தீபாவளி

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 13 in the series 30 அக்டோபர் 2022

 

ஆர். வத்ஸலா

 

முறுக்கு சாப்பிட்டால்

கோபித்துக் கொள்கிறது

பல்

இனிப்பு சாப்பிட்டால்

நாக்கு ருசிப்பதற்கு முன்

ஏறிவிடுகிறது

சர்க்கரையின் அளவு

ரத்தத்தில்

கனவில் வந்து பயமுறுத்தக் கூடிய அளவில்

 

பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டாலே

காது பிராது கொடுக்கிறது

 

மூச்சுத் திணறலுக்கு பயந்து

மூடிய ஜன்னல் வழியே

ஒளி பட்டாசை பார்த்தால்

கழுத்து வலிக்கிறது

 

பேரப் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்த

புதுப் புடவை உடுத்தினால்

நடமாட்ட சுதந்திரம் குறைகிறது

 

தினம் தினம் செய்வது போல்

சௌகரியமான பழைய நைட்டி உடுத்தி

சட்னியற்ற இட்லி

சர்க்கரையில்லா காபி

ராகி ரொட்டி

கீரை

மோர்

சாப்பிட்டு

வீட்டினுள் நடைப் பயிற்சி செய்து

இணைதிரை பார்த்து

புலனம் மூழ்கி…

 

வெறும் எண்ணைக் குளி

தீபாவளியாகுமா?

 

Series Navigationவிடியலா ? விரிசலா ?வெற்றிலைத்தட்டில் ஒரு பாக்குவெட்டி
author

Similar Posts

Comments

  1. Avatar
    மதுவந்தி says:

    ஒரு பண்டிகையின் அடையாளங்கள் எதுவுமிலலாமல், எப்படி அதை கொண்டாட்டம் எனச் சொல்வது? பறவை எனச் சொன்னால் பறக்க வேண்டும் என்பது போல, ஒவ்வொரு பண்டிகையும் அதன் தனி அடையாளங்களோடு இருக்கும் போது , அதன் எல்லா அடையாளங்களையும் துறந்தபின் , மிச்சம் என்ன இருக்கும் ? நடைமுறைச் சிக்கலை நகைச் சுவையோடு சொல்கிறது கவிதை. முதலில் சிரிக்க வைத்து, பின் யோசிக்க வைக்கும் கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *