‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்

author
72
0 minutes, 51 seconds Read
This entry is part 3 of 13 in the series 4 பெப்ருவரி 2018

ஜெயஸ்ரீ சாரநாதன்

தமிழை ஆண்டாள்  என்னும் ‘ஆய்வுக் கட்டுரையை’ மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த ‘ஆராய்ச்சியின்’ அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத்  தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து அவர்கள் தமிழை எவ்வாறு ஆண்டார்? தமிழை எந்த அளவு அறிந்திருந்தார் என்பதை அறிய விரும்புபவர்கள் இந்தக் கட்டுரையைக் கட்டாயம் படிக்க வேண்டும்..

கதையெழுத அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. பல காலம் தமிழில் தொழில் செய்து வந்தவர். அது தீட்டிய திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு நல்ல பின்னணியுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.

மாதமோ மார்கழி. காலமோ அதிகாலை. இங்கு ஆண்டாள் ‘அமிலச் சோதனை’செய்கிறாள். அதாவது நெடுங்குளிரில் நீராடுவதால், உடல் வெப்பத்துக்கும், மனத் திட்பத்துக்கும் ஏற்படும் சோதனை இது என்கிறார். நீராடினவர்கள்  சறுக்கினார்களோ இல்லையோ, இங்குதான்  வைரமுத்துவின் முதல் சறுக்கலைப் பார்க்கிறோம்.

சறுக்கல்:1. அமிலச் சோதனை

‘அமிலச் சோதனையை’ ஆண்டாளா செய்தாள்? அல்லது அவள்தான் அதைக் கண்டு பிடித்தாளா? வைரமுத்து கூறும் அமிலச் சோதனை, பெண்பால் பிள்ளைத் தமிழில் இருக்கிறதே? அது எப்படி?

பெண்பால் பிள்ளைத் தமிழில் பாவைப் படலம் என்பது ஒரு காலக்  கட்டமாகும். இது ஐந்து  முதல் ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்செய்வது. இதைக் கூறும் பிங்கல நிகண்டு (1369),

பனி நீர் தோய்தலும்பாவையாடலும்‘ 

என்று சொல்கிறதே, இந்த அமிலச் சோதனையை ஐந்து வயது முதற்கொண்டே பழந்தமிழ்க் குழந்தைகள் செய்திருக்கிறார்களே? அதை வைரமுத்து அறியவில்லையா? அறிந்திருந்தால் அத்தனைச் சிறிய வயதுக் குழந்தைகளை சில்லிடும் பனி நீரில் குளிக்க விட்டிருக்கிறார்களே – இது என்ன அநியாயம் என்று சமூகக் கேள்வி கேட்டிருக்கலாமே?

இது போகட்டும், பாவை நோன்புக்குச் சிகரமாக ஒரு சங்கப்  பாடல் இருக்கிறதே, அதையாவது வைரமுத்து அறிவாரா?

ஆசிரியர் நல்லந்துவனார் பாடிய அப்பாடலில்

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்

– அதாவது தம் தாயினை ஒட்டி நின்று நீராடக்கூடிய சிறு பருவத்தவரான பெண்கள்,

பனி புலர்பு ஆடி

– அதாவது பனியையுடைய வைகறைப் பொழுதிலே நீராடி – அதிலும், ஓடும் வையை ஆற்றில் நீராடி, அந்த ஆற்றிலிருந்து அடிக்கும் ஊதக் காற்றில் நின்று கொண்டிருப்பார்களாம். (பரிபாடல் 11).

அமிலச் சோதனையை அன்றே ஆரம்பித்து விட்டார்களே! என்னவோ ஆண்டாள் புதிதாகக் கண்டுபிடித்தது போல வைரமுத்து கூறுகிறாரே?

இந்தப் பாடலையும் வைரமுத்து அறிந்து கொள்ளாமல் போய் விட்டாரே  என்று வருத்தமாக இருக்கிறது. இந்தப் பாடலில் எத்தனை சமூகக் கேள்விகளுக்கு வாய்ப்பிருக்கிறது தெரியுமா?

இந்தப் பாடலில், பனி பிரியாத வைகறைப் பொழுதில் ஆற்றங்கரையில்  அந்தணர்கள் ஹோமம் வளர்த்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமா, நடுங்கும் குளிரில்  சிறுமிகள் தங்கள் தாய்மார்களுடன் ஆற்றில் குளிக்க வேண்டும். குளித்த பிறகு ஈர உடையுடன் அப்படியே இந்த ஹோமத் தீயை வலம் வர வேண்டும். அதன் வெப்பத்தில் இவர்கள் உடுத்தின துணியும் காய்ந்து விடும். எப்படிப்பட்ட அமிலச் சோதனை செய்திருக்கிறார்கள்?

இதைச்  செய்யத் தூண்டியவர்கள் அந்தணர்கள் போலல்லவா இருக்கிறது?

மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட இந்தச் சோதனையைச் செய்தவர்கள் பார்ப்பனர்களா என்ற சமூகக் கேள்வியை ஆராய்ச்சியாளர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல, வைரமுத்து தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

இனி வருகிறது அடுத்த சறுக்கல்.

சறுக்கல்:2 காத்யாயனி – பாவை நோன்பின் தொன்மை அறியாமை

வைரமுத்து சொல்கிறார், “பாவை நோன்பு என்பது சடங்கு. கண்ணன் என்பதொரு காரணம்”.

வைரமுத்துவின் இந்தக் கருத்து  பிள்ளைத் தமிழ் இலக்கணத்திலோ, அல்லது நல்லந்துவனார் பாடலிலோ காணப்படவில்லையே? எந்த அடிப்படையில் இவ்வாறு எழுதி இருக்கிறார்?

இதையடுத்து இன்னொன்றும் சொல்கிறார்:

இதைப் படித்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன், ஸ்ரீமத் பாகவதத்தைக் கூட ஆராய்ந்திருக்கிறார் போல இருக்கிறதே. ஸ்ரீமத் பாகவதத்தில்தான் காத்யாயனி (கார்த்தியாயினி அல்ல) நோன்பு சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஆண்டாள் செய்த நோன்புடன் ஒப்பீடு செய்கிறார். அதுவும் எப்படி? கண்ணனே கணவனாக வேண்டும் என்று செய்வது காத்யாயனி நோன்பு;  நல்ல கணவன் அமைய வேண்டும் என்று நோற்பது ‘மட்டுமே’ ஆண்டாள் – அதாவது திருப்பாவை நோன்பாம்.

நானும் திருப்பாவையைத் தேடித் தேடிப் பார்த்து விட்டேன்,  கணவனை அடைய வேண்டியே  நோன்பு இருந்தார்கள் என்று திருப்பாவையில் எந்த இடத்திலேயும் சொல்லப்படவில்லையே? பறையைச் சுற்றித்தானே ஆண்டாளது திருப்பாவைப் பாடல்கள் இருக்கின்றன?  பறையை எடுத்துக் கொண்டு போனார்கள். நாராயணனே நமக்கே பறை தருவான் என்று சொன்னார்கள். அதற்கு மாறாக இறைவா நீ தாராய் பறை என்றார்கள்.இற்றைப் பறை கொள்வான்‘ என்றார்கள். உடனேயே அன்று காண் என்று சொன்னார்கள். கடைசியில் அங்கப் பறை கொண்டவாற்றைப் பற்றி சங்கத் தமிழில் பாடினேன் என்றுதானே ஆண்டாள் சொல்லியிருக்கிறாள்?

வைரமுத்து ஆராய்ந்துதானே எழுதியிருக்கிறார்? அவர் ஆராய்ந்து கண்டுபிடித்த’கணவன்’ விஷயத்தை விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

இனி அவர் அறிந்த தமிழுக்கு வருவோம்.

காத்யாயனியைக் குறித்த –  காத்யாயனிக்கும் கண்ணனுக்கும் உள்ள தொடர்ப்பைப் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் இருக்கின்றனவே, தமிழை ஆற்றுப்படுத்த  விரும்பும் வைரமுத்து அவற்றை எப்படி அறியாமல் போனார் ?

அதைக் குறிப்புகளை இங்கு கொடுக்கிறேன்:

காத்யாயனிக்கும், குமரிக்கும் தொடர்பு உண்டு என்று சொல்லும் மந்திரம் இருக்கிறது. அதாவது காத்யாயனி வழிபாடு முதலில் வரும். அவள் மூலம் கன்யகுமரியை வழிபட முடியும். அந்தக் கன்யகுமாரி இருப்பது தமிழ் நாட்டில்!

அந்தக் குமரி எப்படிப்பட்டவள் என்பதை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.

வேட்டுவ வரியில் ஒரு சிறு பெண்ணை ‘குமரி’ என்னும் தெய்வமாக அலங்கரிக்கிறார்கள். அவள் நெற்றியில் சிவனது மூன்றாவது கண்ணை எழுதுகிறார்கள். அவள் கையில் கொடுக்கும் பல பொருட்களுள் பாவையும், கிளியும் உள்ளன. அவளைப் போற்றும் பெயர்கள் ஒன்பது. அவை அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மாலவற்கு இளங்கிளை, ஐயை, செய்யவள். இவற்றுள்மாலுக்கு இளங்கிளை என்றால் திருமாலுக்கு இளையவள் என்று பொருள். இவள் தாங்கிய ஆயுதங்களுள், திருமாலாது சங்கு, சக்கரமும் உண்டு என்பதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

இவள் கலைமானின் மேல் இருப்பவள். மகிடன் என்னும் எருமை அசுரனது தலையைக் கொய்தவள் என்று சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. ஆகவே இவளேமகிஷாசுர மர்த்தினி என்னும் தெய்வம் என்று தெரிகிறது.

அது மட்டுமல்ல, இவள்

அரியரன் பூ மேலோன் அகமலர் மேல் மன்னும்

விரிகதிரஞ் சோதி விளக்காக்கியே நிற்பாய்

என்றும் சிலப்பதிகாரம் சொல்கிறது.

இதன் பொருள் ‘விஷ்ணு, சிவன், பிரம்மா’ ஆகிய மும்மூர்த்திகளது உள்ளத்தில் சோதியாக வீற்றிருக்கிறாள். இதே கருத்து சிவபெருமானால் அருளப்பட்டதாகச் சொல்லப்படும் ‘தேவ்யுவாச’ என்று தொடங்கும் லட்சுமியைக் குறித்த சமஸ்க்ருத ஸ்தோத்திரத்தில் நவதுர்காம் மஹா காளீம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மிகாம் என்று காணப்படுகிறது.

இப்படிப்பட்ட தொடர்புகளைக் காட்டும் சிலப்பதிகார வேட்டுவவரி,

மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச

உருளும் சகடம் உதைத்தருள் செய்குவாய்’

என்று குமரியைப் பற்றிச் சொல்லி முடிக்கிறது.

இதன் பொருள், இரு மருத மரங்களின் இடையே நடந்து அவற்றைச் சாய்த்து, நின் மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சத்தால் தோன்றிய உருண்டு வரும் சகடத்தை உதைத்தருளினாய்”

யாருடைய மாமன் கஞ்சன் (கம்சன்)?

மருத மரங்களுக்கிடையே ஊர்ந்தது யார்?

சகடத்தை உதைத்தது யார்?

இவையெல்லாம் கண்ணனைக் குறித்த செய்திகள்.

ஆனால் இவற்றைக் குமரி, அதாவது, மகிஷாசுர மர்த்தினி, அதாவது திருமாலின் தங்கை செய்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. அது எப்படி என்று வைரமுத்து ஆராய்ந்தாரா?

சிலப்பதிகாரத்தில் இவளுக்கு ஒன்பது பெயர்கள். இவளே நவதுர்கா என்னும் ஒன்பது துர்க்கைகளாக இன்றும் வழிபடப்படுகிறாள்.

நவதுர்கைகளில் ஒருத்திதான் காத்யாயனி!

காத்யாயனியை வழிபாட்டு, கண்ணனைக் கணவனாக அடைய விரும்பி யமுனைக் கரையில் மார்கழி மாதத்தில் நோன்பிருந்தனர் என்று சொல்லியிருக்கவே, காத்யாயனி என்பவள், சிலப்பதிகாரம் கூறும் மாலுக்கு இளங்கிளை எனப்பட்ட தங்கையாக இருக்க வேண்டும். தங்கையிடம் விண்ணப்பித்து, அவளது அண்ணனான திருமாலின் அவதாரமான கண்ணனை மணக்க விரும்பினர் ஆயர் குலப் பெண்கள்.

இனி என்னுடைய கேள்விகள்:

பாவை நோன்பாகட்டும், காத்யாயனி நோன்பாகட்டும், அவற்றின் மூலத்தையும், காரணத்தையும் பண்டைத் தமிழ் நூல்கள்தானே தமக்குள் பாதுகாத்து வைத்திருக்கின்றன. வைரமுத்து அவற்றை ஏன் அறிந்திருக்கவில்லை?

ஆண்டாள் ஆராய்ச்சியும், அவள் செய்த பாவை நோன்பு ஆராய்ச்சியும் செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறவர் குறைந்த பட்சம் இந்த செய்திகளையாவது சேகரித்திருக்க வேண்டுமே?

பாவை நோன்பு என்பது சடங்கு, அதற்குக் கண்ணன் ஓர் காரணம் என்றுசொல்கிறாரே,

அதன் ஆரம்பம், முதல் சங்கத்தைத் தொடங்கின சிவபெருமானால் ‘குமரி’ தீர்த்தத்தை ஆரம்பித்து வைத்த காலத்திலேயே உண்டானது என்று தமிழ் அறிந்த வைரமுத்துவுக்குத் தெரியவில்லையா?

அந்தச் செய்தி திருவிளையாடல் புராணத்தில் வருகிறதல்லவா?

பாவம், வைரமுத்து ஏன் புராணங்களைப் படிக்கப்போகிறார் – அவை தமிழ் மொழிக்கே உரியன என்றாலும்?

அது மட்டுமா,  சிலப்பதிகார வேட்டுவவரியில் சொல்லப்படும் குமரித்  தெய்வத்தைக் கூட இவர்  அறிந்திருக்கவில்லையே! அவளே மகிஷாசுர மர்த்தினி என்று சிலப்பதிகாரம் சொல்லியிருக்க, அவளை வந்தேறி தெய்வமாகப் பார்த்த மக்கள்தானே இவருக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்?

ஒன்பது பெயர் கொண்ட அவளை முன்னிட்டுத் தானே இன்றும் நவராத்திரிப் பண்டிகை தமிழ் நாட்டில் கொண்டாடப்படுகிறது?

ஆனால் அது பார்ப்பனப் பண்டிகையாகப் பார்க்கப்படுகிறது. வேட்டுவவரி குமரியின் ஒன்பது உருவகங்களை பார்ப்பனர்கள்தான் இன்று வரை காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதைத் தமிழர் பண்டிகையாக ஆக்க வேண்டாமா என்று நாம் ஒரு சமூகக் கேள்வியை வைக்கிறோம்.

வேட்டுவ வரிக் குமரி மகிடனை வதம் செய்த நாளில்தான் அவள் ஆயுதத்தைக் கொண்டாடும் விதமாக ஆயுத பூஜை செய்கிறோம்? ஆனால் அது வந்தேறி பூஜை.

இவர்கள் அறிந்த தமிழால், அதாவது இவர்கள் தமிழை அறியாததால், வேட்டுவவரிக் குமரி இன்று நேபாள நாட்டுக்குப் போய் விட்டாள்.

 

அவளை பூஜிப்பது மேற்கு வங்கத்துக்குப் போய் விட்டது.

இங்கு என்ன இருக்கிறது?

எட்டாம் நூற்றாண்டில் கூட இங்கு இந்து மதம் இல்லை என்று சொல்லும் கூட்டம் தான் இருக்கிறது. அந்தக் கூட்டம்தான் வைரமுத்துவின் ஆண்டாள் தமிழுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சறுக்கல் 3 வைணவத்தின் வளர்ச்சி எப்பொழுது?

அடுத்து அவர் சொல்வது:

வைணவம் திருப்பாவை காலத்தில்தான் வளர்ச்சி பெற்றது என்கிறாரே? அப்படியென்றால் பரிபாடல் தொகுப்பில் உள்ள திருமால் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் வைணவம் இல்லையா? அல்லது வளர்ச்சி பெறவில்லையா?வைரமுத்து அப்பாடல்களைப்  படித்ததே இல்லையோ?

குறிப்பாக ஒரு பாடலைச் சுட்டிக் காட்டுகிறேன்.

பரிபாடல் திரட்டில் இருந்தையூர் என்னும் பதியில், வீற்றிருந்த கோலத்தில் திருமால் இருப்பதாகப் பாடல் ஒன்று உள்ளது. இந்தப் பாடலைக் கொண்டு இதில் சொல்லப்படும் பெருமான், இன்றைக்குக் கூடலழகர்  என்று அழைக்கப்படும் திருமால் என்று தெரிகிறது. அவர் வீற்றிருந்த கோலத்தில் இருக்கவே அவர் குடி கொண்ட ஊருக்கும் ‘இருந்தையூர்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

2-ஆம் சங்கத்தில் இருந்தையூர் குருங்கோழி என்ற புலவர் இருந்திருக்கிறார் என்று இறையனார் அகப்பொருள் உரை தெரிவிக்கிறது. இதனால் இருந்தையூர்  என்னும் ஊர் 2-ஆம் சங்க காலத்திலேயே  இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இருந்தையூர் பாடலில், திருமாலை தரிசிக்கப் பலதரப்பட்ட மக்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர் என்றும் எழுதப்பட்டுள்ளது.

2-ஆம் சங்க காலத்திலேயே அங்கு வைணவம் தழைத்து இருந்திருக்கின்றது என்பதற்கு இந்தப் பாடல் சாட்சியாக இருக்கிறதே,  வைரமுத்து இதை அறிந்து கொள்ளாமல் எப்படி  தமிழ் – வைணவ ஆராய்ச்சி செய்தார்?

பின்னாளில் இதே பதியில்தான் பெரியாழ்வார் பாண்டியனுக்கு, பரதத்வ நிர்ணயம் செய்தார். அந்தப் பதியின் திருமால் (இருந்தையூர் பெருமான்)அவருக்குப் ப்ரத்யக்ஷமானார். 2- ஆம் சங்க காலத்திலிருந்தே வைணவம் தழைத்த இடம் அது. என்னவோ புதிதாக அவர் காலத்தில் (ஆண்டாள் காலத்தில்)  வைணவம் தழைத்தது போல வைரமுத்து பேசுகிறாரே? இதுதான் அவர் சங்கப் பாடல்களை அறிந்த லட்சணமா?

சறுக்கல் 4: இறையோடு இழைந்த வாழ்வு பிற்காலத்திலாம்

இதைப் படித்தவுடன், சீரியஸாகத்தான் பேசுகிறாரா, அல்லது ஏதேனும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள  கட்டுரையைப் படித்து விட்டு பேசுகிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. எதை படித்தாரோ இல்லையோ, மணிமேகலையைப் படிக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

மேலே எடுத்துக்காட்டிய இருந்தையூர் திருமால், இரண்டாம் சங்க காலத்திலேயே தமிழர் வாழ்க்கையில் இறை  இழைந்து இருந்த  தன்மையைக் காட்டுகிறது.

சங்க காலம் முடிந்த பின்னும், மணிமேகலை காலத்தில் இறை பக்தி தொடர்ந்திருக்கின்றது என்பதற்கு ‘சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை’சான்றாக இருக்கிறது. அப்பொழுது தழைத்திருந்த வேத, ப்ரம்ம, சாங்கிய, வைசேடிக, சைவ, வைணவ மற்றும் ‘அளவை’ (ஜைமினி, வியாசர் அருளியவை) மார்க்கங்களை அறிந்து கொள்ளாமல் இப்படி ஒரு கருத்தை வைக்கிறாரே வைரமுத்து, அவர் தமிழ் அறிவு புல்லரிக்க வைக்கிறது.

சறுக்கல் 5: மனிதர்கள் இல்லாத மதமா வைதிக மதம்?

மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற ‘மெய்ஞானம்’  வைதிக மதத்துக்கு வந்தது என்கிறார் வைரமுத்து. எந்த ஆராய்ச்சியில் இதைக் கண்டுபிடித்தார்?

மனிதர்களைத் தேடித்  தேடி ‘ஆன்மாவை அறுவடை’ செய்யும் மதம் இன்றும் நம் நாட்டு மக்களை வலை வீசி இழுத்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். கத்தி முனையில் நம் மக்களை மாற்றிய இன்னொரு மதம், குட்டி போட்டுப்  பெருக்கிக்  கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கி முனையில் உலகையே  ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பதை உலகமே ஒத்துக் கொள்ளும்.

இவைதான் இவர் சொல்லும் கடவுள்  இல்லாத மதங்கள். கடவுள் யார் என்று அடையாளம் காட்டாத மதங்கள். வைரமுத்துவின்  பேச்சில் உள்ள அபத்தம் என்னவென்றால், கடவுளில்லாத இந்த மதங்கள், அன்றைக்கு – அதாவது அவர் சொல்லும் காலத்தில் இந்தியாவிலேயே காலூன்றவில்லை. அப்படியென்றால் இன்றைக்கு ஏன் இப்படி எழுதுகிறார் வைரமுத்து?

அவரே பதில் சொல்லட்டும்.

உண்மை இவ்வாறிருக்க மனிதர்களை இழுக்க வைதிக மதம் முயன்றது என்று வைரமுத்து கூறுகிறாரே, எப்படி? ஏன்? ஏதாவது ஒரு சான்றை வைரமுத்து கொடுக்கட்டுமே?

மேலும் அவர், சமண -புத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பின் மக்களை இழுக்கும் பணி நடந்தது என்கிறார்.

சமண -பௌத்த மதங்கள் வருவதற்கு முன்பே எல்லா மக்களும் வைதிக மதத்தை ஒட்டி வாழ்ந்தனர் என்பதற்கு சங்கப்பாடல்கள் அனைத்துமே சாட்சியாக இருக்கின்றனவே? அவற்றை வைரமுத்து அறியவில்லையா?

அறியவில்லை போலிருக்கிறது! கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறேன்.

பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப் படையையாவது படித்து விட்டு ‘மெய்ஞானம்’ பற்றி வைரமுத்து பேசட்டும்.

சறுக்கல் 6: முக்தி எனபது ‘புதிய சலுகை’யாம்

மனிதர்கள் இல்லாமல் மதமா – என்று வைதிக மதம் இறங்கி வந்தது என்று வைரமுத்து கண்டு பிடித்தாரல்லவா, மனிதர்களைப் பிடிக்க என்ன யுக்தியை வைதிக மதம் கண்டுபிடித்தது என்று இங்கே கூறுகிறார். ஒரு ‘புதிய சலுகை’யைக் கொடுத்ததாம் வைதிக மதம்.

அதென்ன புதிய சலுகை?

அது ‘முக்தி’ !!!

முக்தி என்பது  புதிய சலுகையா?

திருக்குறளை மறந்து விட்டாரா வைரமுத்து?

திருக்குறள் முதல் அதிகாரம் முக்தியைப் பற்றித்தானே சொல்கின்றது?

கடவுளின் குணங்கள் ஆறு. அதனால் தான் அவன் ‘பகவன்’  என்று அழைக்கப்படுகிறான். அந்த பகவானை முன்னிட்டு இருக்கும் இந்த உலகத்தில் – என்று முதல் குறளில் ஆரம்பிக்கும்  திருவள்ளுவர், 10-ஆவது குறளில் அவனது அடியை சரணடைந்தால்தான், பிறவிக் கடலைக் கடக்க முடியும் – அதாவது முக்தி பெற முடியும் என்று சொல்லி விட்டாரே. சமூகத்தில் வேரூன்றி இருந்தால்தான் இப்படிப்பட்ட கருத்தைத் திருவள்ளுவர் கூறியிருக்க முடியும். இதுகூட தெரியவில்லையா வைரமுத்துவுக்கு ?

இது புதிய சலுகை இல்லை, இதுதான் வைதிக மதத்தின் கொள்கையே.

சறுக்கல் 7: சாதிப் பேச்சு

வர்க்க பேதம்- சாதிய அடுக்குகள் என்று கூறுகிறாரே,  தொல்காப்பியம்,  புறத்திணை இயல் 74-இல். அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று ஆரம்பித்து ஏழு வகையான பிரிவுகளைத் தொல்காப்பியர் கொடுத்துள்ளாரே, அதற்கு வைரமுத்து என்ன சொல்கிறார்?

எந்த மதம்  கெட்டிப்படுத்தியது என்று தொல்காப்பியர் அவற்றைக் கொடுத்துள்ளார்?

அவை என்றென்றும் இருந்தன, எல்லாரது அங்கீகாரத்துடனும் இருந்தன என்று பொருள் கொள்ளும் வகையில் என்மனார் புலவர்’ என்கிறாரே தொல்காப்பியர், அறிவில்லாமலா அவர்கள் அவ்வாறு செய்தார்கள்?

தொல்காப்பியர் சொன்னதை ஆராய்ந்துவிட்டு  வைரமுத்து பதில் சொல்லட்டும்.

அடுத்து தொண்டரடிப் பொடியாழ்வாரை மேற்கோளிடுகிறார். இறைவன் முன் அனைவரும் சமம் என்னும் ‘குறுகிய பரவசம்’ அவர்களைக் கூட்டுவித்தது என்று சொல்கிறார் வைரமுத்து.

இறைவன் முன் அனைவரும் சமம் என்று சொல்லவில்லை.

இறைவனைத் தொழுவதால் அனைவரும் சமம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இறைவனுக்கு முன் ஏன் அனைவரும் சமமில்லை? அதற்கு விடை, திருக்குறள்’ஊழ்‘ அதிகாரத்தில் உள்ளது. ஊழிற் பெருவலி யாவுள’ என்று கேட்கிறார் திருவள்ளுவர். ஒருவர் செய்த ஊழ்வினையே வலிமையானது. அதைத் தகர்க்க அந்த ஊழாலேயே முடியாது என்கிறார் . இதன் காரணாமாக அனைவரும் சமமில்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது.

அதைத் தகர்க்க வழி சொல்வது வைதிக மதம், அந்த மதக் கருத்தை உள்ளுணர்ந்தவர்கள்  ஆழ்வார்கள். அந்த வகையில் ஆழ்வார் சொல்கிறார்,இறைவனைத் தொழுங்கள். உங்கள் ஊழ்வினை அழியும், அதன் காரணமாக அனைவரும் சமம்.

இதே கருத்து பத்துப்பாடலின் மதுரைக் காஞ்சியில் கழுநீர் கொண்ட ‘ என்று தொடங்கும் வரிகளில் இருப்பதை வைரமுத்து அறியவில்லையே?அவருடைய ‘விரிந்த பரவசத்தில்’ அவற்றைப் படிக்காமல் இருந்து விட்டாரா?

ஆழவார்ப் பாடல்களைத்தான் புரிந்து கொள்ளவில்லை, சங்கப்  பாடல்களையாவது நன்கு தெரிந்து கொண்டிருக்கலாமே?

சறுக்கல் 8: கடவுளும், தெய்வமும்

கடவுள் – தெய்வம் என்பவற்றின் வேறுபாட்டினைச் சொல்கிறார் வைரமுத்து.

கடவுள் என்றால் யார்? உள்ளிலிருந்து கடவுபவன் – கடவுள். நம் மனதின் உள்ளிலிருந்து நம்மைச் செலுத்துபவன் என்று பொருள். கடவு என்றால் வழி. கடவுதல் என்றால் செலுத்துதல், வழிபடுத்துதல் என்று பொருள். அவன்  உள்ளிலிருந்து கடவுவதால் அவன் கடவுள்.  வைதிக  மதத்தில் அதற்கு  ஒரு பெயர் உண்டு. அது ‘அந்தர்யாமி’! எங்கும் இருக்கும் இறைவன் ஒவ்வொருவரது உள்ளத்திலும் இருந்து கொண்டு அவரவரை இயக்குகிறான்.

தெய்வம் என்பவன் யார்?

தெய்வம் என்னும் சொல், ‘திவ்’ என்னும் வடசொல் மூலத்திலிருந்து வந்தது.’திவ்’ என்றால் ஒளி என்று அர்த்தம். திவ் என்னும் சொல்லிலிருந்து தேவ்,தேவன் என்னும் சொற்கள் வந்தன. தேவன் என்றால் ஒளியுடையவன், ஒளி வீசிக் கொண்டிருப்பவன் என்று பொருள். தேவன் என்பதே தெய்வம் என்று தமிழில் மருவி வந்திருக்கிறது.

கடவுள் என்பதற்கும் தெய்வம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதா என்று கேட்டால் ஆம். இவை இரண்டின் அர்த்தத்திலேயே நாம் அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அதற்கு  ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.  நம்மைச் சுற்றி வெளியே எங்கும் காற்று இருக்கிறது. காற்று  இல்லாமல் உலகம் இல்லை. அதை தெய்வத்துடன் ஒப்பிடலாம். அதே  காற்று நம்முள் இருந்தால்தான் நாம் உயிருடன் இருப்போம். அதைக் கடவுளுடன் ஒப்பிடலாம். ஆக இரண்டு காற்றும் ஒன்றுதான். ஆனால் அதனுடன் நமக்கிருக்கும் தொடர்ப்பைப் பொறுத்துதான் அவற்றை வேறு வேறாகப் பார்க்கிறோம். நம்முள் இருப்பவன் கடவுள். எங்கும் இருப்பவன் தெய்வம்.

எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் முன் கடவுளைத் தியானம் செய்து, இந்த செயல் நன்கு நடைபெற உதவு, என்று கேட்டுக் கொள்கிறோம். அது நம்முள் இருக்கும் கடவுள், நம்மைச் சரியாக வழி நடத்த வேண்டிச் செய்யும் விண்ணப்பம். புலவர்கள் அதன்  காரணமாகவே கடவுள் வாழ்த்தைச் சொல்லியே தங்கள் படைப்பைத் துவங்குவார்கள்.

கடவுள் வாழ்த்துச் செய்யுளில், தான் வணங்கும் கடவுளை பூட்டி வைக்கும் வழக்கம் பழந்தமிழ் மரபில் இருந்திருக்கிறது. கடவுள் வாழ்த்தின் முதல் செய்யுளின் முதல் சொல்லின் முதல் சீரில்  தானப் பொருத்தம், நக்ஷத்திரப் பொருத்தம் பார்த்து, தான் வணங்கும் கடவுள்  அல்லது பாட்டுடைத்தலைவனது  பெயரின் முதல் எழுத்தை வைப்பர் என்று சூடாமணி நிகண்டு (12-31 & 102) கூறுகிறது. இதன் படி திருவள்ளுவர் தியானித்த கடவுளின் பெயரை அறிய முடியும். (இங்கே காண்க)

எந்த அடிப்படையும் இல்லாமல், மனம் போன போக்கில் கடவுளுக்கும், தெய்வத்துக்கும் இலக்கணம் சொல்லுகிற வைரமுத்துவைப் பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது –

இவருக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை?

சினிமாத் தமிழுடனேயே திருப்தி பட்டுக் கொள்ளலாமே.

சறுக்கல் 9: குதர்க்கமான  ‘குல மகள்’ பேச்சு

ஆண்டாளின்  பிறப்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் வைரமுத்து. இதற்கு நாம் முந்தைய பதிப்பில் பதில் சொல்லியிருக்கிறோம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இதற்கு முன்  சாதி பேதம், வர்க்க பேதம் என்று ஆவேசமாகப் பேசியவர், ஆண்டாள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவள் என்ற கேள்வியை வைக்கிறாரே,  யாருடைய மனதை சாதி பிடித்து ஆட்டுகிறது? இந்தக் கேள்விக்கும் ஆண்டாள் தமிழை எப்படி ஆண்டாள் என்ற ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?

சறுக்கல் 10:  வீட்டுப் பொருள், அத்து மீறினாளாம்.

பெண்ணை வீட்டுப் பொருளாகவும், பூட்டுப் பொருளாகவும் கருதப்பட்ட 8-ஆம் நூற்றாண்டு என்கிறார் வைரமுத்து. அவரது அந்தக் கருத்தையே தினமணி இதழும் முக்கியச் செய்தியாக பெரிய எழுத்தில் வெளியிட்டுள்ளது.

வைரமுத்துவின் கருத்தில் உள்ள முரண்பாட்டை, வைரமுத்துவாவது அல்லது பெரிய எழுத்தில் போடச் செய்த ஆசிரியராவது  கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தார்களா?

ஆண்டாள் செய்ததோ பாவை நோன்பு. இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டை விட்டு வெளியே சென்று, தோழிகளைத் திரட்டி, ஆற்றங்கரைக்குச் சென்று நீராடுகிறாள். அன்றைய பெண்கள் வீட்டுப் பொருளாகவும், பூட்டுப் பொருளாகவும் இருந்திருந்தால், இப்படிச் செல்ல முடியுமா என்று ஏன் வைரமுத்துவும், ஆசிரியரும் நினைத்துப் பார்க்கவில்லை?  வைரமுத்து எழுதி இருப்பது சினிமா வசனம் போல இருக்கிறதே தவிர எந்த ஒரு தரவு- சான்றுகளையும் வைத்துக் கொண்டு அவர் எழுதவில்லை. பாவை நோன்பே ஒரு சான்று என்பதும் அவருக்கு புலப்படவில்லை – இவை எதையுமே அவர் உணரவில்லை என்பதே உண்மை.

அடுத்த கேள்வி, ஆண்டாள் எப்படி ஆக்கமுற்றாள்?

சூழ்நிலைதான். அவரவர் வளர்கிற சூழ்நிலையில் பேசப்படும் விஷயங்கள், எண்ணங்கள் ஆகியவையே ஒருவரை உருவாக்கிக்கின்றன. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்னும்போது, பெரியாழ்வார் வீட்டுப் பெண்ணும் பெருமாள் நினைவில்லாமல் எப்படி வளர்வாள்?

அடுத்த அபத்தம், மரபுகளின் மீதான அத்துமீறல்.

அத்துமீறியிருந்தால் ஆண்டாளை ஏன் ஆழ்வாராக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்? அவள் பாடியது அத்து மீறல் என்றால், அவற்றுக்கு ‘வேதமனைத்துக்கும் வித்து’ என்னும் அங்கீகாரத்தை எப்படிக்  கொடுத்திருப்பார்கள்?

அவள் மரபுக்குள் பாடவேதான், தான் பாடியதை ‘சங்கத் தமிழ் மாலை’ என்று சொல்லியிருக்கிறாள். அதில் சந்தேகமிருந்தால், அவள்  பாடிய சங்கத் தமிழை, அது சங்க-மரபு சார்ந்தது அல்ல என்று பகுதி பகுதியாக வைரமுத்து சுட்டிக் காட்டட்டும். இப்படி இழி சொல்லும், பழி சொல்லும், நாலாந்தர சினிமா வசனமும் பேசி, தன் தரம் இவ்வளவுதான் என்று உலகத்துக்குப் பறை சாற்றிக் கொள்ள வேண்டுமா?

சறுக்கல் 11: எதிர் வினையாகும் ஆண்டாள் விருப்பம்

கற்பனை ஓடுகிறது வைரமுத்துவுக்கு – கல்லாக் கற்பனை! பெரியாழ்வாரைக் கற்காமல் ஆண்டாளைக் கற்க முடியாது. அதனால்தான் அவள் தெய்வத்தையே மணப்பேன் என்றதை பெரியாழ்வாருக்குக் கிடைத்த எதிர் வினை என்கிறார்.

தன் மகள்  தெய்வத்தையே மணப்பேன் என்றால் ஆழ்வார்க்கு எத்துணை உவகை பெருகியிருக்கும் தெரியுமா? எப்படி அது நடக்கும் என்பது மட்டும்தான் அவருக்கு கவலை. இன்றுவரை வைணவர்கள் மற்றும், வைதீகத்தைப் பின்பற்றும் பிற பிரிவினரும் தங்கள் மருமகனாக அந்த விஷ்ணுவே வர  வேண்டும் என்று விரும்புபவர்கள். வைணவர் வீட்டுத் திருமணத்தில், மருமகனை விஷ்ணுவாக உருவகப்படுத்தித்தான், மணமேடைக்கு அழைத்து பெண்ணைப் பெற்றவர் கால் அலம்பி வரவழைப்பார்.

இன்றைக்கும் அப்படிப்பட்ட பாவனையில்  வைணவர்கள் இருக்க, பெரியாழ்வார் காலத்தில் ஆண்டாள் விருப்பம் எப்படி ஒரு எதிர் வினையாக இருந்திருக்க முடியும்?

மேலும் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக்கூட நம்பி, பிம்பி என்றெல்லாம் பெயர் வைக்காதீர்கள், நாரணன் நாமத்தையே வையுங்கள் என்று சொன்னவர் பெரியாழ்வார். அந்தப் பத்து பாசுரங்களில், (பெரியாழ்வார் திருமொழி-4-6-4)

” மானிட சாதியில் தோன்றிற்றோர் மானிட சாதியை,

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கில்லை

என்று பெரியாழ்வார் கூறுகின்றார். மானிடர்களது பெயரைக் கூட குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது என்கிறார். அப்படியிருக்க ஒரு மானிடனைத் தன் பெண் மணக்க விரும்பாமல் தெய்வத்தையே மணக்க விரும்பினால், அவர் ஊட்டிய முக்திக் கருத்துக்கு ஆண்டாள் காட்டிய முதல் படி அல்லவா அது?

இதையொட்டியே மானிடனுக்கு வாழ்க்கைப் பட மாட்டேன் என்று அவள் சொன்னது அமைந்திருக்கிறது என்று  வைரமுத்து சொல்லியிருந்தால் அது ஆராய்ச்சி.

விடுதலைக் குரல் என்பது, முக்திக்கான விடுதலைக் குரல் என்று வைரமுத்து சொல்லியிருந்தால் அது போற்றப்பட வேண்டிய ஆராய்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அவர் சினிமாக் கவிஞர். அவர் சொல்லாடலும் கருத்தாழமும் நிகழ் கால சினிமாவைத் தாண்டி செல்லவேயில்லை என்று தெரிகிறது. அதனை அடுத்த பத்தி அழுத்திச் சொல்கிறது.

சறுக்கல் 12: பொருந்தாச் சொல்

வைரமுத்துவின் சினிமாச் சொல்லாடலைக் கவனித்த்தீர்களா? முந்தி விரித்தாளாம். எந்தச் சொல்லையும் இடம், பொருள், ஏவல் குறித்துச் சொல்லும் பாங்கினைக் கூட அறியாமல், அல்லது அறிந்தும் விரும்பாமல் இவ்வாறு எழுதியிருக்கிறார் என்பது அவர் கையாளும் தமிழ் நயத்தின் தரத்துக்குச்சான்று இல்லாமல் வேறு என்ன?

சறுக்கல் 13: வைரமுத்துவின் இகழ்ச்சிப் பேச்சின் சிகரம்

அடாவடியான வார்த்தைகள் – சொன்னவருக்குக் கவிப்பேரரசு என்னும் பட்டமாம். இவருக்குப் பொருத்தமாக முன்றுறை அரையனார் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

“ திறத்தும் இறப்பப் பெரியாரைக்

கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்

நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு

மறைந்துயானை பாய்ச்சி விடல்.

(பழமொழி 376)

கல்லாதவர் பெரியோரை இகழ்ந்து பேசுதல், எருக்கஞ் செடியில் மறைந்து கொண்டு யானை மீது அம்பு விடுவதை ஒக்கும். இதன் கருத்து’அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின்,அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.’

திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்:

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்”.

இவர்கள் வாக்கு பொய்யாகுமா?

சறுக்கல் 14: வைரமுத்துவின் கேவலக் கண்ணோட்டத்தின் சிகரம்

கேவலக் கண்ணோட்டத்தின் உச்சக் கட்டத்தை  இந்த வரிகளில் வைரமுத்து தொடுகிறார்.

கன்னி கழியாத பெண் (ஆண்டாள்) பாலியல் உரையாடல் செய்கிறாளாம். அதற்கு அவர் சான்றாகக் காட்டுவது ‘குத்து விளக்கெரிய’ பாசுரத்தில்’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா’ என்னும் வரி. இப்படிப் பாடியதன் மூலம் கொடுங்கோடுகளைத் தாண்டினாளாம். அது மட்டுமா?

இந்த ‘சொல் விடுதலை’ ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சி அத்து மீறலா என்னும் விஷக் கருத்தை விதைக்கிறார்.

இவற்றைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ஏன்? ஆண்டாளை இப்படிச்  சொல்லிவிட்டாரே என்றா?

இல்லையில்லை.

தான் சங்கத் தமிழ் அறியாத பெரும் அறிவிலி என்பதை, வைரமுத்து இந்த அளவுக்குத் தானே பறை சாற்றிக் கொள்வார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

சங்கத் தமிழில் முல்லைக் கலி பாட்டெழுதத் தெரிந்திருந்தால் தன்னுடையதமிழ் அறிவு சூனியத்தை இந்த அளவு பறை சாற்றிக் கொண்டிருக்க மாட்டார். தன் கண்ணோட்டம் காமக் கண்ணோட்டம்தான்  என்பதைத்தான் கட்டுரை முழுவதும் நிரூபித்து வருகிறாரே.

விஷயத்துக்கு வருவோம்.

அந்தப் பாடலை எழுதிய ஆண்டாள் கன்னி பெண். அவள் பாடிய சங்கப் பாடல்களின்  பின்னணி ஆயர்பாடி. அவளும் அவள் தோழியரும் ஆயர் குலப் பெண்கள். இதனால் அவள் பாடல்களில் முல்லை நிலக் கரு, உரிப் பொருள்களை பார்க்கிறோம்.

சோழன் நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் கன்னிப் பெண்கள் ஆடும் குரவைக் கூத்து சொல்லப்படுகிறது. அந்தக் கூத்தில் அவர்கள் பாடும் பாடல் வரிகளையும் காணலாம்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எளியவோ ஆய் மகள்  தோள்?

விலை வேண்டார் , எம் -இனத்து  ஆயர்  மகளிர் –

கொலை  ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்

மார்பின் முலை இடைப் போலப் புகின்,

ஆங்கு குரவை  தழீ  யாம் , மரபுளி  பாடி ” (கலித் தொகை 103 )

இதன் பொருள்:

‘ எம் இனத்து ஆயர் முலை விலை வேண்ட மாட்டார்கள். ஆனால்,  கொல்லேற்றுக் கொம்பிடையிலே, காதலிக்கும் பெண்கள் முலையிடைப் போலக் கருதி ஆர்வமுடன் வீழ்ந்து தழுவினால், அவனையே தம் மகட்கேற்றவனாகக் கருதுவார்கள்.’ (புலியூர்க்  கேசிகன் உரை)

இந்தக் கருத்தைக் கொடுத்தவர்கள் ஆயர் மகளது பெற்றோர். இதைப் பாடியவர்கள் இளம் கன்னிப் பெண்கள்.

இதற்கு என்ன சொல்கிறார் வைரமுத்து?

இந்தக் கன்னி பெண்களுக்கு ‘சொல் விடுதலை’யும், ‘அகவெழுச்சி அத்து மீறலும்’ எப்படி உண்டானது என்று கேட்பாரா?

இந்தப் பாடல் சங்கப் பலகையில், தமிழ் அறிஞர் முன் பாடப்பட்டு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வைரமுத்துவைப் போல ‘இசை நோக்கிக்’ ‘கூலிக்குச் செய்துண்ணும்’ பாடலல்ல.

இந்தப் பாடல்முடிவில் ஒரு சொல் இருக்கிறது பாருங்கள்.

‘மரபுளி பாடி’ – அதாவது ‘மரபின்படி பாடி’ இருக்கிறார்கள்.

இதையே நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் (48) “மென்  தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே” என்று அருளிச் செய்திருக்கிறார்?

ஏன்?

அவர் ஆயர் மரபு அறிந்தவர். ஆயர் மகள் தோள் பெறுவது எளிதல்ல. கொல்லேறு தழுவி, அதன் கொம்பினைப் பற்றினால்தான் ஆய மகளான நப்பின்னையின் தோளை ஆயர் குலத் திலகமான கண்ணன்  தழுவ முடியும் என்பது மரபு. சொல்லும் பொருளின் இடம், கரு, உரி அனைத்தும் அறிந்துதான் அவர் எழுதியிருக்கிறார். ஆண்டாளும் அந்த மரபைப்  பின்பற்றியே எழுதியிருக்கிறாள்.

அந்த ஆயர் மரபின் படியே – அவர்கள் சொல்லாட்சியின் படியே, திருப்பாவையிலும் ஆண்டாள் எழுதியிருக்கிறாள். அவள் எழுதியது ஆயர் மகளான நப்பின்னையைப் பற்றி.

செப்பென்ன  மென்  முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!”

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த  மலர்  மார்பா”

இவை ஆயர் மரபின் படி,  அகப் பொருள்பாற்பட்ட, ஆய மகளிரால் சர்வ சாதாரணமாக கையாளப் பட்ட சொற்களே.

சிச்சுவேஷனுக்குப் பாட்டு எழுதுகிறேன் என்று வைரமுத்து செய்கிறாரே காமச் சொல்லாடல் – அது எந்தப் பாடல் மரபில் வருகிறது என்று அவரால் சொல்ல முடியுமா?

ஆனால் ஆண்டாள் பாடிய சங்கத் தமிழுக்கு மரபு உண்டு.

அது வைரமுத்துவுக்குத் தெரியவில்லை என்றால், குற்றம் அவருடையது.

இன்னும் ஒரு சான்று தருகிறேன், முல்லைக் கலியிலிருந்து. இதுவும் குரவைக் கூத்தில் கன்னிப் பெண்கள் பாடுவது.

முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதி வேம், கொலையேறு சாடிய புண்ணை”  (கலித் தொகை 106)

இதன் பொருள்:

‘ தோழி! எம் காதலனைக் கொலையேறு சாடிக் குத்திச் செய்த புண்களையெல்லாம், முலை வேதினால் ஒற்றி, ஒற்றித், தழுவித் தழுவிப் பொதிவோமடீ நாம்.”

ஒருத்தி, இரண்டு பேர் என்று அல்ல, ஆயர் மகள் அனைவருமே இப்படிப்பட்ட பேச்சையும், செய்கையையும் உடையவர்கள் என்று இப்பாடல் காட்டுகிறது.

அன்று ஆண்டாளும் சங்கத் தமிழ் படித்துதான் எழுதியிருக்கிறாள்,

நம்மாழ்வாரும், சங்கத் தமிழ் அறிந்துதான் எழுதியிருக்கிறார் என்பதற்கு முல்லைக் கலியே சான்று.

அவற்றை அறியாதவர் என்பதற்கு வைரமுத்து சான்று.

இதுவரை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா வைரமுத்து அவர்களே?

இங்கு இப்பொழுது சொல்லப்போவது ‘மரபு மீறல்களைத்’ தேடும் மரபறியா வைரமுத்துவுக்கல்ல.

ஆண்டாள்  பாடலில் ஆன்மீகத்தைக் காணும் அன்பர்களுக்கு.

திருப்பாவைத் தனியன்களில் ஒன்று முலையைப் பற்றிப் பேசுகிறது. பட்டர் அருளிய வடமொழித் தனியனான இது ‘நீளா துங்க ஸ்தன கிரி..’ என்றுதான் ஆரம்பிக்கிறது. இந்தப் பாடலின் பொருள்,

பணைத்தெழுந்த நப்பின்னை கொங்கையெனும் மலைச் சாரலில் கண் வளரும் கண்ணனைத் துயிலுணர்த்தி … ”

நப்பின்னையைப் பற்றிப் பேசும் இடங்களில் தான் முலைப்  பேச்சு வரும், ஒரு காரணம் அவள் ஆய மகள். இன்னொரு காரணம் அவள் நீளா தேவியின் அவதாரம்.

யார் அந்த நீளா தேவி?

அவள் திருமாலின் மூன்று துணைவியரில் ஒருத்தி.

நிலமகள், திருமாலின் ஒரு துணைவி.

நாம் நிற்கும், இந்த நிலமே நிலமகள் என்னும் பூதேவி.

திருமகள், திருமாலின் இன்னொரு துணைவி.

நாம் வாழும் இந்த நிலத்தைச் (பூமகள்) சார்ந்து கிடைக்கும், பொன் , பொருள், வளி, நீர் போன்ற பலவற்றின் மூலமாக நமக்குக் கிடைக்கும் செல்வமே திருமகள் என்னும் லக்ஷ்மி. அவள் ஒரு துணைவி.

இந்த இருவருக்கும் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து காப்பவள் நீளா தேவி,அவள் மூன்றாவது துணைவி.

இந்த பூமியைச் சுற்றி பாதுகாத்து வரும் காந்த சக்தி எனலாம். ஆய மகள் முலை போல் அவளுக்கும் இரு துருவங்களிலும் இரு முலைகள். “நீளா துங்க ஸ்தன கிரி’ என்று மலை போன்ற முலைகள் என்று பட்டர் அருளியது ஏன் என்று இப்பொழுது புரிந்திருக்கும்.

கொலை ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்

மார்பின் முலை இடைப் போலப் புகின்”

என்று கலித் தொகை சொல்வது போல மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக்  ரே’ எனப்படும் கதிர்களில்  இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.

நீளா என்னும் துருவக் காந்தம், பூமி உண்டானதற்குப் பின்னால் உண்டானது. எனவே அவள் பின்னை ஆகிறாள்.

அவள் இரவில் துருவப் பகுதியில் ஒளி வீசி வயப்படுத்திகிறாள், இரவில்நப்பின்னையுடன் கருநீலக் கண்ணன் துய்ப்பது போல.

நப்பின்னையைப்  பார்த்தவர் யாரும் இல்லை. நம்மாலும், இந்த நீளா தேவியை, காந்த சக்தியாக கண்ணனையே ஈர்த்தவளைப் பார்க்க முடியாது.

ஏறு தழுவி, ஆயர் மகள் முலை போன்ற அதன் முதுகினை அணைத்தவாறே (நப்பின்னை கொங்கை கை வைத்துக் கிடந்த மலர் மார்பன் – ஆண்டாள் கூற்று), வேகமாக ஓடும் எருத்தின் போக்கிலேயே, மாயவனும் அதன் மேல் பயணிக்கிறான்.

வாரம் ஏழு நாட்களும் மாயவன் பூமியை அணைத்து, காந்தத் துருவத்தோடு பயணிக்கும் அந்த காஸ்மிக் கோலமே, அவன் ஏழு ஏறு அடக்கி, நப்பின்னையை மணந்த செயலாக அவதாரத்தில் காட்டினானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆயர் சேரியில் ஆடும் குரவையையும், நப்பின்னையையும் இணைத்து ஆண்டாள் பாடியிருக்கவேதான், அதை  அறிவிலும் அருளிலும் ஜொலிக்கும்  ஆச்சார்யப் பெருமக்கள் நளினமாக, நாசூக்காகக் காட்டியிருக்கவே தான், இன்றைய அறிவியலின் துணை கொண்டு, பிரபஞ்சம் சார்ந்த நம் வைதிக மதத்தின் வீச்சினை அறிந்து கொள்ள முடிகிறது.

வைரமுத்து அவர்களே, இனி உங்களது அடுத்த சறுக்கல் என்ன என்று தெரிந்து கொள்ள வாருங்கள்.

சறுக்கல் 15: திமிர் காட்டும் உரைகாரர்கள்

இப்பொழுது வருகிறது அடுத்த சறுக்கல்

உரைகாரர்களை இவர்கள் என்றைக்குத்தான் மதித்திருக்கிறார்கள்?  சங்க நூல்களுக்கு உரை எழுதிய உரைகார்களையே இவர்கள் மதிப்பதில்லை. வைணவ உரைகாரர்கள் சொல்வதையா எடுத்துக் கொள்வார்கள்? அதைச் சொல்வதிலும், யார் திமிர் காட்டுகிறார்கள்?

உதாரணத்துக்கு, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் தொடரை எடுத்துக் கொள்வோம். இந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு, இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பார்கள். ஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு. இவை கர்ம வினையின் பாற்பட்டு, ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழக்கை நிலையைப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு.

மற்றவர் யாரும், நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகாது, நாமே நம் நிலைக்கு காரணம் ஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான். அதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல்.

இதில் இருப்பது முழுக்க முழுக்க வேதாந்தக் கருத்து என்பதை இருட்டடிப்பு செய்து விட்டு, தங்கள் வசதிக்கேற்றாற்போல அந்த வரியை மட்டும் உபயோகித்துக் கொள்கிறார்கள் .

இதைப் போன்ற இன்னொரு வரி திருக்குறளில் வரும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..” என்பதாகும்.

முன்வினைப்படி பிறக்கிறோம் என்பதில் மட்டும் தான் ஒற்றுமையே தவிர, வினைப்பயனால் அல்லது செய்யும் செயலால் வேற்றுமை  இருக்கிறது என்னும் இன்னொரு வேதாந்தக் கருத்தைக் கூறுகிறார்கள் உரைகாரர்கள். இதை எவ்வளவு தூரம் மக்களிடையே கொண்டு சென்றிருக்கிறார்கள்? தமிழர் மதம், இந்து மதமே இல்லை என்பதுதானே இவர்கள் பரப்பும் கருத்து?

இந்த ‘பிறப்பொக்கும்’ குறளையும், யாதும் ஊரே செய்யுளையும், வைரமுத்துவுக்கு ஆசானான கருணாநிதி செம்மொழிப் பாடலில் புனைந்துள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

பிறந்த பின்னர் யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

இதைப் படிப்பவர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும், பொருளை உருமாற்றி ஜாலம் செய்வதில் எவ்வளவு தேர்ச்சி பெற்றவர்கள் என்று!

சறுக்கல் 16:வெட்கமறுத்த மொழி தமிழ் – சொல்வது வைரமுத்து

கனவுத் திறம் உரைத்தல் என்பதே இன்பத்துப் பாலின் ஒரு இலக்கணமாக திருக்குறள் சொல்கையில், வைரமுத்து பயன்படுத்தும் சொல்லாடலைப் பாருங்கள். உடனே அடுத்த வரியில், உயர்த்திச் சொல்வது போல ஒரு பாவனை.

இன்னும் சொல்கிறார், தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறதாம்.

யாரை விமரிக்கிறார்?

ஆண்டாளையா? தமிழையா?

இவருக்கு முன்னால் ஒருவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.

இவரோ, தமிழ் வெட்கமறுத்த மொழி என்கிறார். இதற்குக் கைதட்டி வக்காலத்து வாங்கும் கூட்டத்துக்குத் தெரியுமா இவர், தமிழையும் சேர்த்துத்தான் இழிவு படுத்துகிறார் என்று?

சறுக்கல் 17:கன்னிக் குரல் என்னும் வஞ்சகப் பேச்சு

 

இதற்குப் பின் வரும் அனைத்துமே சறுக்கல்தான். வெள்ளிவீதியார் பற்றியும், பெருமாள்முன் ஆண்டாள் மறைந்ததும் பற்றி முந்தின கட்டுரையில் எழுதினோம். வைரமுத்து மேற்கோள் காட்டின ஆராய்ச்சிக்கு கட்டுரைகளின் ஏற்புடைமையை உலகமே உரித்துக் கட்டி விட்டது.

இந்தப் பகுதியில் விட்டுப் போன அடாவடிப் பேச்சு ஒன்று இருக்கிறது.

ஒரு கன்னிப் பெண் இப்படியெல்லாம் பேசலாமா என்று நைச்சியமாக ஒரு வரியில் இடைச் செருகல் செய்துள்ளார். இதைப் பற்றி சறுக்கல்-14 -இல் விரிவாக அலசினோம். மேலும் கொஞ்சம் விளக்குவோம்.

சங்கத் தமிழ் அகப்பொருளின்படி, முல்லை நில ஆய்ச்சியர் பெண், அதிலும் கன்னிப் பெண் இப்படிப் பேசுவதை சங்கத் தமிழில் காண்கிறோம். அந்தக் கன்னிப் பெண் தான் யாரை மணக்க விரும்புகிறாளோ அவரைப் பற்றி இப்படி பேசுவாள். முல்லைக் கலியில், ஆற்றங்கரையிலே, சிற்றில் புனைந்து, வரப்போகும் கணவனது படிமத்தை மணலில் வடித்து, அவனையே கணவன் என்று மனதில் வரித்தவளுக்கு அதுவே ‘பெருமணம்’. அதன்றி, அந்த வீட்டார் வேறு வரன் பார்த்தால், அது இரண்டாவது மணம் போன்றது.

ஆயர் குலப்  பெண் கூறுகிறாள், (கலித்தொகை-114)

” அருநெறி ஆயர் மகளிர்க்கு

இருமணம் கூடுதல் இல் இயல்பன்றே? ”

இதைச் சொன்னவள் கன்னிப் பெண். ஆண்டாளும் ஆயர்பாடிப் பெண்ணாகத்தான், சங்க கால ஆயர் மகள் போலவே பாடியிருக்கிறாள் என்பதை அறியாதவர் வைரமுத்து என்று சுய தம்பட்டம் அடித்துள்ளார் இந்தக் கட்டுரையில்.

சறுக்கல் 18: இல்லாத ஆதாரத்தை வெளியிட்டமை

வஞ்சப் பேச்சு  பேசுவதற்காகவே வைரமுத்து தேடித்திரட்டின ஆதாரங்கள். அவை பல்லை இளித்து விட்டன. அவற்றை இன்னும் பார்க்காதவர்கள் இங்கே பார்த்து, வைரமுத்துவைப் பற்றி பெருமை கொள்ளலாம்.

வெளியிடாத பல்கலைக்கழகம்

ஆதாரம் காட்டாத கட்டுரை


முடிவாக …..

மரபு மீறலைச் செய்தவர் வைரமுத்து.

என்ன மரபு மீறல் என்கிறீர்களா?

ஒரு கவிஞனோ, அல்லது ஒரு கட்டுரை ஆசிரியரோ, தான் எழுதப் புகும் பாட்டுடைத் தலைவன், அல்லது கட்டுரை நாயகனை, தன் கவிதை அல்லது கட்டுரையில் உயர்த்திச் சொல்லுவான். இல்லாத நல்ல விஷயங்களையும் இருப்பதாகக் கூட்டிச் சொல்லுவான். அதுதான் எழுதும் மரபு.

ஆனால் தமிழை ஆண்ட ஆண்டாள் என்று அவளை உயர்த்திச் சொன்னேன் என்று கூறிக் கொள்ளும் வைரமுத்து என்ன செய்துள்ளார்?

முழுக்க முழுக்க ஆண்டாளை, அவள் பாடிய தமிழைக் கேவலப்படுத்தி எழுதியுள்ளார்.

அவர் சொல்லிக் கொள்ளலாம், தான் உயர்த்திச் சொன்னதாக.

அப்படியே ஆகட்டும்.

ஆனால் அது வஞ்சப் புகழ்ச்சி. உயர்த்தி சொல்வது போலச் சொல்லி இறக்கிப் பேசுவது.

மொத்த கட்டுரையிலும் ஏதேனும் ஒரு வரியை அவர் காட்டட்டும் – இது ஆண்டாளை  உயர்த்திச் சொன்னது என்று. அப்படி ஒரு வரி கூட காணக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

அந்த உண்மை ஒரு கேள்வியை எழுப்புகிறது – எதற்காக இப்படி ஒரு கட்டுரையை ஆண்டாளின் மீது அவர் எழுதியுள்ளார்?

இரண்டே காரணங்கள்தான் தெரிகின்றன.

ஒன்று, நாம் இதுவரை விளக்கினாற்போல, அவருக்குப் பழந்தமிழும், சங்கத் தமிழும் தெரிந்திருக்கவில்லை. நிகழ்கால சினிமாத தமிழைத் தாண்டி அது காட்டும் கண்ணோட்டத்தைத் தாண்டி அவரால் பழந்தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்குச் செல்ல இயலவில்லை.

இரண்டு, இவர் அறம், பொருள், இன்பம் என்று வைதிக மதத்தின்  முப்பொருளைப் பற்றிப் பேசும் திருவள்ளுவர் வழி நடப்பவரல்ல.

திருவள்ளுவர் தன் முதல் குறளில் கடவுளை வணங்கி விட்டு இரண்டாவது குறளில் சொல்கிறார்,

கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.’

கல்வி கற்பதன் பயன் என்னவென்றால், அந்தக் கடவுளின் திருவடிகளைத் தொழுவதே ஆகும்.

தான் கற்ற கல்வியைக் கொண்டு பரமன் திருவடியில் பாசுரங்ககளைக் கொட்டி, அந்தப் பரந்தாமனது திருவடிகளிலேயே ஐக்கியமானாள் ஆண்டாள்.

ஆனால் அவள் பாடலில், அவள் பிறப்பில், அவள் வாழ்ந்த  விதத்தில், அவள் மறைவில் என்று எல்லா விதத்திலும் அவளைக் காமக் கண்ணோட்டத்துடன் பார்த்து, பத்திக்குப் பத்தி,  இடைச்செருகலாக, அவளையும், அவள் பக்தியையும், அவள் பின்பற்றிய வைதிக மதத்தையும், அந்த மதத்தைச்  சார்ந்த ஆச்சார்யர்களையும் மட்டம் தட்டி, விஷ வித்துக்களைப் படிப்பவர் மனத்தில் விதைத்திருக்கிறாரே – அது

இவருக்கு வைதிக மதத்தின் மீது – அது காட்டும் தெய்வத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்பதையே காட்டுகிறது.

அதாவது வள்ளுவன் வாக்கின்படி நற்றாள் தொழாதவர் என்பதைக் காட்டுகிறது. அந்த வைதிக மதத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட கட்டுரைக்கு நாம் சொல்லும் முடிவுரைதான் என்ன?

இந்தத் தருணத்தில் எனக்கு ‘சோ’ அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். வெகு நாட்களுக்கு முன் வைரமுத்துவின் கட்டுரையைப் போலவே, கவிதை வில்லங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கவிஞர் சுரதா அவர்கள் ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்ந்து கவிதை எழுதி வந்தார். சகிக்க முடியாத அந்தக் கவிதைகளை சோ அவர்கள் விமரிசனம் செய்தார். உடனே நான்கு பேர் சுரதாவுக்காக வரிந்து கட்டிக்க கொண்டு, சோவை எதிர்த்துப் பேசினர்.

சோ அவர்களுக்குப் பதில் அளித்தார் –

‘நாலு பேருக்கு நன்றி’. நாலு பேர் எதற்கு வருவார்கள். அதற்குத் தான் வந்திருக்கிறீர்கள். அதனால் ‘நாலு பேருக்கு நன்றி’

என்று கூறினார்.

வைரமுத்துவின் வைரம் (பகை, வெறுப்பு) முற்றின கட்டுரைக்கும் நாலு பேர் வந்தார்கள்.

மீதி சில பேர் மேளம் இசைத்தார்கள்.

சோ சொன்னது சரிதான்.

நாலு பேர் வந்து மேளமும் கொட்டியாச்சு.

இனி என்ன ?

பட்டங்களுக்கும், கொட்டங்களுக்கும் என்ன மரியாதையோ அதை அவர்களே கொடுத்துவிட்டார்கள்.

Series Navigationநாடோடிகளின் கவிதைகள்நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
author

Similar Posts

72 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //“பனி நீர் தோய்தலும், பாவையாடலும்‘
    என்று சொல்கிறதே, இந்த அமிலச் சோதனையை ஐந்து வயது முதற்கொண்டே பழந்தமிழ்க் குழந்தைகள் செய்திருக்கிறார்களே? அதை வைரமுத்து அறியவில்லையா?//
    “பனி நீர் தோய்தலும், பாவையாடலும்‘ என்ற இறுதி வரியை மட்டும் எடுத்துப் போட்டு குழந்தையும் அமிலச் சோதனையில் வைரமுத்து அமிழ்த்துவதாக குற்றம் பிடிக்கும் ஜெயஸ்ரீ அம்மையார்.பிங்கல நிகண்டுவின் முழுப்பாடலையும் பதியாமல் மறைத்தது ஏனோ? போகட்டும்….அம்மையாரை விட தமிழில் ஆய்ந்து தோய்ந்த மு.ராகைவையங்கார் அவர்கள் சொல்லும் விளக்கத்தைப் பார்ப்போம்.
    இனிப் பெண்பாற் பிள்ளைப்பாட்டின் செய்திகூறும் பிங்கலந்தைச் சூத்திரத்துள் (1369) –

    ”பேணுஞ் சிறப்பிற் பெண்மக வாயின்
    மூன்றா மாண்டிற் குழமண மொழிதலும்
    ஐந்தின் முதலா வொன்பதின் காறும்
    ஐங்கணைக் கிழவனை யார்வமொடு தோற்றலும்
    பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்”

    எனவரும் அடிகளிலே ஈற்றிலுள்ள ‘பனிநீர் தோய்தலும் பாவையாடலும்” என்பன, தைநீராடிப் பாவைநோன்பு நோற்பதைப் பற்றியதாகவே கொள்ளத் தகும்.’குழமண மொழிதலும்’ (= பாவைக்கு மணம்பேசி விளையாடலும்) என வேறு வருதலால் ‘பாவையாடல்’ என்பது, பாவையை வைத்து விளையாடலன்று என்பதும், ‘பனிநீர் தோய்தலுடன்’ கூடி வருதலின், அது மார்கழிப் பாவைநோன்பேயாதல் வேண்டுமென்பதும் உய்த்தறியக் கிடக்கின்றன. ‘தைஇத் தண்கயம்’ என்பவாகலின் பனிநீர் தோய்தல் என்றார். ”திருந்து பூவல்லியுந்தி தோணோக்கஞ் சிறந்த பாவை’ எனவும் (திருவாலவுடையார் புராணம், 27, 58) பாவைப் பாட்டு (தொல் – பொருள் – 461, உரை) எனவும் வழங்கலின் மார்கழித் திருவெம்பாவை நோன்பைப் பாவை எனவும் தனியே வழங்குதலுண்டு என்பது தெரியலாம். மேற்கூறிய பிங்கலந்தைக் கூற்றால், ஐந்துமுதல் ஒன்பது வயதுவரையுள்ள சிறுகன்னியரே தைந்நீராடி நோற்றற்குரியர் என்பது பெறப்படும்.”

