தொடுவானம் 83. இறை நம்பிக்கை

This entry is part 7 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015
 Vel1Vel2Vel4

பேருந்து நிலையத்திலிருந்து தேவாலயம் செல்லும் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக கடைகள் இருந்தன. பெரிய கடைத்தெரு போன்ற  காட்சி அது. அழகுப் பொருள்களும், அலங்காரப் பொருள்களும், மாதா சிலைகளும் படங்களும், வேதாகம வசனங்களும், கிறிஸ்த்துவ கீதங்களின் குருந்தட்டுகளும், மெழுகுவர்த்திகளும், மணிமாலைகளும், தின்பண்டங்களும் என பலதரப்பட்ட கடைகள் அங்கு இருந்தன.

தேவாலயத்தின் எதிர்புறத்தில் வரிசைவரிசையாக பூக்கடைகள் இருந்தன. அங்கு ஏராளமான மாலைகள் விற்றனர். அங்கும் நீண்ட மெழுகுவர்த்திகள் விற்றனர். வேண்டுதலுக்காக வருபவர்கள் மெழுகுவர்த்திகளும் மாலைகளும் வாங்கிச் செல்கின்றனர்.

தேவாலயத்தின் முன்புற வாசலில் நின்று உள்ளே பார்த்தால் தொலைவில் குழந்தை இயேசுவை அணைத்தபடி அன்னை மரியாளின் பெரிய சிலையைக் காண முடிந்தது. அதற்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலைகள் போடப்பட்டிருந்தன. அருகில் நீண்ட மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருந்தன.

நான் தேவாலயத்தினுள் நுழைந்தேன். அங்குள்ள இருக்கைகளில் பலர் அமர்ந்திருந்தனர். சிலர் தலை சாய்த்து தியானத்தில் இருந்தனர். சிலர் இரு கைகளையும் உயர்த்தியவாறு ஜெபம் செய்த்தனர். சிலரின் உதடுகள் ஓசை வெளிவராமல் வேண்டுதல் செய்தன.

நானும் காலியான ஓர் இடத்தில் அமர்ந்து அந்த பரிசுத்தமான சூழலில் கண்களை மூடினேன். என்னை இங்கு கொண்டுவந்த கடவுளுக்கு நன்றி சொன்னேன் எனக்கு வேண்டிய சகலவிதமான ஆசீர்வாதங்களுக்காவும் மன்றாடினேன்.

எழுந்து பீடம் நோக்கி நடந்தேன். என்னைச் சுற்றிலும் நிறைய பேர் வந்தனர். அவர்கள் கொண்டுவந்த மெழுகுவர்த்திகளை அங்கே இருந்த பெரிய அகலமான தண்டில் கொளுத்தி வைத்தனர். பீடத்திலிருந்து ஒரு உதவியாளர் வந்து அவர்களிடமிருந்த பூ மாலைகளை வாங்கிக்கொண்டு ஆரோக்கிய மாதா வைக்கப்பட்டிருந்த பெரிய சதுர கண்ணாடிப் பெட்டியிடம் சென்று அந்த மாலைகளை  அதில் தொட்டுவிட்டு மீண்டும் திரும்பி வந்து அவர்களிடம் அதைத் தந்தார். அந்த மாலைகள் மாதாவால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்று கருதுகிறார்கள். அவற்றை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். அல்லது மாலைகளை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டுத்  .திரும்பலாம்.அங்கிருந்து வெளியே செல்லும் வழி உள்ளது. அது ஆலயத்தின் இடது பக்கம்.

வலது பக்கத்தில்தான் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு மிக நேர்த்தியாக கன்னாடிப்பெட்டிகளுக்குள் நேர்த்திக்கடன் செலுத்தியவர்களின் காணிக்கைகள் அவர்களுடைய குறிப்புகளுடன் பாதுகக்கப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் உடல் தொடர்புடைய  நோய்கள் பற்றியது. கால் குணமானவர்கள் வெள்ளியிலும் தங்கத்திலும் கால் மாதிரி செய்து வைத்துள்ளனர். அதுமாதிரி விதவிதமான உடல் உறுப்புகளின் வடிவங்களை அங்கு காண முடிந்தது. சில சிக்கலான மருத்துவப் பிரச்னைகள்கூட வேண்டுதலால் இங்கு குணமானதாக அங்கு காணமுடிந்தது. சிலவற்றைப் பார்த்தால் நம்பமுடியாதது போன்றிருந்தது. அறுவைச் சிகிச்சையால் முடியாத சில பிரச்னைகள் இங்கு வேண்டுதலால் குணமாகியுள்ளது வியக்கவைத்தது! இவ்வாறு நூற்றுக்கணக்கானவை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் படித்துப் பார்க்க நேரமாகும். பின்பு நேரம் வாய்க்கும்போது மீதத்தைப் பார்க்கலாம் என்று நான் வெளியேறினேன்.

அங்கிருந்து கடற்கரைக்கு செல்லும் மணல் வீதியில் நடந்து சென்றேன்.  இடது புறத்தில் இருத்த கடைகளில் சிலர் தலைக்கு மொட்டை போட்டுக்கொண்டிருந்தனர். திருப்பதியில் மொட்டை போடுவதுபோல்தான் இருந்தது. வீதியின் இருபுறமும் தரையில் அங்காடிக் கடைகளிலும் வியாபாரம் நடைபெற்றது. சங்குகள, கடல் சிப்பிகள், பாசிமணிகள் போன்றவை அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.  அந்த வீதி கடலில் சென்றுதான் முடிந்தது. கடலின் ஓரத்தில் சிலர் குளித்து மகிழ்ந்தனர்.

மதியம் கரைந்து மாலையாகிவிட்டது. நான் திரும்பி பேருந்து நிலையம் சென்றேன்.  நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் ஏறினேன். நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையம் எதிரிலுள்ள உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு மாயவரம் பேருந்தில் ஏறி தரங்கம்பாடி திரும்பினேன்.

வேளாங்கண்ணி சென்றதை அண்ணியிடம் கூறினேன். அவர், ஏன் சொல்லாமல் போனாய் என்று கேட்டார். தெரிந்திருந்தால் தானும்  வந்திருக்கலாமே என்றார். நான் திட்டம் போட்டு செல்லவில்லை என்றேன். பரவாயில்லை, அடுத்த தடவை போகலாம் என்றார். அவருக்கு வேளாங்கண்ணி மாதாமீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. வீட்டில்கூட மாதா படமும் புனித அந்தோனியார் படமும் மாட்டி வைத்திருப்பார். கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் இதுபோன்று சில புனிதர்களை நம்புவார்கள். சீர்திருத்தச் சபையினர் அப்படி இல்லை. அண்ணி சீர்திருத்தச் சபையைச் சேர்ந்தவராக இருந்தாலும் இதுபோன்றும் நம்பிக்கைக் கொண்டவர்.

இதுபோன்று கடவுள் மீது வெவ்வேறான நம்பிக்கைகள் நிலவினாலும், என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் கடவுள் ஒருவர்தான் என்பதில் நான் திடமாக இருந்தேன். அதைத்தான் ” ஒன்றே குலம், ஒருவனே தேவன். ” என்று கூறினார் திருமூலர்.

திருவள்ளுவர்கூட கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எந்த கடவுளின் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவான ஒரு தேவனின் குணாதிசயங்களைத்தான் குறிப்பிட்டுள்ளார். கடவுள் வாழ்த்தைப் படிப்போர்க்கு அது புரியும். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்று பத்து விதமான குணநலன்களைக் கொண்டவரே அந்த ஒரே கடவுள் என்பதை அவருடைய கடவுள் வாழ்த்தில் வலியிறுத்தியுள்ளார்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?ஸ்பரிஸம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

52 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    வேளாங்கன்னி பற்றிய தங்களது அருமையான பகிர்வு.

    ஒரு 40 வருஷம் முன்னர் சிறுவயதில் வேளாங்கன்னி சென்றிருக்கிறேன்.

    முழுதும் மண்ணின் மணம் கமழும் வழிபாட்டுமுறைகள்.

    உடலுக்குக் கேடு வந்தால் உருவாரம் நேர்ந்து கொண்டு போடுதல் என்பது தமிழகம் முழுதுமான மாரியம்மன் கோவிலில் காணப்படும் வழிபாட்டுமுறை. நேர்ந்து கொண்டு மொட்டை போடுதல் கூட தமிழகத்து மற்றும் தக்ஷிண பாரதத்து வழிபாட்டு முறை. அது அப்படியே இங்கு வேளாங்கன்னியில் கண்டிருக்கிறேன்.

    மண்ணின் மணம் கமழும் க்றைஸ்தவம் மற்றும் இஸ்லாம் வெகுஜன க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுடையது. குறிப்பாக ஏழை எளிய மக்களுடையது. ஏழை எளிய மக்களது வழிபாட்டு முறைகள் ஒரே மாதிரியாக மத வேறுபாடுகள் கூட இல்லாமல் ஹிந்துஸ்தானமளாவி எல்லா ப்ரதேசங்களிலும் காணப்படுவதை நான் அவதானித்து வருகிறேன்.

    ஏதோ ஒரு க்றைஸ்தவ போதகர் சொல்லியதாக ஞாபகம்.

    தேவமைந்தனாகிய ஏசுபிரானிடம் உடல் நலம் சீரடைய முறையிட்டு……… அவர் வழிகாட்டிய படி வழிபாடு செய்து……….. பின்னர் உடல்நலம் சரியான பின்னர்…… அதற்கு நன்றி தெரிவிக்க விழைந்த ஒரு அன்பரிடம்……. ஏசுபிரான்……….. ஐயா / அம்மா ………. நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது எனக்கில்லை. நீங்கள் குணமடைந்ததற்குக் காரணம் உங்களது ஆழ்ந்த நம்பிக்கையின் பாற்பட்ட வழிபாடு என்றாராம்.

    சரியான காண்டக்ஸ்ட் நினைவில் இல்லை.

    இந்த ஏழை எளிய மக்களின் வழிபாடுகள் அதையே நினைவுறுத்துகிறது.

    நம்பினாற் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு என்பது நினைவுக்கு வருகிறது.

    \\ ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் \\

    அழகாக வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள். இதைப்பற்றி தாங்கள் தங்களது தொடரில் தனியாக விரிவாக எழுதினால் நிறைவாக இருக்கும்.

    ****பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்*** என்று சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் கீர்த்தனையில் வரும்…. க்றைஸ்தவத்தில் சொல்லப்படும் இறைவனுடைய தசலக்ஷணாதிகள் எவை என்று சம்சயம் உண்டு. அவை வ்யாசத்தின் இந்த பாகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுளதாக எண்ணுகிறேன். சரியா?

  2. Avatar
    ஷாலி says:

    // இதுபோன்று கடவுள் மீது வெவ்வேறான நம்பிக்கைகள் நிலவினாலும், என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் கடவுள் ஒருவர்தான் என்பதில் நான் திடமாக இருந்தேன். அதைத்தான் ” ஒன்றே குலம், ஒருவனே தேவன். ” என்று கூறினார் திருமூலர்.//

    அன்பு நண்பர் டாக்டர்.ஜான்சன் அவர்களுக்கு! அனைவருக்கும் கடவுள் ஒருவர்தான் என்பதில் நீங்களும் திருமூலரும் திடமாக இருக்கிறீர்கள், ஹரியும் சிவனும் ஒண்ணு…அறியாதவன் வாயில் மண்ணு.. என்று இந்துமத சான்றோர்களும் ஒரு கடவுளைத்தான் நம்புகின்றார்கள்.அல்லாஹ் ஒருவன்தான் என்று இஸ்லாமியரும் திடமாக உள்ளனர்.இன்னும் தெளிவாகச் சொல்வதானால்,ஆதாமிலிருந்து இயேசு கிருஸ்துவரை ஒரே கர்த்தரைத்தான் வணங்கச் சொல்லி அனைத்து தீர்க்கதரிசிகளும் உபதேசம் செய்தார்கள்.
    ஆனால் இன்றைய அனைத்து சபை கிறிஸ்துவர்களும் வணங்கும் கர்த்தர் யார்?

    பழைய ஏற்பாடில் கூறப்படும் “நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற் கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி…”- ஏசாயா 46:9,10
    .
    “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்….”- மத்தேயு 7:21-27.

    புதிய ஏற்ப்பாட்டில் தன்னை கர்த்தர் என அழைக்க வேண்டாம்,தான் கடவுள் அல்ல என்கிறார் இயேசு.கர்த்தராகிய பிதாவை தவிர்த்து,சுதன் எனப்படும் இயேசுவையும்,பரிசுத்த ஆவியையும் மூன்று கடவுளாக திரித்துவ கடவுளையே இன்று கிருஸ்தவர்கள் வணங்குகிறார்கள்.இதற்க்கு டாக்டர் அவர்களின் விளக்கமென்ன?

  3. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். கடவுளின் பத்து குணங்களை வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் கூறியுள்ளதைப் படித்துவிட்டு உடன் ” சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ” என்னும் அழகான கீர்த்தனையை மேல்கோள் காட்டியுள்ள விதம் சிறப்பானது. அந்த கீர்த்தனையை எ. பி.கோமளா அந்த காலத்தில் ஒலிப்பது தனி இனிமை. அதில், ” பத்து லட்சணத்தனுக்கு நித்யனுக்கு மங்கலம் ” என்ற வரிகளைக் கூறி கிறிஸ்துவர் வழிபடும் கடவுளுக்கும் பத்து வகையான குணாதிசயங்கள் உள்ளதா என்றும் தாங்கள் வினவியுள்ளீர்கள். ஆமாம் அப்படிதான் கூறப்படுகிறது. அதை ஆங்கிலத்திலேயே தருகிறேன். அவை வருமாறு: Omniscient, Omnipotent , Omnipresent , Immutable , Holy . Righteous , Sovereign , Love , Merciful , Trinity என்பவை. இவற்றை, அனைத்தும் அறிந்திருக்கிற, எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த, என்றும் மாறாத, புனித, நீதியான, உயர்ந்த, அன்பான,இரக்கமுள்ள, மூவரான என்று பொருள் கொள்ளலாம். நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

    தாங்கள் ஆங்க்லத்தில் உங்களது இறைவனுடைய தசலக்ஷணங்களை விளக்கியதும் சுருக்கமாக தமிழிலும் அதன் சாரத்தை விளக்கியதும் அருமை. இந்த வ்யாசத் தொடரிலோ அல்லது தனியாகவோ இதை விவிலியம் வாயிலாக விளக்கமாக எழுதினீர்களென்றால் க்றைஸ்தவர்களும் க்றைஸ்த்வத்தை அரைகுறையாக அறிந்த என்னைப்போன்றோரும் விபரமாக அறிய முடியும்.

    இஸ்லாத்தில் அல்லாவுடைய விசேஷணாதிகள் 99 என்று கேட்டிருக்கிறேன். மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாஹோர் நகரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த விசேஷணாதிகளை விளக்குமுகமான 99 பெயர்களும் அந்த மைதானத்தின் விளிம்பில் உள்ள மரங்களில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் ……….. காலையில் இங்கு நடைப்பயிற்சி செய்வோர் அதை வாசித்த வண்ணம் நடை பழகுவார்கள் என்றும் கேட்டிருக்கிறேன்.

    அன்பர் ஷாலியின் சுவிசேஷ ப்ரசங்காதிகள் கூட ஏகாக்ரதையுடன் கூடியாதாக இருக்கின்றது. உங்களுடைய ஏகாக்ரதை அப்படி இப்படி பிசகவெல்லாம் வேண்டாம். பிசகியதாக அவர் எண்ணிவிட்டால் கூட ஃபௌல் கார்டு காட்டி விடுவார். உடனேயே விவிலிய வசனாதிகளையும் உதாஹரித்து விடுவார் :-)

    நன்றி

  5. Avatar
    ஷாலி says:

    //கடவுளுக்கும் பத்து வகையான குணாதிசயங்கள் உள்ளதா என்றும் தாங்கள் வினவியுள்ளீர்கள். ஆமாம் அப்படிதான் கூறப்படுகிறது. அதை ஆங்கிலத்திலேயே தருகிறேன். அவை வருமாறு: Omniscient, Omnipotent , Omnipresent , Immutable , Holy . Righteous , Sovereign , Love , Merciful , Trinity என்பவை. இவற்றை, அனைத்தும் அறிந்திருக்கிற, எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த, என்றும் மாறாத, புனித, நீதியான, உயர்ந்த, அன்பான,இரக்கமுள்ள, மூவரான என்று பொருள்….//

    அன்பு நண்பர் டாக்டர்.ஜான்சன் அவர்களின் தொடுவான தொடரில் “இறை நம்பிக்கை” என்ற தலைப்பில்,கடவுளின் குணங்களாக பத்துப் பண்புகளை பட்டியலிட்டுள்ளார்.டாக்டர் அவர்களின் பட்டியல்படி,இந்த பத்துப் பண்புகள் கடவுளாகக் கருதப்படும் இயேசு கிறிஸ்துவுக்கு உள்ளதா?கிருஸ்துவ பெருமக்களின் சமய நம்பிக்கை என்றால் அதை எவரும் மறுக்க முடியாது.ஆனால் இந்த நம்பிக்கை அவர்களின் வேத வெளிப்பாடான பைபிள் வெளிச்சத்தில் முரண்படுகிறதே.

    1.( Omniscient) அனைத்தும் அறிந்திருக்கின்ற பண்பு….இயேசுவுக்கு இல்லை என்று அவரே ஒப்புக்கொள்கிறார்.
    அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.- மார்க்கு 13:32.

    2.( Omnipotent) எல்லாம் வல்ல…எதையும் செய்கின்ற ஆற்றல் இயேசுவுக்கு உண்டா? இல்லை என்று இயேசு கூறுகிறார்.
    ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.. இயேசு மறுபடியும் மகா சத்தமாய்க். கூப்பிட்டு ஆவியை விட்டார்.- மத்தேயு 27:46-51
    தன்னை காப்பாற்றிக்கொள்ளமுடியாமல் ஆவியைவிட்டவர் கடவுளாக முடியுமா?பிறப்பவன்,இறப்பவன் கடவுளாக முடியுமா?

    3.( Omnipresent) எங்கும் நிறைந்த… கடவுள் என்றென்றும் நிலையாக இருக்க வேண்டும். அவருக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது.
    கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார்.- (சங்கீதம் 9:7)

    இயேசு பிறப்பதற்கு முன் இருந்திருக்கவில்லை. மரணத்திற்கும் உயிர்த்தெழுவதற்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர் இருக்கவில்லை. என்றென்றைக்கும் இராததால் இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று அறியலாம்.இப்படி தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம் விரிவஞ்சி நிறுத்திக்கொள்கிறேன்.

    கடவுளின் பத்து பண்புகளில் ஒன்றுகூட இயேசு கிறிஸ்துவுக்கு பைபிள் வெளிச்சத்தில் பொருந்தவில்லை.இப்பிரபஞ்சத்தை படைத்துக்காத்து பரிபாலிக்கும் கடவுள், கர்த்தர் இயேசு கிறிஸ்துதான் என்று இன்னும் நம்புகிறீர்களா? உங்கள் பைபிள் ஆதாரங்களைத் தாருங்கள்.

  6. Avatar
    ஷாலி says:

    //இஸ்லாத்தில் அல்லாவுடைய விசேஷணாதிகள் 99 என்று கேட்டிருக்கிறேன்….//

    திருப்புகழ் திருத்தொண்டர் ஸ்ரீமான் க்ருஷ்ணகுமார் அவர்கள் கேட்டது போன்று, இஸ்லாத்தில் இறைவனுக்கு 99 பண்புகள் உள்ளதாக சில செய்திகள் உள்ளது.பெருவாரியான முஸ்லிம்கள் இதை நம்பவும் செய்கிறார்கள்.ஆனால் நாம் ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

    மனிதனுக்கு மிக அற்பமான அறிவே கொடுக்கப்பட்டுள்ளதாக குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.இந்த அற்பமான அறிவை வைத்து பேரறிவாளனும்,பெரும் ஞானமுள்ளவனுமாகிய இறைவனின் பண்புகள் 99 தான் என்று வரையறுப்பது நிச்சயம் ஒரு அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?

    குர் ஆனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும் ஸமீஉன்-செவியேற்கிறவன், பஸீருன்-பார்க்கிறவன், அலீமுன்-நன்கறிகிறவன். போன்ற அனைத்துப் பண்புகளும் அவனுக்குரிய தகுதிகளுக்கேற்ப அவனுக்கே நிலையானதும்,நிறைவானதும் அழிவில்லாததுமாகும். மனிதனின் பார்வைத்திறன்,கேட்கும்திறன்,அறியும்திறன் அனைத்தும் ஒரு வரம்புக்குட்பட்டது.மனிதனால் எல்லாவற்றையும்,பார்க்கவோ,கேட்கவோ முடியாது.இந்த அற்ப அறிவை வைத்து இப்படித்தான் இறைவனும் உள்ளான் என்று நினைத்து அவனுக்கு வரம்புகட்டக் கூடாது.

    இறைவனின் ஞானத்தை,,பண்புகளை,ஆற்றலை,பேரறிவை அற்ப மனிதனால் ஒருகாலும் அறிய முடியாது.இப்படி முற்றும் அறியமுடியாத விசயத்தில் 99 பண்புகள்தான் என்று இறைவனை ஒரு கட்டுக்குள் வைப்பது சிறுபிள்ளைத்தனமான செயல்.குர்ஆனில் இப்படி சொல்லப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.குர் ஆனில் இப்படி சொல்லப்படவில்லை.நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸ் செய்தி உள்ளது.ஆனாலும் அச்செய்தியின் அறிவிப்பாளர்கள் பலஹீனமாக இருப்பதால் நம்பகத்தன்மை இல்லை.மேலும் குர்ஆனுக்கு இச்செய்தி முரண்படுகிறது.

    இதுபோன்ற ஏராளமான தவறான மூட நம்பிக்கைகள் இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கிறது.இதற்க்கு உரம் போட்டு வளர்ப்பவர்கள்.மூட முல்லாக்கள்.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் ஷாலி அவர்களுக்கு வணக்கம். முதலில் தொடுவானத்தில் கடவுளின் பத்து விதமான குணாதியங்களைப் பற்றி எந்த பின்னணியில் நான் எழுதினேன் என்பதையும் அதைத் தொடர்ந்து நம் நண்பர் திருவாளர் கிருஷ்ணகுமார் அதுபற்றி என்ன வினவினார் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வது நம் மூவருக்கும் நல்லது ( இதிலும் ஓர் சிறப்பு பாருங்கள். நாம் மூவருமே மூன்று மதத்தைச் சேர்ந்தவர்கள்! மதங்கள் நல்லினத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாம் மூவருமே கடவுள் பற்றி தீவிர ஆராய்ச்சியில் இவ்வாறு ஈடுபட்டுள்ளது சிறப்பானது. நமக்கு கடவுளின் கிருபையும் ஆசீர்வாதமும் நிச்சயம் உள்ளது! )

    திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் எந்த ஒரு கடவுளின் பெயரையும் குறிப்பிடாமல், பத்து விதமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரு கடவுளை முன்வைத்துள்ளார் என்று நான் இந்த தொடுவானம் அதிகாரத்தை முடித்தேன். இது பற்றி இன்னும் சொல்லவேண்டுமெனில் வள்ளுவர் வாழ்ந்தது எந்த நூற்றாண்டு என்பது நமக்கு சரிவரத் தெரியாவிட்டாலும், அது அனேகமாக சங்க காலம் என்று நாம் நம்பலாம்.அதாவது கி.மு.3 முதல் கி.பி.3 நூற்றாண்டுவரை வரை எனலாம். அப்போது தமிழகத்து கிராமங்களில் இந்து மதம்தான் இருந்திருக்கவேண்டும். அப்போது இயேசு பற்றி அவர்கள் ஒருவேளைதான் தெரிந்திருக்கலாம். காரணம் இயேசுவின் சீடரான புனித தோமா கேரளாவிற்கு வந்தது கி.பி.52 இல் என்று கூறப்படுகிறது. அவர் கி.பி 72 இல் மைலாப்பூரில் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.அதன்பின் ஒருவேளை வள்ளுவரும் மைலாப்பூரில் வாழ்ந்தவர் என்றால் அவருக்கும் இயேசு பற்றி ஓரளவு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. திருவள்ளுவருக்கு இஸ்லாம் மதம் பற்றியோ, அல்லா பற்றியோ, நபிகள் நாயகம் பற்றியோ இம்மியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அப்போது இஸ்லாம் மதம் உலகில் பிறக்கவே இல்லை. நபிகள் நாயகம்அவர்கள் பிறந்ததே கி.பி. 570 ஆம் ஆண்டில்தான். இஸ்லாம் மதம் இந்தியாவுக்கு வந்தது 7 ஆம் நூற்றாண்டில்தான். ஆகவே நம்முடைய சங்க காலத்தில் இஸ்லாம் மதம் என்பது உலகில் இல்லை!
    அப்போது திராவிட மக்கள் தமிழக கிராமங்களில் தமிழ்க் கடவுள்களான கொற்றவையையும் முருகனையும் வழிபட்டிருப்பார்கள் எனலாம். மற்ற இந்து கடவுள்கள் பின்னர் வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர் என்றும் கூறலாம்..
    ஆகவே வள்ளுவர் தமக்குத் தெரிந்திருந்த எந்தக் கடவுளின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு கடவுளை ( அந்தக் கடவுள் யார் என்பது அந்த கடவுளுக்குதான் தெரியும் ) பத்து விதமான பண்பு நலன்களைக் கூறி சிறப்பு செய்துள்ளார். இதைப் படித்த நண்பர் கிருஷ்ணகுமார் மிகவும் சாதுர்யமாக கிறிஸ்துவர்களின் புகழ்மிக்க கீர்த்தனைகளில் ஒன்றான, ” சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ” என்பதிலுள்ள, ” பத்து லட்சணத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ” என்றுள்ளதையும் குறிப்பிட்டு அந்த பத்து லட்சணங்கள் கிறிஸ்துவத்தில் என்னென்ன என்று கேட்டுள்ளார். நான் அதற்குதான் கிறிஸ்துவர்கள் நம்பும் பத்து வகையான ஆண்டவரின் சிறப்பு அம்சங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். இவை வேதத்தில் எங்கே உள்ளது என்று கேட்பது விதண்டாவாதம் என்றே கருதுகிறேன். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன் .

  8. Avatar
    Mahakavi says:

    Is this account narrating the situation 50 years ago? If so where there compact discs at that time? You mention குருந்தட்டுகளும் (actually குறுந்தட்டு)

  9. Avatar
    Mahakavi says:

    To support my previous comment,
    “The first commercial compact disc was produced on 17 August 1982. It was a recording from 1979 of Claudio Arrau performing Chopin waltzes (Philips 400 025-2). Arrau was invited to the Langenhagen plant to press the start button.
    The first popular music CD produced at the new factory was The Visitors (1981) by ABBA.
    Source: https://en.wikipedia.org/wiki/Compact_disc

  10. Avatar
    ஷாலி says:

    ” சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ” என்பதிலுள்ள, ” பத்து லட்சணத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ” என்றுள்ளதையும் குறிப்பிட்டு அந்த பத்து லட்சணங்கள் கிறிஸ்துவத்தில் என்னென்ன என்று கேட்டுள்ளார். நான் அதற்குதான் கிறிஸ்துவர்கள் நம்பும் பத்து வகையான ஆண்டவரின் சிறப்பு அம்சங்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.”.//– அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன் “-

    அன்பு நண்பர் டாக்டர்.ஜான்சன் அவர்களுக்கு,நான் விதண்டாவாதமாய் ஏதும் எழுதவில்லை.தாங்கள் அப்படி நினைக்க வேண்டாம்.சீர்+இயேசு நாதனுக்கு பத்து லட்சணங்கள் உள்ளதாக நீங்கள் வரிசைப்படுத்திய பண்புகள் அவருக்கு பொருந்தவில்லை.அதேசமயம் பைபிள் பழைய ஏற்பாட்டிலும்,புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடும் கர்த்தர்,பிதா,தேவன் என்ற சொல்லிற்கே பத்து லட்சணங்கள் பொருத்தமாக உள்ளது.

    அந்த கர்த்தர்,பிதா,தேவன்தான் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்தான் எனது கடவுள் என்று தாராளமாக நீங்கள் வணங்குங்கள்.கடவுளின் பத்துத் பண்புகள் இயேசுவுக்கு பைபிள் ஒளியில் பொருந்தவில்லை என்பதே எனது கருத்து.

  11. Avatar
    ஷாலி says:

    //இயேசுவின் சீடரான புனித தோமா கேரளாவிற்கு வந்தது கி.பி.52 இல் என்று கூறப்படுகிறது. அவர் கி.பி 72 இல் மைலாப்பூரில் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.அதன்பின் ஒருவேளை வள்ளுவரும் மைலாப்பூரில் வாழ்ந்தவர் என்றால் அவருக்கும் இயேசு பற்றி ஓரளவு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.//

    நண்பர் டாக்டர்.ஜான்சன் அவர்கள், திருவள்ளுவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் ஒரு கிறிஸ்துவராக இருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறார்.வள்ளுவர் கிறிஸ்துவராக இருப்பது ஆபிரகாமிய மக்களுக்கு சந்தோசமே!

    பாவம்…திருப்புகழ் அடியார் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு மட்டும் இச்செய்தி வருத்ததை தரும்.ஆயினும் க்ருஷ்ணகுமார் அவர்களின்,

    சைவ சமயப் பிரிவினர் திருவள்ளுவரைத் திருவள்ளுவ நாயனார் என்றே அழைக்கின்றனர். திருவள்ளுவரை சைவர் என்றும், திருக்குறளைச் சைவ நூல் என்றும் குறிப்பிடுகின்றனர். திருவாவடுதுறை ஆதீனமான கொரடாச்சேரி வாலையானந்த அடிகள் என்பவர் “திருவள்ளுவர் சித்தாந்த சைவர்” எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதாக எழுதியுள்ளார். சோ. சண்முகம் என்பவர் எழுதிய “திருக்குறளில் சைவ சமயம்” எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகளே அதிகம் நிரம்பியிருக்கின்றன இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு. கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.

    தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.

    ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம்.

    திருவள்ளுவர் கூறும் எண்குணத்தான் பண்புகளாவது சீரேசு நாதனுக்கு உள்ளதா என்றால் இல்லை என்பதே பதில்

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    இது என்ன குழப்பமோதி குழப்பம்.

    க்றைஸ்தவ இறையியல் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

    வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களது கீர்த்தனையில் **பத்துலக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்** என்ற சரணத்திற்கு முற்பட்டதான

    பல்லவி………….. சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம்.

    பல்லவியில் பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனுடைய ப்ரதாபங்களே சரணத்தில் பாடப்படுவது மரபு.

    அதனையொட்டி ரெவரெண்டு வேதநாயகம் சாஸ்திரியார் தேவமைந்தன் ஏசுபிரானைப் பற்றித் தான் அந்தப் பத்து லக்ஷணங்களைச் சொல்லியிருக்க முடியும் என்று புரிகிறது.

    ஜான், மார்க், லூக்கா மற்றும் மத்தேயு இவர்களது சுவிசேஷங்களில் சொல்லப்படும் விஷயங்கள் இந்த பத்து லக்ஷணங்களை ஏசுபிரான் சம்பந்தமாக விவரிக்கிறதா என்பது…. அந்நூல்களை வாசித்தறிந்தவர் குறிப்பிட்ட பகுதிகளை நிகழ்வுகளை உதாஹரித்து நிர்த்தாரணம் செய்யலாம் / மறுக்கலாம். ரெவரெண்டு சாஸ்திரியார் அவர்கள் க்றைஸ்தவ இறையியலில் பயிற்சி பெற்றவர் அல்லர் என்று நம்ப முகாந்தரமும் இல்லையே.

    …………….

    புனித தோமையர் ஹிந்துஸ்தானத்துக்கு வந்ததில்லை என்று நான் வாசித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது இந்த வ்யாசத்தின் பேசுபொருள் இல்லை. மேலும் வாடிகனும் இந்த செய்தியை நம்பவில்லை என்று பி பி ஸி / ஹிஸ்டரி சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த நினைவும் இருக்கிறது. இது சரித்ரம் சார்ந்த விஷயம். அள்ளித் தெளித்த கோலமாக இல்லாமல் தனியாக விசாரிக்கப்படுதலில் ஒரு முழுமை இருக்கும்.

    ……………….

    பள்ளிக்கூடத்தில் வாசித்த போது திருவள்ளுவரின் விபூதி அணிந்த சித்திரத்தையே பார்த்து அது மனதில் பதிந்து விட்டது. தர்மார்த்த காமம் எனும் த்ரிவர்க்கத்தைச் (அறம் பொருள் இன்பம் எனும் முப்பால்) சொல்லும் திருக்குறள் உயர்ந்த வைதிக தர்ம சாஸ்த்ரம். திருக்குறளுடைய உரைகளில் அதிப்ராபல்யமான பரிமேலழகரின் உரையும் அதை அப்படியே படம்பிடித்துக்கொடுக்கிறது. தர்ம சாஸ்த்ர நுணுக்கங்களை எளிமையாக விளக்க காஞ்சி மஹாஸ்வாமிகள் திருக்குறளையே உதாஹரிப்பதும் வழக்கம்.

    ஏனைய உரைகள் ……….. இதற்கு மாற்றுக் கருத்துக்களையும் சொல்கிறது என்றும் அறிவேன்.

    …………….

    அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன், இந்த பத்து லக்ஷணங்களை விவிலியம் வாயிலாக விஸ்தாரமாக நீங்கள் விவரிக்க முற்பட வேண்டும் என்பது பகவத் சங்கல்பமோ என்னவோ. முயற்சி செய்யலாமே. முயற்சி திருவினையாக்கும்.

    1. Avatar
      BS says:

      ரெவரென்ட் என்று பேர் ஏன் அப்போ அவருக்கு?
      இறையியல் பயிற்சி பெற்றவர்களைத்தான் அப்படி அழைக்கிறார்கள்.

  13. Avatar
    Dr.G.Johnson says:

    Dear Mr.Mahakavi,Thank you for reading Thoduvanam and pointing out a mistake that has been overlooked while writing. It is true there were no compact disks 50 years ago. Thank you also for your information on the first commercial compact disc. Sorry for the mistake. With Regards. Dr.G.Johnson.

  14. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் ஷாலி அவர்கள் கடவுளுக்கு உரிய பத்து விதமான அம்சங்கள் குறித்து திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி வருகிறார். நானும் அவருக்கு திரும்ப திரும்ப அதையே சொல்கிறேன். இது கடவுளின் அம்சங்கள் குறித்த பகுதி அல்ல. நான் எழுதிவரும் தொடுவானம் தொடரில் வேளாங்கண்ணி மாதா கோவில் சென்றது குறித்து எழுதும் வேளையில் வள்ளுவரின் கடவுள் வாழ்த்தைக் கூறி அதில் அவர் எந்தவொரு கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறியதோடு, அவர் வாழ்த்தியுள்ள ஒரே கடவுளுக்கு பத்து விதமான குணாதிசயங்களைக் கூறியுள்ளார் என்றுதான் சொன்னேன். அதன்பின்பு நண்பர் கிரிஷ்ணகுமார் அந்த பத்து குணங்கள் பற்றி ” சீரேசு நாதருக்கு ஜெய மங்களம் ” என்ற வேதநாயக சாஸ்திரியார் எழுதிய புகழ்பெற்ற கீத்தனையிலும் பாடப்படுகிறது என்று எழுதி அவை என்னென்ன என்று கேட்டார். நானும் அதற்கு பத்து விதமானவற்றை வரிசைப் படுத்தினேன். உடனே ஷாலி அவர்கள அந்த பண்புகள் அனைத்தும் ஏசுவுக்குப் பொருந்தாது என்று கூறுவதோடு அவை அனைத்தும் ” ஆபிரகாமிய கடவுளான ” பிதாவுக்கே உரியன என்கிறார். அவர் அப்படிக் கூறியதில் எனக்கு மகிழ்ச்சியே. காரணம் அந்த பிதாவும்,கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே என்று கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர்.இதைப் பற்றி விவாதிக்கும் களம் இதுவல்ல என்பதையையும் நினைவூட்டிக்கொண்டு கடவுளைப் பற்றிய விவாதத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வோம் என்றும் கூறிக்கொள்கிறேன். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  15. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் கிர்ஷ்ணகுமார் அவர்களே, திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் கடவுளின் பத்து அம்சங்களைக் கூறியுள்ளதை நான் எடுத்துரைத்தேன்.இவ்வாறேதான் வேதநாயகம் சாஸ்திரியாரும் இயேசுவுக்கும் பத்து சிறப்பு அம்சங்கள் உள்ளதென்று கீர்த்தனையில் கூறியுள்ளார். நீங்கள் அவை பற்றி புதிய, பழைய ஏற்பாடுகளில் கண்டுபிடித்து ஆதாரத்துடன் கூறுமாறு வேண்டியுள்ளீர்கள். நன்றி. ஆனால் அது இந்தப் பகுதிக்கு தேவையற்றது. நான் வேத நூலில் நேரத்தை செலவழித்து ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னால்கூட நண்பர் ஷாலி அவர்கள் அதை ஏற்று கிறிஸ்துவர் ஆகப்போவதில்லை.அப்படி வந்தாலாவது என்னுடைய இந்த முயற்சியால் ஒரு ஆத்மாவை நான் சேர்த்ததாக எண்ணி மகிழலாம். ஆனால் ஷாலியைப் பொருத்தவரை இது எட்டாத கனியாகும்! ஆகவே பின்பு அதை நேரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். நன்றி…….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  16. Avatar
    ஷாலி says:

    // காரணம் அந்த பிதாவும்,கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே என்று கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர்.இதைப் பற்றி விவாதிக்கும் களம் இதுவல்ல என்பதையையும் நினைவூட்டிக்கொண்டு கடவுளைப் பற்றிய விவாதத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வோம் என்றும் கூறிக்கொள்கிறேன். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.//.

    தொடுவானத் தொடரில் “இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் இயேசுவின் பத்து பண்புகளைப்பற்றி டாக்டர் ஜான்சன் அவர்கள் எழுதுகிறார்கள்.இந்த இறை நம்பிக்கைப்படி பத்து பண்புகள் இயேசுவுக்கு பொருந்தவில்லை என்று நான் எழுதியதை விதண்டாவாதம் என்று குறிப்பிட்டார்.தற்போது விவாதிக்கும் களம் இதுவல்ல என்று கூறி விவாதத்தை நிறுத்திக்கொள்ளுமாறு கூறுகின்றார்.சரி! டாக்டர் நண்பரின் வேண்டுகோளை ஏற்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

  17. Avatar
    ஷாலி says:

    // நான் வேத நூலில் நேரத்தை செலவழித்து ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னால்கூட நண்பர் ஷாலி அவர்கள் அதை ஏற்று கிறிஸ்துவர் ஆகப்போவதில்லை.அப்படி வந்தாலாவது என்னுடைய இந்த முயற்சியால் ஒரு ஆத்மாவை நான் சேர்த்ததாக எண்ணி மகிழலாம். ஆனால் ஷாலியைப் பொருத்தவரை இது எட்டாத கனியாகும்!…//

    கிருத்துவர் எண்ணிக்கையை கூட்டவே டாக்டர் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.வேத உண்மையை அறிவதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை.வெற்று நம்பிக்கை போதும் என்று நினைக்கிறார்.டாக்டர் ஸார்! ஷாலி வருவது வராதது பற்றிய கவலையை விடுங்கள்.நீங்கள் வேத நூலில் நேரத்தை செலவழித்து ஆதாரங்களை எடுத்து வைத்தால்,திண்ணை வலைத்தளத்தை பார்வையிடும் பல்லாயிரக்கணக்காண மக்களில் இறைவன் நாடியவர்கள் கிறிஸ்துவத்திற்கு வரலாம் அல்லவா?இந்த நல்ல வாய்ப்பை ஏன் பயன்படுத்த மறுக்கிறீர்கள்?

    நான் இனிமேல் கிறிஸ்துவம் பற்றி உங்கள் தொடரில் எந்த பின்னூட்டமும் எழுத மாட்டேன்.போதுமா?

  18. Avatar
    Mahakavi says:

    To each his/her own religion. Let us not preach other religionists on what we believe. Religion is a very personal matter. There is no religion which is universal or even perfect. Each one has its blemishes—not because the religion is not perfect but the gurus tweak it to their own interpretation. Let us leave it at that. OK?

    1. Avatar
      BS says:

      இதே கருத்தை பலமுறை சொல்லிவிட்டீர்கள். திணிப்பதைப்போலத் தெரிகிறது.

      Religion is a personal matter// Who has told you this?

      மதங்கள் மக்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டன. அவற்றில் கண்டிப்பாக ஆபிரஹாமிய மதங்களான இசுலாமும், கிருத்துவமும் வரும். இந்து மதம் வருமா என்பதை இந்துமத அறிஞர் திரு கிருஷ்ணகுமார் சொல்ல வேண்டும்.

      தம் நாட்டு மக்கள் கண்டகண்ட விலங்குகளை, இறந்த மனிதர்களை வழிபட்டு ஆன்மிகத்தைத் தொலைக்கிறார்களே என்று மஹமது நபி அவர் நாட்டு மக்களுக்காக உருவாக்கியதே இசுலாம். பின்னர் அது வளர்ந்து பரவியது அவருக்குப் பிற்காலத்தில்.

      இயேசுவுக்குப் பின் அவர் சீடர்கள் மக்களிடையே உருவாக்கிப்பரப்பிய மதம்தான் கிருத்துவம்.

      இங்கே எபபடி தனிமனிதன் வருகிறான் என்றால், பந்தி போடுவதற்கு சமைக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஒரே நாளில் ஒரே மெனுவை புசிக்கிறார்கள்.

      ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் பசியாறுகிறார்.

      சமைத்தவர் ஒரே ஆள்; சமைக்கபபட்டது ஒரே மாதிரியான உணவு. சாப்பிடுவர்கள் ஆயிரக்கணக்கணக்கில்.பசியாறுவது தனித்தனியாக. இதுதான் மதம்.

      குரு கெடுக்கிறார் என்றால், செகஸ் சாமியார்களைப்பார்த்தே பழகிய மனங்களுக்கு, எலலமே செகஸாகத்தான் தெரியும். கொஞ்சம் அங்க இங்க போய்ப் பாருங்க. நிறைய சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைத்தேடி வரமாட்டார்கள். நாம்தான் போகவேண்டும். போனவன் இப்படி “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேச மாட்டான். Seeing is believing. See first.

      1. Avatar
        Mahakavi says:

        When I said “religion is personal” I meant not the “gurus” who imposed their views on general public (however well-meaning they thought they were). I meant the person who receives it. You cannot impose your religion on another person who has a different view. Recently I saw a humorous post which said, “religion is like underwear that you wear, you cannot ask another person to wear your underwear”. The gurus always thrust their views/interpretations on gullible folks in the name of “guiding” them. Lot of nonsense.

      2. Avatar
        Mahakavi says:

        >>>Religion is a personal matter// Who has told you this?<<

        Nobody has to tell me. It is my own statement. My personal conviction. You cannot question that. OK?

  19. Avatar
    Dr.G.Johnson says:

    Dear Mr. Mahakavi, You are absolutely correct regarding religion. In fact if we observe human history,there was no religion before 5000 to 10,000 years ago. Yet our ancestors were living without any religious institutions. We cannot say that because they did not worship any of the present Gods they are all now in hell. Religions came later in human history only after people who proclaimed themselves as Gods,Saints, Prophets, Avtars and Holy men. People were swayed by their teachings and became their followers, and as result religions emerged.
    Hence it is not my intention to preach religion in my Thoduvanam. I am just relating my experiences in life. During this long journey I am relating what I saw and thought at that moment.
    I am not a Catholic. Yet when I visited Velangkanni, I wrote about its origin and what I saw there. I said it was faith that people observe certain rituals. Then I quoted Thiruvalluvar and mentioned the ten qualities he has attributed to one God, whom he honors. So there is no question of preaching any religion in my episode. Thank you for your comments. With Regards. Dr.G.Johnson.

    1. Avatar
      Mahakavi says:

      Dear Dr. Johnson: I realize and appreciate your moderate views and that you are not one of the proselytizers. What you said, let me quote, ” In fact if we observe human history,there was no religion before 5000 to 10,000 years ago. Yet our ancestors were living without any religious institutions. We cannot say that because they did not worship any of the present Gods they are all now in hell” is absolutely true. That is almost verbatim what was written by ParamAcArya (the previous shankarAchArya) said in “deivaththin kural”. I have no qualms about your tone of writing.

  20. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //வேத நூலில் நேரத்தை செலவழித்து ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னால்கூட … அதை ஏற்று கிறிஸ்துவர் ஆகப்போவதில்லை.அப்படி வந்தாலாவது என்னுடைய இந்த முயற்சியால் ஒரு ஆத்மாவை நான் சேர்த்ததாக எண்ணி மகிழலாம்.//

    மதிப்பிற்குரிய ஜான்சன் அவர்களே! நான் ஒரு இந்துதான். ஆயினும் நான் விவிலியத்தையும், திருக்குரானையும், மார்மன் புத்தகத்தையும் படித்திருக்கிறேன்.

    அது மற்ற சமயங்கள் இறைவனைப்பற்றி என்ன சொல்கின்றன அஎன்பதை அறிந்துகொள்ளவே. எனது சமயத்திற்கும், மற்ற சமயங்களுக்கு உள்ள ஒற்றுமைகளை அறிந்துகொள்ளவே.

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: understand others before you demand that others understnd you.” அதைத்தான் நான் பின்பற்றிவருகிறேன்.

    உயிர்த்தெழுந்த தேவகுமாரன் ஏசு, “நற்செய்தியைப் பரப்புங்கள்” என்றுதானே சொன்னார். எனவே, நற்செய்தியைப் பரப்புவதுடன், மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்வதுடன், நீங்கள் ஏசுபிரான் சொன்னதை நிறைவேற்றியதாக மனநிறைவடையுங்கள். அவருடைய நற்செய்திகளை மட்டுமே கூறுங்கள். வேறெதுவும் வேண்டாம்.

    அதுவே ஒரு நல்ல கிறித்தவராகச் நீங்கள் செய்யவேண்டிய நற்செயல் என்று கருதுகிறேன்.

    உங்கள் நற்செய்தியைக் கேட்டு, ஒருவர் கிறித்தவராக மாறுகிறாரா, மாறுவாரா, மாரப்போகிறாரா இல்லையா என்பதைப்பற்றி நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள்?

    ஏசுபிரானின் கட்டளை அதுவல்லவே!

    ஏசுபிரானின் கருத்துக்களை எடுத்துச்சொல்வதுடன், அவரது நற்செய்தி மற்றவரால் கேட்கப்படுகிறது என்று நிறைவெய்துங்கள்.

    விதைவிதைப்பதும், நீர்ப்பாய்ச்சுவதுமே உங்கள் கடமை. விதை முளைப்பதை ஆண்டவனிடம் விட்டுவிடுங்கள்.

    1. Avatar
      BS says:

      //ஏசுபிரானின் கட்டளை அதுவல்லவே!//

      I am sorry to differ with him, again and again. He is already angry with me :-)

      இயேசு ஒரு மதத்தை உருவாக்கவில்லை. இருந்த ஒரு மதம் – பெற்றோரிடமிருந்து வாங்கிய மதம் – சரியாக பேணப்படவில்லை. மக்கள் தவறான பாதைகளில் கொண்டு செல்லப்பட்டார்கள் என்று கண்டார் இயேசு. ஆனால், அம்மதத்தை விட்டு அவர் விலகவில்லை. சீர்திருத்தம்தான் வேண்டுமென்றார். அவரின் சொந்த கருத்துக்களும் பலபல‌ இருக்கலாம். அவரையோ, அவர் குடும்பத்தினரையோ யூத குருமார்கள் எக்ஸ்கம்யூனிகேட் பண்ணவில்லை. ஆனால், ஸ்பினோஜாவைப் பண்ணினார்கள். ஸ்பினோஜா ஒரு யூதர். அவரின் ஃபிலாசபிக்காகப் பயந்தார்கள். இயேசுவிடம் ஃபிலாசபி கிடையாது. ரொம்ப பயப்பட க்காரணம். ஃபிலாசபர்களை மக்கள் கண்டுகொள்வது இல்லை. மேலும் இவரின் ஸ்பினாஜாவின் ஃபிலாசபி புரிய ரொம்ப கஷடப்படவேண்டும். இயேசு ரொம்ப‌ப் சிம்பிள். கதையெல்லாம் சொல்லி மக்களை ஈர்த்தார். எனவே பயப்பட்டார்கள். It was easy to kill him. But jews wanted to follow correct judical procedures; or want to make the people believe so, so that no one could accuse them giving wild justice to the fall guy. They are a very learned race in the world.

      இயேசுவின் தாயோ, தந்தையோ தங்கள் பிள்ளை சொன்னதையெல்லாம் கேட்டு அவர் பின்னாலேயே போகவில்லை. கவுதமர் தன் மனைவியைத்தான் முதலில் தான் உருவாக்கிய புதிய மதத்துக்கு மாற்றினார். இயேசு அப்படியெல்லாம் செய்யவில்லை. ஜேம்ஸ் என்ற சீடர் பன்னிருவரில் ஒருவர்; அவர் இயேசுவின் தம்பி என்று ஒரு சாரார் சொல்வர். ஆனால் அஃது உறுதிசெய்ய்ப்பட்டதா என்று தெரியாது. ஆனால் ஒன்று தெரியும்: ஜீசஸ், ஜேம்ஸ் என்ற யூதப்பெயர்கள் – நம்மூரில் சுப்பிரமணியம், சீனிவாசன், ராம்சாமி, போன்று – பல்லாயிரக்கணக்கானவருக்கு இடப்படும் பிறப்புப்பெயர்களே. இதில் எந்த ஜேம்ஸ் இவரின் சீடராகச்சேர்ந்தார் என்று சொல்வது? ஜீசஸ் (இயேசு) பெயரும் அப்படித்தான். எனவே இவரைத் தனிப்படுத்த ஜீசஸ் ஆஃப் நாசரேத் என்று ஊர்ப்பெயரையும் சேர்த்து அடையாளங்கண்டார்கள் மக்கள்

      இயேசு சொல்லியதாக விட்டுச்சென்ற அனைத்து வாசகங்களுக்கும் – புதுப்புதுப் பொருட்கள், சூட்சுமங்களைக்கண்டவர்கள்- அவற்றின் மேல் ஒரு மதத்தை உருவாக்கியவர்கள்’ அதை யூதர்கள் நாட்டைத்தாண்டி பிறநாடுகளுக்கும் கொண்டு செல்லவேண்டுமென்று செனறவர்கள் – இயேசுவின் சீடர்களும், சீடரல்லாதோரும், அதன் பின்னர் வந்தோருமே.

      எனவே இயேசு சொன்னார்; கதை முடிந்தது என்று இனிமேலாவது எழுதாதீர்கள். Pleae read outside your religion to understand other religions.

    2. Avatar
      Mahakavi says:

      Mr.Arizonan: I am with you. That is what I have been insisting all along. If what one sasy is moralistic, ethical, and intended for the welfare of others, he should not insist on them following his preachings. Your job is done with your propounding the philosophy. Bhagvat Gita also says “do your duty, do not wait the result that you expect”. Your advice to Dr. Johnson is appropriate.

  21. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு. ஒரு அரிசோனன் அவர்களே, தாங்கள் கூறியுள்ளவை முழுக்க முழுக்க உண்மை. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நான் எழுதிவரும் ” தொடுவானம் ” கிறிஸ்துவ மதம் பற்றியது அல்ல. அது என் வாழ்க்கைப் பாதையில் நான் கண்டு கேட்டு அனுபவ ரீதியாக உணர்ந்தவற்றை கோர்வையாக எழுதிவரும் ஒரு தொடர். அதன் தொடக்கப் பகுதியில் நான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர்களின் திராவிடக் கொள்கைகளில் மனதைப் பறிகொடுத்து கடவுள் பற்றி கவலைபடாத ஒரு நாத்திகனாகவே வளந்தவன் என்பதை திட்டவட்டமாக எழுதியுள்ளேன். அப்போது எந்த மத நூலையும் நான் படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் முரசொலி, தென்றல், மன்றம், திராவிட நாடு, விடுதலை போன்ற திராவிட இயக்க இதழ்களைதான். நான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கும்போதுதான் வேதநூலை ( பைபிள் ) வாங்கினேன். அப்போதும் திராவிடர் கொள்கையை விடவில்லை.பின்பு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபின்புதான் வேதநூலை தீவிரமாக படிக்கலானேன். அப்போதும் திராவிடக் கொள்கைகளை விடவில்லை. உங்களைப்போல் நானும் மதங்கள் என்ன கூறுகின்றன என்று ஆராய்ந்தேன். இராமாயணம் ,மகாபாரதம், பெரிய புராணம், புனித கூரான் , புத்த மதம் பற்றியவை, The World’s Religions போன்ற நூல்களை ஆவலுடன் படித்தேன்.அதன்பின் என் பகுத்தறிவுச் சிந்தையுடன் தீவிர ஆலோசனை செய்தேன். அப்போது எனக்கு ஓர் உள்ளொளி தோன்றியது.அதையே நான் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.இதை நான் பலமுறை கூறியுள்ளேன் வேறு சமயங்களில். அதை மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
    இன்று மதங்களின் பேரால் மனிதர்கள் பல பிரிவுகளாக வாழ்ந்துவருவதோடு மதத்தின் பெயரால் இன்றுவரை ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு செத்து மடிகின்றனர். இது இந்தியா,பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்க, ஐரோப்பா உட்பட மத்திய தரைக்கடல் பகுதியில் அன்றாட நிகழ்வாகும். ஒரே மதத்தின் பல பிரிவினருக்குள் வேற்றுமை பகையாக மாறிவருகிறது. எது உண்மையான மதம் என்ற உண்மையை யாராலும் நிர்ணயம் செய்ய முடியாத நிலை நிலவியுள்ளது. இது தேவைதானா?
    இந்த மதங்கள் எல்லாம் எப்போது தோன்றின? மனித இனம் தொன்றியபோதா? இல்லையே?
    அதிகம் போனால் சுமார் 5000 முதல் 10,000 வருடங்கள் முன் முதல் மதம் தோன்றியதாக வைத்துக்கொள்வோம்.அதன்பின் வந்தவர்கள்தான் கடவுளை அறிந்தவர்களா? அதற்கு முன்பும் பல பல நூற்றாண்டுகள் நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனரே! அவர்களின் வழிவழியாகத்தானே நாம் இன்று இங்கு உள்ளோம். அவர்களின் பரம்பரைதானே இன்று நாம்.அவர்கள் எந்த கடவுளை வணங்கினார்கள்? கடவுள்கள் பற்றிய இன்றைய ” தத்துவங்கள் ” பற்றி அவர்களுக்கு எதாவது தெரிந்திருக்குமா? இல்லையே? அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்டவர்கள்.கல்வி அறிவு அறவே இல்லாதவர்கள்.கடவுளைப் பற்றியே அறியாதவர்கள்.
    இன்று கல்வியறிவு பெற்று மிகவும் முன்னேறிய சமுதாயமாக மனிதன் வாழ்ந்து வருகிறான்.ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட மதங்களின் பெயரால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாகிறான்!
    இதெல்லாம் தெரிந்திருந்தும் நாம் ஏதாவது ஒரு மதத்தைச் சேர்ந்து இருக்கிறோம். நாம் பயந்துபோய் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்று அவரவர் கடவுளை வழிபடுகிறோம். அனால் எத்தனை மதங்கள் தோன்றினாலும் கடவுள் ஒருவர்தான் இருக்கமுடியும் என்பதை என் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? உலகம் கடவுளால் படைக்கப்பட்டது உண்மை எனில் அதை ஒரு கடவுள்தானே படைத்திருக்க முடியும்? பத்து கடவுள்கள் கூட்டணி அமைத்தா படைத்திருப்பார்கள்? நிச்சயமாக அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.
    ஒன்று, உலகைப் படைத்தது ஒரு கடவுள், அவரை நாம் வெவ்வேறு பெயரைச் சொல்லி வழிபடுகிறோம் எனில் மதங்களுக்குள் ஏன் இன்றுவரை நல்லிணக்கம் உருவாகவில்லை? அது பொய் என்றால் நாம் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டையாவது ஏற்று பகுத்தறிவு சிந்தனையாளர்களாக மாறவேண்டும்.
    ஆகவே என்னுடைய ” தொடுவானம் ” தொடர் மதப் பிரச்சாரம் அல்லவென்பதை என் அருமை நண்பர்களும் வாசகர்களும் புரிந்துகொள்ளவேண்டும்……நன்றி……அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      Mahakavi says:

      Well-said. Yes, there is only one god whom we call by different names and worship according to our predilections. To claim, “my religion is superior to yours and my god can lick your god” is total nonsense. All the violence committed in the name of religion is all due the narrow-minded gurus who incite their flock. My personal view is that God created the universe (from religious point) at the beginning and left it at that. He is not a micro-manager. All the happenings in the world are all due to human endeavors/foibles. In fact, I am an agnostic evolutionist and hence do not get into polemics on religious matters. The current attempt is a rare event.

  22. Avatar
    BS says:

    //ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: understand others before you demand that others understnd you.” அதைத்தான் நான் பின்பற்றிவருகிறேன்.//

    For me, there is something wrong with this kind of thinking.

    ஒருவர் ஒரு மதத்தை ஏற்று வாழ்கிறார். அதிலிருந்து விலக விரும்பாதவர். இவருக்கு. இன்னொரு மதத்தைப்பற்றிய அறிவு எதற்கு அவர் அதைப்பற்றித் தெரிவது மட்டுமே செய்வேன்; மற்றபடி அஃதெனக்கு தேவையில்லை என்றால்?

    மதம் இருவகை: 1. பெற்றோரிடமிருந்து பெற்று (religious inheritance) அஃதை அப்படியே எடுத்துக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து மடிவது
    2. பெற்றோரிடமிருந்து பெற்ற மதத்தைச் சிறுவயது; அல்லது தன்னிச்சையான ஆராய்ந்து தெளியும் மனப்பக்குவம் வரும் வரை வைத்துக்கொண்டு, பின்னர் அம்மதத்தையும் பிறமதங்களோடு சேர்த்து, அல்லது தனித்தனியாக ஆராய்ந்து, தெளிந்து அவற்றுள் எது ஒருவருக்குச் சரியெனப்படுகிறோ அதை விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ்ந்து மடிவது. (e.g Ashok Mahadevan)

    பெற்றோரிடமிருந்து பெரும் மதம் ஏற்கனவே வெல்டெவலப்டாக இருந்து அதில் தனக்கு எந்தபிரச்சினையுமில்லை என்று சுதந்திர சிந்தனை வயதில் ஏற்பது – ஒரு சாரார். (e.g. maybe Mr Or Arizonan)

    பெற்றோரிடமிருந்து பெற்ற மதத்தால், தமக்கு ஆதாயமுண்டு எனவே இருப்போமென்று அதில் வாழ்ந்து மடிவது ஒரு சாரார் – இவர்கள் இஃதோடு விடமாட்டார். அவ்வாதாயம் பறிபோய்விடக்கூடாது என்று கவலை கொண்டு, அதற்கான எல்லாவற்றையும் செய்வார் (பிறமதத்தூடணை; தன் மதமே உயர்ந்தது என்பவன்வெல்லாம். இவர்கள் சமூகத்தின் அமைதியைக்கெடுக்கும் கூட்டத்தோடு சேர்ந்தவர். (Millions of people are of this category of religionus fanaticms for personal benefits)

    பெற்றோரிடமிருந்து பெற்ற மதம் – எப்படியிருந்தாலும் சட்டை செய்யாமல், மதம் இருக்கிறது கூட்டத்தோடு கோவிந்தா போட மட்டும்- மற்றபடி மதத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பு இல்லாமல் மகிழ்ச்சியாக வாழுபவரும், இப்படிப்பட்ட மதம் மகிழ்ச்சியைத் தராவிட்டாலும் ஏதோ இருந்து தொலைப்போம்; இல்லாவிட்டால் எக்ஸ்கம்யூனிகேட் (excommunicate) பண்ணி விடுவார்; ஊரை விட்டுத்தள்ளிவைத்துவிடுவார்கள்; நாமும் நம் பிள்ளைகளும் அநாதைகள் எனப்பயந்தும் வாழ்பவரும் இந்த பெற்றோரிடமிருந்து பெற்ற மதக்கூட்டத்தார்.

    இவர்கள் போக, பெற்றோர் மதக்கூட்டத்தில் இன்னொருவரும் உண்டு. இவர்கள் பெற்றமதம் டெவல்ப்டு (primitive and crude or tribal religion) கிடையாது. அல்லது வளர்ந்த உலகில் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது. என்று அம்மதத்தை விட ஏங்கி, வெல்டெவல்பட் மதத்தில் எதையாவது ஒன்றில் நுழைந்து வாழ் ஆசைப்படுவோர் (தலித்துக்கள்)

    இதில் எந்தவகைக்காரர் understand others before you demand that others understnd you என்பதை ஏற்க?

    எனவேதான் சொல்கிறேன். இஃதொரு sweeping statement. Therefore, the advice to Dr is misplaced.

  23. Avatar
    BS says:

    //விதைவிதைப்பதும், நீர்ப்பாய்ச்சுவதுமே உங்கள் கடமை. விதை முளைப்பதை ஆண்டவனிடம் விட்டுவிடுங்கள்.//

    O my God! I differ here too. Please forgive me Mr Or Arizonan.

    இதை மதமல்லா வெளியிலிருந்தே பேசவேண்டும். Through pshchology.

    கீதையின் கருத்துதான் இது. செய்யவேண்டியதை மட்டும் செய்துவிடு. அதன் பலன்களை எதிர்நோக்காதே.

    நற்கருத்து ஒருவகையில் டென்சன வராது.

    ஆனால் முடியுமா? அல்லது ஏன் எதிர்பார்க்கவே கூடாதென்பதற்கு கீதையோ மற்றவரோ காரணம் சொன்னாரா|?

    செகஸைப்பற்றி நினைக்காதே என்று +2 மாணவனுக்குச் சொல்லலாம். அதற்கு ஒரு நல்ல காரணம்: . மனம் பேதலிக்கும். படிப்பு பாதிக்கப்படும். அவன் படித்து வேலையில் அமர்ந்து மணம் செய்ய வருடம் வரும்போது செக்ஸை அவன் மனம் நாடக்கூடாது; நினைக்ககூடாது என்பதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?

    செய்; பலனை எதிர்பாரதே என்பதற்கு ஒரே காரணம் டென்சன் இருக்காது என்பது மட்டுமே. ஆனால் ஒரு செயல் சிற்ப்பாக அதன் இலக்கை அடையச் செய்யவேண்டுமானால் ஈகோ ட்ரைவ் இருந்தால் மட்டுமே முடியும்.

    பலனை எதிர்பார்த்தல் என்பதுதான் இங்கே ஈகோ ட்ரைவ். ஒவ்வொரு மனிதனும் எதைச்செய்தாலும் அது பலனைத் தரும் என்றுதான் செய்யும் போது, கீதையின் வாசகம் நீர்த்தல்லவா போகிறது? அவன் செய்யத்தான் முடியுமா முதலில்?

    அதே போலவிதை விதைத்தேன்; நீர்பாய்ச்சினேன். ஆனால் அது முளைத்தாலென்ன முளைக்காவிட்டாலென்ன என்று போனால், அவனுக்கு என்ன பெயர்? மனிதனே இல்லை எனபது என் எண்ணம்.

    இயேசுவின் போதனைகளோ, கீதையின் போதனைகளோ, மஹமது நபியின் போதனைகளோ என்னிடம் அம்மதத்தார் சொன்னால், அவர்கள் எதிர்பார்ப்பது நான் வலக்காதால் கேட்டு இடக்காதால் வெளிவிட்டுவிட்டு தேமேவென போனால், அவர்கள் ஏன் சொல்ல வேண்டும்? ஏன் என்னிடம் வந்து நேரத்தையும் வீணாக்கித் தொண்டையைப் புண்ணக்க வேண்டும்?

    It is natural that they should say to you all with hope that you will accept their words and reconsider your religious inheritance. If you reconsider accordingly and find that yours is far better than theirs and in yours only, you can be happy spiritually – WELL DONE!

    That’s all I want from you: Use your brain. It’s as simple as that :-)

    1. Avatar
      Mahakavi says:

      >>இயேசுவின் போதனைகளோ, கீதையின் போதனைகளோ, மஹமது நபியின் போதனைகளோ என்னிடம் அம்மதத்தார் சொன்னால், அவர்கள் எதிர்பார்ப்பது நான் வலக்காதால் கேட்டு இடக்காதால் வெளிவிட்டுவிட்டு தேமேவென போனால், அவர்கள் ஏன் சொல்ல வேண்டும்? ஏன் என்னிடம் வந்து நேரத்தையும் வீணாக்கித் தொண்டையைப் புண்ணக்க வேண்டும்?<<
      OK, what do you want them to do? Let us say they tell me the merits of their religion. Being polite I listen for a while and then walk away. Do you think they should come after me and convert me to their religion? Or even use violence on me if I don't comply (using the sword if the word fails, ha ha!)

      Silly and nonsensical argument indeed!

      1. Avatar
        BS says:

        My argument is cunningLY cut short by you to suit your convenience.

        My argument dwells on two things: 1. The other party can say whatever he believes in and ask you to examine the belief.
        2. You ought not stop him or flee from him, or condemn him. Rather, after hearing that, you are free to reject or accept it.

        The argument ends there. You stretch it. No Sir.

        My argument also implies that one, who is close minded, won’t allow any contrary views to be spoken to him, or near him. Frozen minds fear new thoughts. :-)

        One’s own religion is an old thought or inherited. A new thought is in the air. You needn’t flee from it. Listen and reject or accept as you will – this is my point.

        This is what you should face and counter. Not what if he kills me if I don’t accept his? This is not under my argument here.

        My argument is philsophical. There is much philsophy in it. You should come up to it.

        1. Avatar
          Mahakavi says:

          >>Rather, after hearing that, you are free to reject or accept it.<>who is close minded, won’t allow any contrary views to be spoken to him, or near him. Frozen minds fear new thoughts.<>One’s own religion is an old thought or inherited. A new thought is in the air. You needn’t flee from it.<>My argument is philsophical. There is much philsophy in it.<< WOW! A revelation indeed! A new Buddha in our midst?

          1. Avatar
            Mahakavi says:

            Editor: Pl remove the above comment. It did not reproduce my comments (4 of them for each statement of the other person). Only ending line is right.

          2. Avatar
            BS says:

            If you keep open mind and willing to receive contrary views and examine your own vis-a-vis those views; and then, decide what to do with your and their views – you will have become a Buddha then. Buddha means the enlightened one. Englightenment – here, for us, just broad understanding and then concluding – won’t come to you if you close your mind so tightly that not a ray of light can enter.

            Let noble thoughs come to us from every side – Rig Veda

        2. Avatar
          Mahakavi says:

          >>Rather, after hearing that, you are free to reject or accept it.<< Only if I have time to listen to all that blabber—that too out of courtesy to that fellow.

          1. Avatar
            BS says:

            Yes, that is your democratic right even to refuse to listen to it.

            But my point is not that: It is that –

            — Why to cry foul that they shouldn’t say it to you at all, in the first place? Or, from a public platform where you happen to hear them?

            (In Mr Arizonan’s view, they shouldn’t say about their contrary views to others at all.)

  24. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //ஆகவே என்னுடைய ” தொடுவானம் ” தொடர் மதப் பிரச்சாரம் அல்லவென்பதை என் அருமை நண்பர்களும் வாசகர்களும் புரிந்துகொள்ளவேண்டும்……நன்றி……//

    தங்கள் நிலைமையை விளக்கியதற்கு மிக்கநன்றி, ஜான்சன் அவர்களே. தங்களுடைய பல கருத்துகளுடன், எனது கருத்துக்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

    சமயம் என்பது — கடவுள் மறுப்புச் சமயம் உள்பட — அவரவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் நான் குறைஎதுவும் காணமாட்டேன். அந்த நம்பிக்கை, மற்றவரை அழிக்கத்துவங்கும்போதுதான் [ISIS போன்ற இயக்கங்கள்] அனைத்துச் சமயங்களும் ஒன்றுசேர்ந்து, கைகோர்த்து, அப்பட்டப்பட தீயசக்திகள் வேரறுக்கப் போராடவேண்டும்.

    நான் பதில் எழுதியது ////வேத நூலில் நேரத்தை செலவழித்து ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னால்கூட … அதை ஏற்று கிறிஸ்துவர் ஆகப்போவதில்லை.அப்படி வந்தாலாவது என்னுடைய இந்த முயற்சியால் ஒரு ஆத்மாவை நான் சேர்த்ததாக எண்ணி மகிழலாம்.//// என்ற சொற்றோடருக்காகவே.

    தாங்கள் திறந்த மனதுடன் பதிலளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    1. Avatar
      Mahakavi says:

      >>சமயம் என்பது — கடவுள் மறுப்புச் சமயம் உள்பட — அவரவர் நம்பிக்கை<< Exactly! This is what I call religion is a personal matter to which

    2. Avatar
      Mahakavi says:

      >>சமயம் என்பது — கடவுள் மறுப்புச் சமயம் உள்பட — அவரவர் நம்பிக்கை<< Exactly! This is what I call religion is a personal matter to which Mr. BS objects. So long as one religionist does not interfere with another's belief there is no need to bicker. We can all co-exist since no one knows the "absolute truth".

  25. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //Please forgive me Mr Or Arizonan.//
    ———–

    Mr. BS,

    I would like to be addressed as Oru Arizonana. There is a difference between Or Arizonan and Oru Arizonan. The former is the equivalent of “an Arizonan”, and the latter is, “One Arizonan”. I know he difference, and hence, the name, “ஒரு அரிசோனன்”.

    Thank you for your understanding.

  26. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //ஏன் என்னிடம் வந்து நேரத்தையும் வீணாக்கித் தொண்டையைப் புண்ணக்க வேண்டும்?//

    உங்களிடம் நான் எதையும் சொல்லவில்லை, எழுதவுமில்லை. திண்ணையில் நான் எழுதிய கருத்து உங்களுக்கு எழுதியது என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்புமல்ல.

    நான் எழுதியது Dr. ஜான்சனின் கவனத்திற்காக. அதற்கு அவர் பதிலும் அளித்துவிட்டார். தாங்கள் அனைத்தும் கற்றரிந்தவராகத் தெரிகிறீர்கள். எனவே, என் கருத்துப் பதிவுகளைப் படித்தோ, அதற்குப் பதில் எழுதியோ உங்கள் பொன்னானநேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    //இதை மதமல்லா வெளியிலிருந்தே பேசவேண்டும். Through pshchology.//

    சமயமில்லாதவன் எவனுமில்லை. கடவுள் மறுப்பும் ஒரு சமயமே! இந்த அண்டவேளியைப்பற்றிப் பேசவேண்டுமென்றால், அண்டவெளிக்கு வெளியில் நின்றுகொண்டு பேசவேண்டும் என்பதில்லை. நமக்குத் தெரிந்த மொழியில் நாம் பேசுகிறோம், புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்; புரிந்துகொள்ள மறுப்பவர்களைப்பற்றிக் கவலைப்பட்டு, என் மனநலத்தை நான் இழக்கப்போவதில்லை.

    1. Avatar
      Mahakavi says:

      Clarification: BS does not address oru arizonan in this remark. He is talking about the proselitizers in general.Pl read BS’s message again in context.

  27. Avatar
    Mahakavi says:

    Editor:
    Your comment process is getting garbled. Look at one of my responses that I submitted a while ago. I spaced 4 different sentences quoting “BS’s statements” and responded to each one. When I hit “submit” it is such a mishmash. Go and look at it. I will exit your website if I get frustrated again.

  28. Avatar
    ஷாலி says:

    //I will exit your website if I get frustrated again.//

    அம்மா மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.தள நிர்வாகிகள் இனி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

  29. Avatar
    ஆதிவாசி says:

    வேளாங்கன்னி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வேல் இளங்கன்னி என்கிற பெயரில் தெய்வமாக இந்துக்களால் வணங்கப்பட்டவள். புயலில் சிக்கி கடலில் வழி தெரியாமல் தவித்த கிறுத்துவப் போர்த்துக்கீசியர்களைக் காப்பாற்றி கரைசேர்த்தாள். அதற்கு நன்றி காட்டும் விதமாக, கிறுத்துவப் போர்த்துக்கீசியர்கள் அவளின் கோயிலை இடித்து சர்ச் கட்டினர்.

    அவர்களின் நன்றியுணர்வைப் போற்றும் விதமாக அது இன்றும் ஒரு கிறுத்துவ சர்ச்சாக, கத்தோலிக்கர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், இந்துக்கள் முன்பு அந்த தெய்வத்துக்கு செய்துவந்த இந்துச் சடங்குகள் இன்றும் தொடர்கின்றன.

    முன்பெல்லாம் குங்குமம் தரும் வழக்கம் இருந்தது. இப்போதும் அது இருக்கிறதா, டாக்டர். திரு. ஜி. ஜான்ஸன் அவர்களே?

  30. Avatar
    ஆதிவாசி says:

    வேளாங்கண்ணி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வேல் இளங்கண்ணி என்கிற பெயரில் தெய்வமாக இந்துக்களால் வணங்கப்பட்டவள். புயலில் சிக்கி கடலில் வழி தெரியாமல் தவித்த கிறுத்துவப் போர்த்துக்கீசியர்களைக் காப்பாற்றி கரைசேர்த்தாள். அதற்கு நன்றி காட்டும் விதமாக, கிறுத்துவப் போர்த்துக்கீசியர்கள் அவளின் கோயிலை இடித்து சர்ச் கட்டினர்.

    அவர்களின் நன்றியுணர்வைப் போற்றும் விதமாக அது இன்றும் ஒரு கிறுத்துவ சர்ச்சாக, கத்தோலிக்கர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், இந்துக்கள் முன்பு அந்த தெய்வத்துக்கு செய்துவந்த இந்துச் சடங்குகள் இன்றும் தொடர்கின்றன.

    முன்பெல்லாம் குங்குமம் தரும் வழக்கம் இருந்தது. இப்போதும் அது இருக்கிறதா, டாக்டர். திரு. ஜி. ஜான்ஸன் அவர்களே?

  31. Avatar
    ஷாலி says:

    குங்குமம்,விபூதி,கேள்வி எல்லாம் எதுக்கு ஸார்! சுருக்கமாக, இப்ப்டி சொல்லிவிடுங்களேன், ” மாரிம்மாவை ,மேரியம்மாவாக மாற்றி விட்டார்கள்.

Leave a Reply to க்ருஷ்ணகுமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *