துளி விஷம்

This entry is part 11 of 20 in the series 26 ஜூலை 2015

சத்யானந்தன்

பரிமாற்றங்களின் தராசில்
ஏறுமாறாய் ஏதேனும் மீதம்
இருந்து விடுகிறது

நாட்காட்டியின் தாள்கள்
திரைகளாய்

அபூர்வமாய்
நினைவின் பனிப்
பெட்டகத்தில்
உறைந்து போயிருந்த முகம்
எப்போதோ எதிர்ப்படுகிறது
எந்தத் தழும்பில் அந்தப் பரிச்சயம்
இழையோடுகிறது என்றறிய
வெகுகாலம் பிடிக்கிறது

பகலின் பரிகாச முகங்கள்
இரவில் ரத்தக் காட்டேரிக்
கனவுகளாகின்றன

மீறல்கள்
வம்புச் சண்டைகள்
அதிர்வுகளாய் எடுத்து வைக்கும்
தப்படி ஒவ்வொன்றிலும்
இடறுகின்றன

கடந்து செல்ல
சட்டை நீக்கிய
பாம்பு போல்
ஊர்ந்து செல்ல வேண்டும்

பல்லில் துளி
விஷமும்

Series Navigationஐயம் தீர்த்த பெருமாள்1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *