தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு

This entry is part 24 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 27
புயல் அடிப்பு


மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முகத்தி லிருந்து அகற்றிப் புயல்
பறக்க விட்டது
புடவைத் துணி நுனியை !
அந்தோ
முகத்திரையும் தங்க வில்லை,
மீண்டும் இழுத்தென்
முகத்தை மூடவும் என்னால்
முடிய வில்லை.
என் நாணம் போனது
என் தன் மானமும் போனது
எனது காப்புடை போனது
பார்த்தாய் நீ இப்போ தென்னை
அத்தகைப் புயலில் சிக்கி
எப்படி என்னை
மரண அரங்கினி லிருந்து
இழுத்து வருகிறேன் என்று ?

திடீரென வானத்தில் மினுமினுப்பு
எழுந்தது !
யாரையோ தேடிப் போவது
யாரது அங்கே ?
மின்னல் வெட்டொளி வீச்சுகள்
என் இருட்டறை உள்ளே
திடுக்கிட வைக்கும் !
பறந்து போகட்டும்
எனது சேமிப்புகள் எல்லாம்
இரவின் விண்வெளி விரிவிலே !
இந்த பயங்கரப் பேரொளியில்
என் ஆத்மா
மணி அடிக்கட்டும்
சொந்தக் குரலில்
எந்தப் பாச பந்தத்திலும்
சிக்கிக் கொள்ளாது !

+++++++++++++++++++++++++
பாட்டு : 323 தாகூர் தன் 50 ஆம் வயதில் (மார்ச் 1912) எழுதி “புயல்” என்ற தலைப்பில் ஒரு பாடலாய் வெளிவந்தது. பின்னால் அது “அரூப் ரதன்” என்னும் நாடகத்தில் சேர்க்கப் பட்டது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 14, 2012

Series Navigationஆத்துல இன்னும் தண்ணி வரல….NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *