மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
எந்தன் பிறவியைக் கூட,
அந்தோ !
உந்தன் கறைபடாக்
கரங்கள்
நிரப்பாது போயினும்
அறிந்து கொள்ளும் என் மனம்
உன் ஒளியும் நிழலும்
என் சிந்தனைப் பின்புலத்தில்
திடீரெனக் காட்சி தரும்
நிலை யற்ற ஓவியங் களை !
கோடையில் நீரிழந்த ஆறானது
கடல் அலை ஏற்றத்தால்
குறுகிய கரைப் பகுதி வழியே
கொடை முழுதும் பெறா விடினும்,
நலிந்த சிற்றோடை ஒன்று
விரைவாய்த் தடம் வைக்கும்
சில நாட்கள் !
தாகத்துக்குத் தண்ணீர்க் கொடை
பேரதிர்ஷ்டமே !
வெட்கும் என் இச்சைக் கைகளில்
கிட்டுகின்ற
சின்னஞ் சிறு பிச்சைப் பண்டம்
மென்மேலும்
பெருகிக் கொண்டே போகும் !
தினம் தினம் நான் சேமித்த
வறுமை யாசகத்தை
வைத்துளேன் பத்திரமாய் !
ஏனெனில்
எனக்கந்த பிச்சைக் கொடை தான்
ஏற்ற தாகும்
இரவுக் கனவு கட்கு !
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 228. 1939 செப்டம்பர் 30 இல் தாகூர் 78 வயதினராய் இருந்த போது மொங்குபுவில் உள்ள தனது இச்சைக் கோடை வசிப்புத் தளமான மைத்ரேவி தேவியின் இல்லத்தில் எழுதப் பட்டது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] January 2, 2014
http://jayabarathan.wordpress.
- அதிர வைக்கும் காணொளி
- விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது
- அகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.
- அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்
- ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1
- மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3
- முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்
- அதிகாரத்தின் துர்வாசனை.
- திண்ணையின் எழுத்துருக்கள்
- வசுந்தரா..
- திண்ணையின் இலக்கியத் தடம் -16
- அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்
- நீங்காத நினைவுகள் – 28
- விடியலை நோக்கி…….
- என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’
- பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…
- டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு
- கவிதை
- பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்
- இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?
- ஒன்றுகூடல்
- புகழ் பெற்ற ஏழைகள் – 40
- தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !
- கேட்ட மற்ற கேள்விகள்
- மருமகளின் மர்மம் -10
- சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14