    மு. ராகவையங்கார், மார்கழி நோன்பாகிய தைந்நீராடல், செந்தமிழ், தொகுதி 19, பக். 428-429 (1918-1919). ஆராய்ச்சித்தொகுதி.
    கவியரசு வைரமுத்து அவர்களின்அமிலச் சோதனைக்கு தமிழறிஞர் மு.ராகவையங்கார் அவர்களின் சான்று ஒன்று போதுமே!

    1. Avatar
      Ramia says:

      I believe that your expert from Raghavaiyengar’s text actually is an evidence that Pavai nombu pre-dates Andal’s times. That is what the author Sri Jayasri madam meant ass well and proves that 5-9 year old girls did the nombu.
      Quote :
      //மேற்கூறிய பிங்கலந்தைக் கூற்றால், ஐந்துமுதல் ஒன்பது வயதுவரையுள்ள சிறுகன்னியரே தைந்நீராடி நோற்றற்குரியர் என்பது பெறப்படும்.//

  2. Avatar
    ஷாலி says:

    //ஸ்ரீமத் பாகவதத்தில்தான் காத்யாயனி (கார்த்தியாயினி அல்ல) நோன்பு சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஆண்டாள் செய்த நோன்புடன் ஒப்பீடு செய்கிறார். அதுவும் எப்படி? கண்ணனே கணவனாக வேண்டும் என்று செய்வது காத்யாயனி நோன்பு; நல்ல கணவன் அமைய வேண்டும் என்று நோற்பது ‘மட்டுமே’ ஆண்டாள் – அதாவது திருப்பாவை நோன்பாம்.
    நானும் திருப்பாவையைத் தேடித் தேடிப் பார்த்து விட்டேன், கணவனை அடைய வேண்டியே நோன்பு இருந்தார்கள் என்று திருப்பாவையில் எந்த இடத்திலேயும் சொல்லப்படவில்லையே? //

    ஜெயஸ்ரீ அம்மையாருக்கு சொல்லப்படாவிட்டால் என்ன?பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடுகிறதா…இல்லையே!.கண்ணனையும் சிவனடியாரையும் தங் கணவராக அடைய வேண்டி…” என்று தமிழறிஞர் மு.ராகவையங்கார் அவர்களுக்கு சொல்லப்பட்டதை படிப்போம்.

    “மார்கழி நீராட்ட நோன்பிற் காத்யாயனி வணக்கப்படுவதாகக் கூறும் பாகவத உபாக்யானத்தையும், அவ்வுபாக்யானமே ஆண்டாள் திருப்பாவைக்கு மூலமாயிருத்தலையுஞ் சேர்த்து ஆராயுமிடத்து, திருவாதவூரரது திருவெம்பாவையும் தேவியின் விரதத்தை மகளிர் கொண்டாடிய முறையைக் குறிப்பதென்றே யென்று கொள்ளத்தகுமென்க.”

    ”கண்ணபிரானையும் சிவனடியாரையும் தங்கணவராக அடைதல் வேண்டிக் கன்னியர் நோற்பதாகத் திருப்பாவை, திருவெம்பாவைகள் முறையே குறிக்குமாறு போலப் பரிபாடலிலும் – “வரைவு மலிந்த தோழி, கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவந்தலைப்பட்டேம் என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது” எனத் துறைக்குறிப்பு எழுதப்பட்டிருத்தலும் அறியத் தக்கதாம். அக்குறிப்புக்குக் கன்னிப்பருவத்தில் தைந்நீராடி நோற்ற விசேடத்தால் தன் தலைவி உத்தம நாயகனைப் பெற்று இப்போது விளங்குகிறாள் என்று தலைவன் கேட்பத் தோழி மகிழ்ந்துகூறினன் என்பது கருத்தாதல் காண்க. இவற்றால் திருப்பாவை திருவெம்பாவைகளோடு, 11-ம் பரிபாடல் கருத்தாற் பெரிதும் ஒத்து மார்கழி நோன்பின் ஆதி வரலாற்றை மிகத் தெளிவாக்குதல் அறியலாகும்.

    மு. ராகவையங்கார், மார்கழி நோன்பாகிய தைந்நீராடல், செந்தமிழ், தொகுதி 19, பக். 428-429 (1918-1919). ஆராய்ச்சித்தொகுதி.

  3. Avatar
    ஷாலி says:

    //‘அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்‘
    இந்தப் பாடலில், பனி பிரியாத வைகறைப் பொழுதில் ஆற்றங்கரையில் … நடுங்கும் குளிரில் சிறுமிகள் தங்கள் தாய்மார்களுடன் ஆற்றில் குளிக்க வேண்டும். குளித்த பிறகு ஈர உடையுடன் அப்படியே இந்த ஹோமத் தீயை வலம் வர வேண்டும். அதன் வெப்பத்தில் இவர்கள் உடுத்தின துணியும் காய்ந்து விடும். எப்படிப்பட்ட அமிலச் சோதனை செய்திருக்கிறார்கள்?//

    அம்பா ஆடலின்….என்ற ஒரு வரியைப் போட்டு ஜெயஸ்ரீ அம்மையார் தங்கள் மாமுல் கற்பனையை தட்டி விட்டு வைரமுத்துவை பங்கப்படுத்த பதவுரை தருகிறார். அந்த பாடலையும் பார்ப்போம்.
    படர்ந்த வைறையில் கன்னியர் தாயாருடன் தைத்திங்களில் நீராடுவர்.இதனை பரிபாடலின் ஆரம்ப வரி…”ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து..” என்று துவங்குகிறது.
    “ வெம்பா தாக வியனில வரைப்பென அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
    முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப் புலர்பு ஆடி…”-பரிபாடல்-11.

    அம்பா என்றால் தாய்; அம்பா ஆடல் என்றால் தாயோடு நீராடல் என ஜெயஸ்ரீ அம்மையார் பொருள் கொள்வது சரியா? (அதுவும் பாடலில் கன்னியர் என்று தெளி வாக இருக்கும் போதே இவர் சிறுமியர் என்று எழுதுகிறார்.வைரமுத்துவை சிறுமைப் படுத்த வேறு வழி!)

    அம்பா ஆடல் என்றால் தாய் நீராடுதல் என்று தானே பொருள்படும்? தாயோடு நீராடுதல் என்று கூறியிருப்பது பொருத்தம் இல்லையே?கன்னியர் தம் தாயை துணைக்கு வைத்துக் கொண்டு நீராடுதல் இயற்கைதான்.இதனால் இதனை ‘அம்பா ஆடல்” என்று பெயர் சொல்லிவிட முடியாது.கன்னியர் நீராடும் போது, “ அம்பா- அம்பா’’ என்று சொல்லிக் கொண்டு ஆடியிருப்பர். அம்பா என்பது அம்பிகை தெய்வத்தை குறிக்கும் சொல் அல்லவா?அம்மனை வேண்டிக்கொண்டு ஆடியிருப்பதால் இதற்கு ‘”அம்பா ஆடல்’ என்னும் பெயர் வழங்கியிருக்கலாம். பெண்கள் அம்மானை காய் விளையாடுவது அறிந்ததே!

    இப்பரி பாடலுக்கு புலியூர் கேசிகன் அவர்கள் உரையையும் பார்ப்போம்.

    ….பரந்த இந்த நிலப்பரப்பானது வெம்மையால் வாடாதிருப்பதாக, என அனைவரும் வேண்டினர்.அழகிய வளையணிந்தோரான கன்னிப் பெண்கள் ( சிறுமிகள் அல்ல) மார்கழி நோன்பேற்றவராக நீராடியபடி நின்றனர்.சடங்குகளை அறிந்தோரான முது பெண்டிர் அக்கன்னியருக்கு நோன்பபூண்டு நீராடும் முறைமையை காட்டினர்.பனி யோடும் கூடிய புலர்காலைப் பொழுதினைப் பாடியபடியே அவர்கள் ஆடினர்.
    பருத்த மணலிட்டத்தே அருவியைப் போல் ஓடும் நீரிற் படிந்து வந்த வாடைக் காற்றும் வந்து வீசிற்று.அதனால் பெண்கள் நடுங்கினர். கரையிடத்துக் தங்கியிருந்து,வேதியர்கள், தம் வேத நேறிப்படி வளர்த்துக் காத்து வருவதும், நிமிர்ந்து வளைவோடு எரிந்து கொண்டிருப்பதுமான வேள்வித்தீயருகே சென்று, அவ்வழகிய பெண்கள் தம் ஈரமான உடைகளை புலர்த்தினர்.
    கன்னிப் பெண்களை சிறுமியாக மாற்றும் ஜெயஸ்ரீ அம்மையார் அவர்கள், வைரமுத்துவை வைவதற்கு எதையும் மாற்றுவார்…ஏமாற்றுவார்!

    1. Avatar
      Ramia says:

      You seem to be contradicting your own comments? In first comment, you provide proof that 5-9 yr old girls did pavai nombu with this comment you want to change that to கன்னிப் பெண்கள். What is the point in confusing yourselves and us?

      1. Avatar
        Ramia says:

        Shali,

        I am guessing that you are attempting to re-interpret ‘அம்பா’ to suit your/Vairamuthu’s intentions. But old commentators did not have that bias.
        https://learnsangamtamil.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/

        NOTE: The above site uses below commentaries.
        தமிழ் உரை நூல்:
        பரிபாடல் – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
        பரிபாடல் – பரிமேலழகர்
        பரிபாடல் – புலியூர் கேசிகன்

        Translation given for above paripadal can be read by interested people. It mentions

        “Young women wearing pretty bangles pray, “May

        the wide land not become hot!” as they bathe with

        their mothers who know traditions, who show them

        how to perform the rituals”

        To quote your comments
        //பரந்த இந்த நிலப்பரப்பானது வெம்மையால் வாடாதிருப்பதாக, என அனைவரும் வேண்டினர்//

        This was the reason for பாவை நோன்பு.
        It was not a prayer to get good husbands.
        You yourself have provided this proof that Mr. Vairamuthu was wrong in saying பாவை நோன்பு was done to get good husbands.

        ——————————-

        On another note, even agarathi quotes அம்பா as meaning mother.
        http://agarathi.com/word/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

        Note that it specifically mentions this specific Paripadal as the reason for the word to mean mother.

        Incidentally, the word has the same meaning in Sanskrit as well:
        http://sanskritdictionary.com/amb%C4%81/16988/1

        I dont see any merit in your comments.

  4. Avatar
    Rama says:

    First of all, a critique should have the appropriate QUALIFICATIONS to pass judgement on articles like this. Copy paste Shally’s criticism of Madam Ji’s article is like an ant challenging an elephant for a wrestling match. Shally’s rebuttals are no more than that of a whiner. Substance of his rebuttals(!!) do not negate Madam Ji’s scholarly article and are rather weak, to say the least.It looks as if he is trying to score brownie points to establish,err, em,( clearing my throat here) his scholarship! Anyhow, the main question is , What ( Shally) Abdul Kadar is doing here in OUR Ammavasai? We don’t need Shallys of the world telling us Hindus that we need to be kind to Vairamuthu for his atrocious attack on our Goddess Aandal. All we are asking to Shallys , Bsvs and Vairamuthus out there is to BUTT out. I can write volumes on the absurdities found in his holy book and his Prophet but I will not do so. Shally,talking about tolerance, where were you when buses were burnt in Chennai during Danish cartoons? Where were you when your mob physically abused and chased Taslima Nasrin out of India? Where were you when Satanic verses was banned? You have forgone the right to criticize our religion a long time ago. We expect mutual respect and nothing less. If you want to believe that Prophet Mohamed rode on a donkey to heaven that is your prerogative and we won’t question you or your right to believe that or anything else (including Koranic assertion that world is flat). Mock us in anyway with copy pasted,HALF BAKED KNOWLEDGE and hate and vitriol and we will re tribute in tons. Respect is mutual.

  5. Avatar
    smitha says:

    Rama,

    BSV, shaily & other “pseudo secularists” were taking a walk when the incidents you mentioned happened.

    In India if you are pro hindu, you are communal. If you are anti hindu, you are secular.

    They are “secular”.

  6. Avatar
    ஷாலி says:

    என்ன கொடுமை இது சரவணா….திண்ணை தமிழ்த் தளத்தில் உரையாட…உறவாட ஒரு தமிழரும் இல்லையா?

    வெள்ளைக்கார தொரைமாரும்…தொரைசானியும் ஓடோடி வந்து குமுறுகிறார்க்கள்….கும்முகிறார்கள்.

    ம்..ம்..இவர்களுக்கு தமிழை ஆண்ட ஆண்டாள் தெரிகிறது..ஆனால் ஆண்டாள் ஆண்ட தமிழ் தெரியவில்லை.

    உஞ்ச விருத்திக்கு பர தேசம் போயினும் பக்தியை விடாதது பாரட்டிற்குரியது..தாய் மொழியை தள்ளி விட்டது…? அந்த ஆண்டாள் தாயார் தான் இவர்களை மன்னிக்க வேண்டும்.

    ம்.ம்..திண்ணக்கு வந்த சோதனை!…

    1. Avatar
      Ramia says:

      ஷாலி,
      எங்கள் தமிழ் அறிவை உங்களிடம் நிறுவ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந்த வலைத்தளத்தில் ஆங்கில கருத்துகள் அனுமதிப்பதும் மறுப்பதும் மதிப்பீட்டாளர் (moderator) வேலை. தமிழில் தட்டச்சு பழகாத பலரும் திண்ணையின் வாசகர்கள் தான்.

      ‘தமிழை ஆண்டாள்’ என்னும் கட்டுரையில், தமிழரங்கில், தமிழ் மூலங்கள் நிறைய இருக்க அதை விடுத்து ஆங்கில கட்டுரையை மேற்கோள் காட்டியது மட்டுமல்லாமல், தம் முழு கட்டுரையையும் அந்த ஆங்கில கட்டுரையின் அடிப்படையில் எழுதிய உங்கள் கவிப்பேரசரிடம் நீங்கள் இதே கேள்வியை கேட்டிருக்கலாமே ?

      1. Avatar
        BSV says:

        //இந்த வலைத்தளத்தில் ஆங்கில கருத்துகள் அனுமதிப்பதும் மறுப்பதும் மதிப்பீட்டாளர் (moderator) வேலை. தமிழில் தட்டச்சு பழகாத பலரும் திண்ணையின் வாசகர்கள் தான்.//

        நாள்கணக்காக அன்று; வருடக்கணக்காக, தளத்தார் எவரெல்லாம் ஆங்கிலத்திலேயே விடாப்பிடியாக எழுதுகின்றார்களோ அவர்களையெல்லாம் ”தமிழில் எழுதுங்கள்” என நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க, நீங்கள் தளத்தாரே அப்படி எழுத விடும்போது நீ யார் கேட்பதற்கு என்று மாற்றிப்போடுகிறீர்களே! சரியா?

        தட்டச்சு பழகாதவர்கள் நாங்கள் என்று எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? எப்போதுமேயா? நொண்டிக்குதிரைக்கு சறுக்குனதுதான் சாக்காம். பத்துநாட்களுக்குள் கற்றுக்கொள்ளலாம். மனமில்லை; மார்க்கமுமில்லை. தமிழில் எழுதவே மாட்டேன் என்று தமிழ் மொழிமீதே வெறுப்புகொண்டவர்கள் எப்படியப்பா சங்கத்தமிழில் பாடல்கள் பாடிய ஆண்டாள் என்ற தமிழ்ப்புலவரைப்பற்றி பேசுமிடத்துக்கு வர‌ முடியும்?

        நீங்கள் எழுதும் ஆங்கிலத்தை ஆங்கிலம் தெரிந்த திண்ணை வாசகர்கள்தானே வாசித்தறிய முடியும்? ஆங்கிலம் தெரிந்தால்தான் திண்ணை இதழுக்குள்ளேயே நுழைய வேண்டுமென்கிறீர்களா?

        1. Avatar
          Ramia says:

          BSV,

          கைபேசி, வரைப்பட்டிகை போன்ற உபகாரணங்களிலுருந்து திண்ணைக்கு வரும் போது தமிழில் பிழையில்லாமல் தட்டச்சு செய்ய எளிய வழிகள் இல்லை. இதுவே பலர் ஆங்கிலத்தில் கருத்திடுவதன் காரணம். உங்கள் தமிழ் ஆர்வத்தை காட்ட, இந்த குறையை ஈடு செய்ய நீங்கள் ஒரு நல்ல செயலி (mobile app) செய்து தரலாமே? அதை விடுத்து இல்லோரிடமும் நீங்கள் ஆங்கிலத்தில் கருதிடாதீர் என்று கூறி கொண்டே இருப்பது முறையன்று. இந்த வலைதளத்தில் பெயரே ஆங்கிலத்தில் தான் இருக்கிறது, ஆங்கிலத்தில் தான் உலவியில் (browser) தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

    2. Avatar
      ஷாலி says:

      தமிழாட ஒருவர் வந்துவிட்டார் Ramia ஐயாவா…அம்மாவா..என்று தெரியவில்லை.வரவேற்கிறோம்.தமிழ் தெரிந்தே தாய் மொழியை புறக்கணிக்கலாமா?

      இங்கு யாரும் வைரமுத்துவுக்கு வால் பிடிக்கவில்லை.ஆனால் ஆண்டாள் தாயார் பாடலுக்கு நாங்கள் கொடுக்கிற அர்த்தத்தை தவிர வேறு பொருள் கொள்ளக்கூடாது என்ற ஜெயஸ்ரீ அம்மையாரின் தாலிபானிய தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறோம்.

      1. Avatar
        Ramia says:

        தமிழை புறக்கணிப்பவர் திண்ணைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. தமிழில் தட்டச்சு பழக்கம் இல்லாருக்கும் கட்டாயம் இல்லை.
        உங்கள் அடிப்படை உரிமையை கொண்டு நீங்கள் நினைப்பதை பேசலாம் எழுதலாம். ஆனால் அது எனது மதத்தை நான் பின்பற்ற எனக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையை மீறக்கூடாது.

        ஆண்டாள் பெருமை பேச வந்து அவளுடைய சந்நிதியில் அவளை புகழும் தோரணையில் இகழ்ந்து, அவளை அன்னை எனக்கொண்டாடும் தொண்டரை புண்படுத்தி வைரமுத்து செய்தது பிழையே! அவர் செய்த பிழையை உணர்த்துவதே திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் செய்த தொண்டு.
        வைரமுத்து செய்த பிழைக்கு, என்றாகிலும் பிழையீடு செய்வார்! அன்று நீங்களும் நானும் இருக்கவும் கூடும்.

        Vairamuthu’s freedom of speech cannot infringe on my fundamental right to religion.

        If you believe Vairamuthu was right, here, another poet like Vairamuthu is under siege from Muslims, this time.
        Go and help him.

        https://www.deccanchronicle.com/entertainment/mollywood/170218/priya-prakash-warrier-viral-oru-adaar-love-raza-acamdey-smriti-ban.html

  7. Avatar
    ஷாலி says:

    //சறுக்கல் 16:வெட்கமறுத்த மொழி தமிழ் – சொல்வது வைரமுத்து
    இன்னும் சொல்கிறார், தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறதாம்.
    யாரை விமரிக்கிறார்?
    ஆண்டாளையா? தமிழையா?//

    “….இனி நாணி ஒரு கருமமில்லை
    என்னை ஆய்ப்பாடிக்கே உய்த்திடுமின்.
    கொண்டு கோள் செய்திருக்கிறேன்.ஆண்டாள் இன்னும் அழுத்திக்கட்டி யிருக்கிறாள் வார்த்தைகளை.

    ‘என்னை அந்தப் பழைய நிலைக்குக் கொண்டுவர நிச்சயம் செய்தீர்களாயிருந்தால் ,சத்தியமாக என்னைப் பிழைக்க வைக்கப் போவதானால், என்னை ஆய்ப்பாடியில் கொண்டு விட்டு விடுங்கள். ஊர் உலகமெல்லாம் அறிந்தாயிற்று. இனி என்ன வெட்கம் கிடக்கிறது ,காரியத்துக்கு ஆகாமல் ?
    நந்தகோபாலன் கடைத்தலைக்கே
    நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்……
    மருத்துவர் வாசலில் நோயாளியைக்கிடத்துவது போல இரவோடிரவாக என்னை நந்தகோபன் வீட்டில் சேர்த்து விடுங்கள்.

    ‘ஆழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று செங்கச்சு ஆடை கொண்டு கண் ஆர்த்து சிரு மானிடரைக் காணில் நாணும் கொங்கைத்தலம் இவை கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா ‘….எனவே என்னை யமுனைக்கரையில் தூக்கிப் போட்டு விடுங்கள்.

    முன்பு ‘அவன் பேரைச்சொல்லு சொல்லு ‘என்று பழக்கி விட்ட கிளி சதா பேர் சொல்லி அழைக்க கோபத்தில் கூட்டிலடைத்தாள் ஆண்டாள். அது பரிதாபமாக கோவிந்தா என்று கூவத்தொடங்கியது. தீனிக் கொழுப்பில் தான் இதற்கு இவ்வளவு திமிர் என்று பட்டினி போட்டாள்.றது இன்னமும் உச்சஸ்தாயியில் ‘உலகளந்தான் ‘ பேரை அவன் அளந்த உலகு முழுவதும் கேட்குமாறு அலறத் தொடங்கவும் தாங்கவே முடியவில்லை ஆண்டாளுக்கு. கொடுமையான விரஹம் தீரும்படிக்குத் தன்னை துவராபதியில் சேர்த்துவிடச் சொல்கிறாள்.

    ‘கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் ஊட்டுக்கொடாது செறுப்பனாகில் உலகளந்தானென்று உயரக்கூவும் ………..துவராபதிக்கென்னை உய்த்திடுமின் ‘
    அடுத்த கட்டம் தான் அசத்தல்.

    என்னை அவன் இருக்குமிடம் கொண்டு சேர்க்கும் வரை தாங்காது.இங்கேயே முதலுதவியாய் அவன் ஆடையைக் கொண்டுவந்து என் மீது படும்படி விசிறி விடுங்கள் என்கிறாள்

    ‘கண்ணன் காட்சிப் பழகிக்கிடப்பேனை புறம் நின்று
    புண்ணில் புளி பெய்தாற் போல அழகு பேசாதே…
    அவன் அரையில் உடுத்திய பீதகவாடையைக் கொண்டுவந்து வாட்டம் தணிய வீச மாட்டார்களா ? ‘ என்கிறாள்.

    ‘மேலிட்ட உத்தரீயமானால் ஆகாதோ ? அரையில் சாத்திய பீதாம்பரமாகவே இருக்கவெணுமென்று என்ன நிர்ப்பந்தம் ? ‘என்ற நஞ்சீயர் கேள்விக்கு பட்டர் பதிலைப் பாருங்கள்.

    ‘கண்ண பிரானுடைய ஸ்வேத பரிமளத்திலே மிகவும் ஆசை கொண்டவள் காணும்.

    மேலிட்ட உத்தரீயத்திலே அது விசேஷமாகக் கிடைக்காது. ‘

    இன்னும் நாச்சியார் திருமொழியில் பல விந்தைக்குரிய பெண் மனவியல் பாங்கும் விகாரங்களும் அடையாளப் படுகின்றன.
    நாச்சியார் திருமொழியைச் சொல்லிவந்து அப்படியே என் கவிதைகளையும் பக்கத்தில் வைத்து வருகிறேன் என்று யாராவது அபிப்பிராயப்பட்டால் ‘திருவாணை,நின்னாணை ‘ சுட்டுப் பொசுக்கு என் குப்பைகளை. சாக்கோடு சாக்காக ஆண்டாள் மேடையில் என் கடையையும் விரித்துவிட்டேன் என்று நீங்கள் குற்றம் சாட்டினால் பின் பக்கத்தைக் காட்டியபடி ஓட்டமாக உள்ளே ஓடுகிறேன். யப்பா!யாரங்கே! திரையை இழுத்து விடுங்க.
    ***
    மாலதி
    http://old.thinnai.com/?p=60311201

  8. Avatar
    Vasudevan says:

    First of all, it must be noted that the poetic works of Andal
    are not considered as mere human literary work but as ‘essence of Vedas’, Vedas, themselves being “the repository of the best thought of the best mind” that is God’s own utterings or commandments, in as much as Andal’s work along with that of the other 11 Alwars or Vaishnava saints go by the name “Divya Prabandhams” or “Tamil Maraigal”.There can therefore be no critique on these works, although people may try to understand their inner meanings and offer their own interpretation, and anything beyond that is ‘disservice to God’ and hence sacrilegious ,in my opinion.

    1. Avatar
      BSV says:

      //are not considered as mere human literary work but as ‘essence of Vedas’…There can therefore be no critique on these works, although people may try to understand their inner meanings and offer their own interpretation, and anything beyond that is ‘disservice to God’ and hence sacrilegious ,in my opinion//

      ஆழ்வார்கள் என அழைக்கத்தொடங்கி விஷ்ணு வழிபாட்டில் (சிரிவைஸ்ணவத்தில்) வைக்கப்படுவத்ற்கு நெடுங்காலத்திற்கு முன்பே இப்பன்னிரு தமிழ்ப்புலவர்களும் பிறந்தார்கள். வெறும் தமிழ்ப்புலவர்கள்தான் அவர்கள். ஒரே வேறுபாடு மட்டுமே: மற்ற புலவர்கள் முற்காலத்திலும் பிற்காலத்திலும் பலபல காரணங்களை முன்னொட்டு பாடினார்கள். ஆனால் இவர்கள் ஒரே ஒரு கராணத்திற்காக மட்டுமே பாடினார்கள்: அதாவது விஷ்ணு வழிபாட்டிற்காக மட்டுமே. மற்றபடி இவர்கள் தமிழ்ப்புலவர்களே. கம்பரும்தான் விஷ்ணு வழிபாட்டுக்காகத்தான் கமபராமாயணம் படைத்தார். ஆனால் அவரை தமிழ் இலக்கியம் தமிழ்ப்புலவர் என்றே கொண்டாடுகிறது. இல்லையா? அதன்படியே இப்பன்னிரு புலவர்களையும் தமிழ் இலக்கியம் கொண்டாடுகிறது. தமிழ் இலக்கியம் என்ற பரந்த சோலையில் சமய இலக்கியம் என்ற அழகான ஆலமரங்களையும் நாம் கண்டு களிக்கிறோம்: சைவம், வைணவம், பவுத்தம், சமணம் இவை தந்த மரங்களவை. ஆக, இவற்றில் சிலவற்றிற்கு ஒரு கூட்டத்தினர் தமக்குப் பிடித்த பொருளை வைத்துக்கொண்டு, இவை எம்மத நூல்கள்; எவருக்கும் உரிமையில்லையென்றால், தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? இப்பன்னிரு புலவர்களும் உலகமெலாம் பரந்து வாழும் தமிழர்களின் சொத்து. இவைகளுக்கு ஏக போக உரிமையை எவருக்கும் அவர்கள் கொடுக்கவில்லை. எனவே எடுத்துக்கொள்ள முயலாதீர்கள்.

      இக்கருத்தை வலுப்படுத்தும் இக்கட்டுரையையும் பார்க்க: http://puthu.thinnai.com/?p=36395

      1. Avatar
        Ramia says:

        உங்கள் கருத்துக்களால் நீங்கள் வைணவத்தை அறியவில்லை என்றே காட்டுகிறீர்கள். ஆழ்வார்கள் தமிழ் புலவர்கள் மட்டும் அல்லர். ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் – அன்பில் – அருளில் – தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள். அவர்களின் பாசுரங்கள் வேதத்தின் உட்பொருளை தமிழில் பக்தி மெருகேற்றி படைத்ததனால் அவை தமிழ் வேதம் என்றே கொண்டாடப்படுகின்றன.

        கம்பர் தமிழில் ராமனை எழுதி கம்பநாட்டாழ்வார் என்றே போற்றப்படுகிறார். திருவரங்கம் கோவிலில் மேட்டழகிய சிங்கர் சந்நிதியில் அவர் அரங்கேற்றிய இராமாயணத்தை நரசிம்மர் தாமே ஆமோதித்தார். “கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ” (திருவாய்மொழி) என்பதற்கேற்ப வாழ்ந்தவர் கம்பர்.

        பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
        இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
        தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
        வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே.
        – தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமலை

        எழுதுபவர் யார் என்று ஆராய்வதை விடுத்தது, எழுதப்படும் பொருளாலே இலக்கியம் உயர்வு பெரும். நீங்களும் நானும் தமிழில் பிதற்றி, அதை கவிதை எனலாம். அதை படித்துப்பாராட்ட நான்கு தூக்குத்தூக்கிகளும் நமக்கு வாய்க்கலாம். ஆனால் நாம் எழுதும் பொருளாலே நமது எழுத்துக்களின் ஆயுள் அமையும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் கம்பரும் திருவள்ளுவரும் எழுதியவை காலத்தால் அழியாதவை. அவை என்றும் இருந்து மக்களுக்கு வழி காட்டும்.

        நீங்கள் பக்தியோடு தேடினால், இந்த இலக்கியங்களில் பரம்பொருள் கிட்டும். அல்லாமல் நான் அவர்களின் தமிழை மதிப்பாய்வுரை செய்ய கூடிய தமிழ் ஞானம் கொண்டவன் என்னும் ஆணவத்தோடு அணுகினால், உங்கள் கவிப்பேரரசரை போலே நீங்களும் ஆணவபங்கம் அடையும் நாள் வெகு விரைவிலே அமையட்டும்.

        1. Avatar
          BSV says:

          //நீங்கள் பக்தியோடு தேடினால், இந்த இலக்கியங்களில் பரம்பொருள் கிட்டும். அல்லாமல் நான் அவர்களின் தமிழை மதிப்பாய்வுரை செய்ய கூடிய தமிழ் ஞானம் கொண்டவன் என்னும் ஆணவத்தோடு அணுகினால், உங்கள் கவிப்பேரரசரை போலே நீங்களும் ஆணவபங்கம் அடையும் நாள் வெகு விரைவிலே அமையட்டும்.//

          அடிப்படையிலே இந்த வாதம் பிழையானது. இலக்கியம் என்பது பொது. அது சமய இலக்கியமென்றால், அச்சமயம் சார்ந்தவர்கள் ”பரம்பொருள்” கிடைக்க தேடட்டும். யார் வேண்டாமென்றார்கள்? அதே சமயம், அஃது இலக்கியமாக மட்டும் என்றெடுத்து (அதாவது இந்து சமய இலக்கியத்தை ஒரு கிருத்துவரோ, ஓர்இசுலாமியரோ வாசித்தல்) படித்து அவரவருக்கு முடிந்தவாறு புரிய நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? உங்களைப் பரம்பொருளைத் தேடாதீர்கள்; இஃது இலக்கியம் மட்டுமே; இலக்கிய இரசனை மட்டுமே பருகுங்கள் எனச் சொல்லி அவர்கள் தடுத்தார்களா?

          பிறருக்குச் சாபமிடும் உங்களுக்கு இருப்பதுதான் ஆணவம். இறைவன் வேலையை நீங்கள் பார்க்க முடியும் என்ற ஆணவம். இறைவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். நீங்கள் எடுத்துக்கொடுக்கும் நிலையிலா இறைவன்?

          1. Avatar
            Ramia says:

            BSV,

            வெறும் இலக்கியம் என்று கொண்டு உங்கள் பைபிளை ஆய்வு செய்வோம் வாருங்கள்.

            To quote:
            “But rather, you are to tear down their altars and smash their sacred pillars and cut down their Asherim 14for you shall not worship any other god, for the LORD, whose name is Jealous, is a jealous God”
            http://biblehub.com/exodus/34-14.htm

            உங்கள் தெய்வத்திற்கு யாரை பார்த்து பொறாமை?
            உங்கள் தெய்வம் உடைத்து நொறுக்கு என்று சொன்னதனால் தான் எங்கள் கோவில்களை இடித்து தகர்த்தார்களோ உங்கள் பாதிரிமார்கள்?
            https://en.wikipedia.org/wiki/Goa_Inquisition

            அன்பே உருவான ஏசு கிறிஸ்து உங்கள் மதத்தின் பொருட்டு செய்த கொலைகளை மன்னிப்பாரா?

  9. Avatar
    Rama says:

    Ramia, thank you for raising a pertinent question to Shally but do not expect any relevant answers from him. Shoot and scoot is the formula he follows. He has not answered our questions about HIS whereabouts during the Danish cartoons, Rushdie, Taslima Nasrin episodes but happy to chin wag about the intolerance of Hindus in the Aandal controversy. BTW, Thinnai had deleted my earlier comments. :(

    1. Avatar
      BSV says:

      //உங்கள் தெய்வத்திற்கு யாரை பார்த்து பொறாமை?
      உங்கள் தெய்வம் உடைத்து நொறுக்கு என்று சொன்னதனால் தான் எங்கள் கோவில்களை இடித்து தகர்த்தார்களோ உங்கள் பாதிரிமார்கள்?
      https://en.wikipedia.org/wiki/Goa_Inquisition

      அன்பே உருவான ஏசு கிறிஸ்து உங்கள் மதத்தின் பொருட்டு செய்த கொலைகளை மன்னிப்பாரா?//

      உங்கள் மதம், உங்கள் தெய்வம் என்றெழுத நான் கிருத்துவன் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையா? நான் கிருத்துவன் என்பதற்கு சான்று இருக்கிறதா? இங்கே எழுதியவற்றில் இருக்கிறதா? வேறேங்கினும் இருக்கிறதா/ அதைக் காட்டி என்னைக் கிருத்துவன் என நிரூபியுங்கள்; பின்னர் உங்கள் கிருத்துவன் சாரந்த கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன்.

  10. Avatar
    latha ramakrishnan says:

    வணக்கம். ஷாலி அவர்கள் சுட்டும் மாலதி கவிஞர் சதாரா மாலதிதானே. அவர் ஆண்டாள் பாசுரங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் தொடர்ச்சியாக திண்ணை இதழில் வெளிவந்தது நினைவிருக்கிறது. பிறகு அவை உயர்பாவை என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகத்தால் நூல்வடிவில் பிரசுரமாயின. இன்று கவிஞர் சதாரா மாலதி நம்மிடையே இல்லை. இருந்திருந்தால் வைரமுத்துவின் கூற்றுக்கு அவர் நிச்சயம் எதிர்வினை ஆற்றியிருப்பார். அவருடைய கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்துகொண்டிருந்தபோதே அவற்றிற்கான மாற்றுக்கருத்துகளும் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால், ஆண்டாளை தேவதாசியாக அனுமானித்தல் முழுக்க முழுக்க ஆணாதிக்கசிந்தனை. அதற்கான எந்த ஆதாரமுமில்லை என்று பலர் சொல்லியும் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் அதற்கான எதிர்வினையைத் தர முற்படாமல் இந்த சர்ச்சையைத் திரும்பத்திரும்ப ஆரிய-திராவிட மோதலாகவே முன்வைக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது. இந்தப் பார்வை காரணமாகவே சிறுபத்திரிகை சார்ந்த பெண்ணியப் படைப்பாளிகள் சிலருக்கும் திடீரென கவிஞர் வைரமுத்து கவிப்பேரரசர் வைரமுத்துவாகிவிட்டதையும் பார்க்கமுடிகிறது. லதா ராமகிருஷ்ணன்.

  11. Avatar
    latha ramakrishnan says:

    வணக்கம். ஷாலி அவர்கள் சுட்டும் மாலதி கவிஞர் சதாரா மாலதிதானே. அவர் ஆண்டாள் பாசுரங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் தொடர்ச்சியாக திண்ணை இதழில் வெளிவந்தது நினைவிருக்கிறது. பிறகு அவை உயர்பாவை என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகத்தால் நூல்வடிவில் பிரசுரமாயின. இன்று கவிஞர் சதாரா மாலதி நம்மிடையே இல்லை. இருந்திருந்தால் வைரமுத்துவின் கூற்றுக்கு அவர் நிச்சயம் எதிர்வினை ஆற்றியிருப்பார். அவருடைய கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்துகொண்டிருந்தபோதே அவற்றிற்கான மாற்றுக்கருத்துகளும் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால், ஆண்டாளை தேவதாசியாக அனுமானித்தல் முழுக்க முழுக்க ஆணாதிக்கசிந்தனை. அதற்கான எந்த ஆதாரமுமில்லை என்று பலர் சொல்லியும் கவிஞர் வைரமுத்துவும் அவருடைய ஆதரவாளர்களும் அதற்கான எதிர்வினையைத் தர முற்படாமல் இந்த சர்ச்சையைத் திரும்பத்திரும்ப ஆரிய-திராவிட மோதலாகவே முன்வைக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது. இந்தப் பார்வை காரணமாகவே சிறுபத்திரிகை சார்ந்த பெண்ணியப் படைப்பாளிகள் சிலருக்கும் திடீரென கவிஞர் வைரமுத்து கவிப்பேரரசர் வைரமுத்துவாகிவிட்டதையும் பார்க்கமுடிகிறது. லதா ராமகிருஷ்ணன்.

    Reply

    1. Avatar
      K G Dhouhithri says:

      வைரமுத்து அவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடுத்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற அடிப்படை பண்பே இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கதும் கூட.

      அனைத்து மதங்களிலும் விஞ்ஞானப்பூர்வமாக நம்பக்கூடிய நிகழ்வுகள் மற்றும் மெய்ஞ்ஞானப்பூர்வமாக நம்பக்கூடிய நிகழ்வுகள் இரண்டுமே இருக்கும்.

      நாத்திகவாதிகளாக இருப்பின் “எங்களுக்கு தாங்கள் கூறும் மத நூல்களிலும் சமய குருமார்களின் நூல்களிலும் நம்பிக்கை இல்லை” என்று ஒரே வாக்கியத்தில் கண்ணியமாக முடித்துவிடலாம். தமிழை மட்டும் சுவைத்துவிட்டுப் போகலாம்.

      ஆத்திகவாதிகளாக இருப்பின் “அது அவர்களது மத நம்பிக்கை” என்று பேசாமல் தத்தம் மதங்கள் போதித்த நல்லறங்களின் படி அமைதியாக வாழலாம். ஐயா அப்துல் கலாம் அவர்கள், சாலமன் பாப்பையா அவர்கள், யேசுதாஸ் அவர்கள், ஏ ஆர் ரெஹ்மான் அவர்கள் போன்ற நல்ல பண்பாளர்கள் உள்ளனரே.

      அதை விடுத்து வேண்டும் என்றே சிலர் பிற மதத்தின் மெய்ஞ்ஞானப்பூர்வமாக நம்பக்கூடிய நிகழ்வுகளை மட்டும் இழிவாகப் பேசிவிட்டு தம் மதத்தில் உள்ள அத்தகைய நிகழ்வுகளைப் பற்றி அதே தோரணையில் எதிர்வினா எழுப்பினால் வாய் மூடிக் கிடப்பது அப்படிப்பட்டவர்களின் தன்மை எத்தகையது என்பதையே நிரூபிக்கின்றது. இப்படிச் செய்வதால் அவர்கள் தங்கள் மதங்களையும் சேர்த்தே இழிவு படுத்துகின்றனர். அவ்வளவே.

      எங்கள் மதத்தைப் பற்றியோ தெய்வங்களைப் பற்றியோ வைரமுத்து அவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரம் தாழ்ந்த தவறான “ஆராய்ச்சிகள்” செய்து நேரத்தை வீண் அடிக்காமல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் தமிழை மட்டும் ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம் அல்லது நாத்திகம் உட்பட அவரது மதக் கொள்கைகளின் பெருமைகளைப் பேசும் கட்டுரைகள் எழுதலாம். அப்படிப்பட்டவர்களுக்கு யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.

    2. Avatar
      BSV says:

      //ஆண்டாளை தேவதாசியாக அனுமானித்தல் முழுக்க முழுக்க ஆணாதிக்கசிந்தனை. அதற்கான எந்த ஆதாரமுமில்லை என்று பலர் சொல்லியும் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் அதற்கான எதிர்வினையைத் தர முற்படாமல் இந்த சர்ச்சையைத் திரும்பத்திரும்ப ஆரிய-திராவிட மோதலாகவே முன்வைக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது. //

      தேவதாசி என்ற முறையைக்கொண்டுவந்ததும், அதைச்செயல்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தியதுமே ஆணாதிக்க சிந்தனையும் செயல்பாடுமாகும். ஆயிரமாண்டுகளுக்கு முன் அப்பழக்கம் இருந்த்தா? அதை அக்காலப்பெண் புலவர்கள் எழுதிவைத்ததில் தெரிகிறதா என்று பாக்களை வைத்து அனுமானித்தல் ஆணாதிக்கச் சிந்தனையாகுமா? இதையே பெண் சிந்தனையாளர்களும் (இங்கே நீங்கள் குறிப்பிட்ட மாலதி) செய்திருக்கிறார். அவருக்கு ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வீர்களா?

      புலவர்கள் எழுதியவற்றை பலவாறு அனுமானித்துப் அக்கால வாழ்க்கையைப் புரிய முயல்வது எப்படி தவறு? ஒருவர் எப்படி ஒரு கவிதையைப்படித்துப்புரிய வேண்டுமென்று இன்னொருவர் எப்படி கட்டளையிட முடியும்?

      ஆரிய-திராவிட மோதல் என்பதற்கு வைக்கப்படும் வாதம். யு ட்யூப் காணொளியில் தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவர் சொன்னது: ஆண்டாள் ஒரு பெண்ணே கிடையாது; வேறு ஒருவர் பெண் பாவனையில் எழுதியது என்று கருத்திட்ட இராஜாஜி, தன் நூலில் கிட்டத்தட்ட் சாஃப்ட் போர்ன் என விவரித்த பா.ராகவன்; அந்நூலை வெளியிட்ட பத்ரி சேசாத்திரி (இன்னொருவரையும் குறிப்பிட்டார் நினைவு தவறிவிட்டது) – இவர்கள் அனைவரும் பயங்கர எதிர்ப்புக்குள்ளாக்கப்படவில்லை. எந்த ஜீயரும் உண்ணாவிரதம் செய்வேன் என்று மிரட்டவில்லை. எவரும் நாக்கை வெட்டுவேன் என்று சொல்லவில்லை. மேடையேறி ராஜா பேசவில்லை. காரணம் இவர்கள அனைவரும் பார்ப்பனர்கள். ஆனால் வைரமுத்து என்றவுடன் எல்லாரும் சேர்ந்து தாக்கினார்கள். எனவே பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் என்று வேறுபாடு தாக்கியவர்களுக்கு நன்கு தெரிகிறது. இதை ஆரிய- திராவிட மோதலென்று சொல்லாமல் என்ன சொல்வது? என்கிறார். ய்-ட்யூபில் இருக்கும்.

      1. Avatar
        BSV says:

        //…இன்னொருவரையும் குறிப்பிட்டார் நினைவு தவறிவிட்டது//

        கமல்ஹாசனின் ”ஹே ராம்” திரைப்பட வசனம் ஆழ்வாரை இழிவுபடுத்துகிறது என்பதையும் ஆனால் அவருக்கு எவருமே மிரட்டல் விடவில்லை என்பதையும் குறிப்பிட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

      2. Avatar
        Ramia says:

        BSV,

        ஆண்டாள் காலத்தில் தேவதாசிகள் இருந்தார்கள் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

        தேவதாசிகளை பற்றிய கல்வெட்டு ஆதாரங்கள் ராஜராஜ சோழன் (985 and 1014 CE) காலத்திலிருந்து மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. ஆண்டாள் / பெரியாழ்வார் காலம் அதற்கு முற்பட்டது.

        நீங்கள் கூறியவர்கள் சொல்லும் காலத்தே நாங்கள் பிறக்கவில்லை, பிறந்திருந்தால் அந்த செய்தியை அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்யும் வயதில்லை.

        ஆனால் இன்று நாங்கள் இருக்கிரோம், இப்போது கேட்கிறோம். உங்கள் புரிதலுக்கு ஆதாரம் கொடுங்கள், அல்லது பிழை என்றுணர்ந்து அமையுங்கள்.

        1. Avatar
          BSV says:

          ”ஆண்டாள் யார்?” என்றொரு கட்டுரையைத் திண்ணைக்கு அனுப்பியிருக்கிறேன். அது இன்னும் வரவில்லை. வந்தால் படியுங்கள். நான் என்ன கருத்துக்களை இக்கேள்விக்கு வைக்கிறேன் என்று தெரியும்.

          இங்கே என் பதில்: ஆண்டாள் தேவதாசி என்று சொன்னவர் பேராசிரியர் நாராயணன் மற்றும் அவர் மாணாக்கர் கேசவனுமே. அதை எடுத்துக்காட்டியவர் வைரமுத்து. பேராசிரியர் ஏன் அபபடிச் சொன்னார் என்பது என் கட்டுரையில் இருக்கிறது. அடுத்தவாரம் வரவில்லையென்றால், அக்கட்டுரையைப் பத்திபத்தியாக இங்கு பின்னூட்டத்திலிடுகிறேன் வாசித்துக்கொள்ளுங்கள். வாசித்த பின் யார் உணர்ந்து அமரவேண்டுமென்பது தெரிய வரும்.

      3. Avatar
        ஜெயஸ்ரீ சாரநாதன் says:

        BSV அவர்களே, என்ன தடம் மாறிப் பேசுகிறீர்கள்? எனது வலைத்தளத்தில் ஒரு பேச்சும், திண்ணையில் வேறு ஒரு பேச்சும் பேசுகிறீர்களே?

        என் வலைத்தளத்தில், பாவம் வைரமுத்து விட்டு விடுங்கள் என்கிறீர்கள். அது மட்டுமா, இன்னும் என்னென்னவெல்லாம் எழுதினீர்கள் என்று திண்ணை ஆசிரியரும் வாசகர்களும் தெரிந்து கொள்ளட்டுமே.

        ” Vairamuthu is a mere poet. He is not a historian – even remotely, let alone of repute. He spoke as an individual and perhaps as a Tamil scholar, and the audience who gathered there, which included eminent religious men like the Srivilliputhoor Jeeyar and other bhaktas, to listen to his speech, did so only with the belief that they had come to listen to a lecture by a man interested in Tamil language and literature, not a man who is a historian. Further, history and religion can’t live together – I mean history proper. So they didn’t expect a historian to speak on Andaal. Dinamani also invited him as a speaker only because he is a poet interested in Andaal, as a poet.

        Whatever that may be, the basic point is that he is an individual and his views are to be taken as those from an individual. In other words, he need not be an issue for scholars and historians like you. You are a great scholar in Tamil language, literature, esp. ancient literature an a historian specialising in religion and literature of Tamil as one understands from reading you. It is not necessary to take him as a target of your criticism. He is far lower than you.

        If you are offended by his remarks on Andaal, it is right to rise in anger to attack him like the Muslims do when their religious icons are slandered or like the BJP leader or the disciples of Nithiyanda. That protest comes under another category namely religious wrath.”

        எப்படி எப்படி??
        “If you are offended by his remarks on Andaal, it is right to rise in anger to attack him like the Muslims do when their religious icons are slandered”

        என்று எழுதுவீர்கள். ஆனால் இந்த தளத்தில் மேலே என்ன எழுதியிருக்கிறீர்கள். இடத்துக்கு ஒரு பேச்சா? நங்கள் கருத்துப் பிழையை எடுத்துக் காட்டினால், கருத்துக்களால் பதில் சொல்லாமல் மேலே உங்கள் பின்னூட்டத்தில் எழுதியுள்ளீர்களே, அப்படி எழுதி விட்டு, அதை நாங்கள் கேள்வி கேட்டால் மேற்கோள்தானே கொடுத்தேன் என்று ஜகா வாங்குவீர்கள்.

        வைரமுத்துவையும்,உங்களையும் போன்றவர்களுக்கென்றே திருவள்ளுவர் ஒரு குறள் எழுதியிருக்கிறார்.

        நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
        வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

        உயர்ந்த குடிப் பிறப்பாளனாகிய ஒருவன், பிறரை இகழ மாட்டான். ஆண்டாளை எவர் இகழ்ந்தாலும் அவர் உயர் குடிப் பிறப்பாளர் அல்லர்.

        1. Avatar
          BSV says:

          //இந்த தளத்தில் மேலே என்ன எழுதியிருக்கிறீர்கள். இடத்துக்கு ஒரு பேச்சா?//

          மேலே நிறைய எழுதப்பட்டிருக்க, நீங்கள் நான் எழுதியதில் எதைக்குறிப்பிடுகிறீர்கள்? முதற் சொல்லையும், இறுதிச்சொல்லையும் அடைப்புக்குறிகளுக்குள் போட்டுக்காட்டினால் நான் பதில் சொல்கிறேன்.

  12. Avatar
    Joseph says:

    Excellent reply I really appreciates.
    but , I have a few questions.
    1.Rajaji said Aandal was a fictional character.
    do you agree with this ? if no why you not oppose rajaji statement ?
    2.In ancient tamil tradition devadasi was considered divine status in hindu tradition. If so why you opposing the vairamthu statement of ” Andal itself Devadasi ” ?

    1. Avatar
      K G Dhouhithri says:

      Hello Mr Joseph,

      Thank you for your comments.

      1. Mr Rajaji’s claims were clearly refuted by the eminent Vaishnava scholar PBA Swamigal. Mr Rajaji gracefully accepted the rebuttal also.

      2. Have you read Mr Vairamuthu’s article? We have no disrespect for Devadasis. We call ourselves Ramanuja Dasi / Dasan everyday. Mr Vairamuthu’s article clearly portrays Goddess Andal as a passionate (!) girl who crossed barriers (!) to express carnal desires and then made the quotation from a bogus essay.

      Also, please note that Mr Vairamuthu’s article insinuates our Azhwar’s wisdom and our Acharya’s depth of understanding. This is in bad taste too.

      Mr Vairamuthu’s past comments about Lord Rama and Goddess Seetha were very indecent. This time he has targeted above-mentioned Deities. This is blatant blasphemy.

      1. Avatar
        BSV says:

        என்னிடம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இராஜாஜிக்கு கொடுத்த பதில் கட்டுரை இருக்கிறது. ஆனால் இராஜாஜி அதை ஏற்றிக்கொண்டார் என்று எவருமே சொன்னதாக நான் கேள்விப்படவில்லை. தயவு செய்து எங்கே எப்போது சொன்னார் என்ற விவரங்களைத்தரவும்.

        //This is blatant blasphemy.//

        இந்துமதத்தில் பிளாஸ்பஃமி கிடையாது.

        1. Avatar
          K G Dhouhithri says:

          வணக்கம் BSV அவர்களே,

          ஜெயஸ்ரீ சாரநாதன் அவரக்ளின் மூன்றாவது கட்டுரையில் (http://jayasreesaranathan.blogspot.in/2018/02/blog-post.html)

          வீ வீ சாரி அவர்கள் கருத்துக்கள் பகுதியில் இந்தத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

          அதில் ஒரு பகுதி இதோ:

          //
          As a youth,in those years, when the controversy over Rajaji’s comments on Andal, was raging, I was interesting myself in all this kind of affairs. On the basis of my first-hand information, I can conveniently and assertively say that he did not say anything derogatory, as is now being made out and blown hot and cold by the so-called Tamil champions.
          At a meeting(I am right if my memory is not failing me), he said: ” I have not read Andal extensively. I cannot, therefore, say whether Andal was an imaginary character or a divine child or a minstrel. I am also not conversant with her works and verses. I, therefore, do not know if all those poems and verses were written by her or somebody else in the pseudo name of Andal.”

          He was, down-to-earth honest and straightforward.

          When spiritual leaders, religious heads and devotees of Andal agitated this and asked him “you too Rajaji”, he did not hesitate even a single second to take back his word and tendered his open apology unequivocally.

          Sri.U.Ve. Annangarachariyar Swami was furious and lambasted him in his magazine with beautiful explanations profusely quoting from various texts and drove home his views brilliantly. Even a strong-willed Rajaji was moved and he was remorse and this reflected in his apology. Sri Anna Swami carried Rajaji’s apology too in his magazine. I remember Kalki magazine carried his apology with a back-ground note.
          //

          Blasphemy என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள முக்கிய பொருள் “அவமரியாதை.”

          “கடவுள், மதம், ஆன்றோர்கள், மதக்கோட்பாடுகள் போன்ற விஷயங்களில் மனம், மெய், வாக்கு இவற்றால் அவமரியாதை செய்யேல்” என்று சனாதன தருமம் என்கிற இந்து மதம் வலியுறுத்துகின்றது.

          இந்து மதம் பல ரகங்களாகப் பிரித்து அவற்றைச் செய்யவொண்ணாது என்றும் அறிவுறுத்துகின்றது. அவற்றைச் செய்தால் என்ன தீய விளைவுகள் உண்டாகும் என்பதையும் விளக்கும் நூல்கள் பல உள்ளன.

          பாவம், மாபாதகம், பஞ்ச மாபாதகம், பகவத் அபசாரம், பாகவத (அடியார்கள் குறித்துச் செய்யப்படும்) அபசாரம், ஆசார்ய அபசாரம், பொறுக்கவொண்ணாத அபசாரம் என்று சில உதாரணங்கள். சுவாமி ராமானுஜர் இவற்றைத் தமது கத்திய திரயம் என்ற நூல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

          அடியார்களைக் குலம், சாதி இவற்றைக் கொண்டு மதிப்பிடுவதைக் கடுமையாகக் கண்டித்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

          1. Avatar
            BSV says:

            //Blasphemy என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள முக்கிய பொருள் “அவமரியாதை.”//

            Blasphemy என்ற சொல் சட்டத்திலிருந்தே நான் எடுத்துப்பேசுகிறேன். மதச்சட்டம் என்று இசுலாமில் உள்ளது. ஷாரியத். அது இச்சொல்லை வரையறுத்து தண்டனைகள் வழங்குகிறது. பிளாஸ்ஃபமி லா என்று இசுலாமிய நாடுகளில் அமலில் இருக்கிறது. இச்சட்டத்தைத் துர்பிரயோகம் பண்ணி தமக்குப் பிடிக்காதவனை அழிக்க முடியும். இச்சட்டத்தில் குறைந்த பட்ச தண்டனை என்பதே இல்லையென்பதால். போனமாதம், இப்படி துர்பிரயோகம் பண்ணி ஒரு பலகலைக்கழக மாணவனை கொன்றவர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்கியிருக்கிற்து பாகிஸ்தான் உயர்நீதி மன்றம்.

            இந்துமதத்தில் இது இல்லவே இல்லை. ஆதிகாலம் தொட்டு இந்துமதக்கடவுளர்களை விமர்சனம் செய்தல், இந்துமத்தில் பல கொள்கைகளை ஏகடியம் பண்ணுதல், பேசுதல் – இவை இந்துக்களாலேயே செய்யபபட்டன. கிருத்துவமும் இசுலாமும் இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே. கடவுளர்கள் புணர்வதாக கோயில்களில் சிலைகள் இன்று வைக்கமுடியாது. ஆண்டாள் தேவதாசியா என்ற கேள்வியை இன்று கேட்கக்கூடாது. அன்று கேட்கலாம். இராமாயணங்கள் விதவிதமானவை. ஒன்றில் இராவணனின் தங்கை சீதை என்றெல்லாமுண்டு. அப்படிப்பட்ட‌ சுதந்திரத்தை இந்துமதம் வழங்குகிறது. இந்துமதத்தில் பெரிய ஆட்களே இதைச்செய்தார்கள்; தயானந்த சரசுவதி சிலைவழிபாடு செய்யும் இந்துக்களை ஏசியது ஒரு எ.கா. சைவ வைணவப் போராட்டத்தில் இரு கூட்டங்களும் ஒருவரயொருவரும், சமணர்களை சைவர்கள் வசைபாடியது வரலாறு. இவற்றையெவரும் பெரிது படுத்தவில்லை. காரணம் பிளாஸ்பமி என்ற கான்செப்டே இங்கு கிடையாது. ஏ கே இராமனுஜன் ”விதவிதமான இராமாயணங்கள்” என்றெழுத நூலை தில்லிப்பல்கலை பாட்த்தில் வைக்கக்கூடாது. ஆண்டாள் தேவதாசி குலமா? என்ற் கேள்விகளெல்லாம் எதிர்க்கப்பட்டு கேட்பவர்கள் தண்டிக்கப்படுவது இன்றுதான் நாம் காண்கிறோம்.

        2. Avatar
          ஜெயஸ்ரீ சாரநாதன் says:

          அண்ணங்கராச்சாரியார் கட்டுரை கிடைத்துவிட்டதல்லவா? ராஜாஜி அதை ஏற்றுக் கொண்டதையும் தேடுங்கள், கிடைத்து விடும்.

          அடுத்து நீங்கள் சொல்கிறீர்கள் //இந்துமதத்தில் பிளாஸ்பஃமி கிடையாது.//

          அப்படியா?

          பிளாஸ்பஃமி என்றால் தெய்வ நிந்தனை, இறை பழி என்று ஆங்கிலம் -தமிழ் அகராதி கூறுகிறது.

          இந்து மதத்தில் தெய்வ நிந்தனை செய்தவனை தெய்வமே அழித்து விடும், இதைச் சொல்பவர் சங்க காலப் புலவர்கடுவன் இளவெயினனார்,

          “கொடுமையும், செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை, இல் வழி இலையே, போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே.”

          இதன் பொருள்: திருமாலே, ‘ கொடுமை, செம்மை (நடுவு நிலைமை) என்னும் இவ்விரு பண்புகளை முறையே நின்னிடம் வெம்மையும், தண்மையும் உள்ளத்தில் கொண்டவர்களிடம் நீயும் கொண்டுள்ளாய். இவை இல்லாதவரிடம், நீயும், இந்தப் பண்புகளைக் கொள்ளாதிருக்கிறாய். உன்னைப் போற்றாதவர் உயிரின் கண் நீ எந்த மாற்றத்தையும் செய்வதில்லை. உன்னைப் போற்றுபவரது உயிரின் கண் மாற்றம் செய்யாமல் இருப்பதில்லை (காக்கின்றாய்)’

          அதாவது, திருமாலை வெறுப்பவர்களுக்கு, நிந்தனை செய்பவர்களுக்குத் திருமாலே பதிலடி கொடுக்கிறார் – சிசுபாலனுக்குக் கொடுத்தாற்போல. அதனால் தான் நாங்கள் ‘தெய்வம் பார்த்துக் கொள்ளும்’ என்கிறோம்.

          திருமாலைப் போற்றத்தவர்களது உயிருக்கு கேடு வரும் போது, திருமால் ஒன்றும் செய்வதில்லை. போற்றாதவர்களுக்கே இப்படி என்றால், தூற்றுபவர்களுக்கு என்ன கதி என்று சொல்லவும் வேண்டுமோ?

          இருப்பது ஒரு உயிர், போவது ஒரு முறை என்று சொல்லலாம். இதில் தெய்வத்துக்கு என்ன வேலை என்று கேட்கலாம். போகும் உயிர், காலத்தே, கஷ்டப்படாமல் போக வேண்டும். பல்லாண்டு சிறப்பாக வாழ வேண்டும். தூற்றுபவர்களுக்கு அது கிடைக்காது. கேடு வருகையில், தர்மம் என்னும் அந்தத் தெய்வம் தலை காக்காது. ஆனால் போற்றுபவர்களுக்குக் கேடு நேர்கையில், அவர்களைக் காப்பாற்றும்.

          இந்த எண்ணம் சங்க காலம் தொட்டு தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றி வந்தவர்களால் கருதப்பட்டு வந்தது. எனவே பிளாஸ்பஃமி என்பதை இந்து மதம் ஏற்றுக் கொண்டதில்லை.

          திருவள்ளுவனாரும் இதே கருத்தைச் சொல்கிறார் – இதைக் கட்டுரையிலும் கொடுத்துள்ளேன்.

          “எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
          பெரியார்ப் பிழைத்தொழுகுவார்’

          நெருப்பில் விழுந்து சுடப்பட்டாலும், உயிர் பிழைக்கலாம். ஆனால் பெரியோரைப் பிழை கூறினால், தப்பிப் பிழைக்கவே முடியாது.

          பெரியோருக்கே இப்படிச் சொன்னார் என்றால், தெய்வத்தைப் பிழைத்தோருக்கு ஏது உய்வு??? தமிழ் படித்தவனும், அதன் மூலம் தமிழ்ப் பண்பாடு தெரிந்தவனும் இவர்களைப் பின்பற்றுபவர்கள். அல்லாதோர் உங்களைப் போன்றவர்கள்.

          1. Avatar
            BSV says:

            அம்மா தாயே! இங்கு நாம் வைத்துக்கொண்டிருப்பது வாதங்கள். கோயில் பிரார்த்தனையல்ல. தெய்வத்தைப் பழித்தால், தண்டனை கிடைக்குமெனப்தைச் சொல்லவா இங்கு வந்தீர்கள்? திண்ணை என்ன நர்சரி வகுப்பறையா? கருத்துக்களுக்கு எதிர்கருத்து இதுவா? தெய்வத்தைப் பழித்தால் தெயவம் தண்டிக்கும் என்று தெய்வம் சொல்லவில்லை. நீங்கள் எழுதிவைத்துக்கொண்டீர்கள். தன்னை இகழ்ந்தோனை தெய்வம் தண்டிக்காது. மாறாக, சக மனிதர்களை அழிப்போன்; கொடூரமாக நடாத்துவோன் இவர்களைத்தான் தண்டிக்கும். ஆனால் அங்கும் தெய்வம் டிலே பண்ணுவதால் நாமே சட்டம் போட்டுத்தண்டனை உடனே வழங்குகிறோம். துஷ்யத்தின் மரண தண்டனி ஓர் எ.கா. பலபல கதைகளை இந்துதெய்வங்களைப்பற்றி எழுதிவைத்துக்கொள்வீர்கள்; அது இங்கு சரியா/ அங்கு சரியா? என்று கேட்போரைப் பழித்தார்கள்; தெய்வம் தண்டிக்குமென்பதெல்லாம் கற்பனை. உங்கள் வசதிக்கு மட்டும் தெய்வமன்று. இறைவன் உங்களைவிட பெரியவன். உயர்வற உயர்நல உடையவன். அவனுக்கு யாராருக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரியும். நீங்களாயிருந்தாலென்ன? நானாயிருந்தாலென்ன? இறைவனுக்கு காட்டுவது சம நீதி.

            இந்து தெய்வங்களைப் பழிக்கும்போது உங்கள் மனங்கள் புண்படுமென்றால், பாகிஸ்தான் மற்றும் இசுலாமிய நாடுகளில் உள்ளது போல பிலாஸ்ஃபமி சட்டத்தைக் கொண்டுவர மோதியிடம் மோதுங்கள். அதிக பட்சத்தண்டனையைத் தரும் படி எழுதி விடுங்கள். இப்போதிருக்கும் சட்டமே போதும் எனப்து பொய் வாதம். தனியாக ஒரு தடைச்சட்டமும் கடும்தண்டனையும் வந்தால், எல்லாரும் வாய்பொத்திக்க்கொள்வார்கள். நீங்கள் பேசுவதற்கு எதிர்ப்பே இருக்காது.

            //“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
            பெரியார்ப் பிழைத்தொழுகுவார்’

            நெருப்பில் விழுந்து சுடப்பட்டாலும், உயிர் பிழைக்கலாம். ஆனால் பெரியோரைப் பிழை கூறினால், தப்பிப் பிழைக்கவே முடியாது.//

            அப்பேர்ப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி சொன்னது பிழை என்று மீறியவரும் பெரிய ஆச்சாரியாரான யாதவ்ப்பிரகாசரையே பிழை என்று சொன்னவருமான இராமானுஜர் எப்படி பிழைத்தார்? கங்கை நதியில் மூழ்கடித்துக்கொல்ல முயன்ற போதும், அகரகாரத்தில் பிச்சையேந்திச் செல்லும்போது, விஷம் கலந்த உணவை அருந்த முயன்ற போதும் பிழைத்தாரே? எப்படீ?

      2. Avatar
        BSV says:

        //Also, please note that Mr Vairamuthu’s article insinuates our Azhwar’s wisdom and our Acharya’s depth of understanding. This is in bad taste too.//

        Insinuate what? என்னையா இங்கிலீசு இது? இன்சுனுவேட் என்று மொட்டையாகப் போட முடியுமா? என்ன இன்சுனுவேட் பண்ணினார்?

        நிறைய வாசித்துவிட்டு வாருங்கள். ஆச்சாரியார்கள் சொற்களுக்கு மறு சொல் வைக்கக்கூடாது என்பது இந்துமதத்தில் இல்லவே இல்லை. இங்கு ஃபிளாஸ்பஃமியும் இல்லை. எனவேதான் ஓர் ஆச்சாரியார் சொன்னது தவறு என்று இன்னொரு ஆச்சாரியார் மறுத்து எழுதுவார். சங்கரருக்கும் இராமானுஜருக்குமிடையில் உண்டல்லவா? யாதவப்பிரகாசர் சொல்லியதை இராமானுஜர் மறுத்தரல்லவா? திருக்கோட்டியூர் நம்பி எப்பேர்ப்பட்ட ஆச்சாரியார் தெரியுமில்லே? ஆனால் அவரையே இராமானுஜர் மீறினாரல்லவா?

        பலபல பிரிவுகள் எப்படி இந்துமதத்தில் வந்தன? எங்கள் ஆச்சாரியார் சொன்னதை எவரும் மறுக்கக்கூடாது என்றால் இந்தியாவில் குருதிப்புனல் ஓடியிருக்குமே? என்னதான் உங்கள் ஆச்சாரியார்கள் ஆழ்வார்கள் பாடல்களுக்கு விளக்கம் சொல்லியிருந்தாலும் அவை மறுத்து விளக்கம் சொல்ல எல்லாருக்குமே உரிமை உண்டு. அண்ணாச்சிக்கு இன்னொரு சங்கதி. பூர்வாச்சாரியார்கள் ‘ஆழ்வார் பாசுரங்களுக்கு வியாக்யானஙகள் கொடுத்தார்கள். அவைகளே ‘படிகள்’ ஆனால் அனைவருமே பிராமணர்கள்’ பரிமேலழகர் குறளுக்கு வைதீக முறைப்படி விளக்கம் கொடுத்ததைப்போலவே, இவர்கள் ”வேத சாரங்களாக’ ஆழ்வார் பாடலகளுக்குக் கொடுத்தார்கள். அதற்கு மாறாக பிராமண்ரல்லாதார் திருவாய்மொழிக்கு விளக்கங்கள் எழதினார்கள். அவை என்னவென்று அழைக்கப்பட்டன தெரியுமா? ”தமிழர்களின்” விளக்கவுரைகள் என்றுதான். அவ்வுரைகள் இன்று அழிந்துபட்டன. காரணம், ஆளவந்தார் போன்ற ஆச்சாரியர்களுக்கு சோழனின் ஆதரவு இருந்தது. சோழனின் அரண்மனையிலே வாசம் செய்தவர் அவர்.

        இராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவம் – அதன் மரபுகள்; ஆழ்வார் பாடல்களுக்கு வியாக்யானங்கள் எல்லாமே ஆச்சாரியார்களாலே வரையப்பட்டன. அவர்கள் பிராமணர்கள். இம்மதத்தில் மற்ற ஜாதியினர் சீடர்களாக இருக்கலாம். ஆச்சாரியார்களாக இருக்க முடியா. எனவே பிறர் ஏழுதிய மறுவுரைகள் ஏற்கப்படவில்லை.

        1. Avatar
          Ramia says:

          BSV,

          You are again showing poor understanding of Vaishnavam.

          வேதம் தமிழ் செய்த மாறன் நம்மாழ்வார் வெள்ளாள குலத்தை சேர்ந்தவர்.
          திருமங்கை ஆழ்வார் கள்ளர் குலத்தை சேர்ந்தவர்.
          திருமழிசை அழுவார் பறையர் குலத்தை சேர்ந்தவர்.
          திருப்பாண் அழுவார் பாணர் குலத்தை சேர்ந்தவர்.
          குலசேகர அழுவார் சேர மன்னன், அதனால் க்ஷத்திரியர்.
          முதல் அழுவார்கள் அயோனிஜர்கள், அதனால் இக்குலத்தவர் என்பதில் எங்களுக்கு அக்கறை இல்லை.
          வைணவர்களின் தமிழ்மறை எழுதியது அந்தணர் மட்டும் அன்று !

          //அதற்கு மாறாக பிராமண்ரல்லாதார் திருவாய்மொழிக்கு விளக்கங்கள் எழதினார்கள். //
          உங்கள் கூற்றிற்கு ஆதாரம் என்ன?

          Are there any texts / epigraphic evidence to support your claim?

          Even among our Acharyas, there have been great non-brahmins.

          விளஞ்சொல்லை பிள்ளை என்பவர் பிள்ளை லோகாச்சார்யரின் சீடர். அவர் ஈழவ குலத்தில் பிறந்தவர். தன் குருவின் ஆணைப்படி அந்தணராகிய திருவாய்மொழி பிள்ளைக்கு ‘ஸ்ரீ வசன பூஷணம்’ என்னும் கிரந்தத்தை உபதேசித்தார். அவர் எழுதிய ‘சப்த காதை’ என்னும் நூலை நாங்கள் போற்றி கற்கிறோம்.

          Stop blabbering here. Go and blabber elsewhere, where people will not challenge your poor knowledge.

          1. Avatar
            BSV says:

            ஆழ்வாரை அழுவார் என எழுதலாமா? செய்வன திருந்தச்செய் என்பார்கள். சரியாக தட்டச்சு செய்யப்பழகிவிட்டு எழுதியதைத் திரும்ப வாசித்து எழுத்துப்பிழைகளைத் திருத்திய பின் பதிவிடவும்.

            //அதனால் இக்குலத்தவர் என்பதில் எங்களுக்கு அக்கறை இல்லை.
            வைணவர்களின் தமிழ்மறை எழுதியது அந்தணர் மட்டும் அன்று !//

            பச்சைப்பொய். ஆழ்வார்களின் சிலர் தங்கள் பாடல்களிலேயே தம் சாதிகளை உலகத்தோருக்குச் சொல நீங்கள் எப்படி இல்லை என்று பொய் சொல்ல முடியும்?

            குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண மைதன்னை
            ஒளித்திட்டேன், என் கண் இல்லை; நின்கணும் பத்தன் அல்லேன்;
            களிப்பதுஎன் கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன்;
            அளித்து எனக்கு அருள்செய்; கண்டாய்; அரங்கா மாநகருளானே!
            – தொண்டரடிப்பொடியாழ்வார் தான் பிராமண ஜாதியில் பிறந்து பிராமணீயத்தை ஓம்பும் ஒருவன் எனக்காட்டுவது.

            குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்;
            நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்;
            புலன்கள் ஐந்தும் வென்றிலேன், பொறியிலேன், புனித! நின்
            இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே!
            -திருமழிசையாழ்வார் தான் ஒரு குலமற்ற தலித்து என்று சொல்லி என்னை இம்மனித உலகம் குலமற்றவன் என்று ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தாலும் உன் பாதம் மட்டும் போதுமெனக்கு எனச்சொல்லும் அட்டகாசமான பாடலிது.

            குருபரமபரா பிரபாவமே சாதிகளை சொல்லி எழுதுகிறது. காரணம், இழிகுலத்தோர்; மேற்குலத்தோர் என பேதபாவம் எம் மதத்தில் இல்லை என்று சொல்லும் முயற்சியே இது. ஆழ்வார் எக்குலமென்பதில் உங்களுக்கு அக்கறை இருந்தபடியாதான், ஓர் சூத்திரன் எழுதியது தெய்வப்பனுவலாகுமா? நம்மாழ்வார் ஓர் சூத்திரன் எனவே நாம் அவர் பாடலகளை ஏற்க முடியாது என்றார் பிராமணர்கள். அவர்கள் விருப்பத்தை மீறிதான் திருவரங்கத்தில் நம்மாழ்வார் பாடல்கள் ஓதப்படவேண்டும் என்று திருமங்கையாழ்வார் செய்து காட்டினார்.
            இராமானுஜர் சப்பரத்துக்கு முன் திருவாய்மொழி பாடப்பட வேண்டுமென்று நிர்ப்பந்தத்தைக் கொண்டுவந்தார். சாதி பார்த்து பார்த்துதானே திருமழிசையாழ்வாரைப் படாதபாடு படுத்தினீர்கள் !

            அண்ணாச்சி, உங்கள் மத வரலாறு எனபது சமத்துவத்துக்கும்- பிராமணேற்றத்துக்கும் இடையே நடந்த நெடுங்காலப்போர் என்று வெளியாட்கள் சொல்லவில்லை. உள்ளாட்களே எழுதிவைத்த வரலாறு இருக்கிறது.

            என் கேள்வி அதுவன்று: தன் சாதிகளை வெளிக்காட்டா திருப்பாணாற்றாழ்வாருக்கு எப்படி தலித்துப் பிரிவின் ஒன்றான உறையூர் பறையராக்கினீர்கள்? பத்தே பத்து பாட்டு. அதில் எங்கும் அவர் தன் சாதியைக் காட்டவில்லை.

            நாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று தம்பட்டம் அடிப்பது முடியாது அண்ணாச்சி! வைணவமோ, சைவமோ – சாதி பார்த்தபடியாலே நீங்கள் பிராமணர்கள். சாதியில்லாவிட்டால் எங்கிருந்து வருவான் பிராமணன் எனப்படுவோன்?

            மதம் ஒன்று சொல்லும்; வாழ்க்கை மற்றொனறைக் காட்டும். நீங்கள் மதப்படி வாழ்ந்திருந்தால் என்றோ தமிழகம் மதங்களால் பெரும் பயனைப்பெற்றிருக்கும்.

            //Are there any texts / epigraphic evidence to support your claim?//

            காட்டிவிட்டால் பகிங்கர மன்னிப்புக் கேட்கத்தயாரா?

        2. Avatar
          K G Dhouhithri says:

          // Insinuate what? என்னையா இங்கிலீசு இது? இன்சுனுவேட் என்று மொட்டையாகப் போட முடியுமா? என்ன இன்சுனுவேட் பண்ணினார்?//

          “What” என்பதை “our Azhwar’s wisdom and our Acharya’s depth of understanding” என்று குறிப்பிட்டு உள்ளேன். அதையும் தாங்களே மேற்கோள் காட்டியுள்ளீர்! :-)

          விவரங்கள் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் கட்டுரையில் சறுக்கல் எண் 7, சறுக்கல் எண் 15 ஆகியவற்றைப் படித்தால் புரியும். மேலேயே உள்ளன! :-)

          // நிறைய வாசித்துவிட்டு வாருங்கள். //

          நல்ல அறிவுரை. வாழ்நாள் முழுவதும் எல்லோரும் (தாங்கள் உள்பட) செய்யவேண்டிய ஒன்று. :-)

          // ஆச்சாரியார்கள் சொற்களுக்கு மறு சொல் வைக்கக்கூடாது என்பது இந்துமதத்தில் இல்லவே இல்லை. இங்கு ஃபிளாஸ்பஃமியும் இல்லை. //

          நிச்சயம் உண்டு.

          Blasphemy பற்றி முன்னமே தெரிவித்தேன்.

          “ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும் தாழ்வாக நினைப்பவர்கள் நரகில் வீழ்வார்கள்” என்றும் “முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே தன நெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவரவாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்” என்றும் ஒரு சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பறைசாற்ற வந்த ராமானுஜரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகள் முழங்கியுள்ளார்.

          // எனவேதான் ஓர் ஆச்சாரியார் சொன்னது தவறு என்று இன்னொரு ஆச்சாரியார் மறுத்து எழுதுவார். சங்கரருக்கும் இராமானுஜருக்குமிடையில் உண்டல்லவா? யாதவப்பிரகாசர் சொல்லியதை இராமானுஜர் மறுத்தரல்லவா? திருக்கோட்டியூர் நம்பி எப்பேர்ப்பட்ட ஆச்சாரியார் தெரியுமில்லே? ஆனால் அவரையே இராமானுஜர் மீறினாரல்லவா?
          பலபல பிரிவுகள் எப்படி இந்துமதத்தில் வந்தன? //

          உண்மை. கருத்து வேறுபாடுகள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு.

          இருப்பினும் மேற்கூறிய யாவரும் கீழ்த்தரமாக எதையும் பேசவில்லை. அவர்களின் எண்ணமும் உயிர்களின் ஆன்ம முன்னேற்றம் குறித்தே இருந்தன.

          ஆனால் மாற்றுக் கருத்துக்கள் தவறு எனக் கருதினால் அதை அறிவுப் பூர்வமாகக் கண்டனமும் செய்தார்கள்.

          யாரும் பேசவேகூடாது என்று கூறவில்லை. தவறாகப் பேசக்கூடாது என்றே கூறுகின்றோம்.

          “Mr Vairamuthu’s past comments about Lord Rama and Goddess Seetha were very indecent. This time he has targeted above-mentioned Deities.” – என்னுடைய பதிலில் இந்தப் பகுதியை மட்டும் எப்படியோ பாராமல் விட்டுவிட்டீர்கள்!!! :-)

          ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் கட்டுரையில் சறுக்கல் எண்கள் 9, 10, 11, 14 ஆகியவற்றைப் படித்தால் வைரமுத்து அவர்களது கட்டுரை ஏன் இவ்வளவு வேதனையும் அருவருப்பையும் கொடுத்தது என்று புரியும். மேலேயே உள்ளன.

          மாற்றுக கருத்து என்ற போர்வையில் செய்த இந்த தூற்றுதலைத் தான் கண்டிக்கின்றோம்.

          // எங்கள் ஆச்சாரியார் சொன்னதை எவரும் மறுக்கக்கூடாது என்றால் இந்தியாவில் குருதிப்புனல் ஓடியிருக்குமே? என்னதான் உங்கள் ஆச்சாரியார்கள் ஆழ்வார்கள் பாடல்களுக்கு விளக்கம் சொல்லியிருந்தாலும் அவை மறுத்து விளக்கம் சொல்ல எல்லாருக்குமே உரிமை உண்டு. //

          அது தானே பெருமை. குருதிப்புனல் ஓடாது. வாதப்புயலோடு நின்றுவிடும். ஆனால் சிலர் இன்று இந்தப் பெருமையைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

          // இன்னொரு சங்கதி. பூர்வாச்சாரியார்கள் ‘ஆழ்வார் பாசுரங்களுக்கு வியாக்யானஙகள் கொடுத்தார்கள். அவைகளே ‘படிகள்’ //

          6000, 9000, 24000, 36000, 12000 படிகள் என்று திருவாய்மொழிக்கு மட்டுமே 5 படிகள் உள்ளன. 4000 பாசுரங்களுக்கும் பெரியவாச்சான் பிள்ளை உரை அருளினார். வேறு சில ஆசார்யர்கள் அருளிய சில உரைகளும் உள்ளன.

          குறிப்பு: 36000 படி அருளிய நம்பிள்ளை பார்ப்பனர் அல்லாத ஒரு அடியாரின் மிச்சமாகவே தம் இல்லத்து இறைவனின் பிரசாதம் உண்டார்.

          // ஆனால் அனைவருமே பிராமணர்கள்’ பரிமேலழகர் குறளுக்கு வைதீக முறைப்படி விளக்கம் கொடுத்ததைப்போலவே, இவர்கள் ”வேத சாரங்களாக’ ஆழ்வார் பாடலகளுக்குக் கொடுத்தார்கள். //

          சரி.

          // அதற்கு மாறாக பிராமண்ரல்லாதார் திருவாய்மொழிக்கு விளக்கங்கள் எழதினார்கள். அவை என்னவென்று அழைக்கப்பட்டன தெரியுமா? ”தமிழர்களின்” விளக்கவுரைகள் என்றுதான். அவ்வுரைகள் இன்று அழிந்துபட்டன. //

          தயவு செய்து ஆதாரங்கள் தரவும்.

          // காரணம், ஆளவந்தார் போன்ற ஆச்சாரியர்களுக்கு சோழனின் ஆதரவு இருந்தது. சோழனின் அரண்மனையிலே வாசம் செய்தவர் அவர்.//

          ஆளவந்தார் துறவறம் ஏற்றபின் ஆழ்வார் பாசுரங்களில் ஊற்றம் கொண்டார். சோழனின் ஆதரவு துறவறம் ஏற்றபின் அவருக்கு இருந்ததாக எங்கே இருக்கின்றது?? ஆளவந்தார் இறையருளைத் தவிர எந்த ஆதரவையும் எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை. “படிகள்” ராமானுஜர் காலத்தில் பிள்ளான் என்ற சீடர் மூலமாகத் தொடங்கப்பட்டன.

          // இராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவம் – அதன் மரபுகள்; ஆழ்வார் பாடல்களுக்கு வியாக்யானங்கள் எல்லாமே ஆச்சாரியார்களாலே வரையப்பட்டன. அவர்கள் பிராமணர்கள். இம்மதத்தில் மற்ற ஜாதியினர் சீடர்களாக இருக்கலாம். ஆச்சாரியார்களாக இருக்க முடியா. எனவே பிறர் ஏழுதிய மறுவுரைகள் ஏற்கப்படவில்லை.//

          1. பல சாதிகளைச்ச்சேர்ந்த ஆழ்வார்களின் மொத்த அவயவியாகக் கருதப்படும் வேளாள இனத்தைகச் சேர்ந்த நம்மாழ்வார் எங்களுக்கு முக்கிய ஆசார்யரும் எங்கள் குலத் தலைவரும் ஆவார்.

          2. பார்ப்பனர் அல்லாத நம் கம்பரைக் கம்பநாட்டாழ்வார் என்றே ஆன்றோர்கள் அன்புடன் அழைப்பர். கம்பநாட்டாழ்வார் தமது அருமையான காவியத்தை அரங்கேற்றம் செய்ய முற்பட்டபோது திருவரங்கன் “கம்பரே! நம் சடகோபனைப் பாடினீரோ?” என்று வினவ “சடகோபர் அந்தாதி” என்ற உயர்ந்த துதி நூலை இயற்றினார் கம்பர் பெருமான். சடகோபர் என்பவர் நம்மாழ்வார் தான்!

          3. அனைத்து வைணவக் கோயில்களும் எல்லா இனத்து அன்பர்களுக்கும் சடாரி என்று தலையில் வைக்கின்றனர். இந்தச் சடாரி நம்மாழ்வார் தான்! அவர்தான் திருமாலின் பாதுகைகள்! அவரைத்தான் தலை குனிந்து வாய் பொத்தி மதிப்புத் தோற்ற அனைவரும் (பார்ப்பனர் உட்பட) ஏற்றுக்கொண்டு ஆன்மாவைக் கடைத்தேற்றுகின்றோம்!

          4. பிள்ளைலோகார்யர் என்ற பார்ப்பனர் அடியார்களின் சாதியைப் பற்றி நினைத்தலும் தவறு என்று முழங்கியதோடு அந்தக் கருத்தை ஆணித்தரமாக முழங்கும் சப்த காதையை அருளிய தம் ஈழவக் குலச் சீடரான விளாஞ்சோலைப்பிள்ளையிடம் பார்ப்பனரான திருவாய்மொழிப்பிள்ளையிடம் ஓதுவிக்கும் படி அன்புக் கட்டளையிட்டார். திருவாய்மொழிப்பிள்ளையும் விளாஞ்சோலைப்பிள்ளையிடம் கற்றுத் தெளிந்தார்.

          பார்ப்பனர் அல்லாத அடியார்களின் பெருமையை எந்த பார்ப்பனரும் இருட்டடிப்புச் செய்யவில்லை.

          1. ராமானுஜரும் தம் சீடர் முதலியாண்டானிடம் 10 வார்த்தைகள் பார்ப்பனர் அல்லாத அடியாரின் ஏற்றத்தை அருளினார்.

          2. நம்மாழ்வாரான மாறன் அடி பணிந்து உய்ந்த பார்ப்பனர் தான் எம் ஐயன் இராமானுசன்! அந்தப் பாதுகைகளைப் புகழ்ந்த பார்ப்பனர் தான் வேதாந்தாசார்யர்! அந்த மாறன் மனத்தை மனமுருக ஏடுபடுத்திய பார்ப்பனர் தான் ஆசார்ய ஹ்ருதயம் புகழ் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்! மாறனின் மொழிகளைப் போற்றும் ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயம் ஆகிய பொன்னான நூல்களுக்குத் தமது திருக்கழுத்து நோக உரை எழுதிய பார்ப்பனர் தான் பொய் இல்லாத மணவாள மாமுனிகள்!

          3. தவிர பார்ப்பனர் அல்லாத சாதியில் குஹப் பெருமாள், சபரி அம்மையார், விதுரர், சாண்டிலினி, பிள்ளை உறங்காவில்லி தாசர், அவரது தேவியார் பொன்னாச்சியார், திருக்கச்சி நம்பிகள், மாறனேரி நம்பிகள், நம்பாடுவான், விளாஞ்சோலைப்பிள்ளை என்று எத்தனை எத்தனை மாணிக்கங்கள்! மனிதர் அல்லாத சாதியில் சடாயு (பெரிய உடையார்), அனுமன், கஜேந்திரன் என்று எத்தனை எத்தனை நல்முத்துக்கள்! இவர்களின் பெருமைகளை மறவாமல் அன்புடன் ஏடுபடுத்தி இன்றளவும் பேசும் பார்ப்பன அடியார்கள் தான் எத்தனைப் பேர்!

          முடிவுரை:

          ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் கட்டுரையில் “முடிவாக …..” என்று ஆரம்பித்து “பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது” என்று முடியும் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் சரி.

          சுமார் 50 வருடங்களாக இந்த அவல நிலை.

          பார்ப்பனரா பார்ப்பனர் அல்லாத வேறு குலத்தவரா, இந்துவா இல்லையா என்பது இல்லை பிரச்சனை. எண்ணமும் செயலும் சரியா தவறா என்பது தான்.

          ஐயா அப்துல் கலாம், சாலமன் பாப்பையா அவர்கள் போன்றவரை யாரும் கண்டிக்கவில்லை.

          வைரமுத்து அவர்கள் மட்டும் அல்ல. பார்ப்பனர் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரி அவதூறு எழுதியபோது வைணவ பத்திரிக்கை ஒன்றில் ஒரு பார்ப்பனர் அல்லாத வைணவர் அவரைக் கடுமையாகக் கண்டித்தார்.

          தாங்கள் என்ன சொன்னாலும் உண்மைகளை அறியவேண்டும் என்று உண்மையாக முயல்பவர்களுக்கு எப்படியும் நாங்கள் கூறுவதில் உள்ள நியாயம் புரியும். அறம் இருக்கும் இடம் இறை அருள் அனைத்து நலன்களையும் அருளும்.

          நாங்கள் கூறுவதைக் “கற்றோர்கள் தாம் உகப்பர். கல்வி தன்னில் ஆசை உள்ளோர் பெற்றோம் என் உகந்து பின்பு கற்பர். மற்றோர்கள் மாச்சரியத்தால் இகழில் வந்தது என் நெஞ்சே? இகழ்கை ஆச்சரியமோ தான் அவர்க்கு?”

          நன்றி. அனைத்து நலன்களும் அனைவரும் பெற நல்வாழ்த்துக்கள்.

        3. Avatar
          BSV says:

          நான் என்ன சொல்ல? உங்களுக்கு இங்கிலீசு வரமாட்டெங்கிது சார்? இன்சுனுவேட் என்றால் அது கண்டிப்பாக ஒரு நெகட்டிவி கருத்தைத்தான். ஆழ்வார்களின் ஞானம், ஆச்சாரியர்களின் ஆழ்ந்த புரிதல் -இவையெல்லாம் பாசிட்டிவ்ஸ்.

          ////Also, please note that Mr Vairamuthu’s article insinuates our Azhwar’s wisdom and our Acharya’s depth of understanding. This is in bad taste too.////

          இதைச் சரியா எப்படி எழுதவேண்டுமென்றால், Mr Vairamuthu;s article questions our Azhwaar’s wisdom and Acharyaars’ depth of understanding. This is in bad taste.

          இன்சுனுவேட் போட்டு எழுதினோமென்றால், இப்படி வரும்:

          His article insinuates that Azhwaar lacked wisdom and Acharyars had poor understanding. This is in bad taste.

          1. Avatar
            BSV says:

            //உண்மை. கருத்து வேறுபாடுகள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. இருப்பினும் மேற்கூறிய யாவரும் கீழ்த்தரமாக எதையும் பேசவில்லை. அவர்களின் எண்ணமும் உயிர்களின் ஆன்ம முன்னேற்றம் குறித்தே இருந்தன.
            ஆனால் மாற்றுக் கருத்துக்கள் தவறு எனக் கருதினால் அதை அறிவுப் பூர்வமாகக் கண்டனமும் செய்தார்கள்.
            யாரும் பேசவேகூடாது என்று கூறவில்லை. தவறாகப் பேசக்கூடாது என்றே கூறுகின்றோம்.//

            கடைசி வரி நல்ல நழுவல். ஒருவர் பேசியது தவறா? சரியா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கொள்வீர்கள். இல்லையா? அங்கேதான் எல்லா பிரச்சினைகளும். மாற்றுக்கருத்துக்களை அறிவுப்பூர்வமாக கண்டனம் செய்தார்கள் என்றால் பிராமணர்கள் இராமானுஜரை ஏன் எதிர்த்தார்கள்? ஏன் அவரைக்கொல்ல முயற்சிகள் நடந்தன‌? எல்லாரும் அறிவுப்பூர்வமாகத்தான் பேசினார்கள் என்பது கற்ப்னை. இன்று நமக்கு எழுத்தில் கிடைக்கும் அக்கால மாற்றுக்கருத்துகள் அறிவுப்பூரமாகத்தான் இருக்கும். அப்போது பேசிய போது அவதூறுகளே இல்லை என்பதை எப்படி சொல்கிறீர்க்ள்? மற்றவர்கள் மனங்கள் புண்பட பேசியதே இருக்காதென்பது கற்பனை கூட ப்ண்ண முடியாது அண்ணாச்சி :-)

            வைணவர்களுக்குள் நடைபெறும் கருத்தியல்களை பொது மக்களுக்கு வைக்ககூடாது. வைரமுத்துவோ, அவரை ஆத்ரிப்பவர்களே உங்களைப் போன்ற வைணவர்கள் கிடையா. இந்துமதப் பிரிவுகளில் கூட ஆச்சாரிய வழிபாடு எனப்து வைணவத்தில் மட்டும்தான். ஆசாரியர்களை (குருக்களை) மற்றப்பிரிவுகள் போற்றும். ஆனால் தெய்வத்தின் அவதாரமாக பார்ப்பது கிடையாது. நீங்கள் இராமானுஜரையும் தேசிகனையும் அவதாரங்களாகப் பார்க்கிறீர்கள்; வணங்குகிறீர்கள்; எனவே ஆச்சாரிய நிந்தனை பெரும் தண்டனைக்குரிய குற்றமாக வைணவத்தில். மற்றவிடங்களில் கிடையாது. எனவே உங்கள் மதக்கருத்துக்கள் உங்களுக்கு மட்டுமே. எனவே பாவம், புண்ணியம், குற்றம், தண்டனை, வள்ளுவர் சபித்தார் என்பனவெல்லாம் உங்களுக்குத்தான்; உங்கள் மதப்படி நீங்கள் வாழுங்கள்; போதும். மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம்.

    2. Avatar
      வேந்தன்அரசு says:

      புனைப்பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும் கோழையெனப்பெரியாழ்வாரை ராஜாஜி தாழ்த்திவிட்டார்.

      1. Avatar
        BSV says:

        அவர் அப்படி பெரியாழ்வாரைக்குறிப்பிட்டுச் சொன்னாமல் வேறு ஓர் ஆண் புலவர் ”ஆண்டாள்” என்ற புனைப்பெயரை வைத்துக்கொண்டு திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் எழதினார் எனறு இராஜாஜி சொல்லியிருந்தால் உங்களுக்குச் சரியா?

      2. Avatar
        K G Dhouhithri says:

        பெரியாழ்வாரை வர்ணிக்க “கோழை” என்ற வார்த்தை ராஜாஜி அவர்கள் உபயோகித்த வார்த்தையா அல்லது தங்களது வார்த்தையா? :-)

        ராஜாஜி அவர்கள் தம் புரிதலைத் தெரிவித்தார். அது தவறு என்று சுட்டிக் காட்டிய பின் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்.

        தாங்கள் அவர் முதலில் செய்ததை மட்டும் பேசிக் கொண்டு இருக்கின்றீர். :-)

    3. Avatar
      K G Dhouhithri says:

      Hello Mr Joseph,

      Not all Christians indulge in conversion and I’ve surely met many decent Christians. I believe your queries were well-meant.

      I only want to take this opportunity to pose a few queries to ONLY THOSE Christians who indulge in strange activities to bring in more people into their fold (and insult their own religion in the process).

      1. What’s the NEED to CONVERT people of other religions? Lord Jesus saves? He never fails? He forgave even those who crucified Him? You trust in the Lord? So, why don’t you just sincerely pray to your unfailing Lord to save those who don’t follow Him & trust that He’ll answer your prayer one day?

      2. You surely love your Lord the way He truly looks like? Idolatory worship is forbidden anyway? So, why dress Him up like the personalities of those Deities mentioned in the Vedas & give your Lord ludicrous makeovers?

      3. Why should a “Good Samaritan” convert people when offering them education & social service?

      4. Why publish a calendar portraying your merciful Lord stamping a Deity of Vedic religion whose name is not even mentioned in the Bible?

      5. If Bible is good enough a holy book and if the Church is a perfect place for worship, why try to falsely portray that even Vedas declare Jesus as God? Why try to invade & occupy a Temple?

      6. Surely, your religion forbids bad conduct like lying, slandering, swearing, false testimony, etc.? So, why make a humongous, concerted attempt towards portraying Goddesses of other religions as whores?

      I can list more queries but the point is when one habitually stoops low & hits below the belt, the recipients of the indecent treatment are naturally hurt. Some of them mete out a similar treatment in reply. Some conclude that the entire community is ignoble. Some remind the perpetrators of the historical fact that Christianity is a foreign religion that spread in the country of Bharatha only post foreign invasion.

      A “true Christian” & a “secular Indian” will indeed NOT MALIGN ANYONE / ANYTHING PERTAINING TO OTHER RELIGIONS.

      Take care. God bless.

      1. Avatar
        Joseph says:

        வணக்கம் திரு.தௌத்திரி,
        உங்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் என்னால் தனித்தனியாக விடை சொல்ல முடியும். ஆனால், அது தேவையற்றது. தவிரவும், ஒரு கருத்துக்கு , அதற்கு வலுவான மாற்று கருத்துதான் சரியாக இருக்க முடியுமே தவிர இப்படி மத அடிப்படையில் வாத பிரதிவாதங்களை வைப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? உண்மையான மத உணர்வுள்ளவர்கள் அடுத்தவரின் நம்பிக்கையை புண்படுத்துவதில்லை.அதையே நானும் கடைபிடிக்கிறேன்.அதையே தங்களிடமும் எதிர்பார்க்கிறன்.
        கிறித்துவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதாக நான் கருதவில்லை.ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வதை ஒப்புக் கொண்டால் கூட அதற்கான களத்தை இம்மண்ணிலே ஏற்படுத்தியது யார் ? இந்து மதத்திலே புரையோடிப்போன ஏற்ற தாழ்வுகளும்,தீண்டாமையும்,சாதீய அடுக்குகளும் , வர்க்க பேதங்களுமே காரணம் என்றால் உங்களால் மறுக்க முடியுமா ?

  13. Avatar
    Ramia says:

    Joseph,

    1. Please read the third article in the series by Smt. Jayashree.
    It is on thinnai here :
    http://puthu.thinnai.com/?p=36600
    or on her blog here
    http://jayasreesaranathan.blogspot.in/2018/02/blog-post.html

    There is evidence that Rajaji agreed he was mistaken about Andal. He did not have enough knowledge and the gentleman that he was, he accepted his mistake. Unlike our kaviperarasar !!
    So if Rajaji himself accepted his mistake, it is for political gains that Anti-hindu politicians are raking up that issue again.

    2. We do not accept the statement because it is not “truth”. Simple enough. We believe that Andal merged with Sri Ranganathar in her bodily form, right after her marriage.
    This is true not only about Andal, one of ‘male’ Alwars, Thirupaanazhwar also merged with the Lord in his bodily form. And you will be surprised that a Muslim princess, Surathani (called Bibi Nachchiyaar, respectfully) also merged with the Lord.

    We have no ill-will against Devasasi kulam of that time. Koyilozhugu (history of Srirangam temple) talks respectfully of devadasis who gave up their life and chastity to save the temple from being demolished. Vellai gopuram named after one Vellayi or Vellaiammal was a devadasi who enticed the Muslim general to the top of the gopuram, pushed him to death and she herself jumped to death. Temple honors (Pushpam, parivattam,etc) was sent to every devadasi who died, till the devadasi system was abolished in India.

    Because, your name sounds Christian, I have a question for you.
    https://en.wikipedia.org/wiki/Gospel_of_Mary
    Why has there been repeated attempts by Bible compilers to strip women of greatness? Why is it the Christian mind finds it difficult to accept that a woman devotee can be great? Greater than a male devotee? Why does a christian mind try to label a woman devotee as a prostitute (Mary Magdala) or Devadasi (Andal)? According to your texts, Mother of Jesus conceived him before her marriage with Joseph, would that tantamount to pre-marital sex/prostitution?

    Learn to accept divine miracles in our religion just as you would want us to accept yours.

    As aptly stated by Sri K G Dhouhithri,
    //அனைத்து மதங்களிலும் விஞ்ஞானப்பூர்வமாக நம்பக்கூடிய நிகழ்வுகள் மற்றும் மெய்ஞ்ஞானப்பூர்வமாக நம்பக்கூடிய நிகழ்வுகள் இரண்டுமே இருக்கும்//

    1. Avatar
      BSV says:

      //There is evidence that Rajaji agreed he was mistaken about Andal.//

      எங்கே? எப்போது? கொஞ்சம் சொல்லுங்கள். அறிய ஆவல்

    2. Avatar
      Joseph says:

      Hi Rama,
      quote

      Because, your name sounds Christian, I have a question for you.

      unquote

      what type of mentality is this ? I remember one saying ” Don’t judge the book by its covers ”
      I have asked questions about tamil literature but , you trying to divert the debate between religion ?
      now come to answer your questions:

      Q :Why has there been repeated attempts by Bible compilers to strip women of greatness? Why is it the Christian mind finds it difficult to accept that a woman devotee can be great? Greater than a male devotee?
      A : There are so many chapters and verses bible give divine and respectable status to its woman devotee and the greater example is Mother mary..I can give you many example from bible if you want
      Q:Why does a christian mind try to label a woman devotee as a prostitute (Mary Magdala) or Devadasi (Andal)?
      A : According to the bible Mary magdala was a sinner and posses by evil ,later on evanjalised by jesus Christ. (Mark : 16:9)

      Q :According to your texts, Mother of Jesus conceived him before her marriage with Joseph, would that tantamount to pre-marital sex/prostitution?
      A: As per Christian believes Mother mary conceived by holy spirit not by humans (Luke 1 : 35)

      1. Avatar
        Ramia says:

        Joseph,

        Looks like you are arguing based on a fallacy. Srimathi Jayashree Saranathan has provided so much proof from Tamil sources here ably supported by so many other commentators for all your questions.

        Yet, when you say that Christian ‘belief’ is this , we have to accept ? Do you accept our beliefs ? You are asking for proofs and even with proofs, are you continuously nitpicking ?

        Please dont think that you can hijack other people’s beliefs just by arguing over petty things. If you are seeking knowledge to improve your wisdom, you will find it amply here in the 3 articles.

        It is your Christian, truly following Luke 6:31, respect others beliefs just like you want them to respect yours.

  14. Avatar
    வேந்தன்அரசு says:

    “கொலை ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
    மார்பின் முலை இடைப் போலப் புகின்” என்று பெண்ணாகப் பாடியவர் பெண் அல்லள் நல்லந்துவனார் எனும் ஆண். அதனால் ஆண்கள்பாடியதைச்சுட்டி வைரமுத்துகூற்றை மறுத்தல் பொருந்தலை. பிங்கலந்தை போன்ற பிற்கால இலக்கண நூல்களைச்சுட்டி முற்காலவழக்கத்தை நிறுவதலும் பொருத்தமில்லை,

    1. Avatar
      BSV says:

      நல்லந்துவனார் ஓர் ஆண்; பெண்ணில்லை என்பத்ற்கு சான்றுகள் உளவா?

      1. Avatar
        ஜெயஸ்ரீ சாரநாதன் says:

        அடேடே, நல்லந்துவனாரைப் பற்றியா வேந்தன் அரசு பின்னூட்டம் இட்டார்? எப்படி BSV- யும், வேந்தன் அரசு போலவே கட்டுரையில் உள்ள வரிகளைப் படித்திருக்கிறார்? புரிந்து விட்டது, அதே கண்கள். அதே அறிவு. உங்களது மூன்றாவது பெயரைத் தெரிவித்துக் கொண்டதற்கு நன்றி, விநாயகம் அவர்களே , மன்னிக்கவும், BSV அவர்களே.

        1. Avatar
          BSV says:

          தமிழறிஞர் திருமதி சாரநாதனே கொஞ்சம் சொல்லுங்கள் நல்லுந்தவனார் பெண்ணா? இல்லை ஆணா? சான்றுடன் சொன்னால் நன்று.

    2. Avatar
      ஜெயஸ்ரீ சாரநாதன் says:

      என்ன என்ன? ‘கொலை ஏற்றுக் கோட்டிடை…. ” பாடலை நல்லந்துவனார் பாடினாரா?

      தமிழ்ச் சங்க நூல் என்ன சொல்கிறதென்றும், தெரியாது. மேற்கோளிட்ட நூலை யார் எழுதினார் என்றும் தெரியாது. குறைந்த பட்சம் இந்தக் கட்டுரையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையும் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. பின்னூட்டம் போட வைத்துவிட்டார் வேந்தன் அரசு.

      அடுத்து, பிங்கலந்தை இலக்கண நூலாமே? சொல்கிறார் வேந்தன் அரசு. அது என்னவென்று அவரே கண்டுபிடித்து வரட்டும்.

      அவர் மேலும் சொல்கிறார் // பிற்கால இலக்கண நூல்களைச்சுட்டி முற்காலவழக்கத்தை நிறுவதலும் பொருத்தமில்லை,//

      ஆனால் பிற்கால தேவதாசி மரபை, முற்கால ஆண்டாள் காலக் கட்டத்துக்கு கொண்டு போய் ஏற்றுவது மட்டும் பொருத்தமான செயலோ?

  15. Avatar
    latha ramakrishnan says:

    மதிப்பிற்குரிய ஜோஸப்,

    நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கெல்லாம் மிக விரிவாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது. திண்ணையிலேயே. மீண்டும் இந்த சர்ச்சையை மிக ஆரம்பத்திலிருந்து தொடங்கி என்ன ஆகப்போகிறது? தேவதாசி என்ற பட்டம் ஒரு பெண்ணுக்கு சிறப்பளிப்பதா என்று ஒரு பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள். அப்படித்தான் ஒரு பெண்ணைக் குறிப்பிடுவோம் என்று ஒரு ஆண் சொல்வாரேயானால் அது அவருடைய தனிப்பட்ட தராதரத்தை, ஆணாதிக்கசிந்தனையை வெளிப்படுத்து வதாகவே அமையும். அவ்வளவுதான்.
    தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.

    1. Avatar
      BSV says:

      //தேவதாசி என்ற பட்டம் ஒரு பெண்ணுக்கு சிறப்பளிப்பதா என்று ஒரு பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள்//

      இடம் பொருள் ஏவல் என்று தமிழ் இலக்கணம் பேசுகிறது. தேவதாசி என்பது எக்கால கட்டத்தில் வைத்துப்பார்க்கப்படுகிறது என்பதை உணருங்கள். ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் வைத்தே அவர் பேசுகிறார். இன்றைய பெண்களைப் பற்றி பேசுவதாக கற்பனை பண்ணுகிறீர்களே நியாயமாகுமா? வைரமுத்து சார்பாகப் பேசும் எல்லாரும் சொலவது: தேவதாசி முறை வந்த காலத்தில் அச்சொல் புனிதமாகத்தான் எல்லாராலும் எடுக்கப்பட்டது. அவர்களும் நன்கு நடாத்தப்பட்டார்கள். காலம் செல்லசெல்ல செல்லரித்துப் போகும் பொருள் போல இம்முறை திரிந்து அவர்களும் தேவரடியார்களாக வாழ்க்கை நடத்தும் நிலைவந்த போது இச்சொல்லின் புனிதம் கெட்டது. ஆனால் அக்காலம் மிகவும் பின்னரே. எனவே, தேவதாசி என்ற பட்டம் உனக்கு சிறப்பளிக்கிறதா என்பதை அம்முறை தொடங்கப்பட்ட காலத்தில் வந்த தேவதாசிப் பெண்களையல்லவா கேட்க வேண்டும்?

    2. Avatar
      Joseph says:

      வணக்கம்.எந்த புதிய சர்ச்சையையும் உருவாக்குவது என் நோக்கமல்ல.எதையும் பல முனைகளில் இருந்து சீர் தூக்கி பார்த்தால்தானே உண்மை தெளிவுறும்.

      நீங்கள் ஒரு நல்ல தமிழ் உணர்வாளர் என அறிகிறேன்.அப்படியென்றால் இதற்கு பதில் தாருங்கள்.
      நமது கோவில்களில் ஏன் தமிழ் வழிபாட்டு மொழியாக இல்லை?
      நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரமும்,திருவாசகமும் பாடிய பெரியவர் ஒருவர் ஏன் அடித்து துன்புறுத்தப்பட வேண்டும் ?
      தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது ஏன் இளைய சங்கராச்சாரியார் ஏன் எழுந்து நின்று தமிழுக்கு மரியாதை செலுத்தவில்லை?
      இதையெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும் !

  16. Avatar
    Rama says:

    Joseph, I also have similar questions for you. How is immaculate conception possible? Did Mary Magdalene was the wife/lover of Jesus Christ? ( no harm if it was so, just asking). BTW, there’s no evidence of an HISTORICAL JESUS CHRIST, only mythological. What are your thoughts on that? And don’t you think that original sin is a infantile concept and a religion based on such silly concept can be anything but childish? And the whole Christianity is just a copy pasted cult of Persian Mithraism? Awaiting eagerly for your reply sir.

    1. Avatar
      Joseph says:

      நன்று. நான் ஆண்டாளை பற்றி கேட்ட இரண்டே இரண்டு விஷயங்களுக்காக உங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் என்று எனக்கு புரியவில்லை. நான் தமிழனென்றாலும் நான் ஏற்றுக்கொண்ட மதம் கிறித்துவம். தயவு செய்து பைபிளை நீங்கள் ஒருமுறை திருத்தி எழுத முயல வேண்டாம்.மரிய மதலேனாலையும் இயேசுவையும் கொச்சை படுத்தி பைபிளில் எங்கேயும் இல்லை. இயேசு கிறித்து ஒருவரே பரம்பொருள் என்பதும்,அவர் இருந்ததற்கான பல ஆதாரங்கள் அறிவியல் பூர்வமாகவும் , இறையியல் பூர்வமாகவும் காலங்காலமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.தவிரவும் இது ஒரு இலக்கிய சர்ச்சையாகவே நான் பார்க்கிறேன் .அதனால் தான் கருத்து தெரிவித்தேன்.தயவு செய்து இதை மதங்களுக்கு இடையேயான துவேஷமாக மாற்ற வேண்டாம்!

      1. Avatar
        Ramia says:

        ஏசு கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே படித்ததனால் நீங்கள் இவ்வாறு குறுகிய நோக்குடன் இருக்கிறீர்கள்.
        எங்கள் ஆழ்வார்கள் சிறந்த பரந்த விரிந்த நோக்குடன் உலகை காணுங்கள்.

        அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
        அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
        அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
        அவரவர் விதிவழி அடைய நின்றனரே (திருவாய்மொழி 1-1-5)

        ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் திருவடிகளை அடைவார்கள். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி அவரவர் இறைவனை அடைவார்கள்.

        அத்துணை இறைவடிவங்களும் பரம்பொருளின் பிம்பங்களே ! அவரை முழுதாக நீங்களும் நானும் அறிந்துவிட முடியாது. இதனை உணர்த்தும் சனாதன தர்மம் என்றும் நம் தேசத்தையும் மக்களையும் வழி நடத்தும்.

  17. Avatar
    Rama says:

    BSV, I thought that you swore that you would not reply to questions posted in English ? Of course you can take yet another Avatar in the name of Joseph and answer the questions, sort of devil’s advocate ( oops, sorry. You being a crypto Christian, I don’t want to associate you with devils, creepy aren’t they?). BTW, where were you when Islamic mob ran riots during Danish cartoons and during Taslima’s episode, you the warrior for the tolerant mob? Just wondering.

  18. Avatar
    smitha says:

    என்னிடம் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்

    BSV,

    You will surely have an answer, bcos u are a pseudo secularist who does not have the guts to criticize any other religion except Hinduism.

    Frankly, are you not ashamed to be a stooge for such religions?

    1. Avatar
      BSV says:

      நழுவ வேண்டாம். முதலில் உங்கள் கேள்விகளை என்னிடம் – தமிழில் மட்டும் – வையுங்கள். என்ன பதில் சொல்கிறேன் என்று பார்த்துவிட்டு பேசவும். எதையோ கேட்டால் எதையோ சொல்லிவிட்டு நழுவும் பழக்கம் சிரிப்பைத்தருகிறது, காமெடி பண்ணுவ்தற்கு இதுவா இடம்?

  19. Avatar
    Rama says:

    BSV, it is YOU who VOLUNTEERED to answer the questions I posted without any caveats. Now, you will answer if I post the questions only in Tamil. Have you heard of slippery eel?

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *