறுப்பல்ல.

 

 

ஐயா பாரதி ! நீ சொன்ன அப்பேதையின் முதல் வரி 70 விழுக்காடும்  இரண்டாம்    வரி 50 விழுக்காடும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த அறிக்கையை இன்னும் ஐந்து ஆண்டுகளில் சமர்ப்பிக்கிறேன். நன்றி!!!

 

அன்புடன்,

அலகு.

( இப்படித்தான்பா   கூப்புடுறாங்கோ !)

 

 

  • சோம.அழகு
Series Navigationகாஷ்மீர் – ஒரு பின்னோட்டம்கைப்பிடிச் சோறு
author

Similar Posts

43 Comments

  1. Avatar
    Krishnan Nallaperumal says:

    ‘தேசியக்கவிக்கு ஒரு டமில் பொறக்கியின் அஞ்சலி’ என்று பெயரிட்டு இந்தக் கட்டுரை – நோ, நோ ஆர்டிக்கில்-லருந்து ஒரு டமில் மூவி முக்கல் லிரிக்ஸ்- உனுக்குத்தான் பாரதி – சுருக்காத் தாரேன். புட்சுக்கோ:
    ஹாப்பி பர்த் டே டூ யூ! ஹாப்பி பர்த் டே டூ யூ!
    ஹாப்பி பர்த் டே டூ யூ! மை டியர் பார்ட்தி!
    மெல்லத் தமிழினிச் சாகும் – அன்னிக்கு நீ சொன்து!
    ரெய்ன் ரெய்ன் கோ அவே – இன்னிக்கு நாங்கோ சொல்து!
    செத்த சான்ஸ்கரீட்க்கு சிங்காரம் நாங்கோ செய்யுது!!
    பத்பாட், எட்தொகை கூவத்லே நாங்கோ கடாசுது!!!
    “வநக்கம் தோலா…….இந்த காலைப் பொலுதுல
    உங்கலோட பேசிட்டிருக்குரது நான் உங்க க்ரூப்பன் சாம்”ன்னு
    உன் காதுல ஈயத்தைக் காய்ச்சி நாங்கோ ஊத்துது!!!!
    இத்தக் கேட்டும் ஒனுக்கு சாந்தி ஆவலின்னா அடுத்த பர்த்டேக்கு நாங்கோ பாடுது!!!! குட்பை பார்ட்தி நைனா!!!!!

    அற்புதம் சோம.அழகு! மொழி இழந்தவன் விழி இழந்தவன் ஆவான்!! மகாகவி பாரதியின் பிறந்த நாளில் போலிப் பெருமையில் திளைக்கும் பேதைத் தமிழினத்துக்கு விடுக்கப்பட்ட பள்ளிஎழுச்சிப் பாடல் இந்தக் கட்டுரை.

  2. Avatar
    Meenal Devaraajan says:

    ஆங்கிலம் பேசத்தெரிந்தால்தான் அறிவாளி படித்தவன் என்ற நினைப்பு தமிழர்களிடையே வேரூன்றிப் போய்விட்டது. தமிழைத் தாய் மொழியாக்கக்கொள்ளாத நடிகர் நடிகைகள் பேசுவது போல் பேச வேண்டும் என்ற நினைப்பு, தொலைக் காட்சிக்காரன் சொல்வது போல் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு இவைதான் தமிழ் நாட்டுத் தமிழர்களைத் தமிழ் பேசவிடாமல் தடுக்கின்றன. நினைப்புதான் பிழைப்பைக் கெடுகின்றது.

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழ்ச் சொற்களை மறக்க வைப்பது ஆங்கில மொழிப் பழக்கம் என்று வெகு சிறப்பாக இக்கட்டுரை முழக்குகிறது. இந்த ஆங்கில அரக்கன்தான் நிலைக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணாவும், திராவிடக் கட்சிகளும் கடந்த 65 ஆண்டுகளாக தமிழ்க் காவலாராகத் துப்பாக்கி ஏந்தி தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறார்கள்.

    சரி, சொல்லுங்கள் ! தமிழ் நாட்டில் இப்போது இந்தி நுழைய வேண்டுமா ? அல்லது ஆங்கிலம்தான் நிலைக்க வேண்டுமா ? இரு மொழிகளில் ஒருமொழி இந்திய மொழியாக வேண்டுமே !?

    மொழிப் பிரச்சனை தீருமா ?

    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      MathiEzhilan says:

      கட்டுரையில் எழுப்பப்படுவது ஆங்கில எதிர்ப்பு எனத் தோன்றவில்லை. தமிழை வேற்று மொழியிடமிருந்தோ வேற்று மொழிக்காரரிடமிருந்தோ காப்பாற்றுவது அல்ல; மொழியுணர்வற்ற தமிழனிடமிருந்து தமிழைக் காப்பதே முன்மொழியப்படுகிறது. இந்தியா ஆங்கிலமா என்பதல்ல பிரச்சனை. ஆங்கிலம் இல்லையென்றால், இந்தியிடம் அடிமைப்பட்டுக் கிடப்பான் தமிழன். எனவே சந்தடி சாக்கில் இந்திக் கோடியை உயர்த்த வேண்டிய அவசியமில்லை.

  4. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    எனது ஆதங்கங்களுள் ஒன்று. உச்சகட்ட கேவலமாக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண் ஆங்கில எழுத்துருவில் தமிழ்க்கடிதம் – தங்க்லீஷ் என்று சொல்லவேண்டுமோ ? – இறுதிக்கடிதத்தை எழுதியிருந்தாள்.

    தமிழ் தமிழ் என்று கூப்பாடு போட்டு அதிகாரத்தைக்கைப்பற்றி கொள்ளையோ கொள்ளையடித்தவர்கள் ஆண்ட தமிழகத்தில் தாய்மொழியான தமிழே தெரியாமல் – படிக்காமல் – அப்படி படிக்காமல் இருப்பதற்கு சட்டப்பாதுகாப்பும் வாங்கிக்கொண்டு – பள்ளி / கல்லூரி படிப்பு முழுதும் முடித்துவிட முடியும்.

    இந்த அவலம் வேறெங்காவது உண்டா என்று தெரியவில்லை.

  5. Avatar
    BSV says:

    பிள்ளைகளுக்கு பெயர்களிடுவது அந்தந்த மக்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தைப்பொறுத்தே நிலவும். தமிழ் மக்கள், மதம், ஜாதி, இனவாரியாகப் பிரிந்து வாழ்வதால் என்ன தமிழ்ப்பெயரிடுவது? நாயுடுக்கள் கேசவலு, ஆஞ்சனேயலு, என்றும் கிருத்துவர்கள் ராபின்சன், டேவிட்சன் (நாகர்கோயில் எம். பி பெயர் ஹெலன் டேவிட்சன்; பிரபல தமிழ் எழுத்தாளர் பெயர் ஹெபிசிபா ஜேசுதாசன்) இசுலாமியர் தங்கள் மதப்பெயரையும் இசுலமாமியர்கள் அவர்தம் மதப்பெயர்களையும் இந்துக்கள் பலர் சமஸ்கிருதப்பெயர்களையும் அதாவது புராணக்கதைப்பெயர்களையும்தான் விடுவர். கடவுள் நம்பிக்கையில்லாதோர் திருமாவளவன் என்று பெயிரிடுவர். மக்களை எப்படி குறை சொல்ல முடியும்?

    பாரதியார் வாழ்ந்த் காலம் வேறு. நம் காலம் வேறு. பாரதியார் காலத்தில் பள்ளிசென்று கற்றோர் குறைவு. எனவே மூளைமுடுக்கெல்லாம் ஆங்கிலப்பள்ளியும் ஆங்கில மோகமும் இல்லை. அவர் இன்றிருந்தால் அவர் மனைவி தம் பெண்களை ஆங்கிலப்பள்ளியில்தான் போட்டிருப்பார். பெண்கள் எக்காலத்திலும் ஊரோடு ஒத்துவாழ்பவர்கள். ஆண்களோ மனைவி சொலைத்தட்ட முடியா கோழைகள்!. பாரதியாரின் பெண்கள் எட்டயபுரத்தில் ஆங்கிலப்பள்ளியில் படித்துவரும். அவர்கள் தாயார், அப்பாவை டாடி என்றும் தன்னை மம்மி என்று ம்தான் கூப்பிட வற்புறுத்துவார். அடிக்குப்பயந்து தன் பெண்கள் டாடி என்றழைக்க….இவர் ஙே…..!

    எனவே மக்களைக்குறை சொல்லாதீர். தவறு வேறெங்கோ இருக்க, இவர்களை நொந்து என் பயன்?

    பாரதியார் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் புலமை பெற்றவர். ஆங்கிலக்கவிதைகளில் கரை கண்டவர். ஷெல்லி, கீதஸ், வார்ஸ்வொர்த், பைரன் கவிதைகளில் சொக்க்ப்போனவர். ஷெல்லியின் மேலுள்ள மோகத்தினால் தன் பெயரை ஷெல்லிதாசன் என்றும் மாற்றிக்கொண்டவர்.

    பாரதியார் ஆங்கிலத்தை வெறுக்கவில்லை. என்ன தெரிகிறது? ஆங்கிலத்தை வெறுக்காமல் நன்கு ப்டித்துக்கொண்டே தமிழையும் படிக்கலாம் .

  6. Avatar
    Guru says:

    டமில் பிரச்சினை ஒன்று இருக்கிறது. தமிழ் 70 விழுக்காடு அழிந்தது [மெல்லத் தமிழினி சாகும்] என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.

    ஆனால், பெருமை மிக்க தமிழ் அழிந்து பலபல காலம் ஆகிவிட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    மொழி என்பது பேசுவது, பேசப்படுவது. எழுதுவது என்பது இரண்டாம் பட்சம் தான். யோசியுங்கள், நாம் பேசுவதுதான் தமிழா? [ஆங்கில கலப்பில்லாமல் கூட]. ஒரு மண்ணும் இலக்கணமில்லாமல், உடைந்து போன கண்ணாடி சில்லு மாதிரி உருத்தெரியாமல் நசுங்கிப் போன வார்தைகளைதான் இன்று நாம் வீட்டிலும், பொதுவிலும் பேசுகிறோம். கேட்டால் எழுத்து மொழி வேறு பேச்சு மொழி வேறு என்று சமாளிப்பு. அனேகமாக பிற மொழிகளில் இது இல்லை.[அதுல பாருங்க, பத்து வார்த்தையிலெ ஏதாவது பேசலாம்னா அதுல முக்கா வாசி உடைஞ்சு போன வார்த்தையாத்தான இருக்கு . அதாவது, பத்து வார்த்தைகளில் ஏதாவது பேசலாம் என்றால் அதில் முக்கால் வாசி உடைந்துபோன வார்த்தைகளாகத் தான் இருக்கின்றன]. பன்மை ‘கள்’ என்பது செத்து பல காலம் ஆகிவிட்டது [பத்து வாழப்பழம் வாங்கி வா, அஞ்சு மரம் இருக்கு]. நாம் பேசுவதற்கு பேர்தான் தமிழ் என்றால், தமிழைவிட கேவலமான, குறைந்த பட்ச‌ வரைமுறை இல்லாத, உருவழிந்த‌ மொழி வேறு இல்லை. டமில் போகவேண்டும். பின்பு உண்மையிலேயே தமிழ் பேசப்படவேண்டும். சம்ஸ்கிருதத்தைப் போலவே, பேச்சு வழக்கில் தமிழும் வழக்கொழிந்த மொழி என்பதே வருத்தமான உண்மை. எழுத்தில் மட்டுமே தமிழ் இன்று உயிர் வாழ்கிறது.

  7. Avatar
    Prakash Devaraju says:

    மொழி ஒரு மனிதனின் சிந்தனையை மற்றொரு மனிதனுக்கு எடுத்துச்சொல்ல பரிணமித்த ஒரு ஊடகம். இந்த பரிணாமம், இன்றைய அளவிற்கு போக்குவரத்து வசதிகள் தோன்றா காலத்தில் உருவானதாதலால், மானுட சமூகங்கள் மொழி வாரியாக பிரிந்தே இருந்திருக்ன்றது. இதில் பெரும்பாலானோர் அறியாத மற்றுமோர் சிக்கல் ஒன்றும் இருக்கின்றது. அதுதான் மூளையின் ‘critical period plasticity’ எனப்படும் கிரகிக்கும் ஆற்றல். குழந்தைகளுக்கு ஒரு கால கட்டம் வரை மொழியை எளிதாக கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த ஆற்றல் மறையும்போது புதிதான ஒரு மொழியின் உச்சரிப்பையும், அதனை எளிதாக கற்கும் திறனும் மிகவும் குறைந்து போகிறது. இந்த உயிரியில் கோட்பாடுதான் பிற மொழி பேசுமிடத்தில் வளரும் குழந்தைகள் இயல்பாகவே அம்மொழி உச்சரிப்பை எளிதாக கற்றுக்கொள்ள உதவுகிறது. அதே நேரத்தில் குழந்தைப்பருவத்தைக் கடந்தவர்களால் பிற மொழிகளின் உச்சரிப்புகளையும், அவற்றை எளிதில் கற்கும் திறனையும் இழக்கச் செய்கின்றது. இந்த பிரச்சினைக்கு இன்றளவில் தீர்வு எதுவும் இல்லை. குழந்தைப் பருவத்தை கடந்த பின்னும் இந்த ‘critical period plasticity’ யை செயல்படுத்த இயலுமா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை என்றாவது தீர்வு கண்டுவிட்டால், Matrix திரைப்படம் போல் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு மனித மூளையின் கிரகிப்புத்திறனை அதிகப்படுத்தி மொழிகளால் ஏற்படும் பாகுபாட்டைத் தவிர்க்கலாம். அத்தகைய நிலை அருகில் இல்லை. அதுவரை ‘அலகு’ அவர்களின் அழகான வஞ்சப்புகழச்சியைக் கேட்டுக் கொண்டிருப்பது உலகமயமாக்கலின் ஒவ்வாத உபகரணமாகவே இருக்கும். வாழ்க தமிழ்! வாழ்க மொழி! வாழ்க மானுடம்!

  8. Avatar
    ஷாலி says:

    பாரதி வாழ்ந்த காலத்தில் தமிழ் என்னமோ உச்சத்தில் வாழ்ந்த மாதிரியும்,இப்போ தமிழ் டமில் ஆனமாதிரியும் கட்டுரையாளர் “அலகு” குத்தி ஆடுகிறார்.பாரதியே தமிழை தூக்கி நிறுத்தவில்லையே! சமஸ்கிருத ஆரிய மொழிக்கு கொடுத்த தெய்வீக அந்தஸ்தை தமிழுக்கு கொடுக்க வில்லையே!

    பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.

    “நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.”

    இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

    “தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” என்கிறார் பாரதியார்.

    இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி – இவையனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் -இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து.

    -பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981.

    1. Avatar
      MathiEzhilan says:

      எழுத்து குறித்த விமர்சனம் கருத்தியல் சார்ந்து அமைவதே நாகரிகம். எழுதியவரைத் தாக்குவது முதிர்ச்சியின்மை. தன் மொழி காக்க நினைப்பது மொழிவெறியன்று. மொழி சார்ந்த கருத்தில் தனிநபரைத் தாக்க முனைவது மொழிவெறி.மேலும், உலகில் வேகமாக அழிந்துவரும் மொழிகளில் தொன்மையான தமிழும் பட்டியலிடப்படுவது வேதனைக்குரியது. இச்சூழலில் நம் மொழியைக் காக்க ‘டமில் வலர்க’ போன்ற கலகக்குரல் ஏற்புடையதே.

    2. Avatar
      govindsamy says:

      தாம் வாழ்ந்த காலத்தின் வடமொழி ஆதிக்கத்திலிருந்து பாரதியும் தப்பவில்லை என்பது தெரிகிறது. ஆங்கிலக் கலப்பின்றிப் பேச நினைப்போர் தற்போது எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பது போன்று, ‘சமஸ்கிருதம் தேவபாஷை’ என்பதிலிருந்து ‘யாமறிந்த மொழிகளிலே’ என்பது பாரதியின் பரிணாமம். மணிப்பிரவாள நடையிலிருந்து வெளியே வந்தது நமது பரிணாமமும் வெற்றியும். ஷாலி அவர்கள் கூறுவது போல் சமஸ்கிருதம் தெய்வமொழி என ஏற்கலாமே! இறந்தோரை தெய்வ நிலையில் கொண்டாடுவது மரபுதானே!

  9. Avatar
    ஷாலி says:

    //பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதை நிறுத்தச் சொல்லி இரகசிய அவசரச் சட்டத்தை ஐந்து ஆண்டுளுக்கு முன்பே பிரகடனம் செய்தாயிற்று. எனவே ஷ, ஸ, க்ர, த்ர, ஹ்ர போன்று அப்பத்தாக்களின் வாயில் நுழையாத, தமிழுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத…//

    அய்யா அழகு! உங்கள் தமிழ் ஆசான் பாரதி,செந்தமிழில் தன் பெயரைச் செப்பவில்லை தன் பெயரைக் கூட ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார். அவரது மூலத்தில் எழுதிய கவிதைகள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்த ‘தமிஸ்கிருத” கிரந்த எழுத்துக்களே!

    இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:

    “1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள் பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர் பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், 1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம் முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே கையொப்பமிட்டுள்ளார்” என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.

    — க.கைலாசபதி, பாரதி ஆய்வுகள், ப.180, நி.செ.பு.நி. 1984.

    பாரதி எழுதியது தமிஸ்கிருதம். அவரின் பேரப்பிள்ளைகள் இன்று எழுதுவதும் பேசுவதும் தமிங்கிலிஷ்!
    வாழ்க சமஸ்கிருதம்! வளர்க இங்கிலீஷ்! பேதை சொன்னது போல் ஒழியட்டும் மெல்ல தமிழ்!வளரட்டும் நல்ல டமில்!

  10. Avatar
    ஷாலி says:

    //அவர் இன்றிருந்தால் அவர் மனைவி தம் பெண்களை ஆங்கிலப்பள்ளியில்தான் போட்டிருப்பார். பெண்கள் எக்காலத்திலும் ஊரோடு ஒத்துவாழ்பவர்கள். ஆண்களோ மனைவி சொலைத்தட்ட முடியா கோழைகள்!. பாரதியாரின் பெண்கள் எட்டயபுரத்தில் ஆங்கிலப்பள்ளியில் படித்துவரும். அவர்கள் தாயார், அப்பாவை டாடி என்றும் தன்னை மம்மி என்று ம்தான் கூப்பிட வற்புறுத்துவார்…//

    திரு.BSV அவர்களே! நீங்கள் எழுதியபடியே எல்லாம் நடந்திருக்கிறது.பாரதியாரின் மகள் வழி கொள்ளுப்பேத்தி மீரா சுந்தரராஜன் ஆஸ்திரேலியா சிட்னி நகருக்கு வருகை தருகிறார்கள் என்பதை அறிந்த, கலை இலக்கிய விமர்சகர் திரு.முருகபூபதி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழில் நலம் விசாரிக்கிறார்.எதிர் முனையில் இருந்து வந்த பதில் என்ன தெரியுமா?
    எக்ஸ்குயூஸ்மீ! ஐ டோ நோ டமில். ப்ளீஸ் ஸ்பீக் இன் இங்கிலிஷ்!

    இப்பதிலை கேட்டதும் நொந்து நுலாகி விட்டார் திரு. முருகபூபதி அவர்கள்.

    இனி அவர் பேசுவதைக் கேட்போம்.”

    ‘சில வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சிட்னிக்கு மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி செல்வி மீரா சுந்தரராஜன் வருகை தந்திருக்கும் தகவல் அறிந்து மெல்பேனிலிருந்து அவருடன் தொலை பேசியில் தமிழில் உரையாடினேன்.உடனே அவர் தம்மால் தமிழில் உரையாட முடியவில்லை என்று கவலையுடன் சொன்னார்.அவர் பாரதியின் ஆங்கிலப் படைப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதாக குறிப்பிட்டார்.(Dr.மீரா சுந்தரராஜன், D.Phil. பேராசிரியை சட்டத்துறை.) இவர் பாரதியின் மகள் வயிற்றுப் பேத்தி முனைவர்.விஜய பாரதியின் மகளாவர்.நீண்ட காலமாக அமெரிக்காவில் ஆங்கிலச் சூழலில் வசிக்கின்றமையினால் அவருக்கு தமிழ் மீதான பரிச்சயம் குறைந்து விட்டதை அறிய முடிந்தது.”

    http://www.thenee.com/html/030515-1.html

    “தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்.தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்வோம்” என்றெல்லாம் பாடிச் சென்ற மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி வீட்டில் இன்றும் மம்மி-டாடி தான் முழங்குகின்றது என்றானபோது நீயென்ன…நானென்ன..எல்லாம் ஓர் குலம்தான்!….டமில் வால்க!…வலர்க!!

    1. Avatar
      Krishnan Nallaperumal says:

      அய்யா ஷாலி அவர்களே!
      தாங்கள் கொடுத்த http://www.thenee.com/html/030515-1.html தேனீ இணையதளத்திற்குச் சென்று அக்கட்டுரை முழுவதும் படித்தேன். அக்கட்டுரையாளர் திருவாளர் முருகபூபதி தெரிவித்த செய்தியின் சுருக்கம் இதுதான்: மெல்பன்வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் 21 ஆண்டுகளுக்குமுன் பாரதி பள்ளியை நிறுவி, கடந்த 21 ஆண்டுகளில் தங்கள் குழந்தைகளுக்கு எவ்விதம் தமிழ் பயிற்றுவிப்பதில் வெற்றிக்கண்டார்கள் என்பதே! அவ்வெற்றிப்பாதைக் கதையைச் சொல்லும்போது, தாங்கள் குறிப்பிட்ட தகவலுடன் கீழ்க்கண்டவற்றையும் கூறுகின்றார்:

      “இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்றெல்லாம் பாடிய பாரதியின் சந்ததியில் தமிழில் பேசுவதற்கு முடியவில்லை என்றால் அது பாரதியின் குற்றம் அல்ல.
      தமிழர்களின் சந்ததிகள் வாழும் சூழல் – புகலிடம் பெறும் தேசங்களின் சூழல் என்பனதான் காரணம்.”
      “இந்த வருடம் (2015) பாரதி பள்ளிக்கு 21 வயது பிறக்கின்றது. இதில் முக்கியமான விடயம் ஒன்றையும் தெரிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
      1994 ஆம் ஆண்டு பாரதி பள்ளியில் படிக்க வந்த பிள்ளைகள் காலப்போக்கில் வளர்ந்து, திருமணமாகி அவர்களின் பிள்ளைகளும் பாரதி பள்ளியில் இணைந்துவிட்டார்கள்.
      எனவே மூன்று தலைமுறைகளின் வாழ்வு பாரதி பள்ளியுடன் இணைந்து தொடர்கிறது.”

      தமிழ் பயிற்றுவிப்பதில் வெற்றிகண்ட நற்செய்தியை விட்டுவிட்டு, எதிர்மறையான ஒரு சிறுசெய்தியைத் தாங்கள் தூக்கிப்பிடிப்பது ஏன்? ஒன்றை மட்டும் நன்றாக அறிந்து கொள்ளுங்கள். தமிழ்மொழி கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில், இரண்டு மாபெரும் கடல்கோள் ஆழிப்பேரலையின் முதற்சங்கம் மற்றும் இடைச்சங்ககால இலக்கியங்களை இழந்தும், கடைச்சங்கம் நிறுவி தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொண்டும், வந்தேறிகளான ஆரியமொழியாளர்களின் இரண்டாயிரம் ஆண்டு தாக்குதல்களைச் செரிமானம் செய்தும் இன்னும் உயிர்ப்புடனே வாழ்கின்றது; வாழும். ஆட்சியாளர்களைக் கையின் போட்டுக்கொண்டு, வடமொழியைத் தமிழர் கற்றால் நாவை வெட்டுக என்று ‘மனு நீதி’ போன்ற விதிநூல்களை செய்த ஆரியர்களின் அடாவடியான போக்காலேயே அவர்தம் வடமொழி உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்து போனது. அதனாலன்றோ மனோன்மணியம் சுந்தரனார்

      “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
      உன்னுதரத்தே உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
      ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்
      சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”

      என்று பாடினார்! ஆங்கிலநாட்டு அறிஞர் அருட்தந்தை கால்டுவெல் அவர்கள் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் பக்கம் நான்கில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

      “சென்னை மாகாணத்தைப் பொறுத்தமட்டில், பண்டு வடமொழி எந்த உச்சநிலையை எய்தியிருந்ததோ அந்த அளவிற்கு இப்பொழுது ஆங்கிலம் உயர்தரக் கல்வி பெரும் மொழிக் கருவியாக இருந்து வருகிறது. எனினும், இவ்வாங்கிலமோ, வேறெந்த புறமொழியோ எக்காலத்திலேயும் தென்னிந்திய உண்ணாட்டு மொழியாக மாறிவிடக்கூடும் என்று நம்புவதற்கு எட்டுணையும் வழியில்லை. ஆற்றலிலும் எண்ணிக்கையிலும் மிக்கவர்களாகக் கருதப்படும் ஓரினத்தாரின் மொழியாகிய வடமொழியை சென்ற 2,000 ஆண்டுகளாக எதிர்த்துநின்று போராடி வருவனவாய திராவிடமொழிகள், மற்றெந்த அயல் மொழியும் தம்மிடைத் தலைசிறவாதபடி எதிர்த்து நின்று தடுத்துக்கொள்ளும் என்று எளிதில் நம்பலாம்.”

      அக்காலத்திய மணிப்பிரவாள தமிழ்மொழி நடைக்கு எடுத்துக்காட்டாக “உபதேசரத்னமாலை” என்னும் நூலிலிருந்து ஒர் பகுதியைக் கீழே காணலாம்.

      “மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்.”

      இந்த வீணாப்போன மணிப்பிரவாள மொழிநடை நிலையிலிருந்து தமிழ் தன்னை மீட்டுக்கொண்டு உயிர்ப்புடன் வீறுகொண்டு எழுந்தது. இதைவிடக் கவலைக்கிடமான நிலை இன்று இல்லை. “சமாதி நிலையடைந்த தேவபாஷையை” மனிதர்களுடன் உலவவிட மத்திய அரசு முக்கித்தான் பார்க்கிறது. அதற்குச் சரியான போட்டியாகத் தங்லீஷ் சதிராடுகிறது. இவை இரண்டாலும் தமிழை ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழ் அன்பர்கள் கவலற்க.

      பேரா.ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

  11. Avatar
    Krishnan Nallaperumal says:

    அய்யா ஷாலி அவர்களே, தாங்கள் இப்போது ‘வேல்குத்திச் சாமியாடுவது’ என்? எந்த ஒரு கருத்தும் ‘காலம், இடம்’ என்னும் இரு பரிமாணங்களைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும் என்பது ஆய்வுக் கோட்பாடு. சமற்கிருதம் ‘தேவபாஷை’ என்றும், அதைத் தமிழுடன் கலந்து மணிப்பவள(‘மணிப்பிரவாள’) நடையிலும், வடசொற்களைப் பெய்துதான் தமிழ் வளர்ப்பதுமான பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில், தமிழை ‘நீச பாஷை’ என்று இகழும் வேதப்பிராமணன் குலத்தில் பிறந்து, தமிழையும், சமற்கிருதத்தையும், வேதத்தையும் ஒருங்கே கற்ற ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்னும் ஆரியகுலப் பார்ப்பனன் “தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” என்றும், “இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து” என்றும் சாதிக்கும் மணிப்பிரவாளப் பார்ப்பான் நிலைபாட்டிலிருந்து “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றும், ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்! கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!!” என்று தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்த ‘உண்மைநிலை’ உரைத்ததுவரை- நடந்தது, அவரின் கருத்துக்கள் செறிவடைந்து, வளர்ந்து, முதிர்வடைந்த பாதைகளின் வரலாறாகும். ஆங்கிலம் மட்டுமல்ல, பதினாறுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுத் தேறினான் பாரதி. அதனால்தான் அவனால் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடமுடிந்தது. ஆர்வலர்கள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுத் தேர்ந்துகொள்ளுங்கள். திணிப்பதிலும், கலப்பதிலும்தானே முரண்கள் வருகின்றன.

    தமிழ் மொழி ஒன்றே ஆரியத்தைப் பார்க்கிலும் முதிர்ந்ததென்றும், ஒரே செம்மொழி என்றும், தமிழ்நாட்டு மரபில் இல்லாத நான்கு வர்ண சாதி முறையைப் புகுத்தியது ஆரியப் பார்ப்பனர்களின் சதியே என்று கபிலர் அகவலை மேற்கோள் காட்டியும் தமது ‘தமிழ் மொழியின் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்ட பரிதிமாற்கலைஞர் என்னும் ‘கோ.சூரியநாராயணசாஸ்திரியார்’ அவர்களின் அதே நூலில் பல வடசொற்களைப் பரக்கக் காணலாம். (கடைச்சங்ககாலப் கபிலரும், பரிதிமாற்கலைஞரும் பிறப்பினால் ஆரியகுலப் பார்ப்பனர்கள்). இவ்வளவு ஏன், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழரான மறைமலையடிகள் தொடக்கக் காலத்தில் எழுதிய பல நூல்களில் வடசொற்களைப் பரக்கக் காணலாம். பெரும்பாலான நூல்களில் தாம் முடிந்தவரை வடசொற்களைத் தவிர்த்து எழுதியுள்ளதாகவும், சிலசில இடங்களில் அவை வந்துள்ளதாகவும் ‘நூல் முகவுரை’யில் அவரே குறிப்பிட்டுள்ளதையும் காணலாம். எனவே தனித்தமிழ் வளர்ச்சிக்காலத்தின் தொடக்க நிலைகளில் இவ்வறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை ‘மேற்கோள்’ காட்டுவது அறமாகாது. இத்தகைய போக்கு தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாத போக்கையே விளக்கும்.

    தமிழில் நாம் ‘அஃறிணை’ என அழைக்கும் ‘பேனா’ இந்தி மொழியில் ‘பெண்பால்’ என மரியாதையாக அழைக்கப்படுகின்றது. இந்திக்கு இந்த நோய் சமற்கிருத மொழியிலிருந்து வந்தது. இந்த மொழிதான் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாம்! தேவ மொழியாம்! சமற்கிருதத்திலும் இத்தகைய விந்தைகள், விநோதங்கள் இன்னும் நிறைய உண்டு. அதை நாம் பெருமளவு கற்றால்தான் ‘சமற்கிருத மந்திரங்களின் ‘உண்மைப்பொருள் விளக்கம்” கிடைத்து, அவைகளில் பெரும்பான்மையானவை நாம் நினைப்பதுபோல் அல்லாமல் வெற்று ஆரவாரங்கள் என்பதை அறியவும், “சமற்கிருதமொழி உயர்ந்தது” என்ற மயக்கத்திலிருந்து விடுபடவும் முடியும்.
    சமற்கிருதமொழியே இந்திய மற்றும் உலக மொழிகளின் தாயென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர்கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டனவாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும், ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பில் சிறந்த தமிழும், திரிபில் முதிர்ந்த சமற்கிருதமொழியும் மிகமிக வேறுபட்டனவாகும்.
    சமற்கிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள்:
    சமற்கிருதமொழி ஒலிகள் வலியன; தென்மொழி ஒலிகள் மெலியன; இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை. சமற்கிருத மொழி இருபது விழுக்காடு இடுகுறிப்பெயர் காணப்படுகின்றது. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு சமற்கிருத மொழியில் இல்லை. கூட்டெழுத்துகள் தமிழ்மொழியில் இல்லை, வினைத்தொகை சமற்கிருத மொழியில் இல்லை. தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக்கணம் சமற்கிருதமொழியில் இல்லை. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் சமற்கிருத மொழியில் இல்லை. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல சமற்கிருதமொழியைப் பகுப்பதில்லை. பால்கள் சமற்கிருத மொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன; தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன. தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்துகளெல்லாம், சமற்கிருதமொழியில் மொழி முதலிடை கடை வரும். சமற்கிருதமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும்.
    நிறைய மொழிகளைக் கற்றால் மட்டுமே “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!” என்ற பாரதியின் முத்தான வரிகளை உணர முடியும்! “தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!” என்ற நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் வைர வரிகளைக் கேட்டு நம் நெஞ்சங்கள் விம்மும். ஆனால் இதெல்லாம் மூன்றாம் மொழியாக சமற்கிருதத்தைத் திணித்தால் நிச்சயம் வரப்போவதில்லை.

    தமிழன் இளிச்சவாயனாக ‘சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்-ல” என்று வாய்பிளந்து, சிவந்தநிற நாடோடி மிலேச்சர்களாக, கால்நடைகளுடன் வந்த கனத்தகுரல் ஆரியபார்ப்பனர்களின் “உயிர்ப்பலியிடும் நாடோடிப் பாடல்களையும், பிதற்றல்களையும்” “நால்வேதம்” என்று நம்பிய காலத்தில், அவர் கட்டிய புனைக்கதைகளை நம்பி அக்காலத்தமிழர்கள் ஏமார்ந்தார்கள். தமிழனுக்கு ஆரியம் படிக்கத்தடைவிதித்து, தமிழ்த் தத்துவங்களையும், தமிழ் ஆகமங்களையும் ஆரியத்தில் மொழிபெயர்த்துவிட்டுத் தந்திரமாக, அங்ஙனம் மொழிபெயர்க்கப்பட்ட ஆரிய நூல்களையே தமிழ்த் தத்துவங்களுக்கும், தமிழ் ஆகமங்களுக்கும் மூலமாகக் கட்டும் ஆரியர்களின் சூழ்ச்சியை தமிழர் உணராமல் போனதால் அல்லவோ இழிநிலையடைந்தார் தமிழர். ஆரியபார்ப்பனர்களில் தமிழ் கற்று அறிவுபெற்ற நக்கீரர், கபிலர் போன்ற நல்லவர்கள், ஆரியபொய்களைக் குறித்து தமிழர்களுக்கெல்லாம் உரைத்திருக்காவிட்டால், தமிழின் மேன்மையறியாமல் ஆரியத்தையே முழுவதும் கொண்டாடியிருப்பார்கள் அக்காலத் தமிழர்கள். பிற்காலத்தில், தமிழன் மீண்டும் ஆரியமயக்கத்தில் உழன்று கிடக்கும்போது, அறிவூட்டியவர்களில் முக்கியமானவர்கள் பரிதிமாற்கலைஞரும், பாரதியுமாவர். இவர்களை மற்ற ஆரியப்பார்ப்பனர்களைப் போல் கருதுவது தமிழர் பண்புக்குப் புறம்பானது.
    (

    பேரா.ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    1. Avatar
      BSV says:

      பரிதிமாற்கலைஞரையும் பாரதியாரையும் ஒன்றாக வைத்துப் பார்க்க முடியாது. முன்னவர் தமிழறிஞர்; தமிழ்மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியாளர். அவரது மொழி அறிவும் அழகும் மலைக்க வைப்பன. அவர் ஒரு இலக்கிய வாதியன்று. ஆனால் இலக்கிய நுகர்வாளர்; படைப்புக்களின் தரங்களை விமர்சிக்க வல்லவர். அவர் வாழ்வு தமிழ், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் தாண்டிச் செல்லவே இல்லை. அது ஒரு குறையுமில்லை.

      பாரதியார் பன்முகத்தனமையாளர். தமிழ் இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாளி. இலக்கிய விமர்சகரன்று. தமிழ் ஆசிரியரோ, பேராசிரியரோ அன்று. அவருக்கு தமிழ் இலக்கணம் என்றாலே வேப்பங்காய். தமிழ் ஆசிரியர் வேலை பிடிக்காமல் சில மாதங்களுக்குள் சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலிருந்து வேலையை விட்டு விலகி, வேலையில்லாமலே திரிந்தவர். விடுதலைப்போராட்ட உணர்வு, பங்கு. நாடு முழுவதும் பயணம். போலீசாரின் தேடப்பட்டவர். தமிழ் மொழி உரைநடை கலப்பானதாகத்தான் எழுதினார். வடமொழி ஆதரவு, இந்துத்வா என்று போனவர். இசுலாமியர் மனங்கள் காயப்படுத்தும்படி வீர சுவாஜி சேனைக்காற்றிய உரையை கவிதையாக எழுதி, பின்னர் அவர்கள் சென்று நேரடியாக முறையிட்ட பின், அதன் தாக்கும் வரிகளை மாற்றினாரென்பது அவர் சரிதம்.

      பரிதிமாற்கலைஞர் உரைநடையில் சில வடமொழிச்சொற்கள் தவிர்க்க முடியாதபடி இருக்குமே தவிர அவரது நடை, தூய தமிழ் நடையே. முதுபெரும் தமிழ்பேராசியரும் அறிஞரிடமும் நாம் எதிர்நோக்குபவை. அவர் ஏமாற்றவில்லை. தனித்தமிழ் ஆர்வலர். பாரதியாரின் நடை பாமர நடை.

      குணத்தால், மனப்பாங்கால், செயல்களினால் இரு துருவங்களாக வேறுபட்ட இவர்களை எப்படி ஒப்பீடு செய்ய முடிகிறது?

      1. Avatar
        கிருஷ்ணன் நல்லபெருமாள் says:

        பரிதிமாற்கலைஞரையும், பாரதியையும் ஒப்பிடவில்லை; ‘வடசொற்கள்’ பரிதிமாற்கலைஞரின். மறைமலையடிகளின் எழுத்துகளில்கூட அக்காலகட்டத்தில் இருந்தது என்று எடுத்துக்காட்டத்தான் கூறப்பட்டது. “அவருக்கு தமிழ் இலக்கணம் என்றாலே வேப்பங்காய். தமிழ் ஆசிரியர் வேலை பிடிக்காமல் சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலிருந்து வேலையை விட்டு விலகி, வேலையில்லாமலே திரிந்தவர். பாரதியாரின் நடை பாமர நடை.” என்ற உங்கள் கருத்து உள்ளீடற்றது. தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதுபோல் உள்ளது. பாரதி வேலையை விட்டது மட்டுமல்ல; வாழ்விலும் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளத்தெரியாதவர்; இருக்கும் ஒருவேளைச் சோற்றுக்கான அரிசியையும் எறும்புக்கும், குருவிக்கும் இரைக்கும் மனப்பாங்கு கொண்டவர். பாட்டில் மட்டுமல்ல – வாழ்விலும் “காக்கை குருவி எங்கள் ஜாதி; கடலும் மழையும் எங்கள் கூட்டம்” என்று வாழ்ந்தவர்; எனவே, வாழ்ந்த காலத்தில் “கடையத்தின் கிறுக்கு மாப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டவர். உண்மையான படைப்பாளி.

        1. Avatar
          BSV says:

          ஒருவர் எழுதும் நடை எப்படி இருக்கிறது எனபதை அவர் எழுதியவற்றைப் ப‌டித்துப்பார்த்தாலே தெரியும். இதற்கு உள்ளீடு வேறெங்கு இருக்கும்? பாரதியாரின் உரைநடை வடமொழிச்சொற்கள் விரவிய ஒன்றே எனபதும், அது பாமர நடையே என்பதும் என் கருத்து. என்னிடம் பாரதியாரின் கட்டுரைகள் – இரு தொகுதிகள் இருக்கின்றன‌. நான் அவற்றைத் தமிழ்ச்சுவைக்காகப் படிக்கவில்லை. படிக்கவும் முடியாது. அவை பாரதியாரின் வாழ்வு, பல சமூக நிகழ்ச்சிகள் பற்றிய அவரது பார்வை; விமர்சனங்கள் அடங்கியதால், அவரைப்பற்றித் தெரிய நன்குதவும் நூலது. அதற்குத்தான் படிக்கிறேன்.

          தமிழ் உரை நடை இன்பத்துக்காக படிக்க பலபல‌ தமிழறிஞர்கள் மற்றும் சிலரும் இருக்கிறார்கள். பாரதியாரை அவர்களோடு சேர்க்க முடியாது என்பது நான் அவரின் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் படித்ததால் பெற்ற உணர்வு. இந்த உணர்வே உள்ளீடு. வேறென்ன வேண்டும் இதைச்சொல்ல?

          நான் தமிழின்பத்துக்காக படிக்கும் உரைநடையாசிரியர்கள்: பரிதிமாற்கலைஞர், சேதுப்பிள்ளை, மு.வ, அண்ணா, உ வே சா, இரு அய்யங்கார்களும், வ சுப மாணிக்கம், ந சஞ்சீவி, கல்விக்கடல் கோபாலையர் (இப்படித்தான் அழைக்கப்படுகிறார் – தமிழ்மண் பதிப்பகத்தில் இவரின் கட்டுரைத்தொகுப்புக்களின் பல கிடைக்கும்); வடமொழியில் வல்லுனர்களான வையாபுரிப்பிள்ளை; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (பண்டிதமணி என்ற பட்டம் இவரின் வடமொழிப்புலமைக்கே); தேவனேயப்பாவனர், மறைமலை என்ற வேதாச்சலம்(கடைசியிருவர் தனித்தமிழ் மட்டுமே எழுதினர்) – பட்டியல் நீளமானது. ஈண்டிடம் போதாது. பரிதிமாற்கலைஞரின் நடையில் வடசொற்கள் காணப்பட்டாலும் பொதுவாக அது தனித்தமிழே. படிக்கப்படிக்க இன்பம் நல்குவது. தனித்தமிழுக்கென்றே ஒரு தனி இன்பம் உண்டு எனபதைப்படித்தோர் உணர்வர். பிறமொழிச்சொற்கள் கலக்கும்போது அவ்வின்பம் நீர்த்துப்போய் விடுகிறது.

          இவர்களிலிருந்து தனித்து விளங்குபவர் பாரதியார் 1. இவர் தமிழ்ப்புலவர் மட்டுமே; தமிழறிஞர் அன்று; இரண்டாவது, தனித்தமிழில் எழுதும் வல்லமை இருந்தும் பொதுத்தமிழில்தான் (பிறமொழிச்சொற்கள் அடங்கியது) எழதும் பழக்கமுடையவர்.

          ஏன் தமிழ் ஆசிரியர் வேலையை விட்டார்? முதலில் அவர் இலக்கிய வாதி. அவருக்கு அவரூர் பாமரமக்கள் இட்ட பெயர் பாட்டுக்கார எனபதே. புலவர் எனபது படித்தோருக்கே. இவருக்கு ஆசிரியர் வேலை ஒத்துவரவில்லை. பாரதியாரின் குணத்தையும் வாழ்க்கையையும் பற்றி நான் பல்லாண்டுக்ளாக உய்த்து உணர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் எழுதிவை அவரின் வாழ்க்கையை ஆழமாகப் படித்துணர்ந்து எனக்கு தெரிந்தவையே. அவருக்கு தமிழ் இலக்கணம் வேப்பங்காய் என்பது அவரது சரிதத்தை எழுதியவர் சொன்னது. படித்துப்பாருங்க்ள், தெரியும்.

          1. Avatar
            Krishnan Nallaperumal says:

            பொதுவாக “பாரதியாரின் நடை பாமர நடை” என்று கூறியிருந்ததால் “உள்ளீடற்றது” என்று கருதவேண்டியதாயிற்று. உரைநடை என்று வெளிப்படையாக இருந்திருந்தால், என் கருத்துக்கு இடம் ஒன்றுமில்லை. உரைநடைக்கு பாரதியைப் பெரும்பாலும் நோக்குவதில்லை; அவன் “மகாகவி பாரதி” என்றே அறியப்படுகின்றான். தமிழ் ஆர்வலரான உங்கள் மனைதைப் பாதிப்புக்குள்ளாக்குவது என் எண்ணமும் அன்று.

            “கவிதை” என்னும் வரம் பெற்றிருந்ததால், பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே ஆசிரியர் உள்ளிட்டோர் அவன் கவிதைத்திறம் கண்டு பொறாமை கொண்டு பழித்ததுண்டு. இலக்கணம் விரும்பாமல் மரபுக்கவிதை எழுதுவது சாத்தியம் அன்று என்று அறிதல் நலம். அழகான பாரதி மரபுக்கவிதைகள் பல இயற்றியுள்ளார்.

            எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவராக இருந்த காந்திமதி நாத பிள்ளை என்பவர், பாரதியாருக்கு கிடைக்கும் புகழ், பாரட்டைப் பார்த்து பொறாமைப்பட்டார். அதனால், ‘பாரதி சின்னப்பயல்’ன்னு ஈற்றடியாக வைத்து ஐந்து நிமிடத்தில் ஒரு பாடல் எழுதுமாறு பாரதியைப் பணித்தார். பாரதி உடனே எழுதினாராம் இப்படி:

            ஆண்டில் இளையவன் என்று அந்தோ அகந்தையினால்
            ஈண்டிங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் – மாண்பு அற்ற
            கார் இருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
            பாரதி சின்னப் பயல்.” (பார் அதி சின்னப் பயல்.)

            காந்திமதிநாதர் வருந்தியதைக் கண்டு, உளம் நெகிழ்ந்து மீண்டும் பின்வருமாறு பாடினார் பாரதி:.

            ஆண்டில் இளையவன் என்றைய அருமையினால்
            ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் – மாண்புற்ற
            கார் அது போல உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
            பாரதி சின்னப் பயல்.
            (கார் அது போல உள்ளத்தான் – மழை மேகம் போல கருணை மிக்க உள்ளம் கொண்டவன்).

            பாரதி என்றும் தன் கவிதைகளால் வாழ்பவன் என்பதால், அவன் பூதஉடல் மறைந்தபோதும், அவன் புகழுடல்மேல் பொறாமைகொண்டவர்களில் மிக முக்கியமானவர் நான் மிகவும் ரசித்த பொன்னியின் செல்வன் உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களைப் படைத்த எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஆனந்தவிகடனில் ‘பாரதி உலக கவியல்ல’ என்றும், ‘அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன’ என்றும் எழுதியதற்கு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய மகாகவி பாடல் 36 முப்பத்தாறு அடிகளைக் கொண்டு, ஒன்பது எண்சீர் ஆசிரிய விருத்தத்தால் எழுதப்பட்டது; அதில் சில இங்கே தரப்பட்டுள்ளன:

            பாரதி உலககவி! அகத்தில் அன்பும்
            பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
            ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
            ஓட்டைச்சாண் நினைப்புடையவர் அல்லர்! மற்றும்
            வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
            விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!
            சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
            செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம் (4:1)

            பழய நடைபழங் கவிதை பழந்தமிழ்நூல்
            பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை
            பொழிந்திடு செவ்விய உள்ளம் கவிதையுள்ளம்
            பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
            அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தன்றே
            ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்!
            அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
            அறிந்திலதே புவியென்றால் புவிமேற் குற்றம்! (4:3)

            “பார்ப்பானை ஐய ரென்ற காலமும்போச்
            சே”யென்று பாரதியார் பெற்ற கீர்த்தி
            போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
            பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
            வேர்ப்பார்கள், பாரதியார் வேம்பென் பார்கள்,
            வீணாக உலககவி அன்றென் பார்கள்
            ஊர்ப்புறத் தில்,தமக் கானஒரு வனைப்போய்
            உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள் (4:6)

            சாதிகளே இல்லையடி பாப்பா என்றார்
            தாழ்ச்சி உயர்ச்சிகள் சொல்லல் பாவ(ம்) என்றார்
            சோதிக்கின் “சூத்திரற்கோர் நீதி, தண்டச்
            சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி”
            ஓதிஅதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
            ஒடுக்கப்பட்டார் நிலைக்கு வருந்தி நின்றார்
            பாதிக்கும்படி “பழமை பழமை என்பீர்
            பழமை இருந்திட்டநிலை அறியீர்” என்றார் (4:7)

            வையத்து மாகவிஞர் மறைந்து போனார்
            வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
            செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்
            சிலநாட் கள்,போ கட்டும்என இருந்தார்
            உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
            உலககவி அல்ல அவர்எனத் தொடங்கி
            ஐயர் கவிதைக் கிழுக்கும் கற்பிக்கின்றார்
            அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ? (4:9) – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

            1946 ஆம் ஆண்டு “அனைத்திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் ஐந்தாவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையும் ஆக, பாரதியை “புதுநெறி காட்டிய புலவன்” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் எழுதி வாசிக்கப்பட்ட நூற்றெழுபது அடிகளைக்கொண்ட நெடிய பாடலின் ஒரு சில வரிகள் இங்கே தரப்பட்டிருக்கின்றன:

            தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
            இமைதிற வாமல் இருந்த நிலையில்
            தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
            தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் (50)
            இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
            பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
            செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை
            குவிக்கும் கவிதைக் குயில்இந் நாட்டினைக்
            கவிழ்க்கும் பகையினைக் கவிழ்க்கும் கவிமுரசு (55)
            நீடுதுயில் நீக்கப் பாடி வந்தநிலா
            காடுகமழும் கற்பூரச் சொற்கோ
            கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
            …..
            என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
            தமிழால், பாரதி தகுதி பெற்றதும் (65)
            தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
            எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
            ……
            கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்,
            அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்,
            மாலை பார்த்தொரு மாலை தன்னையும்,
            காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்,
            வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று (85)
            விரைந்து தன்பேரை மேலே எழுதி
            இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
            டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
            வருவதே புலமை வழக்கா றென்றும்,
            இன்றைய தேவையை எழுதேல் என்றும், (90)
            முன்னாள் நிலையிலே முட்டுக என்றும்,
            வழக்காறு ஒழிந்ததை வைத்தெ ழுதித்தான்
            பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்,
            புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்,
            நந்தமிழப் புலவர் நவின்றனர், நாளும் (95)
            அந்தப் படியே அவரும் ஒழுகினர்;
            தமிழனை உன்மொழி சாற்று எனக்கேட்டால்
            தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
            இருள்நிலை அடைந்துஇருந்திட்டது இன்பத்தமிழ்!

            செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல் (100)
            செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்
            விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
            மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
            “வில்லினை யெடடா – கையில்
            வில்லினை எடடா – அந்தப் (105)
            புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா”
            என்று கூறி இருக்கும் பகையைப்
            பகைத்தெழும் படிபகர லானான்
            ……..
            பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்கள்;
            “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் (135)
            எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு”
            “விடுதலை! விடுதலை! விடுதலை!
            மனிதர் யாரும் ஒருநிகர்
            சமானமாக வாழ்வமே” – என்றறைந்தார் அன்றோ?
            பன்னீ ராயிரம் பாடிய கம்பனும் (140)
            இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
            எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை
            செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
            “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
            தேன்வந்து பாயுது காதினிலே” – என்றான் (145)
            …….
            எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப் (165)
            பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
            அன்னோன் கவிதையின் அழகையும் தெளிவையும்
            சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
            இங்கு முழுதும் எடுத்துக்கூற
            இயலா தென்னுரை இதனொடு நிற்கவே. (170) – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

            மூலம்: பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி,இரண்டாம் பதிப்பு.(முதற்பதிப்பு:1949),புதுச்சேரி:பாரதிதாசன் பதிப்பகம்,1952.

            பாரதி உரைநடை எழுதுவதில் விருப்பமற்றவர், கவிதை எழுதுவதிலேயே ஆர்வம் கொண்டவர் என்பதைப் பற்றி, புதுவையில் பாரதியுடன் தான் கலந்துரையாடி வாழ்ந்த நிகழ்வுகளைக் கவிதையாக்கித் தருகின்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவை இதோ:

            பொழுது விடியப் புதுவையிலோர் வீட்டில்
            விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
            மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்
            வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்
            சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார் (05)
            முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
            சரியாய்ப் படிந்ததுண்டா இல்லையா என்று
            வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை
            அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
            நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி (10)
            கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளப்புகின்ற
            துண்டு துணுக்குரைகள்! வீரச்சுடர்க் கதைகள்!
            என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
            பன்னத் தகுவது்ண்டோ நாங்கள்பெறும் பாக்கியத்தை?
            வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம் (15)
            போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்
            தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
            காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
            பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
            அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார் (20)
            மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட்டரை இருக்கும்
            கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்
            பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்
            சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியில்
            ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும் (25)
            வாசித்தார் ஐயர் மலர்முகத்தில் வாட்டமுற்றார்
            “என்னை வசனம் மட்டும் நித்தம் எழுதென்று
            சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்
            பாட்டெழுத வேண்டாமாம் பார்த்தீரா அன்னவரின்
            பாட்டின் பயனறியாப் பான்மையினை” என்றுரைத்தார் (30)
            பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் “சோர்வெ”ன்னும்
            காரிருளில் கால்வைத்தார் ஊக்கத்தால் மீண்டுவிட்டார்
            “பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
            பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?”
            என்று மொழிந்தார் இரங்கினார் சிந்தித்தார் (35)
            “நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை”யென்றார்
            நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
            பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்
            ஆங்கிலம் வல்ல கசின்ஸ் என்னும் ஆங்கிலவர்,
            “நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை (40)
            ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
            பாங்காய் எனக்குப் பாட்டெழுதித் தாருங்கள்”
            என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
            அன்றளித்தார், எம்மை அபிப்பிரா யம்கேட்டார்
            “வேண்டும் எழுதத்தான் வேண்டு(ம்)”என்றோம், பாரதியார் (45)
            “வேண்டு(ம்),அடி, எப்போதும் விடுதலை” என்(று)
            ஆரம்பஞ் செய்தார், அரைநொடியில் பாடிவிட்டார்
            ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
            ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித்
            தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின் (50)
            கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
            எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்று
            வீவீஎஸ் ஐயர் விருப்பத்தைப் பூர்த்திசெய்து
            பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
            ஆங்கிலவர், பாரதியார் ஆர்ந்த கவித்தேனை (55)
            வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
            தினசரியின் ஆசிரியர் “தேவையினித் தேவை,
            இனியகவி நீங்கள் எழுதுங்கள்” என்றுரைத்தார்
            தேவையில்லை என்றுமுன் செப்பிவிட்ட அம்மனிதர்
            தேவையுண்டு, தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!(60)
            தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
            சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
            அயலார் சுவைகண்(டு) அறிவித்தார் பின்னர்ப்
            பயன்தெரிந்தார் நம்தமிழர்” என்றுரைத்தார் பாரதியார்
            நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள் (65)
            வெல்ல வருந்திரு நாள்! – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

            ஷாலி அவர்கள், பாரதி “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று கூறி, அதற்குச் சான்றாக

            “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்
            அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
            சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
            தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல
            நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்.”

            –ரா.அ.பத்மநாபன் (தொ.ஆ) பாரதியைப் பற்றி நண்பர்கள், ப.262-264, வானதி பதிப்பகம், சென்னை, 1982.
            இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார் என்றும் கூறியுள்ளார். அது கதையின் ஒரு பகுதியே. பாரதி தன்னுணர்ச்சியுடன் எழுச்சியுடனேயே அப்பாடலைப் பாடினார் என்பதைக் கூறும் புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் பாடல் இதோ:

            (பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடல் எந்தச்சூழலில் எழுந்தது என்பதை விளக்கும் பாடல்)

            தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
            அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
            சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்,உரைத்தார்
            தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
            பலநண்பர் வந்து பாரதி யாரை (05)
            நலமாகக் கேட்டார்: அதற்கு நம்ஐயர்
            என்கவிதான் நன்றாய் இருந்திடினும் சங்கத்தார்
            புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
            சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும், ஆதலினால்
            உங்களுக்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார் (10)
            அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம்
            “செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்”
            தேன்வந்து பாயுது காதினி லே”என் (என்று அழகுத்)
            றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
            எழுதி முடித்தார் இசையோடு பாடினார் (15)
            காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் பாட்டிந்நாள்
            மேதினியிற் சோதி விளக்கு. – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

            பாரதியை ‘மகாகவி’ என்பதற்காகவும், தமிழன்னைக்கு அணி சேர்த்தவர் என்பதற்காகவும், விடுதலைப் போராட்ட வீரராக, எழுச்சிப்பாடல்கள் தந்தவர் என்பதற்காகவுமே போற்றுகின்றோம். ‘திண்ணை’ இதழில் மிகவும் அதிகமாகத் திண்ணை தேய்த்துவிட்டோம். இலக்கியக் கலந்துரையாடலுக்கு மிக்க நன்றி.

  12. Avatar
    M.MURUGALINGAM says:

    I read the article by Soma azhagu about Tamil. Every one should have love on his mother tongue. We people are not interested in our mother tongue. In fact we are not interested in good things. What Bharathi said is coming to be true. He worried about tamil and tamil people.
    G.U.Pope loved tamil and he read Thiruvasagam. How many of us know Thiruvasagam.A man from other country enjoyed the beauty of tamil.I hope this article makes us to realize our mistake.Let us start loving OUR TAMIL.Thank you Soma Azhagu for your nice(hard) words.
    M.Murugalingam

  13. Avatar
    BSV says:

    ஷாலி சொல்வது முற்றிலும் உண்மை. சுப்பிரமணிய பாரதி (பாரதி என்பது தமிழ்ச்சொல் அன்று) பாட்டெழத பயனப்டுத்திய தமிழ் வட மொழி கலக்கா தூய தமிழ் இல்லை. பலரிடை புழங்கும் மொழி – அது கலப்பாகத்தான் இருக்கும். அதே வேளையில் அவரால் தூய தமிழ்ப்பாடல்களையும் புனைய முடியும் எனபதற்கு பலபல பாடல்கள் உள. இருப்பினும் அவர் எழுதிய கட்டுரைகள் வடமொழி விரவிய நடை. அதாவது அவரின் ஜாதியினர் வீடுகளில் பேசுவது. இவரை எடுத்துக்காட்டாகக் கொண்டு தமிழுக்கு ஆதரவு தேடுபவர்கள் அவரின் கட்டுரைகளையும் படித்துவிட்டு வருவது நன்று. பாரதிதாசன் நினைவு நாளில் இக்கட்டுரை வரைக. அதுவே பொருத்தம்.

    ஆங்கிலம் பேசுபவர்தான் அறிவாளி என்ற நினைப்பு தமிழரிடம் மட்டுமில்லை. இந்தியா முழுக்கப் பரவியிருந்த சிந்தனையே. இதற்கு காரணம் காலனி ஆட்சி. அப்போது ஆங்கிலமே அரசு மொழி. பத்திரங்கள்; அர்சு கடிதங்கள்; எல்லாமே – அஃதேன்? – வரும் தொலைத் தபால் (டெலிகிராம்) கூட – ஆங்கிலமே. எனவே ஆங்கிலம் தெரிந்தவன் எல்லாம் தெரிய முடியும் அவனைத்தான் நாடவேண்டியதிருந்தபடியால், டெலிகிராம் நள்ளிரவில் கூட வருவதுண்டு. டெலிகிராம் என்றாலே பயம்தான். அல்லது எதிர்பார்ப்புத்தான். வைத்திருந்து நாளை படிக்க மாட்டார்கள். உடனே போய் ஆங்கிலம் தெரிந்தவர் வீட்டுக்கதவைத்தட்டி அவரிடம் காட்டி: Safe delivery of a boy. Both are ok. தாயும் சேயும் நலம் என்ற செய்தியறிந்தவுடந்தான் மூச்சு விட முடியும். ஆகவே அதைப்படித்துச்சொன்னவர் அறிவாளி. எழுத்தறிவித்தன் இறைவன் ஆவான் என்றெழுதியவ்ருக்கு வாழ்வில் இப்படிப்பட்ட கட்டங்கள் வந்திருக்கும். பட்டறிவு பேசுகிறது.

    ஆங்கிலம் பேசத்தெரிந்தவன் அறிவாளியாகக் கொள்ளப்பட்டான். இன்று எப்படி? ஆங்கிலம் இல்லாமல் எல்லாமே ஆகிவிட்டதா? அப்படி ஆகும்போது தமிழ் தெரிந்தவன் அறிவாளி என்று சொல்லப்படுவானா என்றால் இல்லை. காரணம்: எல்லாருக்கும் தமிழ் தெரியும். ஒரு அரசு கடிதத்தை எல்லாருமே படிக்க முடியும். எல்லாரையும் அறிவாளி என்றால், அறிவாளி என்ற சொல்லுக்கு பொருளே இருக்காது. மலிவாகக் கிடைக்குமெதற்கும் மதிப்பில்லை.

  14. Avatar
    ஷாலி says:

    // எந்த ஒரு கருத்தும் ‘காலம், இடம்’ என்னும் இரு பரிமாணங்களைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும் என்பது ஆய்வுக் கோட்பாடு……
    எனவே தனித்தமிழ் வளர்ச்சிக்காலத்தின் தொடக்க நிலைகளில் இவ்வறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை ‘மேற்கோள்’ காட்டுவது அறமாகாது….//

    அய்யா! பேராசிரியப் பெருந்தகையே! உங்கள் பாரதியின் வட மொழி கலப்புள்ள உரைநடை காலம்,இடம் சார்ந்து எழுதப்பட்டது.சரிதான்! ஆனால் தனித் தமிழ் கவிதையிலும் ஆரிய மொழியை அல்லவா அம்பாரி ஏற்றுகிறார். தனித்தமிழில்தான் ஆரியத்தைப் போற்றுகிறார்.இதுவும் “கால’க் கொடுமைதானோ?இதோ தந்தை பெரியார் உங்களைப் பார்த்து பேசுகிறார்.

    “தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை நாகரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை. இதனையேதான் தமிழின் பெருமையாக உலக மகாகவி கூறுகின்றார்.
    “ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு…… இலக்கணஞ் செய்து கொடுத்தான்”
    எனவும்
    “ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”
    இவ்வடிகளின் பொருளை நன்றாகச் சிந்தியுங்கள். இவை ஆரியத்தின் பெருமையை விளக்குகின்றதா? தமிழின் பெருமையை விளக்குகின்றதா?
    வஞ்சத்திற்கு ஆண்மை என்பது ஆரியர்களின் அகராதிப் பொருள். வாலியை மறைந்து கொன்ற இராமன் பேராண்மையாளர் புருடோத்தமன் என ஆரியங்கூறும். அதே போல பாரதியார் ஆசையைப் பாருங்கள்!
    “ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக”
    எனக் கூறுகின்றார். இவ்வாறு, பாரதியார் ஆரிய நாடு, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியக் கலை, ஆரியக் கடவுள், பெருமைகளையே பெருமையாகப் போற்றிப் பாராட்டியிருக்க, அவரைத் திராவிட இனத்தவர் போற்றுவது மானத்தோடு பொருந்திய செயலாய் இருக்க முடியுமா?…..

    பாரதியைப் பெருமைப்படுத்துகின்றவர்கள், உண்மையிலேயே தமிழைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ தமிழரைப் பெருமைப்படுத்தியவரென்றோ கூறமுடியுமா? இதை நாம் கேட்கவில்லை. பாரதியார் பாடியன என்று மேலே எடுத்துக்காட்டிய பகுதிகளே இக்கேள்வியைக் கேட்கின்றன.
    செவியுடையோர் சிந்தனை செய்யும் திறமுடையோர் இதை நன்கு உணரலாம்.

    ‘ஈட்டி’ என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.”குடிஅரசு”, 18-1

  15. Avatar
    ஷாலி says:

    //“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!” என்ற பாரதியின் முத்தான வரிகளை உணர முடியும்!…//

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்கும் காணோம்”

    என்று தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளதாக பேராசிரியர் கூறுகிறார். இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

    1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார்.

    “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்
    அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
    சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
    தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல
    நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்.”

    –ரா.அ.பத்மநாபன் (தொ.ஆ) பாரதியைப் பற்றி நண்பர்கள், ப.262-264, வானதி பதிப்பகம், சென்னை, 1982.

    இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார்.

    இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது.

    பாரதியார் பரிசுப் போட்டிக்காக மேலே கண்ட பாடலை எழுதும்போது மட்டும் தமிழையும் தமிழ்நாட்டையும் மிகவும் உயர்வாக எழுதுகிறார். ஆனால் அதே ஆண்டில் தனிப்பட்ட முறையில் “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக…

    “ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்து – நிறை
    மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
    மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
    மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
    ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”

    என்று பாரதி கூறுகிறார். இங்குத் தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள் தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஆரியம் தான் உயர்ந்த மொழி என்றும் கூறுகின்றார். தமிழ்த்தாய் பற்றி எழுத வந்த பாரதியாருக்குத் தமிழ்மொழி உயர்ந்த மொழி என எழுத மனம் வரவில்லை. ஆனாலும் பேராசிரியப் பெருமக்களுக்கு பாரதியின் விருப்பத்தை விட தம் விருப்பத்தை அவர் மேல் திணிப்பதில் ஒரு அலாதி இன்பம்.

    1. Avatar
      கிருஷ்ணன் நல்லபெருமாள் says:

      “தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை

      நாகரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை.” என்று தந்தை

      பெரியார் கூறியது சரியே! கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இக்கருத்தை ஒருக்காலும் ஆரியர்களால் நிலைநாட்ட இயலவில்லை. “ஆதிசிவன் பெற்று

      விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு…… இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்றும் “ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்றும் தமிழின் பெருமையாக ஆரிய மொழியைப் போற்றும் பாரதியின் கருத்துக்கள் ஏற்புடையவை அன்று; ஆனால், பாரதி வாழ்ந்த காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முன்பே ஆரியர்கள் இந்தப் புளுகுக் கதையை கிட்டத்தட்ட தமிழர்களிடம், தமிழறிஞர்களிடம் ஏற்றியதன் விளைவாகத் தமிழர்களிடம் “ஆரியமே உயர்வானது” என்ற கருத்து ஊறியிருந்ததைக் கண்டு வருந்தினார் மனோன்மணியம் சுந்தரனார் என்பதை அவரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் உள்ள மூன்று குறள் பாக்கள் உணர்த்தும். அவை இதோ:

      வடமொழி தென்மொழி எனவே வந்த இருவிழி அவற்றுள்
      கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடு மேற்கு உணராரே.

      வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
      கூறு வடமொழி வலமாக் கொள்வர் குணதிசை அறியார்.

      கலைமகள் தன் பூர்வ திசை காணுங்கால் அவள் விழியுள்
      வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

      எனவே, இப்போக்குக்கு, பாரதியை மட்டும் குறைகூறிப் பயனில்லை. அந்நாளில், பெரும்பான்மைத் தமிழரே அத்தகையக் கருத்துகளை கொண்டிருந்தனர் என்பது விரும்பத்தகாத உண்மை.

      ஆனால், ‘அகத்தியன் என்னும் ஆரியன் தமிழுக்கு இலக்கணம் செய்து தமிழைக் காத்தான்’ என்ற ஆரியப் புராணப் புளுகை, அதே புராணத்தைக் காட்டி, ‘கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது’ என்று முழங்கினார் சுந்தரனார்:

      கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
      தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!

      முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்த குறுமுனி அகத்தியர் தமிழின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!! என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பற்று! வியந்தல்லாவா போகிறோம் நாம்!

      ஆரியப் புளுகைத் தாக்க, “திருவிளையாடல்” புராணத்தை எடுத்துக் காட்டி, தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது என்று சங்கநாதம் செய்தார் சுந்தரனார்.

      ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்
      அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

      தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காக இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. நக்கீரர் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்று நின்றதாகக் கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சியால்உவமித்து, தமிழின் இலக்கணப் பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார். இவ்விரண்டு வரிகளும், அகத்திய இலக்கணப் புராணத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.

      தமிழ்மொழி உலகின் முதன்மொழி! தோற்ற-நாசம் அற்ற முதுமொழி!!

      சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
      முதுமொழி நீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

      நம் இந்தியத் துணைக்கண்டத்துள் நான்மறை ஆரிய மொழி வருவதற்கு முன்புவரை உலகமுழுவதும் தமிழே பேச்சு மொழியாக இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.

      பெரியபுராணத்தின் திருஞானசம்பந்தர் புராணத்திலிருந்து, தமிழ்க் கவிதை வைகைநதியை வென்று கரையேறிய செய்தியைக் கூறி, “காலத்தை வென்றவள் எம்தமிழன்னை! வைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!” என்று மகிழ்கின்றார் சுந்தரனார்.

      வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
      காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

      தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது; ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட பச்சைப்பதிகம் ஓலைச்சுவடி வைகைநதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரைசேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத்தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறுவிளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா சுந்தரனாரின் மெய்யுணர்விலும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு! ஆரிய வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுட்பமான நுண்ணுணர்வு!

      “தமிழன்னையின் திருவாசகத்தின் படியை இறைவன் தன் கைப்பட எழுதிவாங்கிக்கொண்டது அவரின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே!” என்கிறார் சுந்தரர்.

      கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
      உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.

      ‘திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மையெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ்வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான். ‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலமுடையான் கைப்பட எழுதியது’ என்ற அழகிய சிற்றம்பலமுடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்ற தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி! கடையூழிக்காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப்பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Lunch Break’ வருமல்லவா? அப்போது, எம்தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத்தனிமையை இறைவன் போக்கிக்கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ்வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?

      தந்தை பெரியார் அவர்கள் சுந்தரனாரின் இத்தகைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாவை எங்கேனும் பாராட்டிப் பேசியிருக்கிறாரா என்பதை நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள். பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். “தமிழன் காட்டுமிராண்டி! தமிழ் காட்டுமிராண்டி மொழி!” என்று அவர் பேசினால், “தாத்தா பேரனைத் திட்டுவதில்லையா! அதுபோல்தான் இதுவும்!” என்று பூசிமெழுகும் தமிழரும், “சொந்த அறிவு வேண்டாம்! அய்யா தந்த அறிவு போதும்!” என்று முழங்கும் பெரியாரிய பக்திப் பழங்களும் பகுத்தறிவுக்குத் துணைசெய்பவர்களா? பெரியார் அவர்கள் தன் காலத்திலேயே பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வெற்றி கண்டவர் என்று முழங்கும் அவர் பக்தர்கள், அனைத்துத் திராவிடக் கட்சிகளும் கோவில்களில் யாகம் செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒரு திராவிடக் கட்சியின் மூதறிஞர் “இராமானுஜர் – மதத்தில் புரட்சிசெய்த மகான்” என்ற நெடுந்தொடருக்குக் கதைவசனம் எழுதுவதை எப்படிப்பார்க்கிறீர்கள்? கடவுள் மறுப்பு இயக்கம் இன்று பெரியாரின் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுக் கொடியை மட்டும் தூக்கிப்பிடித்துக் கொண்டு வெற்று ஆரவாரம் செய்கிறார்கள்.
      பெரியாருக்குப் பின் கண்மூடிப் பழக்கங்களுடன் கூடிய ஆன்மீக வியாபாரச் சாமியார்களிடமும், காசு ஒன்றையே குறியாகக் கொண்டு கொள்ளையடிக்கும் “யோகா குருமார்கள்” கொழுத்துப் பெருகும் மாநிலமாக தமிழகம் திகழ்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? பெரியாரின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்வது அவரின் பின்பற்றாளர்கள் என்பதை நினைவில் கொள்க. ஏன் இந்தச் சரிவு?

      தமிழினத்தின் மெய்யியல் தத்துவ சரித்திரம் சங்ககாலம் தொட்டு வளர்ந்து வந்திருக்கின்றது. இதை கணியன் பூங்குன்றனின்
      “யாதும் ஊரே! …. ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின்
      மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” முதல்,
      “கற்றதனால் ஆய பயன் என்கொல்! வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்?” என்ற வள்ளுவர் வழி,
      மனோன்மணியம் சுந்தரனார் “தமிழ்த்தாய் வாழ்த்து” வரை பரக்கக் காணலாம்.

      அறுபது ஆண்டுகள் பெரியாரிய திராவிட இயக்கங்கள், அறிவுப்பூர்வமான தமிழர்களின் மெய்யியல் தத்துவங்களையும் “மூடநம்பிக்கைகள்” என்று குழிதோண்டிப் புதைத்துவிட்டு, இன்று ஆரிய குருமார்களிடம் தாங்கள் மண்டியிடுவதோடு, தமிழர்களையும் மண்டியிட வைத்துள்ளனர். இது ஒருபுறம் கிடக்கட்டும்.

      பாரதி தன்னுணர்ச்சியுடன் பாடவில்லை என்று தாங்கள் தந்த சான்று எதைப் போலிருக்கிறது என்றால் “அழகே அழகு! மழை மட்டுமா அழகு! சுடும் வெயில்

      கூட ஒரு அழகு!” பாடல் திரைக் காட்சிக்காகத்தான் எழுதப்பட்டதே தவிர அது தன்னுணர்ச்சியுடன் எழுதப்படவில்லை; எனவே அதைக் கவிதையாகக் கூற

      இயலாது என்று தொடங்கி, திரை உலகக் கவிதைப் படைப்புகள் அத்தனையும் கவிதைகளல்ல; வெறும் திரைப்பாடல்கள் என்று முடிப்பது போல. இறைவனையே பாடிய கவிஞர்கள் தவிர, பெரும்பாலும் அரசர்கள், வள்ளல்கள் சார்ந்தே தமிழ்க் கவிஞர்கள் தமிழையும், இலக்கியங்களையும் வளர்த்திருக்கிறார்கள். பாரதிக்கு, எட்டயபுரம் மன்னர் சிறிது காலம் ஆதரவு தந்திருக்கிறார். போட்டிக்காக எழுதப்பட்டது எல்லாம் கவிதையல்ல என்பதும், “உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை” என்ற பாரதியின் வரிகளை உளப்பூர்வமாக எழுதப்படவில்லை என்று கருதுவதும் எமக்கு உடன்பாடன்று. இத்தகைய சூழலில் எம்துணை

      கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
      ஒன்றுநன்று உள்ளக் கெடும். – குறள் 109.
      (முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.)

      குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
      மிகைநாடி மிக்க கொளல். – குறள் 504.
      (ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.)
      என்னும் வள்ளுவமே!. எனவே, பாரதியின் பங்களிப்பையும், தந்தைப் பெரியாரின் சமூகநலப் பங்களிப்பையும் நன்றியோடு ஏற்கவும், ஆரியமே தமிழுக்கு அணிசேர்த்தது என்ற நிலைப்பாடுடைய உ.வே. சாமிநாதைய்யர்-அவர்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்த்தாத்தா” என்றழைக்கவுமே எம்மை எம்அய்யன் வள்ளுவன் பணிக்கின்றான்; எமக்கும் அதுவே உவப்பும் ஏற்பும். அனைவரின் கருத்துப் பரிமாற்றங்களுக்கு மிக்க நன்றி, குறிப்பாக, ஷாலி அவர்களுக்கும், MSV அவர்களுக்கும், இதைத் துவக்கப்புள்ளியாக்கிய ‘சோம.அழகு’ அவர்களுக்கும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!

  16. Avatar
    தாரா says:

    பாரதிக்கு நினைவு நாள்… கடந்தும் போனது…தமிழை வளர்த்த நல்லறிஞர் அவர்.தமிழுக்கு நினைவு நாள் வந்து விடக்கூடாது என்பதில் கட்டுரையாளருக்கும் பின்னூட்டம் எழுதியுள்ளவர்களுக்கும் ஒரே நிலைப்பாடுதான்..பாரதியும் அவரைப் போன்ற பல கவிகளும் போற்றி வளர்த்த ஒரு மொழி மெல்ல அழிந்து விடக் கூடாது. அம்மொழியை பேண நம்மை போன்றவர்கள் வழி காட்ட வேண்டுமே தவிர மொழி வளர்த்தவர்களையும் அவர்தம் சந்ததியினரின் இன்றைய வாழ்க்கையினை விமர்சிக்க கூடாதென்பேன்.அவர்கள் தலைமுறையினர் மட்டும் தான் மொழி காக்க வேண்டுமா? நமக்கும் அந்த கடமை உள்ளது.வரலாற்றில் காணப்படும் உயரிய கருத்துகளை உட்கொண்டு இன்றளவும் தமிழ் மொழி மட்டுமன்றி எல்லா *இந்திய* மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்து பிற மொழி காழ்ப்புணர்ச்சியை களைய முன் வர வேண்டும் என உறுதி பூண்டு அமைதியோடு வாழ்வோம். .எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து மொழி பேண தொடங்குவோம்….மக்கள் முயன்றால் முடியாததுதான் என்ன? தமிழ் வாழ்க!!இந்திய மொழிகள் வாழ்க!!

  17. Avatar
    BSV says:

    //தமிழ் வாழ்க!!இந்திய மொழிகள் வாழ்க!!//

    இக்கட்டுரை எழுப்பும் முதலும் கடைசியுமான ஆதங்கம் பிறமொழிகள் உள்ளுழைந்து தமிழைக் கொலை செய்கின்றன. அக்கொலையைச்செய்பவர் தமிழரே எனபதுதான். ஆங்கிலம் வந்து தமிழை ஒரேயடியாக இடுகாட்டுக்கு அனுப்பிவிட்டது. வடமொழியை வலிந்து திணிக்கிறார்கள் என்பதும். தமிழ் வாழ்க எனச்சொல்ல வேண்டுமானால், கண்டிப்பாக வடமொழியும் ஆங்கிலமும் ஒழிக என்று சொல்லத்தான் வேண்டும் என்பதுமே இக்கட்டுரையில் உணரப்பாலது. ஒண்ட‌ வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டினால் ஒண்ட வந்த பிடாரியை கொலுவில் வைத்துக்கும்பிட முடியுமா?

    1. Avatar
      govindsamy says:

      BSV அவர்கள், கட்டுரைப் பொருளை சுருக்கமாய் எடுத்துரைத்தமை அருமை.அவர்களின் முத்தாய்ப்பான வரிகள் நல்முத்துக்கள். வாழ்த்துக்கள்!

  18. Avatar
    ஷாலி says:

    //தந்தை பெரியார் அவர்கள் சுந்தரனாரின் இத்தகைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாவை எங்கேனும் பாராட்டிப் பேசியிருக்கிறாரா என்பதை நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்..//

    பேராசிரியர் அவர்கள், மனோன்மணியம் சுந்தரனாரை புரிந்து கொண்ட அளவில் தந்தை பெரியாரைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை.சுந்தரனார் அவர்களை கூடுதலாக தெரிந்து கொண்டது செஞ்சோற்று கடனாக இருக்கலாம். தமிழின் பெருமையை, திருவிளையாடப்புராணம்,பெரியபுராணம்,திருதொண்டர்புராணம்,திருவாசகம்,போன்ற புராணங்களிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டி மனோன்மணியம் சுந்தரனார் உயர்த்துவதை தந்தை பெரியார் பாராட்டவில்லை என்று வருத்தப்படுகிறார்.

    பாவம் பேராசிரியர்! நம்ம தமிழ்ப்பண்டிதர்,தமிழ்புலவர்களுக்கு தந்தை பெரியார் கொடுத்த மரியாதையை அவர் அறியவில்லை.

    “இன்று புலவர்கள் என்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.என்றாலும் அவர்கள் ஆரிய இலக்கியங்களை விற்று வயிறு வளர்க்கிறவர்கள்தான் கலைவாணர்கள் என்பவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.அவர்கள் 100 க்கு 100 பேரும் ஆரியப் பண்புள்ள இலக்கியங்களைக் கலைக்குள் புகுத்தி, ஆரிய அடிமைகளாக இருந்து,வயிறு வளர்க்கிறவர்கள்தான்.அவர்கள் கல்லூரிகளிலும்,உத்தியோகங்களிலும்,பள்ளிகளிலும் இருந்து கொண்டு புத்தகம் போட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

    நமக்கு நம் பண்புக்கு வேண்டிய இலக்கியங்களைக் எழுத யாரும் இல்லை….அறிவை ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியமே தேவை.ஆகவே, இனிமேல்தான் நமக்கான இலக்கியம் தோன்றவேண்டும்.அதில் இந்து மதம்,ஆத்திகம்,ஆரியம்,மூன்றும் இருக்கக்கூடாது.அறிவு,ஒழுக்கம்,விஞ்ஞானம், ஆராய்ச்சி,என்றால் அவை நம் நாட்டில் நாத்திகம்,மத வெறுப்பு என்றாக்கப்பட்டது.அதனாலேயே நம் நாட்டில் நல்ல பயன்படும் இலக்கியம் இல்லை என்பதோடு தோன்றவும் இல்லை.

    காவியங்கள் என்ற பெயரில் சில இலக்கிய நூல்கள் இருக்கின்றன அவை எதற்கு உதவும் என்பதே எவருக்கும் தெரியாது.அவை மக்களிடம் பரவவும் இல்லை.உண்மையில் தமிழருக்கு உகந்த ஒரு இலக்கிய நூல்கூட இல்லை.சிலப்பதிகாரத்தில் ஆரியம் மடமை கலக்காமல் இருக்கும் பத்து வரிகளைக் காண முடியாது.இப்படித்தான் மற்றவையும்….

    ஒழுக்கத்தைப் போதிக்கும் இலக்கிய நூல் எங்கே இருக்கிறது?ஒழுக்கத்திற்க்காக இலக்கியம் இல்லை என்பது மாத்திரமல்லாமல்,ஒழுக்கத்திற்கான கல்வியும் இல்லை; ஒழுக்கத்திற்கான மதமும் இல்லை;ஒழுக்கத்திற்க்காக அரசும் இல்லை.ஒழுக்கக்கேட்டிற்கும், மோசடி வஞ்சத்திற் கும், துரோகத்திற்கும் கல்லூரி, சகல கலாசாலை என்று சொல்லத்தக்க வண்ணமே இவை இருக்கின்றன.” — தந்தைப் பெரியார். விடுதலை.3-9-1956.

    தந்தை பெரியார் சொன்னதுபோலவே இன்றைய பல்கலைகழகங்கள் இருக்கின்றன.உயர் அறிவியல் கல்வி போதிக்கும் கலாசாலைகள் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றன.உதாரணமாக,

    நமது பேராசிரியர் திரு.கிருஷ்ணன் நல்லபெருமாள் பணிசெய்யும் மனோன்மணி சுந்தரனார் பல்கலைகழகத்தில், சில ஆண்டுகளுக்குமுன்பு அங்கு பணிபுரியும் ஊழியர்களில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்டோர் இரண்டாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர்.குறிப்பாக கண்காணிப்பாளர் கணேசன் தற்கொலை செய்து கொண்டதும் நிர்வாகம் பயந்து போய் பரிகாரம் செய்வதற்கு ரூபாய் பதினைந்து ஆயிரம் செலவில் பல்கலைகழகத்திற்குள் துணை பதிவாளர் தலைமையில் ( 14- 9-2003) யாகம் நடத்தினார்கள். இந்த பண்டிதமார்கள் அறிவுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை. கற்றுக்கொடுப்பது அறிவியல் பாடம்.கடைப்பிடிப்பது ஆன்மீக மூடம்….பெரியார்…பெரியாரே!

    1. Avatar
      கிருஷ்ணன் நல்லபெருமாள் says:

      பெரியார் தமிழ்ப்புலவர்களைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் ‘ஷாலி’ அவர்கள் சுட்டிக்காட்டுவதற்கும் முன்பே பெரியாரைப் பற்றியும், அவரின் தமிழறிவைப் பற்றியும் 1951-லேயே தமிழறிஞர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் கூறுவதைக் கேளுங்கள்:

      “பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் திறமையைக் குறை கூற முடியாது.

      இலக்கியத்துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ராவுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவருக்கு நல்லெண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பயனற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமான கருத்து.

      ஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ராவுக்கு அவற்றைப்பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்பமுடியும்?

      ஆயினும், இலக்கியத் துறையில் எல்லாம் உணர்ந்தவர் போல அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், ‘ஆராய்ச்சி’ என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவதும் ஈ.வெ.ரா-வுக்குத் தொழிலாகிவிட்டது. வேறு வேறு துறைகளில் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் வரவேற்பவர்கள் கூட இலக்கியத் துறையில் அவருடைய போக்கை எற்றுக் கொள்வதில்லை.” – “இலக்கியத்தின் எதிரிகள்” – சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம்., முதல் வெளியீடு:தமிழ் முரசு – ஏப்ரல் 1951; இணையதள வெளியீடு: http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0327.html

      திராவிடமொழிக் குடும்பத்தினரிலேயே, கன்னடமொழி பேசுவோருக்குத் தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் எப்போதும் அசூயையும் வெறுப்பும் காலம் காலமாகத் தொடர்ந்து வருகின்றது, தமிழை ‘அரவம்'(பாம்பு) என்று அழைப்பதும், தமிழர்களை ‘அரவாடு'(நஞ்சுடையோன்) என்றும் வெகுகாலமாகக் கன்னடர்கள் அழைக்கின்றனர். (ஒரே மொழியாம் தமிழ் பேசியவர்களைப் பிரிக்கவே சமற்கிருதம் என்னும் ஆரியத்தைக் கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மற்ற திராவிடமொழிகளை உருவாக்கினர் ஆரியர்கள். திராவிடமொழிகளே ஆரியச் சதியினால் பிறந்தது என்பதே மொழியியல் அறிஞர் கால்டுவெலார் கூறும் மொழியியல் வரலாறு) அந்தப் பகையுணர்ச்சி
      காவிரி நீர்ப்பங்கீடு வரையிலும் நீள்கிறது. (தமிழ் வரலாற்றுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் இருண்டகாலத்தை உருவாக்கிய களப்பிரர்களின் தாய்மொழி கன்னடம்) அந்தவகையில், பெரியாரின் தமிழ் இலக்கிய வெறுப்பு, தமிழ்ப் புலவர்களைப் பற்றிய வெறுப்பு அனைவரின் புரிதலுக்கும் எளிதானது. அது அவரின் இரத்தத்தில் ஊறியது. அவர் கருத்தை தமிழறிஞர் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. அதைக்குறித்து விவாதிப்பதும் வீண். என்றாலும், பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்திலிருந்து தமிழ்மக்களை விடுவித்ததில் பெரியாரின் பங்களிப்பை நினைத்து,
      கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
      ஒன்றுநன்று உள்ளக் கெடும். – குறள் 109.
      (முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.)
      என்றவகையில், தமிழினம் என்றும் பெரியாருக்கு நன்றியுடன் இருக்கும். இன்று நாம் இருக்கும் நாடு நமது என்று நமக்குத் தந்தவர் என்றவகையிலும் பெரியார் பெரியாரே!

      ஏதோ கோழியைக்கேட்டுதான் குருமா வைப்பதைப் போல, ம.சு.பல்கலையில் யாகம் செய்த தனிமனிதர்களின் நிலைப்பாட்டை அதற்குத் தொடர்பே இல்லாதவர்களைத் தொடர்பு இருப்பதாகப் பேசுவது ஷாலி என்ற தனி நபரின் கருத்துச் சுதந்திரம். ஒரு நிறுவனத்தில் நடக்கும் சில பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில செயல்களுக்காகத் தனிநபர்களுக்கு ‘மூடம்’ என்று பட்டம் கட்டும் ‘ஷாலி’ அவர்களுக்கு மிக்க நன்றி.

      இப்படி ‘நன்றி’ சொல்லும் பண்பாடும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் வகுத்ததே. ‘இலக்கியத்தின் எதிரிகள்’ என்ற கட்டுரைக்காக அவரைப் பெரியாரின் பக்தர்கள் கெட்டவார்த்தைகளால் போற்றியபோது, சிலம்புச்செல்வர் தந்த பதிலை இங்கே தருகின்றேன்:

      “கடந்த இதழில் “இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. .. என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பண்புடைய அன்பர்கள் பலர், ராமாயணத்தைப் பற்றி எனது கண்ணோட்டத்தின் வழி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டுமென்று கடிதங்கள் மூலமும் நேரிலும் என்னை வற்புறுத்தி வருத்துகின்றனர். ஆனால் பண்பாட்டிற்குப் புது இலக்கணங் கண்டுவிட்ட தி.க.-தி.மு.க வட்டாரத்தினர் தங்களுக்கே உரிய திராவிட பாஷை’யில் என்னை ஏசி எழுதி வருகின்றனர். அவர்களிடம் இதைத்தவிர வேறு கண்ணியமான விவாதத்தையோ, கருத்தையோ எதிர்பார்க்கமுடியாதுதான்.

      நவீன ‘கலாச்சாரம்!’

      அறிவு இருப்பவர்களிடையே அபிப்பிராய பேதம் ஏற்படுவது இயற்கை. அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கே அதுதான் அடையாளம். ஆனால் அறிவோடு பண்பாடும் உடையவர்களானால் அபிப்பிராய பேதத்தைப் பரிமாறிக்கொள்ளுகிறபோது ஆத்திரத்துக்கு இடங்கொடுக்க மாட்டார்கள். அரசியல் விவாதங்களில் ஆத்திர உணர்ச்சி கலப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் ஆத்திர உணர்ச்சி கலப்பதற்குக் காரணமேயில்லை. ஆனால் இன்றைய தமிழ் நாட்டில்; அதுவும் தி.க.-தி.மு.க. வட்டாரத்தில்-பண்பாடு என்பது அபிப்பிராய பேதத்திற்குரிய விஷயமாகி விட்டது. ஆகவே, இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் கூட பண்பாட்டை எதிர்பார்க்க முடியவில்லை.

      தி.க-தி.மு.க வட்டாரத்தினரின் வசை மொழிகளுக்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால், அது அவர்களுக்கு வழக்கமாகி விட்ட தொழில். எப்பொழுதும் யாரையும் ஏசிக் கொண்டிருப்பதையே அவர்கள் நவீன ‘கலாச்சாரம்’ ஆக்கிவிட்டார்கள். ஆகவே, அவர்களுடைய போக்கை, ஜனநாயகத்தின் விளைவாக நேர்ந்த விபத்து என்று எண்ணிப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். …. தமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அதுமட்டுமல்ல, அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மானத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப்பேசுவதும் அவர்களின் அன்றாடவேலை. ” –- சிலம்புச்செல்வர் ம.பொ.சி. முதல் வெளியீடு: தமிழ் முரசு – ஏப்ரல் 1951; இணையதள வெளியீடு: http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0327.html ‘ஷாலி’ அவர்களின் அறிவின் முதிர்ச்சிக்கு மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

  19. Avatar
    ramu says:

    ஓரளவு ஆங்கிலம் படித்தவர் ஒரு கடைக்காரர் முடித்திருத்தப்பவரிடம் ” நன்றி ” என்று சொன்னால் திருப்பி ஆங்கிலத்தில் சொன்னால் என்ன எனக்கு புரியும் ( தேங்க்ஸ் ) என்று சொன்னால் குறைந்தாபோவீர் நானும் ஆங்கிலம் படித்தவர் தான் என்று சண்டைக்கு வருகிறார்கள்

  20. Avatar
    ஷாலி says:

    //ஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ராவுக்கு அவற்றைப்பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்பமுடியும்?..//

    பெரியாரை தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கடும் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்கள் பெரியாரால் பலமாக தாக்கப்பட்டது தான் . தமிழறிஞர்களைப் பற்றி பெரியாரின் பார்வை இதுதான்,

    “தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு “கவைக் குதவாத” கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத் தவறினார்கள்.
    சிலப்பதிகாரத்தை தலை சிறந்த நூலென்று இன்னமும் போற்றி வருகிறார்கள்.அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக் காட்டு. அந்த சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணை யிடுகிறாள், பார்ப்பனரை அழிக்காதே என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரிய பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்”.

    சிலம்புச் செல்வர். ம.பொ.சி அவர்களுக்கு பெரியார் பிடிக்காததன் காரணம் புரிகிறதா?

    இன்னுமும் பெரியார் தமிழ் கீழ் நிலையை அடைந்ததற்கு மிகவும் வேதனையடைகிறார்,

    “தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

    மொழி என்பதை பற்றிய மற்றொரு கருத்தை இங்கு பெரியார் வெளியிடுகிறார். இதையயல்லாம் தமிழிறிஞர்கள் உணர வேண்டும்,

    “மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும் சுப்பிரமணியனும் பேசிய மொழி. உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதேயாகும்”.

    தமிழை விட தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கைவைக்கிறார் என்று திசை திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.

    தமிழைப் பற்றி கூறும் போது, “தமிழைப் பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனும் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டும் புரிந்தவனும் அல்ல” என்றும் அடக்கமாகக் கூறுகிறார்.

    “மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது”.

    “உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன”. (குடி அரசு 26.1.1936).

  21. Avatar
    ஷாலி says:

    //கன்னடமொழி பேசுவோருக்குத் தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் எப்போதும் அசூயையும் வெறுப்பும் காலம் காலமாகத் தொடர்ந்து வருகின்றது//

    ம.பொ.சி.யின் தமிழின துரோகத்தை கி.ஆ.பெ.விசுவநாதம் அப்போதே எழுதினார்.
    “திரு ம.பொ.சி. அவர்களுடைய நடைமுறைச் செயல்களையும் எழுத்தையும், பேச்சையும் பார்க்கும் போது பழையபடியும் வேதாளம் கட்டை அவிழ்த்துக் கொண்டு முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது போல் உள்ளது.

    ஈ.வெ.ராவையும் அவருடைய விடுதலையையும் மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கு நலம் தரும் கொள்கைகளைக் கூடத் தாக்க முன் வந்திருக்கிறார். காங்கிரசுக் கட்சிக் கூட்டங்களில் இருந்து கொண்டு பிற கட்சியினரின் கொள்கைகளை வசை மொழிகளால் தாக்க முன் வந்து விட்டார்.
    வட நாட்டார் தமிழ்நாட்டைச் சுரண்டவில்லை என்று பேசத் தொடங்கிவிட்டார். ம. பொ. சி.யால் அவருக்கோ, தமிழ் நாட்டிற்கோ, எவ்விதப் பயனும் ஏற்படாது என்பதை நட்பு முறையில் அறிவித்துக் கொள்கிறோம்”. (தமிழர் நாடு 16-12-50)

    17-1-63 அன்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ம.பொ.சி.

    “நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ, வெட்கமோ படவில்லை. மாறாக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தைச் சார்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஒரு இந்துவாக மட்டுமில்லாமல், தேச பக்தியுடைய இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர், இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது” என்றார் (செங்கோல் 27-1-63)

    “பாரத ஒருமைப்பாடு காணவே தமிழில் இராமக்காதை தந்தார் கம்பர், அயோத்தியில் பிறந்த ராமனும், மிதிலையில் பிறந்த சீதையும் நமக்கு அன்னியராவாரோ? இல்லை உறவினரே!” (செங்கோல் 14-4-63)

    “பொதுவாக, காந்தியடிகள் காண விரும்பிய இராமராஜ்யத்தை காண்பதே நாட்டு மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். காந்தியடிகள் ராமராஜ்யத்தை விரும்பியது, தமக்கா அன்று நமக்காக! ஆகவே அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதொன்றே நம்முடைய வேதனைகளுக்கெல்லாம் பரிகாரம்.” (செங்கோல் 2-10-66)

    ‘என் இந்திய நாட்டு மதம் – இந்து மதம் அழியக் கூடாது. அழிப்பாருண்டானால், உயிர் கொடுத்தும் காக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களைப் போலவே எனக்கும் உண்டு. இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இந்து மதம் பெரு மளவுக்குப் பயன்பட்டு வந்திருக்கின்றது. ஆகவே இந்து மதம் அழியுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு நலிந்து போகும் என்று நம்புபவர்களில் நான் ஒருவன்’. (இந்திய இலக்கியச் சிற்பிகள், ம.பொ. சிவஞானம் – பெ.சு. மணி, பக்.113).

    பேராசிரியர்.கிருஷ்ணன் பெருமாள், அவர் தலைவர் மா.பொ.சிவஞான கிராமணியார் போன்ற ராமபக்தர்களிடம் பெரியாரின் பிறப்பு சான்றிதழ் தேடுவதும் காலக்கொடுமைதான்.!

    “இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதமே என்று சொல்லப்படுகிறது. தமிழிடத்துப் பற்றுடையவர்கள் இதனை மறுக்கத் தேவையில்லை.” (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக். 19)

    “இன்றைய சூழ்நிலையில் தமிழ் நாட்டு இந்துக்கள் மத விஷயத்தில் மறுமலர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. இந்திய தேசீய ஒருமைப்பாட்டுக்காவும் அது தேவைப்படுகிறது. அது தவறல்ல என்பதைநாம் உணர வேண்டும். இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் கருதியும் நான் சமஸ்கிருதத்தை வெறுக்க மறுக்கிறேன்” (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.25 )

    “சமஸ்கிருத மொழியைப் பிழையறப் பயின்று புரோகிதத் தொழில் புரிவோர் இருப்பார்களாயின் அந்தப் புரோகிதர்களைக் கொண்டு தமிழர் தங்கள் வீட்டுத் திருமணங்களைச் செய்வதை ஏற்கலாம்.” (ம.பொ.சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.38)

    “கல்வியின் ஒரு கட்டத்தில் தமிழகத்துப் பள்ளிகளில் சமஸ்கிருதமும் விருப்பப் பாடமாக இருக்கலாம்” (ம.பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.40)

    வருணாசிரம தருமத்தை வேரோடு கிள்ளி எறிதல், சாதி ஏற்றத்தாழ்வுகளைத் தரைமட்டமாக்குதல், மானுட சமத்துவம் பேணுதல் உள்ளிட்ட உயரிய குறிக்கோள்களுடன் உருவான தே திராவிட இயக்கமாகும். ஆனால் ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரில் இயக்கங்கண்ட ம.பொ.சி. பார்ப்பனியத்திற்குப் பாலூட்டுதல், பழமைக்கும் மூடநம்பிக்கைக்கும் பட்டுக் கம்பளமும் விரித்தல், ஆரியத்திற்கு அடிமைத் தொண்டு புரிதல் போன்ற வீடணஆழ்வார் வேலைகளை ஆராவாரத்தோடு மேற் கொண்டார்.

    சமஸ்கிருதத்திற்கு சாமரம் வீசும் கிராமணியார்,பேராசிரியர் பார்வையில் தமிழ்த்தலைவனாக தெரிகிறார்.பாவம் பெரியார்!இவருக்கு இன்னும் தமிழனாகவே தெரியவில்லை. பெரியார் தமிழனாக இல்லாவிட்டால் …..இங்கு திருவள்ளுவர் கூட தமிழன் இல்லையென்றே இவர்கள் சொல்லுவார்கள்.ஏனெனில் 1330 குறளில் ஒன்றில் கூட தமிழ்..அல்லது தமிழன் என்றே சொல்லே இல்லை அல்லவா?

    “என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா – பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும். அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்!” (ஈ.வெ.ரா. சி. பக். 1874) (விடுதலை தலையங்கம் 15.12.1957)

    1. Avatar
      KRISHNAN NALLAPERUMAL says:

      பதில்-பகுதி-1
      ————-
      பாரதியார்(பாட்டுக்கொரு புலவன்), பெரியார்(சமூகநீதிக்கானப் போராளி, தமிழர்களைப் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுவித்ததன் காரணமாகவே தமிழர்களால் ‘தந்தை பெரியார்’ என்று போற்றப்படுபவர்), ம.பொ.சி(சிலம்புச் செல்வர்)., கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழ்த்தாத்தா உ.வே.சா.(பழமையான தமிழ் நூல்களைத் தொகுத்து, தமிழ் இலக்கியத்தின் தொன்மையைக் காத்தவர்), அண்ணா (அரசியலில் நேர்மை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டு என்று போற்றும் சான்றாண்மை) போன்றோரிடம் அவரவரின் தனிப்பட்ட பங்களிப்புகளுக்காகவே நடுநிலையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஆன பெரும்பாலோனார்களால் போற்றப்படுகின்றார்கள். அவர்களை ‘மேற்கோள்’ காட்டுவதாலேயே, அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களின் ‘அணுக்கத் தொண்டரடிப்பொடி’யாக மேற்கோள் காட்டியவரை நினைப்பதாலேயே ஷாலி அவர்களுக்குப் பெரும்பாலும் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. ‘சிலம்புச்செல்வர்’ என்ற ஒரு பரிமாணத்தில் ‘ம.பொ.சி.’யின் எழுத்தைப்பிடிக்குமேயன்றி, ‘ஷாலி’ அவர்கள் குறிப்பிட்டபடி ‘தலைவராக’ அன்று. ‘ம.பொ.சி’ அவர்களின் சமற்கிருத, ஆரிய நிலைப்பாடு எமக்கு மட்டுமல்ல; எம்போன்ற தமிழர் எவர்க்கும் உடன்பாடாகாது.
      அதேபோல, பெரியார் அவர்களுடைய ‘சமூகநீதிப் போராட்டம், அதற்காகக் கைக்கொண்ட பார்ப்பனீய எதிர்ப்பு’ ஆகிய இரு பரிமாணங்கள் மட்டுமே எம்போன்றோர் போற்றுவது. வேறெந்தத்துறை குறித்த பெரியாரின் கருத்தை எம்கருத்தில் கொள்வதில்லை. பெரியாரின் தொண்டர்களுக்கு, மற்றதுறைகள் குறித்தும் பெரியார் கூறும் அனைத்தும் ‘வேதவாக்குகள்’; அதை ஏற்றுக்கொள்ளாதோர் அனைவரையும் கெட்டவார்த்தைகளால் வசவுமாரி பொழிவது அவர்களின் ‘பெரியார் பக்தி’ என்று சிலம்புச் செல்வர் கூறியதை ‘ஷாலி’ அவர்களின் அனல் கக்கும் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. //பேராசிரியர்.கிருஷ்ணன் பெருமாள், அவர் தலைவர் மா.பொ.சிவஞான கிராமணியார் போன்ற ராமபக்தர்களிடம் பெரியாரின் பிறப்பு சான்றிதழ் தேடுவதும் காலக்கொடுமைதான்.! // “வெளிப்படையாக தன்னைப்பற்றிய உண்மைகளை கூறிக்கொண்டவர் பெரியார்தான். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கான அணிந்துரையில் “என் அக்கா மகளுக்கு திருமணம் நடந்தது. அவரின் கணவர் இறந்துவிட்டார். மறுமணம் பற்றி பேச்சு வந்தது. நாங்கள் கன்னட பலிஜா நாயுடு வகுப்பை சேர்ந்தவர்கள்; எங்களுக்குள் விதவை மறுமண வழக்கம் கிடையாது என்று சொன்னார்கள். நான் அதை மாற்றி மறுமணம் செய்து வைத்தேன்” என்று எழுதியிருக்கிறார்”. http://www.visai.in/2015/01/05/periyar-and-tamil-nation-com-kolathur-manis-speech/ . பெரியாரே பெரியாருக்குக் கொடுத்த ‘பிறப்புச் சான்றிதழ்’. 1929களில் திருக்குறள் பற்றி பெரியாருக்கு நல்லெண்ணம் இருந்ததில்லை.
      20.01.1929 குடியரசு இதழில் பெரியார், ‘‘ குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.
      திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார் என்று விமர்சனம் செய்த பெரியாரே, இதற்கு முரண்பட்ட வகையில் திருக்குறளை உயர்த்திப் பேசியது 19 ஆண்டுகள் கழித்து!
      14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் பெரியார் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

      23, 24-10-1948 அன்று பெரியார், ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.
      மேற்கண்டவற்றை, ஷாலி அவர்களின் மொழியில் கூறுவதானால், “முதலில், திருக்குறள் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய பெரியாரே பிற்காலத்தில் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்றும், இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிவிட்டு, அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்றும், மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிவிட்டு, அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்றும் அந்தர் பல்டி அடித்தார். முரண்பாட்டின் மொத்த உருவம் பெரியார்தான் என்பதே சரி!” என்பதாகும். ஆனால், என்னைப் போன்றோர் கருதுவதும், கூறுவதும் பெரியார் அவர்கள் திருக்குறளை நன்கு படித்துணர்ந்தபின், தன் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் என்பதே. இதை ‘முரண்’ என்று கூறமாட்டேன். படித்துப் புரிந்துகொண்டார் என்றுதான் கூறுவேன்.
      கருத்துப் பரிமாற்றம் தனி மனிதரை ‘கிராமணியார்’ என்று தாக்கும் அளவு தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஆம், ம.பொ.சியார் செல்வந்தரல்லர்! வடதமிழ் நாட்டில், மிக மிக ஏழைக் குடும்பத்தில், சமூகத்தில் மிகவும் பிற்பட்ட, கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர்தான். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் பள்ளியில் படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. ம.பொ.சி.யின் கிராமணி குலப்பிறப்பைக் குத்திக் காட்டும் உயர்ந்த குணம் உடையவர்கள்தானே பெரியாரின் பின்பற்றாளர்களான ‘ஷாலி’ போன்றோர். இவர்கள்தாம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளின் காவலனாக நடிப்போர். ஏன் இந்தத் தீண்டாமைக் குணம்? பார்ப்பன ராஜாஜி கடைசி வரை இவரை ‘கிராமணி’ என்றுதான் அழைத்து வந்தார். அவருக்கும் பெரியாரியவாதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஷாலி அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இத்தகைய பெரியாரியவாதிகள் பூணூல் அணியாத பார்ப்பனர்கள். இதுவல்லவா பார்ப்பனீயம்?
      ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அவர்களால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாகவே வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் ஆகிய கட்டபொம்பன் இருந்தான். அவனை கொள்ளைக்காரான் என்றே 18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வம்சமணிதீபிகை என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆனால் இது ஆங்கிலேய அரசின் சதிச் செயல் என்றும் கட்டபொம்மன் உண்மையில் தேசிய போராட்ட வீரன் என்றும் கட்டபொம்மனின் வரலாற்றை 20-ஆம் நூற்றாண்டில் மீள்வாசிப்பு செய்து அவனை இந்திய சுதந்திர போராட்ட முன்னோடி என்று நிறுவியவர் தமிழ்த் தேசிய முன்னோடியான ம.பொ.சி.யே. கட்டபொம்மனைப் பற்றிய பல நூல்களையும் நாடகங்களையும் இயற்றித் தன் சொந்த முயற்சியில் தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தவர்; கட்டபொம்மன் விழா எடுத்தவர். கம்பளத்து நாயக்கர் என்னும் தெலுங்கு வம்சாவளியைச் சார்ந்தவன் என்று தெரிந்தும் வீரபாண்டிய கட்டபொம்மனை தமிழ்நாட்டில் தோன்றிய தேசிய போராட்டவீரனாக எந்த பிணக்கும் இன்றி முன்மொழிந்தவர் ம.பொ.சி.யாவார். அன்றைய தமிழறிஞர்கள் டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை,பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பலரும் வீரப்பாண்டியகட்ட பொம்மனை ஒரு மாவீரனாக போற்றினர். இதே ம.பொ.சி தான் பின்னர், சென்னையை ஆந்திரா வசம் போகாமல் போராட்டம் நடத்தி தடுத்தார். தெலுங்கு தேசத்திற்கு எதிராக, தமிழ் நாட்டு எல்லைப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவருக்கு இல்லாத இனக்காழ்ப்பு திராவிடம் பேசும் ஷாலி போன்ற பெரியாரியவாதிகளிடம் உண்டு என்பது வருத்தம் தரும் உண்மை. இனம் சார்ந்த அரசியல் போராட்டத்திற்கும் இனக்காழ்ப்பு உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர் ம.பொ.சி. இதை இனமானம் பேசும் திராவிட இயக்கத்தார்கள் கடைப்பிடிப்பதில்லை. எம்.ஜி.ஆர். அவர்களை ‘மலையாளி’ என்று முத்திரை குத்த முயன்ற ஒரு பகுதி திராவிட இயக்கத்தாரின் ‘சிறுமதி’ப் பின்விளைவே மற்ற திராவிட இயக்கத்தாரும் தெலுங்கு, கன்னடத்தார்கள் என்று ‘மலையாள திராவிடத்தார்கள் எதிர்வினையாற்ற, ஒட்டுமொத்த திராவிடர்களின் முகமூடிகளும் கிழிந்து தொங்கின. இத்தகைய மோசமான சாதி, இன, மதக் காழ்ப்புணர்ச்சியை கக்கிய திராவிட இயக்கத்தாரின் தொடர்ச்சியாகவே, அதே திராவிட இயக்கத்திலிருந்து வெளியே வந்த ‘முன்னாள் திராவிட இயக்கத்தார்கள் – இன்றைய ‘தமிழ்த் தேசியவாதிகள்’ வீரபாண்டிய கட்டமொம்மனை ‘வடுக வந்தேரி’ (விஜயநகர அரசு விட்டுச் சென்ற மிச்சம்) என்றும் ‘தமிழினத்தை சுரண்டித் தின்ற கூட்டத்தின் தலைவன்’ என்றும் அசிங்கமாக அடையாளப்படுத்துகின்றனர். ஆதியில் ‘திராவிட இயக்கத்தார்கள்’ ஆடிய ‘இனமான நாடகம்’ அவர்களுக்கு எதிராகவே பேசப்படுகிறது இன்றைய தமிழ்த் தேசியவாதிகளால் என்பதே கசப்பான உண்மை. விதைத்ததுதானே முளைக்கும்? இன்றைய ‘தமிழ்த் தேசியம்’ இனத்தாக்குதலுக்கு முக்கியத்துவம் தரும் போக்கை கொண்டிருப்பதற்குக் காரணம் ‘திராவிட இயக்கத்தில்’ இருக்கும்போது அவர்கள் கற்ற பாடம் என்பதே உண்மை.
      தமிழகத்துக்கு ம.பொ.சி.யின் பங்களிப்பு அளப்பரியது. வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார். ‘வைக்கம் வீர’ரான பெரியார், இதற்கு ஆதரவு தராதது மட்டுமல்ல, மலையாளிகளுக்கு ஆதரவாகவும் பேசினார் என்பது வேறுகதை.(இதுதான் தமிழர்கள் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்ட திராவிடம்.) இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது.
      திராவிட இயக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு ‘தமிழ் தேசிய இயக்கம்’ பெரியார் காலத்தில் இயங்கி வந்தது. மறைமலைஅடிகள், பாவாணர் போன்றவர்களின் தமிழிய உணர்வில் வளர்ந்தவரான பாவலரேறு பெருஞ்சித்தனார் முன்னெடுத்த தமிழ் தேசியம் அவர்களிடம் இருந்து வேறுபட்டுத் தீவிரமானதாக இருந்தது. ஆரிய, பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தும், இந்து மதச் சிந்தனை கட்டுகளில் இருந்தும் தமிழனை பிரித்தெடுக்க ஒரே வழி தனித்தமிழ்நாடு பிரிவினைப் போராட்டமே என்று துணிந்து தனது கருத்துகளைத் ‘தேன்சிட்டு’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தார். அதனால் பலமுறை சிறை சென்றார். இவர்கள் முன்னெடுத்தத் தமிழ்த் தேசியம் பார்ப்பன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றொரு இயக்கமாகவே செயல்பட்டது. திராவிட கருத்தாக்கங்களில் இருந்து அன்றைய தமிழ் தேசியம் ‘இறையியல்’, ‘மதம்’ போன்ற கருத்துகளிலேயே அதிகம் வேறுபட்டதாக இருந்தது. தலைவர்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர இனஅரசியல் கொள்கை மோதல்கள் இல்லை என்றே கூறலாம்.
      ஆரியப்பார்ப்பனீய அத்துவிதக்கொள்கைகளிலும், ஆரியப்புராணங்களிலும், பகவத்கீதையிலும் மகாகவி பாரதியார் கொண்டிருந்த ஈடுபாடு, அவரின் முதன்மைச் சீடரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குத் துளியும் உடன்பாடானது அன்று; ஆயினும், பாரதியின் கவித்துவத்தின்மேல் கொண்ட பற்று ஒன்றே அவரின் இயற்பெயரான ‘கனகசுப்புரத்தினம்’ என்பதை ‘பாரதிதாசன்’ ஆக்கியது. தாசனானது ‘பாரதியின் கவித்துவத்துக்கேயன்றி, அவரின் ஆரியப்பார்ப்பனீய அத்துவிதக்கொள்கைகளுக்கோ, மானுடத்துக்கு எதிரான ஆரியப்புராணக் கருத்துகளுக்கோ, சனாதன தர்மத்தைத் தூக்கிப்பிடிக்கும் பகவத்கீதை ‘ஸ்லோகத்’துக்கோ அன்று என்பதைக் கருத்தில் கொண்டால் மட்டுமே, பாரதிதாசனைப் புரிந்துகொள்ள முடியும். அதேநேரம், பாரதிதாசன் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பாரதிதானின் இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும் எம்போன்றோருக்கு எந்த முரணும் தோன்றுவதில்லை. பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதே தமிழர்களின் பண்பாடாக இருந்துவருவதை வரலாற்றின் காலச்சுவடுகளிலிருந்து அறியலாம்.

    2. Avatar
      KRISHNAN NALLAPERUMAL says:

      பதில்:பகுதி-1
      ————–
      பாரதியார்(பாட்டுக்கொரு புலவன்), பெரியார்(சமூகநீதிக்கானப் போராளி, தமிழர்களைப் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுவித்ததன் காரணமாகவே தமிழர்களால் ‘தந்தை பெரியார்’ என்று போற்றப்படுபவர்), ம.பொ.சி(சிலம்புச் செல்வர்)., கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழ்த்தாத்தா உ.வே.சா.(பழமையான தமிழ் நூல்களைத் தொகுத்து, தமிழ் இலக்கியத்தின் தொன்மையைக் காத்தவர்), அண்ணா (அரசியலில் நேர்மை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டு என்று போற்றும் சான்றாண்மை) போன்றோரிடம் அவரவரின் தனிப்பட்ட பங்களிப்புகளுக்காகவே நடுநிலையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஆன பெரும்பாலோனார்களால் போற்றப்படுகின்றார்கள். அவர்களை ‘மேற்கோள்’ காட்டுவதாலேயே, அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களின் ‘அணுக்கத் தொண்டரடிப்பொடி’யாக மேற்கோள் காட்டியவரை நினைப்பதாலேயே ஷாலி அவர்களுக்குப் பெரும்பாலும் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. ‘சிலம்புச்செல்வர்’ என்ற ஒரு பரிமாணத்தில் ‘ம.பொ.சி.’யின் எழுத்தைப்பிடிக்குமேயன்றி, ‘ஷாலி’ அவர்கள் குறிப்பிட்டபடி ‘தலைவராக’ அன்று. ‘ம.பொ.சி’ அவர்களின் சமற்கிருத, ஆரிய நிலைப்பாடு எமக்கு மட்டுமல்ல; எம்போன்ற தமிழர் எவர்க்கும் உடன்பாடாகாது.
      அதேபோல, பெரியார் அவர்களுடைய ‘சமூகநீதிப் போராட்டம், அதற்காகக் கைக்கொண்ட பார்ப்பனீய எதிர்ப்பு’ ஆகிய இரு பரிமாணங்கள் மட்டுமே எம்போன்றோர் போற்றுவது. வேறெந்தத்துறை குறித்த பெரியாரின் கருத்தை எம்கருத்தில் கொள்வதில்லை. பெரியாரின் தொண்டர்களுக்கு, மற்றதுறைகள் குறித்தும் பெரியார் கூறும் அனைத்தும் ‘வேதவாக்குகள்’; அதை ஏற்றுக்கொள்ளாதோர் அனைவரையும் கெட்டவார்த்தைகளால் வசவுமாரி பொழிவது அவர்களின் ‘பெரியார் பக்தி’ என்று சிலம்புச் செல்வர் கூறியதை ‘ஷாலி’ அவர்களின் அனல் கக்கும் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. //பேராசிரியர்.கிருஷ்ணன் பெருமாள், அவர் தலைவர் மா.பொ.சிவஞான கிராமணியார் போன்ற ராமபக்தர்களிடம் பெரியாரின் பிறப்பு சான்றிதழ் தேடுவதும் காலக்கொடுமைதான்.! // “வெளிப்படையாக தன்னைப்பற்றிய உண்மைகளை கூறிக்கொண்டவர் பெரியார்தான். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கான அணிந்துரையில் “என் அக்கா மகளுக்கு திருமணம் நடந்தது. அவரின் கணவர் இறந்துவிட்டார். மறுமணம் பற்றி பேச்சு வந்தது. நாங்கள் கன்னட பலிஜா நாயுடு வகுப்பை சேர்ந்தவர்கள்; எங்களுக்குள் விதவை மறுமண வழக்கம் கிடையாது என்று சொன்னார்கள். நான் அதை மாற்றி மறுமணம் செய்து வைத்தேன்” என்று எழுதியிருக்கிறார்”. http://www.visai.in/2015/01/05/periyar-and-tamil-nation-com-kolathur-manis-speech/ . பெரியாரே பெரியாருக்குக் கொடுத்த ‘பிறப்புச் சான்றிதழ்’. 1929களில் திருக்குறள் பற்றி பெரியாருக்கு நல்லெண்ணம் இருந்ததில்லை.
      20.01.1929 குடியரசு இதழில் பெரியார், ‘‘ குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.
      திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார் என்று விமர்சனம் செய்த பெரியாரே, இதற்கு முரண்பட்ட வகையில் திருக்குறளை உயர்த்திப் பேசியது 19 ஆண்டுகள் கழித்து!
      14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் பெரியார் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

      23, 24-10-1948 அன்று பெரியார், ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.
      மேற்கண்டவற்றை, ஷாலி அவர்களின் மொழியில் கூறுவதானால், “முதலில், திருக்குறள் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய பெரியாரே பிற்காலத்தில் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்றும், இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிவிட்டு, அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்றும், மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிவிட்டு, அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்றும் அந்தர் பல்டி அடித்தார். முரண்பாட்டின் மொத்த உருவம் பெரியார்தான் என்பதே சரி!” என்பதாகும். ஆனால், என்னைப் போன்றோர் கருதுவதும், கூறுவதும் பெரியார் அவர்கள் திருக்குறளை நன்கு படித்துணர்ந்தபின், தன் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் என்பதே. இதை ‘முரண்’ என்று கூறமாட்டேன். படித்துப் புரிந்துகொண்டார் என்றுதான் கூறுவேன்.
      கருத்துப் பரிமாற்றம் தனி மனிதரை ‘கிராமணியார்’ என்று தாக்கும் அளவு தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஆம், ம.பொ.சியார் செல்வந்தரல்லர்! வடதமிழ் நாட்டில், மிக மிக ஏழைக் குடும்பத்தில், சமூகத்தில் மிகவும் பிற்பட்ட, கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர்தான். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் பள்ளியில் படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. ம.பொ.சி.யின் கிராமணி குலப்பிறப்பைக் குத்திக் காட்டும் உயர்ந்த குணம் உடையவர்கள்தானே பெரியாரின் பின்பற்றாளர்களான ‘ஷாலி’ போன்றோர். இவர்கள்தாம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளின் காவலனாக நடிப்போர். ஏன் இந்தத் தீண்டாமைக் குணம்? பார்ப்பன ராஜாஜி கடைசி வரை இவரை ‘கிராமணி’ என்றுதான் அழைத்து வந்தார். அவருக்கும் பெரியாரியவாதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஷாலி அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இத்தகைய பெரியாரியவாதிகள் பூணூல் அணியாத பார்ப்பனர்கள். இதுவல்லவா பார்ப்பனீயம்?
      ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அவர்களால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாகவே வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் ஆகிய கட்டபொம்பன் இருந்தான். அவனை கொள்ளைக்காரான் என்றே 18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வம்சமணிதீபிகை என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆனால் இது ஆங்கிலேய அரசின் சதிச் செயல் என்றும் கட்டபொம்மன் உண்மையில் தேசிய போராட்ட வீரன் என்றும் கட்டபொம்மனின் வரலாற்றை 20-ஆம் நூற்றாண்டில் மீள்வாசிப்பு செய்து அவனை இந்திய சுதந்திர போராட்ட முன்னோடி என்று நிறுவியவர் தமிழ்த் தேசிய முன்னோடியான ம.பொ.சி.யே. கட்டபொம்மனைப் பற்றிய பல நூல்களையும் நாடகங்களையும் இயற்றித் தன் சொந்த முயற்சியில் தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தவர்; கட்டபொம்மன் விழா எடுத்தவர். கம்பளத்து நாயக்கர் என்னும் தெலுங்கு வம்சாவளியைச் சார்ந்தவன் என்று தெரிந்தும் வீரபாண்டிய கட்டபொம்மனை தமிழ்நாட்டில் தோன்றிய தேசிய போராட்டவீரனாக எந்த பிணக்கும் இன்றி முன்மொழிந்தவர் ம.பொ.சி.யாவார். அன்றைய தமிழறிஞர்கள் டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை,பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பலரும் வீரப்பாண்டியகட்ட பொம்மனை ஒரு மாவீரனாக போற்றினர். இதே ம.பொ.சி தான் பின்னர், சென்னையை ஆந்திரா வசம் போகாமல் போராட்டம் நடத்தி தடுத்தார். தெலுங்கு தேசத்திற்கு எதிராக, தமிழ் நாட்டு எல்லைப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவருக்கு இல்லாத இனக்காழ்ப்பு திராவிடம் பேசும் ஷாலி போன்ற பெரியாரியவாதிகளிடம் உண்டு என்பது வருத்தம் தரும் உண்மை. இனம் சார்ந்த அரசியல் போராட்டத்திற்கும் இனக்காழ்ப்பு உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர் ம.பொ.சி. இதை இனமானம் பேசும் திராவிட இயக்கத்தார்கள் கடைப்பிடிப்பதில்லை. எம்.ஜி.ஆர். அவர்களை ‘மலையாளி’ என்று முத்திரை குத்த முயன்ற ஒரு பகுதி திராவிட இயக்கத்தாரின் ‘சிறுமதி’ப் பின்விளைவே மற்ற திராவிட இயக்கத்தாரும் தெலுங்கு, கன்னடத்தார்கள் என்று ‘மலையாள திராவிடத்தார்கள் எதிர்வினையாற்ற, ஒட்டுமொத்த திராவிடர்களின் முகமூடிகளும் கிழிந்து தொங்கின. இத்தகைய மோசமான சாதி, இன, மதக் காழ்ப்புணர்ச்சியை கக்கிய திராவிட இயக்கத்தாரின் தொடர்ச்சியாகவே, அதே திராவிட இயக்கத்திலிருந்து வெளியே வந்த ‘முன்னாள் திராவிட இயக்கத்தார்கள் – இன்றைய ‘தமிழ்த் தேசியவாதிகள்’ வீரபாண்டிய கட்டமொம்மனை ‘வடுக வந்தேரி’ (விஜயநகர அரசு விட்டுச் சென்ற மிச்சம்) என்றும் ‘தமிழினத்தை சுரண்டித் தின்ற கூட்டத்தின் தலைவன்’ என்றும் அசிங்கமாக அடையாளப்படுத்துகின்றனர். ஆதியில் ‘திராவிட இயக்கத்தார்கள்’ ஆடிய ‘இனமான நாடகம்’ அவர்களுக்கு எதிராகவே பேசப்படுகிறது இன்றைய தமிழ்த் தேசியவாதிகளால் என்பதே கசப்பான உண்மை. விதைத்ததுதானே முளைக்கும்? இன்றைய ‘தமிழ்த் தேசியம்’ இனத்தாக்குதலுக்கு முக்கியத்துவம் தரும் போக்கை கொண்டிருப்பதற்குக் காரணம் ‘திராவிட இயக்கத்தில்’ இருக்கும்போது அவர்கள் கற்ற பாடம் என்பதே உண்மை.
      தமிழகத்துக்கு ம.பொ.சி.யின் பங்களிப்பு அளப்பரியது. வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார். ‘வைக்கம் வீர’ரான பெரியார், இதற்கு ஆதரவு தராதது மட்டுமல்ல, மலையாளிகளுக்கு ஆதரவாகவும் பேசினார் என்பது வேறுகதை.(இதுதான் தமிழர்கள் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்ட திராவிடம்.) இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது.
      திராவிட இயக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு ‘தமிழ் தேசிய இயக்கம்’ பெரியார் காலத்தில் இயங்கி வந்தது. மறைமலைஅடிகள், பாவாணர் போன்றவர்களின் தமிழிய உணர்வில் வளர்ந்தவரான பாவலரேறு பெருஞ்சித்தனார் முன்னெடுத்த தமிழ் தேசியம் அவர்களிடம் இருந்து வேறுபட்டுத் தீவிரமானதாக இருந்தது. ஆரிய, பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தும், இந்து மதச் சிந்தனை கட்டுகளில் இருந்தும் தமிழனை பிரித்தெடுக்க ஒரே வழி தனித்தமிழ்நாடு பிரிவினைப் போராட்டமே என்று துணிந்து தனது கருத்துகளைத் ‘தேன்சிட்டு’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தார். அதனால் பலமுறை சிறை சென்றார். இவர்கள் முன்னெடுத்தத் தமிழ்த் தேசியம் பார்ப்பன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றொரு இயக்கமாகவே செயல்பட்டது. திராவிட கருத்தாக்கங்களில் இருந்து அன்றைய தமிழ் தேசியம் ‘இறையியல்’, ‘மதம்’ போன்ற கருத்துகளிலேயே அதிகம் வேறுபட்டதாக இருந்தது. தலைவர்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர இனஅரசியல் கொள்கை மோதல்கள் இல்லை என்றே கூறலாம்.
      ஆரியப்பார்ப்பனீய அத்துவிதக்கொள்கைகளிலும், ஆரியப்புராணங்களிலும், பகவத்கீதையிலும் மகாகவி பாரதியார் கொண்டிருந்த ஈடுபாடு, அவரின் முதன்மைச் சீடரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குத் துளியும் உடன்பாடானது அன்று; ஆயினும், பாரதியின் கவித்துவத்தின்மேல் கொண்ட பற்று ஒன்றே அவரின் இயற்பெயரான ‘கனகசுப்புரத்தினம்’ என்பதை ‘பாரதிதாசன்’ ஆக்கியது. தாசனானது ‘பாரதியின் கவித்துவத்துக்கேயன்றி, அவரின் ஆரியப்பார்ப்பனீய அத்துவிதக்கொள்கைகளுக்கோ, மானுடத்துக்கு எதிரான ஆரியப்புராணக் கருத்துகளுக்கோ, சனாதன தர்மத்தைத் தூக்கிப்பிடிக்கும் பகவத்கீதை ‘ஸ்லோகத்’துக்கோ அன்று என்பதைக் கருத்தில் கொண்டால் மட்டுமே, பாரதிதாசனைப் புரிந்துகொள்ள முடியும். அதேநேரம், பாரதிதாசன் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பாரதிதானின் இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும் எம்போன்றோருக்கு எந்த முரணும் தோன்றுவதில்லை. பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதே தமிழர்களின் பண்பாடாக இருந்துவருவதை வரலாற்றின் காலச்சுவடுகளிலிருந்து அறியலாம்.

    3. Avatar
      KRISHNAN NALLAPERUMAL says:

      பதில்:பகுதி-2
      ————-
      கேரள மக்கள் இன்றும் கொண்டாடி வரும் ‘ஓணம்’ பண்டிகை அசுரன் என்று ஆரியர்கள் அழைக்கும் ‘மாவலிச் சக்கரவர்த்தி’யை வரவேற்கவே. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகவும் கேவலமான அவதாரம் இதுதான். நேர்மையின் வடிவமான மாவலிச் சக்கரவர்த்தியை ஆரிய தேவர்களைக் காக்க வஞ்சகமான ‘குறளன் வாமனன்’ வடிவில்வந்து, மூன்றடி மண் தானமாகப் பெற்று, ஓரடியால் பூமியையும், ஈரடியால் விண்ணையும் அளந்து, மூவடிக்கு மாவலியின் சிரம் தன்னில் கால்வைத்து வஞ்சம் செய்தான் உலகளந்த பெருமாள் நாராயணன். கேரளத்து மக்கள் வாமனனைக் கொண்டாடவில்லை; மாவலியைத்தான் கொண்டாடுகின்றனர். ‘ஓணத்தை’ ‘ஊனமாக’ப் பார்த்த அமித்ஷா ‘ஓணத்தை’ வாமன ஜெயந்தியாகக் கொண்டாடவேண்டும் என்று கூறி வாயைப் புண்ணாக்கிக் கொண்ட அண்மையக் கதை நமக்கெல்லாம் ஒரு நல்லபாடம்.
      சைவநெறியில் வாழும் குடும்பத்தில் பிறந்த ‘நாவுக்கரசர்’ சமண மதத்துக்குச் சென்றதை ‘கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகினார்’ என்று பதிவு செய்கிறார் சேக்கிழார். அதேவேளை, ‘கொல்லாமை அறம்’ என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டாலும், காதலையும், வீரத்தையும் போற்றும் பண்பிலிருந்து மாறுபட்டு, துறவைத் தூக்கிப்பிடித்த சமண, சாக்கியத் தத்துவங்கள் தமிழ் மண்ணிலிருந்து காலவோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இறைவனை அம்மையப்பனாகக் காட்டி, நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் இல்லற நெறியின் தேவையைத் தங்கள் தேவாரப் பாடல்களில் மக்களுக்கு உணர்த்தி, துறவு நெறியினின்று, இல்லற நெறிக்கு மக்களைத் திருப்பினர். திருஞானசம்பந்தர் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்றும், நான்மறை கற்றவன் என்றும் பெரும்பாலான பதிகங்களில் பதிவுசெய்துள்ளார். மொஹெஞ்சதாரோ காலம் தொட்டும், அதன் முன்பும், தமிழரிடை சிவவழிபாடு இருந்ததை அகழாய்வுகள் கூறுகின்றன. ஆரியரின் முதல் வேதமாம் இருக்குவேதத்தில் சிவன் என்ற பெயரே இல்லை. நம் பண்பாட்டின் வேர்களை நாம் அறிவதில்லை.
      தமிழர் தெய்வமாம் சிவனைப் போற்றி, ‘வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் ஐந்தெழுத்தே’ எனப் பாடினார் சம்பந்தர்.. அதுமட்டுமல்ல, அவரது திருநீற்றுப் பதிகத்திலே ‘இராவணன் மேலது நீறு’ என்று பாடிப் பெருமைப் படுத்தியுள்ளார். மூல இராமாயணத்தில் இல்லாத இராவணவதைக் கதையைப் பின்னாளில் இட்டுக்கட்டி இராமாயணத்தில் சேர்த்து, ஆரியர்கள் கொக்கரித்தனர். ஆரியராமன் 18 மாதம் போர் செய்து வென்ற ராவணனைத் சிவபெருமானின் கால்பெருவிரலின் சிறு அழுத்தம் தோற்கடித்தது என்று ஒவ்வொரு தேவாரப் பதிகத்தின் எட்டாவது பாடலிலும் பதிவிட்டுள்ளார் ஞானசம்பந்தர். அதன்காரணமாக, பிற்காலத்தில், எந்த ஒரு ஆரியப் பார்ப்பனரும் ‘ஞானசம்பந்தன்’ என்ற பெயரையே தீண்டுவதில்லை.
      அன்புக்குக் கட்டுப்பட்ட தமிழன், அதிகாரத்திற்கு என்றும் அடிபணிந்ததில்லை என்பது அவனுக்கு தமிழ்மொழி கொடுத்த கொடை; ஆகவே, ஆரிய மயக்கத்துக்கு சிறிதுகாலம் ஆட்பட்டாலும், அடிமைப்படவில்லை. பன்னெடுங்காலமாகவே, ஆரியத்தின் சதியை தமிழ்ப்புலவர்கள் பலர் எதிர்த்துவந்ததாலேயே, தமிழின் தொன்மையும், தூய்மையும் காக்கப்பட்டது.
      மக்கள் சமயமாக மிளிர்ந்த சைவம் ஆரியக் கலப்பினால் தூய்மைகெட்டது. சம்பந்தரின் பாடல்களுக்குத் தவறான விளக்கங்கள் கொடுத்தும், சைவக்கொண்முடிபு’ என்னும் சைவசமய(சிவனியம்)க் கொள்கை விளக்கத்தைச் ‘சைவசித்தாந்தம் என்னும் பெயரில் ஆரியச் சொற்களால் பெய்தும் நூற்கள் செய்தனர் பிற்காலச்சைவர்கள்.
      திருக்குறளைக்கூட முதலில் எதிர்த்த பெரியாரை நம்பி, தமிழன் தன் வேர்களான பண்பாட்டுச் செல்வங்களையெல்லாம், ஒட்டுமொத்தமாக ‘ஆரியமுலாம்’ பூசி, நம் வேர்களை ஆரியனுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கின்றோம். ‘ஓணம்’ மலையாளிகளின் பண்பாட்டுச் சின்னம். அதை மதமாக யாரும் பார்ப்பதில்லை. மெய்யியல் என்பது நம் தத்துவ, சிந்தனை வளர்ச்சிகளின் வரலாறு, மதம் என்பதும், பண்பாட்டின் வேர்கள் என்பதும் வேறுவேறு பரிமாணங்களைக் கொண்டவை. பெரியாரியத்தால் நாம் பெற்ற பயனை, ‘திராவிட மாயை’யால் இழந்துவிடும் அபாயம் உள்ளது. ‘தமிழன்’ என்பதே நம் இன அடையாளம். அதை, திராவிட மாயை கொண்டு இழந்துவிடக் கூடாது.
      தமிழகத்துக்கு வந்து, தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பங்களிப்பு செய்த அருட்தந்தைகள் கால்டுவெலார், ஜி.யூ.போப்பார், வீரமாமுனிவர், சீகன் பால்க் ஐயர், இரேனியஸ் ஆகியோர் சிறந்த தமிழறிஞர்கள், தமிழ் மொழிக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர்கள்; சிறந்த சமூக நலவாதிகள்; தமிழ்நாட்டையே தங்கள் சொந்த மண்ணாகக் கொண்டு வாழ்ந்து, தமிழகத்திலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். ஆயினும், பிறப்பால் தமிழரல்லாதோர் ஆதலினால், தங்களை ஒருநாளும் ‘தமிழர்’ என்று உரிமை கோரியதில்லை. இங்குள்ள சாதி, பேதங்களைக் கண்டித்தவர்கள். ஆயினும், தமிழரைக் காட்டுமிராண்டிகள் என்றோ, ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்றோ, தமிழ் இலக்கியங்களைத் தரம் தாழ்த்தியோ பேசியவர்கள் அல்லர். நாமும் அவர்களைத் தமிழறிஞர்கள் என்று கூறுவோமே தவிரத் ‘தமிழர்கள்’ என்று அழைப்போமல்லோம். சமூகநலப் போராளியான பெரியார் பிறப்பால் தமிழரல்லர். அவர் வாய்மொழியாகவே அவரின் ‘தாய்மொழி’ கன்னடம் என்று கூறியதை நாம் அறிவோம். பெரியாரின் முன்னோர் பல்லாண்டுகளுக்கு முன்பே ஈரோட்டில் குடியேறித் தமிழ் நாட்டையே தன் தாய் நாடாகக் கொண்டவர். ஆனாலும், அவர் தாய்மொழி ‘கன்னடம்’ என்ற உணர்வு அவருக்கு மட்டுமல்ல, எந்த மனிதருக்கும் இருப்பது இயல்பே. பெரியார் ஒரு தமிழறிஞரும் அல்லர். தமிழரும் அல்லாத, தமிழறிஞரும் அல்லாத ஒரு கன்னடத் தாய்மொழி நபர், தமிழ் இலக்கியங்களைக் குறித்துக் கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசமுடிவது வேறு எந்த இந்திய மாநிலத்திலும் சாத்தியமா? அவரின் வசவுகளையும் தூக்கிப்பிடித்து ‘நியாயம்’ கற்பிக்கும் ‘ஷாலி’கள், வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வந்தேறிகளின் ‘வசவு’களையும் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறார்கள்.

      ஆரியம்-திராவிடம் என்பது கருத்தியல் நிலைப்பாடே தவிர இன்றைய காலகட்டத்தில் ‘ஆரியத் தூய்மையோ’, ‘திராவிடத் தூய்மையோ’ மரபணு கொண்டு காண இயலாதுதான். தமிழைத்தவிர சமற்கிருதம் உள்ளிட்ட வேறு மொழிகளை அறியாத, தமிழை மட்டுமே தாய்மொழியாகக் கொண்டு, தமிழாலேயே உயர்ந்த நிலை அடைந்தும், தமிழுக்குத் துரோகம் இழைக்கும் வகையில், அவர் அறியாத ‘சமற்கிருதத்தை’ தமிழுக்குப் அணி செய்தது சமற்கிருதமே’ என்று போற்றும் பொய்யான நிலைப்பாட்டை எடுக்கவைத்தது, ‘உ.வே.சா.’ அவர்களின் ‘ஆரிய உணர்வு’. ‘ஆரியம்’ அறியாவிட்டாலும், தனது தாய்மொழி ஆரியம் என்று உணர்வுபூர்வமாக வாழ்ந்த போலித் தமிழர். எனவேதான் பார்ப்பனர்களை ‘ஆரிய இனத்தான்’ என்கிறார்கள். இன்றுவரை, ‘தமிழ்ப் பார்ப்பனர்கள்’ உணர்வு பூர்வமாகத் தமிழர்களின் நலனுக்கு எதிராகவே செயலாற்றுகிறார்கள். ஆகவே, ‘பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்லர்’ என்ற நிலையை அவர்களுக்கு அவர்களே உருவாக்கிக் கொண்டது. இந்நிலை, மற்ற மாநிலங்களில் இல்லை.

      “தமிழ் இலக்கியங்கள் வெறும் இலக்கியங்கள் அல்ல. அவைகள் தமிழர்களின் பண்பாட்டு அசைவுகள்” என்பது பெரியாரியவாதியும் தமிழறிஞருமாகிய பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் ‘தமிழ்த் திண்ணை’யில் நான் கற்றுக்கொண்டது. மற்றபடி, நான் ஒரு தமிழ் ஆர்வலன்; அவ்வளவுதான். எனது அளவுகோள் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு’ என்னும் வள்ளுவமே.

  22. Avatar
    BSV says:

    ////வேறு வேறு துறைகளில் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் வரவேற்பவர்கள் கூட இலக்கியத் துறையில் அவருடைய போக்கை எற்றுக் கொள்வதில்லை.//

    //லக்கியத்துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ராவுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை.//

    பயிற்சி தேவையில்லை. பரிச்சயம் இருந்தால் போதும். சிலப்பதிகாரத்தின் கதை தெரிந்தால் போதும். இளங்கோ எழுதிய முழுக் காப்பியத்தையும் கற்றுத்துறை போகவேண்டிய தேவையில்லை. சிலப்பதிகாரத்தின் கதையையும் புலவர்களின் போக்கையும்தான் பெரியார் தாக்கினாரே தவிர, பண்டை இலக்கியங்கள் எழுதப்பட்ட இலக்கிய நுணுக்கங்களைப் பற்றிப் பேசவில்லை. சிலம்புவின் கதை இன்றைய உலகம் மறுக்கவேண்டியதொன்று என்பதே அவரின் கருத்து. இதைப்போலவே அன்றைய புலவர்கள் தங்கள்தங்கள் வயிறுகளை வளர்க்க ஊர் ஊராகப் போய் தரமில்லாதவனையும் ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து பாடினர் எனபது உண்மைதானே? ஓரிருவர் விதி விலக்குகள். மற்றபடி எல்லாருமே பாட்டாளிவர்க்கத்தை மன்னன் சுரண்டித்தான் தன் அந்தபுர நாயகிகளை வைத்திருந்தான் என்று தெரியும்தானே?

    இலக்கியத்துறையின் அவரின் கருத்தை வரவேற்கவில்லை என்று மா பொ சி என்ன சர்வே நடாத்தினாரா? எப்படிச் சொல்கிறார்?

  23. Avatar
    BSV says:

    //ம.சு.பல்கலையில் யாகம் செய்த தனிமனிதர்களின் நிலைப்பாட்டை அதற்குத் தொடர்பே இல்லாதவர்களைத் தொடர்பு இருப்பதாகப் பேசுவது ஷாலி என்ற தனி நபரின் கருத்துச் சுதந்திரம். ஒரு நிறுவனத்தில் நடக்கும் சில பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில செயல்களுக்காகத் தனிநபர்களுக்கு ‘மூடம்’ என்று பட்டம் கட்டும் ‘ஷாலி’ அவர்களுக்கு மிக்க நன்றி.//

    ஏற்றுக்கொள்ளவியலா கருத்து.

    பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் பிரதமராகவும் நாற்பதாண்டுகளுக்கும்மேலாக அரசியலில் இருந்தும் உலகத்தலைவர்களால் போற்றப்பட்டவரும், இங்கிலாந்திற்கு எதிரான அர்ஜென்டினா நடாத்திய போரில் வெற்றிகண்டவருமான மார்கரேட் தாச்சருக்கு ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்க முற்பட்ட போது ஆசிரியர்கள் அனைவரும் எதிர்க்க பலகலைக்கழகம் நிறுத்துக்கொண்டது. அவரின் பல அரசியல் நடவடிக்கைகள் துயரங்களைப்பெருக்கின என்பது அவர்கள் வாதம்.

    தற்போது, சிலவாரங்களுக்கு முன் ஆப்ரிக்கா கானா பலகலைக்கழகத்தில் இந்திய அதிபரான முகர்ஜியால் திறந்துவைக்கப்பட்ட காந்தியின் சிலையை அகற்ற வேண்டுமென போராட்டத்தில் குதித்தவர்கள் ஆசிரியர்களும் மாணவர்களும், கறுப்பர்களை காட்டுமிராண்டிகள்; இந்திய்ர்களுக்கு ஈடாக வைத்து காலனி அரசாங்கம் வைக்கக்கூடாது என்று காந்தி ஆங்கிலேய அரசுக்கு எழுதிய கடிதமும் மேலும் அவரின் பல நடவடிக்கைகளும் இவரின் சிலைக்கு எம் பலகலைக்கழகத்தில் நிறுவ தகுதியில்லை என்றது போராட்டம். போராட்டம் வெற்றியடைந்து சிலை அகற்றப்பட்டது.

    ஒரு பலகலைக்கழகத்தில் ஒரு பெருந்தவறு நிறுவனர்களாலே செய்யபப்டும்போது வெள்நாடுகளில் ஆசிரியர்கள் எதிர்ப்பு போராட்டம் நடாத்துகிறார்கள். நம் ஊரில் ஒன்று ஜால்ரா தட்டுகிறார்கள்; அலலது யாருக்கு வந்த விருந்தோ என்று விலகிக்கொள்கிறார்கள். தம் வேலைக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்ற் நோக்கமே அடிப்படை எனபதே உண்மை. எனவேதான் நம் பலகலைக்கழகங்கள் விழ்ந்தடித்துக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு முனைவர் பட்டங்கள் வழங்குகின்றன. ஜாதித்தலைவர்களுக்கு செமினார் நடாத்தி ஆசிரியர்கள் கட்டுரை வாசிக்கின்றார்கள்.

  24. Avatar
    BSV says:

    பெரியாரின் தமிழறிஞர்களுக்குக் கொடுத்த சம்மட்டி அடி சாலப்பொருத்தமே. தமிழறிஞர்கள் தமிழால் பிழைக்கிறார்கள். அவ்விலக்கியத்தின் குறைகள் கண்டால் தன் வீட்டைத் தானே கொளுத்துவது போல. எனவே அக்காலம் எப்படி அயோக்கியத்தனாமாக இருந்தது என்று வாய் திறக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் எக்காலமும் பொற்காலமன்று. கோயில்களை வானுயிர கட்டிவைத்துவிட்டால் பொற்காலமென்று வர்லாற்று ஆசிரியர்கள் பீலாவிட்டதை நாம் நம்புகிறோம். பெரியார் சொன்னதைப்போல புலவர்கள் ஒன்று மன்னனைப்புக்ழந்தார்கள்; இல்லாவிட்டால் சாமியைப்பற்றி எழுதினார்கள்.

    வறுமையில் நலிநது வாழ்க்கையில் வலிந்தோரால் சுரண்டப்பட்டு நைந்து வாழ்ந்த மக்களைப்பற்றி இப்புலவர்கள் தெரிந்தும் தெரியாதபடி நடித்தவையை இன்று நம் இலக்கியம். பாவ மூட்டை என்றால் என்னை அடிக்க வருவீர்கள். ஆனால் இத்திண்ணையில் போடப்படும் குறுந்தொகையைப் படித்தால் கூட என் குருதி கொதிக்கிறது. அப்படிக்காட்டப்படுகிறது அக்காலம். என் எதிர்வினைகள் தடை செய்யப்படுகின்றன தமிழ் இலக்கியத்தினால் தணியாக்காதல் கொண்ட திண்ணை ஆசிரியர் குழுவால்.

    சின்னாட்களுக்கு முன் ஒரு சிறுநூலொன்று கண்ணில் பட்டது. சிறுபாணாற்றுப்படை வகை. ஒரு புலவன் வறுமையில் வாடுகிறான். அவன் மனைவி எவனையாவது பாடி யாசகம் பெற்று வாரீர் என வீட்டைவிட்டு விரட்டி விட, மதுரையை நோக்கிச் ஏகுகிறான். வழியில் இன்னொரு புலவன் கைநிறைய பொருட்களோடுவருகிறான். எவ்வூரோ! எவ்வழியோ என வினாவ, மதுரை செல்கிறேன் பாடிப்பரிசில் பெற என, அவனோ, அய்யகோ, இப்போது மதுரையில் பஞ்சம் பசி யென மக்கள் வாடுகிறார்கள். நுமக்கு ஒன்றும் தேராது என அப்படியென்றால் நீவிர் எங்கிருந்து இப்பரிசிலளைப்பெற்றீர் என வினாவ, அவன் அவ்வூரைப்பற்றியும் அதன் செல்வ நிலையையும் சொல்லி பாடவேண்டியவனைப்பற்றியும் சொல்லி இவனை அங்கே போகச்சொல்வதாக முடிகிறது.

    ஆக, மதுரையில் பஞ்சம் என்றால் மானா மதுரைக்குப்போய் பிச்சையெடுக்கலாம் என எதார்த்தம் தெரிந்த இப்புலவர்களை பெரியார் சாடுவதில் நமக்கு ஏதாவது வருத்தம் வருமா? வராது. குறைந்தது மதுரையில் பஞ்சமோ பஞ்சம் என்பதைப்ப்ற்றி கிச்சித்தும் கவ்லைப்படாத இப்புலவன் தன் வயிறு வளர்க்க பாண்டிச்சேரிப்பக்கம் ஒரு பணக்காரனைப்பார்க்கப் போகிறான் என்றாலுமாவது வருந்துவீரா? மாட்டீர். ஆனால் பெரியார் வருத்த்மே அவரின் கோபமானது

    (கீழவளவு நாடு என்ற பகுதி பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் இடையில் வரும் நெய்தல் நிலம். அங்குதான் இப்புலவர்கள் சந்திக்கிறார்கள்).

  25. Avatar
    KRISHNAN NALLAPERUMAL says:

    பதில்:பகுதி-2
    ————
    கேரள மக்கள் இன்றும் கொண்டாடி வரும் ‘ஓணம்’ பண்டிகை அசுரன் என்று ஆரியர்கள் அழைக்கும் ‘மாவலிச் சக்கரவர்த்தி’யை வரவேற்கவே. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகவும் கேவலமான அவதாரம் இதுதான். நேர்மையின் வடிவமான மாவலிச் சக்கரவர்த்தியை ஆரிய தேவர்களைக் காக்க வஞ்சகமான ‘குறளன் வாமனன்’ வடிவில்வந்து, மூன்றடி மண் தானமாகப் பெற்று, ஓரடியால் பூமியையும், ஈரடியால் விண்ணையும் அளந்து, மூவடிக்கு மாவலியின் சிரம் தன்னில் கால்வைத்து வஞ்சம் செய்தான் உலகளந்த பெருமாள் நாராயணன். கேரளத்து மக்கள் வாமனனைக் கொண்டாடவில்லை; மாவலியைத்தான் கொண்டாடுகின்றனர். ‘ஓணத்தை’ ‘ஊனமாக’ப் பார்த்த அமித்ஷா ‘ஓணத்தை’ வாமன ஜெயந்தியாகக் கொண்டாடவேண்டும் என்று கூறி வாயைப் புண்ணாக்கிக் கொண்ட அண்மையக் கதை நமக்கெல்லாம் ஒரு நல்லபாடம்.
    சைவநெறியில் வாழும் குடும்பத்தில் பிறந்த ‘நாவுக்கரசர்’ சமண மதத்துக்குச் சென்றதை ‘கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகினார்’ என்று பதிவு செய்கிறார் சேக்கிழார். அதேவேளை, ‘கொல்லாமை அறம்’ என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டாலும், காதலையும், வீரத்தையும் போற்றும் பண்பிலிருந்து மாறுபட்டு, துறவைத் தூக்கிப்பிடித்த சமண, சாக்கியத் தத்துவங்கள் தமிழ் மண்ணிலிருந்து காலவோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இறைவனை அம்மையப்பனாகக் காட்டி, நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் இல்லற நெறியின் தேவையைத் தங்கள் தேவாரப் பாடல்களில் மக்களுக்கு உணர்த்தி, துறவு நெறியினின்று, இல்லற நெறிக்கு மக்களைத் திருப்பினர். திருஞானசம்பந்தர் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்றும், நான்மறை கற்றவன் என்றும் பெரும்பாலான பதிகங்களில் பதிவுசெய்துள்ளார். மொஹெஞ்சதாரோ காலம் தொட்டும், அதன் முன்பும், தமிழரிடை சிவவழிபாடு இருந்ததை அகழாய்வுகள் கூறுகின்றன. ஆரியரின் முதல் வேதமாம் இருக்குவேதத்தில் சிவன் என்ற பெயரே இல்லை. நம் பண்பாட்டின் வேர்களை நாம் அறிவதில்லை.
    தமிழர் தெய்வமாம் சிவனைப் போற்றி, ‘வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் ஐந்தெழுத்தே’ எனப் பாடினார் சம்பந்தர்.. அதுமட்டுமல்ல, அவரது திருநீற்றுப் பதிகத்திலே ‘இராவணன் மேலது நீறு’ என்று பாடிப் பெருமைப் படுத்தியுள்ளார். மூல இராமாயணத்தில் இல்லாத இராவணவதைக் கதையைப் பின்னாளில் இட்டுக்கட்டி இராமாயணத்தில் சேர்த்து, ஆரியர்கள் கொக்கரித்தனர். ஆரியராமன் 18 மாதம் போர் செய்து வென்ற ராவணனைத் சிவபெருமானின் கால்பெருவிரலின் சிறு அழுத்தம் தோற்கடித்தது என்று ஒவ்வொரு தேவாரப் பதிகத்தின் எட்டாவது பாடலிலும் பதிவிட்டுள்ளார் ஞானசம்பந்தர். அதன்காரணமாக, பிற்காலத்தில், எந்த ஒரு ஆரியப் பார்ப்பனரும் ‘ஞானசம்பந்தன்’ என்ற பெயரையே தீண்டுவதில்லை.
    அன்புக்குக் கட்டுப்பட்ட தமிழன், அதிகாரத்திற்கு என்றும் அடிபணிந்ததில்லை என்பது அவனுக்கு தமிழ்மொழி கொடுத்த கொடை; ஆகவே, ஆரிய மயக்கத்துக்கு சிறிதுகாலம் ஆட்பட்டாலும், அடிமைப்படவில்லை. பன்னெடுங்காலமாகவே, ஆரியத்தின் சதியை தமிழ்ப்புலவர்கள் பலர் எதிர்த்துவந்ததாலேயே, தமிழின் தொன்மையும், தூய்மையும் காக்கப்பட்டது.
    மக்கள் சமயமாக மிளிர்ந்த சைவம் ஆரியக் கலப்பினால் தூய்மைகெட்டது. சம்பந்தரின் பாடல்களுக்குத் தவறான விளக்கங்கள் கொடுத்தும், சைவக்கொண்முடிபு’ என்னும் சைவசமய(சிவனியம்)க் கொள்கை விளக்கத்தைச் ‘சைவசித்தாந்தம் என்னும் பெயரில் ஆரியச் சொற்களால் பெய்தும் நூற்கள் செய்தனர் பிற்காலச்சைவர்கள்.
    திருக்குறளைக்கூட முதலில் எதிர்த்த பெரியாரை நம்பி, தமிழன் தன் வேர்களான பண்பாட்டுச் செல்வங்களையெல்லாம், ஒட்டுமொத்தமாக ‘ஆரியமுலாம்’ பூசி, நம் வேர்களை ஆரியனுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கின்றோம். ‘ஓணம்’ மலையாளிகளின் பண்பாட்டுச் சின்னம். அதை மதமாக யாரும் பார்ப்பதில்லை. மெய்யியல் என்பது நம் தத்துவ, சிந்தனை வளர்ச்சிகளின் வரலாறு, மதம் என்பதும், பண்பாட்டின் வேர்கள் என்பதும் வேறுவேறு பரிமாணங்களைக் கொண்டவை. பெரியாரியத்தால் நாம் பெற்ற பயனை, ‘திராவிட மாயை’யால் இழந்துவிடும் அபாயம் உள்ளது. ‘தமிழன்’ என்பதே நம் இன அடையாளம். அதை, திராவிட மாயை கொண்டு இழந்துவிடக் கூடாது.
    தமிழகத்துக்கு வந்து, தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பங்களிப்பு செய்த அருட்தந்தைகள் கால்டுவெலார், ஜி.யூ.போப்பார், வீரமாமுனிவர், சீகன் பால்க் ஐயர், இரேனியஸ் ஆகியோர் சிறந்த தமிழறிஞர்கள், தமிழ் மொழிக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர்கள்; சிறந்த சமூக நலவாதிகள்; தமிழ்நாட்டையே தங்கள் சொந்த மண்ணாகக் கொண்டு வாழ்ந்து, தமிழகத்திலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். ஆயினும், பிறப்பால் தமிழரல்லாதோர் ஆதலினால், தங்களை ஒருநாளும் ‘தமிழர்’ என்று உரிமை கோரியதில்லை. இங்குள்ள சாதி, பேதங்களைக் கண்டித்தவர்கள். ஆயினும், தமிழரைக் காட்டுமிராண்டிகள் என்றோ, ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்றோ, தமிழ் இலக்கியங்களைத் தரம் தாழ்த்தியோ பேசியவர்கள் அல்லர். நாமும் அவர்களைத் தமிழறிஞர்கள் என்று கூறுவோமே தவிரத் ‘தமிழர்கள்’ என்று அழைப்போமல்லோம். சமூகநலப் போராளியான பெரியார் பிறப்பால் தமிழரல்லர். அவர் வாய்மொழியாகவே அவரின் ‘தாய்மொழி’ கன்னடம் என்று கூறியதை நாம் அறிவோம். பெரியாரின் முன்னோர் பல்லாண்டுகளுக்கு முன்பே ஈரோட்டில் குடியேறித் தமிழ் நாட்டையே தன் தாய் நாடாகக் கொண்டவர். ஆனாலும், அவர் தாய்மொழி ‘கன்னடம்’ என்ற உணர்வு அவருக்கு மட்டுமல்ல, எந்த மனிதருக்கும் இருப்பது இயல்பே. பெரியார் ஒரு தமிழறிஞரும் அல்லர். தமிழரும் அல்லாத, தமிழறிஞரும் அல்லாத ஒரு கன்னடத் தாய்மொழி நபர், தமிழ் இலக்கியங்களைக் குறித்துக் கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசமுடிவது வேறு எந்த இந்திய மாநிலத்திலும் சாத்தியமா? அவரின் வசவுகளையும் தூக்கிப்பிடித்து ‘நியாயம்’ கற்பிக்கும் ‘ஷாலி’கள், வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வந்தேறிகளின் ‘வசவு’களையும் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறார்கள்.

    ஆரியம்-திராவிடம் என்பது கருத்தியல் நிலைப்பாடே தவிர இன்றைய காலகட்டத்தில் ‘ஆரியத் தூய்மையோ’, ‘திராவிடத் தூய்மையோ’ மரபணு கொண்டு காண இயலாதுதான். தமிழைத்தவிர சமற்கிருதம் உள்ளிட்ட வேறு மொழிகளை அறியாத, தமிழை மட்டுமே தாய்மொழியாகக் கொண்டு, தமிழாலேயே உயர்ந்த நிலை அடைந்தும், தமிழுக்குத் துரோகம் இழைக்கும் வகையில், அவர் அறியாத ‘சமற்கிருதத்தை’ தமிழுக்குப் அணி செய்தது சமற்கிருதமே’ என்று போற்றும் பொய்யான நிலைப்பாட்டை எடுக்கவைத்தது, ‘உ.வே.சா.’ அவர்களின் ‘ஆரிய உணர்வு’. ‘ஆரியம்’ அறியாவிட்டாலும், தனது தாய்மொழி ஆரியம் என்று உணர்வுபூர்வமாக வாழ்ந்த போலித் தமிழர். எனவேதான் பார்ப்பனர்களை ‘ஆரிய இனத்தான்’ என்கிறார்கள். இன்றுவரை, ‘தமிழ்ப் பார்ப்பனர்கள்’ உணர்வு பூர்வமாகத் தமிழர்களின் நலனுக்கு எதிராகவே செயலாற்றுகிறார்கள். ஆகவே, ‘பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்லர்’ என்ற நிலையை அவர்களுக்கு அவர்களே உருவாக்கிக் கொண்டது. இந்நிலை, மற்ற மாநிலங்களில் இல்லை.

    “தமிழ் இலக்கியங்கள் வெறும் இலக்கியங்கள் அல்ல. அவைகள் தமிழர்களின் பண்பாட்டு அசைவுகள்” என்பது பெரியாரியவாதியும் தமிழறிஞருமாகிய பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் ‘தமிழ்த் திண்ணை’யில் நான் கற்றுக்கொண்டது. மற்றபடி, நான் ஒரு தமிழ் ஆர்வலன்; அவ்வளவுதான். எனது அளவுகோள் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு’ என்னும் வள்ளுவமே.

  26. Avatar
    smitha says:

    Aryan invasion theory has been proved as a myth. Still some periyarists like shali & now mallperumal are unable to forget that.

    The contribution of tamil Brahmins to tamil literature is unmatched.

  27. Avatar
    ஷாலி says:

    // பெரியார் ஒரு தமிழறிஞரும் அல்லர். தமிழரும் அல்லாத, தமிழறிஞரும் அல்லாத ஒரு கன்னடத் தாய்மொழி நபர், தமிழ் இலக்கியங்களைக் குறித்துக் கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசமுடிவது வேறு எந்த இந்திய மாநிலத்திலும் சாத்தியமா? அவரின் வசவுகளையும் தூக்கிப்பிடித்து ‘நியாயம்’ கற்பிக்கும் ‘ஷாலி’கள், வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வந்தேறிகளின் ‘வசவு’களையும் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறார்கள…//

    “பெரியாரை ஒரு கன்னடர் என்று இப்போதும் வாய் கூசாமல் சொல்லும் மனிதர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவர் கர்நாடகத்திற்குச் சென்றதெல்லாம் பெல்லாரிச் சிறையில் கல்லுடைப்பதற்காகத் தான். பள்ளிக் கூடங்களில் இந்திப் பாடம் திணிக்கப்படுவதை எதிர்த்து, தமிழுக்காகப் போராடி அவர் சிறை சென்றார். தண்டனைக்கும் மேலே தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கடும் வெயில் அடிக்கும் பெல்லாரிச் சிறைக்கு ஒரு கோடையில் ராஜாஜி அரசு அவரை அனுப்பி வைத்தது.”

    ஒரு சிலர் கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன் என்கின்றனர். அவர்கள் தமது தாய்மொழியை – கலையை விற்று, பிறருக்கு அடிமையாகி, தன்னையும் விற்றுப் பேசுகின்றனர்.
    கன்னடன், தெலுங்கன், மலையாளி என்போர் யார்? எல்லோரும் தமிழர்களே – திராவிடர்களே. தமிழிலிருந்துதான் இவைகள் வந்தன. அம்மொழிகளில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் எஞ்சுவது தனித் தமிழே. அப்பொழுது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற பெயர் மறைந்துவிடும். எனவே, எங்கள் மொழியிலுள்ள சீரிய கலைகளை ஒழிக்க முயல்வதாலேயே பலத்த கிளர்ச்சி செய் கிறோம். இது ஒரு அற்ப விஷயமல்ல. தமிழ்க்கலை ஒழியாதிருக்க நாம் வகை தேட வேண்டுவது உண்மைத் தமிழன் கடமையாகும்.

    18.06.1939 அன்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு- “குடிஅரசு” – சொற்பொழிவு – 25.06.1939.

    “ தமிழ் புனிதத்தன்மை உடையது, சிவன் பேசியது,தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் போராடவில்லை.இருக்கின்ற மொழியில் தமிழ் மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது.என்பதற்காகவே.’ என்று கூறியதும் பெரியாரே.

    “நான் தமிழுக்கு தொண்டு செய்வது தமிழுக்காக அல்ல.தாய் மொழியை பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும்.நம் தமிழ் மொழி தாய் மொழி என்று மட்டிலும் இல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி.இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும்.அப்படி பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடையவேண்டும் என்றும் அதற்காகவே போராட்டம் நடத்துகின்றோம்.” இதுவும் பெரியாரே.

    தந்தை பெரியார் அவர்களை கன்னட வந்தேறி என்று வாய் கூசாமல் பேசும் பேராசிரியப் பெருமகனார் அவர்களிடம், அசல் தமிழர் யார்? என்று கேட்டால், “பெரியார் கன்னடர், தமிழர் ரஜினி” என்று கூறினாலும் ஆச்சரியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *