தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?

This entry is part 1 of 45 in the series 26 பிப்ரவரி 2012


தாகூரின் கீதப் பாமாலை – 1

எங்கு போய் மறைந்தாள் ?


மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

என் ஆத்மாவை நெருங்கிக் குறுக்கிட்டவள் யார்
வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல் ?
மங்கை என்னைக் கடந்து செல்கையில்
மலர்கள் பூத்துக் குலுங்கும் நூற்றுக் கணக்கில் !

 

போவ தெங்கெனப் புகலாது அவள் போனாள்
பாவை இங்கு திரும்பி மீளவும் இல்லை.
கடக்கும் போது ஓரக்கண் ணோட்டம் விட்டாள்
ஏதோ தெரியாத ஒரு பாடலை முணுமுணுத்து
மனத்தில் இது திரையிட வனத்தில் அமர்ந்தேன் !

 

அலையடிப்பு போல் தள்ளப்பட்டு நிலத்தை அடைந்தாள்
தொலைந்து போனது நிலவு அந்த வானிலே !
புன்னகை யோடு அவள் உலவி வந்த பூமியில்
தன் புன்னகை தன்னை விட்டுச் சென்றாள் !
ஓரக் கண்ணில் என்னை அழைப்பதாய் எண்ணினேன்
எங்கே போனாள் ? எங்கு போய்த் தேடுவேன் ?
ஏகாந்தனாய் அமர்ந்தேன் அந்த வேதனை யோடு !

 

மதிமுக நோக்கில் கனவு மாயம் ஓவியம் ஆனது
என் ஆத்மா விலே எங்கோ பூமாலை வீசினாள் !
பூந்தோட்டம் போயவள் ஏதோ சொல்லிச் சென்றாள்
பூக்கள் நறுமணம் மறையும் மிடுக்கொடு அவளுடன்
இச்சை யெழும் நெஞ்சில், கண்கள் மூடும் களிப்பில்
எப்பாதை யில் போனாள் ? எங்கு போய் மறைந்தாள் ?

 

+++++++++++++++++++

பாட்டு : 192 தாகூர் தன் 22 வயதில் எழுதியது (செப்டம்பர் 1881)

+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Tranlated & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] February 23, 2012

Series Navigationஅ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *