‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்

This entry is part 6 of 41 in the series 8 ஜூலை 2012

 

தமிழ் நாட்டில் காங்கிரஸ் மகாசபை அகலக் கால் பதித்து வளரக் காரணமாயிருந்த மூத்த தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவரான டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மக்கள் அளித்த செல்லப் பெயர் ‘துப்பாக்கி நாயுடு.’ வரதராஜுலு பொதுக் கூட்ட மேடைகளில் பேசுகையில் அடிக்கொருதரம் சுட்டு விரலை நீட்டி, எதிராளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும். இந்த சுவாரசியமான தகவலை வ.ரா.வின் ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்ற நூலிலிருந்து பதிவு செய்திருப்பவர், வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள ஆய்வாளர் பழ. அதியமான் (பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு).
பழ. அதியமான் கையாளும் மொழி அவருடைய மொழி. அதனால்தான் அவருடைய ஆய்வு நூல்கள் வறட்டுத்தனமான அறிவிக்கைப் பலகைகள் போலன்றி சுயமான வசீகரத்துடன் சலிப்பின்றி வாசித்துச் செல்லத் தக்கவையாக அமைந்துவிடுகின்றன. பொதுவாக ஆய்வு நூல்களில் காண அரிதான நகைச்சுவை அவ்வப்போது மெலிதாக இழையோடிச் செல்வதும் பழ. அதியமான் நூல்களின் தனித்தன்மை. அவருடைய அண்மைய நூலான வரதராஜுலு நாயுடு வரலாறு இந்தத் தனித் தன்மையைச் சிறிது கூடுதலாகவே வெளிப்படுத்துகிறது எனலாம். அரிய புகைப்படங்கள், தனிக் கட்டுரைகள், செய்திக் குறிப்புகளுடன் தரமான கட்டமைப்புடன் வெளியாகி யிருப்பது நூலின் தனிச் சிறப்பு.
வரதராஜுலு நாயுடு ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த ஆளுமை. அது முழுமையாக வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து வந்தது பெருங் குறை. அதியமானின் ஆய்வு இந்தக் குறையைப் பெருமளவு தீர்த்து வைத்திருப்பது தமிழ் நாட்டின் அரசியல்-சமூக-பண்பாட்டு தளங்கள் குறித்து ஆர்வம் உள்ளவர்களுக்கு நிச்சயமாக ஆறுதல் அளிக்கிறது. நூலுக்கு அவர் வைத்துள்ள தலைப்பு வரதராஜுலுவைச் சரியாக அறியாதவர்களுக்கு நூலைப் படிப்பதற்கு முன்பே ஒரு தவறான அபிப்பிராயத்தை உருவாக்கி விடலாம் என்பதை அவர் சிறிது யோசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் வரதராஜுலுவுக்கு நண்பர்கள் பலர்! ஏன், ராஜாஜிகூட அவருடைய நெருங்கிய நண்பர்தான்! வரதராஜுலு காங்கிரசிடம் பிணங்கி, கட்சியிலிருந்தே விலகியிருந்த போதும் ராஜாஜி அவர் வீடு தேடிச் சென்று அவர் விரும்பும் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுமாறு வேண்டியதுண்டு. தமிழ் நாட்டில் உப்பு சத்தியாக்கிரகத்தை முன்னின்று நடத்துமாறும் ராஜாஜி அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டதுண்டு.
காந்திஜியே அவரைத் தம் நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்தபோதிலும், காந்திஜியின் அடிப்படைக் கோட்பாடான அஹிம்சையை ஏற்காமலேயே வரதராஜுலு நாயுடு காங்கிரசில் நீடித்து வந்திருக்கிறார். இதையெல்லாம்விட முக்கியம், ஹிந்து மஹா சபையின் தலைவர் விநாயக தாமோதர வீர ஸாவர்க்கர் அவர்களுக்கும் நம்பிக்கைக்குரிய நண்பராக விளங்கியவர்தான் நாயுடு! ஜனசங்கத்தை நிறுவிய பெருமைக் குரிய சியாமா பிரஸாத் முகர்ஜி, ஹிந்து மகா சபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே ஆகியோருடன் கருத்தொருமித்து மனமொத்த நட்பு பூண்டவர், நாயுடு.
ஈ.வே.ரா. அவர்களோ, தமது ‘குடியரசு’ இதழில் வரதராஜுலு புதிய கட்சியைத் தொடங்க முற்படுகையில் தாமும் ஒரு தலைவராக நடமாட வேண்டும் என்பதற்காகவே ஒரு கட்சியை அவர் தொடங்குகிறார் என்று அவரது முயற்சிக்கு உள்நோக்கம் கற்பித்தும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவாறு ஏளனம் செய்தும், இகழ்ந்தும் எழுதி மகிழ்ந்தவர். ‘வரது, வரது’ என்று ‘குடியரசி’ல் அவர் எழுதியது நட்புரிமையால் என்பதைவிட அவரைக் கிண்டல் செய்யவே என்பதை எழுதப்பட்ட தொனியில் இருந்தே எளிதில் கண்டுகொண்டு விட முடியும்.
ஹிந்து மஹா சபையில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக வரதராஜுலுவைப் பாழடைந்த மாளிகையில் வவ்வாலாய்த் தலைகீழாகத் தொங்குபவர் என்று வர்ணித்தவர், ஈ.வே.ரா. ‘தேசியமே பேசி, தேசியத்திற்கே உடல் பொருள் ஆவியையும் தத்தம் செய்கிறவர் என்றும், அதுவே எனது மதம் என்றும் தன்னைப் பற்றித் தானே விளம்பரம் செய்துகொண்டு வந்த தோழர் வரதராஜுலு நாயுடு தான் தலைவராகி மகா சபைப் பிரசாரம் நடத்துகிறார்’ என்று ஹிந்து மகாசபை ஏதோ தேசியத்திற்கு விரோதமானது என்பதுபோலக் குற்றம் சாட்டித் தமது குடியரசில் எழுதியவர், ஈ.வே.ரா. என்னதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டாலும் நட்புக்குரிய ஒருவரை இப்படியா தூற்றுவது? இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியே தமது நூலில் பதிவு செய்துள்ள ஆய்வாளர் பழ. அதியமான், பிராமணர், பிராமணர் அல்லாதார் என்கிற பலவீனப்பட்டுப்போன ஒரு பிணக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதில் சில சமயங்களில் கருத்தொருமை கொண்டார் என்பதற்காகவே வரதராஜுலுவை ஈ.வே.ரா.வின் நண்பர் என முத்திரை குத்த எப்படி மனந் துணிந்தார்?
வரதராஜுலு எந்தச் சந்தர்ப்பத்திலும் தமது ஹிந்துத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தத் தவறியதுமில்லை, அதனைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்ததுமில்லை. தமது ஹிந்துத்துவக் கோட்பாட்டை வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் உரத்துப் பேசியவர்தான், வரதராஜுலு.
“நாயக்கருடன் (ஈ.வே.ரா.) எனக்கு நீண்ட நெருங்கிய நட்பு இருப்பினும், அவருக்கு நான் சொல்லிக் கொள்வேன்: இலங்கையின் ராவணக் காலத்திலிருந்தும், தில்லியின் ஒளரங்கசீப் பிலிருந்தும், ஜின்னா, நாயக்கர்வரை பலம் வாய்ந்த பலரும் ஹிந்து நாட்டை எதிர்த்தனர். பலன் என்ன, இந்த உலகம் அறியும். ஹிந்து மஹா சபைக்கு எதிரான மிரட்டல் எச்சரிக்கை பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் அவர் (ஈ.வே.ரா.) வெளிப்படையாக ஒரு பெரும் இனத்தை அவமானப்படுத்துவதற்கும், வருத்துவதற்காகவும் நான் வருத்தப் படுகிறேன். ஹிந்து நாகரிகத்தின் பழம் பெருமை, உயர்ந்த தன்மைகள் குறித்து இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பலமுறை விவாதித்திருக்கிறேன். ஆனால் எப்போதும் அவரை நம் கலாசாரத்தின் மீதான பெருமையை உணரவைக்க என்னால் முடியவில்லை. அவர் எப்போதும் ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தார். இன்னும் சொன்னால் எல்லா மதத்தின் மீதும் அவற்றின் கலாசாரத்தின் மீதும் அவர் எதிர் கருத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதெல்லாம் ஏனோ முஸ்லிம்களோடு உறவுகொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக நிற்கிறார். இதனால் ஹிந்து இனம் மற்றும் ஹிந்து மகா சபைக்கு எதிராக அவர் தொடுத்திருக்கும் புனிதமற்ற போரை எதிர்க்கும் புனிதக் கடமை எனக்கு உரியதாகிறது. பிராமணருக்கும், பிராமணரல்லாதாருக்கும் இடையில் பொதுவானதாக எதுவும் இல்லையானால் முஸ்லிம்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் இடையில் மட்டும் ஏதாவது பொதுவாக இருக்க முடியுமா என்று ஆச்சர்யப்படுகிறேன். காலம் காலமாகச் சேர்ந்து வந்த அறிவின் பெருக்கத்தில் ஹிந்து கலாசாரம் அடிகொண்டுள்ளது. ஹிந்துக்கள் மகத்தான பழங்காலத்தையும் உறுதியான, பெரிய அகன்ற எதிர்காலத்தையும் கொண்டவர் கள். இந்த மாகாண ஹிந்துக்களை ஒருங்கிணையுமாறும், தார்மிகமான எல்லா வழிகளி லும், நீதிக்கட்சி, மற்றும் முஸ்லிம் லீகின் கோரிக்கைகளை எதிர்க்கவும் அழைக்கிறேன்” என்று மிகவும் கண்ணியமாக ஈ.வே.ரா.வை விமர்சித்தவர், வரதராஜுலு.
பிராமண-பிராமணரல்லாதார் என்ற விவாதம் திராவிட- ஆரிய யுத்தமாக மாற்றப்படுகிறது. இது வரலாற்று அடைப்படை அற்றது. ஹிந்துவை அழிக்க ஹிந்து அல்லாதவர்கள் பயன் படுத்தப்படுகிறார்கள் என்று சுட்டிக் காட்டும் வரதராஜுலு, இன்னொரு இடத்தில் வெளிப் படையாகவே, ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவரான நீதிக் கட்சித் தலைவர் ஸர். ஏ.டி.பன்னீர்செல்வம் ஹிந்துக்களைப் பிளவு படுத்த ஆரியன்-திராவிடன் என்ற புதுக் கொள்கையைக் கண்டுபிடித்துப் பரப்புகிறார் என்று குற்றஞ் சாட்டுகிறார் (சென்னை கோகலே மண்டபத்தில் 1939 ஆகஸ்ட் 29 அன்று நிகழ்த்திய உரை).
“ஹிந்து மதம் சென்னையில் சந்தித்துவரும் மிகப் பெரும் பிரச்சினை பிராமணர்-பிராமணர் அல்லாதார் சச்சரவே. அது இரு தரப்பாருக்கும் நன்மை எதையும் தரவில்லை. ஹிந்து மதத்தின் அழிவை விரும்பும் சில ஹிந்து அல்லாதார் ஹிந்துக்களின் உள்பிரச்சினையான இதை வளர்க்கின்றனர். அரசுப் பணிகளில் பிராமணர் அதிகம் என்ற பிரச்சினை இட ஒதுக்கிட்டுச் சட்டம் வந்தவுடன் குறைந்துவிட்டது. இப்போது வெளியில் தெரியும் பிரச்சினை எதுவுமில்லை” என்று சொல்கிறார், வரதராஜுலு. இத்தனையையும் பதிவு செய்துவிட்டுத்தான் ஹிந்து சமய-சமூகங்களின் பரம வைரியான  பெரியாரின் நண்பர் என்று தமது புத்தகத்துக்குப் பெயரிட்டு வாசகன் மனதில் வரதராஜுலுவைப் பற்றி ஒரு தவறான பிம்பம் உருவாக இடமளிக்கிறார், அதியமான்!
1934-ல் சென்னை ராஜதானி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்த தருணத்தில் ராஜாஜியைப் போலவே நீதிக் கட்சித் தலைவர் பொப்பிலி அரசரும் தமது கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு  அவரைக் கேட்டுக்கொண்டது வரதராஜுலுவின் ஆளுமையைப் புரிந்து கொள்ள உதவும் பதிவு. காங்கிரஸ் கட்சியின் அப்போதைய பூரண சுயராஜ்யக் கோரிக்கையுடன் ஒத்துப்போக இயலாத வரதராஜுலு காங்கிரசிலிருந்து விலகிவிட்டிருந்த தருணம் அது.  அரசியலில் பிராமணரல்லாதாருக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லை என்ற அதிருப்தியினாலும் அன்று காங்கிரஸில் பிராமணர் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருந்தமையாலும் அவருக்கு நீதிக் கட்சியின்பால் அதன் பிராமணர் அல்லாதார் சார்பிற்காக மட்டுமே அனுதாபம் ஏற்பட்டிருந்தது உண்மையே. ஆனால் அவரது ‘தேசிய’ என்பதைவிடவும் ‘ஹிந்துத்துவ’ உள்ளம் நீதிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட ஒப்பவில்லை. சுயேற்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரிடம் தோற்றுப் போனார்.
அன்றைய காலகட்டத்தில் பிராமணர்-பிராமணர் அல்லாதார் வேற்றுமை உணர்வு தமிழ் நாட்டில் ஆழமாகவே வேரூன்றிவிட்டிருந்தது. வாக்காளர்களில் பிராமணரைக் காட்டிலும் பிராமணர் அல்லாதார் எண்ணிக்கை கூடுதலுங் கூட. ஆனாலும் மக்களிடையே பிராமணர் அல்லாதார் என்ற வகுப்புணர்வைக் காட்டிலும் தேசிய உணர்வே மிகுந்திருந்தமையாலும், அன்று காங்கிரஸ் கட்சியின் மீதே தேசிய முத்திரை அழுத்தமாக விழுந்திருந்ததாலும் சுயேற்சையாக நின்ற வரதராஜுலு தோற்க நேர்ந்தது. தமிழ் நாடு காங்கிரஸில் பிராமணர் ஆதிக்கம் என்பது இயல்பாக நிகழ்ந்த ஒரு அம்சமேயன்றி திட்டமிட்டு, சதி செய்து நடந்த முன்னேற்பாடு அல்ல என்பதற்கு இது ஒரு ஆதாரம் என்பதோடு வரதராஜுலு பிராமணர் அல்லாதார் என்கிற வகுப்புணர்வுள்ளவர் அல்லர் என்பதற்கும் சான்றாக அமைந்து விட்டது. ஏனென்றால் நாயுடுவை அவரது சொந்தத் தொகுதியான சேலத்திலேயே வெற்றி கொண்ட செட்டியாரும் பிராமணரல்லாதாராக இருந்த போதிலும் பிராமணர்-பிராமணரல்லாதார் என்கிற பேத உணர்வுள்ளவர் அல்லர்.
உண்மையில் வரதராஜுலு நாயுடு ஈ.வே.ரா. அவர்களைப் போல எதற்கெடுத்தாலும் பிராமணர் மீது குற்றங் காணும் தீவிர பிராமண துவேஷி அல்லர். 1914 ஆம் ஆண்டு நவம்பர் நாலாம் நாள் ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியான அவரது பிராமணர்களுக்கு ஆதரவான கடிதம், ஒரு பிராமணரால்கூட எழுதியிருக்க முடியாது!
“என்.எஸ். என்ற பெயரில் தங்கள் இதழில் எழுதும் ஒரு கனவான் நம் நாட்டில் பொதுவாக நிலவி வரும் பிராமண எதிர்ப்புணர்வு குறித்து எழுதியிருப்பது அக்டோபர் 31 ஆம் நாள் இதழில் வெளியாகியுள்ளது” என்று தொடங்குகிறது, வரதராஜுலுவின் கடிதம்.
“அப்துர் ரஹ்மான் (இன்னொரு வாசகராக இருக்கலாம்) கருத்தும் இதே போல அமைந்திருப்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் இவர் மிகுந்த கவனத்துடன் பிராமணப் புரோகிதர்கர்களது இயல்பின் மீதே குறி வைத்துள்ளார். உலகிலேயே மிகமிகப் புறக் கணிக்கப்பட்ட, எவருக்குமே ஊறு விளைவிக்காத ஒரு ஜீவன் இருக்குமேயானால் அது இந்தியாவில் உள்ள பிராமணப் புரோகிதராகத்தான் இருக்க முடியும்” என்று எழுதுகிறார், வரதராஜுலு.
“பிராமணப் புரோகிதர்கள் எளிமையிலும் எளிய வாழ்க்கை நடத்தி, காலம் முழுவதும் உயர்ந்த நோக்கங்களுக்காகவே பொழுதைச் செலவிட்டவர்கள். இவர்கள் மட்டும் இல்லையெனில், ஹிந்துக்களாகிய நாம் உலகிலேயே உன்னதமான தத்துவ ஞானம் மிக்க முன்னோர்களின் வழித்தோன்றல்கள் என்கிற பிரக்ஞையை இழந்து, இன்றைக்கு பர்மியர்கள் (தமது தொன்மைச் சிறப்பை இழந்து) வாழ்ந்து வருவதைப்போலவே நாமும் இருந்திருப்போம். மூடத்தனமான புரோகிதம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்று கூறுவது முட்டாள்தனம். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இடைவிடாத அந்நியத் தாக்குதல்களுக்கு உள்ளாகியும் தனது தேசிய மரபை இழக்காத ஹிந்து பாரம்பரியதைத் தமது குழந்தைகள் இழந்துவிடுவார்களோ என்கிற நியாயமான அச்சம் காரணமாகவே அவர்கள் காலப் போக்கிலான மாற்றங்களை விரும்பாமல் இருக்கக் கூடும். மற்றபடி தேசிய வழியில் முன்னேற்றம் காண்பதை அவர்கள் ஆதரிப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், பாரிஸ்டர் களாகவும், டாக்டர்களாகவும் விளங்குபவர்கள் பெரும்பாலும் பிராமணப் புரோகிதர்களின் சந்ததியாரே அல்லவா? எனவே நமது புரோகிதர்கள் மீது யோசனையற்ற விமர்சனங்களை யும், வெறுப்புகளையும் வீச வேண்டாமென்று நமது மேற்கத்தியக் கல்வி பயின்ற இந்தியர் களை வேண்டுகிறேன். நம்முடைய பணி அன்பின் அடிப்படையில் அமைய வேண்டுமே யன்றி வெறுப்பின் மீது அல்ல. திருவாளர் ரஹீமைப் போன்றவர்கள் ஒரு மவுல்வியையோ, பாதிரியாரையோ பார்த்தால் அவர்கள் எந்த அளவுக்குக் காலத்திற்கு ஒவ்வாத மனப்போக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். மேற்கத்தியக் கல்வி முறையின் பெறுமானத்தை ஒரு பிராமணப் புரோகிதருக்குப் புரிய வைத்து, ஒப்புக் கொள்ளவும் வைப்பதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனால் ஒரு மவுல்வியையோ, கிறிஸ்தவப் பாதிரியாரையோ ஹிந்து தத்துவஞான மரபை ஒப்புக்கொள்ளச் செய்வதில் பலமுறை தோல்வியே கண்டிருக்கிறேன். பிராமணர்-பிராமணர் அல்லாதார் உணர்வுகளைப் பேசுவது இன்றைக்கு ஒரு ’ஃபாஷனா’கி விட்டிருக்கிறது. நம் நாட்டில், குறிப்பாக நமது மாகாணத்தில் இத்தகைய உணர்வுகள் நிலவுவது அழிவுக்கே அடிகோலும் என்பதுதான் எனது கருத்து. நமது ஒருமித்த முன்னேற்றத்தைக் காணப் பொறாதவர்கள்தான் இப்படி யொரு பேத உணர்வை நமக்குள் புகுத்திவிட்டிருக்கிறார்கள். அதற்கு இணங்க நாமும் நமது வளர்ச்சியைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறோம். பிராமணர் உயர்நிலையை அடைந்தால் அது நல்லதுதான். அவரைப் பிடித்து இழுத்து நமது நிலைக்குத் தள்ளுவது பைத்தியக்காரத்தனம். மாறாக நாமும் அவர் நிலைக்கு உயர முற்படுவதுதான் புத்திசாலித் தனம். அதேசமயம் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாரை உயர் நிலைக்குத் தூக்கி விடும் கடமை உள்ளது. எவரோ சிலர் நம்மை வெறுக்குமாறு அவர்களுக்குத் தவறான புத்திமதி கூறியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் நம்மை நேசிப்பது அவசியம்.”
பிராமணர் அல்லாதார் என்கிற உணர்வுள்ளவர் என்கிற பிம்பம்  வாய்த்துள்ள வரதராஜுலு நாயுடு, நீதிக் கட்சி தோன்றும் முன்பே எழுதியுள்ள கடிதம்தான் இது! நீதிக் கட்சி தோன்றிய பிறகோ, அதன் பிராமணரல்லாதாரின் பிரதிநிதி என்கிற தோற்றத்தைக் குலைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் நாடு காங்கிரஸ் நிறுவிய சென்னை மாகாண சங்கம் என்கிற பிராமணர் அல்லாதாருக்கான அமைப்பில் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்தான் வரதராஜுலு. அந்த அமைப்பில் அப்போது உடனிருந்தவர்தான் ஈ.வே.ரா. அவர்களும்!
‘இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு, பிராமணர் – பிராமணர் அல்லாதார் பிரச்சினை தீர்ந்துவிட்டது. இனி பிராமணருடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று பிற்காலத்தில் வலியுறுத்தியவர், வரதராஜுலு.
‘ஹிந்து கலாசாரம், தொன்மையான ஆழ்ந்த தத்துவம் ஆகியவற்றை நமக்குப் பாதுகாத்துக் கொடுத்திருப்பவர்கள் பிராமணர்களே’ என்றும் அவர் சிறிதும் தயக்கமின்றி எழுதி வந்திருக்கிறார்.
1925-ல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கட்சி ஏற்கவேண்டும் என்ற தீர்மானத்தை ஈ.வே.ரா. வலியுறுத்தியபோது அதை எதிர்த்தவர், வரதராஜுலு.
காங்கிரசிலிருந்து விலகிய வரதராஜுலு நாயுடு, ஹிந்து மகா சபையில் சேர்ந்தது, இயல்பாக நிகழ்ந்த ஒரு வளர்ச்சியேயன்றி திடீர் மனமாற்றம் அல்ல. தமிழ் நாட்டில் தான் வேரூன்றுவதற்கு அவரது வருகை பேருதவியாக இருக்கும் என்பதால் அவரைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுத் தனது முக்கியத் தலைவர்களுள் ஒருவராக வரித்துக் கொண்டது, ஹிந்து மகா சபை. அகில பாரத ஹிந்து மகா சபையின் பொதுச் செயலாள ராக அவரை நியமித்தது.
வரதராஜுலு நாயுடு மிகக் குறுகிய காலமே ஹிந்து மகா சபையில் இருந்த போதிலும் அங்கு அவர் ஆற்றிய பணி ஆவேசம் மிக்கதாகவே இருந்தது. கடைசியாக அவர் சிறை வாசம் அனுபவித்ததும் ஒரு ஹிந்து மகா சபைக்காரர் என்ற முறையில் பாகல்பூரில் தடையை மீறி மகாசபை மாநாட்டில் கலந்துகொண்டதற்காகத்தான். அந்தச் சிறை வாசம் இரண்டு வாரங்கள் போல மட்டுமே நீடித்தது என்றாலும்!
ஹிந்து மகா சபையிலிருந்து வரதராஜுலு நாயுடு விலக நேர்ந்ததுகூடக் கட்சி நிர்வாகம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தானே யன்றி, கொள்கை வேறுபாட்டால் அல்ல. மீண்டும் அவர் காங்கிரஸில் சேர்ந்த பிறகுங்கூட அவரது ஹிந்துத்துவ உணர்வு மறைந்துவிடவில்லை. காங்கிரஸ் மேடைகளில் வரதராஜுலு நிகழ்த்திய உரைகள் ஒரு ஹிந்துத்துவரின் குரலாகவே ஒலித்தன.
தாழ்த்தப்பட்டோரை ஆதி ஹிந்துக்கள் என்று அழைத்தவர், வரதராஜுலு. ஹிந்து குருகுலங்களையும் நடத்தியவர். பாகிஸ்தான் பிரிவினையை வன்மையாகக் கண்டித்து அகண்ட ஹிந்துஸ்தானத்தை வலியுறுத்தியவர். பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்த ஸாவர்க்கரின் புத்தகம் ‘1857 விடுதலைப் போர்’ தமிழில் வெளிவரவும், ரகசியமாய் விநியோகம் செய்யப்படவும் நிதி உதவி வழங்கியவர். வரதராஜுலு நாயுடுவின் இந்தக் கண்ணுக்குப் புலனாகாத மறுபுறத்தை பழ. அதியமான் மனச்சாட்சிக்கு விரோதமின்றி முழுமையாகப் பதிவு செய்துள்ளார் என்றாலும் ஓர் ஆய்வாளருக்கு இருக்கக் கூடாத மனநிலையுடன் தமது ஹிந்துத்துவ எதிர்ப்புணர்வையும் தம் நூலில் பதிவு செய்து விட்டிருக்கிறார்.
எவ்விதச் சார்புமின்றி விவரங்களைப் பதிவு செய்வதுதான் ஓர் ஆய்வாளருக்குரிய எழுத்து தர்மம். ஆய்வின் இறுதியில் சொந்த விருப்பு வெறுப்புகளற்ற விமர்சனமாக அவர் முடிவுரை எழுதலாம். ஆனால் அந்த  விமர்சனமும் தக்க தர்க்க நியாயங்களுடன் அமைய வேண்டும். ஆனால் இதற்கு முரணாக, ஆய்வில் அனுபவம் வாய்ந்த பழ. அதியமான் தமது நூலை எழுதிச் செல்கையில் ஆங்காங்கே ஹிந்துத்துவத்தின் மீது தமக்குள்ள வெறுப்பை விதைத்துக் கொண்டு செல்வது வியப்பூட்டுகிறது.
வ.வே.சு ஐயர் பொறுப்பில் நடந்த சேரன்மாதேவி குருகுல நடைமுறையைக் கண்டித்து வரதராஜுலு நாயுடு ஆர்ப்பரித்து எழுந்ததை அறிந்ததால்தான் (அவருடைய பிரமணர் அல்லாதார் சார்பு நிலைக்காக) அவரது வரலாற்றை ஆய்வு செய்து எழுத முடிவு செய்ததாக வாக்கு மூலம் அளிக்கிறார், பழ. அதியமான். இவ்வளவுக்கும், ‘இந்தப் பாழாய்ப்போன சேரன் மாதேவி குருகுல விவகாரத்தால் அல்லவா பலரையும் இழக்க நேர்ந்தது’ என்று வரதராஜுலுவே ஒருமுறை வருந்த நேரிட்டது. அதையும் அதியமான் பதிவு செய்தே இருக்கிறார். வரதராஜுலு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ சாதனைகள் செய்திருக்க, அவரது மறைவுச் செய்தியைத் தமது விடுதலை நாளிதழில் ‘குருகுலப் போராட்ட வீர்ர் டாக்டர் பி. வரதராஜுலு மறைந்தார்’ என்று அவரது வாழ்கையின் பிரதான அம்சமே பிராமண எதிர்ப்புதான் என்ற எண்ணம் தோன்றுமாறு தலைப்பிட்டு வெளியிட்டார், ஈ.வெ.ரா. இத்தகைய மன அவசத்துடனேயே அதியமானும் இதே நூலில் இன்னொரு இடத்தில் ஒரு ஹிந்து மஹா சபைக்காரரின் வரலாற்றை எழுதத்தான் வேண்டுமா என யோசித்த தமக்கு, ஈ.வே.ரா. அவர்கள், மறைந்த வரதராஜுலு நாயுடுவின் முகத்தை ஆழ்ந்து நோக்கி அவருக்கு விடைகொடுக்கும் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் மனம் நெகிழ்ந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து நூல் எழுத முடிவு செய்யும் உறுதிப்பாடு ஏற்பட்டதாகத் தமது சார்பு நிலையை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ஒரு புகைப்படம்தான் அவரைத் தமது நூலுக்கு ‘பெரியாரின் நண்பர்’ எனத் தோரணம் கட்டத் தூண்டியது போலும்.
ஓர் அனுபவம் மிக்க ஆய்வாளர் இப்படியொரு தீண்டாமைக் கொள்கையை அனுசரிப்பது எந்த அளவுக்குச் சரி என்பதையும் பழ. அதியமான் யோசிக்க வேண்டும்.
[பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு — பழ. அதியமான். பக்கங்கள்: 479 விலை: ரூ. 375/- காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் 629 001]


நன்றி: ஆழம், ஜூலை, 2012 (கிழக்குப் பதிப்பகம், சென்னை 600 014 வெளியிட்டு வரும் மாத இதழ்)


Series Navigation’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20
author

மலர்மன்னன்

Similar Posts

28 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    அரசியல்-சமூகம் என்ற தலைப்பின் கீழ் வர வேண்டிய இக்கட்டுரை கதைகள் என்ற பகுதியில் இடம் பெற நேர்ந்தது எப்படி என்று ஆச்சரியப்படுகிறேன். உலகளாவிய வாசக கவனத்திற்குப் போக வேண்டியது அவசியம் எனக் கருதுவதாலேயே வேறு ஏடுகள் வெளியிடும் எனது எழுத்துகள் சிலவற்றை மறுபிரசுரம் வேண்டித் திண்ணைக்கு அனுப்புகிறேன். இதுவும் சில வாசகர்கள், ’உங்கள் கட்டுரையைத் தவறவிட விரும்பவில்லை, எனவே திண்ணைக்கும் அனுப்புங்கள்’ என்று சொன்னதால்தான். மேலும் பிரசுரமாகும் எல்லாக் கட்டுரைகளையும் மறுபிரசுரத்திற்காகத் திண்ணைக்கு அனுப்புவதுமில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். -மலர்மன்னன்

  2. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    iஇது இன்று நேற்று விஷயம் அல்ல. இரண்டு மூன்று தலைமுறையாக ஒரு ஃபாஸிஸ் நடைமுறை, சித்தாந்தம் ஜனநாயகப் போர்வையில் தமிழகத்தின் எல்லாத் துறைகளையும் வாழ்க்கை நிலைகளையும்மாக்கிரமித்துள்ளது. இதை திராவிட இன உணர்வு, திராவிட எழுச்சி என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. எந்த நிகழ்வையும், சரித்திரத்தையும், நூலையும், மனிதர்களையும் முழுமையாக, எந்தவித முன் தீர்மானித்துக்கொண்டமனச் சாய்வும் இன்றி புரிந்து கொள்வது, பதிவு செய்வது என்பது இல்லாது போய்வருகிறது. ஈ.வே.ரா. எம்.ஜி.ஆர், காமராஜ், ராஜாஜி, பாரதி, பாரதி தாசன், கருணாநிதி என்று எதை யாரை எடுத்துக்கொண்டாலும், அதன் சித்திரம் வர்ணக்க்லவை, கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வமான திராவிட இனப் பார்வையில் தான் தீட்டப்படவேண்டும் என்பது நிலையாகிவிட்டது. வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கையில் பல கட்டங்கள், பல மாற்றங்கள் எதையும் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல், தன் மனச்சாய்வுக்கேற்ப் என்ன வண்ணம் தீட்ட்வேண்டும் என்ற முன் தீர்மானமோ அதற்கேற்ப சம்பவங்களை, பேச்சுக்களைக் கோர்த்து மற்றவர்றைப் புறக்கணிப்பது என்பது மதிவாணனைன் எழுத்தில் மட்டுமல்ல, தமிழ நாட்டின் கல்விக்கூடங்கள், பேராசிரியர் எழுத்து எதிலும் இந்த மனப்பானமையே விரவியுள்ளது. வரராஜுலு நாயுடுவைப் புரிந்து கொள்கிறோமோ இல்லையோ, மதிவாணனைத் தான் நன்கு புரிந்து கொள்கிறோம். ஆராய்ச்சி அல்ல, வாழ்க்கைச் சித்திரம் அல்ல, தமிழ் நாட்டின் கலாசார சின்னங்களாகிவிட்ட கட அவுட், சுவரொட்டிகளின் குணம் தான் இங்கு வாழ்க்கைச் சரித்திரமாக, ஆராய்வுகளாக விரிந்துள்ள்து.

  3. Avatar
    Ramesh says:

    நிறைய விடயங்கள் மலர் மன்னன் ஐயா.. எந்த விடயத்தையும் மறைக்காமல் பதிவு செய்த ஆசிரியருக்கு வணக்கங்கள்..
    வெசா சொன்னது போல அந்த திராவிட பிரேமிற்குள் வரவில்லையென்றால்.. எப்படி விற்பது..சமூக நிதி புண்ணாக்கு ஓளி தலையில் சுற்ற வேண்டாமா ?

    அது சரி,. பெரியாரின் (ஈவேரா )பித்தலாட்டங்களை பிட்டு பிட்டு வைக்கும் ஐயா மலர் மன்னன், அண்ணாவிற்கு மட்டும் சாமரம் வீசுவார்?

  4. Avatar
    மலர்மன்னன் says:

    //ஐயா மலர் மன்னன், அண்ணாவிற்கு மட்டும் சாமரம் வீசுவார்?//

    ஏனென்றால் ஈவேரா வுக்கு வேட்டு வைத்தவர் அண்ணா!

  5. Avatar
    puthiyamaadhavi says:

    அப்பா மலர்மன்னன் அவர்களுக்கு,
    நீங்கள் எழுதியிருக்கும் இப்புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே நீங்கள் எழுதியதை வைத்துக்கொண்டு
    இக்கருத்தை எழுதுகிறேன் என்பதை முதலில்ன் தெரிவித்துக் கொள்கிறேன். வரதராஜூலு நாயுடு அவர்களைப் பற்றிய புத்தகத்திற்கு “பெரியாரின் நண்பர்” என்ற தலைப்பிட்டிருப்பதை அதிகமாக விமர்சனத்திற்குள்ளாக்கி இருக்கின்றீர்கள். அந்த தலைப்பு காரணமாகவே வாசகனுக்குப் புத்தகத்தை வாசிக்கும் முன் தவறான பிம்பம் ஏற்பட்டுவிடுவதாக அக்கறைப்பட்டிருக்கின்றீர்கள். எனக்கு சில சந்தேகங்கள்:

    > நண்பர்கள் என்றால் கட்டாயம் கருத்தொருமித்தவர்களாக மட்டுமே தான் இருந்தாக வேண்டுமா என்ன?
    >உங்கள் மொழியில் சொல்லப்போனால் ஒரு ஹிந்துத்துவருக்கு
    (அது என்ன ஹிந்துத்துவர் என்பதை பிறொதொரு சமயம் நாம் விவாதிக்கலாம் அப்பா) பெரியார் நண்பராக அடையாளம் காட்டப்படுவது இமாலயத்தவறா? இன்னும் சொல்லப்போனால்,
    வரதராஜூலு நாயுடு அவர்களைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்ட என் போன்றவர்களுக்கு இத்தலைப்பு “வாவ், இஸ் இட்?!! ” என்ற பிரமிப்பை உண்டாக்கி புத்தகத்தை வாசித்தே ஆகவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. இத்தலைப்பின் வெற்றி இது. தலைப்பு கொடுப்பதில் இதுவும் மிகச்சிறந்த உத்தி தான் என்று தான் பதிப்புத்துறை சொல்கிறது.

    > ஒரு காலக்கட்டத்தில் மிகக்கடுமையான தாக்குதல் விமர்சனங்களை வைத்தவர்கள் கருத்துரீதியான தாக்குதல்களைத்தான் முன்வைத்தார்களே தவிர தனிமனித தாக்குதல்களையோ எதிர்த்து விமர்சனம் செய்பவனை இல்லாம்னல் ஆக்கிவிடும் இழிநிலையிலோ இல்லை.
    இப்படியாக எத்தனையோ அர்த்தங்களை பெரியாரின் நண்பர்
    சொல்லாமல் சொல்லத்தான் செய்கிறது.

    > நாளை ஒரு நாள் மலர்மன்னனின் மகள் என்ற தலைப்பில் என்னைப் பற்றி ஒரு கட்டுரையோ அல்லது புதியமாதவியின் அப்பா என்ற தலைப்பில் உங்களைப் பற்றி ஒரு கட்டுரையோ வந்தால்………. அதை எப்படி புரிந்து கொள்ள வெண்டும்?

    >ராஜாஜியும் பெரியாரும் உயிருடன் இருக்கும்போதே நண்பர்கள் என்ற தலைப்பில் வந்த புகைப்படங்கள், கட்டுரைகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவருமோ அவர்களைச் சார்ந்தவர்களோ இதை விமர்சனப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. எனவே பெரியார் மீது உங்களுக்கிருக்கும் ஹிந்துத்துவ கோபம் பெரியாரின் நண்பர் என்று யாரையும் சொல்வது வரைப் பாய்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

    உங்களன்பு மகள்.

  6. Avatar
    puthiyamaadhavi says:

    மதிப்பிற்குரிய ரமேஷ் அவர்களுக்கு,
    வணக்கம்.
    திராவிட பிரேமிற்குள் வரவில்லை என்றால் எப்படி விற்பது?
    என்று ஒரு கேள்வியை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் கேட்டால் சரியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் இதைக் கேட்கிறேன்.
    “அப்படியா…??????”
    எனக்கு பதிப்புத்துறையிலிருந்தும் புத்தகக்கண்காட்சி புத்தக விற்பனை பட்டியல் மூலமாகவும் கிடைத்திருக்கும் புள்ளிவிவரங்கள் தவறாக இருக்கலாம்!!!!

    அன்புடன்,

    புதியமாதவி

  7. Avatar
    Paramasivam says:

    What Malarmannan tells about Anna is totally wrong and unacceptable.On many occasions,I have provided facts and figures to prove the existence of Brahminism in TN.He will not find time to refute my charges.He should not tell controversial opinions and run away from feedbacks.

  8. Avatar
    Ramesh says:

    ஐயா..உங்களின் கற்பனைச்சிறகுகள்.. விரிகிறதே ஐயா..அப்படி நீங்கள் நினைக்கீறீர்கள் மலர் மன்னன் ஐய்யா…? எதை வைத்து அப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்று விரிவாக வியாக்கியானம் செய்தால் நல்ம். பெரியாரின் படத்தோடு அண்ணாவின் படத்தை போட்டல்லவா.. பட்டை கிளப்புகிறார்கள். அண்ணா அரசியலுக்கு வந்ததால் செய்ய வேண்டிய கம்பரைமைஸீகளை வேட்டு என்கிறீர்களா ? அதை ஓட்டு வேட்டையாடும் எந்த அரசியல்வாதியும் வெட்கமின்றி செய்யவேண்டிய காரியம் தானே ? எந்ததெந்த செயல்களால் வேட்டு வைத்தார், கருத்து ரீதியில் எங்கு, எந்தெந்த விடயங்களில் தள்ளி நின்றார் என்று தெரியப்படுத்தினால் நன்று. கண்ணீர் துளிகள் என்று சொன்னதெல்லாம் அப்போதய பதவி சண்டையினால் வந்த வார்த்தை பிரயோகங்கள் என்பது எனது எண்ணம். ஈவேரா ஜனநாயகத்திற்கு எதிரானவர், அண்ணா ஜனநாயகவாதி, etc. etc.. இது போன்ற வேறுபாடுகள் விடுத்து, குறிப்பாய் சனாதன தருமங்களின் மீது ஈவேரா தொடுத்த, மூடநம்பிக்கை மீது செய்யப்பட்ட குற்றசாட்டுகள் மீது, இந்து மதத்தின் மீது செய்யப்பட்ட அவதூறுகள் மீது கொட்டப்பட்ட அபவாதங்களில் எதை அண்ணா வெளிப்படையாய் மறுத்திருக்கிறார்.. அண்ணாதுரை ஒரு அரசியலுக்காக தோளில் துண்டு போட்ட காரியவாதி.. என்கிற புரிதலை உங்களின் விசாலல.. அறிவுச் சூரியன் தெளிய வைத்தால் உத்தமம்..

  9. Avatar
    மலர்மன்னன் says:

    மாதவி, கருத்து வேறுபாடு நட்புக்குக் குறுக்கே வருவதல்ல. ஆனால் ஒரு நண்பரின் செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது நட்புக்கு அடையாளம் அல்ல. ஈ வே ரா, நாயுடுவின் செயல்களுக்கு அதைத்தான் செய்தார். விமர்சனம் குற்றச்சாட்டாகிவிடக் கூடாது. ஏளனம், கேலி , கிண்டல் நாகரிகம் அல்ல. இதைக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். நாயுடுவுக்கு ஈ வே ரா வை விட அத்தியந்தமான நண்பர்கள் இருந்திருக்கிறார்களே என்பதையும் நினைவூட்டியிருக்கிறேன். நான் உன்னையோ நீ என்னையோ அவமரியாதையாகவோ ஏளனம் செய்தோ எழுதுவதில்லையே!

    ரமேஷ், அண்ணா தி.க. வில் தளபதியாக இருந்தபோதே ஈரோட்டில் ராமாயண நாடகம் நடக்கவிருந்தபோது மறியலுக்கு ஈ வே ரா ஏற்பாடு செய்ததும் அதை அண்ணா முறியடித்து ராமாயண நாடகம் வெற்றிகரமாக நடைபெற வழி செய்ததும் ஏற்கனவே திண்ணையில் எழுதியுள்ளேன். இதுபோல் இன்னும் பல விஷயங்கள் முன்பே திண்ணையில் எழுதியுள்ளேன். எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவது ஆயாசமாக உள்ளது. பரமசிவம் அவர்களுக்கும் இதுதான் பதில். நுனிப்புல் மேய்கிறவர்கள் எல்லாருமே சிறிது ஆழ்ந்து படித்துவிட்டுக் கருத்துச் சொன்னால் காத்திரமான விவாதம் நடைபெற வாய்ப்பிருக்கும். அடிப்படையில் அண்ணா ஒரு தொழிற்சங்கவாதி. அவரை பாலசுப்பிரமணியம் ஜஸ்டிஸ் கட்சியில் இழுத்துகொண்டுபோய் விட்டிருக்காவிடில் அண்ணாவின் வாழ்க்கைப் பாதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஈ வே ரா – அண்ணா உறவு ஒரு பரஸ்பர செளகரியம்.
    கோபால் ராஜாராம் அண்ணாவை திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் என்று ஓர் அருமையான ஆய்வு செய்திருக்கிறார். முடிந்தால் படித்துப் பாருங்கள். ஏனென்றால் என் எழுத்தின் மீது நான் அண்ணாவின் அபிமானி என்பதாக ஓர் அபிப்ராயம் அழுத்தமாக விழுந்துவிட்டது.

    அண்ணாவை நெருக்கமாக அறிந்தவர்கள் அவருக்கும் ஈ வே ரா வுக்கும் இடையே இருந்த முரணை அறிவார்கள்.

    காந்தி-நேரு உறவை இதற்கு ஓரளவு ஒப்பிடலாம்.
    -மலர்மன்னன்

  10. Avatar
    மலர்மன்னன் says:

    ரமேஷ், பாரதி பங்கேற்ற காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழா 1968-ல் நடைபெற்றபோது அதில் பங்கேற்ற அண்ணா, ஹிந்து சமயம் என்ற பூங்கா வனத்தில் குப்பை கூட்டும் துப்புரவாளனாகத் தம்மை ஏற்குமாறு வேண்டியதை திண்ணையில் எழுதியுள்ளேன். குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் அவருக்கு ஆலயம் எழுப்பும் முயற்சியை குமரி மாவட்டக் கிறிஸ்தவர்கள் லூர்தம்மாள் சைமன் துணையுடன் எதிர்க்க, அதை ஏற்ற காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம் ஓட்டுக்காக வேண்டி விவேகானந்தர் ஆலயம் எழுப்ப அனுமதி மறுத்தார். சுவாமி விவேகானந்தருக்குத் தமிழ் நாட்டில் நினைவாலயம் அமைவது தமிழர்களுக்குப் பெருமை என்று சொல்லி அதற்கு ஆதரவு அளித்தவர் அண்ணா. இவையெல்லாம் நான் முன்பே எழுதிய விஷயங்கள்தாம்!

    அண்ணாவை விமர்சிப்பவனே நானும். நான் அவரது ஆதரவாளன் அல்ல. ஆனால் நிச்சயமாக அவரது அபிமானியே. அவருக்கும் எனக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பை எவ்வளவுதான் எழுதிக் காட்டினாலும் புரிந்துகொள்ள முடியாது. ஒன்று மட்டும் சொல்வேன். ஒருமுறை அவருடன் நெருங்கிப் பழகிவிட்டால் அதன் பிறகு அவரை வெறுக்க இயலாது. அப்படியொரு ஆச்சரியமான மனிதர் அவர்.
    -மலர்மன்னன்

  11. Avatar
    மலர்மன்னன் says:

    பரம சிவம், தமிழ் நாட்டில் அரசியல், சமூக, கலாசார தளங்களில் பிராமண ஆதிக்கம் நிலவியதை நான் என்றுமே மறுத்ததில்லை. அதை ஆதிக்கம் என்பதைவிடத் தாக்கம் என்று அடையாளப் படுத்துவேன். அது இயல்பாக நடந்த ஒரு நிகழ்வேயன்றி சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றப்பபட்டதல்ல. பிராமணர்கள் எல்லா தளங்களிலும் முந்திக்கொண்டார்கள். அதற்காக அவர்கள் மீது குறை சொல்லி என்ன பயன்? இவை பற்றியெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன். எல்லாம் பிரசுரமனவைதாம். அதையெல்லாம் நான் ஒவ்வொருவரிடமும் போய்ப் படித்துக் காட்டிக்கொண்டா இருக்க முடியும்? நீங்கள் மேலோட்டமான படிப்பைக் கொண்டு கேள்வி கேட்பதற்கு பதிலாக சிறிது சிந்தித்த பின் வினா எழுப்பினால் அவசியம் பதில் சொல்ல முயற்சி செய்வேன். பொழுதை விரையம் செய்யும் கேள்விகளுக்கு விடை தர இயலாது. ஏனெனில் எழுதுவது எனக்கு விதிக்கப்பட்ட தொழில். எனது இருத்தலுக்கு எழுதுவதும் படிப்பதும் மிகவும் அவசியம். ஏனெனில் நான் முற்றிலும் எனது அன்றாட உழைப்பையே சார்ந்துள்ளேன். ஆகையால் வெட்டிப் பேச்சில் பொழுதைக் கழிக்க எனக்கு அவகாசம் இல்லை.
    -மலர்மன்னன்

  12. Avatar
    மலர்மன்னன் says:

    //வரதராஜூலு நாயுடு அவர்களைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்ட என் போன்றவர்களுக்கு இத்தலைப்பு “வாவ், இஸ் இட்?!! ” என்ற பிரமிப்பை உண்டாக்கி புத்தகத்தை வாசித்தே ஆகவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.//
    மாதவி, என்னம்மா இது, இதைத்தானே நானும் சொல்லியிருக்கிறேன்? புத்தகம் படிக்குமுன் வாசக மனதில் புத்தகத்தைப்பற்றி ஓர் அபிப்ராயம் விழுந்துவிடும் என்றுதானே எழுதியிருக்கிறேன்? இதை சென்ஸேஷனலிஸம் என்றுதான் சொல்வார்கள். நீ பதிப்புத் துறை உத்தி என்று நியாயப்படுத்தி யிருக்கிறாய். விற்பனையில் மட்டுமே கண் இருந்தால் சரிதான், ஆனால் ஆய்வு நூல்களுக்கு இம்மதிரியான உத்தியைப் பயன்படுத்துவது எனக்கு சரியாகப் படவில்லை. என் காலம் வேறுதானே, அதில் எத்திக்ஸ் என்பதாகச் சில உண்டு. ஆனால் இப்போதெல்லாம் மருத்துவத் தொழில், கல்வி அளித்தல் போன்றவற்றில்கூட அவற்றை அனுசரிக்கத் தேவை இல்லை என்று ஆகிவிட்ட பிறகு பிற துறைகள் பற்றி என்ன சொல்ல?
    -மலர்மன்னன்

  13. Avatar
    மலர்மன்னன் says:

    பரமசிவம், என்னைப் பற்றிய ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டும். எனக்கு முந்தைய திராவிடக் கட்சிகளுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. குறிப்பாக தி மு க வின் முதல் தலைமுறைத் தலைவர்கள் என்னை நன்கு அறிவார்கள். இன்றைக்கு எஞ்சியுள்ள அன்பழகனும் இரா. செழியனும் என்னை அறிவார்கள். அண்ணாவுடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகியவன், அண்ணாவும் என்னை ஒரு பொருட்டாகக் கருதிப் பழகினார் என்பதாலேயே அன்பழகன் இன்றைக்கும் என்னைக் கண்டால் ஆவலுடன் ஓடி வந்து பேசுவார். கருணாநிதியும் என்னை அறிந்தவரே. ஆனால் என்னை விரும்ப மாட்டார். எனினும் பொது நல விஷயமாக நான் ஏதும் வேண்டினால் நான் சொல்வதில் நியாயம் இருக்கும் என நம்பி அதைத் தட்டாமல் செய்து விடுவார். இவ்வாறு ஒருமுறை அல்ல, பலமுறை செய்துள்ளார். இன்றைக்கும் நான் தி.மு.க.வில் இருக்க வேண்டும் என உள்ளூர விரும்புபவர்தான் அவர். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்!அண்ணா என்னிடம் மிகவும் அந்நியோன்யமாகப் பழகியதைப் பார்த்ததாலேயே எம் ஜி ஆரும் என்னை மிகவும் மதித்தார், விரும்பினார், பொது நலன் கருதி நான் கேட்ட பலவற்றை எவ்விதத் தயக்கமும் இன்றி முழு நம்பிக்கை வைத்துச் செய்தார். அவரது கட்சியில் நான் சேர வேண்டும் எனப் பெரிதும் விரும்பினார். இவர்களின் அணுக்கத்தை நான் என்றுமே எனது சுய நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டதில்லை. ஒருமுறை என் ஜி ஆர் நான் கேட்காமலே எனக்கு அதிருஷ்டப் பரிசுபோல சென்னை பெசண்ட் நகரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு அளித்தார். அதிகாரிகள் பணம் எதுவும் வேண்டாம் வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டாலே போதும் என்றார்கள். வீடு தேடி வந்து சாவியை வற்புறுத்திக் கொடுத்துவிட்டுப் போனார்கள். எம் ஜி ஆர் எனக்கு கலைமாமணி விருது தருவதாகச் சொன்னபோது அதை ஏற்க மறுத்து விட்டதால் என் மீது மிகவும் வருத்தம் கொண்டார். என்னை அகங்காரம் மிக்கவன் என்றெல்லாம் விமர்சித்தார். எனவேதான் அவர் கொடுத்த வீட்டை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டேன். ஆனால் நான் எனது சக்திக்குத் தகுந்தாற்போல பல தவணைகளில் அதற்குரிய பணம் செலுத்தி முடித்தேன். ஆனால் இப்போது அந்த வீடு என் வசம் இல்லை! எவர் சலுகையும் உனக்கு வேண்டாம் மகனே என்று பராசக்தி சொல்லிவிட்டாள்!
    -மலர்மன்னன்

  14. Avatar
    Paramasivam says:

    I have not asked questions after a hollow reading.When I have given facts and figures especially in the Archagar issue,how Malarmannan evaded reply?Every reader of Thinnai knows it.Preventing other caste people from becoming Archagars by filing a suit in SC is a matter of usual course,according to Malarmannan.Discriminating on the basis of birth while distributing Prasadam in Kanchi temple is a matter of usual course by the Brahmins,according to him.Giving wrong intrepretation for Naanmanikadigai by saying Brahmins are the superior people by birth by Dinamani is usual course and not with a motive according to him.If any body questions him,he will paint the questioner as a person with a shallow knowledge.There is no use in admiring Anna,at least try to follow him in the matter of not hurting others.Just name dropping will not be useful.Everybody is engaged in some occupation for their livelihood.Do not unnecessarily paint people as idlers.Face the questions logically.Otherwise,do not touch controversial subjects since you are not able to handle such issues.

  15. Avatar
    மலர்மன்னன் says:

    You are very funny Mr Paramasivam. If somebody goes to court on some issues, how can you expect the whole community answerable for that? If Kanchi Mutt follows certain formailities in its temple how can the whole community be responsible for that? Also I am NOT sure how far your statement is correct in this matter. And if Dinamani writes something, how come I am to explain that? I don’t even know what has come in that! Should I take everything at your face value? I am NOT interested in name dropping but you have made me to do so by saying I am totally wrong in my reference to Anna. The best I can suggest you is:
    1. File a counter at the SC if the case regarding archakas is pending there. You can argue no discrimination is permissible under the Constitution. The SC will summarily reject your counter stating it is purely a religious matter, as it is related to temple formalities of a particular religion and that it is not a social issue.
    2. Fight with Kanchi temple authorities if you find any discrimination. You claim you are a devout Hindu and demand explanation.
    3. Write to the Dinamani Editor asking for clarifications for what you have read in it.
    I am answerable only for what I write and that too to logical questions.
    I regret if I have anyway offended you.
    You have also made me to write in English since I had a feeling that you understand English better, as you are always writing in English.
    I apologise to Thinnai Editorial for writing in English.
    -Malarmannan

    1. Avatar
      Kavya says:

      No.1, 2 and 3 can be done by Malarmannan himself if he feels the case filed by a group of Tamil brahmins against Govt schme on archakas is wrong and will be against Hinduism. Malarmannan is interested in the expansion of Hindu religion. Why cant he file a counter against the Brhamins? Why shd only Paramasivam feel offended by the court going Brahmins? Why not Malarmannan?

  16. Avatar
    Paramasivam says:

    According to Malarmannan,every one who is affected by the superiority complex of Brahmins should go to court.Lot of people had reservations against allotment of 2G on first-come-first served basis.Have all of them filed suit against Central Govt.In his review on the book on Varadarajulu Naidu,Malarmannan quotes the opinion of Naidu on the problem of Brahmin-Non Brahmin and lauds Naidu for such opinions.Whether reservation solved the disparity?The Brahmins should not be brought down from the status.Well and good.The problem here is Brahmins are preventing others from attaining their status.When you admire somebody for endorsing your opinion,I am just pointing out the nature of Brahmins even after many centuries.You have advised me to go to SC in the Archagar case.OK.But in the next sentence,you are saying that I will get a negative verdict.This is exactly what I describe as Brahminism.As I said earlier, before writing about any controversial subject,be prepared to reply the feedback by keeping abreast about whatever happening around you by reading newspapers.Every person writing here can not produce documents to prove their arquments.Another way of side tracking the issue is about my writing in English.Is it a sin to write in English?

  17. Avatar
    மலர்மன்னன் says:

    ஆங்கிலத்தில் வரும் இதழ்களுக்குத் தமிழில் எழுதினால் போடுவார்களா? திண்ணை இரு மொழி இதழா? அவ்வாறெனில் சரிதான். இனி ஆங்கிலத்திலேயே கட்டுரைகளும் எழுதலாம் அல்லவா? ஆசிரியர் குழு இதைத் தெளிவு படுத்தினால் நல்லது.
    -மலர்மன்னன்

  18. Avatar
    Ramesh says:

    மலர் மன்னன், ஆங்கிலத்தில் எழுதட்டுமே இதில் என்ன தப்பு.. இரு மொழி கொள்கை இருந்துவிட்டு போகட்டுமே..

    அண்ணாவோடு உங்களுக்கு இருந்த பழக்கம் காரணம் தான் – அவர் மீதான மெல்லிய விமர்சனத்திற்கு காரணமா என்று தெரியவில்லை.. நான் சொன்ன கருத்துக்கள் உங்களை முழுமையாக படித்துவிட்டு சொன்ன கருத்துக்கள் தான். அது நுனிப்புல் இல்லை. விமர்சனப் புத்தகம் டைட்டில் தப்பா வந்ததற்கே சிணுங்குகிற உங்களின் ஆளுமையிலே அந்த பிசகு இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. உங்களின் அனுபவத்திற்கும் வயசிற்கும் நான் தப்பாகவே இருப்பேன் என்றாலும் – it is just thought – அவ்வளவுதான். அண்ணா இந்து மதத்திற்கு இவ்வளவு செய்திருக்கிறார் என்று நீங்கள் சொல்வது வெறும் பத்து இருபது பக்கங்கள் தான். ஆனால் வாழ்நாள் முழுதும் அண்ணா துரை இந்து மதத்திற்கு எதிரான சம்பாஸணையோடு தான் ஓவ்வொரு கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தார்.

    உங்களை எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல சொல்லும் பரமசிவன் – பாவம் – நீங்கள் பிராமண சங்க தலைவர் என்று நினைத்துவிட்டார். சொத்தில் தின்னு தூங்கும் வீரமணிதான் இதுமாதிரி வேலைக்கு லாயக்கு.

    மாதவியின் கருத்துக்கள் அபத்தம்..

    கருத்து வேற்றுமை இருந்தாலும் நண்பர்களாயிருப்பதில் நமக்கென்ன சங்கடம். நாம் பேச் வந்தது.. வெசா சரியாக சொன்னது போல, தமிழகத்தின் மொத்த சொசைட்டியுமே பெரியார் படம் போட்டு தொங்குகிறது.

    முன்னே இருந்தது பிராமண ஆதிக்கம் என்றால், இப்போதிருப்பது பெரியார் ஆதிக்கம். எந்த ஆதிக்கமுமே தவறு தான். பிராமண பாஸை போல பேசுவது, எழுதுவது பழகுவது என்று இருந்த ஒரு காலம் போய், இப்போதிருப்பது சமூக நீதி புண்ணாக்கை முகமுடி போடு என்பது தானே.. இதைத்தான் திராவிட ப்ரேம் என்றேன். அதற்காக விற்பனைபட்டியலா கேட்பது.. சரியான திராவிடக் குஞ்சு தான்..

    இதில் மகள், அப்பா என்கிற பேமிலி ட்ரீயெல்லாம் உங்கள் தனிப்பட்ட இமெயிலில் வைத்து கொள்ளலாமே.. [ உங்கள் உணர்வை புண்படுத்துவதற்காக சொல்லவில்லை.. ஒரு பொது மேடையில் பேசுவதற்கு வெறும் பெயர் சொல்லி அழைத்தல் போதுமே.. ] நான் திராவிட சிசுவாக்கும், அதை மீறியும் ஒரு இந்துத்துவரிடம் கை நீட்டுகிறேன். என் கருத்துக்களை மீறி நட்பு வட்டம் பாராட்டுகிறேன் என்பதையெல்லாம் நிருபீக்க இந்த களம் பயன்படுகிறது என்று நினைக்கிறேன்.

  19. Avatar
    மலர்மன்னன் says:

    ரமேஷ், நீங்கள் சொல்வதில் தவறே இல்லை. ஆனால் 1949 க்குப் பிறகு அண்ணா படிப்படியாக மதம் சம்பந்தமான விமர்சனங்களைக் குறைத்துக்கொண்டு ஒரு கட்டத்தில் அறவே கைவிட்டுவிட்டார். கட்சியை அரசியல் சமுதாய ரீதியில் கொண்டு போகலானார்.
    தமது மன மாற்றத்தை அவர் செயல் மூலமாக வெளிப்படுத்தினார். பிராமணர்களை அவர்களின் ஜாதியைக் குறிப்பிட்டே தமது கட்சியில் சேர வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். முதல்வராக இருந்தபோது பிராமண அதிகாரிகளுக்குப் பக்க பலமாக நின்றார். அவர் ஆட்சிக் காலத்தில் அவரை மனமாரப் பாராட்டாத ஐ ஏ எஸ், ஐ பிஎஸ் அதிகாரிகளே இல்லை! அவர்களில் பிராமணர்களும் அடக்கம்.
    எனது விமரிசனங்களில் சொந்த பலவீனங்களுக்கு இடம் அளிப்பதில்லை. சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதில் அவர் தமது நலன் கருதி ஈ வே ரா ஆதரவாளராக மாறியதாக எழுதியுள்ளேன். ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமை ஏற்கச் செய்ய முயற்சி நடந்தபோது அதற்கு ஆதரவாக இருந்துவிட்டு இறுதி நேரத்தில் ஈவேரா பக்கம் சாய்ந்துவிட்டார் என ஓர் உண்மைத் தகவலைப் பதிவு செய்துள்ளேன். முன்பு எழுதிய தி மு க உருவானது ஏன் என்ற எனது நூலில் (கிழக்குப் பதிப்பக வெளியீடு) சுதந்திர நாள் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன் சொன்ன கருத்தைக் காரணம் சொல்லாமல் திடீரென மாற்றிக் கொண்டு ஈவேராவுக்கு எதிரான கருத்தைச் சொன்னார் என்றும், அண்ணாவைப்பற்றி நகர தூதன் திருமலைசாமி வைத்த குற்றச் சாட்டிற்கு அண்ணா பதில் அளிக்கவில்லை என்பதையும் பதிவு செய்துள்ளேன்.
    இதை வெ.சா.வே தமது கட்டுரையில் குறிப்பிட்டு, அண்ணாவுடனான எனது நெருக்கம் அவரைப் பற்றிய எனது விமர்சனத்தில் குறுக்கிடவில்லை என்று பாராட்டியுள்ளார். வேறொரு கட்டுரையில் அண்ணாவும் ஓர் அரசியல்வாதியே எனவும் குறிப்பிட்டுள்ளேன்.
    எனது விமர்சனங்களைப் பொதுவான கண்ணோட்டப்படி எழுதி வந்திருப்பதாகவே நினைக்கிறேன். எனக்குத் தெரியாமல் எங்கேனும் வழுவியிருப்பேனா என்று தெரியவில்லை.
    பலரையும்போல் நானும் அண்ணாவிடம் ஆரிய மாயை, கம்ப ரசம், தீ பரவட்டும் போன்றவைகளையெல்லாம் ஏன் டிஸ் ஓன் செய்யவில்லை என்று நேரடியாகவே ஒருமுறை தனிப்பட்ட பேச்சில் கேட்டிருக்கிறேன். அண்ணா வெகு சாமர்த்தியமாக அப்படி யரும் கேட்கவில்லையே என்று குறும்பாகச் சிரித்தபடிச் சொன்னார். பிறகு ஐந்து நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டு, நினைவில் இல்லாத அளவுக்கு ஆறிப் போன ஒரு புண்ணைக் கிளறிவிட்டு மருந்திட்டு ஆற்றப் போகிறாயா என்று கேட்டார். இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை. அரசியல்வாதிகளுடன் தனிமையில் எவ்வளவெல்லாமோ பேசுகிறோம், ஆஃப் த ரிகார்டாக. அவற்றை வெளியே சொல்வதில்லை. அது பத்திரிகையாளருக்குரிய தர்மம். அவர்களும் மனம் விட்டுப் பேசுவது அந்த நம்பிக்கையில்தான். காமராஜரும் ஆஃப் த ரிகார்டாக எவ்வளவோ சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் வெளியே சொன்னதில்லை. ஒருமுறை காமராஜர் ஆஃப் த ரிகார்டாக சொன்னதை கவனக் குறைவாக அதிபரிடம் சொல்லப்போய் அது ஆஃப் த ரிகார்டாகச் சொன்னது என்று நான் சொல்லியும் கேளாமல் ஸ்கூப்பாக வெளியிட்டுவிட்டார். இதன் விளைவாக காமராஜரிடம் நான் மிகவும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன். இனிமேல் இந்தப் பக்கமே வராதே என்று துரத்தினார். சுமார் ஒரு வருடம் ஆகியது அவர் மீண்டும் சுமுகமாகப் பேச ஆரம்பிக்க. இதைப் பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்பே கணையாழியில் எழுதியிருக்கிறேன். இப்போதுகூட ஆண்டுகள் பலவாகி விட்டதால்தான் அண்ணாவுடனான அந்தத் தனிப்பட்ட பேச்சை இனி வெளியிடுவதால் பாதகமில்லை எனக் கருதி வெளியிடுகிறேன்.

  20. Avatar
    Paramasivam says:

    Mr.Ramesh,Veeramani is not sleeping.He is not allowing some people to sleep after creating problem for others.When Malarmannan admires Brahmins,I am pointing out their other side.Inspite of pervading Periyaarism,trouble creators are still there.In Bhavan”s journal issue dated 15th July,one Mr.Goswami has stated that Shudras suffered for 6000 years due to legal systems of ancient India like Manushastra,The Arthasastra,Yagnavalkya,Naradasmiriti etc.The treatment meted out to Shudras got better only after India”s independence,according to Mr.Goswami.But,even after tasting power for so many years,Brahmins never changed their mentality.

  21. Avatar
    Ramesh says:

    ஐயா, பரமசிவம் அவர்களே, நான் வீரமணியை சொன்னது, அவருக்கு இருக்கிற ஈ வே ரா சொத்தில் இதெல்லாம் அவர் செயய வேண்டிய வேலை.. மலர் மன்னன் தனது பொருளாதர நிலையை குறிப்பிட்ட பின்னரும் அவர் செய்ய வேண்டிய வேலையாக நீங்கள் சொல்வது.. தவறு என்பதை குறிக்கவே.. I refered. veera mani.. expecting him to do all would be nonsense expectation..

    The point of discussion is ” ARE WE CONTROLLED IN DRAVIDIAN FRAME ? ”

    கோஸ்வாமி சொன்னார், கொங்கணவர் சொன்னார் என்று எதையாவது கொட்டிகீறீர்களே அய்யா.. இந்த 6000 வருட கதைகளை பின்னூட்டமாக போடாமல் ஒரு தனிக்கட்டுரையாய பின்னி பெடலெடுங்கள்.. திண்ணை வேறெதற்கு இருக்கிறது.. உங்களுக்கு பின்னூட்ட இடப்படும்..

    சுகந்திரத்திற்கு பின்பு உயிரோடிருக்கிறோம், முன்னேல்லாம் அடிமையாகவேயிருந்தோம் என்கிற கதையெல்லாம் எவ்வளவு பழசய்யா.. இதைத்தான் நான் திராவிட குஞ்சுகள்.. கீச்சொலி.. என்றும் கிளிப்பிள்ளை சொல்லல் என்றும்.. – just matter of repeating.. – these only i defined as திராவிட ப்ரேம்

    even after tasting power brahmins never changed their mentality – என்னய்யா சொல்ல வருகீறீர்கள் ? இன்னும் சாதி உணர்வோடுதான் இருக்கிறீர்கள்.. அவர்கள் திருந்தவே மாட்டார்கள்.. நம்மை அடிமைப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.. இப்படி ஏதாவ்து ஒரு ஸண்டன்சாய் சொல்லுங்கள். நீங்கள் கண்டிப்பாய் ஒரு கட்டுரையாளராய் வர வாய்ப்புகள் உண்டு.. திண்ணை வேறெதற்கு இருக்கிறது..

    trouble creators are still there – எங்குதானய்யா இல்லை.. சமூக நீதி வெங்காயம் பேசும் பெரியாரிய வெங்காய ஆட்சியில் தலித்துக்களுக்கும் மற்ற ஜாதிகளுக்குமிடையே நடக்கும் சண்டைகள் போல மற்ற மாநிலங்களில் குறைவு.. என்பதை ஓப்பன் விபரம்.. இதற்கும் யாராவது பேஸ்வாமி ?? எழுதிய கட்டுரை இருந்தால் கொடுக்கலாம்..

    ஒரு முக்கியமான மேட்டர்.. பரமசிவம் நீங்கள் சிறந்த கட்டுரையாளராவதற்கு கருத்து எதிரி என்று சொல்பவரிடமும் நல்லுறவு வைத்திருப்பதாய் காட்ட வேண்டும். அது ரொம்ப முக்கியம்.. கருத்துக்களை தாண்டி எங்கள் நட்பு என்று போஸ் கொடுப்பது உங்கள் அறிவு வட்டத்தை ஜொலிக்க செய்யும்..

    எனது சிம்பிளான கேள்வி.. நான் முன்னாலிருந்ததாக சொல்லப்படுகிற பிராமண ஆதிக்கத்தை ஆதரிக்கவில்லை.. அதை சமன்படுத்த எந்த தலைவர் காரியம் செய்திருந்தாலும் பாராட்டக் கூடியதே. அதே போல அதை ஒடுக்கிறேன் பேர்வழி என்று இன்னொரு ஆதிக்கத்திற்கு வழிகோலுகிற எதிர்மறை சிந்தனைகள்.. கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றி எழுபப்படும் எந்த கருத்து வளையமும், பிரேமும் அபாயமானது.. பாத்திரத்திலிருந்து அடுப்பில விழுந்த கதையல்லா இருக்கு..

    இப்போது இருப்பது போலியான, முடை நாற்றம் வீசுகின்ற திராவிட பிரேம்..

    அது அப்படியில்லை, அது தேவைதான் என்று ஏதாவது புள்ளியில் நீங்கள் உங்கள் கட்டுரையை தொடரலாம்.. இல்லை சின்ன சின்னதாய் பின்னூட்டத்தில் ஓடிப்போகலாம்.. வீரமணி மாதிரி..

  22. Avatar
    puthiyamaadhavi says:

    மதிப்பிற்குரிய ரமேஷ் அவர்களுக்கு,
    எங்கள் கருத்துகள் அபத்தம், உங்கள் கருத்துகள் அனைத்தும்
    அதிபுத்திசாலித்தனமானவை! வாழ்த்துகள்.

    திராவிட சிசு, திராவிடக் குஞ்சு என்றெல்லாம் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் அடையாளங்களுக்கு மிகவும் நன்றி.
    நான் கூட நாம் தமிழர் என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பெரியாரியக்கவாதிகளிடம் விவாதித்திருக்கிறேன். அதெல்லாம் எவ்வளவு “அபத்தமானது”
    என்பதை நீங்கள் கொடுத்திருக்கும் இந்த அடையாளங்கள் மிகவும் தெளிவாகவே புரிய வைத்துவிட்டது.

  23. Avatar
    Ramesh says:

    புதிய மாதவிக்கு, சின்ன திருத்தம்.. இந்த கட்டுரையில் நீங்கள் வைத்த கருத்துகள் அபத்தம் என்று தான் சொல்லியிருக்கிறேன்.

    எனது பாயிண்ட் ஆப் ஆர்க்யூமெண்ட் – சுருக்கமாய் – இவ்வளவு தீர்க்கமாய் அவர் தேசியவாதியாய் இருந்தும் அதன் தலைப்பு – பெரியாரின் நண்பன் என்று வைக்கப்பட்டிருக்கிறது என்கிற மலர் மன்னனின் கட்டுரையை தொடர்ந்து – வெசா சொன்ன திராவிட கருத்தாக்கத்தை தொடர்ந்து – நான் டிபைன் செய்த திராவிட ப்ரேம். கருத்துக்கள் விவாதங்கள் என்பதே நாம் பேசிக்கொண்டிருக்கின்ற விசயங்கள்.

    பின்னோட்டதில் எவையெல்லாம் இருக்கலாம். -ஆமாம் அப்படியிருக்கின்றது, அப்படி ஒரு பிரேமே இல்லை, அது தேவையற்றது.. இல்லை அது இன்னும் தேவைதான் என்பதாகத்தானிருக்க வேண்டுமெயொழிய – மற்றவை தேவையில்லை. ( பரமசிவத்தின் நிறைய கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட உறவு முறை அழைத்தல்கள் )

    எனக்கு கூட இதுபோன்ற வாட்ச் டாக் பிரேம்கள்(watch dog frame ) – அது கொஞ்சம் ஸ்லைட்டாகயிருந்தால் தப்பில்லையே என்கிற எண்ணம் உண்டு, சில சமயம். அது அடையாளத் தக்கவைத்தலுக்காக இருக்க வேண்டுமோழிய இன்னொரு பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது..

    ஆனால் விவாதத்தை நீங்கள் கையாண்ட விதத்தின் ஒரு பகுதியாக அதை சொல்லியிருக்கிறேன்.

    நீங்கள் பெரியாரியவாதிகளிடம் நாம் தமிழர் என்று விவாதித்திருக்கிறார்களா ? ஆகா.. என்ன தங்களது கருணை, ? [ .. பிராமணர்களையும் நாம் தமிழர் என்று அடையாளப்ப்டுத்தவேண்டும் என்று நீங்கள் சொல்வதாக பொருள் கொள்கிறேன். இதையொட்டி ஏதாவது கட்டுரை எழுதியிருந்தால் தயவு செய்து பதிப்பிக்கவும் ]

    இந்த வரிசையில் உங்களின் எழுத்துலகு ரிலேட்டிவ மட்டுமின்றி எல்லா பிராமணர்களும் இருக்க வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். எனது சொந்தக்காரர்கள் மட்டும் என்று சொன்னால் அதற்கு மட்டும் ஏதாவது இட ஓதுக்கீடு கொடுத்து பெரியாரிக்க குளத்து மணியும், வீரமணியும் சேர்த்துகொள்ளலாம். அப்படி செய்யாமல் மொத்த சமூகத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்தால் உங்களுக்கும் ஐயா மலர் மன்னனுக்கும் மிகுந்த புண்ணியமாகிபோகும்.

    அம்மா புதிய மாதவி அவர்களே, யாரோ ஒரு ரமேஸ்.. me only – சொன்ன கருத்தை வைத்து – அடையாளங்களை வைத்து – நீங்கள் பெரியாரி வாதியிடம் பேசி எல்லா பிராமணர்களையும் நாம் தமிழராக்க செய்த பெரும் காரியத்தை – நீங்களே அபத்தம் என்று நினைக்க ஆரம்பித்து வீட்டீர்களென்றால்.. ஆகா என்ன உங்கள் மன உறுதி..
    Great Salute – பின்னூட்ட கொடுக்கும் ஒருவரின் கருத்தால் நீங்கள் தெளிவடைந்து மறுபடியும் அவர்கள் தமிழர்கள் அல்ல என்று முடிவெடித்தீர்களானால் – ஆகா உங்களது இரு நாக்கு உங்களுக்கே தெரியவில்லை..

    ஒரு சில நேரங்களில் மட்டும் வருத்தப்பட்டு நீங்கள் ரிகெமெண்ட் செய்ய அவர்கள் என்ன யூக அகதிகளா ? இந்த மனநிலையை நீங்கள் எப்படி பெற்றீர்கள் என்று எண்ணிப்பார்க்க முடியுமா ?

    ஐயோ பாவம், எவ்வளவோ திட்டிட்டோம் இன்னமே திட்டாதீங்கபபா, போதும் என்று சொல்கிற மனநிலையா..
    தன்னை அறிவு ஜீவியாக, இரு உலகத்து தூதுவராக காட்டிக்கொள்கிற மனநிலை விடுத்து வேறென்ன.. ? [ இது உங்களை குறித்து மட்டுமல்ல அம்மா.. நிறைய பேர் இவ்வாறான மனநிலையோடு வேவ்வெறு முகம் காட்டுகிறார்கள்.. I am not doubting your stand. IT is absurd and absoulute shock to know by reading some body comments you have taken other stand. You may have one good brahmin friend.. after talking to him you will take other stand.. If you are doing with these as plan then it is hypocrasy. with out knowing if you do then it is ignorance.. and immaturity. Look back.. I request you not to stop your great work of RE-UNION and accommodating brahmin refugees !!!!.. ]

    மறுபடியும் கருத்தில், ஐயா மலர் மன்னன் சொன்னதை சிலவற்றை ஏற்கிறேன்.. சிலவற்றை மறுக்கிறேன்.. சிலவற்றை pass on with silence since i do not have anything to say – அவரது அநுபவத்திற்கு அவர் பேசும் கருத்துகள் just bounce..
    வெசா சொன்ன கருத்தை வைத்து நான் திராவிட ப்ரேம் என்று சொன்னது சரியா, இல்லையா என்று மட்டும் வாதம் இருந்தால் it would have been nice..

    Here we are arguing instead of content, we discussed our ego and our personality.. Even to the extent i have done it.. which i should not have done it.. once again my attack is not on individual, but the mind set ideology you are working on..

    What is really absurd is, the hypocritical status of yours . Madam, that is stinking.

    ” நான் கூட நாம் தமிழர் என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பெரியாரியக்கவாதிகளிடம் விவாதித்திருக்கிறேன். ”
    Madam, please write in detail about these in thinnai. Are you periyarist ” நான் கூட நாம் தமிழர் என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் ”

    IF so why and what made you to think like these.. Means.. Can you put up in these open space.. ? IF You had already written on these sorry for not browsing it, please let me have link..

    ஏன் அபத்தம் என்றால் அது நான் சொன்ன தலைப்புகளை அது தொடவேயில்லை.. ஏன் இந்த தலைப்பு சரியில்லை என்பதற்கு மலர் மன்னன் ஐயா சொன்ன காரணங்களுக்கு எதிரிடையாக சில நல்ல கருத்துகளாவது பதிவாயிருக்க வேண்டும். அதுவுமில்லை.. பரமசிவத்தின் கருத்துகளும்.. என்ன சொல்ல..

    எனது கருத்துக்களால் உங்களது புனிதப்பணி தடை படக்கூடாது மேடம், தயவு செய்து கட்டுரையில் தீட்டி தள்ளுங்கள்.. தமிழரா இல்லையா என்று குற்றவுணர்வோடு இருக்கிற பாவம் சில / பல குருப்புகள் உங்கள் மீது பெருமதிப்பு கொள்ளும்.. :)_

  24. Avatar
    Paramasivam says:

    Mr Varadharajulu Naidu appreciated Brahmin priests for their simple living and noble thoughts in his letter written to The Hindu in 1914 according to the book under review as per Mr.Malarmannan.If their simple living was true,how come Katherine Mayo,an American lady who visited India in 1930s,wrote many chapters in her book,”Mother India”(published in 1937) to describe the act of Brahmins in subjugating other caste people.According to Mayo,the Brahmins described themselves as “Earthly Gods”.The Non-Brahmins were forced to do whatever were prescribed by Brahmins.”Each Hindu in India pays to the Brahman many times more than he pays to the State.From the day of his birth,to the day of his death,he must be feeding the Earthly God.””In the province of Madras,Brahman is very strong because the might of thousand of years breaks very slowly,and he is as shrewd as a host of demons.He owns the press,he sways the bench,he holds eighty percent of the public offices,and he terrorises the people,especially,the women.” These were the words of Katherine Mayo.

Leave a Reply to Ramesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *